Followers

Search Here...

Monday 30 April 2018

வாலிகர்கள் யார்? ம்லேச்சன் யார்? கர்ணனுக்கும், சல்லியனுக்கும் நடந்த விவாதம்

மஹாபாரத சமயத்தில் ம்லேச்சர்கள், வாலிகர்கள் என்று சிலரை குறிப்பிடுகின்றனர்.
இவர்கள் யார்?



சத்ய யுகம், த்ரேதா யுகம் வரை சனாதன தர்மம் மட்டுமே (இன்று முகலாயர்கள் வைத்த பெயர் "ஹிந்து") உலகம் முழுவதும் இருந்தது.
"சகர' சக்கரவர்த்தி அஸ்வமேத யாக குதிரையை கபில ரிஷி எடுத்து விட்டார் என்று தவறாக புரிந்து கொண்டு, தன் 60000 புத்திரர்களை அனுப்பினார்.
எதிர்க்க வந்த அனைவரும் தீயில் பொசுங்கினர்.

கபிலர் இருந்த அந்த இடம் "கலிபோர்னியா" என்று சொல்லப்படுகிறது. பொசுங்கி சாம்பலாக போனார்கள் என்று சொல்லும் சரித்திரத்தை ஒத்து, கலிபோர்னியா அருகில் Ashland என்ற பெயருடன் இன்றும் பெயர் அளவில் உள்ளது.

சத்ய யுகத்தில் நடந்த இந்த சரித்திரம்.
இதற்கு பின்,
பகீரதன் சொர்க்க லோகத்தில் இருந்து கங்கையை கொண்டு வந்தான்.

கங்கை பாரத பூமியான இமயமலைக்கு வர சம்மதிக்க, அந்த ஜலத்தை கொண்டு, இறந்த தன் முன்னோர்களுக்கு நற்கதி கிடைக்க செய்தார்.

கங்கை பாரத பூமிக்கு வரும் முன் நடந்த நிகழ்வு என்றால், காலத்தால் கணிக்க முடியாத சரித்திரமாக உள்ளது.
கங்கை பூமிக்கு வந்த சரித்திரம் அறிய
https://www.proudhindudharma.com/2017/12/GangaStory.html படிக்கவும்.

துவாபர யுக சமயத்தில் ஈரான் தாண்டி, வெகுவாக சனாதன தர்மத்தில் இருந்து விலகி, தனக்கு தோன்றிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.


பல தலைமுறைகள் செல்ல, ஒரு சமயத்தில், இவர்கள் முழுவதுமாக சனாதன தர்மத்தை மறந்து தான் தோன்றியாக, வாழ ஆரம்பித்தனர்.
இவர்கள் வாழும் பூமியும் ம்லேச்ச பூமியாக கருதப்பட்டது.

மஹாபாரத சமயத்தில் பாண்டவர்கள், கௌரவர்கள் போர் செய்த போது, பெரும்பான்மையான ம்லேச்ச படைகள் கௌரவர்கள் பக்கம் சேர்ந்து போரிட்டனர் என்று பார்க்கிறோம்.

மஹாபாரதம் நடந்த சமயத்தில், இஸ்லாம் என்ற மதமோ, கிறிஸ்தவ என்ற மதமோ, பௌத்த என்ற மதமோ, ஜைன என்ற மதமோ உருவாக்கப்படாத காலம்.

மஹாபாரதம் துவாபர யுக முடிவில் நிகழ்ந்தது.
சுமார் 3000BCல் என்று சொல்லலாம்.
3102BC முதல் கலியுகம் தொடங்கியது.

வாலிகர்கள் யார்?
வேத மார்க்கத்தை மீறி, சனாதன (ஹிந்து) குடும்பத்தில் பிறந்தும், நாத்தீக பேச்சு பேசியும், வேத மார்க்கத்தில் சொன்ன தர்மத்தை புரிந்து கொள்லாமல்  எதிர்ப்பவர்களை பொதுவாக, "வாலிகர்கள்" என்று குறிப்பிட்டனர்.



ம்லேச்சன் யார்?
வேத மார்க்க பரம்பரையில் இருந்து பல பரம்பரையாக விலகியவர்கள், சனாதன தர்மம் தெரியாத, அதில் உள்ள தர்மம்-அதர்மம் தெரியாத தனக்கு தோன்றிய வழியில், தனக்கு தோன்றிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, தானே ஒரு இல்லாத தெய்வத்தை உருவாக்கி குருட்டு வழிபாடு செய்பவர்களை "ம்லேச்சன்" என்று குறிப்பிட்டனர்.

இன்றைய நிலையில், ம்லேச்சன் என்பவன் அமெரிக்கா, பிரிட்டன், அரேபிய, ஜப்பான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருக்கும் நம் ஹிந்து கலாச்சாரத்தை அறியாதவர்கள் என்று சொல்லலாம்.

இவர்களுக்கு ஹிந்துக்கள் கலாச்சாரம் மிக்கவர்கள் என்ற ஞானம் உண்டு. அறிவாளிகள், விருந்தோம்பல், குடும்ப கலாச்சாரம் கொண்டவர்கள் ஹிந்துக்கள் என்ற  பொதுவான மரியாதை உண்டு.
இன்று,
இவர்களோடு "ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ்" போன்ற பாரத தேசமாக இருந்த பூமியும் ம்லேச்ச தேசமாகிவிட்டது.

இன்றைய நிலையில்,
வாலீகர்கள் என்றால், 947AD வரை, பாரத பூமியாக இருந்த ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாட்டில், ஹிந்து குடும்பத்தில் பிறந்து, அதில் இருந்து விலகி, இன்று தன்னை வேறு மதத்தினராக நினைத்து வாழ்பவர்களுக்கு, இந்தியாவிலேயே பார்க்க ஹிந்து போன்ற நிறத்தை கொண்டு, நாத்தீகம் பேசிக்கொண்டும், வேறு மதத்தில் புகுந்து கொண்டும் இன்று ஹிந்துக்களையே எதிர்ப்பவர்கள், அனைவரும் வாலீகர்கள் என்று அறியலாம்.
இந்தியாவில் பிறந்து, வேற்று மதத்திற்கு மாறியவர்கள் என்று அனைவருமே வாலீகர்கள் என்று அறியலாம்.

ம்லேச்சனை விட, மிக ஆபத்தானவர்கள் வாலீகர்கள்.
மதம் மாறியதாலும், ஹிந்துக்கள் மீது இவர்களுக்கு ஊட்டப்படும் வெறுப்பும் மிக ஆபத்தானது.

மஹாபாரதத்தில் நாரத முனி, வியாச பகவானை பார்த்து,
"வேத சாஸ்திரம் சொன்னபடி வாழாத, அதற்கு நேர் மாறாக வாழும் வாலீகர்கள், உலகத்திற்கே களங்கம்/கறை போன்றவர்கள்.
இந்த கறை இல்லாத போது,
உலகம் தானே ப்ரகாசிக்கும்." என்று சொல்கிறார்.

ஒரு ஹிந்துவை பார்த்து, "நீ ஒரு வாலீகன்" என்று சொன்னால், அந்த காலத்தில் அதை அவமானமாக கருதினர்.

அதாவது, "ஹிந்துவாக பிறந்தும், ஹிந்துவுக்கு விரோதியாக நடப்பவன், ஹிந்து தர்மம் என்று மதிக்கும் விஷயங்களை எதிர்ப்பவன்" என்பது போன்ற அர்த்தம்.

கர்ணனுக்கும், சல்லியனுக்கும் இந்த விஷயத்தில் தான் வாக்குவாதம் நடந்தது.
சனாதன தர்மத்தில் இருந்த சல்லியனை "வாலீகர்களை ஆட்சி செய்பவன்" என்று கர்ணன் பேசினான்.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் (west bengal) கர்ணன் தலைமை ஏற்றான்.

கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - சல்லியன் (Punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார்.
இது சல்லியனை அவமான படுத்துவதாக இருந்தது. இருந்தாலும் சம்மதித்தார்.

போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்தினான்.
த்ரிதராஷ்டிரனை காண வந்திருந்த வேத ப்ராம்மணர்கள், யாகம் செய்ய இடம் கேட்க, மாத்ர தேச அரசனை உதவி செய்ய சொல்ல,
வேதம் கற்ற ப்ராம்மணர்கள்,
'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறி உதவியை மறுத்து விட்டனர்.
இதை நினைவு கூறி, "நீ அந்த தேச அரசன் தானே" என்றான்.



வேத மார்க்க வழியில் நடப்பவனை, "நீ ஒரு வாலிகன்" என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.
சல்லியன் பெரும் அவமானம் கொண்டார்.
இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை விட்டு இறங்கி சென்று விட்டார்.
அங்க அரசன், கர்ணன் அர்ஜுனன் பொழிந்த அம்பு மழையில் மடிந்தான்.

இன்றைய West Bengal, பங்களாதேஷ் (Bangladesh) 3000BCல் மஹாபாரத சமயத்தில் எப்படி இருந்தது?
மேலும் தெரிந்து கொள்ள,
https://www.proudhindudharma.com/2017/12/west-bengal-bangladesh.html படிக்கவும்.



Saturday 28 April 2018

தமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 80 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள்.



*'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வந்து பார்'*, என்று பெருமைப்பட சொல்லும் மதுரைக்காரன், தன் ஆயுளில் மறக்க கூடாத சில பெயர்கள் உண்டு.
1. *அலாவுதீன் கில்ஜி*
2. அவன் படைத்தளபதி *மாலிக் காபுர்* என்ற *மாணிக்* (இஸ்லாமியனான ஹிந்து)
3. கில்ஜிக்கு பிறகு வந்த *முகமது பின் துக்ளக்*
4. மிக முக்கியமாக, *முகமது கியாசுத்தின்*
5. இன்றைய தேதியில் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாண தேர் ஒடுவதற்கும், ஹிந்துக்கள் இருக்கவும் காரணமான, தமிழ் தேசத்தை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர அரசர் *கம்பண்ணா*.

சுமார் 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜியின் படை தளபதி "மாலிக் காபுர்" செருப்பு கால்களுடன், தன் ஒரு லட்ச இஸ்லாமிய படையுடன் நம் மீனாட்சி கோவிலில் புகுந்து, போலியாக வைத்திருந்த சிவ லிங்கத்தை இடித்து தள்ளி விட்டான்.

இன்றும் அந்த லிங்கம் 1311ல் நடந்த கதை சொலகிறது. போய் பார்க்கலாம்.

1311ADல் மீனாட்சி கோவில் மூடப்பட்டு, இனி ஹிந்துக்கள் தலை தூக்க முடியுமா? என்ற நிலையில் இருந்தது நம் மதுரை.

1340ல், டில்லியை ஆண்டு கொண்டிருந்த, "முகமது பின் துக்ளக்" ஆணைப்படி, மதுரை வாஜிராக இருந்த "ஜலாலுத்தின் ஹசன்"னிடம் வேலை செய்த "முகம்மது கியாசுதின்" என்பவன், ஜலாலுத்தின், மற்றும் அவன் மகன், மருமகன் அனைவரையும் கொன்று, தான் மதுரை சுல்தான் என்று ஆகி விட்டான்.

1340ல் ஆட்சி செய்ய ஆரம்பித்த *முகம்மது கியாசுதின்* மதுரை முதல் திருச்சி வரை பரவி இருந்த பாண்டிய தேசத்தில் இருந்த ஹிந்துக்களை வெட்டி தள்ளினான்.
1311 முதல் 1371 வரை, தமிழர்கள் எண்ணிப்பார்க்க முடியாத அழிவை சந்தித்தனர். பாண்டிய அரசாட்சி, சோழ அரசாட்சி போன்றவை அஸ்தமித்த காலம். உண்மையான தமிழர்கள் இருந்த காலம்.

சுமார் 60 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் எத்தனை கொடுமைகள்? என்று நாம் சிந்திக்கும் போதுதான்,
இரான் முதல் தெலுங்கு கன்னட தேசம் வரை 1000 வருடங்கள் இஸ்லாமியர்கள் புகுந்து என்ன அட்டகாசம் செய்து இருப்பார்கள்? என்று புரிந்து கொள்ள முடியும்.

ஏன் தமிழகத்தில் உள்ள கோவில்கள் போல மற்ற மாநிலங்களில் இல்லை? என்ற காரணமும் புரியும்.


60 வருடத்திலேயே தமிழகத்தை இத்தனை சேதப்படுத்த முடியும் என்றால், 1000 வருட ஆக்கிரமிப்பில் கோவில்கள் நிறைந்த இந்த பாரத பூமியை தரை மட்டம் ஆக்கி, இஸ்லாமிய நாடாக ஆக்க பெரும் முயற்சி செய்தனர் என்ற காரணமும் புரியும்.

1000 வருட ஆக்கிரமிப்பில், இரான், ஆப்கான், பாகிஸ்தான்,  பங்களாதேஷ் போன்ற பாரத தேசத்தில் இருந்த இடங்களை இஸ்லாமிய நாடாக மாற்றிவிட்டனர் என்பது வேதனைக்கு உரியது.

70 வருடத்தில் சிக்கிய தமிழகத்தை மேலும் அழிவில் வீழ்ந்து விடாமல், கும்பகோணம் போன்ற தேசங்களுக்குள் கால் பாதிக்க விடாமல் தடுத்தது யார்? தமிழனை காப்பாற்றியது யார்? 

மதுரை சுல்தானாக இருந்த "முகம்மது கியாசுதின்" (1340-1343) என்ன செய்தான்?
முகம்மது கியாசுதின் மதுரையை ஆண்ட காலத்தில், "இபின் படூடா" (ibn Battuda) தங்கி இருந்த போது,
மதுரையில் ஹிந்துக்கள் என்ன நிலைக்கு ஆகினர்? என்று விளக்கி இருக்கிறான்.

1.
மரங்கள் வெட்டப்பட்டு, அந்த இடங்களில், கைது செய்யப்பட்ட ஹிந்துக்கள், வரிசையாக நான்கு gate வழியாக அனுப்பப்பட்டு வரிசையாக தலை சீவபட்டார்கள்.
இவர்களோடு கைது செய்யப்பட்ட இவர்களின் மனைவிகளும் கொலை செய்யப்பட்டு, இவர்களின் தலை முடியை கொண்டு பிணங்களை இணைத்து கீழே போட்டனர்.
பால் குடிக்கும் குழந்தைகளை வெட்டி தூக்கி எறிந்தனர்.
இது போன்று, மறுபடியும் வேறொரு காட்டில் மரங்களை வெட்டி, அந்த இடங்களில் இதே போன்று ஹிந்துக்கள் கொத்து கொத்தாக தலை சீவப்பட்டனர்.

இது போன்ற கீழ் தரமான செயலை பார்த்ததில் நான் அவமானப் படுகிறேன். அப்படி ஒரு தண்டனைக்கான குற்றத்தை இந்த ஹிந்துக்கள் செய்யவில்லை. இந்த காரணத்தால் தானோ, கடவுள் (அல்லா) இவனின் ஆயுளை முடித்து விட்டானோ?

மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
2.
ஒரு நாள், நானும், முகமது கியாசுதினும் உணவு உண்ணும் சமயத்தில், ஒரு ஹிந்துவை, அவன் மனைவி மற்றும் 7 வயது மதிக்க தக்க ஒரு சிறுவனை கைதியாக இழுத்து வந்தனர் காவலாளிகள்.
மதுரை சுல்தான் "முகமது கியாசுதின்" தன் கைகளை அசைத்து நின்று கொண்டிருந்த அந்த ஹிந்துவின் தலையை வெட்ட சைகை செய்தான். மேலும் காவலாளிகளை பார்த்து, அரேபிய மொழியில், 'அவன் மனைவியும், மகனையும் சேர்த்து' என்று சொன்னான்.
உடனே அந்த ஹிந்துவின் தலை வெட்டப்பட்டது. இதை பார்க்க கூடாது என்று நான் கண்ணை மூடிக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து பார்த்த போது 3 தலைகளும் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தது.

மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
3.
இன்னொரு சமயம், நான் மதுரை சுல்தான் "முகமது கியாசுதினுடன்" இருந்த போது, ஒரு ஹிந்து இழுத்து வரப்பட்டான். அவன் மொழியில் ஏதோ பேசினான். எனக்கு புரியவில்லை. உடனே சுல்தானின் காவலாளிகள் தங்கள் ஈட்டிகளை அந்த ஹிந்துவை நோக்கி கொலை செய்ய சென்றார்கள்.
நான் ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை உணர்ந்து வெளியே சென்று விட எழுந்தேன்.
என்னிடம் மதுரை சுல்தான், "எங்கே போகிறீர்கள், இபின் படூடா?" என்றான்.
நான், தொழுகைக்கு நேரம் ஆகி விட்டது. நான் சென்று விட்டு வருகிறேன்" என்று சொல்லி நகர்ந்து விட்டேன்.
என் காரணத்தை புரிந்து கொண்டு சிரித்து கொண்டே, அந்த ஹிந்துவின் கை மற்றும் காலை வெட்ட சொன்னான் சுல்தான். நான் சென்று, பிறகு வந்த போது, அந்த ஹிந்துவின் உடல் ரத்தத்தில் மிதந்து கொண்டு இருந்தது.


மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
4.
நான் மதுரையை அடைந்த போது, தூக்கி வீசப்பட்ட பிணங்களால் உருவான, எங்கும் நோய் பரவி இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் அதிக பட்சம் 2 அல்லது 3 நாட்களில் இறந்தனர்.

நான் மதுரையை விட்டு செல்லும் போது, பொதுவாக அனைத்து ஹிந்துக்களும் நோய்வாய்ப்பட்டு இருந்தனர் அல்லது இறந்திருந்தனர்.


இப்படி 60 ஆண்டுகள் மதுரை சுல்தான் ஆட்சியில் அனுமானிக்க முடியாத துன்பத்தை நம் பாட்டனார்கள் அனுபவித்தனர்.

தமிழ் தேசத்தை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர அரசர் புக்கராயர்  மகன்"*கம்பண்ணா*" காப்பாற்றினார்.

தமிழனை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர பேரரசன் காப்பாற்றினான்.

1371ல் கம்பண்ணா மதுரை சுல்தானை விரட்டி, விஜயநகர சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவி, மூடிய கோவிலை திறந்து ஹிந்துக்கள் வாழ வழி வகுத்தார்.
அதே வருடம் மூடப்பட்டு இருந்த ஸ்ரீ ரங்ககோவிலும் திறக்கப்பட்டு, மீண்டும் ஹிந்துக்கள் தலை நிமிர்ந்தனர்.

இனி இஸ்லாமியர்கள் நுழையா வண்ணம், 1378ல் மதுரையை விஜயநகர பேரரசு கைப்பற்றி, இரண்டாம் ஹரிஹர அரசரால், ஹிந்துக்களை வாழ வைத்தது.
தமிழகம் 1000 வருட ஆக்கிரமிப்பில், பெரும்பாலும் விஜயநகர ஆட்சியின் பாதுகாப்பில் தப்பித்தது.
இந்த 60 ஆண்டு காலத்தில் கத்தி முனையில், கற்பழிப்பில் மதம் மாறி இஸ்லாமியர்களாக போனவர்கள் இன்றும் இஸ்லாமியர்களாகவே உள்ளனர் என்பது வேதனைக்குரியது.

கம்பண்ணாவின் மனைவி சொல்கிறாள்.
கம்பண்ணாவின் வெற்றியை "மதுரை விஜயம்" என்ற தொகுப்பில், அவர் மனைவி "கங்காதேவி" சொல்கிறாள்,
1.
மதுரை தேசத்திற்கு வந்த சோதனையை நினைத்து மனம் தாங்க முடியாத வேதனை அடைகிறது. பார்க்கும் இடமெல்லாம் வளர்ந்து இருந்த தென்னை மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு, அந்த இடங்களில் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, ஹிந்துக்கள் தலைகள் சொருகப் பட்டு இருந்தன.
மேலும் சொல்கிறாள்
2.
மதுரை பெரு வீதிகளில் சுமங்கலியான பெண்களின் வளையல் சத்தமும், சிரிப்பும் நிறைந்த காலம் போய், இன்று கோவிலை காத்த வேத ப்ராம்மணர்களை தலையை பிடித்து இழுத்து சென்று இரும்பு சுவரில் மோதிய அலறல் சத்தமும், ரத்தமும் கிடக்கிறது.
மேலும் சொல்கிறாள்
3. தாமிரபரணி ஆற்றில் பெண்கள் சந்தனம் மற்றும் மஞ்சள் தேய்த்து குளித்து, சந்தன நறுமணத்துடன் மங்களமாக ஓடிய நதியில் இன்று மாட்டு இறைச்சி உண்ணும் இவர்களால், வெட்டப்பட்ட மாட்டின் ரத்தம், தாமிரபரணி ஆற்றை சிவப்பாக ஆக்கி இருந்தது.
மேலும் சொல்கிறாள்,
4. வீரமும், தைரியமும் உள்ள அரசரே !!
இனியும் தாமதம் செய்யாமல், மூன்று உலகத்திலும் சேர்த்து ஏற்படும் துன்பத்தை ஒரு சேர அனுபவிக்கும் நம் தேசத்து மக்களை காக்க, அந்த துஷ்டர்களை வேரோடு அழியுங்கள். வெற்றியின் அடையாளமாக 100 தூண்களை ராம சேதுவில் கட்டுங்கள்.

இப்படி வெற்றி முழக்கம் இட்டு, தெலுங்கு தேசத்தில் பிறந்து, கர்நாடக தேசத்தில் ஹம்பியை தலைநகராக கொண்ட விஜயநகர அரசன், ஹிந்துக்கள் தமிழ் நாட்டில் வாழ வைத்தான்.

மதுரைக்காரனும், பாண்டிய தேசத்தில் இருந்த அனைத்து மக்களும், ஹிந்துக்களாக இன்றும் இருக்க, ஒரு வீர ஹிந்து கர்நாடகத்தில் இருந்து தான் கிடைத்தான்.
நன்றி மறவாமல் இருப்போம்.









Thursday 26 April 2018

திருமண சடங்குகளில் ஏன் மாலை மாற்றிக்கொள்கிறார்கள், கை பிடித்து கொள்கிறார்கள், காலை தொட்டுக்கொள்கிறார்கள், எச்சில் தட்டில் சாப்பிடுகிறார்கள்? பழக்கத்தில் நமக்கு இருந்த சிந்தனையை எண்ணி பார்க்க வேண்டும்

ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும்.

பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் உணவில் கூட
சாத்வீக குணத்தை கொடுக்கும் உணவு,
ராஜஸ குணத்தை கொடுக்கும் உணவு,
தாமஸ குணத்தை கொடுக்கும் உணவு உண்டு என்கிறார்.

அது போல,
ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ,
துணி மணியை உபயோகித்தாலோ ,
ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ,
ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ,
ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ,
ஒருவர் உள்ளங்கையை  இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ,
அவர்கள் குணம் வாசனைகளாக நமக்கு வரும்.

திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும்,
சண்டை போட கூடாது என்றால், இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும், வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும்.

அதற்கு தான் திருமண சடங்குகளில்,
ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல், 
ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல்,
இருவர் உள்ளங்கையயும் சேர்த்து பணிகிரஹணம் என்று பிடித்தல்,
ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல்,
ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல்,
என்று இருவருடைய வாசனைகள், குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர்.

அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்போனால், சண்டைகள் குறைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பதே காரணம்.




இதனால் தான் சாஸ்திரங்கள்,
மஹான்கள் /பக்தர்கள் சாப்பிட்ட எச்சிலை சாப்பிடு,
அவர்களுக்கு கால் பிடித்து விடு,
அவர்கள் உடுத்திய வஸ்திரத்தை நீ வாங்கிக்கொள்,
அவர்களுக்கு போட்ட பூமாலையை நீ போட்டு கொள்,
அவர்கள் கால் பட்ட மண்ணை தலையில் போட்டு கொள்
என்றெல்லாம் சொல்வதற்கு காரணமும் இதுவே .

அப்படியாவது அவர்களிடம் உள்ள தெய்வீககுணங்களில், வாசனைகளில் கொஞ்சமாவது அழுக்கு படிந்த நமக்கு தப்பி தவறி வந்து விடாதா?? என்ற காரணமே.




இன்றைய அறிவாளிகள் கூட, "The people to whom you Associate, influence your Behaviour" என்கிறார்கள்.
இது போன்ற விஷயங்களை சர்வ சாதாரணமாக பழக்கத்தில் கொண்டு இருந்தோம், இருக்கிறோம், ஹிந்துக்களாகிய நாம்.

கோயில்களில் இறைவனுக்கு சாத்திய புஷ்பங்கள், வஸ்திரங்கள் பிரசாதங்கள் நமக்கு கொடுக்கும் காரணமும் இதுவே.
அந்த தெய்வத்தின் குணங்கள் நமக்கும் சேரட்டும் என்ற காரணமே.

எனவே ஆபீஸிலோ, வெளி இடங்களிலோ ஒருவருடன் ஒருவர் பழகும் போது, இவைகளை நாம் செய்யாதிருத்தல் நமக்கு நல்லது.

FRIENDSHIP வேறு, சுத்தமாக இருத்தல் வேறு.
இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாமல் பழகவேண்டும் .

உபநிஷதுகளில் மிக பெரிய தவங்கள் செய்த ஒரு மகரிஷி, இன்னொருவர் செருப்பை போட்டு கொண்டதினால் இன்னொரு பிறவி எடுத்தார்.

பரதன் என்ற ராஜரிஷி, ஒரு மானிடம் பழகி, அந்த மானை நினைத்தே உயிரை விட்டு, மானாக அடுத்த ஜென்மம் எடுத்து விட்டார்.

சாதாரண குலத்தில் பிறந்து, சிறுவனாக இருக்கும் பொழுது, அவர்கள் ஊருக்கு சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க வந்த ரிஷிகளுக்கு உதவியாக இருந்து, அவர்கள் சாப்பிட்ட பின், விளையாட்டாக ரிஷிகள் சாப்பிட்ட எச்சில் பிரசாதத்தை அந்த சிறுவன் உட்கொண்டு வந்ததற்கே, ரிஷிகள் இவனது அன்பை பார்த்து, பகவான் அணுகிரஹம் கிடைக்க ஆசீர்வதிக்க, 
அடுத்த பிறவியாக "நாரத மகரிஷி" ஆகி, ப்ரம்மாவுக்கே மானஸ புத்ரர்
ஆகிவிட்டார்.

இது போல, எண்ணற்ற உதாரணங்கள் நமது சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளது .

தண்ணீருக்கு இந்த வாசனைகளை போக்கும் சக்தி உண்டு.

அதனால் தான் ரிஷிகள், ஒரு கமண்டலுவில் அருகில் தண்ணீர் வைத்து கொள்வார்கள்.

ஒரு திருடனின் வாசனையை மோப்பம் பிடிக்கும் நாய்,
தொடர்ந்து சென்று அவன் போகும் பாதையை கண்டுபிடிக்கிறது.
ஆனால் அவன் ஒரு நீர் நிலையை தாண்டிவிட்டால், அந்த நாயினால் அவனுடைய வாசனைகளை கண்டுபிடிக்க முடிவதில்லை.

தண்ணீருக்கு அத்தனை சக்தி உண்டு.

அதனால் தான், பெரியோர்கள், மஹான்கள் அடிக்கடி குளித்து கொண்டே இருக்கின்றனர்.

எனவே சுத்தமாக தொட்டு தொட்டு கலந்து பழகாமல் இருக்க முடியவில்லை என்றாலும், அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பது தவறு ஏதும் இல்லை.

நமக்கு மற்றவர்களிடம் இருந்து வரும் கெட்ட வாசனைகளில், குணங்களை கொஞ்சமாவது குறைக்க செய்யலாம்.

நல்ல ஆத்மாக்களின் ஸ்பரிசம் நமக்கு பாக்கியத்தை தரும்.
பெருமாளின் காலில் பட்டு, கொடுத்த பூவும், நமக்கு பாக்கியத்தை தரும்.
கோவில் செல்வதும் பாக்கியத்தை தரும்.

கம்பீர புருஷனான ஸ்ரீ ராமர், ஹனுமனை குரங்கு ஜாதி என்று கூட பார்க்காமல், ஆத்மாவின் தூய்மையை பார்த்த ஸ்ரீ ராமர், 
தனக்காக கடல் கடந்து போய் சீதையை கண்டுபிடித்து சொல்ல, 
தன் திவ்ய ஸ்பரிசத்தை ஹனுமான் அனுபவிக்க, அவரை தழுவிக்கொண்டார்.

பரவாசுதேவன் தொட்டால் என்ன பரவசம் ஏற்படும்? என்பது ஹனுமனின் கண்களை கேட்டால் தான் தெரியும்.

நன்றாக நினைவில் கொள்ளுங்கள், ஒருவரிடம் நாம் மிகவும் நெருக்கமானவராக காட்டி கொள்வதற்காக,
வித்யாசம் பார்க்கவில்லை என்பதை காட்டிக்கொள்வதற்காக,
நம் சுத்தத்தை விட்டு கொடுத்து,
எச்சிலை சாப்பிட்டு,
தொட்டு தொட்டு பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

சுத்தம் வேறு, ஒருவரிடம் அன்பாக பழகுவது என்பது வேறு.

பாரத மக்கள், பொதுவாக யாரையையும் தொட்டு பழகுவதில்லை.
நமஸ்கரிப்பதும், கை கூப்பி வணங்குவதும் இதன் காரணமாக தான்.

சகோதரன், சகோதரி ஒரு வயதுக்கு மேல் தொட்டு பேசுவதில்லை.
கணவன் மனைவி உறவில் கூட, ஒரு கட்டுப்பாடு இருந்தது.

ஞானத்தை, மோக்ஷத்தை நோக்கியே நம் சனாதன தர்மம் நம்மை வழி நடத்துகிறது.

Association with people decides your behaviour என்று சொல்வது பாரத மக்களால் கவனமாக கடைப்பிடிக்கப்பட்ட பழக்கம்.

"துஷ்டனை கண்டால் தூர விலகு" என்று சொல்வதெல்லாம் பயத்தால் அல்ல, அவன் சம்பந்தம் கூட உன் மனதை கெடுத்து விடும் என்பதால் தான்.

'இப்படி மற்றவர்களிடம் உள்ள தீய குணங்கள் கூட, பழகுவதினால் கூட தனக்கு வந்து விட கூடாது' என்று நல்ல குணத்தை கெடுத்து கொள்ள விரும்பாத பாரத மக்கள், நேர்மையாகவே வாழ்ந்தனர்.
அடுத்தவன் சொத்தை எடுத்தல், திருடுதல் போன்ற பாவங்கள் 99 சதவீதம் மக்கள் செய்ய அஞ்சினர்.

கோவில்கள் இல்லாத வீடும் கிடையாது, தெருவும் கிடையாது, ஊரும் கிடையாது என்று எங்கு பார்த்தாலும், பாரத மக்கள், தன்னிடம் நல்ல குணங்கள் சேர, தெய்வங்களையே அணுகினர்.

இப்படி பாரத மக்கள் அனைவருமே நல்லவர்களோடு நட்பு கொள்ளவே விரும்பியதால், அனைவரும் பண்புள்ளவர்களாக இருந்தனர். 



உயர்ந்த எண்ணங்களே அதிகம் இருந்ததால், மகான்கள் அவதரித்தனர். 
பாரத தேசத்தில் மூலைக்கு மூலை ஞானிகள், சித்தர்கள், அவதரித்தனர்.

பாரத பூமியே, உலகம் என்ற ஊருக்கு இன்று வரை கோவிலாக இருக்கிறது. 

1000 வருட இஸ்லாமிய படையெடுப்பு, 200 வருட கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு போன்றவை, இந்துக்களிடம் இருந்த ஆன்மீக தேடலை மறைத்து, பணத்திற்காக எங்கும் செல்ல தயார், எவனுக்கும் வேலை பார்க்க தயார் என்ற நிலைக்கு இன்று தள்ளி விட்டது.

பாரத மக்கள், பழக்கத்தில் நமக்கு இருந்த சிந்தனையை எண்ணி பார்க்க வேண்டும்.

நல்லோர்களை நாட வேண்டும். 
பழகுவதில் ஒரு கட்டுப்பாடு கொள்ள வேண்டும்.

பழக்கத்தின் காரணமாக, நம்மிடம்  மற்றவர் துர்குணங்கள் சேர்ந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

வாழ்க ஹிந்து தர்மம்.
வாழ்க ஹிந்த்துக்கள்.



Tuesday 24 April 2018

வாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? உள்ளே இருக்கும் பரமாத்மாவை பார், உடம்பை பார்த்து பழகாதே!! உலகத்தால் ப்ரம்மத்தை மறைக்காதே ! ப்ரம்மத்தை கொண்டு, உலகத்தை மறைத்து விடு !

வாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம்.

"வச" என்ற சொல்லுக்கு "மறைத்தல்" என்று அர்த்தம்.

'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்று "உலகம் அனைத்திலும் விஷ்ணுவே எங்கும் புகுந்து அந்தர்யாமியாக (ஆத்மாவாக) உள்ளார்" என்று வேதம் சொல்கிறது.

இதையே, அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணர் காண்பித்த விஸ்வரூப தரிசனத்தில் கண்டான். அவரே அனைத்துமாக இருப்பதை கண்டான்.

வேதம்
"உலகத்தால் ப்ரம்மத்தை மறைக்காதே.
ப்ரம்மத்தை கொண்டு, உலகத்தை மறைத்து விடு"
என்று ஈஷோ உபநிஷத் ஆரம்பிக்கிறது.

புரியவில்லையே !!
உலகத்தால் ப்ரம்மத்தை மறைக்காதே என்றால் என்ன அர்த்தம்?

ஆத்மா இல்லாத ஒரு உடம்பை, நாம் எத்தனை முறை கூப்பிட்டாலும் நடந்து வராது.
ஆத்மா இல்லாத ஒரு உடம்புக்கு "பிரேதம்" என்று பெயர்.

உடம்பு இல்லாத ஆத்மாவை கூப்பிட்டால், நம் கண்ணுக்கு தெரியாது.

நாம் ஒருவரை கூப்பிட்டால், உடம்போடு கூடவே அதன் ஜீவ ஆத்மாவும் கூடவே வருகிறது.

வருபவரை வெறும் உடம்பு சம்பந்தமாக நீ பார்த்தாய் என்றால், அவரை பார்த்ததினால், பேராசை, பொறாமை, கோபம் போன்ற குணங்கள் உனக்குள் எழும்.






உடம்பை மட்டும் கவனிக்கும் போது, "இவன் தனக்கு வேண்டியப்பட்டவன்", "இவன் எதிரி", "இவன் உயர்ந்தவன்", "இவன் தாழ்ந்தவன்" போன்ற எண்ணங்கள் நமக்குள் வந்து விடும்.

நமக்கு பிடிக்காதவர்கள் வந்தால், "இவன் ஏன் வந்தான்?" என்று கோபம் வரும்.

உடம்பை பார்க்காமல், ஆத்மாவை பார்த்தாய் என்றால், ஒருவரை பார்த்து, பொறாமையோ, கோபமோ உண்டாகாது.

மகாத்மாக்கள், ஞானிகள், ஆத்மாவை மட்டும் தான் பார்க்கின்றனர். இதனாலேயே அவர்களுக்கு யார் மீதும் கோபமோ, பொறாமையோ வருவதில்லை.

ஞானிகள், உடம்பை கவனிக்காமல், ஆத்மாவை மட்டும் கவனிப்பதால், அனைவரும் அந்த பகவானின் அம்சமே என்று பார்க்கின்றனர்.
இதனால் தன்னிடம் துர்குணங்கள் சேராமல் பார்த்துக்கொள்கின்றனர்.

இந்த ஞானம் இல்லாத சாதாரண ஜனங்கள், யாரை பார்த்தாலும் சரீரத்தையே கவனிக்கின்றனர். ஆத்மாவை கவனிப்பதில்லை.

மற்றவர்கள் மீது உள்ள ஆசை, பொறாமை, கோபத்தால், தன்னிடம் துர்குணங்களை வளர்த்து கொள்கின்றனர்.

இந்த ஞானத்தை நாம் அனைவரும் பெற வேண்டும்.

துர்குணங்கள் நமக்கு எழாமல் இருக்க வேண்டும் என்ற ஆசையில், வேதம் நம்மை பார்த்து,
"உள்ளே இருக்கும் பரமாத்மாவை பார், உடம்பை பார்த்து பழகாதே"
என்று சொல்கிறது.

உலகம் முழுவதும் அந்த பரமாத்மா ப்ரவேசித்து உள்ளார். 
ஒவ்வொரு உடம்பிலும் ஜீவாத்மாவாக அவரே உள்ளார்.

'உள்ளே இருக்கும் ஆத்மாவை கவனிக்காமல், உடம்பையே கவனிப்பவர்கள்' அஞானிகள் (உண்மையை அறியாதவர்கள்).




அஞானிகளுக்கு, உடம்புக்குள் ஆத்மாவாக இருக்கும் விஷ்ணு தெரிவதில்லை.
உடம்பையே பார்க்கும் அஞானிகளுக்கு, விஷ்ணு என்ற தேவன் மறைக்கப்படுகிறார்.
இதனாலேயே, விஷ்ணுவுக்கு "வாசுதேவன்" (மறைந்து இருக்கும் தேவன்) என்று பெயர்.

ஞானிகள், உடம்பை பார்க்காமல், உள்ளே மறைந்து இருக்கும் ஆத்மாவை கவனிப்பதால், வாசுதேவனாக இல்லாமல், ப்ரத்யக்ஷமாக தெரிகிறார் பரப்ரம்மா.

ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து,
"அர்ஜுனா !! கோடி ஜென்ம புண்யத்தால், ஒருவனுக்கு இந்த ஞானம் உண்டாகிறது.
அத்தகைய ஞானிக்கு, நாயை பார்த்தாலும், கழுதையை பார்த்தாலும், தன்னை கொல்ல வரும் சத்ருவை பார்த்தாலும், அவர்களுக்கு உள்ளே உள்ள பரப்ரம்ம ஸ்வரூபமே தெரிகிறது. அத்தகைய ஞானி எனக்கு மிகவும் பிரியப்பட்டவன்" என்று சொல்கிறார்.
பிரகலாதன் போன்ற தன் பக்தனை மனதில் கொண்டு இதை சொன்னார், ஸ்ரீ கிருஷ்ணர்.


Sunday 22 April 2018

உலகத்தில் தர்மம் எதை ஆதாரமாக கொண்டு நிற்கிறது? தர்மத்தின் நான்கு கால்கள் என்ன? பரீக்ஷித் கலி புருஷன் சரித்திரம். தெரிந்து கொள்ள வேண்டாமா?

துவாபர யுகம் முடிந்து, கலியுகம் ஆரம்பம் ஆகியிருந்த ஸமயம்.
பரிக்ஷித்து மன்னன் ஆட்சியில் இருந்தார். 

பரிக்ஷித்து, உலகத்துக்கே பேரரசனாக இருந்தார்.
பரிக்ஷித்து, அபிமன்யுவின் மகன்.
அபிமன்யு அர்ஜுனனின் மகன்.
அர்ஜுனனின் மனைவி சுபத்ரா.
சுபத்ரா கிருஷ்ணரின் தங்கை.




பரிக்ஷித்து மன்னன், ஒரு நாள் தனது நாட்டில் ரதத்தில் பவனி வந்து கொண்டிருக்கும் பொழுது, சரஸ்வதி நதிக்கரையில் ஒரு பசு மாட்டையும் , மூன்று கால்களும் வெட்டப்பட்டு ஒற்றைக் காலுடன் கண்ணீர் வடித்த நிலையில் ஒரு காளையையும் கண்டார்.
ஒற்றைக் காலில் நிற்கும் காளையை, ஒருவன் தடி கொண்டு அடிப்பதனையும் கண்டார்.

அவன் பார்ப்பதற்கு 'மன்னன் போன்று வேஷம்' போட்டிருந்தாலும், அவன் அரச குலத்திலிருந்து வந்தவன் போல் இல்லை. 

ஒரு அரசன் இது போன்று பசுவையும், காளையையும் துன்புறுத்த மாட்டான்.

கையில் காண்டீபம், வில் ஏந்திய பரிக்ஷித்து மன்னன் காளை இருக்கும் இடம் சென்றார்.
கடும் கோபம் கொண்டு அடித்தவனை பார்த்து கர்ஜித்தார் -
"என்னுடைய ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில், இது போன்று அப்பாவி உயிர்களை இரக்கமில்லாமல் கொலை செய்ய முற்பட்ட நீ யார் ? பார்ப்பதற்கு ஒரு தேவன் போன்று ஆடை உடுத்தி இருந்தாலும், நீ செய்யும் செயலை கண்டால் நாகரீகம் தெரியாத காட்டு மிராண்டி போன்று இருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணரும், அர்ஜுனரும் இங்கு இல்லை என்கிற தைரியத்தில் இது போன்று அப்பாவி காளையை அடிக்க துணிந்தாயோ? குற்றவாளியான நீ கொல்லப்பட வேண்டியவன்."

இப்படி சொல்லிக் கொண்டே அருகில் உள்ள பசுவின் உதவியோடு நின்று அழுது கொண்டிருந்த காளையை நோக்கி பேசலானான் -
"மூன்று கால்களையும் இழந்து, இந்த பசுவின் துணை கொண்டு நிற்கும் நீ, உண்மையிலேயே ஒரு காளை தானா, அல்லது இந்த சோக காட்சியை காண வைக்க வேண்டும் என்று காளை ரூபத்தில் உள்ள ஒரு தேவனா?
இந்த உலகம் முழுவதும் என் ஆட்சி பரவி உள்ளது. இது நாள் வரை, ஒருவரும் இது வரை இது போன்று கஷ்டப்படவில்லை, கண்ணீர் வடிக்கவும் இல்லை."

அருகில் இருந்த பசுவை பார்த்து,
"ஹே பசு மாதா, என்னுடைய ஆட்சியில் ஒருவரும் துன்பப்பட மாட்டார். நான் உயிருடன் இருக்கும் வரை, நீ எந்த விதத்திலேயும் கவலை பட தேவை இல்லை. இந்த கொலைகாரனை பார்த்து பயப்படாதே ! ஒரு உயிரை துன்புறுத்திய குற்றத்திற்கு அவனுக்கு மரணமே தண்டனை. அதை அரசனான நானே அவனுக்கு தருவேன்."

அருகில் இருந்த காளை பக்கம் திரும்பி
"நீ எந்த விதமும் தவறு செய்தவன் போன்று தெரியவில்லை. இது போன்ற கீழ் தரமான காரியங்களை ஸ்ரீ கிருஷ்ணர் இருந்த இந்த பூமியில் ஒருவரும் செய்யமாட்டர். இப்படி இருக்க உன் மூன்று கால்களையும் யார் வெட்டினார்கள்?
ஏன் அழுது கொண்டிருக்கின்றாய்?
ஏன் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கின்றாய்?
உனது மற்ற கால்கள் என்னவானது?
உன்னை இவன் ஏன் அடிக்கின்றான்?
நீ சரியான காரணம் கூறினால், இவனை நான் கொன்று விடுகின்றேன்.
எனது அரசாட்சியில்,இது மாதிரியான கொடுமைகள் நிகழ்வதனை நான் அனுமதிக்க முடியாது. என் எதிரிலே உன்னை அடித்ததனால், இவனை கொல்வதே சரி ..."
என்று தனது கூரிய இடை வாளை கையில் எடுத்தான் மன்னன்.

ஆச்சரியப்படும் விதமாக,
அந்தக் காளை பேச ஆரம்பித்தது.

"உயர்ந்த பாண்டு மன்னன் குலத்தில் இருந்து வந்த நீயும் உயர்ந்த குணம் கொண்டிருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

உங்களின் உயர் பண்பினால் தான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் உங்களுடன் நட்பு கொள்ள ஆசை பட்டு வந்தார்.

உயர்ந்த குணம் உள்ள மன்னா! துன்பம் ஒருவனுக்கு வரும் போது, அதற்கு உண்மையான காரணத்தை நாம் அறிய முடியாது.

தன் துன்பங்களுக்கு
1. சிலர், "தானே" காரணம் என்று சொல்கிறார்கள்.
2. சிலர், விதியென்று சொல்கிறார்கள்.
3. மற்றவர்கள் அவரவர் செய்த கர்மங்களின் பலன் என்று சொல்கிறார்கள்.
4. மற்றவர்கள் இயற்கை என்றும்
5. சிலர் இது போன்ற கேள்விகளுக்கு கொடுக்கப்படும் எந்த பதிலும் காரணமாக இருக்க முடியாது என்று சொல்கிறார்கள் ....

இவைகளில் எது சரி?
துன்பங்களுக்கு காரணம் என்ன என்று நீ நினைக்கிறாய்?"
என்று மன்னன் கேட்ட கேள்விக்கு பதில் உரைக்காமல் திருப்ப பதில் கேள்வி கேட்டது.




பொதுவாக ஒருவன் துன்பத்தில் இருக்கும் போது, ஆறுதலாக ஒருவன் வரும் போது, உடனே தன் சோக கதையை சொல்லி அழுது புலம்பி, ஆறுதல் தேட, உதவி தேட நினைப்பவர்கள் தான் உலகத்தில் உண்டு.

இப்படி இருக்க, இந்த காளை காப்பாற்ற மன்னன் வந்தும், காக்க வேண்டும் என்று கேட்காமல், ஒரு ஞானியை போன்று பேசியது மன்னனுக்கு ஆச்சர்யம் அளித்தது.

ஒரு விலங்கு பேசியதும் ஆச்சர்யம் அளித்தது.
மன்னன், தன்னிடம் பேசுவது சாதாரண காளை அல்ல என்பதனை உணர்ந்தான்.

மேலும், தர்ம தேவதையே காளையாய் வடிவம் கொண்டு வந்துள்ளது என்பதனையும் உணர்ந்தான்.

பூமி மாதாவே பசுவாய் வடிவம் கொண்டு வந்துள்ளது என்பதனையும் உணர்ந்தான்.

"காளை உருவில் இருக்கும் தர்ம தேவதையே, நீ இப்படி பேசியதற்கு காரணம் புரிகிறது.
குற்றம் செய்தவனும், குற்றம் இவன் செய்தான் என்று காட்டிக் கொடுப்பவனும், உண்மையில் அனைவரது உள்ளேயும் அந்த பகவான் உள்ளார் என்று அறியாமையால் தான் செய்கின்றனர்.

அதனால் தான் நான், "யார் உன்னை துன்பப் படுத்தினார்கள்?" என்று கேட்டதற்கு

"இவன் தான்" என்று கூற மறுக்கிறாய்.

நீ தர்ம தேவதை என்று உணர்ந்தேன்.

இந்த உலகத்தில் தர்மம் நான்கு கால்கள் கொண்டு தான் நிலை பெற்று இருக்கிறது என்று அறிவேன்.

சத்ய யுகத்தில் உனக்கு "தவம், நன்னடத்தை, இரக்கம், உண்மை" என்ற நான்கு கால்களுடன் இருந்தாய்.

பின்பு காலம் செல்ல செல்ல, தற்பெருமை, ஆசை, அகங்காரம் இந்த மூன்றின் காரணமாக, நீ உன்னுடைய மூன்று கால்களான "தவம், நன்னடத்தை, இரக்கம்" போன்றவற்றை இழந்து, "உண்மை" என்ற காலுடன் மட்டும் இந்த கலியில் நிற்கிறாய் என்று உணர்ந்தேன்.

அதனையும் பொய் என்ற பிரம்பு கொண்டு அடித்து, ஒரு காலையும் பறிக்க முயல்பவன் "கலி புருஷன்" என்றும் அறிந்தேன்.
"பூமி" என்ற பசுவும் செய்வதறியாது கவலை மிகக் கொண்டு பார்த்துக் கொண்டு நிற்கிறது என்றும் அறிந்தேன்."
இவ்வாறு தர்மம் தேவனையும், பூமி மாதாவையும் சமாதானப் படுத்திய மன்னன், சினம் கொண்டு, தன் வாளை உருவி, கலி புருஷனை நோக்கி கொல்ல முனைந்தார்.

இதனால் அரச வேடத்தில் இருந்த "கலி புருஷன்" பயங்கொண்டு, தன் நிஜ ரூபத்தில் பரிக்ஷித்து மன்னன் காலில் விழுந்து மன்றாடினான்.




1. ஏழைகளும்,
2. தஞ்சம் புகுந்தவர்களும்,
3. பாராட்டப்பட வேண்டியவர்களும்
ஒரு அரசனால் கனிவாக காப்பாற்ற படவேண்டியவர்கள்.

இதை அறிந்த பரிக்ஷித்து மன்னன், காலில் விழுந்த கலி புருஷனை பார்த்து சொன்னார்

"என் காலில் விழுந்து விட்டதால் நீ உயிருக்கு பயப்பட வேண்டாம். ஆனால் உயிர் ஹிம்ஸை செய்யும் நீ, பண்பாடு இல்லாதவன். இங்கு உள்ள அனைவரும், தெய்வம் எங்கும் எதிலும் இருக்கிறார் என்று அறிந்தவர்கள்.

காற்று உள்ளும் புறமும் எங்கும் உள்ளது போல, அவர் இல்லாத இடம் இல்லை. அதனால் எந்த உயிரையும் ஹிம்சிக்க மாட்டார்கள்.

இப்படி இருக்க, உன்னை போன்றோர் இந்த உலகத்தில் இருப்பது பெரிய தீங்கு.
நீ உடனே இந்த உலகத்தை விட்டு சென்று விடு"
கை கூப்பிய வண்ணம் கலி புருஷன்
"உலகில் கலியுகம் துவங்கிவிட்டதால் கலி புருஷனாகிய நான், இறைவனின் கட்டளையால் நானும் இருந்தாக வேண்டியவனாகிறேன்.

உங்கள் அரசாட்சியின் கீழ் நான் உங்களுக்கு அடி பணிகிறேன்.
என்னால் ஒரு போதும் மக்களுக்கும் தீங்கு விளையாது. ஓ மன்னனே! நான் சில இடங்கள் நிரந்தரமாக தங்க, தாங்கள் தயை கூர்ந்து அனுமதிக்க வேண்டும்." என்று கேட்டார்.

அதற்கு மன்னன் "சூதாட்டம் (பொய்), மது, விபச்சாரம், பிராணிகள் கொல்லப்படும்" இடம் ஆகிய இடங்களில் தங்க அனுமதிக்கின்றேன் என்றார்.

கலி புருஷன் மேலும் ஓரிடம் வேண்டும் என்று கேட்டார்.

மன்னன் "பேராசை (தங்கம்) கொண்ட இடத்திலும்" நீ தங்கிக் கொள்ளலாம் என்றார்.

பொய் சொல்லுதல், மது அருந்துதல், கொலை செய்தல், பேராசை, காமம் கொண்டு தவறு இழைத்தல் ஆகியன கலியின் குணங்களாயின.
இதுவே பஞ்ச மகா பாவங்கள் ஆகும்.
இதில் ஒன்று செய்தால் கூட கலி புருஷன் ஆட்கொள்வான்.
"நேர்மையாக வாழ விரும்புபவன்" இந்த ஐந்தையும் தவிர்த்து வாழும் போது, அவனுக்கு கலியின் தாக்கம் உண்டாகாது என்றும், இறைவன் அருள் கிட்டும் என்பதனை உணரவேண்டும் என்றார் மன்னன்.




தக்க உரையினால் காளைக்கு ( நீதி தேவதைக்கு ) இழந்த மூன்று கால்கள் திரும்பக் கிடைத்தன.

பசு வடிவில் நின்று கொண்டிருந்த பூமி மாதாவும், அரசனின் பதிலுரையால் திருப்தி அடைந்து மறைந்து விட்டது.

ஸ்ரீ கிருஷ்ணர்,
"எப்பொழுதெல்லாம் தர்மம் வீழ்ச்சி அடைகிறதோ அப்பொழுது எல்லாம் நான் அவதாரம் செய்கிறேன்" என்கிறார்.

தர்மம் எப்பொழுது வீழ்ச்சி பெரும் என்ற கேள்விக்கு, இந்த நிகழ்ச்சி நமக்கு விடை கொடுக்கிறது.

தர்மம் என்ற மேடை, "தவம், நன்னடத்தை, இரக்கம், உண்மை" என்ற நான்கு கால்களுடன் நிற்கிறது.
இந்த தர்மத்தின் மீது தான் தலைவனாக நிற்கிறார் "பெருமாள்". 
எந்த கோவிலிலும், நம் வீட்டிலும் உள்ள தெய்வ விக்ரஹங்கள் உள்பட ஒரு மேடை மீது நிற்பது இதனை தான் விளக்குகிறது.

எதிலும் காரணம் இல்லாமல் ஒரு ஹிந்து செய்ததாக இல்லை.
"தெய்வத்தை வழிபடும் போது" இதையே தியானிக்க வேண்டும்.

மனிதனின் "கடமை" இந்த நான்கு கால்களான
1. தவம் (மன கட்டுப்பாடு),
2. நன்னடத்தை,
3. இரக்கம்,
4. உண்மை
போன்றவற்றை கடை பிடிப்பதே.

அதனால் தான் தெய்வத்திடம் காலில் விழுந்து வணங்குவது என்ற பழக்கம் நமக்கு உள்ளது.
இந்த நான்கை கடை பிடிப்பவன், தர்மத்தை கடை பிடிப்பவன் ஆவான்.

தர்மத்தை காப்பவனுக்கு இறை அருள் கிட்டும். தர்மம் தலை காக்கும்.

கலியில் மூன்று கால்கள் இழந்த நிலையில் இருந்த தர்ம தேவன், மறைமுகமாக சொல்வது என்ன?

இனி வரும் மனிதர்கள் தவம், நன்னடத்தை, இரக்கம் குன்றி காணப்படுவர்.

ராவணன், ஹிரண்யகசிபு, கம்சன் போன்ற பொல்லாதவர்கள் கூட போன யுகங்களில் தவம் செய்யும் வலிமையுடன் இருந்தனர். பல ஆண்டுகள் உடலை வருத்தி, ப்ரம்ம தேவனையும், சிவனையும் நேரில் காணும் வலிமை கொண்டிருந்தனர்.

பொதுவாக தவம் செய்பவர்கள் உடலையும், புலன்களையும் அடக்கும் சக்தி உள்ளவர்கள்.

இனி இந்த கலியில் தவம் மிகவும் குன்றி போகும். புலன்களை அடக்குவது முடியாத காரியமாகி போகும்.

ஏகாதசி போன்ற நாளில், ஒரு நாள் கூட சுத்த பட்டினி இருக்க முடியாதவர்களாக, சக்தி அற்றவர்களாக இருப்பர்.

மூன்று வேளை சாப்பிட்டாலும், இன்னும் பசி என்பர், சோம்பேறிகளாக இருப்பர்.
இனி இந்த கலியில் நன்னடத்தையும் (தூய்மை) மிகவும் குன்றி போகும். கோவிலுக்கு குளித்து விட்டு தான் செல்ல வேண்டும், அசுத்தமான காலங்களில் பெண்கள் வீட்டில் வேலை செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும், ஆண்கள் வீட்டு வேலைகளை இந்த சமயங்களில் செய்யலாம். தினமும் வாசலையும், வீட்டையும் சுத்தமாக தானே வீட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டும். மன தூய்மை வேண்டும், புறத் தூய்மையும் வேண்டும். இவை எல்லாம் இனி இந்த கலியில் கெடும் என்று உணர்த்தினார். கலி ஆரம்பித்து 5000 வருடங்களே ஆகியுள்ள நிலையில் இதன் தாக்கம் இப்போதே உள்ளது. கலி யுகத்தின் மொத்த வருடமோ 4,32,000 வருடங்கள். இனி இன்னும் எப்படி எல்லாம் கெடும் என்று தெரிகிறது.

இனி இந்த கலியில் இரக்கம் என்ற குணமும் கெட்டு போகும். பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் உயிருடன் இருக்கும் போது மட்டுமின்றி, இறந்த பின்பும் நன்றி உணர்வுடன், தான் உயிருடன் இருக்கும் வரை திவசம் செய்த இவர்கள் குடும்பத்தில் வரும் மனிதர்கள், இருக்கும் போதே அனாதையாக தாய் தந்தையை விட்டு விட்டுவர்.




பண மோகம் தலை விரித்தாடி, தன் சொந்தங்கள் கஷ்டப் பட்டாலும் பார்த்து கொண்டு தான் இருப்பர்.

இருக்கும் போதே தாய், தந்தைக்கு சோறு போடாதவன், கொல்லி வைக்காதவன், திவசம் மட்டும் செய்து விடுவானா? தன் குறையை மறைக்க நாத்தீகமும் பேசுவான். சாஸ்த்திர பொய் என்று பேசி தன்னை நியாயப்படுத்த முனைவான்.

முதலாளிக்கு தொழிலாளியிடம் இரக்கம் இருக்காது. தொழிலாளிக்கு முதலாளியிடம் இரக்கம் இருக்காது. பணம் ஒன்றே அனைவருக்கும் குறிக்கோள் என்று இருப்பர்.
இப்படி மூன்று கால்களும் (தவம், நன்னடத்தை, இரக்கம்) தேய்ந்து போகும் என்பதை கலியின் ஆரம்பத்திலேயே தர்ம தேவன் உரைத்தான்.

உண்மை என்ற ஒரு கால் மட்டும் இந்த கலியில் இன்னும் உயிர் வாழ்கிறது என்று தர்ம தேவன் உணர்த்தினார்.

உண்மை இந்த உலகில் உள்ளதா என்று நமக்கு கேள்வி எழும்.

இந்த உண்மை நம்மை மட்டும் குறித்து பேசப்படவில்லை. மனிதன் தவம், நன்னடத்தை, இரக்கம் போன்றவற்றை இழந்து மனித சமுதாயத்துக்கும், தேவர்களுக்கும், பூமிக்கும் செய்யாத கேடுகள் எல்லாம் செய்த போதிலும், பூமி மாதாவும், தேவர்களும் அந்த நாராயணருக்கு பயந்து, தன் கடமையை பொறுத்து கொண்டு செய்வார்கள் என்பதை இது உணர்த்துகிறது. உண்மை என்ற சத்தியம் இவர்களால் கலியில் நிலைக்கும்.

மனிதன் விடி காலையில் எழுந்திருக்கிறானா, சூரிய தேவனுக்கு, சோம தேவனுக்கு, குரு தேவனுக்கு, சுக்ரன், சனீஸ்வரனுக்கு, அங்காரகம் (செவ்வாய் தோஷம்) தேவனுக்கு, புதன் தேவனுக்கு நன்றி சொல்கிறானா, உண்மையாக தான் இருக்கிறானா என்று எதிர் பார்க்காமல், சத்தியத்திற்கு கட்டுப்பட்டு தேவர்கள் தன் கடமை செய்வர்.

பூமியில் எங்கும் வெடி வைத்தும், குழி தோண்டியும், பூமியை வைத்து பணம் சம்பாதித்தும் இந்த கலியில் பூமி மாதாவை ஹிம்சிப்பர். இருந்தும் பொறுமை காத்து, நில நடுக்கம், விளைச்சல் இல்லாமல் செய்து உணவு பஞ்சம் செய்யாமல் பூமி மாதா தன் சத்தியத்தின் வழி நடப்பாள்.




சில இடங்களில் அசம்பாவிதம் காண்பது, நம்மை எச்சரிக்கவே !

சூரிய தேவன் இன்றுவரை தன் நிலையில் இருந்து நம் அருகில் வராமல் இருப்பதே அவர் தன் சத்தியத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது. இதையே தர்ம தேவன் ஒரு கால் மட்டும் கலியில் இருப்பதாக காட்டினார்.



Saturday 21 April 2018

"ஒப்பில்லாத" என்று கூறும் போது - ஆழ்வார் நிலை எப்படி இருந்தது?

ஒப்பில்லாத பெருமாள் என்றால் பொதுவாக நாம் நினைப்பது, அவர் மிகவும் உயர்ந்தவர், தன்னிகர் இல்லாதவர் என்று.

ஆழ்வார் தன் பாசுரத்தில் "ஒப்பில்லாத" என்று கூறி கதறுகிறார். ஒப்பில்லாதவன் என்று கூறி, பெருமாள் உயரந்தவர் என்று சொல்லும் போது பெருமை படாமல் ஏன் ஆழ்வார் கதறுகிறார்?




ஆழ்வாரின் நிலை:
நரசிம்மருக்கு பிரகலாதன் ஒப்பு. 

"ஒப்பு" என்றால் பகவான் செய்யும் கருணைக்கு, ஒப்பாக பக்தன் பக்தி செய்வான்.
 

ராமருக்கு ஹனுமான் ஒப்பு.
கிருஷ்ணருக்கு கோபிகைகள் ஒப்பு.
 

இப்படி ஒப்பாக இருப்பதனாலேயே, பெருமாள் அவர்களை கண்டாலே ப்ரீதி கொள்கிறார்.

யாருக்குமே தனக்கு ஒப்பாக இருப்பவரையே பிடிக்கும்.

தன்னை விட குறைந்த அந்தஸ்த்தோ, படிப்போ, குலமோ இருந்தால் பழக கூட மாட்டர்.

பிரகலாதனும், கோபிகைகளும், ஹனுமனும் வந்து நின்றால், பெருமாளுக்கு ஒப்பாக இருக்கும். பெருமாள் பிரசன்னமாவார். அது நியாயம்.




எந்த விதத்திலேயும் ஒப்பு இல்லாத நிலையில், உன் கருணையை மட்டும் எதிர்பார்த்து, எந்த தைரியத்திலோ வந்து விட்டேன்.

வந்த பின் தான் தெரிகிறது, நான் எந்த விதமும் உனக்கு ஒப்பு இல்லையே என்று.
இதை நினைத்து,
ஆழ்வார் "ஒப்பில்லாத" என்று கூறும் போது தன் நிலை நினைத்து கதறுகிறார்.

Friday 13 April 2018

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள் என்ன?. கிருஷ்ணணே பகவான்

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்களை விஷ்ணு புராணம் சொல்கிறது.
1. பூர்ணமான ஐச்வர்யம்
2. பூர்ணமான தர்மம்
3. பூர்ணமான புகழ்
4. பூர்ணமான ஸ்ரீ
5. பூர்ணமான வைராக்யம்
6. பூர்ணமான மோக்ஷம்

இந்த ஆறும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்ததை இனி பார்ப்போம்.

1. பூர்ணமான ஐச்வர்யம் : (Complete Power to create, maintain, destroy)
  • படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவை போல, வத்ஸா பஹரண லீலை செய்து, பிரம்மாவை போல படைத்தது,
  • அழிக்கும் தொழிலை செய்யும் ருத்திரனை போல, பாணாஸுர யுத்தத்தில் ருத்திரனை வென்று, பாணாஸுரனை வதம் செய்தது,
  • வைதீகன் பிள்ளைகளை மீட்டதில் விஷ்ணுவையும் அடக்கினதாலும்,
  • இந்திரனை கோவர்த்தன லீலை செய்து தோற்கடித்தும்,
  • ஸாந்தீபனியின் பிள்ளையை யமனிடம் மீட்டதும், 
ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான ஐச்வர்ய ஸ்வரூபம் என்று தெரிகிறது.

2. பூர்ணமான தர்மம் :  (Stand by Dharma)
  • அதர்மம் செய்த கம்சன், நரகாசுரன், பாணாசுரன், ஜராசந்தன், கௌரவர்கள் அனைவரையும் அழித்து, தர்மத்தை நிலை நாட்டி
  • யுதிஷ்டிரனை ஆட்சியில் அமர்த்தியதில், 
ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான தர்ம ஸ்வரூபம் என்று தெரிகிறது.

3. பூர்ணமான புகழ் : (Fame beyond boundary)
  • ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம், ஸ்ரீமத் பகவத் கீதை போன்ற என்றும் நிலைக்கும் பிரமாணங்களே 
பூர்ணமான புகழ் கொண்டவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று தெரிகிறது.




4. பூர்ணமான ஸ்ரீ :  (Complete Wealth)
  • மஹாலக்ஷ்மி ஸ்ரீகிருஷ்ணருக்கு ருக்மிணியாக சேவை செய்தாள் எனில், ஸ்ரீ கிருஷ்ணரை விட பூர்ணமான ஸ்ரீமான் யார்? 
  • செல்வம் கொழித்த தேசமாக இருந்தது துவாரகை.
    ஸ்ரீ கிருஷ்ணரை நம்பியதாலேயே பெரும் செல்வம் அடைந்து, பேரரசனும் ஆனார் தர்மபுத்திரர். 
  • ஏழை பிராம்மணன் குசேலர் என்ற சுதாமா, ஸ்ரீ கிருஷ்ணரை பார்க்க சென்றதற்கே அவர் பெரும் செல்வந்தனாக ஆனார் என்ற நிகழ்ச்சிகளே 

ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான ஸ்ரீமான் என்று தெரிகிறது.

5. பூர்ணமான வைராக்யம் :
  • ஷோடச ஸ்திரீ ஸஹஸ்ரேசன் ஆயினும், அநாதி ப்ரம்மச்சாரி என்று ஸ்ரீ கிருஷ்ணரை, ப்ரம்மச்சாரியான பீஷ்மரும், சுகரும் சொல்லும் போதே பூர்ணமான வைராக்யம் ஸ்வரூபமாக கொண்டவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று தெரிகிறது. 
  • பிறக்கும் போதே தாயும், தந்தையும் சிறையில், தனக்கு முன் பிறந்த குழந்தைகள் அனைவரும் கொலை செய்யப்பட்ட சோகம், கோகுலத்தில் வளரும் போதே குழந்தையாக இருந்ததில் இருந்தே கொலை செய்ய பல வித முயற்சி, பல விதத்தில் ஜராசந்தன் போன்றவர்களால் யாதவர்கள் இன்னல் போன்றவை ஏற்பட்டும், ஸ்ரீ கிருஷ்ணர் எந்த நிலையிலும் மனம் தளராத தீரனாகவும், மகிழ்ச்சி குறையாதவனாகவும், சம நிலையில், புலம்பல் இல்லாமல், அழுகை இல்லாமல், அனைத்து கஷ்டங்களையும் எளிதாக சமாளித்து, மற்றவர்களும் இவரால் பயன் பெறும் வகையில் பூர்ணமான வைராக்ய ஸ்வரூபமாக இருந்தார். 
  • பகவத் கீதை முழுவதுமே ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான வைராக்கியம் உடையவர் என்று உணர்த்துகிறது.

6. பூர்ணமான மோக்ஷம்:
  • மோக்ஷம் என்ற வைகுண்டம் நாராயணர் மட்டுமே கொடுக்க கூடியது. 
  • எந்த புண்யத்தாலும் சம்பாதிக்க முடியாத மோக்ஷம் என்ற வைகுண்டத்தை
  • எந்த தகுதியும் இல்லாத பூதனை போன்ற அல்பத்திற்கும் தன் சங்கல்பத்தில் (விருப்பத்தில்) வைகுண்டம் கிடைக்கச் செய்தார்.
பகவான் என்ற சொல்லின் 6 அர்த்தங்களையும் கண்ணன் காண்பித்தான்.

நாராயணரின் விபவ அவதாரத்தில், இந்த ஆறும் நிரம்ப அவதாரம் செய்தது ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே.

கையை தூக்கி நோயே விலகு, பிசாசே ஓடு என்று இந்த்ரஜாலம் செய்வதும், நதியில் நடப்பதும், நதியை கடக்க முயலும் போது நதி வழி விடுவதும் அனைத்தும் ஒரு யோக கலையே.

நம் தமிழ் நாட்டில் குட்டி முனிவர் அகத்தியர் கடல் நீரை அள்ளி தன் கமண்டலத்தில் அடக்கி விட்டார்.
ராவணன் பத்து தலைகளுடன், யமனையும் சேர்த்து அடிமை செய்து விட்டான்.
வசிஷ்டர் தன் தண்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போர் படைகளை உருவாக்கி, விஸ்வாமித்திரர் அரசனாக இருந்த போது சண்டை இட்டார்.




இப்படி சாகசங்கள், ஆச்சரியங்கள், மருத்துவன் செய்ய கூடிய சிகிச்சைகள் செய்யும் இவர்களை மூடத்தனமாக பகவான் என்று ஹிந்துக்கள் கூறவில்லை.
ஞானி, மஹாத்மா, முனி, ரிஷி, ஸாது, அரசன் என்று மதிப்பு கொடுத்தனர்.

அகத்தியர், பதஞ்சலி போன்ற பெரும் முனிகளை, மதித்தனர்.
ஆனால் பகவான் என்று சொல்லவில்லை.

இந்த 6ம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இருப்பதால், முழு முதல் பகவான் கண்ணனே

"பகவான்" என்ற பெயருக்கு உரிமையாளன் யார்?

பொதுவாக, எந்த தெய்வத்தையும் "பகவான்" என்று சொல்லி ஆனந்தப்படுகிறோம்.

புத்தரை கூட சிலர் "புத்த பகவான்" என்று சொல்வதுண்டு.

"பகவான்" என்ற மதிப்பு மிக்க அடையாளத்தை அனைத்து தெய்வங்களும் பயன்படுத்தினாலும், ஆழ்ந்து கவனிக்கும் போது, எந்த தெய்வம் "பகவான்" என்ற பெயருக்கு உண்மையில் உரிமையாளர் என்று தெரிந்து விடும்.

ஒவ்வொரு தேவதைக்கும் புராணம் சொல்லப்பட்டு இருக்கிறது.

சிவபெருமானை பற்றி சொல்லும் புராணத்திற்கு "சிவ புராணம்" என்று பெயர் உள்ளது.

கணேசனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கணேச புராணம்",
முருகனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கந்த புராணம்" என்று பெயர் உள்ளது.

இப்படி ஒவ்வொரு தெய்வத்தின் புராணமும் அவரவர் பெயர்களை கொண்டிருக்க,
ஸ்ரீ கிருஷ்ணனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கிருஷ்ண புராணம்" என்று இல்லாமல், அவர் பெயரை கூட பயன்படுத்த அவசியமில்லாமல், "பாகவதம்" என்று பெயர் உள்ளதை கவனிக்க வேண்டும்.

தேவியை பற்றி சொல்லும் புராணத்திற்கு கூட "தேவி பாகவதம்" என்று தேவியின் அடையாளத்தை சேர்த்து தான் பெயர் உள்ளது. 

ஆனால், ஸ்ரீ கிருஷ்ண சரித்திரத்தை சொல்லும் போது, கிருஷ்ணன் என்று சொல்லக்கூட அவசியமில்லாமல், "பாகவதம்' என்று தனித்து நிற்கிறது.

புராணங்கள் மட்டும் தான் இப்படி உள்ளது என்றில்லை.. உபதேச க்ரந்தங்களும் இப்படியே இருக்கிறது.

ருத்ரன் உபதேசித்த கீதைக்கு "ருத்ர கீதை", "சிவ கீதை" என்று பெயர்.
கணேசன் உபதேசித்த கீதைக்கு "கணேச கீதை" என்றும்,
எமன் உபதேசித்த கீதைக்கு "எம கீதை" என்றும் பெயர் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார் என்றதும், "கிருஷ்ண கீதை" என்று தானே இருக்க வேண்டும்...

ஆனால், ஸ்ரீ கிருஷ்ணனே "பகவான்" என்பதால், அவர் உபதேசித்த கீதைக்கு மட்டும் "பகவத் கீதை" என்று பெயர் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல,
மஹாபாரதத்தில் மற்ற இடங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் சகஜமாக பேசும் இடங்களில் "ஸ்ரீ கிருஷ்ணன் பேசுகிறார்" என்றே காண்கிறோம். 
அர்ஜுனன் பேசும் போது கூட, "அர்ஜுன உவாச" (அர்ஜுனன் பேசுகிறான்) என்றே பகவத் கீதையில் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணர், உபதேசிக்கிறார் என்றதும், "கிருஷ்ண உவாச" என்ற பதத்தை பயன்படுத்தாமல், "பகவான் உவாச... பகவான் உவாச... பகவான் உவாச..." என்று கீதை முழுக்க "பகவான் பேசுகிறார்... பகவான் பேசுகிறார்..  பகவான் பேசுகிறார்" என்று இருப்பதை காண்கிறோம்.

பகவான் பேசும் கீதையை படிக்க யாருக்கு தான் ஆசை ஏற்படாது. 

கிருஷ்ண சரித்திரம் "பாகவதம்' என்றும்,
அவர் உபதேசம் செய்தால் "பகவத் கீதை" என்றும்,
அவர் பேசுனால், "பகவான் உவாச" என்றும் பார்க்கும் போது "பகவான்" என்ற பெயருக்கு உரிமையாளன் யார் என்று தெளிவாக நமக்கு தெரிகிறது.

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள் சேர்த்து சொல்லப்படுகிறது. 

இந்த 6ம் ஒரு சேர பெற்றவர் ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவரே. 

ஸ்ரீ கிருஷ்ணரே "பகவான்"



மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட காரணம் என்ன?

மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட காரணம் என்ன?

Spiritual Answer:

பொதுவாக நாத்தீகன் தனக்கும் மேல் ஒரு பரமாத்மா இருக்கிறார் என்று அறியாமல், எல்லாம் தன் முயற்சியால் நடக்கும் என்று நினைப்பான்.
அவனுக்கு மீறி இருக்கும் பல விஷயங்கள், மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் போன்றவற்றை கொடுக்கும்.

இந்த பயம், கவலை இவர்களில் சிலருக்கு நோய் உண்டாக்கும், சிலருக்கு சோம்பறித்தனத்தை கொடுக்கும். சிலருக்கு தீவிரவாதம், கோபம் போன்ற குணத்தை கொடுக்கும்.




இது போன்ற கவலைகள் நாம் அடைவதே ஒரு நாத்தீக லட்சணம்.

மகா சக்தி வாய்ந்த பகவான் உங்களை மட்டுமின்றி உலகையே காக்க வல்லவன் என்று தெரிந்தும், கவலை பட கூடாது.

நம்மையும் வழி நடத்த கடவுள் இருக்கிறார் என்ற அறியும் நிலையில் நீங்கள் இருந்தால், எந்த நிலையிலும் முயற்சியும் கை விடமாட்டீர்கள், கவலையும் பட மாட்டீர்கள்.

கவலைகள் பல இருந்தாலும், தியானம் உடனே சிலருக்கு கை கூடுவதற்கு காரணம் இந்த தைரியம் தான்.

கவலைகள் பல இருந்தாலும், சோர்ந்து போகாமல் தன் கடமையை உற்சாகத்துடன் தொடர்ந்து செய்பவர்கள் இந்த தைரியத்தில் தான்.




யோகிகள், சாதுக்கள் சோம்பேறிகளாய் இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த தைரியத்தில் தான்.

எந்த வறுமையிலும் தன் முயற்சியை விடாமல் இருப்பவர்களும் இந்த தைரியத்தில் தான்.

நாத்தீக குணத்தை விட்டு விடுவதாலேயே, மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் போய் விடும். 
 
இந்த தைரிய மன நிலையில் அமர்நது கொண்டு, கட்டை விரலின் நுனியும், மோதிர விரலின் நுனியும் சேர்த்து, பிராணாயாமம் மெதுவாக, நிதானமாக 30 நிமிடம் தினமும் செய்தாலே உயர் ரத்த அழுத்தம் என்ற நோயே அண்டாமல் போகும்.

அதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால் அனைவரும் ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை தினமும் தியானிக்க வேண்டும்

சத்தியம் (வாக்கு கொடுத்தால் அதில் உண்மையாக இருப்பது)

"சத்தியம்" என்ற தர்மம், இன்றைய இந்தியாவில் உள்ள மக்களிடம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

"நாளை 10 மணிக்கு உங்களை பார்க்க வருகிறேன்" என்று ஒரு இன்றைய இந்தியன் சொன்னால், இவன் சத்தியத்தை நம்ப முடிவதில்லை.

இன்று, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்த சத்தியத்தை உயிராக மதிக்கின்றனர்.
இந்தியாவில் இதற்கு மதிப்பு குறைகிறது.

சத்தியத்தை மதிக்கும் நாடு எப்பொழுதுமே பிரகாசம் அடையும் என்பது இந்த நாடுகள் எப்படி வலிமையாக இருக்கிறது என்று பார்க்கும் போதே தெரிகிறது.

சத்தியத்துக்காக வாழ்ந்த ராமர் பிறந்த நாட்டில், இந்த தர்மம் வீழ்ந்ததற்கு காரணம் என்ன ? 
ராமர் போன்ற சத்தியத்தில் நின்றவர்கள் சரித்திரத்தை நாம் மறந்ததே இதற்கு காரணம்.

சத்தியத்தில் நிற்கும் மக்களே, நாட்டை உயர்த்த முடியும்.
இனி இந்தியா முன்னேற ஒவ்வொரு இந்தியனும் முதலில் கடைப்பிடிக்க வேண்டியது சத்தியமே !

சரி,
எப்படி இந்தியாவில் பொய் பேசும் பழக்கம் அதிகமாய் போனது?

பொய் பேச தேவை இல்லை என்ற இடத்தில் கூட, வெகு சாதாரணமாக இப்பொழுது பொய் பேசுகின்றனர். இது ஏன்?



எப்படி இந்த சத்தியம் என்ற தர்மம் இந்தியர்களிடம் இப்போது மலிந்து காணப்படுகிறது ?

Root cause Analysis :
இஸ்லாமியர்களின் 1000 வருட ஆதிக்கத்தில் இருந்தும் கூட, ஹிந்துக்களிடம் சத்தியம் அழியாமல் தான் இருந்துள்ளது.

ஆனால், சத்தியமாக இருக்க வேண்டும் என்ற பண்பு படிப்படியாக கிறிஸ்தவர்களின் ஆட்சியில் இருந்து குறைய தொடங்கி, இப்பொழுது விடுதலை அடைந்த பின்பும், ஹிந்துக்கள் தன் குணமாக வைத்திருந்த இந்த சத்யம் (உண்மையாக இருத்தல்) இன்று குன்றி போய் உள்ளது என்பதே உண்மை.

"சத்யம் ஏவ ஜயதே" ( "Truth Alone Triumphs") என்று இன்றும் இந்தியா சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில் யாவருமே பொய் சொல்ல மனம் அஞ்சாததால், அரசன் முதல் பொது மக்கள் வரை பொய் பேச இன்று தயங்குவதில்லை.
நீதிமன்றத்தில் உள்ள ஏராளமான வழக்குகள் இதற்கு சாட்சி.

இந்த சத்தியத்தை உயிராக கொண்டவர் ஸ்ரீ ராமர்.
ராமரிடம் அன்பு உள்ளவன் பொய் பேச அஞ்சுவான். 
சத்தியத்தில் இருப்பான்.

இஸ்லாமியர்கள் காலம் வரை, ஹிந்துக்கள் பெரும்பாலும் அவரவர்கள் உயிராக மதிக்கும் தெய்வத்தை வைத்தோ, தாய் தந்தை மீதோ ஒரு சபதம் செய்து வாணிகமோ, உடன்படிக்கையோ செய்து கொண்டனர்.

இப்படி செய்த சபதம், வாய் மொழியாக இருந்தாலும், பெரும்பாலும் ஜெயித்துள்ளது. 

அரசன் வரை, செல்லும் வழக்குகள் மிக குறைவு அந்த காலங்களில்.

அப்படி வரும் வழக்கும், சில நாட்களில் தீர்வு காணப்பட்டு விடும்.
இது எப்படி சாத்தியமானது?

இந்த சபதமே யார் குற்றவாளி என்பதை காட்டி விடும் சக்தி கொண்டதாக இருந்தது.

பெரும்பாலும் குற்றம் செய்தவன், தன் தாய் மீதோ, தன் ப்ரியப்பட்ட தெய்வத்தின் மீதோ சபதம் செய்த பின், பொய் சொன்னதில்லை. பொய் சொல்ல தயங்குவான்.

இந்த சபதம் உள்ளுக்குள் சென்று மனதை தொடுவதால், ஹிந்துக்கள் முதலில் "சபதம் செய்", பின் பத்திரம், பட்டா போன்றவை எழுதிக் கொள்ளலாம் என்றனர். 

கிறிஸ்தவர்களின் ஆட்சி ஆரம்பித்ததில் இருந்து, பத்திரம், பட்டா போன்றவை மிக முக்கியம் என்று கொண்டு வரப்பட்டு, "சபதம் செய்" என்பது காணாமல் போனது.

நம் ஹிந்து தெய்வங்களின் மீது இருந்த த்வேஷ புத்தியே, இதற்கு காரணம்.

செய்யும் சபதம் ஹிந்துக்களின் தெய்வமாக இருந்தால், எப்படி இவர்கள் நம்பிக்கையை கெடுக்க முடியும்?
தங்கள் மதத்தை பரப்புவது மட்டுமே நோக்கம் கொண்ட இவர்கள், இது போன்று தெய்வத்தின் பெயரால் என்று சபதம் செய்ய அனுமதித்தால், 1000 வருடம் இஸ்லாமியர்கள் ஆட்சியில் மழுங்கி போன ஹிந்துக்கள் விழித்து கொள்ள வழி வகுக்கும்.
தன் மதத்தை பரப்ப இயலாமல் போகும் என்று கணித்து, அதனால் லீகல் சிஸ்டம் என்பதை மட்டுமே முக்கியப்படுத்தி, இவர்களின் தெய்வ நம்பிக்கை பயன் அளிக்கும் என்று தெரிந்தாலும், இதனை தந்திரமாக நம் வழக்கத்தில் இருந்து அகற்றினர்.

சபதம் செய்பவனுக்கு, மனதால் ஒரு வித சஞ்சலம் / நெருடல் ஏற்படும். இந்த சபதம் செய்யும் பழக்கம், காணாமல் போனதும், பத்திரத்தில் கை ரேகை பதித்தாலும், கை எழுத்தே போட்டாலும், "இது என் கை எழுத்து இல்லை" என்று தைரியமாக பொய் சொல்ல ஆரம்பித்தனர்.

பொய் சொல்ல பயந்த நீதி மன்றத்தில், இன்று சகஜமாக பொய் சொல்கின்றனர்.

நீதிபதிகள் ஒரு வழக்கை முடிக்க பல வருடங்கள் ஆகிறது.
இதனால். யார் உண்மை சொல்கின்றனர், யார் பொய் சொல்கின்றனர் என்பது கண்டு பிடிக்க முடியாது போய், ஒரு வழக்கு முடிய பல வருடங்கள் எடுக்கிறது.

உண்மையை நிலைநாட்ட எங்கும் பயன் படுத்தப்பட்ட சபதம் செய்யும் முறை, இன்று நீதி மன்றத்தில் மட்டும் இன்றும் உள்ளது.

இன்றும் ஹிந்துக்கள் கீதையை கொண்டோ,
பிற மதத்தில் மாறிய/மாற்றப்பட்ட ஹிந்துக்கள் அவர்களின் நூலையோ கை வைத்து சபதம் செய்கின்றனர்.

இந்த சபதம் செய்யும் பழக்கம், சகஜமாக ஒவ்வொரு வீட்டிலும், வீட்டில் சண்டை என்றால் ஊர் பஞ்சாயத்தில் என்று இந்த சபதம் என்ற மனோவியல் கொண்டே பல தீர்க்க படாத வழக்குகள் அரசன் வரை சொல்லாமலேயே அந்த காலத்தில் எளிதாக தீர்த்துள்ளனர்.

இன்றோ, அரச பதவியில் இருக்கும் அதிகாரி முதல் வீட்டில் உள்ள குழந்தை வரை பொய் பேச பயப்படுவதில்லை.

பத்திரத்தில் கையெழுத்தோ, சாட்சியை கண்டோ, கொலை செய்யவோ, திருடவோ இவர்களுக்கு (நமக்கு) பயமில்லை.

பணம் இருந்தால் தப்பிக்க வழி தேடுவோம் என்று தான் நினைக்கின்றனர்.

இந்த அதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால், அனைவரும் ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை தினமும் தியானிக்க வேண்டும். 



தந்தை செய்த சத்தியத்துக்கு தான் 14 வருடம் காடு செல்ல கூட தயார் என்று சென்ற ஸ்ரீ ராமர் இந்த நாட்டில் இருந்தவர் என்பதை நாம் மறக்க கூடாது.

14 வருடங்கள் வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரம் வரை இவர் கால் தடம் உள்ளது என்பதை மறக்க கூடாது.

ராமர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த வால்மீகி என்ற ஒரு வேடுவ குலத்தில் பிறந்த ரிஷி, நம் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பதையும் மறக்க கூடாது.

ராமர் ராவணனை தேடி வரும் பொழுது, நம் தமிழ் நாட்டில் இருந்த அகத்திய தமிழ்முனிவர் தன்னிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் தந்தார் என்பதையும் மறக்க கூடாது.

சத்தியத்தால் மட்டுமே நாட்டுக்கு மதிப்பு. 
இந்த தர்மமே அமெரிக்கா, ஜப்பான் மக்களிடம் காணப்படுகிறது.
 

"நாளை பார்க்க வருகிறேன்" என்று ஒரு ஜப்பான்காரன் சொன்னால், கட்டாயம் வருவான் என்று சொல்லலாம்.

இது அடிப்படை குணமாக இருந்த சமயத்தில், இந்தியன் மதிப்பு மிக்கவனாக இருந்தான்.
சரித்திரத்தில், வாஸ்கோடகாமா இந்தியாவை நோக்கி வந்தான்.
இந்தியர்கள் அந்த காலங்களில் கை நீட்டி கேட்பவர்களாக இல்லை.

இப்பொழுது எதற்கு எடுத்தாலும் இந்தியன் அமெரிக்காவையும், ஜப்பானையும் எதிர்பார்க்கும் நிலை வந்ததற்கு காரணம், இந்த சத்தியத்தை நாம் விட்டதே மூலகாரணம்.

ஸ்ரீ ராமர் வழியில் செல்ல செல்ல சத்தியம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வளரும்.

நாடு சத்தியத்தில் நிற்கும். மதிப்பு தானாக பெருகும்.

"சத்யம் ஏவ ஜயதே" ( "Truth Alone Triumphs") என்று சொல்லும் வாக்கு உண்மையாகும்.

ஏகலைவனும், துரோணரும்: ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய தவறான பிரச்சாரம்

ராணுவத்தில் பயங்கரமான ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன.

சாதாரண துப்பாக்கியில் இருந்து nuclear bomb வரை தயாரிக்கப்பட்டு,
அதை பயன்படுத்தும் முறை, குறிப்பிட்ட தகுதி உள்ள வீரர்களுக்கு மட்டும் சொல்லி தந்து, எதிரிகள் உள்ளே வந்து நாட்டை பாதிக்காமல் இருக்க, இந்த வீரர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கின்றனர்.



இது அனைத்து நாட்டு ராணுவமும் செய்கிறது என்பது நாம் அறிந்ததே..
ராணுவம் மட்டுமே அறிந்த இந்த அறிவியல், சாதாரண மக்களுக்கு தெரியாத வண்ணம் பாதுகாக்கப் படுகிறது.

மேலும்,
ஒரு சாதாரண மனிதன் தன் திறமையாலோ, அல்லது ராணுவ ரகசியத்தை திருடியோ, ஒரு அணு குண்டு தயாரித்தால் கூட, கடும் தண்டனைக்கு உள்ளாக நேரும். மரண தண்டனை வரை கூட சட்டம் செல்லும்.

இது போன்ற ஒரு நியாயமான நிகழ்வை நம் இதிஹாசத்தில் இருந்து எடுத்து, வேறு விதமாக அதை காட்டி, நம் ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய தவறான பிரச்சாரம் செய்ய முடியுமா ?
இப்படிப்பட்ட திருட்டுத்தனமான ப்ரசாரங்கள், நம் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் உள்ளது.

நம் ஹிந்து குழந்தைகள் என்ன படிக்கின்றனர்? என்று தெரியாமல் பெற்றோர்கள் இருக்க கூடாது.
ஹிந்து ஸ்கூல், காலேஜில் சேர்க்க ஆசை படவேண்டும் ஹிந்துக்கள்.. 

பாடங்கள், சரித்திரத்தை மறைத்தாலோ, தவறாக எண்ணம் கொண்டு எழுதப்பட்டாலோ, அதை பெற்றோர்கள், தெரிந்து, குறைந்த பட்சம் உண்மை சரித்திரத்தை குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டும்.

ஹிந்து குழந்தைகள் ஹிந்துக்களாக வளர்க்கப்பட, மிக முக்கிய பங்கு பெற்றோர்கள் கையில் உள்ளது. 
தரத்தை விட, குழந்தைகள் ஹிந்து விரோதியாகவோ, நாத்தீக பேய் பிடித்தவனாகவோ வளர்த்து விட கூடாது.?

நம் பாரத இதிஹாசத்தில் இருந்து, இந்த கல்வி அதிகாரிகளுக்கு கிடைத்தது ஒரே ஒரு கதை மட்டும் தான்.

ஏகலைவனும், துரோணரும்:
இது நமக்கு தெரிந்த நிகழ்வே.
துரோணர், தன் சிஷ்யர்களான பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தும் அஸ்திர, சஸ்திர முறைகளை சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார்.

ஏகலைவன் என்ற வேடுவன், துரோணரிடம் சென்று தனக்கும் சொல்லித் தர வேண்டினான்.

துரோணர் க்ஷத்ரியன் (army person) மட்டுமே இதை கற்றுக்கொள்ள தகுதி ஆனவர்கள் என்று கூறி, மறுத்து விட்டார்.



ஏகலைவன் துரோணரை மனதுக்குள் குருவாக ஏற்று, அவர் சொல்லிக் கொடுக்கும் முறைகளை மறைந்து நின்று கவனித்து, தினமும் தனியாக சென்று பயிற்சி செய்வான். இப்படியே பல மாதங்கள் கடந்தன.

ஒரு நாள், துரோணர் பாண்டவர்களுடன் காட்டில் நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறைக்க முடியாத படி, அதன் வாயை சுற்றியும், அதனை சுற்றியும் அம்புகள் தெய்க்கப்பட்டு இருந்தன. ஆச்சர்யம் என்னவென்றால், அந்த நாய் ஒரு காயமும் அடையாதவாறு, அம்புகளால் கட்டப்பட்டு இருந்தது.

இதை கண்டு அர்ஜுனனே ஆச்சர்யப்பபட்டான்.



தேடிப்பார்த்த போது, ஏகலைவன் எதிர் வந்தான்.

தன் குரு தன் முன் இருப்பதை கண்டு ஆனந்தத்தில் மகிழ்ந்தான். அவரை வணங்கி உங்கள் மூலமே இதனை கற்றேன் என்றான்.

துரோணர் இது உடனே கண்டிக்கப் பட வேண்டியது என்று நினைத்து, இது பேராபத்து என்றும் உணர்ந்து, "எனக்கு குரு தக்ஷிணையாக உன் கட்டை விரலை கொடு" என்றார்.

இப்படி ஏகலைவனும், துரோணரும் சந்தித்த நிகழ்வை குழந்தைகள் பாட புத்தகத்தில் மனப்பாடம் செய்யும் முறையில் வைத்து விட்டு, கேள்வி பதில் பகுதியாக, இவர்கள் கேட்கும் கேள்வியே விஷமத்தனமாக உள்ளது.
இவர்கள் குழந்தைகளிடம் கேட்கும் கேள்வி என்ன ?

கேள்வி :
இப்படி நடந்த இந்த ஸம்பவத்தை படித்ததன் மூலம், நீங்கள் (ஹிந்துக்களை பற்றி) என்ன நினைக்கிறீர்கள் ?
என்ன ஒரு விஷமமான கேள்வி ?!! 

இப்படி சாதுர்யமாக கேள்வி கேட்டு, படிக்கும் குழந்தைகளையும், சொல்லித் தரும் ஆசிரியர், பெற்றோர்களுக்கு மறைமுகமாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

"பாருங்கள், ஹிந்துக்கள் எப்படி ஒரு தாழ்ந்த வகுப்பில் உள்ள ஒருவனை தண்டித்து உள்ளனர்.
எப்படி இப்படி ஏகலைவனின் கட்டை விரலை குரு தக்ஷிணையாக கேட்கலாம்?!!"

இப்படியெல்லாம் ஒருவன் இந்த காலத்தில் அணுகுண்டு தயாரித்து விட்டு உயிரோடு இருக்க முடியுமா ?

ஏகலைவன் ஒரு வேடுவன்.
அம்பு விடுவதில் ஏற்கனவே வல்லவன்.

இவன் மறைமுகமாக கற்றுக் கொண்டது அஸ்திர, சஸ்திர ப்ரயோகம். அதாவது "அணுகுண்டு" போன்றவை உபயோகப்படுத்தும் முறை.
இவன் க்ஷத்ரியன் (Army person) அல்ல. இவன் ஒரு சாதாரண பிரஜை (Citizen).



துரோணர் நினைத்தது போலவே, இவன் துரியோதனனின் பக்கம் போய், அதர்மத்தின் வழியில் சண்டை போட்டான்.
இப்படி திருட்டு தனமாக ராணுவ ஆயுதங்கள் பயன்படுத்த கற்றுக்கொண்ட ஏகலைவன் என்ன செய்தான் என்று தெரிந்து கொள்ள
Ekalavya_War படிக்கவும்.


குழந்தைகள் history என்ற பெயரில் எந்த விஷத்தை (விஷயத்தை) படிக்கின்றனர்?  என்று பெற்றோரும் உணர்ந்து, நம் இதிகாசத்தை இவர்களும் சரியாக உணர்ந்து, என்ன உண்மையாக நடந்தது என்று சொல்லித்தரவேண்டும்.

1947ல் இருந்து இப்படிப்பட்ட விஷமக் கல்வியையே, கற்ற கூட்டம் தான், ஹிந்துவாக பிறந்தும் நாத்தீகனாகவும், ஹிந்துவின் பெருமையை சரியாக அறியாமல் தானும் சீரழிந்து, பல உயர் பதவியில் இன்று அமர்ந்து கொண்டு சீரழித்து வருகின்றனர்.

இனி வரும் தலைமுறை குழந்தைகளுக்காவது, பாடம் எப்படி இருந்தாலும் உண்மையை சரியாக சொல்லிக் கொடுக்கும் கடமை பெற்றோருக்கு இருக்கிறது.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 







இது தர்மமா? அதர்மமா? எளிதாக புரிந்து கொள்ள: சாஸ்திரம் வழி காட்டுகிறது

தர்மம் என்றால் என்ன?
எளிதாக புரிந்து கொள்ள:
1. எந்த ஒரு செயலை நாம் செய்தால், மற்றவர்களுக்கு பாதிக்குமோ, அது அதர்மம்.
2. எந்த ஒரு செயலை நாம் செய்தால், மற்றவர்களுக்கு நன்மை செய்யுமோ, அது தர்மம்.


உதாரணமாக :
ஒருவன் "கணித மேதை ஆக வேண்டும்" என்று படிக்க ஆசை பட்டாலும், ஆசை படாவிட்டாலும், மற்றவர்களுக்கு அதனால், ஒரு பாதிப்பும் இல்லை. ஆக இது தர்மம் என்று சொல்ல அவசியமில்லை.
இது அவரவர் இஷ்டம்.




ஒருவன் "இனி பொய் மட்டுமே பேசுவேன்" என்றான் என்றால், இவனால் பலர் கெட வாய்ப்பு உண்டு. பாதிப்பு உண்டு.
ஆக "பொய் பேசுவது" அதர்மம் என்று அறியலாம்.

ஒருவன் "இனி உண்மை மட்டுமே பேசுவேன்" என்றான் என்றால், இவனால் பலர் நல் வழியில் வர வாய்ப்பு உண்டு.
சமுதாயத்திற்கும் நன்மை உண்டு.
ஆக "உண்மை பேசுவது" தர்மம் என்று அறியலாம்.

ஒருவன் "அதர்மம் செய்பவனிடம் இருந்து தர்மத்தை காக்க, அவனிடம் பொய் கூட பேசுவேன்" என்றான் என்றால், இவனால் நல் வழியில் தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் காப்பாற்ற வாய்ப்பு உண்டு.
சமுதாயத்திற்கும் நன்மை உண்டு.
ஆக "அதர்மம் செய்பவனிடத்தில் பொய் பேசி தர்மத்தை காப்பது" தர்ம சூக்ஷ்மம் என்று அறியலாம்.



ஒருவன் "நான் மது அருந்துவேன்" என்றான் என்றால், இவனால் பலர் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு.
குடிப்பவனும் தன் உடலை கெடுத்துக்கொள்கிறான்.
குடிப் பழக்கத்தால் 70 வயது வரை வாழ்ந்திருக்க வேண்டியவன், 50 வயதில் உயிரை விட்டு குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விட வாய்ப்பு உண்டு.

குடிக்காதவனை குடிக்க வைத்து, அவன் ஆயுளையும் குறைத்த பாவம் வேறு. ஆக "மது அருந்துவது" அதர்மம் என்று அறியலாம்.

 அதே போல, எந்த ஒரு செயலையும் இது தர்மமா? அதர்மமா? என்று கேட்கும் கேள்விக்கு, நம் ஹிந்து சாஸ்திரம் வழி காட்டுகிறது.

தர்ம சூக்ஷ்ம வழியிலேயே ராமர், அதர்மம் செய்த வாலியை மறைந்து நின்று கொன்றார்.

தர்ம சூக்ஷ்ம வழியிலேயே ஸ்ரீ கிருஷ்ணர் அதர்மம் செய்த அனைவரையும் அவர்கள் வழியிலேயே சென்று, இறுதியில் பாண்டவர்களுக்கு வெற்றியை தேடி தந்தார்.