Followers

Search Here...

Sunday 5 May 2024

பெண்களிடம் பொய் சொல்வதால் பாபம் ஏற்படாது.. வ்யாஸ மஹாபாரதம்

அசுரகுல குருவான சுக்ராச்சாரியாரின் பெண்ணான தேவயானியை மணந்து கொண்டிருந்த யயாதியிடம் "எக்காரணம் கொண்டும் சர்மிஷ்டையிடம் சேராதே" என்று சொல்லி இருந்தார்.

தேவயானியோடு சர்மிஷ்டையும் அவளின் 1000 கன்னிகைகளும் யயாதியோடு வந்து தங்கினார். அங்கு ஒரு மாளிகையில் வசித்தனர்.

சில காலத்திற்கு பிறகு, தேவயானி ஒரு ஆண் பிள்ளையை பெற்றாள்.


அசுரனான வ்ருஷபர்வனின் பெண் சர்மிஷ்டை, தனக்கும் ஒரு பிள்ளை வேண்டும் என்று யயாதியிடம் கேட்டாள்


சுக்ராச்சாரியார் சொன்னதை யயாதி சொல்ல, சர்மிஷ்டை இவ்வாறு சொன்னாள்,

"சிரிப்பதற்காகவோ, பெண்களிடமோ, திருமணம் செய்வதற்கோ, உயிருக்கு ஆபத்து ஏற்படும் சமயத்திலோ, அனைத்து சொத்தும் பறிக்கப்படும் சமயத்திலோ, பொய் பேசலாம் என்று சொல்லி இருக்கின்றனர், இந்த 5 பொய்கள் பாபங்கள் ஆகாது" என்று சொன்னாள்.

न नर्मयुक्तम् अनृतं हिनस्ति

न स्त्रीषु राजन् न विवाहकाले।

प्राणात्यये सर्वधनापहारे

पञ्चानृतान्याहुरपातकानि।। 

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்) 

சாட்சிக்கு நீதிமன்றம் சென்றவன், பொய் சொன்னான் என்றால், அவனை "பதிதன்" என்று சொல்கின்றனர்.

पृष्टं तु साक्ष्ये प्रवदन्तमन्यथा

वदन्ति मिथ्या पतितं नरेन्द्र।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்) 

No comments: