Followers

Search Here...

Showing posts with label பரம்பரை. Show all posts
Showing posts with label பரம்பரை. Show all posts

Monday 18 May 2020

ச்யவன ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... ச்யவனர் கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே!! நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

ச்யவனர் (ச்யாவன) ரிஷி கோத்திரம்
'ப்ருகு ரிஷி'யின் பரம்பரையில் வந்த முக்கியமான சில ரிஷிகளின் பெயர்:
  1. ச்யாவன
  2. ம்ருகண்டு
  3. மார்க்கண்டேயர்
  4. ஹேம ரிஷி
  5. ஆப்னவான
  6. ஔர்வ
  7. ஜாமதக்ன்ய (ஜமதக்னி)
  8. பரசுராமர்
ப்ருகு ரிஷியின் வம்சத்தில் வந்தவர் ச்யவனர்.
ஆயுர்வேதத்துக்கு ரிஷி இவர்.
இவர் பெயரில் தான் இன்றுவரை "ச்யவன ப்ராசம்" என்ற லேகியம் தயாரிக்கப்படுகிறது.

"ராம நாமம் என்ற தாரக மந்திரமே அனைவருக்கும் மோக்ஷம் தரக்கூடியது" என்று சொன்ன ரிஷி இவர்.

'ச்யவனபிராஸ் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம்' என்று இந்த ரிஷி சொல்வதை ஏற்கும் நாம்,
'"ராம" நாமத்தை சொன்னால் ஆத்மாவுக்கு ஆரோக்கியம்' என்று இந்த ரிஷி சொல்வதை கேட்க வேண்டாமா?
சுற்று சிந்தித்து பார்க்க வேண்டும் நாம்.

கடுமையான தவம் செய்வார். ஒரு சமயம் பல வருடங்கள் தவத்தில் அமர்ந்து விட்டார். இவரை சுற்றி புற்று உருவாகி விட்டது.




அந்த சமயம், "சர்யாதி" என்ற அரசன், தன் மகள் "சுகன்யாவுடன்" காட்டுக்கு வேட்டையாட வந்தார்.

ஒரு கூடாரம் போட்டு தங்கினார்கள்.
தன் தோழிகளுடன் சுகன்யா கொஞ்சம் உலாவி கொண்டு இருந்தாள்.

அங்கு ச்யவனர் மேல் சுற்றி இருக்கும் புற்றை கண்டாள்.
அந்த புற்றில் ச்யவனரின் இரண்டு கண்களே இரண்டு ஜோதியாக (வெளிச்சம்) தெரிய... "இது என்னவாக இருக்கும்? குத்தி பார்க்கலாமா?" என்று தன் தோழிகளிடமே கேட்டுக்கொண்டு, ஒரு குச்சியை எடுத்து குத்தி விட்டாள்.
கண்கள் பறிபோய் விட்டது. குருடனாகி விட்டார் ச்யவனர்.

"வயதானவர்..  கோபக்காரர். சபித்து விடுவாரோ!!" என்று பயந்தான் அரசன். தன் மகள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.

"தான் குருடனாகி விட்டதால், இனி துணை இல்லாமல் இருக்க முடியாது. ஆதலால் உன் மகளை எனக்கு துணைவியாக கொடு"
என்று சொல்லிவிட்டார் ச்யவனர்.

மறுபேச்சு இல்லாமல், சுகன்யாவை விதிப்படி மணம் செய்து கொடுத்து விட்டார் அரசர்.

மகளை பார்த்து, "எந்த நிலையிலிலும் கணவருக்கு அபச்சாரம் செய்து விடாதே.. கவனமாக இரு. உனது கற்ப்பாலும், தொண்டினாலும் அவர் சந்தோஷப்படும் படியாக இருக்க வேண்டும்"
என்று சொல்லிவிட்டு, தன் அரண்மனைக்கு திரும்பி விட்டார் அரசர்.

நேற்றுவரை ராஜகுமாரி.. இன்று ரிஷி பத்தினி.
நேற்றுவரை அரண்மனை வாசம்.. இன்று காட்டில் ஆஸ்ரம குடிசையில் வாசம்.
நேற்றுவரை அரண்மனை விருந்து உண்டவள்... இன்று காய், கிழங்கு உண்கிறாள்.
நேற்று பட்டாடை உடுத்திய சுகன்யா... இன்று மரவுரி ஆடை உடுத்திக்கொண்டாள்.

"தன் கணவனே தெய்வம்" என்று வாழ்ந்து வந்தாள் சுகன்யா.
இந்திர தேவன், தேவர்களுக்கான யாகத்தில் அஸ்வினி குமாரர்களுக்கு சோமபானம் கிடையாது என்று ஒதுக்கி வைத்து இருந்தார்.
அஸ்வினி குமாரர்கள் தேவர்களுக்கு மருத்துவர்கள்.

தான் வயதானவனாக இருந்தாலும், ரிஷியாக ப்ரம்மச்சர்யத்தில் இருந்தாலும், கற்புடன் தனக்கு சேவை செய்து கொண்டு இருக்கும் சுகன்யாவுக்கு அணுகிரஹம் செய்ய விரும்பினார் ச்யவனர்.

உடனே யாகத்தில் அஸ்வினி குமாரர்களுக்கும் சேர்த்து சோமபானம் கொடுத்தார்.
தன்னை உபசரித்த ச்யவன ரிஷிக்கு, தன்னை போன்றே திவ்யமான தேவ ரூபத்தை கொடுத்து விட்டனர்.
இளமையான ச்யவன ரிஷியாக ஆகி விட்டார்.
சுகன்யா பெரிதும் ஆச்சர்யப்பட்டாள். ஆனந்தமாக இல்லறத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு சமயம், சர்யாதி தன் மகள் எப்படி காட்டில் இருக்கிறாளோ, என்று பார்க்க வந்தான்.
வந்து பார்த்த போது, இளமையான ஒருவருடன் சுகன்யா இருப்பதை பார்த்து மிகவும் கோபித்து கொண்டார்.

"அப்பா.. இவர் உங்கள் மாப்பிளை தான். தபோ பலத்தால் இளமையாகி விட்டார்" என்றாள் சுகன்யா.

அதற்கு  ச்யவனர், "ராஜனே! சுகன்யா தன் கற்பின் பலத்தால் என்னை இளமையாக்கி விட்டாள்" என்று பெருமையுடன் சொன்னார்.

அரசன் பெருமகிழ்ச்சியுடன் திரும்பினான்.

ஸ்யாவன ரிஷியின் பரம்பரையில் வருபவர்கள் நீங்கா இளமையுடன் இருப்பார்கள்.
ராம பக்தி கொண்டு இருப்பார்கள்.
ஆயுர்வேதம் படிப்பு படித்தால், பெரும் வைத்தியர்கள் ஆவார்கள்.

ப்ருகு ரிஷியின் வம்சத்தில் வருவதால், பெருமாளிடம் பக்தியும், மஹாலக்ஷ்மி அணுகிரஹமும் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.



Sunday 17 May 2020

பரத்வாஜ ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... பரத்வாஜ கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

பரத்வாஜ ரிஷி கோத்திரம் (பரம்பரை)யில் பிறந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. பரத்வாஜர்
2. கஸ்யபர்
3. அத்ரி
4. ஜமதக்னி
5. கௌதமர்
6. வசிஷ்டர்
7. விஸ்வாமித்திரர்
இந்த 7 ரிஷிகளும் சப்த ரிஷிகள்.




இவர்கள் பிரம்ம ஆயுசு முழுக்க இருப்பவர்கள்.
தேவர்களுக்கும் மேல் இருப்பவர்கள்.
நக்ஷத்திர ரூபமாக இவர்கள் துருவ மண்டலத்தை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.
அங்கீரஸ ரிஷியின் புத்திரர் "பரத்வாஜர்".

'பரத்' என்றால் "நிரம்பிய" என்று அர்த்தம்.
'வாஜம்' என்றால் "அன்னம்" என்று அர்த்தம்.

அன்னதானத்திற்கு பெரும் புகழ் பெற்றவர் இந்த ரிஷி.

துர்வாச ரிஷி ஒருவரே "பத்தாயிரம் பேர் சாப்பிட கூடிய உணவை" சாப்பிட்டு விடுவார். அவருடைய தபோ பலம் அப்படிப்பட்டது.

பரத்வாஜ ரிஷியோ, தன் தபோ பலத்தால் "பத்தாயிரம் பேருக்கு சாப்பாடு போடுவார்".
அவருடைய தபோ பலம் அப்படிப்பட்டது.
தன் தபோ பலத்தை செலவழித்து, எத்தனை பேர் வந்தாலும் அன்னதானம் செய்து விடுவார் பரத்வாஜர்.

பரதன் அயோத்தி மக்களோடு கிளம்பி ராமபிரானை பார்க்க சித்ரகூடம் நோக்கி வந்தார்.

வரும் வழியில் பரத்வாஜர் ஆசிரமத்துக்கு தங்கினார்.

அன்று பரத்வாஜர் போட்ட அன்னதானத்தை சாப்பிட்டுவிட்டு,  "அயோத்தியை ராமர் ஆளட்டும், பரதன் ஆளட்டும். நாம் இங்கேயே இருந்து விடலாம்" என்று சொன்னார்கள் என்றால், பரத்வாஜர் செய்த அன்னதானம் எப்பேர்ப்பட்டது என்று அனுமானிக்கலாம்.




ராமபிரான் வனவாசம் முடிந்து, ராவண வதம் முடிந்து, இலங்கையில் இருந்து அயோத்தி திரும்பும் வழியில், 
இன்று பிரயாக்ராஜ் (பிரயாகை) என்று சொல்லப்படும் இடத்திற்கு புஷ்பக விமானத்தில் (flight) இருந்து இறங்கினார்.
அப்போதும் அனைவருக்கும் அன்னதானம் செய்தார் பரத்வாஜர்.

சாம வேதியான அப்பைய தீக்ஷிதர், பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்தவர்.

அன்னதானம் செய்வதை உயர்வாக நினைப்பவனுக்கு பரத்வாஜரே குரு.

பரத்வாஜ ரிஷி பரம்பரையில் (கோத்திரம்) இருப்பவர்கள், அன்னதானம் செய்ய செய்ய, தன் ரிஷியை சந்தோஷப்படுத்துகிறார்கள்.

Tuesday 14 April 2020

வ்யாக்ர பாதர் ரிஷி, தொளமிய ரிஷி பற்றி தெரிந்து கொள்வோமே... தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை..

வ்யாக்ர பாதர் முக்தி ஸ்தலம் "சிறுபுலியூர்".  
வ்யாக்ர பாதர், ஒரு சமயம் கைலாசத்தில் சிவபெருமானிடம் "ஆனந்த தாண்டவம் பார்க்க வேண்டும்"
என்று தன் ஆசையை சொன்னார்.




"புண்டலீகபுரம் என்ற தேசம் தக்ஷிண பாரதத்தில் உள்ளது.
அங்கு கோவிந்தராஜ பெருமாளாக மஹாவிஷ்ணு இருக்கிறார். 
அங்கு உங்களுக்கு தரிசனம் தந்து ஆனந்த தாண்டவம் செய்வேன்" என்கிறார்.
"கோவிந்தராஜ பெருமாள்" இருக்கும் இந்த தேசம், திரு சித்ரகூடம் என்று அழைக்கப்பட்ட காலம் அது.

வ்யாக்ர பாதர், தன்னுடன் பதஞ்சலி முனிவரை அழைத்துக்கொண்டு, இந்த தேசத்துக்கு வந்தார்.
சாயங்கால வேளையில், கோவிந்தராஜனுக்கு முன், சிவபெருமான் ஆனந்த நடனம் ஆட, நந்தி தேவர் தாளம் போட, வ்யாக்ர பாதர் இந்த காட்சியை பார்த்து ஆனந்தம் அடைந்தார்.  
நடனம் ஆடியதால், சிவபெருமானுக்கு இங்கு "நடராஜர்" என்று பெயர் ஏற்பட்டது.

பிறகு, "தனக்கு மோக்ஷம் வேண்டும்" என்று சிவபெருமானிடம் கேட்டார்.

சிவபெருமான் "ஞானம் நான் தருவேன்.. மோக்ஷம் பெருமாள் தருவார்"
என்று சொல்லி, நாராயணனை திரு அஷ்டாக்ஷர மந்திரம் சொல்லி தியானிக்க சொல்லி மறைந்தார்.

இன்று இந்த திவ்ய தேசத்தை, சிதம்பரம் என்றும் சிற்றம்பலம் என்றும் சொல்கிறோம்.

வ்யாக்ர பாதர் (புலி போன்ற கால் உடையவர்) "சிறுபுலியூர்" என்று சொல்லப்படும் திவ்ய தேசத்துக்கு வந்தார்.
அங்கு திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து கொண்டே, நாராயணனை தரிசிக்க காத்து கொண்டிருந்தார்.
பெருமாள் கோகுலத்தில் பிறந்த "குழந்தை போல, தூளியில் ஆடிக்கொண்டே திவ்ய காட்சி கொடுத்தார்.

சிறு குழந்தையாக பெருமாளை, புலி போன்ற கால் உடைய வ்யாக்ர பாதர் இங்கு தரிசித்து, இங்கேயே இருந்து முக்தி பெற்றார்.

இதன் காரணத்தாலேயே இந்த ஊருக்கு "சிறு புலியூர்" என்று பெயர் ஏற்பட்டது.

"உபமன்யு" வ்யாக்ர பாதரின் புத்திரர்.
இந்த தமிழ்நாட்டில் தான், தொளமிய ரிஷியின் ஆஸ்ரமத்தில், உபமன்யு படித்தார்.

தன்  தகப்பனார் போலவே சிவபெருமானை  தரிசித்தார். 
இவருக்கு கண் தெரியாமல் போன போது, தொளமிய ரிஷி "காஞ்சி வரதராஜனை (அத்திவரதரை)" வழிபட சொல்ல,
பேரருளாளன் அருளால், கண் பார்வை இவருக்கு மீண்டும் கிடைத்தது.
பெரும் ரிஷி இவர்.

"ஆருணி, வைதன், உத்தங்கர்" போன்றார் உபமன்யுவுடன் படித்தார்கள்.

உத்தங்கர் தன் குருநாதரிடம் வேதம் முழுவதும் படித்து முடித்து விட்டு,
"குரு தக்ஷிணை தர வேண்டுமே" என்று குருவிடம் கேட்டார்.
"தனக்கு எதுவும் வேண்டாம், குருமாதாவிடம் கேள்" என்று சொல்லிவிட்டார்.

"பௌஷ்ய ராஜன் மனைவி வைத்து இருக்கிறாள். அதை வாங்கி கொண்டு வா" என்று  குருமாதா கேட்டாள்.
குருநாதர் "அதையே தனக்கு குரு தக்ஷிணையாக கொண்டு வா" என்று சொல்லிவிட்டார்.

பௌஷ்ய அரசனிடம் சென்று "தனக்கு நாக ரத்தினம் வேண்டும். குருநாதனுக்கு குரு தக்ஷிணையாக கொடுக்க வேண்டும்" என்று கேட்டு விட்டார் உத்தங்கர்.




விலைமதிப்பில்லாத நாகரத்தினத்தை உத்தங்கர் போன்ற வேத பிராம்மணன் தன்  குருநாதருக்காக தானம் கேட்கிறாரே, என்று தாராளமாக கொடுத்துவிட்டாள் அரசனின் மனைவி.

"தக்ஷகன்" என்ற நாகராஜன் பிறந்த இடம் "திருநாங்கூர்".
சிதம்பரம் ஆரம்பித்து திருநாங்கூர் (நாகூர்) தொடர்ந்து நூகூர், நாகப்பட்டினம் வரை "நாகர்கள் ஆண்ட" தேசமாக இருந்தது.

தமிழகத்தில் தான் ரத்தினங்கள் அதிகமாக அந்த காலங்களில் இருந்தது.
பிற்காலத்தில்,
திருநாங்கூரை தலைமையாக கொண்டு, திருமங்கை ஆழ்வார்  ஆட்சி செய்த பிரதேசம் இது.
அதை எடுத்துக்கொண்டு வரும் போது, தக்ஷகன் என்ற நாகராஜன், மனித வடிவெடுத்துக்கொண்டு, ப்ராம்மணனை போல வந்து, பேசிக்கொண்டே திடீரன்று கையில் இருந்த இரத்தின மாலையை எடுத்துக்கொண்டு ஓடி பாம்பு பொந்துக்குள் நுழைந்து விட்டான்.

மனிதன் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்ததை கண்டு!! 'வந்தது நாகதேவன்' என்று புரிந்து கொண்டார் உத்தங்கர்.
பிறகு, இந்திரா தேவன், அக்னி தேவனின் உதவியால், தக்ஷகனை நாங்கூர் பிரதேசத்தில் இருந்து விரட்டி, ரத்தினத்தை கைப்பற்றினார்.

தன் குருவிடம் நாக ரத்தினத்தை குரு தக்ஷிணையாக கொடுத்து விட்டார்.

தக்ஷகன் பிறகு காண்டவ வனத்தில் இருந்து வந்தான். 
இந்த புதர் வளர்ந்த காட்டை தான், யுதிஷ்டிரருக்கு திருத்ராஷ்ட்ரன் கொடுத்தான். 
அர்ஜுனன் இந்த காண்டவ வானத்தை அழித்து, இந்திரப்பிரஸ்தம் (Delhi) என்ற நகரம் உருவாக்கினார்.
அங்கிருந்து தக்ஷகன் தப்பித்து சென்றான். 
இந்த தக்ஷன் தான், சாபம் காரணமாக பிறகு அபிமன்யுவின் மகன் "பரீக்ஷித்"தை விஷம் தீண்டி கொன்றான்.

பரீக்ஷித் மகன் ஜனமேஜயன் அரியணை ஏறினார்.
அப்போது, இந்த உத்தங்கர் தான், இவரிடம் சென்று
"தக்ஷகன் தான் உன் தகப்பனை கொன்றார்" என்று சொன்னார்..

இதற்கு பழி தீர்க்க, பெரிய சர்ப்ப யாகம் ஏற்பாடு செய்தான்.
தக்ஷசீலா என்ற இடத்தில் யாகம் ஆரம்பித்தான்.
உலகில் உள்ள நாகம் எல்லாம் தானாக அக்னி குண்டத்தில் வந்து விழ ஆரம்பித்தது.
அஸ்தீகர் என்ற ரிஷி, ஜனமேஜயனை சமாதானம் செய்து, யாகத்தை நிறுத்தினார். தக்ஷன் தப்பித்தான்.

ஜனமேஜயன் யாகம் செய்த இடம் இன்று, "தஷீலா (Taxila)" என்ற பெயருடன் இன்றும் இருக்கிறது.  இன்று பாகிஸ்தான் பகுதியாக போய் விட்டது.

பீஷ்மர் "வ்யாக்ரபாத கோத்திரம்". 
யுதிஷ்டிரிடம் "கோத்திரம் என்ன?" என்று விராட அரசன் கேட்ட போது, "தான் வ்யாக்ர பாத ரிஷி கோத்திரம்" என்று சொல்கிறார்.

தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் சிவபெருமானை நமக்கு கொடுத்த, சிறுபுலியூரில் பெருமாளை நமக்கு கொடுத்து,
தமிழ்நாட்டில் மோக்ஷம் அடைந்த வ்யாக்ர பாதர்,
மஹாபாரத குரு வம்சத்துக்கு ரிஷி
என்பது வட பாரதமும், தெற்கு பாரதமும் எத்தனை உறவை கொண்டு இருந்தது என்பது தெரிகிறது.

அர்ஜுனன் இந்த பிரதேசங்களில் ஸ்ரீரங்கம் வரை தீர்த்த யாத்திரை வந்த காரணமும் நமக்கு புரிகிறது.

Wednesday 9 October 2019

ரிஷிகளின் பரம்பரை என்று சொல்லி கொள்ளும் நாம், ரிஷிகளை பற்றி தெரிந்து கொள்வோமே..மஹ ரிஷி யார்? ப்ரம்ம ரிஷி யார்? சூத ரிஷி யார்?..

ரிஷிகள் மனிதர்கள் அல்ல, தேவர்களும் அல்ல.
தேவர்களுக்கும் மேலானவர்கள் ரிஷிகள்.

ரிஷிகள் தேவர்களையும், அசுரர்களையும், ராஷசர்களையும், மனிதர்களையும் படைத்தவர்கள்.



பரப்ரம்மான வாசுதேவனே ரிஷி தான்.
அவரே மும்மூர்த்திகளாக வ்யூஹ அவதாரம் செய்தார்.
மும்மூர்த்திகளும் ரிஷிகள் தான்.

பரவாசுதேவன் மனித அவதாரம் செய்த போது கூட, தன்னை ரிஷியின் பரம்பரையை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்பட்டார்.
ஸ்ரீ ராமர் - வசிஷ்ட கோத்திரம் (பரம்பரை)
சீதை - அவதரித்தது கௌதம கோத்திரம், ஸ்ரீ ராமரை மணம் செய்து கொண்ட பின், வசிஷ்ட கோத்திரம் (பரம்பரை)
ஸ்ரீ கிருஷ்ணா - கர்க கோத்திரம் (பரம்பரை)
தர்மபுத்திரர் - வியாக்ரபாதர் கோத்திரம் (பரம்பரை)

கௌதம கோத்திரம் (பரம்பரை) கௌதம ரிஷியால் உருவானது.
ஜாபாலி என்ற சிறுவன் தன் கோத்திரம் (பரம்பரை) தெரியாமல் இருந்தான்.  கௌதம ரிஷி அவனை ஏற்றுக்கொண்டு, தனது கோத்திரத்தை (பரம்பரை) கொடுத்து, உபநயனம் செய்து, "ஸத்யகாம ஜாபாலி" என்று பெயர் கொடுத்தார்.
கௌதம ரிஷியின் ஆசியால், பெரும் தபோதனராக ஆகி விட்டார் ஜாபாலி.
பிற்காலத்தில், ஜாபாலி கோத்திரம் (பரம்பரை) உருவாகி, இந்த பரம்பரையில் வருபவர்களுக்கு ஜாபாலியே ரிஷியாக ஆனார்.
கௌதம ரிஷியை குருவாக ஏற்ற ஜாபாலி, பெரும்பேர் பெற்றார்.



காஷ்யப கோத்திரம் (பரம்பரை) காஷ்யப ரிஷியால் ஏற்பட்டது.
ப்ரம்மாவின் மானஸ புத்திரர் காஷ்யபர். சப்த ரிஷிகளில் ஒருவர்.
பெரும்பாலான உலக ஸ்ருஷ்டி காஷ்யபரால் தான் உண்டானது.
ஜாம்பவான் அவதரித்த இடம் இன்று 'ஜம்மு' (Jammu) என்று அழைக்கப்படுவது போல,
காஷ்யப ரிஷி பூலோகத்தில் தவம் செய்த இடம் இன்று காஷ்மீர் (kashmir) என்று அழைக்கப்படுகிறது.

வேதம் தழைத்த தேசம் காஷ்மீரம். ஆதி சங்கரர் காஷ்மீரம் வந்து மண்டல மிஸ்ரரிடம் வேதத்தை பற்றி விவாதித்தார் என்று பார்க்கிறோம்.

ஒருவேளை யாருக்காவது தான் எந்த கோத்திரத்தை (பரம்பரை) சேர்ந்தவன்?
என்று தெரியாத பட்சத்தில், தாங்கள் காஷ்யப கோத்திரம் என்று சொல்லி கொள்ள சாஸ்திரம் இடம் கொடுக்கிறது.

அதேபோல,
தர்மத்தை சொல்லும் "சூத்ரம்" (Formula to lead life) பல உண்டு. ரிஷிகள் பலர் தர்ம சூத்ரங்கள் இயற்றி உள்ளனர்.

'ஆபஸ்தம்ப சூத்ரம், போதாயன சூத்ரம், வசிஷ்ட சூத்ரம், விஷ்ணு சூத்ரம், கௌதம சூத்ரம்' என்று பல தர்ம சூத்ரங்கள்,
அந்தந்த ரிஷிகளின் பெயராலேயே உள்ளது.

மற்ற சூத்ரத்தில் சொல்லப்பட்ட அனைத்து தர்மங்களும் 'போதாயன' சூத்திரத்தில் அடக்கம்.
அதனால்,
ஒருவேளை யாருக்காவது தான் எந்த சூத்ரத்தை (formula) சேர்ந்தவன்? 
என்று தெரியாத பட்சத்தில், 'போதாயன சூத்திர' படி வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கலாம் என்று சாஸ்திரம் இடம் கொடுக்கிறது.
ரிஷிகள் அனைவரும் ஒரே தகுதி உள்ளவர்கள் அல்ல.
ரிஷிகள் ஞானிகள் (மெய் அறிவு கொண்டவர்கள்).
ரிஷிகள் தவவலிமையால் வேத மந்திரங்களை கண்டுபிடிப்பதால் இவர்களுக்கு ரிஷி என்று பெயர்.



ரிஷிகள் பலவிதமாக உள்ளனர். ரிஷிகள் அனைவரும் ஒரே பலம் கொண்டவர்கள் என்று நினைக்க கூடாது.
  • மஹ ரிஷி
  • ப்ரம்ம ரிஷி
  • ராஜ ரிஷி
  • வைஸ்ய ரிஷி
  • ஜன ரிஷி
  • தப ரிஷி
  • ஸத்ய  ரிஷி
  • காண்ட ரிஷி
  • தேவ ரிஷி
  • சூத ரிஷி

ரிஷிகளின் மனைவிகள் "ரிஷிகை" என்று சொல்வோம்.

பொதுவாக அனைத்து ரிஷிகளும் தவவலிமையால், சப்த பிரபஞ்சத்தில் (sound energy) மறைந்து இருக்கும் "வேத மந்திரங்களை" கண்டுபிடிக்கும் சக்தி உள்ளவர்கள்..




பிரபஞ்சத்தில் இருக்கும் வேதத்தை கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்கள், "ரிஷி" என்று போற்றப்பட்டனர்.
வேதத்திற்கே "சப்த ப்ரம்மம்" என்று தான் பெயர்.
மறைந்து இருக்கும் இந்த சப்த பிரம்மத்தை, தியானத்தால் கண்டுபிடித்து நமக்கு தந்து விட்டனர் ரிஷிகள்.
மறைந்து இருப்பதால், தமிழில் வேதத்தை "மறை" என்ற சொல் கொண்டு பொருத்தமாக அழைக்கின்றனர்.
சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்தியரே "தமிழ் முனி"யாக தானே போற்றப்படுகிறார்.
ரிஷியை விட உயர்ந்தவர்கள் முனிகள்.
ரிஷியான நாரதர் முனியாகவும் போற்றப்படுகிறார். தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்..
தவவலிமை அதிகமாக உள்ள ரிஷிகளுக்கு,
8 மஹா ஸித்திகளும் கைகூடி, 
அனுகிரஹமும் செய்ய முடியும், 
நிக்ராஹமும் (அழிக்கவும்) முடியும் 
என்ற சக்தி பெரும் போது,
அந்த ரிஷிகள் "மஹ ரிஷி" என்ற அந்தஸ்த்தை பெறுகிறார்.
துர்வாசரை மஹ ரிஷி என்று சொல்வார்கள்.



அழிக்கும் சக்தியும் உள்ளதால், "மஹ ரிஷிகளை" கண்டு க்ஷத்ரியனும், தேவர்கள் கூட, அவர்கள் சாபத்துக்கு பயப்படுவார்கள்.

ப்ராம்மண (Spiritual) பரம்பரையில் பிறந்து, பேராசை கோபம் அற்று, தவவலிமையால், "வேத மந்திரங்களை" கண்டுபிடித்தவர்கள் "ப்ரம்ம ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
பிராம்மண குணம் உள்ளவன் ரிஷியாக உயரும் போது "ப்ரம்ம ரிஷி" ஆகிறான்.
க்ஷத்ரிய குணம் கொண்ட கௌசிகன் என்ற அரசன், ப்ரம்ம ரிஷியான "வசிஷ்டரிடம்" உள்ள காமதேனுவை கைப்பற்ற நினைத்தான்.
தன் படைவீரர்களை கொண்டு காமதேனுவை இழுத்து வர   சொன்னான்.
"ப்ரம்ம ரிஷி" வசிஷ்டர், தன் தவவலிமையால் ஆயிரக்கணக்கான படைவீரர்களை மாயையால் உருவாக்கி, அனைவரையும் ஒழித்தார். 

இத்தனை பலம் ஒரு ப்ரம்ம ரிஷிக்கு இருக்குமானால், க்ஷத்ரிய அரசனாக இருப்பதை விட, ப்ரம்ம ரிஷியாகலாம் என்று நினைத்தார் கௌசிகன்.
அரச பதவியை தன் மகன்களிடம், மந்திரிகளிடம் கொடுத்து விட்டு, தவம் செய்ய புறப்பட்டு விட்டார்.
கோபத்தை விட்டு, காமத்தை விட்டு, பொருள் ஆசையை விட்டு, பிராம்மண குணங்களை கடும் தடைகளுக்கு பிறகு பெற்று, க்ஷத்ரியனாக பிறந்தும், ப்ரம்ம ரிஷியாக ஆசைப்பட்ட கௌசிகன், வசிஷ்டர் வாயால் "ப்ரம்ம ரிஷி" என்று பெயர் பெற்றார். விஸ்வாமித்திரர் என்று உலக புகழ் பெற்றார் என்று பார்க்கிறோம்.

க்ஷத்ரியனாக (Protector) பிறந்து, தவவலிமையால், சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "ராஜ ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
ஸ்வாயம்பு மனுவே "ராஜ ரிஷி". 
தசரதர் ஒரு ராஜ ரிஷி. 
ஜனகன் ஒரு ராஜ ரிஷி.
பொதுவாக ராஜரிஷிகள், தன் மகன்கள் ஆட்சிக்கு அமர்த்திய பின், வயோதிக காலத்தை வனத்தில் தவம் செய்து கழிக்க சென்று விடுவார்கள்.



வைஸ்யனாக (Business) பிறந்து, தவவலிமையால்,  சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "வைஸ்ய ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
துலாதரன் என்ற ரிஷி - வைஸ்ய ரிஷி.

"ஜாதி பேதம்" பார்ப்பது காமம், க்ரோதம் உள்ள நமக்கு தான் உண்டு.
ரிஷிகளுக்கு இல்லை.
யார் மெய் அறிவில் (ஞானத்தில்) உயர்ந்து இருக்கிறார்களோ, அவர்களே பெரியவர்.
மஹாபாரதத்தில், ப்ரம்ம ரிஷியான "ஜாஜலி" என்பவர், துலாதரன் என்ற வைஸ்ய ரிஷியிடம் தர்ம உபதேசங்கள் கேட்டதாக உள்ளது.

சூத்ர குலத்தில் பிறந்து இருந்தாலும்,  தவவலிமையால், சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "சூத ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
சூத ரிஷியை, சௌனகாதி ப்ரம்ம ரிஷிகள் பூஜை செய்து, அவரை வ்யாஸ பீடத்தில் அமர்த்தி, அவரிடம் புராணங்களை சொல்ல சொல்லி கேட்டனர்.
ரோம ஹர்ஷனர் என்ற ரிஷியும் சூத ரிஷி.

தேவனாக பிறந்து, தவவலிமையால், சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "தேவ ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
நாரதர் - தேவ ரிஷி
தேவலர் - தேவ ரிஷி
தேவர்கள் திவ்யமான சரீரம் உடையவர்கள்.
அக்னி ஸ்வரூபமானவர்கள்.
இவர்கள் எந்த லோகத்துக்கும் சஞ்சரிக்க இயலும். 
மண்ணால் ஆனா மனிதர்கள் அல்ல இவர்கள்.
பொதுவாக இவர்கள் பூலோகத்து மேல் உள்ள சொர்க்க லோகத்திலோ, ஜன  லோகத்திலோ, தப லோகத்திலோ, ப்ரம்மா இருக்கும் சத்ய லோகத்திலோ வசிக்க கூடியவர்கள்.


ப்ரம்ம (ஸத்ய) லோகத்தில் வசிக்கும் தேவ ரிஷிகள், "ஸத்ய ரிஷி" என்றும்  அழைக்கப்படுகிறார்கள்.

ப்ரம்மாவின் முதல் படைப்பான சனத்குமாரர்கள் - ப்ரம்ம ரிஷிகள். 
எப்பொழுதுமே 5 வயது பாலகனாகவே இருப்பவர்கள்.
ப்ரம்ம லோகம் அழியும் வரை, ப்ரம்மா அழியும் வரை இருப்பவர்கள்.

ப்ரம்ம இருக்கும் ஸத்ய லோகத்துக்கு கீழே உள்ள தப லோகத்தில் வசிக்கும் தேவ ரிஷிகள், "தப ரிஷிகள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

தப லோகத்துக்கு கீழே உள்ள ஜன லோகத்தில் வசிக்கும் தேவ ரிஷிகள், "ஜன ரிஷிகள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

வேதத்தில் 4 காண்டங்கள் உள்ளன.
  1. ஆக்னேயம்
  2. ஸோமம்
  3. வைச்வ தைவத்யம்
  4. ப்ராஜா பத்யம்
வேதத்தில் உள்ள ஒவ்வொரு காண்டத்துக்கும் (Chapter) அதற்கான ரிஷிகள் உள்ளனர்.  "காண்ட ரிஷிகள்" என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
பெண்களில் கூட ரிஷிகள் உண்டு.
"கார்கி"  என்ற பெண் ரிஷி உண்டு.

ரிஷிகளால் மனிதர்கள் படைக்கப்பட்டனர். 
தேவர்களும் வழிபடும் ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் நாம்.


வாழ்க ரிஷிகள்.
வாழ்க ஹிந்துக்கள். 




Saturday 14 September 2019

புலஸ்திய ரிஷி, புலஹர் ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... தமிழ் முனி அகத்தியரின் தந்தையல்லவா புலஸ்தியர்..தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை..

புலஸ்திய ரிஷி, புலஹர் ரிஷி
"புலஹ ரிஷியும், புலஸ்திய ரிஷியும்" ப்ரம்மாவால் படைக்கப்பட்ட மானஸ புத்திரர்.
சகோதர்கள்.

பிரம்மாவால் படைக்கப்பட்ட ரிஷிகள் ப்ரம்ம தேவன் இருக்கும் வரை இருக்கிறார்கள்.
தேவைப்படும் போது ஜன, தப லோகங்களில் இருந்து பூலோகம், சொர்க்கலோகம் வருகிறார்கள்.

இருவரும் பூலோகத்தில் ஹிமாலயத்தில் நேபாள தேசத்தில் (Nepal) ஓடும் 'கண்டகி என்ற சக்ர' நதிக்கரையில் கடும் தவம் செய்தனர்.
அங்கேயே ஆசிரமம் அமைத்து வசித்து வந்தனர்.
புலஹர் வசித்த இடமே இப்போது "சாளக்கிராம க்ஷேத்ரம்" (Nepal) என்று சொல்லப்படுகிறது.
இவரின் சிஷயர் தான் "பரத" யோகீசவ்ரர்.
இவரால் தான் நம் நாட்டுக்கு "பரத" கண்டம் என்று பெயர் ஏற்பட்டது.

பாரத வர்ஷத்தில் (இந்திய, ஆப்கான், பாகிஸ்தான், இந்தோனேஷியா வரை) பரத கண்டத்தில் (இந்திய) தான் நாம் வசிக்கிறோம்.

பாரத என்ற சமஸ்கரித சொல்லுக்கு "பரமாத்மாவில் ரமிப்பது" என்று பொருள். பாரத நாட்டுக்கு "இண்டியா" என்று ஏன் இந்த அர்த்தமில்லாத பெயர்  ஏற்பட்டது?. தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.

பொதுவாக இந்த பாரத வர்ஷத்தில் தான், "தெய்வ சிந்தனை உள்ளவர்கள் அதிகமாக பிறப்பார்கள்" என்பதால் இதற்கு பாரத வர்ஷம் என்று பெயர் ஏற்பட்டது.

புலஹரின் சிஷ்யர் "பரத" யோகீசவ்ரர் மோக்ஷத்திற்காக கடும் தவம் செய்து வந்தார்.
"தன் தவமே மோக்ஷம் கொடுத்து விடும்" என்று நினைத்த இவரை ஒரு மான் வந்து கெடுத்து விட்டது.
மான் குட்டியை வளர்த்து வந்த பரத யோகீஸ்வரர், தன் ஆயுசு முடியும் சமயத்தில், "இனி இந்த மானை யார் காப்பாற்றுவார்களோ!!" என்ற கவலையுடனேயே உயிர் விட, மோக்ஷம் கிடைக்காமல், அடுத்த பிறவி கிடைத்து அதில் மானாகவே பிறந்து விட்டார்.

போன ஜென்மத்தில் யோகீஸ்வரராக இருந்ததால், பூர்வ ஜென்ம நினைவோடு மானாக பிறந்தார்.
தன் குரு புலஹர் என்று அறிந்து இருந்ததால், புலஹர் இருக்கும் சாளக்கிராம க்ஷேத்ரத்துக்கே வந்து, கடைசி வரை அங்கேயே மானாக இருந்து உயிர் விட்டார்.
பின்னர் "ஜட பரத"ராக அவதரித்து, உலக விஷயங்களில் துளியும் தலையிடாமல், மோட்சத்தையே லட்சியமாக கொண்டு வாழ்ந்து மூன்றாவது பிறவியில் மோக்ஷத்தை பெற்றார்.


புலஹர் என்ற ரிஷியை ஆச்ரயித்த பரதரும் மோக்ஷம் பெற்றார் என்று பார்க்கும் போது, ரிஷிகளின் பெருமை நமக்கு புரியும்.

புலஸ்தியர் தன் தவ வலிமையால் பலம் வாய்ந்த "யக்ஷர்கள், ராக்ஷஸர்களை" ஸ்ருஷ்டி செய்தார்.

ஆதிகாலத்தில் இலங்கை ராக்ஷஸர்களால் ஆளப்பட்டது.

முதல் மனுவான ஸ்வாயம்பு மனுவுக்கு தேவஹூதி என்ற மகள் பிறந்தாள்.
தேவஹூதி "கர்தம முனி"யை மணந்தாள்.

புலஹ ரிஷி, தேவஹூதியின் மகள் "ஆகதி"யை மணந்தார். இவர்களுக்கு கர்மசிரேஷ்டன், வனீயான், ஸஹிஷ்ணு என்ற மூன்று புதல்வர்கள் பிறந்தனர்.

புலஸ்திய ரிஷி, தேவஹூதியின் மகள் "ஹவிர்பு"வை மணந்தார்.

புலஹர், புலஸ்திய ரிஷிக்கு கர்தம பிரஜாபதி மாமனார் முறை.

புலஸ்திய ரிஷிக்கு தமிழ்நாடே கடன் பட்டு இருக்கிறது..
ஏன்?
"தமிழ் முனிவர்" என்று கொண்டாடப்பட்டும் 'அகஸ்தியர்' இவருடைய மகன். 
புலஸ்திய ரிஷியை தமிழ்நாடு கொண்டாடாமல் இருக்க முடியுமா?..

புலஸ்தியருக்கு 'அகஸ்தியர்', 'விச்ரவஸ்' என்று இரு புதல்வர்கள்.
இருவருமே தவத்தில் ஆர்வம் உள்ளவர்கள், ரிஷிகள்.

இவர்கள் அனைவரும் கண்டகி நதிக்கரையில் (Nepal) புலஸ்தியரோடு இருந்து தவம் செய்து கொண்டிருந்தனர்.

'த்ருணபந்து' என்ற ராஜரிஷி, தன் மகள் 'இடவிடா'வை புலஸ்திய ரிஷியின் புதல்வர் விச்ரவஸுக்கு மணம் செய்து கொடுத்தார்.
விச்ரவஸுக்கும், இடவிடாவுக்கு பிறந்தவர் தான் "குபேரன்' என்று அழைக்கப்படும் 'வைச்ரவணன்'.

குபேரன் அருள் கிடைத்தால் செல்வம் கொழிக்கும் என்று சொல்வார்கள்.

புலஸ்தியரின் பேரன் குபேரன் என்று அறியும் போது, புலஸ்திய ரிஷியின் வம்ச பெருமை ஓங்குகிறது.

தேவர்களில், தேவர் கூட்டம் மட்டும் தான் உள்ளது என்று நினைக்க கூடாது.
முப்பத்து முக்கோடி தேவர்களில், 'யக்ஷர்கள், கிண்ணரர்கள், கந்தர்வர்கள்' என்று பல பிரிவுகள் உண்டு.

புலஸ்திய ரிஷி தன் பேரன் 'குபேரன்' என்ற வைச்ரவணனை "யக்ஷர்களுக்கு அரசனாக்கினார்".
குபேரன் எளிதாக நினைத்த இடங்களுக்கு சென்று வர, சொர்க்க லோகத்தில் உள்ள விஸ்வகர்மா, குபேரனுக்காக புஷ்பக விமானம் செய்து கொடுத்தார்.

'மால்யவான்' என்ற ராக்ஷஸன் இலங்கையை ஆண்டு கொண்டு இருந்த போது, குபேரன் இவர்களை விரட்டி, இலங்கைக்கு அரசனானான்.
யக்ஷர்கள் குடியேறி இலங்கையை ஆண்டனர்.

எப்படியாவது "ராக்ஷஸர்கள் மீண்டும் இலங்கையை பிடிக்க வேண்டும்" என்று மால்யவான் முயற்சி செய்து கொண்டிருந்தான்.

மால்யவானின் இளைய சகோதரன் "சுமாலி"க்கு "கேகசி" என்ற மகள் இருந்தாள்.

குபேரனின் தந்தை விச்ரவஸ் தவவலிமையுள்ளவர் என்று அறிந்து, அவருக்கு ராக்ஷஸ குலத்தை சேர்ந்த "கேகசி" என்பவளை மணம் செய்து கொடுத்தான் மால்யவான்.
இவர்களுக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற மூன்று பிள்ளைகள் கண்டகி என்ற சக்ர நதி தீரத்தில் பிறந்தனர்.
நேபாள தேசத்தில் (Nepal) பிறந்தவர்கள்.
சிவ பக்தனாக வளர்ந்தார்கள்.

"ராவணன், விபீஷணன், கும்பகர்ணன்" ஆகியோர் புலஸ்திய ரிஷியின் பேரன்கள்
ராவணனுக்கு "பௌலஸ்த்யன்" என்று பெயர்.




"ப்ரம்மத்தை உபாசிப்பவன்" ப்ராம்மணன்.
புலஸ்திய ரிஷியின் மகன் விச்ரவஸ் "ப்ராம்மணன்".
இவருக்கு பிறந்த ராவணன், கும்பகர்ணன் இருவரும் தாய் வழியில் ராக்ஷஸ குணத்தையே பெற்று இருந்தனர்.
விபீஷணன் "ப்ராம்மண குணம்" அதிகம் உள்ளவனாக இருந்தார்.
மூவருமே 4 வேதமும் கற்றவர்கள்.

சிவ பக்தனான ராவணன், ரஜோ குணம் அதிகமுள்ளவனாக இருந்ததால், பூஜை கூட  அனைவரையும் போல பூ, பழங்கள் கொண்டு செய்ய மாட்டான்.

"சிவ பூஜை தன்னை போல யாரும் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்" என்று நினைப்பான்.
அதனால், மாய சக்தி உடைய ராவணன், தன் 10 தலையை அறுத்து ரத்த பூஜை செய்வான்.
இன்னும் வேகம் அதிகமாகி, ஹிமாலயத்தையே தன் 20 கைகளால் தூக்கி, தன் சிவபக்தியை, சிவ பெருமானுக்கு காட்டினான்.

சிவபெருமான் தன் நக கட்டைவிரலால் ஒரு அழுத்து அழுத்த, ராவணனின் 20 கைகளும் மலையில் சிக்கி கொள்ள, அது போன்ற திமிர் பிடித்த சிவ பக்தி செய்வதை  நிறுத்தினான்.

மகா பலம் கொண்ட ராக்ஷர்களான ராவணன் குபேரனை இலங்கையில் இருந்து விரட்டி, அவனிடம் இருந்த "புஷ்பக விமானத்தை" (flight) தன்னிடம் வைத்துக்கொண்டான்.

குபேரன் வட பூமியை  ஆண்டு வந்தான். வடக்கு பகுதியில் குபேரன் இருக்கிறார் என்று சொல்வதற்கு காரணம் இது தான்.

விபீஷணன் பரம சாத்வீகனாக இருந்தார்.
இவரால் தான்,
நமக்கு ப்ரம்ம தேவன் வழிபட்டு, ஸ்வாயம்பு மனு வழிபட்டு, பிறகு ஸ்ரீ ராமரே வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீரங்கத்துக்கு கிடைத்தார்.

ராம பட்டாபிஷேகம் நடந்த பின், அயோத்தி விட்டு, ஸ்ரீ ராமரை பிரிய மனமில்லாமல் விபீஷணன் இருந்தார்.
"தானும், ஸ்ரீ ரங்கநாதரும் வேறல்ல"
என்று ஸ்ரீ ராமரே தன் குலதெய்வமான ரங்கநாதரை விபீஷணனுக்கு கொடுத்து, இலங்கை சென்று ஆட்சி செய்ய சொன்னார்.

வரும் வழியில், ஸ்ரீ ரங்கநாதரை சந்தியா வந்தனம் செய்ய கீழே வைத்து விட்டு, தன் பிரார்த்தனையை செய்து முடித்தார்.

ஸ்ரீ ரங்கநாதர் தெற்கு முகமாக படுத்து இருக்க, "இங்கிருந்தே இலங்கையை கடாக்ஷித்து கொண்டு இருப்பேன்" என்று சொல்லி, ஸ்ரீ ரங்கத்திலேயே தங்கி விட்டார்.
"புலஸ்திய ரிஷி" பரம்பரையில் வந்த "விபீஷணன்" நமக்கு ரங்கநாதரை தந்து விட்டார்,
ஸ்ரீ ராமரே வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதர் தமிழ்நாட்டுக்கு கிடைத்து விட்டார்.

ராக்ஷஸனாக இருந்தாலும் விபீஷணன் பெருமாள் பக்தி செய்தார்.

ராவணன், கும்பரகர்ணன் இந்த பிறவியில் ஸ்ரீ ராமரை எதிர்ப்பது போல இருந்தாலும், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவின் காவலாளிகள், ஜெய விஜயர்கள் என்பதை மறக்க முடியாது..

சிவ பக்தனான அகஸ்தியர், பரமாத்மா நாராயணனே ஸ்ரீ ராமராக அவதாரம் செய்து இருக்கிறார் என்று உணர்ந்து அவரின் தரிசனத்திற்காக காத்து இருந்தார்.
தன் தந்தை தசரதன் கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற, ஸ்ரீ ராமர் அயோத்தி சாம்ராஜ்யத்தை பரதனுக்கு கொடுத்து, 14 வருட வனவாசத்தை ஏற்று சீதை, லக்ஷ்மணனுடன் புறப்பட்டார்.

பாரத பூமியில் பல வனங்களில் சஞ்சரித்து, ஒரு சமயம் அகத்திய முனிவரை தரிசித்தார் ஸ்ரீ ராமர்.

அகத்தியர் ஸ்ரீ ராமரை 'தன் ஆசிரமத்திலேயே தங்கி விட்டு அயோத்தி திரும்பலாம். 12 வருடங்கள் ஆகி விட்டது, இன்னும் 2 வருடங்கள் தானே உள்ளது' என்று சொல்ல,
ஸ்ரீ ராமர் அகத்தியர் வாக்கை மீற கூடாது என்ற மரியாதையின் காரணத்தால், அந்த இரவு அவர் ஆசிரமத்திலேயே தங்கினார்.
மறுநாள் காலை அனுஷ்டானங்களை முடித்து கொண்டு, ஸ்ரீ ராமர், சீதா, லக்ஷ்மணனுடன் அகஸ்தியரை வந்து சேவித்தனர்.

முக்காலமும் உணர்ந்த அகத்தியர், ஸ்ரீ ராம அவதார நோக்கத்தை புரிந்து கொண்டார்.

ஸ்ரீ ராமரை பார்த்து,
"ராமா, என்னிடம் ஏராளமான அபூர்வமான அஸ்திர-சஸ்திரங்கள் உள்ளது. அதை அனைத்தையும் உனக்கு தருகிறேன்.
நான் நேற்று உங்களை இங்கேயே தங்குமாறு சொன்னேன். உங்களுக்கு இந்த இடம் சௌகரியமாக இருக்காது.

இங்கு கோதாவரி நதி கரையில், பஞ்சவடி என்ற ஒரு இடம் உள்ளது. அது உங்களுக்கு மிகவும் ஏற்ற இடமாக இருக்கும்."
என்று சொன்னார்.

"மீதம் உள்ள 2 வருடங்கள் இங்கேயே தங்கலாம் என்று நேற்று தானே சொன்னீர்கள்? இன்று திடீரென்று தனியாக பஞ்சவடியில் தங்கலாம் என்று அனுப்புகிறீர்களே!!"
என்று ஸ்ரீ ராமரும் கேட்கவில்லை, அகத்தியரும் திடீரென்று ஏன் இப்படி மாற்றி சொன்னேன் என்று விளக்கவுமில்லை.

இருவருக்கும் தெரிந்த விஷயம் ரகசியமாகவே வைக்கப்பட்டது.

"ராவண வதம் என்ற அவதார நோக்கத்தை பூர்த்தி செய்ய தான் ஸ்ரீ ராமர் வனவாசம் ஏற்றுள்ளார். 
சீதையை ராவணன் அபகரித்து இலங்கை செல்ல போகிறான். 
பிறர் மனைவியை அபகரித்த பாவத்துக்கு ராவணன் அழிய போகிறான்" என்று ஞான த்ருஷ்டியால் புரிந்து கொண்டார் அகத்தியர்.

ஒரு வருஷ காலம் பஞ்சவடியில் (மகாராஷ்டிரா) ஸ்ரீ ராமர், சீதை வசித்தனர். 
லக்ஷ்மணன் குடில் அமைப்பது, வீடு பெறுக்குவது, காய் கனிகள் கொண்டு வருவது என்று சகல சேவையும் செய்து வந்தார்.

ராவணனின் தங்கை சூர்ப்பனகை சீதையை கொலை செய்ய முயற்சிக்க, அனுஷ்டானத்தில் இருந்த ஸ்ரீ ராமர் லக்ஷ்மணனை காப்பாற்ற சொல்ல, பெண்ணாக இருப்பதால் கொலை செய்யாமல், மூக்கு அறுக்கப்பட, இலங்கைக்கு ஓடி ராவணனிடம் சீதையை எப்படியாவது கவர்ந்து மணம் செய்து கொள்ளுமாறு சொல்ல, ராவணன் போலி சாமியார் போல வந்து தூக்கி சென்று விட்டான்.

தன் அயோத்தி சேனையை அழைத்து கொள்ளாமல், தனி ஒருவனாக, ஸ்ரீ ராமர் பஞ்சவடியில் (மகாராஷ்டிரா) இருந்து தன் தம்பி லக்ஷ்மணனை கூட்டி கொண்டு,
கர்நாடக தேசத்தில் வானரர்களை சிநேகம் செய்து கொண்டு,
கடலை கடந்து,
ராவணனுக்காக நின்ற அனைத்து ராக்ஷஸ கூட்டத்தையும் அழித்து, ராவணன் 10 தலையையும் மண்ணில் சாய்த்து,
இலங்கையை தன் ஆளுமையில் கொண்டு வந்து,
ராவணன் தம்பிக்கு அப்படியே இலங்கையை கொடுத்து, இலங்கை அரசனாக்கி,
சீதையை மீட்டு, அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டு "ராம ராஜ்யத்தை" உலகில் நிறுவினார் பரமாத்மா நாராயணன்.

புலஸ்திய ரிஷி பின்னாளில் விந்திய மலையை (மத்திய பிரதேசம்) தாண்டி தக்ஷிண பாரதத்துக்கு வந்தார்.

அகஸ்தியர் தமிழ் முனிவரனார்.

புலஸ்திய ரிஷியால் குபேரன், தமிழ் முனி என்று பெயர் பெற்ற அகத்தியர் நமக்கு கிடைத்தார்.
விஷ்ணுவின் பக்தர்களான ஜெய விஜயர்கள் சனகாதிகள் சாபத்தால் மூன்று ஜென்மங்கள் பூலோகத்தில் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட,
கண்டகி நதி தீரத்தில் தவம் செய்யும் புலஸ்திய ரிஷியின் மகன் விச்ரவஸ் என்ற ரிஷியை தன் தகப்பனாக தேர்ந்து எடுத்தனர்.

விஷ்ணு பார்ஷதர்கள் "புலஸ்திய ரிஷியின் பரம்பரையில் பிறக்க ஆசைப்பட்டனர்" என்றால் புலஸ்தியர்  பெருமை எத்தகையது என்று உணரலாம்.

அவதாரத்தில் ராக்ஷஸனாக பிறந்தாலும், "விஷ்ணு பார்ஷதர்கள்" ஆயிற்றே ராவணனும், கும்பகர்ணனும்.

சப்த ரிஷிகளில் ஒருவராக இருக்கும் அகஸ்தியர் தன் "தகப்பனாக புலஸ்தியரை தேர்ந்து எடுத்தார்" என்றால் புலஸ்தியர்  பெருமை எத்தகையது என்று உணரலாம்.

பரத யோகீஸ்வரர் "புலஹரின் சிஷயர்" என்ற பெற்றதால் தானே, மோக்ஷம் அவர் முயற்சியால் கிடைக்காமல் போனாலும், இரண்டு ஜென்மங்களிலேயே மோக்ஷத்தை அடைந்தார். 
குரு கிருபை தானே வென்றது.

பெருமை பெற்ற பரத யோகீஸ்வரர் அந்த ஜென்மத்தில் மானை நினைத்து மோக்ஷத்தை நழுவ விட்டாலும்,
குரு அணுகிரஹம் இருந்ததால், மானாக அடுத்த பிறவி எடுத்தும் பூர்வ ஜென்ம ஞாபகத்தோடு இருந்து, புலஹர் ஆசிரமத்திலேயே இருந்தார், பிறகு மூன்றாவது ஜென்மத்தில் மோக்ஷத்தை அடைந்து விட்டார் என்று பார்க்கிறோம்.

ரிஷிகளை உபாசித்து நாசம் போனவன் கிடையாதே...
தன் கிருபையால் குருவாக ரிஷிகள் இருந்து காப்பாற்றி விடுவார்கள் என்று தெரிகிறதே..


புலஸ்திய ரிஷி சத்ய யுகம், த்ரேதா யுகம் தாண்டி, துவாபர யுகத்திலும் பூலோகம் வந்தார்.

மகாபாரத சமயத்தில், தீர்த்த யாத்திரை செல்ல பீஷ்மர் சென்று இருந்த போது, கங்கையின் புத்திரனான பீஷ்மருக்கு "புலஸ்திய" ரிஷி காட்சி கொடுத்தார்.
அவருக்கு புண்ணிய க்ஷேத்ரங்களுக்கு சென்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி வருவதன் புண்ணியங்களை பற்றி விரிவாக சொல்கிறார்.

புலஸ்திய ரிஷி, புஷ்கரத்தை பற்றி சொல்லும் போது,
"புஷ்கரையில் குளித்தால் மறுபிறவி என்ற கடமையில் இருந்து விடுபடுவார்கள். 
குறிப்பாக கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில் புஷ்கரைக்குச் செல்பவன், நித்தியமான பிரம்மனின் வசிப்பிடத்தை அடைவான்.


ஓ மன்னா {பீஷ்மா}, மதுவைக் கொன்றவனே {மதுசூதனனே} "தேவர்களில் முதன்மையானவன்" என்பது போல, 
புஷ்கரையும் அனைத்துத் தீர்த்தங்களிலும் முதன்மையானது. 

நூறு வருடங்கள் அக்னி ஹோத்திரம் செய்தவனின் தகுதியை, கார்த்திகை மாதம் முழுதும் புஷ்கரையில் தங்கியவன் பெறுகிறான்."
என்று தீர்த்த யாத்திரையின் பலன்களை பீஷ்மருக்கு சொன்னார்.

புலஹர், புலஸ்திய ரிஷியின் பரம்பரையில் வந்த அனைவரும் பாக்கியவான்கள்.

"தேவர்களை, ரிஷிகளை, மக்களை ஸ்ருஷ்டி செய்யும் மகா சக்தி கொண்ட, ரிஷிகள் மூலமாக வந்தவர்கள் நாம்"
என்ற பெருமை நமக்கு வேண்டும்.

"அறிவு இல்லாத, முட்டாள் ஆதாம் ஏவாள் வழியில் வந்த முட்டாள்கள் நாங்கள்" என்று சொல்லிக்கொள்வதை விட ஒரு மனிதனுக்கு அவமானம் வேறு இருக்க முடியுமா..?

நம் ரிஷி பரம்பரையை தெரிந்து கொள்வோம்.
ரிஷிகளின் பெருமையை அறிவோம்.

இவர்களை போல, மேலும் பல ரிஷிகள், சாதுக்கள், மகாத்மாக்கள் இந்த பரம்பரையில் தோன்றி உள்ளனர்.

புலஸ்திய, புலஹ ரிஷிகளின் பெயர்களை ஸ்மரித்து கொண்டே,
'நான் இந்த ரிஷிகளின் கோத்திரத்தில் (வம்சத்தை) பிறந்தவன்'
என்று அபிவாதயே (self intro) சொல்வது ஹிந்துக்களுக்கு வழக்கம்.

இன்று பிராம்மண சமுதாயம் மட்டுமே, தான் எந்த ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் என்று தன்  அடையாளத்தை ஞாபகத்தில் வைத்து இருக்கிறார்கள்.

மற்ற சமுதாய மக்களும், ரிஷி பரம்பரையில் இருந்து வந்தவர்கள் தான்.

ஹிந்துக்கள் அனைவரும் தன் ரிஷி பரம்பரையை அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் எந்த ரிஷியின் பரம்பரையில் இருந்து வந்தோம்?
என்று தெரிந்து கொள்வது மிக அவசியம். கௌரவமும் கூட.


அந்த ரிஷிகளை பற்றி நன்கு தெரிந்து இருக்கவும் வேண்டும்.



Friday 18 January 2019

ஸ்ரீவத்ஸ கோத்திரம் என்று எதனால் பெயர் ஏற்பட்டது? ஹிந்துக்கள் அனைவரும், தன் ரிஷி பரம்பரையை அறிந்து கொள்ள வேண்டும். சிந்திக்க வேண்டும்

ப்ருகு ரிஷியின் பரம்பரையில் வந்த முக்கியமான மேலும் 4 ரிஷிகளின் பெயர்:
  • ம்ருகண்டு
  • மார்க்கண்டேயர்
  • ஹேம ரிஷி
  • சௌனகர்
  • ச்யாவன
  • ஆப்னவான
  • ஔர்வ
  • ஜாமதக்ன்ய



இவர்களை போல, மேலும் பல ரிஷிகள், சாதுக்கள், மகாத்மாக்கள் இந்த பரம்பரையில் தோன்றி உள்ளனர்.

ப்ருகு ரிஷியை, "பார்கவ" ரிஷி என்றும் அழைப்பது உண்டு.
இந்த ரிஷிகளின் பெயர்களை ஸ்மரித்து கொண்டே,
'நான் இந்த ரிஷிகளின் கோத்திரத்தில் (வம்சத்தை) பிறந்தவன்'
என்று அபிவாதயே (self intro) சொல்வது ஹிந்துக்களுக்கு வழக்கம்.
இன்று பிராம்மண சமுதாயம் மட்டும், ரிஷிகளின் வம்சத்தை சொல்லி கடைபிடிக்கிறது.
மற்ற சமுதாய மக்களும் ரிஷி பரம்பரையில் இருந்து வந்தவர்கள் தான்.

ஹிந்துக்கள் அனைவரும், தன் ரிஷி பரம்பரையை அறிந்து கொள்ள வேண்டும்.
தெரிந்து கொள்வது மிகஅவசியம். கௌரவமும் கூட.
அந்த ரிஷிகளை பற்றி நன்கு தெரிந்து இருக்கவும் வேண்டும்.
ப்ருகுவின் பரம்பரையில் வந்தவர் 'ச்யவனர்' என்ற ரிஷி.
இவர் ஸித்த மருத்துவ முறைப்படி நமக்கு தயாரித்து தந்தது தான், நாம் இன்று கடையில் வாங்கி வாங்கி விழுங்கும் ஸ்யவன்ப்ராஸ் (Chyawanprash) என்ற லேகியம்.

இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரும், ஆரோக்கியம் என்று விழுங்கும் நாம்,
அதே ரிஷி தாரக மந்திரமான "ராம நாமத்தை" எப்பொழுதும் சொல்பவனுக்கு மோக்ஷம் நிச்சயம் என்ற வழியையும் சொன்னார் என்பதை மறக்க கூடாது.
ஸ்யவன்ப்ராஸ் (Cyavanprash) உடம்புக்கு நல்லது என்று விழுங்கும் நாம்,
ஆத்மாவின் ஆரோக்கியத்துக்கு "ராம" நாமத்தையும் சொல்ல வேண்டாமா?
கொஞ்சம் ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும்.


ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் மூலம் தோன்றிய பரம்பரை என்பதால், இந்த பரம்பரையில் உள்ளவர்கள், "பார்கவ கோத்திரத்தை" (வம்சத்தை) சேர்ந்தவர்கள் என்று அறியலாம்.
ஆடையில்லாது, அறிவில்லாது திரிந்த "ஆதாம் ஏவாள்" வழியில் வந்த 'மடையர்கள்' என்று சொல்லிக்கொள்வதில்லை வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள்.
இப்படி சொல்லிக்கொள்வதை விட அவமானம் ஏதாவது உண்டா?

ஞானத்திலும், தவத்திலும், தெய்வீகத்திலும், ஸித்த மருத்துவத்திலும் தேர்ந்த,  ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் என்று வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொள்கின்றனர்.
அறிவாளியாக இருந்த ரிஷிகள் என் முப்பாட்டன் இல்லை, முட்டாள் "ஆதாம், ஏவாள்" தான் என்று என் முப்பாட்டன் என்று சொல்வதே, மதம் மாறுபவனுக்கு அவமானமல்லவா !!.

ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள் "பார்கவ கோத்திரம்" என்று சொல்லாமல், "ஸ்ரீவத்ஸ கோத்திரம்" என்று சொல்லி கொள்ள ப்ரியப்படுவதை நாம் கவனிக்கலாம்.




பார்கவ கோத்திரத்துக்கு, ஸ்ரீவத்ஸ கோத்திரம் என்று எதனால் பெயர் ஏற்பட்டது?
இதற்கு காரணம் உண்டு...
'ஸ்ரீ' என்ற சொல், மஹாலக்ஷ்மியை குறிக்கும்.
'வத்ஸ' என்ற சொல், குழந்தையை குறிக்கும்.
ஸ்ரீமந் நாராயணனுக்கு எப்படி பிறப்பு இல்லையோ,
அது போல,
மஹாலட்சுமிக்கும் பிறப்பு இல்லை.
எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறாள் மஹாலட்சுமி.



எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே, ஒரு சமயம்
தசரதனுக்கு பிள்ளையாகவும்,
கஷ்யபரின் பிள்ளையாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.
அது போல,
மஹாலட்சுமியே,
ஒரு சமயம்,
ப்ருகு ரிஷிக்கு பெண்ணாக அவதாரம் செய்து இருக்கிறாள்.
பாற்கடலில் இருந்து தோன்றியும் இருக்கிறாள்.

ஸ்ரீமந் நாராயணனும், மஹாலட்சுமியும், ஆதிசேஷனும் நித்யமாக எப்பொழுதும் வைகுண்டத்தில் இருந்து கொண்டே இருக்கின்றனர்.
லீலையின் காரணமாக, பாற்கடலில், பூலோகத்தில் என்று பல்வேறு லோகங்களில் அவதாரம் செய்கின்றனர். சுதந்திரமானவர்கள், யாருக்கும் அடிமைப்பட்டவர்கள் அல்ல.

ப்ருகு ரிஷியின் பெண்ணாக மஹாலட்சுமி பிறந்ததால், மஹாலட்சுமிக்கு "பார்கவி" என்றும் பெயர் உண்டானது.

யாருக்கு மஹாலக்ஷ்மி (ஸ்ரீ) குழந்தையோ (வத்ஸ), அவரே ஸ்ரீவத்ஸன் என்பதால், ப்ருகு ரிஷிக்கு "ஸ்ரீவத்ஸன்" என்று பெயர் ஏற்பட்டது.

இதன் காரணமாக, "பார்கவ (ப்ருகு) வம்சத்தில் வந்தவர்கள் நாங்கள்" என்று சொல்வதை விட,
"எங்கள் வம்சத்தில் மகாலக்ஷ்மியே குழந்தையாக அவதரித்தாள்" என்று சொல்லி பெருமைப்படும் விதமாக, ப்ருகுவுக்கும் "ஸ்ரீவத்ஸன்" என்று பெயர் ஏற்பட்டதால், "ஸ்ரீ வத்ஸ" கோத்திரம் என்று சொல்வது வழக்கத்தில் உள்ளது.

பொதுவாக,
மஹாலக்ஷ்மியே ப்ருகுவுக்கு மகளாக அவதரித்ததால், மஹாலக்ஷ்மியிடம் வாத்ஸல்ய (தன் குழந்தை) பக்தி இந்த கோத்திரத்தில் வந்த ரிஷிகளுக்கு எப்பொழுதுமே உண்டு.

ப்ருகு ரிஷி, 
யார் சாத்வீக தெய்வம்? என்று தெய்வத்தையே பரீக்ஷை செய்ய ஒரு சமயம் எண்ணினார்.
ப்ரம்மா, ருத்திரன், தேவர்கள் என்று யாருமே சாத்வீக தெய்வம் இல்லை என்று உணர்ந்து, யோக நித்திரையில் இருந்த மகா விஷ்ணுவின் மார்பை காலால் உதைக்க,
இவரின் நோக்கம் அறிந்த எம்பெருமான், கோபத்தை துளியும் காட்டாமல், வரவேற்று உபசரிக்க, நாராயணனே "சாத்வீக தெய்வம்" என்று விஷ்ணு பக்தனானார் ப்ருகு.
ப்ருகுவின் கால் பட்டதால் எம்பெருமாள் மார்பில் மரு ஏற்பட்டது.
பித்ரு (அப்பாவின்) சம்பந்தம் ஏற்பட்ட தன் மார்பில், மகாலட்சுமிக்கு இடம் கொடுத்தார் பெருமாள்.


மகாலட்சுமியை பெற்றதால், ப்ருகுவுக்கு 'ஸ்ரீவத்ஸன்' என்று பெயர் ஏற்பட்டது போல,
ப்ருகு ரிஷியால் தன் மார்பில் ஏற்பட்ட மருவுக்கும் "ஸ்ரீவத்ஸ" என்று பெயர் ஏற்படுமாறு செய்தார் எம்பெருமான்.

வடக்கில் பெருமாளின் மார்பில் இருக்கும் இந்த மருவுக்கு "ப்ருகு சின்னம்" என்று இன்றும் சில கோவில்களில் சொல்கின்றனர்.

பொதுவாக ஸ்ரீவத்ஸம் என்று சொல்வதே உசிதமானது.
மஹாலக்ஷ்மி ஸ்ரீவத்ஸம் உள்ள எம்பெருமான மார்பில் வாசம் செய்கிறாள் என்று சொல்வதே பொருத்தமும், அழகும் கூட.

கோவிலில் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதை நாம் பார்த்து இருப்போம்.

சாதாரணமாக நமக்கு திருமணம் நடந்தால், "இந்த கோத்திரத்தில் (வம்சம்) பிறந்த மணப்பெண்ணை, இந்த கோத்திரத்தில் பிறந்த மணமகனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன்" என்று சொல்லி, கன்னிகாதானம் செய்து கொடுப்பது வழக்கம்.

பிறப்பே இல்லாத பெருமாளுக்கும், பிராட்டிக்கும் எந்த வம்சத்தை சொல்லி திருக்கல்யாணம் செய்வது?
அதற்கான பதிலை, வைகானஸ ரிஷி நிர்ணயம் செய்ய, வெங்கடேச எம்பெருமானே அதை அங்கீகரித்தார்.

வைகானஸ முறைப்படி,  திருகல்யாண உத்ஸவம் செய்யும் போது,
தான் கஷ்யபருக்கு புத்திரனாக வாமன அவதாரம் செய்ததால், தன்னை காஷ்யப கோத்திரத்தை சேர்ந்தவன் என்றும்,

மஹாலக்ஷ்மி ப்ருகுவுக்கு புத்ரியாக அவதாரம் செய்ததால், பார்கவ கோத்திரத்தை சேர்ந்தவள் என்றும் சொல்லலாம் என்று அங்கீகரித்தார் பெருமாள்.
எந்த கோவிலாக இருந்தாலும்,
பெருமாள் "காஷ்யப" கோத்திரம் என்றும்,
பிராட்டி "பார்கவ/ஸ்ரீவத்ஸ" கோத்திரம் என்றும் சொல்லி,
திருக்கல்யாண உத்சவங்கள் இன்று வரை நடந்து வருகிறது. 




HARE RAMA HARE KRISHNA - BHAJAN
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka