Followers

Search Here...

Showing posts with label நீதி. Show all posts
Showing posts with label நீதி. Show all posts

Tuesday 28 June 2022

ஹிந்துக்கள் பயன்படுத்த தவறிய ராஜ தர்மம். அந்நியர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ராஜ தர்மம். அது என்ன...அறிவோம். ஒரு எதிரியை சமாளிப்பது எப்படி? ஒரே சமயத்தில், இரண்டு எதிரிகளை சமாளிப்பது எப்படி? அறிவோம் ராஜ தர்மம்.

பிரித்து ஆளும் கொள்கை (பேத நீதி) 

  • ஹிந்துக்கள் பயன்படுத்த தவறிய ராஜ தர்மம்.
  • ஹிந்துக்கள் மீது அந்நியர்கள் பயன்படுத்தி இன்று வரை வெற்றி காணும், ராஜ தர்மம்.

ராஜ தர்மத்தில் "சமாதானம், தானம், பேதம், தண்டனை" என்ற 4 நீதிகள் உண்டு. 

'இந்த வரிசையில் தான் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும்' என்பது விதி.


'தண்டனை நீதி, மற்ற மூன்று நீதியும் பயனற்று போகும் போது தான் செயல் படுத்தப்பட வேண்டும்' என்பது விதி.


ராஜ தர்மமான இந்த பேத நீதி கொள்கையை ஹிந்துக்கள் பயன்படுத்திய வரை, பாரத தேசம் அந்நியர்களுக்கு அடிபணியவில்லை

அதை சரியாக பயன்படுத்தாமல் போனதும், ஹிந்து தேசமான பாரத தேசம் பல துன்பங்களை எதிர்கொண்டது.

அந்நியர்கள் ஹிந்துக்கள் மீதே பேத நீதியை பயன்படுத்தி சக ஹிந்துக்களிடம் குழப்பத்தை, பொறாமையை ஏற்படுத்தி பிரித்தார்கள். 

'எட்டப்பன்' போன்ற ஹிந்துவை பேத நீதியை கொண்டு பிரித்து, வீரபாண்டிய கட்டபொம்மனை கொன்றார்கள். 

வெற்றி கண்டார்கள். இன்று வரை பேத நிதியை பயன்படுத்தி ஹிந்துக்களை பிரிக்கிறார்கள்.

எதிரிகளிடமிருந்து காத்து கொள்ள, பிரித்து ஆளும் கொள்கையை ஆழமாக புரிந்து கொள்வது அவசியம். 

ஹிந்துக்கள் ராஜ தர்மமான பேத நீதியை புரிந்து, பயன்படுத்த வேண்டும்.


இது சம்பந்தமாக, பீஷ்மரிடம் யுதிஷ்டிர மஹாராஜன் கேட்ட போது, இவ்வாறு பீஷ்மர் சொன்னார்.

क्षेत्रस्थेषु च सस्येषु शत्रॊर उपजपेन नरान

विनाशयेद वा सर्वस्वं बलेनाथ सवकेन वै

- மஹாபாரதம் (வியாசர்)

பல வழிகளை பயன்படுத்தி, எதிரியின் பக்கமுள்ள ஜனங்களை பிரிக்க (பேதம்) வேண்டும். இப்படி பிரிக்கப்பட்ட எதிரியின் மக்கள் கூட்டத்தை கொண்டே,  எதிரிகளை அழிக்க வேண்டும். தேவைப்பட்டால், சேனையையும் சேர்த்து கொண்டு அழிக்க வேண்டும்.

नदीषु मार्गेषु सदा संक्रमान् अवसादयेत्

जलं निस्रावयेत् सर्वम् अनिस्राव्यं च दूषयेत्

- மஹாபாரதம் (வியாசர்)

எதிரிகள் தேசத்துக்குள் நுழைய நதியில் போட்ட பாலங்களை உடைத்து விட வேண்டும். தாக்க வரும் எதிரிகளுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத படி, குளங்களை உடைத்து, அதில் உள்ள நீரை  ஓட செய்ய வேண்டும்.

तदात्वेनायतीभि: च विवदन् भूम्यनन्तरम्

प्रतीघातः परस्याजौ मित्र काले अपि उपस्थिते

- மஹாபாரதம் (வியாசர்)

நமது எதிரியிடம் பகை உள்ளவன் யார்? என்று தெரிந்து கொண்டு, நமது எதிரியை வெல்லத்தக்கவன் யார்? என்று தெரிந்து கொண்டு, அவர்களிடம் நாம் நட்பு செய்து கொண்டு வசிக்க வேண்டும்.


வியாசரின் மஹாபாரதம் படிக்கும் போது நமக்கு ராஜதர்மத்தின் வழிகள் தெரிந்து விடும். 

1.

நமக்கு ஒரே ஒரு எதிரி இருந்தால், எப்படி சமாளிக்க வேண்டும்? 

தண்ட நீதி முடிந்தவரை எடுக்க கூடாது. அது இரு பக்கமும் அழிவை தரும்.

முதலில் சமாதானம் பேசியும், தானம் செய்தும், பார்க்க வேண்டும். 

எதிரி அப்பொழுதும் அடங்கவில்லையென்றால், பிரித்து ஆளும் கொள்கையை ஹிந்துக்கள் கட்டாயம் நடைமுறை படுத்தவேண்டும். 

பேத நீதியை பயன்படுத்தாமல், தண்ட நீதியில் இறங்கவே கூடாது. 

இது ராஜதர்மம்.


எதிரியின் பக்கம் இருக்கும் மக்களை, பொறாமை, வெறுப்பு, ஏற்றத்தாழ்வு என்று பல வழிகள் மூலம் எதிரியின் மக்களை பிரித்து விட வேண்டும். 


இந்த நீதியை ஹிந்துக்கள் பயன்படுத்தாத காரணத்தால், இன்று தன்னை எதிர்ப்பவர்களை சமாளிக்க வழி புரியாமலும், ஹிந்துக்களிடையே ஒற்றுமையை பிறர் சீர்குலைப்பதை பார்த்து கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது. 


இந்த ராஜ தர்மத்தை, நம் மீது அந்நியர்கள் பயன்படுத்துகிறார்கள். நாம் நம்முடைய ராஜ தர்மமான பேத நீதியை பயன்படுத்துவதில்லை. 

இதை ஹிந்துக்கள் கவனிக்க வேண்டும்.


ஜாதி வித்யாசம் சொல்லி, தீண்டாமை சொல்லி, கல்வி மறுப்பு என்ற புரளியை கிளப்பி, பிராம்மண வெறுப்பை உண்டாக்கி, ஹிந்து தெய்வத்தை கேலி செய்து - மேலும் பல வழிகளை பயன்படுத்தி ஹிந்து மக்களை பிரித்து ஆளும் கொள்கையை இன்று வரை செய்கின்றனர். 

பீஷ்மர் காட்டிய அற்புதமான பேத நீதியை ஹிந்துக்கள் கடைபிடிப்பதில்லை. அந்நியர்கள் கடைபிடிக்கின்றனர்.

இதை கவனிக்க வேண்டும். 

இதை ஹிந்துக்கள் சரிவர திரும்ப பயன்படுத்தும் போது, எதிரியின் பலம் தானாக குறையும்.

2.

ஒரே சமயத்தில் இரண்டு எதிரிகள் நம்மை எதிர்த்தால் என்ன செய்வது? எப்படி பிரித்து ஆளும் கொள்கையை (பேத நீதி) பயன்படுத்த வேண்டும்?

இரண்டு எதிரிகள் சேர்ந்து நம்மை தாக்கும் போது, இருவரையும் நாம் தண்ட நீதி கொண்டு தாக்குவது என்பது சரியான வழி அல்ல.

முதலில் எதிரிகள் இருவரையும் பிரிக்க வேண்டும்.

அவர்கள் நட்பாக விடாமல், பிரித்து ஆளும் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.


ஒரு எதிரியிடம் மற்றொரு எதிரியின் எதிர்மறையான கொள்கையை காட்டி, அவர்களிடம் இருக்கும் பொறாமை, வெறுப்பை காட்டி உணர்ச்சியை தூண்ட வேண்டும். எதிரிகளுக்குள்ளே வெறுப்பை உண்டாக்க வேண்டும். 


இப்படியே இருவருக்கும் உள்ள பகையை வளர்த்து, அவர்களுக்குள் சண்டை ஏற்பட செய்ய வேண்டும்.


இப்படி சரியாக பேத நீதியை கையாளும் போது, நாம் சண்டையிட அவசியமில்லாமல், இவர்களே அடித்து கொண்டு மடிவார்கள்.


மஹாபாரத போர் முடிவான போது,

ஸ்ரீ கிருஷ்ணர்,

- சமாதானம் பேசி சண்டையை தடுக்க தூது சென்றார். பலிக்கவில்லை.

- 'தானமாக 5 கிராமம் மட்டும் கொடு, சண்டை வேண்டாம்' என்கிறார். அதுவும் பலிக்கவில்லை.

- துரியோதனனின் பக்கம் இருந்த கர்ணனிடம், 'அவன் தாய் யார்?' என்று சொல்லி பேதம் செய்ய முயற்சித்தார். துரியோதனன் பலத்தை குறைக்க பார்த்தார். அதுவும் பலிக்கவில்லை.

- இறுதியாக தண்ட நீதி எடுத்து பாண்டவர்கள் போர் செய்தனர். சாம, தான, பேத தர்மம் முயற்சி செய்த பிறகு போருக்கு வந்ததால், தெய்வமே பாண்டவர்கள் பக்கம் இருந்து, காப்பாற்றி, யுதிஷ்டிரனை அரசனாக்கினார்.

பேத நீதியை அதற்கு பிறகு ஹிந்துக்கள் கவனிக்காமல் விட்டனர்.

அந்நியர்கள் அனைவரும் இன்று வரை ஹிந்துக்கள் பேத நீதி பயன்படுத்தி, பிரித்து ஆளுகின்றனர்.


ஹிந்துக்கள் பேத நீதியை கையில் எடுக்கும் போது, எதிரிகள் தானாக குறைவார்கள்.  

Monday 18 June 2018

உயர்ந்த குணமான பொறுமையால், கோபத்தை வெல்லுபவனே புத்திசாலி

பொறுமை என்பது மிக உயர்ந்த குணமாகும்.

உயர்ந்த குணமான பொறுமையால், கோபத்தை வெல்லுபவனே புத்திசாலி.

கோபம் வந்தவனுக்கு,
இது பேசக்கூடாதது
இது பேசக்கூடியது
இது செய்யத்தக்கது
இது செய்யத்தகாதது என்று விவேகம் இருப்பதில்லை.



கோபம் வந்தவன் தகாத வார்த்தைகளால் குரு, மாதா, பிதா, தெய்வம் இவர்களைக் கூட திட்டி விடுகிறான்.

கோபம் வந்தவன் தன் மனைவியை கூட விபச்சாரி என்று திட்டி விடுகிறான். இப்படி திட்டினால், யாருக்கு அவமானம்?

கோபம் வந்தவன் தன் மகனைப் பார்த்து அல்பாயஸே என்கிறான். மகன் செத்து விட்டால் நிம்மதியாய் இருப்பானா?

கோபம் வந்தவன் தன் மனைவியை பார்த்து விதவையே என்கிறான். தன்னையே திட்டிக்கொண்டதாகும். தான் சாகாமல் மனைவி எப்படி விதவை ஆக முடியும்?

கோபம் வந்தவன் தான் சம்பாதித்த பொருட்களையே தூக்கி எறிந்து உடைத்து பாழாக்குகிறான். யாருக்கு நஷ்டம்?



கோபம் வந்தவன் வீட்டில் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறான். யாருக்கு சிரமம்?

கோபம் வந்தவன் கார்யாலயத்தில் வேலையை விட்டு விடுகிறான். அப்புறம் திண்டாடுகிறான்.

கோபம் வந்தவன் விரோதியை மட்டுமின்றி மனைவி மக்களைக் கூட கொலை செய்து விடுவான்.

முன் கோபிகளுக்கு புத்தி கிடையாது. 
முன் கோபிகளுக்கு இஹமும் இல்லை. பரமும் இல்லை.
கோபக்காரனை யாரும் வெறுப்பார்கள்.
அதிகக் கோபக்காரனிடமும், அனாவசிய கோபக்காரனிடமும் யாரும் பயப்பட மாட்டார்கள். அலக்ஷ்யம் செய்வார்கள். பரிகாசமும் செய்வார்கள். கோபத்தை கிளப்பி விட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள்.

உலகத்திலும், குடும்பத்திலும் தன் மதிப்பை இழப்பது தவிர "கோபக்காரனுக்கு" வேறு பயன் கிடையாது.
கோபத்தினால் இவ்வாறு பல தொல்லை உண்டு.