Followers

Search Here...

Showing posts with label ப்ரம்மா. Show all posts
Showing posts with label ப்ரம்மா. Show all posts

Friday 14 June 2019

ருத்ர அவதாரம், ப்ரம்மா அவதாரம் , வராஹ அவதாரம் பற்றி.. தெரிந்து கொள்வோமே.

"வராஹ" அவதாரம் - உலக ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் போது, ஸ்வாயம்பு மனு (1st Manu) காலத்தில் நடந்தது.
அனைத்து அவதாரங்களுக்கும் முற்பட்ட அவதாரம், "வராஹ" அவதாரம்.


அதை தொடர்ந்து, "நரசிம்ம" அவதாரம் நடந்தது.
ப்ரகலாதனின் பேரன் "பலி சக்ரவர்த்தி" ஆண்ட போது, 
"கூர்ம" அவதாரமும், "வாமன" அவதாரமும் செய்தார்.
"மத்ஸ்ய" அவதாரம் - இப்பொழுது நடக்கும் வைவஸ்வத மன்வந்திர (7th Manu) ஆரம்பத்தில் நடந்தது.

'பாகவதத்தில்' முதல் அவதாரமாக "வராஹ" அவதாரமே சொல்லப்படுகிறது.

ஸ்வாயம்பு மனு (1st Manu), ப்ரம்ம தேவனின் மானஸ புத்திரர்.

இப்பொழுது சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவுக்கு வயது என்ன?
மனு அரசர்கள் யார் யார்? என்று தெரிந்து கொள்ள... Click செய்யுங்கள்..
முதன் முதலாக,
தாமரை மேல் ப்ரம்ம தேவனை சத்ய லோகத்தில் தன் நாபியில் இருந்து படைத்தார் பரவாசுதேவன் நாராயணன்.
பூலோகங்கள் படைக்கப்பட்டதற்கு முன்பேயே, ப்ரம்மாவுக்கும் முன், தாமரை படைக்கப்பட்டது என்று பார்க்கும் போது தாமரைக்கே (கமலம்) அது ஒரு ஏற்றம், பெருமை.

சத்ய லோகத்தில், படைக்கப்பட்ட ப்ரம்ம தேவன், ஞானியாக இருப்பதால்,
'இயற்கையாக பிறந்தோம்' என்று நினைக்காமல்,
'தன்னை படைத்தவர் இருக்க வேண்டுமே.. அவர் யார்?' என்று தியானம் செய்ய,
பகவான் நாராயணன் தியானத்திலேயே திவ்ய காட்சி கொடுத்து,
"உலக ஸ்ருஷ்டி என்ற கர்மாவை  செய்வதற்காக உன்னை நியமித்தேன்" என்று சொல்லி,
"வேதத்தை கொண்டு உலக ஸ்ருஷ்டி செய்" என்று பிரம்மாவிடம் வேதங்களை உபதேசித்தார்.
பரவாசுதேவன் கட்டளைக்கு கட்டுப்பட்டு, வேதத்தை கொண்டு, ப்ரம்மா உலக ஸ்ருஷ்டியை ஆரம்பித்தார்.

முதன் முதலில், சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் என்ற 4 பாகவத உத்தமர்களை, தன் மனதால் ஸ்ருஷ்டி செய்தார் ப்ரம்ம தேவன்.
"நீங்கள் உலக ஸ்ருஷ்டியை செய்யுங்கள்"
என்று ப்ரம்ம தேவனே நியமித்தும்,
இவர்கள் நால்வருமே உலக விஷயமான ஸ்ருஷ்டியில் நாட்டமில்லாமல் இருந்தனர்.
ஞான மார்க்கத்திலேயே இருந்து மோக்ஷத்தை அடையவே விரும்பினார்கள்.


தன் முதன் ஸ்ருஷ்டியான, தன் 4 பிள்ளைகளும் இப்படி நிவ்ருத்தி என்ற ஞான மார்க்கம் சென்று விட்டார்களே!!... 
தான் சொன்னதை இவர்கள்  கேட்கவில்லை!! என்றதும், பிரம்மாவுக்கு கோபம் வந்தது.
ஞானியான ப்ரம்மா, கோபப்பட கூடாது என்று கோபத்தை அடக்கி கொள்ள,
பிரம்மாவின் நெற்றி புருவ மத்தியில் (ललाट) இருந்து சம்ஹார மூர்த்தியாக, ஒரு சிறு குழந்தை வெளிப்பட்டது.
धिया निगृह्यमाण: अपि भ्रुवो: मध्यात् प्राजापते: ।
सद्य: अजायत तत् मन्यु: कुमारो नील लोहित: || bhagavatham
திவ்யமான இந்த குழந்தை அழுது கொண்டே, பிரம்மாவை பார்த்து
"எனக்கு ஒரு பெயர் வை" என்று சொல்ல,
यद् अरोदी: सुर-श्रेष्ठ स-उद्वेग इव बालक: ।
तत: त्वाम् अभिधास्यन्ति नाम्ना रुद्र इति प्रजा: ॥ Bhagavatham
ப்ரம்ம தேவன் "நீ குழந்தை ரூபத்தில் அழுது (ரோதன) கொண்டே கேட்டதால், உனக்கு 'ருத்ரன்' என்று பெயர்" 
என்று சொல்ல,
அந்த குழந்தை, உடனே 11 ருத்ரர்களாக ஆகி காட்சி கொடுக்க,
அந்த 11 ருத்ரர்களுக்கும் ப்ரம்மா பெயர் கொடுத்தார்.
1. மன்யு
2. மனு
3. மஹினச
4. மஹான்
5. சிவன்
6. ருதத்வஜன்
7. உக்ரரேதா
8. பவன்
9. காலன்
10. வாமதேவன்
11. த்ருடவ்ரதா
யஜுர் வேதத்தில், ருத்ர ஸ்துதி செய்யும் போது,
'மன்யு' என்ற ருத்ரனின் பெயரை சொல்லி ஆரம்பிக்கிறது என்று பார்க்கிறோம்.

"நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நம:"
- ருத்ரம் (யஜுர் வேதம்)

मृगव्याधश्च सर्पश्च निर्ऋतिश्च महायशाः।
अजैकपादहिर्बिध्न्यः पिनाकी च परन्तपः।। 
दहनोऽथेश्वरश्चैव कपाली च महाद्युतिः।
स्थाणुर्भगश्च भगवान् रुद्रा एकादश स्मृताः।।
- Adi Parva (Vyasa Mahabharata)
11 ருத்ரர்களுக்கு வேறு காரண பெயர்களும் சொல்லப்படுகிறது. மஹாபாரதத்தில் வ்யாஸர் அந்த பெயர்களை சொல்கிறார்.

1. ம்ருக-வியாதர்
2. சர்ப்பஸ்
3. நிர்ருதி
4. அஜைகபாத்
5. அஹிர்பித்ன்யர்
6. பினாகீ
7. தஹனர்
8. ஈஸ்வரர்
9. கபாலீ
10. ஸ்தாணு
11. பகன்
- 11 ருத்ரர்கள் 


'தன்னுடைய முதல் 4 பிள்ளைகள் ஞான மார்க்கத்தில் சென்று விட்டார்களே'
என்று கோபத்தில் இருக்கும் போது வெளிப்பட்ட ருத்ரன்,
தன்னையே 11 ருத்ரர்களாக ஆக்கி கொண்டு,
ஒவ்வொரு ருத்ரனும், ஆயிரக்கணக்கான கணங்களை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
ஏகாதச (11) ருத்ரர்களால் படைக்கப்பட்ட கணங்கள் யாவும் "பூத கனங்களாக" இருந்தார்கள்.


இந்த பூத கனங்கள், "பிரேதமாகவும், பிசாசாகவும், பூதமாகவும்"  அலையும் ஜீவன்களை கட்டுப்படுத்தும் அதிபதிகள் ஆகினர்.
வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவன், தானே க்ஷீராப்தி என்ற பாற்கடலை ஸ்ருஷ்டி செய்து, ஆதிஷேஷன், ஜெய விஜயர்களுடன், தானே விஷ்ணுவாக வ்யூஹ அவதாரமும் செய்து விட்டார்.

அதற்கு பிறகு, ப்ரம்ம தேவன்,
ஒன்பது ப்ரஜாபதிகளை சத்ய, ஜன, தப லோகங்களில் ஸ்ருஷ்டி செய்தார்.
1. மரீச்சி (இவர் மகன் கஷ்யபர்)
2. அத்ரி (மனைவி அனசுயா)
3. ஆங்கிரசர் (இவர் பரம்பரையில் குத்ஸ ரிஷி, கௌதம ரிஷி, பரத்வாஜ ரிஷி வந்தார்கள்)
4. புலத்ஸ்யர்
5. புலகர்
6. க்ரது
7. வசிஷ்டர்
8. ப்ருகு (இவர் பரம்பரையில் வந்த ரிஷிகள் ச்யாவன, ஆப்னவான, ஔர்வ, ஜாமதக்ன்ய)
9. தக்ஷன்

இவர்களில் 7 ப்ரஜாபதிகள், சப்த ரிஷிகளாக முதல் மனுவான 'ஸ்வாயம்பு மனு'வின் காலத்தில் உலக படைப்புகளில் ஈடுபட்டனர்.
1. மரீச்சி
2. அத்ரி
3. ஆங்கிரசர்
4. புலத்ஸ்யர்
5. புலகர்
6. க்ரது
7. வசிஷ்டர்

ப்ரஜாபதிகள் ஞான மார்க்கத்தை விரும்பினாலும், பரவாசுதேவனின் ஆணையை மறுக்காமல்,
ப்ரம்ம தேவனுக்காக உலக ஸ்ருஷ்டி செய்ய சம்மதித்து, உலகமெங்கும் மக்களை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்தனர்.

முக்கியமாக, 'மரீச்சி' - கஷ்யப ரிஷியை ஸ்ருஷ்டி செய்தார்.
கஷ்யபர் - தேவர்களை, அசுரர்களை ஸ்ருஷ்டி செய்தார்.
இப்படி ஒன்பது ப்ரஜாபதிகளும்.
தேவ, அசுர, விலங்குகள், மனிதர்கள் என்று படைக்க ஆரம்பித்து விட்டனர்.



11 ருத்ரர்களால் ஸ்ருஷ்டி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பூத கணங்கள், ப்ரஜாபதிகளால் ஸ்ருஷ்டி செய்யப்பட்டவர்களை சம்ஹாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
"பிரளய காலத்தில் சம்ஹாரம் செய்தால் தகும்.. இப்பொழுது தான் மனித ஸ்ருஷ்டியே ஆரம்பிக்கிறது, அதற்குள் சம்ஹாரம் நடக்கிறதே" என்றதும்,
ப்ரம்ம தேவன், 11 ருத்ரர்களிடமும்
"நீங்கள் இப்போது உங்கள் சம்ஹார லீலையை ஆரம்பிக்காதீர்கள்..
ஸ்ருஷ்டியே இப்போது தான் நடக்க ஆரம்பித்து உள்ளது. நீங்கள் சம்ஹாரம் செய்வதை நிறுத்தி விடுங்கள்.
உங்களுக்கு 'உக்ரன் என்றும் காலன்' என்றும் பெயர் உண்டு என்றாலும்,
இப்போது நீங்கள் யாவரும் சங்கரனாக (நல்லதை செய்பவர்) இருங்கள்.
சம் (நல்லதை) கரோதி (செய்பவர்) இதி(=) சங்கர:
ஹிம்சையை செய்யாதீர்கள். 
உலக ஸ்ருஷ்டியை தடுக்காதீர்கள்."
என்று சமாதானம் செய்ய,
பிரளய காலம் வரை சம்ஹார வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால்,
11 ருத்ரர்களும், தன் ஆயிரக்கணக்கான பூத கணங்களுடன், கைலாய லோகத்திற்கு சென்று தியான யோகத்தில் அமர்ந்தனர்.

அவ்வப்போது பூலோகத்தில் அவதாரம் செய்து, தன்னை பஜிக்கும் யோகிகளுக்கும், பக்தனுக்கும் காட்சி கொடுத்து, ஞானத்தை தருகிறார்கள்.




'ஓம்' என்ற ஓங்காரத்துக்கு ஈடான,
'ராம' என்ற தாரக மந்திரத்தையே எப்பொழுதும் ஜபம் செய்து கொண்டிருக்கும் ருத்ரர்கள், 
பூலோகத்தில் காசியில் விஸ்வநாதனாக, சிவபெருமானாக தானே இருந்து கொண்டு, 
காசியில் உயிர் பிரியும் பாக்கியம் பெற்ற அனைத்து ஜீவனுக்கும் (மனிதன், மிருகம், பறவை என்று அனைத்தும்), கடைசி மூச்சு போகும் சமயத்தில் அவர்கள் காதில் "ராம ராம ராம.." என்று தாரக மந்திரத்தை சொல்லி, தன் அணுகிரஹதால் எது சத்தியமான உண்மை என்ற  ஞானத்தை கொடுத்து,
ஞானம் அடைந்த ஜீவனுக்கு நாராயணன் மோக்ஷ வாசலை திறந்து விட வழி செய்து விடுகிறார்.

க்ஷீராப்தி என்ற பாற்கடலில், வ்யூஹ அவதாரத்துடன் இருக்கும் மஹாவிஷ்ணுவை தரிசிக்க, ஒரு சமயம் 4 குமாரர்களும் (சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர்) வந்த போது, ஜெய விஜயர்கள் தடுத்து விட, 
'பூலோகத்தில் பிறக்குமாறு' சபித்து விட்டனர்.
பிரம்மாவின் பிள்ளைகள் கொடுத்த சாபம், பொய் போக கூடாது என்பதற்காகவும்,
தானே விபவ அவதாரங்கள் செய்ய சங்கல்பித்ததால்,
'ஜெய விஜயர்கள்' முதலில் பிறக்கட்டும் என்று இப்படி ஒரு லீலையை செய்தார் பெருமாள்.


ஜெய விஜயர்களை பார்த்து,
'100 பிறவிகள் எடுத்து, விஷ்ணு பக்தி செய்து மீண்டும் க்ஷீராப்தி வருகிறீர்களா?
அல்லது
3 பிறவிகள் மட்டுமே எடுத்து, எனக்கு பரம எதிரியாக இருந்து, என் கையால் அழிக்கப்பட்டு, மீண்டும் வருகிறீர்களா?'
என்று மஹாவிஷ்ணு கேட்க,
100 ஜென்மங்கள் பெருமாளை பிரிந்து இருப்பதை விட, 3 ஜென்மங்கள் விஷ்ணுவுக்கு பகைவனாக இருந்து, அவர் கையாலேயே கொல்லப்பட்டு, வேகமாக பாற்கடல் அடைகிறோம் என்று சொல்ல,
முதல் பிறவியில் "ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு" என்று மகாபலம் கொண்ட அசுரர்களாக, அசுரர் குலத்தில் பிறந்தனர் ஜெய விஜயர்கள்.

ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு அவதரித்த பின், அசுரர்கள் பலம் கூடியது.
தேவர்களை அடக்கி, சொர்க்க லோகத்தில் அடிமைகள் ஆக்கினார்கள் அசுரர்கள்.

ப்ரம்ம லோகத்தையும் சேர்த்து 14 லோகங்களையும் கைப்பற்றினார்கள் அசுரர்கள்.

சொர்க்க லோகத்தில் இருந்து கொண்டு அட்டகாசம் செய்தனர் அசுரர்கள்.

மஹா விஷ்ணுவாகிய நாராயணன், தன் துவார பாலகர்கள் (gate keepers) கொஞ்ச காலம் 14 லோகங்களையும் ஆளட்டுமே என்று இருந்து விட்டார்.

அதர்மத்தின் கை ஓங்கியது.
இவர்களை எதிர்க்க தேவர்கள், ப்ரஜாபதிகள், மகரிஷிகள், ப்ரம்மா உட்பட எவராலும் முடியவில்லை.

தர்மம் அழிந்து, அதர்மம் ஓங்கி விட்டதால், பூமா தேவி வேதனையுற்றாள்.
ஹிரண்யாக்ஷன் ஒரு படி மேலே போய், 14 லோகங்களில் மனிதர்கள் வாழும் லோகமான பூலோகத்தை (earth) அதன் கதியில் இருந்தே அகற்றி,
கர்போதகம் என்ற மஹா பிரளய ஜலத்தில் எடுத்து கொண்டு போய், மூழ்கடித்து மறைத்து விட்டான்.

பூலோகத்தையே (earth) அதன் சுழற்சியில் இருந்து எடுத்து, 
வெளி மண்டலத்தில் சொல்லப்படும் கர்போதகம் என்ற மஹா பிரளய ஜலத்தில் மறைத்து விட்டான் என்றால், 
அசுரர்களை, சாதாரண மனிதர்கள், என்று நாம் நினைத்து விட கூடாது..

பூமியே மறைந்து கிடந்த காலம் அது என்று கவனிக்க வேண்டும்.

ப்ரஜாபதிகளால் படைக்கப்படும் மக்களை, ஒரு அரசனாக இருந்து காப்பதற்காக, ப்ரம்ம தேவன் "ஸ்வாயம்பு" என்ற மனுவை ஸ்ருஷ்டி செய்தார்.

தேவர்கள், அசுரர்கள் என்று ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதிகள்,
மனிதர்களை படைக்க ஆரம்பிக்க, "இந்த மனிதர்களை தரிக்க (தாங்க) இடம் வேண்டுமே?"
என்று ஸ்வாயம்பு மனு, சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்ம தேவனை சரண் அடைந்தார்.

நம் அனைவரையும் பூமி தரிப்பதால் (தாங்குவதால்), பூமியின் தேவதையான பூமாதேவிக்கு "தரா" (Dhara) என்று பெயர்.

நாம் அனைவரும் மனிதனாகவோ, விலங்காகவோ, பறவையாகவோ இந்த பூமியிலேயே பிறக்கிறோம், நடக்கிறோம், வாழ்கிறோம், மடிகிறோம்.

இந்த பூமியிலேயே வாழ்ந்து கொண்டு, 
பூமியையே சில சமயம் உடைக்கிறோம், உதைக்கிறோம்,  தோண்டுகிறோம், எச்சில் துப்புகிறோம், ஒடுகிறோம், குதிக்கிறோம்.
பூமியிலேயே பிறந்து, வாழ்ந்து, மடியும் நாம் செய்யும் அபச்சாரங்களை, ஹிம்சையை பூமாதேவி 'தன் குழந்தைகள் தானே' என்ற தாய் பாசத்தில் மன்னிக்கிறாள்.
மஹா பொறுமை கொண்டு பூமாதேவி இருப்பதால் அவளுக்கு "க்ஷமா" (மன்னிப்பவள்) என்றும் பெயர் உண்டு.

ஹிரண்யாக்ஷன் பூலோகத்தையே எடுத்து ஒளித்து விட்டான், என்றதும் ஸ்வாயம்பு மனு, ப்ரம்ம தேவனிடம் பூலோகத்தை மீட்டு கொடுக்க பிரார்த்திக்க,
ப்ரம்ம தேவன், ஸ்ரீ மந் நாராயணனை மனதில் தியானிக்க,
நாராயணனே, ஒரு கட்டை விரல் (அங்குஷ்ட) அளவுள்ள வராஹ மூர்த்தியாக வெளிப்பட்டார்.

பரவாசுதேவனே, தர்மமே வடிவான, 'யஞ்ய வராஹ'னாக வெளிப்பட்டார்.

பரவாசுதேவன் நாராயணனை இதயத்தில் தரிசனம் செய்து இருந்த ப்ரம்ம தேவன்,
இப்படி வராஹ மூர்த்தியாக சிறு ரூபம் எடுத்து கொண்டு தன்னிடம் இருந்தே வெளிபட்டதை கண்டு,
"இந்த குட்டி வராஹ மூர்த்தி என்ன செய்து விட போகிறது?"
என்று மனதுக்குள் ஒரு க்ஷணம் நினைக்க,
சத்ய லோகத்தை காட்டிலும் பெரிதாக வளர்ந்து, விஸ்வரூபனாக வளர்ந்து விட்டார் வராஹ பெருமான்.
கட்டை விரல் அளவுக்கு (அங்குஷ்ட மாத்ரத்தில்) காட்சி கொடுத்தாலும், உலகையே ரக்ஷிக்க கூடியவன் என்று காட்டுவது போலவும்,
"தான் அணுவுக்குள்ளும் அணுவாக இருக்கிறேன்" என்று காட்டவும்,
ப்ரம்ம தேவனிடமிருந்தே தன்னை வெளிப்படுத்தி, "சர்வ ஜீவனுக்குள்ளும், நானே அந்தர்யாமியாக இருக்கிறேன்" என்று காட்டவும்,
ப்ரம்ம தேவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை போக்க, மிகப்பெரிய  வராஹ ரூபத்துடன் வளர்ந்து காட்சி கொடுத்தார்.

ப்ரம்ம தேவனுக்கு தன்னை சின்ன கட்டை விரல் அளவுக்கு வராஹ மூர்த்தியாக காட்டி கொண்ட பரவாசுதேவன்,
தேவைப்பட்டால் எத்தனை பெரிய விஸ்வரூபத்தையும் எடுத்து தர்மத்தை காப்பேன் என்று உணர்த்தினார்.

நம் வீட்டிலும் சின்ன சிவபெருமான் விக்ரஹமோ, குட்டி கிருஷ்ணரோ, குட்டி விஷ்ணுவோ பூஜைக்காக வைத்து இருக்கிறோம்.
நம் வீட்டில் உள்ள கிருஷ்ணர் விக்ரஹம் சின்னதாக இருப்பதால், "இந்த குட்டி கிருஷ்ணரா என்னை காக்க போகிறார்? காக்கிறார்?" 
என்று நாம் நினைக்க கூடாது என்பதற்காக தான், 
பிரம்மாவுக்கும் அது போன்ற மனநிலையை உருவாக்கி, குட்டி வராஹனாக வந்த அவதார ரூபத்தை பார்த்து, அளவை பார்த்து "இந்த குட்டி வராஹ மூர்த்தியா பூலோகத்தை மீட்க போகிறது? என்று கேள்வி எழ, 
அளவிடமுடியாத, எந்த ரூபமாகவும் ஆக சக்தி பெற்ற நாராயணன், கிடு கிடுவென வளர்ந்து பெரிய வராஹமாக ஆகி விட்டார். 
அவருக்கு முன்னால் பெரும் மலைகள் கால் தண்டையில் போட்டு கொள்ளும் சிறு மணிகள் போல காட்சி அளித்தன என்றால், எத்தனை பெரிய விஸ்வரூபம் வராஹ அவதாரம் என்று புரிந்து கொள்ளலாம்.

"வந்திருப்பது சர்வேஸ்வரன்" என்று அறிந்த ப்ரம்மதேவன் வராஹ பகவானை நமஸ்கரித்தார்.

"தன்னை பூஜிக்க சுலபமாக இருக்குமே" என்பதற்காக
'தன்னையே சுலபமாக்கி கொண்டு, குட்டி விக்ரஹமாக உள்ளார் பெருமாள்' என்று அறிந்து கொள்ளும் போது தான், நமக்கும் பக்தி வரும்.
நம் வீட்டில் உள்ள சிவ பெருமானும், கிருஷ்ணரும், ராமரும் வெறும் பொம்மை அல்ல,  அளவில் சிறிதாக தோன்றினாலும், உண்மையான பக்தி நமக்கு இருக்குமானால்,
"நம்மை காக்க வல்லவர், எதிலும் அந்தர்யாமியாக இருப்பவர், நமக்காக இந்த விக்ரஹத்தில் புகுந்து இருக்கிறார் என்று புரிந்து விடும்". நமக்கும் இறை பக்தி செய்ய தோன்றும்.

என் வீட்டின் பூஜை அறையில் உள்ள இந்த குட்டி கிருஷ்ணனா, குட்டி சிவனா என்னை காப்பாற்ற போகிறார்? என்று சந்தேகம் நமக்கு வரக்கூடாது என்பதற்காக தான்,
ப்ரம்ம தேவனுக்கே இது போன்ற எண்ணத்தை வர வழைத்து, தன் முதல் அவதாரத்திலேயே நமக்கு வரப்போகும் இது போன்ற சந்தேகங்களுக்கு பதில் சொன்னார் நாராயணன்.

தான் அணுவுக்குள் அணுவாக (அனைத்து உயிருக்கும் உயிராக) இருப்பவன் என்று காட்ட, சிறு ரூபத்தை காட்டினாரேவொழிய,
அவர் ஐஸ்வரயம் எல்லை இல்லாதது என்று புரிந்து கொள்ள, எதுவாகவும் வருவார், எவ்வளவு பெரிய ரூபத்தையும் எடுப்பார் என்று காட்ட,
மிக பெரிய விஸ்வரூபத்தை காட்டினார் பரவாசுதேவன்.
பூலோகமே இல்லாத போதே, வராஹ மூர்த்தியாக வந்ததால், வராஹம் என்றால் என்ன? என்று பார்த்திராத, ப்ரம்ம லோகத்தில் உள்ள ரிஷிகள் அனைவரும் நடு நடுங்கி போனார்கள்.

நாம் பூலோகத்தில் காணும் பன்றியையோ, சிங்கத்தையோ, மீனையோ, மனிதர்களையோ, பெருமாள் செய்த அவதாரத்தோடு ஒப்பிட்டு பார்த்து விட கூடாது...

இப்படி ஒப்பீடு செய்து பார்க்க தோன்றினாலேயே,
அவர் எதற்காக அந்த அவதாரத்தை செய்தார்?
என்ன காரியத்தை செய்ய அப்படி ஒரு அவதாரம் செயதார்?
என்ற ஆலோசனை தோன்றாமல், பக்தி இல்லாமல் போய், நாம் காணும் மனிதனை போலவும், மீனை போலவும், பன்றியை போலவும் நினைத்து கொண்டு, பகவானின் கருணையை புரிந்து கொள்ளாமல், வெறும் கதையாகவும், நாதீகனாக இருந்தால் "உங்கள் பகவான் பன்றியா? மீனா?" என்ற அளவுக்கு கீழ்தர பேச்சுக்கள் சம்பவித்து விடும்.


"இது என்னவென்றே தெரியவில்லையே.. பெரிய ரூபத்தில் வளர்ந்து கொண்டே போகிறதே.   இது தேவனா, அசுரனா என்று தெரியவில்லையே" என்று ரிஷிகள் பயந்து நடுங்க...
"அபயம்.. அபயம்" என்று வராஹ மூர்த்தியாகவே இருந்து கொண்டு கர் கர் என்று கர்ஜிக்க, வந்திருப்பது பரவாசுதேவன் தான், ப்ரம்ம தேவனுக்கு அணுகிரஹம் செய்ய காட்சி கொடுக்கிறார் என்று பயம் தெளிந்தனர் ரிஷிகள்.

உலகத்தில் யஞ்யம் (வேத முறைப்படி இறை வழிபாடு) இருக்கும் வரையில்,
நல்ல காரியங்கள் நடக்கும் வரையில்,
தர்மம் (நியாயம்) உலகில் நிலைத்து இருக்கும் வரை,
உலகில் ஒரு பதிவ்ரதையாவது இருக்கும் வரை,
ஒரு வைஷ்ணவனாவது உலகில் இருக்கும் வரை,
அக்னிஹோத்ரம் செய்யும் ஒரு ப்ராம்மணனாவது இருக்கும் வரை,
உலகம் நிலைத்து இருக்கும்.

உலகம் சத்தியத்தாலும், தர்மத்தாலும் (நியாயம்) நிலைத்து இருக்கிறது.
உலக மக்களிடையே பொய் (அசத்யம்), நியாயத்துக்கு எதிரான செயல்கள் அதிகரிக்கும் போது, ஜனங்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை இட்டு, அழிவார்கள்.

அதர்மத்தாலும், அநியாயத்தாலும் சூழப்பட்டதால், பூமியே பிரளய ஜலத்தில் மூழ்கி கிடக்க,
மீண்டும் சத்தியத்தை நிலைநாட்டி, தர்மத்தை (நியாயத்தை) நிலைநாட்ட,
பிரளய ஜலத்தில் இருந்து மீட்டு, மீண்டும் பூமியை அதனுடைய ஸ்தானத்தில் வைக்க,
பெருமாள் "தர்மமே ரூபமாக, சத்தியமே ரூபமாக" கொண்ட 'யஞ்ய வராஹ' அவதாரம் எடுத்தார்.

பெருமாள் எடுத்த இந்த வராஹ அவதாரம் என்பதே தர்ம ஸ்வரூபமானது.

பூலோகமே இல்லாத சமயத்தில், தன்னை தானே வராஹனாக ஸ்ருஷ்டி செய்து கொண்டார் என்று பார்க்க வேண்டுமே தவிர, வராஹ ஸ்வரூபம் நாம் உலகில் காணும் சாதாரண பன்றி என்று நினைக்கக்கூடாது..

வராஹ மூர்த்தியை "தர்மத்தின் ஸ்வரூபமாக பார்" என்று நமக்கு காட்டுகிறது நம் புராணங்கள்.

உலகில் அலையும் சாதாரண பன்றியை போன்று தான், வராஹ அவதாரம் என்று நாம் பார்த்து விட கூடாது என்பதற்காகவே,
வராஹ மூர்த்தியின் ஸ்வரூபத்தை, சத்ய, ஜன, தப லோகத்தில் உள்ள ரிஷிகளே விளக்குகின்றனர்.

வராஹ மூர்த்தியாக அவதாரம் செய்து, பூலோகத்தை மீட்டு,
மனிதர்களை பிறக்க வைத்து, அவர்களால் மீண்டும் உலகில் தர்ம காரியங்கள், வேத முறையில் இறை வழிபாடுகள் இனி நடக்க போகிறது என்று அறிந்த ரிஷிகள், வராஹ பகவானையே யஞ்ய வராஹனாக பார்த்தனர்.

யாக குண்டத்தை சுற்றி, 4 பேர் உட்கார்ந்து கொண்டு யாகத்தை (யஞ்யம்) செய்வார்கள்.
1. ஹோதா (ரிக்வேதத்தில் உள்ள வேத ஸ்துதிகளை சொல்லி, தேவர்களை, ப்ரம்மா, ருத்ரன், பரவாசுதேவனை அழைத்து, தாங்கள் கொடுக்க ஆசைப்படும் ஆஹுதிகளை ஏற்றுக்கொள்ள அழைப்பவர். யாகம் செய்பவர்களில் மிகவும் மதிப்புக்கு உரியவர்)
2. அத்வர்யு (யஜுர் வேதத்தில் உள்ள வேத மந்திரப்படி யாகத்தினை முறைபடி சரியாக  நடத்துபவர் ,செய்பவர்)
3. உத்காதா (சாம வேதத்தில் உள்ள வேத மந்திரங்களை கானமாக பாடி, ஹோதாவால் அழைக்கப்படும் தேவதைகளை விசேஷமாக மகிழ்விப்பவர்)
4. ப்ரம்மா (யாகம் ஒழுங்காக நடக்கிறதா! என்று மேற்பார்வை செய்பவர். கர்மாக்கள் செய்கையில், அவ்வப்போது அத்வர்யுவாக இருப்பவர், பிரம்மாவை அனுமதி கேட்பார். அதற்கு பிரம்மா ‘ஓம்’ என்று சொல்லி அனுமதி தருவார்.
அவ்வப்போது யக்ஞத்தில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கான பிராயச்சித்தத்தைக் கூறுவதும், பிரம்மாவின் பொறுப்பே)
பொதுவாக யக்ஞம் என்ற சமஸ்கரித சொல்லுக்கு 'வழிபடுதல்' என்று பொருள்.


யாகத்தை செய்யும் இந்த நான்கு பேரும், வராஹ பகவானின் நான்கு 'கால்கள்' போலவும்,
யாகத்துக்கு இரண்டு இலை போன்ற தருவி வைத்து இருப்பார்கள்.
இந்த தருவியே, வராஹ பகவானின் இரண்டு 'காதுகள்' போலவும்,
யாகத்தில் கடைசியாக ஒரு நீண்ட பாத்திரம் வைத்து பூரண ஆஹுதி கொடுப்பார்கள்.
அந்த நீண்ட பாத்திரமே, வராஹ பகவானின் நீண்ட 'முகம்' போலவும்,
யாகத்துக்கு பயன்படுத்தப்படும் தர்ப்பைகளே, வராஹ பகவானின் 'ரோமங்களாக' இருக்க...

ஹோமத்துக்கு விடப்படும் நெய் (ஆஜ்யம்) ப்ரகாசத்திற்கு காரணமாக இருப்பதால், அவருடைய 'கண்கள்' போலவும் இருக்க,

வராஹ ஸ்வரூபமே, ரிஷிகளுக்கு  யக்ஞ ரூபமாக தெரிந்தது.
ரிஷிகள் "யக்ஞ வராஹனாக" தரிசனம் செய்தார்கள்.

யக்ஞ வராஹனாக காட்சி கொடுத்த பெருமாள், பிரளய ஜலத்தில் மூழ்கி பூமியை தூக்க, ஹிரண்யாக்ஷனுடன் போரிட்டு அவனை கொன்று,
ஒரு யானை ஒரு தாமரை பூவை தூக்கி கொள்வது போல, தந்தங்களினால் மிக எளிதாக தூக்கிக் கொண்டு மேலே வந்தார்.
பூலோகத்தை அதன் கதியில் மீண்டும் வைத்து, மனிதர்களை படைக்குமாறு அணுகிரஹம் செய்தார்.

பரவாசுதேவன் நாராயணனுக்கு, பூமா தேவியும், மஹா லட்சுமியும் பத்னிகள்.
தன்னை காப்பாற்றி, பூலோகத்தில் மீண்டும் ஜனங்களை ஸ்ருஷ்டிக்க அணுகிரஹம் செய்த 'வராஹ பெருமானை', நாராயணன் என்று உணர்ந்தாள், பூமி தாயார்.
பூலோகத்தில் பிறக்கும் நமக்கெல்லாம் தாய் "பூமா தேவி", தந்தை "நாராயணன்".
யாரும் 'அனாதை'கள் இல்லை இந்த உலகில்.

நாம் இந்த தாய் தந்தையிடம் பக்தியுடன் இருக்க வேண்டும். 

"நாம் மோக்ஷம் பெற வேண்டும்" என்பதற்காகவே எடுத்த அவதாரம் 'வராஹ அவதாரம்'.

பூமா தேவியுடன், வராஹ பெருமாள், தமிழ் நாட்டில் ஸ்ரீ முஷ்ணம் என்ற திவ்ய தேசத்தில் இருக்கிறார்கள்.
நம்மை பெற்ற பூமி தாயையும், பூமியையே மீட்டு கொடுத்த தந்தையான பெருமாளையும், நாமும் ஸ்ரீ முஷ்ணம் சென்று தரிசிக்க வேண்டும்.


"வராஹ புராணம், பாகவதம்" போன்ற புராணங்கள் "சாத்வீக புராணங்கள்" என்று புகழப்படுகிறது.

நாராயணனே கிருஷ்ணராக அவதாரம் செய்த போதும், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் "ராஜஸ புராணங்கள்" என்று சொல்லப்படுகிறது.
மகாபாரதத்தில் தான் பகவத் கீதை இருக்கிறது என்றாலும், பிற கதைகளை படிக்கும் போது பொறாமை, சூது, பழிக்கு பழி போன்ற ராஜஸ குணங்களும் காணப்படுகிறது.

ஆனால், பாகவதம், வராஹ புராணம் போன்ற சில புராணங்கள், மோக்ஷத்தை விரும்ப கூடியவர்கள் படிப்பதற்காகவே ஆரம்பம் முதல் கடைசி வரை சாத்வீகமாகவே உள்ளவை என்று சொல்லப்படுகிறது.

வராஹ புராணத்தில், ஹிரண்யாக்ஷனை ஒழித்து, பூமியை அதன் கதியில் நிறுத்தி விட்ட பின், வராஹ மூர்த்தியாக உள்ள நாராயணருக்கும், பூமா தேவிக்கும் இடையே நடந்த உரையாடல் உள்ளது.

"பூலோகத்தில் இப்படி ஜீவ கோடிகள் பிறந்து, வாழ்ந்து, இறந்து.. மீண்டும் பிறந்து, வாழ்ந்து, இறந்து கொண்டே இருக்கிறார்களே....
இவர்கள் இந்த சம்சார சூழலில் இருந்து விடு பட்டு, பரமபதம் என்ற மோக்ஷத்தை அடைய என்ன வழி?" என்று பூமா தேவி கேட்க,
வராஹ பகவான் 'நம்மை போன்ற ஜீவன்கள் மோக்ஷம் அடைய வழி என்ன" என்று சொல்கிறார்.
ஆரம்பம் முதல், கடைசி வரை,
ஒரு தாயும் தந்தையும், "தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டுமே" என்று கவலைப்பட்டு தங்களுக்குள் உரையாடி கொள்ளும் சாத்வீக புராணம் வராஹ புராணம்.

நம் மோக்ஷத்திற்காக, பெருமாளும், பூமி பிராட்டியும் பேசிக்கொள்ளும் அற்புதமான வராஹ புராணத்தை ஒருவன் படித்தாலே, அவனுக்கு மோக்ஷம் நிச்சயம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க நம் வேதங்கள்.
வாழ்க நம் தெய்வங்கள்.

வளர்க நம் இறை பக்தி.

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Morning (With meaning)

Sandhya Vandanam - Afternoon (With meaning)



Sandhya Vandanam - Evening (With meaning)




Thursday 7 February 2019

உலகத்தில் ஏற்படும் நான்கு ப்ரளயங்கள் (அழிவுகள்) என்னென்ன? ப்ரம்மாவின் வயது என்ன? தெரிந்து கொள்வோமே ...

உலகத்தில் நான்கு விதமான ப்ரளயங்கள் (அழிவுகள்) ஏற்படுகிறது என்று ஹிந்துக்களின் சனாதன தர்ம சாஸ்திரம் சொல்கிறது.



  • 2012ல் உலகம் அழியும்,
  • 5000 வருடத்திற்கு முன் உலகமே இல்லை,
  • உலகம் தட்டையானது,
  • ஒரே பிறவி தான்,
  • மனிதன் ஆடை இல்லாத, முட்டாள் ஆதாம் ஏவாள் மூலம் வந்தார்கள்,
  • கொலை செய்யப்பட்டவர் மீண்டும் வருவார்
என்று தன் கற்பனைக்கு தோன்றியதை சொல்லி ஏமாற்றும் பழக்கம் ஹிந்துக்களின் சனாதன தர்ம சாஸ்திரத்தில் இல்லை.

உலகம் பல கோடி வருடங்களாக இருந்து கொண்டே இருக்கிறது என்று காலத்தை கணக்கிட்டு சொல்லும் நம் ஹிந்துக்களின் சாஸ்திரம், அழிவை பற்றியும் சொல்கிறது.
தெரிந்து கொள்வோமே...

ஹிந்துக்களின் பெருமை அளவிட முடியாதது.
ஹிந்துவாக பிறந்தவன் பெரும் புண்ணியம் செய்தவன்.
ஹிந்துவாக மாற ஆசைப்படுபவனும், புண்ணியம் செய்தவன்.

நான்கு வகையான ப்ரளயங்கள்:

  1. நித்ய ப்ரளயம்
  2. நைமித்திக ப்ரளயம்
  3. மஹா ப்ரளயம்
  4. ஆத்யந்திக ப்ரளயம்

என பிரளயங்கள் நான்கு சொல்லப்படுகிறது.

1) நித்ய ப்ரளயம்:
நித்ய ப்ரளயம் என்பது "ஒவ்வொரு நொடியும் உலகத்தில் ஏற்பட்டு கொண்டே இருக்கும் அழிவு".
ஒவ்வொரு நொடியும் உலகத்தில் பல லட்சம் உயிர்கள் தன் தேகங்களை விட்டு விட்டு, மரணித்து கொண்டே இருக்கின்றனர்.

இந்த அழிவுகளை, நித்ய பிரளயம் என்கிறது ஹிந்துக்களின் வேத சாஸ்திரம்.

மோக்ஷம் அடையாத உயிர்கள், அவரவர் குணங்களுடன் மீண்டும் உலகங்களில் பிறக்கின்றனர்.
தூக்கம் என்பது கூட நம் "மனதை பொறுத்தியவரை" நடக்கும் நித்ய பிரளயம் தான்.
நாம் தூங்கும் போது மனம் அழிகிறது.
விழித்த பின், மீண்டும் மனம் விழித்து எழுகிறது.


2) நைமித்திக ப்ரளயம்
சத்ய லோகம் என்ற ப்ரம்ம லோகத்தில் இருக்கும் பிரம்மாவுக்கு, அவருடைய பகல் வேளையில், உலக நிர்வாகத்தை 14 மனு அரசர்களை நியமித்து நிர்வாகம் செய்கிறார்.
ஒவ்வொரு மனுவும் 71 சதுர் யுகங்கள் வாழ்கின்றனர். ஆட்சி செய்கின்றனர்.

ஒரு மனு தன் அரசாட்சியை முடித்த பின், ஒரு சத்ய யுக காலம் பூலோகம் நீரில் மூழ்கும்.
அடுத்த மனு அரசர் பணி அமர்த்தப்பட்டு, கடல் தன் எல்லைக்குள் சென்று, மீண்டும் 71 சதுர் யுகங்கள் ஆட்சி நடக்கிறது.

இந்த சரித்திரத்தை, திருடி, மனு அரசனை noah என்று சொல்கின்றனர் பிற மதத்தவர்கள்... போலிகள்.. https://en.m.wikipedia.org/wiki/Noah.

14 மனு அரசர்கள் ஒவ்வொருவரும் 71 சதுர் யுகங்கள் ஆண்ட பின், சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவுக்கு தன் ஒரு நாளில், ஒரு பகல் வேளை முடிகிறது.

"நைமித்திக ப்ரளயம்" என்பது சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவின் இரவு பொழுதில் ஏற்படும் உலக அழிவு.

பொதுவாக 14 மனு அரசர்கள் சேர்ந்து மொத்தமாக 14×71 = 994 சதுர் யுகங்களை ஆளுகின்றனர் என்று அறிகிறோம்.
பொதுவாக,
1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் வேளை என்று சொல்வது வழக்கம்.

பிரம்மாவின் இரவு என்பது இது போன்று 1000 சதுர் யுக காலங்கள் நீண்டது.

ஒரு "சதுர் யுகம்" என்பது, 4 யுகங்களை கொண்டது.

"க்ருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்" சேர்ந்தது ஒரு "சதுர் யுகம்".

கலியுகம் 4,32,000 பூலோக வருடங்கள் கொண்டது.
துவாபர யுகம், 8,64,000 பூலோக வருடங்கள் கொண்டது.
த்ரேதா யுகம் 12,96,000 பூலோக வருடங்கள் கொண்டது.
க்ருத யுகம் 17,28,000 பூலோக வருடங்கள் கொண்டது.
ஆக,
ஒரு "சதுர் யுகம்" என்பது, 43,20,000 பூலோக வருடங்கள் கொண்டது.
(அதாவது, ஏறத்தாழ 43 லட்ச பூலோக வருடங்கள் ஒரு "சதுர் யுகம்".)

ஒரு மனு அரசர் இது போல 71 சதுர் யுகங்கள் இருந்து பூலோகத்தை ஆட்சி செய்கிறார்.


அதாவது ஒரு மனு அரசர், 71×43,20,000 = 30,67,20,000 பூலோக வருடங்கள் வாழ்கிறார்.
(அதாவது, ஏறத்தாழ 30 கோடி பூலோக வருடங்கள், ஒரு மனு அரசர் வாழ்கிறார்.)

14 மனு அரசர்கள் பிரம்மாவின் ஒரு பகல் வேளையில் நியமிக்கப்படுகின்றனர்.

14× 30,67,20,000 = 429,40,80,000 பூலோக வருடங்கள் பிரம்மாவுடைய பகல் வேளையில், 14 மனு அரசர்கள் ஆட்சி செய்கின்றனர்.
(அதாவது, ஏறத்தாழ 429 கோடி பூலோக வருடங்கள், 14 மனு அரசர்கள் பூலோகத்தை ஆண்டு, பிரம்மாவுடைய ஒரு பகல் வேளையில் ஆளுகின்றனர்.)

ஒரு மனு அரசரின் ஆட்சி முடிந்து, இன்னொரு மனு ஆட்சியில் அமரும் இடைவேளையில் பூலோகம் நீரில் மூழ்குகிறது.
இதன் காலம் 17,28,000 பூலோக வருடங்கள். (ஏறத்தாழ 17 லட்ச பூலோக வருடங்கள்)

ஒரு மனுவுக்கும், இன்னொரு மனுவுக்கும் 13 இடைவெளி வருகிறது.
இந்த 13 இடைப்பட்ட காலத்தில் ப்ரம்மா சிறிது ஓய்வு எடுக்கிறார், சந்தியா வந்தனம் செய்கிறார்.

சத்ய லோகத்தில், 13 முறை கிடைக்கும் இந்த நேரம், அவரை பொறுத்தவரை, இது சில மணி நிமிடங்கள் மட்டுமே.

14 மனு அரசர்கள், தன் பதவி முடிந்து, அடுத்த மனுவுக்கு தன் அரசாட்சியை கொடுத்து விட்டு போகும், இந்த இடைவெளி காலத்தை கணக்கிட்டால், 13×17,28,000 = 2,24,64,000 பூலோக வருடங்கள் என்று தெரிகிறது.
(ஏறத்தாழ 2 கோடி பூலோக வருடங்கள்)




ஆக சத்ய லோகத்தில் உள்ள, பிரம்மாவுக்கு ஒரு பகல் வேளை என்பது 2,24,64,000 + 429,40,80,000 = 431,65,44,000 பூலோக வருடங்கள்.
அதாவது, ஏறத்தாழ 431 கோடி பூலோக வருடங்கள், பிரம்மாவுக்கு ஒரு பகல் வேளை.

அதிகபட்சம் 100 வயது வாழும் மனிதர்களான நம்மில், "கடவுளை காட்டு, காட்டினால் தான் நம்புவேன்" என்று திமிர் பிடித்து கேட்பவனை பார்த்து, பல கோடி வருடங்கள் இருக்கும் ப்ரம்மா என்ன நினைப்பார்?
அல்ப ஆயுசு இருக்கும் இவனுக்கு ஆசை இருந்தாலாவது பகவான் வருவார், திமிர் பிடித்து இருக்கிறானே என்று  தான் நினைப்பார்.  

சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்மாவுடைய இரவு, பகலை போன்று 431 கோடி பூலோக வருடங்கள் நீண்டது.
14 மனு அரசர்கள் ஆண்ட இத்தனை நீண்ட அகண்டமான 429 கோடி வருடங்களும், பூலோகத்தில் மறுபடி மறுபடி பிறந்து, ஒரு சமயம் ஹரியை பஜித்தவர்கள் மோக்ஷம் அடைந்து விடுகிறார்கள்.
மீண்டும் அவர்கள் பிறப்பதில்லை.
ஹரி பக்தி இல்லாதவர்கள், அவர்கள் செய்த பாவம், புண்ணியத்துக்கு ஏற்ப, மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.

"இன்று வரை நாம் இருக்கிறோம்" என்று சற்று நம்மை கவனித்தால், மோக்ஷம் அடையாத ஜீவன்களில் நாமும் ஒருவர் என்று புரியும்.
எத்தனை கோடி வருடங்கள் உலகில் பிறந்து கொண்டே இருக்கிறோம் என்று புரியும்.


மோக்ஷம் அடையாத அனைத்து ஜீவனும், ப்ரம்மாவின் தூக்க சமயத்தில் அதாவது 431 கோடி பூலோக வருட காலங்கள் "தமஸ்" என்ற இருளில் எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் இருந்து கொண்டே இருப்போம்.

இன்று வரை மோக்ஷம் அடையாத, நாம் அனைவரும் இதை அனுபவித்தவர்கள் தான்.
நாம் அனைவரும் இன்று வரை மோக்ஷம் அடையாத ஜீவன் தான்.

நம்மை தட்டி எழுப்பி, மோக்ஷ பாதையை காட்ட, பகவான் நமக்கு ஆன்மீக குருவை உலகில் பிறக்க செய்கிறார். சமயத்தில் அவரே அவதரிக்கவும் செய்கிறார்.

ப்ரம்மா தான் தூங்க போகும் போது, "சொர்க்க லோகம்", அதற்கு கீழ் இருக்கும் "புவர் லோகம், பூலோகம், அதல, விதல, சுதல, தலாதல, மஹாதல, பாதாள, ரஸாதல" போன்ற அனைத்து லோகங்களையும் அழித்து விட்டு தூங்க செல்கிறார்.
தேவர்கள் கூட அழிந்து விடுவார்கள்.
இந்த சமயத்தில் சொர்க்க லோகத்துக்கு மேல் இருக்கும் "மகர லோகம், ஜன லோகம், தப லோகம்" அழிவதில்லை.
சத்ய லோகத்தில் பிரம்மாவே இருப்பதால், இதுவும் அழிவதில்லை.

புண்ணியங்கள் செய்த யோகிகளும், ரிஷிகளும் இந்த லோகங்களில் இருந்து கொண்டே இருக்கின்றனர்.
தப லோகத்துக்கும் மேல் இருக்கும், தன் லோகமான சத்ய லோகத்தில் ப்ரம்மா உறங்குகிறார்.

பூலோக கணக்குப்படி ஏறத்தாழ 431 வருடங்கள் மோக்ஷம் அடையாத நாம் அனைவரும் "தமஸ்" என்ற இருளில், உலகமே இல்லாததால், மாமிச உடலும் இல்லாததால் "கம்" என்று இந்த சமயத்தில் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் இருப்போம், இருந்தோம்.
இன்றைய தேதியில், இன்று உள்ள பிரம்மாவுக்கு 50 வயது முடிந்து விட்டது.

பிரம்மா தன் 51 வயதில், முதல் நாளில் அவருடைய பகல் பொழுதில் இருக்கிறார்.

இந்த பகல் வேளையில், 14 மனு அரசர்கள் வரிசையில், "ஸ்வாயம்பு" என்ற முதல் மனு அரசரில் ஆரம்பித்து, இதுவரை 6 மனு அரசர்கள், தங்கள் ஆட்சியில் ஒவ்வொருவரும் 71 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டனர்.

இன்று வரை நாம் மோக்ஷம் அடையவில்லை.

இப்பொழுது பிரம்மாவின் படைப்பான "வைவஸ்வதன்" என்பவர், 7வது மனு அரசனாக 71 சதுர் யூகங்களை ஆண்டு வருகிறார்.
"வைவஸ்வத மனு" ஏற்கனவே 27 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டார்.

இப்பொழுது 28வது சதுர் யூகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்.
இதில் 3 யுகங்கள் முடிந்து விட்டது.


நாம் இப்பொழுது 28வது சதுர் யுகத்தின், கலி யுகத்தில் இருக்கிறோம்.

கலியுகம்  ஆங்கிலேய calendar படி 3102BCல் ஆரம்பிக்கிறது.

கலியுகம் ஆரம்பித்து ஏறத்தாழ 5000 வருடங்கள் ஆகி உள்ளது.

கலியுகம் 4,32,000 பூலோக வருடங்கள் கொண்டது என்று பார்க்கும் போது, இந்த கலியுகம் முடிய இன்னும் 4 லட்சத்துக்கும் மேல் வருடங்கள் உள்ளது.

ஆக,
"நைமித்திக ப்ரளயம்" என்பது சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவின் இரவு பொழுதில் ஏற்படும் உலக அழிவு.
மகர, ஜன, தப, சத்ய லோகங்களை தவிர்த்து,
மற்ற அனைத்து உலகங்களும் அழிந்து விடும் நிகழ்வை 'நைமித்திக ப்ரளயம்' என்று வேத சாஸ்திரம் சொல்கிறது.

சத்ய லோகத்தில், தூங்கி எழுந்த ப்ரம்மா, மீண்டும் அதே போல அனைத்து லோகங்களையும் ஸ்ருஷ்டி செய்து, மோக்ஷம் அடையாத ஜீவனுக்கு மீண்டும் பிறக்க உலகங்கள் படைத்து, பாவ புண்ணியத்துக்கு ஏற்ப மனித, மிருக, தாவர உடம்பை கொடுத்து, 14 மனு அரசர்களை கொண்டு மீண்டும் உலகை ஆட்சி செய்ய செய்கிறார்.

3) மஹா ப்ரளயம்
மஹா ப்ரளயம் என்பது, பிரம்மாவுக்கு 100 வயது ஆகி, பிரம்மாவின் ஆயுசு முடியும் போது ஏற்படும் பேரழிவு.

ப்ரம்மாவே மறைந்து விடுவதால், அவர் இருக்கும் சத்ய லோகம் ஆரம்பித்து, அதற்கு கீழ் இருக்கும் தப லோகம், ஜன லோகம், மகர லோகம் என்று பாதாள லோகங்களை வரை உள்ள, 14 லோகங்களும் அழிந்து விடும். இந்த அழிவே மஹா பிரளயம்.

பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், பஞ்ச பூதங்களும் அழிந்து விடும்.
14 லோகங்களும் பிரளய ஜலத்தில் கரைந்து,
பிரளய ஜலம், பிரளய அக்னியில் வற்றி,
பிரளய அக்னி, ஆகாசத்தில் அடங்கி,
ஆகாசமும் தமஸில் அடங்கி விடும்.

அனைவரும் அழிந்து விடுவார்கள். நாராயணன் ஒருவரே இருப்பார். பிரம்மாவின் ஆயுசு முடிந்தும் மோக்ஷம் அடைய ஆசைப்படாமல், ஹரி பக்தி செய்யாது வாழ்ந்த ஜீவ கோடிகளை தன் இதயத்தில் "தமஸ்" என்ற நிலையில் இருக்க செய்கிறார் பரமாத்மா.
"தமஸ்" என்பது "இருட்டை" சொல்லவில்லை.
"இருள்" என்றும் "அஞான நிலை" என்றும் பொருள் கொள்ளலாம்.
தமஸ் என்பது அறிந்து கொள்ள முடியாத ஒரு நிலையை குறிப்பிடுகிறது.

இந்த தமஸ் என்ற அனுபவத்தை புரிந்து கொள்ள, பகவான் நமக்கு "தூக்கத்தை" கொடுத்து உள்ளார்.
தூங்கும் போது "தமஸ்" என்ற நிலையில் நாம் இருக்கிறோம்.
தூக்க சமயத்தில் "நாம் இருந்தும், இருப்பதை உணராமல்" இருக்கிறோம். இதையே "தமஸ்" என்று சொல்கிறோம்.

இதே நிலையிலேயே, ஆனந்த மூர்த்தியான நாராயணனே இதயத்தில் இருக்கிறோம் என்று தெரியாமலேயே, பல கோடி வருடங்கள், மஹா பிரளயம் ஏற்பட்ட பின் "தமஸ்" என்ற நிலையில் இருப்போம்.

ஹரி பக்தி செய்து மோக்ஷம் அடைந்த ஜீவன்கள், வைகுண்டம் என்ற என்றுமே அழியாத லோகத்தை அடைந்து விடுகின்றனர்.
அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.
தேவைப்பட்டால், நாராயணன் சொன்னால், பூலோகம் வரவும், 14 லோகங்களில் எங்கு செல்லவும் அந்த மோக்ஷம் அடைந்த ஜீவனுக்கு அனுமதி உண்டு.
நாராயணனை போலவே இவர்களும் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள் வைகுண்டத்தில்.
நாராயணன், பரவாசுதேவனாக அங்கு இருந்து கொண்டு, அவர்கள் பூஜையை ஏற்று கொண்டே இருக்கிறார்.

ஹரி பக்தி செய்து, "இது நாராயணன் கொடுத்த பதவி, இது நாராயணன் கொடுத்த பிறவி" என்று நாராயணனிடம் ப்ரேம பக்தி செய்து ப்ரம்மா வாழ்ந்து இருந்தால், பகவான் அந்த பிரம்மாவுக்கு மோக்ஷம் என்ற வைகுண்டம் கொடுத்து விடுகிறார்.

"நான் ப்ரம்ம தேவன், 14 லோகங்களும் எனக்கு கட்டுப்பட்டு நடக்கிறது" என்று நினைத்து இருந்தால், அவர் செய்த புண்ணியத்துக்கு ஏற்ப மீண்டும் உலக ஸ்ருஷ்டி நடக்கும் போது, பூமியில் பிறக்க வேண்டியது தான்.
இந்த சட்டம் அனைவருக்கும் உண்டு.
பிரம்மாவுக்கும் உண்டு.

மஹா பிரளயம் முடிந்து, ஜீவ கோடிகளை தன் இதயத்தில் வைத்து கொண்டு, 14 லோகங்களையும் தன் திருவயிற்றில் வைத்து, நாராயணன் தூங்க செல்கிறார்.

நித்திரை, யோக நித்திரை, விழிப்பு, செயல் என்பது நமக்கு மட்டுமல்ல, பரமாத்மாவுக்கு உண்டு.
பரமாத்மா நாராயணன், உலகை ஸ்ருஷ்டி செய்யலாம் என்று மீண்டும் சங்கல்பத்து விழிக்கும் பொழுது, மீண்டும் பிரம்மாவை படைத்து உலக ஸ்ருஷ்டி செய்ய, வேதம் என்ற தன் அறிவை அவருக்கு உபதேசம் செய்து, சத்ய லோகத்தை படைத்து, மேலும் லோகங்களை படைக்க சொல்லி, தன் இதயத்தில் இருக்கும் ஜீவ கோடிகள் மீண்டும் பிறக்க செய்து, உலக இன்ப துன்பங்களை அனுபவித்து அனுபவித்து அலுப்பு ஏற்பட்டு, இப்பொழுதாவது மோக்ஷம் அடைய ஹரி பக்தி செய்கிறார்களா? என்று யோக நித்திரையில் உலகம் நடப்பதை தன் சுய பலத்தால் நிர்வாகம் செய்து, பார்த்து கொண்டு வருகிறார் பரமாத்மா.

இது ஒரு விளையாட்டு போல இருப்பதால், உலக நிர்வாகத்தை பகவான் லீலையாக செய்கிறார் என்று பொதுவாக சொல்வது உண்டு.

4) ஆத்யந்திக ப்ரளயம்
ஆத்யந்திக ப்ரளயம் என்பது ஜீவனுக்கு சம்சார சூழலில் சிக்கி ஏற்படும் பிறப்பு, இறப்பில் இருந்து ஏற்படும் முற்று புள்ளி. விடுதலை. மோக்ஷம்..
ஹரி பக்தி செய்து,
"உலகத்தில் இனி மீண்டும் பிறந்து இன்ப துன்பங்கள் அனுபவிக்க தயார் இல்லை" என்று திட சித்தம் கொண்டு,
உடலில் ஏற்படும் சுக துக்கத்தை சிறிதும் பொருட்படுத்தாமல்,
ஆத்மா நான் என்ற அறிவுடன்,
இந்த ஆத்மா பரமாத்மாவான ஹரியை சேர்ந்தவன் என்ற குறிக்கோளுடன்,
ஹரி பக்தியே செய்து வைராக்யத்துடன் வாழ்ந்து,
ஹரியை மகிழ்ச்சி படுத்தி,
அந்த பரமாத்மா அந்த ஜீவனின் கடைசி மூச்சு விடும் சமயத்தில் தானே வந்து காட்சி கொடுத்து, எம தர்மன் கூட்டி செல்லாமல், தானே வைகுண்டம் கூட்டி செல்வது மோக்ஷம்.
மோக்ஷம் அடைந்த ஜீவன், இதற்கு பிறகு திரும்பி வர இயலாது.. 

HARE RAMA HARE KRISHNA

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 




Tuesday 13 February 2018

பாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்? நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...

120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்?
இந்த கேள்வி இந்தியர்களை பார்த்து பொதுவாக வெளிநாட்டவர்களுக்கு ஏற்படுகிறது.


இந்தியாவில் 120 கோடிக்கு மேல் மக்கள் உள்ளனர்.
இதில் மூன்றில் ஒரு பங்கு ஜனங்களே உள்ள நாடு அமெரிக்கா.
இந்தியாவை போன்று ஜனத்தொகை உள்ள நாடு சீனா.
ஆனால், இந்தியாவை விட, நிலப்பரப்பு பல மடங்கு பெரியது.
நில பரப்பில் பாரத தேசத்தை விட பல மடங்கு பெரியது அமெரிக்கா.
கடுமையான சட்டங்கள் உள்ள நாடுகள் இவை எல்லாம்.
சாலை விதிகளை மீறினால் தண்டனை உண்டு இந்த நாடுகளில்.
இஸ்லாமிய நாடுகளில், வேறு மத சின்னங்கள் வைத்து கொண்டாலோ, கொண்டாடினாலோ கூட கடுமையான தண்டனை உண்டு. 
"திருட்டு" போன்ற செயல்களுக்கு தலை துண்டிக்கும் அளவுக்கு கடுமையான சட்டங்கள் பல தேசங்களில் இருக்கிறது.

சட்டம் ஒழுங்கு கடுமையாக இருக்கும் இந்த தேசங்களில், தனி மனிதர்கள் துப்பாக்கி வாங்கி, பாதுகாப்புக்கு வைத்து கொள்கின்றனர். என்ன விசித்திரம்?
தனி மனித பாதுகாப்புக்கு, அச்சம் பொதுவாக காணப்படுகிறது.

இந்த அச்சம், இவர்களிடம் ஒருவன் சிரித்தாலும் சந்தேகப்பட வைக்கிறது.

சிறு உதவி செய்தாலும், THANK YOU  சொல்லும் பழக்கமும்,
சிறிய தவறு செய்தாலும், SORRY சொல்லும் பழக்கமும் இவர்களுக்கு பாதுகாப்பு இன்மையால் வந்த பழக்கங்கள்.
தானாக வந்த நல்ல பழக்கங்கள் இல்லை.
கட்டாயத்தால் உயிர் பயத்தால் வந்தவைகள் இவை.

இந்தியாவை தவிர பொதுவாக மற்ற நாடுகள், கடுமையான சட்டத்தை கொண்டு தான் மக்களை வழி நடத்துகிறது.

நல்ல விஷயங்கள் யாவும் சட்டத்தாலும், பயத்தாலும் தான் இந்த நாடுகளில் நடக்கிறது.

இந்தியாவில் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் கடுமையான சட்டங்கள் இல்லை.
கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று சொல்பவர்கள் தான் இங்கு உண்டு. 
சட்டம் கொடுமையாக உள்ளது என்று புலம்புவோர் இங்கு இல்லை.
கடுமையான சில சட்டம் இருந்தாலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்தியாவில் தனி மனித ஒழுக்கம் மகான்களாலும், ரிஷிகளாலும், சாஸ்திரங்களாலும் புகட்டப்பட்டு, அது மக்கள் மனதில் ஆழ்ந்து ஊறி போய்  உள்ளது. 
பெரும்பாலும் ஹிந்துக்கள் சாத்வீக வாழ்க்கை வாழ்கின்றனர்.

சட்டங்கள் கடுமையாக இல்லாமல் போனாலும்,
அமெரிக்கா போன்ற பெரிய நிலப்பரப்பு இல்லாமல் இருந்தாலும்,
கொஞ்சம் நிலப்பரப்பில் 120 கோடி மக்களை தாங்கி கொண்டு,
120 கோடி மக்களும் கையில் துப்பாக்கி தூக்கி கொண்டு, உயிர் பயத்தால் அலையாமல், நிம்மதியாக வாழ்கின்றனர்.

இது எப்படி இந்தியாவில் சாத்தியமாகிறது? என்பதே நம் பாரத நாட்டிற்கு வரும் வெளி நாட்டவர்கள் கேள்வி.
நம்மிடம் உள்ள "நிம்மதியை" பார்த்து திகைக்கின்றனர்.


ஹிந்துவுக்கும், மற்ற தேசத்தில் உள்ள பிற மதத்தை சேர்ந்தவனுக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு சின்ன உதாரணம் :

ஒரு பள்ளியில், ஆசிரியனாக ஒருவன் வேலை பார்த்து வந்தான்.
அவன் ஹிந்து அல்லாத வெளிநாட்டவன்.
தன் வகுப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட சிறுவனை பார்த்தாலே என்ன காரணத்தாலோ அந்த ஆசிரியனுக்கு பிடிக்கவில்லை.
அந்த மாணவனை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியனுக்கு, ஒரு அடியாவது பலமாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

அறிவு இருப்பதால், ஆசிரியன் யோசித்தான்.
"நான் ஒரு வேளை இந்த பையனை ஓங்கி அடித்தால், இவன் திருப்பி அடிப்பானோ?
மிகவும் சிறியவன் இவன். திருப்பி அடிக்க வாய்ப்பே இல்லை.

தைரியமாக அடிக்கலாம் என்று நினைத்தால், இவன் தன் அப்பாவை கூட்டி கொண்டு வந்து விட்டால்?
இவனின் தந்தை என்னை வெளுத்து விடுவாரே !!

இவன் அப்பனை சமாளித்து விடலாம் என்று நினைத்தாலும், இவன் போலீசுக்கு சென்று விட்டால், போலீஸ் அடியும் விழும், ஜெயிலும் கிடைக்குமே??
ஐயோ வேண்டவே வேண்டாம்..  
சமயம் கிடைக்கும் வரை பொறுமையாக இருப்போம்"
என்று நினைத்து தன் கோபத்தை அடக்கி கொண்டான்.

இப்படி "சட்டத்திற்கு பயந்து, சமுதாயத்துக்கு பயப்படுகின்றனர்" வேறு மதத்தை சேர்ந்த வெளிநாட்டினர்.
பள்ளியில் ஒரு ஹிந்து ஆசிரியனாக வேலை பார்த்து வந்தான்.
அந்த ஆசிரியனுக்கும் தன் வகுப்பில் உள்ள ஒரு சிறுவனை பார்த்தாலே என்ன காரணத்தாலோ பிடிக்கவில்லை.

அந்த மாணவனை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியனுக்கு, ஒரு அடியாவது பலமாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

அறிவு இருப்பதால், ஹிந்து ஆசிரியன் யோசித்தான்.
"நான் ஒரு வேளை இந்த பையனை ஓங்கி அடித்தால், நான் செய்யும் பாவம் என்ற கர்மாவுக்கு, தண்டனை இந்த ஜென்மத்திலோ, அடுத்த ஜென்மத்திலோ அனுபவிக்க நேரிடுமே?

இவனுக்கு உள்ளே இருக்கும் பரமாத்மாவை அடித்த பாவம் சேருமே?

கடவுள் எங்கும் உள்ளார் என்று தெரியும் போது, இவனை காரணமே இல்லாமல் அடித்தால், நான் செய்யும் பாவத்துக்கு தண்டனை கிடைக்குமே?
அந்த பாவம் என்  பிள்ளைகளை பாதித்தால்?
அப்படியாவது இவனை அடித்து தான் நான் திருப்தி அடைய வேண்டுமா?
ஏன் நான் இரக்கப்பட கூடாது?

நான் ஏன் காரணமில்லாமல் ஜீவ ஹிம்சை செய்ய வேண்டும்?


என் மனதில் ஏற்படும் கோபத்திற்கு, நான் தானே காரணம். 
இவனை ஏன் பலிகடா ஆக்க வேண்டும்? இது என் குறை தானே?

நான் ஏன் ஒதுங்கி போக கூடாது?

ஏன் நான் முயற்சி செய்தாவது, அந்த சிறுவனிடத்தில் எங்காவது ஒட்டி இருக்கும் நல்ல விஷயத்தை பார்த்து, அவனை அடிப்பதற்கு பதில், அன்பு செய்ய முயற்சி செய்ய கூடாது?"
என்று பல கேள்விகள் மனதில் எழ, கோபத்தை விட்டு, "ஐயோ பாவம்" என்ற இரக்கம் வந்தது ஹிந்து ஆசிரியனுக்கு

இந்த சாத்வீக குணம் பொதுவாக அனைத்து பாரத மக்களிடமும் இருப்பதால் தான், பாரத மக்கள் இன்று வரை நிம்மதியாக வாழ்கின்றனர்.

ஹிந்துக்கள் சுய ஒழுக்கம், பாவ புண்ணிய ஞானத்தோடு இருப்பதால், குணத்திலேயே நல்லவர்களாக இருக்கின்றனர். 

வெளி மதத்தை சேர்ந்த வெளிநாட்டவர்கள், சட்டத்தால் மட்டுமே நல்லவர்களாக இருக்கின்றனர். தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள்.
பாதுகாப்பு இன்மை, உயிர்அச்சத்தால், வெளிநாட்டவர்கள் சொன்ன "THANK YOU", "SORRY" போன்ற வார்த்தைகள், ஹிந்துக்கள் கேட்கும் போது நல்ல பழக்கம் என்று தோன்றினாலும், அவர்களுக்கு இந்த பழக்கம் குணத்தால் வரவில்லை, பயத்தால் வந்த பழக்கமே.
மற்றவர்களை பார்த்து உயிர் பயமோ, பாதுகாப்பு இன்மையோ ஹிந்துக்களுக்கு இல்லாததால், மற்றவர்களுக்கு உள்ளும் பரமாத்மா இருக்கிறார் என்பதால், நமஸ்காரம், வணக்கம் சொல்லும் பழக்கம்  ஹிந்துக்களுக்கு இருந்ததே தவிர, "THANK YOU", "SORRY" சொல்லும் பழக்கம் நமக்கு இருந்ததே இல்லை.

120 கோடி மக்களுக்கு, சட்டம் கடுமையாக இல்லாத நிலையில், சில லட்ச போலீஸ் உண்மையில் போதுமா?
இயற்கையாகவே ஹிந்துக்களுக்கு இருக்கும் பாவ புண்ணிய அறிவாலும், ஜீவ காருண்யம் இயற்கையாக இருப்பதாலும், 120 கோடி ஹிந்துக்கள் இருந்தாலும், கடந்த 1200 வருடங்களில் புகுந்த பிற மதங்களால் மாற்றப்பட்ட ஹிந்துக்கள் உட்பட, அனைவரும் இந்த உயரிய குணத்தால் பிணைக்கப்பட்டு, தங்களை தாங்களே சட்ட ஒழுங்கு மீறாமல் பார்த்து கொள்கின்றனர்.
அவ்வப்போது ஏற்படும் மீறலுக்கு, இருக்கும் சில போலீஸ் உதவி செய்கின்றனர்.
இந்த சாத்வீக குணம் இந்த ஹிந்துக்களுக்கு எப்படி வந்தது? 
நம் பாட்டனார்களால் வந்தது.

நம் பாட்டனார்களுக்கு எப்படி வந்தது இந்த குணம்?
நம் பாரத புண்ணிய பூமியில் பிறந்த மகான்களும், ஞானிகளும், ரிஷிகளும் தந்தனர்.
இவர்களுக்கு இந்த குணம் எப்படி வந்தது?
ரிஷிகளுக்கு வேதத்தில் இருந்து வந்தது.


வேதம் எதிலிருந்து வந்தது?
வேதம் ப்ரம்மாவினால் வந்தது.
ப்ரம்மா எப்படி வந்தார்?
நாராயணனின் மூலம் வந்தார்.

நாராயணன் யார்?
நரன் (மனித) உடம்பில் புகுந்த அனைத்து ஜீவனுக்கும் அடைக்கலமாக, கதியாக இருப்பவரே நாராயணன்.
இவரே பரவாசுதேவன்.
இவரே கடவுள். இவரே பகவான்.
பாரத மக்களுக்கு இந்த குணங்கள் ஏற்பட்டதற்கு மூல காரணமாக ஸ்வயம் "நாராயணனே" இருக்கிறார்.

120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்?
பாரத மக்கள் பிடித்திருக்கும் சங்கிலியில் தலைவனாக இருக்கிறார் "பரமாத்மா".
இந்த நாராயணன், திருப்பதி, ஸ்ரீ ரங்கம் என்று ஆரம்பித்து பாரதம் முழுவதும் தன்னை வ்யாபித்துக் கொண்டு இருக்கிறார்.
ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனாகவும், பெருமாளாகவும், சிவனாகவும், முருகனாகவும், வேதத்தில் சொன்ன பல தேவதைகளின் ரூபத்திலும் பரவி, இந்த சாத்வீக குணம் நம்மை விட்டு போகாமல், இன்று வரை காத்து வருகிறார்.

இந்த கலாச்சாரத்தை அதிசயித்து காண வரும் கூட்டங்கள் அதிகம்.

அதே சமயம்,
"இந்த கலாச்சாரத்தை எப்படியாவது அழிக்க வேண்டும்" என்ற எண்ணத்துடன், போலி மதங்கள்,
போலி கொள்கைகள் கொண்டு, 
பணத்தை காட்டி ஏமாற்றி, 
மதம் மாற்ற, இந்த பாரத கலாச்சாரத்தை கலைக்க, போலி மத வியாபாரிகள் கொண்டு 2000 வருடங்களாக முயற்சிக்கின்றனர்.
இந்த போலிகளின் நோக்கம், இந்த ஆச்சர்யமான பாரத கலாச்சாரத்தை அழித்து, சுய நல மனிதர்களாக மாற்றி, மீண்டும் பிரித்து ஆளும் கொள்கை கொண்டு வந்து, இந்தியாவை பிடிப்பதே.


ஹிந்துக்கள் அனைவரும் "நாராயணனே கதி" என்று இருந்து, நம் கலாச்சாரத்தின் மகிமையை இந்த போலிகளுக்கும் சொல்லி,
போலிகளை ஹிந்துக்கள் ஆக்கி,
பாரதம் மட்டுமின்றி, உலகத்தையே பரஸ்பரம் வெறுப்பு காட்டாத சமுதாயம் ஆக்குவோம்.
ஹிந்து மதம் ஆரம்பம் இல்லாதது.
மனித சமுதாயத்தில், மனித படுகொலைகள் என்பது இந்த போலி மதங்கள் உருவான பின் தான் அதிக அளவில் நடந்தது.

இந்த போலி மதங்கள் உருவானதற்கு முன், அரசர்கள் போர் செய்தனர் என்று படித்து இருப்போம்.
ஆனால், இந்த போலி மதங்கள் உருவான பின்னர்,
உலக வரலாற்றை புரட்டினோம் என்றால், ஒரு நாட்டை கைப்பற்றி, அந்த நாட்டின் பொது மக்கள் வேரோடு அழிக்கப்பட்டனர் என்று பார்க்கிறோம்..
அமெரிக்கா போன்ற தேசங்கள் செவ்விந்தியர்கள் வேரோடு அழிக்கப்பட்டு பிற மதங்களால் உருவானது.
ரோமானிய கலாச்சாரம் பிற மதங்களால் அழிக்கப்பட்டது.
பௌத்த தேசங்கள் பிற மதங்களால் அழிக்கப்பட்டது.

இந்தியா, 1200 வருடங்கள், காரணமே இல்லாமல், இந்த போலி மதங்களால், கோடிக்கணக்கான ஹிந்துக்களை இழந்தது.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம்.
கஷ்டப்பட்டு படித்து டாக்டர் பட்டம் பெறும் தருவாயில், மீண்டும் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து ஒரு அறிவாளி படிப்பானா?
ஒரு அறிவாளி செய்யக்கூடிய காரியம் அல்ல.
ஹிந்துவாக பிறந்தும், போலி மதத்துக்கு மாறுபவன் இது போன்ற செயல் தான் செய்கிறான்.
பல ஜென்ம புண்ணியத்தால், உலகில் பல நாடுகளில் எங்கோ பிறக்காமல், பாரத குடும்பத்தில் ஹிந்துவாக பிறக்கிறோம்.
ஹிந்து குடும்பத்தில் பிறப்பதே எத்தனை அதிர்ஷ்டம் என்பதை உலகை  கவனித்தாலே புரியும்.
இந்தியாவை தவிர எந்த மூலையில் பிறந்து இருந்தாலும் ஹிந்துவின் மகிமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா என்ற வார்த்தை கூட கேட்காத வாழ்க்கை வாழும் கிடைத்து இருக்கும்.


அனைவரும் ஹிந்துக்கள் ஆகி, பரஸ்பரம் அன்பு கொண்டு, ஜீவ ஹிம்சை செய்வதை தவிர்ப்போம்.

மாமிசம் உண்டு, மது அருந்தி கீழ் தரமான செயல்கள் செய்யாமல், சாத்வீகனாக வாழ்வோம். 

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka