Followers

Search Here...

Showing posts with label gujarat. Show all posts
Showing posts with label gujarat. Show all posts

Wednesday 27 December 2017

மஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே.

மஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat


ஸ்ரீ கிருஷ்ணரின் அரசாட்சி புரிந்த "துவாரகை" என்ற த்வாரவதி தேசம், குஜராத்தில் உள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்ம நண்பனான சுதாமா என்ற குசேலன், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து, ஸ்ரீ கிருஷ்ணர் கடலில் அமைத்திருந்த துவாரகை நகருக்கு நடந்தே சென்றார்.
ஏழையாக இருந்த குசேலனை தன் அனுக்ரஹித்தினால் கோடீஸ்வரன் ஆக்கினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

கம்சன் கொல்லப்பட்டான் என்ற ஆத்திரத்தில், மகத அரசன் 'ஜராசந்தன்' (Jamshedpur, Jarkhand near Bihar), ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் மதுராவை (உத்திர பிரதேசம்) தாக்கினான்.
ஸ்ரீ கிருஷ்ணர் 'ஜராசந்தன்' மற்றும் அவன் படையை அடித்து துரத்தினார்.

இதே போல, ஜராசந்தன் 17 முறை தொடர்ந்து படை எடுத்துக்கொண்டே இருந்தான். 
ஜராசந்தனை கொலை செய்ய எண்ணமில்லாத ஸ்ரீ கிருஷ்ணர், மதுரா நகர 5 லட்சம் யாதவ மக்களை மாய ஸ்ருஷ்டி மூலம், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து, அனைத்து மக்களையும் ஒரே ராத்திரியில் இடம் மாற்றினார்.

இந்த மாயை புரியாத ஜராசந்தன், மீண்டும் படை எடுக்க வந்த போது மதுரா நகரமே காலி ஆகி போயிருந்ததை கண்டு தேடி கொண்டே இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆணைப்படி, தேவலோகத்தில் இருக்கும் விஸ்வகர்மா ஒரே நாளில், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து கொடுத்தார்.




துவாரகை நகரம் சுற்றியும் பெரிய மதில் சுவருடன், நான்கு வாசல் கொண்டும் அமைக்கப்பட்டது.

நகரத்தின் வீடுகள் வரிசையாக அமைக்கப்பட்டு, நகரத்தின் வீடுகள் அனைத்தும் தங்கத்தால் இழைக்கப்பட்டு, வான் உயர இருந்தது.
ஒன்பது லட்சம் மாளிகைகள் அமைக்கப்பட்டன.

நகரின் தெருக்கள் வெயிலில் சூடாமல் இருக்க, தண்ணீர் தானாக தெளித்துக் கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தன.

பெரிய பெரிய பாய்கள் கொண்டு, வெயிலில் மக்கள் பாதிக்காதவாறு நகர வீதிகளில் நிழலுக்கு கட்டப்பட்டு இருந்தன.

ஸ்ரீ கிருஷ்ணரின் மாளிகை தனியாக, மிக பிரம்மாண்டமாக இருந்தது.

ஸ்ரீ கிருஷ்ணரின் பத்தினிகளுக்கு அதி ஆச்சர்யமாக 60,000 மாளிகைகள் கட்டப்பட்டு இருந்தன.

நகரம் முழுவதும் பொன்னால், ரத்தினங்களால் ஜொலித்தது.
நகரம் தோட்டம், ஓடை, பறவைகள் என்று இயற்கை வளத்துடன் நிறைந்து இருந்தது.

ஒரு சமயம், அசுரன் ஒருவன் தேவர்களையும் அடக்கி, இவர்கள் யாராலும் வெல்ல முடியாதபடி வரம்பெற்று, பூமியில் பிறந்து அட்டகாசம் செய்து வந்தான்.
இவன் ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசத்தில் இருந்து கொண்டு அசுரர் குலத்தை மனித அவதாரம் செய்து பெரும் அட்டகாசம் செய்து வந்தான்.

ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசம் இன்றைய 'அஸ்ஸாம்' தேசம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் உதவியை சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் வந்து நாட, நரகாசுரனை அழிக்க துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிஸம் சென்றார்.

இந்த சமயத்தில், சேடி தேச (மத்யபிரதேச) அரசன் சிசுபாலன், தன் படையுடன் துவாரகை சென்று, துவாரகை நகரை தீ வைத்து கொளுத்தினான்.

நரகாசுரனை கொன்று திரும்பிய ஸ்ரீ கிருஷ்ணர், சிசுபாலனின் இந்த குற்றத்தையும் பொறுத்தார்.


நரகாசுரனின் வேண்டுதல் ஏற்று, அவன் இறந்த நாள், அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்ட பட்டதால், தேவர்களும் மகிழ்ந்ததால், அந்த நாள், தீபாவளி என்று இன்றுவரை கொண்டாடப்படுகிறது.

விதர்ப தேசத்தில் (மகாராஷ்டிரா) ருக்மிணி வளர்ந்து வந்தாள். 
ருக்மிணி, குழந்தை முதல் இன்று துவாரகை வரை ஸ்ரீ கிருஷ்ணர் என்ன செய்தார், எப்படி இருப்பார் என்று, அவரைப்பற்றி அறிந்து இருந்தாள்.

'மணந்தால், இவரை தான் மணக்க வேண்டும்' என்று நினைத்தாள். ருக்மிணியின் தந்தை சம்மதித்தார்.

ருக்மிணியின் சகோதரன் பெயர் 'ருக்மி'.
இவன், தன் தங்கையை சேடி அரசன் சிசுபாலனுக்கு கொடுப்பது என்று முடிவு கட்டி, திருமணத்திற்கும் ஏற்பாடு செய்தான்.

மனம் வெதும்பிய ருக்மினி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு கடிதம் ஒன்றை ஒரு யோகியிடம் கொடுத்து, 'எப்படியாவது வந்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று எழுதி அனுப்பினாள்.

ஸ்ரீ கிருஷ்ணர், விதர்ப தேசம் வந்து, ஜராசந்தன், ருக்மி போன்றோர் பார்க்க, ருக்மிணியை தூக்கி சென்றார்.

ருக்மி கோபத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, சண்டையில் தோற்றான் ருக்மி.

இவனை கொல்வதா? என்று நினைத்த ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மிணியின் அண்ணன் என்பதால், உயிரோடு விட தீர்மானித்தார்.

ருக்மிணிக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வெகு விமரிசையாக திருமணம் துவாரகையில் நடந்தது.

மஹா பாரத சமயத்தில், 13 வருடம் பாண்டவர்கள் நாட்டை விட்டு வனவாசம் இருந்த போது, இந்த தேசங்களில் சில காலம் இருந்தனர்.

'துர்வாசர்' இந்த குஜராத் தேசத்தில் பல வருடங்கள் இருந்தார்.
இந்த சமயத்தில், பாண்டவர்களை பார்க்க வந்தார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் அணுகிரஹத்தினால், இவரால் வர இருந்த இடையுறை சமாளித்தனர்.

வனவாச சமயத்தில், 13 வருடமும், பாண்டவர்களின் பணியாளர்கள் துவாரகையில் தங்கி இருந்தனர்.

ஸ்ரீ கிருஷ்ணர், பலராமர் தன் அவதாரத்தை முடித்த பின், துவாரகை தேசத்தை கடல் உள்வாங்கிக் கொண்டது.

அர்ஜுனன் தன் இறுதி யாத்திரையாக புறப்பட்ட போது, ஸ்ரீ கிருஷ்ணர் இருந்த துவாரகை கடலில் மூழ்கி இருக்கும் இடத்தை பார்த்து விட்டு, இமாலய பர்வதம் நோக்கி புறப்பட்டார்.


ஸ்யமந்தக மணி, ஸ்ரீ கிருஷ்ணர் சத்யபாமாவை மணம் செய்து கொண்ட சரித்திரம் தெரிந்து கொள்ள... Click  படிக்கவும்