பலராமர் ப்ருந்தாவனம் வருகை
ஸ்கந்தம் 10: அத்யாயம் 65
பலராமர் ப்ருந்தாவனம் வருகை
ஸ்கந்தம் 10: அத்யாயம் 65
பெண்ணை முறைப்படி மணம் செய்து கொடுக்க, யாருக்கு உரிமை உள்ளது?
அர்ஜுனன் தீர்த்த யாத்திரை செய்து, ஒரு வருட காலம் முடிந்த பிறகு, சன்யாசி போல த்வாரகை வந்தான்.
சுபத்ரையை மணம் செய்து கொள்ளும் எண்ணத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தான்.
சன்யாசி யாரோ தன் நகரத்துக்கு வந்திருக்கிறார் என்று பலராமர் வரவேற்று, தன் அரண்மனையில் தங்க சொல்லி, அவருக்கு தேவையான பூஜை காரியங்களுக்கு தன் தங்கையான சுபத்திரையை நியமித்தார்.
வந்திருப்பது தனது அத்தை மகன் அர்ஜூனன் என்று தெரிந்து கொண்ட சுபத்திரை, மணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள்.
இவளின் எண்ணத்தை அறிந்த ஶ்ரீ கிருஷ்ணர், ருக்மினியிடம் விஷயத்தை சொன்னார்.
ருக்மிணி தேவகியிடம் சொன்னாள்.
தேவகி, ரோஹிணி, வசுதேவர், உக்ரசேனர் அனைவரும் அடுத்த 12வது நாளே நல்ல நாளாக இருப்பதால், அர்ஜுனனுக்கும் சுபத்ரைக்கும் அன்றே மணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.
பலராமர் இதற்கு சம்மதம் கொடுப்பாரா என்ற சந்தேகத்தால், பலராமர், உத்தவர் இருவரையும் அழைத்து அடுத்த 34 நாட்கள் இரவு பகல் முழுவதும் தொடர்ச்சியாக மஹாதேவனுக்கு பூஜை செய்து, பெரிய உத்ஸவம் செய்ய சொல்லி, 4வது நாளிலிருந்து த்வாரகையில் உள்ள நான்கு வர்ணத்து மக்களையும், யாதவர்கள், பெண்கள், குழந்தைகள், உறவினர்கள், வேலையாட்கள் அனைவரையும் கடலில் உள்ள ஒரு தீவிற்கு செல்ல சொல்லி, அங்கு உத்ஸவம் நடக்கும்படியாக பறை அறிவித்தனர்.
அந்த தீவு மலைகளும் மரங்களும் நிறைந்து 7 யோஜனை அகலமும், 10 யோஜனை நீளமும் கொண்டிருந்தது. அங்கு சிறு குளங்களும், தோட்டங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.
சுபத்ரை கிருஷ்ணரிடம் வந்து, "அதிதியாக வந்த சன்யாசி இங்கேயே 12 நாள் இருக்கப்போகிறாராம். ஊரில் அனைவரும் சென்று விட்டால், அவருடைய பூஜை காரியங்களை யார் விடாமல் நடத்துவது? என்று கேட்டாள்.
"ரிஷிகளை பூஜிக்க நீயே சிறந்தவள். நீ இங்கேயே இருந்து சன்யாசிக்கு தேவையான உதவிகளை செய்" என்று சொன்னார் கிருஷ்ணர்.
தீவுக்கு அனைவரும் சென்ற பிறகு, அர்ஜூனன், சுபத்திரையை பார்த்து, இவ்வாறு சொன்னான்.
ஒரு பெண்ணை, அவளின் தந்தையோ, சகோதரனோ, தாயோ, தாயின் சகோதரனோ (அதாவது மாமாவோ), தந்தையின் தந்தையோ, தந்தையின் சகோதரனோ, முறைப்படி கன்னிகாதானம் செய்து கொடுக்க உரிமை உள்ளது.
இவர்கள் அனைவருமே அருகில் உள்ள மற்றொரு தீவில் சிவபெருமானுக்கு உத்ஸவம் செய்ய சென்று இருக்கிறார்கள். என் பக்கமுள்ள உறவினர்களும் இங்கு இல்லை.
க்ஷத்ரியனுக்கு காந்தர்வ விவாகம் அனுமதிக்கப்படுகிறது.
முதல் நான்கு விவாக முறையை சொல்கிறேன்.. கேள்.
சாஸ்திரப்படி வரனுக்கு, தகப்பன் தன் பெண்ணை தானமாக கொடுக்கிறான். அந்த பெண்ணுக்கு பத்னி என்று பெயர் ஏற்படுகிறது. அவள் கணவனுக்கு அடங்கியும் கற்போடும் இருப்பாள்.
தன் வேலையாட்களை காப்பாற்றவும், தன்னை காப்பாற்றவும், தன் பெண்ணை கன்னிகா தானமாக கொடுக்கிறான். இந்த முறையில் மணம் செய்து கொண்ட பெண்ணுக்கு பார்யை என்று பெயர்.
வரனுடைய தந்தை, பெண்ணை சிறு வயதிலேயே தர்மமாக பெற்றுக்கொண்டு வளர்க்கிறான்.
வயது வந்த பிறகு, தன் பிள்ளைக்கு சாஸ்திரப்படி மணம் செய்து வைப்பது ஒரு முறை. இந்த முறையில் மணம் செய்து கொண்ட பெண்ணுக்கு தாரம் என்று பெயர். பிதிர்க்ருதை என்றும் அவளுக்கு பெயர் உண்டு.
தானே விரும்பி, வரனிடம் பிள்ளை பெற்று கொள்ள, காந்தர்வ விவாகம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு ப்ரஜாவதி என்று பெயர்.
தன் கணவனை தானே தேடி கொள்பவளுக்கு "ஜாயை" என்று பெயர்.
பத்னி, பார்யை, தாரம், ஜாயை போன்ற பெண்கள் தங்கள் கணவனை அக்னியை சாக்ஷியாக கொண்டு வரிக்கிறார்கள். தர்ம சாஸ்திரம் சொன்னபடி முறைப்படி விவாகம் செய்து கொள்கிறார்கள்.
காந்தர்வ விவாகத்துக்கு அக்னி சாக்ஷியாகவோ, சாஸ்திர முறைப்படி விவாகமோ சொல்லப்படவில்லை. காரணம் அது விருப்பத்தினால் மட்டுமே நடக்கிறது.
விருப்பமுள்ள பெண்ணும், விருப்பமுள்ள புருஷனும் மந்திரமில்லாமல் செய்து கொள்ளும் விவாகம் இது.
இந்த விவாகத்தை தான் நீ செய்து கொள்ள சம்மதிக்க வேண்டும்.
அயனமும், காலமும், மாதமும், பக்ஷமும், நாளும், கரணமும், முகூர்த்தமும், லக்ன பலமும் சேர்ந்து இருக்கிறது.
உத்தராயணம் விவாகத்திற்கு சிறந்தது.
மாதங்களில் வைகாசி விவாகத்திற்கு சிறந்தது.
பக்ஷங்களில் சுக்ல பக்ஷம் விவாகத்திற்கு சிறந்தது.
நக்ஷத்திரங்களில் ஹஸ்த நக்ஷத்திரம் விவாகத்திற்கு சிறந்தது.
திதிகளில் த்ருதியை விவாகத்திற்கு சிறந்தது.
கரணங்களில் பவ என்னும் கரணம் விவாகத்திற்கு சிறந்தது.
லக்னத்தில் மகர லக்னம் விவாகத்திற்கு சிறந்தது.
மைத்ரம் என்ற முகூர்த்தம் நம் இருவருடைய விவாகத்திற்கு உரியது.
இன்று இரவில் இவையெல்லாம் சேரப்போகிறது.
சூரியன் அஸ்தமனம் ஆகப் போகிறார்.
மேல் சொன்ன விவாக லக்னம் இந்த ராத்திரியில் வரப்போகிறது.
இது தர்ம சங்கடமான நிலைதான். தேவி! நீ ஏன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாய்?
என்றான் அர்ஜூனன்.
சுபத்திரை, கண்களில் நீர்மல்க நின்று கொண்டு, தன் சகோதரனான கண்ணனை நினைத்துகொண்டு, அர்ஜூனன் பேசியதை கேட்டுகொண்டே அமைதியாக இருந்தாள்.
தன் எண்ணத்தை சொல்லிவிட்ட அர்ஜூனன், தனக்கு கொடுக்கப்பட்ட குடிலுக்கு சென்று, இந்திரனை த்யானம் செய்ய ஆரம்பித்தான்.
அர்ஜுனன் தன்னை நினைக்கிறான் என்றதும், இந்திரன் தனது இந்திரானியோடு, கூடவே நாரதர் போன்ற முனிவர்கள்,கந்தர்வர்கள், தேவலோக நாட்டிய பெண்கள், சாரணர்கள், யக்ஷர்கள், கூடவே அருந்ததி, வியாசர் அனைவரையும் அழைத்துகொண்டு குசஸ்தலி என்ற இடத்திற்கு வந்தார்.
மற்றொரு தனி தீவில் உத்ஸவத்தில் இருந்த கிருஷ்ணர் இதை அறிந்து கொண்டு, தூங்கிக்கொண்டிருந்த பலராமரை விட்டுவிட்டு, தன்னோடு அக்ரூரர், சினி, சத்யகன், கதன், வசுதேவர், தேவகி, புத்திசாலியான ஆஹூகன் அனைவரையும் அழைத்துகொண்டு த்வாரகைக்கு வந்தார்.
வந்திருந்த நாரதர் மற்றும் பிற ரிஷிகளை பூஜித்து நலம் விசாரித்தார்.
இந்திரன் விவாகத்தை பற்றி கேட்க, அப்படியே ஆகட்டும் என்றார் கிருஷ்ணர்.
ஆஹூகன், வசுதேவர், அக்ரூரர், சாத்யகி ஆகிய நால்வரும், இந்திரனை பார்த்து, "தேவர்களுக்கு தேவனே! உலகத்துக்கு தலைவனே! உலகை காப்பவனே! உனக்கு நமஸ்காரம். உலகை ஜெயிப்பவனே! ப்ரபுபே! நீங்களே கேட்டதனால், நாங்களும் எங்கள் சுற்றத்தாரும் க்ருதார்த்தம் அடைந்தோம்" என்றார்கள்.
பிறகு இந்திரனுக்கு பூஜை செய்து, இந்திரன் அனுமதி பெற்று, ரிஷிகளுடன் சேர்ந்து கொண்டு இந்திரனின் பிள்ளையான அர்ஜுனனுக்கு சாஸ்திர முறைப்படி விவாகம் செய்து வைத்தனர்.
அருந்ததி, இந்திராணி இருக்க, இவர்களோடு ருக்மிணிதேவி, தேவகி சேர்ந்து கொண்டு சுபத்ரைக்கும் அர்ஜுனனுக்கும் மங்களமான உபசாரங்கள் செய்தனர்.
காஸ்யப ரிஷி ஹோமம் செய்தார்.
சபையில் இருந்த நாரதர் போன்றவர்கள் அர்ஜுனனுக்கு ஆசிர்வாதம் செய்தனர்.
அனைத்து தேவர்களும் இந்திரனை ஸ்தோத்திரம் செய்ய, இந்திரன் திக்பாலர்களுடன் சேர்ந்து கொண்டு, அர்ஜுனனுக்கு ஸ்நானம் செய்து, கிரீடம், தோல்வளைகள், கழுத்தில் ஹாரங்கள், தோடாக்கள், குண்டலங்கள் அணிவித்து, 2வது இந்திரனை போல அலங்கரித்து, அர்ஜுனனை தழுவிக்கொண்டு மகிழ்ந்தான்.
அதே போல சுபத்ரைக்கு இந்திராணியும், யாதவ பெண்களும், அருந்ததி போன்றவர்களும் அலங்கரித்து மங்களம் செய்தனர்.
அங்கு இருந்த தேவலோக பெண்கள், தங்களின் நகைகளை சுபத்ரைக்கு அலங்காரம் செய்து, அவளையே இந்திராணி போல அலங்கரித்தனர்.
இவ்வாறு அன்றைய விவாக நாள் ஜொலித்தது
அப்போது அர்ஜூனன் அக்னியில் மந்திரங்கள் சொல்லி ஹோமம் செய்த பிறகு. சுபத்ரையை சாஸ்திரப்படி கரம் பிடித்தான்.
அப்போது அவர்களை பார்ப்பதற்கு இந்திரன் இந்திராணி போன்றே அனைவருக்கும் தோன்றியது.
கரம் பற்றிய உடனேயே அழகான சுபத்திரை அர்ஜுனனிடம் பெரும் பாசம் கொண்டு விட்டாள்.
அப்போது இந்திரன் மற்றும் மற்ற தேவர்கள், "அர்ஜுனனுக்கு, சுபத்திரை தான், வயதிலும் அழகிலும் உத்தம லக்ஷணங்களிலும் தகுதி உள்ளவளாக இருக்கிறாள்." என்று பேசிக்கொண்டனர்.
இவ்வாறு வாழ்த்தி விட்டு, தேவர்கள் அனைவரும், கந்தர்வர்களும், அப்சரஸ்கள் அனைவரும், யாதவர்கள் அனைவரும் விவாகம் செய்வித்து விடை பெற்று சென்றனர்.
யாதவர்கள் அர்ஜுனனிடம் விடைபெற்று, உத்ஸவம் நடக்கும் மற்றொரு தீவுக்கு சென்றனர்.
அப்போது ஶ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து, "அர்ஜுனா! 22 நாட்கள் இங்கேயே வாசம் செய். ஸைப்யம், சுக்ரீவம் போன்ற குதிரைகள் பூட்டப்பட்ட என்னுடைய ரதத்தில் சுபத்திரையை கூட்டிக்கொண்டு காண்டவப்ரஸ்தம் செல்.
யாதவர்களோடு பிறகு நானும் அங்கு வருகிறேன்.
நீ சன்யாசி வேஷத்தில் நியமத்தை விட்டு விடாமல், அதுவரை இங்கேயே ருக்மிணி க்ருஹத்தில் இரு" என்றார்.
இவ்வாறு சொல்லி விட்டு ஶ்ரீ கிருஷ்ணரும் உத்ஸவம் நடக்கும் தீவுக்கு சென்றார்.
சீதையோடு சேர்ந்த ராமரை போல, சுபத்திரை அர்ஜுனனை அடைந்தாள்.
தன்னை அழைத்து கொண்டு போகும் வரை, சுபத்திரை கன்னிகைகள் வசிக்கும் அந்தப்புரத்தில் இருந்து கொண்டு, அவனையே நினைத்துக்கொண்டிருந்தாள்.
ஆதி பர்வம்
வியாச மஹாபாரதம்
ந்ருகன் பெற்ற பிறவி
ஸ்கந்தம் 10: அத்யாயம் 64
क्रीडित्वा सु-चिरम् तत्र विचिन्वन्तः पिपासिताः।
जलम् निर्-उदके कूपे ददृशुः सत्त्वम् अद्भुतम् ॥ २ ॥
कृकलासम् गिरि-निभम् वीक्ष्य विस्मित-मानसाः।
तस्य च उद्धरणे यत्नम् चक्रुः ते कृता-अन्विताः ॥ ३ ॥
चर्मजैः तान्तवैः पाशैः बद्ध्वा पतितम् अर्भकाः।
न अशक्नुवन् सम्-उद्धर्तुम् कृष्णाय आचख्युः उत्सुकाः ॥ ४ ॥
तत्र आगत्य अरविन्द-अक्षः भगवान् विश्व-भावनः।
वीक्ष्य उज्जहार वामेन तम् करेण सः लीलया ॥ ५ ॥
सः उत्तम-श्लोक-कर-अभिमृष्टः
विहाय सद्यः कृकलास-रूपम्।
सन्तप्त-चामीकर-चारु-वर्णः
स्वर्ग्य-अद्भुत-आलङ्करण-अम्बर-स्रक् ॥ ६ ॥
पप्रच्छ विद्वान् अपि तत् निदानम्
जनेषु विख्यापयितुम् मुकुन्दः।
कः त्वम् महा-भाग वरेण्य-रूपः
देव-उत्तमम् त्वाम् गणयामि नूनम् ॥ ७ ॥
दशाम् इमाम् वा कतमेन कर्मणा
सम्प्रापितः अस्य तत् अर्हः सुभद्र।
आत्मानम् आख्याहि विवित्सताम् नः
यत् मन्यसे नः क्षमम् अत्र वक्तुम् ॥ ८ ॥
श्री-शुक उवाच -
इति स्म राजा सम्पृष्टः कृष्णेन अनन्त-मूर्तिना।
माधवम् प्रणिपत्य आह किरीटेन अर्क-वर्चसा ॥ ९ ॥
नृगः उवाच -
नृगः नाम नरेन्द्रः अहम् इक्ष्वाकु-तनयः प्रभो।
दानिषु आख्यायमानेषु यदि ते कर्णम् अस्पृशम् ॥ १० ॥
किम् नु ते अविदितम् नाथ सर्व-भूत-आत्म-साक्षिणः।
कालेन अव्याहत-दृशः वक्ष्ये अथ अपि तव आज्ञया ॥ ११ ॥
यावत्यः सिकताः भूमेः यावत्यः दिवि तारकाः।
यावत्यः वर्ष-धाराः च तावतः अददं स्म गाः ॥ १२ ॥
पयस्विनः तरुणीः शील-रूप-
गुण-उपपन्नाः कपिलाः हेम-सृङ्गीः।
न्याय-अर्जिताः रूप्य-खुराः स-वत्साः
दुकूल-माला-आभरणाः अददाम् अहम् ॥ १३ ॥
स्व-अलङ्कृतेभ्यः गुण-शील-वद्भ्यः
सीदत्-कुटुम्बेभ्यः ऋत-व्रतेभ्यः।
तपः-श्रुत-ब्रह्म-वदान्य-सद्भ्यः
प्रादाम् युवभ्यः द्विज-पुङ्गवेभ्यः ॥ १४ ॥
गो-भू-हिरण्य-आयतन-अश्व-हस्तिनः
कन्याः सदा-असीः तिल-रूप्य-शय्याः।
वासांसि रत्नानि परिच्छदान् रथान्
निष्ठाम् च यज्ञैः चरितम् च पूर्तम् ॥ १५ ॥
कस्यचित् द्विज-मुख्यस्य भ्रष्टा गौः मम गो-धने।
सम्पृक्ता अविदुषा सा च मया दत्ता द्विजातये ॥ १६ ॥
ताम् नीयमानाम् तत्-स्वामी दृष्ट्वा उवाच मम् इति तम्।
मम् इति प्रतिग्राह्य आह नृगः मे दत्तवान् इति ॥ १७ ॥
विप्रौ विवदमानौ माम् ऊचतुः स्व-अर्थ-साधकौ।
भवान् दाता अपहर्ता इति तत् श्रुत्वा मे अभवत् भ्रमः ॥ १८ ॥
अनुनीतौ उभौ विप्रौ धर्म-कृच्छ्र-गतेन वै।
गवाम् लक्षम् प्रकृष्टानाम् दास्यामि एषा प्रदीयताम् ॥ १९ ॥
भवन्तौ अनुगृह्णीताम् किङ्करस्य अविजानतः।
सम्-उद्धरतम् माम् कृच्छ्रात् पतन्तम् निरये अशुचौ ॥ २० ॥
न अहम् प्रतीच्छे वै राजन् नित्य-उक्त्वा स्वामि-अपाक्रमत्।
न अन्यत् गवाम् अपि अयुतम् इच्छामि इति अपरः ययौ ॥ २१ ॥
एतस्मिन् अन्तर-ए यामैः दूतैः नीतः यम-अक्षयम्।
यमेन पृष्टः तत्र अहम् देव-देव जगत्-पते ॥ २२ ॥
पूर्वम् तु अम्-अशुभम् भुङ्क्षे उत आहो नृपते शुभम्।
न अन्तम् दानस्य धर्मस्य पश्ये लोकस्य भास्वतः ॥ २३ ॥
पूर्वम् देव अशुभम् भुञ्ज इति प्राह पतिः इति सः।
तावत् अद्राक्षम् आत्मानम् कृकलासम् पतन् प्रभो ॥ २४ ॥
ब्रह्मण्यस्य वदान्यस्य तव दासस्य केशव।
स्मृतिः न अद्य अपि विध्वस्ता भवत्-सन्दर्शन-अर्थिनः ॥ २५ ॥
सः त्वम् कथम् मम विभो अपि इतः पर-आत्मा।
योग-ईश्वरैः श्रुति-दृशाम् अमल-हृत्-विभाव्यः॥
साक्षात् अधः-क्षजः उरु-व्यसन-अन्ध-बुद्धेः।
स्यात् मे अनुदृश्यः इह यस्य भव-अपवर्गः ॥ २६ ॥
देव-देव जगत्-नाथ गोविन्द पुरुष-उत्तम।
नारायण हृषी-केश पुण्य-श्लोक-अच्युत-अव्यय ॥ २७ ॥
अनुजानीहि माम् कृष्ण यान्तम् देव-गतिम् प्रभो।
यत्र क्व अपि सतः चेतः भूयात् मे त्वत्-पद-आस्पदम् ॥ २८ ॥
नमः ते सर्व-भावाय ब्रह्मणे अनन्त-शक्तये।
कृष्णाय वासुदेवाय योगानाम् पतये नमः ॥ २९ ॥
इति उक्त्वा तम् परिक्रम्य पादौ स्पृष्ट्वा स्व-मौलिना।
अनुज्ञातः विमान-अग्र्यम् आरुहत् पश्यताम् नृणाम् ॥ ३० ॥
कृष्णः परिजनम् प्राह भगवान् देवकी-सुतः।
ब्रह्मण्य-देवः धर्म-आत्मा राजन्-यान् अनुशिक्षयन् ॥ ३१ ॥
दुर्जरम् बत ब्रह्म-स्वम् भुक्तम् अग्नेः मनाक् अपि।
तेजीयसः अपि किम् उत राज्ञाम् ईश्वर-मानिनाम् ॥ ३२ ॥
न अहम् हालाहलम् मन्ये विषम् यस्य प्रतिक्रिया।
ब्रह्म-स्वम् हि विषम् प्रोक्तम् न अस्य प्रतिविधिः भुवि ॥ ३३ ॥
हिनस्ति विषम् अत्तारम् वह्निः अद्भिः प्रशाम्यति।
कुलम् समूलम् दहति ब्रह्म-स्व-रणि-पावकः ॥ ३४ ॥
ब्रह्म-स्वम् दुर्-अनुज्ञातम् भुक्तम् हन्ति त्रि-पुरुषम्।
प्रसह्य तु बलात् भुक्तम् दश पूर्वान् दश अपरान् ॥ ३५ ॥
राजानः राज-लक्ष्म्या अन्धाः न आत्म-पातम् विचक्षते।
निरयम् ये अभिमन्यन्ते ब्रह्म-स्वम् साधवः बालिशाः ॥ ३६ ॥
गृह्णन्ति यावतः पांसून् क्रन्दताम् अश्रु-बिन्दवः।
विप्राणाम् हृत-वृत्तीनाम् वदान्यानाम् कुटुम्बिनाम् ॥ ३७ ॥
राजानः राज-कुल्याः च तावतः अब्दान् निरङ्कुशाः।
कुम्भी-पाकेषु पच्यन्ते ब्रह्म-दाय-अपहारिणः ॥ ३८ ॥
स्व-दत्ताम् पर-दत्ताम् वा ब्रह्म-वृत्तिम् हरेत् च यः।
षष्टि-वर्ष-सहस्राणि विष्ठायाम् जायते कृमिः ॥ ३९ ॥
न मे ब्रह्म-धनम् भूयात् यत् गृद्ध्वा अल्प-आयुषः नराः।
पराजिताः च्युताः राज्यात् भवन्ति उद्वेजिनः अहयः ॥ ४० ॥
विप्रम् कृत-अगसम् अपि नैव द्रुह्यत मामकाः।
घ्नन्तम् बहु शपन्तम् वा नमस्कुरुत नित्यशः ॥ ४१ ॥
यथा अहम् प्रणमे विप्रान् अनु-कालम् समाहितः।
तथा नमत यूयं च यः अन्यथा मे सः दण्ड-भाक् ॥ ४२ ॥
ब्राह्मण-अर्थः हि अपहृतः हर्तारम् पातयति अधः।
अजानन्तम् अपि हि एनम् नृगम् ब्राह्मण-गौर् इव ॥ ४३ ॥
एवम् विश्राव्य भगवान् मुकुन्दः द्वारका-उकसः।
पावनः सर्व-लोकानाम् विवेश निज-मन्दिरम् ॥ ४४ ॥
॥ इति श्रीमद्भागवते महा-पुराणे पारमहंस्याम् संहितायाम्
दशम-स्कन्धे उत्तर-अर्धे नृग-उपाख्यानम् नाम
चतुः-षष्टितमः अध्यायः ॥ ६४ ॥
கண்ணன் பானாசுரனோடு யுத்தம்
ஸ்கந்தம் 10: அத்யாயம் 63
அநிருத்தன் உஷா சந்திப்பு
ஸ்கந்தம் 10: அத்யாயம் 62