Followers

Search Here...

Showing posts with label சமயத்தில். Show all posts
Showing posts with label சமயத்தில். Show all posts

Wednesday 27 December 2017

மஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே.

மஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat


ஸ்ரீ கிருஷ்ணரின் அரசாட்சி புரிந்த "துவாரகை" என்ற த்வாரவதி தேசம், குஜராத்தில் உள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்ம நண்பனான சுதாமா என்ற குசேலன், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து, ஸ்ரீ கிருஷ்ணர் கடலில் அமைத்திருந்த துவாரகை நகருக்கு நடந்தே சென்றார்.
ஏழையாக இருந்த குசேலனை தன் அனுக்ரஹித்தினால் கோடீஸ்வரன் ஆக்கினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

கம்சன் கொல்லப்பட்டான் என்ற ஆத்திரத்தில், மகத அரசன் 'ஜராசந்தன்' (Jamshedpur, Jarkhand near Bihar), ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் மதுராவை (உத்திர பிரதேசம்) தாக்கினான்.
ஸ்ரீ கிருஷ்ணர் 'ஜராசந்தன்' மற்றும் அவன் படையை அடித்து துரத்தினார்.

இதே போல, ஜராசந்தன் 17 முறை தொடர்ந்து படை எடுத்துக்கொண்டே இருந்தான். 
ஜராசந்தனை கொலை செய்ய எண்ணமில்லாத ஸ்ரீ கிருஷ்ணர், மதுரா நகர 5 லட்சம் யாதவ மக்களை மாய ஸ்ருஷ்டி மூலம், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து, அனைத்து மக்களையும் ஒரே ராத்திரியில் இடம் மாற்றினார்.

இந்த மாயை புரியாத ஜராசந்தன், மீண்டும் படை எடுக்க வந்த போது மதுரா நகரமே காலி ஆகி போயிருந்ததை கண்டு தேடி கொண்டே இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆணைப்படி, தேவலோகத்தில் இருக்கும் விஸ்வகர்மா ஒரே நாளில், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து கொடுத்தார்.




துவாரகை நகரம் சுற்றியும் பெரிய மதில் சுவருடன், நான்கு வாசல் கொண்டும் அமைக்கப்பட்டது.

நகரத்தின் வீடுகள் வரிசையாக அமைக்கப்பட்டு, நகரத்தின் வீடுகள் அனைத்தும் தங்கத்தால் இழைக்கப்பட்டு, வான் உயர இருந்தது.
ஒன்பது லட்சம் மாளிகைகள் அமைக்கப்பட்டன.

நகரின் தெருக்கள் வெயிலில் சூடாமல் இருக்க, தண்ணீர் தானாக தெளித்துக் கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தன.

பெரிய பெரிய பாய்கள் கொண்டு, வெயிலில் மக்கள் பாதிக்காதவாறு நகர வீதிகளில் நிழலுக்கு கட்டப்பட்டு இருந்தன.

ஸ்ரீ கிருஷ்ணரின் மாளிகை தனியாக, மிக பிரம்மாண்டமாக இருந்தது.

ஸ்ரீ கிருஷ்ணரின் பத்தினிகளுக்கு அதி ஆச்சர்யமாக 60,000 மாளிகைகள் கட்டப்பட்டு இருந்தன.

நகரம் முழுவதும் பொன்னால், ரத்தினங்களால் ஜொலித்தது.
நகரம் தோட்டம், ஓடை, பறவைகள் என்று இயற்கை வளத்துடன் நிறைந்து இருந்தது.

ஒரு சமயம், அசுரன் ஒருவன் தேவர்களையும் அடக்கி, இவர்கள் யாராலும் வெல்ல முடியாதபடி வரம்பெற்று, பூமியில் பிறந்து அட்டகாசம் செய்து வந்தான்.
இவன் ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசத்தில் இருந்து கொண்டு அசுரர் குலத்தை மனித அவதாரம் செய்து பெரும் அட்டகாசம் செய்து வந்தான்.

ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசம் இன்றைய 'அஸ்ஸாம்' தேசம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் உதவியை சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் வந்து நாட, நரகாசுரனை அழிக்க துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிஸம் சென்றார்.

இந்த சமயத்தில், சேடி தேச (மத்யபிரதேச) அரசன் சிசுபாலன், தன் படையுடன் துவாரகை சென்று, துவாரகை நகரை தீ வைத்து கொளுத்தினான்.

நரகாசுரனை கொன்று திரும்பிய ஸ்ரீ கிருஷ்ணர், சிசுபாலனின் இந்த குற்றத்தையும் பொறுத்தார்.


நரகாசுரனின் வேண்டுதல் ஏற்று, அவன் இறந்த நாள், அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்ட பட்டதால், தேவர்களும் மகிழ்ந்ததால், அந்த நாள், தீபாவளி என்று இன்றுவரை கொண்டாடப்படுகிறது.

விதர்ப தேசத்தில் (மகாராஷ்டிரா) ருக்மிணி வளர்ந்து வந்தாள். 
ருக்மிணி, குழந்தை முதல் இன்று துவாரகை வரை ஸ்ரீ கிருஷ்ணர் என்ன செய்தார், எப்படி இருப்பார் என்று, அவரைப்பற்றி அறிந்து இருந்தாள்.

'மணந்தால், இவரை தான் மணக்க வேண்டும்' என்று நினைத்தாள். ருக்மிணியின் தந்தை சம்மதித்தார்.

ருக்மிணியின் சகோதரன் பெயர் 'ருக்மி'.
இவன், தன் தங்கையை சேடி அரசன் சிசுபாலனுக்கு கொடுப்பது என்று முடிவு கட்டி, திருமணத்திற்கும் ஏற்பாடு செய்தான்.

மனம் வெதும்பிய ருக்மினி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு கடிதம் ஒன்றை ஒரு யோகியிடம் கொடுத்து, 'எப்படியாவது வந்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று எழுதி அனுப்பினாள்.

ஸ்ரீ கிருஷ்ணர், விதர்ப தேசம் வந்து, ஜராசந்தன், ருக்மி போன்றோர் பார்க்க, ருக்மிணியை தூக்கி சென்றார்.

ருக்மி கோபத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, சண்டையில் தோற்றான் ருக்மி.

இவனை கொல்வதா? என்று நினைத்த ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மிணியின் அண்ணன் என்பதால், உயிரோடு விட தீர்மானித்தார்.

ருக்மிணிக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வெகு விமரிசையாக திருமணம் துவாரகையில் நடந்தது.

மஹா பாரத சமயத்தில், 13 வருடம் பாண்டவர்கள் நாட்டை விட்டு வனவாசம் இருந்த போது, இந்த தேசங்களில் சில காலம் இருந்தனர்.

'துர்வாசர்' இந்த குஜராத் தேசத்தில் பல வருடங்கள் இருந்தார்.
இந்த சமயத்தில், பாண்டவர்களை பார்க்க வந்தார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் அணுகிரஹத்தினால், இவரால் வர இருந்த இடையுறை சமாளித்தனர்.

வனவாச சமயத்தில், 13 வருடமும், பாண்டவர்களின் பணியாளர்கள் துவாரகையில் தங்கி இருந்தனர்.

ஸ்ரீ கிருஷ்ணர், பலராமர் தன் அவதாரத்தை முடித்த பின், துவாரகை தேசத்தை கடல் உள்வாங்கிக் கொண்டது.

அர்ஜுனன் தன் இறுதி யாத்திரையாக புறப்பட்ட போது, ஸ்ரீ கிருஷ்ணர் இருந்த துவாரகை கடலில் மூழ்கி இருக்கும் இடத்தை பார்த்து விட்டு, இமாலய பர்வதம் நோக்கி புறப்பட்டார்.


ஸ்யமந்தக மணி, ஸ்ரீ கிருஷ்ணர் சத்யபாமாவை மணம் செய்து கொண்ட சரித்திரம் தெரிந்து கொள்ள... Click  படிக்கவும்

மகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka

மகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka




"கர்நாடக தேசம்", "கிஷ்கிந்த தேசம்" (Hampi) , "மகிஷ தேசம்" (Mysuru) ஆகிய தேசங்கள், இன்று "கர்நாடகா" என்று அழைக்கப்படுகிறது.
ராமாயண காலத்தில், ஸ்ரீ ராமர் கால் பட்ட இடம் இந்த கர்நாடகா தேசம். சபரியையும், பின் கிஷ்கிந்தை என்ற ஹம்பி நகரில், ஹனுமனையும், சுக்ரீவனையும் இங்கு தான் கண்டார்.
நாகரீகம் அறியாத, காட்டுவாசி போல வாழும் "சபரி" என்பவள், ஒரு நாள் மதங்க முனிவரை "பம்பா நதி என்ற துங்கபத்ரா நதி" அருகே கண்டாள்.

அவரையே தன் குருவாக ஏற்று, பார்த்த நாளில் இருந்து அவருக்கு சேவை செய்ய ஆரம்பித்தாள். 
அவர் ஆசிரமத்தை கூட்டி பெருக்குவது முதல் பூ, பழம் கொண்டு வந்து பூஜைக்கு கொடுப்பது வரை விடாது செய்து வந்தாள்.

ஒரு நாள், மதங்க முனிவர், தான் இந்த உலகத்தை விட்டு செல்லப்போவதாக சொல்லி, தன் சிஷ்யர்களை கூப்பிட்டு, 
யார் யாருக்கு என்ன வரம் வேண்டுமோ அதை தன் தவ வலிமையால் அனுக்கிரகம் செய்து கொண்டிருந்தார்.





சபரியை பார்த்து, 'உனக்கு என்ன வேண்டும்?' என்றார்.
எதை கேட்பது? என்று அறியாதவள், தன்னை விட்டு குரு செல்ல போகிறாரே என்ற கவலையில் அழுதாள்.

இவளின் உண்மையான குரு பக்தியை கண்டு மனம் குளிர்ந்த மதங்கர், "உன்னை பார்க்க அந்த பரமாத்மா ஸ்ரீ ராமராக வருவார். அவரை தரிசித்த பின், நீயும் பரலோகம் வந்து, என்னை அங்கு தரிசிக்கலாம்" என்று அனுக்கிரகம் செய்தார்.

அன்று முதல், காலை எழுந்து ஆசிரமத்தை கூட்டி பெருக்கி, கோலம் போட்டு, காய் கனிகளை பறித்து ஸ்ரீ ராமருக்காக காத்து இருப்பாள்.

இப்படியே பல வருடங்கள் ஆகி, கிழவி ஆகி விட்டாள் சபரி. 
இருந்தும் நம்பிக்கை இழக்கவில்லை. 
குரு வாக்கியத்தை சத்தியம் என்று திடமாக நம்பினால். உண்மையான சிஷ்யன் இப்படி தானே இருப்பான். 
பூ பழம் பறிப்பதை ஒரு நாளும் நம்பிக்கை இழந்து நிறுத்தவில்லை.





ஒரு நாள், ஸ்ரீ ராமரும், லக்ஷ்மணரும் சேர்ந்து சபரியை பார்க்க, அவள் ஆசிரமம் தேடி வந்தனர்.
சபரி வரவேற்று, ஸ்ரீ ராமருக்கு கால் பிடித்து விட்டு, அன்று பறித்து வைத்திருந்த பழங்கள் சாப்பிட கொடுத்தாள். லக்ஷ்மணருக்கும் கொடுத்தாள்.
யாரிடமும் கை நீட்டி வாங்கி பழக்கமில்லாத ஸ்ரீ ராமர், சபரியின் அன்பில் தன்னை மறந்தார். 
அவள் கொடுக்கும் பழங்களை கை நீட்டி வாங்கி சுவைத்தார். 
ஸ்ரீ ராமர் கண் முன்னே, தன் தேகத்தை யோகத்தினால் பஸ்பமாக்கி, ஜ்யோதி ரூபமாக, தன் குருவை அடைந்தாள் சபரி
கர்நாடக தேசத்தில் நடந்த சரித்திரம்.

மஹாபாரத சமயத்தில், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக, "சகாதேவன்" திக்விஜயம் செய்தார்.

கர்நாடக தேச அரசர்கள், சகாதேவன் பெயர் சொல்லி வந்த அவர் படைத்தலைவனுக்கே பயந்து, தோல்வியை ஒப்புக்கொண்டனர். 



ராஜசுய யாகத்திற்கு பல சன்மானங்கள் வழங்கினர்.
சகாதேவன் கிஷ்கிந்தை தேசத்தில் 7 நாள் கடும் போர் புரிந்தார். 
இறுதியில், கிஷ்கிந்தை தேச அரசர்கள் (Hampi) சகாதேவனின் போர் திறனை கண்டு ஆச்சர்யப்பட்டனர். 
இறுதியில், மகிழ்ச்சியுடன் முத்தும், பொன்னும் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்கு அளித்தனர்.
மகிஷ தேசம் (Mysuru) ப்ராம்மணர்கள் இல்லாத தேசமாக இருந்தது.

கர்ணன், இந்த தேசத்தில் உள்ளவர்களை "கலாச்சாரம் இல்லாதவர்கள், வாலிகர்கள்" என்றான்.

க்ஷத்ரியர்களாக இருந்த இவர்கள் சூத்ரனை போல வேலை செய்ய ஆரம்பித்ததால், கலாச்சாரத்தை இழந்தவர்கள் என்று இகழ்ந்தான்.

மகிஷ தேசம் என்பது, இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது.

மஹாபாரத சமயத்தில், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக, அர்ஜுனனும் திக்விஜயம் செய்தார்.





மகிஷ தேச அரசர்களை அர்ஜுனன் போரில் தோற்கடித்தான். 
இதை தொடர்ந்து, குஜராத்தில் உள்ள சௌராஷ்டிர தேசம் நோக்கி திக்விஜயம் செய்தார்.

மஹாபாரத போர் முடிந்த பின்னர், யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகம் செய்து பாரத தேச சக்கரவர்த்தி ஆவதற்கு, மீண்டும் அர்ஜுனன் இந்த கர்நாடக தேசம் திக்விஜயம் செய்து அனைத்தையும் கைப்பற்றினார்.

பாண்டவர்களின் சொத்தாக ஆனது இந்த தேசம்

மஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது?

மஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது?




"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்" என்று அறியப்பட்ட பாரத தேசங்கள், இன்று முஸ்லீம் தேசமாக பாகிஸ்தான் என்ற பெயரில் பிரிக்கப்பட்டது.
ராமாயண காலத்தில், கைகேயி பிறந்த ஊர் "கேகேய" தேசம்.
இந்த தேசம் இன்று பாகிஸ்தானில் உள்ளது.

ராமர் காட்டுக்கு சென்ற துக்கத்தில், கோசல மன்னன் (உத்திரபிரதேசம்) "தசரதன்" உயிர் பிரிந்தது.
அந்த சமயம், 'பரதனும், சத்ருகனனும்' கேகேய தேசத்தில் இருந்தனர். அங்கிருந்து புறப்பட்டு கோசல தேசம் (UP, INDIA) வந்தார் பரதன்.

ராமரின் தம்பி பரதன், "தக்ஷஷிலா" மற்றும் "புருஷபுரா" என்ற இரண்டு முக்கியமான நகரங்களை கேகேய தேசத்திற்கு அருகில் உருவாக்கினார்.
இந்த இரண்டு நகரங்களும் (Taxila, Peshawar) கூட, இன்று பாகிஸ்தான் பகுதியில் தான் உள்ளது.
பரதன் அமைத்த "தக்ஷஷிலா" என்ற நகரம் தக்ஷிலா (Taxila) என்றும், 
பரதன் அமைத்த "புருஷபுரா" என்ற நகரம் பெஷாவர் (Peshawar) என்றும்,
இன்று பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்களால் ஆக்ரமிக்கப்பட்டு விட்டது.
முஸ்லீம் நகரம் போல பெயர் மாற்றப்பட்டு, இன்று அழைக்கப்படுகிறது.




மதம் மாறுபவர்கள் செய்யும் முதல் வேலையும் இதுவே.
சனாதன தர்மம் இருந்த தேசம், இன்று முஸ்லீம் தேசமாக ஆனது துரத்ரிஷ்டமே !!

வியாசர் எழுதிய மஹாபாரத்தை, "வைசம்பாயனர்" என்ற அவரது சிஷ்யர் கேட்டார்.
அதனை, இப்போதுள்ள இந்த தக்ஷிலா (Taxila) என்ற நகரில் தான், அர்ஜுனனின் குடும்ப வாரிசான "ஜனமேஐயன்" கேட்டார். 
முஸ்லீம் நாடாகி போன இந்த பாகிஸ்தானில், பல சரித்திரங்கள் ஹிந்துக்கள் இழந்து விட்டோம்.
ஸ்ரீ ராமரின் புதல்வர்களில், லவன் உருவாக்கிய நகரம் "லவபுறம்", இன்று லாகூர் (lahore) என்று பெயர் மாற்றப்பட்டு, முஸ்லீம் நாடாக பிரித்து கொடுத்து விட்டோம்.

ராமரின் தம்பி 'பரதன்' கட்டிய நகரமும், அவர் பிள்ளை 'லவன்' கட்டிய நகரமும் முஸ்லீம் தேசமாக காரணம் ஆனோம்.

ஸ்ரீ ராமர் பிறந்த அயோத்தியிலும் அவருக்கான மரியாதை செய்ய ஹிந்துக்கள் தவறுகிறோம்.




ஹிந்துக்கள் கொஞ்சம் சரித்திரத்தை உணர்ந்து, இழந்ததை அறிந்து, இனியாவது இருப்பதை இழக்காமல் இருக்க வேண்டும்.

ஹிந்துக்களாக இருந்து பின் மதம் மாறிய கூட்டங்களே, பெரும்பாலும் ஹிந்துக்களுக்கு தடையாக இருந்துள்ளனர்.

அமைதியாக இருத்தல், சம தர்மம் பேசுதல், இவை தான் ஹிந்துக்கள் லட்சணம் என்று பிற போலி மதங்களில் உள்ளவர்கள் எண்ணம். 
இதுவே, மத மாற்றம் செய்ய ஹிந்துக்களே கொடுக்கும் வாய்ப்பு.

இப்படி மதம் மாறிய கூட்டமே, இன்றைய பாகிஸ்தான்.

இந்த மதம் மாறிய மனிதர்களே, ஹிந்துக்களின் கலாச்சாரத்தை அழிப்பவர்கள் என்பது கவனிக்க வேண்டிய உண்மை.





'பரதன்' உருவாக்கிய "காந்தாரம், தக்ஷிலா, புருஷபுரா",
ஸ்ரீ ராமரின் புதல்வன் 'லவன்' உருவாக்கிய "லவனபுரி",
'லக்ஷ்மணன்'  உருவாக்கிய "லக்ஷ்மனபுரா", ஆகிய நகரங்களை, 
இந்த மதம் மாறிய கூட்டத்திற்காக, சம தர்மம் பேசும் ஹிந்துக்கள் தானம் கொடுத்து விட்டனர்.

சரித்திர அறிவு இல்லாததே இதற்கு காரணம்.

உண்மையான ஊர் பெயரும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.

காந்தாரம் 'Gandahar, Afghanistan' ஆனது.

தக்ஷிலா 'Taxila, Pakistan' ஆனது.

லவனபுரி 'Lahore, Pakistan'' ஆனது.

லக்ஷ்மனபுரா 'Lucknow, India' ஆனது,

புருஷபுரா 'Peshawar, Pakistan' ஆனது.
மகா கொடிய பாம்புகள் இருந்த இடமாக இருந்தது "தக்ஷஷிலா". தேவலோக நாகங்கள் கூட இங்கு வாசம் செய்தன. 
தன் தந்தை பரீக்ஷித் பாம்பு கடித்து மறைந்தார் என்ற கோபத்தில், இந்த தக்ஷஷிலா என்ற இடத்தில் தான் சர்ப்ப யாகம் செய்து கொடும் விஷம் கொண்ட கோடிக்கணக்கான பாம்புகளை கொன்றான்.




தனிப்பட்ட விரோதத்திற்காக பாம்பு வர்க்கமே இருக்க கூடாது என்று நினைப்பது தவறு என்று உணர்ந்து, பின் கோபம் தணிந்து, யாகத்தை பாதியில் நிறுத்திக்கொண்டான் 'ஜனமேஐயன்'.

இனி, மகாபாரத சமயத்தில் பாகிஸ்தான் எப்படி இருந்தது? என்று பார்ப்போம்.

மஹா பாரத சமயத்தில்,
மாத்ர தேசத்தை (Punjab Region in Pakistan), சல்யன் என்ற அரசன் ஆண்டு வந்தார். இவர் பாண்டவர்களின் உறவினர். இவரின் மகள் "மாத்ரி" குரு தேச அரசன் 'பாண்டு'வை மணந்தாள்.

நகுலன் மற்றும் சகாதேவனுக்கு, சல்யன் தாத்தா முறை.

மஹா பாரத போர் நடக்க போவது நிச்சயம் என்ற நிலையில், பாண்டவர்கள் பக்கம் தன் தேசம் துணை நிற்கும் என்று சொல்வதற்காக "குரு" தேசம் (UP, India) நோக்கி வந்து கொண்டிருந்தார் சல்யன்.

இதனை கேள்விப்பட்ட துரியோதனன், படையோடு வந்து கொண்டிருக்கும் சல்ய அரசனுக்கும் அவர் படைகளுக்கும் வழியில் உபசரித்து பெரிய விருந்து கொடுத்தான்.
பாண்டவர்கள் தான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்று நினைத்து, உபசரிப்பை ஏற்றுக்கொண்டார்.


பின்னர், துரியோதனன் தான், சூழ்ச்சி செய்து இதை செய்துள்ளான் என்று அறிந்தார். 
அடுத்தவன் சமைத்த உணவை உண்டால், அவனுக்கு பதில் செய்ய வேண்டும் என்பது தர்மம். 
இதற்கு கட்டுப்பட்டு, தன்னிடம் என்ன உதவி எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார் சல்யன்.

மாத்ர தேச படைகள், துரியோதனன் பக்கம் நின்று போர் புரிய வேண்டும், மேலும் கர்ணன் போர் புரியும் சமயத்தில், சல்ய அரசரே தேர் ஓட்ட வேண்டும் என்று கேட்டனர்.
தர்மத்தை மீறாத அரசர், சம்மதித்து, துரியோதனன் பக்கம் நின்று போர் செய்தார்.

மஹா பாரத போரில், 13ஆம் நாள் யுத்தத்தில், துரோணர் வகுத்த சக்ரவ்யூஹத்தை உடைத்து, அபிமன்யு சென்றான்.
தனி ஒருவனாக அங்கிருந்த மஹா ரதர்களை எதிர்த்து போரிட்டான்.

எதிர்த்த கோசல அரசன் (உத்திரபிரதேசம்) "ப்ருஹத்பாலனை" அர்ஜுனனின் மகன் அபிமன்யு கொன்றான்.
பின்னர், மாத்ர அரசன் சல்யனின் மகன் "ருக்மரதன்" மேலும் சல்யனின் சகோதரன் இருவரையும் அபிமன்யு போரில் கொன்றான்.

மேலும் அபிமன்யு, துரியோதனின் மகன் லக்ஷ்மணனையும் கொன்றான்.



படு தோல்வி நிகழப்போவதை உணர்ந்த துரோணர், 6 மஹா வீரர்களை (கிருபர், கர்ணன், யாதவ தலைவன் க்ரிதவர்மன், துரியோதனன், சகுனி, துச்சாதனன்) தன்னுடன் சேர்ந்து கொண்டு அபிமன்யுவை கொல்ல சொன்னார்.

தளராத அபிமன்யு, அனைவரையும் எதிர்த்து போரிட்டு, சகுனியின் சகோதரனையும் பல ஆயிரம் சேனைகளை வீழ்த்தினான்.

கடைசியாக களைத்த நிலையில் ஆயுதம் இல்லாத நிலையில், துச்சாதனன் கதையால் தாக்கி அபிமன்யுவை கீழே விழ செய்தான். 
குருக்ஷேத்ர போரின் விதியை மீறி, அனைவரும் சேர்ந்து அபிமன்யுவை கொன்றனர்.

மஹா பாரத சமயத்தில்,
சிந்து தேசத்தை (பாகிஸ்தான் பகுதி) ஆண்டு வந்தான் 'ஜயத்ரதன்'. 
இவன் துரியோதனின் தங்கை "துஷலா"வை மணந்தான்.

இவன் தந்தை 'வ்ரிதக்ஸ்த்ரா' நாட்டை ஜயத்ரதன் கையில் ஒப்படைத்து, தவம் செய்ய சென்றார்.

மஹாபாரத சமயத்தில், பாண்டவர்கள் 13 வருடம் வனவாசம் மேற்கொண்ட போது, 
ஜயத்ரதன், தன்னுடன் சில கேகேய படைகளுடன் (பாகிஸ்தான் பகுதி) வந்து திரௌபதியிடம் தவறாக நடக்க முயன்றான்.



அர்ஜுனன் ஓடி வந்து, அனைவரையும் துரத்தி, ஜயத்ரதனை பிடித்து இழுத்து வந்து, யுதிஷ்டிரரிடம் நிறுத்தினான்.
துரியோதனனின் தங்கையின் கணவன் 'ஜயத்ரதன்' என்பதால், உயிரோடு விட்டு, ஆனால் செய்த தவறுக்கு இவன் எந்த நாட்டுக்கும் சில மாதங்கள் செல்லாமல் இருக்க, இவன் தலையை மழுக்கி 4 குடுமிகள் முன்னும் பின்னும் இருக்குமாறு செய்து பீமன் அவமானப்படுத்தி அனுப்பினான்.

மஹாபாரத போரில், சில கேகேய அரசர்கள், பாண்டவர் பக்கமும், 
சில கேகேய அரசர்கள், துரியோதனன் பக்கமும் நின்று போர் செய்தனர்.

"வ்ரிஹத்ஷாத்ரா" என்ற கேகேய அரசன் பாண்டவர் பக்கம் போர் புரிந்தான். இவனை துரோணர் 14ஆம் நாள் யுத்தத்தில் கொன்றார்.

வ்ரிஹத்ஷாத்ராவின் மகன் 'விசோகன்' என்பவனும் போரிட்டான். இவனை கர்ணன் மாய்த்தான்.
'விசோகன்' இறந்ததை கண்ட இவன் படைத்தளபதி 'உக்ரகர்மன்', படு வேகத்துடன் கர்ணனின் மகன் 'ப்ரசேனனை' நோக்கி பாய்ந்து, கொன்றான்.

தன் மகன் கொல்லப்பட்டதை கண்ட கர்ணன், 'உக்ரகர்மன்' கையையும், தலையையும் தன் அம்புகளால் கொய்து எறிந்தான்.

ஜயத்ரதன் மஹா பாரத போருக்கு தயாரான போது, அவன் தந்தை இவனுக்காக ஒரு வரம் தந்தார். 
'போரில் ஒரு வேளை உன் தலை போனால், உன் தலை கீழே விழ காரணமானவன் தலையும் வெடித்து சிதறும்' என்றார்.




ஜயத்ரதன், அபிமன்யு மரணத்திற்கு முக்கிய காரணமானான். 
இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜுனன், 'அடுத்த நாள் சூரியன் மறைவதற்கு முன், ஜயத்ரதனை கொல்வேன், ஜயத்ரதனை கொல்ல முடியாவிட்டால், அங்கேயே தீ மூட்டி அதில் இறங்கிவிடுவேன்' என்று சபதம் செய்தான்.

மறுநாள் 14ஆம் நாள் யுத்தத்தில், கௌரவர்கள் சக்ரவ்யூகம் அமைத்து ஜயத்ரதனை ஒளித்து விட்டனர்.
அபிமன்யுவின் இறப்பினால், அர்ஜுனன் படு பயங்கர கோபத்துடன் போரிட்டான்.

இந்த ஒரு நாளில் மட்டும் 21,870 தேர் படை, 21,870 யானை படை, 65,610 குதிரை படை, 1,09,350 காலாட்படைகளை வதம் செய்தான். 
சூரியன் இன்னும் சில நாளிகையில் மறைந்து விடும் நிலையில், ஜயத்ரதனை கண்டுபிடிக்க முடியவில்லை. 
ஸ்ரீ கிருஷ்ணர் தன் மாயை கொண்டு, சுதர்சன சக்கரத்தை எடுத்து சில நாளிகை சூரியனை மறைத்து விட்டார். 
சூரியன் மறைந்து விட்டது, இனி கவலை இல்லை என்று, ஜயத்ரதன் வெளிய வர, ஸ்ரீ கிருஷ்ணர் இருளை விலக்கினார்.
சூரியன் பிரகாசிக்க, ஜயத்ரதன் எதிரில் நிற்க, அர்ஜுனன் அம்பு அவன் தலையை கொய்து, அது கீழே விழும் முன், இன்னொரு அம்பு மூலம் அடித்து தூக்கி, இப்படியே அவன் தலையை, அவன் தந்தை இருக்குமிடம் வரை தூக்கி சென்று, அவர் கையில் போட்டது.
பதறிய அவர், அறுந்த தன் மகனின் தலையை பார்த்து கீழே போட, அவர் தலையும் வெடித்து சிதறியது.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் 'கர்ணன்' தலைமை ஏற்றான்.

கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - 'சல்லியன்' (punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார். இது சல்லியனை அவமானம் படுத்துவதாக இருந்தது. இருந்தாலும் சம்மதித்தார்.

போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில், வேதம் கற்ற ப்ராம்மணர்கள், 'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறியதை நினைவு கூறி, "நீ அந்த மாத்ர தேச அரசன் தானே" என்றான். வாலிகன் என்றால் யார் என்று தெரிந்து கொள்ள வாலிகன் படிக்கவும்

வேத மார்க்க வழியில் நடப்பவனை, 'நீ ஒரு வாலிகன்' என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.



சல்லியன் பெரும் அவமானம் கொண்டார்.

இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை குழியிலிருந்து நகர்த்த மறுத்தார். வேறு வழியில்லாமல், கர்ணன் இறங்கி தேரை நகற்ற முயன்றான். 
'சபையில் கர்ணன் திரௌபதியின் ஆடையை கழற்றி அனைவரும் பார்க்க செய்ய வேண்டும்' என்று சொன்னதை ஸ்ரீ கிருஷ்ணர் நினைவு படுத்த, ஆத்திரம் கொண்ட அர்ஜுனன் வில்லில் இருந்து அம்புகள் பறந்து, கர்ணன் தலையை கொய்து எரிந்தது.

18ஆம் நாள் போரில், யுதிஷ்டிரருடன் போரில் ஈடுபட்டு, சல்லியன் கொல்லப்பட்டார்.

மஹாபாரத போர் முடிந்த பின், அர்ஜுனனின் பேரன் பரிக்ஷித் மட்டும் மிஞ்சினான்.

பாரத தேசத்தை ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வர, அஸ்வமேத யாகம் செய்ய யுதிஷ்டிரர் தீர்மானித்தார்.

திக்விஜயமாக, அர்ஜுனன் அனைத்து நாடுகளுக்கும் படையுடன் சென்றார்.
அப்போது சிந்து தேசத்தை ஜயத்ரதனின் மகன் "சுரதா" ஆண்டு வந்தான்.
'அர்ஜுனன் படையுடன் வந்து கொண்டு இருக்கிறான்' என்று கேள்விப்பட்டதற்கே, நடுங்கினான்.

தன் படைகளுக்கு அர்ஜுனனை தடுக்க ஆணையிட்டான். 
அர்ஜுனன் வருகிறார் என்று உணர்ந்த துரியோதனின் தங்கை "துஷலா" அர்ஜுனனை பார்க்க ஓடி வந்தாள்.
'தன் மகனுடன் போர் புரிய வேண்டாம்' என்று அர்ஜுனனிடம் வேண்டினாள்.
அர்ஜுனன் தன் தங்கை உறவு என்பதாலும், 'பாரத வர்ஷத்திற்கு யுதிஷ்டிரர் சக்கரவர்த்தி என்பதில் சம்மதம் என்றால், போர் செய்யும் எண்ணம் இல்லை' என்றார்.




யுதிஷ்டிரர் சக்கரவர்த்தி என்பதில் ஆட்சேபனை யாருக்குமே இல்லை என்றாள் "துஷலா".
அர்ஜுனன் சிந்து தேசத்தவர்களை அஸ்வமேத யாகத்திற்கு அழைத்து, மற்ற தேசங்களுக்கு திக்விஜயம் செய்ய புறப்பட்டார்.

ஜயத்ரதனின் மகன் "சுரதா" அர்ஜுனன் சிந்து தேசத்தை நோக்கி படை எடுக்க வந்து இருக்கிறான், தன் தந்தையை போரில் கொன்றது போல தன்னையும் கொன்று விடுவார் என்ற பயத்திலேயே, படுத்த படுக்கையாகி விட்டான். 
அர்ஜுனன் திரும்பி சென்றுவிட்ட போதிலும், பயத்தில் இருந்து மீள முடியாமல், உயிர் விட்டான்.

அஸ்வமேத யாகம் செய்து, உலகையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த யுதிஷ்டிரர், தன் இறுதி பயணத்தை இமாலயம் நோக்கி செல்ல திட்டமிட்டார். உலகின் சக்கரவர்த்தியாக பரிக்ஷித் நியமிக்கப்பட்டார்.

சாபத்தினால், தக்ஷகன் என்ற பாம்பு கடித்து பரிக்ஷித் உயிர் நீத்தார்.

பரிக்ஷித் மகன் 'ஜனமேஜெயன்", தன் தந்தை இப்படி கொடிய பாம்பு கடித்து இறந்ததை அறிந்து, ஆத்திரம் கொண்டு, இந்த "தக்ஷஷிலா" (Taxila, Pakistan) என்ற நகரில் சர்ப்ப சாத்ர யாகம் நடத்தினான்.




இந்த யாகத்தில் அங்கு இருந்த பாம்புகள் யாவும் காந்தத்தினால் ஈர்க்கப்பட்ட இரும்பு போல, தானாக வந்து யாக தீயில் வந்து விழுந்தன.
இப்படி ஒரு இனத்தையே அழிப்பது பாவம் என்று, அஸ்தீக மகரிஷி வந்து, ஜனமேஜெயன் கோபத்தை தணித்து, யாகத்தை மேலும் தொடர விடாமல் தடுத்தார்.

Hare Rama Hare Krishna - Bhajan 

Sandhya Vandanam -  Morning (With Meaning) 

Sandhya Vandanam -  Afternoon (With Meaning) 




Sandhya Vandanam -  Evening  (With Meaning) 


Sunday 3 December 2017

மஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan எப்படி இருந்தது?

மஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan

"நிஷாத தேசம்", "மத்ஸ்ய தேசம்", "சால்வ தேசம்", "மால்வ தேசம்" ஆகிய தேசங்கள், இன்று ராஜஸ்தானில் உள்ளது.


மஹா பாரத காலத்துக்கும் முன் வாழ்ந்த சத்யவான்-சாவித்ரி தம்பதிகள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்.
சத்யவான் "சால்வ தேச" அரசன்.
சாவித்ரி "மால்வ தேச" இளவரசி.
சத்யவான் உயிரை பறித்த யமனை காணும் சக்தி பெற்றவளாக இருந்தாள்.

யமனிடம் தர்க்கம் செய்து, போன உயிரை திரும்பப்பெற்றாள்.
எம தர்மராஜன், இன்னும் "நூறாண்டுகள் வாழ்க" என்று ஆசிர்வதித்து விட்டு சென்றான்.
இது ஹிந்துக்களான அனைவருக்கும் தெரிந்த சரித்திரம்.

மத்ஸ்ய தேசம் என்பது யமுனை நதி ஓரத்தில், மீன் பிடித்து வாழும் ஒரு சமூகம்.
குரு அரசன் (உத்திரபிரதேசம்) சந்தனு, இந்த தேசத்தின் மீன் பிடிக்கும் தலைவனின் மகள் "சத்யவதி"யை பார்த்து திருமணம் செய்ய நினைத்தார்.

பீஷ்மர் தன் தந்தைக்காக, சபதம் செய்து, சத்யவதியின் குழந்தைகளே சந்தனுவுக்கு அடுத்து அரசனாகட்டும் என்று சபதம் செய்து, சத்யவதிக்கும், சந்தனு மகாராஜாவுக்கும் மணம் செய்து கொண்டனர்.
இந்த தியாகத்தால், "விரும்பிய பொழுது மரணம்" என்ற வரத்தை பெற்றார் பீஷ்மர்.
இதே தேசத்தில் மகா பாரத காலத்தில் இருந்து, எழுதிய வியாச பகவானும் அவதரித்தார்.

சால்வ அரசன், காசி தேசத்து இளவரசி "அம்பா"வை விரும்பினான்.

காசி அரசன், தன் 3 மகள்களுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்து இருந்தார்.
சாலவ அரசனும் இந்த  சுயம்வரத்திற்காக வந்தான்.

காசி ராஜன், குரு அரசன் 'விசித்ரவீர்யனுக்கு' அழைப்பு விடவில்லை. இதனால், பீஷ்மர் கோபத்துடன், காசி தேசத்துக்கு படையெடுத்தார்.

அங்கிருந்த அனைத்து அரசர்களையும், சால்வ அரசன் உட்பட, தன் பராக்ரமத்தால் வென்று, 3 இளவரசிகளையும் குரு தேசத்திற்கு கொண்டு சென்றார்.
"அம்பா" சால்வ அரசனை மணக்க இருந்ததாக சொல்ல, அம்பாவை சால்வ அரசனிடம் விட்டு சென்றார்.

காசியில் அம்பாவை காப்பாற்ற முடியாமல், பீஷ்மரிடம் தோற்றதால் அவமானம் அடைந்த சால்வ அரசன், ஒரு க்ஷத்ரியனாக இருப்பதால், அம்பாவை மணக்க முடியாது என்று மறுத்து விட்டான்.



இதனால் வேதனையும், பீஷ்மரிடம் கோபமும் கொண்டாள் அம்பா.

வாழ வழி இல்லாததால், தீ மூட்டி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
பின்னர், சிகண்டியாக துரௌபதிக்கு சகோதரனாக பிறந்தாள்.

நிஷாத தேச அரசன் பெயர் "நலன்".

நிஷாத அரசனும், கோசல அரசனும் (உத்திரபிரதேசம்) நண்பர்கள்.

இந்த நிஷாத தேசம், காடுகளும், மலைகளும் நிரம்பி இருந்தன.

பாண்டவர்களும், கௌரவர்களும் துரோணரிடம் பாடம் கற்று கொண்டிருந்த சமயம் அது.
இந்த காட்டு பகுதியில் சில நாள் தங்கி போருக்கான சஸ்திர பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

ஏகலைவன் என்ற வேடுவன், துரோணரின் குருகுலத்தில் வில் வித்தை கற்று கொள்ள ஆசைப்பட்டான்.
துரோணர் க்ஷத்ரியனுக்கு மட்டுமே "இந்த சஸ்த்ர வித்தைகள் கற்று தர முடியும்" என்று மறுத்து விட்டார்.

ஏகலைவன், மறைந்து நின்று பல நாள் இவர்கள் செய்யும் பயிற்சியினை பார்த்தான்.
பின்னர், துரோணரின் பாத மண்ணை எடுத்துக்கொண்டு, அதை ஒரு இடத்தில் வைத்து அவரை போலவே ஒரு சிலை வடித்து, பல வருடங்கள் பார்த்த வில் வித்தையை பயிற்சி செய்ய ஆரம்பித்தான்.

அவன் கொண்ட குருவின் பக்தி, வில் வித்தையில் அர்ஜுனனுக்கு நிகராக நிற்கும் அளவிற்கு திறமை தந்துவிட்டது.

ஒரு நாள், துரோணர் பாண்டவர்களுடன் காட்டில் நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறைக்க முடியாத படி, அதன் வாயை சுற்றியும், அதனை சுற்றியும் அம்புகள் தெய்க்கப்பட்டு இருந்தன. ஆச்சர்யமாக, அந்த நாய் ஒரு காயமும் அடையாதவாறு அமைக்கப்பட்டு இருந்தது.

இதை கண்டு அர்ஜுனனே ஆச்சர்யப்பபட்டான்.
தேடிப்பார்த்த போது, ஏகலைவன் எதிர் வந்தான். தன் குரு தன் முன் இருப்பதை கண்டு ஆனந்தத்தில் மகிழ்ந்தான். அவரை வணங்கி "உங்கள் மூலமே இதனை கற்றேன்" என்றான்.

துரோணர் இது உடனே கண்டிக்கப் பட வேண்டியது என்று நினைத்து, இது பேராபத்து என்றும் உணர்ந்து, "எனக்கு குரு தக்ஷிணையாக உன் கட்டை விரலை கொடு" என்றார்.

ஏகலைவன் ஒரு வேடுவன்.
அம்பு விடுவதில் ஏற்கனவே வல்லவன்.
இவன் மறைமுகமாக கற்றுக் கொண்டது அஸ்திர, சஸ்திர ப்ரயோகம். அதாவது அணுகுண்டு போன்றவை உபயோகப்படுத்தும் முறை.
இவன் க்ஷத்ரியன் (army person) அல்ல. இவன் ஒரு சாதாரண பிரஜை (citizen). சாதாரண பிரஜை அணுகுண்டு தயாரிப்பது, உபயோகிப்பது ஆகியவை சட்ட விரோதமானது.


துரோணர் நினைத்தது போலவே, இவன் துரியோதனனின் பக்கம் போய், அதர்மத்தின் வழியில் சண்டை போட்டான்.

ஏகலைவன் தந்தை, மகத நாட்டின் (பீஹார்) அரசன் "ஜராசந்தனுக்கு" படை தளபதியாக இருந்தான்.
17 முறை ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் மதுராவை தாக்கினான்.
17 முறையும் தோற்றான். இதில் போரிட்ட ஏகலைவனின் தந்தை மாண்டு போனான்.

ஜாராசந்தனும் பீமனால் பின்னர் இரண்டாக கிழிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

ஏகலைவன், துரியோதனிடம் நட்பு கொண்டான்.
இதனால் சமயம் எதிர்ப்பார்த்து பகைமை கொண்ட ஏகலைவன், பாண்டவர்களின் தாய் குந்தியின் ஊரான "குந்தி போஜ" (மத்யபிரதேசம்) அரசன் குந்திபோஜன் மீதும், மதுராவின் ஸ்ரீ கிருஷ்ணர் மீதும் யாதவர்களுக்கு எதிராக போரிட தயாரானான்.

"யாதவர்கள் அனைவரும் அழிய வேண்டும்" என்ற எண்ணத்துடன் குந்திபோஜ தேசத்தை தாக்க வந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் இருந்து வந்து, யாதவர்களுக்காக போரிட்டார்.

துரியோதனின் யோசனை பேரில், ஸ்ரீ கிருஷ்ணரின் மகன் "சம்பா"வை போரில் கொலை செய்ய ஏகலைவன் முயற்சி செய்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் தக்க சமயத்தில் வந்து, யாதவர்களை கொல்லும் எண்ணம் கொண்ட  ஏகலைவன் தலையை அங்கிருந்த பாறையில் மோத, தலை பிளந்தது.

யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகத்திற்கு திக்விஜயமாக புறப்பட்ட நகுலன், மால்வ தேசத்து அரசர்களை தோற்கடித்தான்.
மால்வ அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

மஹாபாரத போர் நிச்சயம் என்ற நிலையில், கர்ணன் மால்வ தேசத்து அரசர்களிடம் போர் புரிந்து வெற்றி பெற்றான்.

மஹாபாரத போரில், சில மால்வ அரசர்கள் துரியோதனன் பக்கம் நின்று போரிட்டனர்.
சில மால்வ அரசர்கள் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

மகத அரசன் (பீகார்) ஜராசந்தனுக்கு பயந்து, சால்வ தேச (ராஜஸ்தான்) அரசர்கள் பல சமயம் குந்தி தேசத்திற்கு (மத்யபிரதேசம்) ஓடி விடுவர்.

இன்னும் சில சால்வ அரசர்கள் சிசுபாலன் இருக்கும் சேடி தேசம் (மத்யபிரதேசம்) வரை சென்று தஞ்சம் புகுவர்.

இன்னும் சில சால்வ அரசர்கள், ஜராசந்தனுக்கு பயந்து, ருக்மி இருக்கும் விதர்ப தேசம் (மஹாராஷ்டிரா) வரை சென்று தஞ்சம் புகுவர்.


மஹா பாரத போரில், ஒரு சில சால்வ அரசர்கள், துரியோதனன் பக்கம் நின்று போரிட்டனர்.
சில சால்வ அரசர்கள், பாண்டவர்கள்  பக்கம் நின்று போரிட்டனர்.

மஹாபாரத போரில், சில நிஷாத சிற்றரசர்கள், பாண்டவர்கள் பக்கம் போரிட்டனர்.
மற்றும் சிலர் துரியோதனன் பக்கம் போரிட்டனர்.
துரியோதனன் பக்கம் நின்ற நிஷாத அரசர்கள் அனைவரையும், பீமன் ஒருவனே கொன்றான்.

மஹா பாரத போரில், இந்த மத்ஸ்ய தேச படைகள், துரியோதனின் பக்கம் நின்று போரிட்டனர்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka


Friday 24 November 2017

மஹா பாரத சமயத்தில் உத்திர பிரதேசம், ஹரியானா எப்படி இருந்தது? Uttar Pradesh, Haryana


மஹா பாரத சமயத்தில் உத்திர பிரதேசம், ஹரியானா:  Uttar Pradesh, Haryana

வ்ரஜ தேசம், 
குரு தேசம், 
காசி தேசம், 
வத்ஸ தேசம், 
கோசல தேசம்
ஆகிய தேசங்கள் இன்றைய உத்திர பிரதேசம்.



குருஜாங்கல தேசம் இன்றைய ஹரியானா (Haryana).

ராமாயண காலத்தில், 'சுமித்ரா' காசி தேச இளவரசி.
இவள் கோசல தேச அரசர் தசரதரை மணந்தாள்.
இவர்களுக்கு "லக்ஷ்மணன்" பிறந்தார். 'சத்ருக்னன்" பிறந்தார்
காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிற் காலத்தில் வந்த முகலாய ஆட்சியில் ஔரங்கசிப்  கோவிலை இடித்து, மசூதியை கட்டினான்.

த்ரேதா யுகத்தில், ராமாயண காலத்தில், கோசல தேசத்தின் தலைநகராக அயோத்தியா இருந்தது.
ஸ்ரீ ராமர் அயோத்தியாவில் அவதரித்தார்.

1526AD சமயத்தில், இந்த அயோத்தியில் இருந்த ஸ்ரீ ராமரின் கோவி்லை இடித்து, முகலாய ஆட்சியில் பாபர், மசூதியை கட்டினான்.

ஸ்ரீ ராமர், ஜனகர் மகள் "சீதை"யை மணந்தார்.
ஜனகர் மிதிலை (நேபால்) அரச மன்னர்.

அந்த சமயத்தில், லக்ஷ்மணன் கங்கை நதி ஓரம், ஒரு நகரை உருவாக்கினார். அதற்கு லக்ஷ்மணபுரம் என்று பெயர் இருந்தது.
பிற் காலத்தில் வந்த முகலாயர்கள்,
இந்த லக்ஷ்மணபுரம் என்ற நகரத்தை "லக்னோ" என்று மாற்றினர்.
இன்று இந்த நகரம் ஷியா இஸ்லாமியர்கள் நிரம்பிய முஸ்லீம் ஊராக இந்தியாவில் உள்ளது.

ஸ்ரீ ராமர், வனவாச சமயத்தில், வத்ஸ தேசத்தில்,
பிரயாகை (கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம்) வந்து, இங்கு இருந்த பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தார்.
பின்பு சித்ரகூடம் நோக்கி சென்றார்.

ஸ்ரீ ராமரை அழைத்து வர, பரதன் கோசல தேசத்தில் இருந்து வந்தார். குகனை பார்த்து விட்டு, பிரயாகையை கடந்து பரத்வாஜர் ஆஸ்ரமம் நோக்கி சென்றார்.
ஸ்ரீ ராமரின் நினைவிலேயே வந்த பரதனுக்கு,
யமுனையின் நீல நிறம் ஸ்ரீ ராமராகவும்,
கங்கையின் வெண்மை நிறம் சீதையாகவும் தெரிய,
இரண்டு புண்ய நதிகளும் சேரும் ப்ரயாகையை கண்டு மூர்ச்சையானார். பின் பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் தங்கி, சித்ரகூடம் சென்றார்.

வத்ஸ தேசத்தில், பிரயாகை என்ற ஊரை, பிற்காலத்தில் வந்த முஸ்லீம் ஆட்சியின் போது, அக்பர் இந்த பிரயாகை என்ற இடத்தை, இலகாபாத் என்று பெயர் மாற்றி முஸ்லீம் தேசமாக்க முயன்றார்.
பின் வந்த, பிரிட்டிஷ் ஆட்சியில், வழக்கம் போல, தவறாக உச்சரித்து, "அலகாபாத்" (Allahabad) என்று பெயர் மாற்றப்பட்டது.

அதே பெயரை 2018AD வரை சுதந்திர இந்தியாவும் வைத்துக்கொண்டது.
இந்த பிரயாகை என்ற அலகாபாத் நகரத்தில், 12 வருடத்திற்கு ஒரு முறை 'கும்ப மேளா' என்ற ஆச்சர்யமான விழா இன்று வரை நடக்கிறது.


மஹாபாரத சமயத்தில்,
காசி ராஜன் தன் 3 மகள்களுக்கு சுயம்வரத்தை காசியில் நடத்தினார்.

அப்போது, பீஷ்மர், சத்யவதி மகன் 'விசித்ரவீர்யன்' சார்பில் வந்து, அனைத்து அரசர்களையும் தோற்கடித்து "அம்பா, அம்பாலிகா, அம்பிகா" என்ற 3 மகள்களையும் தன் குரு தேசத்திற்கு கொண்டு சென்று, குரு அரசன் 'விசித்ரவீர்யனுக்கு' மனம் முடிக்க நினைத்தார்.

அம்பா என்ற பெண், தான் சால்வ தேச (ராஜஸ்தான்) அரசனை மணக்க ஆசை கொண்டிருந்ததாக சொல்ல,
பீஷ்மர் 'அம்பா'வை மட்டும் மீண்டும் அழைத்துக்கொண்டு சால்வ மன்னன் முன் விட்டு சென்றார்.
ஆனால்,
சால்வ மன்னன் (Rajasthan) 'அம்பா'வை பீஷ்மரிடம் தோற்றதாலும், அவரே வந்து விட்டது அவமானம் என்றும் காரணங்கள் சொல்லி விலகினான்.

அம்பா "இனி உயிர் வாழ்வது வீண்" என்று, "அடுத்த ஜென்மத்தில் பிறந்து பீஷ்மர் மரணத்திற்கு காரணம் ஆவேன்" என்று சபதம் செய்து, தீயில் விழுந்து உயிர் நீத்தாள். சிகண்டியாக பிறந்தாள்.

அம்பாலிகாவுக்கு "பாண்டு" பிறந்தார். 
பாண்டு "குந்தி" மற்றும் "மாத்ரி"யை மணந்தார்.
இவர்களுக்கு 5 பிள்ளைகள் பிறந்தனர். யுதிஷ்டிரர் மூத்தவர்.

அம்பிகாவுக்கு "திருத்ராஷ்டிரன்" பிறந்தார்.

விசித்ரவீர்யனுக்கு பிறகு, பாண்டு குரு தேசத்தை ஆட்சி செய்தார்.

பாண்டவர்களின் தந்தை "பாண்டு" குரு தேச அரசர்களின் பலத்தை, புகழை பரப்ப, திக் விஜயமாக, காசி தேசம், மகத தேசம், பௌண்ட்ரக தேசம், சுஹ்ம தேசம் போன்ற தேச அரசர்களை வென்றார்.



பாண்டுவுக்கு பிறகு, குரு தேச அரசனாக, திருத்ராஷ்டிரன் ஆட்சி செய்தார்.
கண் தெரியாத குருடனாக இருந்தாலும், பீஷ்மர், விதுரர் (chief minister) போன்றோர் துணையுடன் ஆட்சி புரிந்தான். 

பாண்டுவின் மைந்தன் யுதிஷ்டிரனுக்கு நியாயப்படி அரசாட்சி கொடுக்க வேண்டும் என்கிற நிலையில், தன் மகன் துரியோதனனுக்கு கொடுக்க ஆசை கொண்டு, மகாபாரத போருக்கு வித்திட்டான்.

வ்ரஜ தேசம், சூரசேனர் என்ற அரசர் ஆண்டு வந்தார்.

வ்ரஜ தேசம், உத்திர பிரதேசத்தில் உள்ள மதுராவில் இருந்து ஸ்ரீ வ்ருந்தாவனம் வரை உள்ள தேசம். "வ்ரஜ பூமி" என்று சொல்வார்கள்.
இங்குள்ள மக்கள் வ்ரஜ பாஷை பேசுவர்.
ஸ்ரீ கிருஷ்ணர் கோகுலத்தில் வ்ரஜ பாஷை பேசினார்.

பிராம்மண ரிஷிக்கும், ராக்ஷச தாயாருக்கும் பிறந்த ராவணன் தன் தங்கை "கும்பினி"யை 'மது' என்ற ராக்ஷஸனுக்கு மம் செய்தான். 

கோசல தேசத்தில் அருகில் தான், இந்த மது என்ற ராக்ஷஸன் இருந்து வந்தான். 
மது என்ற இந்த ராக்ஷஸன் பிராம்மணர்கள் மீது மரியாதை வைத்து இருந்தான்.
தன் ஆட்சியில் தவம் செய்து கொண்டு இருக்கும் முனிவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தான்.

இவனுக்கு "லவணாசுரன்" என்ற மகன் பிறந்தான்.
இவன் ராக்ஷஸ குணம் நிரம்பியவனாக இருந்ததால், சாதுக்களை வெறுத்தான்.

நர மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ள லவணாசுரன், தவம் செய்யும் முனிவர்களை அப்படியே கொன்று பச்சை மாமிசமாக சாப்பிட்டு, எலும்பை துப்பி விடுவான்.
ச்யவனர் (Chyavana Rishi) என்ற ரிஷி ஸ்ரீ ராமரிடம் சென்று, ராக்ஷஸர்கள் செய்யும் தொந்தரவை பற்றி சொல்ல, ராமரின் தம்பி "சத்ருக்னன்" லவணாசுரனை கொன்றார்.

மது ஆண்ட ஊருக்கு சத்ருக்கனன் அரசன் ஆனார்.
இதுவே இன்றைய மதுரா.

ராமாயண காலத்தில், ராமரின் தம்பி 'சத்ருக்னன்" மது என்ற வனம் இருந்த இடத்தை செப்பனிட்டு, 'மதுரா' என்ற நகரை உருவாக்கினார்.

மஹாபாரத சமயத்தில், இங்கு இருந்த யாதவர்கள்,
"யாதவ, வ்ருஷ்ணி, போஜ" என்று 3 பிரிவாக பிரிந்து இருந்தனர்.

இந்த தேசத்தை வ்ருஷ்ணி குல உக்ரசேனர் ஆண்டு வந்தார்.
இவர் தன் மகள் "தேவகி"யை, யாதவ குல தலைவர் "சூரசேனர்" மகன் "வசுதேவருக்கு" மணம் செய்து கொடுத்தார்.

உக்ரசேனர் மகன் 'கம்சன்' அசரீரி வாக்கினால், தேவகியையும் வசுதேவரையும் மதுராவில் உள்ள ஜெயிலில் தள்ளினான்.
இவர்களுக்கு பிறந்த ஸ்ரீ கிருஷ்ணர் 11 வயதில் கம்சனை கொன்று, மீண்டும் உக்ரசேனரை மன்னனாக்கி, பிரிந்து இருந்த யாதவர்களை ஒன்று இணைத்தார்.

மதுராவில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மாளிகை, முகலாய ஆட்சியில் ஔரங்கசிப்  இடித்து, மசூதியை கட்டினான்.

துரியோதனனும், சகுனியும் பாண்டவர்களை உயிரோடு கொளுத்த திட்டம் தீட்டினர்.
வாரனாவதம் என்ற ஊரில் இவர்களுக்காக ஒரு மாளிகை கட்டி, இரவில் பாண்டவர்கள் இருக்கும் போது, தீயிட்டு கொளுத்தினான்.
சுரங்கம் வழியாக பாண்டவர்கள், தன் தாய் குந்தியுடன் தப்பித்தனர்.
வாரனாவதம், Barnava என்ற பெயரில் இன்றைய உத்திரபிரதேசத்தில் உள்ளது.

திரௌபதியின் சுயம்வரத்தில், வத்ஸ தேச அரசர் கலந்து கொண்டார்.

திருத்ராஷ்டிரன்,
துரியோதனின் பகைமை உணர்வை குறைக்க, பாண்டவர்களையும் சமாதானம் செய்ய, தன் குரு தேசத்தில் உள்ள ஒரு மேற்கு பகுதியை பாண்டவர்களுக்கு ஆட்சி செய்ய கொடுத்தார்.
இந்த மேற்கு பகுதியில் இருந்த குரு தேசத்தின் பெயர் "குருஜாங்கள தேசம்". இந்த தேசத்தில் உள்ள காண்டவ வனம் இன்று ஹரியானா (Haryana) என்ற பெயருடன் உள்ளது.

இந்த குருஜாங்கள தேசம் வெறும் காடாக இருந்தது.
இதை வாழும் தேசமாக்கி, இந்த்ரப்ரஸ்தம் என்ற தலைநகரையும் உருவாக்கினார், யுதிஷ்டிரர்.

இந்த 'இந்த்ரப்ரஸ்தம்' பிற்காலத்தில் டெல்லி நகர் (Delhi) என்று பெயர் பெற்றது.
இன்று இந்தியாவின் தலைநகராகவும் உள்ளது.

இந்த குருஜாங்கள தேசத்தில் உள்ள ஓரு ஊரை, திருத்ராஷ்டிரன் த்ரோணருக்கு தானமாக கொடுத்தார்.
இந்த ஊர், குருகிராமம் (Gurgaon) என்ற பெயர் பெற்றது.
இந்த ஊரில் தான், பாண்டவர்களும், கௌரவர்களும் தங்கள் குரு "துரோணரிடம்" கல்வி கற்றனர்.

முஸ்லீம் ஆட்சிக்கு பிறகு, இந்த நகரம் குர்கான் "gurgaon" என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பிறகு மீண்டும் அதன் உண்மையான பெயருக்கு மாற்றப்பட்டது.

மறைக்கப்பட்ட ஹிந்து கலாச்சாரத்தை மீட்க, முதல் படியாக, 2016ஆம் ஆண்டு, ஹரியானா முதல்வர், சட்டம் திருத்தம் கொண்டு வந்து, "குருகிராம்"(Gurugram) என்ற சரித்திர பெயரை மீட்டார். 

மஹாபாரத காலத்தில், கோசல தேசத்தின் பகுதியை பலர் ஆண்டனர். "ப்ருஹத்பாலா" என்பவர் ஒரு கோசல பகுதியின் அரசனாக இருந்தார்.
இவர், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டார்.

ப்ருஹத்பால அரசன், துரியோதனின் பக்கம் நின்று போரிட்டார்.
மற்ற கோசல அரசர்கள் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.



மஹா பாரத போரில்,
13ஆம் நாள் யுத்தத்தில், துரோணர் வகுத்த சக்ரவ்யூஹத்தை உடைத்து, அபிமன்யு சென்றான்.
தனி ஒருவனாக அங்கிருந்த மஹா ரதர்களை எதிர்த்து போரிட்டான்.
எதிர்த்த கோசல அரசன் "ப்ருஹத்பாலனை" அர்ஜுனனின் மகன் அபிமன்யு கொன்றான்.

மஹா பாரத போரில், "வத்ஸ தேச அரசர்" பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டார்.

போர் முடிந்த பின், யுதிஷ்டிரரின் அஸ்வமேத யாகத்திற்கு, திக்விஜயமாக புறப்பட்ட அர்ஜுனன், கோசல தேசத்தை வீழ்த்தி யுதிஷ்டிரரின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.