Followers

Search Here...

Showing posts with label சுவாரஸ்ய. Show all posts
Showing posts with label சுவாரஸ்ய. Show all posts

Thursday 13 April 2017

"தீர்க்கதரிசி" ஆபிரகாமின் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவம். Genesis

ஆபிரகாம் தன்னிடம் எத்தனை விசுவாசமாக இருக்கிறார்?
என்று பார்க்க, ஒரு சமயம், "கடவுள்" அவர் மகனையே உயிர் பலி கொடுக்க கேட்டார்.

கடவுளின் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்காமல், தன் மகன் தலையை வெட்ட துணிந்ததால், கடவுளின் விசுவாசத்துக்கு பாத்திரமானார் ஆபிரகாம்.




ஆபிரகாம் மகனுக்கு பதில், ஒரு ஆடு பலியாகுமாறு கடவுள் செய்தார். இவர் "தீர்க்கதரிசி" என்று கடவுளால் போற்றப்பட்டார்.

இந்த தியாகத்தை (குர்பானி) நினைவு கூறும் விதமாக இந்த ஒரு நாளில் மட்டும், வருடா வருடம் உலகத்தில், சுமார் 20 மில்லியன் ஆடு, மாடுகள், ஒட்டகம் கொல்லப்பட்டு,  கொண்டாடப்படுவதே பக்ர் ஈத்.
இது தியாகத்தின் பண்டிகை என்பது யாவரும் அறிந்ததே !!

ஆப்ராம் என்ற ஆபிரகாம், யூத (Judaism) மத போதகர் என்பதை நாம் அறிந்ததே !!
இவர் ஒரு தீர்க்கதரிசி (Prophet). 

இவர் ஊர் (Ur) என்னும் ஊரில் பிறந்தார்.
இது இப்போது ஈராக் தேசத்தில், அரேபியாவில் உள்ளது.
ஏசுவுக்கு, நபிக்கு முன் 2000 வருடம் முன் இருந்தவர் ஆப்ராம்.

யூத மதத்திற்கு பின்பு பிரிந்து, உருவான மதம் கிறிஸ்துவம்.
அதன் பின் உருவான மதம், இஸ்லாம். இதுவும் நாம் அறிந்ததே !!

ஆதலால், 'ஆபிரகாம்' இந்த மூன்று உருவான மதங்களிலும் போற்றப்படுகிறார். இவர் ஒரு தீர்க்கதரிசி.

ஆபிரகாமின் தந்தை பெயர் "தேராகு" (Terah).

"தேராகு"வுக்கு (Terah) மூன்று மகன்கள் :
1. "ஆபிரகாம்" (Abram)
2. "ஆரான்" (Haran) மற்றும்
3. "நாகோர்" (Nahor).

"தேராகு"வுக்கு (Terah) மற்றொரு மனைவி மூலம் ஒரு மகள் :
4. "சாரா" (Sarah or Sarai)

"ஆரான்" (Haran), தன் தந்தை "தேராகு"(Terah) இருக்கும் போதே, ஊர் (Ur), ஈராக்கில் இறந்து விட்டான். (genesis 11:28).

"ஆரான்" (Haran) இறக்கும் போது, இவனுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.

"ஆரான்"னின் (Haran) 2 மகள்கள்:
1. "மில்கா" (Milcah)
2. "இஸ்கா" (Iscah)

நாகோர், தன் சகோதரன் 'ஆரான்" மகள் "மில்கா"வை மணந்தான். (genesis 11:29).
மில்கா தன் சித்தப்பாவை ("நாகோர்" Nahor) மணந்தாள்.

"தீர்க்கதரிசி" ஆபிரகாம் தன் தந்தை "தேராகு"க்கும் (Terah), இன்னொரு தாய்க்கு பிறந்த "சாரா"வை மணந்தார்.

"தீர்க்கதரிசி" ஆபிரகாம் வயதோடு ஒப்பிடும் போது, "சாரா" வயதில் மிக சிறியவள். மிக அழகானாவள்.

"தீர்க்கதரிசி" ஆபிரகாமின் வாழ்வில் நடந்த மற்றொரு சுவாரஸ்ய சம்பவம்.
ஒரு சமயம்,
ஆபிரகாம், சாராவுடன் (சகோதரி முறை+ மனைவி முறை) கடவுளின் ஆணைப்படி, தங்கள் நாட்டில் இருந்து கிளம்பி, ஒரு ஊரை அடைந்தனர்.
எந்த ஊர்?

இரண்டு இடங்கள் இங்கு குறிப்பிடப்படுகிறது.
எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

* ஆபிரகாம், சாராவுடன் எகிப்து தேசத்தை அடைந்தான். (genesis 12:10). இந்த ஊரின் அரசன் "பார்வோன்" (Pharaoh).
Or
* ஆபிரகாம், சாராவுடன் இஸ்ரேல்
தேசத்தை அடைந்து, கேராரில் (gerar) தங்கினான். (genesis 20:1).
இந்த ஊரின் அரசன் "அபிமெலே" (Abimelech).

"தீர்க்கதரிசி" ஆபிரகாம், சாராவுடன் எகிப்து தேசத்தை அடைந்தார் என்ற நம்பிக்கையில் தொடர்வோம்.
இந்த சமயம், "தீர்க்கதரிசி" ஆபிரகாம் வயது 75.

"தீர்க்கதரிசி" ஆபிரகாம் சாராவை பார்த்து இவ்வாறு சொன்னார்,
"சாரா, நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று நான் அறிவேன். எகிப்தியர் உன்னை கண்டால், நான் உனக்கு கணவன் (75yr முதியவன்) என்று  தெரிந்தால் என்னை கொன்று போட்டு, உன்னை உயிரோடு வைப்பார்கள். ஆகையால், உன்னால் நான் உயிர் பிழைக்க யாரும் கேட்டால் 'நான் இவர் சகோதரி' என்று சொல்"
என்றார்.

எகிப்தியர்கள், தன் தலைவர் பார்வோன் (Pharaoh/Abimelech) முன் கொண்டு சென்றனர்.
பார்வோன் (Pharaoh) 'தீர்க்கதரிசி' ஆப்ரகாமிடம் "இவள் யார்?" என்று கேட்டார்.
'தீர்க்கதரிசி' ஆப்ரகாம் "இவள் என் சகோதரி" என்றார்.




அவளும் "ஆப்ரகாம் தன் சகோதரர்" என்று சம்மதிக்க, இவள் அழகின் காரணமாக இவளை தன் அரண்மனைக்கு கொண்டு சென்றனர்.

சகோதரியை தனக்கு தந்த உத்தமர் 'தீர்க்கதரிசி ஆப்ரகாமுக்கு பரிசாக - கழுதை, ஆடு, மாடு, ஒட்டகம், வேலைக்காரன், வேலைக்காரிகள் கொடுத்தான் பார்வோன் (Pharaoh).

ஆனால் அந்த இரவு, கடவுள், பார்வோன் (Pharaoh) கனவில் வந்து,
"நீ சாக வேண்டியவன். நீ எந்த பெண்ணை உன் அரண்மனையில் வைத்து உள்ளாயோ, அவள் மணமானவள்"
என்றார்.

பார்வோன் (Pharaoh) நிதானமாக கடவுளை பார்த்து
"நீ இப்படி தான் அப்பாவிகளை தண்டிப்பாயோ!!"
என்றார்.

மேலும் தொடர்ந்தான் பார்வோன் (Pharaoh),
"ஆப்ரகாம் தன் வாயாலேயே 'இவள் என் சகோதரி' என்றான். அவளும் 'ஆப்ரகாம் என் சகோதரன்' என்றாள். 
இப்படி இருக்க, இவளை என் அரண்மனைக்கு அழைத்து வந்த போது என் மனம் தவறு செய்ததாக சொல்லவில்லை. 
நான் குற்றம் செய்யாதவனே " 
என்றான்.

கடவுள்,
"எனக்கு தெரியும் நீ பாவம் செய்யவில்லை என்று. 
அதனால் தான் நீ இது வரை அவளை தொட்டு விடாதவாறு தடுத்து உள்ளேன். இவளை அவன் கணவனிடம் திருப்பி கொடுத்து வி்டு. 
அவர் ஒரு தீர்க்கதரிசி (Prophet). 
அவர் நீ செய்த இந்த காரியத்துக்கு உன் சார்பில்  மன்னிப்பு கேட்டு, உன் பாவத்திலிருந்து காப்பார். 
ஒரு வேளை நீ அவளை கொடுக்கவில்லை என்றால், நீயும், உன்னோடு உள்ள அனைவரும் இறந்து விடுவீர்கள்" 
என்று சொல்லி மறைந்தார்.

அடுத்த நாள் காலை, பார்வோன் (Pharaoh/Abimelech), 'தீர்க்கதரிசி' ஆப்ரகாமை அழைத்து
"என்ன காரியம் நீ எங்களுக்கு செய்து இருக்கிறாய்? இவள் உன் மனைவி என்று சொன்னால் என்ன? என்ன தவறு உனக்கு செய்தோம் என்று, இப்படி ஒரு தவறான செயலை நாங்கள் செய்ய தூண்டினாய்? 
உன்னுடைய நோக்கம் என்ன?"
என்று கேட்டான்.

'தீர்க்கதரிசி' ஆபிரகாம், பார்வோனை (Pharaoh) பார்த்து,
"உங்கள் நாட்டில், யாருக்குமே இறைவனை கண்டு பயமிருக்காது என்று நினைத்தேன். 
அதனால் என் மனைவியின் காரணமாக, என்னை கொன்றுவிடுவீர்கள் என்ற உயிர் பயத்தில் இப்படி சொன்னேன்" 
என்றார்.

மேலும் தொடர்ந்து தீர்க்கதரிசி "ஆபிரகாம்" இவ்வாறு பேசலானார், "உண்மையில் இவள் எனக்கு சகோதரி முறையும் தான். என் தந்தைக்கு இவள் மகள், ஆனால் வேறு தாய்க்கு பிறந்தவள். 
எனக்கு மனைவியும் தான். 
நான் தான் அவளிடம் யார் கேட்டாலும் என் சகோதரன் இவர் என்று சொல்ல சொன்னேன்" 
என்றார்.

தீர்க்கதரிசி "ஆபிரகாம்" பேச்சை கேட்ட, பார்வோன் (Pharaoh/Abimelech), இவருக்கு பரிசாக கொடுத்த - கழுதை, ஆடு, மாடு, ஒட்டகம், வேலைக்காரன், வேலைக்காரிகள் அனைத்தையும் திரும்ப பெற்றான்.

இவன் மனைவி & சகோதரி "சாரா"வை "தீர்க்கதரிசி" ஆபிரகாமிடம் திருப்பி கொடுத்தான்.

பார்வோன் (Pharaoh/Abimelech) சாராவை பார்த்து, "உன் சகோதரனுக்கு நான் ஆயிரம் வெள்ளி காசு தருகிறேன். இதை கொண்டு நீங்கள் வாழுங்கள்" என்றான்.




பார்வோன் (Pharaoh/Abimelech) தீர்க்கதரிசி ஆபிரகாமை பார்த்து,
"இதோ என் நாடு, நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம்" என்றான்.

தீர்க்கதரிசி "ஆபிரகாம்" வென்றார்.

திருவாசகம், ஆத்திச்சூடி போன்ற நூல்களில் கூட காண முடியாத தத்துவங்கள், இந்த நிகழ்ச்சியில் உள்ளது.

https://www.sefaria.org/Genesis.21?lang=bi