Followers

Search Here...

Showing posts with label ஏசு. Show all posts
Showing posts with label ஏசு. Show all posts

Thursday 9 June 2022

யார் கர்த்தா? Secret revealed...

யார் கர்த்தா?

ஸ்ரீகிருஷ்ணர் தியானத்தில் இருந்தார். 

யுதிஷ்டிரர், "யாரை தியானம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?" என்று வினவினார்.


ஸ்ரீகிருஷ்ணர் "பீஷ்மரை தியானித்து கொண்டு இருக்கிறேன். தர்ம அர்த்த காம அறிந்தவர். ராஜ தர்மம் போன்றவற்றை அவரிடம் விரிவாக கேட்க புறப்படுங்கள்" என்றார். 


அப்போது யுதிஷ்டிரர் சொல்கிறார்...

भवां च कर्ता लॊकानां 

यद् व्रवीत्य अरु सूदन |

तथा तद् अनभिध्येयं 

वाक्यं यादव नन्दन ||

- வியாச மஹாபாரதம்

சத்ருக்களை அழிப்பவரே! அனைத்து உலகங்களுக்கும் கர்த்தாவான நீங்கள் சொல்லும்போது, யாதவ நந்தனா! உங்கள் வாக்குக்கு மறுப்பு ஏது?


यत: त्व अनुग्रह कृता 

बुद्धि: ते मयि माधव |

त्वाम् अग्रतः पुरस्कृत्य 

भीष्मं पश्यामहे वयम् ||

- வியாச மஹாபாரதம்

மாதவா! எனக்கு அணுகிரஹம் கிடைக்க உங்களுக்கு சங்கல்பம் இருக்கும் பட்சத்தில், உங்களை முன்னிட்டு கொண்டு, நாங்கள் பீஷ்மரிடம் போகிறோம்.


5000 வருடங்களுக்கு முன் யாதவ குலத்தில் விஷ்ணு பகவான் கிருஷ்ணராக யாதவ குலத்தில் அவதரித்தார்.

மதுரா வரும்வரை, 12 வயது வரை, யாதவ சிறுவர்களோடு பிருந்தாவனத்தில் மாடு மேய்த்தார். 


ஸ்ரீ கிருஷ்ணர் மறைவதற்கு முன், அனைத்து யாதவ குடிமக்களையும் துவாரகை விட்டு செல்ல சொன்னார்.

யாதவ மக்கள் நான்கு புறமும் சென்று ஆங்காங்கு பல தேசங்களில் குடிபுகுந்தனர்.

யாதவர்களால், உலகம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணரின் சரித்திரம் பேசப்பட்டது. 

3000 வருடத்திற்கு பிறகு, யவன தேசமாக இருந்த தேசங்களில் யூதர்கள் என்றும் யஹுதிகள் என்றும் அழைக்கப்படும் குலத்தில், 'ஒரு கடவுள் இருக்கிறார். அவரே கர்த்தா! அவர் ஆடு மேய்த்தார்" என்று சொல்லிக்கொண்டு பாரத தேசம் வந்தனர். 


எப்படி "சிந்து" என்று கூட சொல்ல முடியாமல், ஹிந்து, இந்து என்று உளறி கொட்டினார்களோ!

எப்படி "கொல்கத்தா" என்று சொல்ல முடியாமல், கல்கட்டா என்று உளறி கொட்டினார்களோ!

எப்படி "திருச்சிராப்பள்ளி" என்று சொல்ல முடியாமல், ட்ரிசி என்று உளறி கொட்டினார்களோ!

அது போல,

யவன தேசத்தில், ஹிந்துக்களின் பெயர்கள் உருமாறி, கிருஷ்ணர் பெயர் சிறிது உருமாறி, மாடு ஆடாகி, கதைகள் உருமாறி விட்டன.

இதை அறிவுள்ள பாரத மக்கள் அறிகின்றனர். 

Wednesday 24 July 2019

ஏசு கிறிஸ்து யார்? ஜோசப் யார்? Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...

ஏசு ஜோசப் யார்?
பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம்.
இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...


கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் தான், இவர்கள் என்று புரியும்..

மகாபாரதம் 5000 வருடம் முன் 'துவாபர' யுகத்தில் நடந்தது.
வியாசர், மகாபாரதம் நடக்கும் போதே எழுதினார்.
சம காலத்தில் இருந்தார்.
மகாபாரதம் எழுதி முடித்த பின், வியாசர் கிருஷ்ணரை பற்றி மட்டுமே  பாகவதம் என்ற புண்ணிய கிரந்தத்தையும் இயற்றினார்.
இதை அர்ஜுனன் பேரன் பரிக்ஷித் 7 நாட்கள் தொடர்ந்து கேட்டார்.

ராமாயணம் சுமார் 12 லட்ச வருடங்கள் முன் த்ரேதா யுகத்தில் நடந்தது.
தமிழ்நாட்டில் திருச்சி அருகில், அன்பில் என்ற ஊரில், ப்ருகு ரிஷியே வேடுவ ஜாதியில், ருக்சன் என்ற வேடுவனாக பிறந்து, ராம நாமத்தை ஜபித்து, வால்மீகி ரிஷியாகி, நாரதர், ப்ரம்மா, சரஸ்வதி அனுகிரஹத்துடன், ராமர் அவதாரம் செய்த காலத்திலேயே ராமாயணம் எழுதி, அதை ராமரின் புதல்வர்கள் லவன் மற்றும் குசனுக்கு சொல்லி, ராமாயணத்தை ஸ்ரீ ராமரே முதன் முதலாக தன் புதல்வர்கள் மூலமே கேட்டார் என்ற பெருமை அடைந்தது.
தமிழன் வால்மீகி த்ரேதா யுகத்தில் சமஸ்கரித மொழியில் கவி நடையில் ராமாயணம் எழுதினார்.
அது தமிழில் இல்லையே என்று, கலி யுகத்தில், கம்பர் தமிழில் கவி நடையில் தமிழாக்கம் செய்து தமிழனுக்கு கொடுத்தார்.

5000 வருடங்கள் முன் இருந்த இந்த இரு புராணங்களையும், இதன் காலத்தையும், முதலில் ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு பின்,
ஆராய்ச்சி செய்ய ஆர்வம் இருந்தால், 2000 வருடம் முன் உருவாக்கப்பட்ட பைபிளை படிக்கலாம்.

இப்படி படிக்கும் போது,  உண்மையான அறிவை நமக்கு கொடுக்கும்.
காலத்தை கணிக்கும் போதும் சில உண்மைகள் தானாக விளங்கும்.

5000 வருடங்கள் முன் நிகழ்ந்த மகாபாரதத்தை, அரைகுறையாக தெரிந்து கொண்டு,
12 லட்சம் வருடங்கள் முன் நிகழ்ந்த ராமாயணத்தை 'சீதைக்கு ராமன் சித்தப்பா, இலங்கையை சேர்ந்த ப்ராம்மண ராவணனை தமிழன்' என்ற அளவுக்கு தவறுதலாக புரிந்து கொண்டு, இருக்கும் ஹிந்துக்கள்,
2000 வருடம் முன் உருவாக்கப்பட்ட பைபிளை படித்தால், மோசம் போவது நிச்சயம்... ஏமாறுவதும் நிச்சயம்.

அற்புதமான ஹிந்து மதத்தில் பிறந்தும், மதம் மாறுவதற்கு காரணம் ராமாயண, மகாபாரத 'காலத்தை'யும், அதன் 'சரித்திரத்தை'யும் புரிந்து கொள்ளாமல் இருப்பதே..

ஹிந்துக்கள் மகா அறிவாளிகள் தான். சந்தேகமில்லை.
ஆனால் தன் மத விஷயங்களை பொறுத்தவரை, போதிய அறிவு இல்லாமல் உள்ளனர் என்பதே நம் பலவீனம்.
இது சற்று வருத்தம் அளிக்க கூடிய விஷயமாக உள்ளது.


இனி....
சுமார் 100ADல் உருவாக்கப்பட்ட பைபிள் வசனங்களை கவனிப்போம்..


ஏரோது (herod) என்ற ராஜா, "ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது" என்று கேட்டபொழுது, அவனும், அவனோடு கூட ஜெருசலம்  நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
Matthew 2.3
(3102BC முன், அதாவது சுமார் 5000 வருடம் முன் பரப்ரம்மமே ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்தார்.
கிருஷ்ணர் பிறந்து விட்டார் என்றதும், மதுரா அரசனாக கொடுங்கோல் ஆட்சி செய்யும் கம்சன் மனம் கலங்கினான்.
5000 வருடம் முன்பேயே நடந்த அதே நிகழ்வு.. இன்றும் மதுரா போய் பார்க்கலாம்..)
ஏரோது (herod) ராஜா, பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான் என்பதால், அப்பா ஜோசப் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதன் தாய் மேரியையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போனான்.
Matthew 2.13, 2.14
(கிருஷ்ணரை கம்சன் கொன்று விடுவானோ என்று தேவகி பயப்பட, பிறந்த குழந்தையாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் 'அப்படி பயம் இருந்தால், தன்னை கோகுலம் எடுத்து செல்லுங்கள்' என்று சொல்ல, குழந்தை கிருஷ்ணரை எடுத்துக்கொண்டு  கோகுலம் புறப்பட்டார் வசுதேவர். 
 5000 வருடம் முன் நடந்த நிகழ்வு.. இன்றும் மதுரா உள்ளது..கிருஷ்ணர் பிறந்த இடம் உள்ளது. போய் பார்க்கலாம்.)

ஏரோது (Herod) மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலை செய்தான்.
Matthew 2.16
(கிருஷ்ணர் பிறந்து விட்டார் என்று அறிந்த கம்சன், ஒரு மாதத்தில் பிறந்த அனைத்து குழந்தையையும் கொன்று விட சொல்லி, பூதனை என்ற அரக்கியை கோகுலத்துக்கு அனுப்பினான்.
5000 வருடம் முன் நடந்த நிகழ்வு.. இன்றும் கோகுலம் உள்ளது.. போய் பார்க்கலாம்.)
ஏரோது (Herod) இறந்த பிறகு, பிள்ளையையும் அவன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான் ஜோசப். 
Matthew 2.20, 2.21
(கம்சனை தன் 11 வயதில் ஸ்ரீ கிருஷ்ணர் கொன்ற பின், மதுராவில் வசுதேவரும், தேவகியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்...)

5000 வருடம் (3102BCக்கு முன்) முன்பு, பாரத மண்ணில் நடந்த சரித்திரம்.

அரைகுறையாக யாரோ ஒரு கிராமத்தான் மஹாபாரத கதையை கேட்டு, அதே கதையை தன் அறிவுக்கு எட்டிய அளவுக்கு,
யவனர்கள் என்று அழைக்கப்பட்ட தேசங்களில் திரிந்து கொண்டிருந்தவர்களுக்கு சுமார் 2000 வருடம் (சுமார் 100ADல்) முன்பு சொல்லி இருக்கலாம்..

பொதுவாக உச்சரிப்பு புரிந்து கொள்ளாமல் போகும் போது, தவறான அர்த்தங்களை புரிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது..  கீழே உள்ள வீடியோவை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

அது போல, 5000 வருடம் முன் நிகழ்ந்த ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம், உலகம் முழுக்க பேசப்பட்டு, சரித்திரம் உருமாறி 3000வருட காலத்தில் யவன தேசங்களான ஜெருசலம் போன்ற தேசங்களில் மாறுபட்டு இருக்க கூடும்.


இன்று கூட கிராமங்களில் நாடக நடிகர்கள் கிருஷ்ண கதையை "கண்ணன் பொறந்தான் மதுரைல... கோகுல கிராமத்துல வளந்து, பொல்லாத கம்சன ஒரே அடி போட்டு கொன்றான். பெத்த அப்பா அம்மாவை சிறையிலேந்து காப்பாற்றினான்" என்று அவர்கள் பாணியில் சொல்வது உண்டு.


இப்படி கண்ணன் கதை சொல்லும் பழக்கம் உலகம் முழுக்க, பரவி இருந்தது...
உலகத்தில் உள்ள க்ஷத்ரியர்கள் அனைவரும் பங்குபெற்ற மகாபாரத போருக்கு பின்னர், உலகமே தர்மபுத்திரர் ஆட்சிக்கு கீழ் வந்தது.

5000 வருடம் முன் நடந்த கிருஷ்ணன் கதையை, 2000 வருடம் முன் கிறிஸ்து ஆக்கியது போல தோன்றுகிறதா?

கம்ச மாமா கதையை திருடி, ஏரோது (herod) ஆக்கியது போல தோன்றுகிறதா?

மதுரா என்ற ஊரையே திருடி, பெத்லகேம் ஆக்கியது போல தோன்றுகிறதா?

கோகுலம் என்ற ஊரையே திருடி, எகிப்து ஆக்கியது போல தோன்றுகிறதா?

2000 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட கதை, 5000 வருடம் முன் இருந்த கதையை சுட்டுள்ளது என்று தோன்றுகிறதா?

ஏசு அவதார கதை இப்படி தான் பைபிளில் எழுதப்பட்டுள்ளது...
புதிய ஏற்பாடு "மத்யு" (Matthew) அப்படி தான் தெளிவாக, 5000 வருடத்திற்கு முன் இருந்த மகாபாரத கதையை சுட்டு சொல்கிறது...

இதை மாற்ற 3வது new testament கொண்டு வந்தாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை...

மற்றொரு புதிய ஏற்பாடு லூக்கில் சொல்வதை இனி பார்ப்போம்..
மேலும் தொடர்வோம்...
ஜோசப், தன் மனைவி மேரிக்கு பிறந்த குழந்தைக்கு 8வது நாளில் "ஹேசு கிறிஸ்து" என்று பெயர் வைத்தார்..
Luke 2.21
(குழந்தை பிறந்து 10வது நாள் பெயர் வைக்கும் பழக்கம் ஹிந்துக்களுக்கு உண்டு.
ஜோசப் அய்யாவிடம் இந்த பழக்கம் இருக்கிறது.
ஜோசப், ஏசு, மேரி ஒரு சுத்தமான ஹிந்து கலாச்சாரத்தை கொண்ட வெளிநாட்டில் வசித்த குடும்பம் என்று தெரிகிறது.)
இன்று கூட இஸ்கான் போன்ற கிருஷ்ண அமைப்புகளில், ஹிந்து கலாச்சாரத்தில்  ஈர்க்கப்பட்டு, வெளிநாட்டில் வாழும் குடும்பங்கள் இருப்பதை காண்கிறோம். இவர்கள் கிருஷ்ணா என்று உச்சரிப்பதில்லை. கிஸினா என்று தான் உச்சரிக்கிறார்கள். 
2000 வருடங்கள் முன், இந்த நாடுகளில் உச்சரிப்பில் கிருஷ்ணர் கிருஸ்துவாக மருவி இருக்க கூடும்.

உலகம் முழுவதும் ஹிந்து கலாச்சாரமே இருந்தது என்று இன்று வரை பூமியில் கிடைக்கும் சிவ லிங்கமும், கோவில்களின் பாகங்களே சாட்சி...
ஹிந்து கலாச்சாரத்தில், நன்றாக கவனித்தோம் என்றால்,  பரமாத்மாவை "ப்ரம்மம்" என்ற சொல் கொண்டு அழைக்கிறார்கள்.





அந்த ப்ரம்மமே, "வாமன, நரசிம்ம, ராம, கிருஷ்ணனாக அவதாரம் செய்தார், ருத்ரனாக" வந்தார்  என்று சொல்கிறார்கள்.
அவரே அனைத்துமாக இருக்கிறார்.
அவரே 'நாராயணன்' என்றும் சொல்கிறது ரிக் வேதம்.

ப்ரம்மமே 'பரமாத்மா' என்ற வழிபாட்டில் இருந்து, இரண்டு சித்தாந்தங்கள் வெளி வந்தன என்று பார்க்கிறோம்.
அந்த ப்ரம்மம் அரூபமானவர், வேதத்தில் உள்ள ருத்ரனே அந்த பரமாத்மா என்று "சைவ" சித்தாந்தமும்,

அந்த பரமாத்மா ரூபம் தரித்து நாராயணனாக இருக்கிறார் என்று புருஷ சூக்தம் போன்ற வேத சூக்தங்களை காட்டி நிரூபித்து, நாராயணனே அந்த பரமாத்மா என்று "வைணவம்" சித்தாந்தமும் உருவானது.
ப்ரம்மமே 'பரமாத்மா' என்று ஹிந்துக்கள் அனைவரும்  ஒப்புக்கொண்டாலும்,
அரூபமான ருத்ரனே 'பரமாத்மா' என்றும்,
விஷ்ணுவே 'பரமாத்மா' என்றும் இரண்டு சித்தாந்தங்களாக பிரிந்தது என்று பார்க்கிறோம்.

இது ஒரு ஆச்சரியமில்லை...

கொஞ்சம் நாம் கவனித்தால்,
2000 வருடங்கள் முன் தோன்றிய கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டுமே "யூத மதத்தில் இருந்து பிரிந்த" இரு வேறு சித்தாந்தங்கள் என்ற ஒற்றுமையை பார்க்கிறோம்.

யூத மதம் "ப்ரம்மம்" என்ற சொல்(ஒலி) போலவே ஒலிக்கும், "ஆப்ரஹாம்" (இப்ராஹிம்) என்பவரே தங்கள் வழிகாட்டி என்று நம்புகின்றனர்.

ஒலி அடிப்படையில் சொல்லி பார்த்தால், "ப்ரம்மம், இப்ராஹிம், ஆப்ரஹாம்" மூன்றும் ஒரே மாதிரியான சப்தத்தை ஒலிக்கிறது என்று கவனிக்கலாம்.

சைவ சித்தாந்தங்கள் போலவே,
இறைவன் அரூபமானவர், அவரையே சரண் அடைய வேண்டும் என்று இஸ்லாம் என்ற சித்தாந்தம் நபிகளால் உருவானது.
இஸ்லாம் என்ற அரேபிய சொல்லுக்கே "சரணாகதி" என்று தான் பொருள். ஆங்கிலத்தில் surrender to god என்று பொருள் தருகிறது.

இறைவன் அரூபமானவர் என்று சொல்லும் சித்தாந்தத்தை சைவர்கள் கடைபிடிக்கின்றனர்.
அரூபமானவர் ருத்ரன் என்று காட்ட, ஒரு ரூபமில்லாத லிங்கத்தை ருத்ரனாக வழிபடுகின்றனர்.
தியானம் செய்கின்றனர்.
இஸ்லாமில் மசூதிகள் அமைப்பு லிங்க ரூபமாக உள்ளது.
தியானத்திற்கு அதிக மரியாதை உள்ளது.  
வீண் பேச்சுக்கள் பேச மாட்டார்கள் இஸ்லாமியர்கள்.

மற்றொரு சித்தாந்தத்தில்,
இறைவன் ரூபம் உடையவர்.
அவர் கிறிஸ்து என்று கிறிஸ்துவம் உருவானது.
இவர்கள் உருவ வழிபாடு செய்கின்றனர்.


இந்தியாவில் ஹிந்துவாக பிறந்தும், புரியாமல் மதம் மாறியுள்ள கிறிஸ்தவர்கள் கூட, இன்று 90 சதவீதம் ஹிந்து மதப்படி தான் பூஜை, ஸ்லோகங்கள், ஜபம், துளசி மாலை, இசை கச்சேரி, ஸ்தூபம், தூபம், தேர், பாத யாத்திரை என்று ஏறத்தாழ  ஹிந்துவாகவே கிறிஸ்துவை ஆக்கி, வழிபடுகின்றனர்.

ஏசு, கிருஷ்ண பக்தனா?
அல்லது கிருஷ்ணர் கதையை தான் கொஞ்சம் எடுத்து கிறிஸ்து என்ற பெயரில் எழுதப்பட்டதா? என்பது நமக்கு தேவை இல்லாத சர்ச்சை..
அது அவரவர் சிந்தனைக்கு விட்டு விடலாம்.

5000 வருடத்திற்கு முன் நடந்த கிருஷ்ண சரித்திரம், 2000 வருடத்திற்கு முன் நடந்ததாக சொல்லப்படும் சரித்திரத்தில் நடந்ததா? 
இல்லை கதை களம் மட்டும் எடுக்கப்பட்டதா? என்பது அவரவர் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏசு, ஜோசப், மேரி, ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தி கொண்ட ஒரு ஹிந்து குடும்பமாக தான் தெரிகிறது.
ரோமானிய அரசாட்சியில் இந்த யூத குடும்பங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர் என்று பார்க்கிறோம்.

வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.


தன் குழந்தைக்கு புண்யாஜலம் தெளித்து சுத்தி செய்ய, ஜெருசலத்தில் உள்ள 'கோவிலுக்கு' ஜோசப்பும், மேரியும் சென்று, தன் குழந்தையை தெய்வத்திடம் (lord) காண்பித்தனர்.
Luke 2:22
(குல தெய்வத்தை பார்க்க போகும் பழக்கம் ஜோசப் அய்யாவிடம் இருந்துள்ளது.
ஜோசப் அய்யா, எந்த தெய்வத்திடம் ஏசு குழந்தையை  காட்டினார்?? எந்த கோவிலுக்கு கூட்டி சென்றார்?? என்று மட்டும் சொல்ல பைபிள் மறுக்கிறது.. மறைக்கிறது !!
Luke 2:22 வசனம் எதிர்காலத்தில் மறைக்கப்படலாம்...

'என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்' என்று ஏசு சொல்லும் முக்கியமான வசனத்தில் கூட, அவர் எந்த சமூகத்தை உண்மையில் சொன்னார்? என்று சொல்ல பைபிள் மறுக்கிறது.. மறைக்கிறது)

அந்த காலங்களில் அடக்கி ஆண்ட ரோமானியர்களுக்கு பயந்து மறைக்கப்பட்டு இருக்கலாம்...
வீட்டில் பிறக்கும் ஒவ்வொரு முதல் ஆண் குழந்தையும் இறைவனால் புனிதப்படுத்தப்பட வேண்டும் என்ற விதிப்படி, ஏசுவை இறைவன் முன் காண்பித்தனர் அவன் பெற்றோர்கள்.
Luke 2:23
(ஏசுவுக்கு ஆசி கூறிய தெய்வம் நாராயணன் என்றோ ஸ்ரீ கிருஷ்ணர் என்றோ, சொல்ல பைபிள் மறுக்கிறது.. மறைக்கிறது.)

ஏசு உண்மையா? கற்பனையா? என்பது தேவை இல்லாத சர்ச்சை.

அப்படி ஒருவர் இருந்தார் என்றே நம்புவோம்.
கலியுக முடிவில், தான் வைகுண்டம் போக தீர்மானித்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.
தான் மறைந்து விட்டால், துவாரகை கடலில் மூழ்கி விடும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதும், லட்சக்கணக்கான யாதவர்கள் நான்கு திசையிலும் அவரவர்கள் குடும்பத்துடன் பிரிந்து சென்றனர் என்று மகாபாரதம் காட்டுகிறது.

பாரத நாட்டில் இன்றும் வடக்கில் யாதவர்கள் (yadav) என்றும், தெற்கில் குறிப்பாக தமிழகத்தில் கோனார்கள், யாதவர்கள் என்றும் இருக்கின்றனர்.

யூதர்கள் என்ற குலமும் யாதவர்கள் தான்.
யது குலத்தில் வந்த இவர்கள் யாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

யாதவ, யூத, யது என்ற சொல்லிலேயே ஒற்றுமை தெளிவாக தெரிகிறது.

பெயர் மருவி உள்ளதே தவிர, இவர்கள் வாழ்வு முறை, வழிபாடு, ஏசு "பரம பிதாவே என்று அழைக்கும் முறை" எல்லாம் ஹிந்து கலாச்சாரமாக தான் உள்ளது.
இவர்களுக்கு கிருஷ்ணரே குல தெய்வம் என்று தெளிவாக தெரிகிறது.

காலபோக்கில் உடை, பாஷை மாறி போனாலும், கதை களமோ, தன் மகனுக்கு கிறிஸ்து என்று பெயர் வைக்கும் பழக்கமோ இவர்களை விட்டு மாறவில்லை என்று தெரிகிறது.

ஸ்ரீ ராகவேந்திரர், க்ஷீரடி சாய் பாபா போன்ற உத்தமர்கள், ராம, கிருஷ்ண பக்தி செய்த மகான்கள்.

கிருஷ்ணரை வணங்கிய இந்த மகான்களையே தெய்வமாக இன்றும் பல லட்ச பாரத மக்கள் வணங்குகின்றனர் என்று பார்க்கிறோம்.

ஸ்ரீ கிருஷ்ணரை பரம பிதாவாக வழிபட்ட கிறிஸ்து ஒரு மகான் தான்.
மகானையே வழிபடும் பழக்கம் நமக்கு உண்டு.
இது இவர்களிடத்திலும் உள்ளது...

அடியேன் ராமானுஜ தாஸன் என்று வைணவர்கள் சொல்லி கொள்வார்கள்.

இந்த பழக்கமே கிறிஸ்து என்ற மகானை பின்பற்றியவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

கிறிஸ்துவை வழிபடுவதில் தவறில்லை.
ஆனால் அவர் யாரை வணங்கினாரோ அந்த பரம பிதாவான ஸ்ரீ கிருஷ்ணரை புரிந்து கொள்ள, பகவத் கீதையை படித்து கிருஷ்ண பக்தர்களாக ஆக முயற்சிக்க வேண்டும்.
காலத்தை ஒட்டிய ஆராய்ச்சி செய்தால், கிறிஸ்து வெளிநாட்டில் வாழ்ந்த கிருஷ்ண பக்தன் என்றே தெரிகிறது...
யூத குலத்தில் ஏசு என்று ஒருவர் பிறந்தார் என்றே ஒப்புக்கொண்டாலும், இவர் தன் வாழ்நாள் முழுவதும் "பர மண்டலத்தில் இருக்கும் பிதாவே" என்று வழிப்பட்டது சாஷாத் யாதவ கண்ணனையே என்று தெரிகிறது.

ராமரை வணங்கிய ராகவேந்திரரையே தன் தெய்வமாக வழிபடும் பழக்கம் ஹிந்துக்களுக்கு உள்ளது போலவே,
கிருஷ்ணன் என்ற பரம பிதாவை வணங்கிய கிருஸ்து என்ற மகானை தன் தெய்வமாக வழிபடும் பழக்கம் வெளிநாட்டில் வாழ்ந்த ஹிந்துக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது...
மாடு மேய்த்த கண்ணனை போல, பக்தனான இவரும் ஆடு மேய்க்க ஆசைப்பட்டார் என்று ஊருக்கு தகுத்தாற்போல சொல்லி இருக்கலாம் அங்கு இருந்த பெரியோர்கள்.
அல்லது, கிருஷ்ணர் கதையை சற்று மாற்றி, அங்கு மாடுகளை விட ஆடுகள் அதிகம் என்பதால், ஆடு மேய்த்தார் என்று சொல்லி இருக்கலாம்.

கிருஸ்துவின் கதை, கிருஷ்ணர் கதையில் இருந்து எடுக்கப்பட்டதா? 
அல்லது கிருஷ்ணர் கதையை ஒரு கிராமத்தான் தன் இஷ்டத்துக்கு மாட்டுக்கு பதில் ஆடு என்றும், கம்சனுக்கு பதில் ஏரோது என்றும்,
கிருஷ்ணருக்கு பதில் கிறிஸ்து என்றும்,
மதுராவுக்கு பதில் பெத்லகேம் என்றும்,
கோகுலம் என்ற ஊரை, எகிப்து என்றும் மாற்றினார்களா என்பதும் யோசிக்க வேண்டியதாக உள்ளது...
எது எப்படியோ!!  ஏசு ஒரு யாதவ பையன் தான். நம்ம பையன் தான்.
வெளிநாடுகளில் வாழும் இஸ்கான் ஹிந்துக்களை போல தான் இவர்கள் என்று புரிந்து கொள்ள முடியும்.

கிருஷ்ணனை தான் இப்படி கிறிஸ்து என்று  சொன்னார்களா? இல்லை,
தாங்கள் யாதவ குலம் என்பதால் கிருஷ்ண கதையை தன் போக்கில் எழுதி, ரோமானியர்களை பல தெய்வ கொள்கையில் இருந்து மாற்ற, ஒரே தெய்வம் தான், அவரே கிருஷ்ணர் என்று நிலை நாட்ட முயற்சித்தார்களா? என்பது அவரவர் சிந்தனைக்கு விட்டு விடலாம்...

கிருஷ்ண பக்தியை, கிருஷ்ணரே பரமாத்மா என்று சொல்லும் இஸ்கான் போன்ற அமைப்புகளும், யாதவர்கள் போன்ற மனோபாவம் கொண்டவர்களாக தான் உள்ளனர்.
அவர்களுக்கு ஒரே தெய்வம் தான். ஒரே ஜபம் தான். ஒரே குறிக்கோள் தான்.

வைணவம் என்ற சித்தாந்தம் மற்றும் இஸ்கான் என்ற சமீபத்தில் 1970ல் உருவாக்கப்பட்ட அமைப்பும், கிருஷ்ண பக்தியை அனைவரிடமும் பரப்ப ஆசைப்படுகிறது.

வைணவத்தில் ஜாதி மதம் பார்க்காமல் அனைவருக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து, நாராயணன் சொத்து நீ என்று உபதேசங்கள் செய்து, வைணவனாக சேர்த்து கொள்கிறது.

இஸ்கான் போன்ற அமைப்புகள், ஒரு படி மேலே போய், கிருஷ்ண பக்தி செய்பவர்களுக்கு உண்ண உணவு, உடை, நிம்மதியான வாழ்க்கை, ஜபம், என்று கொடுத்து, பூணூல் போட்டு, பூஜைகள் செய்ய சொல்லிக்கொடுத்து உலக மக்கள் யாவரையும் கிருஷ்ண பக்தி செய்ய இழுக்கிறது...

ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்ட யாதவ, என்ற யூதர்களும், மத மாற்றம், கிருஸ்துவே கடவுள், அவர் பெயரை ஜபம் செய்யுங்கள் என்று கிருஸ்து பக்தி செய்ய அழைக்கிறார்கள்...

மனித அறிவுள்ள நாம், பாரத பூமியில் பிறந்த பிறகும், முட்டாளாக இருக்க கூடாது...

நமக்கு சுட்ட கதை வேண்டுமா ?
சுடாத கதை வேண்டுமா ?
என்று சிந்திக்க வேண்டும்.

இன்று கூட ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற ஜபத்தை வெளிநாட்டவர்கள் சொல்லும் போது, அவர்கள் உச்சரிப்பில் ஒரு வித்தியாசம் தெரிகிறது...

மும்பா தேவி என்று சொல்லை கூட சொல்ல முடியாமல் தவிக்கும் வெளிநாட்டவர்கள், "பாம்பே" என்று உலறினார்கள்...

பாரத நாடு என்று சொல்ல இயலாமல், சிந்து என்ற நதியை வைத்தே பாரத மக்களை அடையாளப்படுத்தி, அதையும் ஹிந்து, ஹிண்டு, இந்து என்றும் உளறி கொட்டினர்.
br />
1000 வருடங்கள் இவர்களிடம் சிக்கி, 1947ல் விடுபட்ட போது, மகா உளறல்காரர்களான பிரிட்டிஷ் நாட்டினர், இண்டியா என்று அவர்களாக நமக்கு ஒரு பெயர் வைத்து, பாரத நாட்டில் சிந்து பகுதியை, பாக்கி இடம் (பாகிஸ்தான்) என்று பெயர் கொடுத்து, கையெழுத்து போட்டு விட்டு தன் ஊருக்கு சென்றனர்.

உண்மையான பெயர் என்ன என்று தெரிந்த பின்னும், இப்பொழுது இருக்கும் பெயர் அர்த்தமில்லாத பெயர் என்றும் தெரிந்தும், அறிவுள்ள மனித சமுதாயம் அதை மாற்ற யோசிக்குமா? யோசிக்காதா?

பாம்பே என்ற அர்த்தமில்லாத பெயரை மாற்றி, மீண்டும் மும்பை என்று மாற்றினார்கள்.
இது போல பல அர்த்தமில்லாத பெயர்களை மாற்றி அதன் உண்மையான பெயர்களுக்கு மாற்றி உள்ளனர் அறிவு உள்ள நம் பாரதமக்கள்.

1000 வருடங்கள் உள்ளே நுழைந்த வெளி நாட்டினர்களுக்கு, உச்சரிப்பு பிரச்சனையால், ஊர் பெயர்களை மட்டுமல்ல, பாரதம் என்ற பெயரையே இண்டியா என்று மாற்றி விட்டனர் என்று பார்க்கிறோம்.

5000 வருடங்கள் முன் குடி பெயர்ந்த யாதவர்கள் ஊட்டிய கிருஷ்ண பக்தி யவன தேசங்களில் நிலைத்தாலும், கிருஷ்ண என்ற சொல் வெளிநாட்டவர்களால் கிறிஸ்து ஆகி இருக்கலாம். பெயர்கள் உருமாறி இருக்கலாம்.

பாரத மக்கள், ஒரிஜினல் எது? ஒரிஜினல் யார்? என்று புரிந்து கொள்ளும் போது, போலிகளை ஒதுக்கி, அர்த்தமில்லாத பெயர்களை மாற்றுவதில் தயங்குவதில்லை.

அதே போல,
யாதவ கூட்டம் யவன தேசங்களுக்கு சென்று வாழ்ந்த போது, என்றோ ஒரு காலத்தில் யூத குலம் என்று பெயர் மருவி இருக்கலாம்.

அங்கு 'கிறிஸ்து'  என்ற ஒரு நல்ல பிள்ளை, "கிருஷ்ணரே கதி" என்று வாழ்ந்து இருக்கலாம்.

இங்கு காந்தியை மகான் என்று, ஆஞ்சநேயர் போன்ற உத்தமமான பக்தர்களை கூட வழிபடும் பழக்கம் உண்டு..
இது போலவே,
யாதவ என்ற யூத குலத்தில் பிறந்த கிறிஸ்து என்ற மகானை தெய்வமாக கும்பிடும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

ஆர்வத்தால், கிருஷ்ணர் கதையை கொஞ்சம் இவர் சரித்திரத்தில் சேர்த்து இருக்கலாம்.

பக்தியின் காரணத்தால், தான் வணங்கும் குருவின் சரித்திரத்தில் தெய்வங்களின் சரித்திரத்தை பொருத்தி பார்ப்பது கூட உண்டு.

இதில் மறைக்கப்பட்ட உண்மை எதுவென்றால், "பரம பிதாவே" என்று ஏசு அழைக்கும் தெய்வம், அவர் அப்பா இவரை கூட்டிக்கொண்டு எந்த இறைவனை வணங்கினார்? எந்த கோவிலுக்கு போனார்? போன்றவை மறைக்கப்பட்டது தான். ரோமானியர்களுக்கு பயந்து அன்று மறைக்கப்பட்டு இருக்கலாம்.

யூத குலத்தில் பிறந்த மகான் ஏசு வழிபட்ட அந்த பரம பிதா கிருஷ்ணரே என்ற உண்மையை உணர்வது, உணர்த்துவது ஒவ்வொரு ஹிந்துவின் கடமையும் கூட..

பரம பிதாவின் ராஜ்யம் உலகெங்கும் பரவும் என்று ஏசு சொல்கிறார்...
இன்று இஸ்கான் போன்ற அமைப்புகளால் அது நிரூபணம் ஆகிறது என்று பார்க்கிறோம்..

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க யாதவர்கள்...
வாழ்க யது குலம்...
வாழ்க வெளிநாட்டில் சென்று வாழ்ந்த பெயர் மாறி போன யூத குலம்...
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.


ஸ்ரீ கிருஷ்ணர் சரித்திரத்தை அனைத்து கிறிஸ்தவர்களும் படிக்க வேண்டும்.
ஏசுவின் பிரியமான புத்தகம் பகவத் கீதையாக தான் இருக்க வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ணரை இகழ்வது, ஏசுவுக்கு கட்டாயம் ஏற்பு உடையதாக இருக்காது..
பரம பிதா ஸ்ரீ கிருஷ்ணரை, ஏசும் எவரையும் ஏசு ஏற்க வாய்ப்பு இல்லை.

பாரத மண்ணில் பிறக்க கட்டாயம் ஏசு ஆசைப்பட்டு இருப்பார்.

சாய்பாபா என்ற மகாத்மாவை வணங்கும் ஹிந்துக்களுக்கு, கிருஸ்து என்ற கிருஷ்ண பக்தரை வணங்க தயக்கம் இருக்காது..
ஆனால் அவர் வணங்கிய பரம பிதாவை ஏசினால், ஏசுவும் கை விடுவார் என்றே புரிகிறது...

தவறான உச்சரிப்பில் உருவான தெய்வங்களை வணங்காமல், ஸ்ரீ கிருஷ்ணரையே அனைவரும் வணங்குவோம்.

இஸ்கானில் உள்ள வெளிநாட்டவர்கள் கிருஷ்ணரை கிஸினா என்று உச்சரிக்கிறார்கள். 1000 வருடங்கள் கழித்து, வெளிநாடுகளில் இவர்கள் வழிபாடு பிடித்து, எங்கள் தெய்வம் கிஸினா என்று சொல்லி கொண்டு அலைந்தால் எப்படி இருக்கும்? பொய்யான பெயர்களை களைவோம். கிருஷ்ணா என்ற உண்மையான பரமாத்மாவை பற்றிக்கொள்வோம்.

வாழ்க யூதர்கள்.  வாழ்க வெளிநாடுகளில் வாழ்ந்த, வாழும் கிருஷ்ண பக்தர்கள்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்...




Friday 31 May 2019

கல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே? - என்று சொல்கிறார்கள் போலி பகுத்தறிவாளிகள்...இவர்கள் பார்ப்பது என்ன? நாம் பார்ப்பது என்ன? ஒரு அலசல்

"பகுத்தறிவாளி" என்று நினைத்து பேசுபவர்கள், ஹிந்துக்களை பார்த்து கேலியாக,
"நன்றாக பார். கல் தானே இருக்கிறது. கல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே!!"
என்று குரைக்கிறார்கள்.


'கண்ணால் எதை பார்க்கிறோமோ, அது தானே உண்மை' என்று போலி பகுத்தறிவாளிகள் நினைக்கிறார்கள்.
தங்கத்தால் ஆன கிண்ணத்தை ஒருவன் பார்த்து "கிண்ணம்" என்று சொல்கிறான்.
இதில் பால் ஊற்றி குடிக்கலாம் என்று நினைக்கிறான்.
"அப்படி சொல்லாதே... அப்படியெல்லாம் நினைக்காதே... நன்றாக பார். இது வெறும் தங்கம் தான். இனி நீ இதை 'தங்கம்' என்று தான் சொல்ல வேண்டும்" என்று சொல்வானா ஒருவன்?
'இது தங்கம்' என்று சொல்பவனுக்கே தெரியுமே... ஆனால் இப்போது "தங்கத்தில் கிண்ணம் தெரிகிறதே" என்று சொன்னால், போலி பகுத்தறிவாதிக்கு புரிவதில்லை.

அதே போல,
மண்ணால் செய்யப்பட்ட குதிரையை ஒரு குழந்தை பார்த்து "ஆஹா... குதிரை" என்று சொல்லி அதனுடன் விளையாடுகிறது.
"அப்படியெல்லாம் சொல்லாதே... மண் குவியல் என்று தான் சொல்ல வேண்டும்" என்று சொல்வானா ஒருவன்?
'இது மண் தான்' என்று குழந்தைக்கே தெரியுமே... ஆனால் இப்போது "அந்த மண்ணில் குதிரை தெரிகிறதே" என்று சொன்னால், போலி பகுத்தறிவாதிக்கு புரிவதில்லை.

கண்ணால் பார்ப்பது மட்டுமே நிஜம் என்றால், மனிதனுக்கு புத்தி எதற்கு? மனம் எதற்கு? மிருகமாகவே இருந்து விடலாமே..

தாய், தன் குழந்தையை பார்த்து, "என் செல்ல குழந்தை" என்று கொஞ்சுகிறாள்.

'வெளியில் என்ன பார்க்கிறாயோ அது தான் உண்மை.' என்று குரைக்கும் பகுத்தறிவாளிகள், தன் தாயிடமே சென்று,
"என்னை நன்றாக பார். சதை, எலும்பு, நரம்பு, ரத்தத்தால் செய்யப்பட்ட 80 கிலோ மாமிச பிண்டம் தான் நான்.
80 கிலோ மாமிசம் தானே உன் கண்ணுக்கு எதிரில் நிற்கிறது. இந்த மாமிசத்தை பார்த்து 'என் குழந்தை, என் குழந்தை' என்று சொல்கிறாயே!!"
என்றா தன் தாயை பார்த்து கேலி செய்வான்?

தாய்க்கு தெரியாதா, தன் குழந்தை மாமிசத்தால் ஆனவன் தான் என்று.
'மாமிச உடம்பு தான் இது' என்று தாய்க்கு தெரிந்தாலும்,
அதில் தன் குழந்தை இருப்பதை தன் மனதாலும், புத்தியாலும் பார்ப்பதால் தானே "என் மகனே" என்று கொஞ்சுகிறாள்.





தாய்க்கு பகுத்தறிவு உள்ளதா? 
கண்ணால் காண்பதே நிஜம் என்று நினைத்து குரைக்கும், முட்டாள் பகுத்தறிவாதிக்கு பகுத்தறிவு உள்ளதா?

தெய்வ நம்பிக்கை உள்ள கிறிஸ்தவன், கொலை செய்யப்பட்டு, இறந்தே போய்விட்ட ஏசுவை, தெய்வமாக நினைத்து, அவருடைய உருவத்தை சிலையாக வைத்து, "ஏசு ஏசு" என்று கல்லை பார்த்து கும்பிடுகிறான்.
இவர்களை பார்த்து,
"நன்றாக பார். கல் தானே இருக்கிறது. கல்லை பார்த்து 'ஏசு ஏசு' என்று சொல்கிறாயே, அறிவில்லை?
அவர் கொலை செய்யப்பட்டு 2000 வருடங்கள் ஆகி விட்டதே..முட்டாள்" என்றா கேட்கிறான் இந்த போலி பகுத்தறிவாதி?...

இது போன்ற முட்டாளை, கிறிஸ்துவன் மதித்தால், அது அவன் வணங்கும் ஏசுவை அவமானபடுத்தியதற்கு சமம் அல்லவா!
உண்மையான கிறிஸ்தவன், இப்படி தன் வழிபாட்டையும், தான் தெய்வமாக வழிபடும் ஏசுவையும் சேர்த்து தான் கேலி செய்கிறான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமியனும் மெக்காவில் உள்ள கல்லை தன் வாழ்நாளில் ஒரு முறையாவது முத்தமிட வேண்டும் என்று நினைக்கிறான். 'கல்லை பார்க்க எதற்காக அலைகிறாய்?' என்றா கேட்பான் இந்த போலி பகுத்தறிவாதி?

தெய்வத்தை எந்த விதத்தில் கேலி செய்பவனையும், தெய்வ நம்பிக்கை உள்ளவன் தன் தலைவனாக ஏற்று கொள்ள முடியுமா?
'உன் தாய் விபச்சாரி' என்று கேலி செய்தவனை, 'பரவாயில்லை, சொல்லிக்கொள்' என்று இருப்பானா? ஒரு மான உணர்ச்சி உள்ள மகன்.

தான் வணங்கும் தெய்வத்தை பழிப்பவனை பார்த்து, 'நீ தான் என் தலைவன் சொல்வானா?' தெய்வ நம்பிக்கை உள்ளவன்..

தெய்வ நம்பிக்கை உள்ள அனைவரும் புறக்கணிக்க வேண்டியவன் அல்லவா, இந்த போலி பகுத்தறிவாதி...

மனம், புத்தி இரண்டையும் பயன்படுத்தாத இவர்களிடம், அவனுடைய தாயே புத்தி சொன்னால் கூட புரிந்து கொள்ள மாட்டானே!!

அறிவாளியாக இருந்தாலாவது, "கொஞ்சம் புத்தியை, மனதை பயன்படுத்தி பார், நான் மாமிச சரீரத்தை பார்த்து மகனே என்று சொல்லவில்லை.. அந்த உருவத்தில் என் குழந்தை இருப்பதை பார்க்கிறேன்" என்று தானே தாய் சொல்வாள்..

அது போலவே,
இறந்து போன தன் தகப்பன் உடலை பார்த்து, போலி பகுத்தறிவாதி மகனும் "ஐயோ அப்பா... அப்பா" என்று கதறி அழுகிறான்.
பார்க்க வேதனையாக இருந்தாலும், 'இவன் போலி பகுத்தறிவு அப்போது எங்கே போனது?' என்று தானே கேட்க தோன்றுகிறது.

அந்த போலி பகுத்தறிவாதி மகனிடம் சென்று,
"நன்றாக பார். இங்கு அசையாத ஒரு மாமிசம் பிண்டம் தானே இருக்கிறது.
எதற்கும் உதவாத இந்த மாமிசத்தை பார்த்து 'அப்பா... அப்பா..' என்று சொல்கிறாயே!!.. அறிவு இல்லை?"
என்று கேட்டால், அந்த போலி பகுத்தறிவு மகன் என்ன சொல்வான்?

அதே போல,
என்றோ இறந்து போனவனின், சிலையை, போட்டோவை வைத்து கொண்டு அந்த சிலைக்கு மாலையும் போட்டு, வணக்கமும் தெரிவித்து, மரியாதை செய்து மகிழ்கிறான் கோமாளியான நாத்தீகனும், போலி பகுத்தறிவாதியும்.

அந்த போலி நாத்தீகனிடம் சென்று,
"நன்றாக பார்.. இது ஒரு பேப்பர், இது ஒரு கருங்கல்.
முட்டாள்தனமாக பேப்பரை பார்த்து, கல்லை பார்த்து
'ராமசாமி கிழவன்.. ராமசாமி கிழவன்.. தான் வளர்த்த பெண்ணை கட்டிக்கொண்ட கருக்காலி" என்று சொல்கிறாயே!!..அறிவு இல்லையா"
என்று கேட்டால், அந்த நாத்தீகன் என்ன சொல்வான்?


ஐயா, நான் போட்டோ பேப்பரை பார்க்கவில்லை.. அந்த பேப்பரில் காணப்படும் இறந்து போன அந்த கிழவனை நினைத்து பார்க்கிறேன். இறந்து விட்ட அவரை பார்க்க முடியாது என்பதால், அவர் சொன்ன விஷயங்கள் என் மனதில் இருப்பதால், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த போட்டோவுக்குள் இருக்கும் அவருக்கு என்னால் முடிந்த மரியாதையை காட்டி கொள்கிறேன்" என்று தானே சொல்வான் போலி பகுத்தறிவு பேசும் மடையர்கள்.

இதை தானே ஆஸ்தீகன், செய்கிறான்.

இறந்து போன மனிதன், கொலை செய்யப்பட்ட ஆவிகளுக்கே, தங்கள் நன்றியை தெரிவிக்க, அவர்கள் உருவத்தை போட்டோவில், சிலையாக செய்து, மாலை போட்டு, வணக்கம் செலுத்தும் போது...
சர்வ வல்லமை கொண்ட பரமாத்மா, எங்கும் உள்ள பரமாத்மாவை,
ஒரு கல்லில், போட்டோவில் இருப்பதாக பாவித்து வணங்கினால், இவன் மூளைக்கு புரியவில்லை.

இவர்களை போன்ற போலிகள், தான் கொண்டாடும் போலி தலைவனை சிலை வைத்து, மாலை போடும் போது, தாங்கள் இப்பொழுது என்ன செய்கிறோம்? என்று கொஞ்சம் விவேகம் இருந்து யோசித்தாலே,
ஆஸ்தீகன் கல்லை பார்க்கவில்லை, அதனில் தன் தெய்வத்தை பார்க்கிறான் என்று புரிந்து கொள்வான்.
அந்த தெய்வத்துக்கு மரியாதை செய்கிறான். அந்த தெய்வத்திடம் தன் பிரார்த்தனையை வைக்கிறான் என்று புரிந்து கொள்ள முடியும்.

தான் கல்லுக்கு மரியாதை செய்யும் போது, "என் தலைவனை நினைத்து மரியாதை செய்கிறேன்" என்று பேசும் இவர்கள்,
ஆஸ்தீகன் 'சிவபெருமானை இந்த சிலையில் பார்க்கிறேன்' என்று வணங்கினால்,
ஆஸ்தீகனை கேலி செய்து, அவன் தெய்வத்தையும், கலாச்சாரத்தையும் கேலி செய்து பிழைப்பு செய்கிறான்.
இது போன்ற போலிகள், சமுதாயத்தை சீரழித்து விடுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற கீழ் தரமான போலிகளை, நாம் வழிபடும் தெய்வத்தை வெறுக்கும் போலிகளை, வேரோடு ஒதுக்க வேண்டும்.
இவர்களை சட்டத்தாலும், ஒடுக்க வேண்டும்.


தான் மட்டும் சிலை வழிபாடு செய்து, இறந்து போய் விட்ட கிழவனை வணங்குவேன், ஆனால்,
நீ எங்கும் உள்ள தெய்வத்தை உன் ஆசைக்காக ஒரு சிலையாக செய்து, 'எங்கும் இருப்பவர், அதிலும் இருக்கிறார்' என்று வழிபட்டால், கேலி செய்வேன் என்று சொன்னால்,
அது போன்ற போலிகளை ஜென்ம விரோதியாக கூட நினைக்கலாம்.

தெய்வத்தையே நிந்தனை செய்து, நம் வழிபாடுகளை கேலி செய்யும் கூட்டம், ஆசை வார்த்தை கூறி, நமக்கே வயிற்றுக்கு சோறு போட்டால் கூட, அவர்கள் முகத்திலேயே துப்பி விட வேண்டும்.

பகுத்தறிவு போர்வையில், இருக்கும் இந்த போலிகள்,  நசுக்கப்பட வேண்டும்.

மானமுள்ள ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், தெய்வ வழிபாட்டை கேலி செய்யும் இவர்களை, மதிப்பது கூட, நாம் வழிபடும் தெய்வத்துக்கு நாம் செய்யும் அவமானமாகும்.

வாழ்க ஹிந்துக்கள்.

Hare Rama, Hare Krishna - listen to Bhajan

Sandhya vandanam - morning with meaning



Sandhya vandanam - afternoon with meaning.

Sandhya vandanam - evening with meaning.




Wednesday 6 March 2019

பிற மதங்கள் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது. ஹிந்துக்கள்? தெரிந்து கொள்வோமே...

உங்கள் கடவுள் பெயர் என்ன?
இப்படி ஒரு கேள்வியை, பிற மதத்தவர்களிடம் கேட்டால், தெளிவாக ஒரே தெய்வத்தை தான் சொல்வார்கள்.

இந்த கேள்விக்கான பதிலை பிற மதங்களில் உள்ளவர்கள் போல,
உலகம் முழுவதும் பரவியுள்ள சனாதன தர்மத்தில் உள்ள  ஹிந்துக்களால் "ஒரே பதிலாக" சொல்ல முடியாது.


"பல தெய்வங்கள் உண்டு" என்று சனாதன வேதமே காட்டுகிறது.

விஷ்ணு, ருத்ரன், வருணன், இந்திரன், ப்ரம்மா, அக்னி" என்று பெயர் சொல்லி அழைக்கிறது.
இதனால்,
ஒரு ஹிந்துவை பார்த்து "உன்னுடைய கடவுள் யார்?" என்று கேட்டால்,
அவன் "முருகன்" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், "விஷ்ணு" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், "காளி" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், "சிவன்" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், எந்த பெயரையும் சொல்லாமல் "பரஞ்ஜோதி" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், எந்த பெயரையும் சொல்லாமல் "ப்ரம்மம்" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், எந்த பெயரையும் சொல்லாமல் "பரமாத்மா" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால்,  பரமாத்மா எங்கும் இருப்பதால், எனக்குள்ளும் இருப்பதால், "நானும் கடவுள், நீயும் கடவுள், அனைத்துமே கடவுள்" என்பான்.

தெய்வத்தை பற்றிய போதிய அறிவோ, ஆராய்ச்சியோ இல்லாததால், பிற மதங்களில் "ஒரே தெய்வம்" தான், என்று சொல்லி முடித்து விடுகிறது.

இப்படி சொல்லி விடுவதால், சந்தேக கேள்வி எழுந்தாலும், 'தெய்வத்தை பற்றி ஆராய்ச்சி செய்யாதே, எதிர் கேள்வி கேட்காதே' என்று கட்டளை இட்டு தடுக்கிறது.

'நான் சொல்லும் தெய்வத்தை நம்பு, இல்லையென்றால் நிரந்தரமாக நரகம் தான் கிடைக்கும்'
என்று பயமுறுத்துகிறது.

500BCல், கௌதம புத்தராலும், மஹாவீரராலும் உருவாக்கப்பட்ட பௌத்த, சமண (ஜைன) மதங்களும் "ஒரே தெய்வம்" என்று தான் சொல்கிறது.

33AD சமயத்தில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துவ மதமும் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது.

அதற்கு பின் வந்த,
இஸ்லாம் (surrender to god) மதமும் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது.

இந்த இரு மதங்களும், யூத மதத்தை உருவாக்கிய "ஆப்ரஹாம் என்ற இப்ராகிம்" அவர்களின் அடிப்படை கொள்கையான "ஒரே கடவுள்" என்பதை கொண்டு உருவாக்கப்பட்டது.
இரு மதங்களும் இவரை மதிக்கிறார்கள்.

யூத மதமும் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது.
மூன்று மதங்களும் "ஒரே தெய்வம்" என்ற கொள்கை கொண்டது என்றாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு "மார்க்கங்களை" பின்பற்றுகிறார்கள்.


மார்க்கம் மாறுபடுவதால், இவர்களுக்குள் பகையும் உண்டு.

"இஸ்ரேல் பாலஸ்தீன" சண்டை உலகம் அறிந்தது.
அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் ஏற்படும் சண்டை உலகம் அறிந்தது.

ஹிந்துக்களின் தர்மத்தில் மேல், வழிபாட்டு முறையின் மேல் இவர்களுக்கு உண்டான வெறுப்பால்,
இந்தியாவுக்குள் 1200 வருடங்கள் நுழைந்த பிற மதங்கள், செய்த அட்டகாசம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இதுவும் உலகம் அறிந்ததே

1200 வருடங்களில்,  பாகிஸ்தான் முதல், மஹாராஷ்டிரா வரை கோவில்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன.
கோவிலுக்குள் உள்ள விக்ரகங்களை உடைத்து, பூஜை செய்ய முடியாதபடி செய்து தன் மத நம்பிக்கையை நிலைநாட்ட 1200 வருடங்கள் கடும் முயற்சி செய்தனர். 
உடைந்த கோவில் விக்ரஹங்களை என்ன செய்வதென்று? என்று தெரியாமல், உடைந்த விக்ரஹங்களை கட்டிக்கொண்டு அழுதனர் ஹிந்துக்கள்.
மீண்டும் கோவிலை கட்டினால், இடித்து விடுவார்களே!! என்ற அச்சத்தில், ஆகம விதிப்படி பூஜைகள் இனி நடத்த முடியாது என்ற நிலையில்,
ஊரில் உள்ள பொது ஜனங்களே தன் வீட்டில் இருந்து பால், துளசி, வில்வம் என்று எடுத்து வந்து, இடிந்து போன அந்த கோவிலிலேயே, மூல விக்ரஹங்களை வைத்து, தன் கையாலேயே அபிஷேகம், நெய்வேத்யங்கள் செய்ய ஆரம்பித்தனர்.
ஹிந்துக்களுக்கு விடிவு பிறக்குமா? என்று அந்த தெய்வத்திடமே பிரார்த்தனை செய்து கொண்டு, 1200 வருடங்கள் பொது மக்கள், ஆத்திரத்தை மனதில் தேக்கி கொண்டு, காத்து கிடந்தனர்.

கோவிலை தரை மட்டம் ஆக்கி, விக்ரஹங்களை எடுத்து கொண்டு சென்ற போது, தாங்களே ஒரு சிலையை வடிவமைத்து, தன்னால் முடிந்த கோவிலை கட்டி, தாங்களே பூஜை செய்ய ஆரம்பித்தனர்.

தமிழ்நாட்டில், மூல விக்ரஹங்களை ப்ராம்மணன் கூட சென்று தொட முடியாது.
ஆகம விதிப்படி நிர்மாணிக்கப்பட்ட இந்த விக்ரஹங்களை ஒரு பரம்பரையில் வந்த அரச்சர்கள் மட்டுமே தொட அனுமதிக்கபட்டனர்.
"மற்ற பிராம்மணன் கூட" தொட முடியாது.


கோவிலே இடிக்கப்பட்டு,
விக்ரஹங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு போன வட இந்தியாவில்,
பொது மக்களே மீண்டும் சிலைகள் செய்து வழிபட நேர்ந்ததால்,
அங்கு ஆகம பூஜைகள் காண முடிவதில்லை. 

பல கோவில்களில் அங்கு அனைவரும் அபிஷேகம் செய்ய அனுமதிப்பதை பார்க்கிறோம்.
ஹிந்துக்கள் "ஹிந்து" என்று சொல்லிக்கொள்ளவும், பொதுவாக அதிக உத்வேகத்துடன், வீரத்துடன், வட இந்தியாவில் இருப்பதற்கு காரணம் இது தான்.
வட இந்தியர்கள் இழந்தது, தென் இந்தியர்களை விட மிக அதிகம்.
1200 வருடங்கள் அனுபவித்த துயரங்கள் மனதில் இருந்து மீள முடியாத துயரங்கள்.

1200 வருட இழப்புகளுக்கு, சுதந்திரம் பெற்றும் நீதி கிடைக்காமல் இருப்பது, பொதுவாக வட இந்தியாவில் இருக்கும் ஹிந்துக்களை உறுத்தி கொண்டே இருக்கிறது என்பது கசப்பான உண்மை.

புராதன கோவில்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, கோடிக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டு, முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் "வட இந்தியர்கள்".

1200 வருடங்களும் கோவில்கள் இடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் "மத்திய இந்தியர்கள்" (கர்நாடக, ஆந்திர). 
ஆனால், மீண்டும் மீண்டும் விஜயநகர அரசால், ஓரளவு கோவில்கள் மீண்டும் கட்டப்பட்டது. 

80 வருடங்கள் மட்டுமே தாக்கப்பட்டு, பின்னர் பெரும்பாலும் விஜயநகர அரசாட்சி நிழலில் தப்பித்தது "தமிழகம்".

இப்படி வட இந்தியா முழுவதும், அனைத்து கோவிலும் இடிக்கப்பட்டு, பூஜை செய்த ப்ராம்மணர்கள் அனைவரும் கொல்லப்பட்டு,
எதிர்த்த க்ஷத்ரிய அரசர்களிடம் தோற்கும் சமயத்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, பிறகு அவர்களை திடீரென்று தாக்கி கொன்று, பெரும் நாசத்தை உண்டு செய்தனர்.
இந்த காரணத்தால், இன்று தெற்கு இந்தியாவில் உள்ள கோவில்களை போல, பூஜை விதிகள் போல, வட இந்தியாவில் பூஜைகளோ, கோவிலின் அமைப்போ இல்லை.

கர்நாடக தேசமும், ஆந்திர தேசமும் விஜயநகர பேரரசால் முடிந்த அளவுக்கு காப்பாற்றப்பட்டது. 
இருந்தாலும்,
கர்நாடகாவில் பல கோவில்கள் பாதி இடிக்கப்பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டு, இருப்பதை பல இடங்களில் இன்றுவரை காணலாம்.

தமிழகம் ஆரம்ப காலத்தில் "கில்ஜி மற்றும் துக்ளக்" ஆட்சியின் போது, தாக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி கோவிலை பிடித்தே விட்டனர் பிற மதத்தினர்.


உள்ளே இருக்கும் சிவ லிங்கத்தை உடைக்க சென்ற போது, கோவில் பட்டர்கள் சுவர் எழுப்பி, ஒரு பெரிய மற்றொரு சிவ லிங்கத்தை வைத்து விட்டனர்.
உள்ளே நுழைந்த கில்ஜி படையினர், ஈட்டி போன்ற ஆயுதங்கள் கொண்டு இடித்து தள்ளினர்.
80 வருடங்கள் பாண்டிய நாடு "மதுரை முதல் ஸ்ரீ ரங்கம் வரை" சிக்கி தவித்தது.
கர்நாடகத்தில் இருந்து, விஜயநகர இளவரசன் கம்பண்ணா படையெடுத்து வந்து, அனைவரையும் துரத்தி, மீண்டும் ஹிந்துக்களை வாழ வைத்தார்.

அந்த இடிக்கப்பட்ட சிவலிங்கம் இன்றும் கோவிலில் வைக்கப்பட்டு நமக்கு நடந்த விபரீதத்தை சொல்கிறது.
ஸ்ரீ ரங்கத்தில் கோவிலை இடிக்க முயற்சித்த போது 13000 வைஷ்ணவர்கள் கொலை செய்யப்பட்டனர். 

ஸ்ரீரங்கநாதர் 80 வருடங்கள் கேரளா, திருப்பதி என்று பல இடங்களில் இருந்து, மீண்டும் ஹிந்துக்கள் ராஜ்யம் அமைந்த பின்னர் ஸ்ரீ ரங்கம் திரும்பினார்.
தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற ஊர்களில் இவர்கள் அடி எடுத்து வைக்கும் முன்னரே, விஜயநகர அரசர்கள் தமிழர்களை காப்பாற்றி விட்டனர்.
அதனால் தான் இன்று வரை தமிழகம் மட்டும் பெரும் பாதிப்பில் இருந்து தப்பித்தது.
பீகாரில் உள்ள நாளந்தா (Nalanda University) என்ற கல்விக்காக இருந்த இடத்தை நாசமாக்கி, அங்கு படித்துக்கொண்டிருந்த பௌத்த, மற்றும் ஹிந்துக்களை கொன்று குவித்தனர்.
இதற்கு தலைமை ஏற்ற பக்தியார் (Bhakthiyar) என்ற இஸ்லாமிய படை தளபதி அங்கேயே தங்கி பிஹார் மற்றும் வங்காள தேசங்களை தாக்கினான்.




அவன் பெயரில் ஏற்பட்ட ஒரு ஊர் இன்றும் பக்தியார்பூர் (Bhakthiyarpur) என்ற பெயரிலேயே உள்ளது.
இன்றைய பிஹார் முதல் அமைச்சர் "நிதிஷ் குமார்" இந்த ஊரில் தான் பிறந்தவர்.
பாரத மக்களை கொன்றவன் பெயரிலேயே, இன்று வரை இந்த ஊரின் பெயர் இருப்பது, பிஹார் மாநிலத்துக்கு அவமானம்.
அன்று உயிருக்கு பயந்து திபெத் போன்ற தேசங்களுக்கு ஓடினார்கள் அங்கிருந்த பௌத்தர்கள்.



"நான் சொல்லும் முறையில் தெய்வத்தை வணங்கினால் தான், உனக்கு சொர்க்கம், இல்லையென்றால் நிரந்தர நரகம் தான் கிடைக்கும்"
என்று அவரவர் மார்க்கங்கள் தீர்மானமாக சொல்வதால்,
'ஒரே கடவுள்' என்ற கொள்கை அனைவருக்கும் இருந்தாலும், 'தன் மார்க்கம் தான் சரியானது' என்று சொல்லி மத சண்டைகள் கிளம்பின.
இஸ்லாம் "ஒரே கடவுள்" என்ற கொள்கை கொண்டதாக இருந்தாலும், அதற்குள்ளும் பல மார்க்கங்களை கொண்டு பிரிந்துள்ளது.
முகம்மது நபி இறந்த பின், ஷியா, சுன்னி என்றும், அதற்குள் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து உள்ளனர்.

ஈரான் நாட்டு ஷியா இஸ்லாமியர்களை கண்டால், அரேபிய சுன்னி முஸ்லிமுக்கு ஆகாது.
ஷியா, சுன்னி முஸ்லிம்கள் உண்மையான முஸ்லீம்கள் இல்லை, அவர்கள் மெக்காவில் ஒரு கல்லை நோக்கி ப்ரார்த்தனை செய்கிறார்கள் என்று, உருவ வழிபாடு எந்த வகையிலும் செய்ய கூடாது என்று மெக்காவையே இடித்து தள்ளவும் முயன்றனர் ஒரு இஸ்லாமிய பிரிவினர் 1979ADல்.
கிறிஸ்தவமும் "ஒரே கடவுள்" என்ற கொள்கை கொண்டதாக இருந்தாலும், அதுவும் பல மார்க்கங்களை கொண்டு பிரிந்துள்ளது.
Protestant, Catholic என்றும், அதற்குள் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து உள்ளனர்.

"ஒரே கடவுள்" தான் என்று சொல்லி 33AD,  570ADகளில் உருவான மதங்களில் கூட பல மார்க்கங்கள் உண்டாகி விட்டன. 

"உருவ வழிபாடு கூடாது" என்று சொல்லும் இவர்களும்,
சிலுவை, ஏசுவின் சிலை, தேர் இழுப்பது, வழிபாடு செய்ய ஏதுவாக மசூதி, சர்ச், அதற்கான ஒழுக்கமான  உடைகள் என்று வைத்து உள்ளனர்.

"ஒரே கடவுள்" என்று சொல்லும் பிற மதங்களில், பல மார்க்கங்கள் உண்டாகி உள்ள போது,
"பல தெய்வங்கள் உண்டு" என்று சொல்லும் சனாதன வேதம், பல மார்க்கங்களை கொண்டிருப்பது ஆச்சர்யம் இல்லையே!!.

சனாதன வேதம் "பல தெய்வங்களை காட்டி, அந்த தெய்வங்களை பூஜிக்கலாம்" என்று சொல்லும் போது, பல மார்க்கங்கள் இருப்பது ஆச்சர்யம் ஒன்றும் இல்லையே !

சனாதன தர்மமான நம் ஹிந்து மதத்தை (வேத மதத்தை) ஆர்வத்தோடு அறிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்.
அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.

பிற மதங்கள் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது.

"ஒரே கடவுள்" என்பது உண்மையா? 
என்று ஹிந்துவிடம் கேட்டாலும் "ஆமாம்" என்று தான் சொல்லுவான்.
அது தான் உண்மையாகவும் இருக்க முடியும், அல்லவா?

"'ஒரே கடவுள்' இந்த உலகை ஆளவில்லை, 'பல கடவுள்கள்' உள்ளார்கள்" என்று சொன்னால், அதை விட மடத்தனம் இருக்கவே இருக்காது.

அப்படி பல கடவுள்கள் இருந்தால்,
கடவுளுக்கு இடையில் 'யார் பெரியவன்?' என்ற சண்டை வருமே? 

சனாதன வேதம்,
16 லட்ச வருடங்கள் கொண்ட க்ருத யுகம்,
12 லட்ச வருடங்கள் கொண்ட த்ரேதா யுகம்,
8 லட்ச வருடங்கள் கொண்ட துவாபர யுகம் தாண்டி,
3102BCEல் கலியுகம் ஆரம்பித்து,
இன்று வரை உள்ளது.
இன்று வரை ஹிந்துக்களாக இருக்கும் உலகத்தில் உள்ள அணைத்து மக்களும், லட்சக்கணக்கான வருடங்களாக பரம்பரை பரம்பரையாக ஹிந்துக்களாக உள்ளனர்.

இன்றைய தேதியில் இந்தியாவில் மட்டுமே 80 கோடி ஹிந்துக்கள் உள்ளோம்.
மேலும்,
ஒவ்வொரு அயல் நாட்டிலும் லட்ச கணக்கான ஹிந்துக்கள், ஒவ்வொரு நாட்டிலும் இன்றும் ஹிந்துவாக உள்ளனர்

கொஞ்சம் கவனித்தால் சனாதன வேதம்
உண்மையில் ஒரே கடவுளை சொல்கிறதா? இல்லை, பல கடவுளை சொல்கிறதா? என்று புரியும்.

"ஒரே ஈஸ்வரன் தான்" என்று வேதமே சொல்கிறது.

"பல தெய்வங்கள் இருக்கிறார்கள்" என்று நினைப்பதே, விஷயம் தெரியாத குழந்தையின் புத்தியை போன்றது.
வெளியோட்டமாக பார்த்து விட்டு, தப்பு தப்பாக அனுமானம் செய்ய கூடாது ஹிந்துக்கள்.

பல தெய்வங்கள் முதலில் எப்படி இருக்க முடியும்?
ஒரே அந்தஸ்து உடைய, ஒரே பலம் பொருந்தியவர்களாக பல தெய்வங்கள் உண்மையில் இருந்தால்,
ஒரு தெய்வம் படைத்த உலகத்தை, இன்னொரு தெய்வம் அழித்து விடுமே!!

தெய்வங்களுக்குள் சண்டை அல்லவா வந்து விடும்?!!.

மேலும்,
ஒரு தெய்வம், இன்னொரு தெய்வத்தை பற்றி பொறாமை படும் என்றல்லவா சொல்ல வேண்டி இருக்கும்.

"வேதத்தில் சொல்லியுள்ள தெய்வங்களுக்குள் சண்டை இல்லை" என்பது நம் கோவில்களை பார்த்தாலே தெரியும்.
சிதம்பரம் "நடராஜர்" கோவிலில் "கோவிந்தராஜ பெருமாளாக" தானும் உள்ளேயே இருக்கிறார்.

பெருமாள் கோவிலில் "சிவபெருமான், விநாயகர்" என்று இருக்கிறார்கள்.
அழகர் கோவிலில், அழகர் பெருமாளும், அழகர் மலையில், முருக பெருமானும் உள்ளனர்.
தன் பக்தன் ஹநுமானுக்கு ஏற்பட்ட கோவிலில் கூட, பகையே இல்லாமல் ராமர் தனக்கு ஒரு சிறு சந்நிதியில் இருக்கிறார்.

ஆக,
ஒரு தெய்வம் பெரிய தெய்வமாக நின்று, மற்ற தெய்வங்கள் அந்த தெய்வத்துக்கு அடங்கி நடக்கிறது என்று புரிந்து கொண்டாலே, ஹிந்து மதம் ஒரே கடவுளை தான் சொல்கிறது என்று புரியும்
ஒரு அலுவலகத்தில், பல வேலையாட்கள் சேர்ந்து பணி செய்கிறார்கள்.

இவர்கள் யாவருக்கும் "ஒரு முதலாளி" இருந்து கொண்டு, இவர்களை கண்காணித்து, அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து, அலுவலகத்தை ஒழுங்காக நடத்தி செல்கிறார்.
அதே போல, பல தெய்வங்கள் வேதத்தில் சொல்லப்பட்டாலும்,
முதலாளி ஒருவனே. 
ஒரே கடவுளே. ஒரே பரமாத்மாவே என்று வேதத்தை கற்று உணர்ந்தவர்கள் அறிகிறார்கள்.

வேதத்தில் பரமாத்மாவின் பெயர் என்ன? என்று கேட்கும் போது,
"பரப்ரம்மம்" என்று சொல்கிறது.

ப்ரம்மமாகிய அந்த பரமாத்மா "பரஞ்ஜோதி" ரூபமானவர் என்றும் ஜோதி ஸ்வரூபன் என்று சொல்கிறது.

ஆக, யார் கடவுள்? என்று ஹிந்துவை கேட்டால்,
'"பரமாத்மா" என்றும் "ப்ரம்மம்" என்றும், 
"பரஞ்ஜோதி"யாக இருப்பவரே என் கடவுள்' என்று சொல்லலாம்.

"ஒரே கடவுள் தான்" என்று சனாதன வேதம் சொல்கிறது.
விஷயம் தெரியாத குழந்தையின் புத்தியை போல, வெளியோட்டமாக பார்த்து விட்டு, தவறாக அனுமானம் செய்ய கூடாது ஹிந்துக்கள்.
அந்த ப்ரம்மம் யார்? என்ற கேள்விக்கு, அவர் "மகாலக்ஷ்மியின் கணவர்" என்று தெளிவாக வேதமே சொல்லி காட்டுகிறது.  Click Here

நாராயணனே பரப்ரம்மம் என்று வேதமே காட்டி விடுகிறது.
அந்தர்யாமியாக அனைவரிடத்திலும் விஷ்ணுவாக வியாபித்து உள்ள பரப்ரம்மம், என்று பார்க்கும்போது அவரே ருத்ரனாக தோன்றினார்.
அவரே பிரம்மாவை படைத்தார்.
தேவர்களை படைத்தார்.
நம்மையும் படைத்தார்.

அனைவருக்குள்ளும் ப்ரம்மமே இருப்பதால், யாரை பூஜித்தாலும், அது நாராயணனை தான் போய்  சேருகிறது.
இதையே ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையிலும் சொல்கிறார்.
ஆகாஸாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்,
சர்வ தேவா நமஸ்கார: கேசவன் ப்ரதி கச்சதி.

"எப்படி ஆகாயத்தில் இருந்து விழுந்து, பல நதிகளாக ஓடி வரும் நீர், கடைசியில் ஒரே இடமான கடலை போய்  சேருமோ,
அதுபோல,
எந்த தேவதைகளை நாம் வணங்கினாலும், அந்த தேவதைகள் நம் வணக்கத்தை முதலாளியான நாராயணன் பாதத்தில் சமர்ப்பித்து, பலனை அவரிடம் பெற்று, தான் தருவது போல, நமக்கு தந்து விடுகிறார்கள்."

இந்த தர்மம் யுக யுகங்களாக உலகம் எங்கும் எப்பொழுதும் உள்ளது.

ஹிந்து தர்மத்தின் பல கோட்பாடுகள், புதிதாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களில் பயன்படுத்தபடுகிறது.

ஒரே கடவுள் தான். அவரே ப்ரம்மம் என்று சனாதன தர்மம் சொல்வதை தான், பிறமதங்கள் சொல்கிறது.

அத்வைத மார்க்கம் ஒரே கடவுள் என்று தானே சொல்கிறது.
குகைகளில், மலைகளில் தனியாக அமர்ந்து ரிஷிகள் அந்த பரமாத்மாவை தியானித்து தவம் செய்தனர், என்று ஹிந்துக்கள் கேள்விப்பட்டது இல்லையா?
அவர்கள் கோவில் கோவிலாக அலைந்தார்களா?
கையில் விக்கிரகம் வைத்து பூஜித்தார்களா? இல்லையே!!
இந்த மார்க்கத்தை தானே "அத்வைத" மார்க்கம் என்று காட்டினார் ஆதி சங்கரர்.
ஹிந்துக்கள் சற்று சுய சிந்தனையோடு யோசிக்க வேண்டும்.


சனாதன வேதத்தில் இல்லாத மார்க்கத்தை யாரும் புதிதாக காட்டிவிடவில்லை.
அன்பு காட்டு, இரக்கம் காட்டு, உதவி செய், என்று சில உருவாக்கப்பட்ட மதங்கள் சொல்கின்றன.
இந்த அறிவுரையை நம் தாய், தந்தை, குருவே சொல்கிறார்களே!!

"சந்நியாசிகள், துறவு கொண்டு வாழ்பவர்கள்" இந்த மார்க்கத்தை தானே கடைப்பிடிக்கிறார்கள்!!.

கடவுளை அடைய இதுவும் ஒரு மார்க்கம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்.
உருவாக்கப்பட்ட மதங்களோ, "கடவுளை அடைய இது ஒன்றே மார்க்கம்" என்று சொல்லி மக்களை கஷ்டப்படுத்துகிறது.

சந்யாசியாக வாழ நினைப்பவன், "சந்யாஸ மார்க்கத்தை" எடுத்து கொண்டு, தெய்வத்தை அடையலாம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்..

ஒரே கடவுள், அவரே பரமாத்மா, அவரே பரஞ்சோதி, அவரே எல்லாமுமாக இருக்கிறார் என்று வாழ நினைப்பவன்,
"அத்வைத மார்க்கத்தை" எடுத்து கொண்டு, தெய்வத்தை அடையலாம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்...

ஒரே கடவுள், அவரே பரமாத்மா, அவரே பரஞ்சோதி, அவரே நாராயணன், அவரே சிவன், அவரே முருகன், அவரே காளி, அவரே விநாயகன். நாமெல்லாம் சாதாரண ஜீவன் தான். அந்த பரமாத்மா தான் இந்த உலகையும், என்னையும் படைத்தார், என்று வாழ நினைப்பவன்,
"த்வைத மார்க்கத்தை" எடுத்து கொண்டு, தெய்வத்தை அடையலாம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்..

ஒரே கடவுள் தான். அவரே நாராயணன். எல்லாம் வல்லவனாக இருப்பதால், அந்த பரமாத்மாவே ஜீவாத்மாவாகவும் கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல, சிவனாகவும், இந்திரனாகவும், முருகனாகவும், உலகில் இருக்கும் சாதாரண ஜீவனாகவும் உள்ளது. பிரித்து பார்த்தால் தனி தனி போல தெரிந்தாலும், உண்மையில் ஒரே பரமாத்மா தன் சக்தியால் இப்படி வெவ்வேறாக தெரிகிறார் என்று வாழ நினைப்பவன், விஷிஷ்ட அத்வைத மார்க்கத்தை எடுத்து கொண்டு, தெய்வத்தை அடையலாம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்...

பிற மதங்கள் சொல்லும் "ஒரே கடவுள்" சித்தாந்தம் நமக்கு புதிதல்ல.

ஒரே கடவுள் என்று சொல்லும் அத்வைத மார்க்கத்தை போல தான் இஸ்லாமிய மார்க்கமும் சொல்கிறது.
கடவுள் அரூபமானவர் என்று இருவருமே சொல்கிறார்கள்.

அன்பு காட்டு, இரக்கம் காட்டு, உதவி செய் என்று சொல்லும் சந்யாஸ மார்க்கத்தை போல பௌத்த, ஜைன, கிறிஸ்தவ மார்க்கமும் சொல்கிறது.

"தெய்வ சிந்தனை உள்ள மனிதனாக தான் வாழ வேண்டும்" என்பது தான் வேதத்தின் நோக்கம்.

"தெய்வ சிந்தனை உனக்கு, ப்ரம்மமாக, அரூபமா வழிபட்டால் தான்  பிடிக்கும் என்றால், அப்படியே வழிபடு" என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்..

"தெய்வ சிந்தனை உனக்கு, முருகனாக வழிபட்டால் தான் பிடிக்கும் என்றால், அப்படியே வழிபடு" என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.

"தெய்வ சிந்தனை உனக்கு, சிவனாக வழிபட்டால் தான்  பிடிக்கும் என்றால், அப்படியே வழிபடு" என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.

"தெய்வ சிந்தனை உனக்கு, யாரை பார்த்தாலும் வருகிறது என்றால், அப்படியே வழிபடு" என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.

"தெய்வ சிந்தனை தான் முக்கியமே" தவிர, மார்க்கங்கள் எப்படி இருந்தாலும், அந்த ப்ரம்மமாகிய நாராயணன், நாம் வழிபடும் தெய்வங்கள் மூலம் பலன் தந்து, மெதுவாக தன் பக்கம் இழுத்துவிடுகிறார்.

நாராயணனை நேரிடையாக வழிபடுபவன், மகா பாக்கியசாலி.
பிரம்மத்தை நேரிடையாக உபாசிக்கும் புண்ணியம் செய்தவர்கள் அவர்கள். இவர்கள் மோக்ஷத்திற்கு அருகில் நிற்பவர்கள்.
"இறப்பு பிறப்பு என்ற சம்சார சூழலில் இருந்து தப்பிக்க" வாய்ப்பு உள்ளவர்கள்.

"வேதம்" என்ற சொல் அழகாக இருப்பதால் அதை பிற மதத்தவர்கள் தான் எழுதிய புத்தகங்களுக்கு வைத்து கொள்கின்றனர் என்று பார்க்கிறோம்.

"மனுவில் இருந்து மனித படைப்புகள் உருவானது" என்று நம் மதம் சொன்னால், அதை கொண்டே, ஆங்கிலத்தில் "Man" என்றே பயன்படுத்துகின்றனர். மனிதனை "Man"  என்று சொல்லாமல், "Adam" என்று சொல்லி இருக்கலாமே பிற மதத்தவர்கள்.

பரஞ்சோதி என்று ப்ரம்மத்தை குறிப்பிடும் வார்த்தையை, ஆங்கிலத்தில் "holy spirit" என்று சொல்லி கடவுளை குறிப்பிடுகின்றனர்.
ஹிந்து மாதத்தில் இருந்து தானே அனைத்தும் திருடப்பட்டு உள்ளது.


சனாதன தர்மத்தில் 12 மாதங்கள் என்று சொன்னால், அதையே அறிவியல் பூர்வமாக உண்மை என்று ஒப்புக்கொண்டு ஆங்கில மாதங்களும் 12 என்று ஆக்கி விட்டனர்.
"உலகம் உருண்டை" என்று வராஹ அவதாரத்தில் காட்டி உள்ளார் என்று சொல்லியும், தான் தோன்றி தனமாக "உலகம் தட்டை" என்று பிடிவாதம் செய்து, கலிலியோவை சர்ச்சில் மன்னிப்பு கேட்க வைத்து, சித்ரவதை செய்தனர்.
அறிவியல் மூலம், உலகம் உருண்டை தான் என்றதும் அமைதி ஆகினர்.
நவ க்ரஹங்கள் உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு, என்று சொல்லி, "செவ்வாய் கிரகம் சிவப்பானது என்று சிவப்பு துணி கட்டி வழிப்பட்டதை" ஒப்புக்கொள்ளாமல் இருந்து, கடைசியில் செவ்வாய் கிரகம் (mars) உண்மையில் சிவப்பு கிரஹம் (red planet) என்று இன்று ஒப்புக்கொள்கிறது.
ஒரே கடவுள் என்று சொல்லியும் பல விதமாக பிரிந்து உள்ளனர் பிற மதத்தினர்...

இயற்கை கூட ஒரே மாதிரி இல்லாத போது, மனிதனுக்கு மட்டும் ஒரே மார்க்கம் என்று சொல்வதே அபத்தம்.

இந்த விசாலமான புத்தி, சனாதன தர்மத்தில் உள்ள நமக்கு உள்ளது..

"மனிதனின் தெய்வ சிந்தனை வளர்ப்பதே" நம் சனாதன தர்மத்தின் நோக்கம்.

"எல்லாம்வல்ல கடவுள்" என்று சொல்லிவிட்டு,
  • அவரால் இப்படி வர முடியாது, அப்படி வர முடியாது,
  • இந்த மார்க்கம் வழி வந்தால் தெய்வ சிந்தனை ஏற்படும், 
  • இன்னொரு மார்க்கம் வழி வந்தால் தெய்வ சிந்தனை ஏற்படாது 

என்று சொல்வதே, எல்லாம் வல்ல இறைவனுக்கு அவமானம்.

இந்த விசால புத்தி, ஹிந்துக்களிடம் இருப்பதால் தான் மற்ற மதங்கள் "யாரையோ தெய்வம்" என்று சொன்னாலும் மதிக்கின்றனர்.
உனக்கு தெய்வம் எப்படி இருந்தால் பிடிக்கும்?
"எனக்கு கம்பீரமான ஒரு வீரன் போல இருந்தால் தான் பிடிக்கும்."
பரமாத்மா ஸ்ரீ ராமராக வந்தார். அவரை பார்த்தால் மிகவும்  பிடிக்கிறது.
அப்படியென்றால், ஸ்ரீ ராமரையே வணங்கு என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.
"எனக்கு குழந்தையாக இருக்க வேண்டும், நான் குண்டு, அதனால் என் தெய்வமும் குண்டாக இருக்க வேண்டும்."
அப்படியென்றால், பிள்ளையாரை வணங்கு என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.
"எனக்கு தெய்வத்தை உருவமாக வழிபட ஆசையில்லை.."
அப்படியென்றால், நீ தியானம், யோகம் செய்து, வணங்கு என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்..

பரமாத்மா எந்த வழிபாட்டையும் ஏற்கும் பலம் உள்ளவர் என்பதால், நாராயணனை வணங்கினால் தான் உனக்கு சுவர்க்கம், இல்லையென்றால் நரகம் என்று சொல்வதே இல்லை.
சுவர்க்கம், நரகம் உன் பாவ புண்ணியத்தை பொறுத்தது என்று சொல்கிறது ஹிந்து மதம்.

ஹிந்துக்களின் பெருமை அளவிட முடியாதது.
வெளிநாட்டவர்கள் கூட ஹிந்துவாக வாழ ஆசைப்படுகிறார்கள்.

HARE RAMA HARE KRISHNA  - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 


sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 







sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka