'குங்குமப்பூ' கொண்டு பூஜிக்காமல், ஏன் குங்குமத்தால் அம்பாளை பூஜிக்கிறார்கள்?....
ஏன் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்து, நெற்றியில் குங்குமம் இட்டு கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்?
"குங்குமம்" என்பது சம்ஸ்க்ரித சொல்,
உண்மையில் அந்த சொல், நாம் உபயோகிக்கும் குங்குமத்தை அல்ல, குங்குமப்பூவை" குறிக்கிறது.
தேவி உபாசனை செய்யும் போது, "குங்குமப்பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும்"
என்று தான் வேத சாஸ்திரம் சொல்கிறது.
இதை குறித்து ஒரு சமயம் மஹா பெரியவர், "குங்கும பூவை கொண்டு செய்யாமல், ஏன் இப்பொழுது குங்குமத்தால் அம்பாளுக்கு பூஜை செய்கிறார்கள்?" என்று கேட்டார்.
யாரும் பதில் சொல்லவில்லை.
பதில் தெரிந்து இருந்தாலும், அவருடைய அழகான பதிலுக்காக அமைதி காத்தனர்.
மஹா பெரியவர் பேச தொடங்கினாராம்..
"வைத்திய சாஸ்திரப்படி 'குங்கும பூவுக்கு சரீரத்தின் புண்களை ஆற்றி, சூட்டை குறைக்கும் குணம் உண்டு' என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
அதே குணம் மஞ்சளுக்கும் உண்டு என்று சொல்கிறது.
சாஸ்திரத்தில், அனைத்துக்கும் 'ப்ரதிநிதி விசாரம்' என்று உண்டு.
அதாவது,
ஒன்று கிடைக்கவில்லை என்றால், அதற்கு பதில் அதற்கு ஈடான மற்றொரு பொருளை எடுத்து கொள்ளலாம் என்று உள்ளது.
அதன் படி,
குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பவர்கள் சிலர்.
குங்குமப்பூவோ விலை அதிகம்.
அதற்கு பதில், மஞ்சளை பாலில் கலந்து குடிப்பார்கள், மருத்துவ ரீதியாக.
அதே போல,
அம்பாளுக்கு பூஜை செய்யும் போது, குங்கும பூ இல்லாத நிலையில், அதற்கு ப்ரதிநிதியாக மஞ்சளுக்கு கொஞ்சம் சிவப்பு நிறம் கொடுத்து, 'குங்குமம்' என்று சொல்லி, அம்பாளுக்கு பூஜிக்கிறோம்"
என்று விளக்கினாராம் காஞ்சி மஹா பெரியவர்.
பெண்கள் நெற்றியில் குங்குமம், மஞ்சள் இட்டு கொள்வதற்குள் அடங்கி இருக்கும் மருத்துவ குணமும் இதன் மூலம் அறியலாம்.
அலங்கார ப்ரியனான பெருமாளுக்கு (ராமருக்கோ, கிருஷ்ணருக்கோ), குங்குமப்பூவால் பூஜை செய்வது விசேஷம்... முடிந்தவர்கள் செய்யலாம்.
ஹிந்து மதத்தில் எதுவுமே காரணமில்லாமல் இல்லை என்று அறிந்து கொண்டாலேயே, ஹிந்துக்கள் சுகமாக வாழலாம்.
ஆண்கள், பெண்கள், ரிஷிகள், ராக்ஷஸர்கள், மிருகங்கள் என்று அனைவருமே, அவரை பார்க்க வேண்டும், பழக வேண்டும், பேச வேண்டும் என்று ஆசைப்படுவார்களாம்.
ராமபிரானும் தானே முன் வந்து பேசி பழகுவாராம். யாரையும் அவமரியாதை செய்ய மாட்டாராம், யாரிடமும் பாராமுகமாக இருக்க மாட்டாராம். எல்லோருடைய நலனிலும் அக்கறை காட்டுவாராம்.
தசரதர் "தன் பிள்ளை" என்று ஆசையாக இருந்தார்.
ராமபிரானும் தானே வலிய வந்து அன்போடு பழகும் குணம் கொண்டவர் தான்.
இருந்தாலும்,
ராமபிரானின் எண்ணிலடங்கா தெய்வ குணங்கள், அதே சமயம் தன்னிடம் அவர் காட்டும் பித்ரு பக்தியை கண்டு திகைத்து நிற்பாராம்.
எல்லையில்லா பாசம் இருந்தும், சகஜமாக நெருங்கவும் முடியாமல், விலகவும் மனமில்லாமல்,ராமபிரானை பெருமையுடன் பார்த்து கொண்டே இருக்க ஆசைப்படுவாராம்.
லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோர், 'ராமபிரான் தன் அண்ணா' என்று ஆசையாக வருவார்களாம்.
ராமபிரானும் தானே வலிய வந்து அன்போடு பழகும் குணம் கொண்டவர் தான்.
இருந்தாலும்,
ராமபிரானின் எண்ணிலடங்கா தெய்வ குணங்கள், அதே சமயம் தன்னிடம் அவர் காட்டும் சகோதர பாசத்தை கண்டு திகைத்து நிற்பார்களாம்.
எல்லையில்லா பாசம் இருந்தும், சகஜமாக நெருங்கவும் முடியாமல், விலகவும் மனமில்லாமல், ராமபிரானை பார்த்து கொண்டே இருக்க ஆசைப்படுவார்களாம்.
வசிஷ்டர் மற்றும் பல ரிஷிகள், 'பரமாத்மாவே ராமனாக வந்து இருக்கிறார்' என்று ஆசையாக வருவார்களாம்.
ராமபிரானும் தானே வலிய வந்து அன்போடு பழகும் குணம் கொண்டவர் தான்.
இருந்தாலும்,
ராமபிரானின் எண்ணிலடங்கா தெய்வ குணங்கள், அதே சமயம் தன்னிடம் அவர் காட்டும் மரியாதையை கண்டு திகைத்து நிற்பார்களாம்.
எல்லையில்லா ஆனந்தம் இருந்தும், சகஜமாக நெருங்கவும் முடியாமல், விலகவும் மனமில்லாமல் தன் ஆசிரமத்தை விட்டு, தசரதர் அரண்மனையிலேயே தங்கி கொண்டு, தினமும் ராமபிரானை பார்த்து கொண்டே இருக்க ஆசைப்பட்டார்களாம்.
ஹனுமான், 'ராமபிரானுடைய தாஸன்' என்று ஆசையாக வருவாராம். ராமபிரானும் தானே வலிய வந்து, அன்போடு பழகும் குணம் கொண்டவர் தான்.
இருந்தாலும்,
ராமபிரானின் எண்ணிலடங்கா தெய்வ குணங்கள், அதே சமயம் தன்னிடம் அவர் காட்டும் அன்பை கண்டு திகைத்து நிற்பாராம்.
எல்லையில்லா பக்தி இருந்தும், சகஜமாக நெருங்கவும் முடியாமல், விலகவும் மனமில்லாமல், ராமபிரானை பார்த்து கொண்டே இருக்க ஆசைப்படுவாராம்.
பரமாத்மா ராமபிரானாக வந்ததை கண்டு, ஆண்களுக்கே இப்படி ஆசை, நிலை உண்டாகுமென்றால், தாயான கௌசல்யாவுக்கும், மஹாலட்சுமியான சீதா தேவிக்கும் ஏற்படும் ஆசையை சொல்லவும் வேண்டுமா?.
நரமாமிசம் சாப்பிடலாம் என்று வந்த ராக்ஷஸி சூர்பனகை, ராமபிரானின் தோற்றத்தை கண்டதுமே, மதி மயங்கி போனதில் ஆச்சரியமில்லை.
பாகுபாடு இல்லாமல், அனைவரையும் மயக்கியது ராமபிரானின் தெய்வ தரிசனம்.
ராமபிரான் தான் அனைவரிடமும் அன்போடு பழக கூடியவர் தான் என்றாலும், ராமபிரானை யாராலும் அத்தனை சகஜமாக நெருங்க முடியாத படி, எண்ணிலடங்கா கல்யான குணங்களுடன் இருந்தார்.
ஆசை இருந்தாலும், இவர் கம்பீரமும், குணங்களும், தோற்றமும் அனைவரையும் திகைப்படைய செய்தது... அவர் நிழல் கூட அனைவரையும் மோஹிக்க செய்தது.
த்ரேதா யுகம், துவாபர யுகத்துக்கும் (8 லட்சம் 64 ஆயிரம் வருடம்) முந்தியது.
ராம அவதாரம் செய்த போது, 'பார்ப்பவர்கள் அனைவருக்குமே இந்த நிலை ஏற்பட்டது' என்று வால்மீகி நமக்கு காட்டுகிறார்.
ஆசையாக ஓடி வரும் அனைவரும், ராமபிரானின் கம்பீரத்தை, குணத்தை, தோற்றத்தை பார்த்து அப்படியே நின்று விடுவார்கள் என்று வால்மீகி நமக்கு காட்டுகிறார்.
இந்த நிலையை, இந்த அனுபவத்தை நாமும் உணர, நமக்காக கடலை படைத்தார், பரமாத்மா நாராயணன்.
'பீச்சுக்கு போக வேண்டும்' என்று ஆசை ஆசையாக பலர் கிளம்பி செல்வார்கள்.
கடல் அலை அருகே வந்தவுடன், கடலின் கம்பீரத்தை, தோற்றத்தை, கடல் நடுவே உள்ள ஆழ்ந்த அமைதியை கண்டு, பிரமித்து அங்கேயே நின்று விடுவார்கள்.
'பீச்சுக்கு இத்தனை தூரம் கிளம்பி வந்தோம், கடலுக்குள் என்ன இருக்கிறது என்று கூட பார்க்க முடியவில்லையே?
சீ கடலை பார்க்கவா வந்தோம்... வேண்டாம். கிளம்பலாம்"
என்றும் நினைக்காமல், அப்படியே கடல் அலைகளின் அழகை, காற்றை ரசித்து பார்த்து கொண்டே இருப்பார்கள்.
கடலை தரிசனம் செய்ததிலேயே திருப்தி கொள்கிறார்கள், பலர்.
பரமாத்மாநாராயணன்தரிசனம் நமக்கு கிடைத்தால், எப்படி இருக்கும்? என்ற ஒரு அனுபவத்தை, கடல் நமக்கு காட்டுகிறது..
"ராமபிரான் கடல் போன்றவர்" என்று சொல்வதற்கு காரணமும் இதுவே.
குகன் போன்றவர்கள், கடலை தரிசனம் செய்ததிலேயேதிருப்தி அடைந்தார்கள்.
பரதனை போன்றவர்கள், கடலில் கொஞ்சம் படகில் சவாரி செய்த திருப்தி அடைந்தார்கள்.
ஹனுமானை போன்றவர்கள், கடலில் மூழ்கி, சில முத்துக்களை எடுத்த திருப்தி அடைந்தார்கள்.
இன்னும் கடலை முழுமையாக உணர்ந்தவர்கள் இல்லை...
அது போல,
ராமபிரானின் கல்யாண குணங்களை முழுமையாக உணர்ந்தவர்கள் இல்லை...
ராம பக்தர்களான மகாத்மாக்களுக்கு, கடலை பார்க்கும் போது, ராமபிரானின் குணங்களும், தரிசன ஆனந்தமும் ஏற்படுகிறது.
இந்த அனுபவம் நமக்கும் ஏற்பட்டு, ராமபிரானின் அருள் நமக்கும் கிடைக்க ஆசைப்படுவோம்.
விளையாடி கொண்டிருந்த தன் குழந்தை ஒரு நாள் திடீரென்று சாக்கடைக்குள்விழுந்து விட்டது.
இதை பார்த்த தாய், பதறி போனாள்.
மிகவும் நாகரீகமானவள் அவள். அழகானவள். சுத்தமானவள்.
தனக்கு அழுக்காகுமே?
தான் போய் சாக்கடையில் இறங்குவதாவது?
என்று துளியும் நினைக்காமல், குழந்தையை காக்க வேண்டுமே! என்ற ஒரே எண்ணத்தில், தானும் சாக்கடையில் குதித்து விட்டாள்.
குழந்தையை மேலும் மூழ்கி விடாமல் தானே கைப்பற்றி, சாக்கடையில் இருந்து தூக்கி விட்டு, தானும் வெளி வந்தாள்.
அது போல,
வைகுண்டத்தில் இருக்கும் வாசுதேவன், ஆனந்தமயமான மோக்ஷத்தை விட்டு விட்டு, 'ஜீவாத்மாக்கள் சாக்கடை போன்ற உலக விஷயங்களில் விழுந்து விட்டதே!' என்று நினைத்து,
'இவர்களை எப்படியாவது மோக்ஷத்துக்கு அழைத்து சென்று விட வேண்டும்' என்று முடிவு கட்டி, தானே உலகத்தில் குதித்து விட்டார்.
ராமபிரானாகவும், கிருஷ்ணராகவும் அவதாரம் செய்து அனைவரிடமும் பழகினார்.
இந்த விபவ அவதாரங்கள் 'குறிப்பிட்ட காலம் வரை தான்' என்பதால், விபவ அவதாரம் போதாதென்று,
'ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு' அனைவரும் அர்ச்சனை (பூஜை) செய்யும் படியாக, ஒவ்வொரு ஜீவனுக்கும் கிடைக்கும் படியாக அர்ச்ச அவதாரம் செய்து விட்டார்.
அவரவர் இஷ்டத்துக்கு பூஜை செய்யட்டும்..
பூஜை செய்யாமல் கூட போகட்டும்.. இவர்கள் வீட்டில் இவர்களை விடாமல் தங்கி விடுவோம்.
'தன்னை என்றாவது ஒரு நாள், இவன் கவனித்து விட்டால், தன்னிடம் பக்தி ஏற்பட செய்து, ஞானத்தை கொடுத்து, மோக்ஷம் கொடுத்து விடலாம்' என்று பிடிவாதம் செய்து கொண்டு அவதரித்து விட்டார்.
ராமபிரானாக, கிருஷ்ணராக வந்த நோக்கமும்,
கோவிலில் இருப்பதற்கு நோக்கமும்,
நம் வீட்டில் பூஜை அறையில் இருப்பதற்கு நோக்கமும்,
படங்களாக வருவதற்கு நோக்கமும் ஒன்றே.
நம்மை எப்படியாவது கை பிடித்து தூக்கி, மோக்ஷம் கொடுப்பதற்கே, பெருமாள் ஒரு தாயை போல, சம்சாரம் என்னும் சாக்கடையில் தானே குதிக்கிறார்.
நம் வீட்டில் இருக்கும் ராம, கிருஷ்ண விக்கிரகத்தை, படத்தை இந்த அனுபவத்தில் பார்க்க நாம் ஆரம்பிக்கும் போது தான், பகவானின் கருணையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்த மூன்றுக்கும் அப்பாற்பட்டு இருப்பதாலேயே, பரமாத்மாவை ஒரு பொருளுக்குள், தேசத்துக்குள், காலத்துக்குள் அடைக்க முடியாது.
ஆதலால், "பரமாத்மாவை எனக்கு காட்டு" என்று ஒருவன் கேட்டால், "அவனுக்கு காட்ட முடியாது"என்று சொல்வதற்கு காரணமே இதுதான்.
பரமாத்மாவை "அனுமானத்தாலும்" தெரிந்து கொள்ள முடியாது.
காரணம்,
நம் அனுமானத்துக்கும், அப்பாற்பட்டவர் பரமாத்மா.
நாம் பொதுவாகவே ஒரு 'காரியத்தை' பார்த்து தான், 'காரணத்தை' அனுமானம் செய்கிறோம்.
உதாரணத்திற்கு,
'வீடு' என்ற ஒரு காரியம் கண் எதிரே இருப்பதை பார்த்து, 'யாரோ ஒருவர் இதை முன்பு கட்டி இருக்கிறார்'
என்று அனுமானிக்கிறோம்.
ஆனால்,
ஜீவாத்மாவின் அனுமானம் அனைத்துமே சரியாகவும் இருக்க முடியாது.
நம் 'புத்திக்கு எட்டிய அளவு தான் அனுமானமும்' உண்டாகிறது.
ஒருவனின் அனுமானம் பிற்காலத்தில் தவறு என்று கூட நிரூபிக்க படலாம்.
"உலகம் தட்டை' என்று ஒரு அந்நிய மதம் அனுமானித்தது.
கலிலியோ 'உலகம் உருண்டை' என்று அனுமானித்தார். அதற்காக அவரை தண்டித்தார்கள்.
பிற்காலத்தில்,
'உலகம் உருண்டை தான்' என்று நிரூபிக்கப்பட, மனித அனுமானங்களால் உருவாக்கப்பட்ட மத கொள்கைகள் நகைப்பு உரியதானது.
மனித அனுமானங்கள், அந்தந்த காலத்தை அனுசரித்தோ, தேசத்தை அனுசரித்தோ, பொருளை அனுசரித்தோ நிர்ணயிக்கப்படுகிறது.
காலம் மாறும் போது,
தேசம் மாறும் போது,
பொருள் (வஸ்து) மாறும் போது,
மனித அனுமானங்கள் மாறுபடகூடும்.
இப்படி இருக்க, அனுமானத்தை கொண்டு, 'இவர் தான் பரமாத்மா' என்று மனித புத்தியை கொண்டு, எழுதப்பபட்ட போலி மதங்களை கண்டு ஏமாற கூடாது.
நம்முடைய புத்தியோ "அளவு உடையதாக' இருக்கிறது.
பரமாத்மாவோ 'அளவற்று' இருக்கிறார்.
அளவுடைய நம் புத்தியால், அளவில்லாத பரமாத்மாவை
எப்படி அனுமானிக்க முடியும்?
'அளவில்லாத பரமாத்மாவை நாம் புரிந்து கொள்ள முடியாது' என்பது உண்மை என்றாலும்,
'அந்த பரமாத்மா அளவிடமுடியாதவர், காலத்துக்கும், தேசத்துக்கும், பொருளுக்கும் அப்பாற்ப்பட்டவர்' என்ற அளவுக்காவது நாம் தெரிந்து கொண்டாலே, பரத்துவ ஞானம் நமக்கு உண்டாக ஆரம்பித்து விடும்,
'நம்முடைய புத்தியால் தெரிந்து கொள்ள முடியாதவர் பரமாத்மா' என்று தெரிந்து கொண்டாலே போதுமானது.
உன்னுடைய கண்ணை கொண்டு அந்த பரமாத்மாவை பார்க்க முடியாது.
ஆனால்,
'உன் கண்ணுக்கு பார்க்கும் சக்தியை கொடுத்ததே அந்த பரமாத்மா தான்' என்று நீ புரிந்து கொண்டாலே போதும்.
உன்னுடைய காதை கொண்டு அந்த பரமாத்மாவை கேட்க முடியாது.
ஆனால்,
'உன் காதுக்கு கேட்கும் சக்தியை கொடுத்ததே அந்த பரமாத்மா தான்' என்று புரிந்து கொண்டாலே போதும்.
எந்த பரமாத்மா உள்ளே இருப்பதால், உன் கண் பார்க்கிறதோ, காது கேட்கிறதோ, நாக்கு சுவைக்கிறதோ, அந்த பரமாத்மாவை உன் கண்களால், காதால், நாக்கால் எப்படி பார்க்க, கேட்க, சுவைக்க முடியும்?
அதனால், 'பரமாத்மா நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்' என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
அப்படி எங்கும், எல்லாமுமாக, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட, தனித்த சாட்சியாக, யாவரிடத்திலேயும் ஹ்ருதயத்தில் இருக்க கூடிய அந்த பரமாத்மா "சாஷாத் நாராயணனே" என்று சர்வ சாஸ்த்திரமும் சொல்கிறது.
வேதம் "நாராயணனே பரதெய்வம்" என்று சொல்வதை புரிந்து கொள்ளாதவர்கள், மோக்ஷம் அடையாமல் இருக்கிறார்கள்.
புரிந்து கொள்ளாததாலேயே, பரமாத்மாவை 'நாராயணன், விஷ்ணு' என்று சொன்னால், முப்பத்து முக்கோடி தேவர்களை போல 'அவரும் ஒரு தேவன்' என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
மனிதர்கள் நினைப்பது ஒருபுறம் இருக்கட்டும்..
தேவர்கள் கூட சில சமயம், விஷ்ணுவும்தன்னை போல ஒரு தேவன் தான் என்று நினைத்து விடுகிறார்கள்?
வைகுண்டத்தில் இருக்கும் பரமாத்மா நாராயணன், காலத்துக்கும், தேசத்துக்கும், வஸ்துவுக்கும் அப்பாற்பட்டவர் என்றாலும், எந்த வஸ்துவாகவும் வர கூடியவர், எந்த தேசத்திலும், எந்த காலத்திலும் இருப்பவர் என்பதால், சொர்க்க லோகத்தில் உள்ள தேவர்களை போல தானும் "விஷ்ணு" என்ற தேவனாகவும் (வஸ்துவாக) தன்னை க்ஷீராப்தியில் அவதரித்து கொண்டு விடுகிறார்.
"ஆதித்யாநாமஹம் விஷ்ணு:" என்று பகவத் கீதையில் "தேவர்களுக்குக்குள்ளே நான் விஷ்ணு என்ற தேவனாகவும் இருக்கிறேன்" என்று சொல்கிறார்.
அதுமட்டுமா,
"மனிதர்களுக்குள்ளே நான் ராமனாக இருக்கிறேன்" என்றும் ராம்பிரானே ப்ரம்ம தேவனை பார்த்து "ஆத்மாநம் மானுஷம் மன்யே" என்று சொல்கிறார்.
"மனிதனாக பரமாத்மா வந்து விட்டதால், ராமபிரான் மனிதன் தானே" என்று நினைப்பவர்கள் அஞானிகள்.
"தேவனாக வந்து விட்டதால், விஷ்ணுவும் மற்ற தேவர்களை போல தானே" என்று நினைப்பவர்களும் அஞானிகளே.
கோஹினூர் வைரம் - அலாவுதீன் கில்ஜிக்கு பிறகு பலரிடம் கை மாறியது.
ஷிஹாபுதின் கில்ஜி (அலாவுதீன் கில்ஜி பிள்ளை)
குதுப்தின் முபாரக் (அலாவுதீன் கில்ஜி பிள்ளை)
குஷ்ரோ கான் (அலாவுதீன் படைத்தளபதி)
கியாசுதீன் துக்ளக் (அலாவுதீன் ஆட்சியில் பஞ்சாப் கவர்னராக வேலை பார்த்தவன்)
முகம்மது பின் துக்ளக் (கியாசுதீன் துக்ளக் மகன்)
பெரோஸ் ஷா துக்ளக் (முகம்மது பின் துக்ளக்கும், அவன் சகோதரிக்கும் பிறந்தவன்)
துக்ளக் கான் (பெரோஸ் ஷா துக்ளக் பேரன்)
அபு பக்கர் ஷா (பெரோஸ் ஷா துக்ளக் பேரன்)
நசுருத்தின் ஷா (பெரோஸ் ஷா துக்ளக் மகன்)
அலாவுதீன் சிக்கந்தர் ஷா (நசுருத்தின் ஷா மகன்)
நசுருத்தின் மகமூத் ஷா || (நசுருத்தின் ஷா மகன்)
கைசர் கான் (பெரோஸ் ஷா துக்ளக் ஆட்சியில் ஆரம்பித்து முல்தான் கவர்னராக இருந்தான். ஈரான், ஆப்கான், மங்கோலிய தேசம் அவரை கைப்பற்றி இருந்த தைமூர் என்ற இஸ்லாமியன் துணை கொண்டு, நசுருத்தின் மகமூத் ஷாவை கொன்று, தைமூரின் பெயரில் அடிமை (சயீத்) ஆட்சி ஆரம்பித்தது)
முபாரக் ஷா (கைசர் கான் மகன்)
முகம்மது ஷா (முபாரக் ஷாவின் தங்கை மகன்)
ஆலம் ஷா (முகம்மது ஷாவின் மகன்)
பஹ்லுல் லோடி (ஆப்கானில் லோடி என்ற இனத்தை சேர்ந்தவன்.. இவன் பஞ்சாபில் உள்ள சிர்ஹிந்த் என்ற ஊருக்கு கவர்னராக இருந்தான்)
சிக்கந்தர் லோடி (பஹ்லுல் லோடி மகன்)
இப்ராகிம் லோடி (சிக்கந்தர் லோடியின் மகன்)
பாபர் (கெங்கிஸ் கான், தைமூர் பரம்பரையில் வந்தவன். பாணிபட் போரில் இப்ராகிம் லோடியை கொன்று டெல்லியை கைப்பற்றினான்)
ஹுமாயுன் (பாபர் மகன்)
அக்பர் (ஹுமாயுன் மகன்)
ஜஹாங்கீர் (அக்பர் மகன்)
ஷாஹ்யர் மிர்சா (ஜஹாங்கீர் மகன்)
ஷாஜஹான் (ஜஹாங்கீர் மகன். ஷாஹ்யர் மிர்சா கொன்று சுல்தான் ஆனான்)
இவன் காலத்தில் தங்கத்தால் தனக்கு உருவாக்கப்பட்ட மயில் ஆசனத்தில் (peacock throne) இந்த கோஹினூர் வைரத்தை பதித்து வைத்து இருந்தான் ஷாஜஹான்.
ஔரங்கசீப் (ஷாஜஹான் மகன்)
பகதூர் ஷா (ஔரங்கசீப் மகன்)
ஜஹந்தர் ஷா (ஔரங்கசீப் மகன்)
பரூக்சியர் (பகதூர் ஷா பேரன், ஜஹந்தர் ஷாவை கொன்று சுல்தான் ஆனான்)
ரபிஉத் தரஜித் (பகதூர் ஷா பேரன், பரூக்சியரை கொன்று சுல்தான் ஆனான்)
ரபிஉத் தௌலத் (ரபிஉத் தரஜித் சகோதரன்)
நேகு சியர் (ஔரங்கசீப் பேரன்)
முகம்மது ஷா (பகதூர் ஷா பேரன்)
முகம்மது இப்ராஹிம் (ரபிஉத் தரஜித் சகோதரன்)
முகம்மது ஷா (பகதூர் ஷா பேரன். இவன் ஆட்சியில் 1772ல் அயோத்தியை 'பைசாபாத்' மாற்றினான்)
ஈரான் : (1739 AD - 1747 AD) 8yrs
ஈரான் தேசத்தை ஆக்கரமித்து அரசாங்கம் செய்து இருந்த நாதீர் ஷா, 1739ல் டெல்லியை தாக்கினான்.
டெல்லியில் 6 மணி நேரத்தில் 30000 பொது மக்களை கொன்று விட்டான். கோட்டையை உடைத்து 'முகம்மது ஷா'வை பிடிக்க, பயந்து போய் டெல்லி கஜானாவை திறந்து விட்டான்.
அப்போது கோஹினூர் வைரத்தை தன் கைக்கு ஆபரணமாக போட்டு கொண்டு விட்டான்.
ஒரு நாள் டில்லியில் கொள்ளை அடித்த பணத்தை வைத்து, அடுத்த 3 வருடங்கள் நாதீர் ஷா, ஈரான் மக்களிடம் வரியே கேட்கவில்லை.
ஒரு டில்லியின் சொத்தே எத்தனை இருந்துள்ளது என்று நினைத்து பார்க்கும் போது, பாரத தேசம் முழுவதும் எத்தனை இருந்து இருக்கும் என்று யோசியுங்கள்.
முகலாய அரசன் ஒரு ஈரான் அரசனிடம் தோற்றுவிட்டான், என்றதும், கிழக்கு இந்திய கம்பனி என்ற பெயரில் வந்து இருந்த பிரிட்டிஷ் கிறுஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆட்சியை ஒடுக்க இதுவே சரியான நேரம் என்று கணித்தனர்.
முகலாய இஸ்லாமியர்கள் பலம் குறைய, அவர்களுக்கு கீழ் அடிபணிந்து ஆட்சி செய்த அனைத்து இஸ்லாமிய சிற்றரசனும் அந்த அந்த ஊருக்கு நாங்களே சுல்தான் என்று சொல்லி கொள்ள ஆரம்பித்தனர்.
ஆப்கான் : (1747 AD - 1809 AD) 62 yrs
1747ல் நாதீர் ஷாவை அவனது மெய்காப்பாளன் தலை சீவினான்.
மற்றொரு மெய்காப்பாளன் "அஹமத் ஷா அப்தலி" இவன் கையிலிருந்த வைரத்தை எடுத்து கொண்டான்.
இவனை காந்தகாரில் உள்ள அப்தலி இன மக்கள், காந்தகார் அரசனாக ஏற்றனர். இவன் பெஷாவர் (புருஷோத்தமபுறம்) வரை கைப்பற்றினான்.
7 முறை முகலாயர்களை தாக்கி டில்லியை கைப்பற்ற முயற்சித்தான்.
கடைசியாக முகம்மது ஷா டில்லியை இழந்து விடுவோமோ? என்ற பயத்தில், சிந்து தேசம், பஞ்சாப் (பாஞ்சாலம்) வரை கொடுத்து விட்டான்.
சண்டையே போடாமல், காந்தகார் அரசன் அஹமத் ஷா அப்தலிக்கு சிந்து, பஞ்சாப் கிடைத்தது.
பிறகு, நாதீர் ஷா வைத்து இருந்த ஈரான் தேசத்தை போரிட்டு கைப்பற்றி விட்டான்.
இவனை தொடர்ந்து வந்த இவன் பரம்பரை 1809 வரை கோஹினூர் வைரத்தை ஆப்கானில் வைத்து இருந்தனர்.
1809ல் ஆப்கான் அரசனாக இருந்த ஷா சஹுஜ் துர்ரானியை அவன் சகோதரன் மஹ்மூத் ஷா தூக்கி எறிந்து பதவியில் அமர்ந்தான்.
உயிருக்கு பயந்து கோஹினூர் வைரத்துடன் இந்தியாவுக்கு ஓடி வந்து, அப்போது லாகூரில் (லவ புரம்) இருந்த சீக்கிய அரசன் 'ரஞ்சித் சிங்'கிடம் அடைக்கலம் கேட்டான்.
மீண்டும் இந்தியாவுக்கு : (1809 AD - 1849 AD) 40 yrs
1813ல் காப்பற்றியதற்கு பதிலாக கோஹினூர் வைரத்தை வாங்கி கொண்டார்.
கோஹினூர் வைரத்தை "புரி ஜகன்நாத்" கோவிலுக்கு உயில் எழுதி கொடுக்க ஆசைப்பட்டார் ரஞ்சித் சிங்.
ஆனால் ரஞ்சித் சிங் உயில் எழுதாமலேயே, 1839ல் இறந்து விட்டார்.
1849ல் கிழக்கு இந்திய கம்பனி கிறிஸ்தவர்கள், சீக்கியர்களிடம் போர் செய்து, பஞ்சாப், லாகூரை கைப்பற்றினர்.
ரஞ்சித் சிங் மகன் துலீப் சிங் , "லாகூர் ஒப்பந்தம்" என்று பிரிட்டிஷ் அரசுக்கு அனைத்தையும் ஒப்படைத்து விட்டான்.
சீக்கிய அரசாங்க சொத்து, கோஹினூர் வைரம் அனைத்தையும் பிரிட்டனில் இருக்கும் விக்டோரியாவுக்கு அனுப்பி விட்டனர்.
துலீப் சிங் பிரிட்டனில் சென்று வசித்து, 2 கிறிஸ்தவ பெண்களை மணந்து, தானும் கிறிஸ்தவன் ஆகி, நாட்டை விற்று விட்டு, அங்கேயே குடியேறினார்.
பிரம்மதேவன் ப்ரத்யக்ஷமாகி, ராமபிரானை ஸ்தோத்திரம் செய்கிறார். அற்புதமான எளிதான ராம ஸ்தோத்திரம்.
நாமும் இந்த ஸ்தோத்திரத்தை, ராமபிரானுக்கு முன் சொல்லலாம்.
வால்மீகி ராமாயணம் படித்த புண்ணியமும் நமக்கு கிடைக்கும்.
When Sitadevi entered the fire, in front of Rama, Brahma, Indra, Yama, Shiva, his Father appeared in front Rama, an incarnation of Supreme Narayana.
ஆத்மானம் மானுஷம் மன்யே
ராமம் தசரதாத்மஜம் |
யோஹம் யஸ்ய யதஸ்சாஹம்
பகவாம்ஸ் தத் அப்ரவீத் மே ||
- வால்மீகி ராமாயணம்
आत्मानं मानुषं मन्ये रामं दशरथात्मजम् |
योऽहं यस्य यतश् चाहं भगवांस् तद् ब्रवीतु मे ||
"நான் தசரத மஹாராஜனின் புத்திரன், நான் ஒரு மனிதன் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறேன். நான் யார்? யாருடையவன்? யாரிலிருந்து வந்தவன்? என்று நீங்களே சொல்லுங்கள்." என்றார் ராமபிரான்.
Looking at Brahma (Son of Narayana (Parabrahmam)), Rama says,
"I 'think', i am a human, by the name Rama, the son of King Dasaratha. Hey Gracious Divinity! Tell me who am i really?"
பரப்ரம்மத்தை அறிந்த ப்ரம்ம தேவன், ராமபிரான் கேட்டதும், பேசலானார், "பராக்கிரமசாலியான ஸ்ரீ ராமா! சத்தியத்தை சொல்கிறோம்.. கேளுங்கள்!"
Hearing the words of Rama, Brahma (the creator), knower of parabrahmam (his creator), spoke with Rama permission. Brahma began to tell the truth of rama.
"Listen to my true word, O the truly brave lord!"
பவான் நாராயணோ தேவ:
ஸ்ரீமான் சக்ராயுதோ விபு: |
ஏக சங்கோ வரா ஹஸ்த்வம்
பூதபவ்ய ஸபத்னஜித்: ||
- வால்மீகி ராமாயணம்
भवान् नारायणो देवः श्रीमां चक्रायुधो विभुः | 1
एक शृङ्गो वरा हस्त्वं भूत भव्य सपत्न जित् | 2
தாங்களே ஸ்ரீயபதி. தாங்களே கால சக்கரத்தை ஏந்தி இருக்கும் சாஷாத் பரம்பொருள் நாராயணன்.
ஒரு கையில் வேதத்தின் நாதத்தை குறிக்கும் சங்கத்தை வைத்து, தீய சக்திகளை ஒழிப்பவர் தாங்களே.
Rama ! You are the Lord Narayana himself the glorious god, who wields the discus.
Rama ! You are the Divine Boar with a single tusk, the conqueror of your past and future enemies
Rama ! You are the wielder of a bow called Saranga, the lord of the senses, the supreme soul of the universe, the best of men,
Rama ! You hold the invincible, the wielder of a sword named Nandaka, the all-pervader, the bestower of happiness to the earth and endowed with great might
பொறுமை என்ற குணத்துக்கும் காரணம் தாங்களே! பற்றற்ற குணத்துக்கும் காரணம் தாங்களே! ஆரம்பமும், முடிவும் தாங்களே!
தாங்களே உபேந்திரன் என்ற பெயரில், தேவர்கள் கூட்டத்தில் இந்திரனுக்கு சகோதரனாகவும் இருக்கிறீர்கள்.
மது என்ற அரக்கனை அழித்தவரும் தாங்களே!
Rama ! You are the leader of the army and the village headman. You are the intellect. You are the endurance and the subduer of the senses.
Rama ! You are the origin and the dissolution of all. You are the Upendra the Divine Dwarf (vamanaa), the younger brother of Indra. You are also the destroyer Madhu, the demon
இந்திர தேவனை கொண்டு உங்கள் காரியங்களை தாங்களே செய்து கொள்கிறீர்கள்.
தாங்களே பத்மநாபன் என்று அறியப்படுகிறீர்கள்.
சரண் அடைந்த அனைவருக்கும், அடைக்கலம் தருபவர் தாங்களே என்று ரிஷிகளும் சொல்கின்றனர்!
Rama ! You perform action for Indra the lord of celestials, the Supreme Ruler, the one having a lotus in one's navel and who puts an end to all in battle.
Rama ! the divine sages pronounce you to be fit to afford protection to all and the refuge for all.
சஹஸ்ர ஸ்ருங்கோ வேதாத்மா
ஸதஜிஹ்வோ மஹர்ஷப: |
- வால்மீகி ராமாயணம்
सहस्र शृङ्गो वेदात्मा शत जिह्वो महर्षभः | 11
ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இருக்கும் வேதம் பல வித ஒலிகளில், பல வித வழிகளில் உங்களையே அழைக்கின்றது.
Rama ! You are like a great Bull representing all Vedas, with hundred heads (rules) and thousand horns (precepts)
த்வம் த்ரயானாம் ஹி லோகானாம்
ஆதிகர்தா ஸ்வயம் ப்ரபு: |
ஸித்தானாம் அபி ஸாத்யானாம்
ஆஸ்ரயஸ் சாஸி பூர்வஜ: ||
- வால்மீகி ராமாயணம்
त्वं त्रयाणां हि लोकानाम् आदिकर्ता स्वयं प्रभुः | 12
தாங்களே மூன்று உலகங்களையும் படைத்தவர். தாங்களே ப்ரபு.
ஸித்தி அடைந்தவர்களுக்கும் லட்சியம் தாங்களே.
மோக்ஷம் அடைய முயற்சி செய்பவர்களுக்கும் லட்சியம் தாங்களே!
முதலில் இருந்தவரும் தாங்களே!
Rama ! You are the first creator of all, the three worlds, and the self constituted Lord of all.
Rama ! You are the refuge and the forbear of Siddhas (a class of demi-gods endowed with mystic powers by virtue of their very birth) and Sadhyas (a class of celestial beings.)
Rama ! You are the sacrificial performance. You are the sacred syllable 'Vashat' (on hearing which the Adhvaryu priest casts the oblation to a deity into the sacrificial fire). You are the mystic syllable 'OM'. You are higher than the highest.
Rama ! People neither know your end nor your origin nor who you are in reality.
த்ருஷ்யசே சர்வ பூதேஷு
ப்ராஹ்மணேஷு ச கோஷு ச |
திக்ஷு சர்வாசு ககனே
பர்வதேஷு வனேஷு ச ||
- வால்மீகி ராமாயணம்
दृश्यसे सर्व भूतेषु ब्राह्मणेषु च गोषु च | 16
दिक्षु सर्वासु गगने पर्वतेषु वनेषु च | 17
தாங்களே எங்கும் அனைவரிடத்திலும் இருந்தாலும், ப்ரம்மத்தையே உபாசிக்கும் ப்ரம்மணர்களிடமும், பசுக்களிடமும், அனைத்து திசைகளிலும், ஆகாயத்திலும், மலைகளிலும், மரங்களிலும் குறிப்பாக தெரிகிறீர்கள்.
Rama ! You appear in all created beings in the cattle and in brahmanas.
Rama ! You exist in all quarters, in the sky, in mountains and in rivers.
சஹஸ்ர சரண: ஸ்ரீமான்
ஸதஷீர்ஷ: சஹஸ்ர த்ருக் |
த்வம் தாரயசி பூதானி
வசுதாம் ச ச-பர்வதாம் ||
- வால்மீகி ராமாயணம்
सहस्र चरणः श्रीमाञ् शतशीर्षः सहस्र धृक् | 18
त्वं धारयसि भूतानि वसुधां च सपर्वताम् | 19
ஆயிரம் கால்கள் உடையவர் தாங்களே!
மஹாலக்ஷ்மி என்றும் உங்களுடனேயே இருப்பதால் தாங்கள் ஸ்ரீமானாகவே இருக்கிறீர்கள்.
ஆயிரம் முகங்களில் ஆயிரக்கணக்கான கண்கள் உடையவர் தாங்கள். பூமியை மலைகள் தாங்கி இருப்பது போல, தாங்களே எங்களை தாங்குகிறீர்கள்.
Rama ! With thousand feet, with hundred heads and with thousand eyes along with Lakshmi the goddess of wealth, You bear the earth with all its created beings along with its mountains.
அந்தே ப்ருதிவ்யா சலிலே
த்ருஷ்யசே த்வம் மஹோரக: |
த்ரீல்லோகான் தாராயன் ராம
தேவ கந்தர்வ தானவான் ||
- வால்மீகி ராமாயணம்
अन्ते पृथिव्याः सलिले दृश्यसे त्वं महोरगः | 20
त्रीँल्लोकान् धारयन् नाम देव गन्धर्व दानवान् | 21
ஒரு பெரிய சர்பம் தன்னை சுருட்டி கொண்டு இருப்பது போல, லோகங்கள் ஸ்ருஷ்டி ஆகாத காலத்தில், தேவ கந்தர்வர்கள் உட்பட 14 லோகங்களையும் (பொதுவாக மேலுலகம், பூலோகம் , பாதாள லோகம் என்று மூன்று லோகம் என்று சொல்வோம்) சேர்த்து தனக்குள் அடக்கி கொண்டு, நீங்கள் மட்டுமே அன்று இருந்தீர்கள்.
O Rama! You appear as Sesha, a large serpent in water, at the earth's bottom, bearing the three worlds, gods, Gandharvas, the celestial musicians and the demons.
அஹம் தே ஹ்ருதயம் ராம
ஜிஹ்வா தேவீ சரஸ்வதி |
தேவா காத்ரேஷு ரோமானி
நிர்மிதா ப்ரஹ்மண ப்ரபோ ||
- வால்மீகி ராமாயணம்
अहं ते हृदयं राम जिह्वा देवी सरस्वती | 22
देवा गात्रेषु लोमानि निर्मिता ब्रह्मणा प्रभो | 23
நானே உங்கள் இதயம். சரஸ்வதியே உங்கள் நாக்கு. தேவர்கள் உங்கள் தலை கேசம்.
ரூபமில்லாத நிலையில் ப்ரம்மமாக நீங்கள் இருக்கும் நிலையில் இப்படி தானே வேதம் உங்களை வர்ணிக்கிறது.
O Rama! I I am your heart. Saraswati, the goddess (of learning) is your tongue.
O lord ! The demi0-gods (30 crore devas) are the hair on all your limbs.
நிமேசஸ்தே பவேத்ராத்ரி
ருன்மே ஷஸ்தே பவேத்திவா |
சம்ஸ்காராஸ்தே பவன் வேதா
ந தத்ஸதி த்வயா வினா ||
- வால்மீகி ராமாயணம்
निमेषस्तेऽ भवद्रात्रि रुन्मे षस्तेऽ भवद्दिवा | 24
संस्कारास्ते भवन्वेदा न तदस्ति त्वया विना | 25
நீங்கள் விழித்து இருந்தால், அதுவே பகல். நீங்கள் உறங்கினால், அதுவே இரவு.
வேதங்கள் உங்களை பற்றியும், உங்கள் குணங்களை பற்றியும் தான் சொல்கிறது! நீங்கள் இல்லாமல் வேதமே இல்லை.
Rama ! Night has been recognized as the closing of your eye-lids and the day, as the opening of eye-lids.
Rama ! The correct usages of your words are the Vedas. Without you, this visible universe or Veda does not exist
ஜகத்சர்வம் சரீரம் தே
தைர்யம் தே வசுதாதலம் |
அக்னி கோப: ப்ரஸாதஸ்தே
சோம ஸ்ரீவத்ச லக்ஷன ||
- வால்மீகி ராமாயணம்
जगत्सर्वं शरीरं ते स्थैर्यम्ं ते वसुधा तलम् | 26
अग्निः कोपः प्रसादस्ते सोमः श्रीवत्स लक्षण | 27
அனைத்து உலகங்களும் உங்கள் சரீரம்.
இந்த பூமி உங்களின் தைரியத்தை குறிக்கிறது.
அக்னி உங்கள் கோபம்.
நிலவு உங்கள் அணுகிரஹம், அதுவே உங்கள் ஸ்ரீவத்சம்.
Rama ! The entire cosmos is your body. The earth constitutes your firmness.
Rama ! Fire is your anger. The moon constitutes your placidity. You are Lord Vishnu who bears the mark Srivatsa
நீங்களே புராண காலத்தில் மூன்று அடியால் பூலோகம் முதல் சத்ய லோகம் வரை பலி சக்கரவர்த்தியிடம் இருந்து மூன்று லோகங்களையும் கைப்பற்றி, இந்திர தேவனை மீண்டும் மகேந்திரன் ஆக்கினீர்கள்.
Rama ! In the past, the three worlds were occupied by you in your three strides, after binding the exceptionally formidable Bali, who captured the three worlds. Rama ! and you made Indra the king again.
சீதாதேவி சாக்ஷாத் மஹாலக்ஷ்மி. தாங்கள் சாக்ஷாத் மஹாவிஷ்ணு.
நீங்கள் மனித ரூபத்தில் வந்தது ராவணனை வதம் செய்வதற்கே!
Rama ! Sita is no other than Goddess Lakshmi (the divine consort of Lord Vishnu), while you are Lord Vishnu. You are having a shining dark-blue hue. You are the Lord of created beings.
Rama ! For the destruction of Ravana, you entered a human body here, on this earth.
ததிதம் ந: க்ருதம் கார்யம்
த்வயா தர்மப்ருதாம் வர|
நிஹதோ ராவணோ ராம
ப்ரஹ்ருஷ்டோ திவமாக்ரம ||
- வால்மீகி ராமாயணம்
तदिदं नः कृतं कार्यं त्वया धर्म भृतां वर | 32
निहतो रावणो राम प्रहृष्टो दिवमाक्रम | 33
ஓ தர்மத்தின் தலைவனே! உங்கள் காரியம் இனிதே நிறைவேறியது.
ராவணன் கொல்லப்பட்டுவிட்டான்.
நீங்கள் உங்களுடைய விண்ணுலகத்திற்கு மகிழ்ச்சியோடு வாருங்கள்.
O Rama ! You are the foremost among the supporters of righteousness! The aforesaid purpose of ours has been fulfilled.
O Rama ! Ravana has been killed. Please Return to your divine abode, with a rejoice.
அமோகம் பல வீர்யம் தே
அமோகஸ்தே பராக்ரம |
அமோகம் தர்சனம் ராம
ந ச மோக: ஸ்தவஸ்தவ ||
அமோகாஸ்தே பவிஷ்யந்தி
பக்திமன் தஸ்ச யே நரா: ||
- வால்மீகி ராமாயணம்
अमोघं बल वीर्यं ते अमोघस्ते पराक्रमः | 34
अमोघास्ते भविष्यन्ति भक्ति मन्तश्च ये नराः | 35
உங்கள் வலிமையும் வீரமும் அமோகமானது.
உங்கள் நோக்கம் அமோகமானது.
உங்கள் மகிமை அமோகமானது.
உங்கள் பக்தர்கள் கூட ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள்.
O Lord! Unerring is your valour. Your exploits are never in vain.
O Rama! Your blessed sight is powerful. The songs in praise of you never go in vain.
Rama ! Those humans who are full of devotion to you, will never be unsuccessful on this earth.
யே த்வாம் தேவம் த்ருவம் பக்தா:
புராணம் புருஷோத்தமம் |
ப்ராப்னுவந்தி சதா காமாந்
இஹ லோகே பரத்ர ச ||
- வால்மீகி ராமாயணம்
ये त्वां देवं ध्रुवं भक्ताः पुराणं पुरुषोत्तमम् | 36
प्राप्नुवन्ति सदा कामान् इह लोके परत्र च | 37
ஆதி புருஷரான உங்களை சரணடைந்து பக்தி செய்பவர்கள் எவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும், இக லோகத்தில் தான் விரும்பியது அனைத்தையும் அடைந்து, விண்ணுலகத்திலும் ஆனந்தத்தை பெறுகிறார்கள்.
O Rama ! You are the primeval and the eternal lord, belonging to ancient times and the Supreme Person.
O Rama ! Those who are devoted to you, will forever attain their desired objects here as well as hereafter.
இமமார்ஷம் ஸ்தவம் நித்யம்
இதிஹாசம் புராதனம் |
யே நரா: கீர்த்தயிஷ்யந்தி
நாஸ்தி தேஷாம் பராபவ: ||
- வால்மீகி ராமாயணம்
इममाषं स्तवं नित्यम् इतिहासं पुरातनम् | 38
ये नराः कीर्तयिष्यन्ति नास्ति तेषां पराभवः | 39
ஆதி புருஷரான, நித்யமாக இருக்கும் உங்கள் சரித்திரத்தை கீர்த்தனம் செய்யும் மனிதர்கள் ஒரு போதும் நாசமாக மாட்டார்கள்." என்று ஆச்சர்யமாக 'ராமபிரானை ஸ்தோத்திரம் செய்தார்', ப்ரம்ம தேவன்.
O Rama ! Humiliation will never be the situation of those humans who will recite this hymn sung by me, the foremost seer who could see what future holds on everyone.
ராவணனின் தலையை கொய்து எறிந்தும், மீண்டும் அவன் தலை பழையது போலவே வளர்ந்தது. இப்படியே '101 தடவை தலையை கொய்து எறிந்தும்' சாகாமல் இருந்தான் ராக்ஷஸ தலைவன் ராவணன்.
"கர தூஷர்களை, வாலியை, 7 சால வ்ருக்ஷத்தை ஒரே அம்பினால் சாய்த்த தன் ராம பானம் ராவணனை சாய்க்க முடியாமல் இருக்கிறதே!"
என்று ஆச்சரியப்பட,
இந்திரன் கொடுத்த தேரை ஒட்டும் 'மாதலி' என்ற சாரதி, ராமபிரானை பார்த்து,
'தேவ ரகசியம் தெரியாதது போல இருக்கிறீர்களே!! ப்ரம்மாஸ்திரம் மட்டுமே இவனை கொல்லும் சக்தி உடையது என்று உங்களுக்கு தெரியாதா? அதை இப்பொழுதே செலுத்துங்கள்" என்றார்.
மாதலியின் வாக்கை ஏற்று கொண்ட ராமபிரான், ப்ரம்மாஸ்திரத்தை ராவணன் மார்பை நோக்கி செலுத்த, அவன் மார்பில் இடி போல விழுந்தது.
ராவணன் ஒழிந்தான்.
ராவணன் ஒழிந்த பின், தான் கைப்பற்றிய இலங்கையை, அப்படியே விபீஷணனுக்கு கொடுத்து, அவரையே இலங்கைக்கு அரசனாக்கினார் ராமபிரான்.
ராமபிரான், ஹனுமானிடம்
"இலங்கை அரசர் விபீஷணன் அனுமதியுடன், இலங்கை நகருக்குள் பிரவேசித்து, ராவணன் இருந்த இடத்திற்கு செல்லுங்கள்.
அங்கு சீதையிடம், சுக்ரீவன் மற்றும் லக்ஷ்மணனோடு சேர்ந்து நான் பெற்ற வெற்றி செய்தியை சொல்லுங்கள்.
மைதிலியிடம், ராவணன் எப்படி அழிக்கப்பட்டான்? என்றும் விவரித்து சொல்லுங்கள்.
ஓ ஜெய ஹனுமான்! என் வெற்றியை விவரமாக சொல்லி, சீதை எனக்கு சொல்லும் சேதியை என்னிடம் வந்து சொல்லுங்கள்."
இப்படி அழகாக நீங்கள் மட்டுமே பேச முடியும். நீங்கள் வாயு புத்திரன் என்ற பெருமை உடையவரல்லவா!
தர்மத்தில் நாட்டமுள்ளவரல்லவா நீங்கள்.
இதனோடு உங்களிடம் ஆச்சர்யமான வலிமையும், வீரமும், ஞானமும், திறமையும், சிறப்பும், சகிப்புத்தன்மையும், தைரியமும், பணிவும் சேர்ந்து கொண்டு மேலும் பிரகாசிக்கிறீர்கள்." என்று சீதா தேவி ஹனுமானை கண்டு ஆனந்தப்பட்டாள்.
கண்களில் க்ரூரமும், பயங்கரமான ரூபத்துடன் இருக்கும் இந்த ராக்ஷஸிகள், 'கணவனே தெய்வம் என்று இருக்கும் உங்களை', அசோக வனத்தில் சிறைவைத்து வேதனையுற்ற சமயத்தில் பெரும் தொந்தரவு செய்தனர்.
நான் இவர்களை அடித்து ஒழிக்கட்டுமா? நீங்கள் இந்த வரத்தை தாருங்கள்.
இவர்களை என் முஷ்டியாலும், கைகளாலும், கால்களாலும் ஓங்கி அடித்து, என் பற்களால் இவர்களை கிழித்து, தலை முடியை பிடுங்கி, இவர்கள் மீது பாய்ந்து, இவர்களை தூக்கி எறிந்து, இவர்கள் கன்னம், கழுத்து, தோள், விலா எலும்பை உடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
உங்களிடம் அத்துமீறி கொடுமையான வார்த்தைகளே பேசிய இவர்களை நான் கொல்ல ஆசைப்படுகிறேன்.
இவர்கள் எப்படி எல்லாம் உங்களை துன்புறுத்தினார்களோ, இவர்கள் அனைவரையும் அனைத்து விதத்திலும் தண்டிக்க ஆசைப்படுகிறேன்." என்று ஆத்திரம் தாங்கமுடியாமல் அனுமதி கேட்டார் .
இலங்கை அரசன் விபீஷணன் தன் மனைவியை முன்னிட்டு கொண்டு, சீதா தேவியிடம்,
"சீதா தேவி.. உங்களுக்கு மங்களம். சர்வ அலங்காரமும் செய்து கொண்டு இந்த பல்லக்கில் ஏறுங்கள்.
உங்கள் கணவர் உங்களை பார்க்க விரும்புகிறார்.'
என்றார்.
சீதாதேவி, "ராக்ஷஸ அதிபதியே! நான் எந்த வித ஸ்நானமும், அலங்காரமும் செய்து கொள்ள விரும்பவில்லை. நான் இப்படியே என் பர்தாவை பார்க்க ஆசைப்படுகிறேன்" என்றாள்.
பிறகு அங்கு இருந்த பெண்கள், சீதா தேவியை ஸ்நானம் செய்வித்து, அலங்காரம் செய்விக்க, சீதாதேவி தயாராக இருந்தாள்.
சீதாதேவியை அழைத்து செல்ல, பல்லக்கு கொண்டு வந்தார் விபீஷணன்.
அந்த பல்லக்கில் சீதா தேவி ஏறிக்கொள்ள, தன் ராக்ஷஸ படைகளை இருபுறமும் காவலுக்கு நிறுத்தி, ராமபிரான் இருக்குமிடத்திற்கு வர சொல்லி விட்டு, தானே ராமரை பார்க்க ஓடினார்.
ராமபிரானிடம், சீதாதேவி வந்து கொண்டிருப்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ராவணனின் மாளிகையில் பல மாதஙகள் சிறைப்பட்ட தன் சீதை வந்து கொண்டு இருக்கிறாள் என்றதும், ஒரே சமயத்தில் 'ஆனந்தமும், வருத்தமும், கோபமும்' ராமபிரானிடம் சேர்ந்து நுழைந்தது.
விபீஷணனை பார்த்து, ராமபிரான், "ராக்ஷஸ அரசனே! என் வெற்றிக்காக எப்பொழுதும் ஆசைப்படுபவரே! சீதையை வேகமாக என் அருகில் அழைத்து வாருங்கள்" என்றார்.
மூடு பல்லக்கில் சீதா தேவி, ராமர் இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
'சீக்கிரமாக சீதையை அழைத்து வாருங்கள்' என்று ராமபிரான் சொன்னதால், விபீஷணன் சீதாதேவிக்கு பாதை கிடைப்பதற்காக, சூழ்ந்து இருக்கும் லட்சக்கணக்கான வானர சேனை விலக்க முயற்சித்தார்.
பல்லக்கை சுற்றி பாதுகாப்புடன் வந்த ராக்ஷஸர்கள், தங்கள் கைகளில் உள்ள தடியால் அடித்தும், கைகளால் தள்ளியும், பெரும் உற்சாகத்தில் இருந்த வானர கூட்டத்தை விலக்கி கொண்டு, வேகமாக வரத்தொடங்கினர்.
பல்லக்கை சூழ்ந்து இருந்த வானரர்களும், பிற ராக்ஷஸர்களும், ருக்ஷர்களும், முன்னும் பின்னும் நகர்ந்து, முடிந்த வரை வழி விட்டு பின்னுக்கு சென்றனர்.
எந்த சீதைக்காக, தங்கள் உயிரையும் துச்சம் என மதித்து போர் புரிய வந்தார்களோ! அந்த சீதாதேவி, தங்கள் அருகில் மூடு பல்லக்கில் வருவதை பார்த்ததும்,
"ஜெய் சீதா ராம்...
ஆ.. இதோ இதில் தான் சீதா மாதா இருக்கிறார்.
ஆஹா... ஆஹாஹா..."
என்று ஆனந்தமும், வெற்றி கோஷமும் சேர்ந்து பேரிறைச்சலை உண்டாக்கி விண்ணை பிளந்தது.
சீதையை பார்க்கும் ஆவலால், பெரும் சலசலப்பு ஏற்பட, பாதுகாவலர்கள் தடியால் வானர கூட்டத்தை அடித்து விலக்க, முன்னுக்கு பின் தள்ள, வானர சேனையில் பெரும் உற்சாகம் தொற்றி கொண்டு, அதனோடு பெரும் சலசலப்பு ஏற்பட்டு பேரிறைச்சல் உண்டானது.
இது கடலில் அலை ஓசையும், காற்றின் ஒலியும் சேர்ந்து கொண்டால் எப்படி இருக்குமோ அது போல இருந்தது.
உற்சாகம் மிகுந்த வானர சேனை முன்னும் பின்னும் அலைந்து கொண்டு, சலசலப்பு ஏற்படுவதை பார்த்த ராமபிரான், அவர்களிடம் இரக்கமும், அதே சமயம் மறுபக்கம் கோபமும் கொண்டார்.
வந்து கொண்டிருந்த பல்லக்கை அங்கேயே நிற்க சொன்னார்.
மேலும், 'நானும் இங்கு இருக்கிறேன்' என்பதால், உயிரையே கொடுக்க தயாராக இருந்த என் பிரஜைகளான வானரர்களுக்கு, என் சமீபம் வரும் வரை சீதை தன் தர்சனத்தை கொடுப்பதில் தோஷமில்லை.
மூடுபல்லக்கில் வந்து கொண்டிருந்த சீதாதேவியிடம், ராமபிரானின் விருப்பத்தை விபீஷணன் தெரிவிக்க, சீதாதேவி மூடுபல்லக்கை விட்டு இறங்கி, நடந்து வர தொடங்கினாள்.
விபீஷணன் வானர சேனையை விலக்கி கொண்டு ராமரை நோக்கி வர, சீதை பின் தொடர்ந்து வந்தாள்.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் கிளம்பிய சீதாதேவி, தன்னை சூழ்ந்து ஆர்ப்பரிக்கும் வானர சேனையை பார்த்து,
திடீரென்று தன் முகத்தை யாரிடமும் காட்டி கொள்ள விரும்பாமல், தன் புடவை தலைப்பால் முகத்தை மறைத்து கொண்டு, கூனிக்குறுகி, பெரும் அவமானத்தை சுமந்து கொண்டு, அருவெறுப்புடன், விபீஷணனை தொடர்ந்து வந்தாள்.
(குறிப்பு: ராமபிரான் தன்னை ஏற்று கொண்ட பின், தன்னால், அவருக்கு ஏற்பட போகும் பழியை நினைத்து தாளாத வேதனையுற்றாள் சீதா தேவி.
தன் நிலையை நினைத்து தன்னையே வெறுத்தாள். கூனி குறுகி போனாள் சீதா தேவி..
'மானுக்கு ஆசைப்பட்டு, இப்படி மாட்டிக்கொண்டோமே!
உலகம் ராமபிரானை பேசுமே! தான் இந்த நிலையில் வாழ வேண்டுமா?
இங்கேயே உயிர் விட்டு விடலாமா?
அவர் அனுமதியை கேட்டு விட்டு உயிரை அவர் முன் தியாகம் செய்து விடலாமா?
தான் ஒழுக்கம் தவறாதவள் என்று எப்படி உலகத்திற்கு நிரூபிப்பேன்?'
என்ற பலவித எண்ணங்கள் சூழ, உயர்ந்த குலபெண்ணான சீதாதேவி தன்னை யாரிடமும் காட்டி கொள்ள பிரியப்படாமல் இப்படி முகத்தை மூடி, தன்னையே அருவெறுத்து கொண்டு நடந்தாள்.
'சீதா தேவியின் மன ஓட்டத்தை கவனித்து விட்டார்' ராமபிரான்.
"தன் ஒழுக்கத்தை உலகுக்கு எப்படி நிரூபிப்பேன்?" என்று கூனி குறுகி போன சீதையின் நிலையை கண்டு கலங்கினார்.
தன்னை கல்லாக்கி கொண்டு, அதற்கு வழியை தானே கொடுக்க தயாரானார் ராமபிரான்.
சீதையின் தர்ம சங்கடத்தை அறிந்த ராமபிரான், உலகை பொறுத்தவரை, தன்னை பொல்லாதவன் போல காட்டி, அவளை வெறுத்தது போல பேசி, சீதை என்ன நினைக்கிறாளோ அதை அறிந்து கொள்ள நினைத்தார்.
சீதைக்காக, தன்னை கோபக்காரனாக காட்டிக்கொண்டார்.)
தன்னால் ராமபிரானுக்கு பெரும் அவமானம் ஏற்படுமே ! என்ற வேதனையில், ராமபிரான் அருகில் வந்ததும், சீதாதேவிக்கு அடக்க முடியாத கண்ணீர் பீறிட்டது.
அதே சமயம்,
இனிமையான முகம் கொண்ட ராமபிரானை, நிலவு போன்ற சீதாதேவி கண்டதும், ஆச்சரியம், உற்சாகமும் அடைந்தாள்.
குறையே இல்லாத வெண்மையான முழு நிலவு போல இருந்த சீதை, வெகு காலம் கழித்து தன் நாதனின் முகத்தை பார்க்கிறாள்.
பார்த்தவுடனேயே அவள் மனதில் இருந்த கவலைகள் அழிக்கப்பட்டுவிட்டது.
சீதா தேவி பணிவுடன் ராமபிரான் அருகில் வந்து நிற்க, கோபத்தை தன்னில் அனுமதித்து கொண்டு, ராமபிரான் பேசலானார்…
"மங்களமானவளே! (भद्रे) என் எதிரிகளை வீழ்த்தி, உன்னை வென்றுள்ளேன்.
என் பராக்ரமத்தை எவ்வளவு காட்ட வேண்டுமோ! அவ்வளவும் காட்டி இதை சாதித்தேன்.
எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தனது சுய வலிமையால் அகற்றாது போனால், அந்த வலிமை இருந்து தான் பயன் என்ன?
ஹனுமான் கடலை தாண்டி, இலங்கையை கொளுத்தி செய்த பெருமுயற்சிக்கு, பலன் இன்று கிடைத்து இருக்கிறது.
சுக்ரீவன் இந்த போரில் எனக்கு செய்த உதவியும், அவருடைய திறனும், நிர்வாகமும் இன்று பலன் தந்து இருக்கிறது.
என்னிடம் பக்தி உள்ள விபீஷணன், குணம் கெட்ட தன் சகோதரனை விட்டதற்கான பலன் இன்று கிடைத்து இருக்கிறது."
என்றார்.
இவ்வாறு ராமபிரான் பேச ஆரம்பிக்க, தன்னை பற்றி ஒரு வார்த்தை பேசாத ராமபிரானை பார்த்து, பெண் மானின் கண்களை ஒத்து இருந்த, சீதையின் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது.
ஆனால்,
தீயில் நெய் ஊற்ற ஊற்ற எப்படி தீ இன்னும் கொழுந்து விட்டு எரியுமோ! அது போல, ராமபிரானுக்கு சீதையை பார்க்க பார்க்க கோபம் இன்னும் அதிகமானது.
சீதையை பார்த்து கூட பேசாமல், வேறு பக்கம் பார்த்து கொண்டே, வானரர்கள், ராக்ஷஸர்கள் சூழ்ந்து இருக்க, மேலும் கடுமையான சொற்களை கொண்டு பேசலானார்..
"பகைவர்கள் என் மேல் சுமத்திய அவமானத்தை துடைக்க என்ன முயற்சி எல்லாம் செய்ய வேண்டுமோ! அதை நான் ஒரு ஆண் மகனாக செய்து முடித்தேன்.
(குறிப்பு: சீதை 'ஒளியை போன்று தூய்மையானவள்' என்று தான் சொல்கிறார். உலகில் 'கண் நோய் உள்ளவனுக்கு நீ களங்கம் போல தெரிகிறாய்' என்று மறைமுகமாக உன் மீது குற்றமில்லை என்று சொல்கிறார்.
ராமபிரானுக்கு துளியும் சந்தேகமில்லை என்று தெரிகிறது.
ராமபிரான் மனதை புரிந்தவள் சீதா தேவி).
ஆதலால், நீ என்னை விட்டு, எங்கு விருப்பப்பட்டாலும் செல்லலாம்.
மங்களமானவளே! பத்து திசைகளும் உனக்காக பரந்து விரிந்து இருக்கிறது.
நீ விருப்பப்பட்டால், அவர்கள் இருக்கும் இடத்தில் கூட பாதுக்காப்பாக இருக்கலாம்.
ராவணன் உன்னிடம் இருந்த திவ்யமான அழகை கண்டு சகித்திருக்க மாட்டான்."
என்று பேசினார் ராமபிரான்.
'ஆறுதலாக ராமபிரான் தன்னிடம் பேசுவார்' என்று நினைத்த சீதை, ராமபிரானின் கடுமையான சொற்களை கேட்டதும், மலர்கொடியை ஒரு யானை தன் துதிக்கையால் பிடுங்கி, அசைத்து நாசமாக்குவது போல, துடிதுடித்து அழுதாள்.
மயிர்கூச்சு ஏற்படும் படி ராமபிரான் பேசிய பின், சீதை தாளமுடியாத துன்பத்தை அடைந்தாள்.
இது போன்று கடும் சொற்களை, தன் வாழ்நாளில் என்றுமே பேசாத ராமபிரான், இன்று அனைவருக்கும் எதிராக, இப்படி பேசி விட, சீதை பெரும் அவமானத்தை அனுபவித்தாள்.
தன் நிலையை நினைத்து கூனி குறுகினாள்.
காயம் பட்ட இடத்திலேயே மேலும் காயம் பட்டது போல, ராமபிரானின் கடும் சொற்களால், கலங்கி இருந்த கண்களில் நீர் வழிந்தோடியது.
க்ஷத்ரிய பெண்ணான சீதை, உடனேயே தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு, தழுதழுத்த குரலில், தன் கணவன் ராமபிரானை பார்த்து கம்பீரமாக பேசலானாள்..
"நாகரீகம் இல்லாதவனை போல, தரம் தாழ்ந்த வார்த்தைகளை கொண்டு என் காது பட, ஏன் பேசினீர்கள்?
நீங்கள் என்னை சந்தேகித்தது போல, நான் உங்களை என்றுமேசந்தேகித்தது கிடையாதே!
நான் உங்கள் ஒழுக்கத்தை என்றுமே திடமாக நம்புகிறேனே!!
இத்தனை வருடங்கள் நாம் சேர்ந்து வாழ்ந்தோமே! இந்த அனுபவத்திற்கு பிறகும், நீங்கள் என் ஒழுக்கத்தின் தூய்மையை புரிந்து கொள்ள முடியாமல் போனது என்றால், நான் இறந்ததற்கு சமமல்லவா!
(யா க்ஷமா மே கதிர்கந்தும் ப்ரவேக்ஷ்யே ஹவ்ய வாஹனம் - வால்மீகி ராமாயணம்) என்று கூறினாள்.
கோபத்தை வரவழைத்து கொண்டு அமர்ந்து இருந்த ராமபிரானின் முகத்தை, லக்ஷ்மணன் பார்த்தார்.
ராமபிரான் முகத்தில் இதற்கு எதிர்ப்பு இல்லாமல் இருந்ததை குறிப்பு அறிந்த லக்ஷ்மணன், சிதையை மூட்டினார்.
(குறிப்பு: லக்ஷ்மணன் 'ராமபிரான் இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார்' என்று தைரியமாக இருந்தார்.
ஹனுமான் தன் வாலில் தீயிட்ட போது, இலங்கையே தீக்கு இறையான போதும், சீதையின் பிரார்த்தனையே தன்னை காத்தது என்ற போது "சீதாதேவிக்கு ஒன்றும் ஆகாது" என்று திடமாக இருந்தார்.
ராமபிரான் "சத்தியத்தில் தான் நியமித்த தெய்வங்கள் இருக்க நினைக்கிறதா?" என்று பரிக்ஷை செய்தது போல இருந்தது. இது சம்பந்தமாக ராமபிரான் பேசவும் போகிறார்...)
சீதா தேவி தலை குனிந்து, மெதுவாக ராமபிரானை வலம் வந்து, அக்னி குண்டத்திற்கு அருகில் வந்தாள்.
தேவதைகளையும், ப்ராம்மணர்களையும் மனதில் நமஸ்கரித்து விட்டு, அக்னி தேவதையை பார்த்து பேசலானாள்,
"என் இதயம் ராமபிரானை விட்டு விலகியதில்லை என்பது சத்தியமானால்! இந்த அக்னி என்னை காப்பதை இந்த உலகத்தில் உள்ளோர் பார்க்கட்டும்.
(குறிப்பு: 'தான் காக்கப்பட வேண்டும்' என்று சீதை ஆசைப்படுகிறாள் என்று தெரிகிறது. மேலும் 'ராமபிரானோடு அயோத்தி சென்று மாதா கௌசல்யாவை பார்க்க வேண்டும்'என்றுஆசை சீதைக்கு உள்ளது என்பதும் தெரிகிறது.)
நான் தூய்மை அற்றவள் என்று புரிந்து கொள்ளாமல் பேசினார் ராகவன்!
நான் தூய்மையானவள் என்பது சத்தியமானால்! இந்த அக்னி என்னை காப்பதை இந்த உலகத்தில் உள்ளோர் பார்க்கட்டும்.
உடலாலும், மனதாலும், வாக்கினாலும், தர்மமே உருவான ராகவனையே நினைத்து இருந்தது சத்தியமானால், இந்த அக்னி என்னை காப்பதை இந்த உலகத்தில் உள்ளோர் பார்க்கட்டும்.
குபேரன், எம தர்மன், 1000 கண்களையுடைய இந்திரன், வருணன், மஹாதேவனான முக்கண்ணன், பிரம்மா அனைவரும் பல சூரியனை போல இலங்கையில் ராமபிரான் முன் ப்ரத்யஷமாகிவிட்டனர்.
தாங்களே மூன்று உலகங்களையும் படைத்தவர். தாங்களே ப்ரபு. ஸித்தி அடைந்தவர்களுக்கும் லட்சியம் தாங்களே. மோக்ஷம் அடைய முயற்சி செய்பவர்களுக்கும் லட்சியம் தாங்களே! முதலில் இருந்தவரும் தாங்களே!
தங்களை ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவர் கிடையாது. தாங்களை யாருமே அறிந்து கொள்ளவும் முடியாது.
(த்வம் யஞ்யஸ்த்வம் வஸத்காரஸ்த்வம் ஓங்கார: பரந்தப:! ப்ரபவம் நிதனம் வா தே ந விது: கோ பவாநிதி !! - வால்மீகி ராமாயணம்)
தாங்களே எங்கும் அனைவரிடத்திலும் இருந்தாலும், ப்ரம்மத்தையே உபாசிக்கும் ப்ரம்மணர்களிடமும், பசுக்களிடமும், அனைத்து திசைகளிலும், ஆகாயத்திலும், மலைகளிலும், மரங்களிலும் குறிப்பாக தெரிகிறீர்கள்.
ஒரு பெரிய சர்பம் தன்னை சுருட்டி கொண்டு இருப்பது போல, லோகங்கள் ஸ்ருஷ்டி ஆகாத காலத்தில், தேவ கந்தர்வர்கள் உட்பட 14 லோகங்களையும் (பொதுவாக மேலுலகம், பூலோகம் , பாதாள லோகம் என்று மூன்று லோகம் என்று சொல்வோம்) சேர்த்து தனக்குள் அடக்கி கொண்டு, நீங்கள் மட்டுமே அன்று இருந்தீர்கள்.
நானே உங்கள் இதயம். சரஸ்வதியே உங்கள் நாக்கு. தேவர்கள் உன் தலை கேசம். ரூபமில்லாத நிலையில் ப்ரம்மமாக நீங்கள் இருக்கும் நிலையில் இப்படி தானே வேதம் உங்களை வர்ணிக்கிறது.
நீங்கள் விழித்து இருந்தால், அதுவே பகல். நீங்கள் உறங்கினால், அதுவே இரவு. வேதங்கள் உங்களை பற்றியும், உங்கள் குணங்களை பற்றியும் தான் சொல்கிறது! நீங்கள் இல்லாமல் வேதமே இல்லை.
நீங்களே புராண காலத்தில் மூன்று அடியால் பூலோகம் முதல் சத்ய லோகம் வரை பலி சக்கரவர்த்தியிடம் இருந்து மூன்று லோகங்களையும் கைப்பற்றி, இந்திர தேவனை மீண்டும் மகேந்திரன் ஆக்கினீர்கள்.
ஆதி புருஷரான உங்களை சரணடைந்து பக்தி செய்பவர்கள் எவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும், இக லோகத்தில் தான் விரும்பியது அனைத்தையும் அடைந்து, விண்ணுலகத்திலும் ஆனந்தத்தை பெறுகிறார்கள்.
சத்ய லோகத்தை விட்டு விட்டு, உலகுக்கே தாத்தாவான (பிதாமஹ) ப்ரம்ம தேவனே, ராமபிரான் முன் வந்து, இவ்வாறு ஸ்தோத்திரம் செய்து நிற்க,இதை கேட்ட அக்னி தேவன், சிதையை விலக்கி கொண்டு, சீதாதேவியுடன் வெளிப்பட்டு விட்டார்.
ராவணன் தன் வலிமையை காட்டி, சீதையை கடத்தி சென்றான். சீதையை சிறை வைத்தான்.
ஆனால், அவள் எப்பொழுதும் உங்கள் தியானத்திலேயே இருந்தாள். ராக்ஷஸிகள் சூழ்ந்து சீதையை காவல் காக்க, சீதை உங்கள் தியானத்தில் அடைக்கலம் அடைந்து இருந்தாள்.
ராவணன் பல வித முறைகளில் சீதையை கவர நினைத்தும், ராக்ஷஸிகள் பல விதத்தில் மிரட்டியும், சீதாதேவி தன் உயிரை உங்களிடம் சமர்ப்பித்து, ராவணனை சிறிதும் பார்க்காமல் இருந்தாள்.
சீதை இதய பூர்வமாக புனிதமானவள்.
ஒரு குறையும் அற்றவள்.
ஓ ராமா! சீதையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சீதையிடம் கடுமையான வார்த்தைகளை பேசாதீர்கள். இது என் ஆணையும் கூட",
(குறிப்பு: மூன்று உலகமும் சேர்ந்து கொண்டு சீதைக்கு துன்பங்களை கொடுத்தீர்கள்!! என்று மறைமுகமாக ப்ரம்ம, ருத்ர, மற்றும் தேவர்களை பார்த்து சொல்கிறார், ராமபிரான்)
சீதையை நான் அப்பொழுதே ஏற்று கொண்டிருந்தால், என்னை விளையாட்டு பிள்ளை என்றோ, அல்லது காம புத்தி உடையவன் என்றோ உலகம் பேசி இருக்கும்.
இவ்வாறு சிவபெருமான் சொல்ல, ராமபிரான், லக்ஷ்மணனோடு சேர்ந்து, தேவ ரதத்தில் இருக்கும் தன் 'தகப்பனாருக்கு' நமஸ்காரம் செய்தனர்.
தன் தகப்பனார் திவ்ய விமானத்தில், ஜொலிப்பதை கண்டு ஆனந்தப்பட்டார் ராமபிரான்.
தன் உயிரையும் விட மேலான தன் மகன் ராமனை பார்த்த ஆனந்தத்தில் திளைத்தார் தசரதர்.
தன் மடியில் ராமபிரானை அமர்த்தி கொண்டு, ராமபிரானை கட்டி அணைத்து பேசினார் தசரதர்..
"ராமா! நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா?.. எனக்கு கிடைத்த சொர்க்க லோக வாழ்க்கையும், தேவர்களும் ரிஷிகளும் என் மீது காட்டும் பக்தியும் கூட எனக்கு நீ இல்லாமல் ரசிக்கவில்லை.
இப்பொழுது உன்னை பார்த்ததால், இதயப்பூர்வமாக பேரானந்தம் அடைந்தேன்.
நீ எனக்காக 14 வருட வனவாச காலத்தை ஏற்று, விஜயராகவனாக நிற்பதை கண்டு பூரண திருப்தி கொண்டேன்.
கைகேயி சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை.
சூரியன் க்ரஹன காலத்தில் மறைக்கப்பட்டு, பிறகு மீண்டும் பிரகாசம் ஆவது போல, பெரும் துக்கத்தில் இருந்த நான், இன்று உன்னை, லக்ஷ்மணனோடு கட்டி அணைக்கும் போது, துக்கம் விடுபட்டு இருக்கிறேன்.
மகனே! என் வாக்கை உயர்ந்த ஆத்மாவான நீ காப்பாற்றினாய்.
தேவனாகி போனதால், இந்த லீலை யாவும் ராவணனை கொல்வதற்கு ஏற்படுத்தப்பட்ட திட்டமே என்று அறிகிறேன்.
எதிரிகளை ஒழிப்பவனே! உன்னால் கௌசல்யா பெருமைப்படுகிறாள். அவள் பாக்கியசாலி.
நீ திரும்பி அயோத்தி வருவதை பார்க்க கொடுத்து வைத்தவள்.
யாரெல்லாம் உன்னை அயோத்தியில் பார்க்க இருக்கிறார்களோ, அவர்கள் யாவருமே பாக்கியசாலிகள்.
அவர்கள் உன்னுடைய பட்டாபிஷேகத்தை பார்க்க இருக்கிறார்கள்.
தவறான குற்றச்சாட்டுகள் ஏற்படுமோ? என்ற உன் மன பயத்தை அகற்றவுமே,
பாராமுகம் போல, கோபம் உள்ளது போல காட்டிக்கொண்டான்.
நீ உன் புகழை, உன் ஒழுக்கத்தை அனைவருக்கும் நிரூபித்தாய்.
பதி சேவையை பற்றி நான் உனக்கு சொல்ல வேண்டியதே இல்லை. நீயே பதி சேவையின் இலக்கணம்.
இருந்தாலும், நான் உனக்கு மாமனார் என்ற ரீதியில், உனக்கு இதை சொல்ல ஆசைப்பட்டேன்.
உன் கணவன் சாகிஷாத் அந்த பரப்ரம்மமே! உனக்கும் இது நன்றாக தெரியும்.. ", என்றார்.
இப்படி தான் இரண்டு புத்ரர்களிடமும், சீதையுடன் பேசிவிட்டு, தசரத மன்னர், தான் வந்து இருந்த விமானத்தில் பயணித்து, திரும்பி இந்த்ர லோகம் சென்று மறைந்து விட்டார்.
"விஜய ராகவா! என்னிடம் திவ்யமான புஷ்பக விமானன் (flight) உள்ளது. அதில் நீங்கள் ஒரே நாளில் சென்று விடலாம்.
(அஹ்நா த்வாம் ப்ராபயிஷ்யாமி தாம் புரீம் பார்திவாத்மஜ | புஷ்பகம் நாம பத்ரம் தே விமானம் சூர்ய சந்நிதம் | - வால்மீகி ராமாயணம்)
(குறிப்பு:த்ரேதா யுகத்தில் 'விமானம்' (12 லட்சம் வருடங்கள் முன்பு நடந்த நம் சரித்திரத்தில் விமானம் இருந்துள்ளது) சொல்லப்படுகிறது.
1000 வருட அந்நிய ஆக்கிரமிப்பால், நம் கலாச்சாரம், கல்வி, மொழியை நாசமாக்கி விட்டனர் என்பது, ஹிந்துக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.)
இந்த விமானம் என் சகோதரன் குபேரனுடையது.
இதை ராவணன் குபேரனோடு போர் செய்து, கைப்பற்றி வைத்து இருந்தான்.
பெரிய மேகத்தை போல பறந்து செல்லும் இந்த விமானத்தில், உங்களை அழைத்து செல்கிறேன்.
இதில் நீங்கள் ஒரு கவலை இல்லாமல் வேகமாக சென்று விடலாம்.
நான் உங்கள் அபிமானத்துக்கு கொஞ்சம் பாத்திரமாகி இருந்தாலும்,
நீங்கள் ஏதாவது ஒரு நல்லதை என்னிடம் பார்த்து இருந்தாலும்,
நான் உங்களிடம் உண்மையான அன்பு வைத்து இருந்தால்,
நீங்கள் சிறிது நேரம் தங்கி, நான் 'உங்களுக்கும், சீதா தேவிக்கும், லக்ஷ்மணருக்கும் செய்யும் மரியாதையை ஏற்று கொள்ள வேண்டும்'.
நான் உங்களை வற்புறுத்தி ஆணையிடவில்லை.
நான் உங்கள் சேவகன். உங்களிடம் உள்ள அன்பினால், நட்பால், மரியாதையால் இதை பிரார்த்திக்கிறேன்."
என்று வேண்டினார் விபீஷணன்.
கருணையே வடிவான ராமபிரான், விபீஷணனை பார்த்து பேசலானார்..
"விபீஷணா! உங்களுடைய உதவியாலும், நடத்தையாலும், அன்பினாலும், என்னிடம் உங்களை இதயப்பூர்வமாக சமர்ப்பித்தும், நீங்கள் எனக்கு பெரும் மரியாதை செய்துள்ளீர்கள்.
எந்த முதலாளி (employer) தன் தனிப்பட்ட விருப்பத்தை ஒதுக்கி விட்டு, புலனடக்கம் உள்ளவனாக, இரக்கம் உள்ளவனாக இருக்கிறானோ, அப்படிப்பட்டவனுக்கு வேலை செய்யும் தொழிலாளி என்றுமே உறுதுணையாக இருப்பான்.
இதை உங்களுக்கு ஞாபப்படுத்தி கொள்வதற்காக சொல்கிறேன்.
எப்போதும் தண்டிக்கும், கொலை செய்ய துணியும், அன்பும், நற்பண்பும் இல்லாத படைதலைவனை (army general) சமயத்தில் படை வீரர்கள் கைவிடுவார்கள்."
என்று சிறு ராஜ உபதேசம் செய்தார் ராமபிரான்.
விபீஷணன் அனைத்து வானரர்களுக்கும், ராமபிரான் ஆணைக்கு உட்பட்டு, தகுந்த மரியாதை செய்தார்.
அனைவரும் மரியாதை பெற்றவுடன், ராமபிரான் புஷ்பக விமானத்தில் ஏறினார்.
அவர் அருகில் சீதா தேவி அமர்ந்து கொண்டாள். அருகில் லக்ஷ்மணன் நின்று கொண்டான்.
விபீஷணனோடு, வானர சேனையோடு இருக்கும் சுக்ரீவனையும் பார்த்து, ராமபிரான்,
"நீங்கள் அனைவரும் எனக்கு பேருதவி செய்துள்ளீர்கள்.
நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். நீங்கள் உங்கள் இடத்துக்கு செல்லலாம்.
ஓ சுக்ரீவ மகாராஜா ! தர்மத்துக்கு பயந்து நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நண்பனாகவும், நலம் விரும்பியாகவும் இருந்து செய்து முடிக்க உதவினீர்கள். நீங்கள் உங்கள் சேனையுடன் கிஷ்கிந்தை செல்லுங்கள்.
ஓ விபீஷண மஹாராஜா! நான் கைப்பற்றி கொடுத்த இந்த இலங்கை நகரம் இனி உங்களுடையது.
விஸ்வகர்மா ஸ்ருஷ்டி செய்த திவ்யமான விமானம் (flight), ஏற ஏற அனைவருக்கும் இடம் கொடுத்தது.
அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டனர்.
ராமபிரான் ஆணைக்கு உட்பட்டு, விமானம் வானில் பறக்க ஆரம்பித்தது.
ராமபிரான் பெரும் மகிழ்ச்சியோடு, தந்தையின் வாக்கை நிறைவேற்றிய திருப்தியோடு 'விஜய ராகவனாக' அமர்ந்து இருந்தார்.
அவருடன் குழுமி இருந்த அனைத்து ராக்ஷஸர்களும், வானரர்களும் பெரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
தான் வந்த வழியே மேகத்தை போல பறந்து கொண்டிருந்த புஷ்பக விமானத்தில், ராமபிரான், அருகில் இருந்த சீதா தேவியிடம்இலங்கையில் "விஸ்வகர்மா ஸ்ருஷ்டி செய்த த்ரிகூட மலையை பார்" என்று காட்டினார்.
ரத்தமும் சதையும் விழுந்த போர்க்கள இடத்தை காட்டினார்.
ராக்ஷஸர்களும், வானரர்களும் ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக சண்டை இட்ட இடங்களை காட்டினார்.
பெரும் வரங்களை வாங்கி வைத்து இருந்த ராவணன் தன்னால் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
கும்பகர்ணன் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
ப்ரஹஸ்தன் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
ஹனுமானால் தூம்ராக்ஷஸன் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
சுசேனரால் வித்யுன்மாலி கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
லக்ஷ்மணன் இந்திரஜித்தை கொன்ற இடத்தை காட்டினார்.
அங்கதன் விகடனை கொன்ற இடத்தை காட்டினார்.
மேலும், விரூபாக்ஷன், மஹாபார்ஷ்வா, மஹோதரா, அகம்பனா, மற்றும் பல ராக்ஷஸர்கள் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
மண்டோதரி, ராவணனின் மற்ற ஆயிரக்கணக்கான மனைவிகளுடன், ராவணனின் உடலை கண்டு அழுத இடத்தை காட்டினார்.
(குறிப்பு: இந்த சமயத்தில் மதுராந்தகம் வந்து விபண்டகர் (ருஷ்ய ச்ருங்கரின் தந்தை), தனக்காக காத்து இருக்கிறார் என்று தெரிந்து ஒரு சில நிமிடங்கள் இறங்கி சென்றார் என்று, திவ்ய தேச சரித்திரம் நமக்கு சொல்கிறது.)
பிறகு, சுக்ரீவன் வாழும் அழகிய கிஷ்கிந்தையை காட்டினார்.
'வாலி' கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
சீதை, கிஷ்கிந்தையை கண்டதும், ராமபிரானிடம், தன்னோடு சுக்ரீவனின் மனைவி தாரா மற்றும் அனைத்து வானர ஸ்திரிகளையும் அயோத்தி செல்ல ஆசைப்பட்டாள்.
பிறகு, ராவணனுடன் ஜடாயு போர் செய்த இடத்தை காட்டினார்.
பிறகு, கர, தூஷன் கொல்லப்பட்ட இடத்தையும், த்ரிசிரஸ் தோற்கடிக்கப்பட்ட இடத்தையும் காட்டினார்.
பிறகு, ராவணன் சீதையை கடத்தி கொண்டு போன இடத்தையும் கண்டனர்.
பிறகு, கோதாவரி நதியை, அகஸ்தியர் ஆசிரமத்தை தரிசித்தனர்.
சுதீக்ஷணரின் ஆசிரமத்தை கண்டனர்.
இந்திர தேவன் வந்த, சரபங்கர் ஆசிரமத்தை கண்டனர்.
பிறகு விராதனை கொன்ற இடத்தை சீதைக்கு காட்டினார்.
பிறகு, தாங்கள் தரிசித்த பல ரிஷிகளின் ஆசிரமத்தை கண்டனர்.
அத்ரி ரிஷியின் ஆசிரமத்தை பார்த்தனர்.
சீதைக்கு அங்கு அனசூயை பார்த்த தருணத்தை நினைவு கூர்ந்தார்.
பிறகு, கைகேயின் புதல்வன் பரதனை கண்ட சித்ரகூடம் வந்தனர்.
பிறகு அழகான யமுனா நதியை கண்டனர்.
பிறகு பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்தை கண்டனர்.
பிறகு புனிதமான கங்கையை கண்டனர்.
ஸ்ருங்கபேரிபுரத்தை கண்ட ராமபிரான், குஹனை நினைத்துக்கொண்டார்.
பிறகு, சீதையை பார்த்து,
"சீதா! அதோ பார்.. சரயு நதி.. கரை முழுவதும் யாகங்கள் நடக்கும் சரயு நதியை பார்.
இதோ... என் தந்தை தசரத மன்னரின் அயோத்தி நகரம்.
நான் இந்த அயோத்தியை நோக்கி தலை வணங்குகிறேன்."
என்றார்.
இதை கேட்ட வானரர்கள் தலையை தூக்கி, எட்டி எட்டி அயோத்தி நகரின் அழகை கண்டனர்.
அயோத்தி நகரமே வெண் நிற விரிப்பு போர்த்தி, வெயில் படாமல் இருந்தது.
இந்திரனின் சொர்க்க லோகமோ? என்று சொல்லும் அளவிற்கு ஜொலித்தது.
14 வருடம் முடிந்து... 5வது நாள், புஷ்பக விமானத்தை விட்டு இறங்கி, ராமபிரான், பரத்வாஜ ஆசிரமத்துக்கு நுழைந்தார்.
"அயோத்தி எப்படி உள்ளது. அயோத்தி மக்கள் எப்படி உள்ளனர். பரதன் எப்படி இருக்கிறான். என்னுடைய தாயார் எப்படி இருக்கிறார்? அனைவரும் உயிரோடு இருக்கிறார்களா?"
என்று விஜாரித்தார்.
பரத்வாஜ ரிஷி, "அனைவரும் நலம். உன் வருகைக்காக, தானும் மரவுரி அணிந்து தவ கோலத்தில் இருக்கும் பரதன் காத்து கொண்டு இருக்கிறான்.
அன்று கைகேயின் வரத்தை நிலை நாட்ட, இதோ இந்த காட்டு வழி பாதையில், சீதா, லக்ஷ்மணனுடன் நீ சென்றது நினைவில் வருகிறது.
தசரதர் கொடுத்த வாக்குக்காக, அப்பாவை மீற கூடாது என்ற தர்மத்தை காக்க, கிடைத்த பதவியை உதறி விட்டு, தன் சொத்தை எல்லாம் தானம் செய்து விட்டு, தன் சுகத்தை எல்லாம் உதறி விட்டு,
14 வருடமும் காய், கனி, கிழங்குகள் மட்டுமே உட்கொண்டு நீ செய்த பெரும் காரியம் இன்று சபலமானது.
இப்போது, நீ உன் நலன் விரும்பிகள், நண்பர்கள் அனைவருடனும் இருக்கிறாய்.
உன் எதிரிகளை அழித்து, விஜய ராகவானாக இருக்கும் உன்னை கண்டு நான் ஆனந்தம் கொள்கிறேன்.
சாதுக்களான ரிஷிகளை காக்கவே, நீ ஜனஸ்தானத்தில் அட்டகாசம் செய்த ராக்ஷஸர்களை ஒழித்தாய் என்று அறிகிறேன்.
ஒரு குறையும் இல்லாத சீதையை, ராவணன் அபகரித்து சென்றுள்ளான். மாரீசன் மாய மான் போல வந்து நிற்க, அதை கண்டு ஆசைப்பட்டு, சீதை பெரும் துன்பத்திற்கு ஆளாகி விட்டாள்.
பிறகு நீ கபந்தனை கண்டு, பிறகு பம்பா நதி அருகில் இருந்த சபரி என்ற தபஸ்வினியை கண்டாய்.
பிறகு சுக்ரீவனுடன் நட்பு கொண்டு, அவன் மனைவியை தன்னிடம் வைத்து இருந்த வாலியை வதைத்து, வானர சேனை முழுவதும் சீதையை தேட புறப்பட்டது.
ஹனுமான் இந்த காரியத்தில் வெற்றி பெற்று, சீதை இருக்குமிடத்தை கண்டறிந்தார்.
பிறகு நலன் பாலம் அமைக்க, வானர சேனையோடு இலங்கையை சூழ்ந்து முற்றுகை இட்டீர்கள்.
ராவணன், தன் பிள்ளைகள், சொந்தங்கள், மந்திரிகள் மேலும் அவர்கள் படைகளோடு சேர்ந்து அழிந்து போனான்.
விண்ணுலக தேவர்கள், தேவதைகள் அனைவரும் உனக்கு ப்ரத்யக்ஷம் ஆனார்கள். அவர்கள் அனைவரும் உனக்கு வரமும், ஆசீர்வாதமும் செய்தனர்.
ஓ ராமா! என் தனி மனித ஒழுக்கத்தால், தவ வலிமையால், உனக்கு நடந்த சம்பவங்கள் யாவையும் அறிந்தேன்.
ஓ மஹாவீரனே! இப்போது நானும் உனக்கு வரம் தர ஆசைப்படுகிறேன். இந்த நீரை எடுத்து உன் கைகளை அலம்பிக்கொண்டு, அயோத்தி நகருக்குள் பிரவேசம் செய்."
என்றார் பரத்வாஜர்.
ராமபிரான், பணிவுடன் வணங்கி,
"அயோத்தியா நகரம் செல்லும் பாதை முழுவதும், மரங்கள் எங்கும் பூக்கள் பூத்து, தேன் சொட்டும் பழங்கள் இருக்க வேண்டும்." என்று வரமாக கேட்டார்.
பரத்வாஜ ரிஷி, "இன்னும் 3 யோஜனை தூரம் இருக்கும் அயோத்தி வழி எங்கும், மரங்களில் கனிகள் கொட்டி கிடக்கும், பூக்கள் பூத்து குலுங்கும். அப்படியே ஆகட்டும்" என்று ஆசிர்வதித்தார்.
அயோத்தியை நோக்கி சேனை முழுவதும் நடந்து வர, வானரர்கள் அனைவரும் வரும் வழியில் கொட்டி கிடக்கும் பழங்களை சுவைத்து கொண்டே உற்சாகமாக வந்தனர்.
அயோத்தியை நெருங்கி விட்ட ராமபிரான், ஹனுமானை பார்த்து,
குகனை பார்த்து நலம் விஜாரித்து விட்டு, பிறகு பரதனை பார்த்து, "தானும், சீதை, லக்ஷ்மணன் அனைவரும் நலம், வந்து கொண்டு இருக்கிறோம்" என்ற தகவலை சொல்ல அனுப்பினார்.
மேலும், சீதையை ராவணன் அபகரித்து சென்றதையும், சுக்ரீவனுடன் தனக்கு ஏற்பட்ட நட்பையும், வாலியை கொன்றதையும், பாலம் அமைத்ததையும், ராவணன் கொல்லப்பட்டதையும், பிறகு அனைத்து தேவர்களும் ப்ரத்யக்ஷம் ஆனதையும், சிவபெருமான் அணுகிரஹத்தால் தனக்கு தந்தையின் தரிசனம் கிடைத்ததையும் சொல்லி, 'தான் வருவதை பற்றி பரதன் என்ன நினைக்கிறான்' என்று அறிந்து வர அனுப்பினார்.
குறிப்பாக ஹனுமானை பார்த்து,
"பரதனின் அங்க அசைவுகளை, அவனுடைய முக பாவனையை, பேச்சை கவனியுங்கள்.
என்று சொல்லி, ஹனுமானை வேகமாக பார்த்து விட்டு வர அனுப்பினார் ராமபிரான்.
அடுத்த நொடி, ஹனுமான் கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் ப்ரயாகையை கடந்து, ஸ்ருங்கபேரிபுரம் வந்து அடைந்தார்.
ராமபிரான் பரத்வாஜ ஆசிரமத்தில் இப்போது இருப்பதை தெரிவித்து, உங்கள் நண்பன் உங்களை விஜாரித்தார் என்று சொன்னார்..
குஹனிடம் 'ராமபிரான் உங்களை தரிசிக்க வர போகிறார்' என்ற தகவலை தெரிவித்து, ஆகாய மார்க்கமாக பறந்து அயோத்தியை நெருங்கினார்.
அங்கு 'நந்தி கிராமம்' என்ற இடத்தில் பரதன் தங்கி இருக்கும் குடிலை கண்டார்.
பரதன் ப்ரம்ம ரிஷியை போன்று, ப்ரம்மசர்யத்தோடு, ராமபிரானை போன்றே மரவுரி அணிந்து, ஜடை அணிந்து, சகோதரனை பிரிந்த வேதனையுடன் இருப்பதை கண்டார்.
ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்தாலும், 'ராம பாதுகை ஆளுகிறது' என்று பாதுகைக்கு மரியாதை செய்து கர்வம் இல்லாமல் இருந்தார்.
நான்கு வர்ணத்தாரையும் குறையில்லாமல் கவனித்து கொண்டார்.
தன்னுடன் இதயத்தில் நல்ல குணம் கொண்டவர்களையே மந்திரியாகவும், புரோகிதராகவும், பாதுகாப்பு தளபதியாகவும் வைத்து இருந்தார்.
ஆதலால், தங்கள் அரசன் மரவுரி தரித்து வாழ்கிறான் என்று இவர்களும் தங்கள் கடமையை தவறவில்லை, மேலும் அரசனை கைவிடவும் இல்லை.
பரதனின் பக்தியை கண்டு கண்ணீர் விட்டு ஹனுமான், பாதனிடம் சென்று,
"தண்டக வனத்தில் இருந்த ராமபிரான், எப்பொழுதும் உங்களை பற்றியே பேசுவார்.
ஓ தர்மாத்மா! உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை கொண்டு வந்துள்ளேன்.
உங்களுடைய துக்கம் இன்றோடு ஒழிந்தது.
நீங்கள் ராமபிரானோடு இணைய போகிறீர்கள்.
ராவணனை கொன்று, சீதா தேவியை மீட்ட ராமபிரான், தன் நலன் விரும்பிகளோடு வந்து கொண்டு இருக்கிறார்.
சீதா தேவியுடன், கூடவே லக்ஷ்மணனும் வருகிறார்."
என்று ஹனுமான் கூற,
14 வருடங்கள் எப்போது கழியுமோ, என்று வேதனையோடு காத்து இருந்த பரதன், மூர்ச்சையாகி கீழே மயங்கி விழுந்தார்.
உடனேயே தன்னை நிதானப்படுத்தி கொண்டு, இப்படி ஒரு செய்தியை சொன்ன ஹனுமானை, ஆனந்த கண்ணீருடன் கட்டி அணைத்து கொண்டார்.
ஹனுமானை பார்த்து,
"நீங்கள் உண்மையில் மனிதனா? அல்லது தேவனா? எனக்கு கருணை செய்வதற்காகவே வந்தது போல இருக்கிறதே!
நான் உங்களுக்கு ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்.
லட்சக்கணக்கான பசுக்களை உங்களுக்கு தரட்டுமா? நூற்றுக்கணக்கான கிராமங்கள் தரட்டுமா?
அல்லது,
16 நற் குணங்களும் நிரம்பிய, நல்ல பரம்பரையில் பிறந்த, அங்கங்கள் அழகாக உள்ள, ஆபரணங்கள் அணிந்த, நிலவு போன்ற, தங்க நிறம் கொண்ட ஒரு பெண்ணை உங்களுக்கு மணம் செய்து கொடுக்கவா?"
என்று ஆனந்தத்தின் எல்லைக்கு சென்று விட்ட பரதன் ஹனுமானை கண்டு பேரானந்தம் அடைந்து விட்டார்.
மேலும், ஹனுமானை பார்த்து,
"பல வருடங்கள் முன், என் அண்னா வனம் புகுந்து சென்றார்.
அதற்கு பிறகு, இத்தனை வருடங்கள் கழித்து தான், அவர் சம்பந்தமாக ஒரு சொல் கேட்கிறேன்.
இது என்னை தாங்க முடியாத ஆனந்தத்துக்கு இழுத்து செல்கிறது.
'பொறுமையை கடைபிடிப்பவனுக்கு கண்டிப்பாக ஏதோ ஒரு நாள் மீண்டும் சந்தோஷம் கிடைக்கும்' என்று சொல்வார்கள்.
இந்த வாக்கு சத்தியம் என்று உணர்கிறேன்.
எப்படி வானரர்களும், ராமபிரானும் இணைந்தார்கள்? எப்படி இது நடந்தது? எங்கு நடந்தது? ஏன் நடந்தது? தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்.."
என்று கேட்க, ஹனுமான் தன் வாயால் ராமாயண சரித்திரத்தை பரதனுக்குவிளக்கமாக சொல்கிறார்.
'ராவணன் வதைக்கப்பட்டு, சீதையை மீட்டு, புஷ்பக விமானத்தில் ஏறி, பரதவாஜ ஆஸ்ரமத்தில் வந்து தங்கி இருக்கிறார், நாளை உங்களை பார்க்க அயோத்தி வந்து விடுவார்'
என்று நடந்த விவரங்களை ஹனுமான் பரதனுக்கு விளக்கினார்.
பரதன் ஹனுமானை பார்த்து கை குவித்து "பல வருடங்கள் கழித்து, நாளை என் மனோரதம் பூர்த்தி ஆக போகிறது." என்றார்.
ஹனுமான் மூலம் ராமாயணம்கேட்கும் பாக்கியம் பெற்ற பரதன், பேரானந்தம் அடைந்தார்.
பிறகு, சத்ருக்னனை பார்த்து தேவையான ஏற்பாடுகள் செய்ய சொன்னார்.
இதை கேட்ட ஹனுமான், பரதனின் தாபத்தை உணர்ந்து, அழகாக பேசினார்.
"பாருங்கள்.. மரங்கள் அனைத்திலும் கனிகளும், பூக்களும், அளவில்லாமல் பூத்து குலுங்கி இருக்கிறது. அதை மொய்க்க மயக்கமுற்ற நிலையில் தேனீக்கள் வட்டமிடுகின்றன.
இவை பரத்வாஜ ரிஷியின் அணுகிரஹத்தால் ஏற்பட்டது.
பரத்வாஜ ரிஷி தன் ஆசிரமத்தில், தற்போது ராமபிரானுக்கும், வானர, ராக்ஷஸ சேனைக்கும் அதிதி சத்காரம் செய்து கொண்டு இருக்கிறார்."
என்று சொல்லும் போதே, வானர சேனையின் பேரொளி கேட்க தொடங்கியது.
"அதோ வானரர்கள் கோமதி நதியை கடந்து வருகின்றனர். பாருங்கள் புழுதி கிளம்பி வானத்தை தொடுகிறது." என்றார்.
அப்போது, வானில் புஷ்பக விமானம் (Flight) பறந்து வருவது தெரிந்தது.
உங்களை போன்ற திறமையுடன் நிர்வாகம் செய்ய திறனில்லாமல் தவிக்கிறேன்.
தோட்டத்தில் ஒரு பெரிய மரம் நன்றாக உயர்ந்து வளர்ந்து, பெரிய பெரிய கிளைகளுடன் இருந்து, பூக்கள் பூத்த பின், பழமாக ஆகாமல் வாடி போனால், அந்த மரத்தை வைத்தவன் பழத்தை அனுபவிக்க முடியாமல் தவிப்பான்.
அது போல,
நிர்வாக திறன் இருந்தும், இத்தனை தாசர்கள், வேலையாட்கள் இருந்தும், நீங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்று கொள்ளாமல் இருக்க கூடாது.
இந்த உலகம் நீங்கள் 'பட்டாபி ராமனாக' இருப்பதை பார்க்கட்டும்.
அயோத்தி நகருக்குள் ராமபிரான் நுழைந்ததும், சங்க நாதமும், மேளமும் விண்ணை பிளந்தது.
அயோத்தி மக்கள், ராமபிரானை வெகு நாட்கள் கழித்து, பார்த்தனர்.
"ஸ்ரீ ராமருக்கு வெற்றி.. ஜெய் ஸ்ரீ ராம்" என்று ராமபிரானுக்கு முன் கோஷமிட்டனர்.
அவர்களின் உற்சாகத்தை கண்டு, ராமபிரான் பெரிதும் மகிழ்ச்சி உற்றார்.
தேர் நகர்ந்து செல்ல, ராமபிரானை தொடர்ந்து கொண்டே, ஜெயகோஷம் செய்து கொண்டே பரதனோடு வந்தனர் அயோத்தி மக்கள்.
மந்திரிகள், புரோகிதர்கள், மேலும் பலர் சூழ்ந்து இருக்க, ராமபிரான் நக்ஷத்திரங்களுக்கு நடுவே, குளிர் தரும் நிலவு போல இருந்தார்.
ராமபிரானுக்கு வாழ்த்து கோஷங்களை, தாளத்தோடு பாடி கொண்டே, பாடகர்கள் ராமபிரானுக்கு முன் சென்றனர்.
மேலும், பசுக்கள், புரோகிதர்கள், பாலால் செய்யப்பட்ட இனிப்பு தின்பண்டங்கள், தங்க ஆபரணங்கள், அரிசி போன்ற தானியங்கள் அனைத்தையும் ராமபிரான் முன் எடுத்து கொண்டு சென்றனர்.
ராமபிரான், மந்திரிகளிடம், 'சுக்ரீவனின் நட்பு பற்றியும், ஹனுமானின் வலிமையையும், வானர வீரர்களின் கட்டுப்பாட்டையும், ராக்ஷஸர்களின் பலத்தை பற்றியும், தான் விபீஷணனோடு சேர்ந்ததை பற்றியும்' விவரித்து கொண்டு இருந்தார்.
பிறகு, பரதனை பார்த்து, "முத்தும், வைரமும் கொட்டி கிடக்கும், அசோக மரங்கள் அடர்ந்து அழகாக இருக்கும் என்னுடைய பெரிய மாளிகையை சுக்ரீவனுக்கு கொடுத்து தங்க சொல்." என்றார் ராமபிரான்.
உடனே பரதன், சுக்ரீவன் கையை பற்றிக்கொண்டு, தானே மாளிகைக்கு கூட்டி சென்றார்.
இதற்கிடையில், சத்ருக்னன் ஆணையின் படி, வேலையாட்கள் விரிப்புகள், கட்டில் மெத்தகள், விளக்குகள் எடுத்து கொண்டு சென்றனர்.
சத்ருக்னன் சுக்ரீவனை பார்த்து, "அரசே! ராம பட்டாபிஷேகத்துக்கு தயார் ஆவதற்கு உங்கள் வானரர்களுக்கு ஆணை இடுங்கள்"
உடனேயே சுக்ரீவன், முத்துக்கள் பதித்த 4 தங்க குடங்களை எடுத்து, தன் நான்கு வானர தலைவர்களை அழைத்தார்.
பிறகு அவர்களை பார்த்து,
"வானரர்களே! நாளை காலை விடுவதற்கு முன், இந்த குடங்களில் நான்கு திசைகளில் உள்ள கடலின் தீர்த்தமும் நிரப்பப்பட்டு, என் அடுத்த உத்தரவுக்காக நீங்கள் காத்து இருக்க வேண்டும்" என்று நியமித்தார்.
'ஜாம்பவான், ஹனுமான், வேகதர்சி, ருஷபன்' ஆகிய நால்வரும் கருடனை போல வேகமாக செல்ல கூடியவர்கள். மகா பலசாலிகள்.
இவர்கள் நான்கு திசைக்கும் பறந்து சென்று சமுத்திர ஜலத்தை எடுத்து வந்தனர்.
மேலும் பல வானரர்கள் 500 நதிகளின் தீர்த்தத்தை எடுத்து கொண்டு வந்து விட்டனர்.
இதை தவிர, சுசேனன் 'கிழக்கு சமுத்திரம்' சென்று அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்.
ருஷபன் சந்தன கட்டைகள் கலந்து, 'தெற்கு சமுத்திரம்' சென்று அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்.
கவயன் குளிர்ந்த 'மேற்கு சமுத்திரம்' சென்று அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்.
காற்றை போல பறக்க கூடிய நலன், 'வடக்கு சமுத்திரம்' (arctic ocean) சென்று அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்.
உலகத்தில் உள்ள சமுத்திர தீர்த்தம் அனைத்தும், நதிகளின் தீர்த்தம் அனைத்தும் அயோத்திக்கு வந்து சேர்ந்து விட, சத்ருக்னன், வஷிஷ்டரை 'ராம பட்டாபிஷேகத்தை நடத்துமாறு' கேட்டுகொண்டார்.
தொடர்ந்து, வசிஷ்டர் மற்றும் தலைமை புரோகிதர்கள் 'ராமபிரானை, சீதையோடுரத்தினங்கள் பதித்த ராஜ சிம்மாசனத்தில்' அமர செய்தார்கள்.
வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, கஸ்யபர், காத்யாயனர், சுயக்னா, கௌதமர், விஜயர் போன்ற 8 ரிஷிகள் பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்தனர்.
8 வசுக்கள் சேர்ந்து கொண்டு, இந்திரனுக்கு ராஜ்ய அபிஷேகம் செய்தது போல, ராமபிரானுக்கு செய்து வைத்தனர்.
புரோகிதர்கள், பின் கன்னிப் பெண்களும், மந்திரிகளும், அதன் பின் போர் வீரர்களும் ராமபிரானுக்கு அபிஷேகம் செய்வித்தனர்.
வேத மந்த்ரங்களோடு அபிஷேகம் செய்தனர்.
மகிழ்ச்சியுடன் செய்தனர்.
தேவ லோகத்திலும், ஆகாயத்திலுமாக நின்ற படி, தேவதைகள் அபிஷேகம் செய்தனர்.
உலகத்தை காக்கும் பொறுப்பில் உள்ள நால்வரும் (இந்திரன், குபேரன், வருணன், யமன்) சேர்ந்து கொண்டு, அனைத்து விதமான ஔஷதிகள் கலந்த, திவ்யமான ஜலத்தால் அபிஷேகம் செய்தனர்.
ப்ரம்மாவால் நிர்மாணிக்கப்பட்டு, ரத்னங்கள் பதித்த கிரீடம், முன்பு ஸ்வாயம்பு மனுவுக்கு முடி சூட்டபட்டது.
அதன் பின், அந்த வம்சத்தில் வரிசையாக அதே கிரீடத்தை அரசர்கள் முடி சூட்டிக்கொண்டார்கள்.
அதே கிரீடத்தை இப்போது இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய ராமபிரான் தலையில் சூட்டினார் வசிஷ்டர்.
'தேஜஸ், தன்னம்பிக்கை, மகிமை, திறமை, சாமர்த்யம், பணிவு, இனிமை, வலிமை, வீரம், புத்திசாலித்தனம்' இவை யாரிடம் எப்பொழுதுமே இருக்கிறதோ! அந்த 'வாயு புத்திரனுக்கு' தன் முத்து மாலையை கரு விழியாளான வைதேஹி கொடுத்தாள்.
அந்த மாலையணிந்து ஹனுமான், விசேஷமாகத் தெரிந்தார்.
மலை மீது, சந்திரனின் கிரணங்கள், வெண்மையாகப் படிந்து இருப்பது போல, சோபித்தார் ஹனுமான்.
இதன் பின் த்விவிதன், மைந்தன், நீலன் ஆகியோருக்கு ராமபிரான் அவர்களின் எல்லா விதமான நல்ல குணங்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
வயதில் மூத்த வானரர்கள், பிற வானர அரசர்கள் என்று அனைவரும் வஸ்திரங்களாலும், பூஷணங்களாலும் முறைப்படி பூஜிக்கப்பட்டனர். கௌரவிக்கப்பட்டனர்.
விபீஷணனும், சுக்ரீவனும், ஹனுமானும், ஜாம்பவானும், மற்ற முக்கியமான வானர வீரர்களும், ராமபிரானுடைய குறைவற்ற தெளிவான செயலால், முறைப்படி கௌரவிக்கப் பட்டனர்.
அவரவர்கள் விரும்பியபடி ரத்னங்களோ, மற்ற பொருட்களோ, கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியுடன் நிறைந்த செல்வந்தர்களாகவே அனைவரும் திரும்பிச் சென்றனர்.
ராஜா ராமபிரானை வணங்கி விடை பெற்று, வானரர்கள் கிஷ்கிந்தை சென்றனர்.
வானர ஸ்ரேஷ்டரான சுக்ரீவனும், ராமனின் அபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டு, முறைப்படி கௌரவிக்கப் பட்டவராக விடை பெற்று கிஷ்கிந்தை சென்றார்.
விபீஷணனும் தன்னுடன் வந்த ராக்ஷஸ வீரர்களுடன் விடை பெற வந்தார்.
விபீஷணனுக்கு குலதனம் கிடைத்தது.
(குறிப்பு: இங்கு குலதனம் என்பதை தன் குல தனமான இலங்கை ராஜயம் என்றும் சொல்லலாம். ஆனால் இலங்கை ராஜ்யத்தை இலங்கையிலேயே கொடுத்து விட்டார் ராமபிரான்.)
ராமபிரானின் குல தெய்வம் "ரங்கநாதரை" எடுத்து சென்றார்.
ரங்கநாதரை பெற்றுக் கொண்டு இலங்கையை நோக்கி விபீஷணன் புறப்பட்டார்.
(குறிப்பு: இலங்கை செல்லும் வழியில், ஸ்ரீ ரங்கம் வந்த போது, இரு புறமும் ஓடும் காவிரியை பார்த்து, சந்தியா வேளை வந்து விட்டதால், அங்கேயே சந்தியா வந்தனம் செய்து விட்டு பிறகு இலங்கைக்கு புறப்படலாம் என்று நினைத்து, ரங்கநாதரை வைத்து விட்டு, ஸ்நானம் செய்து, சந்தியா வந்தனம் செய்ய சென்றார்.
திரும்பி வரும் போது, ரங்கநாதர் அங்கேயே தான் காவிரி நதி கரையில் இருக்க விரும்புவதாக சொல்லி, 'தெற்கு முகமாக இலங்கையை பார்த்து அணுகிரஹம் செய்கிறேன்' என்று சொல்லிவிட்டார்.
மீற முடியாத விபீஷணன் அங்கேயே ரங்கநாதரை வைத்து விட்டு, அன்றிலிருந்து தினமும் ரங்கநாதரை சேவிக்க வரும் பழக்கம் கொண்டார்.
ராம அவதாரம் த்ரேதா யுகத்தில் நிகழ்ந்தது. கணக்கிட்டு பார்த்தால், குறைந்தது சுமார் 8 லட்சம் வருடம் முன் த்ரேதா யுகம்.
ஸ்ரீ ரங்கநாதர், ப்ரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டு, பிறகு ஸ்வாயம்பு மனுவால் பூலோகம் வந்து, பிறகு இக்ஷவாகு அரசர்கள் வழிபட்டு, நாராயணனே ராமபிரானாக வந்து, தன்னையே குலதெய்வமாக வழிபட்டு, தான் அயோத்தியில் இருக்க, ரங்கநாதராக இருக்கும் இவரே தென் தேசம் வந்து விட்டார். குறைந்தது 8 லட்சம் வருடங்களாக 'ஸ்ரீரங்கநாதர்' ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது.
ராமபிரானின் குலதெய்வமான, குலதனமான 'ரங்கநாதர்' தமிழ் நாட்டுக்கு வந்தது, தமிழர்களுக்கு கிடைத்த பாக்கியம்.)
ராஜ்யம் முழுவதுமாக பரந்த எண்ணத்துடன், பரிபாலித்துக் கொண்டு, பெரும் புகழுடன், எதிரிகள் யாரும் இன்றி மிகவும் சந்தோஷமாக ஆண்டு வந்தார் ராகவன்.