Followers

Search Here...

Thursday 28 February 2019

அன்பே சிவம் என்றும் செயலே தெய்வம் என்று சொல்லும் போலிகளுக்காக ஒரு அலசல்...

நாம் செய்யும் செயலுக்கு, தானாகவே பலன் கிடைத்துவிடும். நடுவில் கடவுள் எதற்கு? என்று கேட்கிறார்கள் சில மூடர்கள். கடவுளை எப்படியாவது மறுக்க வேண்டும் என்பதற்காக, இவர்கள்
"செயலே (கர்மா) தெய்வம்" என்று விஷமமாக பேசுகிறார்கள்..


"கடமையே தெய்வம்", "செயலே தெய்வம்" என்று சொல்லும் இந்த போலிகள், கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.
அதே போல,
இன்னும் சிலர்,
"அன்பே சிவம்" என்று சொல்லி, கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.

இன்னும் சிலர்,
"தமிழே தெய்வம்" என்று சொல்லி, கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.

இன்னும் சிலர்
"அறிவே தெய்வம்" என்று சொல்லி, கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.

உண்மையை உணர்ந்த ஞானியோ,
"அன்பு மட்டும் தான் தெய்வமா? 
தமிழ் மட்டும் தான் தெய்வமா?
அறிவு மட்டுமே தெய்வமா? 
செயல் (கர்மா) மட்டுமே தெய்வமா? 
எல்லாமுமே தெய்வம் தான்." என்கிறார்கள்.


"தமிழே தெய்வம்" என்று சொன்னால், உலகத்தில் உள்ள பிற மொழிகள் எல்லாம் தெய்வம் இல்லையா?
இப்படி சொல்லும் பிரிவினைவாதிகள் அனைவருமே போலிகள். இவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். மனித சமுதாயத்துக்கே ஒரு கறை போன்றவர்கள்.

தெலுங்கு பேசுபவனுக்கு "தெலுங்கே தெய்வம்",
ஹிந்தி பேசுபவனுக்கு "ஹிந்தியே தெய்வம்".
அவனவனுக்கு அவன் தாய் மொழி தெய்வம்.

"தாய் மொழியை மதிக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு பிற மொழிகளை மிதிக்கலாமா?

இப்படி "தமிழே தெய்வம்" என்று பேசுபவர்கள், "தமிழ் மொழியே தெய்வம், என்று சொல்லி சொல்லி, தெய்வத்தை மறுப்பது மட்டுமில்லாது, பிற மொழி வெறுப்பையும் விதைக்கிறார்கள்.

இவர்கள் உண்மையில் திருடர்கள். இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்களை ஒதுக்க வேண்டும்.

"தமிழே தெய்வம்" என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே,
"சமஸ்கரிதம் தெய்வமில்லை, கன்னடம் தெய்வமில்லை. ஜப்பானிய மொழி தெய்வமில்லை" 
என்றெல்லாம் பேச வைக்கும்.

இப்படி பேசுவதாலேயே, நமக்குள் ஒரு விஷம் ஏற்றப்படுகிறது. பிறமொழி பேசும் சக மனிதனிடம் பகை உண்டாக்கப்படுகிறது.


குறுகிய மனப்பான்மை கொண்டு, தெய்வத்தை மறுத்து, ஒரு மொழியை மட்டும் தெய்வம் என்று ஏமாற்றும் கூட்டத்தை கண்டிக்க வேண்டும்.

"என் மொழி உயர்ந்தது, தொன்மை வாய்ந்தது" என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.
அதற்காக தெய்வத்தை மறுத்து, தன் மொழியையே தெய்வம் என்று சொல்லலாமா? 
தமிழ் வேதமாக போற்றப்படும் 4000 திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் பாசுரங்கள் தமிழ் மொழியில் தானே எழுதப்பட்டது? 
"தமிழே தெய்வம்" என்று சொல்லும் இந்த போலிகள் பாசுரங்களை மேடைகளில் சொல்லி தமிழை வளர்க்கிறார்களா, வளர்ப்பார்களா? 
தமிழ் பாசுரங்களை, பிரபந்தங்களை ஏற்காமல், அந்த பாசுரங்கள் துதிக்கும் தெய்வங்களை ஏற்காமல், "தமிழே தெய்வம்" என்று பேசும்போதே இவர்கள் போலிகள் என்று தெளிவாக தெரிந்து விடுகிறது.





தமிழை வளர்த்த சித்தர்கள், மகான்கள், சிவனையும், நாராயணனையும் தானே தெய்வம் என்றனர்?
தெய்வத்தை ஒதுக்கி விட்டு, 
இவர்கள் தந்த பாசுரங்களையும் ஒதுக்கி விட்டு, இன்றைய நாத்தீக  போலிகள் "தமிழே தெய்வம்" என்று சொல்லி, ஊரை  ஏமாற்றுகின்றனர். 

"செயலே தெய்வம்" என்றும்,
"மொழியே தெய்வம்" என்றும்,
"அன்பே தெய்வம்" என்றும்
சொல்லி, நம் தெய்வத்தை நிராகரிக்கும் இந்த போலிகளை உதைத்து விரட்டுவோம்.

"அன்பே தெய்வம்" என்று தெய்வத்தை மறுத்து பேசும் போலிகளுக்கு, திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்,
"அன்பு மட்டுமா தெய்வம்?. பாவமும் தெய்வம் தான், புண்ணியமும் தெய்வம் தான். நரகமும் தெய்வம் தான். சொர்க்கமும் தெய்வம் தான்" என்கிறார்.

அன்பு என்பது ஒரு குணம் தானே.
ஒரு குணமே எப்படி தெய்வமாக முடியும்?

தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமே "அன்பே சிவம்" என்று சொல்லி, தெய்வத்தை நிராகரிக்க முயல்வார்கள். 
இது போன்ற போலிகளை ஒரு போதும் வளர்க்க கூடாது.

நாயன்மார்களை கேட்டால், அந்த அன்பு என்ற கருணை உடையவன் ஈசன் என்று சொல்லி, "சிவமே அன்பு" என்று அன்பு என்ற குணம் சிவனில் அடக்கம் என்று, சொல்கிறார்கள்.
அப்படி இருக்க ஒரு குணம் மட்டும் எப்படி தெய்வம் என்று சொல்ல முடியும்?
இது தான் தெய்வத்தை மறுப்பவர்கள் பகுத்தறிவா? வெட்கக்கேடு..
இது போன்ற உரையாடல் தான் யாதவப்ரகாசருக்கும், ஸ்ரீ ராமானுஜருக்கும் ஏற்பட்டது. 


யாதவப்ரகாசர் தன் சிஷ்யர்களிடம் "அறிவே தெய்வம்" என்று பேசினார்.

"அறிவே தெய்வம்" என்று சொல்வதால், வேதத்தில் சொன்ன பரமாத்மா 'தெய்வம்' இல்லை என்று சொல்வது போல ஆகி விட்டது.
ஸ்ரீராமானுஜர் எழுந்து
"அறிவே தெய்வம் என்று சொல்கிறீர்களே...
அறிவே தெய்வமா? அல்லது, அறிவு உடையவன் தெய்வமா?" 
என்று திருப்பிக்கேட்டார்.

மேலும்,
"'அறிவே தெய்வம்' என்று சொன்னால் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம்.
ஆனால், தெய்வத்தை மறுத்து 'அறிவே தெய்வம்' என்று நம்மை சொல்லச் சொல்லவிலலையே?

இப்படி சொல்ல ஏன் அனுமதித்தார்கள்? என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

பெற்ற அறிவை (கல்வியை) பொக்கிஷம் போல, தன் உயிர் போல, ஒருவன் பாதுகாக்க வேண்டும். அறிவை வளர்த்துக்கொள்ள எப்பொழுதும் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காக, "அறிவே தெய்வம்' என்று சொல்லும் பழக்கம் வந்ததே தவிர, தெய்வத்தை மறுத்து, அறிவு மட்டுமே தெய்வம் என்று சொல்வதற்காக சொல்லப்படவில்லை.

'அன்பே தெய்வம்' என்று சொல்வதன் நோக்கம், "நாம் அனைவரும் பிற உயிர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும்" என்பதற்காக சொல்லப்பட்டது. அன்பு என்ற குணம் மட்டுமே தெய்வம் என்று சொல்லி, தெய்வத்தை மறுப்பதற்காக சொல்லப்படவில்லை.

அது போல,
'தமிழே தெய்வம்' என்று சொல்வதன் நோக்கம், "நம்முடைய தாய் மொழியாக உள்ள தமிழை அப்படி உயிராக நினைக்க வேண்டும், பற்று வர வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதே தவிர, தெய்வத்தை மறுத்து, தமிழ் என்ற மொழியையே தெய்வம் என்று சொல்வதற்காக இல்லை.
கடவுளை மறுப்பவன், இது போன்ற சொல்லை பயன்படுத்தினால், கண்டிக்க வேண்டியது ஹிந்துக்களின் கடமை.

அது போல,
'கர்மாவே தெய்வம்', 'கடமையே தெய்வம்' என்று சொல்வதன் நோக்கம்,
"அவனவனுக்கு விதிக்கப்பட்ட கடமையை உயிராக நினைத்து செய்ய வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதேயன்றி, தெய்வத்தை மறுத்து, செயலே தெய்வம் என்று பேசுவதற்காக இல்லை. 

ஒரு செயலே எப்படி தானாக பலன் கொடுக்க முடியும்?
நியாயமாக உழைத்தால் அதற்கு தகுந்த கூலி அந்த செயலாலேயே கிடைத்து விடும் என்றால், எதற்காக சம்பளம் போதாது என்று போராட்டம் நடக்கிறது?
செய்த செயலுக்கு கூலி கிடைக்கவில்லையே என்று போராட்டங்கள் ஏன் நடக்கிறது? 
கர்மாவே தெய்வம் என்றால், போராட்டங்கள் எதற்கு? 

அவனவன் செயலுக்கு, அந்த செயலே கூலி தரும் என்று பேசினால், வேலையை செய்து விட்டு, கூலி தானாக கிடைக்கும் என்று அமைதியாக இருக்கலாமே?

உலக வழக்கில் பார்த்தாலே, நாம் செய்த கர்மாவுக்கு (செயலுக்கு), கூலியை ஒரு முதலாளி தானே, நமக்கு கொடுக்கிறான்.

முதலாளியின் பிரியத்தை சம்பாதித்தவன், தான் செய்யும் செயலுக்கும் மீறி, அதிகமாக கூட கூலி பெறுகிறானே...
கர்மாவே தெய்வமா? கர்மாவுக்கு பலன் கொடுக்கும் முதலாளி தெய்வமா?
யோசிக்க வேண்டாமா?

சில அசட்டு பக்தன், தெய்வம் காப்பாற்றுவார் என்று தன் கடமையை கூட செய்யாமல் இருந்து விடுவான்.

தனக்கு விதிக்கப்பட்ட கர்மாவை செய்யாமல் இருக்க கூடாது, "கர்மாவை செய்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார் என்று பார்க்கிறோம்.
அர்ஜுனனை பார்த்து "க்ஷத்ரியனான நீ, உன் கடமையை செய். தர்மத்துக்காக போரிடு. என்னிடம் பக்தியுடன் இரு. நான் உன் கடமைக்கு ஏற்ற கூலியை கிடைக்க செய்கிறேன்" என்கிறார்.

'கர்மாவை செய்' என்று தன் பக்தனுக்கும் சேர்த்து சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
"கர்மாவை செய்.. பலனை எதிர்பார்த்து கர்மாவை செய்யாதே.. பலன் கொடுப்பதை என்னிடம் விட்டுவிடு" என்கிறார்.

தன்னை சரண் அடைந்தவனும் கர்மாவை செய்ய வேண்டும் என்று சொல்லும் ஸ்ரீ கிருஷ்ணர்,
தன் பக்தன் செய்யும் செயலில் குற்றம் குறை இருந்தாலும், முதலாளியாக இருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், செயலுக்கு தகுந்த பலன் மட்டும் கொடுக்காமல், அவன் எதிர்பார்த்ததை விட அதிகமாக பலன்களை, உலக சௌக்கியங்கள் ஆரம்பித்து, மோக்ஷம் வரை வழி செய்து கொடுத்து விடுகிறார்.
"கர்மாவே தெய்வம்" அதனால் வேறு தெய்வம் இல்லை என்று நாத்தீகனை போல பேசும் மூடர்கள் செய்த கர்மா அளவுக்கு மட்டும் பலனை பகவானிடம் இருந்தே பெற்று, கடவுள் இல்லை, கர்மாவே தெய்வம் என்று உலறுக்கிறார்கள்.

தெய்வத்தை மறுத்து,
"அன்பே சிவம்" என்றும்,
"தமிழே தெய்வம்" என்றும்,
"அறிவே தெய்வம்" என்றும் 
பேசும் போலிகளை ஒடுக்குவோம்.

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் ஒன்று படுவோம்.
போலிகளை ஒடுக்குவோம்.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka  




Saturday 16 February 2019

சரணாகதி செய்து விட்டால் மட்டும், பகவான் காப்பாற்றி விடுவாரா?... ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது...

குருவே துணை

"பகவானை நாம் சரணம் அடைந்தால், பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுகிறார்".


திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஒரு மகான் சேங்கனூர் என்ற ஊரில் பிறந்தார்.
பெரியவாச்சான் பிள்ளை, அவரது குரு நம்பிள்ளை
இதே ஊரில் தான் 4000 திவ்ய பிரபந்ததுக்கும் விளக்க உரை எழுதிய ரோகினி நக்ஷத்திரத்தில், அவதரித்த பெரியவாச்சான் பிள்ளை என்ற கிருஷ்ணசூரியும் தோன்றினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாட்டில், கும்பகோணம் அருகில் உள்ளது "சேங்கனூர்" என்ற இந்த க்ஷேத்ரம்.

சேங்கனூர் அருகில் உள்ள திருக்கண்ணமங்கை கோவிலில் உள்ள பக்தவத்சல பெருமாளிடம் இவருக்கு இருந்த பக்தியின் காரணமாக திருக்கண்ணமங்கை ஆண்டான் எனறே பெயர் அமைந்தது.

கோவிலில் தானே, பூ கைங்கர்யம் செய்து கொண்டு, கோவிலை சுத்தப்படுத்தி கொண்டு, பகவானிடம் சரணாகதி செய்து, வாழ்ந்து வந்தார்.
ஒரு சமயம், "பகவான் சரணாகதி செய்பவர்களை காப்பாற்றுவார் என்று எப்படி நம்புவது?" என்ற சந்தேகத்துடன் இருந்த ஒருவர், திருக்கண்ணமங்கை ஆண்டானிடத்தில், அவர்கள் வந்து,
"சரணாகதி.. சரணாகதி.. என்று சொல்கிறீரே. 
நாம் சரணாகதி செய்து விட்டால் மட்டும் பெருமாள் காப்பாற்றி விடுவாரா?" 
என்று அவரிடம் சாஸ்திரத்தின் மேல் நம்பிக்கை இல்லாததால், விதண்டாவாதம் செய்தார்.


திருக்கண்ணமங்கை ஆண்டான், இவருக்கு சாஸ்திரத்தை கொண்டு பதில் சொல்லவில்லை. மௌனமாகவே உடகார்ந்து இருந்தார்.

'சாஸ்திரம் இப்படி சொல்லி இருக்கிறது' என்று சொன்னால், சாஸ்திரத்தை நம்ப இவர் தயாரில்லை.
இவரிடம், சாஸ்திரத்தை கொண்டு நிரூபிக்க முயற்சி செய்வது வீண்.

சாஸ்திரத்தை நம்பாத ஜனங்களிடம், சகஜமாக உலகத்தில் நடக்கும் விஷயங்களை காட்டி நிரூபிக்கலாம்.

'சாஸ்திரம் இப்படி சொல்லி இருக்கிறது' என்று சொல்லி புரியவைக்க முடியாத ஜனங்களுக்கு, ஹித உபதேசங்கள் செய்து ஆசாரியர்கள் நல்வழி படுத்திவிடுவார்கள்.

அந்த சமயம்,
எதிர் வீட்டில் ஒருவன் நாய் வளர்த்து கொண்டு இருந்தான்.
அன்று, அவனோடு அந்த நாய் தெருவோடு நடந்து கொண்டிருக்கும் போது,
அந்த தெருவிலேயே இருக்கும் இன்னொரு நாய், இதை பார்த்தவுடன், அங்கிருந்து வேகமாக ஓடி வந்து, இவனின் நாயை பார்த்து கோபத்துடன் "லொள் லொள்.." என்று ஹிம்சை பண்ண ஆரம்பித்தது.


யாரிடமோ பேசி கொண்டிருந்த அந்த வீட்டு நாயின் எஜமானன், தான் வளர்க்கும் நாய் ஹிம்சிக்கப்படுகிறது என்று பார்த்த அடுத்த நொடி, 'குபீர்' என்று பாய்ந்து, தன் நாயை தாக்க வந்த அந்த நாயை கல்லால் அடித்து துரத்தி விட்டு, தன் சொந்த நாயை அணைத்து கொண்டு, தன் வீட்டுக்கு கூட்டி சென்றான்.
இந்த நிகழ்வை பார்த்து கொண்டிருந்த திருக்கண்ணமங்கை ஆண்டான், தன்னிடம் விதண்டாவாதம் செய்தவரை பார்த்து,
"இந்த எஜமானனுக்கு ஏன் இந்த நாயின் மேல் அபிமானம் ஏற்பட்டது?
இந்த எஜமானனும் நாயும் ஒரே ஜாதியா? ரத்த சம்பந்த உறவா?"
என்று கேட்க,




"இது இவன் சொந்த நாய். அதனால் அபிமானம் இவனுக்கு ஏற்பட்டது" என்றார்.

"சொந்த நாயாக இது ஆவதற்கு காரணம் என்ன?" என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் கேட்க,

"இந்த நாய் அவன் வீட்டோடு எப்பொழுதும் இருக்கிறது. 
அவன் கொடுக்கும் உணவை சாப்பிட்டு, அவன் காலையே சுற்றி சுற்றி வருகிறது. 

இந்த அன்பு, அந்த எஜமானனுக்கு ஜாதியில் இது நாயாக இருந்தாலும், தன் சொந்தம் என்று நினைக்க வைக்கிறது. இதை காப்பாற்ற வேண்டியது தன் பொறுப்பு என்று நினைக்கிறான்" என்றார்.

"தனக்கு பிரியமான இந்த நாய் மேலே, இன்னொரு நாய் வந்து ஹிம்சை செய்தால் அதை தான் விலக்கி, அணைத்து காப்பாற்றுவது ஒரு அல்ப மனிதனுக்கே ஸ்வபாவமாக இருக்குமென்றால்,
பக்தவத்சலனான திருக்கண்ணமங்கை எம்பெருமான் அப்படி செய்ய மாட்டாரா?
எம்பெருமானே கதி என்று அவர் அடியிலேயே கிடக்கும் அடியார்களை, அணைத்து கொள்ளாமல் இருந்து விடுவாரா?


அந்த தெரு நாய் போன்று, மோக்ஷத்திற்கு எதிரான பாதையில் திருப்பி, மீண்டும் உலக விஷயங்களில் திருப்ப நினைப்பவர்களை, தன் அடியார்களோடு சேரவிடாமல் விலக்கி, அணைத்து கொண்டு காப்பாற்ற மாட்டாரா, எம்பெருமான்?.
"சரணாகதி செய்தால், சத்தியமாக எஜமானன் காப்பாற்றுகிறான்" என்று உலக வாழ்க்கையிலேயே தெரியும் பொழுது,
கருணையே வடிவான எம்பெருமான், சரணாகதி செய்தவர்களை காப்பாற்றுவாரா என்று சந்தேகமும் ஒருவனுக்கு எழும்புமா?"

சரணாகதி செய்த அடியார்களுக்கு எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதே லட்சியம்.

அந்த கைங்கர்யம் செய்து கொண்டிருப்பது மட்டுமே சரணாகதி செய்தவன், தன் எஜமானனான எம்பெருமானுக்கு செய்ய வேண்டியது"
என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் ஹித உபதேசமாக உலக விஷயத்தை வைத்தே விளக்கி சொல்ல,
சந்தேகம் தெளிந்து விடைபெற்றார் அந்த நபர்.

சரணாகதி செய்தவன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

காலை 4 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள்,
பல் துலக்கி,
கை கால்களை அலம்பிக்கொண்டு,
விஷ்ணு சஹஸ்ரநாமம்,
கஜேந்திர மோக்ஷம்,
ருத்ர கீதம்,
ப்ராத ஸ்மரணம் ,
சுப்ரபாதம்,
ஆத்ம நிவேதனம்,
திருப்பள்ளி எழுச்சி,
திருப்பாவை
முதலியவைகளை சொல்லி,
ராமானுஜர், மாத்வர், ஆதிசங்கரர் போன்ற ஆசார்யர்களும்,
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் போன்ற அவதார புருஷர்களும்,
மேலும் பல மகான்களும் இயற்றிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து கொண்டு,

காலை 6 மணி முதல், 8 மணிக்குள், 
ஸ்நானம், அனுஷ்டானம் செய்து,
ஸ்ரீமத் பாகவதமோ,
ஸ்ரீமத் ராமாயணமோ,
ஸ்ரீமத் பகவத் கீதையோ,
ஒரு வேளை, தேவர்களின் பாஷையான சம்ஸ்க்ரிதம் தெரியாதவர்கள் என்றால்,
4000 திவ்ய ப்ரபந்தமோ பாராயணம் செய்ய வேண்டும்.
பாராயணம் முடித்து விட்டு, பூஜை செய்ய வேண்டும்.

மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை, தனிமையான இடத்தில் மௌனமாக அமர்ந்து கொண்டு பகவானின் மூர்த்தியை தியானம் செய்து கொண்டோ,
ஹரே ராமா சொல்லிக்கொண்டோ,
குருவிடம் உபதேசம் ஆகி இருந்தால், அவர் உபதேசம் செய்த பகவன் நாமாவை குருவின் திருவடியை தியானம் செய்து கொண்டே சொல்லிக்கொண்டோ, இருக்க வேண்டும்.


தினசரி குடும்ப காரியங்களுக்கு இடையில் ஒழிவு/நேரம் கிடைக்கும் போதும், விடுமுறை நாட்களிலும்
கிருஷ்ண சைதன்யர் சரித்திரமமோ,
ஸ்ரீ ராமகிருஷ்ணர் சரித்திரமோ,
பாரத மண்ணில் தோன்றிய மீரா, துளசிதாஸ், துக்காராம், ஏகநாதர், பத்ராசல ராமதாசர், சமர்த்த ராமதாசர் போன்ற பக்தர்களின் சரித்திரமமோ,
ஆழ்வார்கள், நாயன்மார்கள் சரித்திரமோ,
அல்லது
இந்த மகான்கள் நமக்கு சொன்ன உபதேங்களை தனியாக படித்துக்கொண்டோ, பலபேர் கூடியோ படிக்க வேண்டும்.

பகல் தூக்கம் கூடாது.
பகல் தூக்கம் ஆரோக்கியத்துக்கும் கெடுதல்.
பகல் தூக்கத்தினால், நேரம்  வீணாகி, பாரமார்கத்துக்கும் விரோதமாகிறது.

இந்த விதியை மனிதனாக பிறந்த அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

பெரியவர்கள் மட்டுமில்லாது,
குடும்பத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும் அனுசரித்து கொண்டு, உற்சாகத்துடன் செய்ய வேண்டும்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்த வரிசைப்படி செய்ய சொல்லி தர வேண்டும்.

இப்படி ஒரு நியமப்படி, தானும் வாழ உண்மையாக ஆசைப்படுபவர்களுக்கு பகவான் அவர்கள் வாழ்க்கையை அனுகூலம் ஆக்கி கொடுப்பான்.

இப்படி வாழ்ந்தால் பகவான் நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகிறார். அவரே நம்மை காண வருவார்.
மகான்கள் நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இது ஒவ்வொரு ஹிந்துவின் வாழ்க்கை முறை.

ஹிந்துவாக பிறந்த நாம், இந்த முறையில் வாழ முயற்சிப்போம்.

"பகவானை நாம் சரணம் அடைந்தால், பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுகிறார்".

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka


sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka



எந்த பலம் நமக்கு இருந்தால், தன்னம்பிக்கை எல்லையில்லாமல் இருக்கும்? ...

"க்ரதுமய புருஷ:" என்று வேதம் (சாந்தோக்ய உபநிஷத்) சொல்லும் போது,
"நம்பிக்கையே வடிவமாக இருப்பவன் மனிதன்" என்று மனிதனின் அடையாளத்தை சொல்கிறது.


"நம்பிக்கையை ஒரு மனிதன் இழந்து விட்டால்", அவன் உலகில் வாழ முடியாது போகிறான்.

உலகில் வாழ்வதற்கே, மனிதனுக்கு முதலில் தேவைப்படுவது "தன்னம்பிக்கை".
எந்த காரியத்தை எடுத்தாலும் "என்னால் செய்ய முடியாது" என்ற நம்பிக்கை இல்லாதவனாக இருந்தால், அவனால் எதிலும் முன்னேற முடியாமல் போகிறது. 
"ஒழுங்காக படிக்கிறாயா?" என்று கேட்டால், ஒரு மாணவன் "ஏதோ படிக்கிறேன்" என்று தன்னம்பிக்கை இல்லாமல் சொன்னால்,
அவனுடைய நம்பிக்கையின்மையே ஜெயிக்க முடியாதபடி செய்து விடும்.
"வேலை பார்க்கிறாயா?" என்று கேட்டால், ஒருவன் "ஏதோ பார்க்கிறேன்" என்று தன்னம்பிக்கை இல்லாமல் சொன்னால், அவனுடைய நம்பிக்கையின்மையே ஜெயிக்க முடியாதபடி செய்து விடும்.
"கல்யாணம் செய்து வைக்கலாமா?"
 என்று தகப்பன் கேட்டால், பிள்ளை "செய்து வையுங்கள். குடும்பம் ஏதோ நடத்த பார்க்கிறேன்" என்று தன்னம்பிக்கை இல்லாமல் சொன்னால், அவனுடைய நம்பிக்கையின்மையே ஜெயிக்க முடியாதபடி செய்து விடும்.

இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும் மனிதன், உலக வாழ்க்கைக்கே லாயக்கு இல்லாமல் போகிறான்.
நான் இந்த படிப்பு படிப்பேன்,
இந்த மாதிரி உத்யோகம் பார்ப்பேன்,
கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவேன்
என்று சொன்னால் தானே, அது தன்னம்பிக்கைக்கு லக்ஷ்னமாகும்.
படிப்பு, தனக்கு தகுந்த படிப்பா?
உத்யோகம், உயர்ந்த உத்யோகமா?
கல்யாணம் செய்து கொண்ட துணை சரியான துணையா?
என்று பார்ப்பது, ஒரு புறம் இருந்தாலும்,
எப்படி இருந்தாலும் தன்னம்பிக்கையோடு இருப்பேன் என்று சொல்வது தானே மனிதனுக்கு அழகு.


தனக்கு விதிக்கப்பட்ட காரியங்களில் ஸ்ரத்தை (ஈடுபாடு) இல்லாதவன், தன்னம்பிக்கையை இழக்க நேரும்.
இப்படிப்பட்டவர்கள் உலக வாழ்க்கைக்கே லாயக்கு இல்லை.
திடமான தன்னம்பிக்கை உடையவன், எப்பொழுதும் எல்லையற்ற ஆச்சர்யமான காரியங்களை செய்வான்.
இதற்கு யார் சாட்சி? நம் வீர ஹனுமானே சாட்சி.

தன்னம்பிக்கை நமக்கு இரண்டு விஷயங்களை பொறுத்து வருகிறது.

  1. ஒன்று, நம்முடைய உடல், அறிவு பலத்தை அறிந்து கொள்வதால் ஏற்படும் "தன்னம்பிக்கை".
  2. மற்றொன்று, தெய்வம் நமக்கு துணை நிற்கிறது என்பதை உணர்ந்து கொள்வதால் ஏற்படும் "தன்னம்பிக்கை".

சீதா தேவியை கண்டுபிடிக்க, நாற்புறமும் வானரர்கள் சுக்ரீவனால் அனுப்பப்பட்டனர்.
தெற்கு நோக்கி வந்த வானர சைன்யத்தில் (படையில்), ஹனுமான் இருந்தார்.

கடலை தாண்டி, இலங்கை சென்று பார்க்க வேண்டும் என்கிற நிலையில், அனைத்து வானரர்களும் ஒரு கூட்டம் போட்டு ஆலோசித்தனர்.

ஒரு வானரன் "நான் 10 யோஜன தூரம் தாண்டுவேன்" என்றான்,
மற்றொரு வானரன் "நான் 20 யோஜன தூரம் தாண்டுவேன்" என்றான்,
மற்றொரு வானரன் "நான் 30 யோஜன தூரம் தாண்டுவேன்" என்றான்,

மகா பலசாலியான அங்கதன், "100 யோஜன தூரமும் தாண்டி விடுவேன், ஆனால் திரும்பி வர முடியாது" என்றான்.
"சிறு வயதாக இருந்தால் தாண்டி, சீதா தேவி அங்கு உள்ளாரா என்று பார்த்து விட்டு, திரும்பியும் வந்து விடுவேன்.. வயதாகி விட்டதால் தாண்ட முடியாது" என்றார் ஜாம்பவான்

இப்படியே ஒவ்வொரு வானரனும் தன் உடல், அறிவு பலத்தை அறிந்து கொண்டு, அவரவர்கள் எவ்வளவு தூரம் தாண்ட முடியும் என்று, தன்னம்பிக்கையுடன் பேசினர்.
ஹனுமானை கேட்டதும், "கடலை தாண்டுவேன். சீதையை பார்ப்பேன். மீண்டும் திரும்பி வருவேன்" என்று எல்லையற்ற திடமான தன்னம்பிக்கையுடன் மார்பு தட்டிக்கொண்டு சொன்னார்.





எல்லையற்ற திடமான தன்னம்பிக்கை ஹனுமானுக்கு மட்டும் எப்படி ஏற்பட்டது?

மற்ற வானரர்கள் அனைவரும், தங்கள் உடல் வலிமையை மட்டும் வைத்து ஆலோசித்ததால், தன் சுயபலத்தை கொண்டு ஏற்பட்ட "தன்னம்பிக்கையிலேயே" அவர்களுக்கு அவநம்பிக்கை வந்தது.

இத்தனை பெரிய காரியத்தை செய்ய வேண்டும் என்கிற போது, தன் பலத்தை கொண்டு ஏற்பட்ட "தன்னம்பிக்கையிலேயே" அவர்களுக்கு அவநம்பிக்கை வந்தது.

ஹனுமான் தான் "ராம பக்தன்" என்று அறிந்தவர்.
மேலும், தன் பக்தியால், ராமரின் அபிமானத்துக்கு பாத்திரமானவர்.
தெய்வம் எல்லோருக்கும் பொதுவானவர் என்றாலும்,
"கடவுளா? எங்கே காட்டு!!" என்று திமிராக பேசுபவனை காட்டிலும்,
"100 கோடி ராம நாமம் சொன்னால் ஸ்ரீ ராமரை தரிசிக்கலாம்" என்று தியாகராஜரை பார்த்து அவர் அப்பா சொல்ல,
"100 கோடி ராம நாம ஜபம் செய்து பார்த்து விட வேண்டும்" என்று ஆவலோடு ஜபம் செய்த அவருக்கு ஸ்ரீ ராமர் தரிசனம் கொடுத்தார் என்று பார்க்கிறோம்.

தன் உடல், அறிவு பலத்தால் ஏற்படும் தன்னம்பிக்கை, உடல், அறிவு பலத்தை தாண்டிய செயல்கள் செய்ய நிலை வரும் போது உடைந்து போகும்.

தெய்வத்திடம் உண்மையாக பக்தி (உறவு, அன்பு, ஆர்வம், உருக்கம் சேர்ந்தது "பக்தி") செய்து, தெய்வம் மனம் குளிர நாம் வாழ்ந்தால், தெய்வ அணுகிரஹத்தால், நாம் செய்யும் எந்த காரியமும் சுபமாக முடியும்.

ஹனுமானின் "ராமபக்தி" உலகம் அறிந்தது.

ஹனுமான் கடலை தாண்ட வேண்டும் என்று மற்ற வானரர்கள் பேசி கொண்டிருக்கும் போது, யோசித்து பார்த்தார்.
"சீதையை தேட லட்சக்கணக்கான வானரர்களை சுக்ரீவன் நாற்புறமும் அனுப்பினார்.  
சீதைக்கு தன் அடையாளமாக காட்ட, ஸ்ரீராமர், தன் கையில் அணிந்திருந்த கனையாழியை (மோதிரத்தை) எந்த வானரனுக்கோ கொடுத்து இருக்கலாம்.
இத்தனை வானரர்களிடையே, அடியேனான என்னை தேர்ந்தெடுத்து எப்பொழுது கூப்பிட்டு, இந்த கனையாழியை (மோதிரத்தை) என்னிடம் கொடுத்தாரோ!!
இதிலிருந்தே, நான் நிச்சயம் சீதா தேவியை பார்க்க போகிறேன் என்று தெரிகிறது.
இந்த தன்னம்பிக்கை என்னுடைய உடல், அறிவு பலத்தால் வந்தது அல்ல,
இந்த எல்லையற்ற தன்னம்பிக்கை, 'ஸ்ரீ ராமர் என்னை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்' என்கிற தெய்வ பலத்தால் என்று அறிகிறேன்"
என்று மனதுக்குள் புரிந்து கொண்டார்.


'தன் சுய பலத்தை காட்டிலும், தனக்கு தெய்வம் பலம் கூட இருக்கிறது' எனறு புரிந்து கொண்ட பின், தன் பலத்தை மீறிய செயலையும் தான் செய்ய முடியும் என்று தன்னம்பிக்கை கொண்டார் ஹனுமான்.

மற்ற வானரர்கள் தங்கள் சுய பலத்தை கருத்தில் கொண்டு யோசித்ததால்,  தன்னம்பிக்கை ஒரு எல்லையுடன் இருந்ததால், கடலை தாண்ட முடியாது என்று நினைத்தனர்.
ஒருவரும் லாயக்கு இல்லை என்று, கடைசியில் ஹனுமானை கேட்டதும், "கடலை இப்பொழுதே தாண்டுவேன். சீதையை பார்ப்பேன், திரும்பி வருவேன்" என்று உற்சாகமாக கிளம்பினார்.
குரு நமக்கு துணை நிற்கிறார் என்று "குருவின் அணுகிரஹ பலத்தையும்",
நாராயணன் நமக்கு துணை செய்கிறார் என்று 'தெய்வ அணுகிரஹ பலத்தையும்" யார் உணர்ந்து கொள்கிறார்களோ,
அவர்களுக்கு எல்லையில்லா திடமா தன்னம்பிக்கை உண்டாகிறது.

தன் சுய பலம், அறிவு பலத்தை மட்டும் நம்பினால், ஓரளவு தான் தன்னம்பிக்கை கிடைக்கும்.

மகான்கள், சாதுக்கள் "தெய்வ பலத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கையில்",  நினைத்து பார்க்க முடியாத, பெரிய பெரிய காரியங்களை கூட எளிதில் செய்து விடுகிறார்கள்.
மகான்கள் செய்யும் காரியங்கள்,
"ஸமர்த்த ராமதாசர்" போன்ற மகானின் அன்புக்கு பாத்திரமான "வீர சிவாஜி" போன்றவர்கள் மராட்டிய சாம்ராஜ்ஜியம் அமைத்து, செய்த சாதனைகள் காரியங்கள்
என்று பல ஆச்சர்யங்களை காணலாம்.
தெய்வத்திடம் பக்தி செய்த ப்ருகு, கன்வர், ஹரிதர் போன்ற ரிஷிகள், தங்களின் தெய்வபக்தியால், தெய்வ அணுகிரஹம் பெற்று, தெய்வங்கள் இவர்களுக்காக பாரத தேசம் முழுவதும் சிவனாக, விஷ்ணுவாக, முருகனாக, காட்சி கொடுத்தனர்.
அந்த ரிஷிகளுக்காக அங்கேயே சாநித்யம் குறையாமல் இருக்க சம்மதித்து இருக்கின்றனர்.

ரிஷிகள் தன் தெய்வபக்தியினால்  தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்தி, தெய்வங்கள் காட்சி தந்தவுடன், "சக்தியில்லாத, பக்தி குறைவாக உள்ள நமக்கும் காட்சி கிடைக்கட்டுமே" என்று, தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்ய, அர்ச்ச அவதாரமாக, அங்கேயே சாநித்யம் குறையாமல் இருக்க, தெய்வத்திடமே சம்மதம் வாங்கி, நமக்கு தந்து விட்டனர்.
ரிஷிகளால் தெய்வ சாநித்யம் அடைந்த இடங்கள், அரசர்களால் கோவில் அமைக்கப்பட்டு, காட்சி கொடுத்த தெய்வங்கள் வேத மந்திரங்கள் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் செய்ய வேதம் கற்று அறிந்த வேதியர்கள் அமர்த்தப்பட்டு, அந்த இடங்கள் திவ்ய க்ஷேத்ரங்கள் ஆனது.


பாரதம் ஏங்கும், ரிஷிகள் தொடாத இடங்களே இல்லை என்பதால், ஆங்காங்கு தெய்வங்கள் அவர்களுக்கு பிரசன்னம் ஆனார்கள்.
ஊருக்கு ஒரு கோவில் இருப்பது போல,
உலகத்திற்கே ஒரு கோவிலாக நம் பாரத தேசம் உள்ளது.

தெய்வ பக்தி திடமாக இல்லாத நாமும், தெய்வ சிந்தனை ஏற்பட்டு மோக்ஷத்திற்கு வழி செய்து கொள்ள, 
ரிஷிகளின் பக்தியால், நமக்கு தெய்வங்கள் பாரத தேசம் முழுவதும் அர்ச்ச (விக்கிரக) ரூபமாக கிடைத்தார்கள்.

அரசர்களால், அதை சுற்றி கோவில்கள் ஆகம விதிப்படி கட்டப்பட்டது.
ரிஷிகளுக்காக பிரகடனமான தெய்வங்களை, "நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகான்கள், சித்தர்கள்" போன்ற தெய்வீக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் மங்களாசாசனம் செய்து பாடல்கள் பாடி, அவர்கள் சார்பில் நமக்கு பாசுரங்கள், பிரபந்தங்கள், ஸ்தோத்திரங்களை தந்து விட்டு சென்றனர்.
"ராமானுஜர், மாத்வர், சங்கரர்" போன்ற ஆசாரியர்கள் கோவிலில் வீற்று இருக்கும் தெய்வத்திடம் எப்படி பழக வேண்டும், பூஜை செய்ய வேண்டும் என்று முறைகளை காட்டி, கைங்கர்யம் செய்யும் வழியை காண்பித்து சென்றனர்.
இப்படி,
"தெய்வத்தைநமக்காக கொடுத்து விட்டு, ரிஷிகள் சென்றனர்.
"கோவிலை" கட்டி, நமக்காக கொடுத்து விட்டு, அரசர்கள் சென்றனர்.
கோவிலில் சென்று நாமும் பாட, பாசுரங்கள், பிரபந்தங்கள், "ஸ்தோத்திரங்களைநமக்காக கொடுத்து விட்டு, ஆழ்வார்கள். நாயன்மார்கள், மகாத்மாக்கள் சென்றனர்.
தெய்வத்திடம் "கைங்கர்யம் செய்யும் முறையை" ராமானுஜர், மாத்வர், சங்கரர் போன்ற ஆசாரியர்கள் நமக்கு தந்து விட்டு சென்றனர்.

மனிதன் நம்பிக்கையின் மேல் தான் வாழ்கிறான்.
உலக வாழ்க்கை வாழ்வதற்கே, உடல், அறிவு பலத்தின் மூலம் ஏற்படும் தன்னம்பிக்கையில் தான் மனிதன் வாழ்கிறான்.

உலக வாழ்க்கைக்கே தெய்வ பலமோ, சுய பலமோ தேவைப்படும் போது,
தெய்வத்தை பார்க்க வேண்டும் என்றால், கட்டாயம் நமக்கு "தெய்வத்திடம் பக்தி" அடிப்படையாக தேவைப்படுகிறது.

தெய்வ பக்தி இல்லாமல், "கடவுளை காட்டு" என்று திமிராக பேசுபவன், பேசிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
ஒரு வேளை இவன் அறிவு மற்றும் உடல் பலத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கையில் செய்த காரியத்தில் தோற்று போக நேர்ந்தால், மனம் ஒடிந்து போகிறான் மனிதன்.

ரிஷிகளுக்காக ப்ரத்யக்ஷம் ஆகி, 
மகான்கள், நாயன்மார்கள், ஆழ்வார்களுக்காக எப்பொழுதும் கோவிலில் அருள் செய்ய தயாராக இருக்கும் தெய்வத்திடம் 
ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை பாடி பக்தி செய்து, 
தெய்வ பலத்தை பெற நாமும் முயற்சிப்போம்.

உண்மையான பக்தி செய்து, தெய்வ பலத்தை நாம் பெறும் போது,
நாமும் திடமான தன்னம்பிக்கையை பெறுவோம். 
உலக வாழ்க்கையில் திடமான நம்பிக்கையுடன் நாமும் வாழ்வோம்.

தெய்வ பலத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கை, எந்த காரியத்தை எடுத்தாலும் நமக்கு வெற்றி தரும்.

சுய பலத்தால் ஏற்படும் "தன்னம்பிக்கையை" காட்டிலும், தெய்வ பக்தியினால் நமக்கு கிடைக்கும் தெய்வ பலம், அசைக்க முடியாத "தன்னம்பிக்கையை" தருகிறது.

கோவிலுக்கு சென்று வழி படுவோம்.
தெய்வத்திடம் பக்தி செய்து, தெய்வ அணுகிரஹத்தை பெறுவோம்.

தெய்வம் நமக்கு துணை நிற்கிறார் என்று ஹனுமானை போன்று உணர்ந்து விட்டால், எதையும் சாதிக்க தன்னம்பிக்கை கிடைக்கும்.

தன்னம்பிக்கையை கொண்டே மனிதன் வாழ்கிறான்.

வாழ்க ஹிந்துக்கள்.
ஹிந்துவாக பிறந்ததே நம் பாக்கியம்.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka






Thursday 7 February 2019

உலகத்தில் ஏற்படும் நான்கு ப்ரளயங்கள் (அழிவுகள்) என்னென்ன? ப்ரம்மாவின் வயது என்ன? தெரிந்து கொள்வோமே ...

உலகத்தில் நான்கு விதமான ப்ரளயங்கள் (அழிவுகள்) ஏற்படுகிறது என்று ஹிந்துக்களின் சனாதன தர்ம சாஸ்திரம் சொல்கிறது.



  • 2012ல் உலகம் அழியும்,
  • 5000 வருடத்திற்கு முன் உலகமே இல்லை,
  • உலகம் தட்டையானது,
  • ஒரே பிறவி தான்,
  • மனிதன் ஆடை இல்லாத, முட்டாள் ஆதாம் ஏவாள் மூலம் வந்தார்கள்,
  • கொலை செய்யப்பட்டவர் மீண்டும் வருவார்
என்று தன் கற்பனைக்கு தோன்றியதை சொல்லி ஏமாற்றும் பழக்கம் ஹிந்துக்களின் சனாதன தர்ம சாஸ்திரத்தில் இல்லை.

உலகம் பல கோடி வருடங்களாக இருந்து கொண்டே இருக்கிறது என்று காலத்தை கணக்கிட்டு சொல்லும் நம் ஹிந்துக்களின் சாஸ்திரம், அழிவை பற்றியும் சொல்கிறது.
தெரிந்து கொள்வோமே...

ஹிந்துக்களின் பெருமை அளவிட முடியாதது.
ஹிந்துவாக பிறந்தவன் பெரும் புண்ணியம் செய்தவன்.
ஹிந்துவாக மாற ஆசைப்படுபவனும், புண்ணியம் செய்தவன்.

நான்கு வகையான ப்ரளயங்கள்:

  1. நித்ய ப்ரளயம்
  2. நைமித்திக ப்ரளயம்
  3. மஹா ப்ரளயம்
  4. ஆத்யந்திக ப்ரளயம்

என பிரளயங்கள் நான்கு சொல்லப்படுகிறது.

1) நித்ய ப்ரளயம்:
நித்ய ப்ரளயம் என்பது "ஒவ்வொரு நொடியும் உலகத்தில் ஏற்பட்டு கொண்டே இருக்கும் அழிவு".
ஒவ்வொரு நொடியும் உலகத்தில் பல லட்சம் உயிர்கள் தன் தேகங்களை விட்டு விட்டு, மரணித்து கொண்டே இருக்கின்றனர்.

இந்த அழிவுகளை, நித்ய பிரளயம் என்கிறது ஹிந்துக்களின் வேத சாஸ்திரம்.

மோக்ஷம் அடையாத உயிர்கள், அவரவர் குணங்களுடன் மீண்டும் உலகங்களில் பிறக்கின்றனர்.
தூக்கம் என்பது கூட நம் "மனதை பொறுத்தியவரை" நடக்கும் நித்ய பிரளயம் தான்.
நாம் தூங்கும் போது மனம் அழிகிறது.
விழித்த பின், மீண்டும் மனம் விழித்து எழுகிறது.


2) நைமித்திக ப்ரளயம்
சத்ய லோகம் என்ற ப்ரம்ம லோகத்தில் இருக்கும் பிரம்மாவுக்கு, அவருடைய பகல் வேளையில், உலக நிர்வாகத்தை 14 மனு அரசர்களை நியமித்து நிர்வாகம் செய்கிறார்.
ஒவ்வொரு மனுவும் 71 சதுர் யுகங்கள் வாழ்கின்றனர். ஆட்சி செய்கின்றனர்.

ஒரு மனு தன் அரசாட்சியை முடித்த பின், ஒரு சத்ய யுக காலம் பூலோகம் நீரில் மூழ்கும்.
அடுத்த மனு அரசர் பணி அமர்த்தப்பட்டு, கடல் தன் எல்லைக்குள் சென்று, மீண்டும் 71 சதுர் யுகங்கள் ஆட்சி நடக்கிறது.

இந்த சரித்திரத்தை, திருடி, மனு அரசனை noah என்று சொல்கின்றனர் பிற மதத்தவர்கள்... போலிகள்.. https://en.m.wikipedia.org/wiki/Noah.

14 மனு அரசர்கள் ஒவ்வொருவரும் 71 சதுர் யுகங்கள் ஆண்ட பின், சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவுக்கு தன் ஒரு நாளில், ஒரு பகல் வேளை முடிகிறது.

"நைமித்திக ப்ரளயம்" என்பது சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவின் இரவு பொழுதில் ஏற்படும் உலக அழிவு.

பொதுவாக 14 மனு அரசர்கள் சேர்ந்து மொத்தமாக 14×71 = 994 சதுர் யுகங்களை ஆளுகின்றனர் என்று அறிகிறோம்.
பொதுவாக,
1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் வேளை என்று சொல்வது வழக்கம்.

பிரம்மாவின் இரவு என்பது இது போன்று 1000 சதுர் யுக காலங்கள் நீண்டது.

ஒரு "சதுர் யுகம்" என்பது, 4 யுகங்களை கொண்டது.

"க்ருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்" சேர்ந்தது ஒரு "சதுர் யுகம்".

கலியுகம் 4,32,000 பூலோக வருடங்கள் கொண்டது.
துவாபர யுகம், 8,64,000 பூலோக வருடங்கள் கொண்டது.
த்ரேதா யுகம் 12,96,000 பூலோக வருடங்கள் கொண்டது.
க்ருத யுகம் 17,28,000 பூலோக வருடங்கள் கொண்டது.
ஆக,
ஒரு "சதுர் யுகம்" என்பது, 43,20,000 பூலோக வருடங்கள் கொண்டது.
(அதாவது, ஏறத்தாழ 43 லட்ச பூலோக வருடங்கள் ஒரு "சதுர் யுகம்".)

ஒரு மனு அரசர் இது போல 71 சதுர் யுகங்கள் இருந்து பூலோகத்தை ஆட்சி செய்கிறார்.


அதாவது ஒரு மனு அரசர், 71×43,20,000 = 30,67,20,000 பூலோக வருடங்கள் வாழ்கிறார்.
(அதாவது, ஏறத்தாழ 30 கோடி பூலோக வருடங்கள், ஒரு மனு அரசர் வாழ்கிறார்.)

14 மனு அரசர்கள் பிரம்மாவின் ஒரு பகல் வேளையில் நியமிக்கப்படுகின்றனர்.

14× 30,67,20,000 = 429,40,80,000 பூலோக வருடங்கள் பிரம்மாவுடைய பகல் வேளையில், 14 மனு அரசர்கள் ஆட்சி செய்கின்றனர்.
(அதாவது, ஏறத்தாழ 429 கோடி பூலோக வருடங்கள், 14 மனு அரசர்கள் பூலோகத்தை ஆண்டு, பிரம்மாவுடைய ஒரு பகல் வேளையில் ஆளுகின்றனர்.)

ஒரு மனு அரசரின் ஆட்சி முடிந்து, இன்னொரு மனு ஆட்சியில் அமரும் இடைவேளையில் பூலோகம் நீரில் மூழ்குகிறது.
இதன் காலம் 17,28,000 பூலோக வருடங்கள். (ஏறத்தாழ 17 லட்ச பூலோக வருடங்கள்)

ஒரு மனுவுக்கும், இன்னொரு மனுவுக்கும் 13 இடைவெளி வருகிறது.
இந்த 13 இடைப்பட்ட காலத்தில் ப்ரம்மா சிறிது ஓய்வு எடுக்கிறார், சந்தியா வந்தனம் செய்கிறார்.

சத்ய லோகத்தில், 13 முறை கிடைக்கும் இந்த நேரம், அவரை பொறுத்தவரை, இது சில மணி நிமிடங்கள் மட்டுமே.

14 மனு அரசர்கள், தன் பதவி முடிந்து, அடுத்த மனுவுக்கு தன் அரசாட்சியை கொடுத்து விட்டு போகும், இந்த இடைவெளி காலத்தை கணக்கிட்டால், 13×17,28,000 = 2,24,64,000 பூலோக வருடங்கள் என்று தெரிகிறது.
(ஏறத்தாழ 2 கோடி பூலோக வருடங்கள்)




ஆக சத்ய லோகத்தில் உள்ள, பிரம்மாவுக்கு ஒரு பகல் வேளை என்பது 2,24,64,000 + 429,40,80,000 = 431,65,44,000 பூலோக வருடங்கள்.
அதாவது, ஏறத்தாழ 431 கோடி பூலோக வருடங்கள், பிரம்மாவுக்கு ஒரு பகல் வேளை.

அதிகபட்சம் 100 வயது வாழும் மனிதர்களான நம்மில், "கடவுளை காட்டு, காட்டினால் தான் நம்புவேன்" என்று திமிர் பிடித்து கேட்பவனை பார்த்து, பல கோடி வருடங்கள் இருக்கும் ப்ரம்மா என்ன நினைப்பார்?
அல்ப ஆயுசு இருக்கும் இவனுக்கு ஆசை இருந்தாலாவது பகவான் வருவார், திமிர் பிடித்து இருக்கிறானே என்று  தான் நினைப்பார்.  

சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்மாவுடைய இரவு, பகலை போன்று 431 கோடி பூலோக வருடங்கள் நீண்டது.
14 மனு அரசர்கள் ஆண்ட இத்தனை நீண்ட அகண்டமான 429 கோடி வருடங்களும், பூலோகத்தில் மறுபடி மறுபடி பிறந்து, ஒரு சமயம் ஹரியை பஜித்தவர்கள் மோக்ஷம் அடைந்து விடுகிறார்கள்.
மீண்டும் அவர்கள் பிறப்பதில்லை.
ஹரி பக்தி இல்லாதவர்கள், அவர்கள் செய்த பாவம், புண்ணியத்துக்கு ஏற்ப, மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.

"இன்று வரை நாம் இருக்கிறோம்" என்று சற்று நம்மை கவனித்தால், மோக்ஷம் அடையாத ஜீவன்களில் நாமும் ஒருவர் என்று புரியும்.
எத்தனை கோடி வருடங்கள் உலகில் பிறந்து கொண்டே இருக்கிறோம் என்று புரியும்.


மோக்ஷம் அடையாத அனைத்து ஜீவனும், ப்ரம்மாவின் தூக்க சமயத்தில் அதாவது 431 கோடி பூலோக வருட காலங்கள் "தமஸ்" என்ற இருளில் எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் இருந்து கொண்டே இருப்போம்.

இன்று வரை மோக்ஷம் அடையாத, நாம் அனைவரும் இதை அனுபவித்தவர்கள் தான்.
நாம் அனைவரும் இன்று வரை மோக்ஷம் அடையாத ஜீவன் தான்.

நம்மை தட்டி எழுப்பி, மோக்ஷ பாதையை காட்ட, பகவான் நமக்கு ஆன்மீக குருவை உலகில் பிறக்க செய்கிறார். சமயத்தில் அவரே அவதரிக்கவும் செய்கிறார்.

ப்ரம்மா தான் தூங்க போகும் போது, "சொர்க்க லோகம்", அதற்கு கீழ் இருக்கும் "புவர் லோகம், பூலோகம், அதல, விதல, சுதல, தலாதல, மஹாதல, பாதாள, ரஸாதல" போன்ற அனைத்து லோகங்களையும் அழித்து விட்டு தூங்க செல்கிறார்.
தேவர்கள் கூட அழிந்து விடுவார்கள்.
இந்த சமயத்தில் சொர்க்க லோகத்துக்கு மேல் இருக்கும் "மகர லோகம், ஜன லோகம், தப லோகம்" அழிவதில்லை.
சத்ய லோகத்தில் பிரம்மாவே இருப்பதால், இதுவும் அழிவதில்லை.

புண்ணியங்கள் செய்த யோகிகளும், ரிஷிகளும் இந்த லோகங்களில் இருந்து கொண்டே இருக்கின்றனர்.
தப லோகத்துக்கும் மேல் இருக்கும், தன் லோகமான சத்ய லோகத்தில் ப்ரம்மா உறங்குகிறார்.

பூலோக கணக்குப்படி ஏறத்தாழ 431 வருடங்கள் மோக்ஷம் அடையாத நாம் அனைவரும் "தமஸ்" என்ற இருளில், உலகமே இல்லாததால், மாமிச உடலும் இல்லாததால் "கம்" என்று இந்த சமயத்தில் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் இருப்போம், இருந்தோம்.
இன்றைய தேதியில், இன்று உள்ள பிரம்மாவுக்கு 50 வயது முடிந்து விட்டது.

பிரம்மா தன் 51 வயதில், முதல் நாளில் அவருடைய பகல் பொழுதில் இருக்கிறார்.

இந்த பகல் வேளையில், 14 மனு அரசர்கள் வரிசையில், "ஸ்வாயம்பு" என்ற முதல் மனு அரசரில் ஆரம்பித்து, இதுவரை 6 மனு அரசர்கள், தங்கள் ஆட்சியில் ஒவ்வொருவரும் 71 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டனர்.

இன்று வரை நாம் மோக்ஷம் அடையவில்லை.

இப்பொழுது பிரம்மாவின் படைப்பான "வைவஸ்வதன்" என்பவர், 7வது மனு அரசனாக 71 சதுர் யூகங்களை ஆண்டு வருகிறார்.
"வைவஸ்வத மனு" ஏற்கனவே 27 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டார்.

இப்பொழுது 28வது சதுர் யூகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்.
இதில் 3 யுகங்கள் முடிந்து விட்டது.


நாம் இப்பொழுது 28வது சதுர் யுகத்தின், கலி யுகத்தில் இருக்கிறோம்.

கலியுகம்  ஆங்கிலேய calendar படி 3102BCல் ஆரம்பிக்கிறது.

கலியுகம் ஆரம்பித்து ஏறத்தாழ 5000 வருடங்கள் ஆகி உள்ளது.

கலியுகம் 4,32,000 பூலோக வருடங்கள் கொண்டது என்று பார்க்கும் போது, இந்த கலியுகம் முடிய இன்னும் 4 லட்சத்துக்கும் மேல் வருடங்கள் உள்ளது.

ஆக,
"நைமித்திக ப்ரளயம்" என்பது சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவின் இரவு பொழுதில் ஏற்படும் உலக அழிவு.
மகர, ஜன, தப, சத்ய லோகங்களை தவிர்த்து,
மற்ற அனைத்து உலகங்களும் அழிந்து விடும் நிகழ்வை 'நைமித்திக ப்ரளயம்' என்று வேத சாஸ்திரம் சொல்கிறது.

சத்ய லோகத்தில், தூங்கி எழுந்த ப்ரம்மா, மீண்டும் அதே போல அனைத்து லோகங்களையும் ஸ்ருஷ்டி செய்து, மோக்ஷம் அடையாத ஜீவனுக்கு மீண்டும் பிறக்க உலகங்கள் படைத்து, பாவ புண்ணியத்துக்கு ஏற்ப மனித, மிருக, தாவர உடம்பை கொடுத்து, 14 மனு அரசர்களை கொண்டு மீண்டும் உலகை ஆட்சி செய்ய செய்கிறார்.

3) மஹா ப்ரளயம்
மஹா ப்ரளயம் என்பது, பிரம்மாவுக்கு 100 வயது ஆகி, பிரம்மாவின் ஆயுசு முடியும் போது ஏற்படும் பேரழிவு.

ப்ரம்மாவே மறைந்து விடுவதால், அவர் இருக்கும் சத்ய லோகம் ஆரம்பித்து, அதற்கு கீழ் இருக்கும் தப லோகம், ஜன லோகம், மகர லோகம் என்று பாதாள லோகங்களை வரை உள்ள, 14 லோகங்களும் அழிந்து விடும். இந்த அழிவே மஹா பிரளயம்.

பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், பஞ்ச பூதங்களும் அழிந்து விடும்.
14 லோகங்களும் பிரளய ஜலத்தில் கரைந்து,
பிரளய ஜலம், பிரளய அக்னியில் வற்றி,
பிரளய அக்னி, ஆகாசத்தில் அடங்கி,
ஆகாசமும் தமஸில் அடங்கி விடும்.

அனைவரும் அழிந்து விடுவார்கள். நாராயணன் ஒருவரே இருப்பார். பிரம்மாவின் ஆயுசு முடிந்தும் மோக்ஷம் அடைய ஆசைப்படாமல், ஹரி பக்தி செய்யாது வாழ்ந்த ஜீவ கோடிகளை தன் இதயத்தில் "தமஸ்" என்ற நிலையில் இருக்க செய்கிறார் பரமாத்மா.
"தமஸ்" என்பது "இருட்டை" சொல்லவில்லை.
"இருள்" என்றும் "அஞான நிலை" என்றும் பொருள் கொள்ளலாம்.
தமஸ் என்பது அறிந்து கொள்ள முடியாத ஒரு நிலையை குறிப்பிடுகிறது.

இந்த தமஸ் என்ற அனுபவத்தை புரிந்து கொள்ள, பகவான் நமக்கு "தூக்கத்தை" கொடுத்து உள்ளார்.
தூங்கும் போது "தமஸ்" என்ற நிலையில் நாம் இருக்கிறோம்.
தூக்க சமயத்தில் "நாம் இருந்தும், இருப்பதை உணராமல்" இருக்கிறோம். இதையே "தமஸ்" என்று சொல்கிறோம்.

இதே நிலையிலேயே, ஆனந்த மூர்த்தியான நாராயணனே இதயத்தில் இருக்கிறோம் என்று தெரியாமலேயே, பல கோடி வருடங்கள், மஹா பிரளயம் ஏற்பட்ட பின் "தமஸ்" என்ற நிலையில் இருப்போம்.

ஹரி பக்தி செய்து மோக்ஷம் அடைந்த ஜீவன்கள், வைகுண்டம் என்ற என்றுமே அழியாத லோகத்தை அடைந்து விடுகின்றனர்.
அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.
தேவைப்பட்டால், நாராயணன் சொன்னால், பூலோகம் வரவும், 14 லோகங்களில் எங்கு செல்லவும் அந்த மோக்ஷம் அடைந்த ஜீவனுக்கு அனுமதி உண்டு.
நாராயணனை போலவே இவர்களும் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள் வைகுண்டத்தில்.
நாராயணன், பரவாசுதேவனாக அங்கு இருந்து கொண்டு, அவர்கள் பூஜையை ஏற்று கொண்டே இருக்கிறார்.

ஹரி பக்தி செய்து, "இது நாராயணன் கொடுத்த பதவி, இது நாராயணன் கொடுத்த பிறவி" என்று நாராயணனிடம் ப்ரேம பக்தி செய்து ப்ரம்மா வாழ்ந்து இருந்தால், பகவான் அந்த பிரம்மாவுக்கு மோக்ஷம் என்ற வைகுண்டம் கொடுத்து விடுகிறார்.

"நான் ப்ரம்ம தேவன், 14 லோகங்களும் எனக்கு கட்டுப்பட்டு நடக்கிறது" என்று நினைத்து இருந்தால், அவர் செய்த புண்ணியத்துக்கு ஏற்ப மீண்டும் உலக ஸ்ருஷ்டி நடக்கும் போது, பூமியில் பிறக்க வேண்டியது தான்.
இந்த சட்டம் அனைவருக்கும் உண்டு.
பிரம்மாவுக்கும் உண்டு.

மஹா பிரளயம் முடிந்து, ஜீவ கோடிகளை தன் இதயத்தில் வைத்து கொண்டு, 14 லோகங்களையும் தன் திருவயிற்றில் வைத்து, நாராயணன் தூங்க செல்கிறார்.

நித்திரை, யோக நித்திரை, விழிப்பு, செயல் என்பது நமக்கு மட்டுமல்ல, பரமாத்மாவுக்கு உண்டு.
பரமாத்மா நாராயணன், உலகை ஸ்ருஷ்டி செய்யலாம் என்று மீண்டும் சங்கல்பத்து விழிக்கும் பொழுது, மீண்டும் பிரம்மாவை படைத்து உலக ஸ்ருஷ்டி செய்ய, வேதம் என்ற தன் அறிவை அவருக்கு உபதேசம் செய்து, சத்ய லோகத்தை படைத்து, மேலும் லோகங்களை படைக்க சொல்லி, தன் இதயத்தில் இருக்கும் ஜீவ கோடிகள் மீண்டும் பிறக்க செய்து, உலக இன்ப துன்பங்களை அனுபவித்து அனுபவித்து அலுப்பு ஏற்பட்டு, இப்பொழுதாவது மோக்ஷம் அடைய ஹரி பக்தி செய்கிறார்களா? என்று யோக நித்திரையில் உலகம் நடப்பதை தன் சுய பலத்தால் நிர்வாகம் செய்து, பார்த்து கொண்டு வருகிறார் பரமாத்மா.

இது ஒரு விளையாட்டு போல இருப்பதால், உலக நிர்வாகத்தை பகவான் லீலையாக செய்கிறார் என்று பொதுவாக சொல்வது உண்டு.

4) ஆத்யந்திக ப்ரளயம்
ஆத்யந்திக ப்ரளயம் என்பது ஜீவனுக்கு சம்சார சூழலில் சிக்கி ஏற்படும் பிறப்பு, இறப்பில் இருந்து ஏற்படும் முற்று புள்ளி. விடுதலை. மோக்ஷம்..
ஹரி பக்தி செய்து,
"உலகத்தில் இனி மீண்டும் பிறந்து இன்ப துன்பங்கள் அனுபவிக்க தயார் இல்லை" என்று திட சித்தம் கொண்டு,
உடலில் ஏற்படும் சுக துக்கத்தை சிறிதும் பொருட்படுத்தாமல்,
ஆத்மா நான் என்ற அறிவுடன்,
இந்த ஆத்மா பரமாத்மாவான ஹரியை சேர்ந்தவன் என்ற குறிக்கோளுடன்,
ஹரி பக்தியே செய்து வைராக்யத்துடன் வாழ்ந்து,
ஹரியை மகிழ்ச்சி படுத்தி,
அந்த பரமாத்மா அந்த ஜீவனின் கடைசி மூச்சு விடும் சமயத்தில் தானே வந்து காட்சி கொடுத்து, எம தர்மன் கூட்டி செல்லாமல், தானே வைகுண்டம் கூட்டி செல்வது மோக்ஷம்.
மோக்ஷம் அடைந்த ஜீவன், இதற்கு பிறகு திரும்பி வர இயலாது.. 

HARE RAMA HARE KRISHNA

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka