Followers

Search Here...

Showing posts with label அதிதி. Show all posts
Showing posts with label அதிதி. Show all posts

Saturday 10 February 2018

திதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன? தெரிந்து கொள்வோமே

ஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம்.

அதிதி (Aditi) -

"திதி" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது.
"அதிதி" என்றால் காலம், நேரம் சொல்லாமல் என்று அர்த்தம்.

இந்தியாவில் மட்டும் தான் "அதிதி தேவோ பவ" என்று சொல்லும் பழக்கம் உண்டு.
வெளிநாட்டவன் அதிதி என்றால் "Guest" என்று அர்த்தம் புரிந்து கொள்கிறான்.  அவன் புத்திக்கு எட்டியது அவ்வளவு தான்.

வீட்டுக்கு இத்தனை மணிக்கு வருகிறேன், இந்த தேதிக்கு வருகிறேன் என்று சொன்னால் தான், வெளிநாட்டவன் வீட்டில்  வரும் விருந்தாளிக்கு மரியாதை கிடைக்கும்.
நேரம் காலம் சொல்லி வீட்டுக்கு வருபவனை தான் guest என்று சொல்கிறான் வெளிநாட்டவன்.

நம் பாரத நாட்டில், நேரம் காலம் சொல்லாமல் வரும் அதிதியையும் வணங்கி உபசரிக்கும் உயர்ந்த குணம் உண்டு என்பதால் தான் வெளிநாட்டவன் நினைத்து கூட பார்க்காத உயர்ந்த குணத்தை சர்வ சாதாரணமாக "அதிதி தேவோ பவ" என்கிறான்.





நேரம் காலம் சொல்லாமல் திடீரென்று வரும் விருந்தினனை, நான் தெய்வத்துக்கு சமமாக நினைத்து உபசரிப்பேன்
என்கிறான் ஹிந்து.

இந்த உயர்ந்த குணம் நம்மிடையே மீண்டும் துளிர்க்க வேண்டும்.
அதிதி தேவோ பவ என்ற சொல்லுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பதை உணர வேண்டும்.
வீட்டிற்கு வரும் அதிதியையும் உபசரிக்க வேண்டும். இது ஹிந்துக்களின் உயரிய பண்பு.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சிறப்பு சொல்லும் போது, நம் இந்தியர்களை பார்த்து "Indians are known for hospitality" என்று சொல்கின்றனர்.

இந்த பெருமை "guest" வந்தால் இந்தியன் உபசரிப்பான் என்ற காரணத்தால் கொடுக்கப்படவில்லை. அதிதியாக வந்தாலும், ஹிந்து உபசரிப்பான் என்ற காரணத்தால் கிடைத்தது.

திடீரென்று வந்த சுதாமாவை, ஸ்ரீகிருஷ்ணர் எப்படி வரவேற்றார். கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர் நாம் எப்படி உபசரிக்க வேண்டும் என்று காட்டினார்.



இந்த குணம், மேலை நாட்டு மதங்களின் மோகத்தால், அழிந்து, அதிதியாக ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால் கோபமும், நேரம் காலம் சொல்லி அனுமதி பெற்று வந்தால் தான் உபசரிப்பு என்ற நிலைக்கு வந்து விட்டோம்.




உயர்ந்த குணத்தை போலி மதங்களின் ஊடுருவளால் விட்டு விட்டோம். மீண்டும் நல்ல குணங்களை வளர்த்து கொள்ள ஹிந்துவாகிய நாம் ஆசையாவது பட வேண்டும்.

சுய நலத்தில் உருவான போலி மதங்கள், சுய நலத்தையே போதிக்கிறது.
ரிஷிகளால் காட்டப்பட்ட ஹிந்து தர்மத்திலோ, ஒவ்வொரு சொல்லிலும் பரந்த குணமும், உயர்ந்த எண்ணமும் வெளிப்படுகிறது.

ஹிந்து தர்மம் பல பொக்கிஷங்கள் கொண்டது. எடுக்க எடுக்க குறையாதது.

போலி மதங்களில் விழுந்து சுயநல போதனைகள் கேட்டு வீணாகி போன ஹிந்துக்களை, மீண்டும் புனித படுத்தி ஹிந்துக்கள் ஆக்க, முதலில் நாம் ஹிந்து தர்மத்தை புரிந்து கொள்ள ஆராய்ச்சிகள் செய்து, உண்மையான ஞானம்(அறிவு) பெறுவோம்.