Followers

Search Here...

Showing posts with label உத்தராயணம். Show all posts
Showing posts with label உத்தராயணம். Show all posts

Tuesday 21 March 2017

உத்தராயணம் தஷிணாயனம் - 12 மாதங்கள் பற்றிய விளக்கம். தெரிந்து கொள்வோமே !






மகா பாரத போரில், பீஷ்மர் வீழ்ந்தார்.
மகா பாரத போர் நடந்த சமயம் "தஷிணாயன" காலம்.
தான் விரும்பிய பொழுது சாகும் வரத்தை பெற்றவர் பீஷ்மர்.
"உத்தராயண" காலம் வரும் வரை, அம்பு படுக்கையில், யுத்த களத்திலேயே உயிரை விடாமல் யோகத்தில் இருந்தார்.
நம் பூமியில் ஒரு வருடம் என்பது, சொர்க்கலோகத்தில் இருக்கும் தேவர்களுக்கு "ஒரு நாள்".

இது அனைவருக்கும் தெரிந்ததே.
இதுவரை தெரியாது என்றால், இப்பொழுது தெரிந்திருக்கும்.

பாரத் தேசத்தின் காலப்படி, தேவர்களின் கால நேரம் எப்படி உள்ளது? ஒரு அலசல்.

உத்தராயணம் :

  • தை (சொர்க்கலோகத்தில் 6AM-8AM), 
  • மாசி (சொர்க்கலோகத்தில் 8AM-10AM), 
  • பங்குனி (சொர்க்கலோகத்தில் 10AM-12 Noon), 
  • சித்திரை (சொர்க்கலோகத்தில் 12 Noon-2PM), 
  • வைகாசி (சொர்க்கலோகத்தில் 2PM-4PM), 
  • ஆனி (சொர்க்கலோகத்தில் 4PM-6PM), 

ஆகிய ஆறு மாதங்களும் "உத்தராயண" காலமாகும்.

தேவர்களுடைய ஒரு பகல் பொழுது "உத்தராயண" காலமாகும்.

உத்தராயண காலத்தில் தை மாதத்தில் நாம் பொங்கல் வைத்து சூரியனை வணங்குவது இப்பொழுது ஏன்?
என்று இப்போது புரிந்திருக்கும்.

தேவர்களுக்கு இந்த 6 மாதங்கள், சொர்க்கத்தில் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை போல என்று எடுத்துக்கொள்ளலாம்.

சித்திரை வெயில் கொளுத்துவது ஏன்?
என்று கேள்விக்கும் இதை வைத்து அனுமானிக்கலாம்.
தேவ லோகத்தில், நடு பகல் 12 மணியில் ஆரம்பிக்கிறது சித்திரை மாதம்.

பூமிக்கு மேலே உள்ள சொர்க்கத்தில் தேவர்களும்,
அவர்களுக்கும் மேல் உள்ள மஹ, ஜன, தப லோகத்தில் உள்ள ரிஷிகளும்,
அதற்கும் மேல் உள்ள சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்மாவும் 
"உத்தராயண" காலத்தில் விழித்து இருப்பார்கள்.

இதன் காரணமாக, பீஷ்மர் "உத்தராயண" காலம் வரும் வரை காத்திருந்து, ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து "விஷ்ணு சஹஸ்ரநாமம்" முதன் முதலில் சொல்லி, பின் தன் உடலை குருக்ஷேத்ர மண்ணில் விட்டு விண்ணுலகம் சென்றார்.

தை மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் "மகா நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
"தை மாதம்" தேவர்களுக்கு, சொர்க்கலோகத்தில் 6AM to 8AM என்று அனுமானிக்கலாம்.

மாசி மாதக் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதி அன்று, அமாவாசைக்கு முந்திய நாள் "சிவராத்திரி" உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.
மாசி மாதம் தேவர்களுக்கு 8AM to 10AM என்று அனுமானிக்கலாம்.

பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் "வசந்த நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாதம் தேவர்களுக்கு 10AM to 12PM என்று அனுமானிக்கலாம்.
பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - மகா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமனின் பிறந்த நாள்.
இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் "ஸ்ரீ ராம நவமி" என்று பூமியில் கொண்டாடுகின்றோம்.
பங்குனி மாதம் தேவர்களுக்கு 10AM to 12PM என்று அனுமானிக்கலாம்.

ஆனி மாத அமாவாசைக்குப் பின்னர் வரும் ஒன்பது நாட்கள் "ஆஷாட நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
ஆனி மாதம் தேவர்களுக்கு 4PM to 6PM என்று அனுமானிக்கலாம்.


தஷிணாயனம் :

  • ஆடி (சொர்க்கலோகத்தில் 6PM-8PM தேவர்கள் வழிபடும் காலம்), 
  • ஆவணி (சொர்க்கலோகத்தில் 8PM-10PM), 
  • புரட்டாசி (சொர்க்கலோகத்தில் 10PM-12AM),
  • ஐப்பசி (சொர்க்கலோகத்தில் 12AM-2AM),
  • கார்த்திகை (சொர்க்கலோகத்தில் 2AM-4AM),
  • மார்கழி (சொர்க்கலோகத்தில் 4AM-6AM தேவர்கள் வழிபடும் காலம்), 
ஆகிய ஆறு மாதங்களும் "தஷிணாயனம்" காலமாகும்.
இந்தக் காலம் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது.

தேவர்களுக்கு இது இரவு பொழுது என்பதால், அவர்களுக்கு மேல் உள்ள துர்க்கை, சிவ, விநாயகர் போன்ற தெய்வங்களை வணங்கி நம்மை காத்துக்கொள்ள வேண்டிய காலம் இது.

அனைத்து தெய்வங்களுக்கும் மேல், முழு முதற் கடவுளான பெருமாளை வணங்குவது நம்மை காத்துக் கொள்ள சரியான வழி.

பொதுவாக,
மனிதர்கள் இறை வழிபாடு செய்ய வேண்டிய காலம் இது.

தேவர்களுக்கு இந்த 6 மாதங்கள், மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை போல என்று எடுத்துக்கொள்ளலாம்.

தேவர்களுடைய காலப்படி, மாலை 6 மணி முதல் 8 மணி வரை, தேவர்கள் தன்னை படைத்த நாராயணனை வழிபடுகின்றனர்.
இதே சமயத்தில், பூமியில் ஆடி மாதத்தில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல், மனிதர்களும் இதே சமயத்தில் தேவர்களோடு, சிவ விஷ்ணு வழிபாடு செய்கின்றனர்.

இதே போல,
தேவர்களுடைய காலப்படி,
விடி காலை 4 மணி முதல் 6 மணி வரை, தேவர்கள் தன்னை படைத்த நாராயணனை வழிபடுகின்றனர்.
தேவர்களுக்கு இது ப்ரம்ம முகூர்த்தம். தியானமும், விரதமும், தெய்வ வழிபாடும் செய்ய ஏற்ற காலம்.
இதே சமயத்தில்,
பூமியில் மார்கழி மாதத்தில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல், மனிதர்களும் இந்த மாதத்தில் தெய்வங்களை வழிபடுகின்றனர். பெருமாளுக்கு உகந்த மாதம் "மார்கழி".

ஆவணி மாத அமாவாசைக்குப் பின் நான்காவது நாள் வரும் சுக்ல பட்ச சதுர்த்தி நாடெங்கும் "விநாயக சதுர்த்தி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானின் செல்ல குழந்தை விநாயகரை மனிதர்கள் வழிபடுகின்றனர்.
ஆவணி மாதம் தேவர்களுக்கு 8PM to 10PM என்று அனுமானிக்கலாம்.
ஸ்ரீ மகாவிஷ்ணு, ஆவணி மாதம், ரோஹிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில், ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்தார்.
இந்நாள் "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேவர்களுக்கு 8PM to 10PM என்று அனுமானிக்கலாம்.

மகாவிஷ்ணு, ஆவணி திருவோணத்தில் ஸ்ரீ வாமனராக அவதாரம் எடுத்து மகாபலி என்ற அரக்க அரசனின் ஆணவத்தை அடக்கிய நாளே " ஓணம் " பண்டிகை ஆகும்.
ஆவணி மாதம் தேவர்களுக்கு 8PM to 10PM என்று அனுமானிக்கலாம்.

புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்வரும் ஒன்பது நாட்கள் "சாரதா நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதம் தேவர்களுக்கு 10PM to 12AM என்று அனுமானிக்கலாம்.

புரட்டாசி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறையில் தொடங்கிப் பத்து நாட்கள் "துர்கா பூஜை" பூமியில் கொண்டாடப்படுகின்றது.
புரட்டாசி மாதம் தேவர்களுக்கு 10PM to 12AM என்று அனுமானிக்கலாம்.

காரணம் இல்லாமல் எந்த ஒரு பண்டிகையும், எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விதிக்காதது நம் தர்மம்.

இந்த ஸனாதன மதத்தில் இன்னும் என்ன என்ன ஆச்சர்யங்கள் உண்டோ !! என்று எண்ணத்தோன்றுகிறது.

மனிதனுடைய காலத்தை மட்டுமில்லாது,
  • தேவர்கள் காலம் என்ன? 
  • பிரம்மாவின் இன்றைய வயது என்ன? 
  • இன்னும் எத்தனை காலம் உள்ளது? 
என்று  பதில் சொல்லிக்கொண்டே பறந்து விரிந்து செல்கிறது நம் தர்மம்.


5000 வருடத்திற்கு முன்,
  • மனிதர்கள் காட்டு மிராண்டிகளாக இருந்தனர் என்று உளறி, 
  • 2012ல் உலகம் அழியும், 
  • இதோ வந்து விட்டார், அதோ பாருங்கள் 
என்று ஊரை ஏமாற்றாமல்,
  • பிறவிக்கு என்ன காரணம்?
  • துன்பத்திற்கு என்ன காரணம்?
  • உலகத்தின் வயது என்ன?
  • உலகம் என்ன ஆகும்?
என்று அடுக்கிக் கொண்டே போகும் கேள்விகள் அனைத்துக்கும் நம் சனாதன தர்மம் பதில் சொல்கிறது.

சரியான கேள்வியை, சரியான பெரியோர்களிடம் கேட்டாலே, சனாதன தர்மத்தின் மகத்துவம் புரியும்.

நாம் இந்த தர்மம் உள்ள குடும்பத்தில் பிறந்து இருக்கிறோமே என்று நம்மையே பார்த்து மெச்சிக் கொள்ள தோன்றும்.

சோமாலியாவிலோ, சீனாவிலோ, அமெரிக்காவிலோ இந்த சனாதன தர்மம் தெரியாத குடும்பத்தில் பிறந்து இருந்தால்...
  • நம் மூதாதையர்கள் மடையர்கள் எனவும், ஆடை அணியாது அலைந்த ஆதாம் ஏவாள் என்றும்,
  • மறு பிறவி இல்லை அதனால் எதுவும் செய்யலாம் என்றும்,
  • பிறப்பிலேயே ஏழையாக, குறையோடு பிறந்ததற்கு கடவுளை காரணம் காட்டியும்,
  • தினமும் தின்றோம், தூங்கினோம், ஏதோ ஒரு கடவுள் இருக்கிறார் என்று நம்பி, கடைசியில் செத்தோம்
என்று வாழ்க்கை வீணாகியிருக்கும்.

நல்ல வேளையாக, நாம் முன் ஜென்மங்களில் செய்த பல நல்ல காரியங்களால்...
  • மனித பிறவியும் கிடைத்து,
  • இந்தியாவில் பிறக்கவும் செய்து,
  • ஹிந்துவாகவும் பிறக்க செய்து, 
  • அறிவும் கொடுத்து,
  • கேள்விகள் எழ செய்து, அதற்கு சரியான பெரியோர்களையும் காட்டி தெளிவு படுத்தி,
இன்னும் நம்மை உயர்த்தி கொண்டே போக, ஹிந்துவாக பிறந்தோம்.

சனாதன தர்மம் என்றும் நிலைத்து இருக்கும்.

ஹிந்துவாய் பிறந்ததே பல கோடி புண்ணியத்தின் பலன் என்று நமக்கு புரிந்து விடும்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka