Followers

Search Here...

Showing posts with label என்ன. Show all posts
Showing posts with label என்ன. Show all posts

Saturday 25 March 2023

தமிழர்களுக்கும் மகாபாரதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? மலயத்வஜ பாண்டிய வம்சம் எப்படி அர்ஜுனனோடு உறவு கொண்டது? அறிவோம் மகாபாரதம்

What is the connection between tamil people (Pandiya and chola) in mahabharat?

In 3 chapter, we see  this connection.
Also we see that, from 3102BCE Mahabharata period, pandya kings are Arjuna lineage.

1st when Arjuna goes for theertha yatra,
2nd sahadeva when he goes for rajasuya yagya,
3rd Arjuna goes again for aswamedha yaga where he gets killed by his son babruvahana and gets life back from Udupi another wife.

பாண்டிய அரசன் அர்ஜுனனின் மகன் என்றும்,
தமிழர்கள் "தமிழ் மொழி பேசினார்கள்" என்றும் மகாபாரதத்தில் காண்கிறோம்.

நம் பாண்டிய அரச வம்சமே, அர்ஜுனன் வம்சம் என்று தெரிகிறது.

மஹாபாரத ஸ்லோகத்துடன், அர்த்தம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது

1.
அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தில் (old Delhi) இருந்து தீர்த்த யாத்திரையாக 12+1 மாதங்கள் செல்கிறான்.

அப்பொழுது, பாண்டிய தேசத்தில், மணலூர் வருகிறான். அப்பொழுது சித்ரவாகனன் என்ற பாண்டிய அரசன், தன் பெண்ணை (சித்ராங்கதை) நிபந்தனை பேரில் திருமணம் அர்ஜுனனுக்கு செய்து முடிக்கிறான்.
ஆதி பர்வம், 61, 235 அத்தியாயம்
https://www.proudhindudharma.com/2022/10/Pandya-king-dynasty-arjuna.html?m=1

2.
யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்ய முடிவு செய்த போது, சகாதேவன் தமிழகம் வருகிறார்.
இங்கு, சோழர்களை முதலில் பார்க்கிறான். பிறகு பாண்டிய தேசம் செல்கிறான். இவர்கள் தமிழர்கள், தமிழ் மொழி பேசினார்கள் என்று வியாசர் சொல்கிறார். தன் சகோதரனின் மனைவியும், அவன் பிள்ளை பப்ருவாகனனும் இருப்பதால், மலயத்வஜ அரசன் பரம்பரையில் வந்த சித்ரவாகனன் அரண்மனைக்கு வந்து பார்க்கிறான். அர்ஜுனன் பிள்ளைக்கு பொன்னும் மணியும் தருகிறான். யாகத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறான்.
சபா பர்வம், அத்தியாயம் 33
https://www.proudhindudharma.com/2022/08/Sahadeva-visit-tamilnadu-and-chitrangada.html?m=1

3.
போர் முடிந்த பிறகு, அஸ்வமேத யாகம் செய்ய யுதிஷ்டிரர் முடிவு செய்கிறார்.
அப்போது, அர்ஜுனன் பாண்டிய தேசம் வருகிறான்.
பாண்டிய மன்னனான தன் மகனையும், தமிழ் பெண்ணான சித்ராங்கதையையும் பார்கிறான்.
அஸ்வமேத பர்வம், அத்தியாயம் 79
https://www.proudhindudharma.com/2023/01/arjuna-killed-by-pandiya-king.html?m=1

Friday 13 January 2023

மகாபாரதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? அறிவோம்...

"மகாபாரதம்" என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?

ஸுத பௌராணிகரான உக்கிரஸ்ரவஸ், சௌனகர் மற்றும் குழுமி இருந்த ரிஷிகளுக்கும் வியாசர் கொடுத்த மஹாபாரத சரித்திரத்தை விவரித்தார்.


சுருக்கமாக மஹாபாரத நிகழ்வை சொல்லி விட்டு, எதற்காக "மகாபாரதம்" என்று பெயர் வைத்தார் வியாசர் என்று சொல்கிறார்.


पुर: अकिल सुरैः सर्वैः समेत्य तुलया धृतम्।

चतुर्भ्यः सरहस्येभ्यो वेदेभ्यो हि अधिकं यदा।।

तदाप्रभृति लोकेऽस्मिन् महाभारतम् उच्यते।

महत्त्वे च गुरुत्वे च ध्रियमाणं यत: अधिकम्।।

महत्त्वाद्भारवत्त्वाच्च महाभारतम् उच्यते।।

निरुक्तम् अस्य यो वेद सर्वपापैः प्रमुच्यते।।

- மகாபாரதம் (வியாசர்)

தேவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு, வியாசரின் மகாபாரதம் கனமானதா? இல்லை நான்கு வேதங்கள் கனமானதா? என்று சோதித்தனர்.

நான்கு வேதங்களை காட்டிலும் பாரதம் கனமாக (விஷயங்களில், பலனில்) இருந்தது என்று நிர்ணயம் செய்தார்கள் 

அது முதல், இந்த உலகத்தில் இதற்கு "மஹாபாரதம்" என்று பெயர் கிடைத்தது 

இந்த பெயர் காரணத்தை அறிபவன் கூட, தான் செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.

तपो नकल्क: अध्ययनं नकल्कः

स्वाभाविको वेद विधि: नकल्कः।

प्रसह्य वित्ताहरणं नकल्क:

त: अन्येव भावोपहतानि कल्कः।।

- மகாபாரதம் (வியாசர்)

இதில் சொல்லப்பட்ட படி தவம் செய்தாலும் பாவம் போய் விடும்.

இதை படித்தாலும் பாவம் போய் விடும்.

இதில் சொல்லப்பட்ட படி அவரவர் ஆஸ்ரம தர்மத்தில் வாழ்ந்தாலும் பாபங்கள் அழியும்.

இந்த மஹாபாரதத்தை சொல்வதால் செல்வம் கிடைத்தாலும் அது பாவத்தை தராது.

ஆனால்,

மஹாபாரதத்தில் சொல்லப்பட்டதை கெட்ட எண்ணத்தோடு செய்தால், அனைத்துமே பாவ காரியங்கள் ஆகி விடும்.

Sunday 27 February 2022

பெண்களிடம் உள்ள தோஷங்கள் என்ன? தெரிந்து கொள்வோம்

பெண்களிடம் உள்ள தோஷங்கள் என்ன? 

"பரத ஸ்ரேஷ்டரே ! பெண்களின் ஸ்வபாவம் பற்றி அறிய விரும்புகிறேன்.

பெண்கள் தான் பாவங்களுக்கு வேர், அவர்களின் மனமும் சலனமுள்ளது சொல்லப்படுகின்றதே!"

என்று யுதிஷ்டிரர் கேட்டார்.

(स्त्रीणां स्भावम् इच्छामि श्रॊतुं भरतसत्तम | स्त्रियो हि मूलं दॊषाणां लघु चित्ताः पितामह || வியாசர் மஹாபாரதம்)


பீஷ்மர் பேசலானார்.

இந்த விஷயம் சம்பந்தமாக நாரதரும், பஞ்சசூடை என்னும் தேவலோக அப்சரஸும் பேசிக்கொண்ட சம்பாஷணை பற்றி ஒரு புராண இதிகாசம் சொல்கிறது.


முற்காலத்தில், தேவரிஷியான நாரதர் லோகங்கள் எல்லாவற்றிலும் சஞ்சரித்து கொண்டிருக்கும் போது, ப்ரம்ம லோகத்தில் இருக்கும் பஞ்சசூடை என்னும் சிறந்த அப்சரஸை கண்டார்.


அங்கமெல்லாம அழகுடைய இவளை பார்த்த நாரதர்,

"அழகிய இடையுள்ளவளே! என் மனதில் ஒரு சந்தேகம் உள்ளது.

அதை பற்றி நீ விளக்க வேண்டும்" என்றார்.


நாரதரை பார்த்து, 

"நீங்கள் கேட்கும் விஷயம் எனக்கு தெரிந்தால், அதை பற்றி நான் சொல்ல தகுதியானவள் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயமாக சொல்கிறேன்" என்றாள்.


நாரதர், "சிறந்தவளே! உனக்கு தெரியாத விஷயத்தை பற்றி உன்னிடம் எவ்வகையிலும் கேட்க மாட்டேன். பெண்களிடம் உள்ள தோஷத்தை பற்றி உன்னிடம் கேட்க விரும்புகிறேன்" என்றார்.

அப்சரஸ், "ஓ தேவ ரிஷி! நான் பெண்ணாக இருந்து கொண்டே பெண்களை தூஷிக்க மாட்டேன். பெண்கள் எவர்கள் என்பதும், எப்படிப்பட்ட இயற்கை உள்ளவர்கள் என்பதும் உமக்கு தெரிந்தவை தானே. இவ்வகையான காரியத்தில் என்னை நீங்கள் ஏவ கூடாது" என்றாள்.


தேவரிஷி, 

"உண்மையை சொல். பொய் சொல்வதால் பாபம் உண்டாகும். உண்மையை சொல்வதில் தோஷமில்லையே" என்று கூறினர்.

(ताम् उवाच स देवर्षिः सत्यं वद सुमध्यमे |मृषावादे भवेद् दॊषः सत्ये दॊषॊ न विद्यते ||வியாசர் மஹாபாரதம்)


இப்படி சொன்னதும், சிரித்து கொண்ட அந்த அப்சரஸ்,

பெண்களிடம் உள்ள தோஷங்களை சொல்ல தொடங்கினாள்

"நாரதரே! நல்ல குலத்தில் பிறந்து, மிகுந்த அழகு உள்ளவளாக இருந்தாலும், சிறந்த கணவனே அமைந்தாலும், பெண்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீற விரும்புகிறார்கள்.

இது ஸ்த்ரீகளுக்கு உள்ள தோஷம் (stain).

(कुलीना रूपवत्यश च नाथवत्यश च यॊषितः |  मर्यादासु न तिष्ठन्ति स दॊषः सत्रीषु नारद || வியாசர் மஹாபாரதம்)


ஸ்த்ரீகளை பார்ப்பதை காட்டிலும் பாபம் ஒன்று கிடையாது.

பாபத்துக்கு வேர் போல ஸ்த்ரீகளே இருக்கிறார்கள்.

அது உமக்கு தெரியுமே!

(न सत्रीभ्यः किंचिद् अन्यद वै पापीयस्तरम् अस्ति वै | सत्रियॊ हि मूलं दॊषाणां तथा तवम् अपि वेत्थ ह || வியாசர் மஹாபாரதம்)

ஒரு பெண்ணுக்கு, புகழும் செல்வமும், அழகும், அவள் சொல் பேச்சை கேட்கும் கணவனே அமைந்தாலும், சமயம் கிடைத்தால், அவர்களை விட்டு விட்டு விலகவும் துணிவார்கள்.

(समाज्ञातान ऋद्धिमतः प्रतिरूपान वशे स्थितान् | पतीन् अन्तरम् आसाद्य नालं नार्यः प्रतीक्षितुम || வியாசர் மஹாபாரதம்)


பிரபுவே! அடக்கத்தை விட்டுவிட்டு, பாவப் பழக்கங்கள், தீய நோக்கங்களைக் கொண்ட ஆண்களிடமும் தோழமையை (friendship) வளர்த்து கொள்கிறார்கள்.

பெண்களாகிய எங்களிடத்தில் இருக்கும் பெரிய அதர்மம் இது.

(असद् धर्मस तव अयं सत्रीणाम् अस्माकं भवति परभॊ | पापीयसॊ नरान् यद् वै लज्जां त्यक्त्वा भजामहे || வியாசர் மஹாபாரதம்)


எவன் தம்மை வேண்டி, அருகில் பழகி, சிறிது உபசாரம் செய்தாலும், அவனை பெண்கள் விரும்பி விடுகின்றனர்.

(स्त्रियं हि यः परार्थयते संनिकर्षं च गच्छति |  ईष: च कुरुते सेवां तम् एवेच्छन्ति यॊषितः || வியாசர் மஹாபாரதம்)


மற்றவர்களின் விருப்பு, வெறுப்பை நினைத்து, சுற்றி இருக்கும் ஜனங்கள் என்ன சொல்வார்களோ என்ற பயத்தினால் மட்டுமே ஸ்வபாவத்தில் கட்டுப்பாடை விரும்பாத பெண்கள், கணவர்களுக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள்.

(अनर्थित्वान् मनुष्याणां भयात् परिजनस्य च | मर्यादायाम् अमर्यादाः सत्रियस तिष्ठन्ति भर्तृषु ||  வியாசர் மஹாபாரதம்)


தனக்கு வேண்டியதை எப்படியாவது சாதித்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். தனக்கு பிடித்து விட்டால், எந்த வயது ஆணையும் விரும்புவார்கள்.

(नासां कश्चिद् अगम्यॊ ऽसति नासां वयसि संस्थितिः| வியாசர் மஹாபாரதம்)


அழகில்லாதவனோ,  அழகுள்ளவனோ, ஆண் என்பதாலேயே பழக ஆசைப்படுவார்கள்.

(विरूपं रूपवन्तं वा पुमान् इत्य एव भुञ्जते | வியாசர் மஹாபாரதம்)


இப்படி பல ஆண்களிடம் பேசும் பெண்கள், பாபத்தை கண்டு பயந்தோ, இரக்கத்தினாலோ, பொருளுக்காகவோ, சுற்றத்தார் குழந்தைகள் பாசத்தாலோ, குலத்திற்காகவோ கணவர்களிடம் கட்டுப்படுவதில்லை.

(न भयान् नाप्य अनुक्रॊशान् नार्थहेतॊः कथं चन | न जाति कुल संबन्धात् स्त्रियस तिष्ठन्ति भर्तृषु || வியாசர் மஹாபாரதம்)


கட்டுப்பாடுள்ள நல்ல குலத்தில் பிறந்த பெண்களும், இளமை, அழகு, ஆபரணங்களோடும், ஆடைகளோடும் சுதந்திரமாக இருக்கும் மற்ற பெண்களை பார்த்து, தாங்களும் சுதந்திரமாக இருக்க ஆசைப்படுகின்றனர்.

(यौवने वर्तमानानां मृष्टाभरण वाससाम् | नारीणां सवैरवृत्तानां स्पृहयन्ति कुलस्त्रियः || வியாசர் மஹாபாரதம்)


தன்னை விரும்பும் கணவன் கிடைத்தும், கௌரவமாக நடத்தும் கணவன் கிடைத்தும், கூனன், குருடன், முட்டாள், குள்ளனுக்கு கூட பெண்கள் தங்களின் அனுகூலங்களை வழங்குவதைக் காணலாம்.

(याश च शश्वद् बहुमता रक्ष्यन्ते दयिताः स्त्रियः | अपि ताः संप्रसज्जन्ते कुब्जान्ध जड वामनैः || வியாசர் மஹாபாரதம்)


தேவரிஷி! மஹரிஷி! 

இவ்வுலகத்தில் திறமையே இல்லாத ஆண்களின் தோழமையை, அசிங்கமான ஆண்களின் தோழமையை கூட பெண்கள் விரும்புவதைக் காணலாம்

(पङ्गुष्व अपि च देवर्षे ये चान्ये कुत्सिता नराः | स्त्रीणाम् अगम्यॊ लॊके ऽसमिन् नास्ति कश्चिन महामुने || வியாசர் மஹாபாரதம்)


ப்ராம்மணரே! 

பெண்கள் தன்னிடம் பழக தகுதியற்ற ஆண் இவன் (வேறு ஜாதி, வேறு மதம், ரௌடி, கேடி, குடிகாரனாக இருந்தாலும்) என்று யாரையும் நினைப்பதில்லை.

(यदि पुंसां गतिर् ब्रह्म कथं चिन् नॊपपद्यते |अप्य अन्यॊन्यं परवर्तन्ते न हि तिष्ठन्ति भर्तृषु || வியாசர் மஹாபாரதம்)



மற்ற ஆண்களிடம் பழக முடியாதபட்சத்தில், உறவினர்களின் பேச்சுக்கு பயந்து, தண்டனைக்கு பயந்து, பெண்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் தங்களைத் தாங்களே வைத்திருக்கிறார்கள்.

(अलाभात पुरुषाणं हि भयात् परिजनस्य च | वधबन्धभयाच चापि स्वयं गुप्ता भवन्ति ताः || வியாசர் மஹாபாரதம்)


சஞ்சலமான மனம் உள்ளவர்கள் பெண்கள். புது உறவுகளை தேடுவதில் ஆர்வம் உள்ளவர்கள். 

அவர்களின் இயல்பு புரிந்துகொள்ள முடியாதது, அன்பினால் மட்டும் அவர்களை கீழ்ப்படிய வைக்க இயலாது.

(चल सवभावा दुःसेव्या दुर्ग्राह्या भावत: तथा | पराज्ञस्य पुरुषस्येह यथा वाचस तथा सत्रियः || வியாசர் மஹாபாரதம்)


அக்னி விறகுகளால் திருப்தி அடைவதில்லை.

கடல் எத்தனை நதிகளின் நீர் சேர்ந்தாலும் நிரம்புவதில்லை.

யமன் உலகில் உள்ள சர்வ உயிர்களை அழித்தாலும், திருப்தி கொள்வதில்லை.

பெண்களும் புருஷர்களால் நிரம்புவதில்லை.

(नाग्निस तृप्यति काष्टाहां नापगानां महॊदधिः | नान्तकः सर्वभूतानां न पुंसां वामलॊचनाः || வியாசர் மஹாபாரதம்)

 

தேவரிஷி! இன்னொரு மர்மமும் பெண்களிடம் உள்ளது. அழகான மற்றும் வசீகரமான குணநலன்களைக் கொண்ட ஒரு ஆணை கண்டவுடன், பெண்களிடம் மாறாத ஆசையின் அறிகுறிகள் தோன்றும்.

(इदम् अन्यच च देवर्षे रहस्यं सर्वयॊषिताम् | दृष्ट्वैव पुरुषं हृद्यं यॊनिः परक्लिद्यते सत्रियः || வியாசர் மஹாபாரதம்)


மனைவி விரும்பியது அனைத்தையும் பூர்த்தி செய்து, மனைவி விருப்பப்பட்ட விஷயங்களையே செய்து, நல்ல காலம், கெட்ட காலம் இரண்டிலும் பார்த்து பார்த்து காப்பாற்றும் கணவனை கூட, பெண்கள் போதிய மரியாதை கொடுப்பதில்லை.

(कामानाम अपि दातारं कर्तारं मानसान्त्वयॊः | रक्षितारं न मृष्यन्ति भर्तारं परमं सत्रियः || வியாசர் மஹாபாரதம்)


தனக்கு பிடித்த ஒரு ஆண் அருகில் இருந்தால், பெண்கள் எல்லையில்லாமல் கிடைக்கும் பிற சௌக்கியத்தையும், அலங்காரத்தையும், கூட தூக்கி எறிய துணிவார்கள்.

(न कामभॊगान् बहुलान् नालंकारार्थ संचयान् |  तथैव बहु मन्यन्ते यथा रत्याम अनुग्रहम् || வியாசர் மஹாபாரதம்)


குலநாசம் செய்யும் குணம், அலையும் மனம், உயிரை பறிக்கும் திறன், அடங்காத அக்னி போன்ற கோப பேச்சு, கூர்மையான வெட்டும் கத்தி போன்று உறவை வெட்டும் குணம், கொடுமையான விஷம், கருநாகம், தீ இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்தவள் பெண்.

(अन्तकः शमनॊ मृत्युः पातालं वडवामुखम | कषुर धारा विषं सर्पॊ वह्निर इत्य एकतः सत्रियः || வியாசர் மஹாபாரதம்)


நாரதரே! 5 மஹா பூதங்களும், உலகங்களும், ஆண் பெண்களும் எதிலிருந்து ப்ரம்மாவினால் படைக்கப்பட்டனரோ! அந்த மூல காரணத்திலிருந்தே பெண்களின் குற்றங்களும் படைக்கப்பட்டு இருக்கின்றன." என்றாள்.

(यत: च भूतानि महान्ति पञ्च; यत: च लॊका विहिता विधात्रा | यतः पुमांसः परमदाश च निर्मितस; तदैव दॊषाः परमदासु नारद || வியாசர் மஹாபாரதம்)

Tuesday 12 October 2021

சத்சங்கத்தில் என்ன கிடைக்கும்? சத்சங்கத்தின் மகிமைகள் என்ன? ஏன் சத்சங்கம் வேண்டும்? சத்சங்கத்தினால் என்ன பயன்?

சத்சங்கத்தில் என்ன கிடைக்கும்? சத்சங்கத்தின் மகிமைகள் என்ன? ஏன் சத்சங்கம் வேண்டும்? சத்சங்கத்தினால் என்ன பயன்?

1. ப்ரதமம் மஹதாம் சேவாம் 

சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். சாதுக்கள் வரும் வழியில் முள் இருக்கிறதே! அவர்கள் அமரும் இடம் சுத்தமாக இல்லையே! கொஞ்சம் சுத்தம் செய்வோமே, என்ற சேவை புத்தி ஏற்படும்.


2. தத் தயா பாத்ரதா தத:

நமக்காக இந்த இடத்தை சுத்தம் செய்தது யார்? யாரப்பா நீ? என்று அவர்கள் விசாரித்து கேட்க, சாதுக்களின் கருணைக்கு  பாத்திரமாகும் பாக்கியம் கிடைக்கும்.

3. தேஷாம் கைங்கர்ய லாபஸ்ச

அந்த சாதுக்களுக்கு நேரிடையாக அவர்களே சொல்லி, கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கிடைக்கும்


4. தத் உச்சிஷ்டா அன்ன போஜனம்

சாதுக்கள் சாப்பிட்டால் நமக்கு கொடுக்காமல் இருப்பார்களா? பழம் சாப்பிடு என்று தன் கையால் கொடுப்பார்கள். அவர்கள் கொடுக்கும் பிரசாதத்தை எடுத்துக்கொள்ள பாக்கியம் கிடைக்கும்.





5. தத் தர்மே அபிருசி: சாத:

உச்சிஷ்ட பிரசாதத்தை எடுத்துக்கொள்ள, எடுத்துக்கொள்ள, சாதுக்கள் அனுசரிக்கும் தர்மத்தில் நாமும் இருக்க வேண்டும் என்ற ருசி (ஆசை) ஏற்படும். 


6. தத்வ ஞானம்

தர்மத்தை நாமும் அனுசரிக்க அனுசரிக்க, உலக வாழ்க்கை மாயை, தற்காலிகம் தான் என்ற தத்துவ ஞானம் ஏற்படும்.

7. த்ருடா ரதி:

இந்த அனுபவத்தை கொடுத்த குருநாதன் மீது அசைக்க முடியாத அன்பு ஏற்படும்.


8. சாரித்ர ஸ்ரவணம் ஹரே:

அவர் சொல்லும் பகவத் கதைகளை கேட்க ஆசை ஏற்பட்டு, பெரும் சுகத்தை கிடைக்க செய்யும்.


9. பக்தி பாவோதய: சாத  

பகவானின் மீது பக்தி பாவம் உண்டாகும். அதற்கான சாதனை செய்ய தூண்டும்.


10. சம்சார தாப: நிஷ்சே

பகவானும், குருநாதருமே நெஞ்சில் எப்பொழுதும் இருக்க, சம்சார உலகில் ஏற்படும் தாபங்கள் அழிந்தே போய் விடும்.


11. பரமா சாந்தி: அப்யதே 

அழியவே அழியாத பரம சாந்தி நமக்கு வந்து விடும்.

சத்சங்காத் லபதே நூனம்

சத்சங்கத்தில் ஒருவன் சேருவதால், இந்த 11 பலன்கள் கிடைக்கிறது. 


காட்டுவாசியாக இருந்த சபரி, மதங்க முனிவரின் ஆசிரமத்தை கண்டாள்.


இந்த 11 பலன்களையும் பெற்றாள். 

கடைசியில்  குருவின் அணுகிரஹத்தால், ராமபிரானின் தரிசனமும் பெற்றாள்.


Thursday 24 December 2020

திருமலையின் நீளம் என்ன? திருப்பதி பெருமாள் எதற்காக வந்தார்? என்ன சொன்னார்? கைங்கர்யம் செய்பவர்கள், ஆதிசேஷனை போல கைங்கர்யம் செய்ய வேண்டும்.

"ஞானம் அடைந்த ஜீவன் மட்டுமே வைகுண்டம் (மோக்ஷம்) அடைய முடியும். 

ஞானம் அடையாதவரை, மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்."
இது பரவாசுதேவன் நியமித்த விதி (சட்டம்).

வைகுண்டத்தில் உள்ள அனைத்து ஜீவனும், பிறப்பு இறப்பில் இருந்து முக்தி அடைந்தவர்கள்.

மீண்டும் இவர்கள், பூலோகத்திலோ, சொர்கத்திலோ, மகர லோகத்திலோ, ஜன, தப, ப்ரம்ம லோகத்திலோ, பாதாள லோகங்களிலோ பிறவி எடுப்பதில்லை.

இவர்களாக ஆசைப்பட்டால், பெருமாளை போன்று அவதாரம் கூட செய்ய முடியும்.
அணுகிரஹம் செய்ய முடியும்.

மோக்ஷம் என்ற பேரானந்தமும், பரவாசுதேவனின் தரிசனமும் இவர்களுக்கு நிரந்தர சொத்து.

வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுக்கு  

  • உலகங்களை படைக்க, காக்க, அழிக்க என்று பல கடமைகள் உண்டு.

ஆனால்,

வைகுண்டத்தில் இருக்கும் முக்தி அடைந்த ஜீவனுக்கு,  

  • எந்த உலக பொறுப்பும் கிடையாது.   
  • இவர்கள் அனுபவிப்பது நிரந்தரமான ஆனந்த அனுபவம் மட்டுமே.
  • இவர்களும் பரவாசுதேவனை போல சுந்திரமானவர்கள்
  • எங்கும் செல்ல கூடியவர்கள். (அஜாமிளனை எம தூதர்களிடமிருந்து மீட்க இவர்களே வந்தார்கள்.)
  • நாராயணனை போலவே சங்கு சக்கரம் உள்ளவர்கள்.



  • திவ்ய ரூபம் உடையவர்கள்.
  • அவர்களுக்கும் பரவாசுதேவன் அனுபவிக்கும் ஆனந்தம் உண்டு.

வைகுண்டத்திற்கு முக்தி அடையாத ஜீவன் வர முடியாது என்பதால், பரவாசுதேவன் தானே விருப்பப்பட்டு, அவர்கள் இருக்கும் லோகங்களில் அவதாரங்கள் செய்கிறார்.

'மோக்ஷம் கொடுக்க வேண்டும் என்ற கருணையின் காரணமாக' அவதாரம் செய்கிறார். 

'மோக்ஷத்தில் நமக்கு ஆசை வருவதற்காகவும்' அவதாரம் செய்கிறார்.

'தன்னை புரிந்து கொள்ளவும்' அவதாரம் செய்கிறார்.

ப்ரம்ம லோகத்தில் இருக்கும் ப்ரம்மாவும் "வைகுண்டம்" சென்று பெருமாளை பார்க்க முடியாது.

பெரிய பெரிய முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள், ருத்ரன் உட்பட யாரும் வைகுண்டம் சென்று பார்க்க முடியாது.

தேவர்கள், ரிஷிகள், ப்ரம்மா, சிவன் என்று அனைவரும் பார்க்க வேண்டும் என்பதால், வைகுண்டத்தில் இருந்து கொண்டே, க்ஷீராப்தி என்ற பாற்கடலில், "மகாவிஷ்ணு"வாக வ்யூஹ அவதாரம் செய்து, தரிசனம் கொடுக்கிறார்.

வைகுண்டத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் ஆதிசேஷன், க்ஷீராப்தியிலும் கூடவே அவதாரம் செய்தார்.

அவரவர் தகுதிக்கு ஏற்ப தரிசனம் கொடுக்க, ஆங்காங்கு ஒரு காரியாலயம் (office) அமைத்துக்கொள்வதை போன்று தேவ, ப்ரம்ம, ருத்ரன், ரிஷி, கிண்ணரர்கள் என்று அனைவருக்காகவும், க்ஷீராப்தியில் அவதாரம் செய்து, தரிசனம் கொடுத்து, அபயம் தருகிறார் பெருமாள்.

க்ஷீராப்தி என்ற பாற்கடலில், 1000 தலைகள் கொண்ட ஆதிசேஷன் மேல், விஷ்ணு என்ற பெயருடன் பரவாசுதேவன் பள்ளி கொண்டு இருக்கிறார்.

வைகுண்டத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் மகாலட்சுமி,
விஷ்ணு பத்னியாக இதே பாற்கடலில், தேவர்களும் அசுரர்களும் அம்ருதம் கடையும் போது தோன்றினாள்.

ஆதிசேஷனின் 1000 தலைகளிலும் நாக ரத்தினங்கள் ப்ரகாசித்தன

பெருமாளின் பிம்பம் இந்த ஆயிரம் நாகரத்தினங்களிலும் பிரகாசிப்பதை பார்த்து ரசித்து கொண்டே, பெருமாளின் திருவடியை பிடித்து விட்டுக்கொண்டு இருந்தாள், மகாலட்சுமி.

அந்த சமயம், பரவாசுதேவனை பார்ப்பதற்கு, நாரதர் திருபாற்கடல் வந்தார்.

பாற்கடலில் ஜெய விஜயர்கள் அனுமதி இன்றி, பெருமாளை பார்க்க யாரும் உள்ளே போக முடியாது. 
சனகாதி முனிவர்களையே ஒரு முறை ஜெய விஜயர்கள் தடுத்து விட்டனர்.

நாரதர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
த்ரிலோகமும் சுற்றும் நாரதரை மட்டும் யாருமே தடுப்பது இல்லை.
இவரின் முகவெட்டு அப்படி.

இவரை பார்த்தால் கம்சனுக்கு, ஹிரண்யகசிபுவுக்கு கூட, வரவேற்க தோன்றுமாம்.

நாராயண நாமத்தை எப்பொழுதும் சொல்லும் நாரதருக்கு, எங்கு சென்றாலும் வரவேற்பு, மதிப்பு.
கம்சன் போன்றவர்களே நாரதரை வரவேற்பார்கள் என்றால், நாரதரை ஜெய விஜயர்கள் தடுப்பார்களா?..

நாரதர் வீணா கானம் செய்து கொண்டே திருபாற்கடல் வருகிறார்
அடிக்கடி இங்கு வந்து பெருமாளை சேவிப்பது இவருக்கு வழக்கமும் கூட.

எம்பெருமான் நாரதர் வருவதை கண்டதும், சந்தோஷமாக எழுந்து கொண்டு, ஆசையோடு வரவேற்றார்.

பவள பேழையில் முத்துக்களை கோர்த்து வைத்தது போல, எம்பெருமானின் உதடும், பற்களும் இருந்ததாம்.

தேவர்களுக்கும் தேவனான எம்பெருமான், பீதாம்பரம் உடுத்தி,  சங்கு சக்கரம் ஏந்திய கரங்களுடன், கண்ணுக்கு ஆனந்தம் தரக்கூடிய திவ்ய மங்கள வ்யூஹ ரூபத்தை உடையவராய் இருந்தார்.

எம்பெருமானை பார்த்து, கை குவித்து நாரதர் துதிக்கலானார்.
"நாம (name) ரூபங்களை (figure) கடந்து,
எல்லா இடத்திலும் அகண்டமாக இருந்து கொண்டு,
'ஸத்'தாய், 'சித்'தாய், ஆனந்தமாய்,
சத்தியத்தின் சொரூபனாய் இருக்கக்கூடிய நீங்கள்,
பக்தர்களுக்காக திவ்ய மங்கள (மஹாவிஷ்ணு) ரூபத்தை (Figure) ஏற்கிறீர்கள்.

சாமான்ய தேவர்கள், பரதெய்வமான உங்கள் பெருமைக்கு அருகில் கூட வர முடியாது.

கர்ம தாஸர்களாக இருப்பவர்கள் தேவர்கள்.
ஒருவன் செய்யும் கர்மாவுக்கு (செயலுக்கு) தகுந்த பலனை கொடுப்பவர்கள் தேவர்கள். அவ்வளவு தான்.

தானாக ஒருவனுக்கு கிருபை செய்ய தேவர்களுக்கு சக்தியும் கிடையாது.

'நீ ஏன் என்னை காப்பாற்றவில்லை?' என்று இந்திரனை கேட்டாலும்,
'வாஸ்தவம் தான். நீ தினமும் கோவிலுக்கு வந்தாய், என்னை பூஜை செய்தாய். இருந்தாலும் உன் பூஜா பலன் அவ்வளவு தான், உன் நம்பிக்கைக்கு அவ்வளவு தான் பலன் கொடுக்க முடியும்'
என்று கை விரித்து விடுகின்றனர்.




ஆனால் நீங்கள் ஒருவர் மட்டுமே, "உன் கால பலன் அவ்வளவு தான். உன் கர்ம பலன் அவ்வளவு தான்"
என்று சால்ஜாபுகள் சொல்லாமல், பிறர் யோக்கியதை பார்த்து அனுக்கிரகம் செய்யாமல்,  தீனர்களுக்கும் அனுக்கிரகம் செய்கிறீர்கள்.

மற்ற தெய்வங்களுக்கும் புராணம் உள்ளது.
உங்களுக்கும் புராணம் உள்ளது.

ஆனால் உங்களை போன்று வேறு எந்த தெய்வமும் உதவி செய்ததாக தெரியவில்லை.

எது தர்மம்? என்பதை தெரிந்து கொள்ள 'சப்த ப்ரம்மமாகிய வேதத்தை பார்த்து தெரிந்து கொள்கிறோம்'

அப்படிப்பட்ட வேதமே ஒரு சமயம், பிரளய ஜலத்தில் போய் விட்டது

மது கைடபர்கள் வேதத்தை எடுத்து கொண்டு சென்று விட்டனர் என்ற பொழுது, மற்ற தெய்வங்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
பேசாமல் இருந்து விட்டனரே!!

இப்படி மற்ற எந்த தெய்வங்களும் முன் வராத போது, நீங்கள் தானே மத்ஸ்ய அவதாரம் எடுத்து பிரளய ஜலத்தில் நீந்தி வேதத்தை மீட்டீர்கள்.

ஒரு சமயம், பிரளய ஜலத்தில் பூமியே மூழ்கி விட, பூமி தேவியை காப்பாற்ற, ஒரு தேவனும் முயற்சி செய்யவில்லையே? அப்பொழுதும் சும்மா இருந்தார்களே!!

எல்லா தெய்வங்களுக்கும் கோவில் உள்ளது.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் பக்தர்கள் உண்டு. புராணங்கள் உண்டு.
'பூமியே மூழ்கி விட்டது' என்றதும் இவர்கள் யாருமே ஒரு முயற்சியும் செய்யவில்லையே!! 

உமக்கோ, உடம்பு பறக்கிறது..  உடனே 'வராஹ அவதாரம்' செய்து பூமியை பிரளய ஜலத்தில் இருந்து மீட்டு காப்பாற்றினீர்கள்.

இப்படி பூமியையே காப்பாற்றி, பூமிக்கே ஆதாரமாக இருக்கும் உங்களை, இவர்கள் நன்றியுடன் நினைத்து பார்க்காமல் இருக்கிறார்கள்.

ஒரு சமயம் தேவர்களுக்கு 'அம்ருதம் வேண்டும்' என்று ஆசைப்பட்டு உங்களிடம் வந்து சரணாகதி செய்தார்கள்.


நீங்களே இவர்களுக்காக 'மந்திர மலையை தூக்கி கொண்டு வந்து, 
பாற்கடலில்'
கடையுமாறு சொன்னீர்கள்.
கடையும் பொழுது மலை கடலில் உட்கார்ந்து விட, உடனே கூர்ம அவதாரம் செய்து மலையை முதுகில் தாங்கி, கடையுமாறு சொன்னீர்கள்.

 

'பெருமாளுக்கு முதுகு வலிக்குமே!! இப்படி கடைந்தாவது அம்ருதம் நாம் சாப்பிட வேண்டுமா?'
என்று ஒரு தேவனுக்காவது தோன்றியதா? இல்லையே !!

அம்ருதம் வருகிறதா?... அம்ருதம் வருகிறதா?.. 
என்று தானே பார்த்து கொண்டு இருந்தனர்.

இவ்வளவு கிருபை செய்கிறீர்களே. 
யாருக்காவது நன்றி இருக்கிறதா?

'ரூபத்தை கடந்த பரவாசுதேவனான நீங்கள், திருமேனி எடுத்து கொள்வதே, பிறருக்கு உதவி செய்வதற்கு தான்' என்று அறிகிறேன்.

ஹிரண்யகசிபு 14 லோகங்களையும் (ப்ரம்ம லோகம் முதல் பாதாளம் வரை) தன் தவ வலிமையாலும், உடல் வலிமையாலும் கைப்பற்றி விட்டான்.

யாரும் இவனை ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கு சக்தி பெற்று இருந்தான்.

இவன் ஒருவனே 71 சதுர் யுகம் ஆட்டி வைத்தானே. 
எந்த தேவனுக்காகவாவது சக்தி இருந்தால், ஹிரண்யகசிபுவை எதிர்த்து இருக்கலாமே?

ப்ரம்மா முதல் அனைத்து தேவர்களும் பொட்டி பாம்பாக அடங்கி இருந்தார்களே, இவனிடம்.

பிரகலாதன் வரும் வரை, தேவர்கள் அனைவரும் "ஹிரண்யன் அடிப்பானே!" என்று பயந்து
"ஹிரண்யாய நம: ஹிரண்யாய நம:"
என்று சொல்லிக்கொண்டு அமைதியாக இருந்தனரே !!

இப்படி ஒருவனும் ஹிரண்யனை அடக்க புறப்படவில்லை.



அங்கும், நீங்கள் தானே, கடைசியில் பிரகலாதனுக்காக நரசிம்மமாக வந்து, ஹிரண்யனை வதம் செய்து, தேவர்களையும் வாழ வைத்தீர்கள்.

புராணங்களை எடுத்து பார்த்தால், ஆதியில் இருந்து அந்தம் வரை உங்கள் புகழ் தானே தெரிகிறது.

'உலக நிர்வாக பொறுப்பை' நீங்கள் அல்லவோ வைத்துள்ளீர்கள்.
திடீரென யாராவது வந்து, நான் ஈஸ்வரன் என்று சொல்லி விட முடியுமா?

பிரகலாதன் பேரன் பலி சக்கரவர்த்தியும் அவன் ஆட்சி காலத்தில் பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை கைப்பற்றி விட்டான்.

தேவர்கள் மீண்டும் வாழ இடம் இல்லாமல் தவித்தனர்.
இந்திரனுக்கு அழ கூட தெம்பு இல்லாமல், அவன் தாய் 'அதிதி' உங்களிடம் வந்து அழுது பிரார்த்தித்தாள்.

அப்பொழுதும் நீங்கள் தானே வாமன மூர்த்தியாக அவதாரம் செய்து பலி சக்கரவர்த்தியையும் தன் பக்தனாக்கி, உலகை மீட்டு, இந்திரனுக்கு மீண்டும் சொர்க்க லோகத்தை கொடுத்தீர்கள்.

மண்ணை தானமாக பலி சக்கரவர்த்தியிடம் தானமாக பெற்று, அதற்கு பதிலாக, தன்னையே அவனுக்கு கொடுத்து விட்டீர்களே!!.
'சுதலம்' என்ற பாதாள லோகத்தில், அவனுக்கு இடம் கொடுத்து, அவன் மாளிகையில் நீங்களே கதையை வைத்துக்கொண்டு 'கதாதரனாக' காவல் காத்து கொண்டு இருக்கிறீர்களே?

வயலில் பயிர் செய்த தானியங்களை, ஆடு மாடுகள் மேய்ந்து விடாமல் இருக்க, வேலி அமைப்பது வழக்கம்.

ஆனால் வேலியே பயிரை நாசம் செய்வது போல, ஒரு சமயம், மக்களை காப்பாற்ற வேண்டிய க்ஷத்ரியர்கள் (armed protection force) வலுத்து போய், அவர்களே வீடுதோறும் புகுந்து, கொள்ளை அடித்து, மக்களை கொன்று, அராஜகம் செய்கிறார்கள் என்றதும்,
நீங்களே 'பரசு-ராமராக' அவதாரம் செய்து, அதர்மம் செய்யும் க்ஷத்ரியர்கள் அனைவரையும் 21 தலைமுறைகள் நிர்மூலமாக்கி, அவர்கள் கொட்டத்தை அடக்கி, மீண்டும் அவர்களை, அவர்கள் தர்மத்தில் இருக்க செய்தீர்கள்.

சாதுக்களான மக்களை காப்பாற்றவும் நீங்கள் தானே வர வேண்டி இருக்கிறது.

'கோடாலி, சூலம்' என்று எத்தனை தெய்வங்கள் வைத்து உள்ளன.
அதை வைத்துக்கொண்டு, உலகத்தில் அதர்மம் தலைவிரிக்கும் போதும், பயன்படுத்தாமல், ஒன்றும் செய்யாமல் இருந்தனரே.

கோடாலி எடுத்து, நீங்கள் வந்து தானே மக்களை காப்பாற்ற வேண்டி இருக்கிறது.

தர்மம் வீழ்ச்சி அடையும் போது, எந்த தெய்வமும் "தர்மம் இப்படி பட்டு போய் விட்டதே!!" என்று கவலை படுவதாக கூட தெரியவில்லையே!!

அதே சமயம் "இந்திராய ஸ்வாஹா"
என்று தர்ம ரீதியாக யாராவது ஆஹுதி கொடுத்தால் மட்டும், அதை பெற்று கொள்ள வருகின்றனர்.

'தர்மம் அழிந்து போகிறதே! காப்பாற்ற வேண்டுமே!' என்றால் மட்டும், நீங்கள் தான் வர வேண்டி இருக்கிறது. வேறு எவரும் வருவதில்லை.

இப்படி எதற்கும் தாங்களே வந்து காப்பாற்ற வேண்டி இருக்க, பிற தேவதைகளையும் தன் இஷ்ட தெய்வமாக வழிபடுகின்றனரே!! ஜனங்கள்.

அப்படி என்ன தான் இந்த தெய்வங்கள் இவர்களுக்கு அனுக்கிரகம் செய்து விட்டனரோ? என்று தெரியவில்லை.

மற்ற தெய்வங்களை வணங்கும் இவர்களுக்கு, பரதெய்வமான உங்களின் குண விசேஷங்கள் என்ன?
மற்ற தெய்வங்களின் குண விசேஷங்கள் என்ன? என்பது தெரியவில்லையே!

இப்படி மற்ற தெய்வங்களையும் வழிபடும் இவர்கள், நீரே இவர்களின் ஆத்மாவுக்கு சொந்தக்காரன் என்று அறிந்து கொள்ளவில்லையே!!

காம்யார்த்தமான (பலனை எதிர்பார்த்தே) பக்தி செய்பவர்களாகவே பெரும்பாலும் இருக்கின்றனர்.

"அந்த தேவதையை வழிபட்டால் உடனே பலித்து விடும்" என்று கேள்விப்பட்டால் கூட, அந்த தெய்வத்தின் பக்கம் ஓடி விடுகின்றனர்.

எனக்கு இக லோக சௌக்கியங்கள் எதுவும் வேண்டாம்.
எனக்கு 'உங்கள் சரணத்தில் பக்தியே நிலைக்குமாறு' செய்யுங்கள்.

என்னிடத்தில் தியான யோகமும் இல்லை, கர்ம யோகமும் இல்லை, ஞான யோகமும் இல்லை.

தகுதி பார்க்காமல், நீங்கள் யாரையும் ஏற்றுக்கொள்வீர்கள்! என்றும் மட்டும் அறிவேன்.

உங்கள் பெருமை அறியாமல், நீங்களே இந்த ஜீவனுக்கு (ஆத்மாவுக்கு) சொந்தக்காரர் என்றும் தெரியாமல், பிற தெய்வங்களையும் வழிபடுபவர்களை நான் குறையாக சொல்லவில்லை.

அவரவர் பக்குவத்தை பொறுத்து, அவரவர்கள் பக்தி செய்கின்றனர் என்று அறிகிறேன்.

ஏதோ ஒரு அல்ப பலனுக்காக, ஏதோ ஒரு தெய்வத்திடம் பக்தி செய்கின்றனர்.

என்னை பொருத்தியவரை ஆதி தேவனான உங்களை தவிர, வேறு தெய்வம் எனக்கு தெரியாது.

என்னுடைய கண் பார்வை கூட வேறு ஒரு தெய்வத்திடம் திரும்புவதில்லை."
என்று சொல்லி, கை குவித்து நின்று கொண்டிருந்தார் நாரதர்.

பொதுவாக, ஜனங்களோடு ஜனங்களாக இருந்தால், எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியாது.
கொஞ்சம் மாடியில் ஏறி நின்று பார்த்தால், அந்த தெருவில் போகும் எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியும்.

'பூலோகத்தில் தனக்கு ஒரு ஏழு அடுக்கு மாடி அமைத்துக்கொண்டு, அங்கு நின்று கொண்டால், எல்லோரையும் பார்க்கலாமே'
என்று சங்கல்பம் செய்தார் பாற்கடலில் உள்ள எம்பெருமான்.




கண் மலர்ந்து பார்த்த, எம்பெருமான், ஆதிசேஷன் மேல் சாய்ந்து கொண்டே பேசலானார்,
"நாரதா ! பூலோகத்தில் அவதாரம் செய்து கொஞ்சம் விளையாடி விட்டு வரலாம் என்று நினைக்கிறேன்.
எனக்கு பூலோகத்தில் ஒரு தகுந்த இடம் பார்த்து சொல்.

எல்லோரும் காம்யார்த்த பக்தியே செய்து கொண்டு, என்னிடம் பக்தி செய்வதை கூட விட்டு விட்டு, ஏதேதோ தெய்வங்களை வழிபடுகிறார்கள் என்று குறைபட்டு கொண்டீர்கள்.

அவர்கள் மேல் தோஷம் இல்லை. அது என் தோஷம் தான், நாரதா!

காரணம், நான் பொதுவாக காம்யார்த்த (பலனை எதிர்பார்த்து) பக்தி செய்பவர்களிடம் முகம் கொடுக்காமலேயே இருக்கிறேன்.

அதனாலேயே அவர்களும் வேறு தெய்வங்களிடம் சென்று விடுகின்றனர்.

காம்யார்த்த பக்தி, பிரார்த்தனைக்கு முகம் சுளிக்காமல், எப்பொழுதும் பிரசன்னமாக இருந்து கொண்டே இருந்தால், என்னிடமே இவர்கள் அனைவரும் திரும்பி வருவார்கள்.

ஆதலால், நீங்களே ஒரு ஏற்ற இடத்தை பூலோகத்தில் கண்டுபிடித்து சொல்வீர்கள் என்றால், அங்கேயே நான் அவதாரம் செய்ய நினைத்துள்ளேன்.

எனக்கு வைகுண்டம், க்ஷீராப்தி கூட முக்கியமில்லை.
நான் நிரந்தரமாக பூலோகத்திற்கு வர சங்கல்பித்து உள்ளேன்.

நான் பூலோகத்திற்கு வந்த பிறகு, இந்த சம்சார கடலில் தத்தளிக்கும் ஜனங்கள், என்னை பார்த்ததும், 'என்ன செய்கிறார்கள்?' என்று பார்க்க போகிறேன்.

'கோவிந்தா... கோவிந்தா...'
என்று அனைவரின் வாயிலும் என் நாமத்தை வரவழைத்து, காம்யார்த்த பலனையும் கொடுத்து, மோக்ஷமும் கிடைக்க அனுக்கிரகம் செய்கிறேன்."

என்றார் வைகுண்டபதி.

நாரதர், "என்னை போய் பூலோகத்தில் தகுந்த இடம் எது என்று சொல்ல சொல்கிறீர்களே?" என்றார்.

மகாவிஷ்ணு, சிரித்து கொண்டே, "நீர் மூன்று உலகங்களிலும் சுற்றுபவர் ஆயிற்றே. உமக்கு தெரியாத இடங்களே கிடையாது.
பூலோகத்துக்கு வந்து விட போகிறேன். உம்மை கேட்காமல் யாரிடம் கேட்பது?
" என்றார்.

நாரதர், "பாற்கடலில் இருக்கும் இந்த திவ்ய ரூபத்துடன் இப்படியே பூலோகம் வர சங்கல்பித்து உள்ளீர்களா?" என்று ஆச்சரியம் பொங்க கேட்க,

மகாவிஷ்ணு, "நான் இங்கு பாற்கடலில் இருப்பதை போலவே பூலோகத்திற்கு வர போவதில்லை.
பூலோகத்திற்கு ஏற்ற, அர்ச்சா திருமேனியுடன் அவதாரம் செய்ய சங்கல்பித்து உள்ளேன்.

க்ஷீராப்தியில் என் வ்யூஹ அவதாரத்தை, ஞானியான ரிஷிகளும், ப்ரம்மா, ருத்ரன், தேவர்கள், கிண்ணரர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
அஞானிகள், பூலோகவாசிகள் இங்கு வந்து பார்க்க முடியாது.

'அஞானிகள் கூட என்னை பார்க்க வேண்டும்' என்பதால், அர்ச்சா திருமேனியுடன் பூலோகத்தில் அவதரிக்க உள்ளேன்" என்றார்.

இதை கேட்ட நாரதர் மேனி சிலிர்த்து எம்பெருமானின் கருணையை நினைத்து கண்ணீர் விட்டார்.

நாரதர் பேசலானார்,
"உங்கள் கிருபைக்கு எல்லையில்லை.
நீங்கள் மத்ஸ்ய, கூர்ம அவதாரங்கள் செய்த போதே, ஏன் இப்படி பெருமாள் தன்னை வருத்தி கொண்டு தானே அவதாரம் செய்கிறார்?
என்று கூட வருந்துவேன்.

இப்படி இருக்க, 'ஒரு விக்ரஹம் போல அர்ச்ச அவதாரம்  செய்து வருவேன்' என்று சொல்கிறீர்களே?

வைகுண்டத்தையும் விட்டு விட்டு, இந்த ஆனந்த ஸ்வரூபனான மஹாவிஷ்ணு ரூபத்தையும் விட்டு விட்டு, ஒரு அசேதனமான (அசையாத) கல் போன்று அவதாரம் செய்வேன் என்கிறீர்களே?"
என்று வருத்தப்பட்டார்.

உடனே பகவான்,
"நாரதா ! நான் கொஞ்சம் சைதன்யம் இருக்கும்படியாக வந்தால் கூட, எவ்வளவு தான் பொறுமையாக இருந்தாலும், சாஸ்திரத்தை மீறி என் முன்னே நடக்கும் அபசாரங்களை, மன்னிக்க முடியாமல் போய் விடும்.

நான் கொஞ்சம் சைதன்யம் தெரியும் படியாக வந்தாலும், உணர்ச்சி என்பது ஏற்படுமல்லவா?

எந்த அபசாரங்கள் செய்தாலும், 'அபசாரங்களுக்கு தண்டனை என்னும் உணர்ச்சி கூட என்னில் வெளிப்பட கூடாது' என்பதால்,  என்னை கல்லாக்கி கொண்டு பூலோகத்தில் அவதாரம் செய்வேன்.

'கருணை ஒன்றே' செய்ய வேண்டும்.
அபசாரங்கள் செய்தாலும், அதை பொருட்படுத்தாமல் இருக்க, அர்ச்சா திருமேனியே சிறந்தது.

அர்ச்சா திருமேனியாக இல்லாமல், நான் விபவ அவதாரமாகவே செய்தால், எல்லையில்லாமல் செய்யும் அபசாரங்களை பொறுத்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

விபவ அவதாரம் செய்து வந்தால், அபசாரத்தை கண்டு கொஞ்சமாவது கோபம் வந்து விடும்.

ஆதலால், நான் ஒரு சிலா மூர்த்தியாக என்னை ஆக்கிக்கொண்டு கலியில் அவதாரம் செய்வேன்.
அதற்காக சிலையாகவே இருந்து விடாமல், சிலை ரூபத்திலிருந்து கொண்டே அனைவரையும் பார்த்து, அணுகிரஹம் செய்து கொண்டே இருக்க போகிறேன்.

நான் பார்க்க கல் போல அவதாரம் செய்தாலும், அளவு கடந்த கருணையை வழங்குவேன்.

கல் போல நான் அவதாரம் செய்வதற்கு காரணமே, ஜனங்களின் அபசாரங்களை சகித்து கொள்ளத் தான்.

என் மீதோ, என் எதிரோ எத்தனை அபசாரங்கள் நடந்தாலும், அதை பொருட்படுத்தாமல் கருணை செய்ய, துளிகூட உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதாலேயே, நான் அர்ச்ச அவதாரம் செய்ய சங்கல்பித்தேன்.

அர்ச்ச அவதாரமாக இருந்தும் அளவு கடந்த கருணையை பொழிவேன்."
என்று பகவான் சொல்ல,

"பூலோகத்தில், 'சுவர்ணமுகி' என்ற நதிக்கரை ஓரம், கிழக்கு பாரத கடலுக்கு அருகே மேற்கு பாகத்தில் உள்ள பிரதேசம் ஏற்ற இடமாக உங்கள் திருவிளையாடலுக்கு இருக்கும்."
என்று பகவான் அவதாரத்துக்கு ஏற்ற இடத்தை நாரதர் சொன்னார்.

பெருமாள் அவதரிக்க இப்படி இடத்தை சொன்னதை கேட்ட ஆதிசேஷன், "தனக்கு ஏதாவது இதில் கைங்கர்யம் உண்டா?"
என்று எதிர்பார்க்க,
பகவான் தான் படுத்திருக்கும் ஆதிசேஷனை பார்த்து,
"எல்லா விதத்திலும் எனக்கு ஆட்பட்டவன் நீ.
நீ முதலாக பூலோகத்துக்கு சென்று, அங்கு பர்வதமாக (மலையாக) இரு. நான் அங்கு வந்து திருவிளையாடல் செய்கிறேன்.
"
என்று ஆதிசேஷனை பூலோகத்திற்கு அனுப்பினார் பகவான்.

ஒரு பாம்பு நெளிந்து நெளிந்து, பார்ப்பதற்கு மேடு பள்ளம் போல தோன்றுவது போல, ஒரு மலையாக தோன்றிய ஆதிசேஷன், நெளிந்து நெளிந்து ஏழு மலைகளாக ஆகி, சேஷாத்ரி (ஆதிசேஷன் மலை) என்ற பெயருடன், எம்பெருமான் அவதார காலத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

சர்வ விதமான கைங்கர்யத்தையும் செய்பவர் என்பதாலேயே இவருக்கு 'ஆதிசேஷன்' என்று பெயர்.

'தான் ஸ்வாமி இல்லை, தான் எம்பெருமானின் சொத்து'
என்று இருப்பதால் இவருக்கு "சேஷன்" என்று பெயர்.

இவரே எம்பெருமானின் முதன்மையான சொத்தாக இருப்பதால், இவரை "ஆதிசேஷன்" என்கிறோம்.

ஆதிசேஷன் எம்பெருமானுக்கு எப்படி எல்லாம் சேவை செய்கிறார்? என்று பார்க்கும் போது, ஆதிசேஷனின் பெருமை நமக்கு புரியும்.

"ஸ்ரீவைகுண்டத்தில்" எம்பெருமான் பரவாசுதேவனாக இருந்தால், இவர் அமர்வதற்கு தானே 'சிம்மாசனம்' ஆகி விடுகிறார்.

"பாற்கடலில்" எம்பெருமான் வ்யூஹ அவதாரம் செய்து மகாவிஷ்ணுவாக இருந்தால், இவர் படுத்தால், தானே 'பஞ்சுபடுக்கை' ஆகி விடுகிறார்.

எம்பெருமான் நடந்து சென்றால், தானே அவருக்கு 'குடையாகி' விடுகிறார்.
(கிருஷ்ண அவதாரம் செய்த போது யமுனையை கடக்கும் போது குடையானார்)

எம்பெருமான் நின்றால், தானே அவர் திருவடிக்கு 'பாதுகை' ஆகி விடுகிறார்.
(ஸ்ரீனிவாசனாக பெருமாள் நிற்க  சேஷாத்திரி (திருமலை) ஆனார்)

இப்படி

  • சர்வ தேச (எந்த இடத்திலும்),
  • சர்வ கால (எந்த சமயத்திலும்),
  • சர்வ அவஸ்தைகளிலும் (எந்த நிலையிலும்)

எம்பெருமானுக்கு சர்வ கைங்கர்யமும் (எந்த சேவையும்) செய்யக்கூடியவர் ஆதிசேஷன்.

எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள், ஆதிசேஷனை போல ஆசையோடு செய்ய வேண்டும்.

ஏழுமலைகளாக 'முதல் யுக'த்திலேயே தோன்றிவிட்ட ஆதிசேஷன், "சேஷாத்ரி" என்ற பெயருடன் எம்பெருமான் அவதாரத்திற்கு கலியுகம் வரை காத்து கொண்டிருந்தார்.

ஆதிசேஷன் "சேஷாத்ரி" என்ற 7 மலையாக ஆகி இருந்தார். 

காலப்போக்கில் ஒவ்வொரு மலைக்கும் தனி பெயர் ஏற்பட்டது. 

1. சேஷாத்ரி (உண்மையான பெயர்)

2. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்ற மலை)

3. சிம்மாத்ரி (நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த இடம்)

4. அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த மலை)

5. கருடாத்ரி (அம்ருத கலசம் கருடன் கொண்டு வந்த போது, அமர்ந்த மலை)

6. வெங்கடாத்ரி (பாவங்களை பொசுக்கும் மலை, வெங்கடேச பெருமாள் இருக்கும் மலை)

7. நாராயணாத்ரி (நாராயண பட்டருக்கு வைகானச முறைப்படி பூஜை செய் என்று உபதேசத்த மலை)

"அத்ரி" என்றால் மலை என்று அர்த்தம்.

ஆதிசேஷன் எத்தனை நீளமாக படுத்தார்? திருமலையின் நீளம் என்ன?

 

ஆதிசேஷனின் தலை (சிரசு) ஆரம்பிக்கும் இடத்தில், 'காளஹஸ்தி' என்ற க்ஷேத்ரம் உள்ளது.

ஆதிசேஷனின் இதய பகுதியில் அமைந்த க்ஷேத்ரமே "அஹோபிலம்".

ஸ்ரீசைலம் என்ற இடத்தில் ஆதிசேஷனின் வால் பகுதி முடிகிறது

அந்த பாம்பின் வளைந்து இருக்கும் தலையின் உச்சத்தில் ஆதிசேஷன் தரித்து இருந்த நாக ரத்தினத்தின் உச்சத்தில், வெங்கடேசபெருமாள் தன்னை வெளிக்காட்டி, அந்த சிரசையே "வெங்கடாத்ரி" என்ற ஒரு மலையாக ஏற்று வீற்றிருக்கிறார். 

காளஹஸ்தி ஆரம்பித்து, ஸ்ரீசைலம் வரை ஆதிசேஷன் படுத்தார் என்றால், ஏழு மலைகளின் நீளம் நமக்கு புரியும்.

பூலோகத்திற்கு கொண்டு வந்து விட்டார் ஆதிசேஷன்.

இப்படி அதி ஆச்சர்யமாக எம்பெருமான் வருவதற்காக படுத்து விட்டார் ஆதிசேஷன்.

இதை பார்த்த கங்கை, இந்த திருமலைக்கு ஒரு வெள்ளை கொடி பறக்க விடுவது போல, ஆகாச கங்கையாக பொழிய ஆரம்பித்தாள்.

கங்கையே வந்தவுடன், ஏழு மலையையும் சூழ்ந்து கொண்டு அனைத்து புனிதமான தீர்த்தங்களும் ஆங்காங்கே உருவானது.

மலையே செழிப்பு நிறைந்து, பூக்களும், மரங்களும் நிறைந்த பசுமையான சோலை ஆனது. திருமலையே, எம்பெருமானை வரவேற்க காத்திருந்தது.

மலையாக பார்க்காமல், ஆதிசேஷனாக பார்க்கும் போது தான், பக்தன் எப்படி எல்லாம் கைங்கர்யம் செய்கிறான்? என்பது புரியும்.

காற்றில் மரங்கள் யாவும் அசைவதை பார்த்தால், ஆதிசேஷனின் ஆயிரம் தலைகள் அசைவது போல தோன்றுமாம் பக்தனுக்கு.

ஏழு மலையையும்,  வெண்மையான மேகங்கள் சூழ்ந்து வருவதை பார்த்தால், க்ஷீராப்தியில் இருந்த பாற்கடல், 'ஆதிசேஷனும் கிளம்பி விட்டார், எம்பெருமானும் கிளம்பி விட்டார், இனி வைகுண்டத்தில் எனக்கு என்ன வேலை?'
என்று திருமலைக்கு வந்து விட்டதோ! என்று தோன்றுமாம் பக்தனுக்கு.

'வைகுண்டத்தில் இருந்து ஆதிஷேஷனே திருமலையாக வந்து விட்டார்' என்று உணர்ந்த ரிஷிகள், தங்கள் ஆஸ்ரமங்களை கலைத்து விட்டு, திருமலை வந்து பகவத் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

மயில்களும், குயில்களும் ஆனந்தமாக கானம் செய்து விளையாடியது.




காள என்றால் சிலந்தி,
ஹஸ்தி என்றால் யானை.
இந்த ஸ்தலத்தில் யானையும், சிலந்தியும் சிவ பூஜை செய்த காரணத்தால், இந்த இடத்திற்கு பிற்காலத்தில் "காளஹஸ்தி" என்ற பெயர் உண்டானது.
காளஹஸ்தி 'சிவ' ஸ்தலமாகவும் உள்ளது.

ஸ்ரீசைலம் என்பதும் மற்றொரு சிவக்ஷேத்ரம். இந்த சிவக்ஷேத்ரத்தில், மருத மரமாக (அர்ஜுன மரம்) சிவபெருமானே இருக்கிறார். 
பார்வதி தேவி இங்கு மல்லிகை கொடியாக ஆகி, அந்த மருத மரத்தை சுற்றிக்கொண்டு இருக்கிறாள்.
இதனால் இங்கு சிவபெருமானுக்கு "மல்லிகார்ஜூன்" என்றும் பெயர்.

இயற்கையாக தோன்றிய மலை அல்ல திருமலை.  ஆதிசேஷனே மலையாக இருக்கிறார். 

இங்கு வசிக்கும் மிருகமும், மனிதர்களும், பறவைகளும் என்ன பிரார்த்தனை செய்து இப்படி திருமலையில் வாசம் செய்கிறார்களோ? நமக்கு தெரியாது.

மகான்கள், ஆழ்வார்கள் எல்லோரும் இந்த கண்ணோட்டத்தில் தானே திருமலையை பார்த்தனர். பார்க்கின்றனர்.

ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் 'அனந்தாழ்வார்' திருமலையில் பூ கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.
ஒரு சமயம், அனந்தாழ்வார் தன் சிஷ்யர்களுடன் 'மேல் நாட்டு திவ்ய தேசங்கள் ஆரம்பித்து, அனந்த பத்மநாபன் வரை சேவிக்கலாம்' என்று புறப்பட்டார்.

'பயணத்திற்கு, திருமலை பிரசாதமே எடுத்துக்கொள்ளலாம்!' என்று ஒரு மூட்டையில் பிரசாதம் எடுத்துக்கொண்டு, கிளம்பினார்கள்.

கிளம்பி வெகுதூரம் சென்ற பின், 'சரி சாப்பிடலாம்' என்று நினைத்து, பிரசாத மூட்டையை அவிழ்க்க, அதில் எறும்புகள் இருப்பதை பார்த்தார், அனந்தாழ்வார்.

அவர் சிஷ்யர்கள்,
"எறும்பை தட்டி விட்டு சாப்பிடலாமா? இல்லை அப்படியே பிரசாதத்தை வைத்து விட்டு பயணத்தை தொடரலாமா?"
என்று கேட்க,
அனந்தாழ்வார்,
"இந்த எறும்புகள் எல்லாம் திருமலையில் இருந்தே வந்திருக்கிறது.
'எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ?' (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் செய்த பிரார்த்தனை, இந்த எறும்புக்கு கிடைத்துள்ளதே!

இது நாள் வரை, திவ்யதேச வாசம் செய்த எறும்புகளை, இப்படி ஏதோ ஒரு கிராமத்தில் விட்டு விட கூடாது.
இவையெல்லாம் எந்த ஜீவனோ நமக்கு தெரியாது.

திருமலை வாசம் பெற்ற இந்த ஜீவனை, நாம் மீண்டும் திருமலை சென்று, அங்கேயே இந்த பிரசாதத்தை வைத்து விட்டு நம் பயணத்தை மீண்டும் தொடர்வோம்"
என்று சொல்லி அவர்கள் யாத்திரையை நிறுத்து விட்டு, மீண்டும் திருமலையில் ஏறி, அந்த எறும்புகளை பிரசாத மூட்டையுடன், மீண்டும் ஸ்வாமி புஸ்கரணி தீர்த்தம் அருகே,  திருமலையிலேயே விட்டு விட்டு, மீண்டும் யாத்திரையை தொடர்ந்தனர்.

நம் பூர்வ ஆச்சாரியர்கள் எப்படி திருமலையை பக்தியுடன் பார்த்தனர்? அங்குள்ள ஜீவராசிகளை எப்படி மதித்து உள்ளனர்? என்று புரிகிறதே.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.

ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.
அந்த பக்தி நமக்கும் வரும்.

ஆதிசேஷனே ஏழு மலையாக இருக்கும் போது,
பரவாசுதேவனே திருமலையப்பனாக நின்று கொண்டு இருக்கும் போது,
இங்கு வசிக்கும் விலங்குகளும், பறவைகளும் மட்டும் சாதாரணம் என்று நினைக்க தோன்றுமா? ஒரு பக்தனுக்கு.

ஆழ்வார்கள் போன்று நமக்கும் பக்தி வர ஆசைப்பட வேண்டும்.

"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ?" (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் பாடும் பொழுது,
இங்கு இருக்கும் செடி, கொடிகளுக்கு கூட மங்களாசாசனம் செய்து விட்டாரே! என்று தோன்றுகிறது.

இங்கு இருக்கும் ஈ, எறும்பு கூட, எந்த மகானோ! என்றல்லவா நமக்கு தோன்ற வேண்டும்.

ஆயிரம் நாக்கு உடைய ஆதிஷேஷனே திருமலையின் மகத்துவத்தை சொல்ல முடியாத போது, 18 புராணங்களும் திருமலையின் மகத்துவத்தை சொல்வது ஆச்சர்யமில்லையே.

ஆதிஷேஷனே, கலியில் ஸ்ரீ ராமானுஜராக 1017CEல் அவதாரம் செய்தார்.

ஒரு சமயம், யதிராஜனாக (சந்நியாசி) ஆன பின்பு, திருமலையில் ஒரு மாதம் தங்கி, அவர் பூர்வ க்ருஹத்தில் மாமாவான "திருமலை நம்பி"யிடம் ராமாயண காலட்சேபம் கேட்கலாம் என்ற ஆசையோடு திருமலை வந்தார்.

"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ"
என்ற ஆழ்வார் பாசுரத்தை எண்ணி,
'திருமலையில் எப்படி கால் வைத்து போவேன்?'
என்று தயங்கி, தன் இரு கால்களையும் மடக்கி, வாழைத்தண்டால் இருக்க கட்டி கொண்டு, தன் முழங்காலால் நடக்க ஆரம்பித்தார்.

'ஸ்ரீ ராமானுஜர் முழங்கால் தேய திருமலை ஏறிக்கொண்டு இருக்கிறார்' என்று கேள்விப்பட்ட திருமலை நம்பி, கீழே இறங்கி ஓடி வந்தார்.

 

 அதற்குள் ராமானுஜர் முதல் கோபுரம் வரை வந்து விட்டார்.

பூர்வ ஆஸ்ரமித்தில் தன் மருமகன் தான் 'ராமானுஜர்' என்றாலும், யதிராஜராக ஆகி விட்ட ராமானுஜரை சேவித்துக்கொண்டே,
"ஏன் இப்படி வர வேண்டும்?" என்று கேட்க,
"தங்களை சேவிக்கலாம் என்று தான் வந்து கொண்டிருந்தேன்"
என்றார் ராமானுஜர்.

"யதிராஜர் இப்படி முட்டுக்கால் தேய வந்தால் இது சாத்தியமா?
சாதாரணமாக காலால் நடந்து வந்து பெருமாளை திருமலை ஏறி வந்து தரிசிப்பதே ஜனங்களுக்கு கடினமாக இருக்கும் போது, தாங்கள் ஆதிசேஷனாக இருக்கும் திருமலை மேல், கால் படக்கூடாது என்று இப்படி கால்களை கட்டிக்கொண்டு, ஏறி வந்தால், யதிராஜரே கால் வைக்க தயங்கினார் என்று தெரிந்தால், ஒருத்தர் கூட திருமலை வந்து எம்பெருமானை தரிசிக்க மாட்டார்களே!!

நீங்கள் திருமலையில் கால் வைத்து நடப்பது தோஷமில்லை.
ஒரு தாயார் தன் மடி மீது குழந்தை வைத்து கொள்ளும் போது, சில சமயம் தன் சின்ன காலால், தாயை உதைத்தாலும், அது அவளுக்கு ஏற்பு உடையதாக இருக்கும்.
அதை அவள் அபசாரம் என்று நினைப்பதில்லை.
அதுபோல,
திருமலையில் கால் வைத்து ஏறினாலும், அது பெருமானுக்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர அபசாரமாக இருக்காது.
கால் வைத்து வாருங்கள் என்று சொல்ல தான் ஓடிவந்தேன்"

என்றார் திருமலை நம்பி.

"இதை சொல்வதற்கு யாராவது சிறுவனை அனுப்பி இருக்க கூடாதோ.
நான் ஏற்று இருப்பேனே. இதற்கு தேவரீர் தானே புறப்பட்டு வர வேண்டுமா?"

என்று ராமானுஜர் கேட்க,

"திருமலை முழுவதும் தேடி பார்த்து விட்டேன். அடியேனை தவிர சிறுவன் இங்கு கிடைக்கவில்லை.
யாரை பார்த்தாலும் என்னை விட பெரியவராகவே தெரிகிறது.
இவர் என்ன பாக்கியம் செய்து திருமலையில் வாசம் செய்கிறாரோ என்று மனதில் தோன்றுகிறது.
இங்கு பிறந்த ஈ, எறும்பு கூட என்ன பாக்கியம் செய்ததோ என்று தான் தோன்றுகிறது.
யாரை பார்த்தாலும் பெரியவாளாக தோன்றுகிறது."

என்றார்.

ராமானுஜர் பிறகு, திருமலை ஏறி, பெருமானை தரிசித்தார்.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா, ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.

ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.

இப்படி ஆச்சர்யமாக ஆதிஷேஷனே ஏழு மலைகளாக ஆகி, எம்பெருமான் வரவுக்காக காத்திருந்தார்.

கலியுகம் ஆரம்பித்த சமயத்தில், பூலோகத்தில் எல்லாம் தயார் நிலையில் இருக்க, க்ஷீராப்தியில் இருக்கும் பரமபத நாதன், திருமலைக்கு புறப்பட தயாரானார்.



Thursday 17 December 2020

பெண்ணை மணம் செய்து கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். தெரிந்து கொள்வோமே..

 பெண்ணை மணம் செய்து கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். தெரிந்து கொள்வோமே..

யானஸ்ய பாரா அபினிஹிதஸ்ய 

அதுரஸ்ய ஸ்திரியா இதி சர்வை: தாதவ்ய: |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

வாகனத்திற்கு, சுமையை தூக்கி வருபவர்களுக்கு, நோயாளிக்கு, பெண்களுக்கு, மற்றும் முதியவர்கள், குழந்தைகளுக்கு, வழி விட்டு நடக்க வேண்டும். அவர்களை நடக்கும் பாதையில் தடையாக இருக்க கூடாது.


அஷிஸ்ட பதித மத்த உன்மத்தானாம் ஆத்மா 

ஸ்வஸ்தி அயன அர்த்தேன சர்வை: இவ தாதவ்ய: |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் நலனை கருத்தில் கொண்டு, முட்டாள்களுக்கும், வர்ணத்துக்கு அப்பாற்பட்டு இருப்பவனுக்கும், குடிகாரனுக்கும், பைத்தியத்துக்கும் வழி விட வேண்டும். 





சகோத்ராய துஹிதரம் ந ப்ரயச்சேத் |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் பெண்ணை, சகோதர உறவு கொண்ட ஒரே ரிஷி கோத்திர பையனுக்கு மணம் செய்து கொடுக்க கூடாது.


ப்ராஹ்மே விவாஹே பந்து ஷீல ஸ்ருத அரோஞானி புத்வா ப்ரஜா சஹத்வ கர்மபய பிரதிபாதயேத் சக்தி விஷயேன அலம்க்ருதே |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் மகள், அவள் கணவனோடு புகுந்த வீட்டில் சேர்ந்து தன் கடமையை ஒழுங்காக செய்ய, திருமணம் ஆகும் முன்பேயே அந்த குடும்பத்தை பற்றியும், பழக்க வழக்கம் பற்றியும், விஷய ஞானத்தை பற்றியும், ஆரோக்கியத்தை பற்றியும் அறிந்து கொண்டு, பிறகு தன்னால் முடிந்த அளவுக்கு தன் பெண்ணுக்கு நகை போட்டு, மணம் செய்து கொடுக்க வேண்டும்.


ந சம்சயே ப்ரத்யக்சவத் ப்ரூயாத் |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

நன்றாக புரிந்து கொள்ளாத விஷயத்தை பற்றி, தெளிவாக புரிந்தது போல பேச கூடாது.



Tuesday 15 December 2020

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது? மனிதனின் நோக்கம் என்ன? ஆபஸ்த்மப ரிஷி சொல்கிறார்.. தெரிந்து கொள்வோமே..

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது? மனிதனின் நோக்கம் என்ன? ஆபஸ்த்மப ரிஷி சொல்கிறார்.. தெரிந்து கொள்வோமே..

பானி சம்க்சுப்தேன உதகேன ஏக பானி ஆவர்ஜிதேன ச ந ஆசாமேத் |

ஆபஸ்தம்ப சூத்திரம் 

கலக்கப்பட்ட வெறும் தண்ணீரை குடிக்க கூடாது. இரு கைகளால் எடுத்து தராமல், ஒரு கையால் தரும் தண்ணீரை குடிக்க கூடாது.


ந அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் | 

யதி  அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் | 

த்விசந்தம் ப்ராத்ரவ்யம் ஜனயேத் |

- ஆபஸ்தம்ப சூத்திரம்

யாரை பார்த்தும் "இவன் என் எதிரி" என்று சொல்ல கூடாது. அப்படி சொல்ல ஆரம்பிக்கும் போது, அவனே உண்மையாகவே எதிரி ஆகி விடுவான்.




திஸ்டான் ஆசாமேத் ப்ரஹவோ வா |

ஆஸீனஸ் த்ரிர் ஆசாமேத் ஹ்ருதய அங்கம அபிர் அத்பி: |   

ஆபஸ்தம்ப சூத்திரம் 

நின்று கொண்டோ அல்லது முன்னோக்கி வளைந்து கொண்டோ, தண்ணீர் குடிக்க கூடாது. 

அமர்ந்து குடிக்க வேண்டும், மூன்று முறை தண்ணீர் நெஞ்சில் செல்லுமாறு தலைதூக்கி குடிக்க வேண்டும்.


குரு-தல்பகாமி ச வ்ருசனம் சிஷ்னம் பரிவாஸ்ய அஞ்சலாவ் ஆதாய தக்ஷிணம் திசம் அநாவ்ருத்திம் வ்ரஜேத் |

ஜ்வாலிதாம் வா சூர்மிம் பரிஸ்வஜ்ய சமாப்னுயாத் |

சுரா ஆபோ அக்னி ஸ்பர்ச சுராம் பிபேத் |

- ஆபஸ்தம்ப சூத்திரம் 

யார் ஒருவன் தன் குருவின் மனைவியிடம் தகாது உறவு கொள்கிறானோ, அவன் செய்த பாவத்துக்கு, தன்னுடைய ஆண் உறுப்பை தானே முழுவதுமாக வெட்டி இரு கையில் எடுத்துக்கொண்டு, தெற்கு திசை நோக்கி, மரணம் வரும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும்..

அல்லது, பெண் உருவத்தை வடித்த இரும்பு சிலையை பழுக்க காய்ச்சி அதை கட்டி பிடித்து கொண்டே உயிர் விட வேண்டும்.

அல்லது, மயக்கம் தரும் மதுவை சுட சுட காய்ச்சி, அளவுக்கு மீறி கொதிக்க கொதிக்க வாயில் விட்டு குடித்து, உயிர் விட வேண்டும்.


புருஷன் ச உபயோர் தேவதானாம் ராஜனஸ் ச |

- ஆபஸ்தம்ப சூத்திரம் 

தெய்வத்தையோ, அரசனையோ கீழ்த்தரமாக பேச கூடாது.


அனஸூயுர் துஷ்ப்ரளம்ப ஸ்யாத் குஹக சத நாஸ்திக பாலவாதேசு |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

நயவஞ்சகர்கள், முரட்டுத்தனமானவர்கள், நாத்தீகர்கள் மற்றும் முட்டாள்களின் பேச்சுக்களால் ஒருவர் எரிச்சல் அடைய கூடாது. ஏமாறவும் கூடாது..




சர்வஜனபதேஸ்வ் ஏகாந்த சமாஹிதம் ஆர்யானாம் வ்ருத்தானாம் சம்யக் விநீதானாம் வ்ருத்தானாம் ஆத்மாவதாம் அலொலுபானாம் அதாம்பிகாணாம் வ்ருத்த ஸாத்ருஷ்யம் பாஜேத |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

நம்முடைய செயல்களை, நம் நடத்தையின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

பண்பு உள்ளவர்கள் நன்னடத்தை கொண்டவர்கள். 

அவர்களை பார்த்து, நம்முடைய செயல்களை கட்டுப்படுத்தி, நடத்தையை சரி செய்து கொள்ள வேண்டும்.

யார் பண்பு உள்ளவன் (ஆரியன்)?

நன்கு படித்த, முதிர்ச்சி உடைய, சுய கட்டுப்பாடு கொண்ட, பேராசையிலிருந்து விடுபட்ட, மற்றவர்களுக்காக பாசாங்கு செய்யாதவர்களே 'ஆரியன்' என்று அழைக்கப்படுகிறார்கள்.

அத்யாத்மிகான் யோகான் அனுதிஷ்தேன் ந்யாய சம்ஹிதான் அனைஸ்சாரிகான் |

ஆத்ம லாபான் ந பரம் வித்யதே |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

ஒவ்வொரு மனிதனின் நோக்கமும் 'ஆத்மா'வை (தன்னை) அறிந்து கொள்வதே.

ஆத்மாவை (உன்னை), நீ அறிந்து கொள்வதை விட பெரிய கல்வி கிடையாது.

அத பூத தாஹீயான் தோஷான் உதாஹரிஸ்யாம: |

க்ரோதோ ஹர்ஷோ ரோஷா லோபோ மோஹோ தம்போ த்ரோஹோ ம்ருசோத்யம் அத்யாசா, பரீவாத அவசூயா காம மன்யு அநாத்ம்யம் அயோகஸ் தேஷாம் யோக மூலோ நிர்காத: |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது?

கோபம், மகிழ்ச்சி, ரோஷம், பேராசை, ஒட்டுதல், தற்பெருமை, துரோகம், பாசாங்கு, பொய், பெருந்தீனி, பொறாமை, சுயநல ஆசை, ரகசியமான வெறுப்பு, புலன்களை அடக்கி வைப்பதில் அலட்சியம், மனதை அடக்குவதில் அலட்சியம் ஆகியவை, ஆத்மாவை (தன்னையே) அறியவிடாமல் தடுக்கிறது. 

இந்த ஆத்மா ஆனந்த ஸ்வரூபமானது. 

தான் ஆனந்தமயமானவன் என்பதை உணர விடாமல் இவை தடுக்கிறது.

இந்த தடையை போக்க வழி சொல்வதே 'யோகம்'.

Monday 14 December 2020

மிச்சமாகிய எச்சில் உணவை என்ன செய்ய வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

மிச்சமாகிய எச்சில் உணவை என்ன செய்ய வேண்டும்?  ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

அசக்தொள பூமௌ நிகனேத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

மிச்சமாகிய எச்சில் உணவை மண்ணில் புதைக்க வேண்டும்.


அப்சு வா பிரவேசயேத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

அல்லது, மிச்சமாகிய எச்சில் உணவை நீரில் விட்டு விடலாம்.


ஆர்யாய வா பர்யவதத்யாத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

பண்பு உள்ள (ஆர்யா) வேதம் இன்னும் கற்று கொள்ளாத (8 வயது குறைந்த) குழந்தைக்கு உச்சிஷ்டமாக கொடுக்கலாம். அந்த குழந்தை, அந்த இலையில் தனக்கு இஷ்டப்பட்ட பழமோ, இனிப்போ எது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம்.


அந்தர்தினே வா சூத்ராய |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

அல்லது, 'தன் வீட்டுக்கு வேலை செய்யும் வேலையாட்களுக்கு' (employee) கொடுக்கலாம்.

நாரதர் பிரம்மாவுக்கு புத்திரனாக தோன்றிய காரணம், அவர் பூர்வ ஜென்மத்தில் சாப்பிட்ட இந்த உச்சிஷ்டம் தான். 

குருவுக்கு முன் அவரை குருவாக ஏற்ற அனைவருமே வேலையாட்கள் தான். குரு சாப்பிட்ட உச்சிஷ்டம் பவித்ரமானது என்று சொல்லப்படுகிறது. அவரது ஞானம் நமக்கு சேரும். அவர் வைகுண்டம் சென்றால், நமக்கும் வைகுண்டம் தானே கிடைக்கும்..

கணவனுக்கு மனைவி வேலை செய்கிறாள். ஆதலால், அவளும் கணவன் இலையில் சாப்பிடுகிறாள். அவன் புண்ணியத்தை தானும் எடுத்து கொள்கிறாள்.


இது எதுவுமே முடியாது என்ற பட்சத்தில், மிச்சம் வைக்காமல் சாப்பிடுவது நல்லது.. 

மிச்சப்பட்ட உணவை ரிஷி சொன்னது போல செய்து, மாடும் இல்லாத பட்சத்தில், இலையை நீரில் கழுவி விட்டு, இலையை குப்பை தொட்டியில் போட்டு விடலாம்..

Wednesday 11 November 2020

உத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்த, பீஷமரின் ஹ்ருதயம் என்ன? பீஷ்மர் என்ன ஆசைப்பட்டார்?

உத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்தார், பீஷ்மர்.

மற்றவர்களுக்கு இப்படி ஒரு காரணத்தை காட்டினாலும், மனதில் வேறு ஒரு ஆசையுடன் காத்து இருந்தார்.




கோடியில் ஒரு சில மகாத்மாக்களுக்கு தான், 'பிராணன் போகும் சமயத்தில், பகவானின் நினைவு' வரும்.

பிராணன் போகும் சமயத்தில், 'பகவத் தரிசனம் கிடைப்பது' என்பது அதை விட மஹா பாக்கியம்.

ப்ரம்மச்சர்யத்துடன் வாழ்ந்த பீஷ்மருக்கு, போர் சமயத்திலேயே இந்த பாக்கியம் கிடைத்தும், கை நழுவி போனது


'பீஷ்மர் பெண்ணுடன் போர் புரியவதில்லை' என்று கொள்கை கொண்டவர். 

அதே சமயம், 

ஸ்ரீ கிருஷ்ணர், 'பாரத போரில் ஆயுதம் எடுக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து இருந்தார்.

9 நாட்கள் பாரத போரில், இரு பக்கமும் பேரிழப்பு ஏற்பட்டது. இருந்தாலும், "பாண்டவர்களில் ஒருவர் கூட கொல்லப்படாமல் இருப்பதற்கு காரணம் பீஷ்மரே" என்று குறை கூறினான், துரியோதனன்.


பீஷ்மர் துரியோதனனிடம் 'நாளைய போரில் பாண்டவர்களை கொல்வேன், என் போர் தடைப்படாமல் இருக்குமானால்!" என்று சபதம் செய்தார்.


அதே சமயம், 'பாண்டவர்கள் ஐவரை காப்பேன்' என்று வாக்கு கொடுத்து இருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.


ஸ்ரீகிருஷ்ணர் 'பாண்டவர்களை காப்பாற்ற "சிகண்டியை" முன் நிறுத்தி பீஷ்மரின் போரை பங்கம் செய்வேன்' என்றார்.


இப்படி சாமர்த்தியம் செய்யும் ஸ்ரீ கிருஷ்ணர், 'எப்படி இருந்தாலும் 10வது நாள் போரில் தன்னை வீழ்த்தி விடுவார்' என்று புரிந்து கொண்டார் பீஷ்மர்.


ஆனால், 'சிகண்டி போன்றவர்கள் கையால் தான் வீழ்த்தப்பட கூடாது' என்று நினைத்தார். 

'நாளை வீழ போவது நிச்சயம் என்கிற போது, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் கையால் சாக வேண்டும். அவர் நினைவோடு, அவர் தரிசனத்தோடு உயிர் விட்டு விட வேண்டும்' என்று நினைத்து கொண்டார்.


உடனே பீஷ்மர், "கிருஷ்ணனை நாளைய போரில் ஆயுதம் எடுக்க வைப்பேன்" என்று சபதம் செய்தார்.


10வது நாள் போரில், பீஷ்மர் கிருஷ்ணனை ஆயுதம் எடுக்க வைத்து உயிரை விடுவதற்கு, படு பயங்கரமாக போர் புரிந்தார்.

10வது நாள் போரில், பாண்டவர்கள் பக்கம் பெரும் நாசம் ஏற்பட்டது..

ஆயிரக்கணக்கான போர் வீரர்கள், யானை படை, குதிரை படை நாசமானது.


பாண்டவர்கள் பக்கம் நடக்கும் பெரு நாசத்தை கண்டு, ஸ்ரீ கிருஷ்ணர் தன் ரதத்தை பீஷ்மரை நோக்கி செலுத்தினார்.

உத்வேகத்துடன் இருந்த பீஷ்மரை எதிர்க்க முடியாமல், அர்ஜுனனே திணறி போனான். 

சாரதியாக அமர்ந்து இருந்த கிருஷ்ணரை நோக்கி, சரமாரியாக அம்புகளை செலுத்தினார் பீஷ்மர்.

'அன்று பீஷ்மர் செய்த போரில், பார்த்தசாரதியின் மேல் பட்ட காயங்களை தான், திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி காட்டுகிறாரோ!' என்பது போல, அவர் திருமேனி உள்ளது.


அம்புகள் பட்டு ஸ்ரீ கிருஷ்ணர் திருமேனியில் ரத்தம் வழிய, அர்ஜுனன் 'ரதத்தை திருப்பு' என்று சொல்ல, 

'பீஷ்மரை இனியும் உயிரோடு விட்டால் பேராபத்து' என்று கடும் கோபம் கொண்டு, தன் சுருள் சுருளான முடிந்த கேசம் அவிழ்ந்தது கூட கவனிக்காமல், 'இனியும் பொறுக்க முடியாது' என்ற கடும் கோபத்துடன், சத்தியமே ஸ்வரூபமான, சத்தியத்தை மீறாத பரமாத்மா, தன் பக்தனாக இருக்கும் பீஷ்மர் செய்த சபதத்தை காக்க, தன் சத்தியத்தை மீறினார்.


தன் மேல்-அங்கவஸ்திரத்தை தான் சாரதியாக அமர்ந்து இருந்த இடத்தில் போட்டு விட்டு, நீல ஜோதியாக, கையில் சக்கரத்தை ஏந்தி, தேரிலிருந்து குதித்து பீஷ்மரை நோக்கி கடும் கோபத்துடன் ஓடி வந்தார். 

பீஷ்மரான தன் சபதத்தை காக்க, தன் சபதத்தை விட்டு கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்தார். 

"நீல ஜோதியாக தன்னை நோக்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணரின் கையால் இன்று உயிரை விடும் பாக்கியம் கிடைத்ததே!" 

என்று பேரானந்தம் அடைந்த பீஷ்மர், தன் ஆயுதங்களை கீழே வைத்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் வீழ்த்தட்டும் என்று நின்றார்.


அதற்குள், அர்ஜுனன் ஓடி வந்து ஸ்ரீ கிருஷ்ணரின் காலை பிடித்து கொண்டு, "கிருஷ்ணா! நீ இப்படி செய்ய கூடாது. ஆயுதம் எந்த மாட்டேன் என்று சபதம் செய்து இருக்கிறாய். பீஷ்ம தாத்தாவை கொல்லாதே! வா.. என்னுடன்.  தேரில் ஏறு.. நானே போர் செய்கிறேன்

என்று கட்டி பிடித்து இழுத்துக்கொண்டு தேரில் போய் அமர செய்தான்.


'தன் சத்தியத்தை காக்க, சத்ய ஸ்வரூபியான பரமாத்மா, தன் சத்தியத்தை கூட விட்டு விட துணிந்தாரே!!' என்று கண்ணீர் விட்டார் பீஷ்மர்.


அதே சமயம், "உயிர் போகும் சமயத்தில் பகவத் தரிசனம் என்ற வாய்ப்பை இழந்தோமே!" என்று ஒரு பக்கம் வருந்தினார்.

அன்றே, சிகண்டியை முன் நிறுத்தி, பீஷ்மரின் போரை பங்கம் செய்ய, அர்ஜுனன் பீஷ்மரை கீழே சாய்த்தான்.

அம்பு படுக்கையில் வீழ்ந்து கிடந்த பீஷ்மர், உயிரை விட சமயம் எதிர்பார்த்து காத்து இருந்தார்.

'ஸ்ரீ கிருஷ்ணர் கையால் வீழ்த்தப்பட்டு, கடைசி மூச்சு விடும் பாக்கியம் கிடைக்காமல் போனதே!! 

விரும்பிய போது மரணம் என்ற வரம் கொண்ட எனக்கு, மீண்டும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் கிடைக்குமா?

என்று எதிர்பார்த்து காத்து இருந்தார்.


18 நாள் போர் முடிந்து, பங்காளிகள் அனைவருக்கும் தர்மபுத்ரரரே காரியங்கள் செய்து முடித்தார்.


தர்மபுத்ரர் பெரும் சோகத்தில் மூழ்கி, "ஐயோ! இந்த உடலால் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்க, இப்படி லக்ஷகணக்கான வீரர்களை கொல்ல காரணமாகி விட்டேனே! இந்த பாவத்துக்கு மீள முடியாத நரகம் தானே எனக்கு கிடைக்கும்" என்று புலம்ப ஆரம்பித்தார்.


'ராஜ தர்மம், ஸ்திரீ தர்மம், வைஸ்ய தர்மம், ப்ராம்மண தர்மம் என்று பல தர்மங்களை பீஷம தாத்தாவிடம் கேட்டு தெரிந்து வேண்டும்' என்று தர்மபுத்ரர் கிளம்ப, அவர் கூடவே ரிஷிகள், சகோதரர்கள் கிளம்ப, அர்ஜுனன் தேரில் தானும் ஏறி அமர்ந்து கொண்டார் கிருஷ்ண பரமாத்மா.

பீஷ்மர், தர்மபுத்ரருக்கு பல வித தர்மங்களை உபதேசித்தார்.

கூடவே வந்து இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்தவுடனேயே, இந்த பக்வத் தரிசனத்தை பார்த்துக்கொண்டே உயிர் விட தயாராகி விட்டார்.




சஹஸ்ர நாமத்தால் ஸ்ரீ கிருஷ்ணரை ஸ்தோத்திரம் செய்து, 'இனியும் கிடைத்த வாய்ப்பை விட கூடாது', என்று முடிவு செய்து, கிருஷ்ண பரமாத்மாவை தரிசித்து கொண்டே உடலை விட்டு பிரிந்தார் பீஷ்மர்.


உத்தராயணத்துக்காக காத்து இருந்தார் பீஷ்மர் என்பது போல வெளி உலகுக்கு காட்டினாலும், 

பீஷ்மருக்கு "தன் பிராணன் விடும் சமயத்தில் கிருஷ்ண பரமாத்மா வேண்டும்" என்று ஆசைப்பட்டார்.

பக்தனின் அந்தரங்க ஆசையையும், ஸ்ரீ கிருஷ்ணர் நிறைவேற்றி கொடுத்தார்.