Followers

Search Here...

Showing posts with label முன்னோர். Show all posts
Showing posts with label முன்னோர். Show all posts

Monday 9 March 2020

பாசுரம் (அர்த்தம்) - முன்னோர் தூது வானரத்தின் - திருமங்கையாழ்வார் எவ்வுள் (திருவள்ளூர்) வீர ராகவ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

எவ்வுள்” (திருவள்ளூர்) என்ற இந்த திவ்ய தேசத்தில்,
"வீர ராகவ பெருமாளுக்கு", மங்களாசாசனம் செய்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.




எவ்வுள் என்ற இந்த திவ்ய தேசம் வந்து, "எம்பெருமானை பார்த்த" திருமங்கை ஆழ்வாருக்கு,
ராம அவதாரத்தில் ஹனுமார் செய்த தூதும்,
கிருஷ்ணா அவதாரத்தில் கிருஷ்ணர் செய்த தூதும்,
நினைவுக்கு வர, இந்த இரண்டு அவதாரமும் செய்த எவ்வுள் பெருமாளிடமே தன் அனுபவத்தை சொல்கிறார்.

முன்னோர் 
தூது வானரத்தின் வாயில் மொழிந்து,
அரக்கன் மன்னூர் தன்னை 
வாளியினால் மாள முனிந்து
அவனே!!
பின்னோர் 
தூதன் ஆதிமன்னர்க்கு ஆகிப் 
பெருநிலத்தார் இன்னார் தூதன் என 
'நின்றான்' 
எவ்வுள் கிடந்தானே!!
-- பெரிய திருமொழி 

எவ்வுள் என்ற இந்த திவ்ய தேசத்தில் இருக்கும் இதே பெருமாள் தான்,
முன்னொரு காலத்தில் (த்ரேதா யுகத்தில்),
ராமபிரானாக அவதரித்த போது,
தனக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த சம்பவங்களையும்,
சீதையின் அடையாளங்களையும்,
தன் நம்பிக்கைக்கு பாத்திரமான "ஹனுமான்" என்ற வானரத்திடம் சொல்லி தூது அனுப்பினராம்.

இதையே
"முன்னோர் 
தூது வானரத்தின் வாயில் மொழிந்து" 
என்று சொல்லி எவ்வுள் பெருமாளிடமே அவருடைய ராம அவதாரத்தை பற்றி சொல்லி,

"கண்டேன் சீதையை" என்று தூது சென்ற ஹனுமான் நல்ல சேதி சொல்ல, "அந்த அரக்கன் ராவணனை வாளெடுத்து தன் விபவ அவதாரத்தின் போது ஒழித்தாராம், எவ்வுள் என்ற திவ்ய தேசத்தில் இருக்கும் அர்ச்சா அவதார பெருமாள்..

இதையே
அரக்கன் மன்னூர் தன்னை 
வாளியினால் மாள முனிந்து, 
என்று சொல்கிறார்.


தூது சென்று, சீதை இருக்குமிடத்தை கண்டுபிடித்து, வெற்றியுடன் திரும்பிய ஹனுமான், ராமபிரானின் தாபத்தை, தீர்த்தார்.
ஹனுமானுக்கு பதில் செய்ய முடியாமலேயே அந்த அவதாரம் முடிந்து விட, அதே ராமபிரானே (அவனே!!),
அடுத்த அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில்,
"இந்த முறை ஹனுமனை போல தான் தூது போக வேண்டும்... அவருக்கு இந்த அவதாரத்தில் பதில் செய்து விடவேண்டும்"
என்று நினைத்தாராம்.




வாயு புத்ர ஹனுமானே, இங்கு பீமனாக அவதரிக்க,
"தான் தூது போகிறேன்!!" என்று யுதிஷ்டிரரிடம் யாசித்து "ஹனுமானுக்கு பதில் செய்து விட நினைத்தாராம்" இந்த எவ்வுள் பெருமாள்...

ஆழ்வாருக்கு கண்ணன் மாடு மேய்க்கும் சிறு பாலகனாக தெரிய, கண்ணபிரானை சிறு பாலகனாகவே ரசிக்கிறார்.

"ஹனுமானுக்கு இந்த அவதாரத்தில் பதில் செய்து விடலாம்" 
என்று ஏதோ ஒரு ஆசையில் கிளம்பி விட்டாலும், 
இந்த கண்ணனோ, சிறு பாலகனாம். 

"வெண்ணை கொடுத்தால் சாப்பிடும்" இந்த பாலகண்ணன்,
ஹனுமானுக்கு பதில் செய்து விடலாம் என்ற ஆசையில், த்ருத ராஷ்டிரன் சபைக்கு வந்து விட்டானாம்.

ஹனுமானை போல சாமர்த்தியமாக குடும்ப விவகாரம் பேச தெரியாத சிறு பாலகன்,
"பகவத் கீதை சொல்" என்று ஞானத்துக்கு வழி கேட்டால், ஒரு மணி நேரம் பேசுவானாம்.
இதுவோ!! "குடும்ப பிரச்சனை. சொத்து பிரச்சனை".

குழந்தைக்கு, குடும்ப பிரச்சனையை எப்படி பேச தெரியும்?
"மாட்டை பற்றி கேட்டால் கூட" ஒரு மணி நேரம் பேசுவானாம்.
அல்லது,
"உலக படைப்பை பற்றி கேட்டால்", அதை பற்றியும் கூட பேசுவானாம் இந்த கண்ணன்.

"குடும்ப விவகாரமே தெரியாத இந்த பால கிருஷ்ணன்"
ஏதோ ஆசையில் தூதுவனாக சபைக்கு வந்து விட, ஹனுமானை போல சாமர்த்தியமாக பேச தெரியாமல், கையை பிசைந்து கொண்டு "நின்றானே" என்று கொஞ்சி மகிழ்கிறார்.

பால கிருஷ்ணனாக இருந்தால் தான், ஹநுமானை போல தூதில் சாமர்த்தியமாக பேச தெரியாமல், சமாதான பேச போய், 
"ஒரு குண்டூசி நிலம் கூட தர முடியாது" என்று துரியோதனன் சொல்ல, 
"நீங்களெல்லாம் அயோக்கியன்" என்று சொல்லி மிரட்டி விட்டு, 
தகுதி இல்லாதவர்களுக்கு போய் இந்த கண்ணன் "விஸ்வ ரூபமும்" காண்பித்து விட்டு
ஹநுமானுக்கு பதில் செய்ய முடியாத வருத்தத்துடன் திரும்பி சென்று விட்டானாம்.

அதையே
பின்னோர் 
தூதன் ஆதிமன்னர்க்கு ஆகிப் 
பெருநிலத்தார் இன்னார் தூதன் என, 
'நின்றான்'
என்று பாடுகிறார்.

ராமனாகவும், கிருஷ்ணனாகவும் விபவ அவதாரம் செய்த அதே எம்பெருமான் தான்,  எவ்வுள் என்ற திவ்ய தேசத்தில் அர்ச்சா திருமேனியுடன் காட்சி கொடுத்துக்கொண்டு சயன கோலத்தில் இருக்கிறார் (எவ்வுள் கிடந்தானே!!)  
என்று என்று நாம் எல்லோரையும் வீர ராகவ பெருமாளை பார்க்க அழைக்கிறார் திருமங்கையாழ்வார்.

"எவ்வுள்" என்று அழைக்கப்படும் இந்த திவ்ய தேசத்துக்கு "திருவள்ளூர்" என்று இன்று பெயர்.
அவசியம் பார்க்க வேண்டிய திவ்ய தேசம்சென்னைக்கு அருகில் உள்ளது.