Followers

Search Here...

Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Sunday 28 July 2019

தமிழ் தேசியமொழியாக ஆகவே முடியாது.... தமிழ் மொழி வளராமல் போனதற்கு காரணம் என்ன ?....அலசல்

"தமிழ் மொழி" வளர வேண்டும் என்று தமிழனுக்கு ஆசை.
நியாயமான ஆசை.



"தெலுங்கு மொழி" வளர வேண்டும் என்று தெலுங்கனுக்கு ஆசை.

"கொங்கனி மொழி" வளர வேண்டும் என்று கோவாகாரனுக்கு ஆசை.

"பஞ்சாபி மொழி" வளர வேண்டும் என்று ஹரியானா, பஞ்சாப்காரனுக்கு ஆசை.

"கன்னட மொழி" வளர வேண்டும் என்று கன்னடனுக்கு ஆசை.

"ஹிந்தி மொழி" வளர வேண்டும் என்று பீஹார், உத்திர, மத்திய, இமாச்சல பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு ஆசை.

"மலையாள மொழி" வளர வேண்டும் என்று மலையாளிக்கு ஆசை.

"குஜராத்தி மொழி" வளர வேண்டும் என்று குஜராத்திக்காரனுக்கு ஆசை.

"அஸ்ஸாமி மொழி" வளர வேண்டும் என்று அஸ்ஸாமிக்காரனுக்கு ஆசை.

"ஒடியா மொழி" வளர வேண்டும் என்று ஒடிசாக்காரனுக்கு ஆசை.

"மிஸோ மொழி" வளர வேண்டும் என்று மிஸோராம்காரனுக்கு ஆசை.

"ஆங்கில மொழி" வளரட்டும் என்று அருணாச்சல பிரதேச, மேகாலய, நாகாலாண்ட், சிக்கிம் ஊர்களில் உள்ளவர்களுக்கு ஆசை.
தன் தாய் மொழியான அஸ்ஸாமி மொழியை இவர்கள் வளர்க்க ஆசைப்படவில்லை.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,
"ஹிந்தி மற்றும் ஆங்கிலம்" வளர்கிறது.
பிற மொழிகள் அதனதன் மாநிலங்களை விட்டு தாண்ட முடியவில்லை.

"ஹிந்தி மொழி" - இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் பரவி இருக்கிறது...
ஆங்கிலம் - உலகம் முழுவதும் பரவி இருக்கிறது...

ஹிந்தியும், ஆங்கிலமும் வளர்ந்தாலும்,
மற்ற மொழிகள், வளர்வது ஒரு புறம் இருக்க, அவர்கள் மாநிலத்திலேயே கூட அழிந்து வருகிறது.
உலகமெங்கும் ஆங்கிலமும், இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் ஹிந்தியும் பரவுவது ஏன்?
ஒரு மொழி பிறரால் கற்று கொள்ளப்பட வேண்டுமென்றால்,
1. அந்த மொழியில் பொதுவாக பிற மொழிகளில் உச்சரிக்கப்படும் சொற்கள் பயன்பாட்டில் இருக்க வேண்டும்இடம் இருக்க வேண்டும்
2. அந்த மொழி கட்டுப்பாடு அதிகம் இல்லாததாக, எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாத மக்களாக இருக்க வேண்டும்.


ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள்,
ஹிந்தியில் தமிழை விட அதிக எழுத்துக்கள் உண்டு.
இருந்தாலும்,
இந்த இரண்டு மொழிகளும் வளர்கிறது.. பேசப்படுகிறது.
இந்த 2 மொழிகளுமே,
பொதுவாக பிற மொழிகளில் பயன்பாட்டில் உள்ள "ஷ ஹ" போன்ற சொற்களை ஏற்கிறது..

ஹிந்தி (Hindi), இங்கிலீஷ் (English) என்று சொல்லும் போதே அதில் "ஷ ஹ" என்ற சொற்கள் வருகிறது...

Hospital என்ற ஆங்கில வார்த்தையை,  ஹாஸ்பிடல் (हॉस्पिटल) என்று அதே உச்சரிப்புடன் ஹிந்தியில் சொல்ல முடியும்.
தமிழ் இலக்கணத்தில் "ஷ ஹ" போன்ற எழுத்துக்கள் இல்லை.
ஆதலால், தமிழில் ஆச்பிடல் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

ஆச்பிடல்  என்று சொல்லும் போதே வெளி மாநிலத்தில் சொல்லப்படும் Hospital என்ற ஆங்கில சொற்களை, கூட  சரியாக உச்சரிக்க விடாமல் தடுக்கிறது தமிழ் இலக்கணம்.

"சமஸ்க்ரித" என்ற தேவபாஷை வார்த்தையை கூட "சமற்கிருத" என்று சரியாக உச்சரிக்க விடாமல் செய்கிறது தமிழ் இலக்கணம்.
தமிழ் இலக்கணத்தில் "ஷ ஹ" போன்ற எழுத்துக்கள் இல்லை.

தமிழ் பிறரால் பேசப்படாமல் இருப்பதற்கு, இது ஒரு முக்கிய காரணம்.

உண்மையான தமிழ் ஆர்வலர்கள், August என்று சொல்லப்பட்ட ரோமானிய காலண்டரை "ஆகஸ்ட்" என்று சொல்ல கூடாது என்பதற்காக "ஆகத்து" என்று சொல்வதை பார்த்து இருக்கலாம்.

ஆகஸ்ட் என்ற வார்த்தை தமிழ் மொழி அல்ல.
அது ஒருவனின் பெயராக இருந்தால் கூட, தமிழ் இலக்கணம் "ஆகஸ்ட் என்று சொல்ல கூடாது" என்று தடை விதிக்கிறது.

"கஸ்ட்" என்ற பெயர் கொண்ட ரோமானியன் தமிழ்நாடு வந்தால், அவனை "கத்து" என்று வேறு மாதிரி அழைத்தால், அவனால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? 

அது போல பல கட்டுப்பாடுகள் கொண்ட மொழிகள் யாவும், வளர முடியாமல் தேங்கி விடுகிறது...

சில மொழிகள் அற்புதமான பொக்கிஷங்களை தனக்குள் வைத்து இருந்தும் அழிந்து விடுகிறது...


சமஸ்கரித, ஹிந்தி மொழியில் ராவணன், ராமன் என்ற சொற்களை உச்சரிப்பு குலையாமல் சொல்ல முடியும்...
"Raavan, "Ram" என்று ஆங்கிலத்திலும் சொல்ல முடியும்.

தமிழ் இலக்கணப்படி "ர" என்ற எழுத்து முதலில் வர கூடாது என்று சொல்கிறது...
தமிழ் ஆர்வலர்கள் அதனால் "ர" என்று சொல் முதலில் வரும் வார்த்தைகளில் கூடவே "இ" என்ற சொல்லை சேர்த்து சொல்வார்கள்.
கம்பன் கூட ராமனை "இராமன்" என்று சொல்வது அதனால் தான்.
"ராவணன்" என்ற சொல்லை "இராவணன்" என்று தமிழ் இலக்கணம் சொல்ல சொல்கிறது.
இந்த கட்டுப்பாடுகள், வெறும் "இ" என்ற எழுத்துக்களை மட்டும் சேர்க்கவில்லை, சொற்களையே வேறு மாதிரியாக சொல்ல, கேட்க வைக்கிறது..

இது போன்ற

  • இலக்கண கட்டுப்பாடுகள், 
  • பிற மொழிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் "ஷ ஹ" போன்ற எழுத்துக்கள் இல்லாததாலும், 

     தமிழ் பிறரால் பேசப்படாமல் உள்ளது.

மேலும் இரண்டு குறைகள் நம் தமிழ் மொழியில் உண்டு...

பிற மொழிகளில் ஒவ்வொரு சொல்லுக்கும் நான்கு விதமான உச்சரிப்புகள் உண்டு.
தமிழில் இதற்கும் வழி இல்லை.

புதிதாக தமிழை கற்று கொள்ள வேண்டுமென்றால், அவன் படாதாபாடு பட வேண்டும்...

"அச்சு" என்று சொல்லும் போது "ச" என்ற எழுத்தை அழுத்தி உச்சரிக்க வேண்டும்,
"சங்கு" என்று சொல்லும் போது "ச" என்ற எழுத்தை மென்மையாக உச்சரிக்க வேண்டும்.

ஒரே எழுத்தை எந்த வார்த்தைக்கு மென்மையாக பயன்படுத்த வேண்டும்,  எந்த வார்த்தைக்கு அதே சொல்லை, அழுத்தமாக  பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற  வித்தியாசங்களை, தமிழ் நாட்டில் இருந்து கொண்டே, பேசி பேசி அனுபவத்தில் தான் கொண்டு வர முடியும்..
"வெறும் புத்தகம் மூலமாக தமிழை கற்கவே முடியாது" என்ற பெரும் குறையை தமிழ் கொண்டுள்ளது...

மற்றொரு குறை, இலக்கணம் மீற அனுமதிக்காத மொழி தமிழ்...

ஆங்கிலத்தில் "you, he, she, it, they, we, came" என்ற 7 வார்த்தைகள் தெரிந்தாலே,
"You came, he came, she came, it came, they came, we came" என்று சொன்னால் புரிந்து கொள்வார்கள்.
நன்றாக இங்கிலீஷ் பேசுகிறான் என்று கூட சொல்வார்கள்...



தமிழில் "நீ, அவன், அவள், அது, அவர்கள், நாம், வா" என்று மட்டும் சொல்லி பேச சொன்னால், தமிழ் இலக்கணம் இடம் தராது...
"நீ வா" என்று சொன்னால் ஒப்புக்கொள்ளும் தமிழ் இலக்கணம்,
"அவள் வா, அது வா, அவர்கள் வா, நாம் வா" என்று சொன்னால் ஒருவாறு பொருள் புரிந்தாலும், தமிழ் பேசுபவர்கள் "கொல்..." என்று சிரித்து கேலி செய்வார்கள்...
இந்த அவமானத்திற்கு பயந்தே பலர் தமிழை பேச தயங்குகிறார்கள்..

நாட்டின் பிரதமர் "பொங்கல் வாழ்த்துக்கள்" என்று தமிழில் சொல்ல முயற்சித்தாலும், "சரியாக உச்சரிக்கிறாரா?" என்று பார்க்கும் தமிழர்கள் அதிகம்..

ஆங்கில மொழியில் தவறாக பேசினால் கூட கேலி செய்யாமல் இருப்பார்கள்..

இலக்கணம் மாறி விட்டது என்று தெரிவதால், வெளி மாநிலக்காரன் தமிழில் பேச ஆசைப்பட்டு "அவள் வந்தான்" என்றோ, பெரியவர்களை "நீங்கள்" என்ற சொல்லுக்கு பதில் "நீ" என்று சொல்லி விட்டாலோ, கேலி சிரிப்பும், கோபமும் ஏற்பட்டு விடும்.

இந்த தர்ம சங்கடங்கள் பிற மொழி பேசுபவர்களுக்கு இருப்பதால், தமிழ் நாட்டிலேயே வாணிகம் செய்தாலும், "ஹிந்தியும், ஆங்கிலமும்" பேசியே வாழ நினைக்கிறார்கள்..

அவர்கள் பிள்ளைகள் இங்கேயே வளர்ந்தால், அவர்கள் பிள்ளைகள் தவறாக பேசினாலும் 'குழந்தை' என்று தமிழர்கள் நினைப்பதால், உற்சாகப்படுத்த, தமிழை அவர்கள் பிள்ளைகள் பேச ஆரம்பிக்கிறார்கள்..




ஹிந்தியிலும் சில கட்டுப்பாடுகள் இருப்பதாலேயே உலகம் வரை பரவ முடியாமல் உள்ளது..
உதாரணத்திற்கு,
பெரியவர்களை "ஆப் ஆயியே" (நீங்கள் வாருங்கள்) என்று மரியாதை சொல்லாக "ஆப்" என்ற சொல்லை பயன்படுத்துகிறது.
சிறியவர்களை "தும் ஆவோ" (நீ வா) என்று "தும்" என்ற சொல் கொண்டு அழைக்கிறது..

இந்த இலக்கணம் தமிழனுக்கு புரிவதால், தமிழனுக்கு ஹிந்தி கற்றுக்கொள்வதில் சிரமம் இருப்பதில்லை. ஹிந்தி கற்க முடிகிறது..

ஆங்கிலமோ "அந்த கவலையே வேண்டாம்" என்று சொல்லி பெரியவனோ, சிரியவனோ... "You come" என்று சொல்லி விடு என்று எளிதாக முடித்து விடுகிறது.

மிகவும் எளிதாகக்கப்பட்ட ஆங்கிலத்தை எவரும் படிக்கலாம்.
படிக்கும் போது "இலக்கண கட்டுப்பாடோ, பிறர் கேலி செய்வார்களோ" என்ற பயமோ தேவை இல்லை என்று தன்னை மாற்றி கொள்கிறது..

மனு (manu) என்ற அரசன் மூலமாக மனித குலம் தோன்றியது என்று நம் ஹிந்து சாஸ்திரம் சொல்கிறது.
"Man" என்ற சொல்லை ஆங்கில மொழியில் ஏற்று கொண்டது...

"Thee, thou" என்று பயன்படுத்தப்பட்ட ஆங்கிலம் இன்று அதை மாற்றி கொண்டு "you" என்று காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டது..

தமிழ் மொழி அழிந்து விட கூடாது என்பதால், "ஷ, ஹ, ஸ, ஜ, க்ஷ, ஸ்ரீ" போன்ற எழுத்துக்களை இப்பொழுது தமிழில் சேர்த்து உள்ளனர் என்று பார்க்கிறோம்.
இந்த எழுத்துக்கள், வந்த பிறகு,
"சாக்கிறதை" என்று தமிழன் சொல்லாமல், தமிழனையும் பிறரை போல "ஜாக்கிரதை" என்று சொல்ல உதவி செய்தது..


இராமன், இராவணன், இலக்குவன், இரத்தம், என்று சொல்லையே வேறு மாதிரி சொல்லாமல் "ராமன், ராவணன் என்று சொல்லலாம்" என்ற இலக்கணத்தில் சில சலுகைகள் தமிழ் மொழியில் கொண்டு வரப்பட்டது..

இந்த மாறுதல்கள் சில முன்னேறங்கள் கொண்டு வந்தாலும், "நான் வந்தாள்" என்று இலக்கணம் தவறி வெளி மாநிலத்தவன் பேசினால், கேலி செய்து சிரிக்கும் கூட்டமும்,
ஒரு புத்தகத்தை மட்டுமே வைத்து "அச்சு, சங்கு" என்று படித்தும், சரியான உச்சரிப்பை அறியமுடியாத சங்கடங்கள் தொடர்கிறது.
இந்த சங்கடங்கள் தமிழ் மொழியை வளர விடாமல் தடுக்கிறது....

இது போலவே, ஒவ்வொரு மொழிக்கும் சில தடைகள் அதை பிறர் படிக்க விடாமல் செய்கிறது..

இந்திய மொழிகளில் "ஆங்கிலம்" அளவுக்கு வளைந்து கொடுக்காவிட்டாலும், பெருமளவுக்கு வளைந்து கொடுப்பது "ஹிந்தி" மொழியாக உள்ளதால், அதை ஒரு புத்தகம் மூலமாகவே கூட படித்து, சரியாக உச்சரிக்கலாம் என்பதால்,
குஜராத்தி, கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒடியா, கொங்கனி போன்ற ஊர்களில் உள்ளவர்கள் கூட ஹிந்தி பேச முனைகிறார்கள்...

ஹிந்தி பெரும்பாலானவர்கள் பேசுவதால், பாரத தேசத்தில்
காஷ்மீரில் என்ன பேசுகிறார்கள்? 
பாகிஸ்தான்காரன் என்ன சொல்கிறான்? 
பீஹார்காரன் என்ன நினைக்கிறான்? 
என்று புரிந்து கொள்ள முடிகிறது..

அதற்கான தீர்வுகள் நடக்க, பேச்சுவார்த்தை பொதுவான ஹிந்தியில் நடக்கும் போது பல சங்கடங்களுக்கு தீர்வு கிடைக்கிறது...
பாகிஸ்தானில் கூட ஹிந்தி தானே பேசுகிறார்கள்..

குஜராத்தில் உருவான "சௌராஷ்டிர மொழி", இன்று பேச்சு அளவில் மட்டும் தான் உள்ளது.
முகம்மது கஜினி என்ற ஆப்கான் நாட்டில் இருந்து வந்த கொள்ளைக்காரன், குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலே தங்கத்தால் ஆனது என்று தெரிந்ததும், கொள்ளை அடிக்க 18 முறை தாக்கினான்.
17 முறை தோற்று ஹிந்து அரசனிடம் காலில் விழுந்து விழுந்து, மன்னிக்கப்பட்ட கொள்ளைக்காரன் இவன்.

இவன் படையெடுப்பால் சிதறி (civil disturbance), நாடோடிகள் ஆன "சௌராஷ்டிர சமூகம்" பாரத தேசம் முழுவதும் பிரிந்து ஹிந்து ராஜ்யங்களில் தஞ்சம் அடைந்தனர்.
தமிழ்நாட்டில் குறிப்பாக பாண்டிய தேசத்தில் அதிகம் இவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

தன் சுய உழைப்பாலும், நேர்மையாலும் வளரும் இந்த சமூகம், சௌராஷ்டிர மொழியின் எழுத்து வடிவத்தை இழந்து நிற்கிறார்கள் என்பது வேதனையே..

சௌராஷ்டிர மொழியில் ரகசியமான கல்வெட்டுகள், காவியங்கள் கிடைத்தாலும் படித்து புரிந்து சொல்பவர்கள் இல்லை...

அந்நிய படையெடுப்பின் காரணத்தால், சௌராஷ்டிர மொழி அதன் எழுத்துக்களை இழந்தது.

அந்நிய படையெடுப்பு இல்லாத இன்றைய காலத்தில்,
தானாகவே தன் தாய் மொழியை அழிவுக்கு இழுத்து கொண்டு செல்கின்றனர் போலி அரசியல்வாதிகள்.

தங்கள் மொழியை தன் மாநிலத்திலேயே தனியார் பள்ளிகள் என்ற ரூபத்தில், தமிழை ஒதுக்கி, அழித்து கொள்கின்றனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளை நடத்துவது அரசியல்வாதிகளும் அவர்கள் பினாமிகளுமே.

பெரும்பாலான தமிழ் குழந்தைகள், தமிழ்நாட்டிலேயே படித்தாலும்,
இந்த அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் பள்ளியில் தமிழை எடுத்து படிப்பதில்லை. 
தமிழ் கட்டாய பாடமும் இல்லை. ஆங்கிலமே முக்கியத்துவம் பெறுகிறது.

பிரெஞ்ச் படிக்க கூட ஆரம்பித்து விட்டார்கள்.
தனியார் பள்ளியில் தமிழ் கற்று கொள்வதில்லை.

இன்று தமிழ் பேசுகிறார்களே ஒழிய, தமிழை படிக்க தெரியாத நிலையில் உள்ளனர்.
தன் ஊரில் உள்ள தனியார் பள்ளியை கூட சரி செய்ய திறன் இல்லாத,
இறை பக்தி இல்லாத, போலி அரசியல்வாதிகள்,
"தமிழை படித்து புரிந்து கொள்ள முடியாமல் அழித்து விட்டால், கம்ப ராமாயணம், ஆழ்வார்கள் பாசுரம், நாயன்மார்கள் பதிகங்கள் அழிந்து விடும்" என்று நினைக்கிறார்கள்.

"போலிகளை சில காலம் பாரத மக்கள் ஏற்பது போல இருந்தாலும், மீண்டும் விழித்து கொண்டு போலிகளை அழித்து விடுவார்கள்" என்பதற்கு நம் பாரத சரித்திரமே சான்று...

புத்தர் அவதரித்த பின், அவர் கொள்கை அற்புதமாக உள்ளது என்று பாரத பூமியில் பலர் மொட்டை தலையுடன் "புத்தம் சரணம் கச்சாமி" என்று அலைய ஆரம்பித்து விட்டனர்...
"சமாதானம், அன்பு" என்று சொல்லி, சோம்பேறிகள் ஆகி, இஸ்லாமிய படையெடுப்புகள் நடந்த போது, புத்த மதத்தை ஏற்று இருந்த ஆப்கான், சிந்து தேச அரசர்கள் மரண அடி வாங்கினார்கள்.. இஸ்லாமிய தேசமாக ஆகி விட்டது இந்த தேசங்கள்..

சுதாரித்த பாரத மக்கள், அடியோடு புத்த மதத்தை எட்டி உதைத்தனர்.. அது சீன தேசத்தில் போய் விழுந்தது...
அன்பு, சமாதானம் சந்யாசிக்கு சொன்னது.. 
இதையே ராணுவத்தில் உள்ளவனும், அரசனும் ஏற்றால் தவறு.. ஆபத்தும் கூட...
ஹிந்து மதத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் "அவனவன் தர்மத்தில் இருந்து இறை உணர்வுடன் இருக்க வேண்டும்" என்று சொல்கிறார்.

நீ க்ஷத்ரியனாக இருந்தால், சந்நியாசி போல வாழாதே... ஒரு கன்னத்தில் எதிரி அடிப்பான் போல தெரிந்தால், அவன் அடிப்பதற்கு முன்பேயே அவன் இரு கன்னத்திலும் அறைந்து விடு என்று க்ஷத்ரியனை, நாட்டை காப்பவனை விழிப்புடன் இருக்க சொல்கிறார்.
ஞானிக்கு ஞான மார்க்கம் சொல்கிறார்.
செயலில் ஆர்வம் உள்ளவனுக்கு கர்ம யோகம் சொல்கிறார்..
பக்தனுக்கு பக்தி யோகம் சொல்கிறார்..
சந்யாசிக்கு சந்யாஸ யோகம் சொல்கிறார்..

"சுதந்திரமாக அவரவர் தர்மத்தில் இருந்து கொண்டே இறை உணர்வில் இருக்கலாம்" என்று காட்டிய ஸ்ரீ கிருஷ்ணரே "பரதெய்வம்" என்று பாரத மக்கள் உணர்ந்து, போலி மதங்களை, குறுகிய கோட்பாடுகள் உள்ள கொள்கைகளை உதறினார்கள்.

வெளி மாநிலத்திலும், வெளி நாட்டிலும் வேலை பார்க்கும் தமிழர்களுக்கு நிலைமை மோசம்.. பெரும்பாலான குழந்தைகளுக்கு தமிழ் எழுத்தே தெரியாது.
தமிழ் பேசுவது கூட அடுத்த தலைமுறையோடு அழிந்தே போய் விடும்.

தன்னுடைய தாய் மொழி காக்கப்பட வேண்டும், அது உலகமெங்கும் உள்ள பலரால் பேசப்பட்டு வளர வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்கிறோம்.
அதில் தவறு இல்லை.

ஒவ்வொரு மொழியிலும், அதில் எழுதப்பட்ட அற்புதமான இலக்கியங்கள், காவியங்கள், ரகசிய ஆராய்ச்சிகள், கல்வெட்டுகள், உள்ளது.

ஒரு மொழி, பலரால் படிக்கப்பட்டால் தான், அதில் உள்ள காவியங்கள், ஆராய்ச்சி கட்டுரைகள், அந்த மொழி பேசுபவர்களின் பண்பாடு, கலாச்சாரம் தெரிந்து கொள்ள முடியும்.

பிற மொழிகளை கற்றுக்கொண்டால், அந்த தேசத்தில் உள்ளவர்களுடன் பேசி வணிகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

உலகில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கற்று கொள்கிறார்கள் பேசுகிறார்கள்.

இந்தியாவில் ஹிந்தியை பெரும்பாலான மக்கள் கற்று கொள்கிறார்கள், பேசுகிறார்கள்.

சீனா, ரஷ்ய போன்ற தேசங்களில் வர்த்தக கால் பதிக்க கோடிக்கணக்கான வாய்ப்புகள் இருக்கிறது.

வாய்ப்புகள் இருந்தும் சீன மொழியை, ரஷ்ய மொழியை ஆர்வத்துடன் கற்று கொள்பவர்கள் மிக குறைவாகவே உள்ளனர்.

மிகவும் கடினமான மொழியாக, ஆயிரம் வடிவங்கள் கொண்ட எழுத்துக்கள் உள்ள சீனா, ரஷ்ய மொழிகள் அவர்கள் தேசத்தில் பேசப்பட்டாலும், வணிக வாய்ப்புகள் இருந்தாலும், ஆங்கிலம் போல அனைவராலும் பேசப்படவில்லை, கற்றுக்கொள்ளப்படவில்லை.

"தமிழை பிற மொழி பேசுபவர்கள் கற்று கொண்டால், தமிழில் உள்ள அற்புதமான கம்ப ராமாயணத்தில் உள்ள கவித்துவத்தின் அழகை, ஆழ்வார்கள் அருளிய 4000 திவ்ய பிரபந்தங்களை, நாயன்மார்கள் பாடிய பதிகங்களை, பிற மொழி பேசுபவர்களும் அறிந்து கொண்டால், அவர்களும் ரசிப்பார்களே" என்று உண்மையான தமிழன் நினைக்கிறான்.

பாரத தேசம் முழுவதும் பொது மொழியாக பேசப்பட்ட "சமஸ்கரித மொழி" இன்று ஒரு சில இடங்களில் பேசப்பட்டாலும், அர்த்தங்களை சரியாக புரிந்து கொள்ளும் அறிஞர்கள் 120 கோடி மக்களில் எண்ணி விடும் அளவிற்கே உள்ளனர்.

இதனால், சமஸ்கரித மொழியில் இருந்த பல அரிய விஷயங்கள் அதன் உண்மையான அர்த்தங்கள் என்ன என்று தெரியாமல் போய், அழிந்து விடும் நிலைக்கு ஆகிவிட்டது... இது பாரத மக்களுக்கே இழப்பு.


சமஸ்கரித மொழியில் எத்தனை பொக்கிஷங்களை இழந்து விட்டோம் நாம்!! ....

  1. ஆயுர்வேதம் (medicine),
  2. ஸ்தாபத்யம் (engineering),
  3. காந்தர்வ வேதம் (music),
  4. தனுர் வேதம்(weaponry)
  5. 6 தர்ம சாஸ்திரங்கள்,
  6. சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)'
  7. கல்பம் (expert in knowing  procedures for Vedic rituals and rituals associated with major life events such as birth, wedding and death in family, as well as discussing the personal conduct and proper duties of an individual in different stages of his life),
  8. வியாகரணம் (expert in grammers and linguistic analysis),
  9. நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words),
  10. சந்தஸ் (expert in poetic metres),
  11. ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy),
  12. யோகம் (expert in meditation, contemplation and liberation),
  13. ஸாங்க்யம் (Expert in consciousness and matter),
  14. நியாயம் (Expert in exploring sources of knowledge),
  15. சௌகதம்,
  16. மீமாம்ஸா (expert in correct conduct, both ethical and liturgical),
  17. பாஞ்சராத்ரம் (expert in Agama rules and guiding five observances every day to lord narayana),
  18. 4 வேதங்கள்,
  19. இதிஹாசங்கள்,
  20. புராணங்கள், 
    என்று எதுவுமே தெரியாமல் போய் விட்டது...

ஸ்தாபத்யம் (engineering) என்ற சாஸ்திரத்தை கற்ற ஸ்தபதிகள் என்ன என்ன அற்புதங்கள் செய்தார்களோ... எத்தனை கட்டிடங்கள் இடிக்கப்பட்டதோ 1000 வருட அந்நிய ஆதிக்கத்தில்..

சமஸ்கரித மொழி அனைவருக்கும் பொதுவாக இருந்த மொழி.
ஸ்தாபத்யம் கற்ற இந்த ஸ்தபதிகள் கட்டிய ஆயிரக்கணக்கான கோவில்கள், இன்று சமஸ்கரித மொழியில் இருந்த ஆச்சர்யங்களை நமக்கு காட்டுகிறது..

ஸ்தாபத்யம் கற்ற ஒரு engineer கட்டிய கல்லணை இன்று வரை சாட்சி சொல்கிறது...

சம்ஸ்க்ரிதம் என்ற மொழி தெரிந்து இருந்தவரை,
இந்தியாவை நோக்கி பிச்சை எடுக்கவும், கொள்ளை அடிக்கவும், வர்த்தகம் செய்யவும், வெளிநாட்டில் இருந்து,பாரதம் நோக்கி வந்தார்கள் என்று சரித்திரம் காட்டுகிறது.
அரேபியன் உள்ளே வந்தான்,
சீனா காரன் உள்ளே வந்தான்,
பிரெஞ்ச்காரன் உள்ளே வந்தான்,
ஆங்கிலேயன் உள்ளே வந்தான்,
டட்ச்காரன் உள்ளே வந்தான்,
போர்ச்சுகல்காரன் உள்ளே வந்தான்.
சமஸ்கரித மொழி பேசிய வரை, இந்தியக்காரன் வெளி நாட்டை நோக்கி போகவில்லை. பிச்சை எடுக்கவில்லை.



சம்ஸ்க்ரித மொழியை இழந்தோம், 
இன்று பாரத பூமியே வெளிநாட்டுக்கு சென்று பிச்சை கேட்டு வாணிகம் செய்யும் நிலையில் உள்ளது...

நம் சொத்தை தோண்டி எடுக்க துப்பு இல்லாத நமக்கு, அறிவு மட்டும் இன்னும் இருப்பதால், வெளிநாட்டில் சென்று வாணிக பிச்சை செய்கிறோம்.

சமஸ்கரித மொழியில் வேதம் மட்டும் இல்லை.. பிற படிப்புகளும் இருந்தது..

கோவில் கட்டிய ஸ்தபதி, ஐயர் இல்லையே.
போலி அரசியல்வாதிகள் களைய படவேண்டும்.

நம் பாரத தேச மொழிகளை, அதில் எழுதப்பட்ட இலக்கியங்கள், பக்தி காவியங்கள், பாடல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் படித்தாலே, பாரத நாடு மீண்டும் சுய சார்புள்ள நாடாக ஆக முடியும்.

வெளிநாட்டவர்கள் நம் நாட்டை கைப்பற்ற ஏன் அலைந்தார்கள்? என்று யோசித்தாலேயே நமக்கு நம் பெருமை புரிய ஆரம்பிக்கும்..

இந்தியாவுக்குள் நுழையும் முன்னர் தேனும், ரொட்டியும்,மாமிசம் மட்டுமே உணவு என்று அலைந்த வெளிநாட்டினர், இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர் தானே பல கண்டுபிடிப்புகள் செய்தார்கள்!!

1400AD சமயத்தில் உள்ளே நுழைந்த போர்ச்சுகல் கிறிஸ்தவர்கள்.. இதற்கு முன் உலகத்திற்கு ப்ரயோஜனமாக ஏதாவது கண்டுபிடித்தார்களா?...

"பிற மொழி பேசுபவர்களும், தமிழ் மொழி தெரிந்து இருந்தால்,
அகத்தியரின் சுவடிகளை ஆராய்ச்சி செய்து சித்த மருத்துவம், நாடி ஜோதிடம் போன்றவை உலகம் எங்கும் பரவுமே, 
நம் அகத்திய முனியின் பெருமை உலகம் காணுமே" என்று உண்மையான தமிழன் நினைக்கிறான்.

அவனவன் தாய் மொழியை எங்கும் நிரப்ப, எதிலும் பரப்ப நினைக்கிறான்.
இதில் தவறு இல்லை.

மொழி வளர்வதால், மொழி மட்டும் காக்கப்படுவதில்லை, அதில் உள்ள அற்புதமான தெய்வ காவியங்கள், இலக்கியங்கள், ஆராய்ச்சிகள் என்று அனைத்தும் மக்களுக்கு மன தூய்மைக்கும், புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தி கொள்வதற்கும் பயன் தருகிறது.

ஒவ்வொரு மொழியிலும் அற்புதமான காவியங்கள், ரகசிய சுவடிகள், ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கி உள்ளது..
இவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அந்த மொழி தெரிந்தவர்கள் உலகில் இருக்க வேண்டும்.

தமிழன் தமிழை வளர்க்க ஆசைப்படுகிறான்..

"தமிழ் மொழி தேய்ந்து போகிறது" என்று பார்க்கிறானே தவிர, அவன் ஊரிலேயே பாசுரங்கள், பதிகங்கள் வளர்க்க ஆள் இல்லை.

போலி தமிழனுக்கு பதிகங்கள் கண்ணுக்கு தெரியவில்லை.
தமிழன் என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி, தமிழை தமிழ் நாட்டிலேயே அழித்து கொண்டு இருக்கிறான்.

தெலுங்குக்காரன் தெலுங்கை வளர்க்க ஆசைப்படுகிறான்..
தெய்வ பக்தியுடன் இருப்பதால் பத்ராசல ராமதாசர், தியாகராஜர் கீர்த்தனைகள், அன்னமாச்சாரியா கீர்த்தனைகள் போன்றவற்றை மதிக்கிறான்..அவன் மொழி அவன் ஊரில் வாழ்கிறது.. 


இதே போல
குஜராத்காரன் குஜராத்தி மொழியை அவனிடத்தில் உள்ள மகான்களின் கீர்த்தனைகளை மதித்து காக்கிறான்.

கன்னடகாரன் கன்னட மொழியை புரந்தர தாசர், கனக தாசர் போன்றவர்கள் கொடுத்த கீர்த்தனைகளை மதிப்பதால், கன்னட மொழியை காக்கிறான்.

இப்படி அவரவர்கள் தங்கள் தாய் மொழியை காப்பாற்றி வந்தாலும், இந்தியாவில் ஹிந்தி வளர்வது போல வளர்க்க முடியவில்லை.
உலக அளவில் இங்கிலீஷ் வளர்வது போல, வளர்க்க முடியவில்லை.

உலகமெங்கும் ஆங்கிலமும், 
இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் ஹிந்தியும் 
பரவுவதற்கு காரணம்...
1. இந்த மொழிகளில் பொதுவாக பிற மொழிகளில் உச்சரிக்கப்படும் சொற்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
2. இந்த மொழிகளில் கட்டுப்பாடு அதிகம் இல்லை.  தவறாக பேசினாலும் கேலி செய்வதில்லை. 

இந்த சீர்திருத்தங்களை கொண்டு வந்தால், தமிழ் போன்ற மொழிகளும் பிறரால் கற்று கொள்ளப்படும்.

இந்த சீர்திருத்தங்களை கொண்டு வரும் வரை, 
அவரவர் மாநிலத்தில் உள்ள தாய் மொழியை, தனியார் பள்ளியிலும் கட்டாய பாடமாக சொல்லி தர வேண்டும். 

போலி அரசியல் வாதிகள், 
"ஹிந்து தெய்வங்களின் மேல் பக்தி, தெய்வ நம்பிக்கை ஏற்பட்டு விடுமே" என்பதால் பதிகங்களை, பாசுரங்களை ஒதுக்க தமிழை தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் சொல்லி தருவதில்லை. 

போலி தமிழர்கள் ஒடுக்க பட  வேண்டும்.


Saturday 8 June 2019

இறைவனுக்கு சமஸ்கரித மொழியில் பூஜைகள் செய்தால் தான் பலன் கிடைக்குமா? தன் தாய் மொழியாக இருக்கும் மொழியில் பூஜைகள் செய்தால் பலன் கிடைக்காதா? ஒரு அலசல்...

இறைவனுக்கு சமஸ்கரித மொழியில் பூஜைகள் செய்தால் தான் பலன் கிடைக்குமா?
தன் தாய் மொழியாக இருக்கும் மொழியில் பூஜைகள் செய்தால் பலன் கிடைக்காதா? (ஹிந்தி, தமிழ், தெலுங்கு...!!)

இந்த கேள்வி,
உண்மையான இறைபக்தி உள்ளவனுக்கு வருகிறது.

இதே கேள்வி,
இறைபக்தியே இல்லாத நாதீகனுக்கும், 
வேறு மதத்தில் இருந்து கொண்டு, ஹிந்து தர்மத்தையும், தெய்வத்தையும் எப்படி சீர்குலைக்கலாம்? என்று அலையும் கூட்டத்துக்கும் உள்ளது.

"தமிழை வளர்ப்பது தான் நோக்கம்" என்றால்,
தமிழில் அர்ச்சனை செய்ய ஒரு தமிழன் ஆசைப்பட்டால், தமிழில் அர்ச்சனை சொல்லும் முன்,
'கேட்பவனும் அந்த தெய்வத்துக்கு முன் ஒரு பாசுரமாவது, திவ்ய பிரபந்தமாவது சொல்ல வேண்டும்'
என்று 'சட்டம்' கொண்டு வந்தால் தான், 'தமிழும் வளரும்', 'பக்தியும் வளரும்'.
உண்மையான பக்தன்,
'இறைவன் முன் நாயன்மார்கள் நமக்காக கொடுத்த பதிகத்தில் ஒரு ஸ்லோகத்தையாவது சொல்ல தனக்கு பாக்கியம் கிடைத்ததே'
என்று திருப்தி கொள்கிறான். திருப்தி கொள்வான்.

இப்படிப்பட்ட பக்தன் வந்தால், அர்ச்சகர் தமிழில் ஆனந்தமாக இறைவனுக்கு அர்ச்சனை செய்வார்.


பதிகங்களை பாடி, நாயன்மார்களை நினைவுபடுத்திய நம்மை கண்டு 'ஈசனும்' மகிழ்கிறார்.
இறை அருளும் கிட்டும். 
நாயன்மார்களின் ஆசியும் கிட்டும். 
தமிழும் வாழும்.

வெறும் சம்ஸ்க்ரித மொழியினால் ஏற்பட்ட பொறாமை தான், இது போன்ற கேள்வியை கேட்க வைக்கிறது என்றால், 
இறை பக்தியும் வளராது...தமிழும் வளராது..

கடந்த 60 ஆண்டுகளில்,
'தமிழை காக்கிறேன்' என்று நாத்தீக கூட்டமும்,
பிற மதத்தில் இருந்து கொண்டு 'தமிழை வளர்க்கிறேன்' என்று போர்வை போட்டு கொண்டு ஏமாற்றி வரும் கூட்டமும்,
பாசுரங்களை, பதிகங்கள் சொன்ன ஓதுவார்களை, கோவிலில் இருந்து அகற்றினர்.
கம்ப ராமாயணத்தை பற்றி பேசினால், 
தமிழோடு, 'ராம பக்தியும்' வளருமே என்று பேசாமல் இருந்தனர்.

பதிகங்களை சொல்லி தமிழ் வளர்த்தால், 
தமிழோடு 'சிவ பக்தி வளருமே' என்று பதிகங்கள் சொல்லும் ஓதுவார்களை கோவிலில் இருந்து விரட்டினர்.
கோவிலையே அரசாங்க கைக்குள் போட்டு கொண்டு, 
நாயன்மார், ஆழ்வார் பாடிய பாடல்களால் நிரம்பி இருந்த ஆயிரக்கணக்கான கோவில்களில் தமிழை ஒழித்தனர்.
"கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம்" போன்ற தமிழ் பாடல்களை வளர்த்தால், 
தமிழோடு 'முருக பக்தி' வந்து விடுமே என்று அதையும் அழிக்க முயன்றனர். 


அது மட்டுமா!!
முருகனையே "பாட்டன் என்றும்", "ஏதோ மனிதன் போலவும்" மாற்றி,
இவர் ஒரு தமிழர் என்ற அளவில் ஆக்க பெரும் "ஏமாற்று புரட்சி" மற்ற மதத்தில் இருந்து கொண்டு ஹிந்து தெய்வங்களை சிறுமை படுத்த முயற்சி நடக்கிறது.
தமிழோடு சிவபக்தி வளருமே!!.. அதனால் பாசுரம் வேண்டாம்.

தமிழோடு பெருமாள் பக்தி வளருமே!!..அதனால் பிரபந்தங்கள் வேண்டாம்.
தமிழோடு சக்தி வழிபாடு வளருமே!!.. அபிராமி அந்தாதி வேண்டாம்.

தமிழோடு முருக பக்தி வளருமே!!..  கந்த கவசம் வேண்டாம்.
தமிழோடு ராம பக்தி வளருமே!!... கம்பன் எழுதிய ராமாயணம் வேண்டாம்.

"தமிழை வளர்த்த இவை எதுவுமே நமக்கு வேண்டாம்.." 
என்று திட்டமிட்டு இந்த நாத்தீக கூட்டமும், பிற மதத்தில் இருந்து கொண்டு, ஹிந்து தர்மத்தை, தெய்வங்களை எப்படி கேலி செய்யலாம்!!, ஏமாற்றி நம் பொய் மதத்துக்கு மாற்றலாம் என்று 60 ஆண்டுகாலமாக தமிழகத்தில் குறிப்பாக முயற்சி நடக்கிறது.


இன்று வரை ஹிந்துக்களை ஏமாற்ற முடியவில்லை.
போலிகள், போய் சேர்ந்து விட்டனர்.
சமயபுர மாரியம்மனுக்கும், மதுரை அழகருக்கும் கூட்டம் குறையவில்லை.

போலிகளை ஹிந்துக்கள் எட்டி உதைக்க வேண்டும். இவர்களை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
நாதீகனுக்கும், பிற மதத்தில் உள்ளவனுக்கும் இங்கு என்ன வேலை? என்று கடுமையாக எதிர்க்க வேண்டும்.
தெய்வத்திடமே பக்தி இல்லாத போலிகள், "தமிழை மொழியை காக்கிறேன்" என்று சொல்லி
"பதிகங்கள், திவ்ய பிரபந்தங்கள், கந்த சஷ்டி கவசம்,  அபிராமி அந்தாதி போன்ற தமிழை கற்று கொள்ள வேண்டும்" என்று சொல்லாத நாத்தீக போலிகளை, 
பிற மதத்தில் இருந்து கொண்டு, கேலி பேச காத்து இருக்கும்  திருட்டு போலிகள் துரத்தப்பட வேண்டும்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய "தமிழ்" பாடல்களை "தெய்வங்கள்" ஏற்று கொள்கிறார்கள்..

ஸ்ரீ ரங்கத்தில் திருபள்ளி எழுச்சியே "தமிழில்" தான் பாடப்படுகிறது.
மார்கழி மாதம் முழுவதும் "தமிழ் திருப்பாவை" தான் எங்கும் ஒலிக்கிறது.
அபிஷேகம் போன்ற வைதீக ஆராதனைகள் நடக்கும் போது புருஷ சூக்தம், ருத்ரம் போன்ற வேத சப்தங்கள் சொல்லப்படுகிறது.


சமஸ்கரித மொழியில் "ஒரே ஒரு சிறு ஸ்லோகம்" சொல்லி,
"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே"
சிறு பூஜை செய்தால் கூட,
நம்மை பார்த்து மிகவும் ஆனந்தப்படுகிறார்.
இதற்கு காரணம் உண்டு.

"ஓம்" என்ற பிரணவ ஒலியில் இருந்து தான் "வேதம் வெளிப்பட்டது".
வேதத்தை கொண்டு ப்ரம்ம தேவன் பஞ்ச பூதங்களை படைத்தார் (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் (உலகங்கள்))

ப்ரம்ம தேவனையும் படைத்தவர் "பரவாசுதேவன் நாராயணன்".

ப்ரம்ம தேவன் தன் தியானத்தால் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை வெளிப்படுத்தினார்.
('ப்ரணவஸ்ய ரிஷி ப்ரம்மா' என்று சொல்லி, பிரணவத்தை வெளிப்படுத்திய பிரம்மாவுக்கு தலை மேல் கை கூப்பி வணங்குவதாக பாவித்து, "தலையில் தொட்டு கொள்வது" சந்தியா வந்தனத்தில் உள்ளது)

உலகம் 'ஒலி'யால் சூழப்பட்டு உள்ளது.
சப்தத்திலேயே சமஸ்கரிதம் உள்ளது.
மற்ற மொழிகள், ரிஷிகளால் இலக்கணத்தோடு உருவாக்கப்பட்டது. 
அகத்திய முனியால் "தமிழ்" கொடுக்கப்பட்டது.
சில பாரத தேச மொழிகள், பிற நாடுகளில் உள்ள மொழிகள், மனிதர்களாலும் உருவாக்கப்பட்டது.

'ஓம்' என்ற மூல பிரணவத்தை (சம்ஸ்க்ரிதம்),
ஒரு பாத்திரத்தை காதில் மூடி வைத்து கேட்டால், நம்மாலும் 'அஉம்' என்ற பிரணவ சப்தத்தை உணர முடியும்..

தன் தியான சக்தியால், பிரணவ மந்திரத்தை ஸித்தி ஆக்கிய ரிஷிகள், பிரணவத்தில் மறைந்து இருக்கும் தேவ பாஷையில், இருந்த வேத மந்திரங்களை ரிஷிகள் வெளிப்படுத்தினர்.
வேத மந்திரங்களை மட்டுமா கொடுத்தார்கள் ரிஷிகள்?

தேவ பாஷையில் இருந்த
ஆயுர்வேதம் (medicine), 
ஸ்தாபத்யம் (engineering), 
காந்தர்வ வேதம் (music), 
தனுர் வேதம்(weapon), 
64 கலைகள், 
யோகம் 
என்று அனைத்தையும் உலக மக்களுக்கு, படித்து தெரிந்து கொள்ள கொடுத்து விட்டனர் நம் ரிஷிகள்.




தேவர்களும், ப்ரம்ம தேவனும் பயன்படுத்தும் மொழி சமஸ்கரிதம் என்பதையும் ரிஷிகள் அறிந்தனர்.

ஆதலால் பொதுவாக சம்ஸ்க்ரித மொழியை 'சப்த பிரம்மம்' (ஒலியிலேயே ஒளிந்து இருப்பதால்) என்றும் 'தேவ பாஷை' (மேல் உலக தேவர்கள் பேசும் பாஷையாகவும் இருப்பதால்) என்று சொல்கிறோம்.

நமக்கு மேல் உள்ள தேவர்கள், ப்ரம்மா, ப்ரம்மாவையும் படைத்த பரவாசுதேவனால்,
மனிதன் உருவாக்கிய மொழி மட்டுமல்ல,
அவன் ஊமையாக இருந்து மனதில் உருவாக்கும் மௌன பாஷையை கூட அறிந்து கொள்வார்கள்..
நாம் எந்த மொழியில் பேசினாலும், தெய்வங்களுக்கு புரியும். அதில் சந்தேகமில்லை.

கடவுள் அணுகிரஹம் செய்ய, மொழி தடை இல்லை..

ஆனால், நாம் புரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய "பக்தி எப்படிப்பட்டது?" என்பது தான்.

ஒரு தந்தை (தமிழ் தந்தை என்று வைத்து கொள்வோம்), தன் மகனுக்கு தமிழ் கற்று கொடுத்தான்.
வளர வளர, அவன் பல சமுதாய மக்களுடன் சகஜமாக பழகி கொள்ள ஏதுவாக இருக்க, "மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச், சீன" மொழி என்று பல மொழிகளும் கற்று கொள்ள, சூழ்நிலை ஏற்படுத்தி கொடுத்தான். தானும் அறிந்து இருந்தான்.
அந்த குழந்தை அனைத்து மொழியும் தெரிந்து கொண்டு, 
உலகில் எங்கு சென்றாலும் தன் எண்ணங்களை பறைசாற்றி,
தன் தாய் மொழியான தமிழில் உள்ள திவ்ய பிரபந்தங்கள், பாசுரங்கள், கம்ப ராமாயணத்தில் உள்ள கவித்துவம் என்று அனைத்தையும் உலகம் அறிய செய்தான்.
மற்ற மொழிகள் பேசும் மக்களுக்கு கூட,
இவன் மொழியான தமிழை கற்று கொள்ள ஆர்வம் உண்டானது.

மற்ற மொழிகள் கற்றதால், 'தன் தாய் மொழி தமிழை மறந்து விடுவான்' என்று நினைத்தால், 
இவன் 'தமிழ் மொழியில் எழுதப்பட்ட கம்ப ராமாயணத்தை, பாசுரங்களை உலக அரங்கில் பரப்பி பிரசித்தி ஆக்கினான்'.

ஒரு நாள், இந்த மகன், தன் தந்தையை பார்க்க வந்தான்.

இந்த மகன், தெலுங்கில் பேசினாலும், ஹிந்தியில் பேசினாலும், பிரெஞ்சில் பேசினாலும் புரிந்து கொள்வார் இவன் தந்தை.
மகிழ்ச்சியும் அடைவார்.
"இவன் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும்" என்றும் ஆசைப்படுகிறார்.

இந்த மகனோ, மிகவும் உத்தமான பிள்ளை.
தன் பெருமைகளை விரும்பாதவன். நன்றி உடையவன்.

மகன், தன் தந்தையின் தாய் மொழியான தமிழில் பேச ஆரம்பிக்க, "தன்னால் முதலில் கொடுக்கப்பட்ட மொழியான தமிழில் என்னுடன் பேசுகிறானே!!.. 
இது என்னுடைய தாய் மொழி என்று அறிந்து, அந்த மொழியில் பேச ஆசைப்படுகிறானே என் மகன்" 
என்று பேரானந்தம் அடைகிறார்.

'இவன் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும்' என்று ஆசைப்படுவதோடு நிற்காமல்,
"இப்படி ஒரு உத்தம பிள்ளையை பெற்றோமே" என்று "இவன் என் மகன்.. என் மகன்"
என்று தன் மகனை நினைத்து தானும் பெருமிதம் கொள்கிறார் தந்தை.

பல மொழிகள் தெரிந்தாலும், பல தேசங்களில் தன் புகழ் பேசப்பட்டாலும், தன் தாய் நாட்டை, தன் தாய் மொழியை மறக்காத உத்தம பிள்ளைகள் பாரத மண்ணில் உண்டு.
அதே போல,
சம்ஸ்க்ரிதம் என்ற சப்த பிரம்மம், பரவாசுதேவனால் ஜீவாத்மாக்களுக்கு கொடுக்கப்பட்ட மொழி.


947AD வரை,
பாரத நாட்டில் அனைவரும் ஆங்கிலம் போல, பொது மொழியாக மற்ற மொழி தேசத்துடன் பேசிக்கொண்டு இருந்த மொழி 'சம்ஸ்க்ரிதம்'.
'ராஜ ராஜ சோழன், ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர்', காஷ்மீர் வரை சென்ற பொழுது, பொது மொழியான 'சம்ஸ்க்ரித மொழியில்' தான் வர்த்தகங்கள், உரையாடல் நடந்தது.
அந்த அந்த தேசத்தில், 
ரிஷிகள் உருவாக்கிய 'தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்' போன்றவையும் செழித்து வளர்ந்தது. 
'சம்ஸ்க்ரிதம்' என்ற சப்த பிரம்மம்,
பொது பாஷையாகவும்,
ஆயுர்வேதம் (medicine), 
ஸ்தாபத்யம் (engineering, architect marvel), 
காந்தர்வ வேதம் (music), 
தனுர் வேதம்(weapon), 
64 கலைகள், 
யோகம் 
போன்றவை கற்று கொள்ளவும்,
தெய்வங்களை உபாசிக்கவும் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டது பாரத தேசம் முழுவதும்.

நம் தாய் மொழியில் பேசினாலும், ஊமை பாஷை பேசினாலும் இறைவன் புரிந்து கொள்வார்.
ஆனால்,
சப்த பிரம்மமாகிய சமஸ்கரிதத்தில் 'ஒரு ஸ்லோகம்' சொல்லி நமஸ்காரம் செய்தாலும்,
"என் பிள்ளை கஷ்டப்பட்டு சப்த பிரம்மமாகிய சமஸ்கரிதத்தில் ஒரு ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து என்னிடம் நிற்கிறானே!!.
எத்தனை பிரியம் என்னிடம் இருந்தால், எனக்காக கஷ்டப்பட்டு இந்த ஒரு சமஸ்கரித ஸ்லோகத்தை கற்று இருப்பான். 
இவன் காட்டும் பிரியத்துக்கு நான் செய்யும் கருணை போதாது" 
என்று பூரிப்பு கொள்கிறார்.



உண்மையான இறை பக்தி உள்ளவன்,
'இறைவனை நெருங்க எப்படியெல்லாம் முயற்சி செய்து பக்தி செய்யலாம்?!! 
என்று நினைப்பான். 

'தனக்காக சிரமப்பட்டு ஸ்லோகங்கள் சமஸ்க்ரிதத்தில் இருந்தாலும் படித்து சொல்கிறானே' என்று, பக்தனின் பக்தி சிரத்தையை கண்டு, இறைவன் கருணையை பொழிகிறார்.

தான் இருப்பதை மறைமுகமாகவும், 
பக்தி வளர வளர 'யாரோ வந்து உதவியது போலவும்', 
மேலும் பக்தி வளர வளர 'கனவில் திவ்ய காட்சிகள் கிடைக்க செய்தும்', 
மேலும் பக்தி வளர வளர 'தன் திவ்ய ரூபத்தை பக்தன் விரும்பியபடி ராமராகவோ, கிருஷ்ணராகவோ, நாராயணனாகவோ, சிவனாகவோ பரவாசுதேவன் காட்சி கொடுத்து 
மோக்ஷத்திற்கு வழி காட்டுகிறார்.

இறை நம்பிக்கை உள்ள பக்தன்,
"தெய்வத்துக்கு தமிழ் தெரியாதா?" என்று கேட்டு நேரத்தை வீணடிப்பதை விரும்புவதில்லை.
மனித ஆயுள் 100 வயது போல தோன்றினாலும், இது ஒரு அற்ப காலம் தான். காலம் பொன் போன்றது.
மாறாக,  
"தமிழில் கொட்டிக்கிடக்கும் பதிகங்கள், 4000 பிரபந்தங்களை, கந்த சஷ்டி கவசம், போன்றவற்றை படித்து, 
ஆழ்வார்கள்  போலவும், 
நாயன்மார்கள் போலவும், அருணகிரி நாதர் போலவும், கிருபானந்த வாரியார் போலவும், 
பாரத மண்ணில் இருக்கும் மகான்கள் போலவும், எப்படி தன்னுடைய பக்தியை உயர்த்தி கொள்ளலாம்!!" என்று தான் இறை நம்பிக்கை உள்ள பக்தன் நினைப்பான்.



பக்தி உயர உயர,
பிரபந்தங்கள், பதிகங்கள் பாட பாட,
"நாம் சமஸ்க்ரித மொழியில் பகவானே தன் திருவாயால் சொன்ன "பகவத் கீதையை" நாமும் சொல்லலாமே" என்று நினைக்கிறான்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய 
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ
மோக்ஷ இஷ்யாமி மா சுச:
(எல்லா தர்மங்களையும் விட்டு, என்னை ஒருவனையே சரண் அடைந்து விடு. 
உன் பாபங்கள் அனைத்தையும் மன்னித்து, மோக்ஷம் வரை உனக்கு கொடுக்கிறேன். கவலைப்படாதே)
என்று பரமாத்மா கிருஷ்ணரே தன் திருவாயால் நமக்கு சொன்ன ஆறுதல் வார்த்தை (ஸ்லோகம்) ஆயிற்றே.. 
இதன் அர்த்தம் புரிந்து கொண்டு, பெருமாள் முன்னால் நின்று கொண்டு சொல்லலாமே... 
வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வத்திடம் சொல்லலாமே..

இப்படியே இன்னும் என்ன சொல்கிறார் நம் கிருஷ்ணர் என்று மேலும் பல சுலோகங்களை அர்த்தத்துடன் தெரிந்து கொண்டு, தினமும் அனுபவித்து சொல்லலாமே.. 
பகவான் சொன்ன சொல்லை நாமும் சொல்ல, நமக்கு பக்தி தானே முக்கியம்.

"பகவான் நாமும் சமஸ்க்ரித மொழியில் ஒரு சுலோகம் சொல்வதை பார்த்து, ஆச்சர்யப்படுவாரே? நம் மீது விசேஷமாக கடாக்ஷம் செய்வாரே" 
என்று இறை பக்தியில் உருக்கம், ஆர்வம் போன்ற அனுபவங்களை பெறலாமே.

"தெய்வத்துக்கு இந்த மொழி தெரியாதா? அந்த மொழி தெரியாதா?" 
என்ற கேள்விகள் நாத்தீக போலிகள், பிற மதத்தில் இருந்து கொண்டு ஹிந்து தெய்வங்களை கிண்டல் செய்ய காத்திருக்கும் போலிகள் எழுப்புகிறார்கள்.
இவர்களுக்கு நம் பாசுரங்களும் தேவையில்லை. 
ஹிந்து தெய்வங்களும் தேவையில்லை. 
ஹிந்துக்களே தேவையில்லை. 

இறை பக்தி வளர, 
தமிழன், மீராவின் கீர்த்தனைகளை பாடினாலும் தெய்வம் ஏற்று கொள்ளும். 

இறை பக்தி வளர, 
தமிழன் பதிகங்களை, பிரபந்தங்களை  பாடினாலும், தெய்வம் ஏற்று கொள்ளும்.
இறை பக்தி வளர, 
எதுவுமே பேசாமல், மௌன மொழியில் பேசினாலும், தெய்வம் ஏற்று கொள்ளும்.

தேவ பாஷையான, இந்த உலகில் உள்ள ஒலியில் மறைந்து (மறை) இருக்கும் வேத மந்திரங்கள் கொண்டு பாடினால், 
பகவத் கீதையில் ஒரு சுலோகம் சொன்னாலும், 
தெய்வம் பெருமகிழ்ச்சி அடைந்து, நமக்கு நல்லவைகள் மட்டுமே நடக்க அருள் செய்கிறார்.

"ஹிந்து தெய்வத்தை கிண்டல் செய்து விட்டோம்" 
என்று நினைத்து, பிற மதத்தில் உள்ளவன் நினைத்தால், அந்த பாபங்களே அவனை படு குழியில் தள்ளி, அவன் வணங்கும் போலி தெய்வங்களும் அவனை கை விட்டு விடும்.

என் கனவிலும் பெருமாள் வருவாரா? 
தெய்வ காட்சிகள் கிடைக்குமா? 
நான் ஒழுக்கமாக வாழ்கிறேனா? 
என்று தன்னை தானே ஹிந்துவாக பிறந்த அனைவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்...



ஹிந்துக்கள் பக்தியை வளர்த்து கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர, "தெய்வம் புரிந்து கொள்ளுமா?" 
என்று திமிர் பிடித்த கேள்விகளை, 
நாத்தீகன் கேட்கிறானே ! பிற மதத்தில் இருந்து கொண்டு நம் மதத்தில் நுழைந்து கொண்டு இப்படி கேள்வி கேட்கிறானே !! நாமும் கேட்கலாமா என்று நினைக்க கூடாது... 

இறைவனுக்கு நம் மொழியும் தெரியும்.  
ஆனால், 
அவருக்காக நாம் ஒரு படி முன் வைத்தால், அவர் நம்மை நோக்கி 10 படி முன் வைத்து தான் இருப்பதை உணர செய்கிறார். 
பக்தி முக்கியமே தவிர...  விதண்டாவாத பேச்சுக்கள், தெய்வங்களை காட்ட உதவாது. 
விதண்டாவாத பேச்சுக்கள், அழிவையே தரும்.    

ஹிந்துக்கள், போலிகளை அடித்து துரத்த வேண்டும்.  

நாயன்மார்கள், சித்தர்கள், ஆழ்வார்கள், ராமானுஜர், சங்கரர், அகஸ்தியர், கம்பர் போன்றவர்கள், நடந்த இந்த தமிழத்தை, 
நாத்தீக போலிகள், மற்ற மதத்தில் இருந்து கொண்டு ஹிந்து தெய்வங்களை எப்படி குறை சொல்லலாம்? மதம் மாற்றலாம்? என்று போலி தெய்வங்களை வைத்து கொண்டு இருக்கும் போலிகளுக்கு இடம் தரவே கூடாது. 

வாழ்க ஹிந்துக்கள்.  

உலகில் எங்கு பிறந்தாலும் சோற்றுக்கு அலையும், போலி தெய்வங்களை வணங்கும் மனிதனாக பிறந்து இருப்போம். 
உலகில் ஹிந்துவாக பிறப்பதே அரிது. 
அதிலும் தமிழகத்தில், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ராமானுஜர், அருணகிரி நாதர் போன்ற மகான்கள் கால் பட்ட தேசத்தில் ஹிந்துவாக பிறப்பது கோடி புண்ணியம். 

"ஹிந்துவாக பிறந்தோமே" என்று பெருமிதம் கொள்வோம்.  
வாழ்க்கையை வீணடிக்காமல், இறை சிந்தனையை உயர்த்தி கொள்ளவும், போலிகளை எதிர்க்கவும் முயல்வோம்.



வாழ்க ஹிந்துக்கள். 

Hare rama, Hare Krishna (Listen to Bhajan)

Sandhya Vandanam (Morning with meaning)



Sandhya Vandanam (Afternoon with meaning)

Sandhya Vandanam (Evening with meaning)




Saturday 16 March 2019

தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கட்டாய கல்வி ஆக்க வேண்டும்.. ஏன்?

"உலகையே ஒரு குடையில் ஆண்ட" மகாவீரர்களை பெற்றெடுத்தது இந்த பாரத மண்.


இந்தியாவை தேடி, கடலில் அலைந்து திரிந்து தான், "கொலம்பஸ்" தவறுதலாக அமெரிக்காவில் கரை இறங்கினான்.
"அடுத்தவன் வீட்டில் எதை கொள்ளை அடிக்கலாம். யாரை ஏமாற்றலாம்?"
என்று தேடி தான், இந்தியாவை நோக்கி தொப்பியும், ரொட்டியும் மட்டுமே பார்த்த, போர்ச்சுகல், டச், பிரெஞ்ச், பிரிட்டிஷ் போன்றவர்கள் நுழைந்தனர்.
இந்தியாவின் செல்வத்தை பார்த்து தான் "கஜினி முகம்மது" 17 முறை உள்ளே நுழைய பார்த்தான்.

  • 17 முறை ஹிந்து அரசனிடம் தோற்றவன் இவன்.
  • 17 முறையும், ஹிந்து அரசனிடம் மன்னிக்கப்பட்டவன்.
  • 18வது முறை திடீரென்று தாக்கி சோம்நாத் கோவிலில் உள்ள தங்கத்தை எடுத்து கொண்டு ஓடினான்.
  • 18 முறை ஒரே ஒரு கோவிலை மட்டுமே குறி வைத்து கொள்ளை அடித்தான் என்றால், பாரத பூமி முழுவதும் எத்தனை செல்வங்கள் இருந்து இருக்கும் என்று நினைத்து பாருங்கள்..

"இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர் தான் இவர்களுக்கு அறிவியல் வளர்ச்சி மட்டுமல்ல, அறிவு வளர்ச்சியே ஏற்பட்டது" 
என்பதற்கு சான்று, இன்று வரை இவர்கள் கண்டுபிடித்த அறிவியல் சாதனைகள் தான்.
ராமாயண காலத்தில், "ராவணன் புஷ்பக விமானம் (flight) வைத்து இருந்தான்" என்று வால்மீகி எழுதி உள்ளார்.
சீதையை, இலங்கையில் இருந்து அயோத்திக்கு ஸ்ரீ ராமர் அதே புஷ்பக விமானத்தில் ஏற்றி கொண்டு, ஓரே நாளில் திரும்பினார் என்றும் பார்க்கிறோம்.
பரதன், தன் அண்ணன் ஸ்ரீ ராமரை மீண்டும் அயோத்திக்கு கூட்டி வர புறப்பட்ட போது,
தன்னுடன் வந்த அயோத்தி மக்கள் வசதிக்காக,

  • போகும் வழியெல்லாம், உடனுக்குடன் சாலைகள் அமைத்து,
  • தண்ணீர் உணவு ஆங்காங்கு ஏற்பாடு செய்து,
  • பெரிய பெரிய மரங்களை காட்டிலிருந்து வேரோடு எடுத்து, சாலைகள் இருபுறமும் நட்டு,

தன் மக்களுக்கு வெயில் கூட படாமல் கூட்டி சென்றான் என்று பார்க்கும் போது, ஹிந்துக்களின் அறிவியல் வளர்ச்சி எப்படி இருந்துள்ளது என்று தெரிகிறது.
எத்தனை அற்புதங்களை இழந்து நிற்கிறோம் என்று தெரிகிறது.


இன்றைய என்ஜினீயரிங் படிப்பு மூலம், இது போன்று
ஒரே நாளில் ரோடு போட்டு,
மரங்களை ஒரு இடத்தில் இருந்து எடுத்து சாலை நெடுக வைத்து,
சாப்பாடு வசதி செய்து விட முடியுமா? என்பது கூட சந்தேகம் தான்.

12 லட்ச வருடம் முன்பு இருந்தது த்ரேதா யுகம்.
த்ரேதா யுகத்தில் "ராமர்" அவதாரம் நிகழ்ந்தது.
அந்த சமயத்திலேயே பாரத மக்களாகிய (நாம்), இத்தனை அறிவியல் முன்னேற்றம் பெற்று இருந்தனர் என்று பார்க்கிறோம்.

பொதுவாகவே, த்ரேதா யுகத்தில், "யோகம், தியானம், விரதம்" போன்ற பயிற்சிகளால் அனைவருக்கும் ஆயுசும் அதிகமாக இருந்தது.
16000 வருடங்கள் வாழ்ந்த தசரதன், தன் மகன் "ஸ்ரீ ராமனுக்கு முடி சூடலாம்" என்று நினைத்த போது,
அவர் தலைமுடியில் 'ஒரு முடி மட்டும் வெள்ளையாக இருந்ததை கவனித்தார்' என்றால், அன்று இருந்த அறிவியலை என்னவென்று சொல்வது?
"தலை முடி கொட்டாமல், தலை முடி நரைக்காமல் இருக்க" ராஜ யோகங்களை கடைபிடித்தனர் அரசர்கள் என்று சொல்கிறது இதிகாசங்கள்.

"மேலை நாடுகளின் உதவியால் தான் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டது"
என்று யாராவது சொன்னால், அவர்களிடம் ஒரே கேள்வி தான் ஹிந்துக்கள் கேட்க வேண்டும்.
இந்தியாவுக்குள் இவர்கள் அனைவரும், நுழைவதற்கு முன் என்ன அறிவியல்  கண்டுபிடிப்பு செய்தார்கள் இவர்கள்?
ஒரு ஊசியில் நூல் கோர்க்க, ஊசியில் எங்கு ஓட்டை போடுவது? என்று கூட தெரியாமல் இருந்தனர் என்பது தான் உண்மை.
ஆதி காலத்தில் இவர்கள் உடை அலங்காரத்தை பார்த்தால்,
நம் அரசர்களின் அலங்காரத்தை பார்த்தாலே,
நம் பாரத மக்கள் ஆடையில் எத்தனை ஆச்சர்யமான வண்ணங்கள் கொண்ட ஆடைகளை அணிந்தவர்கள் என்று தெரியும்
1000 வருடங்களில், தேவ பாஷையில் (சமஸ்கரித மொழியில்) உள்ள,
ரகசிய க்ரந்தங்கள், சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் max muller முதல் பல வெளிநாட்டவர்கள் படித்து,
அதன் சூத்திரத்தை (formula) அவர்கள் நாட்டிற்கு எடுத்துக்கொண்டு, ஆராய்ச்சிகள் பல செய்து கண்டுபிடிக்க ஆரம்பித்தனர்.
இந்த 1000 வருடத்தில், நாம் அனைவரும் பேசி வந்த தேவ பாஷையை பயன்படுத்த முடியாமல்,
"கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள்" என்று பாரத தேசம் முழுவதும் அரங்கேற்றி,






  • பல ஹிந்துக்களை கத்தியை காட்டி மதமும் மாற்றி,
  • தமிழ் நாட்டில் தமிழும், சமஸ்கரிதமும் அறிந்த நம்மை, ஊர் விட்டு ஊர் சென்று வியாபாரமோ, வேலையோ செய்ய விடாமல், உயிர் பயத்தை உருவாக்கி,
  • தனியாக பெண்களை வீட்டில் விட்டு சென்றால், "எவன் வீட்டுக்குள் புகுவானோ?" என்ற பயத்தில், அடுத்த தேசங்களான கர்நாடக தேசம் கூட செல்ல முடியாமல், பாரத மக்கள் அவரவர் தெருவிலேயே கிடைத்ததை வைத்து வாழ ஆரம்பித்தனர்.

தசரதன் இறந்த பின், அவருடைய மனைவிகள் யாரும் தீக்குளிக்கவில்லை.  ஸ்ரீ ராமர் திரும்பி வரும்போது, "கோசலை" வரவேற்றாள்.
பாண்டு இறந்த பின்னும் "குந்தி" தேவி வாழ்ந்தாள்.
பெண்களின் பாதுகாப்புக்கு அச்சம் தலை விரித்து ஆடிய இந்த 1000 வருடத்தில்,
கணவன் இறந்தால், விதவைகளாக போன பெண்கள் கணவனோடு உடன் கட்டை ஏறினர்.
எத்தனை உயிர் பயம் இருந்தால் பொது மக்கள் இந்த காரியத்தை செய்ய துணிந்து இருப்பார்கள்?
ராஜஸ்தான் சித்தூர் கோட்டையை கில்ஜி படையினர் தகர்த்து விட்டனர் என்றதும், தன் கணவன் போரில் இறந்து விட்டான் என்றதும்,
மகாராணியே தன்னோடு சேர்த்து பல ஹிந்து பெண்களுடன் தீக்குளித்தால் என்றால், 
பொது மக்களின் (பெண்களின்) கற்புக்கு என்ன பாதுகாப்பு இருந்து இருக்க முடியும் இந்த சமயத்தில்?
ஹிந்துக்களின் இருண்ட காலங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

குறைந்தது 1000 வருடங்களில் (947AD to 1947AD),
நம் 40 தலைமுறை பாட்டனார்களாவது இந்த பேராபத்தில் அவதிப்பட்டு இருப்பார்கள்.

தமிழன், கன்னடகாரனோடு பேச பொது மொழியாக இருந்த 'சமஸ்கரித மொழி' பயன்பாட்டில் இல்லாமல் போக, பாரத மக்களுக்குள் தொடர்பு அகன்றது.

"நான் தமிழன்", "நான் தெலுங்கன்" என்று இன்று பிரித்து பேசும் குணம், 1000 வருட வெளி ஆக்ரமிப்பால், நமக்கு வந்த சிறுமை எண்ணங்கள்.
இது முதலில் தொலைய வேண்டும்.
நாம் அனைவருமே ஹிந்துக்கள். பாரத தேசத்தவர்கள்.

இஸ்லாமிய ஆட்சி முடிந்த சமயத்தில், சம்ஸ்க்ரிதம், பேச்சு வழக்கில் இருந்து மெதுவாக நம்மிடம் அழிய, கிறிஸ்தவர்கள் தங்கள் மொழியை பிரபலப்படுத்த, வர்த்தகம் செய்ய, "ஆங்கிலத்தை" புகுத்தினர்.


பொது மொழியாக "ஆங்கிலம்" உருவாக, பள்ளிகளை கட்டி, அங்கு படிக்கும் ஹிந்துக்களுக்கு கணக்கு எழுதும் வேலை, கூர்க்கா வேலை தருவதாக அடிமை வேலைகள் கொடுத்து,
ஆங்கில மோகத்தை உருவாக்கி, முதலில் ஆதரவு இல்லாமல் விடப்பட்ட பிராம்மண சமுதாயத்தை ஆசை காட்டி இழுத்தனர்.

ப்ராம்மணன் ஆங்கிலம் கற்று, அரசாங்கத்திற்கு, கணக்கு எழுத போனான்.
சமஸ்கரிதம் பேச்சு வழக்கில் அழிந்ததும், அந்த மொழியை வைத்து தான்,

  • வேதம் என்ன சொல்கிறது?
  • யோக சாஸ்திரம் என்ன சொல்கிறது?
  • நாட்டிய  சாஸ்திரம் என்ன சொல்கிறது?
  • சிற்ப சாஸ்திரம் என்ன சொல்கிறது?

என்று கற்று வந்த பாரத மக்கள், அதை திருடி ஆராய்ச்சிகள் செய்து,
அதையே ஆங்கிலத்தில் நமக்கு கொடுத்து,

  • ஆங்கிலத்தில் மருத்துவம்,
  • ஆங்கிலத்தில் கணிதம்,
  • ஆங்கிலத்தில் இன்ஜினியரிங்,
  • ஆங்கிலத்தில் கவிதை

என்று நமக்கே திருப்பி கொடுத்து விட்டனர் ஆங்கிலேயர்கள்.

சமஸ்கரித மொழியை அறிந்து கொள்ள முடியாததால், பல அற்புதமான ரகசிய சூத்திரங்கள் இன்றும் கண்டுபிடிக்க படாமலேயே உள்ளது.
"பொன்னான சமஸ்கரித மொழியை 1000 வருட ஆக்கிரமிப்பால் இழந்தோம்"
என்ற அறிவு இல்லாமல்,
சுதந்திரம் அடைந்த பின்னும்,
மீண்டும் சமஸ்கரித மொழியை படித்து ஆராய்ச்சிகள் செய்து சுயமாக பாரத மக்கள் வாழ வழி செய்யாமல்,
கடந்த 70 வருடங்களாக மெக்காலேயின் கிறிஸ்தவ பாட புத்தகத்தை கொண்டே கல்வியை தொடர்ந்தது நேருவின் அரசாங்கம்.

விளைவு, வேற்று மொழியான ஆங்கிலத்தில் தமிழன் படித்து, அதை பற்றிய மேலும் ஆராய்ச்சி செய்ய, அவர்கள் என்ன எழுதியுள்ளார்கள்? என்றே படித்து,
வாணிபம், தொழில், படிப்பு என்று எதை எடுத்தாலும் வெளிநாட்டிடம் பிச்சை எடுக்கும் நிலை வந்தது.




ஜப்பான் போன்ற சிறு நாடுகள் கூட அவர்களுக்கான மொழியிலேயே படிக்கிறார்கள். அவர்கள் எந்த நாட்டையும், இன்று வரை நம்பி வாழவில்லை.

இந்தியா முழுவதும் அவரவர் தாய் மொழியும், பொது மொழியாக சம்ஸ்க்ரிதமும் வளர்க்கப்பட்டு இருந்தால்,
இன்று சிற்ப சாஸ்திரம் படிப்பவன், வேதத்தில் சொன்ன ரகசியங்களை அறிந்து, உலகமே இவன் சிற்பங்களை வாங்க அலைய வைத்து இருப்பானே!!
'தமிழ்' முனி என்று பெருமையாக நாம் சொல்லும் "அகத்தியர்",
வனவாசமாக "ஸ்ரீ ராமர்" வந்த பொழுது,
பொது மொழியான 'சமஸ்கரித' மொழியில் பேசி, தான் வைத்து இருந்த அஸ்திர சஸ்திரங்களை ஸ்ரீ ராமரின் பாதத்தில் சமர்ப்பித்தார் என்று பார்க்கிறோமே..
பாரத பூமி முழுவதும் மொழி பிரச்சனை இல்லாமல் தமிழன் சுற்றி இருக்கிறானே!!

திருச்சி அருகில், வனமாக இருந்த "அன்பில்" என்ற ஊரில் பிறந்த வேடுவன் "பிரம்மாவை, நாரதரை" தரிசித்தான்.
தமிழனாக பிறந்து "வால்மீகி" என்ற முனியாக ஆகி,
சமஸ்கரித மொழியில் "ராமாயணம்" எழுதி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளாரே!!
வால்மீகி "தமிழன்" என்று கூட தெரிய கூடாது என்ற அளவுக்கு, தமிழனை மூளை சலவை செய்தது யார்?
70 வருட காங்கிரஸ் அரசாங்கம் தானே!!
ஸ்ரீ ராமர் அவதார காலம் வரை உத்தர பிரதேசம் சென்று ராமாயணத்தை எழுதி முடித்து,
மீண்டும் தமிழகம் வந்து "திருநீர்மலையில் ராமர் இவருக்கு காட்சி கொடுத்து, வைகுண்டம் அழைத்து சென்றார்"
என்பதும் தமிழனுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டதே !!
வால்மீகியின் முக்தி ஸ்தலம் அல்லவா திருநீர்மலை !!.
'தமிழன்' அல்லவா வால்மீகி.
இதன் காரணமாக தானே, கம்பன் ஸ்ரீ ராமாயணத்தை "தமிழில்" எழுத ஆசைப்பட்டான்.
தமிழனின் பொக்கிஷம் அல்லவா ராமாயணமும், வால்மீகியும்.
ஆதி சங்கரர் கேரள தேசத்தில் பிறந்தும், பாரதம் முழுவதும் சஞ்சரித்தார் என்று பார்க்கிறோம்.
மற்றவர்களுடன் 'மலையாளமா' பேசினார்?
பொது பாஷையான 'சம்ஸ்க்ரித' மொழியில் தானே பேசினார்.

ஆங்கில வழி கல்வியால், தமிழையும் இழந்து விட்டான் தமிழன்.

தமிழில் எழுதி உள்ள,

  • திருக்குறளுக்கும்,
  • கம்ப ராமாயணத்துக்கும்,
  • ஆழ்வார்கள் பிரபந்தங்களுக்கும்,
  • நாயன்மார்கள் பாசுரங்களுக்கும்

இன்றைய தமிழனுக்கு 'உரை' தேவைப்படுகிறதே!! 
இதை விட அவமானம் நமக்கு என்ன இருக்கப்போகிறது?.

சுதந்திரம் அடைந்து, 70 வருடங்கள் நாட்டை மறைமுகமாக அடிமை நாடாக ஆக்கி விட்டனர் காங்கிரஸ் அரசாங்கம். 
காங்கிரஸில் அன்று இருந்த அனைவருமே, ஆங்கில வழி கல்வி கற்றவர்கள். நாட்டின் கல்வியை சீர்படுத்த கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டனர்.
1000 வருட சுரண்டலில், இந்தியர்கள் அனைவரும் பிச்சைகாரர்களாக விடப்பட்ட சூழ்நிலையில்,
காங்கிரசில் உள்ள முக்கிய தலைவர்கள் ஆங்கில வழி கல்வி கற்றவர்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது.

இன்று பல இந்தியர்கள் "வெளி நாடு சென்று வேலை பார்த்தால் தான், அதிகம் பணம் சம்பாதிக்க முடியும்" என்று நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
வெளிநாடு சென்று, மேற்கத்திய கலாச்சாரம் ஊடுருவ,
இன்று 'முதியோர்கள்' அனாதைகளாக யாரும் பார்க்க ஆளில்லாமல் தனி வீட்டில் வாழ்கின்றனர்.

இந்த அவலம் போக வேண்டும் என்றால்,
தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கட்டாய கல்வி ஆக்க வேண்டும்.

"சம்ஸ்க்ரிதமும், தமிழும்" கற்ற ஒரு தமிழன்,
அகத்தியர், சித்தர்கள் அருளிய ஆச்சர்யமான 'சித்த மருத்துவ' நூல்களின் ரகசியங்களை புரிந்து கொண்டு வெளி கொண்டு வரலாம்.
"சம்ஸ்க்ரிதமும்" தெரிவதால்,
வேத சாஸ்திரங்கள், யோக சாஸ்திரங்கள், சிற்ப சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது? என்று ஆராய்ச்சி செய்து,
எந்த நாட்டையும் நம்பி பிழைப்பு நடத்தும் அவசியம் பாரத மக்களுக்கு இல்லை, என்று ஆக்கலாம்.

இதற்கு கல்வியில்,
தாய் மொழியும், சமஸ்கரித மொழியும் கட்டாயப்படுத்தியே ஆக வேண்டும்.

பாரத மக்களில் பல லட்சக்கணக்கான ஹிந்துக்கள், இன்று 'இஸ்லாமிய, கிறிஸ்தவர்களாக' வாழ்கின்றனர்.
இவர்கள் சமஸ்கரித மொழியை படிக்க மறுத்தால், அவர்களுக்கு தாராளமாக விலக்கு அளிக்கலாம்.
கோடிக்கணக்கான ஹிந்துக்கள் "சமஸ்கரித" மொழியை கற்று கொள்ளும் வாய்ப்பை அரசு தர வேண்டும்.
இந்த மொழிகளை கற்றுக்கொள்ளும் போது தான், நாம் இன்று பார்க்கும் கோவிலில்,

  • கல்லில் எப்படி சங்கிலி செய்தார்கள்?
  • கல் தூணில் எப்படி சப்த ஸ்வரங்கள் கேட்கிறது?

என்று ஆராய முடியும்.

இது போன்ற சட்டம், ஆங்கில மோகம் கொண்ட அரசால் நமக்கு கிடைக்கவே கிடைக்காது.
சமஸ்கரித மொழி, அவரவர் தாய் மொழியை வளர்க்க, பாரத தேச பற்றுள்ள  கட்சிகளே நம் பாரத மக்களுக்கு தேவை.

70 வருடங்களாக ஆங்கில மோகம் கொண்ட அரசுகள், 
நம் வாழ்க்கையே வெளிநாட்டுக்காரனுக்கு வேலை செய்து பிச்சை வாங்கும் நிலையில் தான் வைத்தது.

நம் தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கட்டாய கல்வியாக ஆக்க முயற்சி செய்யும் அரசே நமக்கு தேவை.

மொழி அறிவு நமக்கு வரும் போது, தொலைந்த பொக்கிஷங்களை நாமே தோண்டி எடுத்து விடலாம்.

ஆயிரம் மொழிகளை கற்று தேர்ச்சி அடைய புத்தியுடைய நமக்கு,
தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கற்பது என்ன கஷ்டமா? புத்திசாலிகள் தானே நாம் !!.

வாழ்க ஹிந்துக்கள்.

Hare Rama, Hare Krishna - Bhajan


Sandhyavandanam - Afternoon Prayer with meaning  

Sandhyavandanam - Evening Prayer with meaning 




Sandhyavandanam - Morning Prayer with meaning