Followers

Search Here...

Showing posts with label பெருமை. Show all posts
Showing posts with label பெருமை. Show all posts

Friday 23 February 2024

திருப்பதி செல்லும் போது என்ன பிரார்த்தனை செய்து கொண்டுபயணிக்க வேண்டும்? ஜாம்பவதி சொன்ன பிரார்த்தனையை நாமும் சொல்வோம்.

திருப்பதி ஶ்ரீனிவாசனை வழிபட்டதன் பயனாக, அடுத்த ஜென்மத்தில் ஜாம்பவதியாக பிறந்து, ஶ்ரீ கிருஷ்ணரை மணந்தாள்.

அவளுடைய முன் ஜென்மத்தில், 

பகவான் விராட் ரூபத்தில் 14 லோகங்களாகவும் இருக்கிறார். அவரே திருமலையில் ஸ்ரீனிவாசனாக இருக்கிறார். அந்த ஶ்ரீனிவாசனை "எப்பொழுது தரிசிப்பேன்? எப்பொழுது தரிசிப்பேன்?" என்ற தாபத்தோடு பிரார்த்தனை செய்து கொண்டே சேஷாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.


ஜாம்பவதி முன் ஜென்மத்தில், திருமலையில் ஏறும் போது, செய்த பிரார்த்தனை.

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य वक्षः श्रीवत्स रत्नै: भूषितं विस्तृतं च ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य तुन्दं वलित्रयेणाङ्कितं सुंदरं च ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य कण्ठं महर्लोकस्य आश्रयं कंबु तुल्यम् ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य नाभिं सदा अन्तरिक्षस्य आश्रयं वै सुपूर्णम् ॥

कदा द्रक्ष्ये वदनं वै मुरारे: जन-लोकस्य आश्रयं सर्वदैव ॥

शिरः कदा श्रीनिवासस्य द्रक्ष्ये सत्यस्य लोकस्य आश्रयं सर्वदैव ।

कटिं कदा श्रीनिवासस्य द्रक्ष्ये भूर्लोकस्य आश्रयं सर्वदैव ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य च ऊरु तलातलस्य आश्रयं सर्वदैव ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जानु सुकोमलं सुतलस्य आश्रयं च ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जङ्घे रसातलस्य आश्रयेः सर्वदैव ।

कदा द्रक्ष्ये पादतलं हरेश्च पाताल-लोकस्य आश्रयं सर्वदैव ॥

- गरुडपुराणम् - ब्रह्मकाण्डः (मोक्षकाण्डः)


கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய வக்ஷ:? ஶ்ரீவத்ஸ  ரத்னை: பூஷிதம் விஸ்த்ருதம் ச !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய துந்தம்? வலித்ரயேன அங்கிதம் சுந்தரம் ச !!

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய கண்டம்? மஹர் லோகஸ்ய ஆஸ்ரயம் கம்பு துல்யம் !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய நாபிம்? ஸதா அந்தரிக்ஷஸ்ய ஆஸ்ரயம் வை சுபூர்ணம் !

கதா த்ரக்ஷே வதனம் வை முராரை:? ஜன லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

ஸிர: கதா ஶ்ரீநிவாஸஸ்ய த்ரக்ஷே? சத்யஸ்ய லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

கடிம் கதா ஶ்ரீநிவாஸஸ்ய த்ரக்ஷே? பூலோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ச ஊரு? தலாதலஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ஜானு ஸு கோமளம்? சுதலஸ்ய ஆஸ்ரயம் ச !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ஜங்கே? ரஸாதலஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

கதா த்ரக்ஷே பாத தலம் ஹரே: ச? பாதாள லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

"ஸ்ரீவத்ஸம் என்ற அடையாளம் கொண்ட ஶ்ரீநிவாசனின் திருமார்பை எப்பொழுது  தரிசிப்பேன்? 

மூன்று மடிப்புகள் கொண்ட ஶ்ரீநிவாசனின் திவ்யமான திரு வயிற்றை எப்பொழுது தரிசிப்பேன்?

மகர லோகத்தில் இருப்பவர்கள் வழிபடும் ஶ்ரீநிவாசனின் சங்கம் போன்ற கழுத்தை எப்பொழுது நான் தரிசிப்பேன்? 

அனைத்து அந்தரிக்ஷமும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீநிவாசனின் திரு நாபியை எப்போது தரிசிப்பேன்?

ஜன லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் முராரியின் திரு முக மண்டலத்தை எப்பொழுது நான் காண்பேன்? 

ஸத்ய லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் சிரஸை எப்பொழுது தரிசிப்பேன்?

பூ லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் இடையை எப்பொழுது தரிசிப்பேன்?

தலாதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் தொடையை எப்பொழுது தரிசிப்பேன்?

சுதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் கோமளமான முழங்காலை எப்பொழுது தரிசிப்பேன்?

ரஸாதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் 

இரு கால்களை எப்பொழுது தரிசிப்பேன்?

பாதாள லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் 

திரு பாதங்களை எப்பொழுது தரிசிப்பேன்?

என்று ஸ்ரீனிவாசனின் தரிசனம் கிடைக்க வேண்டுமே என்ற தவிப்போடு தீர்த்த யாத்திரை செய்தாள்.

Sunday 26 March 2023

மகாபாரதம் படிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன? வைசம்பாயணர் (வியாசரின் சிஷ்யர்) சொல்கிறார். அறிவோம் மஹாபாரதம்.

"சர்பயாகம் செய்கிறான்" என்று கேள்விப்பட்ட வியாசர்,

ஜனமேஜெயன் தீக்ஷை பெற்று அமர்ந்து இருக்கும் சர்ப யாகசாலையில் பிரவேசித்தார்.

श्रुत्वा तु सर्पसत्राय दीक्षितं जनमेजयम्।

अभ्यगच्छद् ऋषि: विद्वान् कृष्णद्वैपायन: तदा।।


ஜனமேஜெயன், யாக சாலைக்கு வந்த வியாச பகவானை நமஸ்கரித்து, பாத்யம், அர்க்ய தீர்த்தம் கொடுத்து வரவேற்று, ஆசனம் கொடுத்தார்.


மேலும்,

"வியாச பகவன்!கௌரவர்கள் பற்றியும் பாண்டவர்கள் பற்றியும் தாங்கள் நேரில் அறிவீர்கள். அவர்களுக்குள் எப்படி விரோதம் ஏற்பட்டது? நீங்கள் அந்த வரலாற்றை சொல்ல, அதை நான் கேட்க ஆசைப்படுகிறேன்.

எண்ணிலடங்கா உயிர்கள் மடிய காரணமான அந்தப் பெரும்போர், எனது பாட்டனார்களுக்குள் ஏன் நடந்தது? 

அவர்களின் தெளிந்த அறிவும் விதியால் மூடப்பட்டதோ? 

ஓ பிராமணர்களில் சிறந்தவரே ! 

அதை எனக்கு முழுமையாக, எவை எவை எவ்வாறு நடந்தனவோ அவற்றை அவ்வாறே சொல்ல வேண்டும். பகவன்! நீங்கள் நடந்தவற்றை அறிந்தவர் என்பதால் உங்களிடம் நடந்ததை கேட்க விரும்புகிறேன்" என்றார் ஜனமேஜயன்.

जनमेजय उवाच।

कुरूणां पाण्डवानां च भवान् प्रत्यक्ष दर्शिवान्।

तेषां चरितम् इच्छामि कथ्यमानं त्वया द्विज।।

कथं सम भवद् भेद: तेषाम् अक्लिष्ट कर्मणाम्।

तच्च युद्धं कथं वृत्तं भूतान्त करणं महत्।।

पितामहानां सर्वेषां दैवेनाविष्ट चेतसाम्।

कार्त्स्न्येनैतन्ममाचक्ष्व यथा वृत्तं द्विजोत्तम।

इच्छामि तत्त्वतः श्रोतुं भगवन् कुशलो ह्यसि।।


ஜனமேஜயனின் பிரார்த்தனையை கேட்ட கிருஷ்ண த்வைபாயனர் என்ற வியாசர், தனது அருகில் அமர்ந்திருந்த தமது சீடரான வைசம்பாயனரை பார்த்து இவ்வாறு பேசலானார்,

सौति: उवाच।

तस्य तद् वचनं श्रुत्वा कृष्णद्वैपायनस्श: तदा।

शशास शिष्यम् आसीनं वैशंपायनम् अन्तिके।।

"முன்பு கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் இருந்த பிரிவை, நீ என்னிடம் எவ்வாறு கேட்டறிந்தாயோ, அவ்வாறே, மன்னனுக்கு (ஜனமேஜயனுக்கு) முழுமையாக அப்படியே சொல்என்றார்.

व्यास उवाच।

कुरूणां पाण्डवानां च यथा भेदो अभवत्पुरा।

तद् अस्मै सर्वम् आचक्ष्व यन्मत्तः श्रुतवानसि।।

गुरो: वचनम् आज्ञाय स तु विप्रर्षभस: तदा।

आचचक्षे ततः सर्वम् इतिहासं पुरातनम्।।

राज्ञे तस्मै सदस्येभ्यः पार्थिवेभ्य: च सर्वशः।

भेदं सर्व विनाशं च कुरु पाण्डवयो स: तदा।।

Adi parva 60


வைசம்பாயணர் (வியாசரின் சிஷ்யர்) சுருக்கமாக மஹாபாரத சரித்திர நிகழ்வை ஜனமேஜெயனுக்கு சொன்னார்.

"தனக்கு விரிவாக சொல்ல வேண்டும்" என்று ஜனமேஜெயன் கேட்க, 

வைசம்பாயணர் பாரதத்தின் பெருமையை ஜனமேஜெயனுக்கு விரிவாக சொல்ல ஆரம்பிக்கிறார்.

அரசே! கொஞ்ச நேரம் (ஓய்வு) எடுத்து கொண்டு வாருங்கள். இந்த புண்ணியமான சரித்திரத்தை பற்றி எவ்வாறு கிருஷ்ண த்வைபாயணர் (வியாசர்) சொன்னாரோ, அப்படியே விவரமாக சொல்கிறேன்.

वैशंपायन उवाच।

क्षणं कुरु महाराज विपुलो अयमनुक्रमः।

पुण्याख्यानस्य वक्तव्यः कृष्णद्वैपायनेरितः।।

வியாச மஹரிஷி அனைத்து லோகங்களிலும் பூஜிக்க்கபடுகிறார். மகாத்மாவாகிய வியாசரின் அபிப்ராயத்தை அப்படியே விளக்க போகிறேன்.  

महर्षेः सर्व-लोकेषु पूजितस्य महात्मनः।

प्रवक्ष्यामि मतं कृत्स्नं व्यासस्य अमित तेजसः।।

சத்யவதி புத்ரனான  வியாச பகவான் புண்ய கர்மமான இந்த மகாபாரதத்தை, நூறு ஆயிரம் (100000) ஸ்லோகங்களாக இயற்றி உள்ளார். 

इदं शतसहस्रं हि श्लोकानां पुण्य कर्मणाम्।

सत्यवति आत्मजेनेह व्याख्यातम् अमितौजसा।।

இந்த மகாபாரதத்தை உபாக்யானங்கள் (பல உதாரணங்கள்) மூலமும் மேலும் விரிவாக அறிந்து கொள்ளலாம். இப்போது நான் உங்களுக்கு வியாசர் கொடுத்த கிரந்தபடியே அப்படியே சொல்லப்போகிறேன். 

उपाख्यानैः सह ज्ञेयं श्राव्यं भारतम् उत्तमम्।

संक्षेपेण तु वक्ष्यामि सर्वमेतन् नराधिप।।

200 (100*2) அத்தியாயங்களும், 100 (100*1) பர்வங்களும், நூறு ஆயிரம் (1,00,000) ஸ்லோகங்களும் உள்ளன. மகரிஷி வியாசர் 100 பர்வங்களையும் 18 (8+10) பெரும் பர்வங்களுக்குள் தொகுத்து கொடுத்துள்ளார்.

अध्यायानां सहस्रे-द्वे पर्वणां शतम्-एव च।

श्लोकानां तु सहस्राणि नवतिश्च दशैव च।

ततो अष्टा-दशभिः पर्वैः संगृहीतं महर्षिणा'।।

இந்த வியாச மஹாபாரதத்தை சொல்லும் மனிதனும், அதை கேட்கும் மனிதனும், பூலோக ஆயுசு முடிந்த பிறகு, ப்ரம்ம லோகமான சத்ய லோகம் சென்று, பிரம்மாவுக்கு நிகரான ஆனந்தத்தை பெறுவார்கள்.

य इदं श्रावयेद् विद्वान्ये चेदं शृणुयुः नराः।

ते ब्रह्मणः स्थानमेत्य प्राप्नुयुः देव-तुल्यताम्।।

மகாபாரதம் வேதத்திற்கு நிகரானது. புண்ணியங்களுக்குள் உத்தமமானது. கேட்கத்தக்கவைகளில் மிகவும் உத்தமமானது. இந்த புராணம் ரிஷிகளால் மிகவும் போற்றப்படுகிறது.

इदं हि वेदैः समितं पवित्रम् अपि च उत्तमम्।

श्राव्याणाम् उत्तमं च इदं पुराणम् ऋषि संस्तुतम्।।

இந்த மஹாபுண்யமான இதிகாசத்தில் பொருள், இன்பம் போன்ற புருஷார்த்தங்கள் விரிவாக உபதேசிக்கப்பட்டுள்ளது 

अस्मिन् अर्थ: च काम: च निखिलेन: उपदेक्ष्यते।

इतिहासे महापुण्ये बुद्धिश्च परिनैष्ठिकी।।

உயர்ந்த குணம் உடையவர்களிடமோ, சுயநலமின்றி மற்றவருக்கு கொடுப்பதில் ஆர்வம் உள்ளவரிடமோ, உண்மையிலிருந்து விலகாதவரிடமோ, கடவுளை நம்பாத நாஸ்தீகனாக இல்லாமல் இருப்பவரிடமோ, வேதமாகிய இந்த மகாபாரதத்தை சொல்லி, அதன் மூலம் அர்த்தம் (பொருள்) சம்பாதிக்கலாம். 

अक्षुद्रान् दानशीलांश्च सत्यशीलान् अ-नास्तिकान्।

कार्ष्णं वेदम् इमं विद्वान् छ्रावयित्वा अर्थम् अश्नुते।।

ப்ரூண ஹத்தி (கருவில் இருக்கும் குழந்தையை தெரிந்தே கொல்லுதல்) செய்வதால் ஏற்படும் பாபத்தை, வியாச மஹாபாரதம் கேட்பதாலேயே நிச்சயமாக போக்கி கொள்ள முடியும். 

भ्रूणहत्या कृतं च अपि पापं जह्याद् असंशयम्।

इतिहासम् इमं श्रुत्वा पुरुष: अपि सुदारुणः।।

வியாச மகாபாரதத்தை படிப்பவர்கள், ராகுவால் விழுங்கபட்ட சந்திரன் எப்படி கிரகணம் முடிந்து பிரகாசமாக வெளிப்படுகிறானோ அது போல, பாபங்கள் அனைத்தும் விலகி, புண்ணிய ஆத்மாவாக ஆகிறார்கள் 

मुच्यते सर्व पापेभ्यो राहुणा चन्द्रमा यथा।

இந்த வியாச மஹாபாரதம் வெற்றிக்கான இதிகாசம். வெற்றி அடைய ஆசைப்படுபவர்கள், இந்த இதிஹாசத்தை கேட்க வேண்டும்.

जयो नाम इतिहासो अयं श्रोतव्यो विजिगीषुणा।।

நாட்டை ஆள ஆசைபடுபவன், வியாச மகாபாரதத்தை கேட்டால் எதிரிகளை ஜெயித்து பூமியை தன் வசப்படுத்தி கொள்வான்.

महीं विजयते राजा शत्रूं च अपि पराजयेत्।

வியாச மகாபாரதத்தை கேட்டால், நிச்சயம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.

इदं पुंसवनं श्रेष्ठम् इदं स्वस्त्ययनं महत्।।

தேசத்தின் அரசியும், யுவராஜனும் அவசியம் கேட்க வேண்டியது வியாச மஹாபாரதம். இதை கேட்பதால், தேசத்தின் அரசி வீரமிகுந்த புத்திரனையோ, ராஜ்யத்தை நடத்தும் திறன் படைத்த பெண்ணையோ பெற்றெடுப்பாள். 

महिषी युवराजाभ्यां श्रोतव्यं बहुशस्तथा।

वीरं जनयते पुत्रं कन्यां वा राज्य भागिनीम्।।

வ்யாசரால் கொடுக்கப்பட்ட இந்த மஹாபாரதத்தில், புண்ணியங்களை கொடுக்கும் தர்ம சாஸ்திரமும் (அறம்), அர்த சாஸ்திரமும் (பொருள்), மோக்ஷ சாஸ்திரமும் (வீடு) நிரம்ப கிடக்கிறது.

धर्म-शास्त्रम् इदं पुण्यम् अर्थ-शास्त्रम् इदं परम्।

मोक्ष-शास्त्रम् इदं प्रोक्तं व्यासेनामित बुद्धिना।

அறம், பொருள், இன்பம், வீடு போன்றவற்றை பற்றி இந்த இதிகாசத்தில் என்னென்ன சொல்லப்பட்டு இருக்கிறதோ, அது தான் மற்ற தர்ம சாஸ்திரங்களில் உள்ளது. இதில் இல்லாதது என்று ஏதுமில்லை.

धर्मे च अर्थे च कामे च मोक्षे च भरतर्षभ।

यदिहास्ति तद् अन्यत्र यन्नेहास्ति न कुत्रचित्।

இந்த வியாச மகாபாரதத்தை பிராம்மணர்கள் கேட்டு கொண்டும், சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இனியும் சொல்லிகொண்டே இருப்பார்கள். இனியும் கேட்டு கொண்டே இருப்பார்கள்.

इदं हि ब्राह्मणै: लोके आख्यातं ब्राह्मणेषु इह'।

संप्रत्याचक्षते चेदं तथा श्रोष्यन्ति चापरे।।

வியாச மகாபாரதத்தை கேட்பதால், பிள்ளைகள் தாய் தந்தையை கைவிடாதவர்களாக இருப்பார்கள். கொடுத்த வேலையை செய்பவர்கள் (employee) இதை கேட்பதால், எஜமானனுக்கு (employer) விருப்பபட்டதை செய்பவர்களாக இருப்பார்கள். பரத வம்சத்தில் பிறந்தவர்களை பற்றி பொறாமை இல்லாமல் கேட்பவர்களுக்கு வியாதியை கண்டு பயம் ஏற்படாது. அவர்களுக்கு பரலோகத்தை கண்டு பயமில்லை என்று சொல்லவும் வேண்டுமா?

पुत्राः शुश्रूषवः सन्ति प्रेष्या: च प्रियकारिणः।

भरतानां महज्जन्म शृण्वताम् अनसूयताम्।

न अस्ति व्याधि-भयं तेषां परलोकभयं कुतः।।

வியாச மஹாபாரதத்தை கேட்கும் மனிதன், உடலால், பேச்சினால், மனதால் செய்த பாபத்தை அழித்து கொள்கிறான்.

शरीरेण कृतं पापं वाचा च मनसैव च।

सर्वं संत्यजति क्षिप्रं य इदं शृणुयान् नरः।।

செல்வத்தையும், புகழையும், நீண்ட ஆயுளையும், புண்ணியத்தையும், ஸ்வர்க்கத்தையும் கொடுக்கக்கூடிய இந்த மகாபாரதம் என்ற புண்ணிய கிரந்தம், கிருஷ்ண த்வைபாயனரால் கொடுக்கப்பட்டது.

धन्यं यशस्यम् आयुष्यं पुण्यं स्वर्ग्यं तथैव च।

कृष्णद्वैपायनेनेदं कृतं पुण्य चिकीर्षुणा।।

இந்த மஹாபாரதத்தில், பாண்டவர்களின் புகழை உலகிற்கு காட்டினார். மேலும் இந்த பூலோகத்தில் ஆண்டு கொண்டிருந்த பல பொலிவுள்ள க்ஷத்ரியர்கள் பற்றியும் சொல்கிறார். 

कीर्तिं प्रथयता लोके पाण्डवानां महात्मनाम्।

अन्येषां क्षत्रियाणां च भूरिद्रविण तेजसाम्।।

அனைத்து கல்வியும் தரக்கூடிய, உலகத்திற்கு சம்மதமான இந்த இதிஹாசத்தை, உலகத்தில் எந்த மனிதன் புண்ணியத்தை விரும்பி பிராம்மணர்களுக்கு சொல்வானோ, அவன் அழியா புகழுடன் இருப்பான்.

सर्व विद्या वदातानां लोके प्रथित कर्मणाम्।

य इदं मानवो लोके पुण्यार्थे ब्राह्मणाञ्छुचीन्।।

மகாபுண்யத்தை தரும், சனாதனமான தர்மத்தை சொல்லும், குரு வம்சத்தின் சரித்திரத்தை யார் கேட்கிறார்களோ அவர்களுடைய வம்சம் பெரிய வளர்ச்சி அடையும். உலகத்தில் மிகவும் கொண்டாடப்படுவார்கள். 

श्रावयेत महापुण्यं तस्य धर्मः सनातनः।

कुरूणां प्रथितं वंशं कीर्तयन् सततं शुचिः।

वंशम् आप्नोति विपुलं लोके पूज्यतमो भवेत्।।

எந்த பிராம்மணன் நியமம் தவறாமல், வருடத்தில் 4 மாதங்கள் தொடர்ந்து வியாச மகாபாரதத்தை படிப்பானோ, அவன் செய்த அனைத்து பாபங்களும் அழிந்து போகும்.

योऽधीते भारतं पुम्यं ब्राह्मणो नियत व्रतः।

चतुरो वार्षिकान् मासान् सर्वपापैः प्रमुच्यते।।

வியாச மகாபாரதத்தை படித்தவன், வேதம் முழுவதும் கற்றவன் என்று அறியலாம்.

विज्ञेयः स च वेदानां पारगो भारतं पठन्।।

இந்த வியாச மகாபாரதத்தில், தேவர்கள், ராஜரிஷிகள், முனிவர்கள், தோஷமற்ற கேசவன் {கிருஷ்ணன்},(33) தேவாதி தேவனான விஷ்ணு, அவருடைய தேவி, பல தாயாரால் வளர்க்கப்பட்ட கார்த்திகேயன் {முருகன்} பிறப்பும், பிராம்மணர்கள் மற்றும் பசுக்களின் பெருமையும், விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.

देवा राजर्षयो ह्यत्र पुण्या ब्रह्मर्षय: तथा।

कीर्त्यन्ते धूतपाप्मानः कीर्त्यते केशव: तथा।।

भगवां च अपि देवेशो यत्र देवी च कीर्त्यते।

अनेक जननो यत्र कार्तिकेयस्य संभवः।।

ब्राह्मणानां गवां च एव माहात्म्यं यत्र कीर्त्यते।

அனைத்து வேதமந்திரங்களின் தொகுப்பாக இருக்கும் இந்த வியாச மஹாபாரதத்தை, அறத்தில் (தர்மத்தில்) நாட்டமுள்ள அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.

सर्व श्रुति समूहोऽयं श्रोतव्यो धर्म बुद्धिभिः।।

எந்த வித்வான், புண்ணியமான காலங்களில், பிராம்மணர்களுக்கு, 18 மஹாபர்வங்கள் கொண்ட வியாச மகாபாரதத்தை சொல்வார்களோ, அவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு, சொர்க்கத்தையும் லட்சியம் செய்யாமல், பிரம்மத்துடன் நிலையாக மோக்ஷமடைவார்கள்.

य इदं श्रावयेद् विद्वान् ब्राह्मणान् इह पर्वसु।

धूतपाप्मा जित स्वर्गो ब्रह्म गच्छति शाश्वतम्।।

மறைந்த பெற்றோர்களுக்கு ஈடுபாட்டுடன் (ஸ்ரார்த்தம்) திவசம் செய்யும் போது, வியாச மஹாபாரதத்தில் உள்ள ஒரு ஸ்லோகதின் ஓர் அடியையாவது, வந்த பிராம்மணர்களை கேட்க செய்தால், அந்த ஸ்ரார்த்தம் அழியாத பயனுள்ளதாக வளர்ந்து, பித்ருக்களை போய் சேரும். பித்ருக்கள் மனநிறைவு பெற்று இருப்பர்.

श्रावयेद् ब्राह्मणान् श्राद्धे यश्चेमं पादम् अन्ततः।

अक्षय्यं तस्य तच्छ्राद्धम् उपावर्तेत् पितॄन् इह।।

ஒரு மனிதன் தெரிந்தோ, தெரியாமலோ உடலாலோ மனதாலோ செய்யும் பாபங்கள், வியாச மகாபாரதத்தை கேட்பதாலேயே அழிந்து போகும்.

अह्ना यदेनः क्रियते इन्द्रियै: मनसा अपि वा।

ज्ञानाद् अज्ञानतो व अपि प्रकरोति नर: च यत्।

तत् महाभारत आख्यानं श्रुत्वैव प्रविलीयते।।

மகத்தான பரத வம்ச இளவரசர்களின் வரலாறே "மஹாபாரதம்" என்றழைக்கப்படுகிறது.

இந்த பெயர் காரணத்தை அறிகிறவனை எல்லா பாபங்களும் விட்டு விடுகின்றன.

निरुक्तम् अस्य यो वेद सर्वपापैः प्रमुच्यते।

भरतानां महत् जन्म महाभारतम् उच्यते।।

இந்த பாரத வம்சத்தின் வரலாறு மிகவும் அற்புதமானது. இந்த வியாச மகாபாரதத்தை சொல்லும்போது, மரணத்தை தவிர்க்க முடியாத மனிதர்களின் (அநித்யமானவர்கள்) பாவங்கள் உறுதியாக அழிந்து போகும்.

महतो ह्येनसो मर्त्यान् मोचयेद् अनुकीर्तितः।

சிறந்த பெருமைகள் உடைய, சாமர்த்தியம் அறிந்த கிருஷ்ண த்வைபாயனர் என்ற வியாச பகவான், 3 வருட காலம் தூங்காமல், சுத்தமாக ஆசாரத்தோடு இருந்து, மகாபாரதத்தை முடித்தார். கடுமையான தவம் மற்றும் நியமத்துடன் இருந்து, வியாச மஹரிஷியான எங்கள் குரு இந்த மகாபாரதத்தை முடித்தார்.

त्रिभिः वर्षैः महाभागः कृष्णद्वैपायनो अब्रवीत्।।

नित्योत्थितः शुचिः शक्तो महाभारतम् आदितः।

तपो नियमम् आस्थाय कृतम् एतत् महर्षिणा।।

ஆதலால், இந்த வியாச மஹாபாரதத்தை, அனைத்து பிராம்மணர்களும் உறுதியான நியமத்தில் இருந்து கொண்டு கேட்க வேண்டும்.  

तस्मात् नियम संयुक्तैः श्रोतव्यं ब्राह्मणै: इदम्।

कृष्णप्रोक्ताम् इमां पुण्यां भारतीम् उत्तमां कथाम्।।

கிருஷ்ண த்வைபாயனர் {வியாசர்} கொடுத்த இந்த மகாபாரதத்தை எந்த பிராம்மணன் சொல்கிறாரோ, அவருக்கும், அவர் சொல்லிக் கேட்கும் மற்றவர்களுக்கும் அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் அவர்கள் செய்ததால், செய்யாமல் இருந்ததால் ஏற்பட போகும் கர்மங்கள் பலன்கள் நினைத்து கவலை அடைய அவசியம் இருக்காது.

श्रावयिष्यन्ति ये विप्रा ये च श्रोष्यन्ति मानवाः।

सर्वथा वर्तमाना वै न ते शोच्याः कृत अकृतैः।।

அறத்தில் (தர்மத்தில்), பொருளில் (அர்தத்தில்) விருப்பமுள்ள மனிதன், இந்த வியாச மகாபாரதத்தை முழுவதும் விடாமல் படிக்க வேண்டும். இப்படி செய்வதால், அவன் நினைத்த காரியங்கள் அனைத்தும் (தர்மமான ஆசைகள்) தானாக கைகூடும்

नरेण धर्म-कामेन सर्वः श्रोतव्य इति अपि।

निखिलेन इतिहासो अयं ततः सिद्धिम् अवाप्नुयात्।।

மஹாபுண்யத்தை தரும் வியாச மகாபாரதத்தை கேட்பதால் ஒரு மனிதன் அடைய போகும் சுகத்திற்கு நிகராக, சொர்க்கம் லோக சுகங்கள் கூட கிடையாது. 

न तां स्वर्गगतिं प्राप्य तुष्टिं प्राप्नोति मानवः।

यां श्रुत्वैवं महापुण्यम् इतिहासम् उपाश्नुते।।

ஈடுபாட்டுடன் இந்த வியாச மகாபாரதத்தை கேட்பவரும், இந்த அத்புதமான இதிகாசத்தை கேட்பிக்க செய்தவரும், ராஜசூய யாகம் செய்த பலனையும், அஸ்வமேத யாகம் செய்த பலனையும் அடைவார்கள். 

शृण्वञ्श्राद्धः पुण्यशीलः श्रावयं च इदम् अद्भुतम्।

नरः फलम् अवाप्नोति राजसूय अश्वमेधयोः।।

எப்படி கடலும், மேரு என்ற பெரிய மலையும் பல வகையான ரத்தினங்களை நிதியாக கொண்டுள்ளதோ, அது போல, இந்த வியாச மகாபாரதமும்  ரத்ன குவியல் போல பல தர்மங்களை நிதி போல வைத்து இருக்கிறது.

यथा समुद्रो भगवान् यथा मेरु: महा-गिरिः।

उभौ ख्यातौ रत्न-निधी तथा भारतम् उच्यते।।

இந்த வியாச மஹாபாரதம் வேதத்திற்கு சமமாக உள்ளது. இது, அனைத்தையும் காட்டிலும் உத்தமமான மங்களத்தை தரவல்லது. இதன் ஸ்லோகங்களை காதால் கேட்டாலேயே சுகத்தை தர வல்லது. செவிக்கு இனியது. மனதை பரிசுத்தமாக ஆக்க வல்லது. நல்ல ஒழுக்கத்தை வளர செய்ய வல்லது.

इदं हि वेदैः समितं पवित्रमषि च: उत्तमम्।

श्राव्यं श्रुति-सुखं च एव पावनं शील वर्धनम्।।

வியாசரின் மகாபாரதத்தை அனைவரும் அவசியம் கேட்க வேண்டும். ஜனமேஜெயா! அரசே! இந்த வியாச மகாபாரதத்தை படிப்பவனுக்கு, யார் தானம் கொடுக்கிறானோ அவன் சமுத்திரம் சூழ்ந்த இந்த பூமியையே தானம் செய்த புண்ணியத்தை அடைவான்.

य इदं भारतं राजन् वाचकाय प्रयच्छति।

तेन सर्वा मही दत्ता भवेत् सागरमेखला।।

பரிக்ஷித்தின் பிள்ளையே! புண்ணியத்தை அடைவதற்காகவும், வெற்றியையே அடைவதற்காகவும், நான் சொல்லப்போகும் இந்த உயர்ந்த இதிகாசத்தின் கதையை முழுவதுமாக கேளும். 

पारिक्षित कथां दिव्यां पुण्याय विजयाय च।

कथ्यमानां मया कृत्स्नां शृणु हर्षकरीम् इमाम्।।

ரிஷியான கிருஷ்ண த்வைபாயனர் 3 வருடங்கள் தூக்கத்தை விட்டு, அத்புதமான இந்த மகாபாரதத்தை கொடுத்தார். அதை அப்படியே நான் (வைசம்பாயானர்) உனக்கு சொல்ல போகிறேன். 

त्रिभि: वर्षैः सद उत्थायी कृष्णद्वैपायनो मुनिः।

महाभारतम् आख्यानं कृतवान् इदम् अद्भुतम्।।

शृणु कीर्तयतस्तन्म इतिहासं पुरातनम्।।

Adi parva 62 (Vyasa Mahabharata)

Monday 7 December 2020

ஆபஸ்தம்ப ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே.. "ஆபஸ்தம்ப" என்றால் என்ன அர்த்தம்? நம் ரிஷிகளின் பெருமையை...

ஒரு சமயம், 
வேதம் கற்ற ப்ராஹ்மணர் ஒருவர் தன் கிரஹத்தில் ஸ்ராத்தம் (திவசம்) செய்தார். 
  
பித்ருக்களுக்கு கொடுக்கும் உணவை ஏற்று, போஜனம் செய்விக்க ஒரு பிராஹ்மணருக்காகக் காத்திருந்தார்.

வெகு நேரம் கழித்து ஒரு பிராஹ்மணர் வந்தார். 
அவர் நல்ல பசியுடன் இருந்தார். 
அவரை அமர்த்தி இலை போட்டு, தானே பரிமாறினார் கர்தா. 

வந்த பிராஹ்மணர், சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். 




"ப்ராஹ்மணனுக்கு நல்ல பசிபோலும்" 
என்று எண்ணி இவரும் கேட்கக் கேட்கப் போட்டார். 

போடப் போட அனைத்தும் ஒரு நொடியில் காலியாயிற்று!

கர்தாவின் கண்களில் முதலில் இருந்த 'வினயம்' மறைந்து 'ஏளனம்' குடிகொண்டது. 
அதைத் தன் செயல்களிலும் காட்டினார். 

அதைப் பொருட்படுத்தாத அதிதி 'இன்னும் போடு!¸ 'இன்னும் போடு!' என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

"அபரிதமாக உண்டும் திருப்தியடையாமல் தனக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுக்க இவர் வந்திருக்கிறார்" 
என்று கர்தா நினைத்தார். 

சமைத்தவை எல்லாம் காலியாகிவிட்டன! 

'இன்னும் வேண்டும்! கொண்டு வா!' 
என்று பிராஹ்மணர் கேட்கவே கர்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது. 

காலியான சமையல் பாத்திரத்தைக் கொண்டுவந்து பிராஹ்மணரின் இலையின் மேல் கவிழ்த்து 'திருப்தியாயிற்றா!?' 
என்று கேட்டார். 

(போஜனம் முடிந்தபோது கர்தா பிராஹ்மணர்களை 'த்ருப்தாஸ்தா' என்று கேட்கவேண்டும். 
திருப்தியடைந்த ப்ராஹ்மணர்கள் 'த்ருப்தாஸ்ம:' என்று சொல்ல வேண்டும்.
அப்பொழுதுதான் ஸ்ராத்தம் நல்ல முறையில் பூர்ணமடைந்தது என்று அர்த்தம்) 

ஆனால் அந்த பிராஹ்மணர் 'ந' ('எனக்கு திருப்தி இல்லை') என்று சொன்னார்! 
 
கர்தாவுக்கு கோபம் தலைக்கேறியது. 
'இவர் கேட்க கேட்க கொண்டு வந்து கொட்டினேனே! 
மலை போல உணவுப் பண்டங்களைத் தின்றுவிட்டு திருப்தி இல்லை! என்று சொல்லி, என்னை அவமானப்படுத்தி, 
நான் செய்த ஸ்ராத்தத்தையும் இந்த பிராஹ்மணர் கெடுத்துவிட்டாரே!!' 
என்று சினந்தார். 

கர்தா நல்ல தபஸ்வி. 

கோபத்தால் முகம் சிவந்த அவர், சாபம் கொடுக்க, கையில் ஜலத்தை எடுத்து அபிமந்திரித்து பிராஹ்மணரின் தலையில் எறிந்தார். 

அப்பொழுது தான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. 

வந்த பிராஹ்மணர் தன் கை அசைவினால் அபிமந்திரித்து எறிந்த ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தினார்! 

கர்தா இதைப் பார்த்து பிரமித்து நின்றார். 

தான் எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்திய அவர் சாதாரண மனிதர் அல்ல¸ தன்னை விட உயர்ந்தவர் என்பதை அறிந்தார். 

'பூஜ்யரே! நீங்கள் யார்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்?' 
என்று கேட்டார்.

அதற்கு அந்த பிராஹ்மணர், 
'நான் ஒரு முனிவன். நான் அதிகம் உண்டதால் என்னை ஏளனம் செய்தாய்.
உன் பார்வைகளாலும், செயல்களாலும் என்னை அவமதித்தாய்.

'ஸ்ராத்தத்திற்கு வரும் பிராமணர்களிடம் உன் மூதாதையர்களின் ஒரு அம்சத்தை வைத்து பகவான் அனுப்புகிறான்' 
என்பதை மறந்து நீ நடந்து கொண்டாய்.

உனக்கு புத்தி புகட்டவே நான் இப்படி நடந்து கொண்டேன். 

'ஸ்ரார்த்தம்' என்றாலே 'சிரத்தை' (ஈடுபாடு) என்று அர்த்தம்.
உன் தகப்பனுக்கு செய்ய, எத்தனை ஈடுபாட்டுடன் நீ இருக்கிறாய், என்பதே முக்கியம்.
எத்தனைக்கு எத்தனை சிரத்தையுடன் செய்கிறாயோ, அத்தனைக்கு அத்தனை பலன் பித்ருக்களிடமிருந்து உனக்கு கிடைக்கிறது.

ஸ்ராத்தத்தை பய பக்தியுடன் கோப தாபங்களை விட்டுச் செய்!' 
என்றார். 

அதற்குக் கர்தா¸ 
'ஸ்வாமி! என் தவறை நான் உணர்ந்து கொண்டேன். க்ஷமியுங்கள். 
இனி இம்மாதிரித் தவறுகளைச் செய்யமாட்டேன். 
நான் செய்த ஸ்ராத்தம் பூர்ணமாகவில்லையே! 
அதற்கு என்ன செய்ய வேண்டும்?' 
என்று வினவினார். 

அதற்கு அந்த பிராஹ்மணர்¸
"நான் 'ந' என்று சொல்லி ஸ்ராத்தம் பூர்ணமாகாமல் இருக்கிறது. 
புருஷ சூக்தம் பாராயணம் செய்! 
இந்த தோஷம் பரிகாரம் ஆகும்!" 
என்றார். 




அதை பாராயணம் செய்து ஸ்ராத்தத்தை முடித்தார் கர்தா.

ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தியதால், அவரை "ஆபஸ்தம்பர்" என்று அழைத்தார்கள். 

ஸ்ராத்த காலத்தில், புருஷ சூக்தமும், காடகோபநிஷத்தும் பாராயணம் செய்யும் நியமம் இருக்கிறது. 

"ஆப" என்றால் நீர்
நீரை ஸ்தம்பிக்க வைத்து அந்தரத்தில் நிறுத்தியதால் அவர் ஆபஸ்தம்பரானார்
ஆபஸ்தம்பரின் சூத்ரம் பிரசித்தமானது. 

அதில் சில சூத்திரங்களை தெரிந்து கொள்ள, இங்கே படிக்கலாம்.

Monday 17 August 2020

கிருஷ்ண பக்தியின் பெருமை. ப்ரம்ம தேவன் சொல்கிறார்.

 கிருஷ்ண பக்தியின் பெருமை:

'கிருஷ்ண லீலையில் தானும் பங்கு எடுத்து கொள்ள வேண்டும்' என்று ப்ரம்ம தேவன் ஆசைப்பட்டார். 


ஒரு சமயம், பிருந்தாவனத்தில் கண்ணனோடு மாடு மேய்த்து கொண்டிருந்த அனைத்து மாடு கன்றுக்குட்டிகள், சிறுவர்களையும், அவர்கள் கொண்டு வந்து கம்பு, துணிப்பை, பாத்திரம் அனைத்தையும் ப்ரம்ம லோகத்துக்கு மறைத்து கொண்டு போய் விட்டார்.

கண்ணனோ கவலையே இல்லாமல், தானே ஆயர் சிறுவர்களாக ஆகி, மாடுகளாகி, கன்றுகுட்டியாகி, கொண்டு வந்த பாத்திரம், துணிமணியாகவும் ஆகி விட்டார்.




ஒரு வருஷ காலம் ஆகி விட்டது.


உலகை படைத்த ப்ரம்ம தேவன், திரும்பி வந்து பார்த்த போது, 

"ப்ரம்ம லோகத்தில் வைத்து உள்ள சிறுவர்கள் உண்மையா? இங்குள்ள சிறுவர்கள் உண்மையா? எது என்னுடைய படைப்பு?"

என்று குழம்பினார். 


குட்டி கண்ணன், ப்ரம்ம தேவனுக்கு "உயிருள்ள பொருளாகவும், உயிரற்ற பொருளாகவும் பல ரூபத்தில் தானே இருக்கிறேன்" என்று, நாராயணனாக தரிசனம் கொடுத்தார்.


தன்னையும் படைத்த நாராயணன் தான் யாதவ கண்ணனாக இருக்கிறார் என்றதும், குழந்தை ரூபத்தில் இருந்தாலும்,  கண்ணனின் காலில் விழுந்து நமஸ்கரித்து, கண்ணீர் பெருக "நந்தகோபன் பிள்ளையே!! உமக்கு நமஸ்காரம்!" 

என்றார்.

"பரமாத்மா! பரவாசுதேவா! நாராயணா! உனக்கு நமஸ்காரம்! 

என்றே என் மதிப்பு தெரிந்து எப்பொழுதும் துதிக்கும் நீங்கள், 

இப்பொழுது, என்னை நந்தகோபன் பிள்ளையே!! உமக்கு நமஸ்காரம்!

என்று கூப்பிட்டு, எனக்கு நமஸ்காரம் செய்கிறீர்களே!! 

இப்பொழுது என் மதிப்பு என்ன?"

என்று 6 வயது யாதவ கிருஷ்ணன் சிரித்து கொண்டே ப்ரம்ம தேவனை கேட்டான்.


"நீங்கள் தான் பரவாசுதேவன் என்ற ஞானத்தோடு, 

பரவாசுதேவா! பரவாசுதேவா! 

என்று சொல்லும் போது ஈஸ்வர அனுபவம் ஏற்படுகிறதே தவிர, ஆனந்தம் ஏற்படவில்லை.


'நந்தகோபன் பிள்ளையே!' என்று சொல்லும் போது ஏற்படும் ஆனந்தம், பரமாத்மா! பரப்ரம்மா! என்று சொல்லும் போது ஏற்படுவதில்லை.


மேலும், 

உன் மதிப்பு தெரிந்தால், உன்னிடம் எளிதில் பழக முடியுமா?


பரமாத்மா என்று சொல்லும் போது, உன்னிடம் மதிப்பு ஏற்படுகிறது.

ஆனால், உன்னை 'கண்ணா' என்று அழைக்கும் போது, மதுரமான ஆனந்தமும் உண்டாகிறது.





ஒரு ஈ, சுவையான லட்டு இருப்பதை பார்த்து விட்டு, அதன் மதுரத்தை சுவைக்க ஆசைப்படுமா? அல்லது அதன் மதிப்பு என்ன, சாதாரண நான் இதை மொய்க்கலாமா?! என்று நினைத்து ஒதுங்குமா?


மதுரமான லட்டுவை பார்த்தவுடனேயே பல ஈக்கள் வந்து மொய்ப்பது போல, நாங்களும், நீ பரமாத்மாவாயிற்றே! நாராயணன் ஆயிற்றே! என்று உன் உயர்வை, உன் மதிப்பை கூட கவனிக்காமல், 

யாதவ சிறுவனாக லட்டு கிருஷ்ணனாக நீ இருக்கும் இந்த ரூபத்தை பார்த்தே சொக்கி போய் விடுகிறோம்.

உன்னையே மொய்த்து கொண்டு, ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்.

கண்ணனாக நீ காட்டும் இந்த ரூபம் தரும் ஆனந்தமே எனக்கும் பிரியமானது. 

இந்த பிருந்தாவனத்தில் எனக்கு ஒரு பிறவி கிடைக்க உன்னை பிரார்த்திக்கிறேன்"

என்றார்.


நாராயணனாகவே வழிபடும் ப்ரம்ம தேவனும், 'கிருஷ்ண பக்தியே பெரும் ஆனந்தத்தை தருகிறது' என்று நமக்கு காட்டுகிறார்.


அனைவரும் கிருஷ்ண பக்தியே செய்வோம்.

Monday 13 July 2020

ஹிந்து மக்களின் பெருமைகள் என்ன? தெரிந்து கொள்வோம்...

ஹிந்துவின் பெருமையை உணருவோம்.. 

விஷ்ணு பகவான் 'கருமை நிறம்'. அவர் பத்னியான மஹாலக்ஷ்மியோ 'பொன்னிறம்'.

விஷ்ணு (கள்ளழகர்) மீனாக்ஷியை தன் தங்கையாக கருதினார்.
மீனாக்ஷி 'கருமை நிறம்'. 
இவள் மணந்து கொண்ட சிவபெருமானோ 'பொன்னிறம்'.

முருகன் தன் மாமனை போன்று பேரழகன், நிறத்தில் தந்தையை போன்று 'பொன்னிறம்'.

விநாயகன், மகா புத்திசாலி..யானை என்ற 'மிருகத்தின் உருவத்தை' ஏற்றவர். பிரம்மச்சாரி.

நீ கருப்பா?..  உனக்கு இருக்கிறார் 'கருமை நிற பெருமாள்'.. 

நீ வெளுப்பா?.. உனக்காக இருக்கிறார் 'சிவபெருமான்'.

நிற வெறி காட்டாத உன் ஹிந்து தெய்வங்களை விட்டு விட்டு, வெளிநாட்டில் பிறந்து இறந்து போன, நிறவெறியை தூண்டும் blonde தெய்வம் உனக்கு தேவையா?...

"கடவுளுக்கு உருவம் கிடையாது" என்ற சித்தாந்தம் உனக்கு இருந்தால், உனக்காக தானே அத்வைத மார்க்கம் உள்ளது..  




ஆதி சங்கரரை விட அத்வைதி உண்டா?..
கோவிலுக்கு கூட செல்லாமல், காடுகளில் இருந்த படியே,  ரூபமற்ற பிரம்மத்தை (கடவுளை) மனதிலேயே தியானித்த ரிஷிகள் உன் கண்ணுக்கு தெரியவில்லையா?..

'கட்டுக்கோப்புடன் வாழ்' என்று சொல்லி பழக்கிய போது சமுதாயங்கள் ஏற்படுவது இயற்கை தானே..

டாக்டர் சமுதாயம், வக்கீல் சமுதாயம் என்று இன்று கூட சமுதாயங்கள் உருவாகி கொண்டே தானே இருக்கிறது..

அதில் சில நல்லவர்கள் உதிக்கும் போது அவர் பெயரால் சமுதாயம் விரிவடைவதும் இயற்கை தானே..

ஷத்ரிய குலத்தில் தோன்றிய யது என்ற அரசன் புகழ் ஓங்கியதால், அவன் வழி வந்த சில லட்சம் ஷத்ரியர்கள் தங்களை "யாதவர்கள்" என்றும் "கோனார்' என்றும் சொல்லிக்கொள்வது இயற்கை தானே...

'எம்ஜிஆர் வழி, காந்தி வழி' என்று இன்று சொல்கிறார்களே.. இது சொல்வது இயற்கை தானே...

இந்த பல தரப்பட்ட சமுதாயங்கள் கட்டுக்கோப்பான அமைப்பை நம் பூமியில் ஏற்படுத்தியதால் தானே, ஆங்காங்கு நடந்த சிறு சிறு பிரச்சனைகளை ஆங்காங்கே பஞ்சாயத்து கூட்டி சரி செய்தனர்.

பல பிரச்சனைகள் கோர்ட்டு வரை செல்லாமலேயே நான்கு பெரியவர்களால் பேசி முடிக்கப்பட்டதே..

இந்த சமுதாய அமைப்பை சிதைத்து, நம்மை ஒழித்து கட்ட, கிறிஸ்தவ வெளிநாட்டினர், நம் சமுதாய அமைப்பை ஜாதி என்ற முத்திரை குத்தி, ஒரு சமுதாயத்துக்கும், இன்னொரு சமுதாயத்துக்கும் பகையை கிளப்பி, ஊர் பஞ்சாயத்துக்களை குலைத்து, கலாச்சாரத்தை கெடுத்தனர்.

இன்றுவரை, 1000 வருடங்களாக எங்களை அடிமை படுத்தி இருந்தனர் ப்ராம்மணர்கள் என்று உளரும் சிலர், 1000 வருடம் நம் நாட்டில் ஆட்சி செய்தது அந்நிய இஸ்லாமியர்களும், அந்நிய கிறிஸ்தவர்களும் தான் என்று ஏன் புரிந்து கொள்ளவில்லை?..

1000 வருடங்கள் முன் நன்றாக இருந்த காலத்தில், ஹிந்துக்களை ஹிந்து தானே ஆட்சி செய்தான்.

கும்பகோணத்தை ஆட்சி செய்த சோழர்கள் ஒரு தெருவில் சிவனுக்கு கோவில் கட்ட, மறு தெருவில் பெருமாளுக்கும் கோவில் கட்டி உள்ளானே.. 
வேலைவாய்ப்பு பலருக்கு கொடுத்து, அதே சமயம் அவரவர் சிற்ப, கட்டிட கலைகளை கூட ஊக்குவித்து இருக்கிறார்களே..

இன்று, ஒரு வீட்டில் நடக்கும் விவகாரம் ஆரம்பித்து, நாட்டில் நடக்கும் விவகாரம் வரை, ஒரே ஒரு நிதிமன்றம் தன் தலையில் எடுத்து கொண்டு, எதற்கும் தீர்வு கொடுக்க முடியாமல் தவிக்கிறதே!!

நிறவெறி இல்லாத நம் தெய்வங்களை விட்டு விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வம் நமக்கு எதற்கு? வெளிநாட்டவனுக்கும் இந்த நிறவெறி தூண்டும் போலி தெய்வம் எதற்கு?..




அனைவரையும் ஹிந்துவாக ஆக்குவோம். 
உனக்கு கருப்பு கடவுள் விருப்பமா?.. பெருமாளை வணங்கு..
உனக்கு ஸ்படிகம் போல வெண்மையான தெய்வம் விருப்பமா? சிவனை வணங்கு.
தெய்வம் குழந்தை போல இருக்க வேண்டுமா? முருகனை வணங்கு.
உனக்கு இயற்கையே தெய்வமா? சக்தியை வணங்கு.
உனக்கு ஒரே தெய்வம் மட்டுமே வேண்டுமா? ஆதி மூலமான நாராயணனை வணங்கு.

அந்த ஆதிபுருஷனும் உருவம் ஏற்று இருக்க கூடாது என்று நினைக்கிறாயா? பரப்ரம்மம், பரஞ்சோதி என்று வணங்கு.

கடவுளே வேண்டாம், என் தாயே தெய்வம் என்று நினைக்கிறாயா? உன் தாயையே வணங்கு..

தெய்வங்களே தங்களுக்குள் சொந்தம் கொண்டாடும் ஹிந்து தர்மத்தை விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வம் உனக்கு எதற்கு?

தெய்வங்களுக்கு பொறாமை கூட இங்கு இல்லையே...

மஹாவிஷ்ணுவே கிருஷ்ணராக தோன்றியும், அர்ஜுனன் சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் கேட்டு தவம் செய்ய போகிறேன் என்றான். 
கிருஷ்ணர் எதிர்க்கவில்லையே.. 
தெய்வங்களுக்குள் சண்டை இல்லையே!

நெல்லையப்பர் கோவிலுக்கு செல்.. 
மஹாவிஷ்ணு, தன் மாப்பிள்ளை சிவபெருமானுக்கு தன் கையால் பூஜை செய்கிறார்..
சிவபெருமான், காசியில் "ராம ராம" என்று ராம நாமத்தை ஜபம் செய்கிறார்.
மதுரைக்கு சென்றால், மாமன் வீற்று இருக்கும் கள்ளழகர் மலையில், முருகன் வந்து விட்டார்.
திருப்பதி செல்ல ஆரம்பித்தால், காளஹஸ்தி என்ற இடத்தில் சிவபெருமான் இருக்கிறார்.
108 திவ்ய தேசத்தில் ஒன்றாக இருக்கும் சித்ரகூடம் என்ற சிதம்பரத்தில், பெருமாள் நடராஜருக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

கும்பகோணம் சென்றால், ஒரு தெருவில் கும்பேஸ்வரர் இருந்தால், மறு தெருவில் சாரங்கபாணி இருக்கிறார்.

தெய்வங்கள் சொந்தம் கொண்டாடி கொண்டு இருக்கும் போது, கட்டுக்கோப்பான சமுதாயங்கள் பிற்காலத்தில் ஜாதி என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும், வெறுப்பை நமக்குள் ஊட்டியதே, நிறவெறி கொண்ட கும்பல் தானே..

வெளிநாட்டில் இருந்து வந்த இந்த அந்நியர்கள் நிறவெறி குணத்தை அடைந்தற்கு காரணமே, அவர்கள் வழிபட்ட நிறவெறி தூண்டும் போலி தெய்வங்கள் தானே..

சிந்திப்போம்... 
நிறவெறி தூண்டும் வெளிநாட்டு தெய்வங்களை பௌத்த மதத்தை வீசியது போல வீசுவோம்..

நம் தெய்வங்கள் நமக்கு உறவு அல்லவா...
எத்தனை தேர் திருவிழா கண்டு இருப்போம். 
தெய்வங்கள் நம்மிடம் உறவு கொள்வது புரியவில்லையா?..
நம் தெரு வழியாக, நம் வீடு தேடி  தெய்வங்கள் வீதி உலா வருவதை பார்த்தும், தெய்வங்கள் நம்மிடம் உறவு கொள்வது புரியவில்லையா?..

ப்ரம்ம தேவன் "உலகை படைத்தார். நம்மையும் படைத்தார்" என்று ஹிந்து தர்மம் சொல்கிறது..
ப்ரம்ம நமக்கு பிதா அல்லவா..

ப்ரம்ம தேவன், தன்னை படைத்த நாராயணனை "தனக்கு பிதா" என்கிறார். 

அப்படியென்றால் நாராயணன் நம் பாட்டனார் இல்லையா.. 

விஷ்ணு சஹஸ்ரநாமம், "பெருமாள் நம் சொந்த பாட்டனார்" என்று உறவு சொல்கிறதே.. கவனிப்பது இல்லையா?

சொந்தம் கொண்டாடும் தெய்வத்தை விட்டு விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வத்தை ஏற்பானா மனசாட்சி உள்ளவன்?..

சிந்திப்போம்...  
700 கோடி உலக மக்களில், எங்கு வேண்டுமானாலும் நாம் பிறந்து இருக்கலாம்...
ஆனால், 
80 கோடி ஹிந்துக்கள் கூட்டத்தில் நாம் ஹிந்துவாக பிறந்து இருக்கிறோம் என்றால், நாம் எத்தனை புண்ணியம் செய்தவர்கள் என்று புரியும்.

கிடைத்தற்கரிய இந்த ஆயுளையும், போலி தெய்வத்திடம் செலவழித்து விரயம் செய்து வீணாக்கி விட கூடாது..

கையில் வைரம் கிடைத்தும், கண்ணாடி என்று தூக்கி போடுவது எத்தனை முட்டாள்தனமோ, அது போல, ஹிந்துவாக பிறந்தும் தன் பெருமையை அறிந்து கொள்ளாமல் இருப்பது...

வேதத்தில் சொன்ன தெய்வங்கள் நிஜமானவை..

இந்த தெய்வங்கள் தரிசனம் பெற்றவர்கள் அநேகம்... ஆதிசங்கரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், யோகிகள், மகான்கள், சாதுக்கள், பக்தர்கள் இந்த 80 கோடி ஹிந்து கூட்டத்தில் தான் தோன்றினார்கள் என்பதை மறக்க கூடாது...

ஹிந்து தர்மம் சொல்லும் போதனைகளை, போலி மதங்கள் திருடி 'தான் சொல்வது போல சொன்னாலும்', ஹிந்துக்கள் ஏமாற கூடாது..

நாம் சொல்லாத எந்த நல்ல தர்மங்களையும் இவர்கள் சொல்லவில்லை. 

"நல்ல விஷயம் தானே சொல்கிறான்" என்று ஏமாற கூடாது..

'பால் தான் குடிக்க கொடுக்கிறான்' என்றாலும், 'நாய் தோலில் செய்த பாத்திரத்தில் ஊற்றி கொடுத்தால் சாப்பிடுவாயா...?'

தங்க பாத்திரத்தில் பால் ஊற்றி கொடுத்தால் சாப்பிடலாம்.

நம் ஹிந்து தர்மம் தங்க பாத்திரம் போன்றது.. அது சொல்லும் பால் போன்ற தர்மங்களை பருகுவதே நல்லது.

நம்மிடம் தங்க பாத்திரத்தில் பால் இருக்கும் போது, நாய் தோலில் செய்யப்பட்ட பாத்திரம் நமக்கு எதற்கு?

சிந்திப்போம். 
நம் கோவில் தெய்வங்களில் விளக்கு எறிய செய்வோம். திருவிழா நடக்க செய்வோம். 
தேர் இழுப்போம்.

ஹிந்துவாகவே வாழ்வோம்..

Monday 18 May 2020

ச்யவன ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... ச்யவனர் கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே!! நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

ச்யவனர் (ச்யாவன) ரிஷி கோத்திரம்
'ப்ருகு ரிஷி'யின் பரம்பரையில் வந்த முக்கியமான சில ரிஷிகளின் பெயர்:
  1. ச்யாவன
  2. ம்ருகண்டு
  3. மார்க்கண்டேயர்
  4. ஹேம ரிஷி
  5. ஆப்னவான
  6. ஔர்வ
  7. ஜாமதக்ன்ய (ஜமதக்னி)
  8. பரசுராமர்
ப்ருகு ரிஷியின் வம்சத்தில் வந்தவர் ச்யவனர்.
ஆயுர்வேதத்துக்கு ரிஷி இவர்.
இவர் பெயரில் தான் இன்றுவரை "ச்யவன ப்ராசம்" என்ற லேகியம் தயாரிக்கப்படுகிறது.

"ராம நாமம் என்ற தாரக மந்திரமே அனைவருக்கும் மோக்ஷம் தரக்கூடியது" என்று சொன்ன ரிஷி இவர்.

'ச்யவனபிராஸ் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம்' என்று இந்த ரிஷி சொல்வதை ஏற்கும் நாம்,
'"ராம" நாமத்தை சொன்னால் ஆத்மாவுக்கு ஆரோக்கியம்' என்று இந்த ரிஷி சொல்வதை கேட்க வேண்டாமா?
சுற்று சிந்தித்து பார்க்க வேண்டும் நாம்.

கடுமையான தவம் செய்வார். ஒரு சமயம் பல வருடங்கள் தவத்தில் அமர்ந்து விட்டார். இவரை சுற்றி புற்று உருவாகி விட்டது.




அந்த சமயம், "சர்யாதி" என்ற அரசன், தன் மகள் "சுகன்யாவுடன்" காட்டுக்கு வேட்டையாட வந்தார்.

ஒரு கூடாரம் போட்டு தங்கினார்கள்.
தன் தோழிகளுடன் சுகன்யா கொஞ்சம் உலாவி கொண்டு இருந்தாள்.

அங்கு ச்யவனர் மேல் சுற்றி இருக்கும் புற்றை கண்டாள்.
அந்த புற்றில் ச்யவனரின் இரண்டு கண்களே இரண்டு ஜோதியாக (வெளிச்சம்) தெரிய... "இது என்னவாக இருக்கும்? குத்தி பார்க்கலாமா?" என்று தன் தோழிகளிடமே கேட்டுக்கொண்டு, ஒரு குச்சியை எடுத்து குத்தி விட்டாள்.
கண்கள் பறிபோய் விட்டது. குருடனாகி விட்டார் ச்யவனர்.

"வயதானவர்..  கோபக்காரர். சபித்து விடுவாரோ!!" என்று பயந்தான் அரசன். தன் மகள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.

"தான் குருடனாகி விட்டதால், இனி துணை இல்லாமல் இருக்க முடியாது. ஆதலால் உன் மகளை எனக்கு துணைவியாக கொடு"
என்று சொல்லிவிட்டார் ச்யவனர்.

மறுபேச்சு இல்லாமல், சுகன்யாவை விதிப்படி மணம் செய்து கொடுத்து விட்டார் அரசர்.

மகளை பார்த்து, "எந்த நிலையிலிலும் கணவருக்கு அபச்சாரம் செய்து விடாதே.. கவனமாக இரு. உனது கற்ப்பாலும், தொண்டினாலும் அவர் சந்தோஷப்படும் படியாக இருக்க வேண்டும்"
என்று சொல்லிவிட்டு, தன் அரண்மனைக்கு திரும்பி விட்டார் அரசர்.

நேற்றுவரை ராஜகுமாரி.. இன்று ரிஷி பத்தினி.
நேற்றுவரை அரண்மனை வாசம்.. இன்று காட்டில் ஆஸ்ரம குடிசையில் வாசம்.
நேற்றுவரை அரண்மனை விருந்து உண்டவள்... இன்று காய், கிழங்கு உண்கிறாள்.
நேற்று பட்டாடை உடுத்திய சுகன்யா... இன்று மரவுரி ஆடை உடுத்திக்கொண்டாள்.

"தன் கணவனே தெய்வம்" என்று வாழ்ந்து வந்தாள் சுகன்யா.
இந்திர தேவன், தேவர்களுக்கான யாகத்தில் அஸ்வினி குமாரர்களுக்கு சோமபானம் கிடையாது என்று ஒதுக்கி வைத்து இருந்தார்.
அஸ்வினி குமாரர்கள் தேவர்களுக்கு மருத்துவர்கள்.

தான் வயதானவனாக இருந்தாலும், ரிஷியாக ப்ரம்மச்சர்யத்தில் இருந்தாலும், கற்புடன் தனக்கு சேவை செய்து கொண்டு இருக்கும் சுகன்யாவுக்கு அணுகிரஹம் செய்ய விரும்பினார் ச்யவனர்.

உடனே யாகத்தில் அஸ்வினி குமாரர்களுக்கும் சேர்த்து சோமபானம் கொடுத்தார்.
தன்னை உபசரித்த ச்யவன ரிஷிக்கு, தன்னை போன்றே திவ்யமான தேவ ரூபத்தை கொடுத்து விட்டனர்.
இளமையான ச்யவன ரிஷியாக ஆகி விட்டார்.
சுகன்யா பெரிதும் ஆச்சர்யப்பட்டாள். ஆனந்தமாக இல்லறத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு சமயம், சர்யாதி தன் மகள் எப்படி காட்டில் இருக்கிறாளோ, என்று பார்க்க வந்தான்.
வந்து பார்த்த போது, இளமையான ஒருவருடன் சுகன்யா இருப்பதை பார்த்து மிகவும் கோபித்து கொண்டார்.

"அப்பா.. இவர் உங்கள் மாப்பிளை தான். தபோ பலத்தால் இளமையாகி விட்டார்" என்றாள் சுகன்யா.

அதற்கு  ச்யவனர், "ராஜனே! சுகன்யா தன் கற்பின் பலத்தால் என்னை இளமையாக்கி விட்டாள்" என்று பெருமையுடன் சொன்னார்.

அரசன் பெருமகிழ்ச்சியுடன் திரும்பினான்.

ஸ்யாவன ரிஷியின் பரம்பரையில் வருபவர்கள் நீங்கா இளமையுடன் இருப்பார்கள்.
ராம பக்தி கொண்டு இருப்பார்கள்.
ஆயுர்வேதம் படிப்பு படித்தால், பெரும் வைத்தியர்கள் ஆவார்கள்.

ப்ருகு ரிஷியின் வம்சத்தில் வருவதால், பெருமாளிடம் பக்தியும், மஹாலக்ஷ்மி அணுகிரஹமும் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.



Sunday 17 May 2020

பரத்வாஜ ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... பரத்வாஜ கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

பரத்வாஜ ரிஷி கோத்திரம் (பரம்பரை)யில் பிறந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. பரத்வாஜர்
2. கஸ்யபர்
3. அத்ரி
4. ஜமதக்னி
5. கௌதமர்
6. வசிஷ்டர்
7. விஸ்வாமித்திரர்
இந்த 7 ரிஷிகளும் சப்த ரிஷிகள்.




இவர்கள் பிரம்ம ஆயுசு முழுக்க இருப்பவர்கள்.
தேவர்களுக்கும் மேல் இருப்பவர்கள்.
நக்ஷத்திர ரூபமாக இவர்கள் துருவ மண்டலத்தை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.
அங்கீரஸ ரிஷியின் புத்திரர் "பரத்வாஜர்".

'பரத்' என்றால் "நிரம்பிய" என்று அர்த்தம்.
'வாஜம்' என்றால் "அன்னம்" என்று அர்த்தம்.

அன்னதானத்திற்கு பெரும் புகழ் பெற்றவர் இந்த ரிஷி.

துர்வாச ரிஷி ஒருவரே "பத்தாயிரம் பேர் சாப்பிட கூடிய உணவை" சாப்பிட்டு விடுவார். அவருடைய தபோ பலம் அப்படிப்பட்டது.

பரத்வாஜ ரிஷியோ, தன் தபோ பலத்தால் "பத்தாயிரம் பேருக்கு சாப்பாடு போடுவார்".
அவருடைய தபோ பலம் அப்படிப்பட்டது.
தன் தபோ பலத்தை செலவழித்து, எத்தனை பேர் வந்தாலும் அன்னதானம் செய்து விடுவார் பரத்வாஜர்.

பரதன் அயோத்தி மக்களோடு கிளம்பி ராமபிரானை பார்க்க சித்ரகூடம் நோக்கி வந்தார்.

வரும் வழியில் பரத்வாஜர் ஆசிரமத்துக்கு தங்கினார்.

அன்று பரத்வாஜர் போட்ட அன்னதானத்தை சாப்பிட்டுவிட்டு,  "அயோத்தியை ராமர் ஆளட்டும், பரதன் ஆளட்டும். நாம் இங்கேயே இருந்து விடலாம்" என்று சொன்னார்கள் என்றால், பரத்வாஜர் செய்த அன்னதானம் எப்பேர்ப்பட்டது என்று அனுமானிக்கலாம்.




ராமபிரான் வனவாசம் முடிந்து, ராவண வதம் முடிந்து, இலங்கையில் இருந்து அயோத்தி திரும்பும் வழியில், 
இன்று பிரயாக்ராஜ் (பிரயாகை) என்று சொல்லப்படும் இடத்திற்கு புஷ்பக விமானத்தில் (flight) இருந்து இறங்கினார்.
அப்போதும் அனைவருக்கும் அன்னதானம் செய்தார் பரத்வாஜர்.

சாம வேதியான அப்பைய தீக்ஷிதர், பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்தவர்.

அன்னதானம் செய்வதை உயர்வாக நினைப்பவனுக்கு பரத்வாஜரே குரு.

பரத்வாஜ ரிஷி பரம்பரையில் (கோத்திரம்) இருப்பவர்கள், அன்னதானம் செய்ய செய்ய, தன் ரிஷியை சந்தோஷப்படுத்துகிறார்கள்.

Friday 21 June 2019

ப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது. பிரம்மாவின் கருணையாலேயே, நமக்கு ரங்கநாதர் கிடைத்தார், காஞ்சியில் வரதராஜன் கிடைத்தார். பிரம்மா கேட்டதால் தான் பரமாத்மா வாசுதேவன் அவதாரங்கள் செய்தார்.

ஸ்ரீ பாகவதம், யார் சிறந்த பாகவதன்? என்று சொல்லும்போது 'ப்ரம்மாவை' தான் முதலில் சொல்லுகிறது.

ப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது.



பரவாசுதேவன் முதன் முதலாக படைத்ததே ப்ரம்மாவை தான்.

தன் திருவாயாலேயே ப்ரம்ம தேவனுக்கு "ப்ரம்ம வித்யை"யை உபதேசம் பண்ணினார் பகவான்.

"உலக ஸ்ருஷ்டி செய்யும் பொழுதும், எப்பொழுதும் என் இதயத்தில் ஹரியையே நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன்"
என்று சொல்கிறார் ப்ரம்மா.

"மது-கைடபர்கள் வேதத்தை கொண்டு போய் விட்டார்கள்" என்ற பொழுது, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள் அவருக்காக மத்ஸ்ய அவதாரம் எடுத்தார்.

"தேவர்கள் அசுரர்களால் துன்பப்படுகிறார்கள்" என்றதும், அவர்கள் பிரம்மாவிடம் ஓடி வழி கேட்க, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள், அவருக்காக கூர்ம அவதாரம் எடுத்தார்.

"பூமி பிரளய ஜலத்தில் மூழ்க", ஸ்வாயம்பு மனு பிரம்மாவிடம் சென்று முறையிட, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள், அவருக்காக பிரம்மாவின் ஹ்ருதயத்தில் இருந்தே வெளிவந்து வராஹ அவதாரம் எடுத்தார்.

ஹிரண்யகசிபுவுக்கு ப்ரம்மா தான் வரம் கொடுத்தார். பின் 'இவன் அட்டகாசம் தேவர்களை துன்புறுத்த', அவர்களுக்காக, க்ஷீராப்தி வந்து ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காக, பெருமாள் நரசிம்ஹ அவதாரம் எடுத்தார்.
ராம அவதாரமும், ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காகவே நடந்தது.

பூமி தேவி துஷ்டர்கள் பெருகியதால் "பூபாரம் தாங்க முடியாமல்", ப்ராம்மாவிடம் பிரார்த்திக்க, மீண்டும் ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காக, பெருமாள் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் எடுத்தார்.

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில், பிருந்தாவனத்திற்கு வந்து, "இங்கு புல்லாய் இருக்கவாவது அனுமதி கொடு. எனக்கு இந்த ப்ரம்ம பதவி கூட வேண்டாம்"
என்று பிரார்த்திக்கிறார் ப்ரம்மா.
"நீ ஆதிகாரி புருஷன். நீ உன் பதவியில் போய் இரு"
என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்ல, வேறு வழி இல்லாமல் திரும்ப செல்கிறார் ப்ரம்ம லோகத்துக்கு.



இப்படி விபவ அவதாரங்கள், இந்த பூமியில் நிகழ செய்தது மட்டும் இல்லாமல், 
இந்த அவதாரங்கள் நிகழ்ந்த சமயத்தில் இல்லாத நமக்கும் அணுகிரஹம் செய்ய, 
ப்ரம்ம லோகத்தில் தான் வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதரை, உலக ஸ்ருஷ்டி செய்து,  ஸ்வாயம்பு மனுவை பதவியில் அமர்த்தி, 
அவர் பூமியில் வழிபட தான் வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதரை வழங்கி விட்டார் ப்ரம்மா.

அந்த ரங்கநாதரை இக்ஷ்வாகு குலத்தில், ஸ்ரீ ராமராக அவதாரம் செய்து, தன் குல தெய்வமாக ஸ்ரீ ராமரே வழிபட்டு,
ராவண வதம் முடிந்து, விபீஷணனுக்கு தன் அடையாளமாக, ஸ்ரீ ரங்கநாதரை கொடுக்க,
ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தை தானே தேர்ந்தெடுத்து இன்று வரை நாமும் காண முடியும் என்கிற அளவுக்கு கருணை செய்தார்.

பிரம்மாவின் கருணையாலேயே, நமக்கு ஸ்ரீ ரங்கநாதர் கிடைத்தார்.

'அவரே ப்ரம்ம லோகத்தில் வழிபட்ட தெய்வம்' என்று நாம் பார்க்கும் போது தான், ஸ்ரீ ரங்கநாதரை பற்றியும் புரியும், பிரம்மாவின் கருணையும் புரியும்.
அதே ப்ரம்ம தேவன், இப்பொழுது காஞ்சியில் அஸ்வமேத யாகம் செய்து, நமக்காக, காஞ்சியில் வரதராஜனாக பெருமாளை வெளிப்படுத்தினார்.

இதை உணரும் போது,
பிரம்மாவை விட, சிறந்த பக்திமான் யார் இருக்க முடியும்?