Followers

Search Here...

Showing posts with label வானரர்கள். Show all posts
Showing posts with label வானரர்கள். Show all posts

Tuesday 15 September 2020

உயிர்த்தெழுந்தார்கள் !! வானரர்கள் எத்தனை முறை உயிர்த்து எழுந்தார்கள்? தெரியுமா? தெரிந்து கொள்வோம் வால்மீகி ராமாயணம்..

வானரர்கள் எத்தனை முறை உயிர்த்து எழுந்தார்கள்?


1.

மாயையால் தன் ரூபத்தை மறைத்து கொண்ட இந்திரஜித், ப்ரம்மாஸ்திரம் (nuclear bombக்கு நிகர் என்று இன்று சொல்லலாம்) கணக்கில்லாமல் செலுத்தினான்.

ஹனுமான், விபீஷணன், ஜாம்பவான் மூவரை தவிர, அனைவரையும் சாய்த்து விட்டான்.




எங்கிருந்து அம்புகள் பாய்கிறது? என்றே தெரியாமல், அனைவரும் விழுந்தனர்.

ஜாம்பவான் ஹனுமானை சஞ்சீவினி மூலிகையை ஹிமாலயத்தில் இருந்து எடுத்து வர சொன்னார். 

இலங்கையில் இருந்து காற்றாக கிளம்பி, ஹிமாலயம் சென்று, சஞ்சீவினி இருக்கும் மலையையே பெயர்த்து தூக்கி வந்து விட்டார்

அந்த மூலிகையின் வாசம் பட்டவுடனேயே இறந்து கிடந்த வானரர்கள், தூங்கி எழுந்தது போல, எழுந்தனர். 

அவர்கள் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் உடனே சரியானது. 

ராம லக்ஷ்மணர் இருவரும் எழுந்து விட்டனர்.

(கந்தேன தாசாம் ப்ரவர ஒளஷதீனாம் சுப்தா நிஷான்தேஷ்வ சம்ப்ரபுத்தா ! - வால்மீகி ராமாயணம்)

இலங்கை போரில் பல வானரர்களும்,  பல ராக்ஷஸர்களும் மடிந்தனர். 

ராக்ஷஸர்கள் 'இறப்பை மறைக்க', உடனுக்குடன் ராக்ஷஸர்களை மட்டுமே அகற்றி, கடலில் எரிந்து விட்டனர் பிற ராக்ஷஸர்கள்.

(யதா ப்ரப்ருதி லங்காயம் யுத்யந்தே கபி ராக்ஷஸா! ததா ஹதாஸ்து ஷிப்யந்தே சர்வ ஏவ து சாகரே! - வால்மீகி ராமாயணம்)

சஞ்சீவினியால், ஒட்டு மொத்த வானரர்களும் மீண்டும் உயிர்த்து எழுந்தனர்.

2.

இந்திரஜித் கொல்லப்பட்டு, ராவணன் ராமபிரானால் சாய்க்கப்பட்டான்.




சீதா தேவியை பாரத்து, "உன் இஷ்டப்பட்ட இடத்தில் நீ வாழலாம்." என்று ராமர் சொல்லிவிட, சீதாதேவி தன் கற்பை நிரூபிக்க லக்ஷ்மணனை சிதை மூட்ட சொன்னாள். 

"என் இதயம் ராமபிரானை விட்டு ஒருபோதும் விலகியதில்லை என்ற உண்மையை, அனைவரும் இங்கு பார்க்கட்டும். இந்த அக்னி என்னை பாதுகாக்கட்டும்." என்று அக்னியில் இறங்கிவிட்டாள் சீதா தேவி. 

ராமபிரான் அமைதியாக இருக்க தேவர்கள், ப்ரம்ம தேவன், சிவபெருமான் அனைவரும் ப்ரத்யக்ஷம் ஆகி விட்டனர்.

தெய்வங்கள் தனக்கு முன்னே தானாக வந்து நிற்க, கை குவித்து நின்றார் ராமபிரான்.

"ஏன் இப்படி செய்தீர்கள்? மூன்று உலகங்களையும் படைத்தவர் நீங்கள். நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியவில்லையா? எப்படி நீங்கள் சீதா தேவியை அக்னியில் செல்ல அனுமதித்தீர்கள்?" 

என்று ப்ரம்ம தேவன் பதறிப்போய் கேட்க, 

(த்ரயானாம் த்வம் ஹி லோகானாம் ஆதிகர்தா ஸ்வயம் ப்ரபு: - வால்மீகி ராமாயணம்)

இப்படி ப்ரம்ம தேவன் ப்ரத்யஷமாகி "நீங்களே ஆதிகர்தா! நீங்களே பரமாத்மா!" என்று பேச ஆரம்பிக்க, மனித அவதாரம் செய்து இதுநாள் வரை தன் சரித்திரத்தை மனிதனை போலவே நடத்தி கொண்டு வந்த ராமபிரானுக்கு நிலைமையை சமாளிக்கும் படியாக ஆகி விட்டது.

ப்ரம்ம தேவனை பார்த்து, ராமபிரான், 

"நான் இதுநாள் வரை, என்னை மனிதன் என்று தான் நினைக்கிறேன் (மன்யே). 

தசரத மஹாராஜனின் புத்திரன் என்று தான் நினைக்கிறேன். அது இல்லையென்றால், சொல்லுங்கள்.. நான் யார் என்று?" 

என்று கேட்க, 

(ஆத்மானாம் மானுஷம் மன்யே! ராமம் தசரத ஆத்மஜம்! யோயம் யஸ்ய யதஸ்சாஹம் பகவாம்ஸ்தத அப்ரவீத் மே!! - வால்மீகி ராமாயணம்)

ப்ரம்ம தேவன் "ராமபிரானே நாராயணன். வேதம் உங்களை தான் பேசுகிறது. அனைவருக்கும் அடைக்கலம் தருபவர் நீங்கள் தான்.." என்று பெரிய ஸ்தோத்திரம் செய்கிறார்.

ப்ரம்ம தேவனே தைரியமாக ராமபிரான் முன் வந்து பேசி விட, 

அக்னி தேவன் ப்ரத்யஷமாகி, அக்னியில் இருந்து சீதா தேவியோடு வெளி வந்து விட்டார்.

(ஏத ஸ்ருத்வா சுபம் வாக்யம் பிதாமஹ சமீரிதம்! அங்கேநாதாய வைதேஹீம் உத்பபாத விபாவசு!! - வால்மீகி ராமாயணம்)

"சீதை களங்கம் அற்றவள் என்பதற்கு நானே சாட்சி. இதோ சீதை. ஏற்றுக்கொள்ளுங்கள்

என்று கொடுத்து விட்டு அமைதியாக நின்றார் அக்னி தேவன்.

'சீதா தேவி அக்னியில் இறங்குகிறேன்' என்று சொல்லியும், ராமபிரான் ஏன் அமைதியாக இருந்தார்? 

அவர் என்ன எதிர்பார்த்தார்? 

என்பது ராமபிரான் இங்கு பேசும்போது தெரிகிறது.


"உத்தமியான சீதை, ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட பின், மூவுலகும் சேர்ந்து கொண்டு, தந்த துன்பத்தை இவள் அனுபவித்தது நியாயமே இல்லை.

(அவஸ்யம் த்ரிஷு லோகேஷு ந சீதா பாபம் அர்ஹதி! தீர்க காலோஷிதா ஹீயம் ராவணான்த: பூரே சுபா:! - வால்மீகி ராமாயணம்)

ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதையை நான் அமைதியாக ஏற்று இருந்தால், உலகம் என்னை சிறுபிள்ளை தனமாக ஏற்று கொண்டு விட்டான் என்றும், காமம் உடையவன் என்று தான் சொல்லி இருக்கும். 

(பாலிச: கலு காமாத்மா ராமோ தசரத ஆத்மஜ: - வால்மீகி ராமாயணம்)

சீதை கற்புக்கரசி என்பதை நான் அறிவேன். அவள் என் இதயத்தில் எப்பொழுதும் வாழ்பவள்."

என்றார்.


சீதையை தொலைத்த போது, தான் சர்வேஸ்வரனாக இருந்தும், தர்மத்தின் ரூபமாக மனித அவதாரம் எடுத்த பரமாத்மா "சீதை எங்கே? சீதை எங்கே?" என்று தேடுவது போல தேட, 'மனிதன் தானே!' என்று அமைதியாக இருந்தனர் தேவர்கள். 




ராமபிரான், உண்மையில் மரத்தையும் செடியையும் கேட்கவில்லை. அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கும் தேவர்களையும், ப்ரம்ம தேவனையும், சிவபெருமானையும் தான் கேட்டார்.

தனக்கு இவர்கள் யாரும் பதில் சொல்லாத நிலையில், ராமபிரான் அப்போது கோபப்பட்டார். 

"சத்யத்தில் இருக்கும் மனிதனுக்கு, இந்த தெய்வங்கள் உதவி செய்வதில்லையா?" என்று நினைத்தார். 

"சத்யத்தில் இருப்பவர்கள் கஷ்டப்படும் போது, தெய்வங்கள் உதவி செய்யாது போனால், இந்த மூவுலகும் இனி தேவையில்லை. மூவுலகையும் அழித்து விடுகிறேன்" என்று கோபப்பட்டார்.  

அப்போது லக்ஷ்மணன் சமாதானம் செய்தார்.


சீதை இன்று அக்னியில் இறங்கும் போதும், இந்த தெய்வ பரிவாரங்கள் வராவிட்டால், உலகை அழிப்பது என்று நினைத்து இருந்தாராம். 

'இப்போது அனைவரும் ப்ரத்யஷமானதால் என் கோபத்தில் இருந்து தப்பித்தீர்கள்' என்பது போல பேசுகிறார் ராமபிரான்,

ராமபிரான் சொன்னார், 

"இந்த மூவுலகும் சத்யத்தில் இருக்க நினைக்கிறதா? என்று பார்க்கவே, சீதை அக்னியில் பிரவேசம் செய்த போதும் நான் பாராமுகமாக இருப்பது போல இருந்தேன்.

(ப்ரத்யார்தம் து லோகானாம் த்ரயானாம் சத்ய சம்ஸ்ரய:! உபேக்ஷே சாபி வைதேஹீம் ப்ரவிசந்தீம் ஹதாசனம்! - வால்மீகி ராமாயணம்)

எப்படி கடல் தன் எல்லையை கடக்காமல் இருக்கிறதோ! அது போல, சீதை என்றுமே தன் எல்லையை கடக்காதவள். ராவணன் இவளை நெருங்கவே முடியாது என்று அறிவேன்.

ராவணன் அவள் மனதில் கூட சஞ்சலம் செய்ய முடியாது. கொழுந்து விட்டு எரியும் அக்னியை யார் தொட முடியும்?

ராவணனின் பெரும் செல்வத்தை கண்டு மயங்காதவள் சீதை.

ஒளி எப்படி சூரியனை விட்டு என்றுமே பிரியாததோ, அது போல, சீதை என்னை விட்டு என்றுமே பிரியாதவள். 

மூன்று உலகிலும் உத்தமியானவள் சீதை. 

என் புகழ் எப்படி என்னை விட்டு என்றுமே பிரியாததோ, அது போல, சீதை என்னை விட்டு என்றுமே பிரியாதவள். 

(விசுத்தா த்ரிஷு லோகேஷு மைதிலீ ஜனகாத்மஜா! ந ஹி ஹாதுமியம் சக்யா கீர்த்திர் ஆத்மவதா யதா! - வால்மீகி ராமாயணம்)

உலகில் மதிப்பு மிக்க ஸ்தானத்தில் இருக்கும் நீங்கள் அனைவரும் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் என் நலத்தில் அக்கறை உடையவர்கள் என்றும் அறிவேன்"

என்றார்.


"ராமபிரானின் புகழ்" இன்று வரை ஓங்கி இருக்கிறது. 

ராமபிரானின் புகழை யாருமே அழிக்க முடியாது...என்று ராமபிரானே சொல்கிறார்... 

கவனித்தீர்களா?

ராமபிரானின் புகழ் அழியாத தன்மையுடன் இருப்பதில் ஆச்சர்யமில்லையே...


இப்படி ராமபிரான் பேசி, சாதாரண மனிதன் போல, கை குவித்து நிற்க, உடனே சிவபெருமான் பேசலானார்..

"தாமரை கண்களுடைய, நீண்ட கைகள் உடைய, உறுதியான நெஞ்சம் கொண்ட, வில்வித்தையில் பராக்கிரமம் கொண்ட, புனிதனே! நீங்கள் வந்த காரியத்தை செய்து முடித்தீர்கள்.

உலகம் முழுவதும் இருளை பரப்பி இருந்த ராவணன் உங்களால் அகற்றப்பட்டு விட்டான்.

பரதனை, கௌசல்யா மாதாவை, கைகேயி மற்றும் லக்ஷ்மணன் தாயை கண்டு சமாதானம் செய்ய, உடனே செல்லுங்கள்.

அயோத்திக்கு அரசனாகுங்கள்.

உங்கள் இக்ஷ்வாகு குலத்தை மீண்டும் நிலைநாட்டுங்கள்.

அஸ்வமேத யாகம் செய்யுங்கள்.

உலகில் உங்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது என்று பறைசாற்றுங்கள்.

வேத ப்ராம்மணர்களுக்கு தானம் கொடுங்கள்.

கடைசியாக விண்ணுலகம் வாருங்கள்.

அதோ அந்த திவ்ய ரதத்தில் இருக்கிறார் பாருங்கள்.. உங்கள் தந்தை தசரதர்.

உலகத்தில் நீங்கள் அவதாரம் செய்ய காரணமானவர்.  இப்பொழுது இந்திர லோகத்தில் இருக்கிறார்.

நீங்களும், லக்ஷ்மணரும் இவரை சேவியுங்கள்!" 

என்று சிவபெருமான் சொல்ல, 

ராமரும் லக்ஷ்மணரும் திவ்ய ரதத்தில் இருக்கும் தன் தந்தை தசரதரை நமஸ்கரித்தனர்.

பிறகு, தசரதர் இருவரையும் கட்டி கொண்டு மகிழ்கிறார்.

தன் சத்தியத்தை காக்க, வனவாசம் சென்ற ராமபிரானை கட்டி கொண்டு, அயோத்தியை அரசாள ஆசிர்வதித்தார்.

மேலும் கைகேயியை மன்னித்ததாகவும் ராமபிரானிடம் சொன்னார்.

சீதா தேவியிடம், "ராமபிரானை பற்றி தவறாக நினைக்க வேண்டாம். உன் பெருமையை உலகுக்கு காட்டவே இப்படி செய்தார்" என்று சமாதானம் செய்தார்.

லக்ஷ்மணனின் மகத்தான சேவையை சொல்லி மகிழ்ந்தார்.




இப்படி தசரதர் சொன்ன பிறகு, இந்திர தேவன் ராமபிரான் அருகில் வந்தார்..

"ராமா! உங்கள் தரிசனம் அமோகமானது. நாங்கள் பெரிதும் மகிழ்ந்தோம். உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்"

(அமோகம் தர்சனம் ராம தவ அஸ்மாகம் பரன்தப! ப்ரீதி யுக்தா ஸ்ம தேன த்வம் ப்ரூஹி யன்மனஸ் இச்சஸி! - வால்மீகி ராமாயணம்)

என்றார்.

அப்பொழுது ராமபிரான், இந்திர தேவனை பார்த்து, வானரர்களுக்காக வரம் கேட்கிறார்.

ராமபிரான் சொல்கிறார்,

"தேவர்களுக்கு தலைவனே! நீங்கள் என்னை கண்டு மகிழ்ந்து இருக்கிறீர்கள் என்றால், நான் உங்களிடம் என் ஆசையை சொல்கிறேன். அதை உண்மை ஆக்குங்கள்.

வாக்கு மீறாதவரே! இந்த போரில் எனக்காக சண்டையிட்டு உயிர் விட்ட வானரர்கள் பலர், யமலோகம் சென்று விட்டார்கள். 

அவர்கள் அனைவரையும் மீண்டும் உடல் கொடுத்து எழுப்பி விடுங்கள். 

(மம ஹதோ பராக்ராந்தா யே கதா எம சாதனம்! தே சர்வே ஜீவிதம் ப்ராப்ய சமுதிஷ்டந்து வானரா:! - வால்மீகி ராமாயணம்)

எனக்காக இத்தனை காலம் கடுமையாக உழைத்து, தன் மனைவி குழந்தைகளை விட்டு விட்டு, என் நலனுக்காக உயிரையே கொடுக்கவும் துணிந்தார்கள் இவர்கள்.

இவர்கள் அனைவரும் உங்கள் ஆசிர்வாதத்தால் மீண்டும் உயிர் பெறட்டும்.

இந்த வரத்தையே எனக்கு தாருங்கள்.

நான் அனைத்து வானரர்களையும், கோலாங்குலர்களையும், ருக்ஷர்களையும் ஒரு காயமும் இல்லாமல், அதே பலத்துடன், ஆரோக்கியத்துடன் காண ஆசைப்படுகிறேன்.

அவர்கள் வசிக்கும் இடங்களில், நதியும், தேவையான பூக்களும், கனிகளும், கிழங்குகளும் எப்பொழுதும் கிடைக்கட்டும்."

என்றார் ராமபிரான்.


அதை கேட்ட இந்திர தேவன், "நான் பொய் பேசுவதில்லை. கொடுத்த வரத்தின் படியே, அனைத்து வானரர்களையும், கோலாங்குலர்களையும், ருக்ஷர்களையும் ஒரு காயமும் இல்லாமல், அதே பலத்துடன், ஆரோக்கியத்துடன் தூக்கத்தில் எழுந்தவர்களை போல எழுப்பி விடுகிறேன்" என்று சொல்ல, 

அனைத்து வானர சேனையும் எழுந்து விட்டனர்.

ராமபிரான் நிற்பதை கண்டு, அனைத்து வானரர்களும் அவர் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தனர்.

"அயோத்தி செல்லுங்கள். ராம ராஜ்யம் செய்யுங்கள்" என்று வாழ்த்து கூறி, தேவர்கள், ப்ரம்ம தேவன், சிவபெருமான் அனைவரும் மறைந்தனர்.

இவ்வாறு, வானரர்கள் இரண்டு முறை, மீண்டும் உயிர்த்து எழுந்தார்கள்.

"யாரோ ஒருவர், இறந்த பிறகு சிலநாடகளுக்கு பின் உயிர்த்தெழுந்தார்!!" 

என்று பிற மதங்களில் ஆச்சர்யமாக சொல்லிக்கொள்கிறார்கள்.

இதுவா ஆச்சர்யம்?....

போரில் இறந்து போன "ஆயிரக்கணக்கான வானரர்கள், காயம் ஆறி, ஆரோக்கியத்துடன், அதே பலத்துடன், இரண்டு முறை மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்தார்கள்" என்று இங்கு பார்க்கிறோம்.

இதுவல்லவா ஆச்சர்யம்!

ராமரை வழிபடுபவர்கள், 'மரணத்தை கூட வென்று விடுவார்கள்' என்று தெரிகிறது.

ஜெய் ஸ்ரீ ராம்.






Monday 6 January 2020

ராக்ஷஸர்கள் வானரர்கள் யார்?...மனிதர்களை விட பலசாலிகளான இவர்கள் எப்படி அழிந்தார்கள்? அறிவியல் கண்டுபிடிப்புகள் இது போன்ற மனிதர் வர்கம் இருந்தது என்று கண்டுபிடித்து சொல்கிறதே! அறிவியல் சொல்வதை ஹிந்துக்களை பார்க்க வேண்டாமா?ராமாயணம் நிரூபிக்க படுகிறதே!

"ராக்ஷஸர்கள்" என்று அழைக்கப்பட்ட ஜாதி இன்று இல்லை.
அதே போல,
"வானரர்கள்" என்று அழைக்கப்பட்ட ஜாதியும் இன்று இல்லை.
ஆனால் "மனிதர்கள்" என்ற ஜாதி அன்றும் இருந்துள்ளது.. இன்றும் இருக்கிறோம்.




வானரர்கள், ராக்ஷஸர்கள் 'இருவருமே மனிதர்களை போல தான் இருந்தார்கள்..'
ஆனால்,
'மனிதர்களை விட பன்மடங்கு பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள்' என்று நம் ராமாயணத்தில் காட்டப்படுகிறது.
வானத்தில் பறக்கும் சக்தியுடன், 
குரங்கு போலவும் மனிதன் போலவும் தேவைக்கு ஏற்றவாறு உருமாறி கொள்ளும் மாய சக்தி கொண்ட, 
மிகவும் பலசாலிகளாக இருந்த மனிதர்களை (நரர்கள்) - 
"வானரர்கள்" என்று அழைத்தனர்.

நர (மனித) மாமிசத்தை அப்படியே பச்சையாக சாப்பிடும், 
உருவத்தை சாதாரண மனிதனை போன்று மாற்றி கொள்ளும் சக்தி கொண்ட, 
ராக்ஷஸ ரூபத்தில் உயிர் நடுங்கும் உருவத்துடன், மாய சக்தி உடையவர்களாக, 
தனக்கு தேவைப்படும் போது எந்த அதர்மமும் செய்ய துணிந்தவர்களாக, 
எதையும் செய்ய துணிந்தவர்களாக, 
மனிதர்கள் நல்ல காரியங்கள் செய்தால் அவர்களை கொலை செய்து அப்படியே விழுங்கவும் துணிந்தவர்களாக, 
படித்தவர்களாகவும், தவம் செய்து பாவங்களை போக்கி கொள்ளும் சக்தி உள்ளவர்களாகவும், 
மஹா பலசாலிகளாகவும் இருந்த மனிதர்களை -
"ராக்ஷஸர்கள்" என்று அழைத்தனர்.

12 லட்சம் வருடம் முன், த்ரேதா யுகத்தில் நடந்த ராமாயண சமயத்தில்,
மனிதர்களை விட பலசாலியான, வானில் பறக்கும் சக்தி கொண்ட "வானரர்கள்" என்ற ஜாதி இருந்தது தெளிவாக சொல்லப்படுகிறது.
அதே போல,
மனிதர்களை விட பலசாலியான, நர மாமிசம் சாப்பிடும், தனக்காக எதையும் செய்ய கூடியவர்களான, மாய சக்தி உடையவர்களான, "ராக்ஷஸர்கள்" என்ற ஜாதி இருந்தது பற்றியும் தெளிவாக சொல்லப்படுகிறது.
மனிதர்களில் உயர்ந்த "விஸ்ரவஸ்" என்ற ரிஷிக்கும், த்ருணபந்து என்ற ராஜாவின் (ராஜரிஷி ஆனவர்) பெண்ணான "இடவிடா" என்பவளுக்கும் "குபேரன்' பிறந்தான்.
அவன் தேவர்களில், யக்ஷர்களின் தலைவனானான்.
பூலோகத்தில், இலங்கையில் ஆட்சி புரிந்து வந்தான்.

"விஸ்ரவஸ்", ராக்ஷஸ குலத்தில் பிறந்த "கேகசி" என்பவளையும் மணந்தார்.
இவர்களுக்கு நேபாளத்தில் உள்ள சாலிக்ராம என்ற தேசத்தில், ராக்ஷஸனாக பிறந்தார்கள்  "ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை" போன்றவர்கள்.
குறிப்பாக "ராவணன், சூர்ப்பனகை" இருவரும் 100 சதவீதம் "ராக்ஷஸ சக்தியுடன், ராக்ஷஸ குணத்துடன்" இருந்தனர்.
விபீஷணன் ராக்ஷஸ சக்தியுடன் இருந்தாலும், குணத்தில் மனித குணத்துடன் ஒத்து இருந்தான். தர்மமாதர்மம் பேசுவான்.

ராவணன் தன் தந்தையிடம் பூரணமாக வேதம் கற்றவன்.
ராவணன், குபேரன் சகோதர முறை.
புலஸ்திய ரிஷி இவர்களுக்கு தாத்தா முறை.
ராவணன் 'புலஸ்திய கோத்திரம்'.

தனக்கு தேவை என்றால், எந்த காரியமும் செய்ய துணிபவர்கள் ராக்ஷஸர்கள்.
யாருக்கும் அடங்காதவர்கள்.
ராவணன் தன் தம்பி என்று கூட பார்க்காமல், குபேரனை அடித்து துரத்தி, அவன் வைத்து இருந்த இலங்கையை பிடித்தான். அவன் வைத்து இருந்த குபேர சொத்தை பிடுங்கி, புஷ்பக விமானத்தையும் (flight) பிடுங்கி கொண்டான்.
மேலும்,
நர மாமிசம் பச்சையாக சாப்பிடுபவன் ராவணன்..
மாய சக்தி கொண்டவன்.
பொதுவாகவே ஒரு தலை, 2 கைகளுடன் இருக்கும் ராவணன், மஹா பலசாலிகளான, யாருக்கும் அடங்காத ராக்ஷஸர்கள் கூட்டத்துக்கு "தலைவன்" என்று காட்டி கொள்ள, சபைக்கு மட்டும், 10 தலைகளுடன், 20 கைகளுடன் வருவான்.
ராக்ஷஸ கூட்டமே ராவணனை பார்த்து நடுநடுங்கும்.
மேலும்
'போர் சமயத்தில் எதிரிகளை பயமுறுத்த, 10 தலைகளுடன், 20 கைகளுடன் வருவான்' என்று வால்மீகி ராமாயணம் தெளிவாக காட்டுகிறது.




ஹனுமான் கடலை தாண்டி, இலங்கையில் சீதையை தேடிய போது, ராவணன் அவன் அரண்மனையில் ஒரு தலையுடன், 2 கைகளுடன் தான் படுத்து இருந்தான் என்று காட்டப்படுகிறது.
இதே ராவணன்,
சீதை அபகரித்து, ஜடாயுவுடன் போர் செய்யும் போதும், 
ராமபிரானிடம் போர் புரியும் போதும், 
10 தலைகளுடன், 20 கைகளுடன் தன்னை காட்டினான்.
மாய சக்தி நிறைந்தவன்.
செய்யும் பாவங்களுக்கு கடுமையான தவம் செய்து, பாவத்தை போக்கி கொள்ளும் சக்தியும் உடையவன் ராவணன்.

சீதையை இலங்கை இழுத்து வந்து, "10 மாதத்தில் தன்னை ஏற்று கொள்ள மறுத்தால், இவளை தனக்கு இரவு உணவாக வெட்டி சாப்பிட ஏற்பாடு செய்" என்று அவளை சுற்றியுள்ள ராக்ஷஸ பெண்களிடம் சொல்லி செல்கிறான்.

கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து எழுப்படும் போது, 100 பன்றிகளை விழுங்கி மேலும் பல மாமிசங்களை விழுங்கினான் என்று சொல்லப்படுகிறது.
இவனுடைய சாதாரண உடலே 100 அடிக்கு மேல் இருந்தது என்று காட்டப்படுகிறது. இதை தவிர மாய சக்தியும் கொண்டவன் கும்பகர்ணன்.

இரவிலிலும் கண் தெரியும் சக்தி உள்ளவர்கள் ராக்ஷஸர்கள். 
மனிதர்களை வெறுப்பவர்கள். 
முக்கியமாக மனிதர்களில் நல்ல காரியங்கள் செய்தால், அனைவரையும் நர மாமிசமாக சாப்பிட்டு விடுபவர்கள் ராக்ஷஸர்கள்.
வானரர்களில் "ஹனுமான்" மிகவும் பலசாலி, பாரத மண்ணிலிருந்து இலங்கை வரை தாண்டும் பலசாலி. மாய சக்தி கொண்டவர். ஆனால், சாத்வீகர்.
வானரர்களில் "வாலி" மஹா சக்தி வாய்ந்தவன். அறிவு குறைந்தவன். அதர்மம் செய்பவன். 
ஆனால் ராக்ஷஸர்களை போல மனிதர்களை ஹிம்சிப்பவர்கள் அல்ல. மனிதர்களை போலவே இரவில் கண் தெரியாதவர்கள்.

ராக்ஷஸர்கள் பலத்துக்கு வானரர்கள் தூசுக்கு சமானமானவர்கள்.
ராக்ஷஸர்கள் மனிதர்களை மதிக்கும் அளவில் கூட வைக்கவில்லை.

'தன் 10 தலைகளையும் அறுத்து, ராஜசமான கோரமான யாகம் செய்து, ப்ரம்ம தேவனை அழைத்தான்' ராவணன்.
ப்ரம்ம தேவன் இவன் தவ வலிமைக்கு பணிந்து காட்சி கொடுக்க, "தேவர்கள், யக்ஷர்கள், கிண்ணரர்கள் என்று யாராலும் தான் சாக கூடாது" என்று அடுக்கி கொண்டே போன ராவணன், வானரர்களையும், மனிதர்களையும் சொல்லவில்லை.

மனிதனால், ராக்ஷஸ குலத்தில் உள்ள கடைசி ராக்ஷஸனை கூட எதிர்க்க முடியாது என்பதால், மனிதனை பற்றி அவன் நினைவில் கூட இல்லை.
பரமாத்மா நாராயணன் மனிதனாக பிறந்து, ப்ரம்ம தேவன் கேட்டு கொண்ட பிரார்த்தனைக்காக ராவணனை மனிதனாகவே இருந்து ஒழித்தார்.
ராவணன் அழிந்தாலும், ராக்ஷஸர்கள் பிறகும் இருந்தார்கள்.
இலங்கையில் மிச்சப்பட்ட ராக்ஷஸர்களுக்கு விபீஷணன் அரசனாகி, இலங்கையை ஆண்டான்.

12 லட்சம் வருடம் முன் நடந்த இந்த ராமாயண நிகழ்வில் சொல்லப்படும் இந்த மூன்று பேரை, இன்றைய ஆராய்ச்சி மூலம்

  1. Homo-erectus,
  2. Homo-neanderthal,
  3. Homo-sapiens (human)

என்று 3 வித மனிதர்கள் இருந்தார்கள் என்று கண்டுபிடிக்கிறார்கள்.
'Homo-erectus என்று சொல்லப்பட்ட இவர்களின் மண்டை ஓடு ஆப்ரிக்கா போன்ற தேசங்களில் ஆரம்பித்து பாரத தேசம் வரை இருந்தது'
என்று கண்டுபிடித்த இவர்கள், ஆப்ரிக்கா கலாச்சாரத்தை மட்டுமே கொண்டு இவர்கள் பலசாலிகளாகவும், கொஞ்சம் நல்லவர்களாகவும் இருந்தனர் என்று மேலோட்டமாக சொல்கிறார்கள்.
Homo-erectus என்று சொல்லப்பட்டவர்கள், ஆப்பிரிக்க முதல் இந்திய தேசம் வரை பரவி இருந்தார்கள் என்று மட்டும் இவர்கள் கண்டுபிடிப்பு நின்று விட்டது. இவர்கள் 6 லட்சம் வருடங்கள் முன்பு வரை இருந்தார்கள் என்று சொல்கிறது இன்றைய ஆராய்ச்சி.




Homo-neanderthal என்று சொல்லப்பட்டவர்கள் தான் "ராக்ஷஸர்கள் " என்று நாம் சிறிது நம் ராமாயண சரித்திரத்தை படித்தாலேயே புரிகிறது. 
இன்றைய ஆராய்ச்சியின் மேலோட்டமான அனுமானத்தின் படி "இப்படி தான் இவர்கள் இருந்தார்கள்" என்று காட்டுகிறது இன்றைய விஞ்ஞானம்.




இந்த உருவங்களைஇவர்கள் பலத்தை பார்த்தால், ராமாயணம் சொல்லும்  சூர்ப்பனகை, ராக்ஷர்கள் குணத்துடன் ஒத்து போகிறது. 
இந்த ஆராய்ச்சிகள் ஐரோப்பா கண்டத்தில் மட்டுமே செய்யப்பட்டதால், Homo-neanderthal என்று சொல்லப்பட்ட இவர்களை போன்றே வர்ணிக்கப்பட்ட்ட ராக்ஷஸர்களை பற்றி ராமாயணத்தில் சொல்லி உள்ளதை இவர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை என்று தெரிகிறது.

"Homo-erectus" என்று சொல்லப்பட்டவர்கள் தான் "வானரர்கள்" என்று நாம் சிறிது நம் ராமாயண சரித்திரத்தை படித்தாலேயே புரிகிறது.

12 லக்ஷம் முன் த்ரேதா யுகத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த நிகழ்வில் இவர்கள் இந்திய மண்ணில் யார்? எப்படி இருந்தார்கள்? என்று அறிய முடிகிறது.

ஆப்பிரிக்காவில் இந்த Homo-erectus மனிதர்களின் எலும்புகள் கிடைத்ததால், இவர்கள் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தனர் என்று சொல்லி, நின்று விட்டனர் நவீன ஆராய்ச்சியாளர்கள்.

இந்தியாவில் Homo-erectus  இருந்தார்கள் என்று சொல்லும் இவர்கள், இங்கு எப்படி இருந்தார்கள் என்று ஏன் ஆராய்ச்சி செய்யவில்லை?
காரணம்,
பாரத தேசத்தின் சரித்திரத்தை கோரி, கஜினி போன்ற இஸ்லாமியர்கள் நுழைவதற்கு முன் சென்று ஆராய வெளிநாட்டினர் தயார் இல்லை. 

உலகமே பிச்சைக்கார நாடாக இருந்த போது, 
பாரத மக்கள் சுயசார்புள்ளவர்களாக, மிகவும் வலிமையுள்ள, செல்வ செழிப்புள்ள, கலாச்சாரம் மிக்க மனிதர்களை கொண்ட நாடாக இருந்தது.
பாரத நாட்டை ஆராய்ச்சி செய்வது,
பாரத மண்ணின் கலாச்சார பெருமையை, ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களை உண்மை என்று சொல்ல வேண்டி வரும் என்பதால் இந்தியாவில் Homo-erectus  இருந்தார்கள் என்று சொல்லும் இவர்கள், இங்கு எப்படி இருந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்யவில்லை.

"பாரத மக்களை ஹிந்துக்களாக வாழ விடக்கூடாது" என்று இருக்கும் மேலைநாடுகளிடம், பாரத மண்ணில் நடந்த சரித்திரங்களை பிரபலப்படுத்துமா!! என்று எதிர்பார்ப்பதே அறிவீனம்.

பாரத மண்ணில் பிறந்த நாமாவது, நம் தேசத்தின் உண்மையை, பெருமையை அறிந்து கொள்ளலாமே, நாம் உலகுக்கு சொல்லலாமே!

12 லட்சம் வருடம் முன் இந்த மூவரும் யார்?
பாரத மண்ணில் இருந்து இவர்கள் என்ன செய்தார்கள்?
என்று ராமாயணத்தில், நம் கண் முன்னே காட்டி விடுகிறார், தமிழன் வால்மீகி.

  1. Homo-erectus (வானரர்கள்)
  2. Homo-neanderthal (ராக்ஷஸர்கள்)
  3. Homo-sapiens (human) (மனிதர்கள்)

என்று 3 வித மனித உருவம் கொண்டவர்கள் இருந்தார்கள். இவர்கள் இப்படி பட்டவர்கள்.. இப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள்.
அனைவரும் பொது மொழியான சம்ஸ்க்ரிதம் அறிந்தவர்கள் என்று காட்டி, இன்றைய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பை, அன்றே எழுதி வைத்த்தார் வால்மீகி என்ற தமிழன். 

பாரத மக்களுக்கு காலம் காலமாகவே இந்த ஆராய்ச்சிகளின் உண்மை தெரிகிறது.
மனிதர்கள் பெரும்பாலும் சாதுக்கள். சக்தி குறைந்தவர்கள். தர்மத்தில் இருக்க ஆசைப்படுபவர்கள். மனிதர்களிலும் பொறமைக்காரர்கள் உண்டு.
இன்று இருக்கும் நாம் அனைவருமே மனிதர்கள் தான்.

ராக்ஷஸர்கள் பெரும்பாலும் பயங்கரமானவர்கள்.. நர மாமிசம் சாப்பிடுபவர்கள். எதையும் செய்ய துணிந்து விடுவார்கள். மாய சக்தி கொண்டவர்கள்.
தர்மத்தில் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைக்கும் சில நல்லவர்களும் இருப்பார்கள். ஆனால் இவர்கள் மிக குறைவே.

"இல்வலா, வாதாபி" என்ற இரு மாயாவி ராக்ஷஸர்கள், "அகத்தியர்" போன்ற தமிழ் முனியை நர மாமிசமாக சாப்பிட நினைத்து, தமிழ் முனி அகத்தியரின் தவ வலிமையால் அழிந்தனர். 

மாய சக்தி நிறைந்த ராக்ஷஸர்களும், மனிதர்களும் எந்த விதத்திலும் சமம் இல்லை.
மனிதர்களையே மதிக்காதவர்கள் ராக்ஷஸர்கள். 
இன்று இருக்கும் சில வேடிக்கை மனிதர்கள், தங்களை ராவணன் பரம்பரை என்று கூறிக்கொள்கிறார்கள். இது வேடிக்கையிலும் வேடிக்கை.

வானரர்களும் குணத்தில் எல்லை மீற கூடியவர்கள்.. வெகுளிகள்.. 
அதே சமயம், ஹனுமானை போன்ற சில வானரர்கள் அதி புத்திசாலியாகவும், இருந்தார்கள்.

இது வரை,
யார் Homo-erectus (வானரர்கள்)?
யார் Homo-neanderthal (ராக்ஷஸர்கள்)?
யார் Homo-sapiens (human) (மனிதர்கள்)?
இவர்கள் உண்மையில் எப்படி இருந்தார்கள்? என்று ராமாயணம் காட்டியதை பார்த்தோம்.

இனி,
"பொதுவாக பலசாலிகள் தான் நிலைப்பார்கள்" என்று இந்த இன்றைய அறிவியல் சொல்கிறது.
"Survival of fittest" என்று சொல்கிறது.

"உலகில் வாழ வேண்டுமென்றால், எப்படியாவது போட்டி போட்டு ஜெயித்து காட்டு" என்று பயமுறுத்துகிறது..

இதன் அடிப்படையில் பார்த்தால்,
Homo-sapiens (human) என்ற மனிதர்களை விட பலமடங்கு பலசாலியாக இருந்த Homo-erectus (வானரர்கள்) ஜாதியும், Homo-neanderthal (ராக்ஷஸர்கள்) ஜாதியும், எப்படி இன்று இல்லாமல் போனார்கள்?





பலசாலிகளான ராக்ஷஸர்கள், பலசாலிகளான வானரர்கள்எப்படி அழிந்து இருக்க வாய்ப்பு உண்டு?
பலம் குறைந்த "மனிதர்கள்" இன்றுவரை எப்படி இருக்கிறார்கள்?

உலகத்தில் பலம் வாய்ந்தவர்கள் தான் அழிவார்கள் என்பதே உண்மை.
சாதுக்கள், தன் சாது குணத்தாலேயே அழிவில்லாமல் இருப்பார்கள் என்பதே உலக உண்மை.

பலம் வாய்ந்த யாழி, டைனோசர் போன்ற பலம்வாய்ந்த மிருங்கங்கள் இன்று இல்லை.

புலி சிங்கம் போன்ற பலம்வாய்ந்த மிருங்கங்கள், இன்று குறைந்து விட்டது.

ஆச்சர்யம் என்னவென்றால், புலி, சிங்கம் குறைந்து விட்டது.. மான்கள் இன்றும் இருக்கிறது..

எப்படி பலம் பொருந்திய ராக்ஷஸர்கள், வானரர்கள் காணாமல் போனார்கள்? காணாமல் போயிருப்பார்கள்?
இன்று அழிந்து வரும் புலி இனத்தை கவனித்தாலேயே, நாம் காரணத்தை புரிந்து கொள்ளலாம்.

புலியின் எண்ணிக்கை மனிதர்கள் வேட்டை ஆடுவதால் உண்மையில் குறைவதில்லை..
மாறாக, புலிகளுக்குள்ளேயே பொறாமை உண்டு, புலிகளுக்கு உள்ளேயே சண்டைகள் ஏற்பட்டு விடும். 
சம பலத்தில் உள்ள சிங்கமும் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ளும் 
தங்கள் இனத்தை தாங்களே அழித்து கொள்ளும் குணம் கொண்டவை.

மான்களுக்கு மனிதனாலும் ஆபத்து, மிருகங்களாலும் ஆபத்து.
ஆனால் அவைகளுக்குள் சண்டை செய்து சாவது கிடையாது. கூடி வாழ கூடியவை. சாது மிருகங்கள். 

பலம் வாய்ந்த ராக்ஷஸர்கள், வானரர்கள், பலம் குறைந்த மனிதர்களால் அழிக்கப்பட்டு இருக்கவே முடியாது. 
வாலியும் சுக்ரீவனும் சகோதர்கள். இருந்தாலும் கொலை செய்யும் அளவுக்கு தங்களுக்குள் சண்டை இட்டு கொண்டனர்.

ராவணன், தன் சொந்த மாமன் "மாரீசனை" மாய மான் போல சென்று, ராமரை சீதையை விட்டு வெகு தூரம் இழுத்து செல்ல சொன்னான்.

"ராமபிரான் தன்னை நிச்சயம் கொன்று விடுவார்" என்று பயந்த மாரிசன் மறுக்க,  சீதையை அபகரிக்க திட்டமிட்ட ராவணன், "மறுத்தால் மாமன் என்று கூட பார்க்காமல் கொன்று விடுவேன்" என்று மிரட்டி அனுப்புகிறான்.
மாரீசன் ராமபிரானால் இறந்தும், துளியும் அதை பற்றி கவலைப்படவில்லை ராவணன்.
அதேபோல,
"பிறர் மனைவியை பேடி தனமாக கொண்டு வந்ததை கண்டித்த தன் சொந்த தம்பியை, சபையில் அனைவரும் பார்க்க எட்டி மிதித்தான்" ராவணன். 

இந்த உதாரணங்களே பலம் பொருந்திய இவர்கள், ஏன் காலப்போக்கில் அழிந்தார்கள் என்பதை விளக்குகிறது. 

எத்தனை பூகம்பம் வந்தாலும், மான்களை போன்ற, பலம் குறைந்த மனிதர்கள் இன்று வரை வாழ்கின்றனர்.

மனிதர்களில் கூட, ராக்ஷஸ குணம் கொண்ட மனிதர்களை  போலி மதங்கள் உருவாக்குகிறது. 
ஹிந்து மதத்தை அழிக்க, 
ஹிந்து தர்மத்தை அழிக்க, 
சாதுக்களான ஹிந்துக்களை மதம் மாற்ற 1000 வருடங்களாக முயற்சி செய்தும், 
ஹிந்துக்கள் அழியாமல், இன்று கூட 80 கோடி ஹிந்துக்கள் பாரத மண்ணில் இருக்கின்றனர். 
உலகம் முழுவதும் பார்த்தால், இன்னும் பல கோடி ஹிந்துக்கள் பரவி கிடக்கின்றனர். 

அழிக்க வந்த போலி மதங்கள், அழிக்க முடியாத ஹிந்து தர்மத்தை பார்த்து மலைத்து நிற்கின்றன. 

"நரமாமிசம் உண்ணும்" "மாய சக்திகள் கொண்ட" ராக்ஷஸர்கள் அழிந்தாலும், 
"ஆகாயத்தில் பறக்கும்", "மாய சக்திகள் கொண்ட" வானரங்கள் அழிந்தாலும், 
மனிதர்களாகிய நாம் அழியவில்லை. 
மனிதர்களில், பிற மதங்களை பார்த்து பொறாமைப்படாத சாதுக்களான,  ஹிந்துக்கள் என்றுமே அழிவதில்லை.




உருவாக்கப்பட்ட போலி மதங்கள், பொறாமை குணத்தாலேயே அழிந்து போகும். 

அறிவுள்ள மனிதர்கள், பொறாமையை தூண்டும், பிற வழிபாடுகளை இகழும், ஊருக்கு உதவாத அறிவுரையை கூறும்  போலி மதங்களை, பௌத்த மதம் பரவி, பிறகு பாரத மண்ணை விட்டு விரட்டப்பட்டது போல, அழிந்து போகும்.

ஹிந்துக்கள் அழிவதே இல்லை.
12 லக்ஷம் வருடம் முன்பு இருந்த அகத்தியரும், ராமரும் வாழ்ந்த சனாதன தர்மம் வாழ்க்கை முறையையே, இன்றும் ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்கிறோம் நாம்.

ஹிந்துவாக வாழ்வதில் பெருமை கொள்வோம்.   
வாழ்க ஹிந்துக்கள்.