Followers

Search Here...

Showing posts with label சோகம். Show all posts
Showing posts with label சோகம். Show all posts

Sunday 3 January 2021

ஹனுமானுக்கு ஏற்பட்ட சோகம் (Hanuman in Stress).. கோபத்தின் விளைவை எண்ணி வருத்தப்படுகிறார்... தெரிந்து கொள்வோமே ! வால்மீகி ராமாயணம்

'சீதா தேவியை அனுப்ப முடியாது' என்று தீர்மானித்து,  ஹனுமானின் வாலில் தீ வைக்க சொல்லி ராக்ஷஸர்களுக்கு ஆணையிட்டான் ராவணன். 
ஊர் முழுக்க ஹனுமானை கட்டி இழுத்து சென்று, ஊரில் இருந்த அனைத்து ராக்ஷஸ குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் உட்பட அனைவரும் கேலியாக சிரித்தனர். 
ஹனுமான் இவர்கள் செய்யும் அட்டகாசங்கள், கேலிகள் அனைத்தையும் பார்த்தும், பொறுமையாகவே இருந்தார்.

இதற்கிடையில் ஸீதா தேவியிடம் அங்கிருந்த ராக்ஷஸிகள் 'உன்னை பார்க்க வந்த தூதன் பிடிபட்டு விட்டான். இன்று அந்த வானரன் வாலில் தீ வைத்து, ஊர் முழுக்க இழுத்து கொண்டு போகிறார்கள்" என்று சொல்ல, 
சீதா தேவி 'என் கணவனுக்கே நான் சேவை செய்தது உண்மையென்றால், நான் பதிவ்ரதை என்பது உண்மை என்றால், ராமபிரானின் ஒழுக்கம் உண்மை என்றால், ஏ அக்னியே! ஹனுமானை நீ தொடும் போது, குளிர்ச்சியாக இரு' என்று பிரார்த்தித்தாள்.
அதே சமயத்தில், வாலில் வைத்து இருந்த தீ, திடீரென்று குளிர்ந்த நீர் பட்டது போல ஆனதை உணர்ந்தார் ஹனுமான்.

உடனே உற்சாகம் அடைந்த ஹனுமான், இது வரை கேலி செய்து கொண்டிருந்த ராக்ஷஸர்களுக்கு ஒரு பாடம் புகட்ட, இலங்கையையே தீயிட்டு விட்டார்.

ஒவ்வொரு மதில் சுவராக தாவி, 
விபீஷணன் மாளிகையை மட்டும் விட்டு விட்டு, ராவணன் மாளிகை உட்பட அனைத்தையும் தீயிட்டு விட்டார்.
லங்காம் சமஸ்தாம் சந்தீப்ய லாங்கூலாக்னிம் மஹாகபி: |
நிர்வாபயாமாஸ ததா சமுத்ரே ஹரி சத்தம: ||
लङ्कां समस्तां सन्दीप्य लाङ्गूलाग्निं महाकपिः |
निर्वापयामास तदा समुद्रे हरिसत्तमः ||
இலங்கையை கொளுத்திய பிறகு, ஹனுமான் தன் வாலில் ராக்ஷஸர்கள் வைத்த தீயை கடலில் அணைத்தார்.

சந்தீப்யமானாம் வித்வஸ்தாம் த்ரஸ்தரஷோ கனாம் புரீம் |
அவேக்ஷ்ய ஹானுமான் லங்காம் சிந்தயாமாச வானர: ||
सन्दीप्यमानां विध्वस्तां त्रस्तरक्षो गणां पुरीम् |
अवेक्ष्य हानुमाँल्लङ्कां चिन्तयामास वानरः ||
இலங்கை நகரமே தீயில் கொழுந்து விட்டு ஏறிந்து கொண்டிருக்க, அலறி அடித்து ராக்ஷஸர்கள் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருப்பதை கண்ட ஹனுமானுக்கு, திடீரென்று தாங்க முடியாத சோகம் ஏற்பட்டது.
தஸ்ய அபூத் சமுஹாம் த்ராச: குத்ஸா ச ஆத்மன்ய ஜாயத |
லங்காம் ப்ரதஹதா கர்ம கிம் ஸ்வித் க்ருதம் இதம் மயா ||
तस्याभूत्सुमहांस्त्रासः कुत्सा चात्मन्यजायत |
लङ्कां प्रदहता कर्म किंस्वित्कृतमिदं मया ||
ஹனுமான் இதயத்துக்குள் பெரும் கவலை குடி கொண்டது. ஹனுமான் தன்னையே வெறுத்துக்கொண்டார். 
"சீ! இலங்கையை கொளுத்தி என்ன காரியம் செய்து இருக்கிறேன்!!

தன்யாஸ்தே புருஷ ஸ்ரேஷ்ட யே புத்தயா கோபம் உத்திதம் |
நிருன்தந்தி மஹாத்மனோ தீபதம் அக்னிமிவாம்பசா ||
धन्यास्ते पुरुषश्रेष्ठ ये बुद्ध्या कोपमुत्थितम् |
निरुन्धन्ति महात्मानो दीप्तमग्निमिवाम्भसा ||
இந்த கொழுந்து விட்டு எரியும் தீயை தண்ணீர் விட்டு அணைக்க முற்படும் அனைவரும் தன்யர்கள்.. அந்த மஹாத்மாக்களுக்கு என் நன்றி..




க்ருத்த: பாபம் ந குர்யாத் க:  க்ருத்தோ ஹன்யாத் குருநபி |
க்ருத்த: பருஷயா வாசா நர: ஸாதூனதிக்ஷிபேத் ||
क्रुद्धः पापं न कुर्यात् कः क्रृद्धो हन्यात् गुरूनपि ।
क्रुद्धः परुषया वाचा नरः साधूनधिक्षिपेत् ॥
கோபத்திற்கு ஆட்பட்ட, யார் தான் தவறு செய்யாமல் இருக்க முடியும்? கோபமடைந்தவன் தனது குருவை கூட கொல்ல துணிந்து விடுவானே!! கோபம் அடைபவன் நல்லவர்களை கூட கடும் சொற்களை பேசி அவமானப்படுத்தி விடுவானே!!

வாச்யாவாச்யம் ப்ரகுபிதோ ந விஜானாதி கர்ஹிசித் |
நாகார்யம் அஸ்தி க்ருத்தஸ்ய நாவாச்யம் வித்யதே க்வசித் ||
वाच्यावाच्यं प्रकुपितो न विजानाति कर्हिचित् ।
नाकार्यमस्ति क्रुद्धस्य नावाच्यं विद्यते क्वचित् ॥
கோபம் அடைந்தவன் என்ன பேச வேண்டும்? என்பதையும் மறக்கிறான். என்ன பேச கூடாது? என்பதையும் மறக்கிறான். 
கோபம் அடைந்தவனுக்கு எந்த செயலும்! செய்ய கூடாத செயல் இல்லை. கோபம் அடைந்தவனுக்கு எந்த வார்த்தையும்! பேசக்கூடாத வார்த்தை இல்லை.

ய: சமுத்பதிதம் க்ரோதம் க்ஷமயைவ நிரஸ்யதி |
யதோரகஸ்த்வசம் ஜீர்ணாம் ச வை புருஷ உச்யதே ||
यः समुत्पतितं क्रोधं क्षमयैव निरस्यति ।
यथोरगस्त्वचं जीर्णां स वै पुरुष उच्यते ॥
பாம்பு தன் பழைய தோலை கழட்டி விட்டு செல்லும். அது போல, யார் ஒருவன் தன் கோபத்தை கழட்டி எரிந்து விட்டு, மன்னிக்கும் குணத்தை பெறுகிறானோ! அவனே உண்மையான நாயகன்.

திகஸ்து மாம் சுதுர்புத்திம் நிர்லஜ்ஜம் பாபக்ருத்தமம் |
அசிந்தயித்வா தாம் சீதாம் அக்னிதம் ஸ்வாமிகாதகம் ||
धिगस्तु मां सुतुर्बुद्धिम् निर्लज्जम् पापकृत्तमम् |
अचिन्तयित्वा तां सीतामग्निदं स्वामिघातकम् ||
சீ! அவமானம். நான் ஒரு புத்தி கெட்டவன்! வெட்கமில்லாதவன்! பாவி! சீதாதேவியை பற்றி நினைவு இல்லாமல், இப்படி இலங்கையை கொளுத்தி விட்டேனே!! என் பிரபு கொடுத்த காரியத்தை கெடுத்து விட்டேனே!!

யதி தக்தா த்வியம் லங்கா நூனமார்யாபி ஜானகீ |
தக்தா தேன மயா பர்துர்ஹதம் கார்யம் அஜானதா ||
यदि दग्धा त्वियं लङ्का नूनमार्यापि जानकी |
दग्धा तेन मया भर्तुर्हतं कार्यमजानता ||
இந்த இலங்கை நகரம் முழுவதும் இப்போது எரிந்து சாம்பலாகி விட்டால், அதில் சீதா தேவியும் எரிந்து விடுவாளே! 
என்னுடைய முட்டாள்தனத்தால், என் பிரபு கொடுத்த காரியத்தை கெடுத்து விட்டேனே!!  செய்த அனைத்து முயற்சியும் வீணாகி போனதே! 

யதர்தம் அயம் ஆரம்ப: தத் கார்யம் அவசாதிதம் |
மயா ஹி தஹதா லங்காம் ந சீதா பரி ரக்ஷிதா ||    
यदर्थम् अयम् आरम्भ: तत् कार्यम् अवसादितम् |
मया हि दहता लङ्कां न सीता परिरक्षिता ||
நான் இலங்கையை கொளுத்துவதற்கு முன்னால், சீதா தேவியை பத்திரமாக வைத்து விட்டு செய்து இருக்கலாமே!!

ஈசத் கார்யம் இதம் கார்யம் க்ருதம் ஆஸீன் ந சம்சய: |
தஸ்ய க்ரோத அபிபுதேன மயா மூலக்ஷய: க்ருத: ||
விநஷ்டா ஜானகீ வ்யக்தம் ந ஹ்யதக்த: ப்ரத்ருஷ்யதே |
லங்காயா: கஸ்சித் உத்தேச: சர்வா பஸ்மீக்ருதா புரீ ||
யதி தத்விஹிதம் கார்யம் மயா ப்ராஞா விபர்யயாத் |
இஹைவ ப்ராண சந்யாசோ மமாபி ஹ்யதிரோசதே ||
ईषत्कार्यमिदं कार्यं कृतमासीन्न संशयः |
तस्य क्रोधाभिभूतेन मया मूलक्षयः कृतः ||
विनष्टा जानकी व्यक्तं न ह्यदग्धः प्रदृश्यते |
लङ्कायाः कश्चिदुद्देशः सर्वा भस्मीकृता पुरी ||
यदि तद्विहतं कार्यं मया प्रज्ञाविपर्ययात् |
इहैव प्राणसंन्यासो ममापि ह्यतिरोचते ||
என் பிரபு கொடுத்து அனுப்பிய காரியத்தில் பெரும்பாலான காரியங்கள் முடிந்து, இன்னும் கொஞ்சம் தானே மிச்சம் இருந்தது. என் கோபத்தால், செய்த காரியம் அனைத்தையும் அடியோடு நாசமாக்கி விட்டேனே!
என்ன செய்கிறேன் என்றே தெரியாமல், புத்தி கெட்டு, நான் வந்த காரியத்தை நானே கெடுத்து கொண்டேனே! நான் இங்கேயே சாக வேண்டும்…

கிமக்நௌ நிபதாம் யத்ய ஆஹோஸ் வித்வங்வாமுகே |
சரீரம் ஆஹோ ஸத்த்வானாம் தத்மி சாகர வாசினாம் || 
किमग्नौ निपताम्यद्य आहोस्विद्वडवामुखे |
शरीरमाहो सत्त्वानां दद्मि सागरवासिनाम् ||
இந்த தீயிலேயே விழுந்து உயிர் விட்டு விடுவோமா? என் உடலை இந்த கடல் எடுத்து கொள்ளட்டுமா?

கதம் ஹி ஜீவிதா சக்யோ மயா த்ரஷ்டும் ஹரீஸ்வர: |
தொள வா புருஷ சார்தூலௌ கார்ய சர்வஸ்வகாதினா ||  
कथं हि जीवता शक्यो मया द्रष्टुं हरीश्वरः |
तौ वा पुरुषशार्दूलौ कार्यसर्वस्वघातिना ||
இப்படி வந்த காரியத்தை நாசம் செய்து விட்டு, இனி, சுக்ரீவ மஹாராஜனையும், அந்த இரு நர ச்ரேஷ்டர்களையும் எந்த முகத்தை வைத்து கொண்டு பார்ப்பேன்? 

மயா கலு ததே வேதம் ரோஷதோஷாத் ப்ரதர்ஷிதம் |
ப்ரதிதம் த்ரிஷு லோகேஷு கபித மனவஸ்திதம் ||
मया खलु तदेवेदं रोषदोषात्प्रदर्शितम् |
प्रथितं त्रिषु लोकेषु कपितमनवस्थितम् ||
கோபம் என்ற கறையால், நான் வானர குணத்தை காண்பித்து விட்டேனே! மூவுலகத்தில் உள்ளவர்களும் வானரர்கள் நிலையில்லா புத்தி கொண்டவர்கள் என்று சொல்வதை இன்று நானும் நிரூபித்து விட்டேனே!!

திகஸ்து ராஜசம் பாவமனீஷ மன வஸ்திதம் |
ஈஸ்வரேநாபி யத் ராகான் மயா சீதா ந ரக்ஷிதா ||
धिगस्तु राजसं भावमनीशमनवस्थितम् |
ईश्वरेणापि यद्रागान्मया सीता न रक्षिता ||
சீ! அவமானம்! எனக்குள் எழுந்த இந்த ராஜஸ குணத்தால், சீதா தேவியை காப்பாற்ற வழி இருந்தும், புத்தி கெட்டு காப்பாற்றாமல் போனேனே!!

வினஷ்டாயாம் து சீதாயாம் தாவுபௌ விநசிஷ்யத: |
தயோர்விநாசே சுக்ரீவ: ச-பந்து:  விநசிஷ்யத: ||
विनष्टायां तु सीतायां तावुभौ विनशिष्यतः |
तयोर्विनाशे सुग्रीवः सबन्धुर्विनशिष्यति ||
சீதாதேவிக்கு ஆபத்து விளைவித்து, ராம லக்ஷ்மணர்களையும் நாசம் செய்து விட்டேன்! ராம லக்ஷ்மணர்கள் தங்கள் உயிரை விட்டு விட்டால், சுக்ரீவ மகாராஜனும் அவருடன் இருக்கும் அனைவரும் தங்களை அழித்து கொள்வார்கள்.




ஏததேவ வச: ஸ்ருத்வா பரதோ ப்ராத்ரு வத்சல: |
தர்மாத்மா ஸஹ சத்ருக்ன: கதம் சக்ஷ்யதி ஜீவிதும் ||
एतदेव वचः श्रुत्वा भरतो भ्रातृवत्सलः |
धर्मात्मा सहशत्रुघ्नः कथं शक्ष्यति जीवितुम् ||
சகோதர்கள் மடிந்ததை கேட்டால், பரதனும், சத்ருக்னனும் எப்படி உயிர் வாழ்வார்கள்?

இக்ஷ்வாகு வம்சே தர்மிஷ்டே கதே நாசம் அஸம்சயம் |
பவிஷ்யந்தி ப்ரஜா: சர்வா: சோக சந்தாப பீடிதா: ||
इक्ष्वाकुवंशे धर्मिष्ठे गते नाशमसंशयम् |
भविष्यन्ति प्रजाः सर्वाः शोकसन्तापपीडिताः ||
என் காரியத்தால், இக்ஷ்வாகு குலமே சோகத்தால் அழிய போகிறது. 

ததஹம் பாக்ய ரஹிதோ லுப்த தர்மார்த சங்க்ரஹ: |
ரோஷ தோஷ பரீதாத்மா வ்யக்தம் லோக விநாசன: ||
तदहं भाग्यरहितो लुप्तधर्मार्थसङ्ग्रहः |
रोषदोषपरीतात्मा व्यक्तं लोकविनाशनः ||
என்ன ஒரு துர்பாக்கியம்!! என்னிடம் படிந்த இந்த கோபம் என்ற கறையால், நல்லதையும், நல்லவர்களையும் இழக்க போகிறேன். என் கோபத்தால், பலர் அழிய போகிறார்கள்."
இதி சிந்தயதஸ் தஸ்ய நிமித்தான் யுபபேதிரே |
பூரம் அப்யு பலப்தானி சாஷாத் புனரசிந்தயத் ||
इति चिन्तयतस्तस्य निमित्तान्युपपेदिरे |
पूरमप्युपलब्धानि साक्षात्पुनरचिन्तयत् ||
இப்படி ஹனுமான் ஒடிந்து போய், சிந்தித்து கொண்டு இருக்க, மனதில் எதேச்சையாக 'சுப சகுனம்' தோன்றியது. 
"சோகத்தை அடைபவன், மேலும் மேலும் சோகத்தை மனதில் வளர்த்து கொண்டால், அது அவனை தற்கொலை வரை கொண்டு சென்று விடும்.
சோகத்தை ஒழிக்க ஒரே வழி மனதை உற்சாகப்படுத்துவதே!" என்று நினைத்து கொண்ட, ஹனுமான், மேலும் சிந்திக்கலானார்.  

அத வா சாரு சர்வாங்கீ ரக்ஷிதா ஸ்வேன தேஜஸா |
ந நிஷிஷ்யதி கல்யாணி ந அக்னிரக்னௌ ப்ரவர்ததே ||
अथ वा चारुसर्वाङ्गी रक्षिता स्वेन तेजसा |
न नशिष्यति कल्याणी नाग्निरग्नौ प्रवर्तते ||
"சீதா தேவி தன் கற்பு என்ற அக்னியுடன் இருப்பதால், நாம் தீயிட்ட இந்த அக்னியில் ஒன்றும் ஆகி இருக்க மாட்டாள். ஒரு அக்னி இன்னொரு அக்னியை கொளுத்த முடியுமா?

ந ஹி தர்மான் மனஸ்தஸ்ய பார்யாம் அமிததேஜச: |
ஸ்வசாரித்ர அபிகுப்தாம் தாம் ஸ்ப்ரஷ்டும் அர்ஹதி பாவக: ||
न हि धर्मान्मनस्तस्य भार्याममिततेजसः |
स्वचारित्राभिगुप्तां तां स्प्रष्टुमर्हति पावकः ||
இந்த அக்னி நிச்சயம் சீதாதேவியை கொளுத்தி இருக்காது. அவள் தன் நடத்தையாலேயே நன்கு பாதுகாக்கப்பட்டு இருப்பாள். எல்லையற்ற ஒளியான ராமபிரானின் பெண்மணி அவள்

நூனம் ராம ப்ரபாவேன வைதேஹ்யா: சுக்ருதேன ச |
யன்மாம் தஹன கர்மாயம் நாதஹத்தவ்ய வாஹன: ||
नूनं रामप्रभावेन वैदेह्याः सुकृतेन च |
यन्मां दहनकर्मायं नादहद्धव्यवाहनः ||
சீதாதேவியின் கற்பின் பலத்தாலும், ராமபிரானின் ப்ரபாவத்தாலும் தான் இந்த அக்னி என்னை சூடாமல் இருந்ததுஎன்று உணர்கிறேன்.

த்ரயானாம் பரதாதீனாம் ப்ராத்ருனாம் தேவதா ச யா |
ராமஸ்ய ச மன: காந்தா சா கதம் வினசிஷ்யதி ||
त्रयाणां भरतादीनां भ्रातॄणां देवता च या |
रामस्य च मनःकान्ता सा कथं विनशिष्यति ||
அருமையான பரதன் போன்ற மூன்று சகோதரர்கள் இருக்க, ராமபிரானுடைய மனதை கவர்ந்தவளாக இருக்கும் சீதா தேவி எப்படி இந்த தீயில் அழிந்து இருக்க முடியும்?

யத்வா தஹன கர்மாயம் ஸர்வத்ர ப்ரபுரவ்யய: |
ந மே தஹதி லாங்கூலம் கதம் ஆர்யாம் ப்ரதக்ஷ்யதி ||
यद्वा दहनकर्मायं सर्वत्र प्रभुरव्ययः |
न मे दहति लाङ्गूलं कथमार्यां प्रधक्ष्यति ||
அனைத்தையும் கொளுத்தி சாம்பலாக்கும் குணம் கொண்ட அக்னி என்னையே அழிக்காத போது, சீதா தேவியை எப்படி அழித்து இருக்க முடியும்?" என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்.

புன: ச சிந்தயத் தத்ர ஹனுமான் விஸ்மித: ததா |
ஹிரண்ய நாபஸ்ய கிரே: ஜல மத்யே ப்ரதர்சனம் ||
पुन: च चिन्तयत्तत्र हनुमान् विस्मित: तदा |
हिरण्य नाभस्य गिरे: जल मध्ये प्रदर्शनं ||
ஹனுமான் கடலை கடந்து கொண்டிருக்கும் போது, தான் இளைப்பாற இடம் கொடுக்க, ப்ரம்ம தேவனால் அனுப்பப்பட்ட மைனாக மலை கடலிலிருந்து வெளிவந்த ஆச்சர்யத்தை நினைத்து பார்த்தார்.

தபஸா சத்ய வாக்யேன அனன்யத் வாச்ச பர்தரி |
அபி சா நிர்தஹேதக்னி ந தாமாக்னி: ப்ரதக்ஷ்யதி ||
तपसा सत्यवाक्येन अनन्यत्वाच्च भर्तरि |
अपि सा निर्दहेदग्निं न तामग्निः प्रधक्ष्यति ||
சீதாதேவியின் தபசும், சத்தியமும், பதிவ்ரதா தன்மையுமே அக்னியை பொசுக்கி இருக்கும். அக்னி சீதையை பொசுக்கி இருக்காது."

ச ததா சிந்தயம் தத்ர தேவ்யா தர்மபரிக்ரஹம் |
சுஸ்ராவ ஹனுமான் வாக்யம் சாரனானாம் மஹாத்மனாம் ||
स तथा चिन्तयंस्तत्र देव्या धर्मपरिग्रहम् |
शुश्राव हनुमान्वाक्यं चारणानां महात्मनाम् ||
இப்படி ஹனுமான் தனக்குள் ஏற்பட்ட சோகத்தை நம்பிக்கை வார்த்தைகளால் மாற்றி கொண்டு இருக்க, அப்போது வானத்திலிருந்து தேவர்கள் பேசுவது கேட்டது.

அஹோ கலு க்ருதம் கர்ம துர்விஷஹ்யம் ஹனுமதா |
அக்னிம் விஸ்ருஜதாபீக்ஷ்னம் பீமம் ராக்ஷஸ சத்மணி ||
अहो खलु कृतं कर्म दुर्विषह्यं हनूमता |
अग्निं विसृजताभीक्ष्णं भीमं राक्षससद्मनि ||
"ஹனுமான் ராவணனின் பவனத்தை கொளுத்தி அபாரமான காரியம் செய்து விட்டார். 

ப்ரபலாயித ரக்ஷ: ஸ்த்ரீ பால வ்ருத்த சமா குலா |
ஜனகோ லோஹ லாத்மாதா க்ரந்தன்தீவாத்ரி கந்தரே || 
प्रपलायित रक्ष: स्त्री बाल वृद्ध समा कुला |
जनको लोह लाध्माता क्रन्दन्तीवाद्रिकन्दरे || 
ராக்ஷஸ பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் அனைவரும் தப்பித்து விட்டனர். இவர்கள் அனைவரும் மலை உச்சியில் பேசி கொண்டிருப்பது கேட்கிறது.




தக்தேயம் நகரீ லங்கா சாட்டப்ராகார தோரனா |
ஜானகீ ந ச தக்தேதி விஸ்மயோ அத்புத ஏவ ந: ||
दग्धेयं नगरी लङ्का साट्टप्राकारतोरणा |
जानकी न च दग्धेति विस्मयोऽद्भुत एव नः ||
இலங்கையின் மதில் சுவர்கள், நுழைவாயில் அனைத்தும் எரிந்து போனாலும், ராவணனின் மாளிகை அழிந்தும், அதற்கு உட்பட்ட அசோக வனம் பாதிப்பு அடையவில்லை. சீதா தேவி அக்னியால் பொசுக்கப்படவில்லை. இது பெரும் ஆச்சரியம்…

ச நிமித்தை: ச த்ருஷ்டார்தை: காரணை: ச மஹாகுணை: |
ருஷி வாக்யை: ச ஹனுமான் பவத் ப்ரீத மானஸ: ||
स निमित्तैश्च दृष्टार्थैः कारणैश्च महागुणैः |
ऋषिवाक्यैश्च हनुमानभवत्प्रीतमानसः ||
இதை கேட்ட ஹனுமான் உற்சாகம் அடைந்தார். தான் உணர்ந்த நல்ல சகுனத்தையும், தனக்குள் ஏற்பட்ட நல் எண்ணங்களையும், இப்பொழுது கேட்ட தேவ வாக்கினையும் நினைத்து, ஹனுமான் ஆனந்தம் அடைந்தார்.

தத: கபி: ப்ராப்த மனோரதார்தஸ்
தாமக்ஷதாம் ராஜசுதாம் விதித்வா |
ப்ரத்யக்ஷதஸ்தாம் புனரேவ த்ருஷ்ட்வா
ப்ரதி ப்ரயானாய மதிம் சகார ||
ततः कपिः प्राप्तमनोरथार्थस्
तामक्षतां राजसुतां विदित्वा |
प्रत्यक्षतस्तां पुनरेव दृष्ट्वा
प्रतिप्रयाणाय मतिं चकार ||
'சீதா தேவிக்கு ஒன்றும் ஆகவில்லை' என்று நம்பிக்கை பிறந்த பின், ஒரு முறை சீதா தேவியை பார்த்து விட்டு, கிளம்பி செல்லலாம் என்று முடிவு செய்து மீண்டும் அசோகவனம் சென்று சீதா தேவியை தரிசித்தார்.

Wednesday 17 June 2020

சோகத்தில் உள்ளவர்களுக்கு தர்மம் உபதேசிக்க வேண்டுமா? ஞானத்தை உபதேசிக்க வேண்டுமா?.. எது முதலில் தேவை?. ரகசியத்தை தெரிந்து கொள்வோம்..

சோகத்தில் உள்ளவனை எப்படி சமாதானம் செய்ய வேண்டும்? 
என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் காட்டுகிறார்...
சோகத்தில் இருப்பவனிடம் உடனேயே தர்மம் பேச கூடாது. 
சோகத்தில் இருப்பவனிடம் தர்மம் பேசினால் கேட்க மாட்டான்.
மேலும்
சோகத்தில் இருப்பவனிடம் 'தர்மம் பேச பேச, கேட்பவனுக்கு சோகம் அதிகமாகிவிடும்'.




சோகம் இல்லாமல் இருக்கும் போது தான் "தர்மம் பேச வேண்டும்".

"சோகம் இல்லாமல் இருக்கும் போது தான், தர்மம் புரியும்.
ஆதலால், 
சோகத்தை முதலில் நீக்கி விட்டு தான், தர்மம் பேச வேண்டும்"
என்று நமக்கு காட்டுகிறார் கிருஷ்ண பரமாத்மா.
"கர்ம யோகம், ஞான கர்ம சந்யாச யோகம், கர்ம சந்யாச யோகம், தியான யோகம், ஞான விஞ்ஞான யோகம்,ராஜ வித்யா யோகம், பக்தி யோகம்"
என்று பல வித தர்மங்களை சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர் என்று பார்க்கிறோம்.

அர்ஜுனன் சோகத்தில் ஆழ்ந்த போது, உடனே "கர்ம யோகம் என்ற தர்மத்தை சொல்கிறேன் கேள்" என்று ஆரம்பிக்கவில்லை என்று கவனிக்க வேண்டும்.

"சோகத்தில் மூழ்கியவனிடம் முதலில் ஞான யோகத்தை (ஸாங்க்ய யோகம்) (Jnana Yoga) பேசி விட்டு தான், 
பிறகு பல வித தர்மங்களை பற்றி பேசுகிறார்" 
ஸ்ரீ கிருஷ்ணர் என்று கவனிக்கலாம்.

"பாண்டவர்களுக்கு குண்டூசி சொத்து கூட தர முடியாது" என்று சொன்ன துரியோதனிடம் போரிடலாம் என்று வந்த அர்ஜுனன், இப்படி என் தாத்தாவையும், குருவையும் எதிர்க்கும் படியாக செய்து விட்டானே! 
இப்படி சொத்துக்காக என் தாத்தாவை கொன்று, குருவை கொன்று, என்ன சாதிக்கப்போகிறேன்?  
நான் போர் செய்ய மாட்டேன். 
பிச்சை எடுத்தாவது வாழ்கிறேன்"
என்று காண்டீபத்தை கீழே வைத்து விட்டான் அர்ஜுனன்.

சோக கடலில் மூழ்கி விட்டான் அர்ஜுனன்.

உடனே "கர்ம யோகம் சொல்கிறேன் கேள்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் ஆரம்பிக்கவில்லை.

கர்ம யோகப்படி,
"கர்மாவை செய். நீ ஷத்ரியன். க்ஷத்ரியனாக போர் செய்.
தாத்தாவாக இருந்தாலும், குருவாக இருந்தாலும், அதர்மம் செய்யும் துரியோதனன் பக்கம் இருக்கும் இவர்களை கொன்று விடு.
பலனை என்னிடம் விடு"
என்று உடனேயே கர்ம யோகம் பேசி இருந்தால்,
அர்ஜுனன் மேலும் சோகத்தில் ஆழ்ந்து போயிருப்பான்.




சோகம் உள்ளவனிடம், தர்மத்தை பேசுவதை காட்டிலும், "ஆத்ம ஞானத்தை சொன்னால் தான் சோகம் அடங்கும்".

பகவத் கீதை, முதல் அத்யாயத்திலேயே அர்ஜுனன் சோகத்தில் ஆழ்ந்து விடுகிறான்.

கிருஷ்ண பரமாத்மாவை சரணடைந்து வழி கேட்கிறான்.
முதலில் அவன் சோகத்தை போக்க "ஆத்மாவின் உண்மையான நிலை என்ன?" என்று சொல்லி,
ஞான யோகத்தை சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இரண்டாவது அத்யாயம் முழுக்க "ஞான யோகத்தை" (ஸாங்க்ய யோகம்) பேசி, அவன் சோகத்தை முழுவதுமாக போக்கிவிடுகிறார்.

இரண்டாவது அத்யாயம் முடிவிலேயே அர்ஜுனன் சோகத்தை விட்டு விடுகிறான்.

சோகம் இல்லாமல் இருக்கும் அர்ஜுனன் பிறகு பல கேள்விகள் தர்ம விஷயமாக கேட்கிறான்.
அவன் கேட்கும் பல கேள்விகளுக்கு, பல தர்மங்களை சொல்லி உபதேசம் செய்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர் என்று பார்க்கிறோம்.

சோகம் அதிகமாக இருப்பவர்கள், இரண்டாவது அத்தியாயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லும் உபதேசங்களை படித்தாலே சோகம் பறந்து விடும்.
சோகத்தில் சிக்கியவர்களை பார்த்து, கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்...
"கவலை பட தகுதியில்லாத உலக விஷயங்களுக்கு நீ சோகப்படாதே !
போனவனை பற்றியும் கவலை படாதே!  இப்போது சில காலம் இருப்பவனை பற்றியும் கவலைப்படாதே! 

அல்ப காலம் இந்த உடலில் இருக்க போகும் நீ, இதற்கெல்லாம் கவலை படுவதே வீண்!
உடல் அழியக்கூடியது.  
இது சம்பந்தமாக கவலைப்படுவதே வீண் !




ஆத்மா அழியாதது.  
நீயும், நானும் ஆத்மாவே! 
நாம் என்றுமே அழிவதில்லை. 
எந்த ஆத்மாவும் அழிவதில்லை.

இந்த ஆத்மா இந்த உடலுக்குள் சில காலம் இருந்தது. 
இந்த உடல் சிறு குழந்தையாக, சிறுவனாக, வாலிபனாக, கிழவனாக ஆகி விழுந்து விட்டது. 
ஆனால் உள்ளே இருக்கும் ஆத்மா இந்த உடலுக்குள் இருந்த போது எப்படி இருந்ததோ அதே போல எப்பொழுதும் இருந்தது... 
உடல் விழுந்தவுடன், இந்த ஆத்மா வேறு உடலுக்கு போகிறது. 
அவ்வளவு தான்.

இந்த உடலும், மனதும் தான் சோகம், சந்தோஷம், வெற்றி, தோல்வியை கொடுக்கிறது, அனுபவிக்கிறது.  
நீயோ ஆத்மா !  
இந்த உடல் தரும் இந்த வெற்றியையும் லட்சியம் செய்யாதே ! அவமானங்களையும் லட்சியம் செய்யாதே !
சாதாரணமாகவே இரு.
நீ தனியானவன்.  
நீ ஆத்மா.  

சிறிது காலம் இந்த உடலில் இருக்கிறாய். 
இந்த உடலை வைத்து என்ன நல்ல காரியங்கள் செய்ய முடியுமோ செய். 

மற்றபடி இந்த உடலால், மனதால் வரும் அனுபவங்களை சிறிதும் மதிக்காதே !"
என்று "ஞான யோகத்தை" சொல்லி, அர்ஜுனனின் சோகத்தை சரி செய்கிறார் கிருஷ்ணர்.
சோகம் தெளிந்து இருக்கும் அர்ஜுனனுக்கு பிறகு, 'கர்ம யோகம், பக்தி யோகம்' என்று பல வித தர்மங்களை சொல்லி...
"எந்த தர்மமும் உன்னால் கடைபிடிக்க முடியாது என்றால், என் மீது நம்பிக்கை வைத்து என்னையே சரணடைந்து விடு. நான் உன்னை காத்து, மோக்ஷம் வரை கூட்டி செல்கிறேன்"
என்று கீதையை முடிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

சோகத்தில் இருப்பவர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன 2வது அத்தியாயம் கட்டாயம் அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும். 
நம்மைவிட்டு, சோகம் ஓடி விடும்.

தர்மங்கள் தெரிந்து கொள்ள ஆசை இருந்தால், 3வது அத்தியாயம் ஆரம்பித்து பல தர்மங்களை அர்த்தம் புரிந்து படிக்கலாம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர்.
வாழ்க குருநாதர்.

Saturday 4 January 2020

சோகம் என்றால் என்ன? அத்வைத உபதேசம் என்ன சொல்கிறது? விஷிஷ்டாத்வைத உபதேசம் என்ன சொல்கிறது ? தெரிந்து கொள்வோமே!!

வேதம் ஒரு இடத்தில் "பரமாத்மா வேறல்ல, ஜீவாத்மா வேறல்ல" என்று "அத்வைதமாக" சொல்கிறது.

இன்னொரு இடத்தில் "ஜீவாத்மாக்கள் மோக்ஷம் அடைய, பரமாத்மா நாராயணனை துதிக்க வேண்டும்" என்ற பிரித்து "அத்வைதமாக" சொல்கிறது..




வேதம் "அத்வைதம் மட்டுமே சொல்கிறது என்று த்வைதத்தை புறக்கணிப்பது, முழுமையான வேதத்தின் அபிப்பிராயமாக இருக்க முடியாது".

அதே போல,
வேதம் "த்வைதம் மட்டுமே சொல்கிறது என்று அத்வைதத்தை புறக்கணிப்பது, முழுமையான வேதத்தின் அபிப்பிராயமாக இருக்க முடியாது".


"அத்வைதத்தில் ஒளிந்து உள்ள விசேஷ அர்த்தமான த்வைதத்தை சேர்த்து" சொல்வதே "விஷிஷ்டாத்வைதம்".
வேதத்தின் முழுமையான நோக்கத்தை சொல்வதே "விஷிஷ்டாத்வைதம்" (தெரிந்து கொள்ள படிக்கவும்).

ஜீவனாக பிறந்த நாம்,
கிருஷ்ண பக்தி செய்து (த்வைதம்) ,
கிருஷ்ண க்ருபைக்கு பாத்திரமாகி,
அவர் நம்மை மீண்டும் ஜீவனாக பிறக்க செய்யாமல், தன்னோடு சேர்த்து கொண்டு விட்டால் அதுவே மோக்ஷம் (அத்வைத நிலை).
----- விஷிஷ்டாத்வைதம்.

ஒரு சிஷ்யன் "தனக்கு ஒரு ஆத்ம குரு வேண்டும்" என்று ஆசைப்பட்டான்.
ஒரு நாள், ஒரு அத்வைத சந்யாசியை தரிசிக்க நேர்ந்தது.

அவரிடம் "தனக்கு உபதேசம் செய்யுமாறு" வேண்டினான்.
அவர் "ஸோகம்" (சோகம்) என்று உபதேசித்து, "இதையே எப்பொழுதும் சொல்லி கொண்டே இரு" என்று உபதேசித்தார்.

ஸோகம் (ஸ: அந்த: ஆத்மா ஆஹம்) என்றால், "உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்று அர்த்தம்.
மோக்ஷம் அடைந்த அத்வைத நிலை அது.

இதை புரிந்து கொண்டு ஜபம் செய்ய செய்ய, "உடல் நானல்ல, பிராணன் நான் அல்ல, மனசு நான் அல்ல, புத்தி நான் அல்ல... தனித்த பொருளாக உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்ற அனுபவம் ஏற்படும்.
இது ஒரு அத்வைத நிலை.

இப்படியே "ஸோகம்.. ஸோகம்.." என்று சொல்லிக்கொண்டு இருந்தான் இந்த சிஷ்யன்.




குருவின் கருணையால் "ஆத்மா தான் நான்" என்ற புரிதல் ஏற்பட்டாலும், மனதில் ஏனோ திருப்தி ஏற்படவில்லை அவனுக்கு.
ஏதோ ஒரு குறையை உணர்ந்தான்.

ஒரு சமயம், விஷிஷ்டாத்வைத சந்யாசியை கண்டான்.
அவரை பார்த்ததும் அவரிடமும் உபதேசம் பெறலாம் என்று ஆசைப்பட்டான்.

அந்த வைஷ்ணவரிடம் சென்று, "தனக்கு 'ஸோகம்' என்று ஏற்கனவே ஒரு குரு உபதேசம் செய்து இருக்கிறார்.. அதை தான் இன்று வரை ஜபித்து கொண்டு இருக்கிறேன்..
உங்களிடமும் உபதேசம் பெற ஆசைப்படுகிறேன்' என்றான்.
வைஷ்ணவர்,
"உன்னுடைய முதல் குரு உபதேசித்த மந்திரம் சரியானது தான்.. ஆனால் ஒரு அக்ஷரம் விட்டு போய் விட்டது..
அதனால் தான் உனக்கு திருப்தி ஏற்படாமல் இருக்கிறது..
'ஸோகம்' என்ற மந்திரத்தில், "தா" என்ற அக்ஷரத்தை முதலில் சேர்த்து "தாஸோஹம்" என்று சொல்" என்று உபதேசித்தார்.

"தாஸோகம்" என்றால், "உள்ளிருக்கும் ஆத்மா தான் நான். ஆனால் ஜீவாதமாகிய எனக்கு ஈஸ்வரன் இருக்கிறார். அந்த பரமாத்மாவின் தாஸன் நான்" என்று அர்த்தம்.

"மோக்ஷம் என்ற அத்வைத நிலையை அடைவதற்கு,
ஜீவனாக த்வைத நிலையில் இருக்கும் நாம், அந்த பரந்தாமனின் கருணையை பெற, அவருக்கு தாசனாக தொண்டு செய்யவேண்டும்"
என்று அத்வைதத்தில் சொல்லாமல் விட்ட விஷேச அர்த்தத்தை சேர்த்து கொடுத்தார் அந்த வைஷ்ணவ சந்நியாசி.

"தாஸோகம்" என்ற மந்திரத்தின் அர்த்தம் புரிந்து கொண்டு ஜபம் செய்ய செய்ய, "உடல் நானல்ல, பிராணன் நான் அல்ல, மனசு நான் அல்ல, புத்தி நான் அல்ல... தனித்த பொருளாக உள்ளிருக்கும் ஆத்மாவே நான்.
நான் ஜீவாத்மா. என்னை படைத்தவர் அந்த பரமாத்மா. எனக்கு ஆதாரமாக இருப்பவர் அந்த பரமாத்மா. நான் அவருக்கு தாஸன். அவருக்கு தொண்டு செய்வதே, என் கடமை. அவர் கருணையால் ஜீவாத்மாவாக இருக்கும் என்னை (த்வைத) மீண்டும் பிறக்க செய்யாமல் தன்னுடன் சேர்த்து (அத்வைதம்) கொள்வார்"
என்ற தெளிந்த ஞானம் ஏற்படும்.
இது அத்வைதத்தில் விசேஷ அர்த்தத்தை சேர்த்து கொண்ட "விஷிஷ்டாத்வைத" அனுபவ நிலை.




மனக் குறை நீங்கிய அந்த சிஷ்யன், "தாஸோகம்… தாஸோகம்" என்று ஜபம் செய்து கொண்டு இருந்தான்.

ஒரு சமயம், மீண்டும் தன்னுடைய முதல் குருவை பார்க்க நேர்ந்தது.
அத்வைத சந்நியாசி இவனிடம் "சோஹம் என்ற உபதேச மந்திரத்தை ஜபம் செய்கிறாயா?" என்று கேட்டார்.

"ஆம்.. சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.. அதனோடு "தா" சேர்த்து "தாஸோகம்" என்று இன்னொரு சந்நியாசி சொல்ல சொன்னார்.. அப்படியே சொல்லி கொண்டு இருக்கிறேன்" என்றான்.

அத்வைத சந்நியாசி "பரவாயில்லை... அவரும் ஒரு அக்ஷரம் விட்டு விட்டார். இப்பொழுது சொல்லிக்கொண்டு இருப்பதோடு 'ஸ' என்ற அக்ஷரத்தை சேர்த்து 'ஸதா ஸோகம்' என்று சொல்" என்று உபதேசித்தார்.

"ஸதா" என்றால், "எப்பொழுதும், எந்த நிலையிலும்" என்று அர்த்தம்.

"ஸதா சோகம்" என்றால் "எப்பொழுதும், எந்த நிலையிலும், உடல் நானல்ல, பிராணன் நான் அல்ல, மனசு நான் அல்ல, புத்தி நான் அல்ல... தனித்த பொருளாக உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்று அர்த்தம்.
இது ஒரு அத்வைத நிலை.

"ஆத்மாவே நான். ஜீவானாக பிரிந்து கிடக்கும் என்னை, அந்த பரமாத்மா சேர்த்து கொண்டால் தான், அத்வைத நிலை ஏற்படும். அவரே எனக்கு ஆதாரம். அவரே எனக்கு ஈஸ்வரன். அவரின் தாஸன் நான்" என்ற தெளிவுடன் இருந்த அந்த சிஷ்யன், இப்படி தனக்கு "ஸதா சோகம்" என்று உபதேசித்து விட்டாரே என்று, மீண்டும் வைஷ்ணவ சந்யாசியை பார்க்க சென்றான்.
விஷிஷ்டாத்வைத சந்நியாசி "பரவாயில்லை... அவரும் ஒரு அக்ஷரம் விட்டு விட்டார். இப்பொழுது சொல்லிக்கொண்டு இருப்பதோடு 'தா' என்ற அக்ஷரத்தை சேர்த்து 'தாஸ தாஸோகம்' என்று சொல். இதுவே முடிவான நிலை." என்று உபதேசித்தார்.

"தாஸ தாஸோகம்" என்றால், "உள்ளிருக்கும் ஆத்மா தான் நான். ஆனால் ஜீவாதமாகிய எனக்கு ஈஸ்வரன் இருக்கிறார். அந்த பரமாத்மாவின் தாஸனாக யார் இருக்கிறாராரோ, அவருக்கு தாஸன் நான். அவரே என் குரு. அவர் அந்த ஈஸ்வரனுக்கு அடியார். நான் அந்த அடியார்க்கு அடியான்" என்று அர்த்தம்.

"குரு வழியே செல்" என்று தீர்க்கமான முடிவை வைஷ்ணவ சந்நியாசி உபதேசம் செய்ய, அத்வைத சந்யாசியும் பிறகு மறுக்க இயலவில்லை.

இப்படியே "தாஸ தாஸோகம்.. தாஸ தாஸோகம்.." என்று சொல்லிக்கொண்டு அந்த வைஷ்ணவ சந்யாசிக்கு அடியான் என்று குருவுக்கு கீழ் படிந்த, குரு காட்டும் வழியை பின்பற்றினான் அந்த சிஷ்யன்.

குருவே நமக்கு துணை. 


Friday 27 September 2019

நெருக்கமானவர்களின் மரணம் வேதனை தரக்கூடியது!! மரணத்தின் இழப்பை மனிதர்கள் எப்படி பார்க்கிறார்கள்? தலைவர்கள், மகான்கள், பரமாத்மா எப்படி பார்க்கிறார்கள்? ஒரு அலசல்.

To read in English, click here
இறப்பு - மரணம்


மனிதர்கள்
மிகவும் நெருக்கமான ஒருவர் மரணிக்கும் போது, சொல்ல முடியாத மன துயரை அடைகிறார்கள்..
தன்னம்பிக்கையை இழந்து  விடுகிறார்கள்...
அவர்களால் சில காலங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் போகிறது.
சிலருக்கு ஆயுள் முழுக்க சிலரது மரணம் முடக்கி போடுகிறது...
இழப்பை நினைத்து துக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
தலைவர்கள், அரசர்கள்
மிகவும் நெருக்கமான ஒருவர் மரணிக்கும் போது, மன துயர் அடைந்தாலும், சோர்ந்து விடுவதில்லை.
இவர்களுக்கு ஒரு சிலரல்ல, மிகவும் நெருக்கமானவர்கள் பல ஆயிரம் பேர் இருப்பதால்,
நெருக்கமான ஒரு இழப்பை பார்த்தாலும்,
இன்னும் பல நெருக்கமானவர்கள் இருப்பதால், உற்சாகத்தை இவர்கள் இழப்பதில்லை.


தன்னம்பிக்கையை இழப்பதில்லை.
சோர்ந்து விடுவதில்லை.  
அவர்களால் காரியங்கள் தடைப்படுவதில்லை.

"மரணம் தவிர்க்க முடியாத ஒன்று" என்று புரிந்து கொள்கிறார்கள்..
இன்னும் பல ஆயிரம் நெருக்கமானவர்களை பார்த்து, உற்சாகம் அடைகின்றனர்.. அவர்களுக்காக ஓடுகின்றனர்.

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியம்:
நம்மால் ஒரு நெருக்கமானவர் இழப்பை தாங்கி கொள்ளும் சக்தி, பக்குவம் இல்லாது இருந்தால்,
நம் வட்டத்தை பெரிது படுத்த முயற்சிக்க வேண்டும்.

"அன்பினால், உதவியால், தனி மனித ஒழுக்கத்தால்" 
மனித உள்ளங்களை தன் அருகில் சேர்த்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

எத்தனைக்கு எத்தனை நம் உறவுகள் பரந்து விரிகிறதோ!!
அத்தனைக்கு அத்தனை, நம்மால் இது போன்ற தவிர்க்க முடியாத இழப்புகளில் இருந்து விரைவில் வெளி வர முடியும்..

மகான்கள், ஞானிகள்
மிகவும் நெருக்கமான ஒருவர் மரணிக்கும் போது, மன துயர் அடைந்தாலும், 'ஆத்மா அழிவற்றது, உடல் அழிய கூடியது' என்ற உண்மையை தெளிவாக புரிந்து கொள்கிறார்கள்.

தன்னுடன் இது நாள் வரை, நெருக்கமாக இருந்த ஜீவன் இந்த உடலை விட்டு சென்று விட்டான், 'அவ்வளவு தான்' என்று அறிகிறாகள்.



'அந்த ஜீவன் நற்கதி அடைய "பாகவதம், நாம சங்கீர்த்தனம்" போன்றவை சொல்லி, ஜீவனை கேட்க செய்து புண்ணிய லோகங்களுக்கு செல்ல வழி செய்கின்றனர்' மகான்கள்.
நெருக்கமாக பழகிய மகாத்மா தன் உடலைவிட்டு பிரிந்தாலும், மகான்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுவதில்லை.. பேரிழப்பையும் ஞானத்தால் எதிர்கொள்கிறார்கள்.
அவர்கள் தங்கள் ஆனந்த ஸ்வரூபத்தை மறப்பதில்லை.
அவர்கள் செயலில் மாறுபடும் தெரிவதில்லை.

உண்மையான அறிவை பெற்றவர்களாகவே (ஞானியாகவே) இருக்கின்றனர், மகான்கள்.
அத்தகைய மகான்களை, "கண்ணால் கண்டவர்கள் கூட" அந்த மனப்பக்குவத்தை பெற்று விடுகிறார்கள்.

பாரத மண்ணில் மட்டுமே, அத்தகைய மகான்கள் அவதரிக்கிறார்கள் என்பது இந்த பாரத மண்ணின் சிறப்பு.

ஏன் மகான்கள், ஞானிகள் மற்ற தேசங்களில் பிறப்பதில்லை? தெய்வங்கள் கூட பாரத மண்ணில் மட்டுமே அவதரிக்க நினைப்பதை ஏன்? பாரத மண்ணின் பெருமையை தெரிந்து கொள்ள இங்கு  படியுங்கள்.



குருவாகவும் இருக்கும் மகான்கள்
மிகவும் நெருக்கமான ஒருவர் மரணிக்கும் போது, மன துயர் அடைந்தாலும், 'ஆத்மா அழிவற்றது, உடல் அழிய கூடியது' என்ற உண்மையை மகான்கள் சாதாரணமாகவே புரிந்து கொள்கிறார்கள்.
இந்த ஞானத்தாலேயே அவர்கள் துக்கப்படுவதில்லை.
இது தவிர,
குருவாக இருக்கும் போது, பல ஆயிரம் பக்தர்கள் அவரை குருவாக ஏற்று இருப்பார்கள்.

தன் ஞானத்தாலேயே மனப்பக்குவம் கொண்ட மகான்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில்,
சில நெருக்கமான பக்தர்கள் காலகதி (மரணம்) அடைவதை, தவிர்க்க முடியாத ஒன்று என்றும் ஏற்க முடிகிறது.




ஞானியே மரணத்தை கண்டு துக்கப்படமாட்டார் என்று சொல்லும் போது,
ஞானியாக இருந்து, ஆயிரக்கணக்கான நெருக்கமான பக்தர்களை தன்னிடம் சேர்த்து வைத்துள்ள குருவாகிய ஞானிக்கு துக்கம் ஏற்படுவதே இல்லை.

அப்படிப்பட்ட "ஞானியாகிய குரு" நமக்கு கிடைத்து விட்டால், அதுவே பாக்கியம்.
அவர் நினைவே, நமக்கு அனைத்து நல்லதையும் கிடைக்க செய்யும்.
அவர் நினைவே, நமக்கு பக்குவத்தை தரும்.
அவர் நினைவே, வரப்போகும் பெரும் சவால்களை பனி போல விலக செய்யும்.
'சத்குருவை' அடைந்தவன், கோடி கோடி ஜென்மங்கள் புண்ணியம் செய்தவன்.

பகவான் நாராயணன்
மிகவும் நெருக்கமான ஒரு பக்தன் மரணிக்கும் போது, நாராயணனே மன துயர் அடைந்தாலும், ஆத்மா அழிவற்றது, உடல் அழிய கூடியது என்ற உண்மையை அறிந்தவர்.

அந்த ஜீவனை தன்னுள் சேர்த்து கொண்டு "மோக்ஷம் என்ற பரமபத்தை" கொடுத்து விடுகிறார்.


அவர் பார்வையில் ஞானியின் மரணம், ஒரு ஆனந்தம்.
அந்த ஜீவனை "தன்னிடம் கூட்டி செல்ல போகிறேன்" என்று ஆனந்த படுகிறார்.

மோக்ஷத்துக்கு தகுதி இல்லாத பக்தனாக இருந்தாலும், அந்த ஜீவனுக்கு அதை விட அற்புதமான மற்றொரு பிறவியை கொடுத்து, மேலும் தன்னிடம் பக்தி செய்ய, வாழ்க்கையை அமைத்து கொடுத்து, ஒரு ஜென்மத்தில் தன்னிடம் சேர்த்து கொண்டு விடுகிறார்..

தன்னிடம் சேர்த்து கொண்ட பின், பகவான் அந்த ஜீவனை மீண்டும் பிறக்க வைப்பதில்லை.

பூலோகத்தில் அந்த ஜீவன் தனக்கு என்னென்ன சேவை செய்ய ஆசைப்பட்டானோ, அதை, பரமபதத்தில் எப்பொழுதும் செய்து கொண்டே ஆனந்தமாகவே இருக்க செய்கிறார்.

மோக்ஷம் அடைந்தவர்கள், "திவ்ய பார்ஷத" ரூபத்துடன் வைகுண்டத்திலேயே இருக்கிறார்கள்.

ப்ரம்ம தேவன் ஆயுசு முடிந்து. ப்ரம்ம லோகம் உட்பட 14 லோகங்களும் அழிந்தாலும், வைகுண்டம் அழிவதில்லை.

மோக்ஷம் அடைந்தவர்கள், எப்பொழுதுமே பரமாத்மாவுடன் இருக்கின்றனர்.

"திவ்ய பார்ஷத ரூபம்" பெற்று மோக்ஷம் அடைந்தவர்கள், பரவாசுதேவனை போலவே அழகான ரூபத்தை பெறுகிறார்கள்.
தன்னிடம் உள்ள அனைத்தையும், அவர்களுக்கும் கொடுத்து விடுகிறார்.

மோக்ஷம் அடைந்த இவர்களும் நான்கு கைகள் கொண்டு, நாராயணன் போலவே அவர்களும் சங்கு சக்கரம் வைத்து இருக்கிறார்கள்.

மோக்ஷம் அடைந்த இவர்கள் இஷ்டப்பட்டால், 14 லோகங்களுக்கும் செல்ல முடியும், தானே அருள் செய்யவும் முடியும்.

ஆதி சேஷனின் அவதாரமான ராமானுஜர் (1017AD-1137AD), தன் உடலை விட்டு மோக்ஷம் சென்று விட்டார்.
"ராமானுஜ தாசனாக" இன்றும் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.
ராமானுஜரை பக்தியுடன் தியானித்து ஒரு காரியம் செய்தால், இன்றும் அவர் அருள் கிடைக்கிறது பக்தர்களுக்கு.

பரமாதமா நாராயணன், "மோக்ஷம் அடைந்த" தன் பக்தர்களுக்கு, தன்னை போலவே அவர்களும் அணுகிரஹம் செய்யும் பலத்தை கொடுக்கிறார்.

"நாராயணன் வேண்டாம், ராமானுஜரே போதும்" என்று சொன்னாலும், ராமானுஜ தாசனுக்கும் மோக்ஷ வாசலை திறந்து விடுகிறார்.
கருணையே வடிவானவர் 'ஸ்ரீமந் நாராயணன்'.


சாகும் தருவாயில் அஜாமிளன் "நாராயணா" என்று கதற,
எம பாசத்தை எம கிங்கரர்கள் வந்து போட்டு, ஜீவனை உடலை விட்டு வெளியே எடுத்து எம லோகம் இழுத்து செல்ல முயற்சிக்கும் போது,
மோக்ஷம் அடைந்த "திவ்ய பார்ஷதர்கள்" அங்கு வந்து, எம கிங்கரர்களை மிரட்டி, "இந்த ஜீவன் மோக்ஷத்துக்கு செல்ல தகுதி பெற்றவன்" என்று அவன் மரணத்தை தடுத்தார்கள் என்று பார்க்கிறோம்.
பயந்து போன எம கிங்கரர்கள், ஓடி சென்று, "நாராயணா.. என்று சாகும் போது சொல்லி விட்டான்" என்று எம தர்மனிடம் சொல்ல,
"இனி அந்த ஜீவனை தொடாதீர்கள்..." என்று எம தர்மன் கட்டளை இட்டு விட்டான்.

அங்கு திவ்ய பார்ஷத ரூபத்தில் வந்த மோக்ஷம் அடைந்தவர்களும், நாராயணனுக்கு நிகராக 'அழகையும், நான்கு கைகளில் சங்கு சக்கரம் வாள் ஏந்தி இருந்தார்கள்' என்று கவனிக்கும் போது தான், மோக்ஷம் அடைந்தவர்கள் எத்தனை ஆனந்த நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது புரியும்.

மரண வாயிலை பார்த்த அஜாமிளன், "நாராயணா" என்று தன் மகனை நினைத்து கூப்பிட்டதற்கே, இப்படி திவ்ய பார்ஷதார்கள் வந்து "அஜாமிளன் மோக்ஷம் அழைத்து செல்ல தகுதி பெற்றவன்" என்று சொன்னதை கேட்டதும், சில காலங்கள் பூமியிலேயே நாராயணனையே தியானம் செய்து கொண்டு இருந்து, கடைசியில், அஜாமிளனும் மோக்ஷம் என்ற வைகுண்டத்தை அடைந்தான். 
அஜாமிளனும் திவ்ய பார்ஷத ரூபம் பெற்று விட்டான்.
நாராயணன் தன்னிடம் உள்ள அனைத்து "ஐஸ்வர்ய"த்தையும், "அணுகிரஹம் செய்யும் உரிமை"யையும், மோக்ஷம் அடைந்தவர்களுக்கு கொடுத்து விடுகிறார்.

அனைத்தையும் மோக்ஷம் அடைந்தவர்களுக்கு கொடுத்து விட்டாரே!! அனைத்தையும் மோக்ஷம் அடைந்தவர்களும் "சர்வ சக்தியுள்ளவர்கள்" என்றால், 
'பல பரமாத்மா வைகுண்டத்தில் உண்டு என்று ஆகி விடுமே?' 
என்ற கேள்வி நமக்கு எழலாம்.

அவர்களும் பரமாத்மாவா? என்ற கேள்வி நமக்கு எழலாம்...


தன்னிடம் உள்ள அனைத்து ஐஸ்வர்யத்தையும்,
தன்னை போன்றே திவ்ய ரூபத்தையும்,
அணுகிரஹம் செய்யும் சக்தியையும்,
எங்கும் தடையில்லாமல் செல்ல சக்தியையும், உரிமையையும்,
மோக்ஷம் அடைந்தவர்களுக்கு கொடுத்த பரவாசுதேவன், 
'இரண்டு ஐஸ்வர்யங்களை' மட்டும் தன்னிடம் மட்டுமே வைத்துள்ளார்.

தன்னிடம் உள்ள அனைத்தையும், மோக்ஷம் அடைந்த ஜீவனுக்கு கொடுத்தாலும்,

  1. 'கௌஸ்துபம்' என்ற மாலையையும்,
  2. 'ஸ்ரீவத்ச'த்தையும் மட்டும் 
யாருக்கும் தருவதில்லை, பரவாசுதேவன்.

"இந்த இரண்டை மட்டும், தன்னிடம் மட்டுமே வைத்துள்ளார்" பரமாத்மா நாராயணன்.

கோடிக்கணக்கான 'ஜீவாத்மாக்களை' படைத்து, அவர்களை தரிப்பவர் பரவாசுதேவன்.
ஜீவாத்மாக்களின் கூட்டத்தை "கௌஸ்துப மாலை"யாக அணிந்துள்ளார்.
ஜீவாத்மாக்கள் கோடி ஜென்ம புண்ணியத்தால்,
மனித (நர) பிறவி எடுத்து, பக்தி செய்து கடைசியில், பிறவா நிலை அடைய, பரவாசுதேவனை அடைக்கலம் (அயணம்) அடைவதால்,
பரவாசுதேவனுக்கு "நாராயணன்" என்று பெயர் உண்டு.
'நர'ர்கள் பரவாசுதேவனை அடைக்கலம்(அயணம்) புகுந்து மோக்ஷத்தை பெறுவதால், பரமாத்மாவுக்கு 'நாராயணன்' என்றும் பெயர்.

'நாராயணன்' பரவாசுதேவனுக்கு காரண பெயர்.

"ஸ்ரீவத்சம்" என்பது மஹாலக்ஷ்மியை குறிக்கும்.
பரமாத்மா படைத்த, இந்த அனைத்து உலகங்கள், மனித உடல்கள், பறவைகள், மிருகங்கள்,
அதில் காணப்படும் வித விதமான 'அழகுகள்', அனைத்தும் மஹாலக்ஷ்மியிடம் கடாக்ஷத்தால் வெளிப்படுகிறது.


"கௌஸ்துபம்" அணிந்தவராக, "ஸ்ரீவத்சம்" கொண்டவராக, பரமாத்மா ஒருவரே இருக்கிறார். 
ஆதலால்,
பரமபதத்தில், பரமாத்மாவின் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுக்கொண்டு, ஆனந்தமாக பரவாசுதேவனை தரிசித்து கொண்டே இருக்கிறார்கள் "மோக்ஷம் அடைந்தவர்கள்".

பரமாத்மா, ஆனந்த ஸ்வரூபனாக இருந்தாலும், உலக நிர்வாகம் என்ற பெரும் பொறுப்பை தான் ஒருவனே செய்கிறார்.
கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களுக்கு "ஆதாரமாக" இருந்து கொண்டு, உலகை படைத்து,
ப்ரம்ம தேவனை நியமித்து,
தானே விஷ்ணுவாக உலகை காத்து,
தானே ருத்ரனாக அந்தந்த காலங்களில் உலகை அழித்து,
உலகில் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தை கிடைக்க செய்து,
இஷ்டப்படும் போதெல்லாம் தானே அவதரித்து கொண்டு,
ஜீவாத்மாக்கள் அனைத்தும் தன்னிடம் பக்தி செய்து மோக்ஷம் அடையும் வரை,
முடிவில்லா 'லீலையை' தன் சங்கல்பத்தாலேயே செய்து கொண்டே இருக்கிறார்.

ஓம் நமோ நாராயணாய...





Monday 11 June 2018

மனம் தளர்ச்சி அடையும் போது, தற்கொலை வரை நம்மை கொண்டு போகும். வீர ஹனுமானும் இதற்கு தீர்வு சொல்கிறார்






மனதில் நமக்கு தளர்ச்சி அல்லது சலிப்பு அடையும் போது சோகம் உண்டாகும்.

சோகம் உண்டானால் சோம்பேறித்தனம் உண்டாகும்.

சோம்பேறித்தனம்  உண்டானால்
மனம் வீணான பயத்தை உண்டாக்கும்.

வீணான பயம், புத்தியை குழப்பும்.

புத்தி குழம்ப குழம்ப, தாழ்வு மனப்பான்மை உண்டாகும்.

தாழ்வு மனப்பான்மை ஒரு மனிதனை தற்கொலை செய்து கொள்ள கூட தூண்டி விடும்.

தாழ்வு மனப்பான்மை, தன்னால் மற்றவர்க்கு கஷ்டம், தான் இருப்பதும் வீண் என்று தோன்ற செய்து விடும்.

சோம்பேறித்தனம் அதிகமாவதால், உடல் அமைதியாக இருந்தாலும் மனம் அடங்காமல் இருப்பதால், மனம் வீணான பொய்யான கேள்விகளை எழுப்பும்.
இதனால் ஏற்படும் பயம், தாழ்வு நிலையை ஏற்படுத்தும்.
தாழ்வு மனப்பான்மை தற்கொலை வரை தூண்டி விடும்.

இந்த சோக நிலையிலிருந்து விடு பட, வழி என்ன?
செயலில் உற்சாகமும், தெய்வ ப்ரார்த்தனையுமே !

புத்தி உடையவரும், பலசாலியும், புகழ் உடையவரும், தைரியம் உடையவரும், பயம் அறியாதவருமான ஹனுமனுக்கே தற்கொலை செய்து கொள்ளலாமா!! என்று ஒரு ஸமயம் தோன்றிவிட்டது.
நம்ப முடியுமா நம்மால்?







ஆனால் சோம்பேறித்தனத்தை விரட்டி, உற்சாகத்துடன் தெய்வ நம்பிக்கையுடன் செயல் பட்டால் வாழ்வில் வழி பிறக்கும் என்று காட்டினார். இதுவே நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம்.

ஹனுமான் நள்ளிரவு வரை இலங்கை முழுவதும் ஸீதையைத் தேடித் தேடி அலைந்து காணாமல் மனம் சலித்து ஒரு தனித்த மரத்தில் அமர்ந்து வருந்தலானார்.
இனி இலங்கையில் ஒரு நாலு அங்குலம் இடம் கூட இல்லையாம். அப்படி தேடிவிட்டாராம்.
காண முடியவில்லையே என்று நினைத்து ஏங்கி தவித்து கண்ணீர் விட்டார்.

ஸீதையைத் தேடியும் காணாதபடி ஹனுமான் வருந்தி தனக்குள் தானே சிந்திக்கலானார்.

ஸீதையைக் காணாமல் நான் திரும்புவேனாகில் இவ்வளவு முயற்சியும் வீணே!
நான் கடலைத் தாண்டியது கூட பெரிய காரியமில்லை.
ஸீதையைக் காணாமல் திரும்பிச் சென்று, வானரர்களுக்கு என்ன பதில் சொல்லுவேன்?
ஸீதையைக் காணவில்லை என்று சொல்லிக்கொண்டு சுக்ரீவனிடம் சென்றால், சுக்ரீவன் வானரர்களை கொன்று போடுவான்.
ஸம்பாதி இங்கு ஸீதை இருப்பதாக சொன்னாரே, அதுவும் பொய்யோ?
ஸீதையைக் காணாமல் ராமரும் உயிர் தியாகம் செய்வார்.
இதனால், அவர் தம்பி லக்ஷ்மணனும் உயிரை விட்டு விடுவார்.
நண்பர்களுக்கு உபகாரம் செய்ய முடியவில்லையே என்று சுக்ரீவனும் உயிர் துறப்பான்.
தலைவனை இழந்த  வானரர்களும் மாண்டு போவார்கள்.
தன் தமையன் வனவாஸம் முடிந்து வராததால் பரதனும், சத்ருக்னனும் தீக்குளித்து விடுவார்கள்.
இதனால் அயோத்தி நாட்டு மக்களும் உயிர் துறப்பது திண்ணம்.
இவ்வளவு பேர்கள் உயிர் துறப்பதை விட நான் இங்கேயே ப்ராணத் தியாகம் செய்து விடுவது நலம் என்று நினைத்தார்.

பிறகு இத்தகைய அதைரியத்திற்கு இடம் தரக்கூடாது.
சோகம் யாவரையும் சோம்பேறி ஆக்கிவிடும்.
சோகத்தை விட உற்சாகமே முக்கியம்.

எனவே உற்சாகத்தை கைவிடலாகாது. தெய்வ அனுகூலத்துடன் மறுமுறை ஸீதையைத் தேட முயற்சிப்போம் என்று நினைத்தார்.




மனித முயர்சியோடு தெய்வ துணையும் வேண்டும் என்று உணர்ந்தார்.
ஸீதையை காண ஸீதையையே மனதில் வேண்டினார். இவ்வாறு ஸீதையை வணங்கி விட்டு உற்சாகத்துடன் எழுந்த ஹனுமானுக்கு அசோக வனம் கண்ணிற்பட்டது.
ஆஹா! இந்த இடம் இதுவரை தேடவில்லையே! நிச்சயம் ஸீதை இங்கு தான் இருப்பாள் என்று ஹனுமான் சந்தோஷத்துடன் அசோகவனத்தை நோக்கி நடந்தார். ஸீதையைக் கண்டார்.

என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று பயந்த ஒரு விஷயம், உற்சாகம், முயற்சி, தெய்வ பிரார்த்தனை மூலம் இங்கு எளிதானது.
இதுவே நாமும் அறிந்து கொள்ள வேண்டிய பாடம்.

ராமாயணத்தில் இது போன்று வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்.