Followers

Search Here...

Showing posts with label சிறு. Show all posts
Showing posts with label சிறு. Show all posts

Sunday 16 January 2022

சிறு வண்டை தூது விடுகிறாள் பரகாலநாயகி. தேமருவு பொழிலிடத்து... பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

தேன் மருவு பொழில் இடத்து மலர்ந்த போது

தேன் அதனை வாய்மடுத்து

உன் பெடையும் நீயும்,

பூமருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த

அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,

ஆமருவி நிரை மேய்த்த அமரர் கோமான்

அணியழுந்தூர் நின்றானுக்கு 

இன்றே சென்று,

நீ மருவி 

அஞ்சாதே நின்று 

ஓர் மாது நின் நயந்தாள் 

என்று இறையே இயம்பி காணே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையழ்வார்)

பரகால நாயகியை ஆட்கொண்ட பிறகு, 'ஸ்ரீரங்கம் செல்கிறேன்' என்று சொல்லி விட்டு சென்று விட்டார் பெருமாள். 

பரகால நாயகி, 'வருவாரா?' என்று காத்து கிடக்கிறாள். 

வெகு நாட்கள் ஆகி விட்டது. 'என்னை மறந்து விட்டாரா?' என்று நினைக்கிறாள்.

தன் காதலனோடு சேர முடியாமல் தவிக்கும் பரகால நாயகி, ஒருசமயம் நந்தவனத்தில் (பொழில் இடத்து) தேன் நிரம்பி இருக்கும் (தேன் மருவு) மலர்ந்த பூக்களில் உள்ள (மலர்ந்த போது) தேனை வாய் முழுவதும் எடுத்து ஒரு ஆண் வண்டு தன் காதலியியுடன் சேர்ந்து குடிப்பதை பார்க்கிறாள் (தேன் அதனை வாய்மடுத்து).

தன் காதலனோடு சேர்ந்து தேன் குடித்து, அந்த பூவின் இதழ்களிலேயே படுத்து விளையாடும், ஆண் வண்டையும், அதன் காதலியையும் பார்த்து, தனக்காக தூது செல்லுமாறு கேட்கிறாள் பரகால நாயகி.

"பூக்களின் இதழில் உன் பேடையோடு விளையாடி, புள்ளிகள் ஏற்பட்டு இருக்கும் வண்டே! 

எம்பெருமாள் இங்கு இல்லை. எம்பெருமானிடம் என்னை பற்றி சொல்லேன்! 

என்னை அவருடன் சேர்க்க, எனக்காக தூது செல்வாயா? 

நீ எனக்கு இந்த உதவி செய்தால், உன்னுடைய ஆறு சிறு கால்களிலும் விழுந்து தொழுவேன் (உன் பெடையும் நீயும், பூமருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை)

மேலும்,

திருவரங்கம் செல்கிறேன்! என்று சொல்லி சென்றவர். தேவாதிதேவனான அவர், இப்பொழுது (மாயவரம் அருகில்) தேரழுந்தூர் என்ற திவ்ய தேசத்தில் இருக்கிறார் என்று கேள்வி படுகிறேன்.' என்றாள்.

அந்த ஜோடி வண்டு, "உன்னையும் அவரோடு சேர்த்து வைக்கிறேன். அவர் அடையாளம் சொல்லேன்" என்று கேட்க,

"முப்பத்து முக்கோடி தேவர்களையும் மேய்க்கும் என் நாதன், 

பிருந்தாவனத்தில் மேய்த்தது போதாதென்று, யமுனா நதியில் மேய்த்தது போதாதென்று, 

அந்த பசு மாடுகளை எல்லாம் கூட்டிக்கொண்டு, காவிரி தீரத்தில் வந்து மாடு மேய்க்க ஆசைப்பட்டு, அங்கு சென்று இருப்பதாக கேள்விப்படுகிறேன்" என்றாள் பரகால நாயகி.

'மாடு மேய்ப்பதில் ஏன் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது?' என்று வண்டு கேட்க,





"தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்க கூர்ம அவதாரம் செய்து முதுகை கொடுத்தார். அசுரர்கள் அம்ருதத்தை தூக்கி சென்று விட, அவர்களுக்காக மோகினி வேடம் போட்டு அம்ருதத்தை வாங்கி தந்தார். 

"தன்னிடம் என்ன கிடைக்கும் என்று பார்த்தார்களே தவிர, தனக்கு பெருமாள் தான் வேண்டும் என்று கேட்பவர்கள் குறைச்சல் தானே என்று நினைத்த இவர், தேவர்களை மேய்த்ததோடு, மாடுகளையும் மேய்க்கலாம் என்று வர, இந்த மாடுகளோ, தனக்கு போட்ட புல்லையும் உண்ணாமல், பெருமாள் திருவடியே போதுமென்று, இவர் பாதத்தையே நக்கி கொடுக்க, "பெருமாள் தான் வேண்டும்" என்று நினைக்கும் மாட்டின் மீது இவருக்கு பிரியம் ஏற்பட்டுவிட்டது' என்றாள்.

'அவர் அடையாளம் என்ன?' என்று வண்டு கேட்க,

"பசுமாட்டை தனக்கு பின்னால் நிறுத்தி கொண்டு, அதன் மீது ஒரு கையை போட்டு கட்டிக்கொண்டு (ஆமருவி), மற்றொரு கையில் சுருள் கோல் வைத்து கொண்டு, திருவழுந்தூர் என்ற தெரழுந்தூரில் நின்று கொண்டிருப்பார் (நிரை மேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக்கு). அது தான் அவரது அடையாளம்" என்றாள் பரகால நாயகி.


"சரி. இரண்டு நாள் கழித்து செல்லவா?" என்று வண்டு கேட்க,

"இன்றே செல்லுங்கள்" (இன்றே சென்று,) என்றாள் பரகால நாயகி.


"நீ சொல்வதால் போகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே!" என்று சொல்ல,


"நீ அஞ்சவே வேண்டாம். அவர் மிகவும் சாந்த ஸ்வபாவம் உடையவர் (நீ மருவி அஞ்சாதே). தைரியமாக அவரை ஒரு சுற்று சுற்றிவிட்டு, 'உங்களை எதிர்பார்த்து ஒரு மாது காத்து கொண்டு இருக்கிறாளே!" என்று மட்டும் சொல்லி விட்டு, அவர் முகத்தை கவனித்து விட்டு வா" (நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே) என்று சொன்னாள்,

"மாது என்று மட்டும் சொன்னால் போதுமா? அவரிடம், பரகால நாயகி என்று உங்கள் பெயரை சொல்லவேண்டாமா?" என்று கேட்க,


"எனக்கு தரிசனம் கொடுத்து, என்னை கட்டிக்கொண்டு, என்னை அழ விட்டு சென்றார். அவரிடம் "ஒரு மாது" என்று சொன்னாலேயே என்னை பற்றி தான் நினைவுக்கு வரும்" என்று சொல்ல,

"அவரின் முகத்தை கவனி என்று சொன்னாயே?" என்று வண்டு கேட்க,

"நீ என்னை பற்றி சொன்னதுமே 

அவளா! என்று என்னை அலட்சியமாக நினைக்கிறாரா? அல்லது

யாரை சொல்கிறாய் என்று தெரியவில்லையே! என்று நினைக்கிறாரா? 

அல்லது

அப்படியா! என்று கருணையோடு கேட்கிறாரா?

என்று கவனித்து எனக்கு சொல். 

அவர் அப்படியா!  என்று என்னை பற்றி நினைவோடு கேட்டால், அவர் என் மீது கருணை வைத்து இருக்கிறார் என்று அறிந்து கொள்வேன்" என்றாள் பரகால நாயகி.

Thursday 27 June 2019

ஹிந்து மதம் உருவான கதை... வந்தேறிகள் யார்? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...









பாரத நாடு - 947AD க்கு முன்பு
மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது
மனிதன் 7: எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.

அவரவர் வழிபாடுகள் நடந்தது. அரசர்கள் அனைவருக்கும் கோவில் அமைத்தான். தெய்வ சிந்தனை இருந்ததே தவிர, தெய்வத்தின் பெயரால் சண்டைகள் இல்லாத உலகம்.
அரசர்கள் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றில் நிம்மதியாக செயல் பட்டார்கள்.

சனாதனமாக (காலம் காலமாக) உள்ள தர்மத்தில் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்தனர்.


பாரத நாடு - கோரி படைகள் நுழைந்து 947ADக்கு பின்




மனிதன் 8 : இறைவன் இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் புனித நூல் ஒன்று மட்டும் தான் சொல்கிறது. எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும். உங்கள் கடவுள் நம்பிக்கை எப்படி?
மனிதன் 1 : இறைவன் இருக்கிறார். விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 2 : இறைவன் இருக்கிறார். முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 3: இறைவன் இருக்கிறார். மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 4: இறைவன் இருக்கிறார். தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 5: இறைவன் இருக்கிறார். சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 6: இறைவன் இருக்கிறார். எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
மனிதன் 7: எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.
மனிதன் 8 : ஒப்புக்கொள்ளவே முடியாது. இறைவனுக்கு பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது.
நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள்.
ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.
அவரவர் வழிபாடுகள், வந்தேறிகளால் தடைபட்டது.
அரசர்களையும் வந்தேறிகள் தாக்கினர், மக்களையும் தாக்கினர், கட்டப்பட்டு இருந்த கோவில்களையும் தாக்கி சேதப்படுத்தினர்.




தெய்வத்தின் பெயரால் சண்டைகள் உருவாக்கப்பட்ட காலம்.

அரசர்கள் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றில் நிம்மதியாக செயல்பட முடியாமல், இந்த வந்தேறிகளுடன் சண்டை இடும்படியாக காலம் அமைந்தது.

சனாதனமாக (காலம் காலமாக) உள்ள தர்மத்தில், நிம்மதியாக வாழ்ந்த பாரத மனிதர்களை,
வந்தேறிகள் சிந்து தேசக்காரன் என்று அடையாள படுத்தி,
உச்சரிப்பு என்றுமே சரியாக இல்லாத இந்த வந்தேறி அந்நியர்கள்,
சிந்து என்று சொல்ல தெரியாமல், "ஹிந்து" என்று அடையாள படுத்தி கூப்பிட்டான்.

ஹிந்து என்ற வார்த்தை பாரத நாட்டில் இருந்து எடுக்க வேண்டும் என்று வந்தேறிகள் ஆசைப்பட்டால், சனாதன மதம் என்றோ,  ரிஷி மதம் என்றோ, மாற்றி கொண்டு விடலாம்.
அதனோடு, இந்தியா என்ற பெயரையும், பாரத் என்று மாற்றி விடலாம்.

பாரத நாடு - Vasco da Gama நுழைவுக்கு 1498 ADக்கு பின்




மனிதன் 9: இறைவன் இருக்கிறார். அவரை கொன்று விட்டார்கள்.
அவர் இறந்து போனது, நமக்காக என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் நமக்காக திரும்பவும் வருவார். எப்பொழுது வருவார் என்று கேட்க கூடாது.
அவரை நம்பாது இருந்தால் நீங்கள் நரகம் போவீர்கள்.
உங்களுக்காக உயிர் விட்ட அவரே உங்கள் தெய்வம்.
மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
மனிதன் 7: எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.
மனிதன் 8 : இறைவன் இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை பற்றி நாமாக உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் புனித நூல் மட்டும் தான் சொல்கிறது.
எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும்.
மனிதன் 9 சொல்வது சுத்த பொய். இவன் உருவ வழிபாடு செய்பவன். இறந்தவர்களை இறைவன் என்று சொல்கிறான்.
ஒரு கொலை செய்யப்பட்ட மனிதனை ஒப்புக்கொள்ளவே முடியாது.
நீங்கள் சொல்லும் எந்த முறையையும் ஒப்புக்கொள்ள முடியாது.
இறைவனுக்கு பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது.
நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள்.
ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.

மனிதன் 9: கிடையாது.. கிடையாது. மனிதன் 8 சொல்லும் புனித நூல், எங்கள் புனித நூல்க்கு பின் உருவாக்கப் ப்ட்டது.
இவர்கள் சொல்வதில் எங்களுக்கு உடன்பாடு எப்பொழுதுமே இல்லை. நீங்கள் வணங்கும் அனைவரும் சைத்தான்கள்.
கொல்லப்பட்டாலும் அவரே கடவுள் என்று நீங்கள் நம்பியே ஆக வேண்டும்.
அவரை நீங்கள் வணங்க வேண்டும்.
உங்களுக்கு பணம் தந்தாவது, உங்கள் தெய்வத்தை கிண்டல் செய்தாவது, எப்படியாவது உங்கள் நம்பிக்கையை குலைக்க பாடுபடுவோம்.
இதுவே எங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமை.

அவரவர் வழிபாடுகள், 2 வந்தேறிகளாலும் தடைபட்டது.
இரண்டு வந்தேறிகளுக்கும் கோட்பாடுகளில் வேற்றுமை உண்டு. பகையும் உண்டு. இவர்களுக்குள்ளும் தாக்குதலும் உண்டு.
அரசர்களையும் வந்தேறிகள் தாக்கினர், மக்களையும் தாக்கினர், கட்டப்பட்டு இருந்த கோவில்களையும் தாக்கி சேதப்படுத்தினர்.

தெய்வத்தின் பெயரால், வந்தேறிகளால் பெரும் சண்டைகள் உருவாக்கப்பட்ட இருண்ட காலம்.

அரசர்கள் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றில் நிம்மதியாக செயல்பட முடியாமல், இந்த வந்தேறிகளுடன் சண்டை இடும்படியாக காலம் அமைந்தது.

ஹிந்துக்கள் என்று வந்தேறிகளால் அறியப்படும், சனாதன தர்மத்தில் உள்ளவர்கள், தங்கள் பெருமை உணர்ந்து கொண்டாலே, பொய் மதங்களில் வீழாமல் பார்த்து கொள்ளலாம்.