Followers

Search Here...

Showing posts with label பெரியாழ்வார். Show all posts
Showing posts with label பெரியாழ்வார். Show all posts

Sunday 26 July 2020

பாசுரம் (அர்த்தம்) - "தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த". கண்டம் என்னும் கடிகையில் (தேவப்ரயாகையில்) வீற்றுஇருக்கும் ராமபிரானை தொழும் பாசுரம். பெரியாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

பரவாசுதேவன் நாராயணன், ராமபிரானாக அயோத்தியில் அவதாரம் செய்து விட்டார்.

வனவாச சமயத்தில் பரத்வாஜ ரிஷியை சந்தித்தார் ராமபிரான். பிறகு சித்ரகூடம் சென்று தங்கி இருந்தார்.

14 வருட வனவாசத்தில்,
அயோத்தியில் ஆரம்பித்து, ராமேஸ்வரம் வரை நடந்தே வந்தார் ராமபிரான்.

ராமபிரானின் பாதம் படும் பாக்கியத்தை அயோத்திக்கு தெற்கே உள்ள பாரத தேசங்கள் முழுவதும் பெற்றது.



இலங்கையில் இருந்த ராக்ஷஸன் ராவணனின் தலையை கொய்து, அவன் தம்பி விபீஷணனுக்கு முடி சூட்டிவிட்டு, அயோத்தியில் இருந்து இலங்கை வரை தன் ஆளுமையை பறைசாற்றினார் ராமபிரான்.

பிறகு, சீதா தேவியுடன் பட்டாபிஷேகம் செய்து, அயோத்தியை அரசாட்சி செய்து கொண்டிருந்தார்.

அயோத்தியில் ஆரம்பித்து, ராமரின் பாதம் தெற்கு பாரதம் முழுக்க பட்டுவிட்டது.
ஆனால், அயோத்திக்கு மேல் உள்ள ஹிமாசலம் போன்ற வ்டபாரத தேசங்கள் ராம பாதம் கிடைக்காமல் இருந்தது.

"புனிதமான கங்கை நதி பாயும் ஹிமாலயத்திலும் ராமபிரான் பாதம் படவேண்டும்"
என்று ஆசைப்பட்டார் பரத்வாஜ ரிஷி.

அதற்காக கண்டம் என்னும் கடிகையில், சித்ரகூடம் போலவே ஒரு குடில் அமைத்து, அயோத்தி மன்னன் னை அழைத்தார்.
பரத்வாஜ ரிஷி அழைப்பை ஏற்று, ராமபிரான் புனிதமான கங்கை ஓடும் இந்த கடிகையில் வந்து சிலகாலம் தங்கினார்.

இந்த 'கடிகை' என்ற திவ்ய தேசமே 'தேவப்ரயாகை' என்றும் அழைக்கபடுகிறது.

இங்குள்ள ரகுநாத் கோவிலில், ராமபிரான் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.

"பாரத தேசம் முழுவதும் ராம ராஜ்யமே"
என்று பறைசாற்றினார்.



"கங்கையில் நின்று, எங்கும் தன் புகழை பரப்பி, பாரத தேசம் முழுவதும் ஆளும் என் புருஷோத்தமனே"
என்று பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்கிறார் இந்த பாசுரத்தில்.

தங்கையை மூக்கும்
தமையனைத் தலையும் தடிந்த
எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழாய் இருந்து
அரசாண்ட எம் புருஷோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடகிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற
கண்டம் என்னும் கடிநகரே
திருமொழி (பெரியாழ்வார்)
கண்டம் என்னும் கடிநகர், இன்று "தேவப்ரயாகை" (Uttarakhand) என்ற பெயருடன் இருக்கிறது.

வீட்டில் உள்ள வாளி ஜலத்தில் குளிக்கும் போது "கங்கே கங்கே" என்ற சொன்னால் கூட, அந்த சொல்லே குளிப்பவனின் பாவங்களை போக்கி, புனிதமாக்கிவிடும். (கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடகிற்கும்)

'கங்கை' என்ற சொல்லுக்கே அத்தனை மகத்துவம் சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட பெருமைமிகு கங்கை, கடிகை என்ற தேவப்ரயாகையில் ஓடிக்கொண்டு இருக்க, ராமேஸ்வரம் முதல் ஹிமாச்சலம் வரை தன் பாதம் பதித்த ராமபிரானை கண்டு (எம் தாசரதி போய் எங்கும் தன் புகழாய் இருந்து அரசாண்ட எம் புருஷோத்தமன் இருக்கை),
'அந்த கங்கையில் மேல் நின்ற என் புருஷோத்தமனே' என்று ராமபிரானை கை தொழுது சேவிக்கிறார், பெரியாழ்வார். (கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற)

ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார், வடதேசத்தில் உள்ள  தேவப்ரயாகை வரை சென்று ராமபிரானை சேவித்து இருக்கிறார் என்பது தெரிகிறது.
"ராமபிரான் பாரத தேசம் முழுவதும் தன் பாதத்தை பதித்து, கங்கையில் வந்து ரகுநாதனாக நிற்கிறார். அந்த ரகுநாதனை தொழுவோம்"
என்று மட்டும் பெரியாழ்வார் சொல்லி இருக்கலாமே!
ஆனால்,
ஏன், சூர்பனகை மூக்கை அறுத்த, அவள் அண்ணன் ராவணன் தலையை அறுத்த ராமபிரான் என்று சேர்த்து சொன்னார்?

ராக்ஷஸ தாயாருக்கும், ரிஷியான விஸ்ரவசுக்கும் பிறந்தவன் ராவணன். ராவணனும் ஒரு விதத்தில் பிராம்மணன். வேதம் கற்றவன். 
பெரியாழ்வார் பிராம்மணர்.
இப்படி ராவணன் தலையை கொய்து எறிந்த ராமபிரான் என்று சொல்ல காரணம் என்ன?

இதற்கான காரணத்தை பெரியவாச்சான் பிள்ளை சொல்லியிருந்தாலும், அந்த அர்த்தங்கள் நமக்கு கிடைக்காமல் போய் விட்டது.
அதற்கு பின் வந்த மணவாள மாமுனிகள், பெரியாழ்வார் என்ன காரணத்தினால் இப்படி சொன்னார்? என்று நமக்கு காட்டுகிறார்.

உண்மையான பக்தன் பெருமாளையும், பிராட்டியையும் சேர்த்து சேவிக்கவே விரும்புவான். பிரித்து வைக்க விரும்பமாட்டான்.
ஹனுமான் ராமபிரானையும், சீதையும் சேர்க்க பாடுபட்டார். பிரிந்து இருப்பதை கண்டு வருத்தப்பட்டார்.
சேர்த்து வைக்க ஆசைப்பட்ட ஹநுமானுக்கு ராமபிரான் பெரும் புகழை கொடுத்தார்.



ஹனுமானுக்கு கோவில் காட்டினால், அங்கு ஒரு சிறிய சன்னதியில் கூட ராமபிரான் இருக்க சம்மத்தித்து விடுகிறார்.
ராமருக்கே கோவில் காட்டினாலும், அங்கு இருக்கும் சிறு ஹனுமான் சன்னதியை சுற்றுபவர்களே அதிகம்.
ஹநுமானுக்கு ஏன் எந்த ஏற்றம்? 
பெருமாளையும், பிராட்டியையும் சேர்த்து சேவிக்க ஆசைப்பட்டதால், ஹநுமானுக்கு எந்த ஏற்றம் கிடைத்தது.
பெருமாளை பிராட்டியிடமிருந்து பிரித்து பார்க்க ஆசைப்பட்டாள் - 'சூர்ப்பனகை'.
இந்த பாபத்துக்கு மூக்கு அறுபட்டு தண்டிக்கப்பட்டாள்.

பிராட்டியை பெருமாளிடமிருந்து பிரித்து பார்க்க ஆசைப்பட்டான் - 'ராவணன்'.
தலையே போனது அவனுக்கு.

பக்தன் 'பெருமாளையும் பிராட்டியையும் பிரித்து பார்க்க கூடாது' என்று நமக்கு சொல்லவே  பெரியாழ்வார் "தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த" என்று மணவாள மாமுனிகள் நமக்கு விளக்குகிறார்..

ராமபிரானையும், சீதாதேவியையும் சேர்த்தே வணங்குவோம்.
ஹநுமானை போல, பெருமையை அடைவோம்.

குருநாதர் துணை.



Sunday 5 April 2020

பாசுரம் (அர்த்தம்) - கோட்டுமண் கொண்டு... பெரியாழ்வார் (மதுரை) கள்ளழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கோட்டு மண் கொண்டு இடந்து 
குடம் கையில் மண் கொண்டு அளந்து மீட்டும் 
அஃது உண்டு உமிழ்ந்து விளையாடு 
விமலன் மலை
ஈட்டிய பல்பொருள்கள் எம்பிரானுக்கு அடி உறையென்று
ஓட்டரும்தண் சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே
- திருமொழி (பெரியாழ்வார்)

வராக அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) பிரளய ஜலத்தில் இருந்து தூக்கிய (இடந்து) அதே பகவான் (கோட்டு மண் கொண்டு இடந்து)




வாமன அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) பலிசக்கரவர்த்தியிடம் இருந்து மீட்க உலகை அளந்த அதே பகவான் (குடம் கையில் மண் கொண்டு அளந்து மீட்டும்)

கிருஷ்ண அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) உண்டு, லோகங்கள் அனைத்தும் தனக்குள் அடக்கம் என்று யசோதையிடம் லீலை செய்த (விளையாடு) அதே பகவான் (அஃது உண்டு உமிழ்ந்து விளையாடு)

இந்த அழகர் மலையில் கள்ளழகனாக வீற்று இருக்க (விமலன் மலை)

இங்கு வாழும் பலதரப்பட்ட பக்தர்களான கள்ளர்கள், மறவர்கள், பிராம்மணர்கள் எவரானாலும், தனக்கு கிடைத்த கேழ்வரகானாலும், ஆடு கோழியானாலும், பால், நெய் என்று எந்த பொருளானாலும் (ஈட்டிய பல்பொருள்கள்)
அதில் ஒரு பாகம் என் அழகருக்கு (எம்பிரான்) என்று உரைத்து அவர் பாதத்தில் சமர்ப்பித்து விடுகிறார்கள் (எம்பிரானுக்கு அடி உறையென்று).

அழகர் பெருமாள் ஜாதி பார்க்காமல், குணம் பார்க்காமல் இங்கு மட்டும் தான், அவரவர்கள் ஜாதிக்கு ஏற்ப, அவரவர்கள்  பேச்சுக்கு ஏற்ப, அவரவர்கள் நாகரீகத்து ஏற்ப, அவரவர்கள் சாப்பாடுக்கு ஏற்ப, அவரவர்கள் குணத்திற்கு ஏற்ப பழகுகிறார்.

பொருளை கொள்ளை அடிக்கும் கள்ளர்களின் மத்தியில் நின்று கொண்டு, கள்ளர்களின் மனதையும் கொள்ளையடிக்கும் கள்ளனுக்கு கள்ளனாக கள்ளழகர் இங்கு இருக்கிறார்.

ஸ்ரீரங்க நம்பெருமாள் போல இங்கு கள்ளழக பெருமாள் இருக்க மாட்டார். 
அங்கு ஸ்ரீரங்கபெருமாள், யார் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்.
இங்கோ,
கம்பு சாப்பிடுவீர்களா? என்று கேட்டால், "சாப்பிடுவேனே !" என்று சொல்வாராம் கள்ளழக பெருமாள்.

"கள்ளர்களை போல கருப்பு துணி கட்டி கொள்வீர்களா?"
என்று கேட்டால், "சரி" என்று கட்டி கொள்வாராம்.

பெருமாள் ஒரு நாள் கருப்பு துணி கட்டிக்கொள்ளும் அதிசயம் அழகர்மலையில் மட்டுமே காண முடியும்.
கள்ளர்களும் ரசிக்க கருப்பு துணி, கருப்பு தொப்பி அணிந்து கொண்டு, கையில் ஒரு கோலுடன் தரிசனம் தருகிறார் அழகர்.

அழகரை பார்த்தால் அனைவருக்குமே என் பெருமாள் (எம்பிரான்) என்று தோன்றிவிடும்.

மற்ற ஊர்களில் பெருமாளுக்கு நேரடியாக எதையும் சமைத்து நெய்வேத்யம் செய்து விட முடியாது.


பெருமாள் இங்கு மிகவும் சுலபமாக இருப்பதால்,
அழகர்மலையை சுற்றி ஆயிரக்கணாக்கான மாக்கள், நூபுர கங்கையில் (சிலம்பாறு) ஸ்நானம் செய்து விட்டு,
தாங்களே அடுப்பு மூட்டி, பொங்கல் வைத்து பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யும் அழகை நாம் ரசிக்கலாம். 

சமயத்தில், தான் சாப்பிடும் ஆடு கோழியை கூட இவர்கள் சமர்ப்பிக்க இந்த பெருமாள் அதை ஏற்கிறார்.

இப்படி பிரார்த்தனை எல்லாம் இங்கு பலித்து விடும் என்பதால்,
பெரியாழ்வார் பெற்ற ஆண்டாள், ஸ்ரீ ரங்க பெருமாளை மணக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, நம் அழகருக்கு பொங்கல் செய்து சமர்ப்பித்தாள். இதை ஆண்டாளே  பாடுகிறாள்.

கள்ளர்கள் முதல் ஆழ்வார்கள் வரை, பழகுவதற்கும், ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறவும் அனுகிரஹிக்கும் பெருமாளாக கள்ளழகர் இருக்கிறார்.

சித்ரா பௌர்ணமி அன்று, ஒவ்வொரு பக்தன் தனக்கு சமர்ப்பிக்க ஆசைப்படும் உணவை ஏற்றுக்கொள்ள,
தானே வெயிலை பார்க்காமல், அழகர் மலையை  (மாலிருஞ்சோலை) விட்டு கிளம்பி, ஒவ்வொரு வீடாக நுழைந்து, அமர்ந்து, அவர்கள் கொடுக்கும் உணவை ஏற்று கொண்டு வைகை நதி செல்லும் வரை அனைவரிடமும் பழகி கொண்டே செல்கிறார். 




லட்சம் ஜனங்கள் இந்த அழகரை பார்க்க கூடும் அழகை கண் படைத்தவர்கள் காண வேண்டும். நம் வீட்டு பெருமாள் போல பழகும் அழகை மதுரையில் காணலாம். (ஓட்டரும்தண் சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே)

Monday 30 March 2020

பாசுரம் (அர்த்தம்) - அடியோமோடும் நின்னோடும்... பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம், பல்லாண்டு!
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும், பல்லாண்டு!
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
--  பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம் (திருமொழி

தெய்வத்திடம் "சாமானியன் பழகும் முறை" வேறுபடுகிறது. 



தெய்வத்திடம் "பக்தன் பழகும் முறையும்" வேறுபடுகிறது.

"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!என்று சாமானியன் நினைக்கிறான்.

"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமேஎன்று பக்தன் நினைக்கிறான்.
"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே" என்று பக்தன் கேட்க,
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா, 
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.

பக்தனான பெரியாழ்வாருக்கு "பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற, 
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம் ஆண்டு" 
என்று மங்களாசாசனம் செய்கிறார். 

"பெருமாள் மட்டும் பல்லாண்டு இருந்தால் போதுமா? 
பெருமாளுக்கு பல்லாண்டு பாடும் பக்தனும் பல்லாண்டு இருக்க வேண்டுமே" 
என்று நினைவு வர, பெருமாளும் (நின்னோடும்), பக்தனும் (அடியோமோடும்) பிரியாமல் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.



அதையே
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 
என்கிறார்.


அடுத்ததாக பெருமாளின் ஸ்ரீவத்சம் உடைய திருமார்பில் பிராட்டி இருக்க, மஹாலக்ஷ்மி  தாயாருக்கும் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
என்கிறார்.

பெருமாள் மட்டுமே அழகு, அவர் கையில் வைத்து இருக்கும் சக்கரமும் (சுடராழி), சங்கும் (பாஞ்சசன்யமும்) கூட அழகாய் இருக்க, 
அந்த சங்கு சக்கரத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.




பாஞ்சசன்யம் (சங்கும்) பெருமாள் கையில் தான் உள்ளது.
பெருமாள் பெரியாழ்வாருக்கு  எதிரில் தான் காட்சி கொடுக்கிறார். 

கண் எதிரே தெரியும் பாஞ்சசன்யத்தை பார்த்து, "இந்த பாஞ்சசன்யம்" என்று சொல்லாமல்,
"அந்த பாஞ்சசன்யம்" (அப் பாஞ்சசன்யமும்) 
என்று குறிப்பிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.

ஏன் அப் பாஞ்சசன்யமும் என்று குறிப்பிட்டு சொன்னார்?
அவர் மனதை அறிந்த மகான்கள் அதன் ரகசியத்தை நமக்கு சொல்கிறார்கள்.
பெருமாள் வைத்திருக்கும் சங்கு வெண்மையானது
அன்ன பக்ஷியும் வெண்மையானது.
அன்ன பக்ஷிக்கு ஒரு பக்கம் கொண்டையும், கூரான மூக்கும் இருப்பது போல, சங்கிற்கும் உண்டு

அன்ன பக்ஷி ஒரு தாமரை பூவில் இருந்து மற்றொரு தாமரை பூவில் அமரும் போது, "கீச்" என்று கூவுவது போல, 

பெருமாளின் கையில் இருக்கும் இந்த வெண் சங்கு, அவர் கையிலிருந்து அவர் உதரத்துக்கு (உதட்டுக்கு) அருகில் சென்றது, சங்க நாதம் முழங்குமாம்.
 "பாஞ்சசன்யமும் பல்லாண்டே" 
என்று பாட வந்த பெரியாழ்வாருக்கு இந்த நினைவு வர, அந்த நிமிஷத்தில் கண்ணை மூடி பெருமாளை தியானிக்க,
வெண் சங்காக இருந்த அந்த பாஞ்சசன்யம், பெருமாளின் கொவ்வை சிவப்புடன் உள்ள உதரத்திற்கு அருகில் சென்றதும்,
வெண் சங்கு, சிவப்பாக தெரிய, பெருமாளின் அழகில் மயங்கி நின்ற பெரியாழ்வார், 'சிவப்பு ஏறிய அந்த பாஞ்சசன்யத்துக்கு பல்லாண்டே' என்று மங்களாசாசனம் செய்கிறார்.

அதையே
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.

அனைவரும் கூடலழகரை தரிசிப்போம். பல்லாண்டு பாடுவோம்.



பாசுரம் (அர்த்தம்) - பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"வேதத்தின் சாரம் என்ன?" என்பதை, பகவானின் பரத்துவத்தை எடுத்து நிர்ணயம் செய்த பின்
அனைவரும் பார்க்க, மேலே கட்டி இருந்த பொற்கிழி தானாகவே அவிழ்ந்து, விஷ்ணுசித்தர் அமர்ந்து இருக்கும் இடம் நோக்கி வளைந்து கொண்டு, அவர் மடியில் தானாகவே வந்து விழுந்தது.

அரசரும், இவரையே ஆஸ்ரயித்து, விஷ்ணுசித்தரை பட்டத்து யானையில் ஏற்றி, ஊர்வலமாக தானே அழைத்து கொண்டு வருகிறார்.




மற்ற பண்டிதர்கள் எல்லோரும், ஆசையோடு கூடவே வந்தனர். 
சிலர் சத்ர-சாமரம் போட்டுக்கொண்டே அழைத்து வந்தனர்.
இப்படி "விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்" மதுரையின் நான்கு வீதியை சுற்றிக்கொண்டு வரும் போது, 
தன் குழந்தைக்கு விழாவில் மரியாதை செய்வதை பார்க்க தாயும் தந்தையும் பார்க்க ஆசைப்படுவது போல,
கூடலழகர் பெருமாள் இருப்பு கொள்ளாமல், தானும் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், கருடவாகனத்தில் வர, 
எம்பெருமானை ஆகாசத்தில் கருடவாகனத்தில் பார்த்த பெரியாழ்வார்,
"தன்னுடன் கூட வந்திருக்கும் பண்டிதர்களில்,
சிலர் 'பரமாத்மா என்று ஒருவர் இல்லவே இல்லை' என்றும்,
சிலர் 'அணுக்கள் தான் உலகம்' என்றும்,
சிலர் 'இயற்கையே தான் உண்மை' என்றும்,
சிலர் 'கர்மா (action-reaction ) தான்' என்றும் 
சிலர் 'காலம் தான்' என்றும்,
சிலர் 'வேதத்திலேயே சொன்ன உபதெய்வங்களையே பரமாத்மா' என்றும்,
சிலர் 'தெய்வம் உண்டு, ஆனால் தெய்வத்துக்கு நாமம் இல்லை, ரூபம் இல்லை, குணம் இல்லை என்றும்' அரச சபையில் வாதிட்டார்கள்.

இவர்கள் மத்தியில், இப்படி அப்பட்டமாக நாம, ரூப, குண, சௌந்தர்யத்துடன் "தானே பரமாத்மா" என்று வந்து விட்டாரே?!!  
இவர்களால் பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டு விடுமோ!!"
என்று நினைத்தார் பெரியாழ்வார்.

"குழுமி இருக்கும் அத்தனை பேரும் பெருமாளின் அருமை தெரிந்து இருப்பார்களா? 

பக்தர்கள் நடுவில், பெருமாள் இப்படி திவ்ய காட்சி கொடுத்தால், பக்தர்கள் ஆசை தீர ஆடுவார்கள், பஜிப்பார்கள்.
இவர்களோ! இத்தனை காலமும், குதர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள். பெருமாளின் மகிமையை உணராது இருந்தார்கள்.
இவர்களும் பார்க்கும் படியாக, கொஞ்சம் அவசரப்பட்டு தரிசனம் தந்துவிட்டாரோ?" 
என்று பெரியாழவார் மனதுக்குள் நினைத்துக்கொண்டார். 

"பெருமாளுக்கு திருஷ்டி பட்டு இருக்குமோ?!!" என்று தோன்ற,
"பெருமாளுக்கு பல்லாண்டு பாடி திருஷ்டி கழிக்க வேண்டும்"
என்று பெரியாழ்வார் ஆசைப்பட்டார்.

பெரியாழ்வார் அழகாக இசையோடு பாடுவார். 
"வித்வத் சபைக்கு வருகிறோமே" என்பதால், பஜனை செய்ய விடமாட்டார்கள் என்பதால் தாளம் எடுத்துக்கொண்டு வரவில்லையாம் பெரியாழ்வார்.

பெருமாள் கருடனில் அமர்ந்து காட்சி கொடுக்க, இப்போது பஜனைக்கு அவசியம் வந்ததும், பெரியாழ்வாருக்கு தாளம் தேவைப்பட்டது.

யானையின் இருபக்கமும் தொங்கி கொண்டிருந்த மணிகளையே தாளமாக எடுத்துக்கொண்டு, ஒன்றோடு ஒன்று மொத்திக்கொண்டு, பகவானுக்கு மங்களாசாஸனம் செய்கிறார் பெரியாழ்வார்.

"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!என்று சாமானியன் நினைக்கிறான்.

"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமேஎன்று பக்தன் நினைக்கிறான்.

"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே" என்று பக்தன் கேட்க,
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா, 
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.

பக்தனான பெரியாழ்வாருக்கு "பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற, 
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம் ஆண்டு" 
என்று மங்களாசாசனம் செய்கிறார். 




பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா 
உன் சேவடி செவ்வி திருக்காப்பு 
-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு 

பெருமாள் கருடவாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கும் போது, பெருமாளின் திருவடி இருபக்கமும் தொங்கிக்கொண்டு இருக்க, பெரியாழ்வார் அந்த சிவந்த திருவடியைஅனைவருக்கும் சரணமாக இருக்கக்கூடிய திருவடியை (சேவடி) பார்த்துவிட்டார்.




பெருமாள் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று "என்னை ஒருவனையே சரணடைந்து விடு" என்று தான், தன் திருவடியை அனைவருக்கும் காட்டினார்.

முத்தும்மணியும் வைரமும் நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
--  பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி

"சங்கு சக்ர யவ வஜ்ர ரேகைகள் உடையதாக, 
முத்தும் மணியும், வைரமும், நன் பொன்னும் (தங்கமும்), தத்திப் பதித்து தலைபெய்தார் போல, எங்கும் பத்து விரலும், மணிவண்ணன் பாதம்" என்று பெருமாளின் திருவடியை கொஞ்சும் பெரியாழ்வார், 
கூடல் நகரில், பெருமாள் பலரும் பார்க்க தன் திருவடியை காட்ட, பெரியாழ்வாருக்கு அற்புதமான இந்த திருவடியை பார்த்து இவர்கள் கண் பட்டு விடுமே!! என்று திருவடியை பாதுகாக்க நினைத்து, அந்த திருவடிக்கு ஒரு திருக்காப்பு (பாதுகை) போட்டு மறைத்தாராம். 
அதையே
'உன் சேவடி செவ்வி திருக்காப்பு' 
என்கிறார்.

பெருமாளின் அங்கங்கள் ஜொலிஜொலிப்புடன் காந்தியுடன் இருப்பதை, மணிவண்ணா என்று அழைக்கிறார்.

முஷ்டிகன் சாணுரன் என்ற இரு மல்லர்களோடு சண்டையிடும் திண் (உறுதியான) தோளை கொண்ட பெருமாள் இவர் என்றதும், திண்தோள் என்று அழைக்கிறார்.


பாசுரம் (அர்த்தம்) - பலபல நாழம் சொல்லி. பெரியாழ்வார் கள்ளழகர் (மதுரை) அழகர்மலையை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கள்ளழகர் வீற்று இருக்கும் சோலைமலையை கொஞ்ச வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது, பெரியாழ்வாருக்கு.
"சோலைமலை" தான்  பெரியாழ்வாருக்கு முக்தி ஸ்தலம்.
பெரியாழ்வார் சோலைமலையையே கொஞ்சி பாடுகிறார்.


பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
அலங்காரன் மலை 
குலமலை
கோலமலை 
குளிர்மாமலை
கொற்றமலை
நிலமலை
நீண்டமலை 
திருமாலிருஞ்சோலையதே  
- பெரியாழ்வார் (திருமொழி)




"அலங்காரன் மலை (அழகர் மலை), குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நிலமலை, நீண்டமலை
என்று திருமாலிருஞ்சோலையின் அழகை கொஞ்சி கொஞ்சி ரசிக்கிறார் பெரியாழ்வார்.
திருப்பதியில் உள்ள திருமலையை கூட ஆழ்வார்கள் இப்படி கொஞ்சியதாக தெரியவில்லை. 
ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் வாத்சல்ய பாவம் கொண்டவர்.

இந்த வாத்சல்யம் சோலைமலையை பார்த்ததும் பெரியாழ்வாருக்கு ஏற்பட்டு, இப்படி ஆசை தீர கொஞ்சுகிறார்.

சிசுபாலனுக்கு நல்ல வார்த்தையே வாயில் வராதாம். 

சிலர் பேசும்போது, ஸ்தோத்திரம் செய்வது போல வெளியில் இருக்கும், ஆனால் கவனித்து பார்த்தால் உண்மையில் கிண்டல், கேலி இருக்கும்.

சிலர் பேசும்போது, வெளியில் திட்டுவது போல இருக்கும், ஆனால் உண்மையில் ஸ்தோத்திரம் செய்து இருப்பார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணன் சிறு பாலகனாக இருக்கும் போது வெண்ணை திருடி லீலை செய்தார். 
பக்தர்கள், "சோரன்" (திருடன்) என்று கிருஷ்ணனை சொல்வார்கள். வெளியில் திட்டுவது போல தெரியும்..
ஆனால், உண்மையில் அதீத கிருஷ்ண பிரேமையால், இப்படி ஸ்தோத்திரம் செய்வது புரியும்.

"நேரடியாக திட்டுவதோ, நேரடியாக கொஞ்சுவதோ நாகரீகம் இல்லை" என்று பண்புள்ளவர்கள் நினைப்பார்கள்.
"பிடிக்காதவர்கள் வந்தாலும், நேரடியாக திட்டுவது நாகரீகம் இல்லை"
என்று நினைப்பார்கள்.

இந்த சிசுபாலனோ, நாகரீகம் கொஞ்சமும் இல்லாதவன். 
உள்ளொன்று வெளியொன்று என்று இல்லாமல், பச்சையாக கிருஷ்ண பரமாத்மாவை திட்டுவானாம்.
 "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவானாம்.

நம்மாழ்வார் "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவான் என்கிறார்..

பீஷ்மர், விதுரர் போன்றோர் கண்ணன் "பரமாத்மா" என்று தெரிந்தவர்கள்
கண்ண பரமாத்மாவை யாராவது கேலி பேசினால் இவர்களுக்கு தாங்காது. 
பெருமாளிடம் பக்தி உள்ளவர்களுக்கு, பெருமாளை பற்றி அவதூறு பேசினால் தாங்காது.  இதுவும் இயற்க்கையான ஸ்வபாவம்.தான்.




ராஜசூய யாகத்தில், சிசுபாலன் கிருஷ்ணரை கண்டபடி சபையில் பேச ஆரம்பிக்க, விதுரர் கோபப்பட்டு சிசுபாலனை அதட்டினார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.  

நம்மாழ்வார், "அடியார் செவி சுடும் படி சிசுபாலன் பேசுவான்" என்று சொல்லி இருக்கலாம்.
மாறாக, "கேட்பார் செவி சுடும்" படி சிசுபாலன் பேசினான்" என்று சொல்கிறார்.

சிசுபாலன் கிருஷ்ணரை பச்சையாக திட்டுவதை கேட்டால், அடியார்களுக்கு மட்டும் செவி சுடும் படியாக இருக்காதாம்,
கிருஷ்ணரை கிண்டல் செய்ய சொல்லி கேட்டு ரசிக்கும் குணம் கொண்ட, கிருஷ்ணரை பிடிக்காத துரியோதனன், சகுனி போன்றவர்களுக்கே இவன் பேச்சை கேட்டால் "செவி சுடுமாம்".
சிசுபாலன் பேசுவதை கேட்பவன் அனைவருக்குமே செவி சுடும்படி கீழ்த்தரமான வசவுகளே பேசி அவமதிப்பானாம் சிசுபாலன்.

இவன் பேச்சை கேட்டு, ராஜசூய யாகத்தில் கிருஷ்ணரை தானே நிந்திக்கும் குணமுடைய துரியோதனனே எழுந்து "சிசுபாலா, இப்படி பேசாதே!!" என்று சொல்லும் அளவுக்கு கீழ்த்தரமாக பேசுவானாம் சிசுபாலன்.

அதன் காரணத்தாலேயே நம்மாழ்வார் 
"கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வெய்யும் ..சிசு பாலன்" 
என்கிறார்.
இப்படி பகவானை தான் பிறந்ததிலிருந்து பல முறை நிந்திப்பதே (பல பல நாழம்) தொழிலாக வைத்து இருந்த சிசுபாலனின் அற்பத்தனத்தையும் (அலவலைமை) தவிர்த்து விட்டு,
அவனுக்கு தன் அழகான ரூபத்தை காட்டி, அவன் பேசிய பேச்சுக்கு சக்கரத்தை விட்டு அவன் உயிரை பறிக்க, உயிர் பிரிந்த போது, சிசுபாலனின் ஆத்மஜோதி, சபையில் இருந்த அனைவருக்கும் தெரிய, கண்ணனின் பாதத்தில் சேர்ந்து விட்டது.




பிறகு ஒரு சமயம், தர்மபுத்திரர், நாரதரிடம் இது பற்றி கேட்கிறார்.
தர்மபுத்திரர், 
"என்ன அநியாயம் இது!! 
பகவத் பக்தி செய்பவனுக்கு மோக்ஷம் கிடைக்கலாம். 
இந்த சிசுபாலன் பிறந்ததில் இருந்து கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டே கிருஷ்ணரை இகழ்ந்து பேசுவான். அவனுக்கு போய், தன் திவ்ய தரிசனமும் கொடுத்து, நாங்கள் பார்க்க, அவன் ஜோதி கண்ணனின் பாதத்தில் சேர்ந்ததே!! 
மனிதர்கள் அநியாயம் செய்தாலே தவறு. 
இங்கு பகவான் அநியாயம் செய்கிறாரே! 
தன்னை நிந்தனை செய்தவனுக்கு போய் மோக்ஷம் கொடுத்துவிட்டாரே?"
என்று கேட்டார்.

"தன் அழகு பொருந்திய திவ்ய தரிசனம் சிசுபாலனுக்கு கிடைத்ததால், அந்த திவ்ய தரிசனத்தின் பலனாக மோக்ஷம் கொடுத்தார்"
என்று நாரதர் பதில் சொன்னார்.

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? என்று பெரியாழ்வார் மேலும் சொல்கிறார்.
சிசுபாலன் பேசிய பேச்சுக்கும் சக்கரத்துக்கு சரியாகி விட்டதாம்.
ஆனால், தன் அழகான தரிசனத்தை சிசுபாலனுக்கு காட்டி, அவன் மனத்திலும் உள்ளுக்குள்
"இத்தனை அழகான கிருஷ்ணனையா திட்டினோம்? அனாவசியமாக எதற்காக கிருஷ்ணனை திட்ட வேண்டும்?" 
என்று மனதுக்குள் நினைத்தானாம்.




தன் அழகால் சிசுபாபலன் போன்ற கீழ்த்தரமாக பேசுபவர்கள் நெஞ்சிலும், இடம் பிடித்து, அவன் தன்னை தரிசித்த பலனாக, சிசுபாலனுக்கும் மோக்ஷம் கொடுத்துவிட்டாராம். 

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? 
"அழகுக்கு உரிமையாளனான திருமாலிருஞ்சோலையில் இருக்கும் கள்ளழகரிடமிருந்து, இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்" 
என்று பெரியாழ்வார் கொஞ்சுகிறார்.!!

அதையே,
பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
என்று ரசிக்கிறார்.


இப்படி,
அழகே உருவான நம் கள்ளழகர், தன் அழகை மேலும் பிரகாசிக்க செய்வது போல, 'கிரீடம், வைஜயந்தி மாலை, பீதாம்பரம், கௌஸ்துபம்' என்று அலங்காரமும் செய்து கொண்டு (அலங்காரன்) சோலைமலையில் வீற்று இருக்க,
இந்த சோலைமலை எப்படி இருக்கிறது? என்று பார்த்த பெரியாழ்வார்மலையை வர்ணிக்கிறார்.

"அனைவருக்கும் குல தெய்வமாக (குலமலை), 
அழகு மலையாக (கோலமலை), 
குளிர்மாமலை, 
தனக்கு அபிமானத்துக்கு பாத்திரமான பக்தனுக்கு  ஸம்ஸாரம் துக்கம், வாசனைகள் புகாதபடி செய்து, வெற்றியை கொடுக்கும்  மலையாக (கொற்றமலை), 
நல்ல மரங்கள் முளைக்கும் நிலத்தையுடைய மலையாக (நிலமலை), 
நீண்டமலையாக இருக்கும் திருமாலிருஞ்சோலையில் நம் கள்ளழகர் வீற்று இருக்கிறார்" 
என்று மலையை கொஞ்சி வர்ணிக்கிறார்.

தெய்வத்தை தவேஷிக்கும் சிசுபாலன் போன்ற கீழ்தரமானவர்கள் கூட அர்ச்ச ரூபத்தில் இருக்கும் கள்ளழகரை தன் ஊன கண்களால் பார்த்தால் கூட, மனம் மாறி விடுவான். 
"அழகர் என் குலதெய்வம்" என்று சொல்ல ஆரம்பித்து விடுவான்.

சிசுபாலன் போன்றவர்களுக்கு கூட மோக்ஷத்தை தன்னை தரிசனத்தின் பலனாக கொடுத்து விடும் பெருமாள், மதுரையில் அழகர்கோவில் இருக்கிறார்.

"அழகரை தரிசித்தாலே மோக்ஷம்" என்பதால்,
பேரழகு உடையவர் என்பதால்,
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, பிறகு மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, 5 லட்சம் மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று கூடி விடுகிறார்கள்.

அனைவரும் அழகரை கண்களால் தரிசிப்போம்.
நாம் அனைவரையும் கள்ளழகரை, அவர் வீற்றுஇருக்கும் அழகர்மலையை காண அழைக்கிறார்.


Friday 27 March 2020

மதுரை திருமாலிருஞ்சோலை (அழகர்மலை) - கள்ளலழகர் சரித்திரம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உத்தர மதுரையில் (வடமதுரை) இருக்கும், "திருமாலிருஞ்சோலை" (அழகர்மலைசரித்திரம்.

"திருமாலிருஞ்சோலை" என்றும் அழைக்கப்படும் அழகர் மலை, புராணத்தில் "வ்ருஷபாசலம்" என்று அழைக்கப்பட்டது.
"பலராமர் 'தீர்த்த யாத்திரையாக' வரும் போது, 'வ்ருஷபாசலம்' வந்து பெருமாளை சேவித்து விட்டு, மேலும் தீர்த்த யாத்திரை தொடர்ந்தார்"
என்று பாகவதமும் சொல்கிறது.




பெருமாளுக்கு "கள்ளலழகர்" என்று பெயர்.
கள்ளர்களுக்கு இஷ்ட தெய்வமாக இங்கு பெருமாள் இருக்கிறார்.

இங்கு வாழ்ந்த கள்ளர்கள், பெருமாளை பார்த்து, "ஒரு பாதி உனக்கு தருகிறேன்.. மறு பாதியை நான் எடுத்துக்கொள்கிறேன்" என்று சொன்னால், திருட்டு தொழிலும் பலிக்குமாம்.
"அனுகூல தெய்வமாக" பெருமாள் இங்கு கள்ளர்களுக்கு குலதெய்வமாக இருக்கிறார்.

கள்ளர்கள் வழிபட்ட தெய்வம். 
கள்ளர்களுக்காகவே நிற்கின்ற தெய்வம் இவர்.
பெருமாளுக்கு "ஜெகதீஸ்வரன்" என்றும் பெயர் உண்டு.

ஜகத்தில் (உலகத்தில்) நல்லவர்கள் மட்டும் தான் உண்டா?

உலகத்தில் உள்ள அனைவருக்கும் 'தானே தெய்வம்' என்றும்  காட்டும் பெருமாள், இங்கு "கள்ளர்களுக்கும் நானே தெய்வம்" என்று காட்டுகிறார்.

ஒரு சமயம் மண்டூகர் என்ற ரிஷி "க்ருதமாலா" என்று அழைக்கப்பட்ட வைகை நதியில்  கடுமையான தவம் செய்துகொண்டிருந்தார்.
"விஷ்ணுவை சாஷாத்கரிக்கவேண்டும்"
என்ற சங்கல்பத்துடன் தவம் செய்து கொண்டிருந்தார்.

மண்டூக ரிஷி கொடுத்த உபநிஷத்தின் பெயர் தான் "மாண்டூக்ய உபநிஷத்.

உபநிஷத்துக்களிலேயே மிகவும் உயர்ந்தது  "மாண்டூக்ய உபநிஷத்" என்று போற்றப்படுகிறது..

ஒருவன் "'மாண்டூக உபநிஷத்' அர்த்த ஆழத்துடன் தெரிந்து கொண்டு விட்டால், மோக்ஷத்துக்கு  (முமுக்ஷு) தேவையான விஷயங்கள் எல்லாம் தெரிந்தாயிற்று"
என்று சொல்வார்கள்.

த்ரேதா யுகத்தில் பெருமாள் 'ராமபிரானாக அவதாரம்' செய்தார்.
த்ரேதா யுகம் 12 லட்சம் வருடம் முன்பு நடந்தது.
ராமபிரான் மண்டூக ரிஷியின் உபநிஷத்தை பற்றி அனுமனிடம் பேசுகிறார்.
"உபநிஷத்துகளில் சிறந்தது மாண்டோக்ய உபநிஷத்"
என்று ஹனுமனை பார்த்து சொல்கிறார்.
மண்டூக ரிஷியின் பெருமை என்ன? என்று ஒரு புறம் நமக்கு இதிலேயே புரிகிறது.

அதே சமயத்தில், 12 லட்சம் வருடம் முன்பே நம் கள்ளழகர் இருந்தார் என்று கவனிக்கும் போது தான் கள்ளழகர் பெருமை நமக்கு புரியும்.




ராமபிரானால் உயர்த்தி பேசப்பட்ட மண்டூகர் கள்ளழகரை தரிசிக்க ஆசைப்பட்டார் என்றால், கள்ளழகர் பெருமை அளவிடமுடியாதது என்று தெரிகிறது.

வெகு காலம் ஆகி விட்டது. ஆகாரம் உட்கொள்ளவில்லை.
தவம் செய்து கொண்டிருந்தார் மண்டூகர்.
அந்த சமயங்களில் வடமதுரை காட்டு பிரதேசமாகவே இருந்தது.


ஒரு சமயம், அந்த காட்டின் வழியாக, அவர் எதிரே மிகவும் அழகு பொருந்திய ஒரு வேடுவ சிறுவன் குதிரை மேல் ஏறி வந்து இறங்கினான்.

பார்ப்பதற்கு 20-22 வயது வாலிபன் போலவும் இருந்தான்.
தங்க ஆபரணங்கள் அணிந்து இருந்தான். தலையில் தொப்பி வைத்து இருந்தான். பார்ப்பதற்கு அதிசுந்தரமாக இருந்தான்.
குதிரையில் இருந்து இறங்கி, வைகை என்ற க்ருதமாலா ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்தான்.

அதி சுந்தரமாக இருந்த இந்த சிறுவனை பார்த்து, மண்டூக மகரிஷி, "நீ யாரப்பா?" என்று விஜாரித்தார்.

அந்த சிறுவன்,
"நான் வ்ருஷபாசலம் என்ற சோலைமலையில் இருக்கிறேன். கள்ளர்களுக்கெல்லாம் தலைவன்"
என்று சொல்ல,
"சரி.. உன் பெயர் என்ன?" என்று இவர் கேட்க,
"என் பெயர் சுந்தர தோளினான் (சுந்தரபாகு)."
என்று பதில் சொன்னான்.

"அது சரி, தவளை தான் தண்ணீரிலும் நிலத்திலும் இருக்கும்.  நீங்கள் ஏன் தவளை போல தண்ணீரில் நின்று கொண்டு இருக்கிறீர்கள்?"
என்று ரிஷியை பார்த்து கேட்டான்.
"உண்மை தான். எனக்கும் மண்டூகன் (தவளை) என்று தான் பெயர்.
உங்களை பார்த்ததிலேயே, நீங்கள் யார் என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன்.
குதிரையில் நீங்கள் வந்த அழகும், அதிலிருந்து நீங்கள் இறங்கிய  விதத்தையும் பார்த்ததுமே நீங்கள் யார் என்று புரிந்து கொண்டு விட்டேன் !"
என்று மண்டூகரிஷி சொன்னார்.

மண்டூகர் அழகரை பார்த்து சொக்கிப்போனதில் ஆச்சர்யமா?
இன்று சித்திரை மாதம் மதுரைக்கு சென்று பார்த்தால், அழகர் ஆற்றில் இறங்கும் போது 5 லட்சம் மக்கள் கூடுவதை நம் கண்ணால் காணலாம்..

அழகர் குதிரையில் வரும் வீதியெல்லாம் மக்கள் கூடி விடும் ஆச்சர்யத்தை இன்றும் காணலாம்.
சித்ரா பௌர்ணமி அன்று, வைகையில் ஒரு க்ஷணம் இறங்கி விட்டு, மண்டூக ரிஷிக்கு தரிசனம் தந்த வைபவம் இன்றும் நடக்கிறது.

"விஷ்ணுவை சாஷாத்கரிக்க வேண்டும்"
என்ற சங்கல்பத்துடன் தவம் செய்து கொண்டிருந்த மண்டூகரிஷி, 
மேலும் சொன்னார்,
"நீங்கள் ஒரு ராஜகுமாரனை போல குதிரையில் வந்து இறங்கினீர்கள்.
நீங்கள் யார் என்று அறிந்து கொண்டேன். 
நீங்கள் எனக்கு திவ்யமான ரூபத்துடன் காட்சி தரவேண்டும்.
நீங்கள் கோவிலில் எப்படி தரிசனம் தருகிறீர்களோ, அது போல தரிசனம் கொடுங்கள்."
என்று சொல்ல,

சங்கு சக்கர கதையுடன், நீல மேக ஸ்யாமள ரூபத்துடன், பீதாம்பரம் அணிந்தவராக, ஸ்ரீவத்சம் உடைய மார்புடன், எம்பெருமான் காட்சி கொடுக்க,
உடனே,
மண்டூக ரிஷி கைகளை குவித்துக்கொண்டு, ஸ்தோத்திரம் செய்கிறார்...
"'ஓம்' என்ற பிரணவம், வேத மந்திரங்கள் அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது.

'ஓம்' என்ற பிரணவத்துக்குள், "அ", "உ", "ம" என்ற மூன்று ஒலிகள் (அக்ஷரங்கள்) அடக்கம்.

மூன்றும் சேர்ந்த நிலையே 'ஓம்' என்ற பிரணவம் 
'ஓம்' என்ற ப்ரணவத்துக்குள், "அ", "உ", "ம" என்ற மூன்றும் அடக்கம்.

"அ", "உ", "ம" என்று பிரித்து உபாசனை செய்பவர்களும் உண்டு.
"ஓம்" என்று சேர்த்து உபாசனை செய்பவர்களும் உண்டு.




பரமாத்மாவுக்கு 'மூன்று நிலைகள்' உண்டு.
அதுபோல
ஜீவனுக்கும் 'மூன்று நிலைகள்' உண்டு.

இதை நமக்கு ஓம் என்ற பிரணவம் "அ", "உ", "ம" என்ற மூன்று நிலைகளை காட்டி விளக்குகிறது.

அனைத்து ஜீவனுக்கும் மூன்று நிலைகள் இருக்கிறது.

  1. 'விழித்து (ஜாக்ரத்) இருக்கிறான்' என்பது முதல் நிலை.
  2. 'கனவு (ஸ்வப்னம்) காணுகிறான்' என்பது இரண்டாவது நிலை.
  3. 'தூங்குகிறான் (சுஷுப்தி)' என்பது மூன்றாவது நிலை.
இந்த மூன்று நிலையிலும் 'ஜீவன் ஒருவன் தான்' இருக்கிறான். ஆனால் மூன்றும் வேறு வேறு நிலை.

  1. விழித்து (ஜாக்ரத்) இருக்கும் நிலையில் ஜீவனுக்கு, 'விஸ்வன்' என்று பெயர்.
  2. கனவு (ஸ்வப்னம்) காணும் நிலையில் ஜீவனுக்கு, 'தைஜஸன்' என்று பெயர்.
  3. தூங்கும் (சுஷுப்தி) நிலையில் ஜீவனுக்கு, 'பிராக்ஞன்' என்று பெயர்.

ஜீவனாகிய நமக்கே மூன்று நிலைகளில், மூன்று பெயர் உண்டு.

ஜீவன் மூன்று நிலையில் இருப்பது போல,
பரமாத்மா வாசுதேவனும், "மூன்று நிலையில் இருக்கிறார்".


  1. படைத்தல் (ஸ்ருஷ்டி) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது, ஒரு நிலை.
  2. காத்தல் (ஸ்திதி) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது,  இரண்டாவது நிலை.
  3. அழித்தல் (சம்ஹாரம்) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது,  மூன்றாவது நிலை.
இப்படி ஜீவனை போலவே, பரமாத்மாவும் மூன்று நிலைகளில் இருக்கிறார்.

  1. படைத்தல் (ஸ்ருஷ்டி) என்ற காரியத்தை செய்யும் போது, பரமாத்மாவுக்கு "ப்ரத்யும்னன்" என்று பெயர். ப்ரத்யும்னன் அம்சமாக 'ப்ரம்ம தேவன்' இருக்கிறார்.
  2. காத்தல் (ஸ்திதி) என்ற காரியத்தை செய்யும் போது, , பரமாத்மாவுக்கு "அனிருத்தன்" என்று பெயர். அனிருத்தன் அம்சமாக 'மஹா விஷ்ணு' இருக்கிறார்.
  3. அழித்தல் (சம்ஹாரம்) என்ற காரியத்தை செய்யும் போது, பரமாத்மாவுக்கு "சங்கர்ஷணன்" என்று பெயர். சங்கர்ஷணன் அம்சமாக 'ருத்ரன்' இருக்கிறார்.


  • படைத்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, ரஜோ குணத்துடன் ப்ரம்மாவாக இருக்கிறார்.
  • காத்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, ஸத்வ குணத்துடன் விஷ்ணுவாக இருக்கிறார்.
  • அழித்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, தமோ குணத்துடன் ருத்ரனாக இருக்கிறார்.
பரவாசுதேவனே, மும்மூர்த்திகளாக, மூன்று நிலைகளில் இருக்கிறார். 




விழித்து இருப்பதும், தூங்குவதும், கனவு காண்பதும் 'ஒருவனே' என்பது புரிந்து கொள்ளும் போது, 
பரவாசுதேவனே மூன்று நிலைகளில் ப்ரம்ம தேவனாகவும்,  ருத்ரனாகவும், மஹாவிஷ்ணுவாகவும் இருக்கிறார் என்ற சத்தியம் புரியும். 

இந்த ரகசியத்தை 'ஓம்' என்ற பிரணவம் தாங்கி பிடித்து இருக்கிறது. 
'அ உ ம' என்ற மூன்றும் பிரித்து பார்க்கும் போது, 
என்ற சப்தம்  "படைத்தல்" என்ற நிலையையும், 
என்ற சப்தம்  "காத்தல்" என்ற நிலையையும், 
என்ற சப்தம் "அழித்தல்" என்ற நிலையையும்,  
காட்டுகிறது.

இந்த மூன்றும் சேர்ந்த நிலையில் பரவாசுதேவன் மட்டுமே இருக்கிறார்.
ஓம் என்ற பிரணவம், "பரவாசுதேவனை குறித்து தியானிக்க செய்கிறது".

அ என்ற படைத்தல் நிலையிலும், 
உ என்ற காத்தல் நிலையிலும், 
ம என்ற அழித்தல் நிலையிலும் தன்னை காட்டிக்கொண்டு,
மூன்றுமாகவும் இருக்கும் பரமாத்மா தன்னை மறைத்து கொண்டு இருப்பதால், "வாசுதேவன்" என்று பெயர். 

ராஜஸ, ஸத்வ, தாமஸ போன்ற குணங்களை தாண்டி,  நிர்குணமான, சித்ஸ்வரூபமான நிலையை குறிக்கிறது பரவாசுதேவனின் ஸ்வரூபம்

நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவன் "சர்வஞன்" என்ற நிலையில் இருக்கிறார்.

குணங்களால் பேதங்கள் காட்டும் பரமாத்மா, குணங்களை தனக்குள் அடக்கி, தான் மட்டுமே மிச்சப்பட்டு இருக்கும் நிலையிலேயே பரமாத்மா வாசுதேவன் இருக்கிறார்.

தன் ப்ரம்ம ஸ்வரூபத்தை மறைத்து கொண்டு இருப்பவர் பரமாத்மா.

வைகுண்டத்தில் இருக்கும் இந்த பரவாசுதேவனையே "ஓம்" என்ற பிரணவம் குறிக்கிறது. 

"அ", "உ", "ம" என்று பிரித்து "ப்ரம்ம தேவனை" மட்டும்,  "விஷ்ணுவை" மட்டும், "ருத்ரனை" மட்டும் உபாசனை செய்பவர்களும் உண்டு.

"ஓம்" என்று சேர்த்து உபாசனை செய்பவர்களும் உண்டு. 

'ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன்' என்ற மூன்று நிலைகளையும் தன்னில் அடக்கி, நிர்குணமாக இருப்பவர் 'பரவாசுதேவனே' என்ற ஞானத்துடன்  உபாசனை செய்பவர்களும் உண்டு.

இந்த இரண்டு உபாஸனையையும் நம் உபநிஷத் அனுமதிக்கிறது.

விழிப்பு, சொப்பனம், தூக்கம் என்ற மூன்று நிலையை அனைத்து ஜீவனும் அனுபவிக்கிறார்கள். 
நான்காவது நிலையையும் சில உத்தம ஜீவன்கள் அனுபவிக்கிறார்கள். 
அந்த நிலைக்கு "சமாதி" என்று பெயர்.
அந்த நிலையில் இருப்பவனை "துரீயன்" என்று சொல்கிறோம்.

விழிப்பு நிலையில், ரஜோ குணமும்,
ஸ்வப்ன நிலையில், சத்வ குணமும்,
தூக்க நிலையில், தமோ குணமும் வெளிப்படுகிறது.

எப்படி ஓம் என்ற நிலையில், இந்த மூன்று குணங்களும் அடங்கி, நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவன் "சர்வஞன்" என்ற நிலையில் மட்டுமே இருக்கிறாரோ,
அதுபோல,
சமாதி என்ற நிலை ஒரு ஜீவனுக்கு ஏற்படும் போது, குணங்களை கடந்த நிலையை ஜீவன் பெறுகிறான்.




ஓம் என்ற பிரணவத்தின் மூல பொருளான பரவாசுதேவனை, சமாதி நிலையில் ஜீவன் சேருகிறான்.
இந்த நிலையில், ஜீவனும் குணங்களை கடந்து, நிர்குண நிலையை அடைந்து ப்ரம்மத்தோடு லயிக்கிறான்.
இப்படி சமாதி நிலையில், ஓம் என்ற பிரணவத்தின் அர்த்தமான நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனை புரிந்து கொள்ள வேண்டும்
என்று சாஸ்திரம் சொல்லி இருக்க,
அதே நிர்குண பரவாசுதேவன் இந்த திருமாலிருஞ்சோலையில் அர்ச்சா விக்ரக ரூபத்துடன் நமக்கு காட்சி கொடுக்கிறாரே !!"
என்று ஸ்தோத்திரம் செய்தார்.

"சமாதி நிலையில் அறியக்கூடிய நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, யாரும் பார்க்கும்படியாக தன்னை சுலபமாக்கிக்கொண்டு, கள்ளலழகராக இருக்கிறார்" 
என்று மண்டூக ரிஷி, பெருமாளை பார்த்து ஸ்தோத்திரம் செய்தார்.

இந்த மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கள்ளழகர் சோலைமலையை விட்டு, 20 கிலோமீட்டர் குதிரையில் வந்தார்.
அந்த காட்சியை இன்று சித்திரை மாதம் போனாலும், கள்ளழகர் 20 கிலோமீட்டர் குதிரையில் வந்து, வைகையில் ஒரு நொடி இறங்கிவிட்டு, நேராக மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் உற்சவத்தை நம் கண்ணால் ரசிக்கலாம்.

நம்மாழ்வார் (திருவாய்மொழி) நம் கள்ளழகரை மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? 
திருமாலே கட்டுரையே
நம்மாழ்வார் (திருவாய்மொழி)
அர்ச்சா திருமேனியுடன் தான் கள்ளழகர் இருக்கிறார்.
இருந்தாலும்,
பரமபதத்தில் அப்ராக்ருத (Beyond Nature) திவ்ய மங்கள வடிவை கொண்ட பரவாசுதேவன் எப்படி இருப்பாரோ, அது போலவே இருக்கிறார் கள்ளழகர்.

கள்ளழகரை பார்க்கும் போது, இவர் அர்ச்சா திருமேனி  என்று தோன்றவே தோன்றாது.

இவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டு இருக்கிறார்?
என்றே சொல்ல முடியாத படி, தனித்து இருக்கிறார்.
இன்றைக்கு சென்று, நம் ஊன கண்ணால் பார்த்தாலும் இந்த அதிசயத்தை நாம் உணரலாம்.

எந்த கோவிலுக்கு சென்று போய் பார்த்தாலும், கள்ளழகருக்கு உள்ள அந்த அழகு, பொலிவு வேறு எங்கும் பார்க்க முடியாது.

திருமஞ்சனம் செய்யட்டும், செய்யாமாலே இருக்கட்டும், இவர் திருமேனி மட்டும் தக தக வென்று அப்படி ஒரு பொலிவுடன் இருக்கும்.
நம்மாழ்வார் ஹ்ருதயத்தில் அத்தகைய பொலிவுடன் கள்ளழகர் காட்சி தர, அந்த பொலிவை வர்ணிக்கிறார்.

தக தக வென ஜொலிக்கும் பெருமாளின் "கன்னத்தில் (முக) வெளிப்பட்ட பொலிவு (ஜோதி) தான் கிரீடமாக (முடிச்சோதி) இருக்கிறதோ?"
என்று பார்த்து பிரமிக்கிறார் நம்மாழ்வார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்கிறார்.

தங்க ஆபரணங்களை தனியாக பார்க்கும் போது ஜொலி ஜொலிக்குமாம்.
அதே தங்க ஆபரணங்களை கள்ளழகர் அணிந்துகொண்டு விட்டால், இவருடைய மேனி பொலிவுக்கு முன், தங்க நகைகள் பொலிவு இல்லாதது போல தெரியுமாம். 
இந்த அனுபவத்தை இன்று கள்ளழகரை சென்று பார்த்தால் கூட நாமும் அனுபவிக்க முடியும். 




கள்ளழகர் கன்னத்தை பார்த்தால், எதிரே நிற்பவர்களின் பிம்பம் தெரியுமாம். 
அத்தனை பொலிவு உடைய கள்ளழகரின் பொலிவை கண்டு மயங்கி, 
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்று நம்மாழ்வார் ஆச்சர்யப்பட்டு கேட்கிறார்.

பெருமாளின் முகப்பொலிவை கண்ட பிரமித்த நம்மாழ்வார், "சரி திருவடியை பார்ப்போம்" என்று கவனிக்க,
கள்ளழகரின் திருவடியின் அடிப்பகுதி சிவந்து பெரும் பொலிவை தர,
அந்த "திருவடி பொலிவுதான் சிவந்த தாமரையாக மலர்ந்து இருக்கிறதோ?" என்று கேட்கிறார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,  
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
என்கிறார்.

பெருமாள் இடுப்பில் பீதாம்பரம் அணிந்து இருந்தாலும், அந்த வஸ்திரத்தையும் மீறிக்கொண்டு, அவர் திருதொடையின் பொலிவு, பீதாம்பரத்துக்கும் மேல் பிரகாசிக்குமாம்.

இப்படி அடி முதல் முடி வரை தங்கம் போல (பைம்பொன்) தக தகவென ஜொலிக்கும் அழகரை கண்டு பிரம்பிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் 
நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ
என்கிறார்.

எப்பொழுதுமே தங்கம் போல ஜொலிக்கும் கள்ளழகர் .
ஒரே ஒரு சமயம் மட்டும், பச்சை திருமேனியாக ஆகி விடுகிறார்.

கள்ளழகர் ஒரு சமயம் மலை மீது ஏறி, நூபுர கங்கைக்கு செல்வார்.
இந்த மலையோ பச்சை பசேல் என்று சோலையாக இருக்கும். 

போகும் வழியில், இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று இருப்பதால், அந்த சாயம் இவர் கன்னத்தில் பிரதிபலித்து, பெருமாளே பச்சை வர்ணமாக காட்சி தருவார்.
அங்கு மட்டும் கள்ளழகர் பச்சை வண்ண பெருமாளாக இருப்பார்.
மற்ற சமயங்களில் எல்லாம், பெருமாள் மணிவண்ணனாகவே இருப்பார்.

இப்படி பெருமாளின் பொலிவை கண்டு ஆனந்தப்படுகிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் பெருமாளை கொஞ்ச, 
கள்ளழகர் வீற்று இருக்கும் சோலைமலையையே கொஞ்ச வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது, பெரியாழ்வாருக்கு.
"சோலைமலை" தான்  பெரியாழ்வாருக்கு முக்தி ஸ்தலம்.
பெரியாழ்வார் சோலைமலையையே கொஞ்சி பாடுகிறார்.




பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
அலங்காரன் மலை 
குலமலை
கோலமலை 
குளிர்மாமலை
கொற்றமலை
நிலமலை
நீண்டமலை 
திருமாலிருஞ்சோலையதே  
- பெரியாழ்வார் (திருமொழி)

"அலங்காரன் மலை (அழகர் மலை), குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நிலமலை, நீண்டமலை
என்று திருமாலிருஞ்சோலையின் அழகை கொஞ்சி கொஞ்சி ரசிக்கிறார் பெரியாழ்வார்.
திருப்பதியில் உள்ள திருமலையை கூட ஆழ்வார்கள் இப்படி கொஞ்சியதாக தெரியவில்லை. 
ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் வாத்சல்ய பாவம் கொண்டவர்.

இந்த வாத்சல்யம் சோலைமலையை பார்த்ததும் பெரியாழ்வாருக்கு ஏற்பட்டு, இப்படி ஆசை தீர கொஞ்சுகிறார்.

சிசுபாலனுக்கு நல்ல வார்த்தையே வாயில் வராதாம். 

சிலர் பேசும்போது, ஸ்தோத்திரம் செய்வது போல வெளியில் இருக்கும், ஆனால் கவனித்து பார்த்தால் உண்மையில் கிண்டல், கேலி இருக்கும்.

சிலர் பேசும்போது, வெளியில் திட்டுவது போல இருக்கும், ஆனால் உண்மையில் ஸ்தோத்திரம் செய்து இருப்பார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணன் சிறு பாலகனாக இருக்கும் போது வெண்ணை திருடி லீலை செய்தார். 
பக்தர்கள், "சோரன்" (திருடன்) என்று கிருஷ்ணனை சொல்வார்கள். வெளியில் திட்டுவது போல தெரியும்..
ஆனால், உண்மையில் அதீத கிருஷ்ண பிரேமையால், இப்படி ஸ்தோத்திரம் செய்வது புரியும்.

"நேரடியாக திட்டுவதோ, நேரடியாக கொஞ்சுவதோ நாகரீகம் இல்லை" என்று பண்புள்ளவர்கள் நினைப்பார்கள்.
"பிடிக்காதவர்கள் வந்தாலும், நேரடியாக திட்டுவது நாகரீகம் இல்லை"
என்று நினைப்பார்கள்.

இந்த சிசுபாலனோ, நாகரீகம் கொஞ்சமும் இல்லாதவன். 
உள்ளொன்று வெளியொன்று என்று இல்லாமல், பச்சையாக கிருஷ்ண பரமாத்மாவை திட்டுவானாம்.
 "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவானாம்.

நம்மாழ்வார் "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவான் என்கிறார்..

பீஷ்மர், விதுரர் போன்றோர் கண்ணன் "பரமாத்மா" என்று தெரிந்தவர்கள்
கண்ண பரமாத்மாவை யாராவது கேலி பேசினால் இவர்களுக்கு தாங்காது. 
பெருமாளிடம் பக்தி உள்ளவர்களுக்கு, பெருமாளை பற்றி அவதூறு பேசினால் தாங்காது.  இதுவும் இயற்க்கையான ஸ்வபாவம்.தான்.




ராஜசூய யாகத்தில், சிசுபாலன் கிருஷ்ணரை கண்டபடி சபையில் பேச ஆரம்பிக்க, விதுரர் கோபப்பட்டு சிசுபாலனை அதட்டினார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.  

நம்மாழ்வார், "அடியார் செவி சுடும் படி சிசுபாலன் பேசுவான்" என்று சொல்லி இருக்கலாம்.
மாறாக, "கேட்பார் செவி சுடும்" படி சிசுபாலன் பேசினான்" என்று சொல்கிறார்.

சிசுபாலன் கிருஷ்ணரை பச்சையாக திட்டுவதை கேட்டால், அடியார்களுக்கு மட்டும் செவி சுடும் படியாக இருக்காதாம்,
கிருஷ்ணரை கிண்டல் செய்ய சொல்லி கேட்டு ரசிக்கும் குணம் கொண்ட, கிருஷ்ணரை பிடிக்காத துரியோதனன், சகுனி போன்றவர்களுக்கே இவன் பேச்சை கேட்டால் "செவி சுடுமாம்".
சிசுபாலன் பேசுவதை கேட்பவன் அனைவருக்குமே செவி சுடும்படி கீழ்த்தரமான வசவுகளே பேசி அவமதிப்பானாம் சிசுபாலன்.

இவன் பேச்சை கேட்டு, ராஜசூய யாகத்தில் கிருஷ்ணரை தானே நிந்திக்கும் குணமுடைய துரியோதனனே எழுந்து "சிசுபாலா, இப்படி பேசாதே!!" என்று சொல்லும் அளவுக்கு கீழ்த்தரமாக பேசுவானாம் சிசுபாலன்.

அதன் காரணத்தாலேயே நம்மாழ்வார் 
"கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வெய்யும் ..சிசு பாலன்" 
என்கிறார்.
இப்படி பகவானை தான் பிறந்ததிலிருந்து பல முறை நிந்திப்பதே (பல பல நாழம்) தொழிலாக வைத்து இருந்த சிசுபாலனின் அற்பத்தனத்தையும் (அலவலைமை) தவிர்த்து விட்டு,
அவனுக்கு தன் அழகான ரூபத்தை காட்டி, அவன் பேசிய பேச்சுக்கு சக்கரத்தை விட்டு அவன் உயிரை பறிக்க, உயிர் பிரிந்த போது, சிசுபாலனின் ஆத்மஜோதி, சபையில் இருந்த அனைவருக்கும் தெரிய, கண்ணனின் பாதத்தில் சேர்ந்து விட்டது.

பிறகு ஒரு சமயம், தர்மபுத்திரர், நாரதரிடம் இது பற்றி கேட்கிறார்.
தர்மபுத்திரர், 
"என்ன அநியாயம் இது!! 
பகவத் பக்தி செய்பவனுக்கு மோக்ஷம் கிடைக்கலாம். 
இந்த சிசுபாலன் பிறந்ததில் இருந்து கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டே கிருஷ்ணரை இகழ்ந்து பேசுவான். அவனுக்கு போய், தன் திவ்ய தரிசனமும் கொடுத்து, நாங்கள் பார்க்க, அவன் ஜோதி கண்ணனின் பாதத்தில் சேர்ந்ததே!! 
மனிதர்கள் அநியாயம் செய்தாலே தவறு. 
இங்கு பகவான் அநியாயம் செய்கிறாரே! 
தன்னை நிந்தனை செய்தவனுக்கு போய் மோக்ஷம் கொடுத்துவிட்டாரே?"
என்று கேட்டார்.

"தன் அழகு பொருந்திய திவ்ய தரிசனம் சிசுபாலனுக்கு கிடைத்ததால், அந்த திவ்ய தரிசனத்தின் பலனாக மோக்ஷம் கொடுத்தார்"
என்று நாரதர் பதில் சொன்னார்.

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? என்று பெரியாழ்வார் மேலும் சொல்கிறார்.
சிசுபாலன் பேசிய பேச்சுக்கும் சக்கரத்துக்கு சரியாகி விட்டதாம்.
ஆனால், தன் அழகான தரிசனத்தை சிசுபாலனுக்கு காட்டி, அவன் மனத்திலும் உள்ளுக்குள்
"இத்தனை அழகான கிருஷ்ணனையா திட்டினோம்? அனாவசியமாக எதற்காக கிருஷ்ணனை திட்ட வேண்டும்?" 
என்று மனதுக்குள் நினைத்தானாம்.




தன் அழகால் சிசுபாபலன் போன்ற கீழ்த்தரமாக பேசுபவர்கள் நெஞ்சிலும், இடம் பிடித்து, அவன் தன்னை தரிசித்த பலனாக, சிசுபாலனுக்கும் மோக்ஷம் கொடுத்துவிட்டாராம். 

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? 
"அழகுக்கு உரிமையாளனான திருமாலிருஞ்சோலையில் இருக்கும் கள்ளழகரிடமிருந்து, இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்" 
என்று பெரியாழ்வார் கொஞ்சுகிறார்.!!

அதையே,
பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
என்று ரசிக்கிறார்.

இப்படி,
அழகே உருவான நம் கள்ளழகர், தன் அழகை மேலும் பிரகாசிக்க செய்வது போல, 'கிரீடம், வைஜயந்தி மாலை, பீதாம்பரம், கௌஸ்துபம்' என்று அலங்காரமும் செய்து கொண்டு (அலங்காரன்) சோலைமலையில் வீற்று இருக்க,
இந்த சோலைமலை எப்படி இருக்கிறது? என்று பார்த்த பெரியாழ்வார், மலையை வர்ணிக்கிறார்.

"அனைவருக்கும் குல தெய்வமாக (குலமலை), 
அழகு மலையாக (கோலமலை), 
குளிர்மாமலை, 
தனக்கு அபிமானத்துக்கு பாத்திரமான பக்தனுக்கு  ஸம்ஸாரம் துக்கம், வாசனைகள் புகாதபடி செய்து, வெற்றியை கொடுக்கும்  மலையாக (கொற்றமலை), 
நல்ல மரங்கள் முளைக்கும் நிலத்தையுடைய மலையாக (நிலமலை), 
நீண்டமலையாக இருக்கும் திருமாலிருஞ்சோலையில் நம் கள்ளழகர் வீற்று இருக்கிறார்" 
என்று மலையை கொஞ்சி வர்ணிக்கிறார்.

தெய்வத்தை தவேஷிக்கும் சிசுபாலன் போன்ற கீழ்தரமானவர்கள் கூட அர்ச்ச ரூபத்தில் இருக்கும் கள்ளழகரை தன் ஊன கண்களால் பார்த்தால் கூட, மனம் மாறி விடுவான். 
"அழகர் என் குலதெய்வம்" என்று சொல்ல ஆரம்பித்து விடுவான்.

சிசுபாலன் போன்றவர்களுக்கு கூட மோக்ஷத்தை தன்னை தரிசனத்தின் பலனாக கொடுத்து விடும் பெருமாள், மதுரையில் அழகர்கோவில் இருக்கிறார்.

"அழகரை தரிசித்தாலே மோக்ஷம்" என்பதால்,
பேரழகு உடையவர் என்பதால்,
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, பிறகு மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, 5 லட்சம் மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று கூடி விடுகிறார்கள்.

அனைவரும் அழகரை கண்களால் தரிசிப்போம்.
நாம் அனைவரையும் கள்ளழகரை, அவர் வீற்றுஇருக்கும் அழகர்மலையை காண அழைக்கிறார்.