Followers

Search Here...

Saturday 21 April 2018

"ஒப்பில்லாத" என்று கூறும் போது - ஆழ்வார் நிலை எப்படி இருந்தது?

ஒப்பில்லாத பெருமாள் என்றால் பொதுவாக நாம் நினைப்பது, அவர் மிகவும் உயர்ந்தவர், தன்னிகர் இல்லாதவர் என்று.

ஆழ்வார் தன் பாசுரத்தில் "ஒப்பில்லாத" என்று கூறி கதறுகிறார். ஒப்பில்லாதவன் என்று கூறி, பெருமாள் உயரந்தவர் என்று சொல்லும் போது பெருமை படாமல் ஏன் ஆழ்வார் கதறுகிறார்?




ஆழ்வாரின் நிலை:
நரசிம்மருக்கு பிரகலாதன் ஒப்பு. 

"ஒப்பு" என்றால் பகவான் செய்யும் கருணைக்கு, ஒப்பாக பக்தன் பக்தி செய்வான்.
 

ராமருக்கு ஹனுமான் ஒப்பு.
கிருஷ்ணருக்கு கோபிகைகள் ஒப்பு.
 

இப்படி ஒப்பாக இருப்பதனாலேயே, பெருமாள் அவர்களை கண்டாலே ப்ரீதி கொள்கிறார்.

யாருக்குமே தனக்கு ஒப்பாக இருப்பவரையே பிடிக்கும்.

தன்னை விட குறைந்த அந்தஸ்த்தோ, படிப்போ, குலமோ இருந்தால் பழக கூட மாட்டர்.

பிரகலாதனும், கோபிகைகளும், ஹனுமனும் வந்து நின்றால், பெருமாளுக்கு ஒப்பாக இருக்கும். பெருமாள் பிரசன்னமாவார். அது நியாயம்.




எந்த விதத்திலேயும் ஒப்பு இல்லாத நிலையில், உன் கருணையை மட்டும் எதிர்பார்த்து, எந்த தைரியத்திலோ வந்து விட்டேன்.

வந்த பின் தான் தெரிகிறது, நான் எந்த விதமும் உனக்கு ஒப்பு இல்லையே என்று.
இதை நினைத்து,
ஆழ்வார் "ஒப்பில்லாத" என்று கூறும் போது தன் நிலை நினைத்து கதறுகிறார்.

No comments: