Followers

Search Here...

Showing posts with label பெண் குழந்தை. Show all posts
Showing posts with label பெண் குழந்தை. Show all posts

Saturday 27 May 2023

ஆண் குழந்தை பெற வழி என்ன? பெண் குழந்தை பெற வழி என்ன? அலியை பெறுவது எப்படி? ஸ்வாயம்பு மனு சொல்கிறார். அறிவோம் மனு ஸ்மிருதி...

ஆண் குழந்தை பெற வழி என்ன? 

பெண் குழந்தை பெற வழி என்ன?

அலியை பெறுவது எப்படி?

இரட்டை குழந்தைகளை பெறுவது எப்படி?

ஸ்வாயம்பு மனு சொல்கிறார்.

அறிவோம் மனு ஸ்மிருதி...


ऋतुकाल अभिगामी स्यात् 

स्व-दार निरतः सदा ।

पर्ववर्जं व्रजेच्चैनां 

तद्व्रतो रतिकाम्यया ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

எப்பொழுதும் மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்வது கணவனின் கடமை. மனைவியை தவிர அந்நிய பெண்ணை நினைக்க கூட கூடாது. பௌர்ணமி, அமாவாசை மற்றும் சில நாட்கள் தவிர்த்து, மனைவியிடம் சேரலாம்.

ऋतुः स्वाभाविकः स्त्रीणां 

रात्रयः षोडश स्मृताः ।

चतुर्भि: इतरैः सार्धम् 

अहोभिः सद्विगर्हितैः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ரஜஸ் வலை (3 day period) முடிந்த பிறகு, பொதுவாக (least) பெண்ணுக்கு அடுத்த 16 நாட்கள் ருது காலம் என்று சொல்லப்படுகிறது. ருது காலத்தின் முதல் 4 நாட்களும் கணவன் மனைவியோடு சேர கூடாத நாட்களாகும்.


तासाम् आद्याश्चतस्रस्तु 

निन्दित: एकादशी च या ।

त्रयोदशी च शेषास्तु 

प्रशस्ता दशरात्रयः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ருது காலத்தின் முதல் 4 நாட்களும், அதே போல 11வது நாளும், 13வது நாளும் கணவன் மனைவியோடு சேர கூடாத நாட்களாகும். இந்த 6 நாட்கள் தவிர்த்து, மற்ற 10 நாட்களில் மனைவியோடு சேரலாம்.

युग्मासु पुत्रा जायन्ते 

स्त्रियो अयुग्मासु रात्रिषु ।

तस्माद् युग्मासु पुत्रार्थी 

संविशेदार्तवे स्त्रियम् ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

அனுமதிக்கப்பட்ட 10 நாட்களில், 6வது அல்லது 8வது நாளில் மனைவியோடு சேர்ந்தால், மகன் பிறப்பான்.

மீதி உள்ள 8 நாட்களில் சேர்ந்தால், மகள் பிறப்பாள்

மகனை விரும்புபவர்கள், மகளை விரும்புபவர்கள் தகுந்த படி சேரலாம்.


पुमान् पुंसो अधिके शुक्रे 

स्त्री भवति अधिके स्त्रियाः ।

समे अपुमान् पुं।स्त्रियौ वा 

क्षीणे अल्पे च विपर्ययः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ஆணின் அணுக்கள் (Y) அதிகமாக இருந்தால், மகன் பிறப்பான்.

பெண்ணின் ஶ்ரோணிதம் (X) அதிகமாக இருந்தால், மகள் பிறப்பாள். (இதையும் மாற்ற பும்ஸவனம் என்ற வைதீக கர்மாவை சரியான காலத்தில் செய்தால், மகனாக பிறப்பான்)

இரண்டும் சமமாக இருந்தால், அலி பிறப்பான், அல்லது இரட்டையாக குழந்தைகள் பிறக்கும். 

குறைவாக இருந்தால், கர்ப்பம் ஏற்படாது.


निन्द्यास्वष्टासु चान्यासु 

स्त्रियो रात्रिषु वर्जयन् ।

ब्रह्मचार्येव भवति यत्र 

तत्र आश्रमे वसन् ॥ 

- மனு ஸ்மிருதி (manu smriti)

இப்படி எந்த கணவன் தன் மனைவியின் ருது காலத்தில் முதல் 4 நாட்களும், 11வது, 13வது நாட்களில் சேராமல், மற்ற நாட்களில் மட்டும் சேர்கிறானோ, அவன் க்ருஹஸ்தனாகவே இருந்தாலும், பிரம்மச்சர்யத்தை கடைப்பிடிப்பவனே. அவன் பிரம்மச்சாரியே!


अमावास्याम् अष्टमीं च पौर्णमासीं चतुर्दशीम् ।

ब्रह्मचारी भवेन् नित्यमप्यर्तौ स्नातको द्विजः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

அமாவாசை, அஷ்டமி, பௌர்ணமி, சதுர்தசி போன்ற நாட்களில், மனைவி ருது காலத்தில் இருந்தாலும், பூணூல் காயத்ரீ உபதேசம் பெற்ற வைசியன்/பிராம்மணன்/க்ஷத்ரியன் (த்விஜன்) மனைவியுடன் படுக்க கூடாது.


Sunday 18 September 2022

பெண் குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்? "மனு-ஸ்ம்ருதி" என்ன சொல்கிறது?

பெண் குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்? மனு தன்னுடைய "மனு-ஸ்ம்ருதி"யில் நமக்கு வழி காட்டுகிறார். 

स्त्रीणां सुखौद्यम् अक्रूरं विस्पष्टार्थं मनोहरम् ।

मङ्गल्यं दीर्घवर्णान्तम् आशीर्वादाभिधानवत् ॥

- மனு ஸ்ம்ருதி

பெண் குழந்தைக்கு, சுகமாக அழைக்கும் படியாகவும், கெட்ட அர்த்தம் இல்லாதபடியாகவும், அர்த்தமில்லாத பெயராக இல்லாமலும், மனதுக்கு ஆனந்தம் கொடுக்கும் படியாகவும், மங்களமான சொல்லாகவும், பெயரின் கடைசி அக்ஷரம் நீட்டி தீர்க்கமாக முடியும் படியாகவும் (ரமா, கீதா, உமா, தேவீ, சீதா, ராதா, ருக்மிணீ), ஆசிகள் வழங்க கூடிய பெயராகவும் இருக்க வேண்டும். 


"மனு ஸ்ம்ருதியை கொளுத்துவோம்! அதை நாங்கள் ஏற்க மாட்டோம்" என்று மறுப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. 

தங்கள் பெண் குழந்தைகளுக்கு இதற்கு மாறாக "சொறி, சிரங்கு..." என்று பெயர் வைத்து சனாதனத்தை வேர் அறுத்து, தங்கள் பெருமையை காட்டலாம்.

Thursday 13 April 2017

தாலி கட்டுவதை விட, பாணிக்ரஹனம் தான் மிக முக்கியம் என்று சொல்லப்படுகிறது. தெரிந்து கொள்வோம்.- ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை, ஆசைக்கு ஒரு பெண்

இந்த வைதீக திருமணத்தில், பாணிக்ரஹனம் செய்து கொள்ளும் மணமகன், மணமகளை பார்த்து "ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தையும், ஆசைக்கு ஒரு பெண் குழந்தையும் நமக்கு கிடைக்கட்டும்" என்ற அர்த்தத்தில், மணப்பெண்ணின் 5 விரல்களை சேர்த்து பிடித்து மந்திரம் சொல்லுகிறான்.


ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை என்று கேட்பதற்கு உண்மையான அர்த்தம் :

இது முதலில் ஆஸ்தி அல்ல, அஸ்தி என்று நாம் அறிய வேண்டும்.
இங்கு, ஆண் மணப்பெண்ணின் 5 விரல்களை பிடித்து "என்னுடைய வம்ச பரம்பரை, அழிந்து விடாமல் "அஸ்தி" என்று சொல்லும்படியாக தொடர்ந்து இருக்க வேண்டும். அதற்கு நமக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும்" என்கிறான். கட்டை விரல் ஆண் என்பதை குறிக்கும்.

ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்வது கொஞ்சுவதற்காக அல்ல. குழந்தையாக இருக்கும் போது தான் கொஞ்சுவதெல்லாம்.  பையன் வளர்ந்த பின்னும் கொஞ்சுவதற்காக ஆண் குழந்தை வேண்டும் என்று இங்கு  கேட்கவில்லை.

பிற் காலத்தில் அவன் சம்பாதித்து பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்கவில்லை.

என்னுடைய வம்சத்தில் என் வரை காத்து வந்த பழக்கவழக்கம், கலாச்சாரம், தெய்வ பக்தி, ஒரு ஆண் குழந்தை மூலம் மேலும் வளரட்டும் என்பதற்காகவே இப்படி ஒரு பிரார்த்தனை. சுயநலத்திற்காக அல்ல.


ஆசைக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று கேட்பதற்கு உண்மையான அர்த்தம் :

பெண் குழந்தை பிறந்தால் நம்மிடம் ஆசையாய் இருக்கும் என்பதற்காகவா? இல்லை.

நாம் (ஆண்) கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த போது, யாரோ ஒருவர் (மாமனார்) தன் பெண் குழந்தையை குழந்தை பருவத்தில் இருந்து ஜாக்கிரதையாக வளர்த்து, வேறு கோத்திரத்தை சேர்ந்த நமக்கு, நம் குடும்பம் வ்ருத்தியாகட்டும் என்று தன் பணத்தையும் செலவழித்து, பெண்ணையும் தானமாக கொடுத்தாரே !!.
நாம் சுகமாக இருப்பதற்கும், நம் குடும்பம், நம் தர்மம் வ்ருத்தியாவதற்கும் வளர்த்த பெண்ணை அப்படியே கொடுத்து விட்டாரே !! இத்தனை வருடம் தன் பெண்ணை வளர்த்தது, கடைசி காலம் வரை இவள் என்னை காப்பாள் என்று இல்லாமல், அவளையும், அவள் திறன், சம்பாத்தியம் அனைத்தையும் நான் அனுபவிக்கலாம் என்று தானம் செய்து விட்டாரே !!  எத்தனை பெரிய மனிதன் அவர் !!
இப்படி ஒருவர் நமக்கு கொடுத்ததால் தானே நமக்கு குடும்பம் ஏற்படுகிறது.

எங்கிருந்தோ வந்த அவள், நமக்காக வாழ்நாள் முழுதும் இருந்து, நம் குடும்பத்தை பார்த்து கொள்வாள். இதை நினைக்கும் போது, நாமும் இதே போன்று ஒரு பெண் குழந்தை பெற்று, இன்னொரு சத் குடும்ப பையனுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் என்று ஆண், மணப்பெண்ணின் 5 விரல்களை பிடித்து, "அஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு பெண்ணும்" நம் இல்லற வாழ்வில் பெற்றுக் கொள்வோம் என்கிறான்.


இந்த பாணிக்ரஹன நிகழ்ச்சி, அந்த மணபெண்ணுக்கு, அந்த மணமகனிடம் ஒரு நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. இவனிடம் ஏற்பட்ட பெண் குழந்தை ஆசை, தன் தந்தை செய்த "கன்னிகாதானம்" என்ற உயர்ந்த தானத்தை கண்டு தான் என்று அறிந்து கொள்கிறாள். தன் தந்தையின் இந்த "கன்னிகாதானம்" இவன் மனதிலும் தானம் செய்யும் ஆசையை உருவாக்கி உள்ளது. அதனால் தான், தனக்கும் ஒரு பெண் குழந்தை கேட்கிறான் என்று உணர்கிறாள்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka