Followers

Search Here...

Showing posts with label வ்யாசரிடம். Show all posts
Showing posts with label வ்யாசரிடம். Show all posts

Tuesday 3 October 2017

மௌன விரதம் பற்றி விநாயகர், வ்யாசரிடம் உரையாடல்


மகாபாரதம் கடைசி ஸ்லோகத்தை சொல்லி, அதை விநாயகர் எழுதி முடித்தவுடன், வேத வியாசர், பெருமிதம் கொண்டு, விநாயகரை பார்த்து சொன்னார்,

"விநாயகரே !! தெய்வ கிருபையால் என் வாக்கில் இருந்து வந்த 20,000துக்கும் மேலான மகா பாரத ஸ்லோகங்களை, நீங்கள் ஆச்சர்யமாக அதே வேகத்தில் எழுதி விட்டீர்கள். இது ஒரு ஆச்சர்யம் என்பதை விட, நீங்கள் எழுதுவதிலேயே கவனம் கொண்டிருந்தீரே தவிர, ஒரு பேச்சு ஒரு கேள்வி உங்களிடம் இருந்து வரவில்லை. நீங்கள் இத்தனை நேரமும் காத்த அமைதியே, மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கிறது" என்று விநாயகரை கொண்டாடினார்.

விநாயகர், ஆச்சர்யமாக பேசலானார்.
வேத வ்யாஸரை பார்த்து,




"வேத ரிஷியே !! பொதுவாக யாவருக்கும் இத்தனை காலம் தான் வாழ்க்கை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எறியும் விளக்கிற்கும் கூட ஆயுசு உண்டு.

இப்படிப்பட்ட குறுகிய காலம் வாழப்போகும் ஒருவன், அறிவாளியாக இருக்கும் பட்சத்தில், இருக்கும் சக்தியை வீணடித்து, இருக்கும் குறுகிய ஆயுசை இன்னும் குறைத்துக் கொள்ள மாட்டான்.
மனம், வாக்கு, காயம் முதலியவைகளை ஒரு அறிவாளி, வீணாக பயன்படுத்த மாட்டான்.

எவன் ஒருவன் சுய கட்டுப்பாட்டுடன் மனம், வாக்கு, காயம் முதலியவைகளை தன் வசம் வைத்து இருக்கிறானோ, அவனுக்கு, சக்தி ஒருங்கிணைந்து, செய்யும் எந்த காரியத்திலேயும் வெற்றி கிடைக்கும்.

முதலில், அனைவரும் கடைபிடிக்க வேண்டிய விரதம், "மௌன விரதமே".
இந்த மௌன விரதமே, என் சக்தி அனைத்தும் நான் எழுதும் போது, ஒருங்கிணைத்து உதவி செய்தது.

வாய் ஓயாது உலக விஷயம் பேசுபவன், தன் சக்தியை இழக்கிறான். நான் மௌன விரதத்தின் மகத்துவம் அறிந்தவன்" என்றார்.

Make effective communication, rest, be in mouna vradham. It saves energy.

--- மௌன விரதம்.