Followers

Search Here...

Tuesday 22 September 2020

கம்பீரம் (காம்பீர்யம்) என்றால் என்ன? ராமபிரானை கம்பீர புருஷன் என்று சொல்கிறோம்... மேலும் தெரிந்து கொள்வோமே...

 கம்பீரம் (காம்பீர்யம்) என்றால் என்ன?





11 வயது வரை கண்ணன், கோகுலத்தில் வளர்ந்து வந்தார். 

எப்பொழுதும் சிரித்த முகம்.. 

சோக களையே கிடையாது.  

கிராமத்தில் உள்ள அனைவரிடமும் கபடம் இல்லாது பழகுவார். அனைவருக்கும் பிடித்தமான பிள்ளையாக இருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

 

அக்ரூரர், பிருந்தாவனம் வந்து கண்ணனை மதுராவுக்கு அழைக்க வந்தார்.

'கம்சன் கொல்வதற்காக தான் அழைக்கிறான்' என்ற உண்மையையும் சொல்லிவிட்டார்.


சிரித்து கொண்டே வரவேற்ற கண்ணன், சித்தப்பா அக்ரூரரை வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அருகில் யாருமில்லாத நேரம் பார்த்து அக்ரூரர் அருகில் சென்ற கண்ணன், அவர் காதருகில் அழுது கொண்டே "என்னை பெற்ற அம்மா தேவகி எப்படி இருக்கிறாள்? என்னை பெற்றவள் எத்தனை கஷ்டத்தை அனுபவிக்கிறாள். அப்பா வசுதேவர் எப்படி இருக்கிறார்?" என்று கேட்க, 

"10 வயது வரை இந்த சோகத்தை நெஞ்சில் சுமந்தும், யசோதைக்கும் நந்தகோபருக்கும் கூட இது நாள் வரை தன் சோகத்த்தை காட்டாமல் இருந்து இருக்கிறாரே!!" 

என்று கண்ணனின் காம்பீர்யத்தை கண்டு பிரமித்து நின்றார் அக்ரூரர்.

தனக்கு உள்ள சோகத்தை பிறரிடம் சொல்லி, வெளிக்காட்டாத குணம் கொண்ட ராமபிரானை, பொதுவாக "காம்பீரிய புருஷன்" என்று சொல்வோம்.

நாராயணனின் அடுத்த அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண அவதாரமும் "காம்பீர்ய" அவதாரமே. 




தன் சோகத்தை வெளிக்காட்டாமல், அதே சமயம் பிறரை ஆனந்தமாகவும் வைத்து இருந்தார், ஸ்ரீ கிருஷ்ணர். 


நம் சோகத்தை காட்டி பிறரை துக்கப்படுத்துவதை விட, ஆறுதல் தேடுவதை விட, தன் சோகத்தை மறைத்து பிறரை ஆனந்தமாக வைத்து கொள்ள, நாமும் முயர்சிக்கலாம்.

ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா..

No comments: