Followers

Search Here...

Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Tuesday 9 June 2020

"கடவுள் இருக்கிறாரா? என் கண் எதிரே காட்டு" என்று நாத்தீகன் கேட்கிறான்.. ஒரு அலசல்...

1. புலன்:
"பூ அழகாக இருக்கிறதா? யாரிடம் பொய் சொல்கிறாய்?"
என்று குருடன் கேட்கிறான்:

"பூ அழகாக தான் இருக்கிறது. என் கண்ணுக்கு தெரிகிறது. ஆனால், உனக்கு உள்ள குறையால், உனக்கு தெரியவில்லை. 
நீ பார்க்கமுடியவில்லை என்பதால் நான் பார்ப்பது பொய் என்று ஆகிவிடாது" 
என்று கண் இருப்பவன் சொல்கிறான்.

புலன்களால் ஏற்படும் அனுபவத்தை, புலன்கள் முடக்கப்பட்ட ஒருவனால் அறியமுடியாமல் போகிறது.
(புலன்கள் 5 : கண், காது, நாக்கு, மூக்கு, தோல்)




2.  அனுபவம்:
"என்னது பசி மயக்கமா? யாரை ஏமாற்றுகிறாய்?"
என்று பசி என்ற அனுபவமே இல்லாத பணக்காரன் கேட்கிறான்.
"பசி என்ற அனுபவம் எனக்கு உண்மை. அது சத்தியமே ! உனக்கு அது அனுபவத்தில் இல்லாததால், நான் சொல்வது பொய் என்று ஆகிவிடாது"
என்று பசியில் இருப்பவன் சொல்கிறான்.

உடல் சம்பந்தமாக ஏற்படும் அனுபவங்களை, அந்த அனுபவங்கள் ஏற்படாத ஒருவனால் அறியமுடியாமல் போகிறது.
(உடல் சம்பந்தமாக ஏற்படும் அனுபவங்கள் : பசி, உடல் வலி.)

3. மனம்:
"என்னது.. குடும்பத்தை எப்படி நடதத்துவோம் என்று கவலையா? எதற்கு கவலை?"
என்று  கேட்கிறான் 7 தலைமுறைக்கு சொத்து சேர்த்த அரசியல்வாதி.

"எதிர்காலத்தை நினைத்து கவலையும், பயமும் எனக்கு மனதில் தோன்றுவது உண்மையே. அது சத்தியமே ! உனக்கு அது அனுபவத்தில் இல்லாததால், நான் சொல்வது பொய் என்று ஆகிவிடாது"
என்று அன்றாடம் உழைத்து உண்பவன் சொல்கிறான்.

4.
1. கடவுள்:
"கடவுள் இருக்கிறாரா? யாரிடம் பொய் சொல்கிறாய்? என் கண் எதிரே காட்டு"
என்று நாத்தீகன் கேட்கிறான்:
"கடவுள் இருப்பதால் தான் பேசுகிறாய். 
கடவுள் இருப்பதால் தான் பார்க்கிறாய்.
கடவுள் இருப்பதால் தான் நீ அனுபவங்களை உணர்கிறாய்.

'புலனுக்கும்,  உடல் அனுபவத்துக்கும், மன உணர்வுகளுக்கும்' -  அப்பாற்பட்டு இருக்கும் கடவுளை, உன் கண்ணை கொண்டு பார்க்க நினைக்காதே ! 

கண்ணால் கடவுளை பார்க்க வேண்டும்! என்று கேட்கிறாயே?
முதலில், 
'யார் உள்ளே இருப்பதால், உன் கண் பார்கிறது?' 
என்று யோசி.

'உனக்கு அனுபவங்களை உள்ளிருந்து கொடுப்பது யார்?' 
என்று யோசி.

'பிணத்துக்கு கண் உண்டு. அது பார்க்குமா? 
பிணத்துக்கு அனுபவம் உண்டா?'
உன்னையே கேட்டு பார்.

நீயும் ஒரு நாள், நிச்சயமாக பிணமாக ஆகி விடுவாய். 
இன்று 'உனக்கு இந்த அனுபவங்களை தருவது யார்?' 
என்று யோசி.

உன்னையே உள் நோக்கி கடந்து பார். 
கண்ணை பார்க்க வைப்பது கடவுள் என்று புரியும்.
அனுபவங்களை உணரச்செய்வது கடவுள் என்று புரியும்.
உள்ளிருக்கும் கடவுள் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்" என்று உனக்கு தெரியும்.

'அவர் உன்னிடத்திலும் உள்ளார். 
மற்றவர்களிடத்திலும் இருக்கிறார்.
அவர் உள்ளும் இருக்கிறார். 
அவர் வெளியிலேயும் இருக்கிறார். 
அவர் எங்கும் இருக்கிறார்' என்ற உண்மை புரியும்.

நீ "ஆத்மா" என்று சொல்கிறாய். 
நீ "மனசாட்சி" என்று சொல்கிறார். 
நீ "உயிர்" என்று சொல்கிறாய். 

நான் "பரமாத்மா" என்று சொல்கிறேன். 
நான் "கடவுள்" என்று சொல்கிறேன். 
நான் "ஈஸ்வரன்" என்று சொல்கிறேன். 
கண்ணுக்கு அப்பாற்பட்ட, புலன்களுக்கு அப்பாற்பட்ட எங்கும் உள்ள பிரமாத்மா, 
தர்மத்தை நிலைநாட்ட, தர்மங்களை தானே நேரிடையாக சில சமயங்களில் சொல்ல  "ஸ்ரீ கிருஷ்ணராக கபில ரிஷியாக, வ்யாசராக" வந்தார் என்று அறிகிறேன்.


'மனிதனுக்கு வாழ்க்கையில் எத்தைகை கஷ்டம் வந்தாலும், தர்மத்தில் இருக்க வேண்டும்' என்று காட்ட, தானே மனித அவதாரம் எடுத்து "ஸ்ரீ ராமராக" வந்தார் என்றும் அறிகிறேன்.

பலி சக்கரவர்த்தி அடுத்தவன் (தேவர்கள்) சொத்தை அநியாயமாக பறித்து, விரட்டி அடித்த செயலுக்கு, அதர்மத்தை அதர்மம் கொண்டே கபடம் செய்து அவதாரம் எடுத்த "வாமனர்" என்று அறிகிறேன். 

அவதாரம் செய்த பரமாத்மாவை புரிந்து கொள்ளமுடியாமல் போனாலும் பரவாயில்லை,  
"உனக்கு ஆத்மாவாக அவரே தான் இருக்கிறார்" என்பதும் உனக்கு  புரியவில்லை என்றால், அது உனக்கு நீயே செய்து கொள்ளும் துரோகம். 

கடவுளை மறுப்பவன், ஆத்மாவை மறுக்கிறான். 
ஆத்மாவை மறுப்பவன், தன்னையே மறுக்கிறான். 
தன்னையே இல்லை என்று மறுப்பவன், பிணத்துக்கு சமம்..

கடவுளை மறுப்பவன், பிணத்துக்கு சமம்..





Tuesday 10 September 2019

உடுப்பி கிருஷ்ணர் எப்படி வந்தார்? அணையா விளக்கு கோவிலில் ஏற்றுகிறார்களே!! அணையா விளக்கு என்று எதை சொல்கிறார் திருமங்கையாழ்வார்? தெரிந்து கொள்வோமே...

பத்ரிநாத்தில் "நர-நாராயணன்" இருக்கிறார்.
வட இந்திய யாத்திரை சென்றவர்கள் பதரி நாராயணனை கட்டாயம் தரிசித்து இருப்பார்கள்.



நாகப்பட்டினம் திருநாங்கூரில் உள்ள "மணிமாட கோவிலில்" பெருமாள், "நாராயணன்" என்ற பெயரில் அருள் செய்கிறார்.

வட இந்தியாவில் உள்ள பதரிநாத் வரை சென்று, நர-நாராயணனை நம்மால் பார்க்க இயலாது போனால், அதே பெருமாளை மணிமாட கோவிலில் நாம் தரிசிக்கலாம்.

பெருமாள் கருணை கொண்டு, தானே இங்கு மணிமாட கோவிலுக்கு வந்து விட்டார்.
திராவிட தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய திவ்ய தேசம்.

"பதரியில் உள்ள நர நாரணனே இங்கு மணி மாட கோவிலில் நமக்காக இருக்கிறார். அவரை வணங்கு மனமே"
என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
மணிமாட கோவிலில் உள்ள  பெருமாளை பார்த்து
"நந்தா விளக்கே, அளத்தற்கரியாய்
நரநாரணனே
கரு மாமுகில் போல் என் தாய்"
என்று, வேதத்தின் ரகசியத்தை, எளிதான பதங்கள் போட்டு,
பெருமாளை மங்களாசாசனம் செய்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

"நந்தா விளக்கு" என்றால் என்ன?
"அளத்தற்கரியாய்" என்றால் என்ன?
"என் தாய்" என்று எதற்கு சொன்னார்?

"நந்தா விளக்கு" என்று கோவில்களில் வைத்து இருப்பதை நாம் பார்த்து இருப்போம்.
அந்த விளக்கு அணையாமல் இருக்க,
பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு, அந்த விளக்கு அணைந்து விடாமல், அதற்கு எண்ணெய் ஊற்றி கொண்டே இருப்பார்கள்.

அணையாமல் விளக்கு எரிவதால், அந்த விளக்கை "அணையா விளக்கு" என்று கூட போர்டு போட்டு வைத்து இருப்பார்கள்.


"நந்தா" என்றால் "அணையாத" என்று அர்த்தம்.

"நந்தா விளக்கு" என்றால் "அணையா விளக்கு" என்று அர்த்தம்.

கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும், இந்த "நந்தா விளக்கையா"?திருமங்கையாழ்வார் இங்கு சொல்கிறார்? இல்லை.

உண்மையில் உலகில் நாம் காணும் அனைத்து விளக்குகளும் நந்தி (அணையும்) போகும் விளக்குகள் தான்.

யாரும் தூண்டாமல் தானாகவே பிரகாசமாக எந்த விளக்கும் கிடையாது.
யாரோ ஒருவர் தூண்டியோ,
யாரோ ஒருவர் துணை கொண்டோ தான்,
நாம் காணும் விளக்குகள் அனைத்தும் உள்ளன.
இவை எல்லாம் "நந்தி போகும் விளக்குகள்" தான்.

"நந்தா விளக்கு" என்பதோ,
யாருமே தூண்டாமல்,
யார் துணையும் இல்லாமல்,  'சுயமாகவே பிரகாசமாக' இருக்கும் விளக்கு.

அப்படி ஒரு "நந்தா விளக்கு" உள்ளதா?

எந்த 'நந்தா விளக்கை' திருமங்கையாழ்வார் இங்கு சொல்கிறார்? 
என்ற கேள்வி நமக்கு எழலாம்.
இந்த இருண்ட உலகம், எந்த விளக்கு மூலம் பிரகாசம் அடைகிறது?
சூரியன், சந்திரன், அகல், மின்சாரம் போன்ற  'விளக்குகள்' மூலம் பிரகாசம் அடைகிறது.

இந்த வெளி விளக்குகள் மூலம், உலகம் பிரகாசமாகிறது.
'உலகம் பிரகாசமாக இருக்கிறது' என்று, 'எந்த விளக்கு'? மூலம் நமக்கு தெரிகிறது?
"கண்" என்ற விளக்கு மூலம் உலகம் தெரிகிறது...
மின்சார விளக்கு அணைந்து இருக்கும் போது, இருட்டில் மாட்டியவனுக்கு கண் இருந்தும் ப்ரயோஜனமில்லையே!! 

கண் இல்லாத குருடனுக்கு எந்த விளக்கை கொண்டு வெளி உலகம் தெரியும்?
ஆயிரம் 'சூரியன்' இருந்தாலும்,
ஆயிரம் 'மின்சார விளக்குகள்' போட்டாலும்,
வெளி உலகம் இருப்பது 'குருடனுக்கு தெரியாதே'..


ஆதலால்,
'கண்' என்ற விளக்கும், 
'வெளியில் உள்ள' அனைத்து விளக்குகளும் 
நந்தி போகும் விளக்குகளே...

ஆனால், குருடனாக இருப்பவனுக்கும், வெளி விளக்குகள் அணைந்து இருட்டில் இருப்பவனுக்கும் கூட,
அவனுள்ளேயே, எப்பொழுதும் ஒரு விளக்கு "சுயமே பிரகாசமாக எரிந்து கொண்டே" இருக்கிறதே!!...
அந்த விளக்கு என்றுமே அணைவதில்லையே..

அது யார் தூண்டுதலும் இல்லாமல், 
யார் துணையும் இல்லாமல் 
தானே சுயம் பிரகாசமாக உள்ளதே!!  

அந்த நந்தா விளக்கு ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கிறதே!! அதை தெரிந்து கொள்ள வேண்டாமா நாம்?.
அணையாத சுயம் பிரகாச இருக்கும் அந்த நந்தா விளக்கு "பரவாசுதேவன் நாராயணன்" அல்லவா..!!
அவர் நமக்குள் தான் இருக்கிறார் என்று தெரியாமல் இருக்கலாமா?

நந்தா விளக்காக உள்ள அந்த 'பரவாசுதேவன்' நம் உடம்பில் இருக்கும் வரை தானே, நாம் இந்த உடலில் ஜீவிக்க முடிகிறது!!.

அந்த ஜோதி ஸ்வரூபமான பரமாத்மா உடலை விட்டு விலகும் போது, பரமாத்மாவோடு "ஜீவனாகிய நாமும்" கிளம்ப வேண்டியது தான்.

குருடனிடம் "உலகம் பிரகாசமாக இருக்கிறதே... உனக்கு தெரிகிறதா?" என்று கேட்டால்,
வெளியில் உறுப்பாக உள்ள "கண் என்ற விளக்கு" அவனுக்கு எரியாததால்,
குருடன் "தனக்கு உலகம் தெரியவில்லை" என்கிறான்.

ஆனால்,
நந்தா விளக்காக (சுயமே பிரகாசம்) பரமாத்மா அவன் உள்ளும்  இருப்பதால்,
குருடனிடம் "உலகம் தெரியவில்லை சரி. நீ இருக்கிறாய் என்று தெரிகிறதா?" என்று கேட்டால்,
அவன் உள்ளே சுயம் பிரகாசமான நாராயணன் என்ற விளக்கு அவனுக்குள் எரிவதால்,
"கண் இல்லாததால், உலகம் எனக்கு தெரியவில்லை. 
ஆனால் நான் இருக்கிறேன் என்று தெரிகிறது" என்கிறான்.
குருடன் கூட, "நான் இருக்கிறேனா என்று தெரியவில்லை!!. " என்று சொல்வதில்லை.

"நான் இருக்கிறேன்" என்பதை, பரமாத்மா என்ற "நந்தா விளக்கு" இருக்கும் வரை, நாம் தெரிந்து கொள்கிறோம்.





'நான் இருக்கிறேன்' என்று தெரிய காரணம் எது?
எந்த அணையா விளக்கை கொண்டு, குருடன் கூட, தான் இருப்பதை தெரிந்து கொள்கிறான்?

"பரமாத்மா நாராயணன்" என்ற நந்தா விளக்கு இருப்பதால் தான், 'நான் இருக்கிறேன் என்பது எனக்கு தெரிகிறது' என்ற உண்மையை ஞானிகள் புரிந்து கொள்கின்றனர்.

இந்த அர்த்தத்தை "நந்தா விளக்கு" என்ற பதம் மூலம் நமக்கு காட்டுகிறார் திருமங்கை ஆழ்வார்.

"பரமாத்மா எப்பொழுதும் அணையாமல் உள்ளே இருந்து கொண்டு, நமக்கு பிரகாசத்தை கொடுக்கிறார்" என்பதாலேயே பரமாத்மா நாராயணனை  "நந்தா விளக்கே" என்று கூப்பிடுகிறார்.

'சுயம் பிரகாசமாக ஜோதி ஸ்வரூபமாக இருக்கும் நாராயணன், நமக்குள்ளும் இருக்கிறார்' 
என்பதை குறிக்கவே "நந்தா விளக்கே" என்ற பதத்தை வைத்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

நந்தா விளக்கே என்று பரமாத்மாவை குறிக்கும் திருமங்கையாழ்வார், பரமாத்மா ஜோதி ஸ்வரூபமானவர் என்று காட்டுகிறார்.
அவர் அரூபமானவர்,
அவரே வேதம் உரைக்கும் ப்ரம்மம் என்று காட்டுகிறார்.

ஜோதி ஸ்வரூபமானவர் (அரூபமானவர்), சுயமே பிரகாசமாக நந்தா விளக்காக இருக்கிறார் என்கிறார்.

அவர் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறார். எங்கும் இருக்கிறார்.

"அவர் நம் உடலின் உள்ளே இருப்பதால் தான், நாம் இருக்கிறோம்"
என்பதை சுட்டி காட்டவே, "நந்தா விளக்கே" என்ற பதத்தை வைத்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

நம் உடம்பை விட்டு அந்த நந்தா விளக்கு (பரமாத்மா) விலகி விட்டால்? "சவம்" என்ற பெயரை பெற்று விடுகிறது இந்த உடல்.

பரமாத்மா உள்ளே இருந்தவரை, இந்த உடல் இயங்கி வந்தது...
அந்த நந்தா விளக்கு உடலை விட்டு விலகிய அடுத்த நொடி, மரம் போல உடல் சாய்ந்து விடுகிறது...

நம் உடலுக்கு ஆதாரமாக இருந்த அந்த நந்தா விளக்கை, சுயம் பிரகாசமான ஜோதியை, பரமாத்மாவை, ஜீவனாகிய நாம் மதிக்காமல், உணராமல் போனால், நமக்கு தானே நஷ்டம்...
நாத்தீகம் பேசுவதால் யாருக்கு லாபம்?..

"உடலை விட்டு நந்தா விளக்கான பரமாத்மா விலகி விட்டால், அவரும் அழிந்து விடுவாரோ?"
என்ற சந்தேகம் நமக்கு வரக்கூடாது என்பதற்காக, உடனேயே "அளத்தற்கரியாய்" என்ற பதத்தை  திருமங்கையாழ்வார் பயன்படுத்துகிறார்.

நம் உடலை விட்டு போனாலும், பரமாத்மா (நந்தா விளக்கு) அழிவதில்லை என்று காட்டுகிறார்.
அவர் உலகம் எங்கும் பிரகாசமாக பரவி இருக்கிறார் என்கிறார்.

'அளத்தற்கரியாய்' என்றால் என்ன?
அளத்தற்கரியாய் என்றால் "அளவிட முடியாதவர்" என்று அர்த்தம்.


தமிழ் வளர, திவ்ய பிரபந்தங்களை படித்தாலே போதும்.
பல தமிழ் சொற்கள் தெரிந்து கொள்ளலாமே...

"நந்தா விளக்கே அளத்தற்கரியாய் நர நாரணனே"
என்று சொல்லும் போது,
"பரஞ் ஜோதியாக, யார் துணையும் இல்லாமல், தானே சுயம் பிரகாசமாக (நந்தா விளக்காக) உள்ள நாராயணன் நம் உடம்புக்குள் மட்டும் இல்லை, அவர் அளவிட முடியாதவராக எங்கும் இருக்கிறார்"
என்று பர தத்துவத்தை 'அளத்தற்கரியாய்' என்ற சொல்லை வைத்து பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.
ஜீவனாகிய நாம் அனைவரும்,
'தேசத்தால், காலத்தால், வஸ்துவால்' கட்டுப்பட்டவர்கள்.

ஒரு மனிதன் ஒரு தேசத்தில் இருக்கும் போது, அதே சமயத்தில் இன்னொரு தேசத்தில் இருக்க முடியாது..
பரவாசுதேவன் நாராயணனோ தேசத்துக்கு கட்டுப்படாதவராக இருக்கிறார்.
எந்த தேசத்திலும், எப்பொழுதும் இருக்கிறார்.
அளவிட முடியாதவராக எங்கும் இருக்கிறார்.

பரவாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த போது, நாரதர்
"ஸ்ரீ கிருஷ்ணர் தேசத்துக்கு கட்டுப்பட்டவரா?" என்று பார்க்கலாம் என்று துவாரகை வந்தார்.
16108 ராணிகள் ஸ்ரீ கிருஷ்ணரின் தர்ம பத்னிகள்.

நாரதர் ஒவ்வொரு ராணியின் அரண்மனைக்கும் சென்று சென்று பார்க்கிறார்.
நாரதரின் மனோபாவம் புரிந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணர்,
"ஒவ்வொரு அரண்மனையிலும் ஒவ்வொரு கிருஷ்ணனாக இருந்து, தான் தேசத்துக்கு கட்டுப்பட்டவன் இல்லை" என்று காண்பித்தார்.
நாரதர் பரமானந்தம் அடைந்தார்.
பரவாசுதேவன்  தேசத்துக்கு கட்டுப்படாதவர் என்று நிரூபித்தார்.

ஜீவனாகிய நாம் அனைவரும்,
"காலத்தால் கட்டுப்பட்டவர்கள்".

மனிதன் காலத்துக்கு கட்டுப்பட்டு வாழ்கிறான்.
மனிதன் தன் பிறப்பை இறப்பை கூட தீர்மானிக்க முடியாதவன்.

பரவாசுதேவன் நாராயணனோ, எந்த காலத்துக்கும் கட்டுப்படாதவர். "நடந்தது, நடப்பது, நடக்க போவது" என்று எந்த காலத்திலும் இருப்பவர்.
"காலம் தன் கையில் அடங்கி உள்ளது" என்பதை காட்டுவதற்கே "கால சக்கரத்தை" நாராயணன் வைத்துள்ளார்.

பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, உஜ்ஜயினியில் (மத்திய பிரதேசம்) சாந்தீபினியின் ஆசிரமத்தில் படித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணர் "பரமாத்மா" என்று அறிந்த சாந்தீபினி, 12 வருடம் முன் கடலில் விழுந்து இறந்து விட்ட தன் மகனை மீட்டு தர கேட்டார்.

குருவின் ஆசையை நிறைவேற்ற, காலத்துக்கும் கட்டுப்படாத ஸ்ரீ கிருஷ்ணர், 
எம லோகம் சென்று, யமதர்மனிடம் அந்த ஜீவனை அனுப்ப சொல்லி,
12 வருடம் கழித்து அவன் எப்படி வளர்ந்து இருப்பானோ அதே போன்ற உடலையும் கொடுத்து, எம லோகத்தில் இருந்து உஜ்ஜயினி வருவதற்குள் சகல வேதங்களையும் தானே சொல்லி கொடுத்து தன் குருவிடம் ஒப்படைத்து விட்டார்.

மகாபாரத போர் முடிந்த பிறகு, துவாரகையில் ஒரு சமயம், தேவகி ஸ்ரீ கிருஷ்ணரிடம் "தன்னால் கிருஷ்ணனின் பால லீலையை பார்க்க முடியாமல் போய் விட்டதே... குழந்தை கிருஷ்ணனை கொஞ்சும் பாக்கியம் அந்த யசோதை தானே பெற்றாள்" என்றாள்.
தன் தாய் ஆசைப்படுகிறாள் என்றதும், தன் மாய சக்தியால், அங்கேயே யசோதை அனுபவித்த குழந்தையாக ஆகி, பால லீலைகள் அனைத்தையும் தேவகிக்கு காட்டினார்.

காலத்துக்கு கட்டுப்படாதவர் என்று காட்டினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

'அளவிட முடியாதவராக' எங்கும் இருக்கிறார்.

இந்த ஆச்சர்யத்தை ருக்மிணி பார்த்து விட, தான் கண்ட 2 வயது கிருஷ்ணனை சிலை செய்தாள்.
அந்த பால கிருஷ்ணனை தானே பூஜை செய்ய ஆசைப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணரிடம் காண்பித்தாள்.

ஸ்ரீ கிருஷ்ணரும் தன் கையால் தொட்டு, தன் சாநித்யம் இந்த சிலையில் இருக்கும் என்று அணுகிரஹித்தார்.
கலியுகம் ஆரம்பித்து, துவாரகை கடலில் மூழ்கிய பின், மத்வாச்சாரியார் காலத்தில் ருக்மிணி வழிபட்ட அந்த மூர்த்தி இவருக்கு கிடைத்தார்.

உடுப்பியில் இந்த கிருஷ்ண விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று வரை லக்ஷகணக்கான பக்தர்களை ஆகர்ஷிக்கிறார்.
ஜீவனாகிய நாம் அனைவரும்,
"தேசத்தால், காலத்தால், வஸ்துவால்" கட்டுப்பட்டவர்கள்.

மனிதன் மனிதனாக தான் இருக்க முடியும். 
மனிதனே பல வஸ்துவாக ஆக முடியாது..

பரவாசுதேவன் நாராயணனோ எந்த வஸ்துவுக்கும் கட்டுப்படாதவர்.
எந்த வஸ்துவாகவும் இருப்பவர்.
ராமராக, கிருஷ்ணராக அவதாரம் செய்த பரவாசுதேவன், தேவைப்படும் போது, மீனாக, பன்றியாக, ஆமையாக, நரசிம்மராக கூட அவதரித்து விட்டார்..
தான் எந்த வஸ்துவாகவும் வர இயலும் என்று காட்டினார்..
ப்ரம்ம தேவன் படைப்பில் இல்லாத நரசிம்மமாக கூட வந்து விட்டார்..

பரவாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த போது,
"உயிருள்ள, உயிரற்ற பொருள் யாவும் தானாக ஆகி, தான் வஸ்துவுக்கு கட்டுப்பட்டவன் இல்லை" என்று காட்டினார்.

ப்ரம்ம தேவன், இடையர் சிறுவர்களை ஸ்ரீபிருந்தாவனத்தில் இருந்து மறைத்து சத்ய லோகம் எடுத்து சென்று விட்டார்.
ஸ்ரீ கிருஷ்ணர் இதை பற்றி துளியும் கவலைப்படவில்லை.
தானே அனைத்து இடையர் சிறுவர்களாகவும் ஆகி,
அவர்கள் கட்டி இருந்த ஆடைகளாகவும் ஆகி,
சாப்பிட கொண்டு வந்திருந்த மண் சட்டியாகவும் தானே ஆகி விட்டார்.

வஸ்துவுக்கு கட்டுப்படாதவர் என்று காட்டினார்.
அளவிட முடியாதவராக எங்கும் இருக்கிறார்.

ஒரு வருட காலம் ஆகி விட்டது. பிருந்தாவனம் வந்து பார்த்த ப்ரம்ம தேவன், ஸ்ரீ கிருஷ்ணரே உயிருள்ள பொருளாகவும், உயிரற்ற  பொருளாகவும் இருந்த ஆச்சர்யத்தை கண்டு பிரமித்தார்.
வஸ்துவுக்கு கட்டுப்படாத பரமாத்மாவே ஸ்ரீகிருஷ்ணராக இருக்கிறார் என்று உணர்ந்தார்..ப்ரம்ம தேவன்

நாம் இருப்பதற்கு ஆதாரமாக, அணையாமல் இருக்கும் அந்த பரஞ்ஜோதியை "நந்தா விளக்கு" என்ற பதத்தை கொண்டும்,
"அளத்தற்கரியாய்" என்ற பதத்தை பயன்படுத்தி, பரவாசுதேவன் எங்கும் இருக்கிறார் என்ற பரத்துவத்தை காட்டியும் இந்த பாசுரத்தை ஆரம்பித்து,
அப்படிப்பட்ட "அரூபமானவர், பரஞ்சோதி, அளவிட முடியாதவர்"
நம் மீது உள்ள கருணையின் காரணத்தால், "நாங்கூரில் மணிமாட கோவிலில் உருவம் தரித்து நாராயணனாக இருக்கிறாரே!!"
என்பதை பார்த்ததும், திருமங்கை ஆழ்வாருக்கு தன்னை பிள்ளையாகவும், கருணா மூர்த்தியான நாராயணனை "தாயாகவும்" தோன்ற,
"கரு மா முகில் போல் என் தாய்" 
என்று "தன் தாய்" என்று கொஞ்சுகிறார்..


ஆழ்வார்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும், ஆழ்ந்த வேத அர்த்தங்கள் கொண்டது... என்று அறிகிறோம்.
ஆழ்வார் பாசுரங்ககளை, நாயன்மார் பதிகங்களை,
ஆழ்ந்து படித்தாலேயே தமிழ்நாட்டில் தமிழும் வளரும், இறை பக்தியும் வளரும்.

ஆழ்வார் பாசுரங்ககளை, நாயன்மார் பதிகங்களை படித்தாலேயே, தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இறை பக்தி வளர்ந்து விடுமே!! என்று, நாதீகர்கள், ஹிந்து தெய்வங்களை மறுப்பவர்கள்,
தமிழ் வளராமல் போனாலும் சரி,  'ஆழ்வார் பாசுரங்கள், நாயன்மார் பதிகங்கள் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விடாமல் செய்வோம்'
என்று கடந்த 70 ஆண்டுகளில் முயற்சி செய்து,
தமிழ் கல்வியில் இந்த பாசுரங்கள் இடம்பெற செய்யாமல் அழிக்க முயன்றனர்.
போலிகளை எதிர்போம்.

பெரிய திருமொழியில்"மணிமாட கோவிலில்" பெருமாளை தன் தாய் என்று கொஞ்சி மகிழும் "திருமங்கையாழ்வார்" அருளிய பாசுரம் இதோ:

நந்தா விளக்கே அளத்தற்கரியாய், நர நாரணனே
கரு மா முகில் போல் எந்தாய்,
எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம்,
எத் திசைக்கும் அந்தாரம் அந்தேன் இசைபாட
மாடே களிவண்டு மிழற்ற
நிழல் துதைந்து, மந்தாரநின்று மணமல்கு 
நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என் மனமே

வாழ்க தமிழ்.
வாழ்க ஹிந்துக்கள்
வாழ்க ஹிந்து தர்மம்.



Thursday 20 June 2019

இன்பத்தை தரும் கடவுள், எதற்காக துன்பங்களையும் தருகிறார்? ஒரு அலசல்...

திருநாங்கூரிலிருந்து கிழக்கே 2km தொலைவில் அமைந்துள்ளது - "திருமணிக்கூடம்" என்ற திவ்ய தேசம்.
திருநாங்கூரில் உள்ள 11 திருப்பதிகளுள், இக்கோயிலும் ஒன்று.


இங்கு நாம் அனைவரும்  தரிசிப்பதற்காக வீற்றிருக்கிறார் "கஜேந்திரவரதன்" என்ற "வரதராஜ பெருமாள்".

இந்த பெருமாளை பார்த்து, திருமங்கையாழ்வார்,
பாவமும், அறமும், வீடும்,
இன்பமும், துன்பந் தானும்,
கோவமும், அருளும்,
அல்லாக் குணங்களுமாய எந்தை,
மூவரில், எங்கள் மூர்த்தி இவன் என
முனிவரோடு, தேவரும் வந்து இறைஞ்சும்
நாங்கூர்த் திருமணிக்கூடத்தனே
---- என்று மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.
(பெரிய திருமொழியில் இந்த பாசுரம் உள்ளது)

இங்கு "மூவர்" என்று சொல்லுமிடத்தில் 'ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன்' என்ற மும் மூர்த்திகளையும் குறிப்பிட்டு,
அந்த மூவரில் நடுநாயகனாக (prime hero) இருக்கும் விஷ்ணுவே, இங்கு திருமணிக்கூடத்தில் வரதராஜனாக இருக்கிறார் என்பதால்,
தன்னை போன்ற அடியார்களும், முனிவர்களும், தேவர்களும் வந்து வந்து  சேவிக்கிறார்கள் என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
மேலும், வரதராஜ பெருமாளை பார்த்து
"எல்லா குணங்களுமாக பெருமாளே இருக்கிறார்"
என்று திருமங்கையாழ்வார் சொல்வதை, ஆழ்ந்து கவனிக்கும் போது தான், அவர் பக்தன் மட்டுமில்லாது, வைராக்கியம் உள்ள ஞானி என்றும் தெரிகிறது.
அற்புதமான பிரபந்தம் இது.
புரிந்து கொள்வதும் எளிது.
இது போன்ற பாசுரங்கள் மனப்பாடம் செய்யவும் எளிதானது. தமிழும் வாழும்.

நாமும் திருமணிக்கூடம் செல்லும் பாக்கியம் பெற்றால், பெருமாள் முன் சென்று நிற்கும் போது, என்ன சொல்வதென்றே தெரியாமல்!! இருப்பதற்கு பதில்,  திருமங்கையாழ்வார் பாடிய, இந்த பிரபந்தத்தை நாமும் சொல்லி சேவிக்கலாம்.


ஆழ்வார் பாடிய பாடலை நாமும் சொல்லும் போது, 
நம்மை கண்டு பெருமாளும் சந்தோஷப்படுவார். 
நமக்கும் ஞானத்தை தருவார். 
சகல பாக்கியங்களும் கிடைக்க, நமக்கும் அணுகிரஹம் செய்து விடுவார்.

வரதராஜனை பார்த்து, திருமங்கையாழ்வார்
"நமக்கு ஏற்படும் பாவமும், அறமும், வீடும் (மோக்ஷமும்), இன்பமும், துன்பமும்,
கோபமும், அருளும், மற்றும் அனைத்து குணங்களும் வரதராஜனே" என்று ஆச்சர்யமாக பாடுகிறார்.

"புண்ணியமும் நீயே, வீடும் நீயே,
அருளும் நீயே, இன்பமும் நீயே"
என்று பகவானை பார்த்து சொன்னால் ஒரு நியாயம் தெரிகிறது....
"பகவான் நமக்கு நல்ல குணங்களை கொடுக்கிறார்" என்று சொன்னால், அதில் ஒரு நியாயம் உள்ளது...

அது என்ன?
திருமங்கையாழ்வார் துணிந்து "பாவமும் நீயே, துன்பமும் நீயே"  என்று சொல்லிவிட்டார்?
அது மட்டுமா!!
"எல்லாக் குணங்களும் நீயே" என்று 'அனைத்து குணங்களுக்கும் காரணம் வரதராஜனே' என்று சொல்லிவிட்டாரே?

பாவ செயல்களை, நம் புத்தியை கொண்டு தான் செய்கிறோம்.
செய்த தவறான செயல்களுக்கு (கர்மா) பலனாக, துன்பம் நமக்கு கிடைக்கிறது.
இப்படி இருக்க,
நாம் செய்யும் பாவத்தையும், அனுபவிக்கும் துன்பத்தையும் கூட பகவான் செயல் என்று சொல்லிவிட்டாரே..திருமங்கையாழ்வார்??

அது எப்படி நியாயம் ஆகும்? என்று நமக்கு தோன்றலாம்.

"பாவமும் பகவான் கொடுத்தது தான்" என்று திருமங்கையாழ்வார் சொல்வது, துரியோதனன் ஒரு சமயத்தில் சொன்னது போல இருக்கிறதே? என்று கூட நமக்கு தோன்றலாம்.
மகாபாரத சமயத்தில், பெரிய போர் சம்பவித்து விடும் என்ற நிலையில்,
துரியோதனனை பார்க்க ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக தூது வந்தார்.

சபையில் இருந்த அனைவரும், துரியோதனனை பார்த்து,
"துரியோதனா... வந்திருப்பது பரமாத்மா..
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதை கேள்" என்று புத்திமதி சொல்லியும்,
"குறைந்த பட்சம் 5 கிராமமாவது தானமாக பாண்டவர்களுக்கு கொடு. போர் ஏற்படாமல் தடுத்து விடலாம்"
என்று ஸ்ரீ கிருஷ்ணரே கேட்டும் கூட,
"ஒரு குண்டூசி குத்தும் இடம் கூட பாண்டவர்களுக்கு தர மாட்டேன்.
'பாண்டவர்களுக்கு கொடுக்க கூடாது' என்று இந்த புத்தியை கொடுத்ததும் உங்கள் பரமாத்மா கிருஷ்ணன் தான்"
என்று பதிலுக்கு சாமர்த்தியமாக பேசி, முடிவாக மறுத்தான் துரியோதனன்.


திருமங்கையாழ்வார் "பாவமும் இறைவனே" என்று சொன்னது போலவே,
துரியோதனன் 'தான் செய்யும் பாவ காரியத்துக்கு காரணம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான்" என்று சாமர்த்தியமாக சொல்ல,
"இவன் உண்மையில் ஞானியாக பேசுகிறானா? இல்லை திமிர் பிடித்து பேசுகிறானா?"
என்று அங்கிருந்த ரிஷிகளே திகைத்தனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்து கொண்டே, "போரில் சந்திக்கலாம்" என்று சபையை விட்டு கிளம்பினார்.

துரியோதனன் "பாண்டவர்களுக்கு கொடுக்க முடியாது" என்று 'சுயமாக' முடிவு செய்து விட்டு,
தான் தெரிந்தே செய்யும் பாவ செயலுக்கு, "இறைவன் பெயரால்" என்று தனக்கு சாதகமாக பேசி,
அங்கு இருந்த அனைவரையும் எதிர்க்கவும் முடியாமல் செய்தான்.

"எல்லாம் ஈசன் செயல்" என்று ஞானிகள், மகாத்மாக்கள் சொல்லும் வார்த்தையை,
துரியோதனன் போன்ற துர்புத்தி உள்ளவர்கள், தாங்கள் செய்யும் பாப செயல்களுக்கு மட்டும் "எல்லாம் ஈசன் செயல்" என்று சாமர்த்தியமாக பேசி ஏமாற்றுவார்கள்.
"இறைவன் பெயரால்' என்று சொல்லிக்கொண்டு, தான் செய்யும் பாவ செயல்களுக்கு இறைவனை இழுக்கும், துரியோதனனை போன்றவர்கள்  எப்பொழுதுமே உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்கள் துரியோதனன் போலவே அழிவார்கள்.

"இறைவன் பெயரால்" என்று சொல்லி, துரியோதனன் போன்ற செயல்கள் செய்பவர்களின்  சுற்றத்தை முதலில் அடியோடு அழித்து,
கடைசியில் "இறைவன் பெயரால்" என்று சொல்லி பாவ காரியங்கள் செய்பவனையும், "தெய்வமே அழிக்கும்" என்பது தான் துரியோதனன் வாழ்வில் நடந்த உண்மை.

ஆழ்வார் சொன்ன படி "பாவமும் ஈசன் செயல் தான், புண்ணியமும் ஈசன் செயல் தான்". இது உண்மைதான்.

ஆனால் இதை உண்மையான ஞானிகள் சொன்னால், 'அதில் உண்மை இருக்கிறது' என்பது நமக்கு கூட புரியும்.
அதே சமயத்தில்,
துரியோதனன் போன்ற மூடர்கள், அசுர கூட்டம் சொல்லும் போது, 'அதில் சுயநலம் இருக்கிறது' என்பது நமக்கு கூட புரியும்.

ஞானிகள் "பாவமும் ஈசன் செயல் தான், புண்ணியமும் ஈசன் செயல் தான்" என்று வாழ்வில் நிரூபித்து காட்டுகிறார்கள்.

ஜடபரதர் என்ற யோகியை, உட்காரவைத்து சந்தனம் இட்டு, புதிதாக துணிகள் கொடுத்து
, அவருக்கு கட்டி விட்டு, மாலைகள் போட்டு, ராஜா உபசாரம் செய்து பூஜை செய்தார்கள்.
"எல்லாம் பகவான் செயல்" என்று வரும் சுகத்தை ஏற்றுக்கொண்டார்.
அலங்காரம் முடிந்ததும்,
ஜடபரதரை கூட்டி கொண்டு போய், பலிபீடத்துக்கு அருகில் நிறுத்தி, பெரிய வாளுடன் ஆவேசம் வந்தது போல, ஒருவன் ஓடி வந்து இவரை வெட்ட வர, 
ஜடபரதர் அப்பொழுதும்
"எல்லாம் பகவான் செயல்" என்று வரும் ஆபத்தையும் ஏற்றுக்கொண்டார்.





"வாளும். எம்பெருமான் தான்,
வெட்ட வருபவனும். எம்பெருமான் தான்,
தன் கழுத்தில் போட்ட பூ மாலையும். எம்பெருமான் தான்,
தனக்கு ஏற்பட்ட சுகமும். எம்பெருமான் தான்,
தனக்கு ஏற்படும் துக்கமும். எம்பெருமான் தான்"
ன்று இருந்தார் ஜடபரதர்.
ஜடபரதர் தன்னை கொல்ல வருபவனையும் தடுக்கவில்லை.
ஆனால், தெய்வம் சும்மா இருக்குமா?
ஒரு ஞானியை "காளியின் பெயரால்" என்று சொல்லிக்கொண்டு, கொலை செய்ய வந்தவர்களை பார்த்து காளி தேவி கோபம் கொண்டாள்.
மகாகாளி மகா கோபம் கொண்டு, தன் பெயரால் நடக்கும் இந்த காரியத்தை பொறுக்க முடியாமல் ப்ரத்யக்ஷமாகி, அங்கு இருந்த அனைவரையும் வெட்டி சாய்த்தாள்.

ஜடபரதர் போன்ற ஞான வைராக்ய நிலையில் உள்ளவர்கள், திருமங்கையாழ்வார் பாடிய இந்த பிரபந்தத்தை பாடினால், அவர்களுக்கு தான் இதன் பூரணமான அர்த்தம் புரியும்.

துரியோதனன் போன்றவர்கள், சூதாடி ஏமாற்றி பாண்டவர்களின் சொத்தை பிடுங்கிய போது, "இது என் சாமர்த்தியம்" என்று சொல்லிக்கொண்டான்.

தனக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் போதெல்லாம் "தன் முயற்சி, தன் செயல், தன் சாமர்த்தியம்" என்று சொல்லி,
தனக்கு விபரீதமான விஷயங்கள் நடக்கும் போது மட்டும், இறைவன் மீது பழி போட்டான் துரியோதனன்.

துரியோதனன் போன்றவர்கள் அவனை போலவே அழிவார்கள்.

"பாண்டவர் சொத்தை திருப்பி கொடு" என்று கேட்ட பொழுது, 'கொடுக்க முடியாது' என்று தானே சுயமாக முடிவு செய்து விட்டு,
"நான் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஈசன் ஆசைப்படுகிறார்" என்று அப்பொழுது மட்டும் "ஈசன் செயல்" என்று சொல்லி, ஏமாற்றினான் துரியோதனன்.

துரியோதனனை போன்று பேசுபவர்கள், தன் சக மனிதர்களை வேண்டுமானால் ஏமாற்றி விடலாம்.
ஆனால், தெய்வம் மன்னிக்காது. 

ஜடபரதர், ஆழ்வார் போன்ற ஞானிகள் "தன் வாழ்வில் சம்பவிக்கும் இன்பத்தையும், துன்பத்தையும் பகவான் இஷ்டம்" என்று சொல்லும் போது, அவர்களின் ஞான நிலையை கண்டு, பகவான் அவர்களுக்கு கருணை செய்கிறார். மோக்ஷத்தையே கொடுக்கிறார்.

இன்பத்தை தரும் பகவான், அதே சமயம் எதற்காக துன்பங்களையும் தருகிறார்?
பூலோகத்தில் இன்பம் மட்டுமே இருக்க செய்தால், இங்கு இருக்கும் ஒரு ஜீவனுக்கு கூட, மோக்ஷம் அடைய வேண்டும் என்ற எண்ணமே எழாது.

ஜீவன் உலகில் உடல் எடுத்து பிறப்பதே, மோக்ஷம் அடைய வேண்டும் என்பதற்காக தான்.
நாம் ஜீவ ஆத்மா, அவர் பரம் ஆத்மா. நம் இருவருக்கும் உறவு உண்டு.
"ஓம்" என்ற பிரணவமே - 'ஜீவனுக்கும், பரமாத்மா வாசுதேவனுக்கும் உள்ள இந்த உறவை தான்' நமக்கு உணர்த்துகிறது..
புரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்.


ஜீவாத்மாவாகிய நாம் செய்யும் காரியங்களை,
'மனசாட்சி' என்ற பெயரிலும்
'அந்தர்யாமி' என்ற பெயரிலும்,
உள்ளிருந்து 'பரமாத்மா வாசுதேவன்' பார்த்து கொண்டே இருக்கிறார்.

தவறான காரியங்கள் ஜீவன் செய்யும் போதெல்லாம்,
கூடவே இருக்கும் பரமாத்மா 'தவறு செய்யாதே' என்று சொல்லவும் செய்கிறார்.

பரமாத்மா வாசுதேவன், உலகத்தில் இன்பம் மட்டுமே கிடைக்கும் படியாக செய்து இருந்தால், ஜீவாத்மாவாகிய நாம், பரமாத்மாவாகிய நாராயணனை அடைய வழி என்ன? என்று யோசித்து கூட இருக்க மாட்டோம்.

பல வித விதமான துன்பத்தை நமக்கு கொடுத்து,
ஜீவனாகிய நம்மை, உலக ஆசைகளில் இருந்து நாமாகவே விரும்பி,
சிறிது சிறிதாக விலகும் படியாக செய்து,
மெதுவாக நம்மை பகவான் நாராயணன் பக்கம் திருப்பி,
பக்தி அனுபவத்தை கொடுத்து, பரமாத்மாவை உணரும் ஆனந்தம் என்ற அனுபவத்தை கொடுத்து,
கடைசியில் மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார்.

"மோக்ஷம் அடைய வேண்டும் என்ற ஆசை" நமக்கு ஏற்பட, துன்பங்களையும் நமக்கு கொடுக்கிறார் பகவான்.

இத்தனை துன்பங்கள் உலகில் இருந்தும் கூட,
பல கோடி மக்கள், இன்னும் கோவிலுக்கு சென்று பெருமாளை சரண் அடைய வேண்டும் என்று நினைக்கவில்லை,
பெருமாளிடம் பக்தி செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை,
என்று பார்க்கிறோம்.

துன்பமே இல்லாமல் இந்த உலகை பகவான் படைத்து இருந்தால்?!! ஒருத்தன் கூட மோக்ஷத்தை பற்றியோ,
பகவானை பற்றிய எண்ணமோ,
பகவானிடம் பக்தியையோ செய்து இருக்க மாட்டான்.

நம்மை சுகமாகவே வாழ செய்தால்,
"உலகமே லட்சியம்" என்று வாழ்ந்து, 
இறைவனை நினைக்க மறந்து விடுவோம் என்பதால் தான்,
உலக துன்பங்களை பார்த்து பார்த்து, ஒரு சமயத்தில் நாமே விருப்பப்பட்டு விலக,
நம் கவனம் ஒரு சமயத்தில் பகவான் பக்கம் திரும்ப,
பகவான் அவ்வப்போது, நமக்கு துன்பமும் கொடுக்கிறார்.

ஆதலால் தான், "எல்லா குணங்களும் (இன்பமும், துன்பமும், பாவமும்) பகவான் கொடுத்தது தான்" 
என்று திருமங்கையாழ்வார் சொல்கிறார்.

தனக்கு வரும்
சுகத்தையும், துன்பத்தையும்,
லாபத்தையும், நஷ்டத்தையும்,
பாராட்டையும், இகழ்ச்சியையும்,
ஜனனத்தையும், மரணத்தையும்,
வெற்றியையும், தோல்வியையும்,
ஆரோக்கியத்தையும், நோயையும்,
இளமையையும், முதுமையையும்
"பகவான் செயல்" என்று பார்க்க தெரிந்தவன்,
மோக்ஷத்திற்கு தயாராகிறான்.
"இறைவன் செயல்" என்று இருக்கும் ஞானிகள், ஒரு வெளி மனிதனை போல வேடிக்கை பார்ப்பதால், இந்த குணங்கள் இவர்களை அசைக்க கூட முடிவதில்லை.
ஞானிகள் தங்கள் வாழ்வில் டக்கும், எந்த 'துக்க நிலையிலும்' துவண்டு போவதில்லை.
ஞானிகள் தங்கள் வாழ்வில் கிடைக்கும், எந்த 'சுகபோக நிலையிலும்' கர்வமும் கொள்வதில்லை.
சுகத்திலும், துன்பத்திலும் இறைவனை மறப்பதும் இல்லை. மறுப்பதும் இல்லை.
மறு பிறவி எடுக்க அவசியமில்லாத நிலையை பெறுகிறார்கள்.

'பாவமும் புண்ணியமும் பகவான் செயல்' என்று தன்னை பற்றிய சுய தம்பட்டம் இல்லாத ஒருவனின் வாழ்வில் சம்பவிக்கும்
பாவ செயலால் ஏற்படும் பாவ மூட்டையையும்,
புண்ணியத்தால் ஏற்படும் புண்ணிய மூட்டையையும்
பகவான் எடுத்து கொண்டு,
பாவமும் செய்யவில்லை, புண்ணியமும் செய்யவில்லை என்று ஆக்கி, வைகுண்டத்தில் இடம் தந்து விடுகிறார்.

"குணங்களுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை" நம்மை போன்றவர்களும் புரிந்து கொள்ள,
சமுத்திரத்தை (கடல்) உதாரணமாக காட்டி, புரிய வைப்பார்கள் பெரியோர்கள்.
கடற்ரைக்கு, நாம் சென்று பார்க்கும் போது,
வித விதமான அளவுகளில்,
திடீரென்று பெரிய அலையும்,
திடீரென்று சிறிய அலையும்,
மாறி மாறி, ஓயாமல் எழும்பி எழும்பி மறைந்து கொண்டே இருக்கிறது.

"கடல் அலைகள் போன்றது தான், நம் குணங்களும்"
என்று ஜடபரதர், திருமங்கை ஆழ்வார் போன்ற ஞானிகள் அறிந்து கொள்கிறார்கள்.
இதன் காரணத்தால் தான், திருமங்கையாழ்வார், "எல்லா குணங்களுக்கும் காரணம் நாராயணனே" என்று பாடுகிறார் என்று பார்க்கிறோம்.
திடீரென்று நமக்குள் ஏற்படும் பெரிய கோப அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் துக்க அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் பாவ அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் தான அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் பக்தி அலையும்,
மாறி மாறி நம்மிடம் தோன்றி தோன்றி மறைகிறது என்று அறிகிறார்கள்.

கடற்கரையில், அலைகள் ஏற்படுவதற்கு ஆதாரமாக இருப்பது எது?
அலைகளை தாண்டி கவனித்தால், அமைதியான கடல் இருப்பது தெரிகிறது.
'கடல் இருப்பதால், அலைகள் தோன்றுகிறது' என்று கவனிக்கும் போது, அனைத்து விதமான அலைகளும் ஏற்படுவதற்கு காரணம் அதற்கு ஆதாரமாக இருக்கும் "கடலே" என்று தெரிகிறது.
கடல் "அலைகளை," நம் "குணங்களுடன்" உதாரணமாக காட்டி,
அலைகள் ஏற்படுவதற்கு காரணம் "கடல்" என்று காட்டி புரிய வைப்பது போல,
நம்மிடம் பல வித குணங்கள் ஏற்படுவதற்கு காரணம், "ஜீவன்" இருப்பதால் தான், என்று புரிய வைக்கிறார்கள் பெரியோர்கள்.

நம் உடம்பில் உள்ள "ஜீவாத்மாவாகிய நாம்", நம் கூடவே அந்தர்யாமியாக (மனசாட்சியாக) இருக்கும் பரமாத்மா நாராயணனுக்கு கட்டுப்பட்டவன் என்று உணர்த்தி,
எப்படி கடல் அலைகளுக்கு ஆதாரமாக கடல் இருக்கிறதோ,
அதுபோல,
நம்மிடம் உருவாகும் அனைத்து குணங்களுக்கும், நமக்கும் ஆதாரமாக, "பரமாத்மா நாராயணனே" இருக்கிறார் என்பதால்,
உள்ளும் புறமும் எங்கும் உள்ள அந்த பரமாத்மாவே, நம் கண்ணுக்கு எதிரில், வெளியிலும் "திருமணிக்கூடம் வரதராஜ பெருமாளாக வீற்றிருக்கிறார்" என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

தமிழ் வளர,
ஆழ்வார்கள் பாடிய 4000 பிரபந்தங்களும், நாயன்மார்கள் பாடிய பதிகங்களுமே போதும்.

இதை நாம் தெரிந்து, புரிந்து கொள்ள, ஆர்வம் காட்டினாலேயே,
"தமில் தமில்..." என்று பேசி தமிழை அழித்து விடாமல், 
உண்மையிலேயே தமிழை வளர்க்கலாம்.

தமிழை வளர்த்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல், அதனோடு நம் இறை உணர்வையும் வளர்த்து கொள்ளலாம்.

போலி தமிழர்களையும்,
"பலம்" என்ற தமிழ் சொல்லை கூட "பெலம்" என்று உளரும் திருடர்களையும் தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

ஹிந்துவாக பிறந்தால், ஹிந்துவாக வாழ்ந்தால் எத்தனை அருமை!! என்று இது போன்ற ஆன்மீக விளக்கங்கள், நம் தெய்வங்களின் மகத்துவங்கள் தெரிந்து கொண்டால் தான் புரியும்.

நம்முடைய ஆயுசை, பகவத் கீதை படிக்காமல், திவ்ய பிரபந்தங்கள் படித்து புரிந்து கொள்ளாமல் வீண் செய்து விட கூடாது.
இத்தனை வருஷம் வீண் செய்தோமே!! என்று வயதான பிறகு தோன்றி பிரயோஜனமில்லை.

அதிக பட்சம் நமக்கு கொடுக்கப்பட்ட ஆயுசு 100 தான்.
அதில் நமக்கு எத்தனை குறைவோ நமக்கு தெரியாது.
அதில் இப்பொழுதே இத்தனை வருடங்கள் வீண் செய்தோமே!! என்று ஒவ்வொரு ஹிந்துவும் நினைக்க வேண்டும்.

நம்மிடம் இல்லாத விஷயங்களா, போலி மதங்களிடம் உள்ளது?
இந்த ஒரு பாசுரத்துக்கு ஈடாகுமா, பிற மதங்கள்?

ஹிந்துவாக பிறந்ததில் கர்வம் கொண்டு, அனைவரையும் ஹிந்துவாக ஆக்க வேண்டும்.
பிற மதத்தில் விழுந்து விட்ட அனைவரையும் திவ்ய பிரபந்தம், பகவத் கீதை படிக்க வைத்து ஹிந்துவாக வாழ வைக்க வேண்டும்.


வாழ்க ஆழ்வார்கள்,
வாழ்க நாயன்மார்கள்..
வாழ்க இறை உணர்ச்சி..
வாழ்க ஹிந்து தர்மம்..
வாழ்க தமிழ்.

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Afternoon (with meaning)

Sandhya Vandanam - Morning (with meaning)



Sandhya Vandanam - Evening (with meaning)




Wednesday 22 May 2019

காலத்துக்கு மனிதன் கட்டுப்படுகிறான். கடவுள் காலத்துக்கு கட்டுப்படுகிறாரா? தெரிந்து கொள்வோமே..

எதுவுமே காலத்துக்கு கட்டுபட்டு தான் நடக்கிறது..
இயற்கையும் காலத்துக்கு அனுசரித்து தான் நடக்கிறது.
சூரியன் உதிப்பதும், மறைவதும் காலத்துக்கு கட்டுபட்டு தான் நடக்கிறது..


வசந்த காலம், மார்கழி காலம் என்று அந்தந்த மாற்றங்கள், காலத்துக்கு கட்டுப்பட்டு தான் இயற்கையே செயல் படுகிறது

மனிதன் கூட காலத்துக்கு கட்டுப்பட்டு தான் இருக்கிறான்.
எத்தனை அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டாலும் 100 வயதுக்கு மேல் மனித ஆயுளை உயர்த்த முடியவில்லை. இளமையோடு வயதாகாமல் இருக்க செய்ய முடியவில்லை.
மனிதனுக்கு இத்தனை ஆயுள் காலம் தான்,
எறும்புக்கு இத்தனை ஆயுள் காலம் தான்,
யானைக்கு இத்தனை ஆயுள் காலம் தான்,
என்று அனைத்து உயிர்களுக்கும் கால நிர்ணயம் உள்ளது.
எத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் காலத்திற்கு கட்டுப்பட்டு இறந்து தான் ஆக வேண்டும்.



உயிர்கள் மட்டுமல்ல, அற்புதமான பெரிய கார் தயாரித்தாலும், உணவுகள் தயாரித்தாலும் அனைத்துக்கும் கால வரம்பு உண்டு. Expiry Date உண்டு.

காலத்துக்கு கட்டுப்பட்டு தான், அனைத்துமே இயங்குகிறது என்று சாதாரண அறிவுள்ளவன் கூட புரிந்து கொள்கிறான்.

முப்பத்து முக்கோடி தேவர்கள், ப்ரம்ம தேவன், ரிஷிகள் என்று நம்மை விட உயர்ந்த, சக்தியுடைய இவர்களையும் இந்த காலம் கட்டுப்படுத்துகிறது.
இவர்கள் அனைவருக்கும் கூட காலம் உண்டு. அழிவு உண்டு.


யாரையும் கட்டுப்படுத்தும் இந்த கால சக்கரத்தை இயக்குபவர் யார்? 
காலம் சுதந்திரமானதா, இல்லை காலத்தையும் கட்டுப்படுத்தும் ஈஸ்வரன் உண்டா? என்று கேள்வி எழுகிறது.
இந்த கால சக்கரத்தையும் கட்டுப்படுத்த வல்லவர்,
காலத்தை தன் ஆளுமையில் வைத்து இருப்பவர்,
இந்த கால சக்கரத்தை வைத்து உலகையே ஒரு கதியில் சுழல வைப்பவர்,
விஷ்ணுவாகிய நாராயணனே.

மகாவிஷ்ணுவின் கையில் இந்த கால சக்கரம் கட்டுப்பட்டு சுழல்கிறது. பெருமாள் தன் கையில் சங்கு, சக்கரம் வைத்து உள்ளார் என்று வேதம் சொல்லும் போது, கால சக்கரத்தை உணர்த்துகிறது.


"யாருக்கும் கட்டுப்படாத காலத்தையும், கட்டுப்படுத்த கூடியவர் பரவாசுதேவன் நாராயணனே" என்று காட்டுவதே 'விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரம்".

பல சமயங்களில், பிற தெய்வங்கள் தன்னை நம்பிய பக்தனை கூட கைவிட்டு விட்டனர்.
தவறு செய்தால், திருத்தாமல் இருந்தனர்.
'இது உன் கர்மா, விதி, காலம்.. நான் என்ன செய்ய முடியும்?' என்று கைவிரித்தனர் என்று பார்க்கிறோம்.
ப்ரம்ம தேவனிடம் காலத்தை மீறி, தனக்கு சாவே வரக்கூடாது என்று கேட்ட ஹிரண்யகசிபு, நாராயணன் நரசிம்மமாக வந்து கிழித்து எறிந்த போது, "உன் காலம் அவ்வளவு தான்" என்று கை விரித்து விட்டார் ப்ரம்மா.
தான் காலத்துக்கு கட்டுப்பட்டவன் என்று அமைதி காத்தார்.


ராவணன் உண்மையான சிவபக்தன். ஆனால், கர்வம் உள்ளவன்.
பக்தனான ராவணனை திருத்தி ஆட்கொள்ளவில்லை சிவபெருமான். அவன் செய்த பக்திக்கு அணுகிரஹம் செய்தாரே ஒழிய,
இவன் காலத்தை நாராயணன் முடிக்க சங்கல்பித்த போது, சிவபெருமான் தன் பக்தன் என்று பரிந்து கொள்ளவில்லை.
"இது உன் மரணத்திற்கான காலம்" என்று இருந்து விட்டார்.




வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனே, சங்கர்ஷன மூர்த்தியாக, ருத்ரனுக்கு அந்தர்யாமியாக இருக்கிறார். ஆதலால் சிவ த்வேஷம் கூடாது.
அதே பரவாசுதேவன், தானே பாற்கடலில் விஷ்ணுவாக வ்யூஹ அவதாரம் செய்தார். இது பரவாசுதேவனின் பூரண அவதாரம்.

மார்க்கண்டேயர் தனக்கு மரணம் ஏற்பட கூடாதென்று சிவ பூஜை செய்ய, மரணம் அவரை நெருங்கிய போது, சிவ பெருமான் அந்த ம்ருத்யுவை எட்டி உதைத்தார்.
மரணத்தை வர விடாமல் தடுத்த பின், மார்க்கண்டேயர் விஷ்ணு பக்தியை ப்ரதானமாக செய்ய,  சிரஞ்சீவியாக என்றுமே அழியாமல் இரு என்று காலம் எந்த நிலையிலும் இவரை நெருங்க முடியாத படி, வரம் கொடுத்து விட்டார் நாராயணன்.

விஷ்ணுவின் கையில் மட்டும் தான், அந்த கால சக்கரம் அவருக்கு கட்டுப்பட்டு சுழல்கிறது.

காலத்திற்கு அனைத்துமே அடிமை.
100 வருடங்கள் ப்ரம்ம லோகத்தில் ப்ரம்ம பட்டத்தை அனுபவித்த பின், ப்ரம்ம தேவனும் அழிவார், ப்ரம்ம லோகமும் அழியும்.

ப்ரம்ம பதவியில் இருந்த காலத்தில்
'இது பரவாசுதேவன் கொடுத்த பதவி, செய்யும் செயல்கள் யாவும் அவருடைய ப்ரீதிக்காக (சந்தோஷத்திற்கு) தான்' என்று உலக ஸ்ருஷ்டி செய்து இருந்தால், அந்த ப்ரம்ம தேவனுக்கு மோக்ஷம் கிடைக்க அருள்வார் நாராயணன்.
மாறாக,
கிடைத்த ப்ரம்ம பதவி, ப்ரம்ம பட்டம் தன் புண்ணியங்களால் கிடைத்தது, நான் தான் உலக ஸ்ருஷ்டி செய்கிறேன் என்று கர்வத்துடன், பாவ புண்ணியங்களை சேர்த்து இருந்தால், அந்த ப்ரம்ம தேவனும் அவர் பதவி முடிந்த பின், மீண்டும் பூலோகத்திற்கு வந்து பிறக்க வேண்டியது தான்.

ஒரு பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், மீண்டும் பரவாசுதேவன் ப்ரம்ம லோகத்தை ஸ்ருஷ்டி செய்து, இன்னொரு ப்ரம்ம தேவனை நியமிக்கிறார்.
ப்ரம்ம தேவனும் காலத்துக்கு கட்டுப்பட்டவர்.

இப்படி அனைத்துமே காலத்துக்கு கட்டுப்பட்டு அழிவை நோக்கி நகரும் போது, அந்த கால சக்கரத்தை கையில் ஏந்தியுள்ள, பரமாத்மா நாராயணன் அந்த காலத்துக்கு கட்டுப்பட்டு இருக்கிறாரா? என்ற கேள்வி, நமக்கு எழலாம்.

வாமன, நரசிம்ம, கூர்ம அவதாரங்களை, பரவாசுதேவன் செய்யும் போது, குறிப்பிட்ட காலத்துக்குள் வந்த காரியத்தை முடித்து விட்டு, மறைந்து விட்டார்.

அவரே ராமராக அவதாரம் செய்து நீண்ட காலங்கள் பூமியில் மனித அவதாரம் செய்த போது, மனிதனை போல, காலத்துக்கு கட்டுப்பட்டு "தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை, காலம் என்றும் விதி" என்றும் சொல்லி தைரியமாக எதிர்கொண்டார்.

ராம அவதாரம் எடுத்த போது, காலத்துக்கு கட்டுப்பட்டவர் போல பல இடங்களில் காட்டுகிறார்.


காலத்துக்கு கட்டுப்படாத பரவாசுதேவன் அவதார சமயங்களில் காலத்துக்கு ஏன் கட்டுப்படுகிறார்? 

உண்மையில், நாமும், இயற்கையும், தேவர்களும் காலத்துக்கு கட்டுப்படுவது போல, பரவாசுதேவன் காலத்துக்கு கட்டுப்படுவதில்லை.

நாம் அனைவரும் 'கட்டாயத்தால்' காலத்துக்கு கட்டுப்படுகிறோம்.
பரவாசுதேவனோ 'சுதந்திரமாக' கட்டுப்படுகிறார்.

பரவாசுதேவன், காலத்துக்கு கட்டுப்படாதவராக இருந்தாலும், சுதந்திரமாக கட்டுப்படுகிறார்.

நாமோ, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலத்துக்கு கட்டுப்படுகிறோம்.
நம் பிறப்பு நம் விருப்பத்தில் இல்லை.
நம் மரணமும் நம் விருப்பத்தில் இல்லை.
நம் வாழ்க்கையும் நாம் நினைப்பது போலவே நடப்பதும் இல்லை.

கால சக்கரத்தை தன் கையில் சுழல வைத்து கொண்டு இருக்கும் விஷ்ணு, காலத்துக்கு கட்டுப்படாதவராக இருந்தாலும், சுதந்திரமாக அவர் விருப்பப்பட்டால் கட்டுப்படுவது போல காட்டுகிறார்.

கால சக்கரத்தை கையில் வைத்து இருக்கும் நாராயணன்,  சுதந்திரமாக எப்படி கட்டுப்படுகிறார்?  இதை புரிந்து கொள்ள முடியுமா? முடியும்.

ஒரு பெரிய பணக்காரன் ஒருவன், அடுத்த நாள் காலை ஒரு ஊருக்கு செல்ல சங்கல்பம் (திட்டம்) செய்தான்.
5 மணிக்கு எழுந்து, அடுத்த நாள் காலை 7 மணிக்குள் ரயில் பிடித்து, ஊருக்கு போக வேண்டும் என்று திட்டமிடுகிறான்.
அதற்காக,
தன் வீட்டில் உள்ள கடிகாரத்தை எடுத்து அடுத்த நாள், காலை 5 மணிக்கு அலாரம் செட் செய்து கொண்டு தூங்க செல்கிறான்.

அந்த பணக்காரன் தனக்கே போட்டுக் கொண்ட திட்டம் தான் இது.
தான் வைத்து கொண்ட கால நிர்ணயம் தான் இது.
தானே அலாரம் வைத்து கொண்டு, படுக்க செல்கிறான்.

5 மணிக்கு சரியாக எழுந்திருக்க வேண்டுமே!! என்று சரியாக கூட தூங்க முடியவில்லை அந்த பணக்காரனால்.
தான் வைத்து கொண்ட காலத்துக்கு கட்டுப்பட்டு, 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமே!! காலத்திற்குள் கிளம்ப வேண்டுமே!! 7 மணிக்குள் ரயிலை பிடிக்க வேண்டுமே!! என்று கவலைப்படுகிறான்..
5 மணிக்கு சரியாக எழுந்து கொண்டு, சரியாக தான் நினைத்த படி 7 மணிக்கு ரயில் பிடித்த பின், மகிழ்ச்சி அடைகிறான்.
தான் திட்டமிட்டபடி நடந்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறான்.

இந்த மகிழ்ச்சிக்காக, இவனாகவே தனக்கே ஒரு கால வரம்பை வைத்து கொண்டு, தானே காலத்துக்கு கட்டுப்பட்டான்.

இது போல தான், கால சக்கரத்தை தன் கையில் வைத்து இருக்கும் நாராயணன், தான் சங்கல்பித்த சில காரியங்களை தானே செய்ய நினைக்கும் போது, தானே காலத்தை நிர்ணயித்து, அந்த காலத்துக்கு தானே சில சமயம் கட்டுப்பட்டு நடக்கிறார். 

காலத்துக்கு தானே கட்டுப்பட்டாலும், அவர் விரும்பினால், காலத்துக்கும் கட்டுப்படாமல் இருக்கவும் முடியும்.

அடுத்த நாள் காலை 7 மணிக்கு ரயில் பிடிக்க வேண்டும் என்று நினைத்த அந்த பணக்காரன், தான் சங்கல்பித்த காரியத்தை நடத்த வேண்டாம் என்று திடீரென்று முடிவு செய்து விட்டான்.

'ஊருக்கு போக போவதில்லை' என்று முடிவு செய்கிறான்.
இப்படி முடிவு செய்த பின், அவன் வைத்து கொண்ட அலாரம் (காலம்) அவனை கட்டுப்படுத்த முடியாமல் நிற்கிறது.
கவலையே இல்லாமல், அலாரத்தை off செய்து விட்டு, காலத்துக்கு கட்டுப்படாமல் நன்றாக தூங்கி, நிதானமாக எழுந்திருக்கிறான்..


அதே போல, பகவான் நாராயணன், காலத்துக்கு கட்டுப்படுவது போல தன்னை காட்டிக்கொண்டாலும், தேவைப்படும் போது, காலத்தையும் மீறி சுதந்திரமாக தன் இச்சையால் எதையும் செய்யத்தக்கவர்.

க்ஷீராப்தியில் இருக்கும், தன் துவார பாலகர்கள், ராவண, கும்பகர்ணனாக அவதரித்து விட்டதால், அவர்கள் தன் கையால் தான் வதம் செய்யப்பட வேண்டும் என்று பிரார்த்தித்ததால், ராம அவதாரம் செய்த பெருமாள், ராவண வதம் அவசியம் என்ற தன் சங்கல்பத்தின் காரணமாக, சீதையை தொலைத்து, கவலை படுவது போல அலைந்து, காலத்துக்கு கட்டுப்பட்டு, உதவிக்கு வானரர்களின் உதவியை கேட்டு, சரித்திரத்தை நடத்தி செல்கிறார்.
பார்ப்பதற்கு ஸ்ரீ ராமர் காலத்துக்கு கட்டுப்பட்டது போல காட்டுகிறார்.
அதே ராமர், ஜடாயு என்ற பறவை தனக்காக உயிர் விட்டது என்றதும், தன் கையால் ஈம கிரியை செய்து, யமன் வந்து கூட்டி செல்லும் முன், காலத்தையும் மீறி, ஜடாயுவின் கர்ம பலன்களையும் மீறி, சாதாரண பறவை எனபதையும் மீறி, "என் ஆணை. ஜடாயுவின் ஆத்மா வைகுண்டம் செல்லட்டும்" என்று தான் சர்வேஸ்வரன் என்று காட்டுகிறார். காலத்தையும் மீறி சுதந்திரமாக இருக்கிறார்.

அதே போல, அணை போட்டு, வானரர்களுடன் இலங்கை வந்து சேர்ந்த போது, ராவணன் அவன் அரண்மனை மாடியில் உலவி கொண்டிருப்பதை கவனித்த சுக்ரீவன், சீதையை அபகரித்தவன் என்ற தாங்க முடியாத கோபத்தில், குபீரென்று பாய்ந்து, நேராக ராவணன் முன் குதித்து, ஓங்கி ஒரு குத்து விட, இதை எதிர்பார்க்காத ராவணன் சிறிது நிலை தடுமாற, அவன் கிரீடத்தை தட்டி கொண்டு, நேராக ராமர் இருக்குமிடம் வந்து, ராவணனின் கிரீடத்தை அவர் காலடியில் வைத்தான்.
ராவணன் சுக்ரீவனை விட மகா பலசாலி.. கொஞ்சம் தவறு நிகழ்ந்து இருந்தாலும், சுக்ரீவனை கொன்று இருப்பான் ராவணன்.
தனக்காக இப்படி ஒரு காரியத்தை செய்தாலும், உயிருக்கு ஆபத்தான இது போன்ற முயற்சிகளை செய்ய வேண்டாம் என்று சொல்லி, தான் சாதாரண மனிதன் அல்ல, சர்வேஸ்வரன் என்று காட்டுவது போல "இனி இது போன்ற காரியங்கள் செய்ய வேண்டாம். எனக்கு சுக்ரீவனும் தேவை இல்லை. இந்த வானர படைகளும் தேவை இல்லை. 
ராவணனை அழிக்க என் தம்பி லட்சுமணனும் எனக்கு தேவை இல்லை.
எனக்கு இந்த காண்டீபமும் தேவை இல்லை. 
என் கை விரலில் உள்ள நகங்களை கொண்டே இந்த ராவணனை கிழித்து எறிந்து விடுவேன். தனக்காக யாரும் உயிர் துறக்க வேண்டாம்" என்று தன் பூர்வ அவதாரமான நரசிம்ம அவதார ஞாபகத்துடன் ஸ்ரீ ராமர் கர்ஜிக்க,
ஸ்ரீ ராமரின் கோபத்தை கண்டு அஞ்சி, அதற்கு பின் வானரர்கள் யாருமே அவரை மீறி எதையுமே செய்யவில்லை.


அதே போல, காலத்துக்கு கட்டுப்பட்டது போல சிறையில் அவதாரம் செய்து, சாதாரண இடையனாக பிருந்தாவணத்தில் வளர்ந்தாலும், தன் குரு சாந்தீபனி 'தன் 7 வயது மகன் கடலில் விழுந்து இறந்து விட்டான்' என்று சொல்ல,
குரு தக்ஷனையாக இறந்து போன அவர் மகனை மீட்டு தருவேன் என்று சமுத்திர தேவனை கேட்க, அவனை ஒரு அசுரன் இழுத்து கொண்டு விட்டான் என்று சொல்ல, அந்த அசுரனை தேடி பிடிக்க, அவன் தன் குரு புத்திரனை கொன்று விட்டான் என்று சொல்ல, அவனிடம் பாஞ்சசன்யம் என்ற சங்கை பிடுங்கி, அவனை கொன்று போட்டார்.
இறந்த ஆத்மா எம லோகம் சென்று இருக்கும் என்பதால், எம லோகமே சென்று தன் கையில் உள்ள பாஞ்சசன்யம் கொண்டு ஊத,
'செத்தவன் வீட்டில் ஊத வேண்டிய சங்கை, எம லோகத்தில் வந்து யார் ஊதுவது' என்று யமன் வந்து பார்க்க, ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்ததும் பரவாசுதேவன் என்று அறிந்து யமதர்மராஜன், அவர் கேட்கும் குரு புத்திரன் தன்னிடம் தான் இருப்பதாக கூறி, இன்றைய தேதியில் குரு புத்திரனுக்கு 14 வயது இருக்க வேண்டும் என்று சொல்ல, 14 வயது குரு புத்திரன் வர, எம லோகத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் தானே சர்வ சாஸ்திரங்களை உபதேசித்து, ஞானத்திலும் சிறந்தவனாக ஆக்கி, தன் குருவிடம் குரு தக்ஷிணையாக ஒப்படைத்து விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.

காலத்துக்கு கட்டுப்படுவது போல அவதாரம் செய்தாலும், தான் இஷ்டப்பட்டால் அந்த காலத்தையும் மீறி, இறந்து போன குரு புத்ரனையும் மீட்டு கொடுத்தார். 
சுதந்திரமாக கட்டுப்படுபவர் பரவாசுதேவன் நாராயணன்.
கட்டாயத்தால் கட்டுப்படுபவர்கள் நாம்.


Hare Rama Hare Krishna - listen to Bhajan
Sandhyavandanam - morning with meaning

Sandhyavandanam - afternoon with meaning



Sandhyavandanam - evening with meaning