Followers

Search Here...

Showing posts with label ஸ்ரீ கிருஷ்ணர். Show all posts
Showing posts with label ஸ்ரீ கிருஷ்ணர். Show all posts

Wednesday 27 January 2021

ஸ்ரீகிருஷ்ணர் ஏன் முரணாக பேசினார்? "நான் எல்லா உயிரினங்களின் இருக்கிறேன்" என்று அத்வைதமாக சொல்கிறார். பிறகு, கிருஷ்ணரே "நான் விலங்குகளில் சிங்கமாக இருக்கிறேன், அசுரர்களில் ப்ரகலாதனாக இருக்கிறேன்" என்று த்வைதமாக சொல்கிறார். பகவத் கீதை... தெரிந்து கொள்வோமே

 ஸ்ரீகிருஷ்ணர் ஒரு இடத்தில், "பரமாத்மாவாகிய நான் அனைத்திலும் இருக்கிறேன்" என்று சொல்கிறார்.

அடுத்த ஸ்லோகத்திலேயே இதற்கு முரணாக, 

"நான் ருத்ரர்களில் சங்கரனாக இருக்கிறேன், 

சேனை தளபதிகளில் கந்தனாக இருக்கிறேன்,

பாண்டவர்களில் அர்ஜுனனாக இருக்கிறேன்,

வேதத்தில் சாம வேதமாக இருக்கிறேன்,

ரிஷிகளில் ப்ருகு ரிஷியாக இருக்கிறேன்.

மலைகளில் ஹிமாலயமாக இருக்கிறேன்,

மனிதர்களில் அரசனாக இருக்கிறேன்,

அசுரர்களில் ப்ரகலாதனாக இருக்கிறேன்,

விலங்கில் சிங்கமாக இருக்கிறேன்,

பறவைகளில் கருடனாக இருக்கிறேன்" 

என்று சொல்லிக்கொண்டே போகிறார்.


'அனைத்திலும் நான் இருக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, 

அதற்கு முரணாக

'மிருகங்களில் சிங்கமாக இருக்கிறேன்' என்று சொல்கிறாரே! 

அனைத்திலும் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, மற்ற விலங்கில் பரமாத்மா இல்லை என்பது போல பேசிவிட்டாரே!!





'அனைத்திலும் நான் இருக்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'மிருகங்களில் குறிப்பாக சிங்கத்திடம் நான் இருக்கிறேன்' என்று ஏன் சொல்கிறார்?


கிருஷ்ண பரமாத்மாவின் மனதில் என்ன ஓடியது?


பரமாத்மாவில் இருந்து தான் அனைத்துமே உற்பத்தியானது. இதுவே சத்தியம்.  

இந்த சத்தியத்தை அனுபவத்தில் கொண்டு வந்த மகான்களில் பிரகலாதன் தலைசிறந்தவர்.


ஹிரண்யகசிபு பிரகலாதனை விஷம் கொடுத்தும், சூலத்தால் குத்தியும், மலையில் இருந்து தள்ளியும், கடலில் கல்லை கட்டி தள்ளியும், யானையை விட்டு மிதக்க முயன்றும், எதுவுமே பிரகலாதனை தாக்கவில்லை..

பிரகலாதனை பார்த்து, "எப்படி உன்னை எதுவும் கொல்ல முடியவில்லை.. மலையில் இருந்து உருட்டினால் இயற்கை நியதிப்படி யார் விழுந்தாலும் அடி படுமே! கருநாகத்தின் விஷம் குடித்தால், அதன் குணப்படி சாக வேண்டுமே!"

என்று கேட்டான்.


ஹிரண்யகசிபுவுக்கு 

கல் கல்லாக தெரிந்தது. 

விஷம் விஷமாக தெரிந்தது. 

தான் அரசன் என்று தெரிந்தது. 

மந்திரிகள், போர் வீரர்கள் வித்தியாசம் தெரிந்தது. 

உலகம் உலகமாக தெரிந்தது.


ஆனால், பிரகலாதனுக்கோ, "ஹிரண்யகசிபுவே நாராயணனாக தெரிந்தான். 

அவன் போர் வீரர்களை ஏவி கொலை செய்ய சொல்ல, அந்த வீரர்களும்  நாராயணனாக தெரிந்தனர். 

குத்த வரும் சூலமும், விஷமும், மலையும், தானும் கூட நாராயணனாகவே தெரிந்தனர்.

நரசிம்மாக நாராயணனே வந்த போது, தேவர்களும் 'இது என்ன பயங்கரமான அவதாரம்!' என்று அருகில் செல்லவே பயந்தனர்..

'நரசிம்மாக வந்ததும் நாராயணனே!' என்று பார்த்த பிரகலாதன், துளியும் பயப்படவில்லை.


'பரமாத்மா அனைத்திலும் இருக்கிறார்' என்ற சத்தியத்தை, பிரகலாதன் நிரூபித்தான்.





ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் பிரகலாதனை மனதில் நினைத்து கொண்டு, 'அர்ஜுனா! நான் நிஜத்தில் அனைத்திலும் இருக்கிறேன்.. பிரகலாதன் போன்ற ஞானிகள் நான் அனைத்திலும் இருப்பதை பார்க்கின்றனர்." என்று சொல்கிறார்.

உடனே, அர்ஜுனன், "ஐயோ கிருஷ்ணா!! இது பிரகலாதன் போன்ற ஞானிக்கு வேண்டுமானால் அனுபவத்தில் ஏற்படலாம்.. 

நீ அனைத்திலும் இருக்கிறாய் என்பது உண்மை என்றாலும், அனுபவம் எங்களுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லையே! 

'எதை பார்த்தாலும், நீ அதில் இருக்கிறாய்' என்று பார்க்கும் பக்குவம் எங்களுக்கு ஏற்படாதே! 

நாங்கள் அஞானி..  நாங்கள் பிரகலாதன் போன்ற ஞானியின் அனுபவத்தை அடையவே முடியாதே!!"

என்று நினைத்து சோர்ந்து விடுவானோ! என்று நினைத்து, அவனை பேச விடாமல், அவன் மனதில் எழும் சந்தேகத்தை போக்க, வழி சொல்ல உடனே பேசினார்..


"அர்ஜுனா! நான் அனைத்திலும் இருக்கிறேன் என்ற அனுபவம் மிக உயர்ந்த நிலை.. 

நீ அந்த அனுபவத்தை அடைய முடியாது என்று நீயாகவே நினைத்துக்கொண்டு முயற்சிக்காமல் இருந்து விடாதே...

ஞானத்தை அடைய முயற்சி உடையவன் நாசமாக மாட்டான். 

பிரகலாதனை போன்ற நிலை உனக்கும் வரும்..

அதன் முதல் படியாக, அனைத்து மிருகத்திலும் நான் இருக்கிறேன் என்று உன்னால் பார்க்க முடியாது போனாலும், அதில் சிங்கத்தை பார்க்கும் போது மட்டுமாவது, 'நரசிம்மா..' என்று நினைக்க ஆரம்பி..

ருத்ரர்களில் மன்யு, சிவன் என்று பல ரூபங்கள் உண்டு.. அனைவரிடத்திலும் நானே இருக்கிறேன் என்ற அனுபவம் ஆரம்ப நிலையில் ஏற்படாது.

ஆனால் ருத்ர ரூபத்தை துறந்து, சாந்த ரூபத்துடன் இருக்கும் சங்கரனை பார்க்கும் போதாவது என்னை நினைத்து கொள். 


காக்கை பறந்தாலும், புறா பறந்தாலும் அனைத்திலும் நானே இருக்கிறேன் என்ற அனுபவம் உனக்கு ஆரம்ப நிலையில் ஏற்படாது.. 

அதனால், பறவைகளில் கருடன் பறந்து சென்றால், அதில் நான் இருக்கிறேன் என்று பார்.

இப்படி நீ பார்க்க ஆரம்பி.. இந்த முதல் படியே உன்னை கொஞ்சம் கொஞ்சமாக அனைத்திலும் நான் இருப்பதை உணர செய்து விடும். 


ஜீவ காருண்யம் முதலில் உனக்கு தோன்றும்.

மிருகத்தின் மாமிசத்தை தின்று தான் இந்த வயிற்றை வளர்க்க வேண்டுமா? என்று தோன்ற ஆரம்பிக்கும்..





படிப்படியாக உன் ஞான நிலை உயர்வதை நீயே அனுபவிக்கலாம்.


தெய்வம் உன்னிடம் கனவில் பேசுவதும், காட்சி தருவதும், யாரையோ அனுப்பி தக்க சமயத்தில் உன்னை ஆபத்துகளில் இருந்து காத்தும், நல்லவர்கள் நட்பு கிடைக்குமாறு வாழ்க்கை அமைவதையும் நீயே அனுபவிப்பாய்.. 


ஆதலால், அனைத்திலும் என்னை பார்க்க, முதல் படியாக, ஒரு வஸ்துவையாவது பார்க்கும் போது என்னை நினைத்து கொள்ளும் பழக்கத்தை கொள்.

தானாக ஞானி நிலை ஏற்பட்டு விடும்.."


இந்த மனோ நிலையில், கிருஷ்ண பிரமாதமா, 10வது அத்தியாயத்தில், 'நான் அனைத்திலும் இருக்கிறேன்' என்று சொல்லி, அர்ஜுனன் 'இந்த நிலை எனக்கு வராது' என்று சொல்லிவிடுவானோ என்று நினைத்து, அவனை கேட்பதற்கு முன்பேயே, உடனேயே இப்படி பேச ஆரம்பித்தார்.


अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थित: |

अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च ||

- bhagavad Gita (பகவத் கீதை)

அஹம் ஆத்மா குடாகேச சர்வ பூத ஆஸய-ஸ்தித: |

அஹம் ஆதி: ச மத்யம் ச பூதானாம் அந்த ஏவ ச ||

- chap 10 - 20 vibhuti yoga  (பகவத் கீதை)

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்..

"அர்ஜுனா ! நான் எல்லா உயிரினங்களின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன். நான் எல்லா உயிரினங்களின் ஆரம்பம், நடுத்தர மற்றும் முடிவாக இருக்கிறேன்".

Arjuna ! I am residing in everyone's heart. i am residing in all living entities. I am the beginning, middle, and end of all beings.




प्रह्लादश्चास्मि दैत्यानां काल: कलयतामहम् |

मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ||

ப்ரஹ்லாத ச அஸ்மி தைத்யானாம்

கால: கலாயதாம் அஹம் |

ம்ருகானாம் ச ம்ருக-இந்த்ர அஹம்

வைநதேய : ச பக்ஷிணாம் ||

- chap 10 - 20 vibhuti yoga  (பகவத் கீதை)

அர்ஜுனா ! நான் அசுரர்களில் ப்ரகலாதனாக இருக்கிறேன். நான் எல்லா உயிரினங்களின் காலமாக இருக்கிறேன். மிருகங்களில் சிங்கமாக இருக்கிறேன். நான் பறவைகளில் கருடனாக இருக்கிறேன்.


அஞானியும் 'ஞானி ஆக முடியும்' என்று காட்டும் அற்புதமான உபதேசம்.


பகவத் கீதை மனிதனாக பிறந்த அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது...


வாழ்க ஹிந்து தர்மம்.

Friday 7 September 2018

கடவுள் உண்டு என்று சொல்வது "மனித இயல்பு". யோகம் என்றபொருள் என்ன?

யோகம் என்ற இந்த சமஸ்கரித சொல்லுக்கு "சேர்க்கை" என்று தமிழில் பொருள் கொள்ளலாம்.

ஒரு புத்தகத்தை, நாம் மீண்டும் மீண்டும் படிக்கும் போது, அந்த விஷயங்கள் நம் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக சேருகிறது.
இந்த சேர்க்கையை தான் 'யோகம்' என்று சொல்கிறோம்.

ஒரு விஷயத்தை, தொடர்ந்து செய்யும் போது, ஒரு சமயத்தில் படித்தது எல்லாம் இதயத்தில் சேர்ந்து விடுகிறது.
இந்த சேர்க்கையை தான் 'யோகம்' என்று சொல்கிறோம்.
இதயத்தில் பதிந்துவிட்ட பின், அதுவே - ஸித்தி பெற்ற நிலை.
ஒரு விஷயத்தில் ஸித்தி அடைந்தவனை "ஸித்தன்" என்கிறோம். யோகி என்கிறோம்.

ஸித்தி பெற்ற (மனதில் பதிந்து விட்ட) நிலையில், வெளி புத்தகம் இனி தேவையில்லை என்ற நிலைக்கு வருகிறான்.
தானே புத்தகம் ஆகிறான்.
புத்தகத்தை விட ஆச்சர்யமாக விளக்கி சொல்லும் அளவுக்கு ஆற்றல் பெறுகிறான்.

அவரவர் தகுதி, திறமைக்கு ஏற்ப, ஒவ்வொரு நிலையில் இந்த யோகம் ஏற்படுகிறது.

ஒரு மாணவனுக்கு, ஒரு முறை ஒரு புத்தகத்தை படித்தாலே அது மனதில் சேர்ந்து (யோகம்)  விடுகிறது.
இன்னொரு மாணவனுக்கு பத்து முறை திரும்ப திரும்ப ஒரு புத்தகத்தை படித்த பின், அது மனதில் சேர்ந்து (யோகம்) விடுகிறது.
ஒரு மாணவனுக்கு ஆயிரம் முறை திரும்ப திரும்ப ஒரு புத்தகத்தை படித்த பின், அது மனதில் சேர்ந்து (யோகம்) விடுகிறது.

அவரவர் தகுதி, திறமை அடிப்படையில் அனைவரும் யோகியாக முடியும், ஆனால்  முயற்சியில் தான் வேறுபாடு உள்ளது என்று தெளிவாக சொல்வது சனாதன தர்மம் என்ற இன்றைய ஹிந்து மதம்.

அனைவரும் ஒரு ஜென்மத்தில் மோக்ஷம் அடைவார்கள் என்று சொல்லும் மதமும், ஹிந்து மதம் தான்.
'நிரந்தர நரகம் செல்வான்' என்று உளராத மதம், ஹிந்து மதம்.

மீண்டும் மீண்டும் ஒரே காரியத்தை செய்யும் பொழுது, அந்த விஷயம் மனதில் சேருகிறது (யோகம்).
ஒரு சமயம் ஸித்தி ஆகிறது.
எப்பொழுது யோகம் (இந்த சேர்க்கை) நமக்கு ஸித்தியாகும் என்பது நம் தகுதி, திறனை பொறுத்தது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நமக்கே நம் திறன், தகுதி என்ன? என்று கண்டுபிடிக்க முடியாது.

எத்தனை தடவை மீண்டும் மீண்டும் முயற்சி செய்யவேண்டும்?
எப்பொழுது ஞானம் (இந்த சேர்க்கை) நமக்கு ஸித்தியாகும்? என்பது நம்மால் கணிக்க முடியாது.

இதன் காரணமாக தான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,
"கர்மன் ஏவ அதிகாரஸ்யே,
மா பலேஷு கதாசன |"
என்று சொல்லும் போது,
"உன் கடமையை செய்து கொண்டே இரு" என்கிறார்.

"பலன் எப்பொழுது கனிய வேண்டுமோ அப்பொழுது தானாக கனிந்து விடும்.
முயற்சி செய்து கொண்டே இரு" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

பகவத் கீதையில் இல்லாத உபதேசங்கள் உண்டா? ஸ்ரீ கிருஷ்ணரை தெய்வம் என்று புரிந்து கொள்ளாதவன், மனித வாழ்க்கையை வீண் செய்கிறான்.

இந்த யோகம் என்ற சேர்க்கை பல உண்டு.
ஒரு புத்தகத்தை திரும்ப திரும்ப படித்து, அதன் விஷயங்களை தனக்குள் சேர்ப்பவன் (யோகம்), கல்வி யோகி ஆகிறான்.

பல வித யோகத்தை(சேர்க்கை) பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார் என்று அறிகிறோம்.
"பகவானாகிய தன்னை அடைய, பல வழிகளை சொல்கிறார்.
பக்தி யோகம்,
கர்ம யோகம்,
ஞான யோகம் 
என்று பல யோக வழிகள் பற்றி சொல்கிறார்"

பக்தி யோகம் = ஸ்ரீ கிருஷ்ணனிடம் அன்பை (பக்தியை) எப்பொழுதும் நம் மனதில் சேர்ப்பதே பக்தி யோகம்.
செய்த பக்தியை, பகவானிடம் ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

கர்ம யோகம் = ஒழுக்கமான செயலை (கர்மா) எப்பொழுதும்  சேர்ப்பதே கர்மயோகம்.
செய்த கர்மாவை, பகவானிடம் ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

ஞான யோகம் = உலகம் நிரந்தமற்றது, ஆத்மாவே நான் என்ற உண்மையான அறிவை (ஞான) எப்பொழுதும் சேர்ப்பதே ஞானயோகம்.
இந்த ஜீவாத்மா, பரமாத்மாவின் அங்கம் என்று அறிந்து பகவானிடம் தன்னை ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

அதில்,
* கர்ம யோகத்துக்கு 'ஆசாரம்' அடிப்படை தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
உள்ளும் புறமும் ஒழுக்கமாக இருந்தால், கர்ம யோக வழியில் சென்று, பகவானை அடையலாம் என்கிறார்.

* பக்தி யோகத்துக்கு 'திடமான விசுவாசம்' தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார்.
உலகமே எதிர்த்து நின்றாலும், பகவான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருந்தால், பக்தி யோக வழியில் சென்று, பகவானான என்னை அடையலாம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

* ஞான யோகத்துக்கு 'திட  வைராக்கியம்' தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார்.
உலகம் பொய், நாம் நிச்சயமாக இந்த உடலை விட்டு ஒரு நாள் வெளியேறி விடுவோம். உலகம் நம்மை பொறுத்தவரையாவது  நிரந்தரமற்றது என்று எப்பொழுதும் நினைவில் கொண்டு, சுகம் துக்கம், மானம் அவமானம், வெற்றி தோல்வி, ஆரோக்கியம் ரோகம், எல்லாம் வந்தால் வரட்டும், கவலையில்லை என்று வைராக்கியத்தோடு இருந்தால், ஞான யோக வழியில் சென்று, பகவானை அடையலாம்.

நம் கண்ணுக்கு தெரியாத  தெய்வத்திடம் "திடமான நம்பிக்கையுடன் அன்பு (பக்தி) வை"
என்று பக்தி யோக முறைக்கு அடிப்படையாக சொல்லப்படுகிறது.

கண்ணுக்கு எதிரே தெரியும் ஒருவரிடம் அன்பு காட்டவே, நம்மால் முடியவில்லை.




பக்தி யோகம் என்ற முறையிலோ, 'கண்ணுக்கு இன்னும் புலப்படாத பகவானிடம் அன்பு வை' என்கிறது.

ஒருவனை பார்த்து பழகி கூட, நமக்கு அன்பு வராமல் இருக்கிறது, அது எப்படி பார்க்க முடியாத தெய்வத்திடம் அன்பு வைக்க முடியும்?
ஒருவரை பார்க்காமல், பேசி பழகாமல் அன்பு வைப்பது என்பது சாதாரண விஷயமில்லையே.

பகவானிடம் திடமான நம்பிக்கையுடன் கூடிய பக்தி (அன்பு) இல்லாமல், பக்தி யோகம் செய்வது வீண்.

பகவானிடம் திடமான நம்பிக்கையுடன் கூடிய பக்தியுடன் (அன்பு), பக்தி யோகம் செய்தால், பகவான் நம்மிடம் படிப்படியாக தான் இருப்பதை உணர வைப்பார், பேசுவும் செய்கிறார். நம் பாரதத்தில் பிறந்த எண்ணிலடங்கா மகான்களின் சரித்திரம் இதற்கு சான்று.

பிரகலாதன் என்ற சிறுவனுக்கு அடிப்படையாக இருந்தது இந்த திட நம்பிக்கையே.
கஷ்டம் வந்த காலத்திலும், பகவான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை துளி கூட விடவில்லை.
இந்த திட நம்பிக்கையை மனதில் சேர்த்து சேர்த்து(யோகம்) வைத்து இருந்தான் பிரகலாதன்.
இதற்கு பலனாக,  நாராயணன் நரசிம்மமாக காட்சி கொடுத்தார்.

பக்தி யோகம் செய்ய, குருவின் அனுக்கிரகம் தேவை. குரு இல்லாமல் நமக்கு இந்த திட நம்பிக்கை பகவானிடம் வரவே வராது.

காட்டுவாசியிடம் போய் கேட்டாலும் கடவுள் உண்டு என்பான்.
நாகரீகம் உள்ள ஒருவனிடம் கேட்டாலும் கடவுள் உண்டு என்பான்.
கடவுள் உண்டு என்று சொல்வது மனிதனுக்கு உள்ள அடிப்படை தகுதி.

மிருகத்திடன் கடவுள் உண்டா? என்று கேட்டால், அதன் மூளைக்கு இது புரியவே புரியாது.
நம்மை ஒருவர் படைத்து, நாம் வாழ உலகத்தையும் படைத்து இருக்கிறார் என்று மிருகத்தினால் உணர முடியாது.
ஆதலால் தின்று, தூங்கி, இன விருத்தி செய்து கொண்டு,  இருக்கும் காலம் வரை வாழ்ந்து சாகிறது.

நம்மை எல்லாம் ஒருவர் படைத்து இருக்கிறார் என்று பகுத்து அறியும் புத்தியுடைய மனிதனால் உணர முடிகிறது.
====
கடவுள் உண்டு என்று சொல்லும் இனமே மனிதர்கள் மட்டும் தான்.

மனிதனுக்கு மட்டுமே, அறிவு இருப்பதால் "கடவுள் உண்டு" என்கிறான்.

கடவுள் உண்டு என்று சொல்வது "மனித இயல்பு".

காட்டுவாசியில் ஆரம்பித்து ஹிந்து, முஸ்லீம், பௌத்தன், ஜைன, யூத என்று எவரும் "கடவுள் உண்டு" என்பதை மறுப்பதில்லை.

உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் அறிவு உள்ளவர்கள் என்பதால் தான், 98 சதவீத மனித சமுதாயம் 'கடவுள் உண்டு' என்று சொல்கிறது.

மீதம் உள்ள மனித சமுதாயம், மிருகத்தின் மூளை அளவுள்ள புத்தி கொண்டுள்ளதால், பயன்படுத்த முடியாத நிலையில், கடவுள் உண்டு என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

யோசிக்க முடியாத மிருகத்திடம்  "கடவுள் உண்டு" என்றால் புரியாது.
அதுபோல, சில மனித கூட்டத்துக்கும், யோசிக்கும் திறன் இல்லாமல் போவதால், அவர்களுக்கும் புரிவதில்லை.
இவர்களை கண்டு பரிதாபப்படலாம். அவ்வளவு தான்.

"கடவுள் இல்லை" என்று மிருகம் அளவிற்கு மூளை உள்ளவன் சொல்வதை ஆதரிப்பவன் ஹிந்துவாக இருந்தாலும், இஸ்லாமியனாக இருந்தாலும் அவன் 'தன் உள்ளுணர்வை, தன் அறிவை, தன் தெய்வத்தை' அவமானப்படுத்துகிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

"கடவுள் இல்லை" என்று சொல்பவன் அறிவில்லாதவன். அதாவது முட்டாள் மிருகம்.

மிருகத்திற்கு கடவுள் இருப்பது புரியாமல் இருப்பதற்கு காரணம் அது கடவுளை நேரில் பார்த்ததில்லை. பேசியதில்லை.

ஒரு நாய், தன் எஜமானனிடம் அன்பு செலுத்துவதற்கு காரணம், அவனை அது பார்த்தும், அவன் பேச்சை கேட்டும் இருக்கிறது.
கேட்டதாலும், பார்த்ததாலும் தான் அன்பு வருகிறது மிருகத்திற்கு.
பார்க்க இயலாத விஷயங்களில் மிருகத்திற்கு அன்பு வராது.

இதே போல, "கடவுள் இல்லை" என்று சொல்லும் கூட்டமும் மிருக அளவு கொண்ட புத்தி உடையவர்கள்.

நன்றாக கவனித்தால், இந்த முட்டாள் மிருக அளவு புத்தியுடைய, மனித கூட்டம் மட்டுமே "கடவுளை காட்டு.  காட்டு.. காட்டு" என்று கேட்பார்கள்.

மிருகத்தை போன்று, இவர்களும் பார்த்தால் தான், அன்பு வைக்க முடியும், நம்ப முடியும் என்கிற அளவில் மூளை உள்ளவர்கள்.

மனிதனால் மட்டுமே, கண்ணால் காணமுடியாவிட்டாலும், பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், அறிவை கொண்டு மட்டும் ஒருவனிடம் அன்பு செலுத்த முடியும்.

ராஜசோழன், திருவள்ளுவர், வீர சிவாஜி, ராமானுஜர், மஹாத்மா காந்தி இன்று இல்லை. நாம் பார்த்ததும் இல்லை.
விவேகானந்தர் இன்று இல்லை.
இன்று இருக்கும், நமக்கு பிடித்த தேச தலைவர்களை கூட நாம் நேரில் கண்டது இல்லை, பேசியதும் இல்லை.
இருந்தாலும் அவர்கள் நாட்டுக்கு செய்த சேவை, நமக்காக இவர்கள் செய்த தியாகம் போன்றவற்றை 'அறிவை' கொண்டு தியானிக்கும் போது, அவர்களிடம் ஒரு அன்பு உண்டாகிறது.
உறவு கொள்ள முடிகிறது.

அறிவு இருந்தால், பார்க்காமல் போனாலும், பேச முடியாமல் இருந்தாலும், ஆராய்ந்து பார்க்கும் போது, சிலர் மீது அன்பு வருகிறதே?

கண்ணால் காட்டினால் தான் எனக்கு புரியும் என்று இருக்கும் மிருக அளவு புத்தியுள்ள முட்டாளை என்ன செய்ய முடியும்? முட்டாள் முட்டாள் தானே.

இந்த உலகை மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள் உருவாக்கி இயக்கிக்கொண்டு இருக்கிறார் என்பதை கொஞ்சம் அறிவு இருந்தால் கூட புரிந்து கொள்வது எளிதாயிற்றே.

கடவுள் இருக்கிறார் என்பதை பொதுவாக மக்கள் புத்தியை பயன்படுத்தி, ஒத்துக்கொள்கின்றனர்.

98 சதவீத மக்கள், உலகில் 'கடவுள் உண்டு' என்று அறிவு சொல்வதால் நம்புகின்றனர். 'கடவுள் இருக்க வாய்ப்பு உண்டு' என்று அனுமானிக்கின்றனர்.

இன்னும் கொஞ்சம் மேலே போய், எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள், துக்கங்கள், சுகங்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள் போன்றவற்றை உணரும் போது, 'கடவுள் இருப்பது மட்டுமல்ல, அவர் நமக்கு உதவியும் செய்கிறார்' என்று அவ்வப்போது உணருகின்றனர்.

கடவுள் இருப்பதை புத்தியால் உணருவதும், கடவுள் நம்மை காக்கிறார் என்று அவ்வப்போது உணருவதும் பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிறது.

தான் சில இக்கட்டான காலங்களில் அதிர்ஷ்டவசமாக (கண்ணுக்கு புரியாத) காப்பாற்றப்படுவது இறை செயல் என்று உணரும் போது, 'கடவுள் இருக்கிறார்' என்ற நிலையை விட, ஒரு படி மேலே போய், 'தன்னை இந்த சக்தி (கடவுள்) காக்கிறது' என்றும் உணர்கிறான்.

அதற்கும் ஒரு படி மேலே போய், தனக்கும், அந்த கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு. அவரிடமிருந்து தான் நாம் வந்துள்ளோம். அதனால் தான், கடவுள் நம்மை  மறைமுகமாக நின்று காக்கும்போது, சில சமயங்களில் நம் புத்திக்கு புரிகிறது.
ஒரு குரு, உபதேசம் செய்து, நமக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் உள்ள சம்பந்தத்தை சொல்லும் போது, 'நம்மை காப்பவரே இவர் தான்' என்ற தெளிவு பிறக்கிறது.

இதுவே திட நம்பிக்கையாக மாறும் பொழுது,
"கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான்" என்று சந்தேகம் இல்லாமல் நம்பும் போது, அவன் தெய்வத்திடம் அன்பை (பக்தியை) செலுத்த ஆரம்பிக்கிறான்.
உலக பயத்தை விடுகிறான்.

யோகம் என்றால் சேர்க்கை என்று முன்னமே சொன்னது போல, தெய்வத்திடம் அன்பை (பக்தியை) திடமான நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்க, இவன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இறை பக்தி சேர ஆரம்பிக்கிறது (யோகம்).
இதுவே, நாளைடைவில், இவன் இதயத்தில் உள்ள காமம், கோபம், பொறாமை போன்ற குணங்கள் அழித்து, இதயம் சுத்தமாகி, அதில், இவன் தினமும் திட நம்பிக்கையுடன் அன்பு செய்த ஸ்ரீ கிருஷ்ணர் தானாகவே வந்து அமர்ந்து விடுகிறார்.
பக்தி யோகத்தில் ஸித்தி பெற்றவன், இதயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதால், பேரானந்தத்தை பெறுகிறான். இவர்கள் மோக்ஷம் என்ற பரமபத ஆனந்தத்தை இம்மையிலும் மறுமையிலும் அனுபவிக்கிறார்கள்.
இவர்களே யோகிகள். இவர்களே மகாத்மா. இவர்களை தரிசித்தாலே நமக்கும் பக்தி உண்டாகும்.

கடவுள் தன்னை, மனித சமுதாயத்துக்கு உணர செய்தாலும், மறைந்து இருப்பதற்கு காரணம், நாம் நம் தகுதியை இன்னும் உயர்த்த வேண்டும் என்பதற்காக தான்.

பக்தி யோகத்தில் முயற்சி செய்து, கண்ணால் கடவுளை தரிசித்தவர்கள் உண்டு. புரந்தரதாசர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று அடுக்கலாம்.

பக்தி யோகத்தில், திட விசுவாசம் (நம்பிக்கை) முக்கியம்.

இன்று பகவானை காண முடியாவிட்டாலும், "இருக்கிறார்" என்பதை அறிவு சொல்வதால்,
நம்முடைய இந்த நிலையில், பகவானை காண முடியவில்லை என்றாலும், அவரை காண முடியும் என்கிற நம்பிக்கையை (விசுவாசம்) வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பகவான் என்னை காக்கின்றார் என்பதை உணர்கிறேன். அவரின் இந்த அன்பு, எனக்கும் திடமாக உள்ளது என்று நம்பிக்கை வேண்டும்.

கடவுள் உள்ளார் என்று அறிவை கொண்டு எப்படி புரிந்து கொள்ள முடியும்?
சிறிய கல்லை எடுத்து வானத்தை நோக்கி வீசினால், அப்படியே வானத்தில் நிற்காமல் கீழே விழுந்து விடுகிறது.

உலகம் என்ற மிகபெரிய கல் உருண்டை ஆகாயத்தில் சுழன்று கொண்டே உள்ளது. அதுமட்டுமல்ல,
ஒரே மாதிரி சுழற்சியுடன் சுற்றுகிறது.
அந்த கல்லில் நாம் அனைவரும் குத்திட்டு ஒட்டிக்கொண்டு இருக்கிறோம்.
இது ஆச்சர்யமல்லவா?

இந்த பூமியை போல, நாமும் ஒரு சாட்டிலைட் விட்டு பார்க்கும் போது, இன்னும் சில உண்மை புரிகிறது.

வெளியில் பார்க்க சாட்டிலைட்டில் ஒரு ஆள் கூட இல்லாமல், தானாக சுற்றுவது போல தெரிந்தாலும், எங்கிருந்தோ ஒருவன் பூமியில் இருந்து கண்காணித்து இயக்குகிறான் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சாட்டிலைட்டை விட பல மடங்கு பெரிய இந்த உலகங்கள் ஒழுங்காக சுற்றுவதை பார்த்த பின்னும், இவை அனைத்தும் தானாகவே சுற்றுகிறது என்று நினைப்பவனை என்ன சொல்வது?

முற்பிறவி வரை மிருகமாக இருந்து, முதல் முறை, மனித பிறவியை இப்பொழுது தான் அனுபவிக்கிறான் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூளை வேலை செய்யாத இவர்களிடம் பரிதாபம் மட்டுமே படலாம்.

ஒரு ரோபோ தானாக வேலை செய்வது போல தோன்றினாலும், மோட்டார் தானாக ஓடினாலும், அதை ஒருவன் ஸ்டார்ட் செய்து இயக்கி உள்ளான் என்று கொஞ்சம் பகுத்தறிவு உள்ள மனிதனுக்கு கூட புரியுமே.

'கடவுள் இல்லை' என்று சொல்பவனை விட, 'எங்கேயோ ஒரு கடவுள் இருக்கிறார், அவருக்கு பயப்பட வேண்டும்' என்று காட்டுமிராண்டி தனமாக சொல்லும் கூட்டம் கூட உயர்ந்தவர்கள் தான்.

நமக்கு ஆசாரம், அல்லது திட விசுவாசம் அல்லது திட வைராக்கியம் என்று ஏதாவது ஒன்று இருக்கும் பட்சத்தில், எந்த யோகத்தின் வழியிலும் சென்று பகவானை உணரலாம், தரிசிக்கலாம், மோக்ஷம் அடையலாம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் காட்டுகிறார்.

பகவானை தரிசிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவன், ஆசாரம்(நல்லொழுக்கம்) என்ற தகுதி இருக்குமாகில், கர்மாவை (செயலை) யோகமாக(சேர்க்கையாக) செய்து, அதை பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஞான யோகம், பக்தி யோகம் குரு இல்லாமல் புரியாது. என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாத போது, திரும்ப திரும்ப எப்படி செய்ய முடியும்? ஞான மார்க்கத்துக்கும், பக்தி மார்க்கத்துக்கும் குருவே துணை.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம். வாழ்க ஹிந்துக்கள். 


Wednesday 1 March 2017

ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் நாம் கடைபிடிக்க சொன்ன வழி என்ன?

ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் நாம் கடைபிடிக்க சொன்ன வழி என்ன?
தேவையான காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் வழியை கடைபிடிக்காமல் நாம் இருந்ததால், இந்தியா முழுவதும் எந்த நிலைக்கு ஆனது?


இனியும் ஸ்ரீ கிருஷ்ணரின் வழியில் செல்லாமல் இருந்தால் என்ன ஆகும் ?

நம் வரலாற்றை நோக்கி ஒரு அலசல் :

பொதுவாக, நம் ஹிந்து தேசத்தில், அனைவரும் தர்மம் தெரிந்தவர்கள். மிகமிக நல்லவர்கள்.

இவர்களிடம் உள்ள பெரிய தவறு என்னவென்றால்,
ஒரு "அதர்மம் செய்பவனை நேரில் கண்டாலும் அவனை எதிர்க்காமல், பதில் அடி கொடுக்காமல், அதர்மம் செய்பவர்களை தர்ம வழியிலேயே திருத்த முயற்சி செய்தனர் அல்லது அமைதி காத்தனர்".

"ஒரு கன்னத்தை காட்டினால் மறு கன்னத்தையும் காட்டு"
என்பது இது போன்ற செயல் தான்.
இது நம் ஹிந்து மதத்தில் உள்ள சந்யாசிகளுக்கும், ப்ராம்மணர்களுக்கும் சொல்லப் பட்டு இருக்கிறது.
ஏகநாதர் என்பவர் ஓரு ப்ராம்மணர். இவர் பண்டரிநாதனின் பக்தர்.
இவர் காலத்தில் அக்பரின் இஸ்லாமிய சாம்ராஜ்யம் இந்தியா முழுவதும் பரவி இருந்தது.
ஹிந்து அரசர்கள் பலர் கப்பம் கட்டியும், சில வீர அரசர்கள் பாரதத்தை இவர்களிடம் காக்கவும் சண்டை இட்டனர்.

இப்படிப்பட்ட காலத்தில், இவர் ஒரு நாள், பாண்டுரங்கனின் திருநாமத்தை சொல்லியபடியே கோதாவரி நதியில் நீராடிவிட்டு, திரும்பி வந்து, ஜெபம் செய்யத் தொடங்கினார்.

இதை பார்த்த ஒரு மிலேச்சன் (ஹிந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாதவன்) பாண்டுரங்கனை தியானித்து ஜெபம் செய்து கொண்டிருந்த ஏகநாதரின் மேல், தாம்பூலம் கலந்த எச்சிலை அவன் வாயிலிருந்து முகத்தில் காரி உமிழ்ந்தான். ஹிந்துக்கள் தன்  நாட்டில் வாழ முடியாத நிலை.
ஆனால், ஏகநாதர் அவனை கோபிக்கவில்லை.

பாண்டுரங்கனின் திருநாமத்தை சொல்லியபடியே மீண்டும் கோதாவரி நதியில் நீராடிவிட்டு, திரும்பி வந்து ஜெபம் செய்யத் தொடங்கினார்.
மீண்டும் துப்பினான்.

இது போல 108 தடவைகள் முகத்தில் துப்பி கொண்டே இருந்தான் அந்த மிலேச்சன் .
கடைசியில் அந்த முரடன் ஓய்ந்து போய் , இவரின் பொறுமை என்ற தர்மத்தை பார்த்து, ஏகநாதரின் காலில் விழுந்து,
"சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள்" என்றான்.

ஏகநாதரோ,
"உன்னால் எனக்கு இன்று பாண்டு ரங்கனின் பெயரை 108 தடவை குளித்து விட்டு சொல்லும் பாக்கியம் ஏற்பட்டது" என்றார்.
இது பிராம்மண லட்சணம். ஸாது லட்சணம்.

இது கோவிலில் தொண்டு செய்யும் ஒரு ப்ராம்மணனுக்கு என்று உள்ள தர்மம்.

ஆனால் இதை ஒரு அரசனோ, நாட்டை காக்கும் வீரர்களோ எடுத்து கொண்டால் அந்த தேசம் அழிய வேண்டியது தான்.

இந்த காரணத்திற்காகவே ஸ்ரீ கிருஷ்ணர்
"அதர்மத்தை அதர்மத்தாலேயே வெற்றி கொள்" என்கிறார்.
பாரத போரில் அதை நமக்கு காட்டினார்.

1025AD, முகம்மது கஜினி 17 முறை குஜராத் வழியாக இந்தியாவில் நுழைய பார்த்தான். 17 முறையும் தோற்றான்.
17 முறையும் தோற்று, 18வது முறை ஹிந்து அரசனை வென்று, நாட்டை சூறையாடி,  சோம்நாத்தில் உள்ள சிவ ஆலயத்தை இடித்து, பல கோடி மதிப்புள்ள செல்வங்களை கொள்ளை அடித்து சென்றான்.
இப்படி நம் வீட்டில் கொள்ளை அடுத்தவனை புகழ்ந்து,
"17 தடவை தோற்றாலும் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்" என்று குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் புகுத்தி, ஒரு திருடனை புகழும் அவலம், இந்தியாவில் மட்டும் தான். கொள்ளை அடித்த தங்க வைடூரிய குவியலை எதுத்துக்கொண்டு தன்  நாட்டில் குவித்தான்.
17 முறையும், முகம்மது கஜினியை தோற்கடித்த ஹிந்து அரசனை பற்றி பாட புத்தகத்தில் இல்லை. 
17 முறை வெற்றி கொண்ட ஹிந்து அரசன் வீரனா? ஓடியவன் வீரனா?


17 முறையும் அட்டகாசம் செய்த ஒரு திருடனை, ஒவ்வொரு தடவையும் மன்னித்து அனுப்பிய ஹிந்து அரசன், ஏகநாதர் செய்த செயலுக்கு ஒப்பானது.

ஏகநாதர் ப்ராம்மணர். பரவாயில்லை.
அரசனாய் இருந்து தண்டிக்காமல்,  ஒரு முறை, இரு முறை அல்ல, 17 முறை மன்னித்தார்.

ஒரு விதத்தில் இந்த ஹிந்து அரசனின் நல்ல குணம் தெரிந்தாலும், நாட்டை இப்படி சாதுவாக இருந்து காக்க முடியாது என்பதே நாம் வரலாற்றை படிக்கும் போது கற்க வேண்டிய பாடம்.

ஒருமுறை, இந்த ஹிந்து அரசன் கிருஷ்ணரின் வழியை பின் பற்றி இருந்திருந்தால் !! முதல் படையெடுப்பிலேயே இந்த திருடன் கொல்லப்பட்டு இருப்பான்.
பாம்பு "விஷம் கக்கும்" என்று தெரிந்தும், மன்னித்து விட்டதன் விளைவே, 1947ல் இந்தியர்கள்  பிச்சைகாரர்களாக விடப்பட்டு, இன்று இந்தியா வளரும் நாடாக ஆனதற்கு காரணம்.
இப்பொழுது இருக்கும் பல கிழக்கு நாடுகள் இந்தியாவின் செல்வத்தை கொண்டே அவர்கள் நாட்டை வளர்த்துள்ளது, கோஹினூர் வைரம் வரை.

இப்படி நம் வரலாறு படித்து தெரிந்து கொள்வதால், நமக்கு என்ன பயன்?
நாம்
"இன்று செய்யும் சில தவறுகள்" 
"நம்மால் முடிந்தும், செய்யாமல் அமைதியாக விட்ட நல்ல காரியங்கள்", 
அடுத்த பல தலைமுறைகளை, நம் செயலால் கஷ்டப்பட வைத்து விடும்.

ஒரு வேளை, இந்த ஹிந்து அரசன் கிருஷ்ணரின் வழியில் சென்றிருந்தால், 1025 ADயில் ஆரம்பித்த கொள்ளை, 1947 AD வரை தொடர்ந்து இருக்காது. இதுவே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

  • தீயவனுக்கு மன்னிப்பு கூடாது.
  • நல்லவர்களை பலர் சேர்ந்து காக்க வேண்டும். நல்லவர்களை இனம் கண்டு நட்பு கொள்ள வேண்டும்.
  • தீயவனை தீயவனாகவே எதிர்க்க வேண்டும்.
  • அதர்மம் செய்பவர்கள் எப்பொழுதும் அதர்மமே பேசுவார்கள்.
  • அதர்மம் செய்பவர்கள் தர்ம வழியில் இருப்பவர்களை கிண்டல் செய்வார்கள்.

அதர்மம் செய்பவர்களையும் தர்மம் பேச வைக்கலாம்.எப்படி?
அதர்மம் செய்பவர்களும் ஒரு சமயம் தர்மம் பேசுவார்கள். எப்போது ?

தனக்கு ஒரு அதர்மம் நடக்கும் போது, அதர்மம் செய்பவர்களும் தர்மம் பேசுவார்கள்.
இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணர்
"அதர்மத்தை அதர்மம் கொண்டு பதில் கொடு.
அப்பொழுது தான் அதர்மம் செய்பவனும் 'தர்மம் பேசுவான்'" என்கிறார்..
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வது "தரம் சூக்ஷ்மம்"


ஒரு திருடன் "ஏன் திருடுகிறாய்?" என்று கேட்டால், தான் செய்யும் அதர்மத்துக்கு பல வித நியாயம் கற்பிப்பான்.
தான் செய்தது அதர்மம் என்று ஒப்புக்கொள்ளவே மாட்டான்.

அதே திருடன் வீட்டில் 10 பவுன் நகை திருடு போனால்,
"ஐயோ ! இது நியாயமா? தர்மமா?"
என்று தர்மம் பேசுவான்.

இந்த சம்பவம் ராமாயணத்திலும், பாரத போரிலும் காண்கிறோம்.

ஹனுமான் கடலை தாண்டி இலங்கையில் இறங்கிய போது, ஒரு பெண் ராக்ஷஷி (லங்கினி) எல்லையை காவல் (lady defence force in srilanka 😊) காத்துக் கொண்டிருந்தாள்.
பெண்ணாக இருக்கிறாளே ! என்று, இவளை அடிக்க வேண்டாம், மெதுவாக உள்ளே சென்று விடுவோம் என்று ஹனுமான் தீர்மானித்து உள்ளே நடக்கலானார்.
இதை பார்த்த இவள், "என்னை மீறி உள்ளே செல்ல முடியாது, முடிந்தால் என்னிடம் போர் செய்" என்றாள்.

அடிக்க மனம் வராமல், லேசாக தன் இடது கையால் ஒரு தட்டு தட்டினார். அதுவே பெரிய அடியாக அவளுக்கு தெரிந்தது. தலை சுற்றியது.

அது வரை "என்னிடம் சண்டைக்கு வா" என்று அழைத்த லங்கினி திடீரென்று தர்மம் பேசலானாள்..
"இப்படி ஒரு பெண்ணை அடிக்கலாமா ? இது நியாயமா?" 
என்று புலம்பி, "உள்ளே தாராளமாக செல்லுங்கள்" என்று வழி விட்டாள்.

இதே போல வாலியும் தன் சொந்த தம்பி உயிருடன் இருக்கும் போது, தம்பியின் மனைவியை தன் மாளிகையில் வைத்துக்கொண்டு அட்டகாசம் செய்தான்.
பார்க்கும் இடமெல்லாம் துரத்தி துரத்தி தன்  தம்பி சுக்ரீவனை அடிப்பான். நாடு துரத்தினான்.


ராமர் மறைந்து நின்று அம்பு விட்டு கொல்ல, சாகும் தருவாயில் தர்மம் பேசலானான்.
"மறைந்து நின்று கொல்லலாமா? நியாயமா? தர்மமா ?" என்று புலம்பினான்.

பாரத போரில், ஒரு சமயம் அர்ஜுனனின் தேர் சக்கரம் குழியில் மாட்டிக் கொள்ள, ஸ்ரீ கிருஷ்ணரே தோள் கொடுத்து சக்கரத்தை தூக்க, இந்த சமயத்தில் கர்ணன் சர மாறியாக அம்புகளை ஸ்ரீ கிருஷ்ணர் மீது செலுத்தினான்.
ஸ்ரீ கிருஷ்ணர், கர்ணனின் செயலை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார்.
அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் தேர் உடைந்த போது, தேர்  சக்கரத்தை சரி செய்ய கீழே இறங்கும் அபிமன்யுவை, கர்ணன் அம்பு விட்டு பலருடன் சேர்ந்து கொன்றான்.

இன்னொரு சமயம், கர்ணன் தேர் மாட்டிக்கொள்ள, கர்ணனே சக்கரத்தை தூக்க வேண்டிய நிலை வந்த போது, அர்ஜுனன் தர்மப்படி சண்டை இடக்கூடாது என்று காத்து இருக்க, ஸ்ரீ கிருஷ்ணர், கர்ணனின் அதர்மத்தை காட்டி,
"அவனை அவன் வழியிலேயே அடித்து வீழ்த்து" என்றார்.
அடிபட்டு விழுந்த கர்ணன், சாகும் தருவாயில் கண்ணனை பார்த்து
"இப்படி தர்மம் மீறி செய்யலாமா ?" என்று கர்ணனின் வாயிலும் தர்மம் வந்தது.
கண்ணன் கர்ணனை பார்த்து
"உனக்கும் தர்மம் என்றால் என்ன என்று கடைசியாக ஞாபகம் வந்ததே!" என்றார்.


  • தர்ம வழியை பின்பற்றுபவனிடம், நீயும் தர்ம வழியை காட்டு.
  • அதர்ம வழியில் இருப்பவனை, அவன் செய்த அதர்ம வழியிலேயே சென்று ஒரு பாடம் புகட்டு.



"ஒரு கன்னத்தை காட்டு அடிக்கிறேன்", என்பவனுக்கு "மறு கண்ணத்தையும் காட்டு" என்பது சந்யாசிகளுக்கு அழகாக இருக்கலாம்.

நாட்டை காக்க, தன் கலாச்சாரத்தை காக்க, தன் வீட்டை காக்க இது ஒருபோதும் பயன்படாது என்பதே நம் வரலாறு காட்டுகிறது.

"ஒரு கன்னத்தை காட்டு" என்று கேட்பவனை, அவன் அடிப்பதற்கு முன்னரே, அவன் இரு கன்னத்திலும் சேர்த்து அறைந்து விடு.
இப்படி செய்வதாலேயே, இது போன்று அதர்மமாய் கேட்பவர்கள் உடனே தர்ம வழிக்கு வருவர்.

மேலும் தர்ம வழியில் நடப்பவர்கள் (ஏகநாதர் போன்றோர்) இது போன்ற தீயவர்களிடம் தப்புவார்கள்.

இதுவே ஸ்ரீ கிருஷ்ணர் காட்டும் வழி - "தர்ம சூக்ஷ்மம்".
இந்தியாவிற்கு இப்போது மிக தேவையான தர்மம் இது.

கலியுகம் பிறக்க போகிறது என்பதை அறிந்த பகவான் "நாராயணன்" ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்து, நமக்கு சொன்ன முக்கிய பாடம் இதுவே.

கலியில்,

  • அதர்மம் பேசுபவர்கள், 
  • நம் கலாச்சாரத்தை கேலி செய்பவர்கள், 
  • தெய்வ நிந்தை செய்பவர்கள், 
  • தர்ம வழியில் இருக்கும் சாதுக்களை கிண்டல் செய்பவர்கள் 

அதிகம் இந்தியாவில் படை எடுப்பார்கள்.

  • இந்தியாவில் உள்ள மக்களை பணம், பயம் கொண்டு மாற்றுவார்கள் 

என்பதை குறிப்பாக உணர்த்தி, தர்மம் மட்டும் தெரிந்த இந்த ஹிந்துக்களுக்கு "தர்ம சூக்ஷ்மம்" என்ற ஒரு விஷயத்தை அருளினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

கஜினி காலத்தில் ஏதோ காரணத்திற்காக, தர்ம சூக்ஷ்மம் சமயத்தில் பயன் படுத்தபடவில்லை.
வரலாற்றில் எங்கும் காண முடியாதபடி 17 முறையும் ஒரு திருடனை மன்னித்தனர்.

இனி இந்த தவறை ஹிந்துக்கள் செய்தால்,
மிலேச்ச மதத்தில் சேர்ந்தோ, அல்லது
யூதர்கள் போல சிதறி நாடோடிகள் போல வாழ வேண்டியது தான்.

ஹிந்துக்கள் ஒன்று படுவோம்.
நம் தர்மத்தை எதிர்க்கும் அதர்மவாதிகளை அவர்கள் வழியில் சென்று அடக்கி, தர்மம் பேச வைப்போம்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka