Followers

Search Here...

Friday 12 February 2021

"ஸ்ரீகிருஷ்ணர் எனக்கு போதும்" என்று சொல்பவனை, கிருஷ்ண பரமாத்மா எப்படி பார்க்கிறார், நினைக்கிறார்? தெரிந்து கொள்வோம். பகவத் கீதை

 "ஸ்ரீகிருஷ்ணர் எனக்கு போதும்" என்று சொல்பவனை, கிருஷ்ண பரமாத்மா எப்படி பார்க்கிறார்? என்ன நினைக்கிறார்? 

என்று தெரிந்து கொள்வோம்...  

பகவத் கீதை 11 அத்தியாயத்தில் இதற்கு பதில் சொல்கிறார்...


नाहं वेदै: न  तपसा न दानेन न चेज्यया |

शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा ||

भक्त्या त्व अनन्यया शक्य अहम् एवं विधोऽर्जुन |


ந: அஹம் வேதை: ந தபஸா

ந தானேன ந ச இஜ்யயா |

சக்ய ஏவம் விதோ த்ரஷ்டும்

த்ருஷ்டவானசி மாம் யதா ||

பக்த்யா த்வ அனன்யயா

சக்ய அஹம் ஏவம் விதோர்ஜுன |

naaham vedair na tapasaa

na dhaanena na cha ijyayaa

sakya evam-vidho drashtum

Dhrushtavaanasi maam yathaa

bhaktyā tv ananyayaa śhakya 

aham evaṁ-vidho ’rjuna

- Bhagavad Gita (11:52)





Arjuna! Just by the study of the Vedas, or just by penance, or just by charity, or just by fire sacrifices, i can't be seen.

Arjuna! I am available, Only for unconditional love (devotion). 


அர்ஜுனா! என் மீது பக்தி இல்லாமல், வேதமே ஓதினாலும்,  தவமே (விரதம்) செய்தாலும், தானமே செய்தாலும், யாகமே செய்தாலும் நான் அவர்களுக்கு கிடைப்பதில்லை. 

அர்ஜுனா! என் மீது பக்தி மட்டும் ஒருவனுக்கு இருந்து விட்டால், நான் அவனை கண்டு, வெண்ணெய் உருகுவது போல உருகி அவன் கேட்டதையெல்லாம் செய்து கொடுப்பேன்...

இப்படி சொன்ன ஸ்ரீ கிருஷ்ணர், உண்மையில் அர்ஜுனனின் பக்தியை தான் குறிப்பிடுகிறார்..

"ஒரு பக்கம் துவாரகா சேனை, மறு பக்கம் போர் செய்யாத, ஆயுதம் கூட ஏந்தாத ஸ்ரீ கிருஷ்ணர்.. யார் வேண்டும்?" என்று ஸ்ரீ கிருஷ்ணர் கேட்ட போது, 

"ஸ்ரீ கிருஷ்ணர் தன் பக்கம் இருந்தால் போதும்

என்று அர்ஜுனன் கேட்டு கொண்டான்.


"தான் ஒருவன் போதும் என்று சொல்லி விட்டானே!" 

என்று உருகி போன ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனன் காலில் இருந்து தெறிக்கும் மண் தன் தலையில் விழுந்தாலும் பரவாயில்லை என்று அர்ஜுனன் தேரின் மேல் அமர்ந்து இருக்க, அர்ஜுனனுக்கு கீழே அமர்ந்து கொண்டு, துவாரகைக்கு அதிபதியான ஸ்ரீ கிருஷ்ணர், குதிரையோட்டியாக கூட வர தயாராகி விட்டார்..





"தான் ஒருவன் போதும் என்று சொல்லி விட்டானே!" 

என்று மேலும் உருகி, அதுவும் போதாதென்று தோன்ற, ஞானத்தை (பகவத் கீதை) உபதேசம் செய்தார். 


"தான் ஒருவன் போதும் என்று சொல்லி விட்டானே!" 

என்று மேலும் உருகி, அதுவும் போதாதென்று தோன்ற, யாரும் பார்க்காத, பார்க்க முடியாத விஸ்வ ரூபத்தையும், அர்ஜுனன் கேட்டான் என்றதும் காட்டி விட்டார்.


"பக்திக்கு எதுவும் செய்வேன்" என்று அர்ஜுனன் சொல்படி எல்லாம் கேட்டு தேரோட்டினார்.


அர்ஜுனன் பக்தியை உயர்த்தி காட்டும் இடம் இது.


'கிருஷ்ண பக்தி செய்பவர்களை, பரமாத்மா எப்படி ஆசையோடு பார்க்கிறார்' 

என்று காட்டும் ஸ்லோகம் இது.

No comments: