Followers

Search Here...

Saturday 29 June 2019

ரங்கநாதர் ராமானுஜருடன் பேசிக்கொண்ட நிகழ்ச்சி. தன்வந்திரி சன்னதி எப்படி வந்தது?

ஒரு சுவையான சம்பவம் ஸ்ரீ ராமானுஜர் அவதார சமயத்தில் நடந்தது.
ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்க்க சென்றார்.
அப்பொழுது தைல காப்பு சாத்தி இருந்தார் பெரிய பெருமாள்.




என்ன காரணத்தாலோ, துணியால் போர்த்திக்கொண்டு படுத்து இருந்தார் பெரிய பெருமாள்.
இதை பார்த்த ஸ்ரீ ராமானுஜருக்கு பெரிய பெருமாளுக்கு உடம்புக்கு ஏதோ சௌகரியம் இல்லையோ என்று மனதில் தோன்றியது.

அர்ச்ச அவதாரம் தானே, கல் தானே என்று நினைக்கும் அஞானிக்கு, ஸ்ரீ ராமானுஜரின் நிலை எப்படி புரியும்?

பெரிய பெருமாளை பார்த்து "ஏன், திருமேனி பாங்கு இல்லையோ?" என்று கேட்டே விட்டார் ஸ்ரீ ராமானுஜர்.

ஸ்ரீ ராமானுஜரை பார்த்தார் பெரிய பெருமாள். பக்தன் மனோபாவத்துக்கு ஏற்று, பெருமாள் பழகுவார்.

அர்ச்ச அவதாரமாகவே பேசினார்,
"ஆமாம். கொஞ்சம் சரியாக இல்லை." என்று சொன்னார் பெரிய பெருமாள்.

"ஏன் இப்படி ஆனது?" என்று ஸ்ரீ ராமானுஜர் கேட்க,






"எனக்கு தயிர் சாதத்துடன், நெல்லிக்காயை வைத்து நிவேதனம் செய்து விட்டனர். நாமும் பக்தன் கொடுப்பதால் சாப்பிட்டு விட்டோம்.
இதனால் கொஞ்சம் உடலுக்கு ஒத்துக்காமல் ஆகி விட்டது. ஜுரம் வந்து விட்டது" என்றாராம் பெரிய பெருமாள்.

தன் பக்தனிடம், பக்தனின் மனோ நிலைக்கு ஏற்றாற்போல லீலை செய்வார் பகவான்.

அதுவரை ஸ்ரீ ரங்கராஜ்யம் நடத்தும் பெரிய பெருமாளுக்கு, தன் ரங்க ராஜ்யத்தில் அரச மருத்துவன் இல்லையாம்.
இதற்காக ஸ்ரீ ராமானுஜரின் மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்ற சங்கல்பம் செய்தார், பெரிய பெருமாள்.

பெரிய பெருமாளோ அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார்.
ஸ்ரீ ராமானுஜர் 'பெருமாளுக்கு ஜுரம்' என்று கேட்டவுடன், கண்ணீர் விட்டார்.

ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்த்து,
"ஒரு மாமிச சரீரமாக இருந்தால், ஒரு மருத்துவரை கூட்டிக்கொண்டு வந்து காட்டலாம்.
உங்களுடைய அப்ராக்ருத திவ்ய சரீரத்துக்கு எந்த மருத்துவரை (டாக்டரை) கொண்டு வந்து காட்டுவேன்?"
என்று கண்ணீர் விட்டார்.

"நமக்கு தான் டாக்டர் இருக்கிறாரே"
என்றாராம் பெரிய பெருமாள்.

"அதை தேவரீர் தான் சொல்ல வேண்டும்" என்று ராமானுஜர் பிரார்த்திக்க,
"நம் சன்னதியில், 'தன்வந்திரி'யை பிரதிஷ்டை செய்யும். அவர் என்னை அடிக்கடி பார்த்துக்கொள்வார்"
என்று பெரிய பெருமாள் சொன்னார்.
தன்வந்தரி சன்னதி மடப்பளி அருகிலேயே உள்ளது.



அன்று முதல்,
பெரிய பெருமாளுக்கு எந்த பதார்த்தங்கள் தயார் செய்தாலும், அந்த பதார்த்தங்கள் பெரிய பெருமாளுக்கு உகக்குமா? என்று தன்வந்திரி எதிரில் வைத்து, அவர் அனுமதித்த பின் தான், பெரிய பெருமாள் நிவேதனம் செய்வாராம்.
பெரிய பெருமாளும், தன்வந்திரி அனுமதித்த பதார்த்தங்களை மட்டும் தான், அன்று முதல் தொடுவாராம்.
அப்படி ஒரு ப்ராதான்யம் (முக்கியத்துவம்) பெரிய பெருமாள், தன்வந்திரிக்கு கொடுத்துவிட்டார்.

தன்வந்திரியின் பெருமையை காட்ட, ஸ்ரீ ராமானுஜரின் பக்தி பாவத்தை காட்ட பெரிய பெருமாள் செய்த ரசிக்கதக்க லீலை இது.

ஸ்ரீ ராமானுஜர் அவதார காலம் 1017 AD முதல் அடுத்த 120 வருடங்கள் வரை.
2017ADல் ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி ஹிந்துக்களால் கொண்டாடப்பட்டது.

இப்படி பெரிய பெருமாளே தனக்கு மருத்துவன் என்று வைத்து இருக்கும் தன்வந்திரியும் அவரே தான்.




தானே மருத்துவனாகவும் இருக்கிறேன் என்று காட்டும் அற்புதமான லீீலை.


Friday 28 June 2019

Short Story on Hindu Dharma..and about Outsiders....Introspect our history.





Bharat Nation - Before 947AD

Man 1: Ganesha is my god. Who is your god?

Man 2: Murugan is my god. Who is your god?

Man 3: Vishnu is my god. Who is your god?

Man 4: The god is Jyothi Swaroop. God is everywhere. I follow Advaita principle. Who is your god?

Man 5: Shivaya Namaha. Shiva is my god. Who is your god?

Man 6: My Parents are My God.

Man 7: I don't believe in God.

Everyone worshiped with their own believes.
Kings built temple for everyone, according to their believes.
Everyone had Divine Thoughts, but none had an intention to fight "In the name of God". 




Even if Kings fight with other kingdom, they fought in seperate battle field and never attacked common people, or destroyed temples or loot temple's wealth.

When Chola king conquered till Kasi, When Chandragupta Maurya ruled till Iraq, they never destroyed temples of other believes.
A King who worship Lord Shiva, never showed hatred to destroy Narayan Temple.
It was the world without quarrels.

The kings were focusing happily on development and security of their people and kingdom. 

Everyone in Bharat Land, lived peacefully in the Dharma which is Sanatana (A disciplined Rule which exist for a limitless period in this holy Bharat Land).

Bharat Nation - Ghori Dynasty Entrance After 947AD

Man 8: God is there. You have to trust him. Do not simulate him. Do not idolize him. Our Scripture is the only true holy book which tells us what God want from us. 
Everyone must accept his teaching, without raising question as mentioned in our Holy book. what about your belief in God?

Man 1: Ganesha is my god. Who is your god?

Man 2: Murugan is my god. Who is your god?

Man 3: Vishnu is my god. Who is your god?

Man 4: The god is Jyothi Swaroop. God is everywhere. I follow Advaita principle. Who is your god?

Man 5: Shivaya Namaha. Shiva is my god. Who is your god?

Man 6: My Parents are My God.

Man 7: I don't believe in God.

Man 8: Not acceptable. We cannot accept your worship of God with names and building a temple for the God. All of you will go to hell. Either hold on to my beliefs or We will try to destroy you or your belief. We will use any options to achieve this, by using sword and threat.

With the Entry of these outsider called Man 8, Everyone's worship got obstructed.






Man 8 attacked kings and attacked and killed common people, destroyed temples and looted golds to his country.
Bharat Land started encountering, fights "In the name of God" by these outsiders.

Instead of Working on People and Kingdom's growth and security, Kings ended up fighting with these barbarian outsiders who were fighting "In the Name of God" to impose their believes.

Land Of Bharat People who lived in Harmony with their own believe under the Vedic Sanathana Dharma were identified by these outsiders as "Sindhus" when they cross Sindhu River from Western World.  
These Outsiders with their Western Accent were unable to pronounce names existed in Bharat Land. They tried to refer all Bharat people as "Sindhus" and but ended up twisting this word to "Hindus", "Indus", "Indos" etc.,

Yes, "Hindus" is the name given by outsiders to People in Bharat Land who lived under Sanathana Dharma. 
Indus a twisted name by these outsiders became our country name as INDIA by British when they left us by splitting Bharat Land into 2 parts. Though our country name is still Bharat, we still accept this Twisted name called "INDIA" which is recognized now in outside world as well, even after we got independence. 
People of Bharat Land wisely agreed these twisted names, even though it does not have any meaning.

If Outsiders says "Hindus" is a word which does not exist 1000yrs before, the name Hindus or Hindu religion should be removed", 
we can agree and should be renamed to Vedic Religion or Rishi Religion. 
Also, 
if Nation name can also change from INDIA to Bharat as well, it would be great revival for Land of Bharat to get a meaningful name.  

If outsiders want to remove word Hindus, People of Bharat are happy to change this to Vedic or Rishi Religion and change the Nation name INDIA to Bharat

Bharat Nation - Vasco da Gama Entrance after 1498 AD
Man 9: God exists. Roman Empire killed our God along with 2 more people around 30AD. 
You should know that he died, for us. So he will come back for us. You should believe him and Don't ask when he will come back.
If you don't believe him you will go to hell. He is the supreme God, who gave his life just for you and have great love for you. So trust him. What about your belief? 



Man 1: Ganesha is my god. Who is your god?

Man 2: Murugan is my god. Who is your god?

Man 3: Vishnu is my god. Who is your god?

Man 4: The god is Jyothi Swaroop. God is everywhere. I follow Advaita principle. Who is your god?

Man 5: Shivaya Namaha. Shiva is my god. Who is your god?

Man 6: My Parents are My God.

Man 7: I don't believe in God.

Man 8: God is there. You have to trust him. Do not simulate him. Do not idolize him. Our Scripture is the only true holy book which tells us what God want from us. 
Everyone must accept his teaching, without raising question as mentioned in our Holy book. 
Man 9 is a pure liar. He is also an idol worshiper. We cant accept a God who got killed. A murdered man cannot be a God and he wont come back.
We cannot accept the worship of God in any specific names, or by building a temple. 
All of you will go to hell. Hold on to my beliefs. Otherwise, We will try to destroy you with any options, either with sword or threat.

Man 9: Not at all .. Not at all. The scripture that man 8 says was created after our sacred book.
We don't agree with what they say. All of you, worshiping satans (devil).
You must believe our God only, who was killed and who will come back. 
You must worship Him.
We will lure you with money or shame your gods with whatever way we can, 
and somehow we will strive to undermine your confidence and belief. 
We will try to convince you to accept our God who got killed and will make you says 'he will come back for us'.  This is your duty to believe in our God.

With the Entry of 2 outsider (Man 8, Man 9), Everyone's worship got extremely obstructed. Civil Disturbance erupted not just in Land of Bharat, but entire world suffered with too many battles "In the name of God"



Both outsiders are prime enemies to each other. They Hate each other's believes and holy book and attack each other. 

These 2 outsiders, now attacked kings, attacked and killed common people and destroyed temples.

Land of Bharat encountered the Darkest period due to consistent battles in the "Name of God".

Kings who were focusing on People and Kingdom's Growth and Security, ended up fighting with these 2 barbarian outsiders for 1000 years.

People of Sanatana Dharma, so called "Hindus", can't do much on the History, which had happened. 

But atleast must take care of themselves, not falling into false religions by realizing their pride and broadmind set of Sanathana Vedic Dharma which they are part of. 
False religion instills hatred on other belief system. Its not the fault of Individuals. 
If other system had the habit of instilling hatred on other believes, Hindus must be little more cautious.
Sanathana Dharma never instilled hatred on other believes and only Hindus even today still speak in Broadmind and seeing little +ve aspects in other believes as well. 

So it is very important for Hindus not to fall in False Religions, which instills hatred in the minds of people who gets converted as well. 
More than outsiders, now a days, converts who were hindus, are more dangerous to destroy other believes.  Its not the fault of those converts, but the false religion they are in instill such hatred mindset into them. Its better to avoid such narrow mind believes and stay as Hindu which allows even an Atheist to stay in his belief.

Hindus Must Unite and understand the Broadmind set, which this Great Dharma gave us and still giving us.  
Be Proud of Hindu Dharma.

Interested to Read More? Click Here -> How was Pakistan during Mahabharat Period? Who were ruling?



Thursday 27 June 2019

ஹிந்து மதம் உருவான கதை... வந்தேறிகள் யார்? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...









பாரத நாடு - 947AD க்கு முன்பு
மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது
மனிதன் 7: எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.

அவரவர் வழிபாடுகள் நடந்தது. அரசர்கள் அனைவருக்கும் கோவில் அமைத்தான். தெய்வ சிந்தனை இருந்ததே தவிர, தெய்வத்தின் பெயரால் சண்டைகள் இல்லாத உலகம்.
அரசர்கள் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றில் நிம்மதியாக செயல் பட்டார்கள்.

சனாதனமாக (காலம் காலமாக) உள்ள தர்மத்தில் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்தனர்.


பாரத நாடு - கோரி படைகள் நுழைந்து 947ADக்கு பின்




மனிதன் 8 : இறைவன் இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் புனித நூல் ஒன்று மட்டும் தான் சொல்கிறது. எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும். உங்கள் கடவுள் நம்பிக்கை எப்படி?
மனிதன் 1 : இறைவன் இருக்கிறார். விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 2 : இறைவன் இருக்கிறார். முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 3: இறைவன் இருக்கிறார். மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 4: இறைவன் இருக்கிறார். தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 5: இறைவன் இருக்கிறார். சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 6: இறைவன் இருக்கிறார். எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
மனிதன் 7: எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.
மனிதன் 8 : ஒப்புக்கொள்ளவே முடியாது. இறைவனுக்கு பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது.
நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள்.
ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.
அவரவர் வழிபாடுகள், வந்தேறிகளால் தடைபட்டது.
அரசர்களையும் வந்தேறிகள் தாக்கினர், மக்களையும் தாக்கினர், கட்டப்பட்டு இருந்த கோவில்களையும் தாக்கி சேதப்படுத்தினர்.




தெய்வத்தின் பெயரால் சண்டைகள் உருவாக்கப்பட்ட காலம்.

அரசர்கள் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றில் நிம்மதியாக செயல்பட முடியாமல், இந்த வந்தேறிகளுடன் சண்டை இடும்படியாக காலம் அமைந்தது.

சனாதனமாக (காலம் காலமாக) உள்ள தர்மத்தில், நிம்மதியாக வாழ்ந்த பாரத மனிதர்களை,
வந்தேறிகள் சிந்து தேசக்காரன் என்று அடையாள படுத்தி,
உச்சரிப்பு என்றுமே சரியாக இல்லாத இந்த வந்தேறி அந்நியர்கள்,
சிந்து என்று சொல்ல தெரியாமல், "ஹிந்து" என்று அடையாள படுத்தி கூப்பிட்டான்.

ஹிந்து என்ற வார்த்தை பாரத நாட்டில் இருந்து எடுக்க வேண்டும் என்று வந்தேறிகள் ஆசைப்பட்டால், சனாதன மதம் என்றோ,  ரிஷி மதம் என்றோ, மாற்றி கொண்டு விடலாம்.
அதனோடு, இந்தியா என்ற பெயரையும், பாரத் என்று மாற்றி விடலாம்.

பாரத நாடு - Vasco da Gama நுழைவுக்கு 1498 ADக்கு பின்




மனிதன் 9: இறைவன் இருக்கிறார். அவரை கொன்று விட்டார்கள்.
அவர் இறந்து போனது, நமக்காக என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் நமக்காக திரும்பவும் வருவார். எப்பொழுது வருவார் என்று கேட்க கூடாது.
அவரை நம்பாது இருந்தால் நீங்கள் நரகம் போவீர்கள்.
உங்களுக்காக உயிர் விட்ட அவரே உங்கள் தெய்வம்.
மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
மனிதன் 7: எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.
மனிதன் 8 : இறைவன் இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை பற்றி நாமாக உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் புனித நூல் மட்டும் தான் சொல்கிறது.
எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும்.
மனிதன் 9 சொல்வது சுத்த பொய். இவன் உருவ வழிபாடு செய்பவன். இறந்தவர்களை இறைவன் என்று சொல்கிறான்.
ஒரு கொலை செய்யப்பட்ட மனிதனை ஒப்புக்கொள்ளவே முடியாது.
நீங்கள் சொல்லும் எந்த முறையையும் ஒப்புக்கொள்ள முடியாது.
இறைவனுக்கு பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது.
நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள்.
ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.

மனிதன் 9: கிடையாது.. கிடையாது. மனிதன் 8 சொல்லும் புனித நூல், எங்கள் புனித நூல்க்கு பின் உருவாக்கப் ப்ட்டது.
இவர்கள் சொல்வதில் எங்களுக்கு உடன்பாடு எப்பொழுதுமே இல்லை. நீங்கள் வணங்கும் அனைவரும் சைத்தான்கள்.
கொல்லப்பட்டாலும் அவரே கடவுள் என்று நீங்கள் நம்பியே ஆக வேண்டும்.
அவரை நீங்கள் வணங்க வேண்டும்.
உங்களுக்கு பணம் தந்தாவது, உங்கள் தெய்வத்தை கிண்டல் செய்தாவது, எப்படியாவது உங்கள் நம்பிக்கையை குலைக்க பாடுபடுவோம்.
இதுவே எங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமை.

அவரவர் வழிபாடுகள், 2 வந்தேறிகளாலும் தடைபட்டது.
இரண்டு வந்தேறிகளுக்கும் கோட்பாடுகளில் வேற்றுமை உண்டு. பகையும் உண்டு. இவர்களுக்குள்ளும் தாக்குதலும் உண்டு.
அரசர்களையும் வந்தேறிகள் தாக்கினர், மக்களையும் தாக்கினர், கட்டப்பட்டு இருந்த கோவில்களையும் தாக்கி சேதப்படுத்தினர்.

தெய்வத்தின் பெயரால், வந்தேறிகளால் பெரும் சண்டைகள் உருவாக்கப்பட்ட இருண்ட காலம்.

அரசர்கள் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றில் நிம்மதியாக செயல்பட முடியாமல், இந்த வந்தேறிகளுடன் சண்டை இடும்படியாக காலம் அமைந்தது.

ஹிந்துக்கள் என்று வந்தேறிகளால் அறியப்படும், சனாதன தர்மத்தில் உள்ளவர்கள், தங்கள் பெருமை உணர்ந்து கொண்டாலே, பொய் மதங்களில் வீழாமல் பார்த்து கொள்ளலாம். 


Wednesday 26 June 2019

புராணங்களை சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர்த்தங்களை சொல்லி தருவது இல்லையே!! அது ஏன்? அதற்கு என்ன காரணம்?.. ஒரு அலசல்.

'ராமாயணம், மகாபாரதம், சிவ புராணம், விஷ்ணு புராணம், கந்த புராணம், சக்தி புராணம்'  போன்ற புராணங்களில்,
  • 'தெய்வங்களின் அவதாரத்தை' பற்றியும், 
  • 'தெய்வங்களின் அவதார காரணத்தை' பற்றியும் 
தெரிந்து கொள்கிறோம்.



இந்த புராணங்களை பற்றி  மகான்களும் பெரியோர்களும், 
கோவில்களில், பொது மேடைகளில், உபன்யாசம் செய்து விவரிக்கின்றனர்.

பாகுபாடு இல்லாமல், பொது மக்கள் அனைவருக்கும் இந்த புராணங்கள் சொல்லப்படுகிறது.
இஷ்டப்பட்டவர்கள் கேட்கிறார்கள்.

அது மட்டுமில்லாது,
இந்த புராணங்கள் யாவும் மேடை நாடகமாகவும், புத்தகமாகவும், டிவி, சினிமாக்களில் காட்சியாகவும் நடித்து  காட்டப்படுகிறது.

மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை ('இதி' - இவ்வாறு, 'ஆச' - நடந்தது) TV சீரியலாக பார்க்காத பாரத மக்கள் இருக்க மாட்டார்கள்.
பாரத நாட்டில் உள்ள கிறிஸ்தவன், இஸ்லாமியன் கூட, ஸ்ரீ ராமரை பற்றி தெரிந்து கொள்ள செய்தது.
ராமாயணம் பார்த்து,
"ராமனை போல மனிதன் வாழ வேண்டும்" என்று ஆசைப்படாத மனிதன் இருக்க முடியுமா?
  • தன் பெற்றோரை எந்த அளவுக்கு மதித்தார் ஸ்ரீ ராமர்.
  • ஜாதி பேதம் இல்லாமல், வேடுவன் குகனை நண்பன் என்றார்.
  • பலம், பராக்ரமம் இருந்தும், கர்வமே இல்லாமல் அனைவரையும் மதித்தார்.
  • எத்தனை துயரங்கள் தன் வாழ்வில் வரும் போதும் தன் தர்மத்தை விடாமல், மனம் கலங்கி சோர்ந்து விடாமல், வாழ்ந்து காட்டினார் ஸ்ரீ ராமர்.
  • சுயமாக 14000 ராக்ஷர்களை ஒருவனாக போரிட்டு அழிக்கும் பராக்கிரமம் இருந்தும், நல்லோர்களை (விபீஷணன், சுக்ரீவன்) தன்னுடன் சேர்த்து கொண்டார்.
  • கஷ்ட காலத்திலும், பலம் கொண்ட வாலி போன்ற பிறர் மனைவியை அபகரித்து தன் தம்பியை கொலை செய்ய துடிப்பவன் துணையை எதிர்பார்க்கவே இல்லை. தீயவன் பலம் கொண்டவனாக இருந்தாலும், தன் லாபத்திற்காக அவர்களுடன் துணை சேரவில்லை.
  • சீதையை மீட்க பஞ்சவடியில் (nasik) இருந்து, 2000 KM நடந்து சென்று, எதிரியை கொன்று, சீதையை மீட்டு, கடைசி வரை ஏகபத்னி வ்ரதனாகவே வாழ்ந்து மனித சமுதாயத்துக்கு வழி காட்டினார்.
  • காமத்தை ஜெயித்து, கோபத்தை ஜெயித்து, பொறாமையை ஜெயித்து. வெறுப்பை ஜெயித்து, எந்த நிலை ஏற்பட்டாலும் மனிதன் தர்மத்தில் வாழ்ந்து காட்ட முடியும் 
என்று மனிதர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார் ஸ்ரீ ராமர்.



புராணங்கள் படிப்பதன் மூலம் "தெய்வங்கள் 3 காரணங்களுக்காக அவதாரம் செய்கிறார்கள்" என்று தெரிந்து கொள்கிறோம்.
1. சனாதன (காலம் காலமாக இருக்கும்) வேத தர்மத்தை, (இன்று ஹிந்து தர்மம் என்று சொல்கிறோம்) அழிக்க நினைக்கும் தீயவர்களை ஒடுக்கவும்,

2. ஹிந்து தர்மத்தை காக்கும் சாதுக்களை, இவர்களை போன்ற தீயவர்களிடம் இருந்து காக்கவும்,

3. சனாதன (காலம் காலமாக இருக்கும்) வேத தர்மத்தை, (அதாவது ஹிந்து தர்மத்தை) அழிய விடாமல் என்றுமே நிலை நிறுத்தவும்,
தெய்வங்களின் அவதாரம் உலகில் நடக்கிறது. நடந்து கொண்டே இருக்கிறது.

இதை பரமாத்மா வாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, தெளிவாக சொல்கிறார்.
பரித்ராநாய சாதுனாம்
வினாசாய ச துஶ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்த்தாப னார்தாய ஸம்பவாமி யூகே யூகே

தர்மத்தை காக்கும் 'சாதுக்களை காக்கவும்',
தர்மத்தை அழிக்க நினைக்கும் கொடியவர்களை அழிக்கவும்,
தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும்,
ஒவ்வொரு யுகத்திலும் நான் தோன்றுகின்றேன்
என்று ஸ்ரீ கிருஷ்ணர், தெய்வங்களின் அவதார ரகசியத்தை தெளிவாக சொல்கிறார்.
ஹிந்து தர்மத்துக்காக வாழ உறுதி கொள்ளும் போது,
'தெய்வம் நமக்கு துணை நிற்கும்' என்ற உண்மை, புராணங்களை படிப்பதன் மூலம் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.

புராணங்களை படிப்பதன் மூலம்,
"ஹிந்து தர்மத்தில் திடமான நம்பிக்கையுடன் வாழ்ந்தால், நம்மை தெய்வங்கள் காக்கும்" என்ற தெளிவு, நாளடைவில், நமக்கு உண்டாகி,
ஒரு இறை உணர்வை நமக்குள் உண்டாக்குகிறது.


புராணங்களை படிப்பதன் மூலம்,
"கடவுள் காப்பாற்றுவார்" என்ற தைரியமும் நமக்கு கிடைக்கிறது. உலகை தைரியமாக சந்திக்க மனோதிடம் உண்டாகிறது.

புராணங்களை படிப்பதன் மூலம்,
"வாழ்வில் துயரங்கள் வந்தாலும், இறைவனின் கருணையை பற்றி கொண்டு, தாண்டி விடலாம்" என்ற நம்பிக்கை நமக்கு கிடைக்கிறது.

புராணங்கள், இதிஹாசங்கள் பற்றி தெளிவாக தெரிந்து, புரிந்து கொள்வதால், வாழ்வில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. 
தெய்வத்தை பற்றிய ஒரு புரிதல், ஓரளவுக்காவது உண்டாகிறது.
ஆன்மீக வளர்ச்சிக்கு நம்மை உந்துகிறது.

'தர்மத்தில் நின்று, தர்மத்தில் இருக்கும் சாதுக்களை கேலி செய்யாமல் இருந்தால்', நம்மை நிச்சயமாக தெய்வங்கள் காக்கும்
என்று புராணங்களை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அற்புதமான புராணங்கள், இதிஹாசங்கள் அனைவருக்கும் ஜாதி பேதமின்றி பொது மக்கள் அனைவருக்கும் சொல்லப்படுகிறது.

புராணங்களை அனைவருக்கும் சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர்த்தங்களை அது போல சொல்லி தருவது இல்லையே. அது ஏன்? அதற்கு என்ன காரணம்?

மாந்த்ரீகம் செய்பவர்கள் சில மந்திரங்களை உச்சாடனம் செய்கிறார்கள். "ஓம் ஹ்ரீம் க்லீம் ..." என்று சொல்லி கேட்டு இருப்போம்.

இந்த மந்திரங்கள் பீஜ (seed) மந்திரங்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த மந்திரங்கள் ஸித்தி ஆனவர்கள், நமக்கு உபதேசம் செய்தால், நமக்கும் அந்த மந்திரங்கள் பலன் அளிக்கும். 

"மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை" என்று சொல்லப்படுகிறது.
அர்த்தம் புரிந்து கொண்டு, மந்திரங்களை பல லட்சம் தடவை உச்சரிக்கும் போது, இந்த மந்திரங்கள் தரும் பலன், சக்தி வாய்ந்தது.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு சில முக்கிய 'காரணங்கள்' உண்டு.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்: 
காமம், கோபம், பொறாமை குணம் கொண்டவர்கள், தகுதி இல்லாதவர்கள், சில மந்திரங்களின் அர்த்தங்கள் புரிந்து கொள்வதால், அதை தெய்வ அனுக்கிரஹம் கிடைக்க பயன்படுத்தாமல்,  தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
க்லீம் என்ற பீஜ மந்திரத்தை, ஒரு குரு மூலம் உபதேசம் பெற்று,
ஜபம் செய்ய செய்ய,
'எந்த தெய்வத்தை நினைத்து ஜபம் செய்கிறோமோ, அந்த தெய்வங்கள் நமக்கு சப்படுவார்கள்'. சில சமயம் தெய்வங்களின் ஆவேசம் கூட நமக்குள் ஏற்படலாம்.



க்லீம் என்ற பீஜ மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று, ஜபம் செய்ய செய்ய, 'யாரை நினைத்து ஜபம் செய்தோமோ, அவர் நம்மை விரும்ப ஆரம்பிப்பார்' என்று பொதுவாக பலன் சொல்லப்படுகிறது.
இந்த பலனை, ஆன்மீக தேடல் இல்லாத ஒருவன், நாத்தீகன், மாந்த்ரீகம் செய்பவன், காமம், கோபம், பொறாமை குணம் கொண்டவன் அறிந்து கொள்ளும் போது,
தெய்வத்தை வசியம் செய்ய முயற்சிக்காமல், பெண்களை வசியம் செய்ய பயன்படுத்த ஆரம்பிக்கிறான். 
சிவபெருமான் தன் மனைவியான பார்வதியை மணந்த பின்னும், கைலாயத்தில் தியான யோகத்திலேயே இருந்தார்.
தான் இருப்பதே நினைவில்லாமல் இருக்கும் சிவபெருமானின் கடாக்ஷத்தை பெற, 
பார்வதி தேவி காஞ்சிக்கு வந்து, காஞ்சி வரதனாக இருக்கும் பரவாசுதேவனிடம் வழி கேட்டாள்.

காஞ்சி வரதன் பார்வதிக்கு "க்லீம்" என்ற பீஜ மந்திரத்தை உபதேசம் செய்து, சிவபெருமானை நினைத்து ஜபம் செய்ய சொன்னார். (திருக்கார்வானம் கள்வபெருமாள்)

சிவபெருமானை நினைத்து 'க்லீம்' என்ற பீஜ மந்திரத்தை ஜபம் செய்து தான், சிவபெருமானின் கடாக்ஷத்தை பெற்றாள் பார்வதி தேவி. 
காஞ்சியில், காமாக்ஷி என்ற பெயர் பெற்றாள் பார்வதி. 

"கணவன் மனைவியிடையே பரஸ்பரம் அன்பு இல்லாமல் இருப்பவர்கள்" காஞ்சி காமாக்ஷி கோவிலுக்கு சென்று, காமாட்சியை தரிசித்தால், "தம்பதிகளுக்குள் அன்பு உண்டாகும்" என்று லன் சொல்லப்படுகிறது.

'தெய்வத்தை குறித்து சொல்லும்' சக்தி வாய்ந்த மந்திரங்களை, மாந்த்ரீகம், வசியம் செய்ய பயன்படுத்துவார்கள் என்பதால், மந்திரங்களை, மந்திரங்களின் அர்த்தங்களை சொல்லாமல் இருந்தனர் பெரியோர்கள். 

இது போன்ற ஆபத்துகள் இருப்பதால்,
மந்திரங்கள் அனைவருக்கும் சொல்லப்படாமல், தகுதியும், பக்குவமும் அடைந்தவர்களுக்கே, உபதேசமும், அதன் அர்த்தங்களையும் விளக்கினர்.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம்: 
"தெய்வங்கள் மூன்று காரணங்களுக்காக அவதாரம் செய்கிறார்கள்", என்று புராணங்களை படிக்கும் போது தெரிந்து கொள்கிறோம் என்று பார்க்கிறோம்.
  1. வேத தர்மத்தை காக்கும் சாதுக்களை காக்கவும்
  2. வேத தர்மத்தை அழிக்கும் துஷ்டர்களை அழிக்கவும்,
  3. வேத தர்மத்தை காக்கவும்,
தெய்வங்களின் அவதாரம் நடந்து கொண்டே இருக்கிறது.


'தர்மத்தை காப்பதற்கே' தெய்வங்களின் அவதாரம் நடக்கிறது.

"தர்மத்தை விட்டு விட கூடாது" என்று தெய்வங்கள் ஆசைப்படுகிறார்கள்.
"தர்மத்தை நிலை நிறுத்தத்தான்" தெய்வங்கள் அவதாரமே செய்கிறார்கள் என்று பார்க்கும் போது
ஹிந்துக்களாகிய நாம் "நம் தர்மத்தில் இருக்க வேண்டுமா?" என்று நினைப்பது கூட தவறு.

தர்மத்தை காக்க, கலியில், தெய்வங்கள் தெய்வங்களாக அவதாரம் செய்வதில்லை. சாதுக்களாக அவதாரம் செய்கின்றனர்.

947ல் இருந்து 1947 வரை பாரத பூமியில், அந்நிய மதங்கள் நுழைந்து
வேத தர்மத்தை காக்கும் சாதுக்களை அழிக்கவும், 
வேத தர்மத்தையே அழிக்கவும், 
1000 வருடங்கள் தொடர்ந்து, கடுமையான முயற்சி செய்தனர்.

கலி யுகத்தின் ஆரம்பத்தில் இருந்து, இந்த 1000 வருட இருண்ட காலம் வரை ஹிந்துக்களாகிய  நாம் கொஞ்சம் நிதானத்தோடு கவனித்தால், ஹிந்து மதத்தை யார் காப்பாற்றினார்கள் என்று புரியும்.
பரவாசுதேவனே, கிருஷ்ண சைதன்யராகவும், ராமகிருஷ்ணராகவும் தானே அவதாரம் செய்தார்.
சிவபெருமானே, ஆதி சங்கரராகவும், விவேகானந்தராகவும் அவதாரம் செய்தார்.
பிரகலாதனே, ஸ்ரீ ராகவேந்திரராக அவதாரம் செய்தார்.
நாரதரே, புரந்தர தாசராகவும், தியாகராஜராகவும் அவதாரம் செய்தார்.
ஆதிசேஷனே, திருப்பதியில் உள்ள 7 மலைகளாவும், ராமானுஜராகவும் அவதாரம் செய்தார்.
ஆஞ்சநேயரே, ஸமர்த்த ராமதாசராக அவதாரம் செய்தார்.




யோகிகள், ரிஷிகள், ஞானிகள் அனைவரும் கலியில்,
சூர தாஸ், கபீர் தாஸ், துளசி தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பத்ராச்சல ராமதாஸ், மீரா 
என்று பாரத தேசம் முழுவதும் சாதுக்களாக அவதரித்து,  .
அந்நிய மதங்கள்,

  • கோவிலை இடித்தும்,
  • ஹிந்துக்களை கொன்றும்,
  • மதம் மாற்றியும்,

எத்தனை முயற்சி செய்தும், பாரத தேசத்தில் உள்ள
ஹிந்துக்களை அழிக்க முடியவில்லை, 
ஹிந்து தர்மமும் அழியவில்லை என்று இன்று நிரூபணமாகி உள்ளது.
இன்றும், சங்கரன், விஷ்ணு, லலிதா, லீலா, ருக்மிணி என்ற ஹிந்து பெயர்கள் கொண்ட 80 கோடிக்கும் மேல் உள்ள ஹிந்துக்கள் தன்மானத்தோடு வாழ்கிறோம். மேலும் பல கோடி
ஹிந்துக்கள் உலக நாடுகளில் ஹிந்துக்களாகவே வாழ்கின்றனர்.

பிற மதங்களை 'மனிதர்கள் உருவாக்கினார்கள்'.
அதனால், மனிதர்கள் முயற்சி செய்து பிற மதங்களை காப்பாற்றி வருகிறார்கள்.

வேத தர்மம் என்ற ஹிந்து தர்மத்தை, 'தெய்வங்களே உருவாக்கியதால்', இங்கு தெய்வங்களே அவதரித்து ஹிந்துக்களை, ஹிந்து தர்மத்தை காக்கின்றனர். 

ஹிந்துக்களாகிய நாம் நம் ஹிந்து தர்மத்தை காக்கும் போது தான், தெய்வங்கள் நம்மை கண்டு சந்தோஷப்படுவார்கள்.

ஹிந்து தர்மத்தை காக்கும் நம்மை, அழிக்க நினைக்கும் கூட்டம் அதிகரிக்கும் போது, 
ரிஷிகளை, முனிவர்களை அவதாரம் செய்ய வைக்கிறார் பரவாசுதேவன். 
இதுவும் போதாது என்றால், 
விஷ்ணுவாகிய தானே அவதாரம் செய்து, ஹிந்து தர்மத்தை மீண்டும் ஸ்தாபிக்கிறார்.

தர்மத்தை காப்பதற்கு, தெய்வங்களே அவதாரம் செய்கின்றனர்.


ஹிந்து தர்மத்தில் இருப்பது ஹிந்துக்களுக்கு அவசியம். 
ஹிந்து தர்மத்தை நாமே விட்டு விட்டால் என்ன செய்வது? 

சில மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளும் போது, 
ஆன்மீக பக்குவம் இல்லாத நிலையில் நாம் இருந்தால், நம் ஹிந்து தர்மத்தை கூட விட்டு விட வாய்ப்பு உள்ளது. 
நாம் செய்து கொண்டிருக்கும் கொஞ்சம் ஹிந்து தர்மம் கூட, கெட்டு போகும் என்பதால்,
சில மந்திரங்கள், அதன் அர்த்தங்களை சொல்ல தயங்கினர். 
பிராம்மண குலத்தில் பிறந்து, சந்யாச தர்மத்தையும் ஏற்று கொண்டு, யதிராஜராக ஆகி,
ஸ்ரீ ரங்கதிற்கு மடத்தின் பொறுப்பை ஏற்று, 
கோவில் கைங்கரியமே செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ ராமனுஜருக்கு,
திரு அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும் அறிந்து கொள்ள ஆர்வம் உண்டானது.

திருக்கோஷ்டியூர் நம்பிக்கு, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் ரகசிய அர்த்தம் தெரியும் என்று அறிந்து கொண்டார் ராமானுஜர்.

திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் பெற்று, அதன் உட்பொருளை அறிந்து கொள்ள, யதிராஜராக இருந்த ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சுமார் 100KM நடந்து, திருக்கோஷ்டியூரை அடைந்தார்.

பிராம்மண குலத்தில் பிறந்து, சன்யாசமும் பெற்று, ரங்கநாதருக்கே தொண்டு செய்யும் ராமானுஜர் வந்தும் கூட,  திரு கோஷ்டியூர் நம்பி திருப்பி அனுப்பி விட்டார்.
ப்ராம்மணனாக பிறந்தால் 'மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளலாம் என்பது கிடையாது' என்று தெரிகிறது.
ராமானுஜருக்கே சொல்ல தயங்கினார் என்று பார்க்கிறோம்.

மந்திரங்களின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள, "சில தகுதிகளை எதிர்பார்த்தார்கள்" என்று தெரிகிறது. .

இது போல 17 தடவை, ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சுமார் 100KM நடந்து நடந்து, திருக்கோஷ்டியூர் வந்து, நம்பியின் வீட்டிற்கும் முன் நிற்பார்.
ஒவ்வொரு தடவையும், ராமானுஜரை திருப்பி அனுப்பி விடுவார்.

உண்மையில், 'திரு அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும் சொல்ல தயங்கினார், பயந்தார்' திரு கோஷ்டியூர் நம்பி.

ஏன் பயம்? எதனால் தயக்கம் ஏற்பட்டது?
'தகுதி இல்லாதவர்களுக்கு சொல்லிவிட கூடாது' என்ற தயக்கமும்,
'தகுதி இல்லாதவர்கள், இதன் அர்த்தத்தை தெரிந்து கொண்டு, அவர்கள் செய்யும் கொஞ்சம் தர்மமும், தன்னால் தடைபடுமோ!!' என்ற பயமும் தான், இவரை தடுத்தது.

17 தடவை 'நம்பி' திருப்பி அனுப்பியும்,
அர்த்தத்தை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்ட ராமானுஜர், மீண்டும் மீண்டும் சளைக்காமல், கோபப்படாமல், பொறாமைப்படாமல் நம்பியை பார்க்க வர,
கடைசியாக 18வது முறையாக வந்த போது, ஸ்ரீ ராமானுஜருக்கு பரம சந்தோஷத்துடன்  உபதேசித்தார் என்று பார்க்கிறோம்.

'நான்' என்ற கர்வமே இல்லாமல், "'பெருமாளே கதி' என்று இருக்கும்  யதிராஜருக்கே "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை உபதேசம் செய்வதற்கு, அத்தனை தயக்கம் காட்டினார்கள் என்று பார்க்கிறோம்.

மந்திரங்களை, அதன் உட்பொருளை உலகத்திற்கு சொல்ல ஏன் தயக்கம் காட்டினார்?

ஏன் மந்திரங்களை ரகசியமாக வைத்து இருந்தார்கள்?
எதற்காக பயந்தார்கள்?

மந்திரங்கள் ரகசியமாகவே இருக்க வேண்டும், யாருக்கும் தெரிய கூடாது என்று நினைக்கவில்லை.
மந்திரங்களின் வீரியமும், அதன் அர்த்தமும் எல்லோருக்கும் தெரிந்தால், விபரீதமாக முடிந்து விடுமோ என்று பயந்தார்கள்.

யதிராஜரான ராமானுஜரையே 18 தடவை (18×200= 3600KM) நடக்க வைத்த பின்பு தான்,
திருக்கோஷ்டியூர் நம்பி, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து, அதன் அர்த்தம் சொன்னார் என்றால்,
மந்திரங்களை வெளி படுத்தவோ, அதன் அர்த்தங்களை சொல்ல கூடாது என்று நினைக்கவில்லை என்று தெரிகிறது.
ஆனால், மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தகுதி இல்லாதவர்களுக்கு சொல்லி விட கூடாதே!! என்று பயந்தார்கள் என்று தெரிகிறது.

சில வேத மந்திரங்கள் உலகிற்கு தெரிந்தாலும், நமக்கே காதில் விழுந்தாலும், அதன் அர்த்தங்கள் வெளி உலகிற்கு வருவதில்லை.

மந்திரங்களின் அர்த்தத்தை சொல்ல, ஏன் பயந்தார்கள்?


பொதுவாக,
மக்களின் இறை பக்குவம், மூன்று நிலைகளில் இருக்கிறது.
1. கடவுள் இருக்கிறார். அவர் நம்மை காப்பாற்றுகிறார் என்று நினைப்பது, முதல் நிலை.
2. கடவுள் நிச்சயமாக உள்ளார் என்று அனுபவத்தில் உணர்ந்து, அவர் யார்? நமக்கும் அவருக்கும் என்ன உறவு? என்று பரமாத்மா வாசுதேவனை பற்றி நினைப்பது, இரண்டாவது நிலை.
3. தனக்கும் பரமாத்மாவாகிய நாராயணனுக்கு உள்ள சம்பந்தம் தெரிந்து கொண்டதால், பிறவிக்கு காரணம் புரிந்ததால், உலக ஆசையை விட்டு, இந்த ஜென்மத்திலேயே தெய்வத்தை அடைய வேண்டும் என்ற பேராவல் உண்டாகி, காதல் கொண்டு உருகுவது, மூன்றாவது நிலை.

நம்மை கடவுள் காப்பற்றுவார் என்ற நம்பிக்கையை, 'புராணங்கள், இதிகாசங்கள்' படிப்பதன், கேட்பதன் மூலம் நாம் பெறுகிறோம்.
அதனால் தான், புராணங்களை, இதிகாசங்களை பொது மேடைகளில், கோவில்களில் மகான்கள், சந்யாசிகள், பெரியோர்கள் என்று அனைவரும், பொது மக்கள் அனைவருக்கும் எடுத்து சொல்லி,
நமக்கு ஆன்மீக வளர்ச்சியும், தர்மத்தில் இருந்தால் கடவுள் காப்பற்றுவார் என்ற நம்பிக்கையையும் வளர்க்கின்றனர்.

"இறைவன் இருக்கிறார்" என்று திடமாக அனுபவத்தில் உணர்ந்தவன்,
புராணங்கள், இதிகாசங்கள் கேட்டு கேட்டு,
"தன்னை,  கடவுள் காப்பற்றுகிறார்", "நாம் ஹிந்து தர்மத்தில் இருக்க வேண்டும்" என்ற அளவில் ஆன்மீக சிந்தனை பெற்ற ஒருவன், தொடர்ந்து புராணங்களை, இதிகாசங்களை கேட்க கேட்க, படிப்படியாக உயர்ந்து,
"தனக்கு கடவுள் என்ன செய்வார்?" என்ற கேள்வியுடன் நிற்காமல்,
'அவர் எப்படி இருப்பார்? 
அவருக்கும் நமக்கும் என்ன உறவு? 
அவர் எப்படியெல்லாம் நம்மிடம் உறவாடுகிறார்?' என்று பல கேள்விகள் உருவாகி,
அவரை தெரிந்து கொள்ள ஒரு கட்டத்தில் ஆர்வம் பெறுகிறான். 

முதல் நிலையிலிருந்து, இரண்டாவது நிலைக்கு முன்னேறுகிறான்.

இந்த ஆர்வத்தை பெற்றவன், மகான்களின் துணையை தேடுகிறான். 
"ஸத் சங்கத்தில்" தன்னை சேர்த்து கொள்கிறான்.
"நாம் ஹிந்து தர்மத்தில் இருக்க வேண்டும்" என்று ஆசைப்பட ஆரம்பிக்கிறான்.

ராம நாமத்தை, பிரணவ மந்திரத்தை, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஒரு ஆத்ம குருவிடம் உபதேசம் பெற்று, அதை எப்பொழுதும் ஜபம் செய்ய ஆசைப்பட ஆரம்பிக்கிறான்.

ஆர்வம் அதிகமாகி, மந்திரங்களின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள ஆசைப்படுகிறான்.
அததற்கு அதிகாரியான, குருவை தேடி அலைந்து, மந்திரங்களின் உட்பொருளை அறிந்து கொண்டு, அர்த்தம் புரிந்து கொண்டு, மந்திரங்களை ஜெபிக்க ஆரம்பிக்கிறான். 
இது இரண்டாவது நிலை.


யதிராஜரான ராமானுஜர், அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் பெற்று, அதன் அர்த்தம் தெரிந்து கொள்ள, 18 தடவை (18×200= 3600KM) நடந்து நடந்து, கடைசியில் தான் நம்பி, அஷ்டாக்ஷர மந்திரத்துக்கு அர்த்தம்  சொன்னார் என்று பார்க்கிறோம்.
  • இறை எண்ணமே இல்லாத நாதீகர்கள்
  • புராணங்கள், இதிகாசங்கள் கேட்டு, ஆன்மீக எண்ணம் உடையவர்கள், 'தன்னை கடவுள் காக்கிறார்' என்ற ஞானம் உடையவர்கள், ஆனால், கடவுளை பற்றி அறிந்து கொள்ள தாகம் இல்லாதவர்கள், 
மந்திரங்களை பற்றியோ, அதன் உள் அர்த்தங்களை பற்றியோ அறிந்து கொள்வது, பெரும் ஆபத்தை தந்து விடும் என்ற பயத்தாலும், தயக்கத்தாலும், மந்திரங்களை, அதன் அர்த்தங்களை ரகசியமாக வைத்தனர்.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை சொல்ல கூடாது என்பதற்காக ரகசியமாக வைத்து கொள்ளவில்லை.
இதை தெரிந்து கொள்ள தகுதி உள்ளவர்களாக உள்ளார்களா? என்பது தான் கேள்வியாக உள்ளது.

அஷ்டாக்ஷர மந்திரத்தை ராமானுஜருக்கு சொல்ல ஏன் தயங்கினார்?
"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தின் ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தையும் பார்த்தோம் என்றால்,
"ஜீவனாகிய நாம் சுதந்திரமானவன் இல்லை, நாம் பரமாத்மா நாராயணனுக்கு கட்டுப்பட்டவன். 
அதனால், அவரே கதி என்று சரணாகதி செய்து, 
நான் என்ற கர்வத்தை விட்டு, "பெருமாள் இஷ்டம்" என்று இருக்க வேண்டும்" என்று சொல்கிறது.

திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் சாரத்தையே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,
சர்வ தர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாப்யோ
மோக்ஷ இஷ்யாமி மா சுச:
என்று தெளிவாக சொல்கிறார்.
அதாவது,
அனைத்து (சர்வ) தர்மத்தையும் விட்டு,
என்னை ஒருவனையே சரண் அடைந்து விடு,
நான் உன் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து,
நீ உலகத்தில் வாழும்வரை காப்பாற்றி, உனக்கு பிறவா நிலையான மோக்ஷமும் தருகிறேன்
என்று தெளிவாக சொல்கிறார்.


"கடவுள் என்னை காப்பாற்றுகிறார்" என்ற அளவில் மட்டும் ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள்,
"தெய்வம் எனக்கு என்ன செய்யும்?" என்ற அளவில் ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள்,
"கடவுளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற தாகம் இல்லாதவர்கள்,
திருஅஷ்டாக்ஷர மந்திரத்தின் அர்த்தத்தை, தெரிந்து கொண்டால்,
பகவத் கீதையில் கடைசியாக ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதை புரிந்து கொண்டால்,
"நான் பெருமாளிடம் சரண் அடைந்து விட்டேன். அவர் நான் செய்த பாவங்களை எப்படி இருந்தாலும் மன்னித்து விடுவார். அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்.
என் தர்மத்தை விட்டாலும், அவர் என்னை காப்பாற்றுகிறார்"
என்று பேச ஆரம்பித்து விடுவான்.

பிராம்மணன், "பெருமாளை  சரண் அடைந்து விட்டேன், நான் சந்தியா வந்தனம் செய்ய தேவையில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

வியாபாரி, "பெருமாளை சரண் அடைந்து விட்டேன், நான் வியாபாரத்தில் ஏமாற்றினாலும் பரவாயில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

சூத்திரன் (வேலைக்கு செல்பவன் (employee)), "பெருமாளை சரண் அடைந்து விட்டேன், நான் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி ஏமாற்றினாலும் பரவாயில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

இன்னும் சிலர்,
"ராம" என்ற தாரக மந்திரத்தின் பொருளே "சம்சார சாகரத்தில் இருந்து கடக்க (தாரக) செய்யும்" என்பது தான்.   
"ராம ராம ராம..." என்று தாரக மந்திரத்தை சொன்னாலேயே போதும், பூஜை, ஆசாரம், அனுஷ்டானம் செய்ய வேண்டிய தேவையில்லை." என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

மந்திரங்களின் அர்த்தங்களை,
நாத்தீகர்கள்,
ஆன்மீக நிலையில் முதல் நிலையில் உள்ளவர்கள்,
காமம் கோபம் பொறாமை குணம் கொண்டவர்கள் தெரிந்து கொள்வதால்,
"தன் தர்மத்தை விட்டாலும், மோக்ஷம் கிடைத்து விடும்" என்று ஆரம்பிப்பார்கள்.
"தர்மத்தை காக்க தான், தெய்வங்களே அவதாரம் செய்கிறார்கள்" என்பதை மறந்து பேசுவார்கள்.

தெய்வங்களை குறித்து ஜபம் செய்ய வேண்டிய சில மந்திரங்களை, பெண்களை மயக்க பயன்படுத்துவார்கள்.

இப்படி பக்குவம் இல்லாத நிலையில் 80% சதவீத மக்கள் இருப்பதால், பொதுவாகவே மந்திரங்கள், அதன் அர்த்தங்கள் பொது மேடைகளில் சொல்லப்படுவதில்லை.

திருக்கோஷ்டியூர் நம்பி, 18 முறை வந்த ஸ்ரீ ராமானுஜர், கோபத்தை, பொறாமையை ஜெயித்தவர் என்று அறிந்து,
"திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தின் பொருளை சொன்னாலும், மோக்ஷம் கிடைக்கும் என்றாலும்,
தன் தர்மத்தை விட்டு விட மாட்டார் என்று நம்பிக்கை கொண்டார்.

"தனக்கு மோக்ஷம் நிச்சயம்" என்றாலும், ஸ்ரீ ராமானுஜர், கடைசி வரை தன் தர்மங்களை விடவில்லை.



தன் தர்மத்தை விட்டு, "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை சொல்லி மோக்ஷம் அடைய ஆசைப்படுபவன், பகவானை ஏமாற்றுகிறான்.
பகவான் தன்னை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும், மோக்ஷ வாசலை திறந்து விடுகிறார், கருணையின் காரணத்தால். 
ஆனால்,
உண்மையான பக்தன், தெய்வம் விரும்பும் படியாக உலகில் தர்மத்தில் வாழ்ந்து, பிறகு மோக்ஷம் அடையவே விரும்புவான்.

ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ ராமானுஜர்,  "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை உபதேசம் பெற்றதும், 
கோவிலின் உச்சிக்கு சென்று, அங்கு கூடி இருந்த அனைவருக்கும்
"ஓம் நமோ நாராயணாய! என்று சொல்லுங்கள், உங்கள் அனைவருக்கும் மோக்ஷம் நிச்சயம்" என்று சொல்லி விட்டார்.

ஓம் நமோ நாராயணனாய மந்திரத்தின் விளக்கம் இதோ

திருக்கோஷ்டியூர் நம்பி,
தகுதி உள்ளவர்களுக்கே சொல்ல வேண்டும், 
தகுதி இல்லாதவர்களுக்கு சொன்னால், "சரணாகதி செய்து விட்டேன் ! தர்மத்தை விட்டாலும், எனக்கு பகவான் நிச்சயம் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்றெல்லாம் பேச ஆரம்பித்து கலி யுகத்தில் அனைவரும் தர்மத்தை விட்டு விடுவார்களே !! என்று பயந்தார்.

"தன்னால் உலகம் அதர்மத்தில் வீழ்ந்தது" என்று ஆகி விட கூடாது என்று பயந்தார்.

பரவாசுதேவனின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனே, ஸ்ரீ ராமானுஜர்.

"தர்மத்தில் இருக்காமல், மோக்ஷம் கிடைத்து விடும் என்று சொல்லி, ஆஸ்தீகர்கள் கூட மந்திரங்களை தவறாக பயன்படுத்தி விடுவார்கள். அதனால், 
இது போன்ற மந்திரங்களை தகுதி இல்லாதவர்களுக்கு சொல்ல கூடாது என்பது தவறில்லை. 
ஆனால், 
இப்படியே மறைத்து வைத்து இருந்தாலும்,
கலியின் ஆக்கிரமிப்பில், சுய நலம் அதிகமாகி, பெரும்பாலான  மக்கள் இனி வரும் காலங்களில், அவர்களே அவரவர்கள் தர்மத்தை விட்டு, பெருமாளையும் அறிந்து கொள்ளாமல், மிலேச்ச மதங்களில், பொய் மதங்களில், பொய் தெய்வங்கள் தனக்கு சொர்க்கம் கொடுக்கும், நன்மை செய்யும் என்று நம்பிக்கொண்டு போய்  விடுவார்கள்'
என்று அறிந்து இருந்தார் ஸ்ரீராமானுஜர்.

'கலியில், 
பெரும்பாலான மக்கள், தங்கள் சுய நலத்தால், எப்படி இருந்தாலும், தர்மத்தை விட்டு விடுவார்கள்' 
என்று அறிந்த நம் ராமானுஜர்,
"தர்மத்தை விட்டாலும் பரவாயில்லை, ஓம் நமோ நாராயணாய!! என்று சொல், பகவான் உன்னை ரக்ஷித்தது, மோக்ஷமும் கொடுப்பார்"
என்று பெரும் கருணை கொண்டு,
மறைத்து வைத்திருந்த திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை அனைவருக்கும் கொடுத்து விட்டார்.
"தெய்வம் வந்து இந்த மந்திரத்தை அனைவருக்கும் சொல்லட்டும், தானாக சொல்ல கூடாது" 
என்று இருந்த திருக்கோஷ்டியூர் நம்பி,
கலியில் உலக மக்கள் யாவரும் தர்மத்தை விட்டு, கதி இன்றி இருக்க போகிறார்கள் என்று உணர்ந்து,
திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை அனைவருக்கும் அள்ளி கொடுத்த, ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ ராமானுஜரை கண்டு மனம் மகிழ்ந்தார்.


"ஓம் நமோ நாராயணாய" என்று கூட சொல்லாமல் இருக்கிறார்கள் பலர்.
"இவர்களுக்கும் ஒரு வழி காட்ட வேண்டுமே" என்று, பரவாசுதேவன் நாராயணனே "ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராக" அவதாரம் செய்து, மிகவும் சுலபமான மந்திரமாகவும் இருக்க வேண்டும், கேட்பதற்கும் இசையாக இருக்க வேண்டும் என்று,
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்று ராம என்ற தாரக மந்திரத்தையும், தன் பிற அவதாரங்களான நரசிம்ம (ஹரே), கிருஷ்ண மந்திரத்தையும் சேர்த்து தொடுத்து, ஒரு இசை மாலையாக கொடுத்து விட்டார்.
இந்த மந்திரத்தை இன்று பாடாத மனிதன் இல்லை. 
ஆன்மீக எண்ணமே இல்லாதவர்களை கூட, இந்த இசை இழுக்கிறது.
வெளிநாட்டினர் பலர், இந்த மந்திர மாலைக்கு மயங்கி கிடக்கின்றனர்.

ஹிந்துவாக பிறந்ததில், பெருமை கொள்வோம்.

மந்திரங்களை அதன் அர்த்தங்கள் புரிந்து கொண்டு, ஜபம் செய்ய செய்ய, இரண்டாம் நிலையில் இருந்து, நாளடைவில், குருவின் துணையால் மூன்றாம் நிலையை அடைகிறோம்.

இந்த மூன்றாம் நிலை அடைந்தவர்களே, நம் பாரத தேசத்தில் வாழ்ந்த மகான்களும், வாழும் மகான்களும்.

ஆழ்வார்கள் பாடிய சில பாசுரங்களை படித்து அர்த்தம் புரிந்து கொண்டால், "தான் ஒரு பெண் போலவும். பெருமாள் தன்னை எப்பொழுது மணந்து கொள்வார்?" என்பது போலவும் பாசுரங்களை பார்க்கிறோம்.

இது போன்ற பாசுரங்களை ஒரு நாத்தீகனோ, ஆன்மீக வளர்ச்சியில் முதல் நிலையிலோ, இரண்டாம் நிலையிலோ இருக்கும் ஆஸ்தீகர்கள் கூட,
"ஏன் இப்படி ஆழ்வார் பாடுகிறார்? ஏன் தன்னை பெண் என்று சொல்லி கொண்டு, பாடுகிறார்?"
என்றெல்லாம் கேட்க தோன்றும்.

4000 திவ்ய பாசுரங்கள், நாயமார் பதிகங்கள், மீராவின் பாட்டுக்கள், மகான்களின் ஸ்லோகங்கள் படிப்பதற்கே, நமக்கு ஒரு தகுதி தேவைப்படுகிறது.

ஆழ்வார்கள் பாசுரத்தை படித்து, இது என்ன காமம் கலந்து இருக்கிறது? என்று கூட சொல்லி விடுவான் நாத்தீகன்.

இறை நிலையில் மூன்றாம் நிலையில் உள்ள இவர்கள்,
உலக நினைவே இல்லாமல், 
மோக்ஷம் வேண்டி கதறி அழும், பாசுரங்கள் உண்டு, காதல் கொண்டு, தன்னை சேர்த்து கொள்ள பிரார்த்திக்கும், பாசுரங்கள் உண்டு.

மோக்ஷத்தை இந்த ஜென்மத்தோடு பெற வேண்டும் என்று மூன்றாம் நிலையில் உள்ள மகான்களால் மட்டுமே, ஆழ்வார்கள் பாடிய  பாசுரங்களை, உண்மையில் புரிந்து கொள்ள முடியும்.


குருவின் கிருபையை பற்றி கொண்டு,
நாமும் புராணங்களை கேட்டு, புரிந்து கொண்டு, படிப்படியாக முன்னேறி, நாம் தர்மத்தில் இருந்தால், பகவான் காப்பாற்றுவார் என்ற பக்குவத்தை பெற்று,
பகவானை பற்றி அறிய "மந்திரங்கள் அதன் அர்த்தங்களை" புரிந்து கொண்டு ஜபம் செய்து,
மேலும் நம் ஆன்மீக நிலையை வளர்த்து கொண்டு,
மோக்ஷம் என்ற பிறவா நிலையை அடைய, நாராயணனை சரண் அடைவோம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ராமானுஜர்.
வாழ்க ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்,
வாழ்க நம் பாரத பூமியில் வாழும் மகான்கள்.

தர்மத்தை காப்பதற்கு தான், தெய்வங்களே அவதாரம் செய்கின்றனர்.
ஹிந்துக்கள் அவரவர்கள் தர்மத்தில் இருப்பது, ஹிந்துக்களுக்கு அவசியம்.

Sandhya Vandanam is a Key Dharma for Brahmin

Sandhya Vandanam - Morning (With meaning)



Sandhya Vandanam - Afternoon (With meaning)

Sandhya Vandanam - Evening (With meaning)




Friday 21 June 2019

ப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது. பிரம்மாவின் கருணையாலேயே, நமக்கு ரங்கநாதர் கிடைத்தார், காஞ்சியில் வரதராஜன் கிடைத்தார். பிரம்மா கேட்டதால் தான் பரமாத்மா வாசுதேவன் அவதாரங்கள் செய்தார்.

ஸ்ரீ பாகவதம், யார் சிறந்த பாகவதன்? என்று சொல்லும்போது 'ப்ரம்மாவை' தான் முதலில் சொல்லுகிறது.

ப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது.



பரவாசுதேவன் முதன் முதலாக படைத்ததே ப்ரம்மாவை தான்.

தன் திருவாயாலேயே ப்ரம்ம தேவனுக்கு "ப்ரம்ம வித்யை"யை உபதேசம் பண்ணினார் பகவான்.

"உலக ஸ்ருஷ்டி செய்யும் பொழுதும், எப்பொழுதும் என் இதயத்தில் ஹரியையே நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன்"
என்று சொல்கிறார் ப்ரம்மா.

"மது-கைடபர்கள் வேதத்தை கொண்டு போய் விட்டார்கள்" என்ற பொழுது, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள் அவருக்காக மத்ஸ்ய அவதாரம் எடுத்தார்.

"தேவர்கள் அசுரர்களால் துன்பப்படுகிறார்கள்" என்றதும், அவர்கள் பிரம்மாவிடம் ஓடி வழி கேட்க, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள், அவருக்காக கூர்ம அவதாரம் எடுத்தார்.

"பூமி பிரளய ஜலத்தில் மூழ்க", ஸ்வாயம்பு மனு பிரம்மாவிடம் சென்று முறையிட, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள், அவருக்காக பிரம்மாவின் ஹ்ருதயத்தில் இருந்தே வெளிவந்து வராஹ அவதாரம் எடுத்தார்.

ஹிரண்யகசிபுவுக்கு ப்ரம்மா தான் வரம் கொடுத்தார். பின் 'இவன் அட்டகாசம் தேவர்களை துன்புறுத்த', அவர்களுக்காக, க்ஷீராப்தி வந்து ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காக, பெருமாள் நரசிம்ஹ அவதாரம் எடுத்தார்.
ராம அவதாரமும், ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காகவே நடந்தது.

பூமி தேவி துஷ்டர்கள் பெருகியதால் "பூபாரம் தாங்க முடியாமல்", ப்ராம்மாவிடம் பிரார்த்திக்க, மீண்டும் ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காக, பெருமாள் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் எடுத்தார்.

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில், பிருந்தாவனத்திற்கு வந்து, "இங்கு புல்லாய் இருக்கவாவது அனுமதி கொடு. எனக்கு இந்த ப்ரம்ம பதவி கூட வேண்டாம்"
என்று பிரார்த்திக்கிறார் ப்ரம்மா.
"நீ ஆதிகாரி புருஷன். நீ உன் பதவியில் போய் இரு"
என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்ல, வேறு வழி இல்லாமல் திரும்ப செல்கிறார் ப்ரம்ம லோகத்துக்கு.



இப்படி விபவ அவதாரங்கள், இந்த பூமியில் நிகழ செய்தது மட்டும் இல்லாமல், 
இந்த அவதாரங்கள் நிகழ்ந்த சமயத்தில் இல்லாத நமக்கும் அணுகிரஹம் செய்ய, 
ப்ரம்ம லோகத்தில் தான் வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதரை, உலக ஸ்ருஷ்டி செய்து,  ஸ்வாயம்பு மனுவை பதவியில் அமர்த்தி, 
அவர் பூமியில் வழிபட தான் வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதரை வழங்கி விட்டார் ப்ரம்மா.

அந்த ரங்கநாதரை இக்ஷ்வாகு குலத்தில், ஸ்ரீ ராமராக அவதாரம் செய்து, தன் குல தெய்வமாக ஸ்ரீ ராமரே வழிபட்டு,
ராவண வதம் முடிந்து, விபீஷணனுக்கு தன் அடையாளமாக, ஸ்ரீ ரங்கநாதரை கொடுக்க,
ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தை தானே தேர்ந்தெடுத்து இன்று வரை நாமும் காண முடியும் என்கிற அளவுக்கு கருணை செய்தார்.

பிரம்மாவின் கருணையாலேயே, நமக்கு ஸ்ரீ ரங்கநாதர் கிடைத்தார்.

'அவரே ப்ரம்ம லோகத்தில் வழிபட்ட தெய்வம்' என்று நாம் பார்க்கும் போது தான், ஸ்ரீ ரங்கநாதரை பற்றியும் புரியும், பிரம்மாவின் கருணையும் புரியும்.
அதே ப்ரம்ம தேவன், இப்பொழுது காஞ்சியில் அஸ்வமேத யாகம் செய்து, நமக்காக, காஞ்சியில் வரதராஜனாக பெருமாளை வெளிப்படுத்தினார்.

இதை உணரும் போது,
பிரம்மாவை விட, சிறந்த பக்திமான் யார் இருக்க முடியும்?


ஞானி எப்படி இருப்பார்? தெரிந்து கொள்வோமே

யார் பண்டிதன்? யார் ஞானி?
'எந்த காரியத்தை செய்தாலும், அது அந்த வாசுதேவனின் ஆராதனை' என்று உணர்ந்து செய்பவனே உண்மையான பண்டிதன்.






ஞானியின் அடையாளம்:
எப்பொழுதுமே ஒரு பலனை கருதி செய்யக்கூடாது.

நான் தான் செய்கிறேன் என்ற கர்வதோடும் செய்யக்கூடாது.

நாம் செய்யும் காரியத்தால், பலன் அடையும் மனிதர்களையோ, தெய்வங்களையோ நினைத்தும் செய்ய கூடாது.

நாம் செய்யும் காரியத்தால், தெய்வங்களோ, மனிதனோ தனக்கு ஏதாவது பலனாக தருவார்களா? என்றும் எதிர்பார்க்க கூடாது.

எந்த காரியத்தை செய்தாலும் சரி,
அது தெய்வத்துக்காக இருந்தாலும் சரி,
ஒரு மனிதனுக்காக இருந்தாலும் சரி,
விலங்கிற்காக ஆனாலும் சரி,
செய்யும் காரியம் அந்தர்யாமியாக உள்ள அந்த 'பரமாத்மாவுக்கே' என்று மட்டும் உணர்ந்து,
'எதிர்பார்ப்பு, எரிச்சல், ஏமாற்றம், கோபம்' எதுவும் இல்லாமல், 
அந்தர்யாமியாக உள்ள அந்த 'பரமாத்மாவுக்கு ஆராதனை செய்ய நமக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்து செய்பவனே - உண்மையான பண்டிதன்.
அவனே ஞானி.
ஞானி ஒரு செயலை செய்து, அதில் பலன் எதிர்பார்ப்பதில்லை.
காரணம், அவன் செய்யும் செயல்கள் யாவும் அந்த அந்தர்யாமியான வாசுதேவனை ஆராதனை செய்வதற்கே.



ஒரு செயல் செய்ததிலேயே, ஞானி திருப்தி அடைகிறான். 
'ஆராதனை செய்தோம்' என்ற திருப்தியில் இருக்கிறான். 
இவனே பண்டிதன். அவனே ஞானி.

சர்வேஸ்வரனே செய்கிறார், 
சர்வேஸ்வரனுக்கே இந்த பலன் சேருகிறது,
என்று இருப்பவன் பண்டிதன். அவனே ஞானி.

இப்படி செய்யும் எந்த கர்மாவின் பலன்களும், அவனிடம் சேராது. 

இப்படி செய்யும் எந்த கர்மாவும், அவனுடைய மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுத்து விடும்.