Followers

Search Here...

Showing posts with label திருப்பதி. Show all posts
Showing posts with label திருப்பதி. Show all posts

Friday 23 February 2024

திருப்பதி செல்லும் போது என்ன பிரார்த்தனை செய்து கொண்டுபயணிக்க வேண்டும்? ஜாம்பவதி சொன்ன பிரார்த்தனையை நாமும் சொல்வோம்.

திருப்பதி ஶ்ரீனிவாசனை வழிபட்டதன் பயனாக, அடுத்த ஜென்மத்தில் ஜாம்பவதியாக பிறந்து, ஶ்ரீ கிருஷ்ணரை மணந்தாள்.

அவளுடைய முன் ஜென்மத்தில், 

பகவான் விராட் ரூபத்தில் 14 லோகங்களாகவும் இருக்கிறார். அவரே திருமலையில் ஸ்ரீனிவாசனாக இருக்கிறார். அந்த ஶ்ரீனிவாசனை "எப்பொழுது தரிசிப்பேன்? எப்பொழுது தரிசிப்பேன்?" என்ற தாபத்தோடு பிரார்த்தனை செய்து கொண்டே சேஷாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.


ஜாம்பவதி முன் ஜென்மத்தில், திருமலையில் ஏறும் போது, செய்த பிரார்த்தனை.

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य वक्षः श्रीवत्स रत्नै: भूषितं विस्तृतं च ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य तुन्दं वलित्रयेणाङ्कितं सुंदरं च ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य कण्ठं महर्लोकस्य आश्रयं कंबु तुल्यम् ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य नाभिं सदा अन्तरिक्षस्य आश्रयं वै सुपूर्णम् ॥

कदा द्रक्ष्ये वदनं वै मुरारे: जन-लोकस्य आश्रयं सर्वदैव ॥

शिरः कदा श्रीनिवासस्य द्रक्ष्ये सत्यस्य लोकस्य आश्रयं सर्वदैव ।

कटिं कदा श्रीनिवासस्य द्रक्ष्ये भूर्लोकस्य आश्रयं सर्वदैव ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य च ऊरु तलातलस्य आश्रयं सर्वदैव ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जानु सुकोमलं सुतलस्य आश्रयं च ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जङ्घे रसातलस्य आश्रयेः सर्वदैव ।

कदा द्रक्ष्ये पादतलं हरेश्च पाताल-लोकस्य आश्रयं सर्वदैव ॥

- गरुडपुराणम् - ब्रह्मकाण्डः (मोक्षकाण्डः)


கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய வக்ஷ:? ஶ்ரீவத்ஸ  ரத்னை: பூஷிதம் விஸ்த்ருதம் ச !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய துந்தம்? வலித்ரயேன அங்கிதம் சுந்தரம் ச !!

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய கண்டம்? மஹர் லோகஸ்ய ஆஸ்ரயம் கம்பு துல்யம் !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய நாபிம்? ஸதா அந்தரிக்ஷஸ்ய ஆஸ்ரயம் வை சுபூர்ணம் !

கதா த்ரக்ஷே வதனம் வை முராரை:? ஜன லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

ஸிர: கதா ஶ்ரீநிவாஸஸ்ய த்ரக்ஷே? சத்யஸ்ய லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

கடிம் கதா ஶ்ரீநிவாஸஸ்ய த்ரக்ஷே? பூலோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ச ஊரு? தலாதலஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ஜானு ஸு கோமளம்? சுதலஸ்ய ஆஸ்ரயம் ச !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ஜங்கே? ரஸாதலஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

கதா த்ரக்ஷே பாத தலம் ஹரே: ச? பாதாள லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

"ஸ்ரீவத்ஸம் என்ற அடையாளம் கொண்ட ஶ்ரீநிவாசனின் திருமார்பை எப்பொழுது  தரிசிப்பேன்? 

மூன்று மடிப்புகள் கொண்ட ஶ்ரீநிவாசனின் திவ்யமான திரு வயிற்றை எப்பொழுது தரிசிப்பேன்?

மகர லோகத்தில் இருப்பவர்கள் வழிபடும் ஶ்ரீநிவாசனின் சங்கம் போன்ற கழுத்தை எப்பொழுது நான் தரிசிப்பேன்? 

அனைத்து அந்தரிக்ஷமும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீநிவாசனின் திரு நாபியை எப்போது தரிசிப்பேன்?

ஜன லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் முராரியின் திரு முக மண்டலத்தை எப்பொழுது நான் காண்பேன்? 

ஸத்ய லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் சிரஸை எப்பொழுது தரிசிப்பேன்?

பூ லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் இடையை எப்பொழுது தரிசிப்பேன்?

தலாதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் தொடையை எப்பொழுது தரிசிப்பேன்?

சுதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் கோமளமான முழங்காலை எப்பொழுது தரிசிப்பேன்?

ரஸாதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் 

இரு கால்களை எப்பொழுது தரிசிப்பேன்?

பாதாள லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் 

திரு பாதங்களை எப்பொழுது தரிசிப்பேன்?

என்று ஸ்ரீனிவாசனின் தரிசனம் கிடைக்க வேண்டுமே என்ற தவிப்போடு தீர்த்த யாத்திரை செய்தாள்.

Thursday 24 December 2020

திருமலையின் நீளம் என்ன? திருப்பதி பெருமாள் எதற்காக வந்தார்? என்ன சொன்னார்? கைங்கர்யம் செய்பவர்கள், ஆதிசேஷனை போல கைங்கர்யம் செய்ய வேண்டும்.

"ஞானம் அடைந்த ஜீவன் மட்டுமே வைகுண்டம் (மோக்ஷம்) அடைய முடியும். 

ஞானம் அடையாதவரை, மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்."
இது பரவாசுதேவன் நியமித்த விதி (சட்டம்).

வைகுண்டத்தில் உள்ள அனைத்து ஜீவனும், பிறப்பு இறப்பில் இருந்து முக்தி அடைந்தவர்கள்.

மீண்டும் இவர்கள், பூலோகத்திலோ, சொர்கத்திலோ, மகர லோகத்திலோ, ஜன, தப, ப்ரம்ம லோகத்திலோ, பாதாள லோகங்களிலோ பிறவி எடுப்பதில்லை.

இவர்களாக ஆசைப்பட்டால், பெருமாளை போன்று அவதாரம் கூட செய்ய முடியும்.
அணுகிரஹம் செய்ய முடியும்.

மோக்ஷம் என்ற பேரானந்தமும், பரவாசுதேவனின் தரிசனமும் இவர்களுக்கு நிரந்தர சொத்து.

வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுக்கு  

  • உலகங்களை படைக்க, காக்க, அழிக்க என்று பல கடமைகள் உண்டு.

ஆனால்,

வைகுண்டத்தில் இருக்கும் முக்தி அடைந்த ஜீவனுக்கு,  

  • எந்த உலக பொறுப்பும் கிடையாது.   
  • இவர்கள் அனுபவிப்பது நிரந்தரமான ஆனந்த அனுபவம் மட்டுமே.
  • இவர்களும் பரவாசுதேவனை போல சுந்திரமானவர்கள்
  • எங்கும் செல்ல கூடியவர்கள். (அஜாமிளனை எம தூதர்களிடமிருந்து மீட்க இவர்களே வந்தார்கள்.)
  • நாராயணனை போலவே சங்கு சக்கரம் உள்ளவர்கள்.



  • திவ்ய ரூபம் உடையவர்கள்.
  • அவர்களுக்கும் பரவாசுதேவன் அனுபவிக்கும் ஆனந்தம் உண்டு.

வைகுண்டத்திற்கு முக்தி அடையாத ஜீவன் வர முடியாது என்பதால், பரவாசுதேவன் தானே விருப்பப்பட்டு, அவர்கள் இருக்கும் லோகங்களில் அவதாரங்கள் செய்கிறார்.

'மோக்ஷம் கொடுக்க வேண்டும் என்ற கருணையின் காரணமாக' அவதாரம் செய்கிறார். 

'மோக்ஷத்தில் நமக்கு ஆசை வருவதற்காகவும்' அவதாரம் செய்கிறார்.

'தன்னை புரிந்து கொள்ளவும்' அவதாரம் செய்கிறார்.

ப்ரம்ம லோகத்தில் இருக்கும் ப்ரம்மாவும் "வைகுண்டம்" சென்று பெருமாளை பார்க்க முடியாது.

பெரிய பெரிய முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள், ருத்ரன் உட்பட யாரும் வைகுண்டம் சென்று பார்க்க முடியாது.

தேவர்கள், ரிஷிகள், ப்ரம்மா, சிவன் என்று அனைவரும் பார்க்க வேண்டும் என்பதால், வைகுண்டத்தில் இருந்து கொண்டே, க்ஷீராப்தி என்ற பாற்கடலில், "மகாவிஷ்ணு"வாக வ்யூஹ அவதாரம் செய்து, தரிசனம் கொடுக்கிறார்.

வைகுண்டத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் ஆதிசேஷன், க்ஷீராப்தியிலும் கூடவே அவதாரம் செய்தார்.

அவரவர் தகுதிக்கு ஏற்ப தரிசனம் கொடுக்க, ஆங்காங்கு ஒரு காரியாலயம் (office) அமைத்துக்கொள்வதை போன்று தேவ, ப்ரம்ம, ருத்ரன், ரிஷி, கிண்ணரர்கள் என்று அனைவருக்காகவும், க்ஷீராப்தியில் அவதாரம் செய்து, தரிசனம் கொடுத்து, அபயம் தருகிறார் பெருமாள்.

க்ஷீராப்தி என்ற பாற்கடலில், 1000 தலைகள் கொண்ட ஆதிசேஷன் மேல், விஷ்ணு என்ற பெயருடன் பரவாசுதேவன் பள்ளி கொண்டு இருக்கிறார்.

வைகுண்டத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் மகாலட்சுமி,
விஷ்ணு பத்னியாக இதே பாற்கடலில், தேவர்களும் அசுரர்களும் அம்ருதம் கடையும் போது தோன்றினாள்.

ஆதிசேஷனின் 1000 தலைகளிலும் நாக ரத்தினங்கள் ப்ரகாசித்தன

பெருமாளின் பிம்பம் இந்த ஆயிரம் நாகரத்தினங்களிலும் பிரகாசிப்பதை பார்த்து ரசித்து கொண்டே, பெருமாளின் திருவடியை பிடித்து விட்டுக்கொண்டு இருந்தாள், மகாலட்சுமி.

அந்த சமயம், பரவாசுதேவனை பார்ப்பதற்கு, நாரதர் திருபாற்கடல் வந்தார்.

பாற்கடலில் ஜெய விஜயர்கள் அனுமதி இன்றி, பெருமாளை பார்க்க யாரும் உள்ளே போக முடியாது. 
சனகாதி முனிவர்களையே ஒரு முறை ஜெய விஜயர்கள் தடுத்து விட்டனர்.

நாரதர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
த்ரிலோகமும் சுற்றும் நாரதரை மட்டும் யாருமே தடுப்பது இல்லை.
இவரின் முகவெட்டு அப்படி.

இவரை பார்த்தால் கம்சனுக்கு, ஹிரண்யகசிபுவுக்கு கூட, வரவேற்க தோன்றுமாம்.

நாராயண நாமத்தை எப்பொழுதும் சொல்லும் நாரதருக்கு, எங்கு சென்றாலும் வரவேற்பு, மதிப்பு.
கம்சன் போன்றவர்களே நாரதரை வரவேற்பார்கள் என்றால், நாரதரை ஜெய விஜயர்கள் தடுப்பார்களா?..

நாரதர் வீணா கானம் செய்து கொண்டே திருபாற்கடல் வருகிறார்
அடிக்கடி இங்கு வந்து பெருமாளை சேவிப்பது இவருக்கு வழக்கமும் கூட.

எம்பெருமான் நாரதர் வருவதை கண்டதும், சந்தோஷமாக எழுந்து கொண்டு, ஆசையோடு வரவேற்றார்.

பவள பேழையில் முத்துக்களை கோர்த்து வைத்தது போல, எம்பெருமானின் உதடும், பற்களும் இருந்ததாம்.

தேவர்களுக்கும் தேவனான எம்பெருமான், பீதாம்பரம் உடுத்தி,  சங்கு சக்கரம் ஏந்திய கரங்களுடன், கண்ணுக்கு ஆனந்தம் தரக்கூடிய திவ்ய மங்கள வ்யூஹ ரூபத்தை உடையவராய் இருந்தார்.

எம்பெருமானை பார்த்து, கை குவித்து நாரதர் துதிக்கலானார்.
"நாம (name) ரூபங்களை (figure) கடந்து,
எல்லா இடத்திலும் அகண்டமாக இருந்து கொண்டு,
'ஸத்'தாய், 'சித்'தாய், ஆனந்தமாய்,
சத்தியத்தின் சொரூபனாய் இருக்கக்கூடிய நீங்கள்,
பக்தர்களுக்காக திவ்ய மங்கள (மஹாவிஷ்ணு) ரூபத்தை (Figure) ஏற்கிறீர்கள்.

சாமான்ய தேவர்கள், பரதெய்வமான உங்கள் பெருமைக்கு அருகில் கூட வர முடியாது.

கர்ம தாஸர்களாக இருப்பவர்கள் தேவர்கள்.
ஒருவன் செய்யும் கர்மாவுக்கு (செயலுக்கு) தகுந்த பலனை கொடுப்பவர்கள் தேவர்கள். அவ்வளவு தான்.

தானாக ஒருவனுக்கு கிருபை செய்ய தேவர்களுக்கு சக்தியும் கிடையாது.

'நீ ஏன் என்னை காப்பாற்றவில்லை?' என்று இந்திரனை கேட்டாலும்,
'வாஸ்தவம் தான். நீ தினமும் கோவிலுக்கு வந்தாய், என்னை பூஜை செய்தாய். இருந்தாலும் உன் பூஜா பலன் அவ்வளவு தான், உன் நம்பிக்கைக்கு அவ்வளவு தான் பலன் கொடுக்க முடியும்'
என்று கை விரித்து விடுகின்றனர்.




ஆனால் நீங்கள் ஒருவர் மட்டுமே, "உன் கால பலன் அவ்வளவு தான். உன் கர்ம பலன் அவ்வளவு தான்"
என்று சால்ஜாபுகள் சொல்லாமல், பிறர் யோக்கியதை பார்த்து அனுக்கிரகம் செய்யாமல்,  தீனர்களுக்கும் அனுக்கிரகம் செய்கிறீர்கள்.

மற்ற தெய்வங்களுக்கும் புராணம் உள்ளது.
உங்களுக்கும் புராணம் உள்ளது.

ஆனால் உங்களை போன்று வேறு எந்த தெய்வமும் உதவி செய்ததாக தெரியவில்லை.

எது தர்மம்? என்பதை தெரிந்து கொள்ள 'சப்த ப்ரம்மமாகிய வேதத்தை பார்த்து தெரிந்து கொள்கிறோம்'

அப்படிப்பட்ட வேதமே ஒரு சமயம், பிரளய ஜலத்தில் போய் விட்டது

மது கைடபர்கள் வேதத்தை எடுத்து கொண்டு சென்று விட்டனர் என்ற பொழுது, மற்ற தெய்வங்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
பேசாமல் இருந்து விட்டனரே!!

இப்படி மற்ற எந்த தெய்வங்களும் முன் வராத போது, நீங்கள் தானே மத்ஸ்ய அவதாரம் எடுத்து பிரளய ஜலத்தில் நீந்தி வேதத்தை மீட்டீர்கள்.

ஒரு சமயம், பிரளய ஜலத்தில் பூமியே மூழ்கி விட, பூமி தேவியை காப்பாற்ற, ஒரு தேவனும் முயற்சி செய்யவில்லையே? அப்பொழுதும் சும்மா இருந்தார்களே!!

எல்லா தெய்வங்களுக்கும் கோவில் உள்ளது.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் பக்தர்கள் உண்டு. புராணங்கள் உண்டு.
'பூமியே மூழ்கி விட்டது' என்றதும் இவர்கள் யாருமே ஒரு முயற்சியும் செய்யவில்லையே!! 

உமக்கோ, உடம்பு பறக்கிறது..  உடனே 'வராஹ அவதாரம்' செய்து பூமியை பிரளய ஜலத்தில் இருந்து மீட்டு காப்பாற்றினீர்கள்.

இப்படி பூமியையே காப்பாற்றி, பூமிக்கே ஆதாரமாக இருக்கும் உங்களை, இவர்கள் நன்றியுடன் நினைத்து பார்க்காமல் இருக்கிறார்கள்.

ஒரு சமயம் தேவர்களுக்கு 'அம்ருதம் வேண்டும்' என்று ஆசைப்பட்டு உங்களிடம் வந்து சரணாகதி செய்தார்கள்.


நீங்களே இவர்களுக்காக 'மந்திர மலையை தூக்கி கொண்டு வந்து, 
பாற்கடலில்'
கடையுமாறு சொன்னீர்கள்.
கடையும் பொழுது மலை கடலில் உட்கார்ந்து விட, உடனே கூர்ம அவதாரம் செய்து மலையை முதுகில் தாங்கி, கடையுமாறு சொன்னீர்கள்.

 

'பெருமாளுக்கு முதுகு வலிக்குமே!! இப்படி கடைந்தாவது அம்ருதம் நாம் சாப்பிட வேண்டுமா?'
என்று ஒரு தேவனுக்காவது தோன்றியதா? இல்லையே !!

அம்ருதம் வருகிறதா?... அம்ருதம் வருகிறதா?.. 
என்று தானே பார்த்து கொண்டு இருந்தனர்.

இவ்வளவு கிருபை செய்கிறீர்களே. 
யாருக்காவது நன்றி இருக்கிறதா?

'ரூபத்தை கடந்த பரவாசுதேவனான நீங்கள், திருமேனி எடுத்து கொள்வதே, பிறருக்கு உதவி செய்வதற்கு தான்' என்று அறிகிறேன்.

ஹிரண்யகசிபு 14 லோகங்களையும் (ப்ரம்ம லோகம் முதல் பாதாளம் வரை) தன் தவ வலிமையாலும், உடல் வலிமையாலும் கைப்பற்றி விட்டான்.

யாரும் இவனை ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கு சக்தி பெற்று இருந்தான்.

இவன் ஒருவனே 71 சதுர் யுகம் ஆட்டி வைத்தானே. 
எந்த தேவனுக்காகவாவது சக்தி இருந்தால், ஹிரண்யகசிபுவை எதிர்த்து இருக்கலாமே?

ப்ரம்மா முதல் அனைத்து தேவர்களும் பொட்டி பாம்பாக அடங்கி இருந்தார்களே, இவனிடம்.

பிரகலாதன் வரும் வரை, தேவர்கள் அனைவரும் "ஹிரண்யன் அடிப்பானே!" என்று பயந்து
"ஹிரண்யாய நம: ஹிரண்யாய நம:"
என்று சொல்லிக்கொண்டு அமைதியாக இருந்தனரே !!

இப்படி ஒருவனும் ஹிரண்யனை அடக்க புறப்படவில்லை.



அங்கும், நீங்கள் தானே, கடைசியில் பிரகலாதனுக்காக நரசிம்மமாக வந்து, ஹிரண்யனை வதம் செய்து, தேவர்களையும் வாழ வைத்தீர்கள்.

புராணங்களை எடுத்து பார்த்தால், ஆதியில் இருந்து அந்தம் வரை உங்கள் புகழ் தானே தெரிகிறது.

'உலக நிர்வாக பொறுப்பை' நீங்கள் அல்லவோ வைத்துள்ளீர்கள்.
திடீரென யாராவது வந்து, நான் ஈஸ்வரன் என்று சொல்லி விட முடியுமா?

பிரகலாதன் பேரன் பலி சக்கரவர்த்தியும் அவன் ஆட்சி காலத்தில் பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை கைப்பற்றி விட்டான்.

தேவர்கள் மீண்டும் வாழ இடம் இல்லாமல் தவித்தனர்.
இந்திரனுக்கு அழ கூட தெம்பு இல்லாமல், அவன் தாய் 'அதிதி' உங்களிடம் வந்து அழுது பிரார்த்தித்தாள்.

அப்பொழுதும் நீங்கள் தானே வாமன மூர்த்தியாக அவதாரம் செய்து பலி சக்கரவர்த்தியையும் தன் பக்தனாக்கி, உலகை மீட்டு, இந்திரனுக்கு மீண்டும் சொர்க்க லோகத்தை கொடுத்தீர்கள்.

மண்ணை தானமாக பலி சக்கரவர்த்தியிடம் தானமாக பெற்று, அதற்கு பதிலாக, தன்னையே அவனுக்கு கொடுத்து விட்டீர்களே!!.
'சுதலம்' என்ற பாதாள லோகத்தில், அவனுக்கு இடம் கொடுத்து, அவன் மாளிகையில் நீங்களே கதையை வைத்துக்கொண்டு 'கதாதரனாக' காவல் காத்து கொண்டு இருக்கிறீர்களே?

வயலில் பயிர் செய்த தானியங்களை, ஆடு மாடுகள் மேய்ந்து விடாமல் இருக்க, வேலி அமைப்பது வழக்கம்.

ஆனால் வேலியே பயிரை நாசம் செய்வது போல, ஒரு சமயம், மக்களை காப்பாற்ற வேண்டிய க்ஷத்ரியர்கள் (armed protection force) வலுத்து போய், அவர்களே வீடுதோறும் புகுந்து, கொள்ளை அடித்து, மக்களை கொன்று, அராஜகம் செய்கிறார்கள் என்றதும்,
நீங்களே 'பரசு-ராமராக' அவதாரம் செய்து, அதர்மம் செய்யும் க்ஷத்ரியர்கள் அனைவரையும் 21 தலைமுறைகள் நிர்மூலமாக்கி, அவர்கள் கொட்டத்தை அடக்கி, மீண்டும் அவர்களை, அவர்கள் தர்மத்தில் இருக்க செய்தீர்கள்.

சாதுக்களான மக்களை காப்பாற்றவும் நீங்கள் தானே வர வேண்டி இருக்கிறது.

'கோடாலி, சூலம்' என்று எத்தனை தெய்வங்கள் வைத்து உள்ளன.
அதை வைத்துக்கொண்டு, உலகத்தில் அதர்மம் தலைவிரிக்கும் போதும், பயன்படுத்தாமல், ஒன்றும் செய்யாமல் இருந்தனரே.

கோடாலி எடுத்து, நீங்கள் வந்து தானே மக்களை காப்பாற்ற வேண்டி இருக்கிறது.

தர்மம் வீழ்ச்சி அடையும் போது, எந்த தெய்வமும் "தர்மம் இப்படி பட்டு போய் விட்டதே!!" என்று கவலை படுவதாக கூட தெரியவில்லையே!!

அதே சமயம் "இந்திராய ஸ்வாஹா"
என்று தர்ம ரீதியாக யாராவது ஆஹுதி கொடுத்தால் மட்டும், அதை பெற்று கொள்ள வருகின்றனர்.

'தர்மம் அழிந்து போகிறதே! காப்பாற்ற வேண்டுமே!' என்றால் மட்டும், நீங்கள் தான் வர வேண்டி இருக்கிறது. வேறு எவரும் வருவதில்லை.

இப்படி எதற்கும் தாங்களே வந்து காப்பாற்ற வேண்டி இருக்க, பிற தேவதைகளையும் தன் இஷ்ட தெய்வமாக வழிபடுகின்றனரே!! ஜனங்கள்.

அப்படி என்ன தான் இந்த தெய்வங்கள் இவர்களுக்கு அனுக்கிரகம் செய்து விட்டனரோ? என்று தெரியவில்லை.

மற்ற தெய்வங்களை வணங்கும் இவர்களுக்கு, பரதெய்வமான உங்களின் குண விசேஷங்கள் என்ன?
மற்ற தெய்வங்களின் குண விசேஷங்கள் என்ன? என்பது தெரியவில்லையே!

இப்படி மற்ற தெய்வங்களையும் வழிபடும் இவர்கள், நீரே இவர்களின் ஆத்மாவுக்கு சொந்தக்காரன் என்று அறிந்து கொள்ளவில்லையே!!

காம்யார்த்தமான (பலனை எதிர்பார்த்தே) பக்தி செய்பவர்களாகவே பெரும்பாலும் இருக்கின்றனர்.

"அந்த தேவதையை வழிபட்டால் உடனே பலித்து விடும்" என்று கேள்விப்பட்டால் கூட, அந்த தெய்வத்தின் பக்கம் ஓடி விடுகின்றனர்.

எனக்கு இக லோக சௌக்கியங்கள் எதுவும் வேண்டாம்.
எனக்கு 'உங்கள் சரணத்தில் பக்தியே நிலைக்குமாறு' செய்யுங்கள்.

என்னிடத்தில் தியான யோகமும் இல்லை, கர்ம யோகமும் இல்லை, ஞான யோகமும் இல்லை.

தகுதி பார்க்காமல், நீங்கள் யாரையும் ஏற்றுக்கொள்வீர்கள்! என்றும் மட்டும் அறிவேன்.

உங்கள் பெருமை அறியாமல், நீங்களே இந்த ஜீவனுக்கு (ஆத்மாவுக்கு) சொந்தக்காரர் என்றும் தெரியாமல், பிற தெய்வங்களையும் வழிபடுபவர்களை நான் குறையாக சொல்லவில்லை.

அவரவர் பக்குவத்தை பொறுத்து, அவரவர்கள் பக்தி செய்கின்றனர் என்று அறிகிறேன்.

ஏதோ ஒரு அல்ப பலனுக்காக, ஏதோ ஒரு தெய்வத்திடம் பக்தி செய்கின்றனர்.

என்னை பொருத்தியவரை ஆதி தேவனான உங்களை தவிர, வேறு தெய்வம் எனக்கு தெரியாது.

என்னுடைய கண் பார்வை கூட வேறு ஒரு தெய்வத்திடம் திரும்புவதில்லை."
என்று சொல்லி, கை குவித்து நின்று கொண்டிருந்தார் நாரதர்.

பொதுவாக, ஜனங்களோடு ஜனங்களாக இருந்தால், எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியாது.
கொஞ்சம் மாடியில் ஏறி நின்று பார்த்தால், அந்த தெருவில் போகும் எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியும்.

'பூலோகத்தில் தனக்கு ஒரு ஏழு அடுக்கு மாடி அமைத்துக்கொண்டு, அங்கு நின்று கொண்டால், எல்லோரையும் பார்க்கலாமே'
என்று சங்கல்பம் செய்தார் பாற்கடலில் உள்ள எம்பெருமான்.




கண் மலர்ந்து பார்த்த, எம்பெருமான், ஆதிசேஷன் மேல் சாய்ந்து கொண்டே பேசலானார்,
"நாரதா ! பூலோகத்தில் அவதாரம் செய்து கொஞ்சம் விளையாடி விட்டு வரலாம் என்று நினைக்கிறேன்.
எனக்கு பூலோகத்தில் ஒரு தகுந்த இடம் பார்த்து சொல்.

எல்லோரும் காம்யார்த்த பக்தியே செய்து கொண்டு, என்னிடம் பக்தி செய்வதை கூட விட்டு விட்டு, ஏதேதோ தெய்வங்களை வழிபடுகிறார்கள் என்று குறைபட்டு கொண்டீர்கள்.

அவர்கள் மேல் தோஷம் இல்லை. அது என் தோஷம் தான், நாரதா!

காரணம், நான் பொதுவாக காம்யார்த்த (பலனை எதிர்பார்த்து) பக்தி செய்பவர்களிடம் முகம் கொடுக்காமலேயே இருக்கிறேன்.

அதனாலேயே அவர்களும் வேறு தெய்வங்களிடம் சென்று விடுகின்றனர்.

காம்யார்த்த பக்தி, பிரார்த்தனைக்கு முகம் சுளிக்காமல், எப்பொழுதும் பிரசன்னமாக இருந்து கொண்டே இருந்தால், என்னிடமே இவர்கள் அனைவரும் திரும்பி வருவார்கள்.

ஆதலால், நீங்களே ஒரு ஏற்ற இடத்தை பூலோகத்தில் கண்டுபிடித்து சொல்வீர்கள் என்றால், அங்கேயே நான் அவதாரம் செய்ய நினைத்துள்ளேன்.

எனக்கு வைகுண்டம், க்ஷீராப்தி கூட முக்கியமில்லை.
நான் நிரந்தரமாக பூலோகத்திற்கு வர சங்கல்பித்து உள்ளேன்.

நான் பூலோகத்திற்கு வந்த பிறகு, இந்த சம்சார கடலில் தத்தளிக்கும் ஜனங்கள், என்னை பார்த்ததும், 'என்ன செய்கிறார்கள்?' என்று பார்க்க போகிறேன்.

'கோவிந்தா... கோவிந்தா...'
என்று அனைவரின் வாயிலும் என் நாமத்தை வரவழைத்து, காம்யார்த்த பலனையும் கொடுத்து, மோக்ஷமும் கிடைக்க அனுக்கிரகம் செய்கிறேன்."

என்றார் வைகுண்டபதி.

நாரதர், "என்னை போய் பூலோகத்தில் தகுந்த இடம் எது என்று சொல்ல சொல்கிறீர்களே?" என்றார்.

மகாவிஷ்ணு, சிரித்து கொண்டே, "நீர் மூன்று உலகங்களிலும் சுற்றுபவர் ஆயிற்றே. உமக்கு தெரியாத இடங்களே கிடையாது.
பூலோகத்துக்கு வந்து விட போகிறேன். உம்மை கேட்காமல் யாரிடம் கேட்பது?
" என்றார்.

நாரதர், "பாற்கடலில் இருக்கும் இந்த திவ்ய ரூபத்துடன் இப்படியே பூலோகம் வர சங்கல்பித்து உள்ளீர்களா?" என்று ஆச்சரியம் பொங்க கேட்க,

மகாவிஷ்ணு, "நான் இங்கு பாற்கடலில் இருப்பதை போலவே பூலோகத்திற்கு வர போவதில்லை.
பூலோகத்திற்கு ஏற்ற, அர்ச்சா திருமேனியுடன் அவதாரம் செய்ய சங்கல்பித்து உள்ளேன்.

க்ஷீராப்தியில் என் வ்யூஹ அவதாரத்தை, ஞானியான ரிஷிகளும், ப்ரம்மா, ருத்ரன், தேவர்கள், கிண்ணரர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
அஞானிகள், பூலோகவாசிகள் இங்கு வந்து பார்க்க முடியாது.

'அஞானிகள் கூட என்னை பார்க்க வேண்டும்' என்பதால், அர்ச்சா திருமேனியுடன் பூலோகத்தில் அவதரிக்க உள்ளேன்" என்றார்.

இதை கேட்ட நாரதர் மேனி சிலிர்த்து எம்பெருமானின் கருணையை நினைத்து கண்ணீர் விட்டார்.

நாரதர் பேசலானார்,
"உங்கள் கிருபைக்கு எல்லையில்லை.
நீங்கள் மத்ஸ்ய, கூர்ம அவதாரங்கள் செய்த போதே, ஏன் இப்படி பெருமாள் தன்னை வருத்தி கொண்டு தானே அவதாரம் செய்கிறார்?
என்று கூட வருந்துவேன்.

இப்படி இருக்க, 'ஒரு விக்ரஹம் போல அர்ச்ச அவதாரம்  செய்து வருவேன்' என்று சொல்கிறீர்களே?

வைகுண்டத்தையும் விட்டு விட்டு, இந்த ஆனந்த ஸ்வரூபனான மஹாவிஷ்ணு ரூபத்தையும் விட்டு விட்டு, ஒரு அசேதனமான (அசையாத) கல் போன்று அவதாரம் செய்வேன் என்கிறீர்களே?"
என்று வருத்தப்பட்டார்.

உடனே பகவான்,
"நாரதா ! நான் கொஞ்சம் சைதன்யம் இருக்கும்படியாக வந்தால் கூட, எவ்வளவு தான் பொறுமையாக இருந்தாலும், சாஸ்திரத்தை மீறி என் முன்னே நடக்கும் அபசாரங்களை, மன்னிக்க முடியாமல் போய் விடும்.

நான் கொஞ்சம் சைதன்யம் தெரியும் படியாக வந்தாலும், உணர்ச்சி என்பது ஏற்படுமல்லவா?

எந்த அபசாரங்கள் செய்தாலும், 'அபசாரங்களுக்கு தண்டனை என்னும் உணர்ச்சி கூட என்னில் வெளிப்பட கூடாது' என்பதால்,  என்னை கல்லாக்கி கொண்டு பூலோகத்தில் அவதாரம் செய்வேன்.

'கருணை ஒன்றே' செய்ய வேண்டும்.
அபசாரங்கள் செய்தாலும், அதை பொருட்படுத்தாமல் இருக்க, அர்ச்சா திருமேனியே சிறந்தது.

அர்ச்சா திருமேனியாக இல்லாமல், நான் விபவ அவதாரமாகவே செய்தால், எல்லையில்லாமல் செய்யும் அபசாரங்களை பொறுத்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

விபவ அவதாரம் செய்து வந்தால், அபசாரத்தை கண்டு கொஞ்சமாவது கோபம் வந்து விடும்.

ஆதலால், நான் ஒரு சிலா மூர்த்தியாக என்னை ஆக்கிக்கொண்டு கலியில் அவதாரம் செய்வேன்.
அதற்காக சிலையாகவே இருந்து விடாமல், சிலை ரூபத்திலிருந்து கொண்டே அனைவரையும் பார்த்து, அணுகிரஹம் செய்து கொண்டே இருக்க போகிறேன்.

நான் பார்க்க கல் போல அவதாரம் செய்தாலும், அளவு கடந்த கருணையை வழங்குவேன்.

கல் போல நான் அவதாரம் செய்வதற்கு காரணமே, ஜனங்களின் அபசாரங்களை சகித்து கொள்ளத் தான்.

என் மீதோ, என் எதிரோ எத்தனை அபசாரங்கள் நடந்தாலும், அதை பொருட்படுத்தாமல் கருணை செய்ய, துளிகூட உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதாலேயே, நான் அர்ச்ச அவதாரம் செய்ய சங்கல்பித்தேன்.

அர்ச்ச அவதாரமாக இருந்தும் அளவு கடந்த கருணையை பொழிவேன்."
என்று பகவான் சொல்ல,

"பூலோகத்தில், 'சுவர்ணமுகி' என்ற நதிக்கரை ஓரம், கிழக்கு பாரத கடலுக்கு அருகே மேற்கு பாகத்தில் உள்ள பிரதேசம் ஏற்ற இடமாக உங்கள் திருவிளையாடலுக்கு இருக்கும்."
என்று பகவான் அவதாரத்துக்கு ஏற்ற இடத்தை நாரதர் சொன்னார்.

பெருமாள் அவதரிக்க இப்படி இடத்தை சொன்னதை கேட்ட ஆதிசேஷன், "தனக்கு ஏதாவது இதில் கைங்கர்யம் உண்டா?"
என்று எதிர்பார்க்க,
பகவான் தான் படுத்திருக்கும் ஆதிசேஷனை பார்த்து,
"எல்லா விதத்திலும் எனக்கு ஆட்பட்டவன் நீ.
நீ முதலாக பூலோகத்துக்கு சென்று, அங்கு பர்வதமாக (மலையாக) இரு. நான் அங்கு வந்து திருவிளையாடல் செய்கிறேன்.
"
என்று ஆதிசேஷனை பூலோகத்திற்கு அனுப்பினார் பகவான்.

ஒரு பாம்பு நெளிந்து நெளிந்து, பார்ப்பதற்கு மேடு பள்ளம் போல தோன்றுவது போல, ஒரு மலையாக தோன்றிய ஆதிசேஷன், நெளிந்து நெளிந்து ஏழு மலைகளாக ஆகி, சேஷாத்ரி (ஆதிசேஷன் மலை) என்ற பெயருடன், எம்பெருமான் அவதார காலத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

சர்வ விதமான கைங்கர்யத்தையும் செய்பவர் என்பதாலேயே இவருக்கு 'ஆதிசேஷன்' என்று பெயர்.

'தான் ஸ்வாமி இல்லை, தான் எம்பெருமானின் சொத்து'
என்று இருப்பதால் இவருக்கு "சேஷன்" என்று பெயர்.

இவரே எம்பெருமானின் முதன்மையான சொத்தாக இருப்பதால், இவரை "ஆதிசேஷன்" என்கிறோம்.

ஆதிசேஷன் எம்பெருமானுக்கு எப்படி எல்லாம் சேவை செய்கிறார்? என்று பார்க்கும் போது, ஆதிசேஷனின் பெருமை நமக்கு புரியும்.

"ஸ்ரீவைகுண்டத்தில்" எம்பெருமான் பரவாசுதேவனாக இருந்தால், இவர் அமர்வதற்கு தானே 'சிம்மாசனம்' ஆகி விடுகிறார்.

"பாற்கடலில்" எம்பெருமான் வ்யூஹ அவதாரம் செய்து மகாவிஷ்ணுவாக இருந்தால், இவர் படுத்தால், தானே 'பஞ்சுபடுக்கை' ஆகி விடுகிறார்.

எம்பெருமான் நடந்து சென்றால், தானே அவருக்கு 'குடையாகி' விடுகிறார்.
(கிருஷ்ண அவதாரம் செய்த போது யமுனையை கடக்கும் போது குடையானார்)

எம்பெருமான் நின்றால், தானே அவர் திருவடிக்கு 'பாதுகை' ஆகி விடுகிறார்.
(ஸ்ரீனிவாசனாக பெருமாள் நிற்க  சேஷாத்திரி (திருமலை) ஆனார்)

இப்படி

  • சர்வ தேச (எந்த இடத்திலும்),
  • சர்வ கால (எந்த சமயத்திலும்),
  • சர்வ அவஸ்தைகளிலும் (எந்த நிலையிலும்)

எம்பெருமானுக்கு சர்வ கைங்கர்யமும் (எந்த சேவையும்) செய்யக்கூடியவர் ஆதிசேஷன்.

எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள், ஆதிசேஷனை போல ஆசையோடு செய்ய வேண்டும்.

ஏழுமலைகளாக 'முதல் யுக'த்திலேயே தோன்றிவிட்ட ஆதிசேஷன், "சேஷாத்ரி" என்ற பெயருடன் எம்பெருமான் அவதாரத்திற்கு கலியுகம் வரை காத்து கொண்டிருந்தார்.

ஆதிசேஷன் "சேஷாத்ரி" என்ற 7 மலையாக ஆகி இருந்தார். 

காலப்போக்கில் ஒவ்வொரு மலைக்கும் தனி பெயர் ஏற்பட்டது. 

1. சேஷாத்ரி (உண்மையான பெயர்)

2. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்ற மலை)

3. சிம்மாத்ரி (நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த இடம்)

4. அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த மலை)

5. கருடாத்ரி (அம்ருத கலசம் கருடன் கொண்டு வந்த போது, அமர்ந்த மலை)

6. வெங்கடாத்ரி (பாவங்களை பொசுக்கும் மலை, வெங்கடேச பெருமாள் இருக்கும் மலை)

7. நாராயணாத்ரி (நாராயண பட்டருக்கு வைகானச முறைப்படி பூஜை செய் என்று உபதேசத்த மலை)

"அத்ரி" என்றால் மலை என்று அர்த்தம்.

ஆதிசேஷன் எத்தனை நீளமாக படுத்தார்? திருமலையின் நீளம் என்ன?

 

ஆதிசேஷனின் தலை (சிரசு) ஆரம்பிக்கும் இடத்தில், 'காளஹஸ்தி' என்ற க்ஷேத்ரம் உள்ளது.

ஆதிசேஷனின் இதய பகுதியில் அமைந்த க்ஷேத்ரமே "அஹோபிலம்".

ஸ்ரீசைலம் என்ற இடத்தில் ஆதிசேஷனின் வால் பகுதி முடிகிறது

அந்த பாம்பின் வளைந்து இருக்கும் தலையின் உச்சத்தில் ஆதிசேஷன் தரித்து இருந்த நாக ரத்தினத்தின் உச்சத்தில், வெங்கடேசபெருமாள் தன்னை வெளிக்காட்டி, அந்த சிரசையே "வெங்கடாத்ரி" என்ற ஒரு மலையாக ஏற்று வீற்றிருக்கிறார். 

காளஹஸ்தி ஆரம்பித்து, ஸ்ரீசைலம் வரை ஆதிசேஷன் படுத்தார் என்றால், ஏழு மலைகளின் நீளம் நமக்கு புரியும்.

பூலோகத்திற்கு கொண்டு வந்து விட்டார் ஆதிசேஷன்.

இப்படி அதி ஆச்சர்யமாக எம்பெருமான் வருவதற்காக படுத்து விட்டார் ஆதிசேஷன்.

இதை பார்த்த கங்கை, இந்த திருமலைக்கு ஒரு வெள்ளை கொடி பறக்க விடுவது போல, ஆகாச கங்கையாக பொழிய ஆரம்பித்தாள்.

கங்கையே வந்தவுடன், ஏழு மலையையும் சூழ்ந்து கொண்டு அனைத்து புனிதமான தீர்த்தங்களும் ஆங்காங்கே உருவானது.

மலையே செழிப்பு நிறைந்து, பூக்களும், மரங்களும் நிறைந்த பசுமையான சோலை ஆனது. திருமலையே, எம்பெருமானை வரவேற்க காத்திருந்தது.

மலையாக பார்க்காமல், ஆதிசேஷனாக பார்க்கும் போது தான், பக்தன் எப்படி எல்லாம் கைங்கர்யம் செய்கிறான்? என்பது புரியும்.

காற்றில் மரங்கள் யாவும் அசைவதை பார்த்தால், ஆதிசேஷனின் ஆயிரம் தலைகள் அசைவது போல தோன்றுமாம் பக்தனுக்கு.

ஏழு மலையையும்,  வெண்மையான மேகங்கள் சூழ்ந்து வருவதை பார்த்தால், க்ஷீராப்தியில் இருந்த பாற்கடல், 'ஆதிசேஷனும் கிளம்பி விட்டார், எம்பெருமானும் கிளம்பி விட்டார், இனி வைகுண்டத்தில் எனக்கு என்ன வேலை?'
என்று திருமலைக்கு வந்து விட்டதோ! என்று தோன்றுமாம் பக்தனுக்கு.

'வைகுண்டத்தில் இருந்து ஆதிஷேஷனே திருமலையாக வந்து விட்டார்' என்று உணர்ந்த ரிஷிகள், தங்கள் ஆஸ்ரமங்களை கலைத்து விட்டு, திருமலை வந்து பகவத் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

மயில்களும், குயில்களும் ஆனந்தமாக கானம் செய்து விளையாடியது.




காள என்றால் சிலந்தி,
ஹஸ்தி என்றால் யானை.
இந்த ஸ்தலத்தில் யானையும், சிலந்தியும் சிவ பூஜை செய்த காரணத்தால், இந்த இடத்திற்கு பிற்காலத்தில் "காளஹஸ்தி" என்ற பெயர் உண்டானது.
காளஹஸ்தி 'சிவ' ஸ்தலமாகவும் உள்ளது.

ஸ்ரீசைலம் என்பதும் மற்றொரு சிவக்ஷேத்ரம். இந்த சிவக்ஷேத்ரத்தில், மருத மரமாக (அர்ஜுன மரம்) சிவபெருமானே இருக்கிறார். 
பார்வதி தேவி இங்கு மல்லிகை கொடியாக ஆகி, அந்த மருத மரத்தை சுற்றிக்கொண்டு இருக்கிறாள்.
இதனால் இங்கு சிவபெருமானுக்கு "மல்லிகார்ஜூன்" என்றும் பெயர்.

இயற்கையாக தோன்றிய மலை அல்ல திருமலை.  ஆதிசேஷனே மலையாக இருக்கிறார். 

இங்கு வசிக்கும் மிருகமும், மனிதர்களும், பறவைகளும் என்ன பிரார்த்தனை செய்து இப்படி திருமலையில் வாசம் செய்கிறார்களோ? நமக்கு தெரியாது.

மகான்கள், ஆழ்வார்கள் எல்லோரும் இந்த கண்ணோட்டத்தில் தானே திருமலையை பார்த்தனர். பார்க்கின்றனர்.

ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் 'அனந்தாழ்வார்' திருமலையில் பூ கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.
ஒரு சமயம், அனந்தாழ்வார் தன் சிஷ்யர்களுடன் 'மேல் நாட்டு திவ்ய தேசங்கள் ஆரம்பித்து, அனந்த பத்மநாபன் வரை சேவிக்கலாம்' என்று புறப்பட்டார்.

'பயணத்திற்கு, திருமலை பிரசாதமே எடுத்துக்கொள்ளலாம்!' என்று ஒரு மூட்டையில் பிரசாதம் எடுத்துக்கொண்டு, கிளம்பினார்கள்.

கிளம்பி வெகுதூரம் சென்ற பின், 'சரி சாப்பிடலாம்' என்று நினைத்து, பிரசாத மூட்டையை அவிழ்க்க, அதில் எறும்புகள் இருப்பதை பார்த்தார், அனந்தாழ்வார்.

அவர் சிஷ்யர்கள்,
"எறும்பை தட்டி விட்டு சாப்பிடலாமா? இல்லை அப்படியே பிரசாதத்தை வைத்து விட்டு பயணத்தை தொடரலாமா?"
என்று கேட்க,
அனந்தாழ்வார்,
"இந்த எறும்புகள் எல்லாம் திருமலையில் இருந்தே வந்திருக்கிறது.
'எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ?' (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் செய்த பிரார்த்தனை, இந்த எறும்புக்கு கிடைத்துள்ளதே!

இது நாள் வரை, திவ்யதேச வாசம் செய்த எறும்புகளை, இப்படி ஏதோ ஒரு கிராமத்தில் விட்டு விட கூடாது.
இவையெல்லாம் எந்த ஜீவனோ நமக்கு தெரியாது.

திருமலை வாசம் பெற்ற இந்த ஜீவனை, நாம் மீண்டும் திருமலை சென்று, அங்கேயே இந்த பிரசாதத்தை வைத்து விட்டு நம் பயணத்தை மீண்டும் தொடர்வோம்"
என்று சொல்லி அவர்கள் யாத்திரையை நிறுத்து விட்டு, மீண்டும் திருமலையில் ஏறி, அந்த எறும்புகளை பிரசாத மூட்டையுடன், மீண்டும் ஸ்வாமி புஸ்கரணி தீர்த்தம் அருகே,  திருமலையிலேயே விட்டு விட்டு, மீண்டும் யாத்திரையை தொடர்ந்தனர்.

நம் பூர்வ ஆச்சாரியர்கள் எப்படி திருமலையை பக்தியுடன் பார்த்தனர்? அங்குள்ள ஜீவராசிகளை எப்படி மதித்து உள்ளனர்? என்று புரிகிறதே.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.

ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.
அந்த பக்தி நமக்கும் வரும்.

ஆதிசேஷனே ஏழு மலையாக இருக்கும் போது,
பரவாசுதேவனே திருமலையப்பனாக நின்று கொண்டு இருக்கும் போது,
இங்கு வசிக்கும் விலங்குகளும், பறவைகளும் மட்டும் சாதாரணம் என்று நினைக்க தோன்றுமா? ஒரு பக்தனுக்கு.

ஆழ்வார்கள் போன்று நமக்கும் பக்தி வர ஆசைப்பட வேண்டும்.

"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ?" (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் பாடும் பொழுது,
இங்கு இருக்கும் செடி, கொடிகளுக்கு கூட மங்களாசாசனம் செய்து விட்டாரே! என்று தோன்றுகிறது.

இங்கு இருக்கும் ஈ, எறும்பு கூட, எந்த மகானோ! என்றல்லவா நமக்கு தோன்ற வேண்டும்.

ஆயிரம் நாக்கு உடைய ஆதிஷேஷனே திருமலையின் மகத்துவத்தை சொல்ல முடியாத போது, 18 புராணங்களும் திருமலையின் மகத்துவத்தை சொல்வது ஆச்சர்யமில்லையே.

ஆதிஷேஷனே, கலியில் ஸ்ரீ ராமானுஜராக 1017CEல் அவதாரம் செய்தார்.

ஒரு சமயம், யதிராஜனாக (சந்நியாசி) ஆன பின்பு, திருமலையில் ஒரு மாதம் தங்கி, அவர் பூர்வ க்ருஹத்தில் மாமாவான "திருமலை நம்பி"யிடம் ராமாயண காலட்சேபம் கேட்கலாம் என்ற ஆசையோடு திருமலை வந்தார்.

"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ"
என்ற ஆழ்வார் பாசுரத்தை எண்ணி,
'திருமலையில் எப்படி கால் வைத்து போவேன்?'
என்று தயங்கி, தன் இரு கால்களையும் மடக்கி, வாழைத்தண்டால் இருக்க கட்டி கொண்டு, தன் முழங்காலால் நடக்க ஆரம்பித்தார்.

'ஸ்ரீ ராமானுஜர் முழங்கால் தேய திருமலை ஏறிக்கொண்டு இருக்கிறார்' என்று கேள்விப்பட்ட திருமலை நம்பி, கீழே இறங்கி ஓடி வந்தார்.

 

 அதற்குள் ராமானுஜர் முதல் கோபுரம் வரை வந்து விட்டார்.

பூர்வ ஆஸ்ரமித்தில் தன் மருமகன் தான் 'ராமானுஜர்' என்றாலும், யதிராஜராக ஆகி விட்ட ராமானுஜரை சேவித்துக்கொண்டே,
"ஏன் இப்படி வர வேண்டும்?" என்று கேட்க,
"தங்களை சேவிக்கலாம் என்று தான் வந்து கொண்டிருந்தேன்"
என்றார் ராமானுஜர்.

"யதிராஜர் இப்படி முட்டுக்கால் தேய வந்தால் இது சாத்தியமா?
சாதாரணமாக காலால் நடந்து வந்து பெருமாளை திருமலை ஏறி வந்து தரிசிப்பதே ஜனங்களுக்கு கடினமாக இருக்கும் போது, தாங்கள் ஆதிசேஷனாக இருக்கும் திருமலை மேல், கால் படக்கூடாது என்று இப்படி கால்களை கட்டிக்கொண்டு, ஏறி வந்தால், யதிராஜரே கால் வைக்க தயங்கினார் என்று தெரிந்தால், ஒருத்தர் கூட திருமலை வந்து எம்பெருமானை தரிசிக்க மாட்டார்களே!!

நீங்கள் திருமலையில் கால் வைத்து நடப்பது தோஷமில்லை.
ஒரு தாயார் தன் மடி மீது குழந்தை வைத்து கொள்ளும் போது, சில சமயம் தன் சின்ன காலால், தாயை உதைத்தாலும், அது அவளுக்கு ஏற்பு உடையதாக இருக்கும்.
அதை அவள் அபசாரம் என்று நினைப்பதில்லை.
அதுபோல,
திருமலையில் கால் வைத்து ஏறினாலும், அது பெருமானுக்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர அபசாரமாக இருக்காது.
கால் வைத்து வாருங்கள் என்று சொல்ல தான் ஓடிவந்தேன்"

என்றார் திருமலை நம்பி.

"இதை சொல்வதற்கு யாராவது சிறுவனை அனுப்பி இருக்க கூடாதோ.
நான் ஏற்று இருப்பேனே. இதற்கு தேவரீர் தானே புறப்பட்டு வர வேண்டுமா?"

என்று ராமானுஜர் கேட்க,

"திருமலை முழுவதும் தேடி பார்த்து விட்டேன். அடியேனை தவிர சிறுவன் இங்கு கிடைக்கவில்லை.
யாரை பார்த்தாலும் என்னை விட பெரியவராகவே தெரிகிறது.
இவர் என்ன பாக்கியம் செய்து திருமலையில் வாசம் செய்கிறாரோ என்று மனதில் தோன்றுகிறது.
இங்கு பிறந்த ஈ, எறும்பு கூட என்ன பாக்கியம் செய்ததோ என்று தான் தோன்றுகிறது.
யாரை பார்த்தாலும் பெரியவாளாக தோன்றுகிறது."

என்றார்.

ராமானுஜர் பிறகு, திருமலை ஏறி, பெருமானை தரிசித்தார்.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா, ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.

ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.

இப்படி ஆச்சர்யமாக ஆதிஷேஷனே ஏழு மலைகளாக ஆகி, எம்பெருமான் வரவுக்காக காத்திருந்தார்.

கலியுகம் ஆரம்பித்த சமயத்தில், பூலோகத்தில் எல்லாம் தயார் நிலையில் இருக்க, க்ஷீராப்தியில் இருக்கும் பரமபத நாதன், திருமலைக்கு புறப்பட தயாரானார்.



Monday 3 February 2020

பாசுரம் (அர்த்தம்) - எம்மனா! என் குல தெய்வமே! என்னுடைய நாயகனே! - பெரியாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பாசுரம் (அர்த்தம்) : திருப்பதி பெருமாள்

எம்மனா!!
என் குல தெய்வமே!!
என்னுடைய நாயகனே!!
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
-- திருமொழி (பெரியாழ்வார்)




பெரியாழ்வார், திருமலையில் உள்ள ஸ்ரீனிவாசபெருமாளை 3 அழகான பெயர்கள் சொல்லி கூப்பிடுகிறார்...
முதலில்,
  • "எம்மனா!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு,
  • "என் குலதெய்வமே!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு
  • "என்னுடைய நாயகனே!!" என்று உரிமையுடன் கூப்பிடுகிறார்.

இந்த 3 நாமங்களின் உள் அர்த்தம் தெரியாமல் போனாலும், இந்த சொற்களே இனிக்கிறது...

அர்த்தம் தெரிந்து கொண்டால், தினமும் இந்த 3 நாமத்தை திரும்ப திரும்ப சொல்ல ஆசை வந்து விடும் நமக்கு.
'பெரியவாச்சான் பிள்ளை (உபேயம், உபாயம், பர தெய்வமாக),
ஆளவந்தார் (ஞான விரோதி, ஆஸ்ரய விரோதி, மோக்ஷ விரோதி), 
உடையவர் ஸ்ரீராமானுஜர் (தேக அபிமானம் கழிந்து, அன்ய ஷேசத்துவம் கழிந்து, ஸ்வஸ் ஸ்தாதந்திரியமும் கழிந்து)
போன்ற ஆச்சார்யர்கள் 'இந்த மூன்று சொற்களின் (எம்மனா, என் குலதெய்வமே, என்னுடைய நாயகனே) அர்த்தத்தை பலவாறு ரசிக்கிறார்கள்' என்றும் பார்க்கிறோம்.

மரணத்தை ஒருவன் பார்த்தாலேயே "உடல் வேறு ஆத்மா வேறு" என்ற ஞானம் (அறிவு) கொஞ்சம் பகுத்தறிவு உள்ளவனுக்கும் வந்து விடும்.
ஆதலால்,
"உடல் வேறு ஆத்மா வேறு" என்று நினைப்பது மட்டுமே உண்மையான ஞானம் என்று நினைக்கக்கூடாது.. அது மட்டுமே ஞானம் இல்லை.

"நான் ஜீவன் (ஆத்மா)! நான் பகவானுடைய தாஸன்!"
என்று நினைப்பதே 'உண்மையான ஞானம்' என்கிறார்கள் நம் ஆச்சார்யர்கள்.

"உடல் நானில்லை, ஜீவனே நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள்" என்று பகவானை விலக்கி விட்டு,
"தான் ஆத்மா, தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொள்வதே உண்மையான ஞானத்துக்கு விரோதம் தான்.
இப்படி நினைப்பதே "ஞான விரோதம்" என்கிறார்கள் நம் ஆச்சாரியர்கள். (அத்வைதம்)

(அத்வைதம் என்ன சொல்கிறது? விஷிஸ்டாத்வைதம் என்ன சொல்கிறது?) மேலும் அறிய இங்கே படிக்கவும்.

"எம்மனா" (எம்பெருமான்) என்ற சொல்லுக்கு
"உடல் நானில்லை, ஜீவனே (ஆத்மா) நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள் இல்லை. நான் சுதந்திரமானவன் இல்லை. நான் பகவானின் தாஸன்"
என்று அர்த்தம் காட்டுகிறார்கள், நம் ஆச்சாரியர்கள். (விசேஷ அத்வைதம்)

ஆதலால்,
"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல்லும் போதே,
நமக்கு "ஞான விரோதமான அத்வைத புத்தி ஒழிந்து விடும்" என்கிறார்.




அது போல,
"என் குலதெய்வமே" என்று சொல்லும்போதே,
நமக்கு "ஆஸ்ரய விரோதமான புத்தி ஒழிந்து விடும். பெருமாளை ஆஸ்ரயிக்க வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.
அது போல,
"என்னுடைய நாயகனே" என்று சொல்லும்போதே,
நமக்கு "மோக்ஷ விரோதமான புத்தி ஒழிந்து விடும். வெறும் சுதந்திரம் (விடுதலை) மட்டும் பெறாமல், வைகுண்டம் (வீடு) என்ற நம் சொந்த வீட்டுக்கு (மோக்ஷம்) போக வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.




மேலும்
நாம் இந்த பிறவியில் அடைய வேண்டியது (உபேயம்) எது?
(What should we achieve?)
என்ற கேள்விக்கு,

"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல் மூலம்,
"நாம் அடைய வேண்டியவர் (உபேயம்), நம்முடைய பகவான் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார், பெரியாழ்வார்.
"எம்மனா" என்ற சொல்லுக்கு "நான் அவருடையவன். அவருடைய சொத்து" என்று பொருள்.

நாம் அடைய வேண்டியது ("உபேயம்") யார் என்று தெரிந்து விட்டது.சரி...
ஆனால்,
பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்) என்ன?
என்ற அடுத்த கேள்விக்கு,

"என் குலதெய்வமே" என்ற சொல் மூலம்,
"நாம் பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்), அவரையே நம் குல தெய்வமாக கொள்வது தான்"
என்ற தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

"பெருமாளை குலதெய்வமாக நீ ஆக்கிக்கொண்டால், 
நீ மட்டுமல்ல, உன் பரம்பரையில் பிறந்த அனைவருமே, 
அவர்கள் பிறவியில் அடைய வேண்டியதான (உபேயம்) பெருமாளை அடைந்து விடுவார்கள்"
என்கிறார் பெரியாழ்வார்.
"குலதெய்வமாக வெங்கடேசபெருமாளே அமைந்தவர்களுக்கு, வைகுண்டம் போகும் வழியையும் காட்டி, அடையும் லட்சியமாகவும் பெருமாளே இருந்து, மோக்ஷம் வரை துணையாகவே இருக்கிறார்" என்கிறார் பெரியாழ்வார்.

"யாருக்கு குலதெய்வமாக வெங்கடேசபெருமாள் அமைந்தாரோ!, அவர்களே பாக்கியவான்" என்கிறார் பெரியாழ்வார்.
மஹாபாரதத்தில் திரௌபதி "கோவிந்தா..." என்று தன் குலதெய்வமாக பெருமாளை வரித்து கொண்டதற்காக, அவளுடைய பேரன் பரிக்ஷித் கர்ப்பத்திலேயே அழிய வேண்டும் என்று அஸ்வத்தாமன் நினைத்தும், திரௌபதி என்ற பக்தைக்காக அவள் குலத்தை அழிய விடாமல் ரக்ஷித்தார் பெருமாள்.

குலதெய்வமாக இருந்து, நாமும் நம் பரம்பரையும், மோக்ஷம் போகும் வரை, நம் கூட இருந்தே ரக்ஷிக்கிறார்.

"என்னுடைய நாயகனே" என்ற சொல் மூலம், "பரதெய்வம் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

உலகத்தில்,
சிலருக்கு இஷ்ட தெய்வமாக (உபேயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார்.
அவர்கள் பெருமாளை "எம்மனா" (எம்பெருமான்) என்கிறார்கள்.

இன்னும் சிலருக்கு குல தெய்வமாக (உபாயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். 
அவர்கள் பெருமாளை "என் குல தெய்வமே" என்கிறார்கள்.

சிலருக்கு பர தெய்வமாக "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். அவர்கள் பெருமாளை  "என்னுடைய நாயகனே" என்கிறார்கள்.

"தனக்கோ உபேயமாகவும் (இஷ்டதெய்வம்), உபாயமாகவும் (குலதெய்வம்), பரதெய்வமாகவும், 
மூன்று சம்பந்தத்துடன் பெருமாள் இருக்கிறாரே!"
என்ற பெருமிதமடைந்து பாடுகிறார் பெரியாழ்வார்,




பரதெய்வமாக இருக்கும் நாராயணனே, தனக்கு குலதெய்வமாகவும் இருக்கிறார். தனக்கு இஷ்டதெய்வமாகவும் இருக்கிறார்.
பெருமாள், 
என்னையும், என் பரம்பரையையும் ரக்ஷிக்கிறார் என்கிற போது,
என்னை பற்றியும் எனக்கு கவலையில்லாமல்
என் குடும்பத்தை பற்றியும் கவலையில்லாமல்
என்னை உங்கள் திருவடியை ஆச்ரயித்து கொண்டு இருக்குமாறு செய்து கொண்டு, நீங்கள் என்னை சுகமாக வைத்துக்கொண்டு, ரக்ஷிக்கிறீர்களே !!
உம்மிடத்தில் எனக்கு பரிபூரணமான ப்ரேமை உண்டாகும் படி செய்து, எப்பொழுதும் உங்கள் தொண்டுக்காகவே என்னை ஆக்கி,
என்னை வெளி உலக காரியங்களில் இங்கும் அங்கும் போக விடாமல் தடுத்து,
நீங்கள் என்னை பரிபாலிக்கும் அழகும்,
உங்கள் கருணைக்கு பாத்திரமாக இருக்கும் என் நிலையும்,
எனக்கு கிடைத்த நன்மையை (பாக்கியத்தை) போல, இவ்வுலகினில் யார் பெறுவார்? 
என்று என்கிறார் பெரியாழ்வார்.
அதையே,
நின்னுள் உள்ளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
என்று பெருமிதம் அடைகிறார்.

நாமும் வெங்கடேச பெருமாளை, பரதெய்வமாகவும், குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் கொள்வோம்.
சர்வ மங்களத்தையும் திருப்பதி பெருமாளே, நமக்கும் நம் பரம்பரைக்கும் அருள்வார். 


குருவே துணை !



Wednesday 22 February 2017

திருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்? திருமலையில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்த அனந்தாழ்வார்


அனந்தாழ்வார்
பகவானை ஆராதிப்பதற்காக தான், உலகத்தில் உள்ள அனைத்துமே படைக்கப்பட்டது.
பரவாசுதேவன், முதலில் ப்ரம்மாவை படைத்தார்.
வேதத்தை உபதேசித்தார்.
பரவாசுதேவன், ப்ரம்மாவை பார்த்து,

  • பழத்தை ஸ்ருஷ்டி செய் !
  • புஷ்பங்களை ஸ்ருஷ்டி செய் !
  • பசு மாட்டை ஸ்ருஷ்டி செய்து, பால் ஸ்ருஷ்டி செய் !
  • இப்படி இப்படி ஸ்ருஷ்டி செய் !

என்று சொல்ல, ப்ரம்மா இவை அனைத்தையும் படைத்து இருக்கிறார்.


இவையெல்லாம் எதற்கு படைக்க சொன்னார் பகவான்?

  • உடனே பால் காய்ச்சி, காபி போட்டு நாம் சாப்பிடுவதற்காகவா? இல்லை.
  • பூவை பறித்து மனைவி தலையில் வைப்பதற்காகவா? இல்லை.

பின் எதற்காக பிரம்மாவை படைக்க சொன்னார்?

வாங்கிய பாலில், ஒரு துளியாவது எடுத்து, சாளகிராமத்தில் விடுகிறானா? என்று நம்மை பார்க்கிறார்.
சம்சார கடலில் இருந்து மீட்டு, மோக்ஷம் கொடுப்பதற்காக பகவான் நம்மிடம் சிறு பக்தியையாவது, நன்றியை எதிர்பார்க்கிறார்.
தான் குடிக்கும் பசும்பாலை, ஸ்ருஷ்டி செய்த பகவானுக்கு, நன்றி உணர்வுடன் தன் வீட்டில் உள்ள பெருமாளுக்கு காட்டி விட்டாவது குடிக்கிறானா?
அருகில் உள்ள கோவிலில் உள்ள பெருமாளுக்கு கொடுக்கிறானா?
என்று பார்க்கிறார் பகவான்.
பூக்கும் பூவில் கொஞ்சம் தொடுத்து, பகவானுக்கு போட்டு, தன் நன்றியை காட்டுகிறானா?
என்று பார்க்கிறார் பகவான்.
எம்பெருமானுக்கு பூவும், பழமும் அர்ப்பணம் செய்வதை விடுத்து, வேறு யாருக்கு செய்யத்தகும்?
என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் சொல்கிறார்.
"தேவும் எப்பொருளும் படைக்க,
பூவில் நான்முகனைப்படைத்த,
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்,
பூவும் பூசனையும் தகுமே?" 
என்கிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாளை மகளாக பெற்ற பெரியாழ்வார், தன் நிலத்தில் எல்லாம் பூந்தோட்டம் அமைத்து, பூக்கள் அனைத்தையும் பெருமாளுக்கு கொடுப்பதற்கே என்று வாழ்ந்து காட்டினாரே.
ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர் (1017 AD -1137 AD) ஸ்ரீரங்கத்தில் ப்ரவசனம் செய்து கொண்டு இருந்தார்.
சிஷ்யர்கள் எல்லோரும் பக்தி ஸ்ரத்தையுடன் கேட்டு கொண்டு இருந்தனர்.
அப்பொழுது, நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில்,

"எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து,
அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே"
என்ற இந்த பாசுரத்தை சொல்லும் கட்டம் வந்தது.

இதை சொல்லும் போது, தொண்டை தழுதழுத்து கண்களில் கண்ணீர் வழிந்தது உடையவர் ராமானுஜருக்கு.

பக்தி ஸ்ரத்தை உடைய சிஷ்யர்கள், ஆச்சார்யான் முகத்தை ஒவ்வொரு அசைவையும் அப்படி கவனிப்பார்களாம்.

எந்த கட்டத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்தது? என்று கண்டுபிடித்து விட்டார்களாம்.

"எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"நம் குல தெய்வம் என்று நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்."

"முந்தை, வானவர் வானவர் கோனொடும்"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"தேவர்களுக்கும் தேவன், தேவாதிதேவன் என்று எம்பெருமானின் பரத்துவத்தை, பெருமையை நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்.
"திருவேங்கடத்து"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"திருமலை திவ்ய தேசமாயிற்றே !  என்று நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்.

"அந்தமில் புகழ்"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"எம்பெருமான் புகழை நினைத்து நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்.


"கார் எழில் அண்ணலே"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"எம்பெருமானின் அழகை, சௌந்தர்யத்தை நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்.

இப்படி இருக்க, இந்த சின்ன பாசுரத்தில் எந்த இடத்தில் உடையவருக்கு கண்ணீர் வந்தது என்று கண்டுபிடித்து விட்டார்களாம் அவரது சிஷ்யர்கள்.

"சிந்து பூ மகிழும்" என்று சொல்லுமிடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்ததாம்.

"பூக்கள் அதிகமாக சிந்தி வீணாகி கிடக்கிறது திருமலையில்" என்று சொல்லும் போது கண்ணீர் விட்டார் ராமானுஜர்.

ப்ரவசனம் முடிந்த பிறகு, தனித்து ராமானுஜர் அருகில் வந்து,
"தேவரீர், திருவுள்ளத்தில் என்ன கலக்கம்?"
என்று கேட்டார்கள் சிஷ்யர்கள்.

ஸ்ரீ ராமானுஜர்,
"வண்டுகள், மான்கள் விளையாடும் சோலையாக உள்ளது ஸ்ரீரங்கம்.
இங்கு இடமும் செழிப்பாக உள்ளது.
சீதோசன நிலையும் அளவாக உள்ளது.
இப்படி ஒரு சூழ்நிலையில், ஸ்ரீ ரங்கநாதருக்கு சேவை செய்ய எளிதாக ஆள் கிடைப்பார்கள்.
திருமலையில் பூக்கும் பூக்களை தொடுத்து, வெங்கடேச பெருமாளுக்கு ஒரு பூமாலை கட்டி தினமும் கைங்கர்யம் செய்ய ஒருவர் கூட இல்லையே !! என்று நினைத்த பொழுது கண் கலங்கியது" என்றார்.

ஆச்சார்யன் சிறு தாபம் கூட அடைய விட மாட்டார்களாம் உத்தம சிஷ்யர்கள்.

குருநாதரின் மனதில் இருந்த இந்த துக்கத்தை நீக்க, திரு அநந்தான் என்ற சிஷ்யர் உடனே எழுந்து ராமானுஜரை சேவித்தார்.
"அடியேன், அந்த கைங்கர்யத்தை செய்கிறேன்"
என்று புறப்பட தயாரானார்.

இன்றைய காலத்திலேயே திருமலை செல்வது கொஞ்சம் கடினம்.
சுமார் 1050CEல் திருப்பதி செல்வது என்பது மகா கடினம்.

"ராமானுஜர் மனதில் தாபப்பட்டார் என்பதற்காக, ஸ்ரீரங்கத்தில் உள்ள தங்கள் வீடு, மனைவி, மக்கள் என்று எல்லோரையும் விட்டு விட்டு, திருப்பதி செல்ல முடியுமா?
அவ்வளவு எளிதில் செல்ல முடியுமா?"
என்றெல்லாம் நினைத்து, அவரது மற்ற சிஷ்யர்கள் கைங்கர்யம் செய்ய தயாராக இல்லையோ? என்று நாம் நினைத்து விட கூடாது.

ராமானுஜர் அடியார்களில் ஒருவர் கூட இப்படி நினைக்க மாட்டார்கள்.
பின்பு ஏன், "நானும் செல்கிறேன்" என்று மற்ற சிஷ்யர்கள் புறப்படவில்லை?

மற்ற சிஷ்யர்களுக்கு
"திருவேங்கடமுடையான் முக்கியமா?
ராமானுஜர் முக்கியமா? என்ற கேள்வி எழ,
திருப்பதி சென்றால், ராமானுஜரை விட்டு பிரிய வேண்டுமே !!"
என்று தாபபட்டு நின்று கொண்டிருந்தனர்.

அப்படியென்றால், அனந்தாழ்வார், ராமானுஜரை விட  திருவேங்கடமுடையான் தான் முக்கியம், என்று நினைத்து விட்டாரோ?

அனந்தாழ்வார் ராமானுஜர் மேல் அளவு கடந்த பக்தி உள்ளவர்.

தன் குருநாதனுக்கு அப்படி ஒரு கலக்கம் இருந்தால், அதை நிறைவேற்றாத ஒரு சிஷ்யன் இருந்து என்ன பயன்? என்று நினைப்பவர் அநந்தாழ்வார்.
ஸ்ரீ ராமரை விட்டு பிரிய முடியாமல், கூடவே இருந்து கைங்கரியம் செய்தார் லக்ஷ்மணன்.
மற்ற சிஷ்யர்கள், ராமானுஜரை விட்டு பிரிய முடியாமல், லக்ஷ்மணனை போல இருந்தனர்.
அனந்தாழ்வாரோ, பரதனை போல, இருந்தார்.
ராமானுஜருக்கு எது மகிழ்ச்சி தருமோ? அதை செய்து முடிப்பது முக்கியம் என்று இருந்தார்.

"ராமானுஜருக்கு பூ கைங்கர்யம் திருமலையில் செய்து மாலை கட்டி பெருமாளுக்கு போட ஆள் இல்லையே என்ற தாபம் ராமானுஜருக்கு இருக்குமானால், அந்த தாபம் நீங்கி அவரது மனது சந்தோஷப்பட வைப்பதே நம் லட்சியம்"
என்று புறப்பட்ட தயாரானார்.

சந்தோஷமாக ஸ்ரீராமானுஜரின் அனுமதி பெற்று, வாகன வசதிகள் இல்லாத அந்த காலத்தில், அப்பொழுது கர்பவதியாக இருந்த தன் மனைவியையும் அழைத்து கொண்டு, ஸ்ரீரங்கத்தில் இருந்து, நடந்து நடந்து நடந்து  திருமலை வந்து சேர்ந்தார் அனந்தாழ்வார்.

அந்த சமயத்தில் திருமலை அடர்ந்த காடாகவும், புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் நிறைந்ததாகவும் இருந்தது.

ராமானுஜர் (1017CE) அவதரித்த பின் தான், வெங்கடேச பெருமாளின் அருள், ஞானிகளுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைவருக்கும் கிடைத்தது.
இன்று தினமும் லட்சம் பேர் வந்து பார்க்க காரணமாய் இருந்தவர் நம் ராமானுஜர், நம் தமிழர்.

அநந்தாழ்வார் தன் மனைவியுடன் திருமலையிலேயே வாசம் செய்தார்.

தினமும் திருமலையில் உள்ள பூக்களை தொடுத்து பெருமாளுக்கு அலங்காரம் செய்து வந்தார்.
தான் வசிக்கும் இடத்திலேயே ஒரு நந்தவன பூந்தோட்டமும் அமைத்தார்.

அநந்தாழ்வாருக்கு
"இப்பொழுது நல்ல மழைக்காலமாக இருக்கிறது. தண்ணீர் நிறைய கிடைக்கிறது. பூக்கள் பூத்து குலுங்குகிறது. நல்ல வெயில் காலத்தில் தண்ணீர் இல்லாமல் போய் விட்டால், பூஞ்செடிகள் வாடி விடுமே!!
அதற்கு முன்னேற்பாடாக, இப்பொழுதே நாம் ஒரு பெரிய குளம் வெட்டி ஏற்பாடு செய்து விட்டோம் என்றால், இதன் மூலம் நம் புஷ்ப கைங்கர்யம் எப்பொழுதும் தடைப்படாமல் நடக்கும்"
என்று அவருக்கு திடீரென்று மனதில் தோன்றியது,

அருகிலேயே ஒரு குளம் அமைத்தால், நீர் பாய்ச்சி தினமும் பல வித பூக்கள் வளர்த்து தொண்டு செய்யலாமே என்று நினைத்தார்.

தினமும் பூக்கள் பறித்து, மாலை கட்டி, பெருமாளுக்கு பூங்கைங்கர்யமும் செய்கிறார், மீதி நேரத்தில், பெரிய குளம் வெட்டவும் ஆரம்பித்தார்.

ஒரு வைஷ்ணவன் 'உதவிக்காக அடுத்தவரிடம் கை நீட்ட கூடாது'.
கூலிக்கு ஆள் போட்டு குளம் வெட்ட, இவரிடமோ கையில் பணம் இல்லை.

கையில் பணம் இல்லை, ஆனால் பக்தி இருக்கிறது இவரிடம்.
பெருமாளுக்காக குளம் வெட்ட, ஆர்வம் மட்டுமே இவரிடம் உள்ள செல்வம்.


அநந்தாழ்வார் தன் மனைவியுடன்,சேர்ந்து இந்த குளம் வெட்ட ஆர்வமாக செயல் பட்டார்.
நிறைமாதமான மனைவியும் இவருக்கு அனுகூலமானவள், தெய்வ பக்தி உள்ளவள்.

அநந்தாழ்வார் மம்மட்டியால் மண்ணை தோண்டி தோண்டி குழி அமைக்க, அவர் மனைவி அந்த மண்ணை கொண்டு போய் குளம் அமைக்கும் இடத்தை தாண்டி போய் கொட்டி விட்டு வருவாள்.

கையில் ஒரு சுமை, வயிற்றில் ஒரு சுமை என்று இருந்தும், நிறை மாத கர்ப்பிணியான இவள் பக்தியுடன் இந்த சேவையை பெருமாளுக்கு செய்தாள்.

கரடு முரடான பாதையில் நடந்து மூச்சு வாங்க இளைப்பாறி, நடந்து கொண்டிருக்கும் அந்த அம்மாளை மலையில் இருந்த ஒரு வேடுவன், கவனித்தான்.

அவள் கர்ப்பவதியாக இருப்பதை கண்டு, மனம் கலங்கி,
மெல்ல அவளிடம் சென்று,
"அம்மா, நீங்கள் செய்யக்கூடிய காரியமா இது?
நான் இந்த காட்டில் எதற்கு இருக்கிறேன்?. கொடுங்கள். நான் இந்த மண்ணை கொட்டி, குளம் கட்டும் வரை உதவி செய்கிறேன்"
என்று சொன்னான்.

அநந்தாழ்வார் மனைவியோ,
"இது தன் கணவனும், தானும் மட்டுமே செய்ய வேண்டிய கைங்கர்யம். பெருமாளுக்காக செய்கிறோம்"
என்றாள்.

வேடுவன்
"அம்மா, பெருமாளுக்காக செய்யும் கைங்கர்யம் என்று சொல்லி, நீங்கள் மட்டும் செய்யலாமா?
நானும் சேர்ந்து செய்தால் எனக்கும் புண்ணியமாகி போகுமே"
என்றான்.

அந்த அம்மாளோ,
"கணவர் மற்றவர் இந்த கைங்கர்யம் செய்ய பிரியப்படமாட்டார்" என்றாள்.
இனி பேசி ஒன்றும் ஆகாது என்று, அந்த வேடுவன் அந்த அம்மாளின் கையில் இருந்த மண் சட்டியை பிடுங்கி, அவள் கேட்காமலே எடுத்து சென்று கொட்டி விட்டு அவள் கையில் கொடுத்தான்.

வேடுவன்
"அம்மா, இந்த நிலையில் நீங்கள் வேலை செய்வது எனக்கு கவலை தருகிறது.
நீங்கள் பேசாமல் அவரிடம் இருந்து மண்ணை கொண்டு வந்து என்னிடம் தாருங்கள். நான் கொட்டி வருகிறேன்"
என்றான்.

மறுப்பு சொல்ல முடியாமல், அந்த அம்மாள், திரும்ப சென்று, மண் அள்ளிக்கொண்டு வர,
அவளிடம் அந்த மண்ணை வாங்கி, கிடு கிடு வென்று ஓடி போய் மண்ணை கொட்டி விட்டு வந்தான் வேடுவன்.

மீண்டும் மண்ணை அள்ள வந்த தன் மனைவியை பார்த்து,
"எப்படி இவ்வளவு சீக்கிரமாக வருகிறாய்?
நான் சொன்ன இடத்தில் கொட்டாமல் அருகிலேயே மண்ணை கொட்டி விட்டு வருகிறாயா?"
என்றார் அநந்தாழ்வார்.

"இல்லை, வேறொருவர் தான் இந்த கைங்கர்யத்தை செய்கிறார்.
வேண்டாம் என்றாலும், வற்புறுத்தி செய்கிறார்"
என்று உண்மையை அப்படியே சொன்னாள்.

"வேறொருவருக்கு எதற்காக நம் கைங்கர்யத்தை கொடுக்கிறாய்?"
என்று  கேட்க,
"நான் வேண்டாம் என்றாலும், கேட்காமல் அவரே நான் எடுத்து செல்லும் மண் சட்டியை பிடுங்கி கொட்டிவிட்டு தருகிறார்."
என்று இவள் சொல்ல
அநந்தாழ்வார் கோபத்துடன்
"யார் அந்த வேடுவன் தன் கைங்கர்யத்தில் இடைஞ்சல் செய்வது?"
என்று சென்று பார்த்தார்.

இவர் வருவதை பார்த்த அந்த வேடுவன், மெதுவாக அவர் முன்வந்து நின்றான்.

அநந்தாழ்வார் கோபத்துடன்
"யாரப்பா நீ? எதற்காக நாங்கள் செய்யும் காரியத்தில் வந்து இடைஞ்சல் செய்கிறாய்?
நீ எதற்காக இப்படி அடுத்தவர் செய்யும் வேலையில் குறுக்கீடு செய்கிறாய்?
உன் உதவி ஒன்றும் தேவை இல்லை.
நாங்களே இதை செய்து கொள்கிறோம்"
என்றார்.

"ஸ்வாமி, நல்ல காரியம் தானே செய்கிறீர்கள். உங்களுடன் சேர்ந்து நானும் செய்கிறேனே?"
என்றான் வேடுவன்.


"நீ கைங்கரியம் செய்ய ஆசைப்பட்டால், தனியாக நீயே ஒரு தோட்டம் போடு.
நான் செய்யும் கைங்கர்யத்துக்கு போட்டிக்கு ஏன் வருகிறாய்?
புண்ணியம் வேண்டுமானால் தனியாக செய்யேன்.. யார் தடுத்தது?"
என்றார் கோபமாக.

"எனக்கு புண்ணியமெல்லாம் வேண்டாம் சாமி.
இந்த கர்பவதியாக இருக்கும் அம்மாள் இப்படி கஷ்டப்பட்டு மண்ணை தூக்கி வருவது எனக்கு தாங்கவில்லை."
என்றான்.

"அயோக்கிய பயலே, நான் தாலி கட்டியவன். எனக்கு இல்லாத அக்கறை, பரிவு உனக்கு வந்து விட்டதோ?"
என்றார் கோபமாக.

"இல்ல சாமி,  எப்பொழுதும் கணவனை காட்டிலும் அம்மாவுக்கு தன் பிள்ளை மேல் அதிக கருணை இருக்கும்.
இந்த அம்மா படும் கஷ்டத்தை என்னால் சகிக்க முடியவில்லை.
என்னை உங்கள் பிள்ளையாக நினைத்து, இந்த கைங்கர்யம் செய்ய அனுமதி அளியுங்கள்"
என்று வேடுவன் கேட்க,

"போடா பயலே... "
என்று அதட்டி அடிக்க வருவதற்குள், அந்த வேடுவன் ஓடி விட்டான்.

இதற்கு பின், திரும்பி மீண்டும் குளம் வெட்டும் இடத்திற்கு வந்தார்.
தன் மனைவியை பார்த்து,
"அந்த பயல் வந்தால் இனி கொடுக்காதே !
நாம் இரண்டு பேர் மட்டுமே சேர்ந்து, இந்த கைங்கர்யத்தை செய்து முடித்திட வேண்டும்.
திருமலையப்பன் பார்க்க வருவார் என்பதற்காக நாம் இதை செய்யவில்லை.
நம் ராமானுஜர் வரும்போது, இந்த கைங்கர்யத்தை நாம் இருவரே செய்தோம் என்று காட்ட வேண்டும்."
என்று சொல்லி, மீண்டும் அவர் குளம் வெட்ட ஆரம்பிக்க, அந்த அம்மாளும் மீண்டும் மண்ணை அள்ளிக் கொண்டு நடக்கலானாள்.

போய் விட்டான் என்று நினைத்த அந்த வேடுவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

மீண்டும் அந்த அம்மாளை பார்த்து
"அம்மா, அவர் கிடக்கிறார் விடுங்கள். ரொம்ப  கோபக்காரர் போல.
அவர் சொல்கிறார் என்பதற்காக நான் போக நினைத்தாலும், உங்களை இப்படிவேலை செய்ய விட்டுவிட்டு என்னால் செல்ல முடியவில்லை"
என்றான்.

அந்த அம்மாள்,
"வேண்டாமப்பா..  அவர் யார் உதவியும் வேண்டாம் என்கிறார்" என்று சொல்லிகொண்டிருக்கும் போதே மீண்டும் அவளிடம் இருந்து மண் சட்டியைபிடுங்கி கொண்டு ஓடி போய் கொட்டிவிட்டு வந்து, சட்டியை கொடுத்தான்.

எதிர்க்கவும் முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல், அந்த அம்மாள்அநந்தாழ்வார் இருக்கும் இடம் சென்றாள்.

மகா உத்தமியான அவள் தன் கணவனிடம், அந்த வேடுவன் மீண்டும் வந்து என் கையிலிருந்து பிடுங்கி கொட்டுகிறான் என்று உண்மையை சொன்னாள்.

அநந்தாழ்வார் வந்ததே கோபம். 'தான் இருவர் மட்டுமே செய்ய நினைத்த கைங்கர்யத்தை' இவன் வந்து கெடுக்கிறானே என்று ஆத்திரத்துடன் அவன்  இருக்கும் இடம் நோக்கி வந்தார்.
"ஏண்டா... உன்னை இங்கிருந்து கிளம்பு என்று சொல்லியும் எங்கள் கைங்கர்யத்தை கெடுக்க வந்தாயா?"
என்று கையில் இருந்த மம்மட்டியுடன் அருகில் வர,
கோபத்துடன் வருகிறார் என்று அறிந்த அந்த வேடுவன், ஓட ஆரம்பிக்க, இவர் துரத்திக்கொண்டே, தன் கையிலிருந்த மம்மட்டியை அவன் மேல் வீச, அந்த வேடுவன்  உதட்டில் பட்டு, ரத்தம் வர ஆரம்பித்து.
தாடையை பிடித்துக்கொண்டே காட்டில் ஓடி மறைந்து விட்டான்.

திரும்பி வந்த அநந்தாழ்வார் அன்றைய நாள் குளம் வெட்டும் வேலையை முடித்து,
அன்றைய பொழுது பெருமாளுக்கு கட்ட வேண்டிய பூ மாலையை கட்ட ஆரம்பித்தார்.

இன்று நடந்த சண்டையால், பெருமாளுக்கு பூ மாலை கட்டி முடிக்க, கொஞ்சம் நேரம் ஆகி விட்டது.

திருவாராதனைக்கு நேரம் ஆக, வெங்கடேச பெருமாள், கோவில் அர்ச்சகர் மூலமாக ஆவேசித்து,
"அநந்தாழ்வாரை உடனே சன்னதிக்கு அழைத்து வா"
என்றார்.

அங்கிருந்த அர்ச்சகர்கள், அநந்தாழ்வாரிடம் ஓடி சென்று தெரிவிக்க,
"இப்பொழுது தான் மாலை கட்ட ஆரம்பித்துள்ளேன். பாதியில் வந்தால் என் கைங்கர்யம் விட்டு போனதாகும். கட்டி முடித்ததும் நானே வருகிறேன்.
பூ மாலை கட்ட சொல்லி, ஸ்ரீராமானுஜர் எனக்கு அளித்த கைங்கர்யம் இது.
பூ மாலை கட்டி முடித்த பின் வருகிறேன்"
என்று சொல்லி அனுப்பினார்.

உடனே பெருமாள்
"கூப்பிட்ட போது வரவில்லையென்றால், உமது மாலை எமக்கு தேவையில்லை."
என்று சொல்லி அனுப்ப,

பதிலுக்கு அநந்தாழ்வார்,
"மாலையை போட்டுக்கொள்ளட்டும், போட்டுக்கொள்ளாமல் இருக்கட்டும்.
பூ மாலை கட்டி கோவிலில் கொடுக்க வேண்டியது என் தொண்டு.
அந்த பூ மாலையை போட வேண்டியது அர்ச்சகர், போட்டுக்கொள்ள வேண்டியது நீர்."
என்று சொல்லி திருப்பி அனுப்பினார்.

உடனே பெருமாள்,
"என் உகப்புக்காக பூ மாலை கட்டாமல், பின் யார் உகப்புக்காக மாலை கட்டுகிறீர் நீர்?"
என்று கேட்க,

பதிலுக்கு அநந்தாழ்வார்,
"உம்முடைய உகப்புக்காக நான் மாலை கட்டவே இல்லையே.
நான் பூ மாலை கட்டுவது என் ராமானுஜன் உகப்புக்காக. என் ஆச்சார்யான் ஸ்ரீராமானுஜர் ஆசை பட்டார் என்றல்லவோ மாலை கட்டிக்கொண்டு இருக்கிறேன்."
என்று பதில் கூறினார்.

உடனே பெருமாள்
"கூப்பிட்ட பொழுது நீர் இங்கு வரவில்லையென்றால், இனி நீர் இங்கு இருக்க கூடாது.
திருமலையை விட்டு இறங்கும். இனி இங்கு இருக்க கூடாது. நீ உன் சொந்த ஊருக்கே போ. என்னை மதிக்காமல் நீ இங்கு இருக்க கூடாது"
என்றார்.


அநந்தாழ்வார் பதிலுக்கு,
"நான் இருக்கக்கூடாது என்று சொல்வதற்கு நீர் யார்? நீரா என்னை அழைத்தீர்?
என்னை இங்கு போக சொல்லி யார் அனுப்பினாரோ, அவர் சொல்லாமல் நான் போக மாட்டேன்.
மேலும், உமக்கே இது சொந்த இடம் இல்லை.
உம்முடைய சொந்த ஊர் 'வைகுண்டம்'.
அதை விட்டு நீரும் இங்கு வந்துள்ளீர். நான் ஸ்ரீ ரங்கத்தில் இருந்து வந்துள்ளேன்.
இருவருக்குமே இது பொது இடம் தான்.
என்னை போ என்று சொல்ல உமக்கு உரிமை இல்லை"
என்று சொல்லிவிட்டார் அநந்தாழ்வார்.

அதற்கு மேல் வாக்குவாதம் செய்யாமல் பெருமாள் அமைதியாகி விட்டார்.

அநந்தாழ்வார் தான் கட்டிக்கொண்டிருந்த பூ மாலை கைங்கர்யத்தை முடித்து விட்டு, கோவிலுக்குள் பூக்கூடையுடன் வந்தார்.
பொதுவாக,

  • தொடுத்த பூமாலையை அர்ச்சகர் வாங்கி, பெருமாளுக்கு போட்டு,
  • தான் கட்டிய பூமாலையுடன் பெருமாள் இருக்கும் அழகை வெகு நேரம் ரசித்து,
  • துளசி, தீர்த்தம், சடாரி வாங்கிய பின்பு தான் 

திரும்பி செல்வார் அநந்தாழ்வார்.

இன்றோ,
அநந்தாழ்வார் "இப்படி பெருமாளிடம் எதிர்த்து கோபமாக பேசி விட்டோமே !!
பெருமாள் நம்மிடம் கோபமாக இருப்பாரே !!" 
என்று தனக்குள்ளேயே வெட்கப்பட்டு, பூமாலையை வைத்து விட்டு, பெருமாளை கூட பார்க்காமல் கிளம்ப முற்பட்டார்.

"ராமானுஜன்" என்ற பெயரை கேட்ட பின்னும், பெருமாளுக்கு கோபம் வருமா?
வெங்கடேச பெருமாளுக்கு துளி கூட கோபம் இல்லை.
ஆனால் பெருமாள் கோபமாக இருப்பாரோ? என்று அநந்தாழ்வாராகவே நினைத்து கொண்டார்.

தலை குனிந்தே வந்து, பூக்கூடையை சன்னதியில் வைத்து விட்டு, தலை குனிந்த படியே திரும்பி செல்ல முயல,
ராமானுஜ அடியானான அனந்தாழ்வார் தன்னை பார்க்க மாட்டாரா? என்று பெருமாள் எதிர்பார்க்க,
உடனே,
பெருமாள் அர்ச்ச அவதார ரூபத்திலேயே "அநந்தாழ்வான்" என்று குரல் கொடுக்க,
அநந்தாழ்வார் திரும்பி பெருமாளை பார்க்க, அவர் கண்ணில் பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிவது தெரிந்தது.
"ஆ..." என்று அலறினார். மூர்ச்சை ஆகிவிட்டார் அநந்தாழ்வார்.
சிறிது நேரம் கழித்து, மூர்ச்சை தெளிந்த அநந்தாழ்வார்,
"இன்று ஒரு வேடுவனை மண் வெட்டியால் அடித்தோமே" என்பது ஞாபகம் வர, "தான் செய்யும் கைங்கர்யத்தில் சேர்ந்து கொள்ள வந்தது பெருமாள் தான்" என்று புரிந்ததும் கதறினார்.

மேலும்,
'திருமலையில் பூக்கள் சிந்தி உள்ளதே'
என்று நினைத்ததற்கே என் ஆச்சார்யான் கண்ணீர் விட்டார் என்றால்,
'எம்பெருமான் திருமேனியில் இப்படி ஒரு காயம் வந்து விட்டது'
என்று என் ஆச்சார்யனுக்கு தெரிந்தால், எத்தனை துக்கப்படுவார்?
இனி என் ஆச்சார்யனுக்கு எதிரில் நிற்க முடியுமா?
'நான் அவர் உகப்புக்காக கைங்கர்யம் செய்கிறேன்' என்று சொல்லி வந்து விட்டு, அவர் மனது தவிக்கும் படியாக இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டேனே, எம்பெருமானே !!

ப்ராக்ருத சரீரம் என்றால், ஒரு வைத்தியனை அழைத்தாவது காயத்திற்கு மருந்து கொடுப்பேன்.
இந்த சரீரமோ திவ்ய மங்கள விக்ரஹம் ஆயிற்றே!!  நான் எங்கு போய் இதற்கு மருந்து தருவேன்?"
என்று கதற ஆரம்பித்தார் அநந்தாழ்வார்.

உடனே பெருமாள்
"அநந்தாழ்வார், எனக்கு தொண்டர் அடி பொடி வேண்டும். பாகவதனின் பாத துளியே எனக்கு மருந்து. கொடுப்பீரா?"
என்று சொல்லி அநந்தாழ்வார் நடந்து வந்த பாத தூளியே தனக்கு மருந்தாக ஏற்று கொண்டார் திருமலையப்பன்.
அதையே "ஸ்ரீ பாதரேணு" என்கிறோம்.

இன்று வரை பெருமாளுக்கு தாடையில் பச்சை கற்பூரத்தை பாதரேணுவாக வைத்து, அதை நமக்கு பிரசாதமாகவும் தருகிறார்கள்.

அந்த பிரசாதம் சர்வ வியாதிக்கும் நிவ்ருத்தி ஆகிறது.

கருணா மூர்த்தியான எம்பெருமான்,
"தன் அடியார்கள் ஆர்வத்துடன் செய்யும் சிறு கைங்கர்யத்தையும் ஆசையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு துளசி இலையானாலும், ஒரு பூவானாலும், ஒரு பழமானாலும் அதை ஆர்வத்துடன் கொடுத்தால், ஆசையுடன் ஏற்றுக்கொள்கிறேன்."
என்கிறார்.
அநந்தாழ்வார் செய்த சிறு பூ கைங்கர்யத்துக்கு அத்தனை ஆசைப்பட்டு, அவருடன் சேர்ந்து தானும் செய்ய ஆசைப்பட்டார். அது போதாது என்று, தனக்கு செய்யும் தொண்டனின் பாத தூளியே தனக்கு பிடித்தமானது என்றும் ஏற்றுக்கொண்டார் திருமலையப்பன்.
இன்றும் வெங்கடேசபெருமாள் பச்சை கற்பூரமாக ஸ்ரீ பாத ரேணுவாக ஏற்று, இதை சாத்திக்கொள்கிறார்.

பரம வைஷணவரான அநந்தாழ்வார், திருமலையிலேயே இருந்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தார்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka