Followers

Search Here...

Saturday, 18 January 2025

ஆத்திச்சூடி அறிவோமா

ஆத்திச்சூடி அறிவோமா? 

தர்மம் அதாவது அறம் எதுவோ, அதை செய்ய விரும்பு.

அறம் செய விரும்பு.


கோபம் வந்தால் அதை உடனே தணியச்செய்.

ஆறுவது சினம்.


கொடுக்கக்கூடியதை ஒளித்து வைக்காதே.

இயல்வது கரவேல்.

பிறர் கொடுப்பதை நீ தடுக்காதே.

ஈவது விலக்கேல்.


உன்னிடம் உள்ளதை நீயே விளம்பரம் செய்து கொள்ளாதே.

உடையது விளம்பேல்.



முயற்சியை என்றும் கை விடாதே.

ஊக்கமது கைவிடேல்.


கணக்கையும் இலக்கணத்தையும் இகழாமல் கற்று கொள்.

எண் எழுத்து இகழேல்.


பிறரிடம் கேட்பது இழிவாகும்.

ஏற்பது இகழ்ச்சி.



பிறருக்கு கொடுத்து விட்டு பிறகு நீ சாப்பிடு.

ஐயமிட்டு உண்.


உலகத்தை புரிந்து கொண்டு செயல்படு.

ஒப்புரவு ஒழுகு.


படிப்பதை விடாதே.

ஓதுவது ஒழியேல்.


பொறாமை வார்த்தைகளை பேசாதே.

ஒளவியம் பேசேல்.


அதிக லாபத்தை மனதில் வைத்துக்கொண்டு, தானியங்களை குறைக்காதே.

அஃகம் சுருக்கேல்.


பார்த்தது ஒன்று பேசுவது வேறொன்று என்று வாழாதே.

கண்டொன்று சொல்லேல்.


ங என்ற எழுத்து, ஙா, ஙி, ஙீ .. போன்ற மற்ற எழுத்துக்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு அர்த்தமுள்ள சொற்களை கொடுக்கிறது. அது போல நீயும், உன் சொந்தங்கள் தனியாக பிரகாசிக்க முடியாவிட்டாலும், உன்னோடு சேர்த்துக்கொண்டு அவர்களது வாழ்க்கைக்கு அர்த்தம் கொடு.

ஙப்போல் வளை.


சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளி.

சனி நீராடு.


இனிமையாக பேசு.

ஞயம்பட உரை.


வெற்றிடம் அதிகமாக இருக்கும்படி வீட்டை கட்டாதே.

இடம்பட வீடு எடேல்.


நட்புக்கு ஆசைப்படுபவரின் குணத்தை தெரிந்து கொண்டு, பிறகு நட்பு கொள்.

இணக்கம் அறிந்து இணங்கு.


தாய் தந்தையை நீ காப்பாற்று.

தந்தை தாய் பேண்.


ஒருவர் செய்த உதவியை மறக்காதே.

நன்றி மறவேல்.


அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதை செய், காலத்தில் பயிர் செய்.

பருவத்தே பயிர் செய்.


பிறர் நிலத்தை பிடுங்கி அதில் வாழாதே.

மன்று பறித்து உண்ணேல்.


பொருத்தமில்லாத காரியங்கள் செய்யாதே.

இயல்பு அலாதன செயேல்.


பாம்புகளை பிடித்து விளையாடாதே. விஷமுள்ளவர்களோடு ஜாக்கிரதையாக இரு.

அரவம் ஆட்டேல். 


இலவம் பஞ்சு மெத்தையில் தூங்கு.

இலவம் பஞ்சில் துயில் 


ஏமாற்றும்படியாக கபடமான சொற்களை பேசி ஏமாற்றாதே.

வஞ்சகம் பேசேல்.


இழிவான காரியங்கள் செய்யாதே.

அழகு அலாதன செயேல்.


இளமைக்காலத்தில் கல்வியை கற்றுக்கொள். இளமையில் கல்.


அறம் என்ற தர்மத்தை மறக்காதே.

அறனை மறவேல்.


நீண்டநேரம் தூங்காதே.

அனந்தல் ஆடேல்.


கடிந்து பேசாதே.

கடிவது மற 


பிற உயிர்களை காப்பதே விரதம்.

காப்பது விரதம்.


உன்னுடைய பொருள் பிறருக்கு பயன்படும்படி வாழ்.

கிழமைப்பட வாழ்.


கீழ்த்தரமான குணத்தை விலக்கு. 

கீழ்மை அகற்று.


உன்னிடமுள்ள நல்ல குணங்களை விட்டு விடாதே.

குணமது கைவிடேல்.


நல்லவர்களோடு நட்பு கிடைத்தப்பின் அவர்களை விட்டு நீங்காதே.

கூடி பிரியேல்.


அடுத்தவர்களுக்கு கேடு செய்வதை விட்டுவிடு.

கெடுப்பது ஒழி.


கற்றவர்கள் பேசுவதை காது கொடுத்துக்கேள். 

கேள்வி முயல்.


உனக்கு தெரிந்த தொழிலை பிறருக்கு கற்றுக்கொடு.

கைவினை கரவேல்.


கொள்ளை அடிக்காதே.

கொள்ளை விரும்பேல்.


குற்றமான விளையாட்டுகள் செய்யாதே.

கோது ஆட்டு ஒழி.


சட்டத்திற்கு கட்டுப்பட்டு நில்.

சக்கர நெறி நில்.


அறிவாளிகள் கூட்டத்தோடு இரு.

சான்றோர் இனத்து இரு.


உண்மை போல தோன்றும் பொய் வார்த்தைகளை பேசாதே.

சித்திரம் பேசேல்.


நல்ல காரியங்களை மறந்துவிடாதே.

சீர்மை மறவேல்.


கோபிக்கும்படியாக பேசாதே.

சுளிக்க சொல்லேல்.


சூதாட விரும்பாதே.

சூது விரும்பேல்.


செய்யும் காரியத்தை செம்மையாக செய்.

செய்வன திருந்த செய்.


சேருமிடம் நல்லவர்கள் சூழ்ந்த இடமா என்று தெரிந்து கொண்டு பிறகு அவர்களுடன் சேர்.

சேர் இடம் தெரிந்து சேர்.


பெரியோர்கள் வெறுக்கும் படி நீ அலையாதே.

சை என திரியேல்.


பேசும்போதே சோம்பேறியாக பேசாதே. உற்சாகமாக பேசு.

சொல் சோர்வு படேல்.


சோம்பேறியாக அலையாதே.

சோம்பி திரியேல்.


யோக்கியனாக இரு.

தக்கோன் என திரி.


தானம் செய்ய விரும்பு.

தானமது விரும்பு.


விஷ்ணுவுக்கு தொண்டு செய்.

திருமாலுக்கு அடிமை செய்.


பாவச்செயல்களை நீக்கு.

தீவினை அகற்று.


துன்பத்திற்கு இடம் கொடுக்காதே.

துன்பத்திற்கு இடம் கொடேல்.


ஆராய்ந்து தொழில் செய்.

தூக்கி வினை செய்.


தெய்வத்தை இகழாதே.

தெய்வம் இகழேல்.


தேசத்தில் உள்ளவர்களோடு ஒத்து வாழ்.

தேசத்தோடு ஒத்து வாழ்.


புத்தியில்லாத பெண்களுடைய தீய பேச்சை கேட்காதே.

தையல் சொல் கேளேல். 


தொன்றுதொட்டு வரும் பழக்கத்தை மறந்து விடாதே.

தொன்மை மறவேல்.


தோல்வி அடையக்கூடிய வழக்குகளில் சம்பந்தப்படாதே.

தோற்பன தொடரேல்.


புண்ணியத்தையே உறுதியாக பிடி.

நன்மை கடைப்பிடி.


உன் நாட்டில் உள்ளவர்கள் ஏற்கும் நல்ல காரியங்களை செய்.

நாடு ஒப்பன செய்.


இருக்கும் நிலையை விட்டு தாழ்ந்து போகாதே.

நிலையில் பிரியேல்.


ஆழமுள்ள நீரில் விளையாடாதே.

நீர் விளையாடேல்.



நோயை தரும் சிற்றுண்டிகளை உண்ணாதே.

நுண்மை நுகரேல்.


புத்தகங்கள் பலவற்றை படி.

நூல் பல கல்.


நல்ல நெற்பயிரை விளைவி. நல்ல சிந்தனையை விதை.

நெற்பயிர் விளை.


ஒழுக்கம் மீறாமல் நட.

நேர்பட ஒழுகு.


கெடத்தக்க வினைகளை சாராதே.

நை வினை நணுகேல்.


அற்ப வார்த்தைகளை பேசாதே.

நொய்ய உரையேல்.


வியாதிக்கு இடம் கொடுக்காதே.

நோய்க்கு இடம் கொடேல்.


பழிக்கபடுபவனாக இழி சொற்களை பேசாதே.

பழிப்பன பகரேல்.


பால் கொடுத்தாலும் விஷமே தரும் பாம்பை போன்றவர்களிடம் பழகாதே.

பாம்பொடு பழகேல்.


குற்றங்கள் உருவாகும் படி பேசாதே.

பிழைபட சொல்லேல்.


பெருமை அடையும் படி நில்.

பீடு பெற நில்.


உன்னை அண்டி துதி செய்பவர்களை காப்பாற்றி வாழு.

புகழ்ந்தாரை போற்றி நில்.


விளைநிலத்தை சீர்திருத்தி பயிர் செய்து சாப்பிடு.

பூமி திருத்தி உண்.


பெரியோரை துணையாக பேணிக்கொள்.

பெரியாரை துணைகொள்.


அக்ஞானத்தை (அறியாமையை) விலக்கிக்கொள்.

பேதமை அகற்று.


துஷ்டத்தனமுள்ள சிறு பிள்ளைகளிடம் கூடாதே.

பையலோடு இணங்கேல்.


உன் செல்வங்களை காத்து வாழு.

பொருள் தனை போற்றி வாழ்.


சண்டை சம்பந்தமான தொழில் செய்யாதே.

போர் தொழில் புறியேல்.


மனம் கலங்காமல் இரு.

மனம் தடுமாறேல்.


பகைவனுக்கு இடம் கொடுக்காதே.

மாற்றானுக்கு இடம் கொடேல்.


அளவுக்கு அதிகமாக ஒன்றையும் சொல்லாதே.

மிகைபட சொல்லேல்.


அதிகமான உணவு உண்ண விரும்பாதே.

மீது ஊண் விரும்பேல்.


சண்டை நடக்கும் இடத்தில் நிற்காதே.

முனை முகத்து நில்லேல்.


அறிவில்லாதவரோடு நட்பு கொள்ளாதே.

மூர்க்கரோடு இணங்கேல்.


மெல்லிய உன் மனைவியின் தோளுக்கு துணையாக இரு.

மெல் இல் நல்லாள் தோள் சேர்.


மேன்மையான மனிதர்களின் பேச்சை கேட்டு நட.

மேன்மக்கள் சொல் கேள்.


மை தீட்டிய வேசிகள் வீட்டருகில் செல்லாதே.

மைவிழியார் மனை அகல்.


பேசுவதை சந்தேகம் நீங்கும் படி அறத்தோடு சொல்.

மொழிவது அற மொழி.


பொருள்களின் மீதுள்ள ஆசையை விலக்கு.

மோகத்தை முனி.


உன் திறமையை நீயே புகழ்ந்து பேசாதே.

வல்லமை பேசேல்.


பெரியோர்கள் முன்னே பேசாதே.

வாது முன் கூறேல்.


கல்வியை விரும்பி கற்றுக்கொள்.

வித்தை விரும்பு.


மோக்ஷத்தை அடையும்படி காரியங்கள் செய்.

வீடு பெற நில்.


உயர்ந்த குணங்களோடு இரு.

உத்தமனாய் இரு.


ஊர் மக்களோடு பேசிக்கொண்டு விரோதமின்றி வாழு.

ஊருடன் கூடி வாழ்.


கத்தி வெட்டுவது போல கடுமையாக பேசாதே.

வெட்டு என பேசேல்.


தெரிந்தே தீய காரியங்கள் பிறருக்கு செய்யாதே.

வேண்டி வினை செயேல்.


விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழுந்திரு.

வைகறை துயில் எழு.


பகைவனை நம்பாதே.

ஒன்னாரை தேரேல்.


ஒரு பக்கமாக பேசாதே. நியாயத்தை பேசு.

ஓரம் சொல்லேல்.

Saturday, 4 January 2025

அர்ஜூனன் கருப்பா, சிவப்பா? அறிவோம் மஹாபாரதம்

அர்ஜூனன் கருப்பா, சிவப்பா?

பிராமணர்களை போல இருந்த பாண்டவர்கள் திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர்.


வந்திருந்த கர்ணன், துரியோதனன் உட்பட க்ஷத்ரிய அரசர்கள் அனைவரும், வில்லின் நாண்கயிறை கூட ஏற்றமுடியாமல் கீழேவிழ, அர்ஜூனன் எழுந்திருந்து, "பிராம்மணன் முயற்சிக்கலாமா?" என்று கேட்டான்.


"க்ஷத்ரியன், பிராம்மணன், வைஸ்யன், சூத்திரன் யார் வேண்டுமானாலும் இந்தவில்லை நாண்ஏற்றி இலக்கை அடித்தால், என் சகோதரியை கொடுப்பேன். இது சத்தியம்" என்றான் த்ருபதன் மகன் த்ருஷ்டத்யும்னன். 


तस्य तद्वचनं श्रुत्वा धृष्टद्युम्नोऽब्रवीद्वचः।

ब्राह्मणो वाथ राजन्यो वैश्यो वा शूद्र एव वा।

एतेषां यो धनुःश्रेष्ठं सज्यं कुर्याद्द्विजोत्तम।।

तस्मै प्रदेया भगिनी सत्यमुक्तं मया वचः।।

ஆதி பர்வம்

அர்ஜூனன் எளிதாக நாண் ஏற்றி 5 அம்புகளால் எந்திரத்தின் இடையிலுள்ள துவாரங்கள் வழியே இலக்கை அடித்து கீழே தள்ளினான் 


பிராம்மணர்கள் ஆச்சர்யம் அடைந்து ஆனந்தப்பட்டனர்.

நன்றாக வளர்ந்த செடி, காய் கொடுக்கும்போது வெட்டுவது போல, இந்த த்ருஷ்டத்யும்னன் திரௌபதியை க்ஷத்ரியஅரசனுக்கு கொடுக்காமல், பிராம்மண்ணுக்கு கொடுத்தானே, அவனை நாமே கொன்றுவிடுவோம், அந்த திரௌபதியையும் அக்னியில் தள்ளுவோம் என்று முடிவு செய்தனர் 

த்ருஷ்டத்யும்னன் போர் செய்வதை அப்போது விரும்பாத காரணத்தால், பிராம்மணர்களின் பின்னால் ஒடிச்சென்று, தடுக்க சொன்னான்.


தவம் கொண்ட பிராம்மணர்கள், தாக்க வரும் அரசர்களை தடுக்க முயற்சிக்க, பிராம்மண வேடத்தில் இருந்த அர்ஜூனன், கையில் சுயம்வரத்தில் வென்ற வில்லோடு ஒரு மதங்கொண்ட யானைபோல நின்றான். 

அருகில், பீமன் ஒரு பெரிய மரத்தை பிடுங்கி ஒடிவரும் அரசர்களை தாக்க நின்றான்.


பீமன் சல்லியனோடு மல்யுத்தம்செய்து தூக்கி எறிந்தான்.

அர்ஜூனன் கர்ணனின் வில்லை முறித்து தோற்கடித்தான்.

யுதிஷ்டிரர் துரியோதனனை யுத்தம் செய்து தோற்கடித்தார்.

சகாதேவன் துச்சாதனன் இருவரும் யுத்தம் செய்தனர்.

பிராம்மணர்களோடு யுத்தம் வேண்டாம் என்று மற்ற கௌரவர்கள் சொல்ல, போரை நிறுத்திவிட்டு திரும்பி சென்றனர்.


திரௌபதி பாண்டவர்களோடு குயவன் வீட்டிற்கு சென்றாள்.


பிக்ஷை என்று நினைத்து பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாள் குந்தி.


யுதிஷ்டிரர் அர்ஜுனனை உடனே பானிக்ரகனம் செய்து கொள்ள சொன்னார்.

அண்ணன்கள் இருவரும் இருக்க தான் மணம் செய்து கொள்ளக்கூடாது என்று மறுத்தான் அர்ஜூனன்.


தாய் சொன்னதால், அவள் வாக்கு ஸத்யமே என்பதால். அனைவருமே திரௌபதிக்கு பதிகள் தான் என்றார் யுதிஷ்டிரர்.


அப்போது கிருஷ்ணன் பலராமரோடு முதல் முறையாக பாண்டவர்களை பார்க்க வந்தார்.

நான் கிருஷ்ணன் என்று சொல்லி யுதிஷ்டிரருக்கு நமஸ்காரம் செய்தார். குந்திக்கு செய்து, நலம் விசாரித்து. காலம் வரும்வரை பிராம்மண வேஷத்தில் இருங்கள் என்று சொல்லி விடைபெற்றார் 


இரவு பாண்டவர்கள் தெற்குபக்கமாக தலைவைத்து படுத்தனர்.

அவர்கள் கால் மாட்டில் குந்தி படுத்து இருந்தாள். அவள் கால் மாட்டில் திரௌபதி படுத்து இருந்தாள். 


இதை இரவில் வந்து கண்ட த்ருஷ்டத்யும்னன், நடந்ததை சொல்ல அரசவை சென்றான்.


பாஞ்சாலதேச அரசன் த்ருபதன், என்ன நடந்தது? யார் அவர்கள்? என்று விசாரிக்க, த்ருஷ்டத்யும்னன் அர்ஜூனன் அடையாளத்தை சொல்கிறான்.


"கருமையான நிறத்தோடு, இளைஞனாக, மதம் கொண்ட யானை போல இருந்தவன், யாராலும் சாதிக்க முடியாத அந்த பெரிய சாதனையை செய்துவிட்டு, அந்த தேரோட்டி மகனான கர்ணனையும் எதிர்த்து போரிட்டு வென்றான். என் அனுமானப்படி இந்திரனுக்கு ஒப்பான அவன் அர்ஜூனனே ஆவான்"என்றான்

श्यामो युवा वारणमत्तगामी

कृत्वा महत्कर्म सुदुष्करं तत्।।

यः सूतपुत्रेण चकार युद्धं

शङ्के अर्जुनं तं त्रिदशेश वीर्यम्।'

- ஆதி பர்வம்


கிருஷ்ணன் திரௌபதி போலவே, அர்ஜூனனும் கருப்பான தேகம் உடையவன் என்று வியாசமஹாபாரதம் காட்டுகிறது.

Monday, 28 October 2024

திரௌபதி, துரியோதனனை கேலி செய்தாளா?

புருஷசிரேஷ்டரான  ஜனமேஜயரே! அந்த ஸபையிலிருந்த துரியோதனன் சகுனியுடன் கூட  அந்த சபையை முழுதும் வரிசையாக பார்த்தான். 

वसन्दुर्योधनस्तस्यां सभायां पुरुषर्षभ।
शनैर्ददर्श तां सर्वां सभां शकुनिना सह।।

கௌரவ சிரேஷ்டனான துரியோதனன் ஹஸ்தினாபுரத்தில், இதற்கு முன் கண்டிராத தேய்வீக விஷயங்களை கண்டான். 

तस्यां दिव्यानभिप्रायान्ददर्श कुरुनन्दनः।
न दृष्टपूर्वा ये तेन नगरे नागसाह्वये।।

அந்த துரியோதன மஹாராஜன், ஒரு கால் அந்த சபை நடுவில் படிக தள வரிசையுள்ள இடத்திற்கு சென்று ஜலம் என்று நினைத்து மதி மயங்கி தன் வஸ்திரத்தை தூக்கி கட்டிக்கொண்டான். 

அதனால் துயரடைந்து யாருக்கும் முகம் காட்டாமல் அந்த சபையை சுற்றி திரிந்தான்.

स कदाचित्सभामध्ये धार्तराष्ट्रो महीपतिः।
स्फाटिकं स्थलमासाद्य जलमित्यभिशङ्कया।।

स्ववस्त्रोत्कर्षणं राजा कृतवान्बुद्धिमोहितः।
दुर्मना विमुखश्चैव परिचक्राम तां सभाम्।।

பிறகு மேடு பள்ளம் தெரியாமல் தரையில் விழுந்ததனால், துயரமும், வெட்கமுமுற்று பெரு மூச்சு விட்டுக்கொண்டு, வெறுப்புடன் அந்த சபையில் சஞ்சரித்தான். 

ततः स्थले निपतितो दुर्मना व्रीडितो नृपः।
निः श्वसन्विमुखश्चापि परिचक्राम तां सभाम्।।

அதன் பிறகு படிகம் போல தெளிந்த நீருள்ளதும், படிகத்தாமரைமலர்களால் சோபிப்பதுமாகிய வாவியை தரையென்று நினைத்து ஆடையோடு ஜலத்தில் விழுந்தான்.

அந்த துரியோதனன் ஜலத்தில் விழுந்ததை கண்டு மஹாபலசாலியான பீமசேனனும் வேலைக்காரர்களும் நகைத்தனர்.

ततः स्फाटिकतोयां वै स्फाटिकाम्बुजशोभिताम्।
वापीं मत्वा स्थलमिव सवासाः प्रापतञ्जले।।


जले निपतितं दृष्ट्वा भीमसेनो महाबलः।
जहास जहसुश्चैव किङ्कराश्च सुयोधनम्।।

தர்மராஜாவின் கட்டளையினால் அவனுக்கு வேலைக்காரர்கள் உயர்ந்த வஸ்திரங்கள் கொடுத்தனர். அவன் அவ்வாறிருக்கக் கண்டு மஹாபலசாலியான பீமசேனன் அர்ஜுனன் நகுல சஹதேவன் அனைவரும் சிரித்தனர். பொறாமைக்காரனான துரியோதனன் அவர்களுடைய பரிஹாஸத்தை பொறுக்கவில்லை. 

वासांसि च शुभान्यस्मै प्रददू राजशासनात्।
तथागतं तु तं दृष्ट्वा भीमसेनो महाबलः।।

अर्जुनश्च यमौ चोभौ सर्वे ते प्राहसंस्तदा।
नामर्षयत्ततस्तेषामवहासममर्षणः।।

தன் எண்ணத்தை வெளிக்காட்டாமலிருப்பதற்காக அவன் அவர்களை கண்ணெடுத்து பாராமல் இருந்தான்.

திரும்பவும் ஜலத்தை தாண்டுகிறவன் போல வஸ்திரத்தை தூக்கி கட்டிக்கொண்டு நிலத்தில் அடியை தூக்கிவைத்தான். அதனால் எல்லா ஜனங்களும் மறுபடியும் நகைத்தனர்.

आकारं रक्षमाणस्तु न स तान्समुदैक्षत।
पुनर्वसनमुत्क्षिप्य प्रतिरिष्यन्निव स्थलम्।।

आरुरोह ततः सर्वे जहसुश्च पुनर्जनाः।

படிக கதவினால் மூடப்பட்ட வாயிலை பார்த்து அதில் நுழையும் போது, துரியோதனன் தலையில் பட்டு கலங்கி நின்றான்.

द्वारं तु पिहिताकारं स्फाटिकं प्रेक्ष्य भूमिपः।

प्रविशन्नाहतो मूर्ध्नि व्याघूर्णित इव स्थितः।।

அது போலவே, பெரும் படிக கதவுள்ள மற்றோரு வாயிலை கைகளினால் இடித்து திறக்கும் போது, வாயிலுக்கு வெளிப்பட்டு முன்னே விழுந்தான்.

तादृशं च परं द्वारं स्फाटिकोरुकवाटकम्।
विघट्टयन्कराभ्यां तु निष्क्रम्याग्रे पपात हा।।

மறுபடியும் அவன் திறந்திருந்த ஒரு வாயிலை அடைந்து அது முன் போன்றதே என்று நினைத்து அந்த வாயிலிலிருந்து திரும்பினான்.

द्वारं तु वितताकारं समापेदे पुनश्च सः।
तद्वृत्तं चेति मन्वानो द्वारस्थानादुपारमत्।।

ஜனமேஜய மஹாராஜாவே! அந்த துரியோதனன் ராஜன் அவ்விடத்தில் இவ்வாறு பல வகை ஏமாறுதல்களை அடைந்து பாண்டவர்களால் விடைகொடுக்கப்பற்று ராஜஸூயமென்னும் மஹாயாகத்திலுள்ள, அந்த ஆச்சரியமான ஸம்பத்தை பார்த்ததினால் துயரமுற்ற மனத்துடன் ஹஸ்தினாபுரத்திற்கு சென்றான்.

பாண்டவர்களின் செல்வத்தினால் கொதிப்புற்று அதையே நினைத்துக்கொண்டு செல்லுகின்ற துரியோதன ராஜனுக்கு கெட்ட எண்ணமுண்டாயிற்று.

एवं प्रलम्भान्विविधान्प्राप्य तत्र विशाम्पते।
पाण्डवेयाभ्यनुज्ञातस्ततो दुर्योधनो नृपः।।


अपहृष्टेन मनसा राजसूये महाक्रतौ।
प्रेक्ष्य तामद्भुतामृद्धिं जगाम गजसाह्वयम्।।


पाण्डवश्रीप्रतप्तस्य ध्यायमानस्य गच्छतः।
दुर्योधनस्य नृपतेः पापा मतिरजायत।।

ஜனமேஜயரே! பாண்டவர்கள் மனங்களித்து இருந்ததையும் அரசர்கள் அவர்களுக்கு வசப்பட்டு இருந்ததையும், குழந்தை முதல் எல்லா ஜனங்களும் அவர்களிடம் அன்பு வைத்திருந்ததையும், மஹாத்மாக்களான பாண்டவர்களின் சிறந்த மேன்மையையும் கண்டு திருதராஷ்டிரன் மைந்தனான துரியோதனன் நிறம்மாறி போனான்.

पार्थान्सुमनसो दृष्ट्वा पार्थिवांश्च वशानुगान्।
कृत्स्नं चापि हितं लोकमाकुमारं कुरूद्वह।।

महिमानं परं चापि पाण्डवानां महात्मनाम्।
दूर्योधनो धार्तराष्ट्रो विवर्णः समपद्यत।।

அவன் செல்லும் போது மனம் கலங்கி, சிறந்த புத்திமானான தர்மராஜருடைய அந்த ஒப்பற்ற ஐஸ்வர்யத்தையும் சபையையும் தனிமையில் நினைத்து கொண்டிருந்தான்.

स तु गच्छन्ननेकाग्नः सभामेकोऽन्वचिन्तयत्।
श्रियं च तामनुपमां धर्मराजस्य धीमतः।।

திருதராஷ்டிரன் மைந்தனான துரியோதனன் அப்போது மதி கலங்கி அடிக்கடி பேசுகின்ற சகுனிக்கு மறுமொழி கூறவில்லை.

प्रमत्तो धृतराष्ट्रस्य पुत्रो दुर्योधनस्तदा।
नाभ्यभाषत्सुबलजं भाषमाणं पुनः पुनः।।

அவ்வாறு கலங்கி நின்ற துரியோதனனை கண்டு சகுனியானவன், "துரியோதனா ! பெருமூச்சு எரிகிறவன் போல சொல்லுகிறாய். இதற்கு காரணம் என்ன?" என்று கேட்டான்.

अनेकाग्रं तु तं दृष्ट्वा शकुनिः प्रत्यभाषत।
दुर्योधन कृतोमूलं निःश्वसन्निव गच्छसि।।

அதற்கு துரியோதனன், "மாமா! இந்த பூமி முழுமையும், மஹாத்மாவான அர்ஜுனனுடைய அஸ்திர ப்ரதாபத்தினால், ஜெயிக்கப்பட்டு, யுதிஷ்டிரனுக்கு உட்பட்டு போனதையும், யுதிஷ்டிரனுடைய அம்மஹாயாகம் அவ்வாறு நடந்ததையும் தேவர்களில் இந்திரன் போல, யுதிஷ்டிரன் மிகுந்த மஹிமையுள்ளவனாக இருந்ததை கண்டு பொறாமையால் நிரப்பப்பட்டு இரவும் பகலும் எரிக்கப்பட்டவனாக, ஆணி ஆடி மாசங்கள் வந்த போது, சிறிய தடாகம் வற்றுவது போல வற்றுகிறேன்.

दृष्ट्वेमां पृथिवीं कृत्स्नां युधिष्ठिरवशानुगाम्।
जितामस्त्रप्रतापेन श्वेताश्वस्य महात्मनः।।

तं च यज्ञं तथाभूतं दृष्ट्वा पार्थस्य मातुल।
यथा शक्रस्य देवेषु तथाभूतं महाद्युतेः।।


अमर्षेण तु सम्पूर्णो दह्यमानो दिवानिशम्।
शुचिशुक्रागमे काले शुष्ये तोयमिवाल्पकम्।।

பார். யாதவ சிரேஷ்டனான கிருஷ்ணனால் சிசுபாலன் கொல்லப்பட்டான்.

அந்த சபையில் அந்த சிசுபாலன் அடியை தொடரும் ஆண் பிள்ளை யாருமிலலாமல் இல்லாமல் போனான்.

पश्य सात्वतमुख्येन शिशुपालो निपातितः।
न च तत्र पुमानासीत्कश्चित्तस्य पदानुगः।।

பாண்டவர்களிடமிருந்து உண்டான தீயினால் சுடப்பட்ட அரசர்கள்  அந்த குற்றத்தை பொறுத்தனர்.

அதை யார் பொறுக்க தகும்?

दह्यमाना हि राजानः पाण्डवोत्थेन वह्निना।
क्षान्तवन्तोऽपराधं ते को हि तत्क्षन्तुमर्हति।।

அந்த தகாத பெருங்காரியம் கிருஷ்ணனால் செய்யப்பட்டது.

மஹாத்மாக்களான பாண்டவர்களின் பராக்கிரமத்தினால் அது நிலைத்தது.

वासुदेवेन तत्कर्म यथाऽयुक्तं महत्कृतम्।
सिद्धं च पाण्डुपुत्राणां प्रतापेन महात्मनाम्।।

அதனாலே தான், ராஜாக்கள் பலவகை ரத்தினங்களை எடுத்து கொண்டு, வைஸ்யர்களை போல கப்பம் கட்டி, குந்தி புத்ரனான தர்மராஜாவை சேவித்தனர்.

तथाहि रत्नन्यादाय विविधानि नृपा नृपम्।
उपातिष्ठन्त कौन्येयं वैश्या इव करप्रदाः।।

அவ்வாறு தர்மராஜாவிடத்தில் ஜ்வலிப்பது போல பிரகாசித்த, அந்த ராஜ்ய லக்ஷ்மியை கண்டு, அந்த தகுதி பெறாத நான், பொறாமையின் கையில் அகப்பட்டு கொண்டு தாபமுற்று இருக்கிறேன்.

श्रियं तथागतं दृष्ट्वा ज्वलन्तीमिव पाण्डवे।
अमर्षवशमापन्नो दह्यामि न तथोचितः।।

தீயிலாவது குதிப்பேன். விஷத்தையாவது குடிப்பேன். ஜலத்திலாவது விழுவேன். ஜீவிக்க மாட்டேன். உலகத்தில் பராக்ரமமுள்ள எந்த ஆண் பிள்ளை, எதிரிகள் விருத்தி அடைந்திருக்கவும், தான் குறைந்திருக்கவும் கண்டு பொறுப்பான்?

वह्निमेव प्रवेक्ष्‌यामि भक्षयिष्यामि वा विषम्।
अपो वापि प्रवेक्ष्यामिन हि शक्ष्यामि जीवितुम्।।

को हि नाम पुमांल्लोके मर्षयिष्यति सत्ववान्।
सपत्नानृद्ध्यतो दृष्ट्वा हीनमात्मानमेव च।।

அவர்களுக்கு அப்படிப்பட்ட ஐஸ்வர்யம் வந்திருப்பதை கண்டு, இப்போது பொறுத்திருக்க நான் பெண்ணும் அல்ல. பெண் அல்லாதவனும் அல்ல, ஆணுமல்ல, ஆண் அல்லாதவனும் அல்ல, 

सोऽहं न स्त्री न चाप्यस्त्री न पुमान्नापुमानपि।
योऽहं तां मर्षयाम्यद्य तादृशीं श्रियमागताम्।।

பூமிக்கெல்லாம் ஈஸ்வரனாய் இருப்பதையும், அப்படிப்பட்ட தன ஸம்பத்தையும், அவ்வகையான யாகத்தையும் கண்டு, என் போன்றவன் எவன் தாபமடையாமல் இருப்பான்? நான் ஸஹாயமின்றி அந்த ராஜ்யலக்ஷ்மியை அபகரிப்பதற்கு சக்தனல்லேன். ஸஹாயம் யாருமிருப்பதாகவும் தெரியவில்லை. ஆதலால், இறப்பதை பற்றியே நினைக்கிறன்.

ईश्वरत्वं पृथिव्याश्च वसुमत्तां च तादृशीम्।
यज्ञं च तादृशं दृष्ट्वा मादृशः को न संञ्ज्वरेत्।।

अशक्तश्चैक एवाहं तामाहर्तुं नृपश्रियम्।

सहायांश्च न पश्यामि तेन मृत्युं विचिन्तये।।


யாராலும் கெடுக்கப்படாத பரிசுத்தமான ஐஸ்வர்யம் குந்தி புத்திரனிடம் இருப்பதை கண்டு, தெய்வமே (விதி) வலியதென்றும், முயற்சி பயனற்றதென்றும் நினைக்கிறன்.

दैवमेव परं मन्ये पौरुषं च निरर्थकम्।
दृष्ट्वा कुन्तीसुते शुद्धां श्रियं तामहतां तथा।।

ஸுபல புத்திரனே! முதலிலேயே அவனை அழிப்பதற்கு நான் முயன்றேன்.

அவற்றை எல்லாம் கடந்து ஜலத்தில் தாமரை போல அவன் வளர்ந்து கிளம்பினான்.

कृतो यत्नो मया पूर्वं विनाशे तस्य सौबल।
तच्च सर्वमतिक्रम्य संवृद्धोऽप्स्विव पङ्गजम्।।

அதனால் விதியே பெரியதென்றும் முயற்சி பயனற்றதென்றும் நினைக்கிறன்.

திருதராஷ்டிரன் புத்திரர்கள் குறைந்து போகின்றனர்.

பாண்டவர்கள் நாளுக்கு நாள் விருத்தியாகின்றனர்.

न दैवं परं मन्ये पौरुषं च निरर्थकम्।
धार्तराष्ट्राश्च हीयन्ते पार्था वर्धन्ति नित्यशः।

கிருஷ்ணன் அவர்களிடம் அன்பு கூர்ந்து அவர்களுக்கு செல்வங்களை விருத்தி செய்கிறான்.

कृष्णस्तु सुमनास्तेषां विवर्धयति सम्पदः'।।

ஆதலால், நான் அந்த ஐஸ்வர்யத்தையும் அவ்வகையான அந்த சபையையும் காவலாளிகள் செய்த அந்த பரிஹாசத்தையும் பார்த்து தீயினால் சுடப்படுவது போல சுடப்படுகிறேன்.

மாமா! மிக துயரமுற்ற என்னை இப்போது நீ விட்டு விடு. எனக்குள்ள ஆற்றாமையை திருதராஷ்டிரருக்கு தெரிவி" என்று சொன்னான்.

सोऽहं श्रियं च तां दृष्ट्वा सभां तां च तथाविधाम्।
रक्षिभिश्चावहासं तं परितप्ये यथाऽग्निना।।


अमर्षं च समाविष्टं धृतराष्ट्रे निवेदय।।

Sunday, 21 July 2024

பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய, காந்தர்வ, ராக்ஷஸ திருமணங்கள் பற்றி துஷ்யந்தன், சகுந்தலைக்கு சொல்கிறார்.

க்ஷத்ரிய அரசனான துஷ்யந்தன், காந்தர்வ திருமணம் செய்து கொள்ளலாம் என்று சகுந்தலையை கேட்டார். 

துஷ்யந்தன் அப்போது, தர்ம சாஸ்திரம் காந்தர்வ மணம் க்ஷத்திரியனுக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை இவ்வாறு சொன்னார்.


अष्टावेव समासेन विवाहा धर्मतः स्मृताः।

ब्राह्मो दैव: तथैव आर्षः प्राजापत्य स्तथा आसुरः।

गान्धर्वो राक्षस: चैव पैशाच: च अष्टमः स्मृतः।।

பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய, ஆசுர (rape and marry), காந்தர்வ (love marriage), ராக்ஷஸ (capture and marry), பைசாச ஆகிய 8 திருமணங்கள் தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.


तेषां धर्म्यान्यथा पूर्वं मनुः स्वायंभुवो अब्रवीत्।।

இந்த 8 திருமணங்களில் யார் யாருக்கு எது தர்மமான திருமணம் (விவாஹம்) என்று முன் காலத்தில் ஸ்வாயம்பு மனு சொன்னதை அப்படியே உனக்கு சொல்கிறேன்..


प्रशस्तां चतुरः पूर्वान् ब्राह्मणस्य उपधारय।

षडानु पूर्व्या क्षत्रस्य विद्धि धर्म्यान् अनिन्दिते।

राज्ञां तु राक्षसो अप्युक्तो विट्शूद्रेष्व आसुरः स्मृतः।

ப்ராம்மணனுக்கு (MLA, MP, Advocate, Judge, CM, PM, Vedic Scholars, Vedic Priest, Teachers) முதல் 4 திருமணங்கள் (பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய) அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

க்ஷத்திரியனுக்கு (police, defence, army) முதல் 6 திருமணங்கள் (பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய, ஆசுர, காந்தர்வ) அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

ராக்ஷஸ திருமணம் க்ஷத்ரியர்களில் ராஜாக்களுக்கு (army chief) மட்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. 

வைஸ்யர்களுக்கும் (employer), சூத்திரர்களுக்கும் (employee) அசுர திருமணம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.


पञ्चानां तु त्रयो धर्म्या अधर्म्यौ द्वौ स्मृताविह।

पैशाच आसुरश्चैव न कर्तव्यौ कदाचन।।

- வ்யாஸ மஹாபாரதம் 

5 திருமணங்கள் (பிராம்மண, தெய்வ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய, காந்தர்வ, ராக்ஷஸ) எப்பொழுதுமே தர்மமான திருமணம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. மற்ற 2 திருமணங்கள் (ஆசுர, பைசாச) எப்பொழுதுமே அதர்மமான திருமணம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆசுர, பைசாச திருமணங்கள் எந்த நிலையிலும் செய்யவே கூடாது.


இவ்வாறு சொல்லி, தான் காந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சகுந்தலையிடம் துஷ்யந்தன் சொன்னார்.


பெண் சுதந்திரமானவளாக செயல் பட கூடாது - சகுந்தலை (வ்யாஸ மஹாபாரதம்)

யயாதி வம்சத்தில் பிறந்த அரசன் "துஷ்யந்தன்" கண்வ ரிஷியின் ஆஸ்ரமத்தில் சகுந்தலை இருப்பதை கண்டார்.

சகுந்தலை விச்வாமித்ரருக்கு தேவலோக மேனகையால் பிறந்தவள். அவளை கண்வ ரிஷி, தந்தை போல வளர்த்து வந்தார்.

கண்வ ரிஷி மலர்கள் எடுக்க சென்று இருந்த போது, துஷ்யந்தன் அந்த காட்டின் பக்கம் வேட்டைக்காக வந்த போது, அந்த ஆஸ்ரமத்தை கண்டார். 

துஷ்யந்தன், சகுந்தலையை பார்த்து, "காந்தர்வ முறைப்படி மணம் செய்து கொள்ள இஷ்டமா?" என்று கேட்டார்.


"எனக்கு இப்போது தந்தையே முக்கியமான தெய்வம். அவர் என்னை யாருக்கு கொடுப்பாரோ, அவரே எனக்கு கணவர் ஆவார்" என்றாள்.

மேலும் சொன்னாள்,

पिता रक्षति कौमारे भर्ता रक्षति यौवने।

पुत्रस्तु स्थाविरे भावे न स्त्री स्वातन्त्र्यमर्हति ।।

- வ்யாஸ மஹாபாரதம் 

"இளமை காலத்தில் தந்தை ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார். பருவ காலத்தில் கணவன் ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார். முதிர்ந்த காலத்தில் அவள் பிள்ளை அவளை காப்பாற்றுகிறான். எந்த நிலையிலும் பெண் சுதந்திரமாக செயல் படுவது கூடாதுஎன்றாள்.


"இளமை பருவத்தில் இருக்கும் என்னை இப்போது என் தந்தை காக்கும் பொழுது, அவரை மதிக்காமல், நானாக எப்படி ஒருவரை அடைய நினைக்கலாம்?" என்று கேட்டாள்.


இவ்வாறு சகுந்தலை துஷ்யந்தனுக்கு பெண் சுதந்திரமானவளாக செயல் பட கூடாது என்று தர்மத்தை சொன்னாள்.