Followers

Search Here...

Showing posts with label என்றால் என்ன. Show all posts
Showing posts with label என்றால் என்ன. Show all posts

Monday 1 May 2023

"ஸ்மார்த்த" "ஸ்ரௌத்த" தர்மம் என்றால் என்ன? பிராம்மண வர்ணத்தில் அனுமதிக்கப்படாத விவாஹம் எது? அறிவோம் மஹாபாரதம்

பராசர ரிஷி, சத்யவதி மூலமாக வியாசரை நொடி பொழுதில் யமுனை கரையில் பிறப்பிக்க செய்தார்.  

அப்போது, அவளை பார்த்து, சிறந்த தர்மம் எது? என்று விளக்க ஆரம்பிக்கிறார்.

शिष्टानां तु समाचारः शिष्टाचार इति स्मृतः।

श्रुतिस्मृतिविदो विप्रा धर्मज्ञा ज्ञानिनः स्मृताः।।

- adi parva (Vyasa mahabharata)

சிஷ்டர்கள் தொன்றுதொட்டு செய்து கொண்டு வரும் ஆசாரமே - "சிஷ்டாசாரம்" என்று சொல்லப்படுகிறது.

வேதத்தையும்+தர்ம சாஸ்திரத்தையும் (அனைத்து ஸ்ம்ருதிகளையும்)+தர்மஸூக்ஷ்மத்தையும் அறிந்த வேதியனே (விப்ரன்) - "ஞானி" (அறிவு உள்ளவன்) என்று சொல்லப்படுகிறான்.


धर्मज्ञैर्विहितो धर्मः श्रौतः स्मार्तो द्विधा द्विजैः।

- adi parva (Vyasa mahabharata)

தர்மம் தெரிந்த இரட்டை பிறப்பாளர்களால் (பூணூல்/காயத்ரீ உபதேசம் பெற்ற பிராம்மணர்கள்/வைசியர்கள்/க்ஷத்ரியர்கள்), "ஸ்ரௌத்த" தர்மம், "ஸ்மார்த்த" தர்மம் என்ற 2 தர்மங்கள் விதிக்கப்பட்டு உள்ளது. 

दानाग्निहोत्रमिज्या च श्रौतस्यैतद्धि लक्षणम्।।

- adi parva (Vyasa mahabharata)

"தானம் + அக்னி ஹோத்ரம் + யாகம்" இந்த மூன்றும் "ஸ்ரௌத்த" தர்மத்தில் உள்ள லக்ஷணங்கள்.


स्मार्तो वर्णाश्रमाचारो यमैश्च नियमैर्युतः।

- adi parva (Vyasa mahabharata)

"யமம்+நியமம்" போன்ற வர்ணாஸ்ரம தர்மத்தை கடைபிடித்து கொண்டிருப்பது "ஸ்மார்த்த" தர்ம லக்ஷணம்.

(யமம் - பிற உயிரை துன்பம் செய்யாமல் இருப்பது, பொய் பேசாமல் இருப்பது, திருடாமல் இருப்பது, தகாத காமம் இல்லாமல் ப்ரம்மச்சர்யத்தில் இருப்பது, அதர்மமான பொருளில் பற்று இல்லாமல் இருப்பது. யமம் என்பது இந்த குணங்களை குறிக்கிறது)

(நியமம் - தூய்மையாக (சௌசம்) இருப்பது, கிடைத்ததில் திருப்தி கொள்வது, தவம் செய்வது, வேதம் ஓதுவது, பகவத் தியானம் செய்வது. நியமம் என்பது கட்டுப்பாடுகளை குறிக்கிறது


धर्मे तु धारणे धातुः सहत्वे चापि पठ्यते।।

- adi parva (Vyasa mahabharata)

தர்மமே அனைத்திற்கும் ஆதாரம். ஆதலால் அவரவர் தர்மத்தை விட கூடாது என்று சொல்லப்படுகிறது. 


तत्रेष्टफलभाग्धर्म आचार्यैरुपदिश्यते।

अनिष्टफलभाक्रेति तैरधर्मोऽपि भाष्यते।।

तस्मादिष्टफलार्थाय धर्ममेव समाश्रयेत्।

- adi parva (Vyasa mahabharata)

தன்னுடைய தர்மத்தில் யார் யார் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இனிய பலன்கள் தானாக கிடைக்கும் என்று ஆசார்யர்கள் உபதேசிக்கிறார்கள்.

நல்ல பலன் நமக்கு கிடைப்பதற்காக, நம் தர்மத்தை நாம் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். 

ब्राह्मो दैवस्तथैवार्षः प्राजापत्यश्च धार्मिकः।।

विवाहा ब्राह्मणानां तु गान्धर्वो नैव धार्मिकः।

- adi parva (Vyasa mahabharata)

பிராம்மண விவாஹம் (1), தெய்வ விவாஹம் (2), ஆர்ஷம் என்ற விவாஹம் (3), ப்ராஜாபத்யம் என்ற விவாஹம் (4) தர்மத்துக்கு உட்பட்ட விவாஹ முறைகள். 

காந்தர்வ விவாஹம் (LOVE MARRIAGE) ஒரு போதும் பிராம்மண வர்ணத்தில் (Today MLA/MP are in this Varna guiding Kshatriya (army/police)) உள்ளவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட விவாஹம் ஆகாது. 


त्रि-वर्णेतर जातीनां गान्धर्वासुर राक्षसाः।।

- adi parva (Vyasa mahabharata)

பிராம்மண/க்ஷத்ரிய/வைஸ்ய வர்ணத்தில் இல்லாதவர்களுக்கு காந்தர்வ விவாஹம் (5), ஆஸுர விவாஹம் (6), ராக்ஷஸ விவாஹம் (7) தர்மமாக கூறப்படுகிறது. 


पैशाचो नैव कर्तव्यः पैशाचश्चाष्टमोऽधमः।

सामर्षां व्यङ्गिकां कन्यां मातुश्च कुलजां तथा।।

- adi parva (Vyasa mahabharata)

பைஸாச விவாஹம் (8) யாருமே செய்து கொள்ள கூடாது. இந்த 8வது விவாஹம் இழிவானது.

Friday 13 January 2023

மகாபாரதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? அறிவோம்...

"மகாபாரதம்" என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?

ஸுத பௌராணிகரான உக்கிரஸ்ரவஸ், சௌனகர் மற்றும் குழுமி இருந்த ரிஷிகளுக்கும் வியாசர் கொடுத்த மஹாபாரத சரித்திரத்தை விவரித்தார்.


சுருக்கமாக மஹாபாரத நிகழ்வை சொல்லி விட்டு, எதற்காக "மகாபாரதம்" என்று பெயர் வைத்தார் வியாசர் என்று சொல்கிறார்.


पुर: अकिल सुरैः सर्वैः समेत्य तुलया धृतम्।

चतुर्भ्यः सरहस्येभ्यो वेदेभ्यो हि अधिकं यदा।।

तदाप्रभृति लोकेऽस्मिन् महाभारतम् उच्यते।

महत्त्वे च गुरुत्वे च ध्रियमाणं यत: अधिकम्।।

महत्त्वाद्भारवत्त्वाच्च महाभारतम् उच्यते।।

निरुक्तम् अस्य यो वेद सर्वपापैः प्रमुच्यते।।

- மகாபாரதம் (வியாசர்)

தேவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு, வியாசரின் மகாபாரதம் கனமானதா? இல்லை நான்கு வேதங்கள் கனமானதா? என்று சோதித்தனர்.

நான்கு வேதங்களை காட்டிலும் பாரதம் கனமாக (விஷயங்களில், பலனில்) இருந்தது என்று நிர்ணயம் செய்தார்கள் 

அது முதல், இந்த உலகத்தில் இதற்கு "மஹாபாரதம்" என்று பெயர் கிடைத்தது 

இந்த பெயர் காரணத்தை அறிபவன் கூட, தான் செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.

तपो नकल्क: अध्ययनं नकल्कः

स्वाभाविको वेद विधि: नकल्कः।

प्रसह्य वित्ताहरणं नकल्क:

त: अन्येव भावोपहतानि कल्कः।।

- மகாபாரதம் (வியாசர்)

இதில் சொல்லப்பட்ட படி தவம் செய்தாலும் பாவம் போய் விடும்.

இதை படித்தாலும் பாவம் போய் விடும்.

இதில் சொல்லப்பட்ட படி அவரவர் ஆஸ்ரம தர்மத்தில் வாழ்ந்தாலும் பாபங்கள் அழியும்.

இந்த மஹாபாரதத்தை சொல்வதால் செல்வம் கிடைத்தாலும் அது பாவத்தை தராது.

ஆனால்,

மஹாபாரதத்தில் சொல்லப்பட்டதை கெட்ட எண்ணத்தோடு செய்தால், அனைத்துமே பாவ காரியங்கள் ஆகி விடும்.

Tuesday 13 December 2022

"ஆசாரம்" (ஒழுக்கம்) என்றால் என்ன? இந்த கேள்விக்கு, பீஷ்மர் பதில் சொல்கிறார். அறிவோம் மஹாபாரதம்.

யுதிஷ்டிரர் "ஆசாரம் பற்றி அறிய விரும்புகிறேன்" என்று கேட்க, பீஷ்மர் ஆசாரத்தை பற்றி விளக்குகிறார்.

दुराचारा दुर्विचेष्टा दुष्प्रज्ञाः प्रिय-साहसाः।

असन्तस्त्वभिविख्याताः सन्तश्च आचार-लक्षणाः।।

- வியாசர் (மஹாபாரதம்)

அயோக்கியர்கள் 'கெட்ட ஆசாரத்தோடும், கெட்ட நடத்தையோடும், கெட்ட புத்தியோடும், சாகசம் புரிய விருப்பத்தோடும் இருப்பார்கள்' என்பது போல,

சாதுக்கள் 'ஆசாரத்தில் விருப்பத்தோடு இருப்பார்கள்' என்பது ப்ரஸித்தம்.


पुरीषं यदि वा मूत्रं ये न कुवन्ति मानवाः।

राजमार्गे गवां-मध्ये धान्य-मध्ये शिवालये।

अग्न्यगारे तथा तीरे ये न कुर्वन्ति ते शुभाः।। 

- வியாசர் (மஹாபாரதம்)

பெரிய சாலையிலும் (ராஜ மார்க்கம்), பசுக்களின் நடுவிலும், தானியத்தின் நடுவிலும், சிவாலயத்திலும், அக்னி சாலையிலும், நதி கரையிலும், மலம்-மூத்திரம் செய்யாத மனிதன் 'நல்லவன்' என்று அறியலாம்.

शौचम् आवश्यकं कृत्वा देवतानां च तर्पणम्।

धर्ममाहु: मनुष्याणामुपस्पृश्य नदीं तरेत्।

- வியாசர் (மஹாபாரதம்)

அவசியமாக செய்ய வேண்டிய சுத்தியை செய்து கொண்டு, ஆசமனம் செய்த பிறகு, நதியில் இறங்கி ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு, தேவர்களை குறித்து தர்ப்பணம் செய்வது மனிதர்களுக்கு தர்மமென்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

सूर्यं सदोपतिष्ठेन न स्वपेद् भास्कर-उदये।

सायंप्रात: जपेत्-सन्ध्यां तिष्ठन्पूर्वां तथेतराम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

எப்பொழுதும் சூரியனை உபாஸிக்க வேண்டும். உதயகாலத்தில் உறங்க கூடாது. காலையிலும், மாலையிலும் காயத்ரீ மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். முதல் சந்தியில் நின்று கொண்டும், மாலை சந்தியில் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும்.


पञ्चार्द्रो भोजनं भुञ्ज्यात्प्राद्भुखो मौनम् आस्थितः।

न निन्द्याद् अन्नभक्ष्यांश्च स्वादुस्वादु च भक्षयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

5 அங்கமும் அலம்பிக்கொண்டு, கிழக்கு முகமாக அமைதியாக போஜனம் செய்ய வேண்டும். அன்னத்தை, சாப்பிடும் போது நிந்திக்க கூடாது. மிகவும் ருசியாக உள்ளது என்று பூஜிக்க வேண்டும்.


न आर्द्र-पाणिः समुत्तिष्ठेन्न आर्द्र-पादः स्वपेन्निशि।

देवर्षि-र्नारदः प्राह एतदाचारलक्षणम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

கை ஈரமாக இருக்கும் போதே எழுந்திருக்க வேண்டும் (கை காய உட்கார்ந்து இருக்க கூடாது). இரவில் கால் அலம்பாமல் படுக்க கூடாது.  தேவ-ரிஷியான நாரதர் இவ்விதம் ஆசாரத்தின் லக்ஷணத்தை சொல்கிறார்.

शोचिष्केशमनड्वाहं देव गोष्ठं चतुष्-पथम्।

ब्राह्मणं धार्मिकं च एव नित्यं कुर्यात् प्रदक्षिणम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

அக்னியையும், காளையையும், தேவதையையும், பசுமடத்தையும், நாற்-சந்தியையும், தர்மத்தில் இருக்கும் ப்ராம்மணனையும் பார்த்தால், ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். அதாவது, அவர்களை சுற்றி வலம் வர வேண்டும்


अतिथीनां च सर्वेषां प्रेष्याणां स्वजनस्य च।

सामात्यं भोजनं भृत्यैः पुरुषस्य प्रशस्यते।।

- வியாசர் (மஹாபாரதம்)

நேரம் சொல்லாமல் நம் வீட்டுக்கு வந்த அதிதியை, தான் சொல்லும் காரியத்தை செய்யும் ஏவலாளியை, உறவினர்களை வேற்றுமை பாராமல் உணவு கொடுப்பது மனிதனுக்கு சிறந்த தர்மமாகும்.

सायंप्रातर्मनुष्याणामशनं वेदनिर्मितम्।

नान्तरा भोजनं दृष्टम् उपवासी तथा भवेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

மனிதர்களுக்கு காலையிலும், மாலையிலும் போஜனம் வேதத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் மத்தியில் உணவு உண்ண வேண்டும் என்று விதி இல்லை. அந்த விதிப்படி உபவாசம் இருப்பவன், பயனடைவான்.


होमकाले तथ्ना जुह्वन् ऋतुकाले तथा व्रजन्।

अनन्यस्त्रीजनः प्राज्ञो ब्रह्मचारी तथा भवेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

ஹோமம் செய்ய வேண்டிய காலங்களில் ஹோமம் செய்து கொண்டும், ருது காலத்தில் மட்டும் தன் மனைவியோடு சேருபவனும், வேறு  பெண்களை நெருங்காதவனும், நல்ல அறிவுள்ளவனும், “பிரம்மச்சாரி”என்று கருத வேண்டும். மணமானாலும் ‘ப்ரம்மச்சர்யத்தில் இருக்கிறான்’ என்று பொருள்


अमृतं ब्राह्मण: उच्छिष्टं जनन्या हृदयं कृतम्।

तज्जनाः पर्युपासन्ते सत्यं सन्तः समासते।।

- வியாசர் (மஹாபாரதம்)

தர்மம்-அதர்மம் தெரிந்து வாழ்க்கையை நடத்தும் பிராம்மணன் சாப்பிட்ட பிறகு, சாப்பிடுவதால், அந்த உணவு அம்ருதமாகவும் (ஆயுள் கூட்டுவதாகவும்), இதயத்தில் நல்ல எண்ணத்தையும் உண்டு பண்ணுவதாகவும் அமையும். அந்த உணவை எந்த ஜனங்கள் அன்புடன் ஏற்கிறார்களோ, அந்த ஸாதுக்கள், ஸத்தியமான பிரம்மத்தை அடைகிறார்கள்.


लोष्टमदीं तृणच्छेदी नखखादी तु यो नरः।

नित्य:-उच्छिष्टः संकसुको नेह-आयु: विन्दते महत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

எவன் மண்ணை உதைக்கிறானோ (வீட்டை உடைப்பவன்), புற்களை கிள்ளுகிறானோ, நகத்தை கடிக்கிறானோ, எப்பொழுதும் பிறர் சாப்பிட்டதையே உண்கிறானோ, பேராசை கொண்டவனோ, அவன் நீண்ட ஆயுளை அடைய மாட்டான்.


यजुषा संस्कृतं मांसं निवृत्तो मांस-भक्षणात्।

भक्षयेन्न वृथामांसं पृष्ठमांसं च वर्जयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

மாமிசம் உண்ணாமல் இருக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால், சாஸ்திர விதிப்படி பூஜித்து மாமிசம் உண்ணலாம். அனாவசியமாக விருப்பத்துக்காக சாப்பிட கூடாது. மிச்சப்பட்ட மாமிசத்தை, மாமிசத்தின் பின்-பாகத்தை சாப்பிட கூடாது.


स्वदेशे परदेशे वा अतिर्थि नोपवासयेत्।

काम्यकर्मफलं लब्ध्वा गुरूणाम् उपपादयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

தன் தேசத்தில் இருந்தாலும், வெளி தேசத்தில் இருந்தாலும் நாம் இருக்கும் இடத்திற்கு அதிதியாக வந்தவனை சாப்பிடாமல் வைக்க கூடாது. ஆசையினால் சேர்க்கப்பட்ட பொருளை குருவிடம் கொடுத்து விட வேண்டும்.

गुरूणाम् आसनं देयं कर्तव्यं च अभिवादनम्।

गुरूनभ्यर्च्य युज्येत आयुषा यशसा श्रिया।।

- வியாசர் (மஹாபாரதம்)

குருவுக்கு ஆஸனம் கொடுத்து, அவருக்கு தன் ரிஷி பரம்பரையை பற்றி சொல்லி நமஸ்கரிக்க வேண்டும். குருவின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும். பெரியோர்களை பூஜித்ததால், ஆயுளும், புகழும், செல்வமும் கூடும்.

नेक्षेतादित्यमुद्यन्तं न च नग्नां परस्त्रियम्।

मैथुनं सततं धर्म्यं गुह्ये चैव समाचरेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

உதிக்கும் காலத்தில் சூரியனை கண்ணால் பார்க்க கூடாது. வேறு பெண்களையோ, ஆடையில்லாத பெண்ணையோ நோக்க கூடாது. தர்மத்தை மீறாத உடலுறவை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும்.

तीर्थानां हृदयं तीर्थं शुचीनां हृदयं शुचिः।

सर्वम् आर्यकृतं धर्म्यं वालसंस्पर्शनानि च।।

- வியாசர் (மஹாபாரதம்)

மனமே தீர்த்தங்களில் சிறந்த தீர்த்தம்! சுத்தம் என்றால், மனசுத்தமே சிறந்த சுத்தம். பண்புள்ளவர்கள் செய்யும் அனைத்து காரியமும் தர்மமே. பசுவின் வாலை தொடுவதும் புண்யமே.

दर्शने-दर्शने नित्यं सुख-प्रश्नम् उदाहरेत्।

सायं प्रातश्च विप्राणां प्रदिष्टम् अभिवादनम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

வேத ப்ராம்மணனை காணும் போதெல்லாம், எப்பொழுதும் நலம் விசாரிக்க வேண்டும். காலையும் மாலையும் வேத ப்ராம்மணனை கண்டு நமஸ்கரிக்க வேண்டும்.


देवगोष्ठे गवां-मध्ये ब्राह्मणानां क्रियापथे।

स्वाध्याये भोजने चैव दक्षिणं पाणिम् उद्धरेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

தேவாலயத்திலும், பசுக்களின் நடுவிலும், ப்ராம்மணர்களின் நடுவிலும், கர்மானுஷ்டம் செய்யும் போதும்,  படிக்கும் போதும், சாப்பிடும் போதும் வலது கை வெளியே இருக்கும் படி (அதாவது பூணூலை இடது தோளில் இருப்பதாக வைத்து கொள்ள வேண்டும்) வைத்து கொள்ள வேண்டும்.

सायं प्रातश्च विप्राणां पूजनं च यथाविधि।

पण्यानां शोभते पण्यं कृषीणामृद्ध्यतां कृषिः।

बहुकारं च सस्यानां वाह्ये वाहो गवां तथा।।

- வியாசர் (மஹாபாரதம்)

காலையிலும், மாலையிலும் வேதத்தை ரக்ஷிக்கும் ப்ராம்மணர்களை முடிந்த வரை பூஜிப்பது, மதிப்புமிக்கதில் மதிப்புள்ளதை போற்றியதற்கு சமமாகும். விவசாயத்தில் சிறந்த கிருஷியை போற்றியதற்கு சமமாகும். அதிகமான தானியங்கள் சேர்ப்பதற்கு சமமாகும். 


संपन्नं भोजने नित्यं पानीये तर्पणं तथा।

सुशृतं पायसे ब्रूयाद्यवाग्वां कृसरे तथा।।

- வியாசர் (மஹாபாரதம்)

எப்பொழுதும், உணவு கொடுப்பவன், கொடுக்கும் போது "ஸம்பன்னம்" என்று சொல்ல வேண்டும். உணவை பெற்று கொள்பவன் "ஸுஸம்பன்னம்" என்று சொல்ல வேண்டும். குடிக்க ஜலம் கொடுப்பவன், கொடுக்கும் போது "தர்ப்பணம்" என்று சொல்லி கொடுக்க வேண்டும். தண்ணீரை பெற்று கொண்டவன் "ஸுதர்ப்பணம்" என்று சொல்ல வேண்டும். பாயசம் (கஞ்சி/அன்னம்) கொடுக்கும் போது, கொடுப்பவன் "ஸ்ருதம்" என்று சொல்ல வேண்டும். அதை பெறுபவன் "ஸுஸ்ருதம்" என்று சொல்லி பெற்று கொள்ள வேண்டும். சாப்பிடுபவனையோ / குளிப்பவனையோ தும்முகிறவனையோ சவரம் செய்பவனையோ பார்த்தால் "ஆயுஷ்யம்" என்று சொல்ல வேண்டும்.


प्रति आदित्यं न मेहेत न पश्येदात्मनः शकृत्।

सुतैः स्त्रिया च शयनं सह भोज्यं च वर्जयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

சூரியனை பார்த்து மல-மூத்திரம் செய்ய கூடாது. மேலும் அப்போது மல (இட) கையை பார்க்க கூடாது. புத்ரியோடும், பெண்களோடும் சேர்ந்து படுக்கவோ, சாப்பிடவோ கூடாது.


त्वंकारं नामधेयं च ज्येष्ठानां परिवर्जयेत्।

अवराणां समानानाम् उभयं नैव दुष्यति।।

- வியாசர் (மஹாபாரதம்)

நீ என்ற ஒருமையிலோ, பெயரை சொல்லியோ வயதில் பெரியவர்களை கூப்பிட கூடாது.  தன்னை விட வயதில் குறைந்தவர்களை, வயதில் சமமானவர்களே கூப்பிடுவது தவறில்லை.


हृदयं पापवृत्तानां पापम् आख्याति वैकृतम्।

ज्ञानपूर्वं विनश्यन्ति गूहमाना महाजने।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாபங்களை செய்யும் இதயம் கொண்டவனின் முகமே அவனுடைய பாப எண்ணத்தை வெளி காட்டி விடும். செயல்படுத்த முடியாது என்று தெரிந்தும் வாக்குறுதிகளை ஜனங்களுக்கு கொடுத்து, பாபங்களை மறைத்து செய்பவன் நாசமடைவான்


ज्ञानपूर्वकृतं पापं छादयन्त्यबहुश्रुताः।

नैनं मनुष्याः पश्यन्ति पश्यन्त्येव दिवौकसः।।

- வியாசர் (மஹாபாரதம்)

விஷய அறிவு இல்லாமல், தெரிந்தே பாபங்களை (தவறுகளையும்) செய்து விட்டு,  அதை மறைத்தும் விடுவார்கள். இப்படி இவர்கள் சக மனிதர்களை ஏமாற்றினாலும், செய்த பாபத்தை தேவர்கள் அறிகிறார்கள்.


पापेनापिहितं पापं पापम् एव अनुवर्तते।

धर्मेणापिहितो धर्मो धर्मम् एव अनुवर्तते।

धार्मिकेण कृतो धर्मो धर्मम् एव अनुवर्तते।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாபத்தை செய்த  இந்த பாபிகளை அவர்கள் பாபமே  துரத்தி கொண்டு வரும். தர்மத்தை செய்த தர்மாத்மாவை, அவர்கள் செய்த தர்மமே துரத்தி கொண்டு வரும்.

पापं कृतं न स्मरतीह मूढो

विवर्तमानस्य तदेति कर्तुः।

राहुर्यथा चन्द्रमुपैति चापि

तथाऽबुधं पापमुपैति कर्म।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாபம் செய்வதிலேயே நாட்டம் கொண்ட மூடன் (அசடுகள்), நான் சொன்ன இந்த ஆசாரத்தை, நினைத்து கூட பார்க்காமல் இருக்கிறான். பாபமே செய்பவர்கள், சாஸ்திரத்துக்கு விரோதமாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், எப்படி பொலிவு மிகுந்த சந்திரனை ராகு விழுங்குகிறதோ, அது போல புகழ் மங்கி, பொலிவை இழப்பார்கள்.


आशया संचितं द्रव्यं दुःखेनैवोपभुज्यते।

तद्बुधा न प्रशंसन्ति मरणं न प्रतीक्षते।।

- வியாசர் (மஹாபாரதம்)

பேராசையால் பெறப்பட்ட எந்த பொருளும், துக்கத்தையே தரும். அறிவாளி அப்படிப்பட்ட பொருளை கொண்டாடுவதில்லை, அதனால் ஏற்படும் மரணத்தை அவர்கள் ஏற்பதும் இல்லை.

मानसं सर्वभूतानां धर्ममाहु: मनीषिणः।

तस्मात्सर्वेषु भूतेषु मनसा शिवम् आचरेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாராபட்சம் இல்லாமல் அனைவருக்கும் மனப்பூர்வமாக செய்வதே மனிதனுக்குரிய தர்மம். ஆகையால், எல்லா உயிர்களுக்கும் மனப்பூர்வமாக நல்லதை (மங்களத்தை) செய்ய வேண்டும்.


एक एव चरेद्धर्मं नास्ति धर्मे सहायता।

केवलं विधिमासाद्य सहायः किं करिष्यति।।

- வியாசர் (மஹாபாரதம்)

தர்மத்தை ஒருவனாகவே செய்யலாம். தர்மம் செய்ய துணை அவசியமில்லை. மனதில் தர்ம சிந்தனை இல்லாமல், துணைக்கு ஆள் கிடைத்தும் என்ன பயன் கிடைக்கப்போகிறது?


धर्मो योनि: मनुष्याणां देवानाम् अमृतं दिवि।

प्रेत्यभावे सुखं धर्माच्न्छश्वत्तैरुपभुज्यते।।

- வியாசர் (மஹாபாரதம்)

தர்மத்தில் இருப்பதற்காக தான் மனித-யோனியில் மனிதபிறவி கிடைத்துள்ளது.. அதன் மூலம் தேவர்களை போல அம்ருத நிலையை (அழியா புகழ்) அடையலாம். தர்மத்திலேயே இருப்பதால், மறு பிறவி எடுத்தாலும் அந்த தர்மத்தின் பலன் தொடர்ந்து வந்து க்ஷேமத்தை கொடுத்து கொண்டே இருக்கிறது. 


இவ்வாறு பீஷ்மர், யுதிஷ்டிரரிடம் "ஆசாரம்" என்றால் என்ன? என்பது பற்றி விளக்கினார்.

Monday 12 December 2022

பய-பக்தி என்றால் என்ன?

 பய-பக்தி என்றால்?

பகவான் அனைவருக்கும் சொந்தம். 

அவர், நம் ஒவ்வொருவர் இதயத்திலும் இருந்து கொண்டு, நம்மை பார்த்து கொண்டே இருக்கிறார். 


நாம் ஒருவரிடம் பேசினால் கூட, அடுத்தவர் இதயத்தில் இருந்து கொண்டு, நம்மை பார்த்து கொண்டே இருக்கிறார்.


நாம் நாலு பேரிடம் பேசினால் கூட, இப்படி நம்மை அவர் பார்த்து கொண்டே இருக்கிறார் என்றால், நமக்கு பகவானிடத்தில் பயம் வருமா? பக்தி வருமா?


நம்மை கவனித்து கொண்டே இருக்கிறார் என்று புரிந்து கொண்டாலேயே, பகவானிடத்தில் நமக்கு முதலில் பயம் தான் வரும்.


பயத்துக்கு பிறகு வருவது தான் ப்ரியம். அதனால் தான், "பய-பக்தி" என்று சொல்வது வழக்கம்.


பகவான் நம்மை பார்க்கிறார் என்றால் பயம் உண்டாக தான் செய்யும். 


பகவானிடத்தில் உறவு, பயத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான், அந்த பகவானின் மதிப்பு தெரியும். பயத்துக்கு பிறகு பகவானிடத்தில் ப்ரியம் உண்டாகும்.


இந்த பய-பக்திக்கு ராமகிருஷ்ணர் நெல்லை உதாரணமாக சொல்கிறார்.


பதருக்குள் அரிசி இருப்பதால், அதற்கு "நெல்" என்று பெயர்.


அரிசி உள்ளே இருப்பதால், நெல்லுக்கு பெருமை உண்டாகிறது.

நெல் அதை மூடி ரக்ஷிப்பதால், அரிசிக்கு பெருமை உண்டாகிறது.


உள்ளே அரிசி இல்லாமல் இருந்தால், நெல்லுக்கு "பதர்" என்று பெயர்.

ஆனால், இந்த மேல் உறையாக இருக்கும் பதர் இல்லாமல், அரிசி வளராது.


நமக்கு அரிசி தான் வேண்டும், என்பதற்காக நெல்லையே (பதரோடு) சாப்பிடுவோமா?

நமக்கு அரிசி தானே வேண்டும், என்பதற்காக, பதர் வேண்டாம் என்று, வெறும் அரிசியை மட்டும் நிலத்தில் போட்டாலும், அது முளைக்காது.


நிறைய அரிசி பயிர் செய்ய வேண்டுமென்றால், பதரோடு சேர்ந்த அரிசியை (நெல்லை) தான் பூமியில் தூவ வேண்டும்.


இதை பார்க்கும் போது, அரிசி முக்கியமா? நெல் முக்கியமா? என்ற கேள்வியை விட, 

எந்த இடத்தில் எது முக்கியம்? 

என்றே பார்க்க வேண்டும்.


சாப்பிடும் போது, நமக்கு அரிசி மட்டும் தேவைப்படுகிறது.


பயிர் செய்ய, நமக்கு பதரோடு சேர்ந்த அரிசி (நெல்) தேவைப்படுகிறது.


ஆக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது....என்ன?

நமக்கு பகவானிடத்தில் இருக்கும் பக்தி என்ற அரிசியை காத்து கொள்ள, பகவானிடத்தில் நமக்கு இருக்கும் பயம் என்ற கவசத்தை கொண்டு, பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும்.


UPANYASAM BY CUDDALORE BRAHMASHRI MURALIDHARA SHARMA - SriSri Anna's Disciple

Monday 13 April 2020

யார் சந்நியாசி? "சித்த சுத்தி" என்றால் என்ன? "சித்த விகாரம்" என்றால் என்ன? சித்த சுத்தி யுடன் நாம் எப்போதும் இருந்தோம்?. எளிதான உதாரணத்துடன் தெரிந்து கொள்வோமே !

யார் சந்நியாசி?
சித்த சுத்தி யாருக்கு உள்ளதோ, அவனே சந்நியாசி.
சித்த சுத்தி யாருக்கு உள்ளதோ, குடும்பத்தில் இருந்தாலும், அவனும் சந்யாசியே.

சித்தம் என்றால் "எண்ணம்" என்று அர்த்தம்.




"சித்த சுத்தி" என்றால் என்ன? "சித்த விகாரம்" என்றால் என்ன?

நம்முடைய சித்தம் இரட்டை குணங்களில் சிக்கி கொள்ளாதவரை, "சித்த சுத்தியுடன்" தான் இருக்கிறோம்.
இதை நாம் அனுபவித்தும் இருக்கிறோம்.
"சித்த சுத்தி" இருக்கும் வரை நாமும் 'சந்நியாசி தான்.

"சித்த சுத்தி" உள்ளவனே 'சந்நியாசி.

நம்முடைய சித்தம் இரட்டை குணங்களில் சிக்கி கொள்ளும் போது, "சித்த சுத்தி" கறைப்பட்டு, "சித்த விகாரம்" ஏற்பட்டு விடுகிறது. க்ருஹஸ்தன் ஆகி விடுகிறோம்.

இரட்டை குணங்கள் என்றால் என்ன? 
சுகம்-துக்கம், லாபம்-நஷ்டம்,
வெற்றி-தோல்வி, மானம்-அவமானம்,
இளமை-மூப்பு, ஆரோக்கியம்-ரோகம்,
ஆண்-பெண், வாழ்வு-சாவு.
இதை தான் இரட்டைக குணங்கள் என்று சொல்கிறோம்.

நாம் அனைவருமே குறைந்தபட்சம் சித்த சுத்தியோடு தான் பிறக்கிறோம்.
குழந்தையாக இருக்கும் போது, ஆண்-பெண் என்ற இரட்டைக பேதங்கள் இருப்பதில்லை.
பிறகு,
சித்த விகாரம் படிப்படியாக ஏற்பட்டு, உலகில் மாட்டிக்கொண்டு விடுகிறோம்.

ஒரு இளம் பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இளம் பெண்ணான இவள், அந்த ஆண் குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாள்..
ஆண் என்று தெரிந்தும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறாள்.
அங்கமெல்லாம் பார்த்து பார்த்து, தொட்டு தொட்டு, குளிப்பாட்டி விடுகிறாள்.
அந்த ஆண் குழந்தை, தன்னை தொட்டாலும் ரசிக்கிறாள். காமம் அடைவதில்லை

பெண் தானே இவள்? இந்த குழந்தையோ ஆண் ஆயிற்றே?
ஆனால்,
இவளுக்கு ஆணை தொடுகிறோமே!!  கொஞ்சுகிறோமே!! பார்க்கிறோமே!!
என்று மனம் விகாரம்  அடையவில்லையே?..

இவளுக்கு ஆணை தோடுகிறோமே என்ற கூச்சமோ, காமமோ ஏற்படவில்லையே?

இதன் காரணம் என்ன?
குழந்தை "சித்த சுத்தியுடன்" இருக்கிறது. இதுவே காரணம்.

இதன் காரணத்தால், அந்த குழந்தையை பார்க்கும் பெண்ணான தாய்க்கு, இவன் ஆண் என்ற வேற்றுமை தெரியவில்லை.
அதே ஆண் குழந்தை, 24 வயது ஆகி இளைஞனாக நிற்கும் போது,
தன் குழந்தை தானே என்று குளிப்பாட்டி விடுவாளா? குழந்தையை அன்று தொட்டது போல தொடுவாளா? மாட்டாளே..

அவள் குழந்தை தான். மறுப்பு இல்லை.
ஆனாலும், அந்த குழந்தைக்கு இப்போது சித்த விகாரம் ஏற்பட்டு விட்டது. இரட்டைகள் இருப்பது புரிகிறது.
ஆண்-பெண் வித்யாசம் தெரிகிறது.
குழந்தையாக இருந்த போது, இரட்டைகள் தெரியவில்லை. இவன் சித்தம் சுத்தமாக இருந்தது.

சித்தம் சுத்தமாக இருக்கும் போது, பேதம் தெரியவில்லை.
சித்தம் சுத்தமாக இருக்கும் குழந்தையை, பெண்கள் எல்லோரும் எடுத்து கொஞ்சினார்கள். காமம் ஏற்படவில்லை.

சித்த விகாரம் அடைந்த பின், பேதங்கள் தெரிந்து விடுகிறது.
பெற்ற தாயானாலும், தன் மகனிடமிருந்து ஒதுங்கி நிற்கிறாள்.

உண்மையில், உடலால் காமம் ஏற்படுவதில்லை.
யாருக்கு சித்தம் விகார பட்டு, இரட்டைகள் தெரிகிறதோ!
அவர்களுக்கே காமம், கோபம், பேராசை, பொறாமை உண்டாகிறது.




சித்த சுத்தி அடைந்தவனே சந்நியாசி.
அப்படிப்பட்ட மகான்களை தரிசிப்பதே பாக்கியம்.

இந்த நிலையில் இருந்தவரே, ஸ்ரீ சுகர்.

16 வயது பாலகனாக, சிவபெருமானே வ்யாசருக்கு அக்னியில் இருந்து தோன்றினார்.

வியாசர் "சாக்ஷாத் நாராயணன்".
பிராம்மண ரூபத்தில் பராசர ரிஷிக்கு மகனாக தோன்றினார். 
மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள் கொடுத்தவர்.
சேர்ந்து இருந்த வேதத்தை நான்காக பிரித்து கொடுத்தார்.
"வேத வியாசர்" என்ற புகழப்படுகிறார்.

ஒரு சமயம் ப்ரம்மத்தையே தியானித்து கொண்டு இருக்கும், 16 வயது ரூபத்தில் இருக்கும் ஸ்ரீ சுகர், காட்டில் எங்கு போகிறோம் என்று தெரியாமலேயே நடந்து கொண்டிருந்தார்.
தன் பிள்ளை "சுகரை" கூப்பிட்டு கொண்டே வியாச பகவான் வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு குளத்தில், சில இளம் பெண்கள் குளித்து கொண்டு இருந்தனர்.
ஸ்ரீசுகர் அந்த வழியாக போவதை பார்த்தும், சாதாரணமாக குளித்து கொண்டு இருந்தனர்.

பின் தொடர்ந்து வந்த வ்யாஸரை கண்டதும், "யாரோ ஆண் வருகிறாரே!" என்று பயப்பட, வியாச பகவான் "நானோ முதியவன். என் பிள்ளையோ இளைஞன். அவனை கண்டு வித்யாசம் காட்டாத நீங்கள், என்னை கண்டு பயம் கொள்கிறீர்களே?"
என்று கேட்டார்.

அதற்கு, அந்த பெண்கள்,
"நாங்கள் பெண்கள் என்றே அவருக்கு தெரியாததால், அவரை பார்த்து எங்கள் எண்ணத்திலும் பேதம் தோன்றவில்லை.
நீங்கள் கேட்பதிலேயே உங்களுக்கு நீங்கள் ஆண், நாங்கள் பெண் என்று தெரிவதாலேயே, எங்களுக்கு பேதம் தெரிகிறது. அதனால் எங்களை அறியாமலேயே பயம் ஏற்பட்டது.. கூச்சம் ஏற்பட்டது."
என்று பதில் சொன்னார்கள்.

வ்யாஸரே சந்நியாசி தான். ரிஷி தான்.
இருந்தாலும் "தன் பிள்ளையின் பெருமையை தான் ரசிக்க, தனக்கு பேதம் உள்ளது போல காட்டிக்கொண்டு, ஸ்ரீ சுகரின் சித்த சுத்தி நிலையை பிறர் சொல்லி கேட்க ஆசைப்பட்டதால்", இப்படி ஒரு லீலை செய்தார்.

பகவத் கீதையை படிக்கும் போது, பல இடங்களில் இந்த சித்த சுத்தி ஏற்பட என்ன வழி? என்று பேசுகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

"சுகம்-துக்கம், மானம்-அவமானம், வெற்றி-தோல்வி 
என்ற இரட்டை குணங்களை மதிக்காதே!! 
தர்மம் எங்கு உள்ளதோ அங்கே தோல்வி ஏற்படுமாம் என்றாலும், தர்மத்தின் பக்கமே நில்" 
என்று சொல்கிறார்.

சித்த சுத்தி ஏற்படும் போது, சந்யாஸ நிலை நமக்கு ஏற்படுகிறது. 
இந்த நிலை,
நமக்கு மன அமைதியை தருகிறது.
திருப்தியை தருகிறது.
ஸத் சங்கத்தை நாட வேண்டும் என்ற புத்தியை தருகிறது.
மகான்களை தரிசிக்க, தெய்வங்களை தரிசிக்க தூண்டுகிறது.
கடைசியில் மோக்ஷம் வரை நம்மை கூட்டி செல்கிறது.

வாழ்க பகவத் கீதை.
வாழ்க நம் ஆத்ம குரு.
வாழ்க ஹிந்துக்கள்.


Friday 6 March 2020

நமஸ்காரம், சரணம் (சரணாகதி) - இரண்டுக்கும் என்ன வித்யாசம்? தெரிந்து கொள்ள வேண்டாமா ஹிந்துக்கள்?...

நமஸ்காரத்துக்கும் (கும்பிடுதல்), சரணாகதிக்கும் (சரணம்) உள்ள வேற்றுமை என்ன? 

ஒரு கற்புள்ள பெண்,
"தன் கணவனே தனக்கு தேவையான அனைத்தையும் சாதித்து கொடுப்பான்"
என்று தீர்மானம் செய்து கொண்டு,
"தனக்கும் திறமை இருக்கிறதே!!" என்று தன் வரையில் தனியாக பிற முயற்சிகள் (சாதனை) செய்யாமல் இருப்பாள்.
அதாவது
"வேறு சாதனைகள் செய்வது (அன்ய சாதனை) இல்லை என்று இருப்பாள்.



அதேபோல, கற்புள்ள பெண்,
"தன் புருஷனே தன்னை காப்பாற்றுவான்"
என்று திடமாக நம்புவாள்.
"இன்னொரு புருஷன் இவனை விட புத்திசாலி திறமைசாலி என்றாலும், ஏறெடுத்தும் பார்க்காமல், தன் புருஷனே தன்னை காப்பாற்றுவான்" என்று இருப்பாள்.
அதாவது,
"வேறு ஒருவரை நம்புவது (அன்ய ஆஸ்ரயம்) இல்லை" என்று இருப்பாள்.
அதேபோல, கற்புள்ள பெண்,
"தன் புருஷன் பார்த்து தனக்கு நல்லது செய்தாலும் சரி! கெட்டது செய்தாலும் சரி!"
என்று தனக்கு என்ன லாபம்? என்று சிந்திக்காமல் இருப்பாள்.
அதாவது,
"வேறு ஒரு பலனை எதிர்பார்ப்பது (அன்ய பலன்) இல்லை" என்று இருப்பாள்.

இது கற்புக்கரசிகளுக்கான 'லட்சணம்'.  அன்ய சாதனை செய்யாமல், அன்ய ஆஸ்ரயம் தேடாமல், அன்ய பலனில் எதிர்பார்ப்பு இல்லாமல், கற்புக்கரசி பெண்கள் இருக்கின்றனர்.
இதையே "சரணம்" (சரணாகதி)  என்று சொல்கிறோம்.

கற்புக்கான 'லட்சணம்' தான், "வைஷ்ணவ ஸித்தாந்தம்".

"பெண்" என்ற இடத்தில் நாராயணன் மீது பக்தி கொண்ட நம்மை போன்ற வைஷ்ணவர்களை மாற்றி கொண்டு,
"கணவன்" என்ற இடத்தில் "நாராயணன்" என்று மாற்றி போடும் போது, வைஷ்ணவர்கள் "நிலை" நமக்கு புரியும்.
வைஷ்ணவ "சித்தாந்தமும்" நமக்கு புரியும்.

சிவன் கோவிலுக்கு போய் "சிவபெருமானே !! சரணம்.. சரணம்" என்று சொல்லிவிட்டு,
அடுத்து ஐயப்பன் கோவிலுக்கு சென்று "சரணம் சரணம் ஐயப்பா" என்று சொன்னால், அது சரணம் ஆகாது. சரணாகதி ஆகாது.

பெயரளவில் "சரணம் சரணம்" என்று கத்தி விட்டால், அது சரணாகதி ஆகி விடாது. 
இப்படி செய்வது "நமஸ்காரம்" (கும்பிடுதல்) என்று சொல்கிறோம்.

அலுவலகத்தில், நமக்கு மேல் உள்ள அதிகாரியை பார்த்து சல்யூட் வைப்பதும், பெரியவர்களை கண்டால் வணக்கம் செய்வதும், நம்  மரியாதையை காட்ட மட்டுமே !

அதுபோல,
தெய்வத்துக்கு மரியாதை தரும் அளவில் உள்ள பக்தன், எந்த கோவிலுக்கு போனாலும் அந்த தெய்வத்தை தனக்கு தெரிந்த அளவுக்கு "சரணம், போற்றி, வாழ்க" என்று துதி செய்கிறான்.


"மரியாதை உள்ள பக்தன்" என்று இப்படிப்பட்டவர்களை தெய்வங்களும் அறிந்து கொள்கிறார்கள்.

"இவன் சரணம் சரணம் என்று சொல்லிவிட்டான்" என்பதற்காக "சரணாகதி" செய்து விட்டான் என்று தெய்வங்களும் நினைப்பது இல்லை.

ஒரு கற்புள்ள பெண், "தன் கணவனே என் தெய்வம்" என்று இருப்பது போல, "நாராயணனே என் தெய்வம்" என்று சொல்லும் பக்தன் (வைஷ்ணவன்), ஒரு கற்புள்ள பெண் எப்படி இருப்பாளோ! அது போல, தானும் தன் தெய்வத்துக்கு நேர்மையாக இருக்கிறான். 

"நாராயணனே என் தெய்வம்!" என்று சரணாகதி செய்த வைஷ்ணவன் எப்படி இருக்கிறான்?
1.
"நாராயணனே தனக்கு தேவையான அனைத்தையும் சாதித்து கொடுப்பார்" 
என்று தீர்மானம் செய்து கொண்டு,
"தனக்கு திறமை இருக்கிறதே!!" என்று தன் வரையில் "தனியாக ஒரு யோகாஸனம்  செய்வோமா? தியானம் செய்வோமா?"
என்று கூட நினைக்காமல் இருப்பான்.
அதாவது
"வேறு சாதனைகள் செய்வது (அன்ய சாதனை) இல்லை" என்று இருப்பான்.






2.
அதேபோல,
"நாராயணனே தன்னை காப்பாற்றுவார்"
என்று திடமாக நம்புவான்.
"இன்னொரு தெய்வம் இருக்கிறார், அவர் அருள் உடனே செய்து விடுவார். உடனே கல்யாணம் நடக்கும், வேலை கிடைக்கும்"
என்று யார் சொன்னாலும், ஏறெடுத்தும் பார்க்காமல், "நாராயணனே தன்னை காப்பாற்றுவார்" என்று திடமாக நம்புவான்.
அதாவது,
"வேறு ஒருவரை நம்புவது (அன்ய ஆஸ்ரயம்) இல்லை" என்று இருப்பான்.

அதேபோல,
"நாராயணன் பார்த்து தனக்கு நல்லது செய்தாலும் சரி, கெட்டது செய்தாலும் சரி. அவர் இஷ்டம்"
என்று தனக்கு லாபமா, நஷ்டமா என்று சிந்திக்காமல் இருப்பான்.
அதாவது,
"வேறு ஒரு பலனை எதிர்பார்ப்பது (அன்ய பலன்) இல்லை" என்று இருப்பான்.

"நமஸ்காரம் செய்பவர்களால், சரணாகதி செய்தவர்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாததற்கு" இதுவே காரணம்.

நமஸ்காரம் வேறு!...  சரணாகதி வேறு! என்று அறிவோம். 

ஒரு தெய்வத்திடம் சரணாகதி செய்தவனை, வெறும் நமஸ்காரம் செய்து தெய்வத்துக்கு மரியாதை செய்பவன்,
"நீங்கள் இந்த கோவிலுக்கு தான் போவீர்களா? அந்த கோவிலுக்கு போக கூடாதா?" 
என்று எளிதாக கேட்டு விடுவான்.

ஒரு கற்புள்ள பெண்ணை பார்த்து,
"உன் கணவன் நல்லவன் தான்!! 
ஆனால், பக்கத்து வீட்டுக்காரனும் நல்லவன் தான்! 
நீ அவனையும் வந்து பார்க்க கூடாதா?" என்று கேட்டால், அந்த பெண் எத்தனை ஆத்திரப்படுவாளோ! எரிச்சல் அடைவாளோ! அதே நிலையை சரணாகதி செய்தவன் அனுபவிக்கிறான்.

இந்த வித்யாசத்தை அந்த காலங்களில் அறிந்து இருந்தார்கள். 
அவரவர் தெய்வ நம்பிக்கையை கொச்சை படுத்தாமல் இருந்தார்கள். 

வெளிநாட்டிலிருந்து வந்த வந்தேறிகள், "தனக்கு ஒரு தெய்வம் உண்டு" என்று சொன்ன போது, இதன் காரணத்தால்,
"அவர்களை மத மாற்றம் செய்யவோ, அவர்கள் தன் தெய்வத்தை பார்த்தால் என்ன?" என்றோ கேட்கவே இல்லை.

இந்த கீழ்த்தரமான புத்தி, அந்நியர்களின் நுழைவு 947ADக்கு பின்னர் பாரத மக்களிடம் விதைக்கப்பட்டது.
"ஏன் எங்கள் தெய்வத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள கூடாது.. வந்து பாருங்கள்"
என்ற கீழ்த்தரமான பேச்சுக்கள் முக்கியமாக கிறிஸ்தவ நுழைவுக்கு பின்னர் அதிகமானது.

வாஸ்கோட காமா என்ற கிறிஸ்தவன் 1498ADல் காலடி எடுத்து வைத்த காலத்திலிருந்தே இந்த பேச்சுக்கள் இந்தியாவில் பரவப்பட்டது. 
அந்நிய தேச இஸ்லாமியர்கள் வடபாரத தேசங்களை பிடித்துக்கொண்டு இருந்த சமயத்தில், 
அந்நிய தேச கிறிஸ்தவர்கள் தென் பாரத தேசங்களை பிடித்து கொண்டார்கள். 
அந்நிய தேச இஸ்லாமியர்கள், கட்டாயத்தால் மதம் மாற்ற,
அந்நிய தேச கிறிஸ்தவர்கள், இது போன்ற கீழ்த்தரமான பேச்சுக்கள் மூலமாகவும், 
கொஞ்சம் இடம் கொடுத்தால், அடுத்தவன் வணங்கும் தெய்வத்தையே கேலி செய்யும் அளவுக்கும் போனார்கள். 
சமயம் கிடைத்த போதெல்லாம், கோவிலை தாக்குவதும் நடந்தது.
சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் இருந்த கோவிலை இடித்து, சாந்தோம் சர்ச் கட்டிவிட்டனர். 
மற்றவன் தெய்வ நம்பிக்கையை கொச்சை படுத்த இயற்கையாகவே விரும்பாத பாரத மக்கள், ஒரு மைல் தள்ளி இன்று உள்ள கபாலீஸ்வரர் கோவிலை அமைத்துக்கொண்டனர்.




காளையார் சிவன் கோவிலுக்கு கோபுரங்கள் கட்டி அழகு பார்த்த, மருது சகோதரர்களை, பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் நாட்டு  கிறிஸ்தவர்கள்,
நம் நாட்டின் குறுநில அரசனை பிடிக்க, "காளையார் கோவிலை வெடி வைத்து தகர்த்து விடுவோம்" என்று சொல்லி மிரட்ட,
கோவிலை காப்பாற்ற, மகா வீரர்களான மருது சகோதரர்கள் தானாக வந்து சரண் அடைந்தனர்.


கோவிலை வைத்து இவர்களை பிடித்து, இருவரையும் பொது மக்கள் பார்வையில் தூக்கில் போட்டு கொன்றனர்.
கிறிஸ்தவர்கள், நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய போக்கு இது என்பதை சரித்திரம் நமக்கு காட்டுகிறது.

சரணாகதி என்றால் என்ன புரிந்து கொள்ள முடியாத அந்நியர்கள், செய்த பெரும் குழப்பமே, இன்று வரை நம்மிடையே நீடிக்கிறது.

ஹிந்துக்கள் அறிவு பெற வேண்டியது அவசியம்.

"வெட்கமில்லாமல் எங்கள் தெய்வத்தை வந்து பாருங்கள்" 
என்று சொல்லும் போலி மதங்களுக்கு ஏமாற்றப்பட்டு போன பாரத மக்களை, மீண்டும் ஹிந்துவாக ஆக்க வேண்டியதும் ஒவ்வொருவரின் கடமை.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க நம் ஹிந்து தர்மம்.

குருவே துணை... 

Saturday 4 January 2020

சோகம் என்றால் என்ன? அத்வைத உபதேசம் என்ன சொல்கிறது? விஷிஷ்டாத்வைத உபதேசம் என்ன சொல்கிறது ? தெரிந்து கொள்வோமே!!

வேதம் ஒரு இடத்தில் "பரமாத்மா வேறல்ல, ஜீவாத்மா வேறல்ல" என்று "அத்வைதமாக" சொல்கிறது.

இன்னொரு இடத்தில் "ஜீவாத்மாக்கள் மோக்ஷம் அடைய, பரமாத்மா நாராயணனை துதிக்க வேண்டும்" என்ற பிரித்து "அத்வைதமாக" சொல்கிறது..




வேதம் "அத்வைதம் மட்டுமே சொல்கிறது என்று த்வைதத்தை புறக்கணிப்பது, முழுமையான வேதத்தின் அபிப்பிராயமாக இருக்க முடியாது".

அதே போல,
வேதம் "த்வைதம் மட்டுமே சொல்கிறது என்று அத்வைதத்தை புறக்கணிப்பது, முழுமையான வேதத்தின் அபிப்பிராயமாக இருக்க முடியாது".


"அத்வைதத்தில் ஒளிந்து உள்ள விசேஷ அர்த்தமான த்வைதத்தை சேர்த்து" சொல்வதே "விஷிஷ்டாத்வைதம்".
வேதத்தின் முழுமையான நோக்கத்தை சொல்வதே "விஷிஷ்டாத்வைதம்" (தெரிந்து கொள்ள படிக்கவும்).

ஜீவனாக பிறந்த நாம்,
கிருஷ்ண பக்தி செய்து (த்வைதம்) ,
கிருஷ்ண க்ருபைக்கு பாத்திரமாகி,
அவர் நம்மை மீண்டும் ஜீவனாக பிறக்க செய்யாமல், தன்னோடு சேர்த்து கொண்டு விட்டால் அதுவே மோக்ஷம் (அத்வைத நிலை).
----- விஷிஷ்டாத்வைதம்.

ஒரு சிஷ்யன் "தனக்கு ஒரு ஆத்ம குரு வேண்டும்" என்று ஆசைப்பட்டான்.
ஒரு நாள், ஒரு அத்வைத சந்யாசியை தரிசிக்க நேர்ந்தது.

அவரிடம் "தனக்கு உபதேசம் செய்யுமாறு" வேண்டினான்.
அவர் "ஸோகம்" (சோகம்) என்று உபதேசித்து, "இதையே எப்பொழுதும் சொல்லி கொண்டே இரு" என்று உபதேசித்தார்.

ஸோகம் (ஸ: அந்த: ஆத்மா ஆஹம்) என்றால், "உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்று அர்த்தம்.
மோக்ஷம் அடைந்த அத்வைத நிலை அது.

இதை புரிந்து கொண்டு ஜபம் செய்ய செய்ய, "உடல் நானல்ல, பிராணன் நான் அல்ல, மனசு நான் அல்ல, புத்தி நான் அல்ல... தனித்த பொருளாக உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்ற அனுபவம் ஏற்படும்.
இது ஒரு அத்வைத நிலை.

இப்படியே "ஸோகம்.. ஸோகம்.." என்று சொல்லிக்கொண்டு இருந்தான் இந்த சிஷ்யன்.




குருவின் கருணையால் "ஆத்மா தான் நான்" என்ற புரிதல் ஏற்பட்டாலும், மனதில் ஏனோ திருப்தி ஏற்படவில்லை அவனுக்கு.
ஏதோ ஒரு குறையை உணர்ந்தான்.

ஒரு சமயம், விஷிஷ்டாத்வைத சந்யாசியை கண்டான்.
அவரை பார்த்ததும் அவரிடமும் உபதேசம் பெறலாம் என்று ஆசைப்பட்டான்.

அந்த வைஷ்ணவரிடம் சென்று, "தனக்கு 'ஸோகம்' என்று ஏற்கனவே ஒரு குரு உபதேசம் செய்து இருக்கிறார்.. அதை தான் இன்று வரை ஜபித்து கொண்டு இருக்கிறேன்..
உங்களிடமும் உபதேசம் பெற ஆசைப்படுகிறேன்' என்றான்.
வைஷ்ணவர்,
"உன்னுடைய முதல் குரு உபதேசித்த மந்திரம் சரியானது தான்.. ஆனால் ஒரு அக்ஷரம் விட்டு போய் விட்டது..
அதனால் தான் உனக்கு திருப்தி ஏற்படாமல் இருக்கிறது..
'ஸோகம்' என்ற மந்திரத்தில், "தா" என்ற அக்ஷரத்தை முதலில் சேர்த்து "தாஸோஹம்" என்று சொல்" என்று உபதேசித்தார்.

"தாஸோகம்" என்றால், "உள்ளிருக்கும் ஆத்மா தான் நான். ஆனால் ஜீவாதமாகிய எனக்கு ஈஸ்வரன் இருக்கிறார். அந்த பரமாத்மாவின் தாஸன் நான்" என்று அர்த்தம்.

"மோக்ஷம் என்ற அத்வைத நிலையை அடைவதற்கு,
ஜீவனாக த்வைத நிலையில் இருக்கும் நாம், அந்த பரந்தாமனின் கருணையை பெற, அவருக்கு தாசனாக தொண்டு செய்யவேண்டும்"
என்று அத்வைதத்தில் சொல்லாமல் விட்ட விஷேச அர்த்தத்தை சேர்த்து கொடுத்தார் அந்த வைஷ்ணவ சந்நியாசி.

"தாஸோகம்" என்ற மந்திரத்தின் அர்த்தம் புரிந்து கொண்டு ஜபம் செய்ய செய்ய, "உடல் நானல்ல, பிராணன் நான் அல்ல, மனசு நான் அல்ல, புத்தி நான் அல்ல... தனித்த பொருளாக உள்ளிருக்கும் ஆத்மாவே நான்.
நான் ஜீவாத்மா. என்னை படைத்தவர் அந்த பரமாத்மா. எனக்கு ஆதாரமாக இருப்பவர் அந்த பரமாத்மா. நான் அவருக்கு தாஸன். அவருக்கு தொண்டு செய்வதே, என் கடமை. அவர் கருணையால் ஜீவாத்மாவாக இருக்கும் என்னை (த்வைத) மீண்டும் பிறக்க செய்யாமல் தன்னுடன் சேர்த்து (அத்வைதம்) கொள்வார்"
என்ற தெளிந்த ஞானம் ஏற்படும்.
இது அத்வைதத்தில் விசேஷ அர்த்தத்தை சேர்த்து கொண்ட "விஷிஷ்டாத்வைத" அனுபவ நிலை.




மனக் குறை நீங்கிய அந்த சிஷ்யன், "தாஸோகம்… தாஸோகம்" என்று ஜபம் செய்து கொண்டு இருந்தான்.

ஒரு சமயம், மீண்டும் தன்னுடைய முதல் குருவை பார்க்க நேர்ந்தது.
அத்வைத சந்நியாசி இவனிடம் "சோஹம் என்ற உபதேச மந்திரத்தை ஜபம் செய்கிறாயா?" என்று கேட்டார்.

"ஆம்.. சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.. அதனோடு "தா" சேர்த்து "தாஸோகம்" என்று இன்னொரு சந்நியாசி சொல்ல சொன்னார்.. அப்படியே சொல்லி கொண்டு இருக்கிறேன்" என்றான்.

அத்வைத சந்நியாசி "பரவாயில்லை... அவரும் ஒரு அக்ஷரம் விட்டு விட்டார். இப்பொழுது சொல்லிக்கொண்டு இருப்பதோடு 'ஸ' என்ற அக்ஷரத்தை சேர்த்து 'ஸதா ஸோகம்' என்று சொல்" என்று உபதேசித்தார்.

"ஸதா" என்றால், "எப்பொழுதும், எந்த நிலையிலும்" என்று அர்த்தம்.

"ஸதா சோகம்" என்றால் "எப்பொழுதும், எந்த நிலையிலும், உடல் நானல்ல, பிராணன் நான் அல்ல, மனசு நான் அல்ல, புத்தி நான் அல்ல... தனித்த பொருளாக உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்று அர்த்தம்.
இது ஒரு அத்வைத நிலை.

"ஆத்மாவே நான். ஜீவானாக பிரிந்து கிடக்கும் என்னை, அந்த பரமாத்மா சேர்த்து கொண்டால் தான், அத்வைத நிலை ஏற்படும். அவரே எனக்கு ஆதாரம். அவரே எனக்கு ஈஸ்வரன். அவரின் தாஸன் நான்" என்ற தெளிவுடன் இருந்த அந்த சிஷ்யன், இப்படி தனக்கு "ஸதா சோகம்" என்று உபதேசித்து விட்டாரே என்று, மீண்டும் வைஷ்ணவ சந்யாசியை பார்க்க சென்றான்.
விஷிஷ்டாத்வைத சந்நியாசி "பரவாயில்லை... அவரும் ஒரு அக்ஷரம் விட்டு விட்டார். இப்பொழுது சொல்லிக்கொண்டு இருப்பதோடு 'தா' என்ற அக்ஷரத்தை சேர்த்து 'தாஸ தாஸோகம்' என்று சொல். இதுவே முடிவான நிலை." என்று உபதேசித்தார்.

"தாஸ தாஸோகம்" என்றால், "உள்ளிருக்கும் ஆத்மா தான் நான். ஆனால் ஜீவாதமாகிய எனக்கு ஈஸ்வரன் இருக்கிறார். அந்த பரமாத்மாவின் தாஸனாக யார் இருக்கிறாராரோ, அவருக்கு தாஸன் நான். அவரே என் குரு. அவர் அந்த ஈஸ்வரனுக்கு அடியார். நான் அந்த அடியார்க்கு அடியான்" என்று அர்த்தம்.

"குரு வழியே செல்" என்று தீர்க்கமான முடிவை வைஷ்ணவ சந்நியாசி உபதேசம் செய்ய, அத்வைத சந்யாசியும் பிறகு மறுக்க இயலவில்லை.

இப்படியே "தாஸ தாஸோகம்.. தாஸ தாஸோகம்.." என்று சொல்லிக்கொண்டு அந்த வைஷ்ணவ சந்யாசிக்கு அடியான் என்று குருவுக்கு கீழ் படிந்த, குரு காட்டும் வழியை பின்பற்றினான் அந்த சிஷ்யன்.

குருவே நமக்கு துணை. 


Thursday 12 December 2019

மாயை என்றால் என்ன? ப்ரம்மம் என்றால் என்ன? புரிந்து கொள்வோமே...

ஞானிக்கு, 'ப்ரம்மம்' மட்டுமே தெரிகிறது. ஞானி நிற்குணமாகவே எப்பொழுதும் இருக்கிறார்.


அஞானிக்கு 'மாயை' மட்டுமே தெரிகிறது. ரஜோ குணமும், தமோ குணமும், சத்வ குணமும் கொண்டு இருக்கிறான்.

'ப்ரம்மம்' என்று ஒன்று இருப்பதை ஞானியும் அறிகிறான், அஞானியும் அறிகிறான்...
ஆனால், அஞானி, ப்ரம்மத்திடம் திட சித்தம் இல்லாததால், மாயையில் சிக்குகிறான். 
ஞானி, ப்ரம்மத்திடம் திட சித்தம் கொண்டு இருக்கிறான். அதனால், மாயையில் சிக்குவதில்லை. 

புரியவில்லையா?..  
இதோ எளிதான விளக்கம்...




ப்ரம்மத்தில் இருந்து தான், உலகம் வெளிப்பட்டது..
ப்ரம்மத்தில் இருந்து தான், ப்ரம்மா வெளிப்பட்டார்..
ப்ரம்மத்தில் இருந்து தான், ரிஷிகள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் என்று வரிசையாக படைக்கப்பட்டார்கள்..





அந்த ப்ரம்மமே "பரவாசுதேவன்",
அந்த ப்ரம்மமே "நாராயணன்"
என்று வேதம் சொல்கிறது..

அந்த ப்ரம்மமே, மாயையை உருவாக்கி, தன்னை மறைத்து (வாசு) கொண்டு ஜீவனிடம் லீலை செய்கிறது.
'தன்னை மறைத்து கொள்வதால்', அந்த ப்ரம்மத்தை 'வாசுதேவன்' என்று பெயர் சொல்லி வேதம் அழைக்கிறது.

"ஞானிக்கு, மறைந்து இருக்கும் அந்த ப்ரம்மமே தெரிவதால், மாயை தெரிவதில்லை..."
என்று வேதம் சொல்கிறது..

"அஞானிக்கு, மாயை மட்டுமே தெரிவதால், மறைந்து இருக்கும் அந்த ப்ரம்மம் தெரியாததால்,
அந்த 'மாயை கொடுக்கும் அனுபவத்துக்கு' கட்டுப்பட்டு சுக-துக்கங்களை அனுபவிக்கிறான்..."
என்று வேதம் சொல்கிறது..

அந்த 'மாயையை அஞானிக்கு காட்டுவதும்' அந்த ப்ரம்மம் தான்.

அந்த மாயை தரும் அனுபவத்தில், சுகங்களை, துக்கங்களை அனுபவிக்கும் அஞானி, அந்த ப்ரம்மத்திடம் பக்தி செய்து மாயையை விலக்க பிரார்த்தனை செய்யாதவரை, அவர் மாயையை விலக்குவதும் இல்லை, தன்னை வெளிப்படுத்தி கொள்வதும் இல்லை.
"நாராயணனை பக்தி செய்யாமல், மாயை விலகவே விலகாது"
என்று வேதம் கூறுகிறது.

மேல் சொன்னதை, நம் அனுபவத்தில் புரிந்து கொள்ள, இதோ எளிதான உதாரணம்.. 
குருவே துணை...
ஒருவன் ஒரு சினிமா தியேட்டருக்கு சென்று, அமர்ந்தான்..
அங்கு இருக்கும் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.
அடுத்த நொடி,
பெரிய பெரிய மலைகள், பெரிய பெரிய உருவங்கள், பல விதமான ஒலிகள், ஒளிகள் அவன் முன் வந்துபோயின..

அந்த காட்சியினால், பல விதமான அனுபவங்களை (சிரிப்பு, துக்கம், கோபம், பொறாமை) தானும் அனுபவித்தான்...
காட்சிகள் மாற, காட்சிகள் மாற, 
ஒரு சமயம் உண்மையாகவே அழுதான்..
ஒரு சமயம் உண்மையாகவே சிரித்தான்..
ஒரு சமயம் உண்மையாகவே பயந்தான்...
இப்படி பல அனுபவங்கள் அவனுக்குள் உண்டானது...





திடீரென்று, காட்சிகள் மறைந்தன..
விளக்குகள் எரிந்தது..
பல வித காட்சிகளை இது வரை காட்டி, தனக்கு பல வித அனுபவங்களை கொடுத்த அந்த திரை,
இப்பொழுது தூய்மையான வெள்ளை திரையாக இருந்தது..

அவன் இதுவரை அனுபவித்த அனுபவங்கள் அனைத்துமே "பொய்" என்று உடனே உணர்ந்தான்..

வெள்ளை திரை தான் நிஜம். 
அது தான் இப்படி வித விதமான காட்சிகளை தந்தது என்று அறிந்தான்..

வெள்ளை திரை தான் நிஜம்..அது தான் என்றுமே உள்ளது.. 
என்று அறிந்தான்.

அந்த வெள்ளை திரை தான், தன்னை மறைத்து கொண்டு, 
பல வித காட்சிகளை தனக்கு தந்து, 
தன்னை அழ வைத்தது, 
தன்னை சிரிக்க வைத்தது 
என்று அறிந்தான்..

ஆபரேட்டர், காட்சிகளை நிறுத்தியதும்,
அவன் கண்களுக்கு தெரிந்த காட்சிகள் மறைந்ததும்,
மீண்டும் வெள்ளை திரையே மீண்டும் வெளிப்பட்டதை உணர்கிறான்..

"வெள்ளை திரையை "ப்ரம்மம்" என்று ஒப்பிட்டு,
அந்த ஆபரேட்டரை "ஞானி" என்று ஒப்பிட்டு,
அதில் காணப்பட்டும் பல வித காட்சிகளை, நாம் உலகத்தில் காணும் காட்சிகளாக (மாயை) ஒப்பிட்டு பார்க்கும் போது"
வேதம் சொல்லும், மேல் சொன்ன ரகசிய தத்துவங்கள்,
நமக்கும் எளிதாக புரிந்து விடுகிறது..

ஞானியான மகாத்மாக்கள், "உலகத்தில் நடக்கும் விஷயங்களை 'மாயை' என்று ஒதுக்கி விடும் சக்தி கொண்டுள்ளதால், அந்த மாயை தரும் அனுபவங்களில் அவர்கள் சிக்குவதில்லை..."
அவர்கள் மறைந்து கொண்டிருக்கும் ப்ரம்மத்தையே கவனிப்பதால், எப்பொழுதும் சமநிலையிலேயே உள்ளனர்..
ஞானியான மகாத்மாக்கள் பரபரம்ம அநுபவத்திலேயே உள்ளனர்.

அஞானிகள், "உலகத்தில் நடக்கும் விஷயங்களை 'மாயை' என்று ஒதுக்க முடியாததால், அந்த மாயை தரும் அனுபவங்களில் சிக்கி விடுகின்றனர்..

'இது வெறும் காட்சி தான், நாம் இந்த உடலை விட்டு ஒரு நாள் நிச்சயம் சென்று விடுவோம்' என்று தெரிந்தாலும், உலக மாயையை 'பொய்' என்று உதற முடியாமல் தவிக்கின்றனர்..
காட்சிகளுக்கு கட்டுப்பட்டு, பல வித அனுபவங்களை மாயை என்று தெரிந்தாலும் அனுபவிக்கின்றனர்..

இப்படி, தானே மாயையை விலக்க முடியாத அஞானிகள், ஒரு ஆத்ம ஞானியை "குருவாக" சரண் அடைந்தால், திரைக்காட்சிகளை விலக்கும் ஒரு ஆபரேட்டர் போல, குருநாதர் வந்து மாயை என்ற திரையை விலக்கி விட்டு விடுகிறார்...

குருவை சரண் அடைந்த அஞானியும், ஞானி அனுபவிக்கும் ப்ரம்மத்தை அறிந்து கொள்கிறான்.. 

இந்த உதாரணத்துடன், இப்பொழுது மீண்டும் முதலில் இருந்து படித்து பாருங்கள்...
அப்பொழுதுதான், 
ஞானி, "பிரம்மத்தை எப்படி பார்க்கிறார்?".. 
ஞானி, "எப்படி உலகில் நிகழும் பலவித காரியங்களை பார்க்கிறார்?". 
ஞானி "எப்படி சுக-துக்கங்களை சமமாக பார்க்கிறார்?" 
என்று புரிந்து கொள்ள முடியும்.

அருமையான ஹிந்து தர்மத்தை விட்டு, போலி மதங்களுக்கு போக மனம் வருமா?.. 
அற்புதங்களை தேக்கி வைத்துள்ள ஹிந்து தர்மத்துக்கு, போலி மதங்களை விட்டு, வெளிநாடுகளில் பலர் வந்து குவிகின்றனர்...
பாரதத்தில் உள்ள ஹிந்துக்கள் தங்கள் பெருமையை உணர வேண்டாமா?... சிந்திக்க வேண்டும்..

ஹிந்து தர்மத்தின் பெருமையை உலகுக்கு சொல்வோம்...

ஹிந்துக்களை போற்றுவோம்..
ஞானிகள், சந்நியாசிகள், மகாத்மாக்களை போற்றுவோம்..
இடியும் நிலையில் உள்ள கோவில்களை புதிது செய்து காப்போம்..




வாழ்க ஹிந்துக்கள்.