Followers

Search Here...

Wednesday 27 December 2017

நரகத்திற்கு அழைத்து போகும் நான்கு குணங்கள் எது? தெரிந்து கொள்வோமே...

நமது உபநிஷதம், "ஹே புத்தி உள்ளவனே" என்று நம்மை ஆசையாக,  கூப்பிட்டு, பின் வருமாறு சொல்கிறது. 



  1. அஸ்ரத்தை (ஈடுபாடு இன்மை),
  2. லோபம் (பேராசை),
  3. கோபம்,
  4. பொய்

- இந்த 4ம் உன்னிடம் இருந்தால், அது உன்னை "நரகத்திற்கு அழைத்து போகும்".
"ஹே புத்தி உள்ளவனே ! 
ஈஸ்வரனை அடைய, மேலும் உலகத்திலும் சௌக்கியமாக வாழ, 
மேல் சொன்ன இந்த நான்கையும், உன் குணத்திலிருந்து துரத்தி விடு.

  1. ஸ்ரத்தை (ஈடுபாடு)
  2. தானம்
  3. பொறுமை
  4. உண்மை 

- என்ற இந்த நான்கை உன் வாழ்வில் பிடித்துக்கொள்"
என்கிறது.

"இந்த உண்மையை நீ புரிந்து கொள்வாய்" என்பதால் தான், வேதம் நம்மை "ஹே புத்தி உள்ளவனே !" என்று அழைக்கிறது.

"இனி நரக வழியை தேர்ந்தெடுக்காதே, ஈஸ்வரனை நோக்கி வா" என்று  வைதீகமான வேதம், நம்மை ஆசையுடன் அழைக்கிறது.

நீ ஸ்ரத்தை (முழு மனதுடன் ஈடுபாடு) இல்லாமல் எந்த காரியம் செய்தாலும் அது பலன் அளிக்காது. 

உலக விஷய காரியமானாலும் சரி,
தெய்வ விஷய காரியமானாலும் சரி,
ஸ்ரத்தை இல்லாமல் நீ செய்தால், ஒரு பலனும் இல்லை. 

லோபம் என்றால் எது ?
"உலகில் உள்ள அனைத்தும் எனக்கு மட்டும் வேண்டும்" என்று சொல்வது லோபம்.
"தன்னிடம் உள்ள எதுவும் (அறிவு, செல்வம்) மற்றவர்க்கு கிடைக்க கூடாது என்று வைத்துக் கொள்வதும்" லோபம்.

இந்த "இரண்டுமே லோபம் தான்". 
இந்த லோபம் ஒருவனை நரகத்திற்கு தான் இட்டு செல்லும். 



அதனால் "லோபத்தை (பேராசை) விடு" என்கிறது உபநிஷத்.

அதே போல,
"பொய் பேசுதல், கோபப்படுதல் இதையும் விட்டு விடு" என்கிறது உபநிஷத்.

பொதுவாக, ஒரு விஷயத்தை விடு என்றால், அது தீயது என்று தெரிந்தாலும், மனிதனால் விட முடிவதில்லை.

நம் நிலையை அறிந்த ஸனாதன வைதீக வேதம், "இன்னொரு நான்கை காட்டி, அதை பிடி" என்கிறது.

"எப்பொழுதும் தானம் செய்யும் ஸ்வபாவம் வேண்டும்" என்று நாம் ஆசைபட ஆரம்பிக்கும் போது, தானாகவே, "தனக்கு என்று சேர்த்துக் கொள்ள வேண்டும், அது வேண்டும், இது வேண்டும்" என்கிற லோபம் (பேராசை) தானாக நம்மை விட்டு அழியும்.

ஆக, புத்திசாலியான நீ, "லோபத்தை (பேராசை), தானத்தால் நீக்க வேண்டும்".
வெறும் தானம் செய்தால், "தான் செய்தோம் என்ற கர்வம் உண்டாகும்". அதனால்,
"தானம் செய்யும் போது, அந்த ப்ரம்மத்துக்கு (பரமாத்மா, பர வாசுதேவன்) தானம் செய்தோம்" என்ற புத்தியுடனேயே தானம் செய்ய வேண்டும்.

ஆக, புத்திசாலியான நீ, "தானம் செய்து செய்து லோபத்தை அழிக்க வேண்டும்".

அதேபோல, புத்திசாலியான நீ,
"நீ பொறுமையால், கோபத்தை நீக்க வேண்டும்".

அதேபோல, புத்திசாலியான நீ, "உண்மையால், பொய்யை நீக்க வேண்டும்".

அதேபோல, புத்திசாலியான நீ, "அஸ்ரத்தையை, ஸ்ரத்தையால் நீக்க வேண்டும்".

எந்த காரியத்தை எடுத்தாலும் "ஸ்ரத்தை என்ற ஈடுபாடுடன்" நீ செய்தால், எத்தனை முறை தோற்றாலும், ஸ்ரத்தை இருந்தால், முயற்சி செய்து கொண்டே இருப்பாய்.


ஈஸ்வரனை நேரில் காண வேண்டும் என்றால் கூட, உன் ஸ்ரத்தையே வழி கொடுக்கும். உன் ஈடுபாடு ஒன்றே வழி கொடுக்கும்.

ஆக,
நாம் வாழப்போகும் இன்னும் சில கால ஜீவ வாழ்க்கையில்,
இந்த உபதேசத்தால், நாம் க்ரஹிக்க (மனதில் பதியவைக்க) வேண்டியது என்ன?
1. நாம் எப்போதும் "தானம் செய்யும்" ஸ்வபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.  
லோபம் (பேராசை) தானாக நம்மை விட்டு அழிந்து விடும்
வெறும் தானம் "கர்வத்தை தரும்" என்பதால்,
அந்த "பரமாத்மாவுக்கு தானம் செய்தேன்" என்று நினைப்புடன் எப்போதும் தானம் செய்யும் ஸ்வபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.



2. எப்பொழுதும் நம் சாஸ்திரத்திலும், குரு வாக்கியத்திலும் நமக்கு ஸ்ரத்தையை(ஈடுபாடு) வளர்த்துக்கொள்ள வேண்டும். 
'அஸ்ரத்தை' (ஈடுபாடு இன்மை) தானாக நம்மை விட்டு அழிந்து விடும்.

3. நாம் எப்போதும் பொறுமை ஸ்வபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

'கோபம்' தானாக நம்மை விட்டு அழிந்து விடும்.   

4. சத்யம் பேசும் ஸ்வபாவத்தை எப்பொழுதும் வளர்த்துக்கொள்ள வேண்டும். 
சத்தியத்தையே சொல்ல வேண்டும்.
அஸத்யத்தை (பொய்) எப்பொழுதும் சொல்லக்கூடாது.
அஸத்யம் (பொய்) என்றுமே இறுதியில் ஜெயிக்காது.


உபநிஷத் "சத்யம் ஏவ ஜயதே" (சத்தியமே ஜெயிக்கும்) என்று உறுதியாக சொல்கிறது.

ஆக,
"அஸ்ரத்தை, லோபம், கோபம், பொய்"
- இந்த நான்கை நம்மிடமிருந்து விரட்ட,
"ஸ்ரத்தை, தானம், பொறுமை, உண்மை"
என்ற இந்த நான்கை கொண்டு நீ ஜெயித்து விட்டால்,
"புத்திசாலியே !! நீ ஈஸ்வரனை எளிதில் கண்டு கொள்வாய்." என்று உபநிஷதத்தில் உள்ளது.

இது போன்ற பல உபதேசங்கள், வேதத்தில் உள்ளது, உபநிஷதத்தில் உள்ளது.

இப்படிப்பட்ட பொக்கிஷங்கள் உள்ள வேதத்தை நாம் காக்க வேண்டும். 
வேதம் அறிந்த வேதியர்கள் நடமாடும் தெய்வங்கள் என்பதை நாம் உணர்ந்து, அவர்களை மதிக்க வேண்டும். 
வேதம் அறிந்த வேதியர்களிடம் உபதேசங்கள் கேட்டு, "ஈஸ்வரன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?" என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உபன்யாசம் extract from சிருங்கேரி பெரியவர்.


வாழ்க ஹிந்துக்கள்.   
ஹிந்துக்கள் சொல்லாத நல்ல விஷயங்கள், பிற போலி மதங்களில் இல்லை.

பிற போலி மதங்கள் சொல்லும் அனைத்து நல்ல விஷயங்களும், நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டவை தான்.

தமிழ் மொழியை, சமஸ்கரிதத்திற்கு நிகராக பெருமைப்படுத்தியவர்கள் யார்? தெரிந்து கொள்ள வேண்டாமா தமிழன்?

சமஸ்கரிதம் தெரியாது. அதை படித்து புரிந்து கொள்ள எங்களுக்கு அறிவும் இல்லை பொறுமையும் இல்லை. நியாயமான கோரிக்கை.

நாங்கள் ஏன் சமஸ்கரிதம் படிக்க வேண்டும் என்று கேட்கும் தமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன ?



12 ஆழ்வார்கள் :

தமிழ் மொழியை, சமஸ்கரிதத்திற்கு நிகராக பெருமைப்படுத்தியவர்கள் 12 ஆழ்வார்கள்.


ஸ்ரீ நாராயணனே முழு முதற் கடவுள் என்று நான்மறை வேதத்தின் உண்மையை தமிழில் பாசுரமாக செய்த மகாத்மாக்கள்.
தமிழ் இன்று வரை, நம்மிடம் ஓரளவாவது இருக்க நாயன்மார்களும், ஆழ்வார்களும் செய்த தமிழ் தொண்டே காரணம்.
12 ஆழ்வார்கள், 4000 திவ்ய பிரபந்தங்கள் தமிழனுக்கு தந்தார்கள்.
இந்த தமிழர்களை பற்றி சிறு குறிப்பு இதோ :

4203 BCE
1. பொய்கை ஆழ்வார்.
இவர் காஞ்சிபுரத்தில் உதித்தார். (முதல் திருவந்தாதி இயற்றினார்)

4203 BCE
2. பேயாழ்வார்.
இவர் மைலாப்பூர் - Chennaiயில் உதித்தார்(இரண்டாம் திருவந்தாதி இயற்றினார்)

4203 BCE
3. பூதத்தாழ்வார்.
இவர் மகாபலிபுரத்தில் உதித்தார்.(மூன்றாம் திருவந்தாதி இயற்றினார்)

4203 BCE
4. திருமழிசை ஆழ்வார்.
இவர் திருவள்ளூரில் உதித்தார். (நான்முகன் திருஅந்தாதி, திருச்சந்த விருத்தம் இயற்றினார்)
நான்கு ஆழ்வார்களும், ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்துக்கும் முன் த்வாபர யுகத்தில் இருந்தவர்கள். இவர்களுடைய அந்தாதி ஸ்ரீ நாராயணனை குறித்தது. முதல் மூவரும் திருக்கோவிலூர் த்ரிவிக்ரம பெருமாள் கோவிலில் சந்தித்தனர்.

3227 BCE - 3102 BCE
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம். கிருஷ்ண அவதாரம் தொடர்ந்து வந்த ஆழ்வார்கள் 8.

3102 BC
5. மதுரகவி.
இவர் திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரி - தூத்துக்குடியில் உதித்தார். இவர் வேத சாத்திரங்களை நன்கு பயின்ற அந்தணர். (கண்ணி நுண் சிறுத்தாம்பு இயற்றினார்)



3059 BC
6. நம்மாழ்வார்.
இவர் திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரி - தூத்துக்குடியில் பிள்ளைமார் சமுதாயத்தில் உதித்தார்.
நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழ்ப்படுகிறார்.

நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு:
அவை, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.
இவை ரிக், யஜூர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக சொல்வார்கள்.

5000 வருடங்களுக்கு முன், மதுரகவி என்ற அந்தணர், ஞானத்தில் சிறந்த பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்த நம்மாழ்வாரை தன் ஆசாரியனாக ஏற்றார்.

ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி தன் ஆச்சாரியன் நம்மாழ்வாரை போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.

4000 திவ்யபிரபந்தங்களில் நம்மாழ்வார் மட்டுமே 1296 இயற்றினார்.
ஆழ்வார்களில் மிக மிக முக்கியமானவர் நம்மாழ்வார் மாறன், சடகோபன், குருகூர் நம்பி, குழந்தை முனி, ஸ்ரீவைணவக் குலபதி என்று பலவாறு நம்மாழ்வார் போற்றப்படுகிறார்.

பிறந்தது முதல் 16 வருடங்கள் யாரிடமும் பழகாமல், பேசாமல் இருந்த நம்மாழ்வார் என்ற சடகோபன், மதுரகவி ஆழ்வார் வந்தபின் அவரிடம் பேசினார். நம்மாழ்வார் சொல்ல மதுரகவி ஆழ்வார் சொல்ல நமக்கு கிடைத்தது தான், நம்மாழ்வாரின் 1296 திவ்யபிரபந்தம்.

மதுரகவி இல்லையேல், நம்மாழ்வார் யார் என்பதும் தெரிந்து இருக்காது, இவரின் 1296 திவ்யபிரபந்தமும் கிடைத்து இருக்காது.

3075 BCE
7. ராஜா குலசேகர ஆழ்வார்.
இவர் சேர அரசன். இவரின் ஆட்சியின் கீழ் கூடல் (மதுரை), கொல்லி (உறையூர், திருச்சி) போன்ற தேசங்களை ஆண்டு வந்த, க்ஷத்ரிய அரசன். (பெருமாள் திருமொழி இயற்றினார்)

3056 BC
8. பெரியாழ்வார்.
இவர் மதுரைக்கு அருகே உள்ள வில்லிபுத்தூரில் உதித்தார். விஷ்ணு சித்தர் என்றும் அழைப்பர். பெரியாழ்வார் மதுரையில் உள்ள கூடலழகர் கோயிலில் குடிகொண்டுள்ள பெருமாளை பார்த்தே திருப்பல்லாண்டு பாடினார். பெருமாளுக்கே மற்றவர் கண் பட்டு விடுமோ என்று இவர் பாடிய திருப்பல்லாண்டு, பின் வந்த வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்கள் வரிசை க்ரமத்தில் ஏழாமவராக வரும் பெரியாழ்வாரின் பாடல்களை 4000 திவ்வியப் பிரபந்தத்தில் முதற்பாடல்களாகத் தொகுத்தனர்.

பெரியாழ்வார், திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழி இயற்றினார்.

3005 BC
9. ஆண்டாள்.
இவள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்ணாக, துளசி செடியின் அடியில் கிடைத்தாள். பெரியாழ்வார் வளர்ப்பு பெண்ணாக வளர்ந்தாள். 100 வருடங்களுக்கு முன்பு தான் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் நடந்து இருந்தது. கிருஷ்ண பக்தி ஆரம்பித்து இருந்த காலம் இது. ஆண்டாள் 'திருப்பாவை', 'நாச்சியார் திருமொழி' இயற்றினாள்.

வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண் ஆவார்.

ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.

2814 BCE
10. தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
இவர் சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் உதித்தவர். இது பாபநாசம் தாலுக்கா தஞ்சாவூர் அருகே உள்ளது.



இவர் 'திருமாலை' மற்றும் 'திருப்பள்ளி எழுச்சி' இயற்றினார். ஸ்ரீரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டார். இவர் இயற்றிய 'திருப்பள்ளி எழுச்சி' மார்கழி மாதத்தில் திருமலை உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் பாடப்படுகிறது.

பரமனாகிய திருமாலை அறிய விரும்புவோர், ஆழ்வாரின் 'திருமாலை' எனும் நூலை படித்தால் போதும். இதையே "திருமாலை அறியாதர் திருமாலையே அறியாதர்" எனும் வழக்கு இவரின் படைப்புகளுள் ஒன்றான திருமாலையின் உயர்வை செப்புகிறது.

2760 BCE
11. திருப்பான் ஆழ்வார்.
இவர் பாணர் குலத்தில் திருச்சி அருகே உள்ள உறையூரில் உதித்தார்.
இவர் 'அமலன் ஆதிப்பிரான்' ஸ்ரீரங்க அரங்கனை பார்த்து இயற்றினார்.

599 BC,
இந்தியாவில் மகாவீரர் பிறந்தார். ஜைன மதம் உருவாக்கப்பட்டது.

563 BC
இந்தியாவில் கௌதம புத்தர் பிறந்தார். பௌத்த மதம் உருவாக்கப்பட்டது.

சந்திரகுப்த, அசோக சக்ரவர்த்தி போன்ற வலிமைமிக்க அரசர்கள் கூட இந்த பௌத்த, ஜைன மதங்களில் ஈர்க்கப்பட்டனர்.
அந்தோ பரிதாபம் !! இந்தியாவுக்கு வந்த கேடு !

அரசர்கள் சந்யாசி தர்மத்தை எடுக்க, அரசர்களும், படை வீரர்களும் சோம்பேறிகள் ஆகி கொண்டிருந்த காலம்... இந்தியர்கள் கேடு காலம் ஆரம்பிக்க விதை போடப்பட்டது இந்த சமயமே.

664 AD
12. திருமங்கை ஆழ்வார்.
இவர் பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர்.
தஞ்சாவூர் சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்'. ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.

இவர் 'பெரிய திருமொழி', 'திருக்குறுந் தாண்டகம்', 'சிறிய திருமடல்', 'பெரிய திருமடல்', 'திருவெழுக்கூற்றிருக்கை' போன்ற பிரபந்தங்கள் இயற்றினார்.

பௌத்த, ஜைன மதத்தின் காரணமாக, போர் பயிற்சியை விட்டு, கவனத்தை சிதற விட்டு கொண்டிருந்தார்கள் அரசர்கள். தமிழ்நாடு அரசர்கள் மட்டுமே சைவர்களாகவோ, வைஷ்ணவர்களாகவோ மட்டுமே இருந்ததால், இந்தியாவுக்கு வரப்போகும் பெரும் பாதிப்பில் இருந்து ஓரளவு தப்பித்தனர் என்று சரித்திரம் காட்டுகிறது.

947 AD
ஆப்கான் நாட்டில் இருந்த அமித் சூரி என்ற ஹிந்து அரசன் பௌத்த மதத்தை ஏற்று இருந்தான்.

முதல் இஸ்லாமிய படையெடுப்பின் போது, வீரம் குறைந்த பௌத்த மதத்தை விட்டு, இஸ்லாமியன் ஆனான்.

இவன் பரம்பரையே உருவாக்கியது முதல் இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில். முகம்மது கோரி போன்றவர்கள் இவன் சந்ததியினர் என்று மறுக்க முடியாதது. சரித்திரம் தெரிந்து கொள்வது அடிப்படை தேவை.

தமிழ்நாடு இன்றும் தமிழ் நாடாக இருப்பதற்கு காரணம் இந்த 12 ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும் தான்.

இவர்கள் எழுதிய பாசுரங்கள் தமிழனுக்கு தெரிய வில்லை என்றால், தமிழ் இனி சாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாத்தீகர்கள் தமிழை வளர்க்கிறேன் என்று கடந்த 60 வருடங்களில், பாசுரங்கள், பிரபந்தங்கள் அளித்த ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் புறக்கணித்து, சாதித்து கிழித்தது தமிழை மெல்ல அழித்தது தான்.



சமஸ்கரிதம் தெரியாது, ஏன் நாங்கள் படிக்க வேண்டும் என்று கேட்கும் தமிழன், உண்மையான தமிழ் பற்று இருந்தால், இத்தனை வருட காலம் தமிழை காப்பாற்றி தந்த பாசுரங்கள், பிரபந்தங்கள் அளித்த ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் முதலில் மதிக்க வேண்டும்.

தமிழன், தமிழை காப்பாற்ற முதலில் செய்ய வேண்டியது இவர்கள் கொட்டி தந்துள்ள பாசுரங்களை ஒன்றையாவது படித்து தங்கள் மகனுக்கும், மகளுக்கும் சொல்லித்தருவதே.

தமிழை அழித்த, நாத்தீகனை தூக்கி ஏறிவோம்.

தமிழை இன்று வரை உயிரோடு வைத்து இருந்த ஆழ்வார்களையும், நாயன்மார்களையும மதிப்போம்.

கங்கை நதி சரித்திரம் தெரிந்து கொள்வோமே....பூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண்டான கங்கை

பூலோகம் ஆரம்பித்து சத்ய லோகமான ப்ரம்ம லோகம் வரை, தன் தவத்தால், பலத்தால் கைப்பற்றி இருந்த பலி (bali) சக்ரவர்த்தியிடம் மூன்று அடி தானமாக கேட்டு,
* ஒரு அடி பூலோகம் ஆரம்பித்து,
* மற்றொரு அடியை ப்ரம்ம லோகம் வரை அளந்து,
* இன்னும் ஒரு அடி எங்கே? என்றார் த்ரிவிக்ரம பெருமாளாக நின்ற நாராயணன்.




மூன்றாம் அடியாக தன்னையே சமர்ப்பணம் செய்தார் பலி சக்ரவர்த்தி.

இவரே அடுத்த இந்திர ராஜன் என்று நியமிக்கப்பட்டு, இன்று வரை பாதாள லோகத்தில் அரசாட்சி புரிகிறார்.
இப்படி ப்ரம்ம லோகம் வரை பெருமாள் திருவடி செல்ல, ப்ரம்ம தேவன், "விஷ்ணு பதி" என்ற பெயருடன் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் ஜலத்தால், அவர் திருவடியை அபிஷேகம் செய்தார்.

நாராயணன் கால் நகம் பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர், ப்ரம்ம லோகத்தின் கீழ் உள்ள துருவ மண்டலத்தில் விழுந்தது.
நாராயணன் பாதம் பட்ட புனித தீர்த்தம் என்பதை அறிந்து, பக்தியுடன் நீராடினார் துருவன்.

துருவ மண்டலத்தில் இருந்து ஜன மற்றும் தப லோகங்களை வந்து அடைந்தாள், 'விஷ்ணு பதி" என்ற நதி தேவதை.
அங்கு சப்த ரிஷிகளும், முனிவர்களும் ஸ்நானம் செய்தனர்.

பின் அங்கிருந்து சொர்க்க லோகம் வந்து அடைந்தாள் விஷ்ணுபதி. அங்கு உள்ள தேவர்களும், அப்சரஸ் போன்றவர்களும் நாராயண பாதம் பட்ட தீர்த்தம் என்று பக்தியுடன் கொண்டாடினர். ஸ்நானம் செய்தனர். தேவலோகத்தில் "மந்தாகினி" என்ற பெயர் பெற்றாள்.

இப்படி ப்ரம்ம லோகத்தில் இருந்து கீழ் இறங்கி வந்த விஷ்ணுபதி, பூமிக்கு வர மறுத்து, சொர்க்க லோகத்திலேயே தங்கி விட்டாள்.

சத்ய யுகத்தில், ஸ்ரீ ராமர் பிறந்த குலத்தில், ராமருக்கும் முன், ஸகர சக்கரவர்த்தி என்ற அரசன் ஆண்டு வந்தார்.

இவருக்கு 60,000 பிள்ளைகள். மூத்த பிள்ளையின் பெயர் "அஸமஞ்சன்".

இவன் யாரிடமும் சமமாக பழகாமல் இருந்ததால், ஆட்சி செய்ய தகுதி இல்லாதவனாக இருந்தான். இதனால் நாடு கடத்தப்பட்டான்.

"அம்சுமான்" என்ற ஒரு மகன் இவனுக்கு உண்டு. 'அம்சுமான்' தன் தாத்தா ஸகர சக்கரவர்த்தியுடன் இருந்து வந்தார்.

சக்கரவர்த்தியாக இருப்பதால், ராஜா "அஸ்வமேத யாகம்" நடத்த திட்டமிட்டார்.

இந்திரன் தன் பதவி் போய் விடுமோ என்று எண்ணி, அந்த யாகத்திற்காக அனைத்து நாட்டுக்கும் செல்ல தயாராக இருந்த அஸ்வமேத குதிரையை கைப்பற்றி, பாதாள லோகத்திற்கு கொண்டு சென்று, அங்கு இருந்த கபில மகரிஷியின் ஆஸ்ரமத்தில் கட்டி விட்டு சென்று விட்டான்.

சகர சக்கரவர்த்தி, அஸமஞ்சன் தவிர்த்து, மற்ற 60000 மகன்களையும், "அந்த குதிரையை மீட்டு கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, தேடி தேடி, இறுதியில் பாதாள லோகத்தில் கபில ஆஸ்ரமத்தில் இருப்பதை கண்டு, கபில மகரிஷி தான் திருடி கொண்டு வந்து விட்டார் என்று தவறாக முடிவு செய்தனர்.
அவரை தாக்க சண்டைக்கு தயாரான போது, தியானத்தில் இருந்த கபில மகரிஷி கண் திறந்து பார்க்க, அவரின் தவ வலிமையினால் அவர் கண்ணிலிருந்து வந்த தீ ஜ்வாலையில், அந்த இடத்திலேயே 60000 பேரும் பொசுங்கி போயினர்.
சகர சக்கரவர்த்தி அனுப்பிய பிள்ளைகள் வராமல் போக, தன் பேரனை (அம்சுமான்) அனுப்பி வைத்தார்.




அம்சுமான் இறுதியில் கபில மகரிஷியின் ஆஸ்ரமம் வந்து குதிரை இருப்பதை கவனிக்க, 60000 பேரும் (சித்தப்பா முறை) சாம்பலாகி கிடைப்பதை பார்த்து, அவசரப்பட்டுவிடாமல், நிதானமாக, பணிவுடன் கபில மகரிஷியின் முன் வந்து, நடந்த விவரத்தை கூறுமாறு வேண்டினார்.

கபில மகரிஷி, "இந்திரன் நீங்கள் செய்யும் யாகத்தை பங்கம் செய்வதற்காக, குதிரையை இங்கு வந்து கட்டி விட்டு சென்று விட்டான். இதை அறியாமல், என்ன நடந்தது என்று விசாரிக்காமல், என்னிடம் இவர்கள் செய்த அபசாரமே இவர்களை இந்த நிலைக்கு தள்ளி விட்டது" என்றார்.
துர்மரணம் அடைந்த தன் சிறிய தகப்பனார்களுக்கு நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று எண்ணிய அம்சுமான், கபிலரிடமே கேட்க, அவர் "இந்திரன் ஆளும் சொர்க்க லோகத்தில் இருக்கும் விஷ்ணுபதி என்ற நதியின் தீர்த்தம் இவர்களின் சாம்பல் மேல் பட்டால், இவர்கள் அனைவரும் நல்ல கதியை அடைவர்" என்று சமாதானம் செய்தார்.

விடைபெற்ற அம்சுமான், குதிரையுடன் திரும்பி வந்து, நடந்ததை சகர சக்கரவர்த்தியிடம் சொன்னான்.

சகர சக்கரவர்த்தி "அஸ்வமேத யாகம்" நடத்தி முடித்து, பின்பு நாட்டை அம்சுமானிடம் ஒப்படைத்து, சொர்க்கம் சென்றார்.

அம்சுமான் நாட்டை கவனிப்பதே பெரிய காரியமாக இருப்பதால், அவர் காலம் வரை ஆட்சி செய்து விட்டு மறைந்தார்.
"மந்தாகினி" என்ற நதியை சொர்க்க லோகத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வர வைப்பது என்பது சாதாரண காரியமும் இல்லை. மேலும் பின் வந்த அரசர்களுக்கு நாட்டை ஆள்வதில் உள்ள சிரமங்கள், பொறுப்புகள் அதிகமாகி போக, இதை மறந்தே விட்டனர்.

இந்த வம்சத்தில் வந்த "பகீரதன்" என்ற அரசன், தன் மூதாதையர்கள் துர்மரணம் அடைந்து, இன்னும் விமோசனம் அடையாமல் இருப்பதை அறிந்து, தன் அரசாட்சியை தன் மந்திரிகளிடம் கொடுத்து, கடும் தவம் மேற்கொண்டான்.

மந்தாகினி என்ற நதியின் தேவதை ப்ரத்யக்ஷ்ம் ஆனாள்.

பகீரதன் நோக்கம் புரிந்தாலும், சொர்க்கம் வரை வந்த இவள், பூமியை தொடுவதற்கு அருவெறுப்பு கொண்டாள்.
மேலும் பகீரதனை பார்த்து "நான் பவன பாவனமாக, சுத்தமாக இருந்து வருகிறேன். என்னை போய் இந்த பூமிக்கு வரச் சொல்லி கூப்பிடுகிறாயே !! நான் உனக்காக வருகிறேன் என்று சம்மதித்தால், இதன் காரணமாக மகா பாவங்கள் செய்தவர்கள் எல்லாம் வந்து ஸ்நானம் செய்வார்களே !!" என்றாள்.

உடனே பகீரதன் "தேவி, பாவம் செய்தவர்கள் வந்து ஸ்நானம் செய்வார்கள் என்று நினைத்து கூசுகிறாயே, அதே ஸமயத்தில் ஹரி நாமம் சொல்லும் ஹரி தாசர்கள், பாகவதர்கள் வந்தும் ஸ்நானம் செய்வார்களே. இந்த பாக்கியத்தை நீ அனுபவிக்க வேண்டாமா ?




பாவிகள் வந்து ஸ்நானம் செய்யும் போது, அவர்கள் செய்த பாவம் உன்னை சேர்ந்து விடும். இவர்கள் கொடுத்த பாவத்தை எங்கு தொலைப்பேன் என்று நினைத்து தான் நீ பூமிக்கு வர தயங்குகிறாய் என்று அறிவேன்.

ஹரி தாசர்கள் வந்து ஸ்நானம் செய்யும் போதே உன்னிடம் சேர்ந்த பாவங்களை ஓடி விடும்.

ஹரி தாசர்களுக்கு என்ன அப்படி விசேஷம்?

உலக வாழ்வில் நாட்டம் உள்ள லௌகீகர்கள், உன்னிடம் வந்து ஸ்நானம் செய்யும் போது, 'எத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது, ஆஹா அருமை' என்று சொல்லிக்கொண்டு, உலக விஷயமாக பேசிக்கொண்டு ஸ்நானம் செய்வார்கள். அவர்களின் பாவங்களையெல்லாம் உன்னிடம் கரைத்து விடுவார்கள்.

புண்ணியம் செய்தவர்களோ, கரையில் அமர்ந்து சங்கல்பம் செய்து, தன் பாவங்கள் அனைத்தையும் சொல்லி உன்னிடமே கரைத்து விடுவர்.

இப்படி லௌகீகர்கள், புண்ணியம் செய்தவர்களின் மொத்த பாவத்தையும் சுமந்து இருக்கும் உனக்கு, எதையும் எதிர்பார்க்காமல், ஹரி தாசர்கள் ஸ்நானம் செய்ய வரும் போது, விஷ்ணுபதியே !! அவர்கள் வாய் நிறைய "ஹரி, ஹரி, ஹரி" என்று சொல்லி ஸ்நானம் செய்வார்கள். அந்த நாமமே உன்னிடம் சேர்ந்த அனைத்து பாவங்களும் விலகச் செய்து விடும்.

ஆகையால், அப்படிப்பட்ட பாகவதர்கள் சம்பந்தம் உனக்கு கிடைக்க இஷ்டம் இருந்தால், என்னோடு வா" என்றார்.
இதை கேட்ட மந்தாகினி தேவிக்கு பரமானந்தம் உண்டாகி பாகவதர்களை காணும் ஆசையில் சொர்க்கத்தில் இருந்து உற்சாகம் பொங்க பூமிக்கு வர ஆசை கொண்டாள்.
பகீரதனை பார்த்து "நான் இங்கிருந்து வரும் வேகத்தை பூமியில் யார் தாங்க முடியும்?" என்று கேட்டாள்.

பகீரதன், "அதற்கு நீயே தான் வழி சொல்ல முடியும்" என்றார்.

தேவி, "நான் வரும் வேகத்தை சிவபெருமான் மட்டுமே தரிக்க முடியும்" என்று சொல்ல, மீண்டும் பகீரதன், சிவனை நோக்கி பல வருடங்கள் தவம் செய்து, அவரின் தரிசனம் கண்டு, இந்த காரியத்துக்கு உதவி கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சிவபெருமான் சம்மதித்தார்.
ஹரி தாசர்களும், பாகவதர்களும் ஸ்நானம் செய்வார்கள் என்று சொன்ன காரணத்தினால் பூமிக்கு வர சம்மதித்த மந்தாகினிக்கு, முதல் பாகவதராக சிவபெருமானே முதலில் வந்து தன் தலையில் ஹரி பாத தீர்த்தம் படட்டும் என்று முன் வந்தார்.

"வைஷ்ணவானாம் யதா ஷம்பு:" என்று, சிவபெருமான் 'தானே முதல் வைஷ்ணவன்' என்று காட்டினார்.

இவர் தலையில் விழுந்து, பூமியில் இமாலய பர்வதத்தில் ஓடி வரும் வரும்போது, மந்தாகினி சிவபெருமானின் கேசத்தை ஆனந்தப்படுத்ததினால், "அலகனந்தா" என்ற பெயர் பெற்றாள்.

பகீரதனை பின் தொடர்ந்து வந்ததால், "பாகீரதி" என்ற பெயரும் கொண்டு, இமயமலையில் இருந்து, "பாகீரதி", "அலகனந்தா" என்ற பெயரில் பூமியை நோக்கி வேகமாக வந்தாள்.

இப்படி ஓடி வருபவள், பூமியை அடைந்தபோது, "பாகீரதி", "அலகனந்தா" என்ற பெயரில் தேவப்ரயாகை என்ற இடத்தில் ஒரு நதியாக இணைந்து, "கங்கா" என்ற பெயர் பெற்றாள்.

தலையில் தாங்கியதால், சிவபெருமான் "கங்காதரன்" என்று பெயர் பெற்றார்.
இப்படி பாய்ந்து வந்த கங்கை பாதாளம் வரை பாய்ந்து, அங்கு இருந்த 60000 பேரின் சாம்பலில் பட்டதற்கே, பித்ருலோகம் அடையாமல் இருந்த அவர்களின் ஆத்மாக்கள் புண்ணிய லோகம் சென்றனர்.

உயிர் போன பின், உடல் எரிந்து அந்த சாம்பலில் கங்கை பட்டாலே அந்த ஆத்மா புண்ணிய லோகம் அடையும் என்றால், உயிருடன் இருக்கும் போது நாம் சென்று ஹரி நாமம் சொல்லி ஸ்நானம் செய்தால் புண்ணிய கிடைக்கும், பாவம் தொலையும் என்பதில் சந்தேகம் என்ன !!




இப்படி பாகவதர்களை எதிர்பார்த்து வரும் கங்கையில் ஸ்நானம் செய்யும் பாக்கியம் கிடைத்தால் நாம் சொல்ல வேண்டிய ஸ்லோகம் :

விஷ்ணு பாத சமுத் பூதே ! (விஷ்ணு பாதத்தில் இருந்து உண்டானவளே )
கங்கே த்ரிபத காமினி !!
(மூன்று உலகங்களிலும் சஞ்சரிப்பவளே )
தர்மத்த்ரவேதி விக்யாதே
(தர்மத்த்ரவம் என்ற பெயர் உடையவளே)
பாபம் மே ஹர ஜான்ஹவி
(என்னுடைய பாவங்களை நீக்கு)

கங்கையை ஸ்மரித்துக் கொண்டு, பொதுவாகவே நாம் எந்த ஜலத்திலும் ஸ்நானம் செய்தாலும், கங்கையில் ஸ்நானம் செய்தது போலாகும்.

நம்மிடம் உள்ள 2 பெரிய குறைகள்


தலைமுடியில், ஒரு முடி வெள்ளையாக தெரிய ஆரம்பித்தாலும், அதை பார்த்து வருத்தப்பட்டு, எப்படியாவது அதை கறுப்பு ஆக்க அல்லது மறைக்க பார்க்கிறோம்.

ஷவரம் (shave) செய்தாலும், சரியாக செய்து இருக்கிறோமா என்று பல முறை கண்ணாடியில் சரி பார்க்கிறோம்.

அலங்காரம் செய்து கொள்ள எத்தனையோ நேரம் செலவு செய்கிறோம்.

ஒரு எறும்பு கடித்தாலும், கடித்த இடத்தை பார்த்து உடனே ஏதாவது சிகிச்சை செய்து கொள்கிறோம்.

இந்த உடம்பை பாதுகாக்க எவ்வளவு பாடுபடுகிறோம்.

இப்படி உடம்பை பார்த்து பார்த்து கவலைபடுகிறோமே, இது தவறா ?
உடம்பை பார்த்துக்கொள்வது தவறே இல்லை.

இப்படி உடம்பை பார்த்து பார்த்து கவலைப்படுகிறோமே, எப்பொழுதாவது நம் மனசை பற்றியோ, நாம் உண்ணும் உணவை பற்றியோ கவலைப்படுகிறோமா ? இல்லை.

கொஞ்சம் இந்த உடம்பின் உள்ளே இருக்கும், ஆத்மாவுக்கும் இந்த ஆர்வம், பாதுகாப்பு கொடுக்கிறோமா? இல்லவே இல்லை.

இந்த ஆத்மா இருக்கும் வரை தான், இந்த உடம்புக்கு மரியாதை.
இந்த அறிவு நமக்கு முதலில் வர வேண்டும்.

ஆத்மா போய்விட்டால் பிணம்.

சாஸ்திரங்கள் இதை நமக்கு சொல்லி கொடுக்கிறது. சாஸ்திரங்கள் நமக்கு நன்மை மட்டுமே சொல்கிறது.

இப்பொழுது பொதுவாக குறைந்த ஆயுள், நோயுடன் சாவு அமைவதற்கு காரணம் என்ன?

நம்மிடம் உள்ள 2 பெரிய குறைகளே காரணம். அது என்ன தெரியுமா?

1. நம் மனதை நாம் கவனிப்பதே இல்லை. இந்த மனசை தேவை இல்லாமால், பல துக்கத்துக்கு நாம் விரும்பாமலே ஆழ்த்துகிறோம்.

மனசு சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்ற உண்மையான அறிவு இல்லாததே நோய்க்கு காரணம். ஆயுள் குறைவுக்கும் காரணம்.

2. உணவு கட்டுப்பாடு என்பதே இன்று நம்மிடம் கிடையாது.

நாக்குக்கு பிடித்தால் உடனே வயிறுக்குள்ளே தள்ளுகிறோம் நாம்.

உடம்புக்கு நல்லதா, நீண்ட நாள் இந்த ஆத்மாவை இந்த உடம்பில் வாழ வைக்குமா என்பதில் கவனமே இல்லை நமக்கு.

சரீரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற உண்மையான அறிவு இல்லாததே நோய்க்கு காரணம். ஆயுள் குறைவுக்கும் காரணம்.

ஆக, நம் ஆயுளை குறைப்பவை இரண்டு :

- மனதில் துக்கம் ஆயுளை குறைக்கும்.
- உணவு கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை ஆயுளை குறைக்கும்.

1. மனதை எப்படி துக்கம் இல்லாமல், சுத்தமாக வைத்து கொள்ள முடியும்?

மனது சொல்வதை எல்லாம் அறிவு (புத்தி) கேட்க கூடாது. மனதை புத்தியால் ஒழுங்குபடுத்த வேண்டும். மனசு நல்ல விஷயத்துக்கும் ஆசை படும். பல நேரம், கெட்ட விஷயத்துக்கும் (விஷத்துக்கும்) ஆசைபடும்.

புத்தியை கொண்டு, நல்ல விஷயத்துக்கு மட்டும் நம்மை நகர்த்த வேண்டும்.

இந்த மனசை புத்தியால் கவனிக்க கவனிக்க, அது தானாக செயல்படாமல் புத்தி சொல்வதை கேட்டு அடங்கி நடக்கும்.

பகவத் கீதையில் இதையே ஸ்ரீகிருஷ்ணரும் சொல்கிறார்.

மனசை புத்தி கொண்டு அடக்க முடியுமா? என்று கேட்கும் அர்ஜுனனுக்கு, ஸ்ரீகிருஷ்ணர் "வைராக்கியத்துடன், விடா முயற்சி செய்து கொண்டே இருந்தால், புத்திக்கு மனசு அடங்கும்" என்கிறார். பிராணாயாமம் என்ற யோகா செய்வதின் மூலமாக கூட மனசை அடக்க முடியும் என்று யோகத்தை சொல்கிறார். புத்திக்கு வழிகாட்டி நம் சாஸ்திரங்கள்.
ப்ராம்மண குலத்தில் பிறந்த ஆண் சாகும் வரை காயத்ரி ஜபம் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்த்திரம். தினமும் 1008 தடவை, 3 காலமும் சொல்ல சொல்ல, இவனிடம் இருக்கும் பாப மூட்டைகள் அழியும், முக்திக்கு வழி வகுக்கும். அப்படியானால், பெண்கள், மற்ற குலத்தில் உள்ளவர்கள் ஒன்றுமே சொல்லாமல் இருந்து விடலாமா ?
சாஸ்த்திரம் அப்படி எல்லாம் விட்டு விடாது. கடினமான கட்டுப்பாடு ப்ராம்மண குலத்தில் பிறந்துவனுக்கு விதிக்கும் நம் சாஸ்திரம், அதே புண்ணியத்தை எளிதாக "ராம, ராம" என்று இடைவிடாது சொல் என்று பெண்களையும், ஆண்களையும் எப்பொழுதும் சொல்ல சொல்கிறது.
"ராம, ராம" என்று எப்போதும் சொல்லி கொண்டு இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.
சாக்ஷாத் ருத்திரன் சிவபெருமானே "ராம, ராம" என்று சொல்கிறார். காசியில் உயிர் போகும் அனைவருக்கும் தானே அவர்கள் காதில் "ராம, ராம" என்று சொல்கிறார். இன்றும் வட இந்தியர்கள் இதையே "ராம நாம் சத்ய ஹை" என்று சொல்லிக்கொண்டே தகனம் செய்கின்றனர். ஹனுமான் "ராம, ராம" என்று சொல்கிறார். காந்தி சொன்ன கடைசி சொல்லும் "ராம்".
எவன் ஒருவனுக்கு எப்பொழுதும் "ராம, ராம" என்று மனதில் எப்பொழுதும் ஒடுகிறதோ, அவன் வாழ்வில் அசம்பாவிதம் ஏதும் நடக்காது. எந்த துன்பமும், வந்தது தெரியாமல் மறைந்து விடும். சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். ஆச்சர்யங்களும், வாழ்வில் சுகமும் நிகழும்.

எளிதாக இருக்கிறதே என்று பிராணாயாமத்தையும், ராம நாமத்தையும், காயத்ரி மந்திரத்தையும் சாதாரணமாக நினைத்து விட கூடாது. சொல்வது யார் என்று பார்க்க வேண்டும். ப்ரம்ம ரிஷியான விஸ்வாமித்திரர் வாக்கில் வந்தது காயத்ரி மந்திரம். சிவபெருமான், மற்றும் பதஞ்சலி போன்ற ரிஷிகளின் மூலம் கிடைத்தது யோகா.

நாம் எதற்கும் தகுதி இல்லாதவர்கள். மனதை அடக்க முடியாதவர்கள். மந்திரங்கள் கண்டுபிடிக்கும் திறன் இல்லாதவர்கள். யோக முறைகள் கண்டுபிடிக்க முடியாதவர்கள்.
ஒரு ரத்தினத்தில் ஒரு நூலை கொண்டு துளை போட முடியுமா? முடியாது. ரத்தினத்தில் துளை போடும் அளவிற்கு ஒரு நூலுக்கு திறன் கிடையாது.
அது போல நமக்கு மனதை அடக்கி, முக்தி அடையும் அளவுக்கு திறன் கிடையாது. ஆனால் முக்தி அடையாமல் இருந்தால், பிறந்து கொண்டே இருக்க வேண்டியது தான். சாஸ்திரம் நம்மை அப்படியே பிறந்து இறந்து கொண்டே இருங்கள் என்று விட்டு விடுமா? வழியை காட்டுகிறது.

ஒரு கூர்மையான ஊசி ஒரு ரத்தினத்தையும் துளை போடும் திறன் கொண்டிருக்கும். இந்த கூர்மையான ஊசியே காயத்ரி மந்திரம், ராம நாம மந்திரம். எப்படி ஒரு ஊசியின் நுனியில் ஒரு துளையில் நூலை கோர்த்து, அதே ரத்தினத்தின் உள்ளே ஊசியுடன் சேர்ந்து நூலும் மறு வழியே வருமோ, அது போல, எதற்கும் தகுதி இல்லாத நாமும் இந்த மந்திரங்களை நம் மனதில் நுழைத்துக் கொண்டே, பிறவி கடலில் இருந்து வெளியே சென்று விடலாம்.
கிடைத்தற்கு அறிய ராம நாம மந்திரத்தை விட்டு, காலத்தை வீணடிக்காமல் மனதில் உரு போட, பல ஜென்மங்களாக இன்று வரை சேர்த்த பாவ மூட்டை அழிவதால், உலகிலும் சுகமாக இருந்து, மோக்ஷமும் எளிதாக கிடைக்கும்.
பிராம்மணன் சம்பாதிக்கிறானோ இல்லையோ, கட்டாயம் காயத்ரி மந்திரமும் சேர்த்து 3 வேலையும் சொல்ல வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

ஒருவன் நன்றாக வேலை செய்தும், அவன் மேல் அதிகாரி, இன்னொருவனுக்கு வேலை சுமாராக செய்தாலும், அவனுக்கு உயர் பதவி, அதிக சம்பளம் கொடுத்துவிட்டார். உடனே இவன் மனசு "இது நியாயமா, தர்மமா ?" என்று கேள்வி எழுப்பியது. மனதை கெடுத்துக் கொண்டால் ஆயுள் குறையும் என்கிறது எச்சரிக்கிறது சாஸ்திரம்.

நம் ஸனாதன தர்மத்தில், முக்தி அடையும் வரை, பிறக்கும் ஒவ்வொருவனும் (ஆத்மாவும்) பல ஜென்மங்களாக ஒரு உடம்பில் பிறந்து, செத்து, இன்னொரு ஒரு உடம்பில் பிறந்து, செத்து வந்து கொண்டே இருக்கிறான். ஒவ்வொருவனும் தன் தன் பாவ புண்ணிய மூட்டையை எடுத்து கொண்டே வருகிறான்.

இப்படி "இது நியாயமா, தர்மமா?" என்று கேள்வி கேட்டு மனசை கெடுத்து கொண்டு புலம்பும் ஒருவனுக்கு, நம் சாஸ்திரம், இந்த உண்மையையே சொல்லி புரிய வைக்கிறது. காரணம் இல்லாமல் ஒருவனுக்கு கிடைக்கும் நன்மையும், துக்கமும் வருவதற்கு காரணம், அவனவன் சேர்த்து வைத்துள்ள பாவ, புண்ணிய முட்டையின் அளவை பொறுத்தது.
இந்த உண்மையை சொல்லும் நம் ஸனாதன தர்மம், நீ இப்போது நன்றாக செய்த வேலைக்கும் ஒரு புண்ணியத்தை தருகிறது. இது இப்போது தெரியாமல் போனாலும், இந்த புண்ணியம் உன் ஆயுசையும், உன் ஆரோக்கியத்தையும், உனக்கு பிரியமான ஒருவனின் ஆயுளை காக்கவும் கூட பயன் படலாம். உன் புண்ணியம் உனக்கே தக்க சமயத்தில் வந்து சேரும் என்கிறது. அதனாலேயே, நீ எப்போதும் மனசை இது போன்று கெடுத்துக் கொள்ளாமல், நீ உன் கடமையை நியாயமாக செய் என்று சொல்கிறது. புண்ணிய காரியத்தையே செய். இதையே ஸ்ரீ கிருஷ்ணரும் கீதையில் "கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே" என்று சொல்கிறார்.

நன்றாக வேலை செய்ததற்கு மதிப்பு இல்லையே என்று வருத்தப்படாதே.

இதை விட முக்கியமான ஆபத்து உனக்கு வர இருக்கும் போது, இந்த உன் புண்ணிய கர்மாவே உன்னை காப்பாற்றும் என்கிறது நம் சாஸ்திரம்.

இப்படி உண்மையை சொல்லி, மனதை எந்த விதத்திலும் கவலைக்கு ஆட்படுத்தாதே என்று சொல்கிறது. மனதில் கவலை அதிகரிக்க ஆயுள் குறையும்.

நம் ஆயுள் குறைய, நம் ஸனாதன தர்மம் ஒப்புக்கொள்ளவே கொள்ளாது. மனித சரீரம் கிடைப்பது அரிது. ஆயுள் அதிகம் இருந்தால், இந்த பிறவியிலேயே முக்திக்கு முயற்சி செய்யலாம்.

2. சரீரத்தை எப்படி ஆரோக்கியமாக வைத்து இருக்க முடியும்?

நாம் உண்பதில் தீவிரமான கவனம் வேண்டும்.

இந்த கவனமும், நாம் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசையினால் வர வேண்டும்.

நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால், கோடி நன்மை நமக்கும், நம் குடும்பத்துக்கும்.

கண்டதை எல்லாம் தின்று, நோய் வந்து, அகால மரணம் அடைந்து, கிடைத்த மனித பிறவியை வீணடித்து விட கூடாது. அகால மரணத்தினால், நம்பி இருக்கும் குடும்பம் கஷ்டப்பட வேண்டி வரும்.

ஆகாரம் (உணவில்) நியமம் (கட்டுப்பாடு), நம் வாழ்வில் கட்டாயம் இருக்க வேண்டும். சுயநலமாகவாவது, இதில் நமக்கு ஆசை வர வேண்டும்.

முடிந்தவரை காலத்தில், பசி அடங்கும் வரை மட்டும், சாத்வீக உணவு மட்டும் உண்ண வேண்டும். மது மாமிசம் கூடவே கூடாது. உணர்ச்சிகளை உண்டு பண்ணும் உணவும் உண்ண கூடாது.

நாக்குக்கு அடிமைப்பட்டு பார்த்ததையெல்லாம் சாப்பிடக்கூடாது.

வெளி உடம்பில் மட்டும் கவனம் போதாது. உளளே இருக்கும் உடம்பும், உறுப்புகளும் நம் உடம்புதான் என்று மறந்து விட கூடாது.

மனிதனின் பூரண ஆயுசு 120 வருடம் என்கிறது சாஸ்திரம்.

நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசையும் வேண்டும். ஆரோக்கியமாகவும் கடைசி வரை தானே தன் வேலையை செய்து, முடிந்தால் கிழ வயதிலும் மற்றவர்க்கு உதவி செய்யும் நிலையிலும் இருந்து வாழ ஆசை வேண்டும்.

ஆசை மட்டும் போதுமா ? முதலில் நமக்கு நா அடக்கம் வேண்டும்.

நா அடக்கம் இருந்தால், உணவு கட்டுப்பாடு தானே வரும்.

உடல் உறுப்புகள் நீண்ட காலம் ஒத்துழைக்கும்.

உலகத்தில் சாப்பிட்டு சாப்பிட்டு நோய் வந்து இறந்தவனை விட, குறைந்த சாத்வீக சாப்பாடு மட்டுமே உண்டு, எந்த நோயும் இல்லாமல் போவதே மேல்.

பட்டினியால் இறந்தவனை விட, சாப்பிட்டதனால் நோய் வந்து இறந்தவர்களே உலகில் அதிகம்.

ஆகார நியமத்தில் நாம் அதிக ஆர்வம் கொண்டிருந்தால், தானாக நீண்ட நாள் இந்த ஆத்மா இந்த உடம்பில் தங்கும். உடம்பும் 100 வயது தாண்டினாலும் நோய் எதுவும் இல்லாமல் ஒத்துழைக்கும்.

நோய் வந்தவனுக்கு, மனம் துக்கம் அடைந்தவனுக்கு மட்டும் தான் போதுமே வாழ்க்கை என்று தோன்றும். மனதில் துக்கம் புத்தியின் துணை கொண்டு ஜெயித்து, கட்டுப்பாடான உணவு பழக்கத்துடன் இருப்பவன் வயதான காலத்திலும், நீண்ட நாள் வாழ ஆசை கொள்வான்.

நம் சனாதன தர்மம் நமக்கு சிறந்த வழிகாட்டி. நீண்ட நாள் வாழ்வோம். புண்ணியம் சேர்ப்போம்.

மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே.. சீதை பிறந்த ஊர் அல்லவா

மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal எப்படி இருந்தது?




"விராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம்" 
ஆகிய தேசங்கள், இன்று "நேபால்" என்று அழைக்கப்படுகிறது.

ராமாயண காலத்தில், 
மிதிலை நகரில், சீதை அவதரித்தாள். 
"ஜனக மன்னர்" ஆட்சி புரிந்தார்.
மஹாபாரத சமயத்தில்,
"விராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம்" 
பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர்.
"துருபதனை" படைதலைவனாக தொடர்ந்து இவர்கள் படையை செலுத்தினர்.

"மல்ல தேசம்" கங்கை நதி ஓரம் அமையப்பட்ட ஒரு நகரம். 
இது விராட தேசத்துக்கு, விதேஹ தேசத்துக்கு நடுவே இருந்தது.

பாண்டவர்கள் 13 வருட வனவாசத்தில், கடைசி 1 வருடம் அஃயாத வாசம் விராட தேசத்தில் இருந்தனர்.



"யுதிஷ்டிரர்" விராட ராஜாவுக்கு உதவியாளனாக, 
"பீமன்" சமையல்காரனாக, 
"அர்ஜுனன்" நர்த்தனம் சொல்லிக்கொடுக்கும் பேடியாக, 
"திரௌபதி" விராட ராணிக்கு 'மாலினி' என்ற பெயரில் வேலைக்காரியாகவும், 
"நகுலன் மற்றும் சகாதேவன்" குதிரை லாயத்தை பார்க்கும் பணியிலும் 
மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.


விராட அரசனின் தளபதி "கீசகன்", திரௌபதியிடம் தவறாக நெருங்க எண்ணினான். 
இதனை திரௌபதி பீமனிடம் சொல்ல,
கீசகன் தலையை ஓங்கி அடித்து, அவன் தலையை வயிற்றுக்குள் தள்ளி, 
ஒரு பந்து போல ஆக்கி கொன்று விட்டான்.

விராட தேச படை தலைவன் கீசகன், த்ரிகர்த தேச (பஞ்சாப்) அரசன் "சுசர்மனை" பலமுறை தோற்கடித்து இருக்கிறான்.

கீசகன் கொடூரமாக இறந்ததை கேள்விப்பட்டு, சந்தேகம் கொண்டான் த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்".

இப்படி ஒரு பலம், பீமன் போன்றவர்களுக்கு தான் உண்டு, என்று உணர்ந்த சுசர்மன், துரியோதனனை உடனே விராட தேசத்தை நோக்கி படை எடுக்குமாறு கூறினான்.




குரு தேச "இளவரசன் துரியோதனன்", "கர்ணன்", த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்" அனைவரும் விராட தேசத்தை முற்றுகை இட்டனர்.

விராட அரசன், தன் மகன் "உத்தர" குமாரனை தலைமை ஏற்று, துரியோதனின் படையை எதிர்க்க சொன்னார். 

பயந்து போன உத்தர குமாரன், செய்வதறியாது திகைத்தான். 
'அர்ஜுனன்' சமாதானம் செய்து, தான் துணை வருவதாக தைரியம் சொல்லி, போருக்கு தயாரானான்.
விராட தேச படையுடன், அர்ஜுனன் ஒருவனாக சென்று அனைவரையும் தோற்கடித்தான்.

ஒரு வருடம் தங்கி இருந்தது பாண்டவர்கள் என்று அறிந்து பயந்தான் விராட அரசன்.
தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.
யுதிஷ்டிரர் நட்பு கரம் நீட்டினார். 
விராட அரசன் தன் மகள் 'உத்தரா'வை அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு மணம் செய்து வைத்தார்.

விராட தேச (Nepal) படைகள், பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

மஹா பாரத போரில், முதல் நாள் போரில், 
விராட அரசன் புதல்வன் "உத்தர" குமாரன் வீரமாக போரிட்டான்.
மாத்ர தேச (Pakistan) அரசர் "சல்யனால்" அதே நாளில் கொல்லப்பட்டான்.



உயிரை பற்றி கவலைப்படாமல் "உத்தர" குமாரன் வீரமாக போரிட்ட வீரத்திற்கு தலை வணங்கினார்சல்லியன்.

உத்தர குமாரன் இறந்ததை கண்டு ஆத்திரத்துடன் சல்லியனை நோக்கி பாய்ந்தான், அவன் சகோதரன் "ஸ்வேத" குமாரன். 
இதனை கண்ட பீஷ்மர், "ஸ்வேத" குமாரனை போருக்கு அழைத்தார். பீஷ்மருடன் போர் செய்து வீர மரணம் எய்தான்..

முதல் நாள் போரிலேயே இத்தனை உயிர் இழப்பு, யுதிஷ்டிரரை கலங்க செய்தது.
"வெற்றி துரியோதனன் பக்கம் நிச்சயம்" என்று சொல்ல ஆரம்பித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணர் தைரியம் ஊட்டி, மனம் தளரவிடாமல் தைரியம் சொன்னார்.

விராட அரசனை, 15ஆம் நாள் போரில் "துரோணர்" கொன்றார்.

பாண்டவர்கள் பக்கம் நின்று போர் செய்த அரசர்கள், பாண்டவர்கள் வெற்றிக்கு துணை நினறனர்.  பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். தர்மத்தை நிலை நிறுத்தினர்.

உலக க்ஷத்ரியர்கள் அனைவரும் பாண்டவர் பக்கமும், துரியோதனன் பக்கமும் நின்று போரிட்டு உயிரை விட்டனர்.


யுதிஷ்டிரர் உலகத்துக்கே சக்ரவர்த்தியானார்.


மஹாபாரத போர் முடிந்து, 
3000 வருடங்களுக்கு பிறகு "சித்தார்த்தன்" என்ற பெயரில் நேபாள தேசத்தின் இளவரசனாக"கௌதம புத்தர்", லும்பினி (Lumbini) என்ற நகரில் நேபாள தேசத்தில் பிறந்தார்.
மகத தேசத்தில் (பீஹார் (bihar)) உள்ள "போத் கயா" என்ற ஊரில், புத்தர் ஞானம் அடைந்தார் என்று அவரின் சரித்திரம் சொல்கிறது.

மஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே.

மஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat


ஸ்ரீ கிருஷ்ணரின் அரசாட்சி புரிந்த "துவாரகை" என்ற த்வாரவதி தேசம், குஜராத்தில் உள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்ம நண்பனான சுதாமா என்ற குசேலன், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து, ஸ்ரீ கிருஷ்ணர் கடலில் அமைத்திருந்த துவாரகை நகருக்கு நடந்தே சென்றார்.
ஏழையாக இருந்த குசேலனை தன் அனுக்ரஹித்தினால் கோடீஸ்வரன் ஆக்கினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

கம்சன் கொல்லப்பட்டான் என்ற ஆத்திரத்தில், மகத அரசன் 'ஜராசந்தன்' (Jamshedpur, Jarkhand near Bihar), ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் மதுராவை (உத்திர பிரதேசம்) தாக்கினான்.
ஸ்ரீ கிருஷ்ணர் 'ஜராசந்தன்' மற்றும் அவன் படையை அடித்து துரத்தினார்.

இதே போல, ஜராசந்தன் 17 முறை தொடர்ந்து படை எடுத்துக்கொண்டே இருந்தான். 
ஜராசந்தனை கொலை செய்ய எண்ணமில்லாத ஸ்ரீ கிருஷ்ணர், மதுரா நகர 5 லட்சம் யாதவ மக்களை மாய ஸ்ருஷ்டி மூலம், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து, அனைத்து மக்களையும் ஒரே ராத்திரியில் இடம் மாற்றினார்.

இந்த மாயை புரியாத ஜராசந்தன், மீண்டும் படை எடுக்க வந்த போது மதுரா நகரமே காலி ஆகி போயிருந்ததை கண்டு தேடி கொண்டே இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆணைப்படி, தேவலோகத்தில் இருக்கும் விஸ்வகர்மா ஒரே நாளில், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து கொடுத்தார்.




துவாரகை நகரம் சுற்றியும் பெரிய மதில் சுவருடன், நான்கு வாசல் கொண்டும் அமைக்கப்பட்டது.

நகரத்தின் வீடுகள் வரிசையாக அமைக்கப்பட்டு, நகரத்தின் வீடுகள் அனைத்தும் தங்கத்தால் இழைக்கப்பட்டு, வான் உயர இருந்தது.
ஒன்பது லட்சம் மாளிகைகள் அமைக்கப்பட்டன.

நகரின் தெருக்கள் வெயிலில் சூடாமல் இருக்க, தண்ணீர் தானாக தெளித்துக் கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தன.

பெரிய பெரிய பாய்கள் கொண்டு, வெயிலில் மக்கள் பாதிக்காதவாறு நகர வீதிகளில் நிழலுக்கு கட்டப்பட்டு இருந்தன.

ஸ்ரீ கிருஷ்ணரின் மாளிகை தனியாக, மிக பிரம்மாண்டமாக இருந்தது.

ஸ்ரீ கிருஷ்ணரின் பத்தினிகளுக்கு அதி ஆச்சர்யமாக 60,000 மாளிகைகள் கட்டப்பட்டு இருந்தன.

நகரம் முழுவதும் பொன்னால், ரத்தினங்களால் ஜொலித்தது.
நகரம் தோட்டம், ஓடை, பறவைகள் என்று இயற்கை வளத்துடன் நிறைந்து இருந்தது.

ஒரு சமயம், அசுரன் ஒருவன் தேவர்களையும் அடக்கி, இவர்கள் யாராலும் வெல்ல முடியாதபடி வரம்பெற்று, பூமியில் பிறந்து அட்டகாசம் செய்து வந்தான்.
இவன் ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசத்தில் இருந்து கொண்டு அசுரர் குலத்தை மனித அவதாரம் செய்து பெரும் அட்டகாசம் செய்து வந்தான்.

ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசம் இன்றைய 'அஸ்ஸாம்' தேசம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் உதவியை சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் வந்து நாட, நரகாசுரனை அழிக்க துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிஸம் சென்றார்.

இந்த சமயத்தில், சேடி தேச (மத்யபிரதேச) அரசன் சிசுபாலன், தன் படையுடன் துவாரகை சென்று, துவாரகை நகரை தீ வைத்து கொளுத்தினான்.

நரகாசுரனை கொன்று திரும்பிய ஸ்ரீ கிருஷ்ணர், சிசுபாலனின் இந்த குற்றத்தையும் பொறுத்தார்.


நரகாசுரனின் வேண்டுதல் ஏற்று, அவன் இறந்த நாள், அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்ட பட்டதால், தேவர்களும் மகிழ்ந்ததால், அந்த நாள், தீபாவளி என்று இன்றுவரை கொண்டாடப்படுகிறது.

விதர்ப தேசத்தில் (மகாராஷ்டிரா) ருக்மிணி வளர்ந்து வந்தாள். 
ருக்மிணி, குழந்தை முதல் இன்று துவாரகை வரை ஸ்ரீ கிருஷ்ணர் என்ன செய்தார், எப்படி இருப்பார் என்று, அவரைப்பற்றி அறிந்து இருந்தாள்.

'மணந்தால், இவரை தான் மணக்க வேண்டும்' என்று நினைத்தாள். ருக்மிணியின் தந்தை சம்மதித்தார்.

ருக்மிணியின் சகோதரன் பெயர் 'ருக்மி'.
இவன், தன் தங்கையை சேடி அரசன் சிசுபாலனுக்கு கொடுப்பது என்று முடிவு கட்டி, திருமணத்திற்கும் ஏற்பாடு செய்தான்.

மனம் வெதும்பிய ருக்மினி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு கடிதம் ஒன்றை ஒரு யோகியிடம் கொடுத்து, 'எப்படியாவது வந்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று எழுதி அனுப்பினாள்.

ஸ்ரீ கிருஷ்ணர், விதர்ப தேசம் வந்து, ஜராசந்தன், ருக்மி போன்றோர் பார்க்க, ருக்மிணியை தூக்கி சென்றார்.

ருக்மி கோபத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, சண்டையில் தோற்றான் ருக்மி.

இவனை கொல்வதா? என்று நினைத்த ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மிணியின் அண்ணன் என்பதால், உயிரோடு விட தீர்மானித்தார்.

ருக்மிணிக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வெகு விமரிசையாக திருமணம் துவாரகையில் நடந்தது.

மஹா பாரத சமயத்தில், 13 வருடம் பாண்டவர்கள் நாட்டை விட்டு வனவாசம் இருந்த போது, இந்த தேசங்களில் சில காலம் இருந்தனர்.

'துர்வாசர்' இந்த குஜராத் தேசத்தில் பல வருடங்கள் இருந்தார்.
இந்த சமயத்தில், பாண்டவர்களை பார்க்க வந்தார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் அணுகிரஹத்தினால், இவரால் வர இருந்த இடையுறை சமாளித்தனர்.

வனவாச சமயத்தில், 13 வருடமும், பாண்டவர்களின் பணியாளர்கள் துவாரகையில் தங்கி இருந்தனர்.

ஸ்ரீ கிருஷ்ணர், பலராமர் தன் அவதாரத்தை முடித்த பின், துவாரகை தேசத்தை கடல் உள்வாங்கிக் கொண்டது.

அர்ஜுனன் தன் இறுதி யாத்திரையாக புறப்பட்ட போது, ஸ்ரீ கிருஷ்ணர் இருந்த துவாரகை கடலில் மூழ்கி இருக்கும் இடத்தை பார்த்து விட்டு, இமாலய பர்வதம் நோக்கி புறப்பட்டார்.


ஸ்யமந்தக மணி, ஸ்ரீ கிருஷ்ணர் சத்யபாமாவை மணம் செய்து கொண்ட சரித்திரம் தெரிந்து கொள்ள... Click  படிக்கவும்