Followers

Search Here...

Tuesday 28 December 2021

தமிழா! தமிழ் இலக்கணம் பாசுரங்களில் எப்படி உள்ளது? என்று தெரிந்து கொள்வோமே நாலு கவி பெருமாள் என்று பெயர் பெற்ற திருமங்கையாழ்வாரின், பெருமையை அறிந்து கொள்வோமே! திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டாகம் என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்.

திருமங்கையாழ்வார் 30 பாடல்களை 'நெடுந்தாண்டகம்' என்ற செய்யுள் நடையில் எம்பெருமானை பாடினார். 

"திருநெடுந்தாண்டகம்" என்று பெயர்.

திருமங்கையாழ்வார் 20 பாடல்கள் 'குறுந்தாண்டகம்' என்ற நடையில் எம்பெருமானை பாடினார்.


ஒரு பாடலில்,

  1. ஒவ்வொரு அடியிலும் 8 சீர் இருந்தால்,
  2. அந்த பாடல் தெய்வத்தை பற்றியோ, ஒரு நாயகனை பற்றியோ பாடினால்,
  3. ஒவ்வொரு 8 சீரிலும், 
    • 1,2,5,6 ஆகிய நான்கு சீர்கள் காய்ச்சீர்களாகவும்
    • 3,4,7,8 ஆகிய நான்கு சீர்கள் இயற்சீர்களாகவும், குறிப்பாக இயற்சீர் நான்கினுள் (தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்) 
      • 3,7 ஆகிய சீர்கள் புளிமா, அல்லது தேமாவாக, 
      • 4,8 ஆகிய சீர்கள் தேமாவாக மட்டுமே அமைந்தால்,

அதற்கு "நெடுந்தாண்டகம்" என்று பெயர்.

திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள் எப்படி  நெடுந்தாண்டகத்தில் அமைந்து இருக்கிறது?

பாசுரம்: 

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்

அற்றாள் தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்

பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி

பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே


இந்த பாசுரத்தில், 

ஒவ்வொரு அடியிலும் 8 சீர் இருக்கிறது

பெருமாளே இங்கு நாயகன். 

பாசுரத்தின் முதல் அடி (உதாரணத்திற்கு):

  1. முற்/றா/ரா - நேர் நேர் நேர்  - தேமாங்காய் (காய் சீர்)
  2. வன/முலை/யாள் - நிரை நிரை நேர் - கருவிளங்காய் (காய் சீர்)
  3. பா/வை - நேர் நேர் - தேமா  (மா சீர்)
  4. மா/யன் - நேர் நேர் - தேமா  (மா சீர்)
  5. மொய்/யக/லத் - நேர் நிரை நேர் - கூவிளங்காய் (காய் சீர்)
  6. துள்/ளிருப்/பாள் - நேர் நிரை நேர் - கூவிளங்காய் (காய் சீர்)
  7. அஃ/தும் - நேர் நேர் - தேமா  (மா சீர்)
  8. கண்/டும்- நேர் நேர் - தேமா  (மா சீர்)

1,2,5,6 - காய் சீராக அமைந்து இருக்கிறது.

3,7, 4,8 - மா சீராக அமைந்து இருக்கிறது.

எழுத்துகள் சேர்ந்து "நேர்" அல்லது "நிரை" அசையாகும்,

அசைகள் சேர்ந்து சீராகும்,

 

"முற்றாரா" என்பது ஒரு சீர். இதில் இரண்டு தமிழ் சொற்கள் இருக்கிறது (முற்று ஆரா)

"மொய்யகலத் துள்ளிருப்பாள்" என்ற இரண்டு சீரில் 3 தமிழ் சொற்கள் இருக்கிறது (மொய் அதலத்துள் இருப்பாள்)

பெருமாளை பற்றி இந்த 'நெடுந்தாண்டகம் என்ற விருத்தத்திலேயே 30 பாடல்கள் பாடுகிறார்' நம்முடைய திருமங்கையாழ்வார்.






ஒரு பாடலில்,

  1. ஒவ்வொரு அடியிலும் 6 சீர் இருந்தால்,
  2. அந்த பாடல் தெய்வத்தை பற்றி பாடினால்,
    • ஒவ்வொரு 6 சீரிலும், பொதுவாக எல்லா சீர்களும் இயற்சீர்களாகவே வந்தால் (சிலசமயங்களில் காய்ச்சீரும் இருப்பதுண்டு), 
      • பெரும்பாலும் 1,4 ஆகிய சீர்கள் விளச்சீராகவும் (கருவிளம் or கூவிளம்), 
      • 2,3,5,6 ஆகிய சீர்கள் மாச்சீர்களாகவும் (தேமா, புளிமா) வந்தால்,

அதற்கு "குறுந்தாண்டகம்" என்று பெயர்.

திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள் எப்படி  குறுந்தாண்டகத்தில் அமைந்து இருக்கிறது?

பாசுரம்:

வானவர் தங்கள் கோனும் மலர்மிசை அயனும் நாளும்

தேமலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை

மானவேல் கலியன் சொன்ன வண்டமிழ் மாலை நாலைந்தும்

ஊனம தின்றி வல்லார் ஒளிவிசும் பாள்வ ர் தாமே


இந்த பாசுரத்தில், 

ஒவ்வொரு அடியிலும் 6 சீர் இருக்கிறது. 

பெருமாளே இங்கு நாயகன். 

பாசுரத்தில் முதல் அடி (உதாரணத்திற்கு):

  1. வா//வர் - நேர் நிரை  - கருவிளம் (விள சீர்)
  2. தங்/கள் -  நேர் நேர்  - தேமா (மா சீர்)
  3. கோ/ணும்  - நேர் நேர் - தேமா (மா சீர்)
  4. மலர்/மிசை - நிரை நிரை  - கருவிளம் (விள சீர்)
  5. அய/னும்  - நேர் நேர் - தேமா (மா சீர்)
  6. நா/ளும் - நேர் நேர் - தேமா (மா சீர்)

 

இங்கு, 

1,4 - விள சீராக அமைந்து இருக்கிறது..

2,3,5,6 - மா சீராக அமைந்து இருக்கிறது.

திருமங்கையாழ்வாரின் கவித் திறனை பார்த்து, முருகப்பெருமானே  அவருக்கு 'நாலு கவி பெருமாள்' என்று பட்டமளித்து அவருக்கு "வேல்" பரிசாக அளித்தார். (சைவர்கள், முருகப்பெருமானின் அவதாரமான ஞானசம்பந்தர் கொடுத்தார் என்று சொல்கின்றனர்)

ஆழ்வார்களில், வேல் வைத்திருக்கும் ஒரே ஆழ்வார் இவர் ஒருவரே!

திருமங்கைமன்னன் என்றும் பரகாலன் என்றும் நீலன் என்றும் கலியன் என்றும் அழைக்கப்படும் திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

பெருமாளின் இதயத்தில் பெரியபிராட்டி இருக்கிறாள் என்று தெரிந்தும், பெருமாளை பரகால நாயகி ஆசைப்படுகிறாள். பாசுரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோம். முற்றாரா வனமுலையாள்...

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

முற்று ஆராவனம் முலையாள் பாவை மாயன்

மொய் அதலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்

அற்றாள் தன் நிறைவு அழிந்தாள் ஆவிக்கின்றாள்

'அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ' என்னும்

பெற்றேன் வாய் சொல்லி இறையும் பேச கேளாள்

பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி

பொற்றாமரை கயம் நீராட போனாள்

பொருவு அற்றாள் என் மகள்

உம் பொன்னும் அஃதே?

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

"அழகிய முத்து ஹாரங்களை மார்பில் அணிந்து இருக்கும், அம்ருதம் கடையும் போது அம்ருதம் போல வெளிப்பட்ட அழகில் நிகரில்லாத 'பெரியபிராட்டி, ஆராவமுதனான எம்பெருமானின் அழகிய திருமார்பினுள் இருக்கிறாள்' என்பதை நேராக கண்ட பிறகும், தன் ஆசையை விட மறுக்கிறாளே என்னுடைய மகள் !

(முற்று ஆராவனம் முலையாள் பாவை மாயன் மொய் அதலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்)


'அச்சம் மடம் நாணம்' இது தானே பெண்ணுக்கு லக்ஷணம்! யார் என்ன சொல்வார்களோ! என்ற அச்சமும் இவளிடம் இல்லை. நாணமும் இல்லையே! தன்னுடைய வெட்கத்தை விட்டு, 'தனக்கும் எம்பெருமானிடத்தில் ஒரு இடம் கிடைக்குமா?' என்று கேட்டுக்கொண்டு பெரு மூச்சு விட்டு நிற்கிறாளே !

(அற்றாள் தன் நிறைவு அழிந்தாள் ஆவிக்கின்றாள்)




அருகில் இருக்கும் தோழியை பார்த்து, பயமே இல்லாமல், 'தோழீ! திருவரங்கம் சென்று ஒரு குதி குதித்து ஆடினால் தான் மனதுக்கு சமாதானம் ஆகும் போல இருக்கிறது. திருவரங்கம் சென்று ஆடுவோமா?‘ என்கிறாளே !

('அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ' என்னும்)

பெற்றவள் அருகிலேயே இருக்கிறேன். தாயிடம் சொல்லிக்கொண்டு போகவேண்டும் என்று கூட இவளுக்கு தோன்றவில்லையே! 'என் வார்த்தையை கொஞ்சமாவது கேள்' என்று சொன்னாலும் 'கேட்கமாட்டேன்' என்கிறாள்.

(பெற்றேன் வாய் சொல்லி இறையும் பேச கேளாள்)

எப்பொழுது பார்த்தாலும் வாயில் நாம சங்கீர்த்தனமே செய்கிறாள். இப்படி சதா சர்வகாலமும் பஜனை செய்தே கெட்டு போய் விட்டாளே !

'பகவத் பஜனை தானே ! செய்யட்டும்' என்று கொஞ்சம் இடம் கொடுத்தால், இவளோ இப்படி பஜனையிலேயே மூழ்கி போய் விட்டாளே !

'திருக்குடந்தை ஆராவமுதனை பார்க்க போகிறேன் என்று பஜனை செய்கிறாளே !"

(பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி)

'எம்பெருமானை அடைய முடியாததால் ஏற்பட்ட விரகத்தை தனித்து கொள்ள, பொற்றாமரை குளத்தில் சென்று நீராடி விட்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு சென்று விட்டாளே !

(பொற்றாமரை கயம் நீராட போனாள்)

உலகத்தில் பெண்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்.. என்னுடைய மகள் மட்டும் இப்படி வேறுபட்டு இருக்கிறாளே!!"

என்று பரகால நாயகியின் தாய் வருத்தப்பட்டாள்.

'பரகால நாயகியாக' இருப்பவர் திருமங்கையாழ்வார் தான்.

இவரை போலவே, 

நம்மாழ்வாரும் தன்னை 'பராங்குச நாயகியாக' வரித்து கொண்டு, எம்பெருமானை அடைய பல பாசுரங்கள் பாடி இருக்கிறார்.

திருமங்கையாழ்வாருக்கு 'நம்மாழ்வார் நிலையும், தன் நிலையும் ஒன்று போல இருக்க', தனக்கு தாயாக இருப்பவள், பராங்குச நாயகியின் தாயாரை பார்த்து, 

"தோழீ! என் மகள் (திருமங்கையாழ்வார்) தான் இப்படி இருக்கிறாளா? அல்லது உன் பெண்ணுக்கும் (நம்மாழ்வார்) இதே நிலை தானோ?"

(பொருவு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே?) என்று கேட்பது போல பாடுகிறார்.

பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.

நம்மாழ்வாராகிய பராங்குச நாயகியின் தாயார், திருமங்கையாழ்வாராகிய பரகால நாயகியின் தாய் சொன்னதை கேட்டு விட்டு சொல்கிறாள்,

"தோழீ! என் மகளை பார்த்தால், 'இவள் நப்பின்னை என்ற ஆயர் குலமகளோ! அல்லது பூமி தேவியோ! அல்லது சாக்ஷாத் மஹாலட்சுமியோ! என்பது போல, எப்பொழுது பார்த்தாலும் 'தொலைவில்லி மங்கலம்... தொலைவில்லி மங்கலம்" என்றே சொல்லி கொண்டிருந்தவள், என்னிடம் சொல்லிக்கொள்ளாமலேயே சென்று விட்டாள். உன் மகளாவது பொற்றாமரை குளம் செல்கிறேன் என்று சொல்லி விட்டு தானே சென்று இருக்கிறாள்.

இருவருமே அநேகமாக 'தொலைவில்லி மங்கலம்' (இரட்டை திருப்பதி) தான் சென்று இருப்பார்கள். வா 'தொலைவில்லி மங்கலம்' செல்வோம்" என்று சமாதானம் செய்தாள்.

பின்னை கொல்?

நில மா மகள் கொல்? 

திருமகள் கொல்? பிறந்திட்டாள், என்ன மாயங்கொலோ இவள்? 'நெடுமால்' என்றே நின்று கூவுமால்

முன்னி வந்தவன் நின்று இருந்து 

உறையும் தொலைவில்லி மங்கலம் 

சென்னியால் வணங்கும்  

அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே!

- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

Monday 27 December 2021

வெட்கத்தை விட்டு 'நான் திருநீர்மலையே போய் விடுகிறேன்' என்று பேசும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் - திருமங்கையாழ்வார்

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

கார்வண்ணம் திருமேனி !

கண்ணும், வாயும், கைத்தலமும், அடியிணையும் கமல வண்ணம் !

பார்வண்ண மடமங்கை பத்தர் ! 

பித்தர் பனிமலர்மேல் பாவைக்கு ! 

பாவம் செய்தேன் !

ஏர் வண்ண என் பேதை! என் சொல் கேளாள் !

'எம்பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்

'நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்' என்னும்

இதுவன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே?

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

"எம்பெருமானின் ரூப சௌந்தர்யத்தையே நினைத்து நினைத்து மயங்கி போகிறாள் என்னுடைய பெண்குழந்தை. 

அவர் திருமேனி அங்கம் எப்படி இருக்கும் தெரியுமா? 'நீருண்ட மேகம் போல இருக்கும்' என்று சொல்கிறாள். 

(கார்வண்ணம் திருமேனி)


அவர் கண்கள் எப்படி இருக்கும் தெரியுமா? 

அவர் உதடுகள் எப்படி இருக்கும் தெரியுமா? 

அவர் திருக்கைகள் எப்படி இருக்கும் தெரியுமா? 

அவர் திருவடிகள் எப்படி இருக்கும் தெரியுமா? 

'இவை ஒவ்வொன்றும் செந்தாமரை பூத்தது போல சிவந்து இருக்கும்' என்று சொல்கிறாள்.

(கண்ணும், வாயும், கைத்தலமும், அடியிணையும் கமல வண்ணம்)

'எம்பெருமானுக்கு 'ஸ்ரீதேவி, பூதேவி' என்று இரு பிராட்டி. 

பூதேவியின் பக்தியை மதிக்கிறார். அவள் அன்புக்கு (பற்றுக்கு) கட்டுப்பட்டு இருக்கிறார்' என்று சொல்கிறாள்.

(பார்வண்ண மடமங்கை பத்தர்)





'தாமரை மேல் அமர்ந்து இருக்கும் ஸ்ரீதேவிக்கோ இவர் ஒரு பித்தர். அவளிடத்தில் அவ்வளவு மோகம் கொண்டு இருக்கிறார்.' என்று சொல்கிறாள்.

(பனிமலர்மேல் பாவைக்கு பித்தர்)

உடனே 

'நானும் ஒரு நாயகி இங்கு இருக்கிறேனே! ஆனால் எனக்கு மட்டும் இவர் கிடைக்கவில்லையே! என்ன பாவம் செய்தேனோ?' என்று சொல்லி அழுகிறாள் என் குழந்தை.


என்னுடைய பெண்பிள்ளை இப்படி இருக்கிறாளே! இது நான் செய்த  பாவமோ?" என்று பரகால நாயகியின் தாயும் வருந்துகிறாள்.

(பாவம் செய்தேன்?)

மேலும்,

"நல்ல அழகான வண்ணமுடைய என்னுடைய பெண் குழந்தை, முக்தமான ஸ்வபாவமுடைய என்னுடைய மகள், என்னுடைய பேச்சை கேட்காமல், எப்பொழுது பார்த்தாலும் 'எம்பெருமான் திருவரங்கம் எங்கே? எங்கே? என்றே பாடிக்கொண்டு இருக்கிறாளே!

(ஏர் வண்ண என் பேதை ! என் சொல் கேளாள் ! எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்)

'இப்படியெல்லாம் பாடாதே! நிறுத்து !' என்று இவளை அதட்டினால், 

'நான் நீர்வண்ணன் இருக்கும் (சென்னை) திருநீர்மலைக்கே போய் விடுகிறேன்.' என்று பேசுகிறாளே! 

(நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்! என்னும்)


ஒரு பெண்ணுக்கு, 'அச்சம், மடம், நாணம்' என்ற ஸ்த்ரீ லக்ஷணம் இருக்க வேண்டாமா? 

இப்படி வெட்கத்தை விட்டு, 'ரங்கா ரங்கா ரங்கா..  கோவிந்தா கோவிந்தா கோவிந்தா' என்று உரக்க சொல்கிறாளே! 

இப்படி வெட்கத்தை விட்டு, ஒரு பெண் இருப்பாளோ?  வெட்கத்தை விட்ட பெண்ணை பெற்றவர்களின் நிலைமை இப்படி தான் இருக்குமோ!"

(இதுவன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே?)

என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.

ஜோடி புறாக்கள் கொஞ்சுவதை கேட்டு உருகி போகும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை - திருமங்கையாழ்வார்

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை பொன்னே பூப்ப !

பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று

செங்கால மட புறவம் பெடைக்கு பேசும்

சிறு குரலுக்கு உடலுருகி சிந்தித்து ஆங்கே

தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி

தண்கோவலூர் பாடி ஆட கேட்டு

நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன?

நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

இளம் கன்னிகையாக பொற்குடம் போன்ற அழகிய மார்புடைய என் பெண் குழந்தை, கிருஷ்ண விரகம் என்ற அக்னியால், சாம்பல் பூத்தது போல ஆகிவிட்டாளே! என்னுடைய பெண், இப்படி விரகத்தில் உருக்குலைந்து போய் விட்டாளே! 

(பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை பொன்னே பூப்ப)


கண்களில் எப்பொழுதும் கண்ணீரோடு இருக்கிறாளே! நிலைகொள்ள முடியவில்லையே ! ஒரு இடத்தில இவளால் உட்கார முடியவில்லையே! எழுந்திருந்து எழுந்திருந்து யாரையோ தேடி தேடி எதிர்பார்க்கிறாள், உட்காருகிறாள். மறுபடியும் எழுந்திருக்கிறாள். மறுபடியும் உட்காருகிறாளே ! 

(பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று)




பாம்புக்கு பயந்து, புலியின் வாயிலே விழுந்தது போல, தாய் கண்டிக்கிறாள் என்று வாசலுக்கு சென்ற என் பெண் இரண்டு ஜோடி புறா கொஞ்சிக்கொள்வதை கேட்டு விட்டு, "அதைவிட கொடிய சொல் செவியிலே விழுந்தது" என்கிறாளே!

அழகியதான சிவந்த கால்களை உடைய இரண்டு ஜோடி புறாக்கள் கொஞ்சி கொண்டு இருக்க, அவை கொஞ்சி பேசிக்கொள்ளும் குரலை கேட்டு விட்டு, இவள் உடலுருகி போய் விடுகிறாளே !

"இவை கூட தம் தம் ஜோடியோடு களித்து இருக்கிறதே! நம் நிலைமை இப்படியாயிற்றே!" என்று சிந்தித்து உடலுருகி அங்கேயே நிற்கிறாளே! 

(செங்கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடலுருகி சிந்தித்து ஆங்கே)

இப்படியே நிற்கும் இவள், அடுத்த நொடி, காஞ்சியில் இருக்கும் விளக்கொளி பெருமாளை நினைத்து கொண்டு 'திருத்தண்கால்" (தூப்புல்) என்று திவ்ய தேசத்தின் பெயரை சொல்கிறாள்.

"என்னடிம்மா சொல்கிறாய்? என்று கேட்டால்,

கும்பகோணத்தில் இருக்கும் சாரங்கபாணியை நினைத்துக்கொண்டு "திரு குடந்தை" என்று சொல்கிறாள். 

(தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி)


'இவள் ஒரு நிலையில் இல்லையே !' என்று கவலைப்பட்டு இருக்க, 

இவளோ த்ரிவிக்ரம பெருமாளை நினைத்து கொண்டு "திருக்கோவலூர்" என்று சொல்லி பாடுகிறாள், ஆடுகிறாள். 

இப்படி இவள் சொல்வதை கேட்டு, "குழந்தை! நம்முடைய குடும்பத்திற்கு இது பழக்கமா? இப்படி செய்யலாமா? நீ ஒரு பெண் குழந்தையாக இருந்து கொண்டு, இப்படி செய்யலாமா? நம்முடைய குடும்பத்திற்கு இது நன்றாகவா இருக்கிறது? என்று கேட்டால், 

(தண்கோவலூர் பாடி ஆட, கேட்டு, நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன?)

"அம்மா! திரு நறையூரும் (எனும் நாச்சியார் கோவில்) பாடுவேன்.. கேள்" என்கிறாளே !

(நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே)

என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.

திவ்ய தேசத்தின் பெயரை சொல்லி சொல்லி உருகி போகும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. கன்று மேய்த்து இனிது உகந்த - திருமங்கையாழ்வார்

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

'கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்' என்றும்,

'கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே' என்றும்,

'மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய்' என்றும்,

'வட திருவேங்கடம் மேய மைந்தா' என்றும்,

'வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே' என்றும்,

'விரிபொழில் சூழ் திருநறையூர் நின்றாய்' என்றும்,

'துன்று குழல் கருநிறத்து என் துணையே' என்றும்

துணைமுலை மேல் துளிசோர சோர்கின்றாளே!!

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

'யாரை பற்றி நினைத்தால் மூர்ச்சை ஆகிறதோ, அவரை பற்றி நினைக்காதே' என்று சொன்னாலும் கேட்காமல், அவரையே நினைத்து நினைத்து மூர்ச்சை அடைகிறாள் என்னுடைய பெண்.


திவ்ய தேசத்து பெயரை யாராவது தப்பி தவறி சொல்லிவிட்டால் கூட, இவள் அழுது அழுது சோர்ந்து விடுகிறாள்.


'அவரை பற்றி நினைக்காதே! பேசாதே!' என்று சொன்னால், விரகத்தினாலே இவளுக்கு உயிர் போய் விடுமோ! என்றும் கவலையாக இருக்கிறது.


'சரி அனுமதிப்போம்' என்று நினைத்து, 'நீ உன் ஆசை தீர பாடம்மா' என்று சொன்னால், பாட பாட அழுது சோர்ந்து விடுகிறாள் என்னுடைய பெண்.

'பக்தி செய்யாதே' என்று இவளிடம் சொன்னாலும் ஆபத்தாக இருக்கிறது.

'பக்தி செய்' என்று சொன்னாலும் ஆபத்தாக இருக்கிறது.


'பக்தி என்றால் என்ன?' என்று தெரியாத எனக்கோ, இவளிடத்தில் பாசம் மட்டுமே இருக்கிறது.


'என் பெண் குழந்தை இப்படி இருக்கிறாளே! இவளை எந்த வழியில் கொண்டு போய் சரி செய்வது?' என்று தெரியவில்லையே!!





பசு மாடுகளை மேய்த்து அதை காப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்ளும் இளம் பருவத்தில் இருக்கும் காளையே! கோபாலா! கோபாலா! கோபாலா! என்று அழைக்கிறாள்.. 

(கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்' என்றும்)


நாற்புறமும் நந்தவனம் சூழ்ந்த திருகண்ணபுர பெருமாளை நினைத்து 'கனியே' என்று அழைக்கிறாள்.

(கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்)


கூத்து ஆடுபவனை கண்டால், பார்ப்பவர்கள் தான் பொதுவாக ஆனந்தப்படுவார்கள். கண்ணனோ, தலையில் குடத்தை வைத்து கொண்டு அரங்கத்தில் பலர் மகிழ ஆட, பிறர் மட்டுமின்றி, தானும் தன் ஆட்டத்தை கண்டு ரசிக்கிறார்.

தலையில் குடத்தை வைத்து கொண்டு அரங்கத்தில்  (மன்று) ஆட, அந்த நடனத்தை பார்த்து மக்கள் அனைவரும் சபாஷ் போட, தன் ஆட்டத்தை கண்டு தானே மகிழும் குடக்கூத்தனே! என்று அழைக்கிறாள். 

('மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய்' என்றும்)


வட திருவேங்கடம் என்ற திருப்பதியில் வீற்று இருப்பவரே! கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கிறாள்.

('வட திருவேங்கடம் மேய மைந்தா' என்றும்)

அசுர ராக்ஷஸ கூட்டங்களை ஒழித்து வெற்றி பெற்ற பெருவீரனே! வேந்தே! என்று அழைக்கிறாள்.

('வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே' என்றும்)


எங்கும் பச்சை பசேல் என்று சோலையாக காணப்படும் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் இருக்கும் பெருமானே! என்று அழைக்கிறாள்.

('விரிபொழில் சூழ் திருநறையூர் நின்றாய்' என்றும்)


நெருக்கமான, சுருள் சுருளான கேசத்துடன், நீலமேக ச்யாமள ரூபத்துடன் எனக்கு துணையாக இருப்பவரே! என்று சொல்கிறாள்.

('துன்று குழல் கருநிறத்து என் துணையே' என்றும்)

இப்படி சொல்லி சொல்லி, கண்களில் இருந்து கண்ணீர் அவர் மார்பில் விழும் படியாக அழுது அழுது சோர்ந்து விடுகிறாளே! 

(துணைமுலை மேல் துளிசோர சோர்க்கின்றாளே!!)

என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.


Saturday 25 December 2021

Who is the Stain for Hindu Dharma (Sanathana Dharma)? What is Stain for Women? What is stain for Veda? What is Stain for Brahmana? - HINDUS must know.. what Narada says (in Mahabharata)

In Santhi Parva, Moksha Dharma Parva,  Narada says "Which is Stain"


Narada says (to Vyasa)
anAmnAya malA vedA
brAhmanasyA vratham malam
malam pruthvyA vAhikA
sthrEnAm kouthOhalam malam
- Mahabharat -12 - Santhi Parva


नारद उवाच 
अनाम्नाय मला वेदा 
ब्ह्णास्या व्रतं मलम
मलं पृथिव्या वाहीकाः 
सत्रीणां कौतूहलं मलम
- महाभारत - शांति पर्वा 
Vyasa Bhagavan is writing Mahabharata, the greatest live history at his time.

During that time, Narada appear before Vyasa and they discuss.

During the discussion, Narada talks about 4 stains. 

1. The stain of the Vedas is the suspension of their recitation
So, encourage Vedic Scholars to learn Veda with right pronunciation and encourage them to chant Veda always.

2. The stain of the Brahmanas is their non-observance of vows
So, do not encourage Brahmanas to give up their prescribed duties.

3. The Valhika race is the stain of the Earth. 
Vahlika are those who born in Sanathana Dharma (Hindu) family but got converted or became atheist. So, do not let Valhika to speak against Vedic Dharma and punish them.

4. Curiosity is the stain of women. 
Women are highly emotional than men. So, it is a duty to protect women by father (till she get married), by husband (till son stand on his own), by son (till her death), by close relative (if none alive). Women should not be allowed to get what they wish as some of the decision she make are with high EQ than IQ which may spoil her future life.
When Veda is not chanted daily and Veda is not learnt with right pronunciation, Vedic Sounds will Disappear. World is created from Sound. 
That Sound is Om. 
From OM, lakhs of Vedic Mantra emerged and created these world we see. 
With Vedic Chanting, world remains stable despite people polluting it.  
Vedic Sounds can cure Diseases that came thru sound, air, fire, air and sand. 
When Vedic Sounds disappear, World will face global warming, disease and death, natural calamities which can't be repaired. 
When a Brahman (Today, all Ministers are in Brahman Varna who directs Army, Businessmen and Employees on what is right, on what is wrong) sitting at state assembly and parliament did not promise what he said, he is a stain to the Brahman Varna. Those who Brahman Do what they said, will be worshiped and respected.  

Despite born in Sanathana Dharmic Family (HINDU Family), those who are interested and inclined in dressing, eating, behaving like outsiders are real stain to Sanathana Dharma.  
These Vahlika will destroy their family and themselves one day and also will involve in activities to shame Sanathana Dharma.   
These converts, atheist are considered as stain to the world also.   
If these stains are removed, 
Sanathana Dharma will flourish by itself.
Curiosity can often affect women.
When women control her curiosity and get used to not crossing boundaries, women gain respect.


Mahabharat.


Monday 20 December 2021

ஆழ்வார் தன்னையே கோபிகையாக ஆகி வீணையோடு பேசிக்கொண்டு தானாக சிரிப்பதை பார்த்து, பரகால நாயகியின் தாயார் புலம்புவது போல பாடுகிறார். கல்லுயர்ந்த நெடுமதி்ள் சூழ்.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

'கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ் 

கச்சி மேய களியே' என்றும் 

'கடல் கிடந்த கனியே' என்றும்

'அல்லியம் பூ மலர் பொய்கை  பழனம் வேலி

அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்' என்றும்

சொல் உயர்ந்த நெடுவீணை 

முலைமேல் தாங்கி தூமுறுவல் 

நகை இறையே தோன்ற நக்கு

மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே

மென்கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே 

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)


பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, பாடுகிறாள்.

"கருங்கற்களால் மதிற்சுவர்கள் ஓங்கி உயர்ந்து காஞ்சிபுரத்தை சூழ்ந்திருக்க (கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ் கச்சி) அங்கு எழுந்தருளியிருக்கும் (மேய) மதயானை போன்ற ஹஸ்தி வரதனே ! என்று இவள் பாட (களியே என்றும்)

திருப்பாற்கடலில் படுத்திருக்கும் கனிபோன்றவனே! என்று இவள் பாட (கடல் கிடந்த கனியே)

சுகந்தமுடைய அல்லி பூக்கள் பூக்கும் தடாகங்களையும் (அல்லியம் பூ மலர் பொய்கை) நீர்நிலைகளையுமே (பழனம்) வேலியாக உடைய (வேலி) அழகிய திருவழுந்தூரிலே (தேரழுந்தூர்) நின்று (அணி அழுந்தூர் நின்று), உள்ளம் உகந்து இருக்கும் என் ஸ்வாமியே! என்று இவள் பாட (உகந்த அம்மான்' என்றும்

அவள் பாடிய இந்த திவ்ய நாமசங்கீர்த்தனத்தை கேட்டு (சொல் உயர்ந்த) அந்த நீண்ட வீணையும் திருப்பி பாட (நெடுவீணை), தனது நாதனை இந்த வீணையும் பாடுகிறதே என்ற பூரிப்பில், தனது மார்பின் மீது தாங்கி கொண்டு (முலைமேல் தாங்கி) பெருமாளையே ஸ்பரிசித்து விட்டது போன்று புன்முறுவல் செய்கிறாள் (தூமுறுவல்). 




பல்வரிசைகள் (நகை) தெரியும் படி (இறையே தோன்ற) தனக்கு தானே சிரிக்கிறாள் (நக்கு). 

இயற்கையாகவே சிவந்து இருக்கும் விரல்கள் இன்னமும் சிவக்கும்படி நாள் முழுவதும் தந்தி கம்பிகளை வருடி (மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி அந்த வீணையை) அதற்கும்  மேலே (ஆங்கே) தானே ஒரு கிளிப்பிள்ளை போலே (மென்கிளி போல்) மழலைச்சொற்களால் பாடிக்கொண்டு நிற்கிறாள் (மிகமிழற்றும்). 

என் வயிற்றில் பிறந்த அறியா பெண்ணான இவள், இவையெல்லாம் எங்கே கற்றாள்? (என் பேதையே)"

என்று பரகால நாயகியின் தாய், தன் பெண் (திருமங்கையாழ்வார்) நிலை கண்டு வருந்துகிறாள்.


Friday 17 December 2021

ஜாதிகள் எப்படி உருவானது? "ஜாதி", "மதம்", 'வர்ணம்' - இரண்டையும் அழிக்க வழி என்ன? ஒரு அலசல்

"ஜாதி", "மதம்" - இரண்டையும் அழிக்க வழி.
'நாகரீகமுள்ள, கட்டுப்பாடான, அமைதியான சமுதாயத்தை மனிதர்கள் உருவாக்க ஆசைப்பட்டால், நான்கு வர்ணங்களில் மனிதர்கள் இருக்க வேண்டும்' என்று ஹிந்து தர்மம் சொல்கிறது.
"பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நான்கு வர்ணங்கள் என்னால் படைக்கப்பட்டது" என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவானாக சொல்கிறார்.
சாதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம்
(அத்யாயம் 4 - ஸ்லோகம் 13) - பகவத் கீதை

"சாதுர் ஜாதி மயா ஸ்ருஷ்டம்" - நான்கு ஜாதி என்னால் படைக்கப்பட்டது என்று சொல்லவில்லை.

'ஜாதி' வேறு. 'வர்ணம்' வேறு.

நான்கு வர்ணத்தில் வாழாதவர்களை பெயர் கொடுக்காமல், 'பஞ்சமன்' ("ஐந்தாவது" வர்ணத்தில் இருப்பவன்) என்று பொதுவாக சொல்கிறது.

வர்ணம் என்றால் நிறம்.. 4 shades of people.
ஜாதி என்றால் caste.

ஹிந்து தர்மம் சொல்லும் இந்த 4 வர்ணத்தை எந்த சமுதாயம் அழிக்க நினைக்கிறதோ, அவர்களால் நிம்மதியாக வாழ முடியாது.

உலகம் முழுவதும் இந்த நான்கு வர்ணத்தில் தான் இருக்கிறது.

எந்த சமுதாயத்தில் ஒரு வர்ணத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமையை தவறுதலாக பயன்படுத்துகிறார்களோ, அவர்களால் அந்த சமுதாயம் நிலை குலையும்.
க்ஷத்ரியர்கள் என்ற "ராணுவத்தினர், போலீஸ்காரர்கள்" இன்றும் உள்ளனர்.

ஆயுதம் வைத்திருக்கும் இவர்கள் நினைத்தால், பெரும் நாசத்தை உண்டாக்கி விடமுடியும்.
க்ஷத்ரியர்கள் தன் எல்லை மீறி, நாட்டு மக்களை துன்புறுத்திய போது, பரசுராமராக விஷ்ணுவே அவதரித்து, 21 தலைமுறை க்ஷத்ரியர்களை அடக்கினார் என்று பார்க்கிறோம்.

பாகிஸ்தான் போன்ற நாடுகளில், ராணுவத்தின் அதிகாரமே அதிகமாக இருப்பதை பார்க்கிறோம். அந்த நாட்டின் பொருளாதார நிலை, அமைதி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பார்க்கிறோம்.

ராணுவம், போலீஸ் போன்ற க்ஷத்ரியர்கள் என்ன செய்ய வேண்டும்? எது நியாயம்?" என்று சொல்லி வழிநடத்த , ப்ராம்மணர்கள் என்ற வர்ணத்தில் இன்று, சட்டசபையில் அமைச்சர்கள் பலர் கூடி, முடிவெடுத்து க்ஷத்ரியர்களை, வைசியர்களை, சூத்திரர்களை வழி நடத்துகின்றனர்.

ப்ராம்மணர்கள் சொல்படி நடக்கும் க்ஷத்ரியர்கள், மக்களை துன்புறுத்தாமல் இருக்கின்றனர். தேவைப்பட்டால் உதவி கூட செய்கின்றனர். நாட்டை உயிரை கொடுத்து காக்கின்றனர்.

வைசியர்கள் என்ற வியாபாரிகள், முதலாளிகள் (employer) நாட்டிற்கு வருமானத்தையும், வேலைவாய்ப்பையும் கொடுக்கின்ற்னர்.

வேலை செய்ய, சூத்திரர்கள் (employee) கோடிக்கணக்கில் இருக்கின்றனர்.
வேலை செய்யாமல் சூத்திரர்கள் இருந்தால், வியாபாரம் நடக்கமுடியாது,
சட்டசபையில் இருக்கும் அமைச்சர்களுக்கு வேலை செய்ய ஆள் (employee) இருக்காது. அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும்.
ஆதலால், ஹிந்து மதம், சூத்திரம் (formula) போன்று வேலை செய்பவர்கள் இருப்பதால், இவர்களை "சூத்திரன்" என்று பெயர் கொடுத்தது.

சமஸ்கரித மொழியின் அர்த்தம் தெரியாத சில மடையர்கள், ஏதோ அவமான பெயர் போல, தமிழ்மொழி என்று நினைத்து, வேலைக்கு செல்பவர்களை கேவலப்படுத்துகின்றனர்.

வர்ணம் அழிந்தாலோ, வர்ணத்தில் உள்ளவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்யாமல் இருந்தாலோ, சமுதாயம் அழிந்து விடும்

அனைத்து நாடுகளிலும் நான்கு வர்ணத்தால் தான் சமுதாயம் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
சிலர் ராணுவம், போலீஸ் என்ற க்ஷத்ரிய வர்ணத்தில் இருக்கின்றனர்.
சிலர் எது நியாயம், எது நன்மை என்று சொல்லுமிடத்தில் அரசாங்கத்தில் உள்ளனர்.
பல வியாபாரிகள், வைசிய வர்ணத்தில் உள்ளனர்.
பல வேலைக்கு செல்பவர்கள் சூத்திர வர்ணத்தில் உள்ளனர்.

க்ஷத்ரிய அரசர்கள் இன்று இல்லாமல் போனதால், க்ஷத்ரிய வர்ணம் அழிந்து போனதாக நினைத்து கொள்ள கூடாது.

இன்று, க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவர்கள், தங்களை ராணுவத்தினர், போலீஸ் என்று அடையாளப்படுத்தி கொள்கின்றனர்.

அன்று பிராம்மண வர்ணத்தில் இருந்து தர்மம், அதர்மம் பற்றி விளக்கி சொன்ன சமுதாய மக்கள், ஆசாரம், வேதத்தை இன்றும் காப்பாற்றி வருவதால், பிராம்மண குணத்தை இன்னும் இழக்கவில்லை. ஆனால் பலர் பிராம்மண வர்ணத்தை இழந்து விட்டனர்.

இப்பொழுது உள்ள இந்த பிராம்மண சமுதாயத்தை, 'பிராம்மண வர்ணம்' என்று சொல்ல கூடாது. 'பிராம்மண ஜாதியாக' உள்ளது.

ஜாதிகள் ஒரு உன்னதமான குருவையோ, அரசனையோ, தெய்வதையோ வைத்து உருவானது.

யாதவ ஜாதி, "யது" என்ற அரசனை பின்பற்றி வந்தது.
அது போல,
ராமானுஜர், ஆதி சங்கரர், மத்வர், ரிஷிகளை பின்பற்றி வாழ்ந்த, பிராம்மண சமுதாயம், பிராம்மண ஜாதியாக இன்றும் இருக்கிறார்கள்.

பிராம்மண ஜாதியில்,
இன்று சிலர் பிராம்மண வர்ணத்தில் இருக்கிறார்கள்,
இன்று சிலர் க்ஷத்ரிய வர்ணத்தில் இருக்கிறார்கள்.
இன்று சிலர் வைசிய வர்ணத்தில் இருக்கிறார்கள்.
இன்று சிலர் சூத்திர வர்ணத்தில் இருக்கிறார்கள்.

யது என்ற அரசனை பின்பற்றி யாதவ ஜாதி வந்தது போல, "ஜாதிகள்" ஒவ்வொரு தலைவனை பின்பற்றி உருவானது.

வர்ணத்தை எப்படி எளிதில் ஒழிக்க முடியாதோ! அது போல,
ஜாதியை எளிதில் ஒழிக்கவே முடியாது.

இன்று சிலர் நாங்கள் "அண்ணா வழி" என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
இதுவே பலரால் பின்பற்ற படும்போது, ஒரு நாள் ஜாதியாக மாறும்.
ஒரு நாள் அம்பேத்கார் ஜாதி, அண்ணா ஜாதி என்ற ஜாதிகள் உருவாகி, ஜாதி மறுப்பு திருமணம் அவர்களுக்கிடையே நடக்கும் போது சண்டையிட்டு கொள்ளும்.

"யது" அரசனின் வழியில் வந்தவர்கள், 5000 வருடத்துக்கும் மேலாக இன்றும் இருக்கிறார்கள்.
யது வழியில் வந்தவர்கள், காலப்போக்கில் 'யது குலம்' என்றும், யாதவ ஜாதி என்று அடையாளப்படுத்தபட்டார்கள்.
"புத்தர் வழி" என்று சொல்லி ஒரு கூட்டம் வந்தது.
காலபோக்கில் "புத்த ஜாதி" என்பதை விட இன்னும் போய் "புத்த மதம்" என்று ஆகி விட்டது.

அது போல,
சில பொய் மதங்கள் உருவாகின.

ஜாதி பெரிதாகும் போது, மதம் என்று அந்த சமுதாய மக்கள் அடையாளப்படுத்தி, அந்த தலைவனை கொண்டாட ஆரம்பித்தனர்.

'தன் தலைவன் தான் உயர்ந்தவர்' என்று மதங்கள் ஆரம்பித்து, ஒரே ஒரு ரிஷி, தலைவன் என்று இல்லாத சனாதன தர்மத்தில் வாழும் சமுதாயத்தை பார்த்து, "ஹிந்து மதம்" என்று சொல்லி பாரத மக்களை அடையாளப்படுத்தினர்.

'தன் மத தலைவன் சொன்னது தான் சரி' என்று பாரத மக்களை 1000 வருடங்கள் கொள்ளை அடித்தனர்.

புத்த மதத்தில் உள்ள ஒருவளை, புத்தரை மதிக்காத ஒருவன் மணக்க நினைத்தால், எப்படி அந்த மக்கள் ஒத்து கொள்ளமாட்டார்களோ, அது போல,
ஹிந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதியினரும், அவர்கள் நம்பிக்கையை குலைக்கும் மற்றவர்களை மணக்க சம்மதிப்பதில்லை.

தேவர் ஜாதியில் உள்ள நம்பிக்கையை அவமதிக்கும் புத்தி உள்ளவன், அவர்கள் ஜாதியில் உள்ள பெண்ணை மணக்க நினைக்கும் போது, மானமுள்ள தேவர் ஜாதியில் உள்ளவர்களுக்கு வேதனை உண்டாகிறது.

ஜாதிகள், 'ரிஷிகள், தெய்வங்கள் வழியே வந்தது' என்று மட்டும் நினைக்க கூடாது.
'அரசர்கள், தலைவர்கள்' வழியாகவும் வருகிறது.

நாங்கள் "அண்ணா வழி", நாங்கள் "மகாத்மா வழி" என்று சொல்லி கொள்வதை இன்று பார்க்கிறோம்.
"ஜாதியை ஒழிக்க வந்தேன்" என்று சொல்லி, மக்கள் சேர சேர கடைசியில் இவர்களே ஒரு நாள் ஒரு 'மூத்திர ஜாதி'யாக ஆகி விடுவார்கள்.

இப்படி நாங்கள் "யது வழி", நாங்கள் "ராமானுஜர் வழி", நாங்கள் "ஸ்ரீவத்ஸ ரிஷி வழி", என்று சொன்னதை, ஜாதியாக இன்று மாற்றி விட்டார்கள்.

நாங்கள் 'கிறிஸ்து வழி' என்று ஒரு சமுதாயம் வெளிநாட்டில் ஆரம்பித்து, அது ஜாதியை தாண்டி, மதமாகி விட்டது.

அதை தொடர்ந்து, 'நபிகள் வழி' என்று ஒரு சமுதாயம் ஆரம்பித்து, அதுவும் ஜாதியை தாண்டி, மதமாகி விட்டது.

ஜாதியும், மதமும் ஒரு தலைவனை கொண்டு உருவானது என்பதால், கிறிஸ்தவ நாடுகளுக்கு, கிறிஸ்து என்ற தன் தலைவனை ஏற்காத இஸ்லாமியனை கண்டால் வெறுப்பு.
அதே போல, இஸ்லாத்தை வெறுக்கும் கிறிஸ்தவ நாடுகளை அழிக்க இஸ்லாமியர்கள் நினைக்கின்றனர்.

வர்ணம் அழியும் போது, அந்த சமுதாயம் அழிந்து விடும்.
பாகிஸ்தான் போன்ற நாடுகளில் க்ஷத்ரிய வர்ணம் மற்ற வர்ணத்தில் உள்ளவர்களை அடக்குகிறார்கள். இதனால், தானாகவே இந்த சமுதாயம் அழிந்து போகும்.

அந்தந்த ஜாதியை படைத்த தலைவர்கள், ரிஷிகள், அரசர்கள், ஞானிகள், மகாத்மாக்கள் மீது நம்பிக்கையை அந்த சமுதாய மக்கள் அடியோடு வெறுக்கும் போது, அந்த ஜாதி மட்டும் அழியும்.

பிராம்மண ஜாதி அழியவேண்டுமென்றால், 12 ஆழ்வார்கள், நாயன்மார்கள், வேதம், பெருமாள், சிவன், முருகன், விநாயகர், சரஸ்வதி, பார்வதி, லட்சுமி, ஆதி சங்கரர், மத்வர், ராமானுஜர், துளசி தாசர் என்று அனைவரும் பொய் என்று ஆக்க வேண்டும்.
ஆக்கினால், ப்ராம்மண ஜாதி அழியும்.
இது நடக்கவே நடக்காத காரியம்.

பொதுவாக ஹிந்துக்களை அழிப்பது என்பது நடக்கவே நடக்காத காரியம்.. ஹிந்துக்களை அழிக்க வேண்டுமென்றால், ஜாதிகள் அழிய வேண்டும்..
உதாரணத்திற்கு, யாதவ ஜாதி அழிய வேண்டுமென்றால், அவர்களுக்கு கிருஷ்ணர் மீது அவநம்பிக்கை ஏற்பட வேண்டும்.
யது என்ற அரசனின் மீது அவநம்பிக்கை ஏற்பட வேண்டும்.
இது நடக்கவே நடக்காத காரியம்.

உருவான மற்ற மதத்தை அசைக்க, அவர்கள் நம்பும் விஷயத்தை கேள்விக்குறியாக்கினால் போதுமானது. மக்களின் மனதில் கேள்விகளை விதைத்தால் தானாக விலகி விடுவார்கள்.

அந்தந்த மதத்தை படைத்த தலைவர்கள் மீது நம்பிக்கையை அந்த சமுதாய மக்கள் அடியோடு வெறுக்கும் போது, அந்த மதமும் அழியும்.

இந்தியாவில் ஹிந்து தர்மத்தை விட்டு விட்டு, அசோக சக்கரவர்த்தியின் முட்டாள்த்தனத்தால் சில நூறு வருடங்கள் பௌத்த மதத்தை தழுவி இருந்தார்கள் சில கோடி ஹிந்துக்கள்.

'அன்பு சமாதானம்' என்று அனைவரையும் முட்டாளாக்கிய புத்தமத கொள்கையால், அரசர்கள் தூங்கி விட, 1000 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பை பாரத மக்கள் அனுபவிக்க நேரிட்டது.

'புத்தனும் வேண்டாம், பௌத்த மதமும் வேண்டாம்' என்று தூக்கி எறிந்த பாரத மக்கள், மீண்டும் சனாதன தர்மத்திற்கு வந்தனர்.

இன்று சிலர் மறுபடியும் சில போலி மதங்களில் விழுந்துள்ளனர்..
வழக்கம் போல, அடி வாங்கும் போது, மறுபடியும் ஹிந்து தர்மத்தில் வந்து விடுவார்கள் என்பது நிச்சயம்.