Followers

Search Here...

Showing posts with label இழந்தது.என்ன. Show all posts
Showing posts with label இழந்தது.என்ன. Show all posts

Wednesday 25 September 2019

ஜாதிகள் இருந்தாலும், "வர்ண கட்டுப்பாடு" இன்று இல்லை.. இதனால் நாம் இழந்தது என்ன? கல்வியில் மாற்றம் எப்படி கொண்டு வரலாம்?... ஒரு அலசல்.

"பாரத நாட்டை விட்டு, வெளிநாட்டில் போய் வாழலாம். வேலை கிடைக்கும். அதிக பணம் சம்பாதிக்கலாம்"
என்று ஒருவன் கூட போக விரும்பாத காலமாக, பாரத நாடு ஒரு சமயம் இருந்தது..
'பொருளாதாரத்தில்' பாரத நாடு உலகத்தை பொறாமை பட வைத்த சமயம்.
'வர்ணங்கள் கலக்காமல்' இருந்த காலம் அது.
'தொழில்கள் அவரவர்களுக்கு மட்டுமே பாதுகாக்கப்பட்டதால்',  பொருளாதாரத்தில் பாரத நாடு உலகத்தை பொறாமை பட வைத்தது.


பாரத நாட்டில் லட்சக்கணக்கான வருடங்களாக கடைபிடிக்கப்படும் "வேத தர்மத்தை" விட்டுவிட்டு, "புத்தர் வழியில் வாழ்வோம்" என்று போன பாரத மக்களால் வந்தது வினை.. பேரழிவு..
ஈரான் ஆரம்பித்து ஆப்கான், சிந்து தேசங்களில் பெரும்பாலானவர்கள் பௌத்தனாக ஆனதால்,
போர், வீரம் போன்றவை மறந்து, எல்லோரும் சந்நியாசி போல ஆகி இருந்தனர்.

947AD சமயத்தில் இஸ்லாமிய மதம் நுழைந்து, போர் பயிற்சி இல்லாத ஈரான், பாரத நாடான ஆப்கான், சிந்து தேசங்களை கைப்பற்றினர்..
பௌத்தனாக இருந்த ஈரான் அரசன் அமீர் சூரி, இஸ்லாமுக்கு மாறினான். 
ஆப்கானில் உள்ள கோர் (ghor) என்ற இடத்தில் பிறந்ததால், கோரி அரச பரம்பரை உருவானது..
அவன் குடும்பத்தில் தான் "முகம்மது கோரி" என்ற பிறப்பால் இஸ்லாமியன் பிறந்து, பாரத நாட்டை இஸ்லாமிய நாடாக ஆக்க முயன்றான்.

அன்று ஆரம்பித்தது, அந்நிய தர்மங்கள் படையெடுப்பு..
இந்திய பொருளாதாரத்தை கண்டு,
கோவிலில் இருக்கும் செல்வங்களை  கண்டு,,
அரசர்கள், பெண்கள் வைத்திருந்த வைர ஆபரணங்களை கண்டு,
உலகை பொறாமை பட வைத்தது.

அரேபிய நாட்டினர், 
பாரத நாட்டை கொள்ளை அடிக்க "1000 வருடம் நுழைந்தனர்"..

ஒரே ஒரு சோம்நாத் கோவிலை கொள்ளை அடித்தாலே போதும் என்று 18 முறை போர் தொடுத்தான் முகமது கஜினி என்றால், பாரத தேசம் முழுவதும் எத்தனை செல்வம் இருந்து இருக்கும்? என்று நினைத்து பார்க்க வேண்டும்.

1739ADல் ஈரான் தேசத்தில் இருந்து வந்த நாதீர் ஷா (Nadir Shah) என்ற இஸ்லாமியன், ஒரே ஒரு நாள் டெல்லியை தாக்கினான்.
டெல்லியில், ஒரே நாளில், 30000 பொது மக்களை கொன்றான். 
முகலாய அரசன் என்று இருந்த "முகமது ஷா" தோல்வியை ஒப்புக்கொண்டு 'என்ன வேண்டுமோ எடுத்து கொள்ள சொல்லிவிட்டான்'.
நாதீர் ஷா, அந்த ஒருநாளில் கொள்ளை அடித்து போன செல்வத்தை வைத்து கொண்டே, அவன் தன் ஈரான் நாட்டில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து 3 வருடம் வரியே வாங்கவில்லை.

டெல்லியில் ஒருநாளில் கொள்ளை அடித்தற்கே '3 வருடம் ஒரு தேசத்துக்கு சோறு போட்டான்' என்றால், பாரத தேசம் முழுவதும் எவ்வளவு செல்வங்கள் இருந்திருக்கும்? என்று அனுமானித்து பார்த்தாலே,
நாம் எப்படி வாழ்ந்து இருக்கிறோம்!!.. இப்போது எப்படி வாழ்கிறோம்!!
என்பது புரிந்து கொள்ள முடியும்.

நாட்டின் பொருளாதார நிலையை பார்த்து,
இஸ்லாமியன் மட்டுமா பாரத நாட்டுக்குள் நுழைந்தான்? 

இவர்களை தொடர்ந்து,
1400AD சமயத்தில், கிறிஸ்தவனான போர்ச்சுகல் வந்தான்.. 
இவன் பங்குக்கு,  சுமார் 500 வருடங்கள் பாரத நாட்டை கொள்ளை அடித்தான்.

இவர்களை தொடர்ந்து,
1600 சமயத்தில், கிறிஸ்தவனான டட்ச் வந்தான்.. 
இவன் பங்குக்கு, சுமார் 300 வருடங்கள் பாரத நாட்டை கொள்ளை அடித்தான்.

அதை தொடர்ந்து,
1600 சமயத்திலேயே, கிறிஸ்தவனான பிரிட்டிஷ் வந்தான்.. 
இவன் பங்குக்கும், சுமார் 300 வருடங்கள் பாரத நாட்டை கொள்ளை அடித்தான்.


அதை தொடர்ந்து,
1600 சமயத்திலேயே, கிறிஸ்தவனான பிரெஞ்ச்காரன் வந்தான்.. 
இவன் பங்குக்கும், சுமார் 300 வருடங்கள் பாரத நாட்டை கொள்ளை அடித்தான்.

அவனவன் அவன் பங்குக்கு கொள்ளை அடித்து, அவர்கள் ஊர்களில் சேர்த்தனர்.

1947ADல் இனி சுரண்ட இடமில்லை என்றபின்,
இரண்டு உலக போர் ஹிட்லரால் அரங்கேற்றப்பட்டதால்,
பாரத நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

போகும் நேரத்தில், சரியான ஆலோசனை செய்யாமல், பாரத நாட்டை பிரித்தனர்.

பாரத தேசத்தின் சிந்து பகுதியை (Today "Pakistan") மிச்சப்பட்ட (பாக்கி) இடமாக கருதி, பாகிஸ்தான் என்று பெயரில் பிரித்தனர்.
இஸ்லாமியர்களாக ஆகி போன, ஹிந்துக்கள் வாழட்டும் என்று வழி செய்தனர்.
விளைவு,
அங்கு இருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு விட்டன. 
"சிந்து தேசம், கேகேய தேசம்" இன்று இஸ்லாமிய நாடாக மாற்றப்பட்டு விட்டது.

ராமபிரான் புதல்வன் "லவன்" அமைத்த 'லவபுரம்', இன்று லாகூர் (Lahore) என்ற பெயரில் இஸ்லாமிய தேசமாகி விட்டது.
ராமபிரான் சகோதரர் "பரதன்" அமைத்த 'தக்ஷ சீலம்', இன்று டக்சிலா (Taxila) என்ற பெயரில் இஸ்லாமிய தேசமாகி விட்டது.
ராமபிரான் சகோதரர் "பரதன்" அமைத்த 'புருஷ புரம்', இன்று பேஷாவர் (Peshavar) என்ற பெயரில் இஸ்லாமிய தேசமாகி விட்டது.
இன்னும் எத்தனை இழந்தோமோ.. !!!



தேசிய கீதத்தில், "சிந்து" என்று சொல்லி வாழ்த்துகிறோம்..
ஆனால் சிந்து தேசம் நம்மிடத்தில் இல்லை.

சிந்துவை பிரித்து விட்டதால், பாரத தேசத்தை பிரிட்டிஷ், அரேபியன் உளறி கொட்டிய "இண்டியா" (INDIA) என்ற பெயரையே நமக்கு கொடுத்து விட்டனர்..
"கிரேக்க, அரேபிய இஸ்லாமியர்கள், பிரிட்டிஷ், போர்ச்சுகல், டச், பிரெஞ்சு" என்று உலக மக்கள் யாவரும். இந்தியாவை நோக்கியே வந்தனர் என்று சரித்திரம் காட்டுகிறது.

இந்திய பொருளாதாரம் எந்த கட்டுமானத்தால் இப்படி வலுவாக இருந்தது? நாம் ஏன் அன்று உலகை நம் பக்கம் இழுத்தோம் என்று கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டாமா?

வர்ண கட்டுப்பாடுகள் இருந்த, அந்த காலத்தில், JOB COMPETITION இல்லை.
"அவரவர்கள் அவர்கள் பரம்பரையாக செய்த தொழிலை" செய்தனர்.

"ப்ராம்மணன்", ப்ரம்மத்தை சிந்தித்து கொண்டே இருப்பான். 
"அவனுக்கு உலக ஆசைகள் கூடாது" என்று வர்ணம் கட்டு படுத்துகிறது.

"ப்ராம்மணனுக்கு"
'வைஸ்யனை' போல தொழில் செய்ய திறன் இருந்தாலும்,
'சூத்திரனை' போல கூலிக்காக உழைத்து சம்பாதிக்க திறன் இருந்தாலும்,
'க்ஷத்ரியனை'  போல நாட்டை போரில் முதல் ஆளாக இருந்து காக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும்,
"மற்றவர்கள் தொழிலை கற்று கொள்ள அனுமதி தந்ததே தவிர, அந்த தொழில் செய்ய கூடாது" என்று ப்ராம்மணனை வர்ண கட்டுப்பாடு தடுத்தது.

"பிராம்மண" குலத்தில் பிறந்த துரோணர்,
அனைத்து அஸ்திர சாஸ்திர வித்தைகளும் கற்று இருந்தார்.
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கற்று கொடுத்தார்.
ஆனால் எளிய வாழ்க்கை தான் வாழ்ந்தார். 

இவர் க்ஷத்ரியனை போல சண்டை போட வந்தபோது, "இது வர்ணத்தை மீறிய செயல்" என்று பாண்டவர்கள் சொல்லியும் சண்டைக்கு வந்தார்.


பிராம்மண தர்மத்தை மீறிய 'துரோணர்' போரில் மரணித்தார். 
"வர்ண கட்டுப்பாடு" கெட்டு போக ஆரம்பித்த காலம், மஹாபாரத காலம் என்று சொல்லலாம்.
3102BCக்கு கொஞ்சம் முன் நடந்தது மஹாபாரத போர். 
3102BCல் கலி யுகம் ஆரம்பம்.

வர்ண கட்டுப்பாடு இருந்ததால்,
வைசியன் (business people) தனக்கு ஒரு வேலை சென்று சம்பாதிக்க முடியும்.. என்று ஆசை இருந்தாலும்,, வர்ண கட்டுப்பாடு "வேலை தேடாதே தொழில் தொடங்கி, வேலை கொடு" என்கிறது..

"ப்ராம்மணன், வைஷ்யன், க்ஷத்ரியன்" இவர்கள் யாவருமே அவரவர்களுக்கு உரிய ஆன்மீக தேடல், தொழில், பாதுகாப்பு போன்றவற்றில் மட்டுமே இருந்ததால்,
அன்றைய காலத்தில், பாரத நாட்டுக்கு "வேலையில்லா திண்டாட்டம்" இல்லாமல் இருந்தது..

வேலைக்கு செல்லும் சூத்திரர்கள் (Employee), தான் படித்த அதே படிப்பை
க்ஷத்ரியனும் படித்து விட்டான்..
ப்ராஹ்மமணன் கூட படித்து விட்டான்.
வைஸ்யனும் படித்து விட்டான் என்ற நிலை ஏற்படாமல், 
தொழில் போட்டி இல்லாமல் இருந்தது.

அவரவர் தொழிலை செய்யுங்கள்..
அடுத்தவர் தொழிலை திறன் இருப்பதால் கற்பேன் என்று கற்றாலும், அதை வைத்து வேலைக்கு சென்று விட கூடாது,
"சூத்திரனாக (employee) இருப்பவர்கள் வாழ்க்கையில் போட்டியை உருவாக்க கூடாது" என்று வர்ண கட்டுப்பாடு வழி காட்டியது..




இதனால்,
"க்ஷத்ரியன், வைஸ்யன், பிராம்மணன்" அனைத்து தொழிலையும் கற்று இருந்தாலும், வேலைக்கு சென்று "சம்பாதிக்க கூடாது" என்று தடை விதிக்கிறது வர்ணம்.

தவத்தில் காலம் கழிக்கும் ப்ராம்மணர்கள் தனக்கு திறமை இருந்தும், மற்றவர்கள் தொழிலை தெரிந்து போட்டியாக வாழ கூடாது என்று இருந்தனர்.
பெரும்பாலும் 1857AD வரை, ப்ராம்மணர்கள் ஏழைகளாக தான் இருந்தனர். அதை பற்றி அவர்களும் கவலைப்படவில்லை.
"இவர்களை காப்பது கடமை" என்று அனைவரும் உதவி செய்தனர்.
அரசர்கள் இவர்களுக்கு கோவிலுக்கு அருகில் இடங்களை கொடுத்து வாழ வழி செய்தனர்.

1800AD சமயத்தில், வீரமுள்ள க்ஷத்ரிய அரசர்கள் இல்லாமல் போய் விட, ப்ராம்மணர்கள் வாழ கூட முடியாத நிலைக்கு ஆகினர்.

கிறிஸ்தவர்கள் "நாட்டை ஆள வேண்டும்" என்று அடித்தளம் போட்ட போது, ஆன்மீக எண்ணமே அதிகம் கொண்ட ப்ராம்மணர்களை தனக்கு கணக்கு வழக்கு எழுத பயன்படுத்தி கொண்டான்..
வாழ வழி தெரியாத சில ப்ராம்மணர்கள், அரசர்கள் இல்லாத நிலையில், உயிர் வாழ்வதே கடினம் என்ற நிலையில், கொடுத்த சம்பளத்தில் ப்ராம்மணன் வாழ ஆரம்பிக்க, ஆரம்பித்தது "பிராம்மண த்வேஷம்".

சூத்திரன் (employment) தொழிலை, பிராம்மணன் செய்ய ஆரம்பித்த காலம் அது.

100 வருடங்கள் ப்ராம்மணன், கிறிஸ்துவ பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆசிரியர், கணக்காளர் என்று வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தனர்.
'பிராம்மணன் எதிர்க்க மாட்டான்.. சாது. நியாமாக நடப்பான்' என்பதால், பிரிட்டிஷ்கார கிறிஸ்தவர்கள், ப்ராம்மணர்களை தன் வேலைக்கு சேர்த்து கொண்டான்.

இந்த 100 வருட காலத்தில் தான், பிராம்மண சமுதாயம் தீண்டாமை என்ற பெயரில் வெறுப்பை காட்டினர்.
பாரதியார் போன்றவர்கள் இது பிராம்மண குணம் அல்ல என்று கோபப்பட்டனர்.
இப்படி நியாயம் பேசும் அவரை கூட, பிராம்மண சமுதாயம் மதிக்காமலேயே இருந்தனர். 

அரசர்கள் அழிந்த பின்,
வாழ்க்கையை நடத்த கூட முடியாத படி 900 வருட இஸ்லாமிய ஆட்சியில் பிராம்மணர்கள் நசுக்கப்பட்டதால்,
ஆங்கிலேய காலத்தில் "ஏதோ அரசாங்கம் என்ற பெயரில், மரியாதையாக நடத்துகிறார்கள்" என்றதும், இந்த இடைப்பட்ட காலத்தில் பிராம்மண சமுதாயம் காட்டிய அலட்சியம், 'ஈவே ராமசாமி' போன்றோர் மூலம்,  பிராம்மண வெறுப்பை உமிழ வைத்தது. 

பிராம்மண சமுதாயம் சுதந்திரம் பெற்ற பின்னர், இந்த 100 வருட கிறிஸ்தவ ஆட்சியில் தாங்கள் காட்டிய அலட்சியத்தை உணர்ந்தாலும்,
ஈவே ராமசாமி போன்றோர் தொடர்ந்து பிராம்மண வெறுப்பை உமிழ்ந்தனர்.

ராமபிரானின் பெயரை "ராமசாமி" என்று தானே வைத்து கொண்டு இருந்தாலும்,
"பிராம்மண வெறுப்பால்", அவர்கள் கொண்டாடும் தெய்வங்களையும்  எதிர்க்கும் அளவுக்கு வெறுப்பு உண்டானது.


பிராம்மண வெறுப்பால், தன் தகப்பன் பாட்டன் வழிபட்ட தெய்வங்களையே உடைக்கும் அளவுக்கு வெறுப்பு உண்டானது. 

இஸ்லாமிய காலத்தில் கோவிலை உடைத்தார்கள், கொள்ளை அடித்தார்கள், மதம் மாற்றினார்கள் என்றால், "கிறிஸ்தவர்கள் ஆட்சியில்" பிராம்மணர்கள் செய்த தீண்டாமையை மறக்க முடியாமல்,
இவர்களும் "பிள்ளையார் சிலையை உடைப்பேன்" என்று உடைக்க, தமிழ்நாடு முழுக்க தெருவுக்கு தெரு பிள்ளயார் அமர்ந்து விட்டார். 

காரணத்தோடு காட்டப்பட்ட பிராம்மண வெறுப்பு, மூடத்தனமான வெறுப்பாக மாறி, ஹிந்துக்கள் அனைவரும் வழிபடும் தெய்வங்களையும் சேர்த்து கிண்டல் செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்தது.

ஈவே ராமஸ்வாமி, "பிராமண வெறுப்பை" ஆரம்பித்து,
கடைசியில் "நாத்தீகர்களுக்கு வழிகாட்டி" ஆனார்.

1947ல் விடுதலை பெற்ற போது,
"ப்ராம்மணன் வேலைக்கு செல்கிறான்!!.. விடுதலை கிடைத்து விட்டது!!.. எங்களுக்கு வேலை கொடுங்கள்"
என்று சூத்திரர்கள் (enployee) அரசை கேட்டனர்.
நியாயமான கோரிக்கை.

1947ல் விடுதலை பெற்ற போது, "மீண்டும் வர்ண கட்டுப்பாட்டை கொண்டு வந்து, நாட்டை வழி நடத்துவோம்" என்றார் ராஜாஜி.

ராஜாஜி வழியில் நாம் சென்று இருந்தால், இன்று "ப்ராம்மணன் இருக்கும் கோவிலை, பூஜைகளை, வேதத்தை காப்பாற்றி கொண்டு, பேராசை இல்லாமல் அடக்கத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்திருப்பான்."
அரசர்கள் காத்தது போல, அவனுக்கு சிறு மானியம் கொடுத்து இருந்தால், "பேராசை இல்லாமல் அடக்கத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்திருப்பான்" ப்ராம்மணன்.
"ஈவே ராமசாமி" போன்றவர்கள் ராஜாஜி சொன்னதை புரிந்து கொள்ள முடியாமல் எதிர்க்க,
"அனைவருக்கும் கல்வி, எதுவேண்டுமானாலும் படிக்கலாம்.. யார் வேண்டுமானாலும் படிக்கலாம்" என்று சட்டம் செய்தனர்..

விளைவு,
"நாட்டை காப்பதே என் தர்மம்" என்று இருந்தவர்கள் படித்து விட்டு, வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தனர்.

"பேராசை, பொருளாசை இல்லாமல் வாழ்ந்த ப்ராம்மணன், தெய்வ சிந்தனையே என் தர்மம்" என்று இருந்தவர்கள் படித்து விட்டு,
வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தனர்.

அதே போல வைஸ்யர்களும் (Business) வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தனர்.
சுதந்திரம் அடைந்த போது அளிக்கப்பட்ட இந்த "அனைவருக்கும் கல்வி.. அனைவருக்கும் சம வாய்ப்பு" என்ற சட்டம், 70 வருட காலத்திலேயே, "வேலையில்லா திண்டாட்டம்" என்ற பெரிய பிரச்சனையை பாரத மக்களுக்கு தந்து விட்டது.

"அனைவரும் படிக்கலாம்" என்ற சட்டம்,
ப்ராம்மணனுக்கு வைஸ்யனுக்கு பெரும் வாய்ப்பு தர, உலகத்தில் உள்ள பல வேலைகளில் இவர்கள் நுழைந்து விட்டனர்.

சூத்திரன் தன் வாய்ப்பை இழந்தான்..  
"வேலையில்லா திண்டாட்டம்" தலை எடுக்க ஆரம்பித்தது..

வர்ண கட்டுப்பாடு இருந்த காலத்தில், சூத்திரன் சூத்திரனோடு மட்டும் போட்டி போட்டான்.

"வர்ண கட்டுப்பாடு தேவை இல்லை..யாரும் எதுவும் படிக்கலாம்" என்ற நிலை வந்த போது,
சூத்திரன் (employee), "சூத்திரனோடு, சூத்திரனாக ஆகி விட்ட 'ப்ராம்மணன், க்ஷத்ரியன், வைஷ்யன்' என்று அனைவரிடத்திலும் போட்டியை சந்திக்க வேண்டியிருந்தது".

காலப்போக்கில்,
எந்த வேலை அதிகம் பணம் தரும்? என்று பார்க்கும் அறிவு ஏற்பட்ட போது, சூத்திரனிடம் இருந்த பல வித வேலை திறன்கள் அழிந்து போனது...

சிற்ப கலையில் கை தேர்ந்த குடும்பம், தன் திறனை விட்டது..
ஆயுத கலையில் கை தேர்ந்த குடும்பம், தன் திறனை விட்டது..
வேதத்தை அப்படியே மனப்பாடமாக சொல்லும் ப்ராம்மண குடும்பம், தன் வேதத்தை விட்டது..
தலை முடி திருத்தும் கலையில் கை தேர்ந்த குடும்பம், தன் திறனை விட்டது..
நடனத்தில், வாத்தியங்கள் வாசிப்பதில் கை தேர்ந்த குடும்பம், தன் திறனை விட்டது..
விவசாய கலையில் கை தேர்ந்த குடும்பம், தன் விவசாய திறனை விட்டது..

எந்த படிப்பில் பணம் வரும்?
என்று பெரும்பாலானவர்கள் சொல்கிறார்களோ, அதை படிக்கவே கோடிக்கணக்கான பாரத மக்களும் ஆர்வம் காட்டினர்..

இதனால் பல வித தொழில்கள் (business), பல வித திறன்கள் (Skill) உள்ளவர்கள் இல்லாமல்,
பாரத நாட்டில் 120 கோடி மக்கள் இருந்தும், வேலைக்கு தகுதி, திறன் உள்ளவர்கள் குறைவாக ஆகினர்..


60 மார்க் வாங்குபவனும், அதிக பணம் சம்பாதிக்க மருத்துவ படிப்பு எப்படியாவது சேர பார்க்கிறான்!!
கல்லூரிகளில் லஞ்சம் உருவானது.

நடிகன் ஆகி விட்டால், பணம் கிடைக்கும் என்பதால் "படிப்பே வராதவன், நடிகனாக ஆகி விடுவோம்!!" என்று முயற்சிக்கிறான்..
நடிகனாக பெரு முயற்சி செய்கிறான்.

படிப்பே வராதவன், "கிரிக்கெட் விளையாடி, இந்தியாவுக்கு IPL போன்றவற்றில் நுழைந்து ஆகி விடுவோம்" என்று முயற்சிக்கிறான்..
கிரிக்கெட் வீரனாக IPL போன்றவற்றில் விளையாடி விட்டால், "பணம் கிடைக்கும்" என்பதால் பெரு முயற்சி செய்கிறான்.

கோடிக்கணக்கான மக்கள் "சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" என்ற வட்டத்தையே சுற்றுகின்றனர்..

வர்ண கட்டுப்பாடு இல்லாததால்,
ஒவ்வொரு மனிதனும், 120 கோடி மக்களுடன் போராட வேண்டி உள்ளது..

"அதி புத்திசாலிகள், அதிக திறன் கொண்டவர்கள்" ஜெயிக்கிறார்கள்..

கோடிக்கணக்கான மக்கள் இந்த பெரும் போட்டி உலகத்தை கண்டு பயப்படுகின்றனர்.

ஒரு வகுப்பில் கூட ஒருவன் தானே முதல் மதிப்பெண் வாங்குவான். அதே வகுப்பிலேயே சராசரி மாணவனும் உண்டே.. அவனுக்கு வாழ வழி காட்ட முடியாமல் செய்தது. 

அற்புதமான "சிற்ப கலையில்" சிறந்த குடும்பத்தில் பிறந்து, அதை விட்டு  விட்டு, மருத்துவம் சேர வேண்டும் என்று படிக்க வந்து, தோற்று, உலகத்தின் பார்வையில் தோல்வியாளனாக தலை குனிகிறான்.

"சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" மட்டுமே அதிக பணம் சம்பாதிக்க வழி என்று ஆனதால்,
இந்த துறையில் திறன் இல்லாதவர்கள், அதி புத்திசாலித்தனம் இல்லாதவர்கள், குடும்பம் கலாச்சாரம் மீது பற்று உள்ளவர்கள், வாழ்க்கையை தொலைத்து
கூலி வேலை, கிடைத்த வேலை என்று செய்து கொண்டு, காலத்தை தள்ளி கொண்டு உள்ளனர்...

வர்ண கட்டுப்பாடு இல்லாததால், "சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" மட்டுமே பணம் தரும் வழிகள் என்று நினைத்து, தன் பரம்பரை தொழிலை விட்டனர்...

"இசையே தொழிலாக" கொண்டு இருந்த குடும்பத்தில், "இசை பணம் தராது" என்று முடிவு செய்து, இசையை விட்டனர்....

"சவர தொழில்" செய்தவன், "சவர தொழில் பணம் தராது" என்று முடிவு செய்து, சவர தொழிலை விட்டான்.

எல்லோரும் "சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" நோக்கி சென்றனர்..

இசையை விடாமல் கொண்டு சென்ற ஒரு குடும்பத்தில், திடீரென்று ஒரு இசை ஞானி உருவானவர்.. 
"இசை சோறு போடாது" என்று பலர் போன போது, இசை, இவர் ஏழு தலைமுறைக்கு சோறு போடும் செல்வத்தை கொடுத்தது..

சவர தொழில் பணம் தராது, என்று கைவிட்டவனை, ஸ்பா, unisex சலூன் போன்றவை பார்த்து சிரிக்கிறது...
கோவில்களில் ஒரு "கல்லில் சங்கிலியை உருவாக்கும்" திறன் கொண்ட ஒரு குடும்பம், தன் தொழிலை விட்டதால், இது போன்ற திறன் வெளிநாட்டவர்கள் இன்று செய்து காட்டினால், இந்தியன் வாய் பிளக்கிறான்.

வர்ண கட்டுப்பாட்டை புரிந்து கொள்ளாததால்,
இன்று தொழில் உருவாக்க, வைசியன் இல்லை.. 
வைஸ்ய குடும்பத்தில் பிறந்தவன், இன்று படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறான்.

உலக ஆசைகளில் இருந்து ஒதுங்கி, மற்றவர்களுடன் போட்டி பொறாமை இல்லாத, ப்ராம்மணன் இல்லை.
இன்று மிக குறைவாகவே உள்ளனர். பெரும்பாலும் சூத்திரனாகி (Employee) போன ப்ராம்மணர்களே உள்ளனர்.
ப்ராம்மண குடும்பத்தில் பிறந்தவன், இன்று படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறான்.

"உயிரையே கொடுக்க எப்போதும் தயார்" என்று சொல்லி திரிந்த க்ஷத்ரியன் பரம்பரையும் இன்று படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு உள்ளனர்.
ராணுவத்தில் எல்லையில் இருப்பபர்களை தவிர, நாட்டை உயிரை கொடுத்து காக்க உண்மையில் யாரும் இல்லை.

வர்ண கட்டுப்பாட்டை விட்டதால், 120 கோடி மக்களும் எனக்கு வேலை வேண்டும்!! என்று கேட்கும் நிலையை ஏற்பட்டு விட்டது.


யார் வேலை தருவார்கள்? 
எந்த வேலை அதிக பணம் தரும்? 
என்ற கேள்வியே எழுவதால்,
அற்புதமான திறன்கள் அழிந்து  விட்டது.
இப்பொழுது "கம்ப ராமாயணம், நாயமார்கள் பதிகங்கள், ஆழ்வார்கள் பாசுரங்கள்" போன்ற தமிழை புரிந்து கொள்ள கூட உரை தேவைப்படுகிறது...

தகப்பன், பாட்டன், முப்பாட்டன் காலம் தொட்டு பரம்பரையாக பெற்ற திறனை விட்டு விட்டு,
எல்லோரும் "சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" நோக்கி ஓட,
'லட்சத்தில் ஒருவன்' வெற்றி பெற, 
மற்றவர்கள் 'சேற்றில் விழுந்தது போல வாழ்வை தொலைத்து' கொள்கின்றனர்...

"நடிகனாக வேண்டும்" என்று ஆசைப்படும் எவருமே,
"நடிப்பில் சாதிக்க முடியாது.. பணம் கிடைக்காது" என்ற நிலை ஏற்பட்டால் அங்கு கூட செல்ல மாட்டார்கள்..

"கிரிக்கெட் பணம் தரும்" என்பதால் ஆர்வம் காட்டுபவர்கள், "பேட்மின்டன் பணம் தராது" என்று ஒதுக்கினர்..
இன்று ஒரு பெண் அதில் சாதனை செய்து கோடிக்கணக்கான பணத்தை காட்ட, இப்பொழுது அதை நோக்கி ஓடுகின்றனர்..

வர்ண கட்டுப்பாடை விட்டதால், ஆட்டு மந்தை ஆகி விட்டோம்..
செல்வத்தில் புரண்ட பாரத மக்கள், உலக மக்கள் நம் ஊரை தேடி வந்த காரணத்தை புரிந்து கொள்ள முடியாமல்,
அற்புதமான ஹிந்து தர்மத்தை கூட புரிந்து கொள்ள முடியாமல்,
ஆட்டு மந்தை போல புத்தி ஆனதால், 
'ஆடு மேய்ப்பவனை' கூட நம்ப தயாராகி விட்டோம்.

ஆடு மேய்ப்பவன் "பணம் தருகிறேன்" என்றால், நம் குலதெய்வத்தை கூட மறக்க துணிகிறோம்.

வர்ண கட்டுப்பாடு இருந்த வரை, நம் நாட்டை நோக்கி உலகம் படையெடுத்தது..
வெட்கமே இல்லாமல், நம் நாட்டில் 1000 வருடங்கள் இருந்து கொண்டு கொள்ளை அடித்தது.

இவர்களை துரத்திய பின், வர்ண கட்டுப்பாடு அமைத்து ஒரு சமுதாயம் அமைத்து இருந்தால், இந்த 70 ஆண்டுகளில் மீண்டும் இந்திய தேசம் வளர்ந்த நாடாக ஆகி இருக்கும்..

அவனவன் பரம்பரையாக செய்த தொழிலில்,
அனுபவங்களோடு, அற்புதங்கள் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி இருக்கும்.
தேசத்தை காக்கும் குடும்பங்கள், தேச நலனிலேயே கருத்தாக இருந்து இருக்கும்..
ப்ராம்மணன், அமைதியாக ஒழுக்கம் மீறாமல் பக்தி செய்து கொண்டு இருந்திருப்பான். வேத ரகசியங்களை விளக்கி இருப்பான்.
வைஸ்யர்கள், புதிய தொழில் கொண்டு வர வேண்டிய அவசியத்தால், சூத்திரர்களிடம் (employee) உள்ள பல வித திறனால் கோடிக்கணக்கான புதிய வியாபாரங்களை இந்தியாவிலேயே ஆரம்பித்து இருப்பார்கள்..

ஒரு இந்தியன் கூட, வெளியூர் சென்று பிச்சை எடுக்க தேவை இல்லை என்று நிலை ஏற்பட்டு இருக்கும்..

ஈவே ராமசாமி போன்ற அறிவு ஜீவிகளின் மழுங்கிய புத்தியால், சரித்திரத்தில் என்ன நடந்தது? என்று புரிந்து கொள்ள முடியாத நிலையால், ப்ராம்மணன் ராஜாஜி மொழிந்த "வர்ண கட்டுபாட்டை"
ப்ராம்மணன் மீது இருந்த கோபத்தால் எதிர்த்தனர்..

இந்திய நாட்டில் இன்று உள்ள பெரும் பிரச்சனையே...
120 கோடி மக்களுக்கு எப்படி வேலை கொடுப்பது?.. என்பது தான்.  இன்னும் மக்கள் தொகை அதிகமானால், இந்த பிரச்சனையை முடிவில்லாததாக ஆகி விடும். 
தான் வாழ, ஒவ்வொரு மனிதனும், "எதையும் செய்ய துணிந்து விடுவான்".

120 கோடி மக்களுக்கு எப்படி வேலை கொடுப்பது? இந்த எண்ணமே தவறு...

"70 கோடி மக்கள் மட்டுமே", வேலை செய்பவர்களாக (Sudra) ஆக்க வேண்டும்.
120 கோடி மக்களும் வேலைக்கு செல்ல (Sudra) வழி செய்ததே, 
இந்த பெரும் பிரச்சனைக்கு காரணம்.

இதற்கு அவர்களுக்கு (70 கோடி மக்களுக்கு) பல வித திறன்கள் அளிக்கப்பட வேண்டும்.

ஒருவர் சிற்ப வேலை செய்பவராக இருந்தால்,
அவர் குழந்தை பள்ளியில் சேரும்போது, அதே "சிற்ப வேலையை செய்ய ஆர்வம் உள்ளவராக ஆக்க விருப்பமா?" என்று அவர் தந்தையிடம் கேட்க வேண்டும்.
அதன் அடிப்படையில் பாடம் அமைய வேண்டும்..
அந்த குழந்தை வளர்ந்து அதே துறையில் நுழைய ஆசைப்பட்டால், அந்த குழந்தைக்கு இட ஒதுக்கீடு (reservation Quota) தர வேண்டும்..

"ஜாதி அடிப்படையில், பொருளாதார அடிப்படையில்" இட ஒதுக்கீடு கொடுத்து பார்த்து விட்டோமே.
விளைவு..
120 கோடி மக்களும் அனைவரும் படித்து விட்டு, வேலைக்கு நிற்கிறார்கள்...  அனைவருக்கும் வேலை இல்லை.
விவசாயம் செய்ய ஆள் இல்லை. 
கோவிலில் பூஜை செய்ய வேதம் அறிந்த ஆள் இல்லை. 
மர வேலை செய்ய ஆள் இல்லை.
உழைக்கவே ஆள் இல்லை.
தொழில்கள் உருவாக்க ஆள் இல்லை.


போதுமே இந்த ஜாதி அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு!!
பிரச்சனையை அதிகமாக்கும், வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கும் இதை மாற்றி அமைக்கலாமே.

தந்தை இப்பொழுது செய்யும் தொழில் சம்பந்தமாகவே பள்ளியில் இருந்து படிக்க ஆரம்பிக்கும் போது, அவர் குழந்தை தன் தந்தையிடமே பல விஷயங்களை தெரிந்து கொள்ளும். 
திறன் இயற்க்கையாக அதிகமாக இருக்கும்.

ஒரு வேளை பள்ளி முடிந்து, சிற்ப கல்வியை கற்றும், வேறு துறை செல்ல ஆர்வம் இருந்தால், இட ஒதுக்கீடு இல்லாமல், தேர்வு வைத்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்படி இரண்டு தலைமுறைக்கு செய்தால், 70 கோடி மக்களிடம் பல வித திறன்கள் கிடைக்கும்.

20 கோடி மக்கள் தொழில்கள் உருவாக்கி, 70 கோடி மக்களிடம் உள்ள இந்த திறன்களை பயன்படுத்த பழக்க வேண்டும்.
தொழில் செய்பவர்கள், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் போது, பள்ளிகளில் இவர்களுக்காக தொழில் தொடர்பான கல்வியே கற்று தர தரத்தை உயர்த்த வேண்டும்.

இப்படிப்பட்ட பள்ளிகளில் இவர்கள் சேரும் போது, தொழில் செய்பவர்கள் தன் குழந்தைகளுக்கும் தொழில் அனுபவங்களை சொல்லி சொல்லி தயார் செய்வார்கள்.

20 கோடி மக்களை, நாட்டுக்காக வாழ பயிற்சிக்க வேண்டும்.

10 கோடி மக்களை, ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து நல்லதை அவ்வப்போது சொல்லி, அமைதியாக வாழ பயிற்சிக்க வேண்டும்.  வேதத்தை படித்து, அதில் உள்ள ரகசியங்களை வெளிப்படுத்த இவர்களுக்கு உற்சாகம் கொடுக்க வேண்டும்.

2 தலைமுறையில், மீண்டும் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறும்.

"போட்டி, பொறாமை இல்லாமல், stress இல்லாத வாழ்க்கை" இந்தியர்கள் காண முடியும்...

கல்வியில் மாற்றம் தேவை..
சிற்ப கலையில் உள்ள தகப்பன், தன் மகனை அதன் வழியில் கொண்டு செல்ல ஆசைப்பட்டால், அதற்கான பாட திட்டங்கள் வேண்டும்.

வேதம் கற்ற ப்ராம்மணன் தன் பிள்ளை வேதம் கற்க அனுப்பினால், அதற்கான பாட திட்டங்கள் வேண்டும்.

பள்ளிகளில், தகப்பன் செய்யும் தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட, அவன் பிள்ளைக்கு மேலும் தொழிலை வளர்க்க உதவும் பாட திட்டங்கள் பள்ளியிலேயே சொல்லி தர வேண்டும்.

விவசாயம் செய்யும் தகப்பன், தன் பிள்ளையை விவசாயம் செய்து பெரும் பணக்காரனாக ஆக்க ஆசைப்படும் விதமாக, விவசாயத்தின் நுணுக்கங்கள், பள்ளியிலேயே சொல்லி தர வேண்டும்.

ஓவிய கலையில் தேர்ந்த தகப்பன், தன் பிள்ளையை பள்ளியில் சேர்த்தால், தகப்பனை மிஞ்சும் அளவுக்கு ஓவியனாக காலத்திற்கு ஏற்ப பாட திட்டங்கள் வகுத்து பள்ளியில் சொல்லி தர வேண்டும்.

கல்வியில் பெரும் புரட்சி தேவைப்படுகிறது.
பல வித கல்விகள் பள்ளிகளிலேயே இருக்க வேண்டும். 

நடக்குமா?
நம் பாரத நாடு மீண்டும் "பொருளாதாரத்தில் மட்டுமின்றி, தன்னிறைவு பெற்ற நாடாக" ஆகுமா?
நாம் நாடு நாடாக அலைந்து, வேலைக்கு செல்லும் நிலை மாறி,
மீண்டும் உலகை நம் நாட்டின் பக்கம் திருப்ப முடியுமா? 

முடியும்..
சிறு சிறு ஊர்களாக எடுத்து, கல்வியில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால், முடியும்.
120 கோடி மக்களின் திறன் அளவிட முடியாததாகி விடும் என்பதில் சந்தேகம் இருக்காது.

பாரத தேசத்தை தெய்வங்கள் காக்கிறது.
தெய்வங்கள் நமக்கு வழிகாட்ட, அப்படி ஒரு ஹிந்து தலைவனை கொண்டு, இதை சாதிக்கும் என்று நம்புவோம்.


வாழ்க பாரத நாடு. 
வாழ்க பாரத மக்கள்.


"வர்ண கட்டுப்பாடு" இருந்ததால் தான், வேலையில்லா திண்டாட்டம் என்ற பேச்சே இல்லாமல், ஒவ்வொருத்தரும் செல்வந்தர்களாக இருந்தோம் என்ற உண்மையை புரிந்து கொள்வோம்.
"வர்ண கட்டுப்பாடு" இருந்ததால் தான், நம் பாரத நாட்டை நோக்கி உலகம் வந்தது என்று உண்மையை அறிவோம்.