Followers

Search Here...

Showing posts with label Rishi. Show all posts
Showing posts with label Rishi. Show all posts

Sunday 10 July 2022

Know your Gotra: Understand your lineage you came from..... Learn about Asita, Devala, Sandilya rishi...gotra

Saṇḍilya gotra (let's know about our rishi and their devotion and their ancestor and lineage)

Asitha rishi's son -> Devala rishi. 

Devala rishi's son -> Sandilya rishi

Sandilya is the great grandson of Kashyapa


Asitha rishi:

In ramayana period, 

Asita rishi explained the King Janaka about the philosophy of rebirth. (Brahmāṇḍa Purāṇa, Chapter 47).

Also, 

Asita was a king (later became raja rishi) of the surya dynasty, the son of Bharata, and an ancestor of Rama (avatar of vishnu)

Know about Kashyaba rishi, Asitha (raja rishi) till Rama lineage in valmiki ramayan.

https://www.proudhindudharma.com/2021/03/ram-parampara.html


In Mahabharata period,

Celestial rishi Asitha and his son devala, both participated in sarpa yagya as per the command of janamejeya (great grand son of arjuna). Other celestial rishi who were present are Bhārgava, Kautsa, Jaimini, Sārṅgarava, Piṅgala, Vyāsa, Uddālaka Pramattaka, Śvetaketu, Nārada, Parvata, Ātreya, Kuṇḍajāra, Kālaghāṭs, Vātsya, Kohala, Devaśarmā, Maudgalya, Samasaurabha. (Chapter 53, Ādi Parva, Mahābhārata) 


Asita, the sage, got by the blessing of Śiva a son named Devala. (Brahmavaivarta Purāṇa).


Devala rishi:

Devala was the son born to Asita rishi as the result of a boon granted by Śiva

Celestial rishi Devala, once came to kanchipuram and took holy bath in vegavathi (saraswathi river).

That time, a gandharva named "huhu" (musician in swarga loka) entered deep inside the river silently and dragged the muni's feet.

Devala rishi cursed him to become crocodile as he was trying to drag others into river for his mischievous play.

Gandharva begged the devala rishi to pardon him and get back to swarga loka.

Devala said "the day vishnu chakra cut you, you will be released from this curse and will reach your place and form".

After years.. indradhyumna a pandya king who installed vyuha, vibhava, prakriti forms of vishnu (jagannath) in Puri, Odisha (utkala kingdom) which later was known as krishna, balarama, subhadra, got cursed by narada to become elephant when he disrespected his arrival to his palace.

Narada also pardoned him and said he will attain moksha when vishnu appears and save him at distress.

Gajendra moksha happened at same kanchipuram. The lord vishnu appeared as ashta buja perumal (vishnu with 8 weapons with 8 hands) and saved gajendra and cut the crocodile with his chakra.

Thus vishnu made both rishi's words true. 

Ashta buja perumal temple is must visit place in kanchipuram where gajendra moksha happened.


Raṃbhā, the heavenly dancer fell in love with devala rishi. 

But, Devala did not reciprocrate her love. So, she cursed him to become crooked with 8 bends in body. When he became crooked thus he came to be called Aṣṭāvakra

His curse got removed during krishna avatar.

Devala rishi met Śrī Kṛṣṇa on his way from Dvārakā to Hastināpura after the great war was over and questioned him why he did not stop this war and krishna explained the incidents to devala rishi in detail. 


Sandilya rishi:

Sandilya rishi is associated with the Shatapatha Brahmana of the Shukla Yajurveda. 

His teachings are in Chandogya Upanishad

Sandilya rishi, who desired to worship Viṣhṇu but not in the Vedic method for which purpose he even wrote a book to propagate non-vedic principles. For the above sinful action he had to live in hell and at last he was born as Jamadagni of the Bhṛgu dynasty. (Vṛddhahārīta smṛti)


Brihadaranyaka Upanishad states that Sandilya rishi was a disciple of Vaatsya rishi. He was also the composer of the Śāṇḍilya Upanishad.


Sandilya Bhaktisūtras (Aphorisms on devotion) are as famous as those of Nārada. He taught bhakti in a scientific way (by Śāṇḍilya science).

Sandilya rishi was instrumental in resolving certain metaphysical doubts of King Parikshit of Hastinapura and King Vajranabha of Dwaraka and he was instrumental to start idol worship of krishna bhakti after krishna avatar completed.

Read here to more about this...

https://www.proudhindudharma.com/2020/08/how-krishna-worship-started.html

Sunday 27 June 2021

சீதையின் பெருமை.. கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்

கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்

"14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும்" என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால், ராமபிரான் சித்ர கூடத்தில் பரதனை பார்த்து தன் பாதுகையை கொடுத்து சமாதானம் செய்து, அயோத்திக்கு திருப்பி அனுப்பிய பிறகு தண்டக வனத்தில் பிரவேசித்தார்.


அங்கு சரபங்க முனிவரை தரிசித்தார். 

ராமபிரானை தரிசித்த பிறகு,  சரபங்க ரிஷி தன் உடலை அக்னியில் விட்டு விட்டு, ப்ரம்ம லோகம் சென்று விட்டார்.


சரபங்கர் சொன்னபடி, சுதீக்ஷன ரிஷியை பார்க்க பல வனங்கள், மலைகள் கடந்து வந்து கொண்டிருந்தார் ராமபிரான். கூடவே லக்ஷ்மணரும், சீதா தேவியும் வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழிகளில், பல ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சில ரிஷிகள் ராமபிரானை பார்த்து, தங்களுக்கு நேரும் அபாயத்தை பற்றி விவரித்து, ராமபிரானிடம் அபயம் கேட்டனர். 





स: अयं ब्राह्मण भूयिष्ठो 

वानप्रस्थ गणो महान् |

त्वन्नाथ: अनाथवद् राम 

राक्षसै: वध्यते भृशम् ||

- वाल्मीकि रामायण

ஸ: அயம் ப்ராஹ்மண பூயிஷ்டோ

வான ப்ரஸ்த கணோ மஹான் |

த்வன்நாத: அனாதவத் ராம

ராக்ஷஸை: வத்யதே ப்ருஸம் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! We are a group of great sages, mostly brahmins, leading a vanaprastha life. Yet with a protector like you, we are slaughtered in large numbers like orphans by rakshasas.

ராமா ! நாங்கள் பெரும்பாலும் வானப்ரஸ்தம் ஏற்ற ப்ராம்மணர்கள். உங்களை போன்ற பாதுகாவலர் இருந்தும், இங்கு ராக்ஷஸர்களால் அனாதைகள் போல நாங்கள் குவியல் குவியலாக கொல்லப்படுகிறோம்.


एहि पश्य शरीराणि 

मुनीनां भावित आत्मनाम् |

हतानां राक्षसै र्घोरै: 

बहूनां बहुधा वने ||

- वाल्मीकि रामायण

யேஹி பஸ்ய சரீராணி

முனீனாம் பாவித ஆத்மநாம் |

ஹதானாம் ராக்ஷஸை கோரை: 

பஹுனாம் பஹுதா வனே ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! Come and see the huge number of dead bodies, who had perceived the Supreme Spirit, killed in large numbers in the forest by the fierce rakshasa.This is a veritable Holocaust.

ராமா ! இதோ பாருங்கள்.. இங்கு குவியலாக கிடக்கும் எலும்பு குவியலை. நர மாமிசம் உண்ணும் ராக்ஷஸர்கள், தவம் செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை விழுங்கி துப்பிய எலும்புகள் இவை. 


पम्पा नदी निवासानाम् 

अनु-मन्दाकिनीम् अपि |

चित्रकूट आलयानां च 

क्रियते कदनं महत् ||

- वाल्मीकि रामायण

பம்பா நதீ நிவாஸானாம்

அனு-மந்தாகினீம் அபி |

சித்ரகூட ஆலயானாம் ச

க்ரியதே கதனம் மஹத் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama ! A great slaughter is taking place amongst those residing on the bank of the Pampa lake, near the river Mandakini, and on mount Chitrakuta.

ராமா! பம்பா நதிக்கரையில், மந்தாகினி ஓடும் நதிக்கரையில், சித்ரகூட சமீபத்தில் வசிக்கும் அனைவரையும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள் ராக்ஷஸர்கள்.


एवं वयं न मृष्यामो 

विप्रकारं तपस्विनाम् |

क्रियमाणं वने घोरं 

रक्षोभि: भीम कर्मभिः ||

- वाल्मीकि रामायण

ஏவம் வயம் ந ம்ருஷ்யாமோ

விப்ரகாரம் தபஸ்வினாம் |

க்ரியமானம் வனே கோரம்

ரக்ஷோபி: பீம கர்மபி: ||

- வால்மீகி ராமாயணம்

We are not able to tolerate the fearful deeds perpetrated by the dreadful rakshasas in the forest.

ராமா! ராக்ஷஸர்கள் செய்யும் இந்த பெரும் நாசத்தை, எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. 





तत: त्वां शरणार्थं च 

शरण्यं सम उपस्थिताः |

परिपालय नो राम 

वध्यमानान् निशाचरैः ||

- वाल्मीकि रामायण

தத: த்வாம் சரணார்தம் ச

சரண்யம் ஸம உபஸ்திதா: |

பரிபாலய நோ ராம

வத்யமானான் நிஸாசரை: ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! you are worthy of refuge. Hence we have come to you seeking your protection. We are being killed by the night stalkers. Save us.

நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்கு தகுதியானவர். எனவே உங்கள் பாதுகாப்பை நாடி நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களால் நாங்கள் கொல்லப்படுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்.


परा त्वत्तो गतिर्वीर 

पृथिव्यां न: उपपद्यते |

परिपालय न सर्वान् 

राक्षसेभ्यो नृप आत्मज ||

- वाल्मीकि रामायण

பரா த்வத்தோ கதி வீர

ப்ருதிவ்யாம் ந: உபபத்யதே |

பரிபாலய ந சர்வான்

ராக்ஷஸேப்யோ ந்ருப ஆத்மஜ ||

- வால்மீகி ராமாயணம்

O great warrior ! Here on this earth, there is no protector as mighty as you. So, O prince ! Save us all from these demons raakshas.

பராக்ரமசாலியே ! ராமா ! இந்த உலகில் உங்களை போன்ற வலிமையான ரக்ஷகன் இல்லவே இல்லை. நீங்கள் எங்கள் அனைவரையும் இந்த ராக்ஷஸர்களிடமிருந்து ரக்ஷிக்க வேண்டும். 


एतत् श्रुत्वातु काकुत्स्थ: 

तापसानां तपस्विनाम् |

इदं प्रोवाच धर्मात्मा 

सर्वान् एव तपस्विनः ||

- वाल्मीकि रामायण

ஏதத் ஸ்ருத்வாது காகுத்ஸ்த:

தாபஸானாம் தபஸ்வினாம் |

இதம் ப்ரோவாச தர்மாத்மா

சர்வான் ஏவ தபஸ்வின: ||

- வால்மீகி ராமாயணம்

Having heard this, righteous Rama of the Kakutstha dynasty said to all the ascetics engaged in penance.

இவ்வாறு தவ ரிஷிகளின் சொல்ல, தர்மத்தில் இருப்பவர்களை காக்கும் காகுஸ்தனான ராமபிரான் கம்பீரமாக பேசலானார்.. 


नैवम् अर्हथ मां वक्तुम् 

आज्ञाप्य अहं तपस्विनाम् |

केवलेन् आत्म कार्येण 

प्रवेष्टव्यं मया वनं ||

- वाल्मीकि रामायण

நைவம் அர்ஹத மாம் வக்தும்

ஆஞாப்ய அஹம் தபஸ்வினாம் |

கேவலேன ஆத்ம கார்யேன

ப்ரவேஷ்டவ்யம் மயா வனம் ||

- வால்மீகி ராமாயணம்

You should not speak to me this way. I deserve to be commanded to do this task. I am at your service. I came to the forest only for my work.

ரிஷிகளான தாங்கள் இவ்வாறு என்னிடம் கேட்பது கூடாது. எனக்கு நீங்கள் ஆணை இட வேண்டும். நீங்கள் இட்ட ஆணையை செயல்படுத்தும் சேவகன் நான். நான் என்னுடைய கடமையை செய்யவே வனத்திற்கு வந்தேன்.


विप्रकारम् अपाक्रष्टुं 

राक्षसै:  भवताम् इमम् |

पितु: तु निर्देश-करः 

प्रविष्ट: अहमिदं वनम् ||

- वाल्मीकि रामायण

விப்ரகாரம் அபாக்ரஷ்டும்

ராக்ஷஸை: பவதாம் இமம் |

பிது: து நிர்தேச கர:

ப்ரவிஷ்ட: அஹம் இதம் வனம் ||

- வால்மீகி ராமாயணம்

I came into this forest in obedience to my father's orders to repel the aggression of demons against you.

என் தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு வந்த நான், உங்களுக்கு தொந்தரவு செய்யும் இந்த ராக்ஷஸர்களை தடுப்பேன்.


भवताम् अर्थ सिद्ध्यर्थम् 

आगत: अहं यदृच्छया |

तस्य मे अयं वने 

वासो भविष्यति महाफलः ||

- वाल्मीकि रामायण

பவதாம் அர்த சித்தார்தம்

ஆகத: அஹம் யத்ருச்சயா |

தஸ்ய மே அயம் வனே

வாஸோ பவிஷ்யதி மஹாபல: ||

- வால்மீகி ராமாயணம்

But by good fortune, I have got a chance to accomplish your mission. Therefore, My forest life shall become greatly fruitful by this.

அதிர்ஷ்டத்தால், உங்களுக்கு சேவை செய்ய, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு சேவை செய்வதால் என் வனவாசம் பலன் பெற்றது.




तपस्विनां रणे शत्रून् 

हन्तुम् इच्छामि राक्षसान् |

पश्यन्तु वीर्यम् ऋषय: 

सभ्रातु: मे तपोधनाः ||

- वाल्मीकि रामायण

தபஸ்வினாம் ரணே சத்ரூன்

ஹந்தும் இச்சாமி ராக்ஷஸான் |

பஸ்யந்து வீர்யம் ருஷய:

ஸ-ப்ராது: மே தபோதன: ||

- வால்மீகி ராமாயணம்

I wish to kill those raakshasas who are your enemies. O great rishis !, you may witness my valor supported by my brother.

உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த ராக்ஷஸர்களை நான் ஒழிப்பேன். மஹாத்மாக்களான ரிஷிகளே! என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் காணப்போகிறீர்கள்.


दत्त्वा अभयं च अपि तपोधनानां 

धर्मे धृतात्मा सह लक्ष्मणेन।

तपोधनै: च अपि सभाज्यवृत्तः 

सुतीक्ष्णमेव अभिजगाम वीरः ||

- वाल्मीकि रामायण

தத்வா அபயம் ச அபி தபோதனானாம்

தர்மே த்ருதாத்மா சஹ லக்ஷ்மணேன |

தபோதனை: ச அபி ஸபாஜ்ய வ்ருத்த:

சுதீக்ஷ்ண மேவ அபி-ஜகாம வீர: ||

- வால்மீகி ராமாயணம்

Brave Rama who is Steadfast in righteousness, worthy of honour, gave assurance to protect the rishis endowed with the wealth of penance, and proceeded towards sage Suteekshna.

சங்கல்பத்தில் உறுதியும், மரியாதைக்குரியவருமான துணிவுடைய ராமபிரான், தவமே செல்வமாக கொண்ட ரிஷிகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார். மேலும், சுதீக்ஷ்ண ரிஷியை நோக்கி தரிசிக்க முன்னேறினார்.


சுதீக்ஷ்ண ரிஷியை தரிசித்து, அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு தங்கி விட்டு, மேலும் தண்டக வனத்திற்குள் சஞ்சரிக்கலானார்.

குற்றங்களே கண்ணுக்கு தெரியாத, கருணையே உருவான சீதாதேவி... ராமபிரானிடம் சொல்கிறாள்...


त्रीण्येव व्यसनानि 

अत्र कामजानि भवन्ति उत |

मिथ्या वाक्यं परमकं 

तस्माद् गुरुतरौ उभौ ||

परदार अभिगमनं 

विना वैरं च रौद्रता ||

- वाल्मीकि रामायण

த்ரீன் ஏவ வ்யஸனானி

அத்ர காமஜானி பவந்தி உத |

மித்யா வாக்யம் பரமகம்

தஸ்மாத் குருதரௌ உபௌ ||

பரதார அபிகமனம் 

வினா வைரம் ச ரௌத்ரதா ||

- வால்மீகி ராமாயணம்

O Man of Truth! Three things born out of lust. 

speaking untruth, 

having sexual relation with others' wives and

resorting to violence with no enmity. 

The later two are worst than the 1st.

ஓருவனுக்கு திருப்தியே இல்லாத போது, மூன்று வகையான தீமைகள் பிறக்கின்றன. 

திருப்தியே இல்லாதவன், பொய் பேச துணிவான். 

திருப்தியே இல்லாதவன், பர தாரத்தை கூட அபகரிக்க நினைப்பான்.

திருப்தியே இல்லாதவன், தன்னிடம் பகை காட்டாதவனிடம் கூட வலிய சென்று பகையை காட்டுவான். 

பொய் சொல்வதை காட்டிலும், மற்ற இரண்டும் மிகவும் கொடியது.

मिथ्यावाक्यं न ते भूतं 

न भविष्यति राघव |

कुत: अभिलाषणं स्त्रीणां 

परेषां धर्म नाशनम् ||

- वाल्मीकि रामायण

மித்யா வாக்யம் ந தே பூதம்

ந பவிஷ்யதி ராகவ |

குத: அபிலாஷனம் ஸ்த்ரீணாம்

பரேஷாம் தர்ம நாஸனம் ||

- வால்மீகி ராமாயணம்

O Raghava! you never spoke untruth in the past nor you will speak in future. 

Also, you will never desire other man's wife both in past and future.

ராகவா! நீங்கள் அன்றும் இன்றும் என்றுமே சத்தியத்தை மீறுபவர் இல்லை. உங்களிடம் அஸத்தியம் கிடையவே கிடையாது. 

ராகவா! அதே போல, பிற தாரத்தின் மேல் ஆசை கொள்வதில்லை.


तव नास्ति मनुष्येन्द्र 

न च अभूत् ते कदाचन |

मनस्यपि तथा राम 

न च एतद् विद्यते क्वचित् ||

- वाल्मीकि रामायण

தவ நாஸ்தி மனுஷ்யேந்த்ர

ந ச அபூத் தே கதாசன |

மனஸ்யபி ததா ராம

ந ச ஏதத் வித்யதே க்வசித் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! You hadn't desire for other women in the past. You havn't it now. Never does it exist even in your mind

ராகவா! பிறர் தாரத்தை அடையும் ஆசை உங்களுக்கு முன்பும் இருந்தது இல்லை.  இப்பொழுதும் இல்லை. உங்கள் மனதில் இந்த எண்ணமே இல்லை.


स्वदार-निरत: त्वं 

च नित्यमेव नृपात्मज |

धर्मिष्ठ: सत्य-सन्धश्च 

पितु र्निर्देश कारकः ||

- वाल्मीकि रामायण

ஸ்வதார நிரத: த்வம்

ச நித்யம் ஏவ ந்ருப ஆத்மஜ |

தர்மிஷ்ட: சத்ய சந்த: ச

பிது நிர்தேஸ காரக: ||

- வால்மீகி ராமாயணம்

O prince! you are always faithful to your wife. You are righteous, truthful and obedient to your father's orders.

ராகவா! நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பத்னிக்கு துரோகம் செய்யாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் தர்மத்தை அறிந்தவர், சத்தியத்தை மீறாதவர், தகப்பனார் ஆணையை மீறாதவர்.


सत्यसन्ध महाभाग 

श्रीमन् लक्ष्मण पूर्वज |

त्वयि धर्मश्च सत्यं च 

त्वयि सर्वं प्रतिष्ठितम् ||

- वाल्मीकि रामायण

சத்யசந்த மஹாபாக

ஸ்ரீமந் லக்ஷ்மண பூர்வஜ |

த்வயீ தர்ம: ச சத்யம் ச

த்வயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம் ||

- வால்மீகி ராமாயணம்

Rama! O Man of truth! O auspicious one! O brother of lakshmana! In you,  truth and righteousness are ever present.

ராகவா! சத்யசந்தரே! போற்றுதலுக்கு உரியவரே! லக்ஷ்மணனுக்கு சகோதரரே! உங்களிடம் எப்பொழுதும் தர்மமும், சத்தியமும் குடி கொண்டு இருக்கிறது.


तत् च सर्वं महाबाहो 

शक्यं धर्तुं जितेन्द्रियैः |

तव वश्येन्द्रिय त्वं 

च जानामि शुभ-दर्शन ||

- वाल्मीकि रामायण

தத் ச ஸர்வம் மஹாபாஹோ

சக்யம் தர்த்தும் ஜிதேந்த்ரியை: |

தவ வஸ்யேந்த்ரிய த்வம்

ச ஜானாமி சுப தர்சன ||

- வால்மீகி ராமாயணம்

Only those who restrain their senses can hold all these features. I know that you have control over your senses.

ராகவா! புலனடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற நற்குணங்கள் காணப்படும். நீங்கள் புலனடக்கம் உள்ளவர் என்பதை நான் அறிவேன்.





तृतीयं यदिदं रौद्रं 

पर-प्राणाभि हिंसनम् |

निर्वैरं क्रियते मोहात् 

तत् च ते समुपस्थितम् ||

- वाल्मीकि रामायण

த்ருதீயம் யதீதம் ரௌத்ரம்

பர- ப்ரானாபி ஹிம்ஸனம் |

நிர்வைரம் க்ரியதே மோஹாத் 

தத் ச தே சமுபஸ்திதம் ||

- வால்மீகி ராமாயணம்

But i find the 3rd blemish of harming others without any direct enmity in you.

ராகவா! உங்களிடம் பொய்யும் இல்லை, பெண்ணாசையும் இல்லை. ஆனால் 'உங்களிடம் நேரிடையாக பகை இல்லாதவர்களை தாக்கும்' மூன்றாவது குறை தெரிகிறதே!! 


प्रतिज्ञात: त्वया वीर 

दण्डकारण्य वासिनाम् |

ऋषीणां रक्षणार्थाय 

वध: संयति रक्षसाम् ||

- वाल्मीकि रामायण

ப்ரதிஞாத: த்வயா வீர

தண்டக ஆரண்ய வாஸினாம் |

ருஷீணாம் ரக்ஷண அர்தாய

வத: ஸம்யதி ரக்ஷஸாம் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! You have promised the forest dwellers that you will kill the rakshasas in the battle, in order to protect the rishis, residing in the Dandaka forest.

ராகவா ! தண்டக வனத்தில் வசிக்கும் ரிஷிகளைப் பாதுகாப்பதற்காக, 'ராக்ஷஸைக் கொல்வேன்' என்று வனவாசிகளுக்கு வாக்குறுதி அளித்து விட்டீர்களே!


एत: निमित्तं च वनं 

दण्डका इति विश्रुतम् |

प्रस्थित: त्वं सह भ्रात्रा 

धृत बाण शरासनः ||

- वाल्मीकि रामायण

ஏத: நிமித்தம் ச வனம்

தண்டகா இதி விஸ்ருதம் |

ப்ரஸ்தித: த்வம் சஹ ப்ராத்ரா

த்ருத பாண சராஸந: ||

- வால்மீகி ராமாயணம்

Raghava ! It is very evident to see that you want to kill the rakshasas in dandaka forest and hence you have started entering dandaka forest with bow and arrows along with your brother.

ராகவா ! நீங்கள் தண்டக வனத்தில் ராக்ஷஸைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இதன் காரணமாக தான், நீங்கள் உங்கள் சகோதரருடன் வில் மற்றும் அம்புகளுடன் தண்டக வனத்தில் நுழையத் தொடங்கியுள்ளீர்கள்.


ततस्त्वां प्रस्थितं दृष्ट्वा 

मम चिन्ताकुलं मनः |

त्वद् वृत्तं चिन्तयन्त्या वै 

भवेन् निश्श्रेयसं हितम् ||

- वाल्मीकि रामायण

தத: த்வாம் ப்ரஸ்திதம் த்ருஷ்டவா

மம சிந்தாகுலம் மன: |

த்வத் வ்ருத்தம் சிந்தயந்த்யா வை

பவேந் நிஸ் ஸ்ரேயஸம் ஹிதம் ||

- வால்மீகி ராமாயணம்

Raghava ! I am worried that this will bring you no good.

ராகவா! இந்த காரணத்தால் நான் பெரிதும் கவலை கொள்கிறேன். 'உங்கள் புகழுக்கு எந்த குறையும் ஏற்பட கூடாதே!' என்று கவலை கொள்கிறேன்,  என்றாள் சீதாதேவி.


பரமாத்மா தர்மத்தை காப்பவர்.

தர்மம் செய்பவர்களை காக்க, அவர்களை தொந்தரவு செய்பவர்களை, அதர்மம் செய்பவர்களை தண்டித்து விடுவார்.


தாயாருக்கு தாய் பாசமே மேலோங்கி இருக்கும். தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளை அதர்மமே செய்தாலும் பரிந்து பேசும் குணம் உடையவள்.


ராமபிரான், ரிஷிகளை அநியாயமாக கொன்று குவித்ததை பார்த்ததும், 'ராக்ஷஸர்களுக்கு தண்டனை தர வேண்டும்' என்று வாக்கு கொடுத்தார்.

ராக்ஷஸர்கள் கொன்று குவித்து எலும்பு குவியலை நேரில் பார்த்தும், 'ராக்ஷஸர்களை தண்டிக்க வேண்டுமா? அவர்களை திருத்தலாமே!' என்று நினைத்தாள் சீதாதேவி..

இந்த குணம் இந்த இடத்தில் மட்டுமல்ல, அசோகவனத்திலும் காணலாம்.

சீதாதேவியை பார்த்து, "உன் கண்ணை பிடுங்கட்டுமா? நர மாமிசமாக உன்னை வெட்டி சாப்பிட போகிறேன்" என்று 10 மாதங்கள் ராக்ஷஸிகள் சூழ்ந்து கொண்டு சித்ரவதை செய்தனர்.

போரில் ராவணன் கொல்லப்பட்ட பின், ஹனுமான் சீதாதேவியை அழைக்க வந்த போது, "உங்களை கொடுமையான சொற்களால் இத்தனை மாதங்கள் மிரட்டிய இந்த ராக்ஷஸிகளை துண்டு துண்டாக வெட்டட்டுமா? இவர்கள் கண்களை பிடுங்கி ஏறியட்டுமா?" என்று கேட்க, அப்பொழுதும் சீதாதேவி தன்னை சித்ரவதை செய்த ராக்ஷஸிகளுக்கு பரிந்து பேசி ஹனுமானை சமாதானம் செய்து விட்டாள்.


தர்மத்தை மீறி நடப்பவர்களை கண்டால், பெருமாளுக்கு பிடிக்காது. 

தகப்பன் நிலை, பெருமாளுக்கு.

'இவன் நல்ல பிள்ளையாக இல்லையே! தர்மம் சொன்னாலும் கேட்காமல், அதர்மம் செய்கிறானே!' என்று கோபப்படுவார்.


தாயாரோ, தனக்கே துரோகம் செய்தாலும், அதர்மமே செய்தாலும், "சொல்லி திருத்துங்கள்… தண்டிக்காதீர்கள்" என்று பரிந்து பேசுவாள்.

குற்றம் வெளிப்படையாக செய்தாலும், குற்றத்தை பார்க்காமல், சிபாரிசு செய்பவளாக தாயார் இருக்கிறாள்.


மஹாலக்ஷ்மியே சீதாதேவியாக அவதரித்து இருப்பதால், இந்த ஆச்சர்யமான குணம் வெளிப்பட்டது.


'எலும்பு குவியலாக ரிஷிகளை கொன்று குவித்த, ராக்ஷஸர்களை கொல்ல கூடாது' என்பதற்காக 'தன்னிடமே ஒரு குற்றம் இருப்பதாக சொல்லும்' தாயுள்ளம் கொண்ட சீதாதேவியை கண்டு மந்தாஹாசம் செய்தார் ராமபிரான்.

தாயாரின் குணம் இது என்று அறிந்த ராமபிரான், சீதாதேவியிடம், "தர்மத்தை காப்பது என் கடமை. நானாக ராக்ஷஸர்களை அனாவசியமாக கொல்ல நினைக்கவில்லை. 

ரிஷிகள் என்னிடம் வந்து காப்பாற்றுமாறு கேட்டார்கள். அவர்களை காக்கும் பொறுப்பு இருப்பதால், அவ்வாறு வாக்கு கொடுத்தேன். 

நீ எனக்கு எதுவும் ஆக கூடாதே! என்ற அக்கரையில் தான் இப்படி பேசினாய் என்று அறிவேன். 

வாக்கு கொடுத்து விட்டால், என்னால் மீறவே முடியாது" என்று சாமர்த்தியமாக பேசி, மந்தஹாசத்துடன் சீதாதேவி, லக்ஷ்மணருடன் மேலும் வனத்திற்குள் நடக்கலானார்.


"கோவிலில், முதலில் தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்?" என்பதற்கு இதுவே காரணம்.


நேரிடையாக பெருமாள் சந்நிதிக்குள் நாம் சென்றால், தகப்பனார் போல இருக்கும் பெருமாள், உடனேயே 'இந்த பிள்ளையின் நல்ல குணங்கள் என்ன? கெட்ட குணங்கள் என்ன? நல்ல செயல்கள் என்ன? கெட்ட செயல்கள் என்ன?' என்று கவனித்து விடுவார்.

நாமோ பெரும்பாலும் அதர்மம் செய்பவர்களே! 

பெருமாள் பெருமைப்படும் அளவுக்கு நம் செயல்கள் இல்லை.

நம்மை பார்த்தவுடனேயே, 

'இப்படி அதர்மம் செய்கிறானே! இவனை திருத்த, தண்டனை கொடுத்தால் என்ன?' என்று நினைப்பார்.

நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க சென்றால், நாம் செல்வதற்கு முன்பேயே, 'நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுகிரஹம் மட்டுமே செய்யுங்கள்' என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார்.

தாயாரை பார்த்து விட்டு, வரும் நம்மை, 'தவறு தெரிந்தாலும் எதுவும் சொல்லாமல், நாம் கேட்பதை எல்லாம் கிடைக்க செய்து' அணுகிரஹம் செய்து விடுவார் பெருமாள்.

சீதாதேவியின் பெருமை மகத்தானது... 

திருப்பதியில் பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், தாயாருக்கு திருமலையில் தனி சந்நிதி இல்லை. 

நாம் திருமலையப்பனை பார்க்கும் போது, பெருமாள் நம்மை பார்க்கும் போது, தாயாரும் அவர் நெஞ்சிலிருந்து பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், திருப்பதியில் மட்டும் பெருமாள் 'யார் வந்தாலும் குற்றம் பார்க்காமல் அணுகிரஹம் மட்டுமே செய்கிறார்'. 

Tuesday 15 December 2020

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது? மனிதனின் நோக்கம் என்ன? ஆபஸ்த்மப ரிஷி சொல்கிறார்.. தெரிந்து கொள்வோமே..

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது? மனிதனின் நோக்கம் என்ன? ஆபஸ்த்மப ரிஷி சொல்கிறார்.. தெரிந்து கொள்வோமே..

பானி சம்க்சுப்தேன உதகேன ஏக பானி ஆவர்ஜிதேன ச ந ஆசாமேத் |

ஆபஸ்தம்ப சூத்திரம் 

கலக்கப்பட்ட வெறும் தண்ணீரை குடிக்க கூடாது. இரு கைகளால் எடுத்து தராமல், ஒரு கையால் தரும் தண்ணீரை குடிக்க கூடாது.


ந அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் | 

யதி  அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் | 

த்விசந்தம் ப்ராத்ரவ்யம் ஜனயேத் |

- ஆபஸ்தம்ப சூத்திரம்

யாரை பார்த்தும் "இவன் என் எதிரி" என்று சொல்ல கூடாது. அப்படி சொல்ல ஆரம்பிக்கும் போது, அவனே உண்மையாகவே எதிரி ஆகி விடுவான்.




திஸ்டான் ஆசாமேத் ப்ரஹவோ வா |

ஆஸீனஸ் த்ரிர் ஆசாமேத் ஹ்ருதய அங்கம அபிர் அத்பி: |   

ஆபஸ்தம்ப சூத்திரம் 

நின்று கொண்டோ அல்லது முன்னோக்கி வளைந்து கொண்டோ, தண்ணீர் குடிக்க கூடாது. 

அமர்ந்து குடிக்க வேண்டும், மூன்று முறை தண்ணீர் நெஞ்சில் செல்லுமாறு தலைதூக்கி குடிக்க வேண்டும்.


குரு-தல்பகாமி ச வ்ருசனம் சிஷ்னம் பரிவாஸ்ய அஞ்சலாவ் ஆதாய தக்ஷிணம் திசம் அநாவ்ருத்திம் வ்ரஜேத் |

ஜ்வாலிதாம் வா சூர்மிம் பரிஸ்வஜ்ய சமாப்னுயாத் |

சுரா ஆபோ அக்னி ஸ்பர்ச சுராம் பிபேத் |

- ஆபஸ்தம்ப சூத்திரம் 

யார் ஒருவன் தன் குருவின் மனைவியிடம் தகாது உறவு கொள்கிறானோ, அவன் செய்த பாவத்துக்கு, தன்னுடைய ஆண் உறுப்பை தானே முழுவதுமாக வெட்டி இரு கையில் எடுத்துக்கொண்டு, தெற்கு திசை நோக்கி, மரணம் வரும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும்..

அல்லது, பெண் உருவத்தை வடித்த இரும்பு சிலையை பழுக்க காய்ச்சி அதை கட்டி பிடித்து கொண்டே உயிர் விட வேண்டும்.

அல்லது, மயக்கம் தரும் மதுவை சுட சுட காய்ச்சி, அளவுக்கு மீறி கொதிக்க கொதிக்க வாயில் விட்டு குடித்து, உயிர் விட வேண்டும்.


புருஷன் ச உபயோர் தேவதானாம் ராஜனஸ் ச |

- ஆபஸ்தம்ப சூத்திரம் 

தெய்வத்தையோ, அரசனையோ கீழ்த்தரமாக பேச கூடாது.


அனஸூயுர் துஷ்ப்ரளம்ப ஸ்யாத் குஹக சத நாஸ்திக பாலவாதேசு |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

நயவஞ்சகர்கள், முரட்டுத்தனமானவர்கள், நாத்தீகர்கள் மற்றும் முட்டாள்களின் பேச்சுக்களால் ஒருவர் எரிச்சல் அடைய கூடாது. ஏமாறவும் கூடாது..




சர்வஜனபதேஸ்வ் ஏகாந்த சமாஹிதம் ஆர்யானாம் வ்ருத்தானாம் சம்யக் விநீதானாம் வ்ருத்தானாம் ஆத்மாவதாம் அலொலுபானாம் அதாம்பிகாணாம் வ்ருத்த ஸாத்ருஷ்யம் பாஜேத |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

நம்முடைய செயல்களை, நம் நடத்தையின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

பண்பு உள்ளவர்கள் நன்னடத்தை கொண்டவர்கள். 

அவர்களை பார்த்து, நம்முடைய செயல்களை கட்டுப்படுத்தி, நடத்தையை சரி செய்து கொள்ள வேண்டும்.

யார் பண்பு உள்ளவன் (ஆரியன்)?

நன்கு படித்த, முதிர்ச்சி உடைய, சுய கட்டுப்பாடு கொண்ட, பேராசையிலிருந்து விடுபட்ட, மற்றவர்களுக்காக பாசாங்கு செய்யாதவர்களே 'ஆரியன்' என்று அழைக்கப்படுகிறார்கள்.

அத்யாத்மிகான் யோகான் அனுதிஷ்தேன் ந்யாய சம்ஹிதான் அனைஸ்சாரிகான் |

ஆத்ம லாபான் ந பரம் வித்யதே |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

ஒவ்வொரு மனிதனின் நோக்கமும் 'ஆத்மா'வை (தன்னை) அறிந்து கொள்வதே.

ஆத்மாவை (உன்னை), நீ அறிந்து கொள்வதை விட பெரிய கல்வி கிடையாது.

அத பூத தாஹீயான் தோஷான் உதாஹரிஸ்யாம: |

க்ரோதோ ஹர்ஷோ ரோஷா லோபோ மோஹோ தம்போ த்ரோஹோ ம்ருசோத்யம் அத்யாசா, பரீவாத அவசூயா காம மன்யு அநாத்ம்யம் அயோகஸ் தேஷாம் யோக மூலோ நிர்காத: |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது?

கோபம், மகிழ்ச்சி, ரோஷம், பேராசை, ஒட்டுதல், தற்பெருமை, துரோகம், பாசாங்கு, பொய், பெருந்தீனி, பொறாமை, சுயநல ஆசை, ரகசியமான வெறுப்பு, புலன்களை அடக்கி வைப்பதில் அலட்சியம், மனதை அடக்குவதில் அலட்சியம் ஆகியவை, ஆத்மாவை (தன்னையே) அறியவிடாமல் தடுக்கிறது. 

இந்த ஆத்மா ஆனந்த ஸ்வரூபமானது. 

தான் ஆனந்தமயமானவன் என்பதை உணர விடாமல் இவை தடுக்கிறது.

இந்த தடையை போக்க வழி சொல்வதே 'யோகம்'.

Wednesday 19 August 2020

How Krishna Idol Worship started? and Bhagavatham started? Hindus must know...about Grandson of Krishna and Grandson of Arjuna story.

That was the toughest time. Shri krishna had decided to depart to his abode.



Before his departure, Krishna spoke about his departure and spoke in length on various dharma, bhakti to Uddhava his best friend, his best devotee, his best relative, his best minister.  

On hearing the news of krishna departure, all the Pandavas, unable to bear the separation from Krishna, decided to leave this world. 

Before they left, Maharaj Yuddhisthir appointed Parikshit, son of Abhimanyu, as the emperor of the whole world, where there is no enemy.

Vajranabha, the great-grandson of Lord Krishna and jambavati, son of Sambha, was made the king of Mathura.

Then, pandava brothers along with draupati took vanaprastha and left the world one by one.

With sudden departure of Shri krishna and pandavas, the world become hopeless.
No one have inspiration to live. 
No one is excited about anything.

Even though the world is in peace with no war, everyone felt emptiness in their heart.

Parikshit, ruler of world with inconsolable loss, came to meet Vajranabha to console each other.
Both of them, greeted each other.. but no happiness.. no inspiration.



At this time, Shandilya rishi came to Mathura
Chandilya rishi asked about their welfare and happiness.

Vajranabha bow down at rishi feet and asked, 
"Will this world regain happiness again? 
After krishna's departure, whole world is mourning and striving to see the divine face of Krishna paramatma again.
After Krishna's departure, Uddhav also left his holy body. 
Pandavas also departed. 
We are at inconsolable distress. 
Will this world see happiness again?"

Chandilya Rishi replied, 
"Vajranabha.. Do not worry. 
World will regain happiness with Krishna presence who is paramatma and his divine appearance never cease. 
Uddhav who gave up his human body did not went to Vaikunda yet (Abode of Parabramma). He is still living in Vrindavan as Lotus stem in kusum sarovar, govardhan. Find him.
He will direct you the way.."



By hearing this, Vajranabha and Parikshit gathered hope

They went along with Chandilya Rishi to Kusum Sarovar where the lake was filled with Lotus.
They could not identify which lotus stem is Uddhava??.

Chandilya Rishi asked them to do bhajan on Radha Krishna which will show Uddhav presence. 

They began to sing kirtans and bhajans about Sri Radha Krishna. 

On hearing this, one specific lotus stem alone started to move
Chandilya Rishi noticed that Lotus stem which moved to the song of Krishna as Uddhav in disguise. 
They continued to sing on Radha Krishna. 
Pleased by their devotion, Sri Uddhava gave them his darshan. 

Looking at Vajranabha, Uddhava said, 
"Krishna is an avatar of Parabramma. 
He is omnipresent and his presence is everywhere. 
His appearance is divine and ever exist. 
His avatar itself is an appearance.
In his avatar himself, he showed that his appearance is divine and showed his presence in Hastinapur, sitting in Dwarka to save Draupati by showering colored sarees without a need of hands to give, ear to hear. 

Not just that, 
He became everything (living and non-living) when brahma deva took all his friends (vraja vasi childrens) and their cows including their clothes and pot. 

His appearance is always present. 
Those who wishes to see him with devotion, would definitely see him.

To see him again and experience krishna, i will tell you the 2 secret ways...  

Vajranabha, you install a Krishna Murthi similar to Sri Krishna. 

Those whoever Worship Krishna Murthi (Idol) with true devotion, 
Those whoever understand that Krishna himself became not just Cows and his Friend but even a non-living materials like pot in Brahma Mohana and 
Those who understand him as Parabramma and omni present, 
will surely going to experience Sri Krishna's presence in their life. 
The True devotees, will hear him speak, feel protected by evil."

Then Uddhava looked at Parikshit and said, 
"Parikshit! As of now, you continue to do your duty as a king of the world.  
An Auspicious day will come in your life. 
Eating a tasty fruit itself is delicious but it require little effort to bite and chew. 
But Drinking Tasty Fruit Juice is delicious and require no effort at all. 



Like Drinking a Tasty Fruit Juice and enjoying the sweetness, You will get the divine darshan of Suka Deva (Son of Vyasa) and he will shower you about krishna's supremacy and his supreme qualities and divinity like a fruit Juice to drink. 
That divine speech from Suka Deva himself is Sri Krishna.  
Just like i disguised in lotus stem to stay in Vrindavan, Krishna who is paramatma have disappeared and disguised into these divine words.  These divine words from Sri Suka is Srimad Bhagavatham. You are going to experience this great treasure.

Those who read and understand those words of Bhagavatham, will feel Krishna's presence at same moment."

Then Uddhava looking at both Vajranabha and Parikshit, said 
"Wherever the Idol of Krishna is worshiped and divine words delivered by Suka Deva is read, those places will become divine. 
Krishna presence will be felt in those places by everyone. 
People will regain their real happiness with Krishna presence." 

After consoling them, Uddhava disappeared. 
Vajranabha, created 3 images of Lord Krishna. 
He made the Image of Krishna as Govind Devji (now at Jaipur)
He made the image of Krishna as Bankey Bihari (now at vrindavan)
He made the image of krishna as Hari Dev (in Govardhan)

Those who worshiped Krishna Idol with true devotion, have got Darshan of Sri Krishna...  There are many great Saint, Sant and mahatmas have got Darshan of Krishna. 
12 Azhwars including Andal, Meera, Tulsi Das, Surdas, TukaRam, Ramakrishna, Jayadeva, Krishna Chaitanya and many.... 
Krishna Idol worship alone gives everyone the true happiness.  

Even if we don't have Devotion to the level of these Bhakt, even a pinch of Devotion is giving us a feel that we are protected and krishna guides us in right path.  

Many devotees feel that Krishna is protecting them.  
Many devotees still feel that Krishna guides them at every path. 

These divine experience can't be explained and expressed.  
Those who are worshiping Krishna Idol, even today feels the divinity and supreme guidance. 

For some years, Parikshit was ruling the entire world (Indus Valley Civilization starts as per History) with no enemy, no worries, huge wealth and beautiful wife, and beautiful son Janameyjaya.



When Parikshit roaming in forest hunt, he mistakenly dropped a dead snake on a rishi who was in meditation and returned back. 
Rishi's 7yr old son seeing a dead snake in his father shoulder, got angry and cursed the person who did this cheap behaviour to death in next 7 days by poisonous snake called "Dakshaka".

Parikshit being a grandson of Yudhistra who is known for his Dharma, felt ashamed of his irresponsible action made over a rishi. 
He didn't wanted to find alternate solution to save his life.

He decided to accept his fate and immediately asked their ministers to take over the ruling till his child "janamejaya" become adult

He left silently and sat near banks of Yamuna to face the death penalty due to curse

Looking at his Maturity, who was able to look at the human life as temporary and unpleasant reality, Suka Deva appeared in Front of him. 

On next 7 days, 
Suka Deva showered him about Krishna who is Parabramma Narayana who did many avatar of Kurma, Varaha, Narasimha, Vamana, Rama etc., 
He narrated the whole story of Krishna who is not just Parabramma but who himself is Grand Father to Parikshit.
This divine words of Suka Deva and Parikshit is "Srimad Bhagavatham".   
The places where Krishna Idol worship happens and where Srimad Bhagavatham is recited, krishna presence is evident.  

Those who read Bhagavatham will experience the divine of Krishna himself.
Those who worship Krishna Idol will experience his love and affection.

We all must remember Vajranabha, Grandson of Sri Krishna, when we look at any Krishna Idol. 
Any experience we gain from Krishna is because of grace of Vajranabha.  
 
We all must remember Parikshit, Grandson of Arjuna, when we read Srimad Bhagavtham.  
Any experience we gain from Krishna is because of grace of Parikshit. 

Hail Sri Krishna..  
Hail all the Krishna Devotees 
(Meera, Jayadeva, PurandharDas, Vallabha, Azhwar, Ramanuja, Adi Sankara, SurDas, Tulsi Das, Namdev, Tukka Ram, Krishna Chaitanya, Ramakrishna and so on.....)

Thursday 12 September 2019

ப்ருகு ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... ஸ்ரீவத்ஸ கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

"ப்ருகு ரிஷியின்" பரம்பரையில் வந்த முக்கியமான சில ரிஷிகளின் பெயர்:

ம்ருகண்டு
மார்க்கண்டேயர்
ஹேம ரிஷி

சௌனகர்
ச்யாவன
ஆப்னவான
ஔர்வ
ஜாமதக்ன்ய (ஜமதக்னி)
பரசுராமர்

இவர்களை போல, மேலும் பல ரிஷிகள், சாதுக்கள், மகாத்மாக்கள் இந்த பரம்பரையில் தோன்றி உள்ளனர்.


ப்ருகு ரிஷியை, "பார்கவ" ரிஷி என்றும் அழைப்பது உண்டு.

இந்த ரிஷிகளின் பெயர்களை ஸ்மரித்து கொண்டே,
'நான் இந்த ரிஷிகளின் கோத்திரத்தில் (வம்சத்தை) பிறந்தவன்'
என்று அபிவாதயே (self intro) சொல்வது ஹிந்துக்களுக்கு வழக்கம்.

இன்று பிராம்மண சமுதாயம் மட்டுமே, தான் எந்த ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் என்று தன்  அடையாளத்தை ஞாபகத்தில் வைத்து இருக்கிறார்கள்.

மற்ற சமுதாய மக்களும், ரிஷி பரம்பரையில் இருந்து வந்தவர்கள் தான்.

ஹிந்துக்கள் அனைவரும் தன் ரிஷி பரம்பரையை அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் எந்த ரிஷியின் பரம்பரையில் இருந்து வந்தோம் என்று தெரிந்து கொள்வது மிக அவசியம். கௌரவமும் கூட.
அந்த ரிஷிகளை பற்றி நன்கு தெரிந்து இருக்கவும் வேண்டும்.

ப்ருகுவின் பரம்பரையில் வந்தவர் 'ச்யவனர்' என்ற ரிஷி.
இவர் ஸித்த மருத்துவ முறைப்படி நமக்கு தயாரித்து தந்தது தான், நாம் இன்று கடையில் வாங்கி வாங்கி விழுங்கும் ஸ்யவன்ப்ராஸ் (Cyavanprash) என்ற லேகியம்.
இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரும், ஆரோக்கியம் என்று விழுங்கும் நாம்,
அதே ஸ்யவன ரிஷி, "தாரக மந்திரமான "ராம நாமத்தை" எப்பொழுதும் சொல்பவனுக்கு மோக்ஷம் நிச்சயம்" என்ற வழியையும் சொன்னார் என்பதை மறக்க கூடாது.

"ஸ்யவன்ப்ராஸ் (Cyavanprash) உடம்புக்கு நல்லது" என்று விழுங்கும் நாம்,
'ஆத்மாவின் ஆரோக்கியத்துக்கு ராம நாமத்தையும் சொல்ல வேண்டாமா?'
கொஞ்சம் ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும்.

ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் மூலம் தோன்றிய பரம்பரை என்பதால்,
இந்த பரம்பரையில் உள்ளவர்கள், "பார்கவ கோத்திரத்தை (வம்சத்தை) சேர்ந்தவர்கள்" என்று அறியலாம்.

ஆடையில்லாது, அறிவில்லாது திரிந்த "ஆதாம் ஏவாள்" வழியில் வந்த 'மடையர்கள்' என்று சொல்லிக்கொள்வதில்லை வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள்.
"நான் முட்டாள் ஆதாம் ஏவாள் பரம்பரையில் வந்தவன்" என்று சொல்லிக்கொள்வதை விட அவமானம் ஏதாவது உண்டா?

"ஞானத்திலும், தவத்திலும், தெய்வீகத்திலும், ஸித்த மருத்துவத்திலும்" தேர்ந்த "ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள்" என்று வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொள்கின்றனர்.


அறிவாளியாக இருந்த ரிஷிகள் என் முப்பாட்டன் இல்லை, "முட்டாள் ஆதாம், ஏவாள் தான் என் முப்பாட்டன்" என்று சொல்வதே, மதம் மாறுபவனுக்கு அவமானமல்லவா !!.
ப்ருகு என்ற பார்கவ ரிஷி, பிரம்மாவின் மனதில் இருந்து தோன்றியவர்.
பிரம்மாவின் மானஸபுத்ரர்களில் இவரும் ஒருவர்.

'உலக மக்களை ஸ்ருஷ்டி செய்ய ஒன்பது ப்ராஜாபதிகளை நியமித்தார்' ப்ரம்மா. அதில் ப்ருகு ரிஷியும் ஒருவர்.

"தக்ஷ பிரஜாபதி" ப்ருகு ரிஷிக்கு தன் மகள் "க்யாதி"யை மணம் செய்து கொடுத்தார்.
சாஷாத் மஹாலக்ஷ்மி ப்ருகுவுக்கு மகளாக பிறந்தாள்.  
ப்ருகுவுக்கு மகளாக பிறந்ததால், மகாலட்சுமி "பார்கவி" என்ற பெயரில் வளர்ந்தாள்.
விஷ்ணுவாகிய நாராயணன் "பார்கவி"யை மணந்து கொண்டார்.

மஹாலக்ஷ்மி பரமாத்மாவை ஒரு நாழிகை கூட பிரிய இஷடப்படாததால், "தன் மார்பிலேயே (வக்ஷஸ்தலம்) இடம்" கொடுத்து விட்டார்.
ப்ருகு ரிஷி "பரமாத்மாவுக்கு மாமனார்" என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு பின், தேவர்களுக்கு அசுரர்களுக்கும் ஓயாத சண்டை ஏற்பட, தேவர்கள் தங்களுக்கு உதவி செய்ய பெருமாளை கேட்க, தான் இருக்கும் க்ஷீராப்தியிலேயே (பாற்கடல்) மந்த்ர மலையை போட்டு, வாசுகி என்ற பாம்பை கயிறாக கடைந்து அதில் வரும் அம்ருதத்தை எடுத்து கொள்ளுமாறு சொன்னார்.
அந்த சமயம் மஹாலக்ஷ்மி மீண்டும் பாற்கடலிருந்தே அவதாரம் செய்து, மீண்டும் விஷ்ணுவை மணந்தாள்.
மஹாலக்ஷ்மியை பெற்றதால், பாற்கடலும் "பெருமாளுக்கு சம்பந்தி" என்ற பெருமையை பெற்றது.

'பூரணமான சாத்வீக குணம் நமக்கு இருந்தால் மட்டுமே 'மோக்ஷம்' கொடுக்கப்படும்' என்ற என்று சாஸ்திரம் சொல்கிறது.
அந்த "மோக்ஷத்தை தருபவரும் பூரணமான சாத்வீக தெய்வமாக தானே இருக்க வேண்டும்" என்பதால்,
ப்ரம்ம தேவன் சாத்வீக தெய்வமா?
ருத்ரன் சாத்வீக தெய்வமா?
விஷ்ணு சாத்வீக தெய்வமா?
என்று மும்மூர்த்திகளையே பரிக்ஷை செய்ய கிளம்பிய பொல்லாத ரிஷி இவர்.

ப்ரம்ம லோகம் (சத்ய லோகம்) சென்ற போது,
ப்ரம்ம தேவன் இவரை வரவேற்று பேசாமல், சரஸ்வதியிடம் பேசி கொண்டு இருந்தார்.
ப்ரம்ம தேவன் "ரஜோ குணம்" உடையவராக இருப்பதை பார்த்து, ப்ரம்ம லோகத்தை விட்டு கிளம்பி சிவலோகம் வந்தார்.




"சிவன் கோவிலுக்கு அகாலத்தில் போக கூடாது" என்று வழக்கம் உண்டு. சம்ஹார மூர்த்தி அல்லவா..

ப்ருகு அகாலத்தில் வந்து விட, சிவபெருமான் தன் சூலத்தால் குத்த வந்தார்.
சிவ பெருமான் "தாமஸ குணம்" உடையவராக இருப்பதை பார்த்து, சிவ லோகத்தை விட்டு கிளம்பி க்ஷீராப்தி (பாற்கடல்) வந்தார்.

தன்னை ப்ரம்ம தேவனும், சிவபெருமானும் அலட்சியம் செய்த கோபத்துடனேயே க்ஷீராப்தி (பாற்கடல்) வந்தார்.

ஆதிசேஷன் மேல் யோகநித்திரையில் கண்ணை மூடி கொண்டு படுத்து இருக்கும் விஷ்ணுவை கண்டு பெரும் கோபம் கொண்டார்.
"தன்னை இவரும் வரவேற்காமல் இருக்கிறாரே!!" என்ற கோபத்தில், ஜீவகோடிகளை தாங்கும் விஷ்ணுவின் வக்ஷஸ்தலத்தில் (மார்பில்) ஓங்கி காலால் உதைத்து விட்டார்.

உடனே பெருமாள் எழுந்திருந்து, ப்ருகு ரிஷி தன்னை உதைத்தார் என்று கோபப்படாமல், கருணையுடன், ப்ருகு ரிஷியின் பாதத்தை பிடித்து தடவி கொடுத்து,
"கால் வலிக்கிறதோ?.. என் மார்பு கடினமாயிற்றே!... ஏன் இப்படி உதைத்தீர்?..."
என்று சமாதானமாய் கேட்டார்.
தானும் கோபப்படாமல், 
தன்னை கோபத்துடன் எதிர்ப்பவனையும் சாந்தப்படுத்தும் தன்மையுடைய, "விஷ்ணுவே" சாத்வீக குணம் கொண்ட "சத்வ குண மூர்த்தி" என்று உலகுக்கு காட்டினார்.
இவரே "மோக்ஷம் அளிப்பவர்" என்று காட்டினார்.




ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள், தங்களை "பார்கவ கோத்திரம்" என்று சொல்லிக்கொள்ளாமல்,
"ஸ்ரீவத்ஸ கோத்திரம்" என்று சொல்லி கொள்ள ப்ரியப்படுவதை நாம் கவனிக்கலாம்.

பார்கவ கோத்திரத்துக்கு, "ஸ்ரீவத்ஸ கோத்திரம்" என்று எதனால் பெயர் ஏற்பட்டது?
இதற்கு காரணம் உண்டு...

'ஸ்ரீ' என்ற சொல், மஹாலக்ஷ்மியை குறிக்கும்.
'வத்ஸ' என்ற சொல், குழந்தையை குறிக்கும்.




ஸ்ரீமந் நாராயணனுக்கு எப்படி பிறப்பு இல்லையோ,
அது போல,
மஹாலட்சுமிக்கும் பிறப்பு இல்லை.
எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறாள் 'மஹாலட்சுமி'.

எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே, ஒரு சமயம்
தசரதனுக்கு பிள்ளையாகவும் (ஸ்ரீ ராமர்),
கஷ்யபரின் பிள்ளையாகவும் (வாமன)
அவதாரம் செய்து விடுகிறார்.
அது போல, மஹாலட்சுமியே ஒரு சமயம்,
"ப்ருகு ரிஷிக்கு பெண்ணாக" அவதாரம் செய்து இருக்கிறாள்.
பாற்கடலில் இருந்து தோன்றியும் இருக்கிறாள்.

ஸ்ரீயும் (மஹாலட்சுமியும்), நாராயணனும், ஆதிசேஷனும் நித்யமாக எப்பொழுதும் "வைகுண்டத்தில்" இருந்து கொண்டே இருக்கின்றனர்.

லீலையின் காரணமாக, பாற்கடலில், பூலோகத்தில் என்று பல்வேறு லோகங்களில் அவதாரம் செய்கின்றனர்.
சுதந்திரமானவர்கள், யாருக்கும் அடிமைப்பட்டவர்கள் அல்ல.

ப்ருகு ரிஷியின் பெண்ணாக மஹாலட்சுமி பிறந்ததால், மஹாலட்சுமிக்கு "பார்கவி" என்றும் பெயர் உண்டானது.

யாருக்கு மஹாலக்ஷ்மி (ஸ்ரீ) குழந்தையோ (வத்ஸ), அவரே ஸ்ரீவத்ஸன் என்பதால், ப்ருகு ரிஷிக்கு "ஸ்ரீவத்ஸன்" என்று பெயர் ஏற்பட்டது.

ப்ருகு ரிஷிக்கு "ஸ்ரீவத்ஸன்" என்றும் பெயரும் ஏற்பட்டது.

இதன் காரணமாக, பார்கவ (ப்ருகு) வம்சத்தில் வந்தவர்கள் "நாங்கள் பார்க்கவ கோத்திரம்" என்று சொல்வதை விட,
"எங்கள் வம்சத்தில் மகாலக்ஷ்மியே குழந்தையாக அவதரித்தாள்" 
என்று சொல்லி பெருமைப்படும் விதமாக, ப்ருகுவுக்கும் "ஸ்ரீவத்ஸன்" என்று பெயர் ஏற்பட்டதால்,
"நாங்கள் ஸ்ரீவத்ஸ கோத்திரம்" என்று சொல்வது வழக்கத்தில் ஏற்பட்டது.

ஸ்ரீ என்ற மஹாலக்ஷ்மியே, தனக்கு மகளாக அவதரித்ததால், மஹாலக்ஷ்மியிடம் ப்ருகுவுக்கு வாத்ஸல்ய பக்தி (தன் மகள் என்ற பாசம்) உண்டு.

இந்த கோத்திரத்தில் வந்த ரிஷிகளுக்கு, இந்த கோத்திரத்தில் இன்று வரை இருக்கும் அனைவருக்கும் இந்த உணர்வு எப்பொழுதுமே உண்டு.


ப்ருகு ரிஷி, யார் சாத்வீக தெய்வம்?
என்று மும்மூர்த்திகளை பரீக்ஷை செய்ய சென்று, விஷ்ணுவின் மார்பை காலால் உதைத்ததால், எம்பெருமாள் மார்பில் மரு ஏற்பட்டது.

ப்ருகு விஷ்ணுவுக்கு மாமனார் முறை. 
மஹாலக்ஷ்மியை எப்பொழுதும் தன் மார்பில் வைத்து இருக்கிறார் பெருமாள்.

தன் மார்பில், மகாலட்சுமிக்கு இடம் கொடுத்த பெருமாள், இப்பொழுது பிருகு ரிஷியின் (பித்ரு) சம்பந்தமும் தன் மார்பில் ஏற்பட்டதால் மகிழ்ந்தார்.

மகாலட்சுமியை (ஸ்ரீ) குழந்தையாக (வத்ஸ) பெற்றதால்,
ப்ருகுவுக்கு 'ஸ்ரீவத்ஸன்' என்று பெயர் ஏற்பட்டது.

ப்ருகு ரிஷியால் தன் மார்பில் ஏற்பட்ட மருவுக்கும், "ஸ்ரீவத்ஸ" என்று பெயர் ஏற்படுமாறு செய்தார் எம்பெருமான்.

"ஸ்ரீவத்ஸ" என்று சொல்லும் போது,
ப்ருகு ரிஷிக்கே "ஸ்ரீவத்ஸன்' என்றும் பெயர் இருப்பதால், ப்ருகு ரிஷியை தியானித்த பலன் நமக்கு கிடைக்கும்.
ஸ்ரீ என்ற சொல் மஹாலக்ஷ்மியை குறிப்பதால், தாயாரை தியானித்த பலனும் கிடைக்கும்.
ப்ருகு ரிஷியால் தன் மார்பில் ஏற்பட்ட மருவுக்கும் (லக்ஷ்ம), "ஸ்ரீவத்ஸ" என்று பெயர் ஏற்படுமாறு எம்பெருமான் செய்து கொண்டதால், நாராயணனை தியானித்த பலனும் கிடைக்கும்.

"லக்ஷ்ம" என்றால் அடையாளம்/மரு.
ப்ருகு ரிஷி உதைத்தால் மார்பில் ஏற்பட்ட அடையாளத்தில் (லக்ஷ்ம),
ஸ்ரீ வசிப்பதால், அவளுக்கு "ஸ்ரீலக்ஷ்மி" என்று பெயர்.

வடக்கில் பெருமாளின் மார்பில் இருக்கும் இந்த மருவுக்கு "ப்ருகு சின்னம்" என்று இன்றும் சில கோவில்களில் சொல்கின்றனர்.

பொதுவாக "ப்ருகு சின்னம்" என்று சொல்வதை காட்டிலும், "ஸ்ரீவத்ஸம்" என்று சொல்வதே உசிதமானது.

'மஹாலக்ஷ்மி "ஸ்ரீவத்ஸம்" உள்ள எம்பெருமான மார்பில், வாசம் செய்கிறாள்' என்று சொல்வதே பொருத்தமும், அழகும் கூட.

"மஹாலக்ஷ்மி வசிக்கும் மார்பில் உதைத்து விட்டோமே" என்று வேதனையுற்றார் பிருகு ரிஷி.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணங்குடிக்கு வந்தார் பிருகு ரிஷி.
அங்கு லோகநாதனாக பெருமாள், காட்சி கொடுத்தார்.

பிருகு ரிஷி, லோகநாத பெருமாளை பார்த்து,
"ஒரே தேவன். நீரே பரமாத்மா. 
நீரே அனைவரிடத்திலும் அந்தர்யாமியாக இருக்கிறீர்கள். 
அவரவர்கள் குண வித்தியாசத்தால், நீங்கள் பேதம் போல காட்டிக்கொள்கிறீர்கள்.

'ப்ரம்ம தேவனுக்கு' அந்தர்யாமியாக இருந்து கொண்டு உலக சிருஷ்டியை நீங்களே செய்கிறீர்கள்.
'விஷ்ணுவாக' இருந்து கொண்டு உலகை ரக்ஷிக்கிறீர்கள்.
'ருத்ரனாக' இருந்து கொண்டு உலகை சம்ஹாரம் செய்கிறீர்கள்.



'படைப்பு, காத்தல், அழித்தல்' போன்ற செயலை செய்ய, 
மாயையான குணங்களை உங்களிடத்தில் நீங்களே சேர்த்து கொள்கிறீர்கள்.

ரஜோ குணத்தை தன்னிடத்தில் சேர்த்து கொண்டு, 'ப்ரம்ம தேவனாக படைக்கும் தொழிலை செய்கிறீர்கள்'.   
சத்வ குணத்தை தன்னிடத்தில் சேர்த்து கொண்டு, 'விஷ்ணுவாக  காக்கும் தொழிலை செய்கிறீர்கள்'.
தமோ குணத்தை தன்னிடத்தில் சேர்த்து கொண்டு, 'ருத்ரனாக அழிக்கும் தொழிலை செய்கிறீர்கள்'.

குணங்களை கடந்தவர் நீங்கள் என்று அறிகிறேன். மாயையான குணங்களை தேவைக்காக உங்களிடம் சேர்த்து கொள்கிறீர்கள் தவிர, 'குணங்களுக்கு அப்பாற்பட்ட பரமாத்மா நீங்கள்' என்று அறிகிறேன்.

ஒரு சுத்தமான ஸ்படிக கல் (prism) அருகில் ஒரு நீல வர்ண பூவை வைத்தால், அந்த ஸ்படிகம் நீளமாக தோன்றும். 

ஒரு சிவப்பு நிற பூவை வைத்தால், ஸ்படிகம் சிவப்பாக தோன்றும்.

அதுபோல, நீங்கள் நிர்குணமாக இருக்கிறீர்கள். 
எப்பொழுதெல்லாம், ரஜோ குணம், தமோ குணம், சத்வ குணம் தேவைப்படுகிறதோ, அப்பொழுது அந்த ,மாயா குணங்களை தன்னிடம் சேர்த்து கொண்டு, 
ரஜோ குணம் உள்ளவர் போலவும், 
தமோ குணம் உள்ளவர் போலவும், 
சத்வ குணம் உள்ளவர் போலவும் காட்சி கொடுக்கிறீர்கள். 

உண்மையில் நீங்கள் நிர்குண பிரம்மம் என்று அறிகிறேன்.
ஆனால், உங்களுடைய விபூதி ரூபங்களான ப்ரம்ம (ரஜோ குணம்), ருத்ரனை (தமோ குணம்) ஆஸ்ரயித்து, ராவணன், ஹிரண்யகசிபு போன்றவர்கள், உலகையே ஆளும் சக்தி பெற்றார்கள், உலக செல்வம் அவர்கள் காலில் விழுந்தது.
விஷ்ணுவாக சத்வ மூர்த்தியாக இருக்கும் உங்களை ஆஸ்ரயித்து, ஒரு யானை கூட மோக்ஷம் அடைந்து விட்டது.
மோக்ஷத்தை கொடுக்கும் சத்வ மூர்த்தியான உங்களிடம் வாயால் சொல்லக்கூட முடியாத பெரும் அபச்சாரத்தை செய்து விட்டேனே என்று நான் தாபப்படுகிறேன்!!"
என்று வருந்தினார்.

பெருமாள் ப்ருகுவை பார்த்து,
"இது ஒரு பெரிய பாபம் இல்லையே!!  
ஒரு குழந்தை தன் தயார் மடியில் உட்கார்ந்து கொண்டு, தன் தாயையே காலால் உதைக்கும். அதை கண்டு தாயார் குழந்தை அபச்சாரம் செய்கிறது என்று நினைப்பாளா?" என்றார்.

ப்ருகு,
"அது விவேகம் இல்லாத குழந்தை. விவேகம் உடைய நான் இப்படி செய்து இருக்கலாமா?" என்று வருத்தப்பட்டார்.

பெருமாள்,
"கணவன்-மனைவி, சிநேகிதர்கள்  சில சமயம், தவறுதலாக  கால் பட்டு விட்டாலும் அபச்சாரம் என்று நினைப்பார்களா?.  
அதுபோல, உங்களுடைய கால் என் மீது மட்ட போதும் அதை நான் அபச்சாரமாக பார்க்கவில்லை, எனக்கு போக்யமாக தான் ஏற்றுக்கொண்டேன்.
அர்ச்சா விக்ரஹமாக நான் அவதாரம் செய்யும் போது, சில சமயங்கள் பூஜை செய்பவர்களின் 'கால் என் மீது படுகிறது'. 
எனக்கு உபசாரம் செய்ய, பூஜை செய்ய தானே, ஆசையாக வருகிறார்கள் என்று நான் அறிவதால், தவறுதலாக ஏற்படும் அபச்சாரங்களை நான் பார்ப்பதில்லை. நான் செயலை பார்ப்பதில்லை. அதில் உள்ள நோக்கத்தை தான் பார்க்கிறேன்." என்றார்.


ப்ருகு,
"இப்படி பேசுவது உங்களுக்கு அழகு. ஆனால் நான் செய்தது அபச்சாரம் தானே!!" என்றார்.

"யார் சர்வேஸ்வரன்? என்ற சர்ச்சைக்கு, நீங்கள் 'என் பெருமையை உலகிற்கு ஸ்தாபிக்க வேண்டும்' என்ற உங்கள் எண்ணம் தானே இங்கே விஷேசம். 
உங்கள் எண்ணத்தை தான் பார்க்கிறேன். 
"மும்மூர்த்திகளில் சிறந்தவன், சாத்வீகன் என்று என்னை காட்ட வேண்டும்" என்று உமக்கு ஏற்பட்ட ஆசையை தான் நான் பார்க்கிறேன்.
இந்த அன்பை பார்க்கிறேனே தவிர, நீங்கள் செய்தது பாபம் ஆகாது"
என்று சொல்லி சமாதானம் செய்தார் பெருமாள்.

பெருமாள் குறையாக நினைக்கவில்லை என்று சொல்லியும், "பிராட்டி பெருமாளின் வக்ஷஸ்தலத்தில் இருக்கிறாள் என்று கூட உணராமல் உதைத்து விட்டோமே" என்று பெரிதும் தாபப்பட்டார்.

"பெருமாள் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னாலும், பிராட்டியின் மேல் என் கால் பட்டு இருக்குமே !!"
என்று நினைத்து கொண்டே, இந்த திவ்ய தேசத்தில் கண்ணீர் விட்டு கொண்டு, பகவத் தியானத்திலேயே இருந்து கொண்டு இருந்தார் பிருகு ரிஷி.
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊருக்கு வந்து தியானத்தில் இருந்தார்.

இவர் தாபத்தை போக்க மஹாலக்ஷ்மியே 'பிருகு ரிஷிக்கு இங்கு காட்சி கொடுத்தாள்'.
சாஷாத் மஹாலக்ஷ்மி பிருகு ரிஷிக்காக மீண்டும் அவதாரம் செய்து இருக்கிறாள் என்றதும், தேவர்கள் கூடி பார்க்க, ஐராவதம் என்ற யானை தாயாருக்கு அபிஷேகம் செய்ய, இங்கு மகாலட்சுமிக்கு "அபிஷேக வள்ளி" என்று பெயர் ஏற்பட்டது.

ப்ருகு ரிஷி "ஸ்ரீ சூக்தம்" சொல்லி மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்து கண்ணீர் விட்டார்.

மஹாலக்ஷ்மி தாயார் ப்ருகுவை பார்த்து, "அப்பா.." என்று ஆசையோடு அழைத்து பேசலானாள்.
"நீங்கள் என்னை தாயாராக பார்க்கிறீர்கள்.  நான் உங்களை என் தந்தையாக பார்க்கிறேன். 
தவறுதலாக குழந்தை மேல் தகப்பனாரின் கால் பட்டு விட்டால், அந்த குழந்தைக்கு க்ஷேமம் தானே. எப்பொழுது உங்களுக்கு நான் பெண்ணாக (பார்கவி) பிறந்தேனோ, உங்களை ஏன் தகப்பனாராக ஏற்றுக்கொண்டேனோ, அப்பொழுதே உங்களிடம் எனக்கு தனியான பாசம் உண்டு. உங்கள் கால் என் மேல் பட்டாலும் எனக்கு அது க்ஷேமம் தானே. 

அதனால், பாபம் செய்து விட்டோமோ!! என்ற பயத்தை நீங்கள் நீக்கிவிடுங்கள்." 
என்று தானும் சமாதானம் செய்து, மீண்டும் இந்த தேசத்தில், "கிருஷ்ண மங்கா" (கண்ணமங்கை) என்ற பெயருடன் குழந்தையாகவே அவதரித்து, ப்ருகுவின் தாபத்தை நீக்கினாள்.

மஹாலக்ஷ்மியை "கிருஷ்ண மங்கை"யாக வளர்த்து, கல்யாண வயது வந்ததும் "பெருமாள்" வந்து கரம் பற்ற வேண்டுமே!! என்று பிருகு ரிஷி காத்து இருக்க, பரமாத்மா இங்கு "பக்தவத்சலன்" என்ற பெயருடன் தானே வந்து "கண்ணமங்கை" என்ற மஹாலக்ஷ்மியை மணந்துகொண்டார்.



"லட்சுமி கடாக்ஷம்" கிடைக்க, "தரித்திரம் ஒழிய",
வாழ்நாளில் ஒருமுறையாவது மனிதனாக பிறந்தவன் வந்து பார்க்க வேண்டிய திவ்ய க்ஷேத்ரமாக ஆனது  தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள "திருக்கண்ணமங்கை" என்ற தேசம்.

தாயாருக்கு "கண்ணமங்கை நாயகி" என்று பெயரும் ஏற்பட்டது.

கோவிலில் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதை நாம் பார்த்து இருப்போம்.

சாதாரணமாக நமக்கு திருமணம் நடந்தால்,
"இந்த கோத்திரத்தில் (வம்சம்) பிறந்த மணப்பெண்ணை,
இந்த கோத்திரத்தில் பிறந்த மணமகனுக்கு 'கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன்"
என்று சொல்லி, கன்னிகாதானம் செய்து கொடுப்பது வழக்கம்.

பிறப்பே இல்லாத பெருமாளுக்கும், பிராட்டிக்கும் 'எந்த வம்சத்தை சொல்லி' திருக்கல்யாணம் செய்வது?
அதற்கான பதிலை, "வைகானஸ ரிஷி" நிர்ணயம் செய்ய, வெங்கடேச எம்பெருமானே அதை அங்கீகரித்தார்.

வைகானஸ முறைப்படி,  திருகல்யாண உத்ஸவம் செய்யும் போது,
பெருமாள், கஷ்யபருக்கு புத்திரனாக 'வாமன அவதாரம்' செய்ததால்,
தன்னை 'காஷ்யப' கோத்திரத்தை சேர்ந்தவன் என்றும்,
மஹாலக்ஷ்மி, ப்ருகுவுக்கு புத்ரியாக அவதாரம் செய்ததால், 'பார்கவ' கோத்திரத்தை சேர்ந்தவள் என்றும் சொல்லலாம்
என்று அங்கீகரித்தார் பெருமாள்.

எந்த கோவிலாக இருந்தாலும்,
பெருமாள் "காஷ்யப கோத்திரம்" என்றும்,
பிராட்டி "பார்கவ கோத்திரம்" என்று சொல்லி,
திருக்கல்யாண உத்சவங்கள் இன்று வரை நடந்து வருகிறது.
"பரமாத்மாவுக்கு மாமனார்" என்ற அந்தஸ்தும்,
"மஹாலட்சுமிக்கு தந்தை" என்ற பெருமையும்,
பிரம்மாவின் மானஸ புத்ரன்,
ஒன்பது பிராஜாபதிகளில் ஒருவர் என்ற பதவியும் பெற்ற,
மகத்தான வைஷ்ணவ ரிஷி "ப்ருகு".

ப்ருகு ரிஷியே பிறகு "வருணனுக்கு மகனாக" அவதரித்தார்.
வருண தேவனிடம் "பஞ்சகோச" வித்யையை, ப்ரம்ம வித்யையை கற்றார் என்று தைத்ரிய உபநிஷத் கூறுகிறது.

அந்த சமயத்தில் தான், நாரதர் 'மஹாவிஷ்ணு ஸ்ரீ ராம அவதாரம் செய்ய போகிறார்' என்று தெரிந்து கொண்டார்.
வருணனின் ஆசிரமத்துக்கு வந்து அவர் பிள்ளையாக வளரும் ப்ருகுவே அந்த சரித்திரத்தை எழுத வேண்டும் என்று ஆசைப்பட,
வருண தேவன் பாசத்தால் விட்டு பிரிய மனமில்லாமல் இருப்பதை பார்த்து, சபிப்பது போல சபித்து, வருணனின் பிள்ளையாக வளரும் ப்ருகுவை பூலோகத்தில் பிறக்க செய்து விட்டார்.


பிருகு ரிஷி பூலோகத்தில், தமிழ்நாட்டில் "ருக்ஷன்" என்ற வேடுவனாக வளர்ந்து, பிறகு உலகமே போற்றும் "வால்மீகி" ரிஷியாக ஆகி,
மஹா விஷ்ணு ஸ்ரீ ராமர் அவதாரம் செய்த போதே "ஸ்ரீ ராமாயண" காவியத்தை கவி நடையில் எழுதி உலகிற்கு தந்து விட்டார்.
ப்ருகு ரிஷியால், நமக்கு ராமாயணம் என்ற மகா காவியமும் கிடைத்தது. பெருமாள் நமக்காக ஸ்ரீ ராம அவதாரம் செய்த சரித்திரமும் நமக்கு கிடைத்தது.  வால்மீகி பற்றி தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.
ஹிந்துக்கள் அனைவரும் ஏதாவது ஒரு முறையில்  ரிஷிகளுக்கு கடமைப்பட்டு உள்ளோம்.

வாழ்க ப்ருகு ரிஷியின் புகழ்.
வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ஹிந்து தர்மம்.