Followers

Search Here...

Thursday 30 January 2020

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன?... தெய்வத்திடம் காதல் கொண்டு ஆழ்வார்கள் பாடுகிறார்கள் என்று பார்க்கிறோம்... ஆழ்வார்கள் நிலை என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா... ஹிந்துக்கள்.

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன? 
தெரிந்து கொள்வோமே !!

1. காம்யார்த்தமான பக்தி:

  • உலக ஆசை உடையவர்கள். 
  • தெய்வம் தனக்கு அணுகிரஹம் செய்யும் என்று உணர்நதவர்கள். 
  • தெய்வத்திடம் பக்தி செய்து, விரதம் இருந்து, தெய்வ அணுகிரஹத்தால் தன் உலக ஆசைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள்.




கோவிலுக்கு செல்வது, 
தெய்வ விக்ரஹங்களை சிலையாக பார்க்காமல் பெருமாளாக பார்ப்பது, 
விரதம் இருப்பது, 
மந்திரங்கள் ஜபிப்பது போன்றவை செய்கிறார்கள்

2. சாதனா பக்தி:

  • உலக ஆசை குறைந்து இருப்பவர்கள்.
  • தெய்வத்தின் அருளை அனுபவத்தில் உணர்நதவர்கள்.
  • உலக ஆசைகளை தெய்வத்திடம் பிரார்த்திப்பதை விட, அந்த தெய்வத்தை பற்றி, நன்கு புரிந்து கொள்ளவே ஆர்வம் மிக்கவர்கள். 
  • அதற்கு தேவையான சாதனைகளை செய்பவர்கள்.




கோவிலின் தத்துவத்தை அறிய முயல்பவர்கள்,
மந்திரங்களின் ஆழ்ந்த அர்த்தத்தை அறிந்து கொள்ள முயல்பபவர்கள்,
தெய்வத்தின் புராண சரித்திரங்கள், குணங்கள் போன்றவற்றில் ஆழ்ந்து உணருபவர்கள்,
தெய்வத்தை பற்றி அறிய தனி மனித ஒழுக்கம் என்று உணர்நதவர்கள்,
தியானம் யோகம் செய்து புலன்களை கட்டுப்படுத்தி வைத்து இருப்பவர்கள்.

ராமானுஜர் "திருவஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருள் அறிய", தான் யதிராஜராக இருந்த போதும்,
'ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூர் வரை' நடந்து சென்றும், 'திருக்கோஷ்டியூர் நம்பி' அதன் அர்த்தத்தை தகுதி இல்லாதவர்க்கு சொல்லி விட கூடாதே என்று தயங்கி மறுத்தார்.




ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை.
17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார்.
இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி அர்த்தத்தை சொல்ல தயங்கி மறுத்தார்.

அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது. 
உண்மையான ஆர்வமும்,
அலுப்பு அடையாமல்,
தன் மீது கோபமும் இல்லாமல் இருக்கும் ராமனுஜரே, மந்திரத்தின் பொருளை அறிய தகுதி ஆனவர்,
என்று அறிந்து, அர்த்த விஷேஷத்தை போதித்தார்.

சாதனா பக்தியில், எப்படி ஒரு பக்தன் இருப்பான்? என்று தன் சரித்திரத்திலேயே காண்பித்தார் ஸ்ரீ ராமானுஜர்.
ஞானத்தில் பூர்ணரான ராமானுஜர், 'நாதீகனும், காம்யார்த்த பக்தி செய்பவனும் கூட, பரமபதம் இதே ஜென்மத்தில் அடைந்து விட வேண்டும்' என்ற பரந்த நோக்கில், தான் கஷ்டப்பட்டு பெற்ற உபதேசத்தை இலவசமாக அனைவருக்கும் கிடைக்கும் படியாக கொடுத்து விட்டார்.

3. ஞான பக்தி :

  • உலக வாழ்க்கையை மதிக்காதவர்கள். 
  • செல்வம் சேர்ந்தாலும், ஏழையானாலும் குறைபட்டு கொள்ளாதவர்கள்.
  • இந்த ஆத்மா எப்பொழுது இந்த உடலை விட்டு, பரந்தாமனை அடையுமோ என்று தவிப்பவர்கள்.




ஜீவனாகிய தன்னை பெண்ணாகவும்,
பரமாத்மா நாராயணனே தன் புருஷனாகவும்,
"தன் கணவனிடம் சேரும் காலம் எப்பொழுதோ!!"
என்று பரமபதத்தையே எதிர்பார்த்து, தெய்வத்திடம் விரக தாபத்தில் இருப்பவர்கள்.
(ஆழ்வார்கள் இந்த நிலையிலேயே இருந்தனர்) 
ஆழ்வார்கள் தன்னை காதலியாகவும், பெருமாளை காதலானாகவும் கதறி அழுது பாடும் பாசுரங்கள், இவர்களின் ஞான பக்தி நிலையை நமக்கு காட்டுகிறது.

இந்த அனுபவத்தில் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை, நாத்தீகன் மட்டுமல்ல, காம்யார்த்தமான பக்தி செய்பவனும், சாதனா பக்தி செய்பவன் கூட படித்தாலும், "ஆழ்வார்கள் எந்த நிலையில் இப்படி பாடினார்கள்!!" என்று புரிந்து கொள்ள முடியாமல், "இது ஏதோ உலகத்தில் காணும் காதல் பாடல்" என்றே நினைப்பார்கள்.


இதன் காரணமாகவோ என்னவோ!! வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில், ஆழ்வார்கள் பாசுரங்களை, அதன் அர்த்தத்தை விஷ்ணு சஹஸ்ரநாமம் போல, அனைவருக்கும் தராமல், ஞானத்தின் தகுதி பார்த்தே பகிர்ந்துள்ளனர் என்று தெரிகிறது..

நமக்கு ஞான பக்தி இல்லாமல் போனாலும், ஆழ்வார்கள் நிலை வராது போனாலும்,
குறைந்தபட்சம் நாதீகர்களாகவாவது வாழாமல், காம்யார்த்த பக்தியாவது செய்து கொண்டு, தெய்வ அணுகிரஹத்தால், குருவின் துணையால், மேலும் மேலும் ஆன்மீக வளர்ச்சி நோக்கி செல்வோம்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.






ஸ்ரீ முஷ்ணம் - வராஹ பெருமாள்.. தண்டகாரண்யம் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது? ஸ்ரீமுஷ்ணம் வராக பெருமாள் அவதாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா ஹிந்துக்கள்....

 




க்ஷீராப்தியில் ஸ்ரீமந்நாராயணனுக்கு வாயில் காப்பாளர்களான இருக்கும் ஜெய விஜயர்கள்,
சனகாதி முனிவர்களின் சாபத்தால், பூலோகத்தில் அவதரித்தார்கள்.
முதல் பிறவியில், ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷனாக பிறந்தார்கள்.

பெருமாள், வராஹ மூர்த்தியாக அவதாரம் செய்து, ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்தார்.

இந்த ஹிரண்யாக்ஷனுக்கு "ஜில்லிகா" என்று ஒரு பெண் இருந்தாள்.

"ஜில்லிகா" என்றால் 'குளவி' என்று தமிழில் அர்த்தம்.
குளவி போன்று யாரை கண்டாலும் கொட்டும் குணம் கொண்டவள்.
அசுர பெண்ணான இவளும், உணவு உண்ணாமல், பல காலங்கள் ப்ரம்ம தேவனை நோக்கி தவம் செய்தாள்.

அசுரர்கள், தேவர்கள், மனிதர்கள், ரிஷிகள் அனைவரையும் படைத்தவர் 'ப்ரம்மா'.
வேதம் இவரை நமக்கு 'தாத்தா' (பிதாமகர்) என்று உறவுமுறை சொல்லி  அழைக்கிறது.

ப்ரம்மாவை படைத்தவர் 'நாராயணன்'.
ஆதலால் பெருமாளை நமக்கு  "கொள்ளு தாத்தா" (ப்ரபிதாமகர்) என்று சொந்தம் காட்டி அழைக்கிறது..

நாராயணன், பொதுவாக 'நாம் கேட்பதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு தந்து விடுவதில்லை'.
'இந்த வரத்தால், கேட்பவனுக்கு நலமா? உலகுக்கு நன்மையா?' என்று பார்த்து தான் கொடுப்பார்.

பெருமாள், "நமக்கு எது நன்மையோ, அதை மட்டுமே தருவார், தீயதை கேட்டாலும் தரமாட்டார்" என்பதையே ஆண்டாளும்
"ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்"
என்று திருப்பாவையில் பாடுகிறாள் என்று கவனிக்கிறோம்.

இதனாலேயே, துர்குணம் கொண்டவர்கள், தாங்கள் செய்த கர்மாவுக்கு கண்ணை மூடிக்கொண்டு பலன் தரும் பிரம்மாவை, சிவபெருமானை, தேவர்களையே தேர்ந்தெடுத்தனர்.
'கர்மாவுக்கு பலன் கொடுக்கிறோம்' என்று கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் வரம் கொடுத்து விடுவதால்,
பல சமயங்களில் உலகமே கஷ்டப்பட்டது. 
அதுமட்டுமில்லாமல்,
'பஸ்மாசுரன் போன்றவர்களுக்கு வரம் கொடுத்து விட்டு, சிவபெருமானே திண்டாடினார்' என்றும் பார்க்கிறோம்.

இவர்கள் கொடுக்கும் இந்த வரங்களால், உலகம் கஷ்டப்படும் போது, நல்லவர்கள் துன்பப்படும் போது, ஒவ்வொரு முறையும் பெருமாள் வந்து காப்பாற்ற வேண்டியதாகி விடும்.
ஹிரண்யாக்ஷனின் மகளான 'ஜில்லிகா' கடுமையான தவம் செய்து கொண்டிருக்க, அவள் தவத்திற்கு கட்டுப்பட்டு, ப்ரம்ம தேவன் ப்ரத்யக்ஷமானார்...

அவளிடம் "என்ன வரம் வேண்டும்?" என்று ப்ரம்ம தேவன் கேட்க,
அவள், "உலகத்தில் உள்ள அனைத்து ப்ராம்மணர்களையும் ஒழிக்கும் படியாக ஒரு புத்ரன் எனக்கு வேண்டும்"
என்று கேட்டு விட்டாள்.

"பெருமாள் பார்த்து கொள்வார்" என்ற தைரியத்தில், வழக்கம் போல, ப்ரம்ம தேவன் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி மறைந்து விட்டார்.

அவளுக்கு "தண்டகன்" என்ற மகா அரக்கன் பிறந்தான்.
இவன் காட்டு பிரதேசமாக இருந்த கோதாவரி முதல் காவிரி நதி வரை உள்ள வன பகுதியில் சஞ்சரித்து கொண்டு இருந்தான்.

கோதாவரி நதி மஹாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா வரை சென்று கடலில் சேருகிறது.
காவிரி நதி கர்நாடக, தமிழ்நாடு சென்று கடலில் சேருகிறது.




கோதாவரி முதல் காவிரி வரை உள்ள வன பகுதிக்கு தான்,  "தண்டகாரண்யம்" என்று பெயர் ஏற்பட்டது.

தண்டகன் என்ற இந்த ராக்ஷசன் பயங்கரமாக சப்தம் செய்து கொண்டு, அங்கு தவத்தில் ஆழ்ந்து இருக்கும் முனிவர்களை அப்படியே நாவல் பழத்தை விழுங்குவது போல விழுங்கி, அதன் கொட்டையை துப்புவது போல, அவர்களின் எலும்பை துப்பி விடுவான்.
க்ருத யுகத்தில் ஆரம்பித்து, அடுத்த யுகமான த்ரேதா யுகம் வரை இந்த "தண்டகாரண்யம்" மனிதர்கள் வாழ முடியாத படி, நர மாமிசமாக விழுங்கி விடும் ராக்ஷஸர்கள் நடமாடும் பயங்கரமான வனமாக இருந்தது.

த்ரேதா யுகத்தில், ராமபிரான் 14 வருடம் வனவாசமாக வந்த போது, ராக்ஷசர்கள் நடமாடும் பயங்கரமான 'தண்டகாரண்யத்தில்' நுழைந்தார் என்று அறிகிறோம்.

ராக்ஷசர்கள் ஒழிக்கப்பட்டு, மனிதர்கள் வாழும் படியாக செய்தார் ராமபிரான்.

தண்டகனின் அட்டகாசத்தால் வேத ப்ராம்மணர்களான முனிவர்கள் பெரிதும் துக்கப்பட்டனர்.

இருந்தாலும் சில வேத ப்ராம்மணர்கள், இப்படியே போய் கொண்டிருந்தால், சந்தியா வந்தனம் செய்ய கூட ஆள் இல்லாமல் போய் விடுமே என்ற கவலையில்,
நித்யபுஷ்கரணி என்ற தாமரை தடாகத்தில் ஹிரண்யாக்ஷனை வதம் செய்த "வராஹ பெருமாளை" குறித்து தவம் செய்ய ஆரம்பித்தனர்.

இவர்கள் இப்படி சங்கல்பம் செய்து கொண்டு, ஒரு அரச மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு "வேத மந்திரங்களை" ஓத ஆரம்பிக்க, 'பெருமாளே தானும் ஒரு வேத ப்ராம்மணனாக வந்து' இவர்களுடன் வந்து அமர்ந்து கொண்டு விட்டார்.

வேத மந்திரங்கள் இந்த இடத்தில் ஒலிப்பதை கேட்டதும், மகா கோபம் கொண்ட தண்டகன், பெரிய சூலத்தை எடுத்துக்கொண்டு, கர்ஜனை செய்து கொண்டு, இவர்களை நோக்கி பாய்ந்து வர,
மரண பயத்தால், அங்கு இருந்த வேத ப்ராம்மணர்கள் அங்கும் இங்கும் ஓடி ஒளிய ஆரம்பித்தனர்.

கருநீல வண்ணத்துடன், தாமரை போன்ற கண்களையுடைய இந்த ஒரு ப்ராம்மணன் மட்டும், பிரசன்னமாக அங்கேயே உட்கார்ந்து இருந்தார்.

ஓடி வந்த தண்டகன், "கொஞ்சம் கூட பதட்டமோ, பயமோ இந்த ப்ராம்மணனிடம் இல்லையே!! மேலும் கோபம் கூட இல்லாமல், மிகவும் சாந்தமாக முக மலர்ச்சியுடன் இருக்கிறாரே!! இது எப்படி சாத்தியம்?" என்று இந்த ப்ராம்மணனை பார்த்து அதிசயித்தான்.
கொலை செய்து விழுங்குவதை காட்டிலும், முதலில் இதன் காரணத்தை அறிந்து கொள்ள ஆவல் உண்டாக, அந்த ப்ராம்மணன் அருகில் வந்து,
"ஒய் ப்ராம்மணரே !! என்னை கண்டு உமக்கு பயமில்லையா?..
இவ்வளவு பேரும் நான் வரப்போவதை கண்டு ஓடினார்கள் அல்லவா... நீ மட்டும் இங்கேயே உடகார்ந்து கொண்டு இருக்கிறாய்?!!
நான் யார் தெரியுமா?.. 
தண்டகன் என்று பெயர் எனக்கு.
உலகத்திலே ஒரு ப்ராம்மணன் கூட இருக்க கூடாது என்ற சங்கல்பத்துடன் பிறந்தவன் நான்." 
என்று சொல்ல,

பிராம்மணனாக வந்த பெருமாள் அவனிடம் பேசலானார்.
"இப்பொழுது ஓடி ஒளிந்த ப்ராம்மணர்கள் எல்லோரும் தரித்திர ப்ராம்மணர்கள். ஒன்றும் இல்லாதவர்கள்.
அதனால் உன்னை கண்டு பயந்து விட்டார்கள்.

நான் சீமானாகிய ப்ராம்மணன். நான் ஸ்ரீமான், செல்வ செழிப்பு மிக்கவன் என்பதால் தைரியமாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன்" 
என்று பதில் சொன்னார்.

இப்படி ஒரு பதிலை கேட்டதும், தண்டகன் தனக்குள்ளேயே ஆலோசித்தான்...
"இவர் என்ன இப்படி சொல்கிறார்.
யார் ஸ்ரீமானோ அவனுக்கு தானே பயம் ஏற்படும்!!
ஏழை ப்ராம்மணன் யாருக்குமே பயப்பட வேண்டிய அவசியம் இல்லையே!! ஒன்றுமே இல்லாதவனிடம் அடித்து பிடுங்கினாலும் அவனிடம் ஒன்றுமே இருக்காதே!!
இவர் ஸ்ரீமான் என்றால், இவர் தானே என்னை பார்த்து நியாயமாக பயப்பட்டு இருக்க வேண்டும். 
பார்ப்பதற்கும் இவர் பெரிய பணக்காரன் போல தான் இருக்கிறார். பெரும் பொழிவுடன் தான் இருக்கிறார்."
என்று நினைத்து கொண்டே, அந்த ப்ராம்மணனை பார்த்து,
"உன்னை பார்த்தால் சீமானை போல தான் இருக்கிறாய். அப்படி என்ன பெரும் சொத்து உன்னிடம் இருக்கிறது என்று சொல்"
என்று கேட்க, ப்ராம்மணனாக இருக்கும் பெருமாள்,
"ப்ராம்மணனிடம் என்ன சொத்து இருக்கிறது என்று கேட்கிறாயே...
இதை கேட்கவும் வேண்டுமா?...
வேதம் தான் ப்ராம்மணனின் சொத்து.
வேதம் அறியாததாலேயே இவர்களை தரித்திர ப்ராம்மணன் என்று சொன்னேன்.
வேதம் என்ற முழுமையான சொத்து இவர்களிடம் இல்லாததாலேயே இவர்கள் உன்னை கண்டு ஓடுகிறார்கள்.
மேலும், 
இந்த சொத்தை மட்டும், நீ என் அனுமதி இல்லாமல் திருடவே முடியாது..







வேதம் என்ற சொத்து என் வாக்கிலேயே இருப்பதால், நாங்கள் எங்கு சென்றாலும் வாழ இயலும். 'வித்வான் சர்வத்ர பூஜ்யதே'"
என்று சொல்ல,
தண்டகன், "அப்படியென்றால் வேதம் என்ற சொத்தை (ஸ்ரீ), நான் உன்னிடமிருந்து கைப்பற்றி (முஷ்ணா) விடுகிறேன்.
உம்முடைய பொலிவுக்கு காரணம் இந்த வேதம் தான் காரணம் என்று அறிகிறேன்"
என்று மிரட்ட,
"அது உன்னால் ஆகாது.. 
ப்ராம்மணர்கள் ஒதும் வேதத்தை மத்ஸ்ய ரூபத்தில் விஷ்ணுவே காத்து கொண்டு இருக்கிறார்." என்று இவர் சொல்ல,
"அந்த விஷ்ணுவின் இதயத்தில் வேதம் ஒளிந்து இருந்தாலும் அதை நான் கைப்பற்றி விடுவேன்"
என்று தண்டகன் சொல்லி,
'ப்ராம்மணர்களை வேதத்தை விட்டு விட செய்தாலேயே, ப்ராம்மணன் ஒழிந்து விடுவான்' என்பதால், 'அந்த வேதத்தை அழிக்க வேண்டும்' என்று தீர்மானித்து கொண்டான்.

"ப்ராம்மணர்கள் வேத படிக்க கூடாது...
வேதம் என்று இருப்பதே ப்ராம்மணனுக்கு மறந்து போக வேண்டும்"
என்றே சங்கல்பித்து கொண்டு, அதற்காக கடுமையான தவம் செய்ய ஆரம்பித்தான் தண்டகன்.

இவன் செய்த கோரமான தவத்தின் பலனால், ப்ராம்மணனுக்கு வேதம் கற்று கொள்ளும் ஆர்வம் குறைந்தது.
உண்மையான வேத ப்ராம்மணர்களை கண்ணால் காண்பதே அரிதாகி போனது.
"தரித்திர ப்ராம்மணனாகி" போன இவர்கள்,
தன் தகப்பனுக்கு சொல்ல வேண்டிய தர்ப்பண மந்திரமும் கூட தெரியாமல்,
அமாவாசை தர்ப்பண மந்திரமும் தெரியாமல்,
காயத்ரி மந்திரமும் ஜபம் செய்யாமல்,
சந்தியா வந்தனம் கூட தெரியாது என்ற நிலைக்கு சென்று விட்டனர்.

இப்படி வேதத்தை விட்ட இவர்கள், நாதீகர்களாகவும், மிலேச்சனாகவும், வேதத்துக்கு எதிரான பாஷண்டிகளாக ஆகி நிற்க,
"தான் செய்த தவம் பலித்ததே!! ப்ராம்மணன் ஒழிந்தானே!! "
என்று பெரும் ஆனந்தம் அடைந்தான் தண்டகன்.
தனக்கே சபாஷ் போட்டுக்கொண்டான்.

இன்றைய தேதியில், ப்ராம்மணர்கள்,
"இங்கிலீஷ் படிப்பு, ஜெர்மன், பிரெஞ்ச் மொழி கூட படிப்பேன், ஆனால் தப்பித்தவறி கூட வேதத்தை படிக்க மாட்டேன்"
என்று தரித்திர ப்ராம்மணர்களாக ஆகி, யார் யாருக்கோ கால் பிடித்து கொண்டுள்ளனர்.
வேதத்தை படிக்க ஒரு ப்ராம்மணன் தயாரில்லை.
இந்த கலியில், தண்டகன் போல யார் தவம் செய்தார்களோ!!
என்று தோன்றுகிறது.

தண்டகன்
"சபாஷ்... அக்ரஹாரம் ஒன்று கூட இல்லாமல் அடியோடு ஒழித்து விட்டேன்...
வைதீக ப்ராம்மணன் எல்லோரும் ஒழிந்தார்கள்..
ப்ராம்மணன் எல்லோரும் லௌகீக ப்ராம்மணனாக ஆகி, வேதத்தை விட்டு விட்டான்.
வேதம் ஒழிந்தது..
இனி இந்த நாராயணன் என்ன செய்து விடுவான்? என்று பார்க்கிறேன்"
என்று பூரித்து போனான்.
பொறுக்க முடியாத இந்திரன், "வேத மந்திரங்கள் சொல்லும் ப்ராம்மணர்கள் இல்லாமல் செய்து விட்டானே!!" என்று தன் வஜ்ராயுதத்தை எடுத்து கொண்டு இவன் மேல் வீச, இந்திரனை அடக்கி, அவர்  சக்தியையை கைப்பற்றி (முஷ்ணம்) விட்டான் தண்டகன்.

இப்படியே யமன், வாயு, அக்னி என்று தேவர்கள் அனைவரும் ஒவ்வொன்றாக இவனை ஒழிக்க வர, அனைவரையும் ஒடுக்கி, அவர்கள் சக்தியை அபகரித்து, அனைவரையும் தோற்கடித்து விட்டான் தண்டகன்.

பூதேவர்களான ப்ராம்மணனும் ஒழிந்தார்கள், 
சொர்க்க லோகத்தில் உள்ள தேவர்களும் ஒழிந்தார்கள் 
என்றதும் பெரும் வெற்றி பெற்றான் தண்டகன்.

இந்த நிலையில்,
வேதம் மறைந்ததால், எங்குமே யாகங்கள் நடப்பது நின்று போனது.. கோவிலில் பூஜைகள் நின்று போனது..
இந்திரன், வாயு, அக்னி போன்ற தெய்வ வழிபாடுகள் நின்று போனதால்,
இவர்களுக்கு கட்டுப்பட்டு இருந்த பஞ்ச பூதங்கள் தாறுமாறாக போக ஆரம்பிக்க,
ஒரு இடத்தில் மழையே இல்லாமல் பெரும் வறட்சி உண்டானது..
நதிகள் வறண்டு போனது..
ஒரு இடத்தில் கடுமையான வெயில் ஏற்பட்டு, வாழ முடியாத நிலையில் உலகம் தவித்தது..
உலக ஜனங்கள் தரித்திர நிலைக்கு தள்ளப்பட்டனர்.. எங்கும் பஞ்சம் உண்டானது.
பஞ்சம் ஏற்பட்டதால், 
மாமிசம் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டு, ஒரு மனிதன் இன்னொரு மனிதனையே சாப்பிடும் அளவுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டு ..
உலகம் முழுவதுமே தாறுமாறாக போய் விட்டது




பஸ்மாசுரன், "சிவபெருமான் கொடுத்த வரத்தை கொண்டு, சிவபெருமானையே பஸ்பமாக்க நினைக்க, வஞ்சகனை வஞ்சகனாயாலேயே கொன்றார் பெருமாள்".
அது போல,
தண்டகன் செய்த இந்த காரியத்தை அவன் வழியிலேயே சென்று சரி செய்ய சங்கல்பித்தார்.

வராக பெருமாள், அதே பழைய பிராம்மண ரூபத்தை எடுத்துக்கொண்டு, தண்டகன் எதிரே வந்தார்.

"தண்டகா... தபசு செய்து வேதத்தையெல்லாம் அபகரித்து விட்டாயா?
சௌக்கியமாக இருக்கிறாயா?"
என்று பெருமாள் கேட்க,
தண்டகன்
"அனைத்து ப்ராம்மணனிடமிருந்தும் வேதத்தை அபகரித்து விட்டேன். உம்மிடத்தில் உள்ள வேதத்தை மட்டும் இன்னும் அபகரிக்க வில்லை."
என்றான்.
"ஏன்... என்னை மட்டும் விட்டுவிட்டாய்?" 
என்று பெருமாள் கேட்க,
"நீர் என் நண்பனாக ஆகிவிட்டீர்.. இதை சொல்லிக்கொடுத்ததே நீர் தானே.  அதனால் உம்மை மட்டும் விட்டு வைத்திருக்கிறேன் !
அனைத்து ப்ராம்மர்களின் வேதமும் இப்பொழுது என் கையில்.."
என்றான்.

"இந்த வேதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்து விடப்போகிறாய்?"
என்று பெருமாள் கேட்க,
"வேதம் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் பெரும் சொத்து உள்ளது அல்லவா.. நானே பெரும் ஸ்ரீமானாக ஆகி விட்டேன் !"
என்றான்.

"அட பைத்தியங்கக்காரா!!  உலகத்தில் உள்ள ப்ராம்மணர்களை இத்தனை எளிதாக ஒழித்து விட முடியுமா? 
உண்மையில் உன் சாமர்த்தியத்தால், இவர்களிடமிருந்து வேதத்தை கைப்பற்றவில்லை. இவர்கள் ஏற்கனவே தரித்திர பிராம்மணர்கள்.
இவர்கள் வேத மந்திரங்களை கூட தவறாக உச்சரித்து சொன்னவர்கள்.

உண்மையில், நீ தப்பான வேதத்தை கைப்பற்றி வைத்து கொண்டிருக்கிறாய்.
நீ இந்த வேதத்தை படித்தால், நீயும் ஒழிந்து போய் விடுவாய்."
என்று பெருமாள் பேச,
"அப்படியா.... ஆஹா.. எனக்கு தெரியாதே ஸ்வாமி !!"
என்று தண்டகன் பதற,
"கவலைப்படாதே... உன் வேதத்தை என்னிடம் கொடு. நான் அதை திருத்தி கொடுக்கிறேன்..." என்றார் பெருமாள்.
உடனே,
தண்டகன், அம்ருத கலசத்தை அசுரர்கள், மோகினியாக வந்த பெருமாளிடம் அப்படியே கொடுத்ததை போல, தான் அபகரித்த வேதத்தை பெருமாளிடம் கொடுத்து விட்டான்.

வேதத்தை வாங்கிக்கொண்ட பெருமாள், பட்டென்று மறைந்து விட்டார்.
வராஹ பெருமாளாக சுயமாக ஆவிர்பவித்து நின்றார்.
தண்டகன் வேதத்தை இழந்து நின்றான். 
மீண்டும் வேத ஒலி உலகெங்கும் ஒலிக்க ஆரம்பித்தது.

தண்டகனால் கைப்பற்ற பட்ட வேதம் என்ற சொத்தை (ஸ்ரீ), 
வராக பெருமாள் தானே சென்று கைப்பற்றியதால் (முஷ்ணம்),
இந்த திவ்ய தேசத்துக்கு "ஸ்ரீ முஷ்ணம்" என்ற பெயர் ஏற்பட்டது.
க்ருத யுகத்தில் நடந்த சம்பவம். தமிழகத்தில் நடந்த சம்பவம்.
இன்று, ஸ்ரீ முஷ்ணம் சென்றால், அதே வராஹ பெருமாளை, சுயமாக ஆவிர்பவித்த பெருமாளை, தரிசிக்கலாம்.

இந்த திவ்ய தேசத்தில், வராஹ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி கொடுக்கிறார்.
இந்த பெருமாளை சேவித்தால், நல்ல கல்வி ஞானம் உண்டாகும்.
மற்ற உலக பலன்களும் கிடைக்கும்.





'வராஹ அவதாரம்' பற்றி, 'சிவபெருமான் அவதாரம்' பற்றி தெரிந்து கொள்ள... இங்கே படிக்கவும்.


வாழ்க ஹிந்துக்கள்...
வாழ்க ஹிந்து தர்மம்...


Monday 20 January 2020

Hanuman Chalisa with meaning (ஹனுமான் சாலிசா அர்த்தத்துடன்) - Tulasi Das (துளசி தாசர்) தெரிந்து கொள்வோம்...

ShreeGuru charana saroja-raja
Nija manu mukuru sudhaari |
Baranau ragubhara bimala jasu
Jo dhaayaku phala chari ||


श्रीगुरु चरन सरोज रज,
निज मनु मुकुरु सुधारि ।
बरनउँ रघुबर बिमल जसु,
जो दायकु फल चारि ।।


ஸ்ரீகுரு சரண சரோஜ-ரஜ
நிஜ மனு முகுரு சுதாரி |
பரணவ் ரகுபர பிமல ஜசு
ஜோ தாயகு பல சாரி ||





With the dust of Guru's Lotus feet, 
I clean the mirror of my mind first. 
Then, love to narrate the sacred glory of Sri Ram Chandra, 
The Supreme among the Raghu dynasty who gives us the meaning of four fold fruits of life.(Dharma, Artha, Kama and Moksha).

குருவின் பாததுளி என் சிரசில் விழ,
என் மனதின் கண்ணாடியை சுத்தம் செய்து கொள்கிறேன்.
ஸ்ரீ ராம சந்திரனின் மகிமையை கேட்பதால்,
ரகு வம்சத்தினரிடையே உயர்ந்த ராமபிரானின் சரித்திரம் நமக்கு நான்கு புருஷார்த்தங்களையும் தருகிறது. (தர்மம், அர்த்த, காம மற்றும் மோட்சம்). 



 


Budhdhi-heena thanu jaanikey
Sumirou pavana kumaara |
Bala-budhdhi bidhya dehoomohe
Harahu kaleysa bikaara ||

बुद्धिहीन तनु जानिके,
सुमिरौं पवन-कुमार ।
बल बुधि बिद्या देहु मोहिं,
हरहु कलेस बिकार ।।

புத்தி-ஹீன தனு ஜானிகே
சுமிரௌ பவன குமார |
பல-புத்தி பித்யா தேஹூ மோஹி
ஹரஹு கலேச பிகார ||

Fully aware of the deficiency of my intelligence,
I concentrate my attention on Pavan Kumar and
humbly ask for strength, intelligence and true knowledge
to relieve me of all blemishes

என்னிடம் உள்ள குறையை அறிந்து கொண்டு,
நான் என் குருவாகிய பவன குமாரனான ஹனுமனை பிரார்த்திக்கிறேன்.
எனக்கு வலிமையும், புத்தியும் உண்மையான அறிவையும் தருமாறு அடிபணிந்து பிரார்த்திக்கிறேன்
எனது எல்லா குற்றங்களையும், குறைகளையும் மன்னியுங்கள்


Jai Hanumaan gyana guna sagara
Jai Kapeesha thihun lokhey ujaagara || 1 ||

जय हनुमान ज्ञान गुन सागर ।
जय कपीस तिहुँ लोक उजागर ।।

ஜெய் ஹனுமான ஞான குண சாகர
ஜெய் கபீஷ திஹு லோகே உஜாகர


Victory to you, O'Hanuman! Ocean of Wisdom and virtue
Victory to the Best of Vanara, who is well known in all the three worlds

விவேகம் மற்றும் நல்லொழுக்கத்தின் பெருங்கடலே ! ஹே 'ஹனுமான்! உங்களுக்கே ஜெயம் !
வானரர்களில் சிரேஷ்டரே !! மூன்று உலகங்களிலும் நன்கு அறியப்பட்டவரே ! உமக்கே ஜெயம் !






Raama dhootha athulitha bala dhama
Anjani-puthra Pavana sutha naamaa || 2 ||

राम दूत अतुलित बल धामा ।
अंजनि-पुत्र पवनसुत नामा ।। 

ராம தூத அதுலித பல தாமா
அஞ்சனி-புத்ர பவனசூத நாமா

You, the Divine messenger of Ram and repository of immeasurable strength,
known as Anjana's son and also known as the son of the wind (pavanaputra).

ராமபிரானின்  தெய்வீக தூதரே ! அளவிட முடியாத பலம் கொண்டவரே !
அஞ்சனையின் மகனே ! வாயு புத்திரனே !



Mahaabeera Bikrama Bajharangee
Kumathi nivaara sumathi Key sangee || 3 ||

महाबीर बिक्रम बजरंगी ।
कुमति निवार सुमति के संगी ।।

மஹாபீர பிக்ரம பஜரங்கீ
குமதி நிவார சுமதி கே சங்கீ

Oh Hanuman ji! You are valiant and brave, with a body as strong as Thunderbolt
You are the dispeller of darkness of evil thoughts and companion of good sense and wisdom.

வாயு புத்திரனே ! எல்லையில்லா வீரமும் ! எல்லையில்லா தைரியம் உள்ளவரே ! வலுவான கட்டுடல் உடையவரே !
தீய எண்ணங்களின் இருளை விரட்டுபவரே !
நல்ல அறிவுக்கும் ஞானத்திற்கும் துணையாக இருப்பவரே !


Kanchana barana biraja subesa
Kaanana Kundala kunchathi Kesha || 4 ||

कंचन बरन बिराज सुबेसा ।
कानन कुंडल कुंचति केसा ।।

கஞ்சன பரண பிராஜ சுபேசா
கானன குண்டல குஞ்சதி கேசா

Hanumanji ! your physique is golden coloured and your dress is pretty.
Your ear rings and long curly hair are also divine.

ஹே அஞ்சனை குமாரா ! உங்கள் உடல் தங்கம் போல இருக்கிறது. உங்கள் உடை அலங்காரமும் அழகாக இருக்கிறது.
உங்கள் காதுகளில் உள்ள குண்டலங்கள், நீண்ட சுருள் முடி கூட அழகாக உள்ளது


Haath Bajra Aur Dhvajaa bhirajhay
Kaandhey moonj janeyvu  saajai || 5 ||

हाथ बज्र औ ध्वजा बिराजै ।
काँधे मूँज जनेऊ साजै ।।

ஹாத பஜ்ர ஒள த்வஜா பிராஜய்
காந்தே மூன்ஜ ஜனேஉ சாஜய்


Vajra (mace) and victory flag are shining in your hand.
Sacred thread made of Munja grass adorns your shoulder

ஹே அஞ்சனை குமாரா ! உங்கள் கையில் கதையும் வெற்றிக் கொடியும்  பிரகாசிக்கின்றன.
மூன்ஜ புல்லால் செய்யப்பட்ட புனித நூல் (பூணூல்) உங்கள் தோள்பட்டையை அலங்கரிக்கிறது.







Shankara suvana kesaree Nandana
Theja prataapa mahaa jaga bandana || 6 ||

संकर सुवन केसरीनंदन ।
तेज प्रताप महा जग बंदन ।। 

சங்கர சுவன கேசரீ நந்தன
தேஜ ப்ரதாப மஹா ஜக பந்தன

O descendant of Lord shiva ! You give joy and pride to King Kesari.
Your great majesty is celebrated by the whole world

சங்கரனின் அம்சமாக இருப்பவரே ! உங்களால் கேசரி மன்னருக்கு மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுகிறது.
உம்முடைய பெருமை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது


Bidhyaavaana gunee athi chaathur
Rama kaaja karibey ko aathur || 7 ||

बिद्यावान गुनी अति चातुर ।
राम काज करिबे को आतुर ।। 

பித்யாவாண குனி அதி சாதுர
ராம காஜ கரிபே கோ ஆதுர

You are the repository of learning, virtuous and Very clever,
You are always keen to carry out to do Rama's tasks.

சர்வ சாஸ்திரங்களும் அறிந்தவரே ! நல்லொழுக்கம் உடையவரே ! மஹா புத்திசாலியே !
ராமபிரான் இட்ட பணியை எப்போதும் செய்து முடிக்க ஆர்வம் கொண்டவரே !


Prabhu charitra sunibey -ko rasiya
Rama Lakhana Sithaa man Basiyaa || 8 ||

प्रभु चरित्र सुनिबे को रसिया ।
राम लखन सीता मन बसिया ।। 

பிரபு சரித்ர சுனிபே -கோ ரசியா
ராம லகன சீதா மன பசியா

You get intensely delighted to listen to the narration of Lord Ram's lifestory.
Sri Rama, Sri Lakshmana and Devi Sita always Dwel in your Heart.

ராமபிரானின் சரித்திரத்தை கேட்பதில் நீங்கள் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறீர்கள்.
ஸ்ரீ ராமர், ஸ்ரீ லட்சுமணர் மற்றும் தேவி சீதா எப்போதும் உங்கள் இதயத்தில் வாழ்கிறார்கள்.



Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்






Sookshma roopa dhari Siyahi dikhaava
Bikata roopa dhari lanka jaravaa || 9 ||

सूक्ष्म रूप धरि सियहिं दिखावा ।
बिकट रूप धरि लंक जरावा ।।

சூக்ஷ்ம ரூப தரி சியஹி திகாவா
பிகட ரூப தரி லங்க ஜராவா


You appeared before Devi Sita in a diminutive form and spoke to her,
At Same time, you assumed an awesome gigantic form and struck Lanka on fire

நீங்கள் தேவி சீதா முன் ஒரு சிறிய வடிவத்தில் தோன்றி தேவியுடன் பேசினீர்கள்!
அதே சமயம், நீங்கள் ஒரு அற்புதமான விஸ்வரூப வடிவத்தை எடுத்துக் கொண்டு, இலங்கையை தீக்கு இரையாக்கினீர்கள்



Bheema roopa dhari asura samhaarey
Raama chandhra key kaaja samvaarey || 10 ||

भीम रूप धरि असुर सँहारे ।
रामचंद्र के काज सँवारे ।। 

பீம ரூப தரி அசுர சம்ஹாரே
ராம சந்த்ர கே காஜ சம்வாரே

Assuming a Gigantic form you destroyed the Rakshasa and accomplished the Task given by Sri Rama.

ஒரு பிரம்மாண்டமான வடிவத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் ராக்ஷஸர்களை அழித்தீர்கள்.
ஸ்ரீ ராமர் கொடுத்த பணியை அற்புதமாக நிறைவேற்றினீர்கள்


Laaya Sanjeevana Lakhana Jiyaaye
ShriRaghubeera Harashi ur laaye || 11 ||

लाय संजीवन लखन जियाये ।
श्रीरघुबीर हरषि उर लाये ।। 

லாய  சஞ்சீவன லகன ஜியாயே
ஸ்ரீரகுபீர ஹரஷி உர் லாயே

You brought the Sanjivani herb and revived Sri Lakshmana.
Sri Rama embraced You overflowing with Joy.

நீங்கள் சஞ்சீவனி மூலிகையை கொண்டு வந்து ஸ்ரீ லட்சுமணனை உயிர்ப்பித்தீர்கள்.
ஸ்ரீ ராமர் உங்களை மகிழ்ச்சியுடன் தழுவினார்.
Raghupathi Keenhi bahutha badaayi
Thum mama priya Bharata sama bhaai || 12 ||

रघुपति कीन्ही बहुत बडाई ।
तुम मम प्रिय भरत सम भाई ।। 

ரகுபதி கீன்ஹி பஹுத படாயீ
தும் மம ப்ரிய பரத சம பாயீ

Sri Rama Praised You Greatly,
And said: "You are as dear to me as my brother Bharata"

ஸ்ரீ ராமர் உங்களைப் பெரிதும் புகழ்ந்தார்,
மேலும், "நீங்கள் என் சகோதரர் பரதனைப் போலவே எனக்கு மிகவும் பிரியமானவர்" என்றார்.

Sahasa badhana tumharo jasa gaavai
Asa-kahi Shreepati kanta lagaavai || 13 ||

सहस बदन तुम्हरो जस गावैं ।
अस कहि श्रीपति कंठ लगावैं ।।

சஹச பதன தும்ஹரோ ஜச காவைய்
அச-கஹி ஸ்ரீபதி கண்ட லகாவை





Once, Lord Rama embraced you,
the thousand headed AdiShesa (Lakshmana) also praised Your Glory

பகவான் ராமர் உங்களைத் தழுவினார் என்றதும், 
ஆயிரம் தலை ஆதிஷேசனும் (லட்சுமணர்) உங்கள் மகிமையை புகழ்ந்தார்



Sanakaadhika Brahmaadhi muneesa
Naradha-Saaradha sahitha aheesa || 14 ||

सनकादिक ब्रह्मादि मुनीसा ।
नारद सारद सहित अहीसा ।। 

சனகாதிக பிரம்மாதி முனீசா
நாரத-சாரத சஹித அஹீசா

Even Sanaka, Lord Brahma and other Sages,
Narada and Devi Saraswati unable to sing the glories of Hanumanji exactly

சனகர், பிரம்மா, மற்றும் பிற முனிவர்கள்,
நாரதர் மற்றும் தேவி சரஸ்வதி ஆகியோர் கூட
அனுமனின் மகிமையை முழுமையாக பாட முடிவதில்லை.

Yama Kubera Dhigbaala Jahaan they
Kabi kobidha kahi sake kahan they || 15 ||

यम कुबेर दिगपाल जहाँ ते ।
कबि कोबिद कहि सके कहाँ ते ।। 

எம குபேர திக்பால ஜஹான் தே
கபி கோபித கஹி சகே கஹான் தே

Even Yama (God of Death), Kubera (God of Wealth) and the demi gods of each directions (Dighbala) have been vying with one another in offering homage to your glories.
Poets and Scholars have not been able to Describe Your Glories in full.

 யமன், குபேரன் மற்றும் ஒவ்வொரு திசைகளின் தெய்வங்களும் (திக்பாலா) கூட உங்கள் மகிமைக்கு மரியாதை செலுத்துவதில் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள்.
கவிஞர்கள் மற்றும் அறிஞர்கள் உங்கள் மகிமைகளை முழுமையாக விவரிக்க முடிவதில்லை.


Thum upakara Sugreevahin keenha
Rama milaaya raja padha dheenha || 16 ||

तुम उपकार सुग्रीवहिं कीन्हा ।
राम मिलाय राज पद दीन्हा ।। 

தும் உபகார  சுக்ரீவஹிம் கீன்ஹா 
ராம மிலாய ராஜ பத தீன்ஹா

You Rendered a great Help to Sugriva.
You Introduced him to Sri Rama and thereby Gave back his Kingdom

நீங்கள் சுக்ரீவனுக்கு பெரும் உதவி புரிந்தீர்கள்.
சுக்ரீவனை  ஸ்ரீ ராமருக்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் அவருடைய ராஜ்யத்தை திரும்பக் கிடைக்க செய்தீர்கள்.





Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||
Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||
Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்



Tumharo mantra Bibheeshana maana
Lankeshwara Bhaye sab jag jaanaa || 17 ||

तुम्हरो मन्त्र बिभीषन माना ।
लंकेस्वर भए सब जग जाना ।।

தும்ஹரோ மந்த்ர பிபீஷன மானா
லங்கேஷ்வர பய சப் ஜக ஜானா


Vibhishana By listenening your advice.
He became Lord of Lanka, which is known all over the universe

உங்கள் ஆலோசனையை விபீஷணர் கேட்டார்.
இலங்கையின் அரசர் ஆனார். இதை உலகம் அறியுமே !





Juga sahasra jojana para Bhaanu
Leelyo thaahi madhura phala jaanu || 18 ||

जुग सहस्र जोजन पर भानू ।
लील्यो ताहि मधुर फल जानू ।।

ஜுக சஹஸ்ர ஜோஜன பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ


You flew towards the sun who is thousands of Yojanas away, 
thinking of him as a sweet fruit playfully

பல ஆயிரம் தொலைவில் உள்ள சூரியனை நோக்கி ஒரு சமயம் நீங்கள் பறந்து, 
சூரியனையே ஒரு பழமாக விழுங்கும்படியாக லீலை செய்தீர்களே 

Prabhu mudrikaa mayli mukha maahee
Jaladhi laanghi gaye ajaraja nahee || 19 ||

प्रभु मुद्रिका मेलि मुख माहीं ।
जलधि लांघि गये अचरज नाहीं ।।

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹி
ஜலதி லாங்கி கயே அஜரஜ நாஹீ

From mahendra muka parvat (the mountain), you carried the Rama's ring.
There is no wonder that you went across the ocean to reach Lanka.

மகேந்திர முக பர்வத்தில் (மலை) இருந்து, நீங்கள் ராமரின் மோதிரத்தை எடுத்துச் சென்றீர்கள்.
பெருமையுடைய நீங்கள் கடலைக் கடந்து  இலங்கையை சென்றதில் ஆச்சரியமில்லையே!


Durgama kaaja jagatha kay jaythey
Sugama anugraha tumharey theythey || 20 ||

दुर्गम काज जगत के जेते ।
सुगम अनुग्रह तुम्हरे तेते ।।

துர்கம காஜஜ கத கே ஜேதே
சுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

Oh Dear Hanuman !... Even the difficult tasks in the world
becomes easily achievable by your grace

ஓ அன்புள்ள அனுமனே ! ... உலகில் கடினமான பணிகள் கூட
உங்கள் அருளால் எளிதில் முடிந்து விடுமே


Rama dhuaare tum rakhvarey
Hotha na aagyaa binu paisaarey || 21 ||

राम दुआरे तुम रखवारे ।
होत न आज्ञा बिनु पैसारे ।।

ராம துஆரே தும ரக்வாரே
ஹோத ந ஆக்ஞா பினு பைசாரே


You are the doorkeeper of Rama's abode.
Without your permission nobody can enter Rama's abode

நீங்களே ராமபிரானின் காப்பாளனாக உள்ளீர்கள்.
உங்கள் அனுமதியின்றி யாரும் ராமரின் அருகில் நெருங்க முடியாது.



Sab sukha lahai tumhari sarnaa
Tum racchak kaahu ko darnaa || 22 ||

सब सुख लहै तुम्हारी सरना ।
तुम रच्छक काहू को डरना ।। 

சப் சுக லஹை தும்ஹாரி சரணா
தும ரச்சக காஹு கோ டர்ணா

All happiness stay with those who take refuge in you.
When you are the protector, why be afraid?

எல்லா மகிழ்ச்சிகளும் உங்களை அடைக்கலம் புகுபவர்களுடன் தங்குகின்றன.
நீங்கள் பாதுகாவலராக இருக்கும்போது, ஏது பயம்?





Aapana theja samhaaro aapai
Theeno lokha haanka they kaampai || 23 ||

आपन तेज सम्हारो आपै ।
तीनों लोक हाँक ते काँपै ।। 

ஆபன தேஜ சம்ஹாரோ ஆபை
தீனோ லோக ஹாங்க தே காம்பை

When you roar, all the three worlds tremble.
only you can control your might.

நீங்கள் கர்ஜிக்கும்போது மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.
உங்களால் மட்டுமே உங்கள் வலிமையைக் கட்டுப்படுத்த முடியும்.


Bhootha pisaacha Nikata nahi aavai
Mahaabeera jab naama sunaavai || 24 ||

भूत पिसाच निकट नहिं आवै ।
महाबीर जब नाम सुनावै ।।

பூத பிசாச நிகட நஹி வை
மஹாபீர ஜப நாம சுனாவை

Evil Spirits and Ghosts don't come near us
O great Courageous ! when your name is chanted

ஓ மகா தைரியம் கொண்டவரே ! தீய சக்திகளும் பேய்களும் அருகில் வருவதில்லை
உங்கள் பெயர் உச்சரிக்கப்படும் போது



Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்



Naasai rogha harai sab peera
Japatha niranthara Hanumatha beera || 25 ||

नासै रोग हरै सब पीरा ।
जपत निरंतर हनुमत बीरा ।।

நாசை ரோக ஹரை சப் பீரா
ஜபத நிரந்தர ஹனுமத பீரா


Diseases will run away, all pains will be gone,
when a devotee continuously repeats Hanuman the brave's name

நோய்கள் ஓடிவிடும், எல்லா வலிகளும் நீங்கும்,
தீரமுள்ள அனுமனின் பெயரை தொடர்ந்து சொல்லும்போது



Sankata theym Hanumaana chudaavai
Mana Krama bachana dhyaana jo laavai || 26 ||

संकट तें हनुमान छुडावै ।
मन क्रम बचन ध्यान जो लावै ।। 

சங்க தே ஹனுமான சுடாவை
மன க்ரம பசன த்யான ஜோ லாவை

All odds in life will be vanished who remember Hanuman
Whose thoughts, words and deed are with hanuman

அனுமனின் அனுகிரத்தால் வாழ்க்கையில் உள்ள அனைத்து முரண்பாடுகளும் மறைந்துவிடும்.
எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களில் ஹனுமனை நினைப்போருக்கு

Sab para Rama tapasvee rajaa
Thina kay kaaja sakala Tum saaja || 27 ||

सब पर राम तपस्वी राजा ।
तिन के काज सकल तुम साजा ।।

சப பர ராம தபஸ்வீ ராஜா
தின கே காஜ சகல தும சாஜா


Rama who is like a rishi is the king of all.
You managed all his tasks

ரிஷி போன்ற ராமபிரான் அனைவருக்கும் ராஜா.
அவருடைய எல்லா பணிகளையும் நீங்களே நிர்வகித்தீர்கள்!





Aur manoratha jo koyi laavai
Soyi amitha jeevana phala paavai || 28 ||

और मनोरथ जो कोइ लावै ।
सोइ अमित जीवन फल पावै ।। 

ஒளர் மனோரத ஜோ கோஇ லாவை
சோஇ அமித ஜீவன பல பாவை

Whoever brings their wishes to you,
they get unlimited fruits (results)

 மனோரதங்கள் பூர்த்தியாக யார் யாரெல்லாம் உங்களிடம் வருகிறார்களோ!
அவரவர்களுக்கு வேண்டிய பலன்களை தருகிறீர்கள்.

Chaaro yuga prathaapa tumhara
Hai parasidhdhi jagatha ujiyaaraa || 29 ||

चारों युग प्रताप तुम्हारा ।
है परसिद्ध जगत उजियारा ।।

சாரோ யுக ப்ரதாப தும்ஹாரா
ஹை பரஸித்தி ஜகத உஜியாரா

Your glory is for all the four yugas,
Your greatness is very famous throughout the world, and illumines the world

உங்கள் மகிமை நான்கு யுகங்களிலும் பிரதிபலிக்கிறது.
உங்கள் மகத்துவம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது, உலகத்தை ஒளிரச் செய்கிறது 

Saadhu Santh ke thum Rakhwaarey
Asura nikanthana Rama dhulaarey || 30 ||

साधु संत के तुम रखवारे ।
असुर निकंदन राम दुलारे ।। 

சாது சந்த கே தும ரக்வாரே
அசுர நிகந்தன ராம துலாரே

Oh Hanumanji! You are the saviour and the guardian angel of saints and sages and
You destroy all the evil Rakshasa, Oh dearest of Shri Rama !

ஓ ஹனுமான் ! நீங்கள் சாதுக்கள் முனிவர்களின் பாதுகாவலர்.
தீயவர்களை அழிக்கும் நீங்கள், ராமபிரானுக்கு மிகவும் ப்ரியமானவர்


Ashta sidhdhi nava nidhi key dhaathaa
Asa-bara dheena Jaanakee maathaa || 31 ||

अष्ट सिद्धि नव निधि के दाता ।
अस बर दीन जानकी माता ।।

அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா
அச-பர தீன ஜானகீ மாதா


Oh Hanuman ! You hold the 8 Siddhis and 9 Nidhis within you. You can also bless others
Because devi sita blessed you to grant these powers to others.

8 ஸித்திகள் மற்றும் 9 நிதிகள் கொண்ட நீங்கள், இந்த செல்வங்களை தன் பக்தனுக்கும் தருவதற்கு
உரிமையை தேவி சீதை உங்களுக்கு வரமாக தந்தாளே!!


8 siddhi are:
  1. Anima அணிமா - (decrease size of body even to size of atom), 
  2. Magima மகிமா - (increase the size of body even to size of universe),
  3. Garima கரிமா - (increasing the weight of body heavier than a powerful mountain)
  4. Lagima லகிமா - (ability to make the body lighter than air and fly)
  5. praapthi ப்ராப்தி - (ability to get whatever desired and ability to understand any language even animal and birds)
  6. ishitha ஈசத்துவம் - (ability to order even brahma and 30 crore demi gods and capable to leading army and rule)
  7. prakaamiya ப்ராகாமியம் - (ability to travel in any (earth, water, air) and remain young forever)
  8. Vashithva வசித்துவம் - (ablity to control his senses and others mind and senses)

9 Nidhi are
  1. Padma Nidhi (possessed with enough gold (wealth) to donote others)
  2. Mahapadma Nidhi (possessed with enough gems and jewels to donate surplus to spiritual causes)
  3. Nil Nidhi (possessed with wealth which never ceases and goes for generations)
  4. Mukund Nidhi (possessed with wealth to lead royal life which has art, music and poetry)
  5. Nand Nidhi (possessed with wealth to handle family and good in gold trading)
  6. Makar Nidhi (possessed with great expertise in using weapons, warfare and establish kingdoms)
  7. Kachchap Nidhi (possessed with surplass food and clothes)
  8. Shank Nidhi (possessed with ability to get delicious food from nowhere)
  9. Karva Nidhi (possessed with noble nature)
Rama rasaayana tumhare paasa
Sadhaa raho Raghupati ke dhaasaa || 32 ||

राम रसायन तुम्हरे पासा ।
सदा रहो रघुपति के दासा ।।

ராம ரசாயன தும்ஹரே பாசா
சதா ரஹோ ரகுபதி கே தாசா

Oh Hanuman! You hold the essence of devotion to Rama,
Always remaining His Servant.

ஓ ராமதாஸா ! நீங்கள் ராமபக்தியின் சாரத்தை அறிந்தவர்.
எப்போதும் அவரது தாஸனாகவே இருக்கிறீர்கள்.





Ashta sidhdhi nava nidhi key dhaathaa
Asa-bara dheena Jaanakee maathaa || 31 ||

अष्ट सिद्धि नव निधि के दाता ।
अस बर दीन जानकी माता ।।

அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா
அச-பர தீன ஜானகீ மாதா


Oh Hanuman ! You hold the 8 Siddhis and 9 Nidhis within you. You can also bless others
Because devi sita blessed you to grant these powers to others.

8 ஸித்திகள் மற்றும் 9 நிதிகள் கொண்ட நீங்கள், இந்த செல்வங்களை தன் பக்தனுக்கும் தருவதற்கு
உரிமையை தேவி சீதை உங்களுக்கு வரமாக தந்தாளே!!



Rama rasaayana tumhare paasa
Sadhaa raho Raghupati ke dhaasaa || 32 ||

राम रसायन तुम्हरे पासा ।
सदा रहो रघुपति के दासा ।।

ராம ரசாயன தும்ஹரே பாசா
சதா ரஹோ ரகுபதி கே தாசா

Oh Hanuman! You hold the essence of devotion to Rama,
Always remaining His Servant.

ஓ ராமதாஸா ! நீங்கள் ராமபக்தியின் சாரத்தை அறிந்தவர்.
எப்போதும் அவரது தாஸனாகவே இருக்கிறார்.

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதாயையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதாயையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்


Thumharey bhajana Rama ko paavai
Janama-janama ke dhukh bisaraavai || 33 ||

तुम्हरे भजन राम को पावै ।
जनम जनम के दुख बिसरावै ।। 

தும்ஹரே பஜன ராம கோ பாவை
ஜன்ம-ஜன்ம கே துக பிசராவை

Singing your name gets us Rama himself and
Removes our sufferings (sin) got through our many previous births

உங்களை பாடுவதாலேயே ராம தரிசனம் கிடைத்து விடுகிறது.
ஜென்ம ஜென்மமாக நம்மிடம் உள்ள துன்பங்களும் (பாவம்) நீங்கி விடுகிறது.

Antha-kaala Raghubara pura jayee
Jahaan janma Hari-Bakhta Kahaayee || 34 ||

अंत काल रघुबर पुर जाई ।
जहाँ जन्म हरि-भक्त कहाई ।। 

அந்த-கால ரகுபர புர ஜாயீ
ஜஹான் ஜன்ம ஹரி-பக்த கஹாயீ

At the end of the life those souls reach the Lord Rama's abode
who were born and been a Devotee of Lord Rama

அந்திம காலத்தில், ராமபிரானின் சரணத்தை அடையும் பாக்கியத்தை,
தன் வாழ்நாள் முழுவதும் ராமரிடமே பக்தி செய்யும் பக்தர்கள் பெறுகிறார்கள்.

Aur Devathaa Chiththa na dhareyi
Hanumatha saye sarva sukha karayi || 35 ||

और देवता चित्त न धरई ।
हनुमत सेइ सर्व सुख करई ।।

ஒளர தேவதா சித்த ந தரயீ
ஹனுமத சேயி சர்வ சுக கரயீ


One need not hold any other demigod in mind. 
Hanuman alone will give all happiness.


வேறு ஒரு தெய்வத்தையும் மனதில் ஏற்க அவசியமில்லை நமக்கு. 
நம் ஹனுமான் மாத்திரமே எல்லா மகிழ்ச்சியையும் தந்து விடுவார்.


Sankata harai -mitai sab peera
Jo sumirai Hanumatha Balabeera || 36 ||

संकट हरै मिटै सब पीरा ।
जो सुमिरै हनुमत बलबीरा ।।

சங்கட ஹரை -மிடை சப் பீரா
ஜோ சுமிரை ஹனுமத பலபீரா

Problems and Pains will be removed from one's life
who remembers Hanuman the mighty brave one

வாழ்க்கையில் உள்ள சிக்கல்களும், துக்கங்களும் நம்மை விட்டு தூர விலகி போகும்,
நாம் மகா பலம் பொருந்திய சிரஞ்சீவியாக அனுமனை தியானித்தால்.





Jai Jai Jai Hanumaan Gosaayi
Jai Jai Jai Hanumaan Gosaayi
Kripaa Karahu guru deva ki naayi || 37 ||

जै जै जै हनुमान गोसाई ।
जै जै जै हनुमान गोसाई ।
कृपा करहु गुरु देव की नाई ।।

ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான கோசாயீ
ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான கோசாயீ
க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

Victory to you Hanuman ! Master of the senses.
Show mercy on us like a Guru does

உங்களுக்கே  வெற்றி ஹனுமான் ! புலன்களை அடக்கியவரே !
ஒரு குருவைப் போல எங்கள் மீது கருணை காட்டுங்கள்


Jo satha baara paata kara koyi
Chootahi bandhi mahaa sukha hoyee || 38 ||

जो सत बार पाठ कर कोई ।
छूटहि बंदि महा सुख होई ।। 

ஜோ சத பார பா கர கோயீ
சூடஹி பந்தி மஹா சுக ஹோயீ

One who recites this Hanuman Chalisa one hundred times daily for one hundred days 
He become free from the bondage of life and death and enjoys the highest bliss which is everlasting.

இந்த ஹனுமான் சாலிசாவை நூறு நாட்களுக்கு தினமும் நூறு முறை பாராயணம் செய்தால்
அவர் வாழ்க்கை மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, நித்தியமான மிக உயர்ந்த ஆனந்தத்தை அனுபவிப்பார்

Jo yah patai Hanumana Chaleesaa
Hoya sidhdhi saakhi Gaureesaa || 39 ||

जो यह पढै हनुमान चलीसा ।
होय सिद्धि साखी गौरीसा ।।

ஜோ யஹ படை ஹனுமான சலீசா
ஹோய ஸித்தி சாகி கௌரீசா


Those whoever reads this hanuman chalisa on Hanuman ji ,
will get spiritual enrichment. Lord Shiva is the witness to my (Tulasidas) statement

ஹனுமானை பற்றி சொல்லும், இந்த ஹனுமான் சாலிசாவை யார் படித்தாலும்,
அவர்கள் ஆன்மீக சாதனைகளைப் பெறுவார்கள். சிவன் எனது (துளசிதாஸ்) கூற்றுக்கு சாட்சி



Thulasidhaasa sadhaa hari cheraa
Keejai Naatha Hrudhaya maham deyra
Keejai Naatha Hrudhaya maham deyra || 40 ||

तुलसीदास सदा हरि चेरा ।
कीजै नाथ हृदय महँ डेरा
कीजै नाथ हृदय महँ डेरा ।।

துளசீதாச சதா ஹரி சேரா
கீஜை நாத ஹ்ருதய மஹம் டேரா
கீஜை நாத ஹ்ருதய மஹம் டேரா

Tulasidas is always a disciple of Lord Rama.
O lord Rama ! Make my heart your abode

இந்த துளசிதாஸ் எப்போதும் ராமரின் சீடரே.
ஹே ராமா ! என் இதயத்தையே உங்களது தங்குமிடமாக்குங்கள் !





Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||
Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதாயையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்



Jai Bolo Hanumaan kee ||
जय  बोलो  हनुमान  की  ||
ஜெய் போலோ ஹனுமான் கீ ||
ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Jai Bolo Hanumaan kee ||
जय  बोलो  हनुमान  की  ||
ஜெய் போலோ ஹனுமான் கீ ||

ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Jai Bolo Hanumaan kee ||
जय  बोलो  हनुमान  की  ||
ஜெய் போலோ ஹனுமான் கீ ||
ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Let us Know the Meaning of Bhaja Govindam by Adi Sankara. ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் அர்த்தத்துடன் (Bhaja Govindham with meaning)  தெரிந்து கொள்ள