Followers

Search Here...

Thursday 13 April 2017

தாலி கட்டுவதை விட, பாணிக்ரஹனம் தான் மிக முக்கியம் என்று சொல்லப்படுகிறது. தெரிந்து கொள்வோம்.- ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை, ஆசைக்கு ஒரு பெண்

இந்த வைதீக திருமணத்தில், பாணிக்ரஹனம் செய்து கொள்ளும் மணமகன், மணமகளை பார்த்து "ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தையும், ஆசைக்கு ஒரு பெண் குழந்தையும் நமக்கு கிடைக்கட்டும்" என்ற அர்த்தத்தில், மணப்பெண்ணின் 5 விரல்களை சேர்த்து பிடித்து மந்திரம் சொல்லுகிறான்.


ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை என்று கேட்பதற்கு உண்மையான அர்த்தம் :

இது முதலில் ஆஸ்தி அல்ல, அஸ்தி என்று நாம் அறிய வேண்டும்.
இங்கு, ஆண் மணப்பெண்ணின் 5 விரல்களை பிடித்து "என்னுடைய வம்ச பரம்பரை, அழிந்து விடாமல் "அஸ்தி" என்று சொல்லும்படியாக தொடர்ந்து இருக்க வேண்டும். அதற்கு நமக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும்" என்கிறான். கட்டை விரல் ஆண் என்பதை குறிக்கும்.

ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்வது கொஞ்சுவதற்காக அல்ல. குழந்தையாக இருக்கும் போது தான் கொஞ்சுவதெல்லாம்.  பையன் வளர்ந்த பின்னும் கொஞ்சுவதற்காக ஆண் குழந்தை வேண்டும் என்று இங்கு  கேட்கவில்லை.

பிற் காலத்தில் அவன் சம்பாதித்து பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்கவில்லை.

என்னுடைய வம்சத்தில் என் வரை காத்து வந்த பழக்கவழக்கம், கலாச்சாரம், தெய்வ பக்தி, ஒரு ஆண் குழந்தை மூலம் மேலும் வளரட்டும் என்பதற்காகவே இப்படி ஒரு பிரார்த்தனை. சுயநலத்திற்காக அல்ல.


ஆசைக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று கேட்பதற்கு உண்மையான அர்த்தம் :

பெண் குழந்தை பிறந்தால் நம்மிடம் ஆசையாய் இருக்கும் என்பதற்காகவா? இல்லை.

நாம் (ஆண்) கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த போது, யாரோ ஒருவர் (மாமனார்) தன் பெண் குழந்தையை குழந்தை பருவத்தில் இருந்து ஜாக்கிரதையாக வளர்த்து, வேறு கோத்திரத்தை சேர்ந்த நமக்கு, நம் குடும்பம் வ்ருத்தியாகட்டும் என்று தன் பணத்தையும் செலவழித்து, பெண்ணையும் தானமாக கொடுத்தாரே !!.
நாம் சுகமாக இருப்பதற்கும், நம் குடும்பம், நம் தர்மம் வ்ருத்தியாவதற்கும் வளர்த்த பெண்ணை அப்படியே கொடுத்து விட்டாரே !! இத்தனை வருடம் தன் பெண்ணை வளர்த்தது, கடைசி காலம் வரை இவள் என்னை காப்பாள் என்று இல்லாமல், அவளையும், அவள் திறன், சம்பாத்தியம் அனைத்தையும் நான் அனுபவிக்கலாம் என்று தானம் செய்து விட்டாரே !!  எத்தனை பெரிய மனிதன் அவர் !!
இப்படி ஒருவர் நமக்கு கொடுத்ததால் தானே நமக்கு குடும்பம் ஏற்படுகிறது.

எங்கிருந்தோ வந்த அவள், நமக்காக வாழ்நாள் முழுதும் இருந்து, நம் குடும்பத்தை பார்த்து கொள்வாள். இதை நினைக்கும் போது, நாமும் இதே போன்று ஒரு பெண் குழந்தை பெற்று, இன்னொரு சத் குடும்ப பையனுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் என்று ஆண், மணப்பெண்ணின் 5 விரல்களை பிடித்து, "அஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு பெண்ணும்" நம் இல்லற வாழ்வில் பெற்றுக் கொள்வோம் என்கிறான்.


இந்த பாணிக்ரஹன நிகழ்ச்சி, அந்த மணபெண்ணுக்கு, அந்த மணமகனிடம் ஒரு நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. இவனிடம் ஏற்பட்ட பெண் குழந்தை ஆசை, தன் தந்தை செய்த "கன்னிகாதானம்" என்ற உயர்ந்த தானத்தை கண்டு தான் என்று அறிந்து கொள்கிறாள். தன் தந்தையின் இந்த "கன்னிகாதானம்" இவன் மனதிலும் தானம் செய்யும் ஆசையை உருவாக்கி உள்ளது. அதனால் தான், தனக்கும் ஒரு பெண் குழந்தை கேட்கிறான் என்று உணர்கிறாள்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka

தாலி கட்டுவது எதற்கு? தாலி 3 காரணங்களுக்காக ஆண், பெண்ணுக்கு கட்டுகிறான். தெரிந்து கொள்வோமே

தாலி கட்டுவது மட்டுமே திருமணம் அல்ல.
தாலி கட்டுவது, இந்த இருவரும் கணவன் மனைவி ஆவதற்கு முன் நடக்கும் ஒரு வைதீக சடங்கு.


இதையே திருமணம் முடிந்தது, கணவன் மனைவி ஆகிவிட்டனர் என்று நினைத்தால், அது தவறு. இவர்கள் இன்னும் கணவன் மனைவி ஆகவில்லை.

இதற்கு பின் இவர்கள் இருவரும், அக்னியை வலம் வந்து, சப்தபதி என்ற சடங்கு செய்த பின்பு தான், கணவன் மனைவி ஆகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சரி, தாலி கட்டுவது எதற்கு ?
கணவன், மனைவி ஆவதற்கு முன், கணவன் இவளிடம் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தம் போன்றது (Setting up Expectation).

திருமணத்தில் திருமாங்கல்யம் (தாலி) கட்டுகிறான் மணமகன். தாலி 3 காரணங்களுக்காக ஆண் பெண்ணுக்கு கட்டுகிறான்.

1. மாங்கல்யம் என்பது பெண்களின் தற்காப்புக்காக ஏற்பட்டது. அவள் மணமானவள் என்பதைக் மற்றவர்களுக்கு காட்டும் அடையாளம். இந்த அடையாளம், இவளை தீய குணம் உள்ளவர்களிடம் இருந்து காக்கும். பலர் தாலி அணிந்த பெண் என்று பார்த்தவுடனேயே மரியாதையாய் பழகுவர்.
ஒரு ஆணின் வெளி தோற்றத்தை வைத்து எந்த பெண்ணும் ஆசைப்படுவதில்லை, அலைவதும் இல்லை.
பெண் இவன் நல்லவன், ஆறுதல் அளிப்பவன், காப்பாற்றும் திறன் உள்ளவன் என்று பழகும் போது அறிந்து கொண்டு, அதற்கு பின் அவன் பின்னே அலைவாள்.
பெண் மற்ற ஆணுடன் பழக பழக தவறான வழிக்கு போக வாய்ப்பு உள்ளது. அதனால் பெண்ணுக்கு ஒரு ஆணை பார்த்ததினால் மட்டுமே தீய எண்ணம் தோன்றாது. ஆனால், ஆண் என்றுமே நம்பத்தகுந்தவன் அல்ல.
ஆண் வண்டு போன்றவன், பெண் பூ போன்றவள் என்று சொல்வது இதனால் தான்.


ஒரு பெண்ணை பார்த்தே இவன் சபல புத்தி கொள்வான். இதனால் தான், பெண் தாலி அணிவது அவசியம். விவேகம் உள்ள ஆண், சபல புத்தி இருந்தாலும், தாலி கட்டிய ஒரு பெண்ணை நெருங்க தயங்குவான்.

தியானம், யோகம் எல்லாம் ஆணுக்கு விதிக்கப்பட்டது போல, பெண்ணுக்கு விதிக்கப்படவில்லை. காரணம், பெண்ணுக்கு அது தேவை இல்லை.

பெண் எப்பொழுது வேறு ஆணிடம் பழகுகிறாளோ, அப்பொழுது தான், இவள் மனம் கெட வாய்ப்பு உள்ளது, ஆனால், ஒரு ஆண் பழகாமல் இருந்தாலும், பெண் உருவமே சபலத்தை கொடுத்து இவன் மனம் கெட வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் அறிந்து தான், தாலி என்பது பெண்ணுக்கு மிக மிக அவசியம் என்று விதித்தனர்.

2. தாலியை அடையாளமாக கட்டும் மணமகன், பெண்ணை பார்த்து சொல்கிறான் "இது மங்களசூத்திரம். நான் நீண்டகாலம் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி உனக்கு அணிவிப்பது. சௌபாக்கியவதியே! நீ நூறாண்டுகள் சுமங்கலியாக, சுகமாக வாழ்ந்திருப்பாயாக!". இப்படி சொல்லும் ஆண், "நீ சுகமாக வாழ நான் எப்பொழுதும் இருப்பேன். நான் இறந்து, உன்னை தனியாக விட்டு விடாமல் இருக்க எனக்கும் நீண்ட ஆயுள் தேவை. அதனால், நான் 100 ஆண்டுகள் உன்னோடு வாழ, நீ இறைவனிடம் வேண்டி பிரசாதமாக தரும் இந்த தாலியை அணிந்து கொள்" என்று ஆசையாக இவளை கடைசி வரை காக்கும் எண்ணத்துடன் அணிவிக்கிறான்.
பாணிக்ரஹனம் செய்யும் போது, உன் தந்தை மிகவும் உயர்ந்தவர் என்று சொல்லும் போது, மணப்பெண்ணுக்கு இவனிடம் அன்பு உண்டாகிறது.
மாங்கல்யம் கட்டும் போது, தனக்கு நீண்ட ஆயுள் கேட்பது, உன்னை காப்பதற்கே என்று சொல்லும் இவனிடம், மணப்பெண்ணுக்கு மேலும் அன்பு உண்டாகிறது.
இந்த அன்பு மேலும் உறுதியாக சப்தபதி என்ற சடங்கில் இருவரும் பிரிக்க முடியாத கணவன் மனைவி ஆகின்றனர்.

3. தாலி கட்டும் ஆண் வெறுமனே கட்டுவதில்லை. அவள் அணிந்து இருக்கும் தாலியில் மூன்று முடிச்சு போடுவான். தாலி எப்பொழுதும் அணிந்து இருக்கும் பெண், இந்த மூன்று முடிச்சின் காரணத்தை தினமும் ஸ்மரிக்க (ஞாபகபடுத்தக் கொள்ள) வேண்டும் என்பதற்காக தான்.

- சௌபாக்கியவதியே ! நீ எந்த செயலை செய்தாலும், முக்காலமும் உணர்ந்து இல்லற தர்மத்தைப் பேணவும்.
நீ செய்யும் செயல், பிற்காலத்தில் ஏன் இப்படி அதர்மம் செய்தோம் என்று வருந்தும் படியாக இருக்க கூடாது.
நீ செய்யும் செயல், நிகழ் காலத்தில் அதர்மம் நடப்பதற்கும் காரணம் ஆகி விட கூடாது.
நீ செய்யும் செயல், இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பழக்கம், தர்மத்திற்கு எதிராகவும் இருந்து விட கூடாது.
சௌபாக்கியவதியே ! ஆதலால், நீ எந்த செயலை செய்தாலும், முக்காலமும் உணர்ந்து, இல்லற தர்மத்தைப் நீ பேணவும்.

- மும்மூர்த்திகளுக்கு இந்த மூன்று முடிச்சுகளை அர்ப்பணிப்பது தெய்விகமான அம்சம். சௌபாக்கியவதியே ! கண்ணுக்கு தெரியாத, வரப்போகும் எந்த ஒரு ஆபத்தும் உன்னை நெருங்கி விடாமல் இருக்க, அந்த ப்ரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகள் காக்கட்டும். அதற்காகவே மூன்று முடிச்சு. 3 தெய்வங்கள் உனக்கு துணை என்று தினமும் நினைத்து, தைரியமாக குடும்பத்தை நடத்து.

- சௌபாக்கியவதியே, உலகியல் ரீதியாக தெய்வம், பெற்றோர், கணவன் மூவரையும் நீ மதிக்க வேண்டும். அதற்காவும் மூன்று முடிச்சு.

- சௌபாக்கியவதியே ! நீ மனம் - வாக்கு - உடல் இவற்றின் புனிதத்தோடு திருமண பந்தத்தைக் கடைசி வரை காக்கவும். இந்த மூன்று முடிச்சு உனக்கு இதையும் ஞாபகப்படுத்தட்டும். எக்காலத்திலும் மனத்தாலோ, வாக்காலோ, உடலாலோ உன் புனிதத்தன்மையை கெடுத்துக் கொள்ளாமல், திருமண பந்தத்தைக் நீ காக்கவும்.

காரணம் இல்லாமல் பாணிக்ரஹனம் செய்ய வில்லை, தாலி கட்டவில்லை, சப்தபதி செய்வதில்லை.
ஹிந்துவாய் இருந்தால், பல ஆச்சர்ய விஷயங்கள் நமக்கு தெரிய வரும். மேலும், நாம் ஹிந்து குடும்பத்தில் பிறந்து இருக்கிறோம் என்ற சந்தோஷமும் நமக்கு உண்டாகும்.


ஏன் எதற்கு என்ற நியாயமான கேள்விகளுக்கு பதில் சரியான பெரியோர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டாலே, பல விடைகள் கிடைக்கும். ஹிந்துவாய் பிறந்ததற்கே நமக்கு பெருமிதம் அதிகரிக்கும்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 


ஸனாதன தர்மம், யாரையும் அயோக்கியன் என்று சொல்வதில்லை. ஆச்சர்யமான பரந்த எண்ணம் கொண்டது நம் தர்மம்.

நம் ஸனாதன தர்மம், யாரையும் "அயோக்கியன்" என்று சொல்வதில்லை.
உண்மையில் யாருமே இந்த உலகத்தில் அயோக்கியன் இல்லை என்று கூட சொல்கிறது.


இந்த ஸ்லோகம் படிக்கும் போதே, எப்படி மனிதனை உயர்த்தி சொல்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

अयोग्यः पुरुषो नास्ति योजकस्तत्र दुर्लभः॥

அயோக்கிய: புருஷோ நாஸ்தி |
யோஜக தத்ர துர்லப: ||
யாருமே இந்த உலகத்தில் அயோக்கியன் இல்லை. 
அந்த அயோக்கியனிடமும் ஒளிந்து உள்ள  ஈஸ்வரனை, நல்ல குணத்தை, வெளியே கொண்டு வர அவனுக்கு ஒரு குரு இல்லாததே இவன் அயோக்கியன் போல தென்படுவதற்கு காரணம் என்று சொல்கிறது.

தன்னிடம் ஒளிந்து உள்ள நல்ல எண்ணங்களை வெளிப்படுத்த உதவி செய்யும், ஞானிகள் (குரு) கிடைப்பதே அரிது என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.

அப்படிப்பட்ட ஞானத்தில் உயர்ந்த ஒரு குரு, ஒரு அயோக்கியனை பார்க்கும் போது, அவனும் தான் புண்ணிய ஆத்மாவே என்று உணர்வான், திருந்துவான்.

அயோக்கியனுக்கு, அவனிடம் உள்ள நல்லதை எடுத்து காட்டும், உண்மையான குரு கிடைப்பதே அரிது.
வேடுவனாக கொலை கொள்ளை என்று வாழ்ந்த ருக்ஷன், நாரதரை தரிசித்த பின், வால்மீகி ரிஷி ஆனார் என்று பார்க்கிறோம்.

ஸனாதன தர்மம், யாரையும் அயோக்கியன் என்று சொல்வதில்லை. ஆச்சர்யமான பரந்த எண்ணம் கொண்டது நம் தர்மம்.


There no person who is worthless, but,
Rare indeed is the nourisher of talents.

Explained by சாரதா பீட புது ஆச்சர்யாள்.
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka

சத்தியம் பேசுபவர்கள் வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும். சத்யஸ்ய பரம் நிதானம் - முண்டகோ உபநிஷத்

ஒரு ஸமயம், சோழ அரசன், ராமானுஜ வழியில் வந்த சிஷ்யர்களிடம் தனக்குள் இருந்த சந்தேகத்தை ஒரு கேள்வியாக கேட்டார்.
பொதுவாக,
மனிதன் "தன்னை தெய்வம்" என்று சொல்லிக்கொள்ள பெருமைபடுவார்கள்.


பரந்தாமன் ஸ்ரீநாராயணன், "ஸ்ரீராமராக" அவதாரம் செய்தும், பகவான் "தன்னை மனிதன்" என்று சொல்லிக்கொண்டார்.

தன் அவதாரம் முழுவதும் மனிதனை போன்றே இருந்து, தன் தெய்வ ஆச்சர்யங்களை காட்டாமல் இருந்தார்.
குணத்தினால் மட்டுமே தெய்வ குணங்கள் தெரிந்தன.

இப்படி தன்னை மனிதனை போன்றே காட்டிக்கொண்டு, மனிதன் எப்படி தர்மபடி வாழ வேண்டும்? என்று நமக்கு காட்டினார்.

இப்படி இருக்க, ஜடாயு என்ற பறவைக்கு ப்ரம்ம ஸம்ஸ்காரம் செய்து, தன் ஆணை என்று சொல்லி "பரம் என்ற வைகுண்டம் செல்" என்று அனுப்பி வைத்தார் ஸ்ரீராமர் என்று பார்க்கிறோம்.


இங்கு இவர் "தன்னை நாராயணன் என்று காட்டுகிறார்".

இருந்தாலும், தன்னை மனிதன் என்று சொல்லிக்கொண்டு எந்த ஆச்சர்யங்களும் காட்டாத ஸ்ரீ ராமர் இந்த நிகழ்விலும் மனிதனுக்கு சொல்லும் தர்மம் என்ன ?

சிறுது நேரம், ராமானுஜர் இதற்கு என்ன சொல்லி இருக்கிறார்? என்று ஆலோசனை செய்த சிஷ்யர்கள் இவ்வாறு பதில் கூறினர்.


"சத்யஸ்ய பரம் நிதானம்" என்று முண்டகோ உபநிஷத் சொல்கிறது.
இதற்கு பொருள், "சத்தியத்தில் இருப்பவனுக்கு, பரம் என்ற வைகுண்டமும் கிடைக்கிறது"

ஸ்ரீராமர் சத்தியசீலன். சத்தியத்தை என்றும் மீறாதவர்.
தன் சத்தியத்தை கொண்டே, உபநிஷத் வாக்கின் படி, ஜடாயு என்ற பறவைக்கு பரம் என்ற வைகுண்டம் கிடைக்க செய்தார்.

இதே உபநிஷத் "சத்யம் ஏவ ஜயதே" (வாய்மையே வெல்லும்) என்றும் சொல்கிறது.
ஸ்ரீ ராமர் சத்தியத்தின் பெருமையை தன் சரித்திரத்தில் காட்டுகிறார்.

நாமும் ஸ்ரீ ராமரை போன்று சத்தியத்தில் முழுவதுமாக நிற்க முயற்சி செய்ய வேண்டும்.
நாம் முடிந்தவரை சத்தியத்தில் இருக்கவாவது முயற்சி செய்ய வேண்டும்.
முடிந்த வரை பொய் பேசாமலாவது இருக்க வேண்டும்.
காரணமே இல்லாமல், விளையாட்டாக கூட பொய் பேச கூடாது.
பொய் பேச, பொய் பேச நம் புண்ணியங்கள் பொசுங்கும்.
சத்தியம் பேச,  சத்தியம் பேச புண்ணியங்கள் சேர்ந்து வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும், வைகுண்டமும் வசப்படும்
என்று ஸ்ரீ ராமரின் வாக்கில் இருந்து அறிய வேண்டும்.

மனிதன் சத்தியத்தில் இருக்க ஆசை பட வேண்டும்.
புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.
இதையே ஸ்ரீ ராமர் காட்டுகிறார்.
இவ்வாறு சொன்ன பதிலை கேட்டு ஆனந்தப்பட்டார் அரசன்.

சத்யஸ்ய பரமம் நிதானம்

Narrated by DA Joseph.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 

"தீர்க்கதரிசி" ஆபிரகாமின் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவம். Genesis

ஆபிரகாம் தன்னிடம் எத்தனை விசுவாசமாக இருக்கிறார்?
என்று பார்க்க, ஒரு சமயம், "கடவுள்" அவர் மகனையே உயிர் பலி கொடுக்க கேட்டார்.

கடவுளின் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்காமல், தன் மகன் தலையை வெட்ட துணிந்ததால், கடவுளின் விசுவாசத்துக்கு பாத்திரமானார் ஆபிரகாம்.




ஆபிரகாம் மகனுக்கு பதில், ஒரு ஆடு பலியாகுமாறு கடவுள் செய்தார். இவர் "தீர்க்கதரிசி" என்று கடவுளால் போற்றப்பட்டார்.

இந்த தியாகத்தை (குர்பானி) நினைவு கூறும் விதமாக இந்த ஒரு நாளில் மட்டும், வருடா வருடம் உலகத்தில், சுமார் 20 மில்லியன் ஆடு, மாடுகள், ஒட்டகம் கொல்லப்பட்டு,  கொண்டாடப்படுவதே பக்ர் ஈத்.
இது தியாகத்தின் பண்டிகை என்பது யாவரும் அறிந்ததே !!

ஆப்ராம் என்ற ஆபிரகாம், யூத (Judaism) மத போதகர் என்பதை நாம் அறிந்ததே !!
இவர் ஒரு தீர்க்கதரிசி (Prophet). 

இவர் ஊர் (Ur) என்னும் ஊரில் பிறந்தார்.
இது இப்போது ஈராக் தேசத்தில், அரேபியாவில் உள்ளது.
ஏசுவுக்கு, நபிக்கு முன் 2000 வருடம் முன் இருந்தவர் ஆப்ராம்.

யூத மதத்திற்கு பின்பு பிரிந்து, உருவான மதம் கிறிஸ்துவம்.
அதன் பின் உருவான மதம், இஸ்லாம். இதுவும் நாம் அறிந்ததே !!

ஆதலால், 'ஆபிரகாம்' இந்த மூன்று உருவான மதங்களிலும் போற்றப்படுகிறார். இவர் ஒரு தீர்க்கதரிசி.

ஆபிரகாமின் தந்தை பெயர் "தேராகு" (Terah).

"தேராகு"வுக்கு (Terah) மூன்று மகன்கள் :
1. "ஆபிரகாம்" (Abram)
2. "ஆரான்" (Haran) மற்றும்
3. "நாகோர்" (Nahor).

"தேராகு"வுக்கு (Terah) மற்றொரு மனைவி மூலம் ஒரு மகள் :
4. "சாரா" (Sarah or Sarai)

"ஆரான்" (Haran), தன் தந்தை "தேராகு"(Terah) இருக்கும் போதே, ஊர் (Ur), ஈராக்கில் இறந்து விட்டான். (genesis 11:28).

"ஆரான்" (Haran) இறக்கும் போது, இவனுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.

"ஆரான்"னின் (Haran) 2 மகள்கள்:
1. "மில்கா" (Milcah)
2. "இஸ்கா" (Iscah)

நாகோர், தன் சகோதரன் 'ஆரான்" மகள் "மில்கா"வை மணந்தான். (genesis 11:29).
மில்கா தன் சித்தப்பாவை ("நாகோர்" Nahor) மணந்தாள்.

"தீர்க்கதரிசி" ஆபிரகாம் தன் தந்தை "தேராகு"க்கும் (Terah), இன்னொரு தாய்க்கு பிறந்த "சாரா"வை மணந்தார்.

"தீர்க்கதரிசி" ஆபிரகாம் வயதோடு ஒப்பிடும் போது, "சாரா" வயதில் மிக சிறியவள். மிக அழகானாவள்.

"தீர்க்கதரிசி" ஆபிரகாமின் வாழ்வில் நடந்த மற்றொரு சுவாரஸ்ய சம்பவம்.
ஒரு சமயம்,
ஆபிரகாம், சாராவுடன் (சகோதரி முறை+ மனைவி முறை) கடவுளின் ஆணைப்படி, தங்கள் நாட்டில் இருந்து கிளம்பி, ஒரு ஊரை அடைந்தனர்.
எந்த ஊர்?

இரண்டு இடங்கள் இங்கு குறிப்பிடப்படுகிறது.
எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

* ஆபிரகாம், சாராவுடன் எகிப்து தேசத்தை அடைந்தான். (genesis 12:10). இந்த ஊரின் அரசன் "பார்வோன்" (Pharaoh).
Or
* ஆபிரகாம், சாராவுடன் இஸ்ரேல்
தேசத்தை அடைந்து, கேராரில் (gerar) தங்கினான். (genesis 20:1).
இந்த ஊரின் அரசன் "அபிமெலே" (Abimelech).

"தீர்க்கதரிசி" ஆபிரகாம், சாராவுடன் எகிப்து தேசத்தை அடைந்தார் என்ற நம்பிக்கையில் தொடர்வோம்.
இந்த சமயம், "தீர்க்கதரிசி" ஆபிரகாம் வயது 75.

"தீர்க்கதரிசி" ஆபிரகாம் சாராவை பார்த்து இவ்வாறு சொன்னார்,
"சாரா, நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று நான் அறிவேன். எகிப்தியர் உன்னை கண்டால், நான் உனக்கு கணவன் (75yr முதியவன்) என்று  தெரிந்தால் என்னை கொன்று போட்டு, உன்னை உயிரோடு வைப்பார்கள். ஆகையால், உன்னால் நான் உயிர் பிழைக்க யாரும் கேட்டால் 'நான் இவர் சகோதரி' என்று சொல்"
என்றார்.

எகிப்தியர்கள், தன் தலைவர் பார்வோன் (Pharaoh/Abimelech) முன் கொண்டு சென்றனர்.
பார்வோன் (Pharaoh) 'தீர்க்கதரிசி' ஆப்ரகாமிடம் "இவள் யார்?" என்று கேட்டார்.
'தீர்க்கதரிசி' ஆப்ரகாம் "இவள் என் சகோதரி" என்றார்.




அவளும் "ஆப்ரகாம் தன் சகோதரர்" என்று சம்மதிக்க, இவள் அழகின் காரணமாக இவளை தன் அரண்மனைக்கு கொண்டு சென்றனர்.

சகோதரியை தனக்கு தந்த உத்தமர் 'தீர்க்கதரிசி ஆப்ரகாமுக்கு பரிசாக - கழுதை, ஆடு, மாடு, ஒட்டகம், வேலைக்காரன், வேலைக்காரிகள் கொடுத்தான் பார்வோன் (Pharaoh).

ஆனால் அந்த இரவு, கடவுள், பார்வோன் (Pharaoh) கனவில் வந்து,
"நீ சாக வேண்டியவன். நீ எந்த பெண்ணை உன் அரண்மனையில் வைத்து உள்ளாயோ, அவள் மணமானவள்"
என்றார்.

பார்வோன் (Pharaoh) நிதானமாக கடவுளை பார்த்து
"நீ இப்படி தான் அப்பாவிகளை தண்டிப்பாயோ!!"
என்றார்.

மேலும் தொடர்ந்தான் பார்வோன் (Pharaoh),
"ஆப்ரகாம் தன் வாயாலேயே 'இவள் என் சகோதரி' என்றான். அவளும் 'ஆப்ரகாம் என் சகோதரன்' என்றாள். 
இப்படி இருக்க, இவளை என் அரண்மனைக்கு அழைத்து வந்த போது என் மனம் தவறு செய்ததாக சொல்லவில்லை. 
நான் குற்றம் செய்யாதவனே " 
என்றான்.

கடவுள்,
"எனக்கு தெரியும் நீ பாவம் செய்யவில்லை என்று. 
அதனால் தான் நீ இது வரை அவளை தொட்டு விடாதவாறு தடுத்து உள்ளேன். இவளை அவன் கணவனிடம் திருப்பி கொடுத்து வி்டு. 
அவர் ஒரு தீர்க்கதரிசி (Prophet). 
அவர் நீ செய்த இந்த காரியத்துக்கு உன் சார்பில்  மன்னிப்பு கேட்டு, உன் பாவத்திலிருந்து காப்பார். 
ஒரு வேளை நீ அவளை கொடுக்கவில்லை என்றால், நீயும், உன்னோடு உள்ள அனைவரும் இறந்து விடுவீர்கள்" 
என்று சொல்லி மறைந்தார்.

அடுத்த நாள் காலை, பார்வோன் (Pharaoh/Abimelech), 'தீர்க்கதரிசி' ஆப்ரகாமை அழைத்து
"என்ன காரியம் நீ எங்களுக்கு செய்து இருக்கிறாய்? இவள் உன் மனைவி என்று சொன்னால் என்ன? என்ன தவறு உனக்கு செய்தோம் என்று, இப்படி ஒரு தவறான செயலை நாங்கள் செய்ய தூண்டினாய்? 
உன்னுடைய நோக்கம் என்ன?"
என்று கேட்டான்.

'தீர்க்கதரிசி' ஆபிரகாம், பார்வோனை (Pharaoh) பார்த்து,
"உங்கள் நாட்டில், யாருக்குமே இறைவனை கண்டு பயமிருக்காது என்று நினைத்தேன். 
அதனால் என் மனைவியின் காரணமாக, என்னை கொன்றுவிடுவீர்கள் என்ற உயிர் பயத்தில் இப்படி சொன்னேன்" 
என்றார்.

மேலும் தொடர்ந்து தீர்க்கதரிசி "ஆபிரகாம்" இவ்வாறு பேசலானார், "உண்மையில் இவள் எனக்கு சகோதரி முறையும் தான். என் தந்தைக்கு இவள் மகள், ஆனால் வேறு தாய்க்கு பிறந்தவள். 
எனக்கு மனைவியும் தான். 
நான் தான் அவளிடம் யார் கேட்டாலும் என் சகோதரன் இவர் என்று சொல்ல சொன்னேன்" 
என்றார்.

தீர்க்கதரிசி "ஆபிரகாம்" பேச்சை கேட்ட, பார்வோன் (Pharaoh/Abimelech), இவருக்கு பரிசாக கொடுத்த - கழுதை, ஆடு, மாடு, ஒட்டகம், வேலைக்காரன், வேலைக்காரிகள் அனைத்தையும் திரும்ப பெற்றான்.

இவன் மனைவி & சகோதரி "சாரா"வை "தீர்க்கதரிசி" ஆபிரகாமிடம் திருப்பி கொடுத்தான்.

பார்வோன் (Pharaoh/Abimelech) சாராவை பார்த்து, "உன் சகோதரனுக்கு நான் ஆயிரம் வெள்ளி காசு தருகிறேன். இதை கொண்டு நீங்கள் வாழுங்கள்" என்றான்.




பார்வோன் (Pharaoh/Abimelech) தீர்க்கதரிசி ஆபிரகாமை பார்த்து,
"இதோ என் நாடு, நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம்" என்றான்.

தீர்க்கதரிசி "ஆபிரகாம்" வென்றார்.

திருவாசகம், ஆத்திச்சூடி போன்ற நூல்களில் கூட காண முடியாத தத்துவங்கள், இந்த நிகழ்ச்சியில் உள்ளது.

https://www.sefaria.org/Genesis.21?lang=bi

தெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது ? காரணம் என்ன? தெரிந்து கொள்வோமே

ஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள்?



ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது ?
உலகையே படைத்த தெய்வம் ஸ்ரீமந் நாராயணன், பூமியில் அவதாரங்கள் செய்தார்.
சிவன், அவதாரம் என்று செய்யாவிட்டாலும், திருவிளையாடல் என்று அவ்வப்போது பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
ஸ்ரீமந் நாராயணன், தன் ராம அவதாரத்தை போல ஒரு அவதாரம் ரஷ்யாவிலோ, ஜப்பானிலோ செய்து இருக்கலாமே ?

அப்படி என்ன இந்த உலகை படைத்த தெய்வத்துக்கு, இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை பிரியம்?

இவருக்கு மட்டுமில்லை, இவரால் படைக்கப்பட்ட தேவர்களுக்கு கூட மனிதனாக பிறக்கும் படி சாபமோ, அல்லது தனக்கே ஆசை வந்தால் கூட இந்த பாரத மண்ணில் மட்டும் பிறக்க ஆசை ஆசைப்படுகின்றனர். ஏன்?
இந்திரனின் அம்சமான "அர்ஜுனன்",
சூரியனின் அம்சமான "கர்ணன்",
8 வசுக்களில் ஒருவர் அம்சமான "பீஷ்மர்",
எம தர்மன் அம்சமான "விதுரர்",
தர்ம தேவன் அம்சமான "யுதிஷ்டிரர்",
கலி புருஷன் அம்சமான "துரியோதனன்".
இப்படி அனைவரும் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே கால் பதிக்க விரும்புகின்றனர்?

ஒரு அவதாரம் அமெரிக்காவில் செய்தால் தான் என்ன ?


மனிதனுக்கு எந்த இடம் குளிர்ச்சியாக இருக்குமோ, செல்வம் அதிகமாக இருக்குமோ? அங்கு சென்று வாழ ஆசை வரும்.

மனிதர்களுக்கு மேல், சொர்க்க லோகத்தில் இருப்பவர்கள் - தேவர்கள்.
தேவர்களுக்கு மேல் ஜன மற்றும் தப லோகத்தில் இருப்பவர்கள் - ரிஷிகள்.
ரிஷிகளுக்கு மேல் சத்ய லோகத்தில் இருப்பவர் - ப்ரம்மா.

அனைவரையும் படைத்து உலகை தன் ஆளுமையில் நடத்துபவர் ஸ்ரீமந் நாராயணன். இவர் இருப்பதோ வைகுண்டம் என்ற பரமபதம்.

மனிதர்களுக்கு சில இடங்கள் ஒரு சில காரணங்களால் பிடிப்பது போல, நம்மை விட உயர்ந்த இவர்களுக்கு, சில காரணங்களினால் "பாரத மண்ணில்" மட்டுமே விருப்பம் உள்ளது.

பல காரணங்கள், அதில் ஒரு சில :
1. பதிவ்ரதைகள் (கற்புக்கு மதிப்பு கொடுக்கும் பெண்கள், கற்புள்ள பெண்கள்) இந்த பாரத மண்ணில் தான் பிறக்கின்றனர்.
இங்கு பிறக்கும் பெண்களுக்கே இந்த உணர்வு அதிகம் உள்ளது.
பாரத நாட்டில் பிறந்த ஒரு குடும்பம் பிற நாட்டில் குடி பெயர்ந்தால், ஒரு சில தலைமுறையில் அங்கு பிறப்பதாலேயே இந்த உணர்வை இழந்து காணப்படுகின்றனர்.



2. இறை நம்பிக்கையோடு தான் இந்த பாரத மண்ணில் அனைவரும் பிறக்கிறார்கள்.
நாத்தீகனுக்கும் இந்த இறை உணர்வு அதிகம் இருப்பதாலேயே எங்கே கடவுள்? காட்டு என்று புலம்புகிறான்.
இறைவன் உண்டு, ஆனால் உணர முடியவில்லையே என்று புலம்புபவனே "நாத்தீகன்".
இந்த கடவுள் இல்லை என்கிற வெறுப்பு உள்ள நாத்தீகன் கூட மற்ற நாட்டில் இல்லை.
கடவுள் உண்டா? என்று கேள்வி கேட்பவனே நாத்தீகன்.
அந்த உணர்வு கூட இல்லாதவர்களே மற்ற நாட்டில் பிறக்கின்றனர்.

நாத்தீகன் என்ன தான் குட்டிகரணம் அடித்து "கடவுள் இல்லை" என்று முயற்சி செய்தாலும், இந்த பாரத மண்ணில் பிறப்பவர்களின் இறை உணர்வை அழிக்க முடியவில்லை.
போதாக்குறைக்கு, நாதீகனுக்கு பிறக்கும் குழந்தையே இறை நம்பிக்கையோடு பிறந்து இவன் நாத்தீகத்திற்கு வெடி வைக்கிறது.

3. "கோவிலுக்கு வழிபாடு செய்ய வா", "புனித நூல் என்று நாங்கள் சொல்லும் இந்த புத்தகத்தை படி", "கேள்வி கேட்காதே" என்று அடிக்காத குறையாக வற்புறுத்துகிறது உருவாக்கப்பட்ட பொய் மதங்கள்.

இந்த மதங்கள் உருவான நாட்டில், யாருக்கும் இறை சிந்தனை இயற்கையாக இல்லை.
"இறைவன் இருக்கிறான்" என்று புலம்பாத குறையாக சொல்லி சொல்லி நம்ப வைக்க வேண்டி இருக்கிறது.

ஆனால், இந்த பாரத மண்ணில் பிறந்த ஒரு ஹிந்து, தவறி போய், கர்ம வினையால் இந்த பொய் மதத்தில் போய் சேர்ந்தால் கூட, இவன் அந்த தெய்வத்துக்கு செய்யும் வழிபாடு, நம்பிக்கை, ஈடுபாட்டை பார்த்தால், இந்த பொய் மதங்கள் உருவான இடத்தில் இருப்பவர்களையே ஆச்சர்யப்படுத்துகிறது.

"நம்மிடம் கூட இந்த ஈடுபாடு இல்லை, இவன் செய்யும் வழிபாடு நம்மையே விழுங்கி விடும் போல இருக்கிறதே" என்று வியக்கின்றனர்.
இதற்கு காரணம் அந்த பொய் மதங்கள் அல்ல.
இந்த பாரத மண்ணில் பிறந்தவன் என்பதாலேயே, அவன் உள்ளே இருக்கும் இறை உணர்வு, அது பொய் மதமாக இருந்தாலும் மிளிர்வது போல காட்டுகிறது.

பாரத மண்ணில் பிறந்த காரணத்திற்காகவே, இந்த இறை நம்பிக்கை இவனை தொத்திக்கொண்டு இருக்கிறது.


4. இறை உணர்வுடனேயே இங்கு பிறப்பவர்கள் அனைவரும் இருப்பதால், ஏழை முதல் பணக்காரன் வரை, கோவிலுக்கு செல்லாமலேயே, பகவத் கீதையோ, திருவாசகமோ படிக்காமல் இருந்தாலும்,
  • ஒழுக்கம் மீறி நடந்தால் தவறு, 
  • பொய் பேச கூடாது, 
  • மற்றவர் பொருள் மீது ஆசை கூடாது, 

என்று யாரும் சொல்லாமலேயே பொறாமை படாமல், அமைதியாக, இருப்பதை கொண்டு வாழ்கின்றனர்.

மற்ற நாட்டிலோ, ஏழையாக இருப்பவன், பணக்காரனை சமயம் கிடைத்தால் சுட்டு கொன்று விட கூட தயங்குவதில்லை.
இந்த பாரத மண்ணில் பிறந்த ஏழை, பணக்காரன் பக்கத்து நிலத்தில் பங்களா கட்டி இருந்தாலும், பொறாமை படுவதில்லை. 
மாறாக, "இவன் புண்ணியம் செய்து இருப்பான் போன ஜென்மத்தில்" என்று மற்றவர்க்கு சமாதானம் செய்வான்.
பாவம் செய்து பணம் சேர்த்தால் குடும்பத்தில் என்ன ஆபத்து வருமோ, அதனால் பாவ பணத்தை விட, ஏழையாக இருப்பதே மேல் என்று கூட சொல்லுவான் இந்த பாரத மண்ணில் பிறந்தவன்.

5. மற்ற நாட்டில் பிறந்தவன், எதை கண்டாலும் அதில் இறைவன் இருப்பதை உணர்வதில்லை.
இந்த பாரத மண்ணில் பிறந்தவன், உப்பு தண்ணீர், ஆற்று தண்ணீர் என்று சொல்லாமல், இதற்கு ஆதாரமான தேவதைகளை மனதில் நிறுத்தி, கங்கை, யமுனை, காவேரி என்று இந்த நீர் நமக்கு கிடைக்க காரணமான தேவதைகளுக்கு மரியாதை செய்கிறான்.
இயற்கையை தெய்வ படைப்பாக பார்த்த இவன், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தான்.

6. மற்ற நாடுகளில் தேடி பார்த்தால் மட்டுமே ஒரு மகான் கிடைப்பார். அதுவும் சந்தேகமே !.
இங்கோ,
காந்தி பிறந்தார். இவர் மட்டும் தானா? என்றால் ஊருக்கு ஒரு மகான். நன்றாக கவனித்தால் நம் தாத்தா, பாட்டி, மூதாதையர்கள் கூட மகான்களாக இறை உணர்வுடன் வாழ்ந்தனர் என்று தெரிய வரும்.
இந்த பாரத மண்ணின் விஷேஷமே இதற்கு காரணம்.

7. இந்த பாரத மண்ணில் பிறந்தவனுக்கு, எதை கற்றுக்கொண்டாலும், அதன் மூலமாக இறைவனுக்கு தொண்டு செய்ய முடியுமா? என்று தோன்றும்.

சிற்பத்தில் திறன் உள்ளவன்,
கட்டிடங்கள் கட்டும் திறன் உள்ளவன்,
அரசன் உள்பட அனைவரும் இதே உணர்வுடன் தான் இருந்தனர்.
அரசர்கள் கட்டியுள்ள கோவில்களும், அதன் கட்டிட அமைப்பும், அதில் உள்ள சிற்பங்களும் போதுமான சான்று.
இந்த பாரத மண்ணில் பிறந்தவனுக்கு இறை உணர்வுடன் தான் எந்த வேலையும் நடக்கும்.

8. இந்த பாரத தேசம் மற்ற சில நாட்டை விட பரப்பளவில் சிறியது.
ஆனாலும், இங்கு பிறந்த காரணத்தினாலேயே இவர்கள் அறிவாளிகளாக பிறக்கின்றனர். 

அத்தனை பெரிய பெரிய நாடுகளில், பேசும் மொழியோ "ஒன்று" அல்லது "இரண்டு". இவர்கள் அறிவு இவ்வளவு தான்.



ஆனால் இந்த பாரத மண்ணிலோ,
நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள். 
பல வித நாகரீக உடைகள். 
மொழிகள் என்றால் வெறும் காட்டுமிராண்டி பாஷை இல்லை. இலக்கணம் பொருந்திய மொழிகள்.
இலக்கணத்தோடு மொழியை ஒரு மடையன் உருவாக்க முடியுமா?

இதை விட ஆச்சர்யம்,
பூமியில் வாழும் நாம், பூமிக்கும் மேல் உள்ள புவர் என்ற நக்ஷத்திர லோகம் தாண்டி, சொர்க்க லோகம், ஜன, தப, சத்ய லோகத்தில் பேசப்படும் சமஸ்க்ருதத்தை கண்டுபிடித்து அதன் பொருளையும் அறிந்து, அதன் மூலமாக
  • ப்ரம்மா யார்? 
  • முழு முதற் கடவுளான அந்த ஸ்ரீமந் நாராயணன் யார்? 
  • தேவர்கள் யார்? 
  • நாம் யார்? 
  • ஏன் பிறந்தோம்? 
  • நம் கடமை என்ன? 

என்று பல கேள்விகளுக்கு விடையை கண்டுபிடித்து, அதை அந்த அந்த ஊரில் பிறந்த மகான்கள், தமிழில், கன்னடத்தில், ஹிந்தியில், தெலுங்கில் காவியங்கள் போன்றும், கீர்த்தனைகள் போன்றும் தந்தனர் என்று பார்க்கிறோம்.

இந்த எந்த வித ஆச்சர்யங்களும் இல்லாது, தன் வயிற்றை நிறைக்கும் வழி என்ன? என்று மட்டுமே பார்க்கும் மனிதர்களே பொதுவாக பிற நாட்டில் பிறக்கின்றனர்.

இப்படி பல காரணங்களினால், தேவர்கள், பாரத மண்ணையே விரும்புகின்றனர்.
நாராயணன் தன் அம்சமாக இந்த உலகத்தில் அவதாரம் செய்ய நினைத்தால் கூட, இந்த பாரத மண்ணில் பிறக்கவே ஆசைப்படுகிறார்.

இறை உணர்வு அதிகம் உள்ளவர்கள் பிறப்பதாலேயே, தேவர்கள் முதல் நாராயணன் வரை இவர்கள் அவதாரம் இந்த பாரத மண்ணிலேயே நடக்கிறது.

மற்ற நாடுகளில், மூலைக்கு மூலை இறை உணர்வு இல்லாது, உலகத்தில் உள்ள அனைத்தும் தான் அனுபவிக்கவே என்ற சுயநல உணர்வுடன் பிறக்கின்றனர்.

இந்த பாரத மண்ணில் மட்டும் தான், மூலைக்கு மூலை மகான்கள் பிறக்கின்றனர்.
கடல் போன்ற மகான்கள் கூட்டத்தில், ஒரு சில துளி மகான்கள் பெயர்கள் இப்போது நம் நினைவில் செலுத்தலாம்.
  • காஞ்சி மகா பெரியவர், 
  • காந்தி, 
  • பாரதியார், 
  • விவேகானந்தர், 
  • ராமகிருஷ்ணர், 
  • தியாகராஜர், 
  • விஜய தாசர், 
  • பத்ராச்சல ராமதாசர், 
  • ஸ்ரீ ராகவேந்திரர், 
  • துக்காராம், 
  • ஸமர்த்த ராமதாசர், 
  • துளசி தாசர், 
  • கனக தாசர், 
  • புரந்தர தாசர், 
  • சுரதாசர், 
  • கபீர் தாசர், 
  • ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், 
  • வல்லபாச்சாரியார், 
  • மணவாள மாமுனிகள், 
  • நரசிம்ஹ மேதா, 
  • நாம தேவர், 
  • மத்வாச்சாரியார், 
  • ஜயதேவர், 
  • ஸ்ரீ ராமானுஜர், 
  • நாதமுனி, 
  • ஆதி சங்கரர்,
  • நாயன்மார்கள், 
  • ஆழ்வார்கள்..... 
  • வள்ளுவர்
  • வள்ளலார்
  • திருமூலர்
  • சித்தர்கள்




இன்னும் கோடி மகான்கள் இந்த பாரத மண்ணில் உதித்தவர்கள்.

இந்த மண்ணில் பிறக்க தேவர்களும் ஆசைபடும் காரணம் புரிந்தால், இந்த மண்ணில் நாம் புழுவாகவோ, நரியாகவோ, பிறக்காமல், குருடனாகவோ, நொண்டியாகவோ பிறந்து விடாமல்,
அதற்கும் மேல், பாரத மண்ணில் பொய் மத குடும்பத்தில் பிறக்காமல், ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, பிறந்த இடமோ, வாழும் ஊரோ திவ்ய க்ஷேத்திரமாகவும் இருந்து இருந்தால், நாம் செய்த புண்ணியம் தானாகவே நமக்கே புரியும்.

ஹிந்துவாய் பிறப்பதே புண்ணியம்.
பாரத மண்ணில் ஹிந்துவாய் பிறப்பது தேவர்களே பொறாமைப்பட வைக்கும் மகா புண்ணியம்.



Sandhyavandanam Afternoon tamil - Hear and understand meaning of each sloka

Sandhyavandanam Evening tamil - Hear and understand meaning of each sloka



Sandhyavandanam Morning tamil - Hear and understand meaning of each sloka