Followers

Search Here...

Showing posts with label பிறந்த. Show all posts
Showing posts with label பிறந்த. Show all posts

Wednesday 27 December 2017

மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே.. சீதை பிறந்த ஊர் அல்லவா

மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal எப்படி இருந்தது?




"விராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம்" 
ஆகிய தேசங்கள், இன்று "நேபால்" என்று அழைக்கப்படுகிறது.

ராமாயண காலத்தில், 
மிதிலை நகரில், சீதை அவதரித்தாள். 
"ஜனக மன்னர்" ஆட்சி புரிந்தார்.
மஹாபாரத சமயத்தில்,
"விராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம்" 
பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர்.
"துருபதனை" படைதலைவனாக தொடர்ந்து இவர்கள் படையை செலுத்தினர்.

"மல்ல தேசம்" கங்கை நதி ஓரம் அமையப்பட்ட ஒரு நகரம். 
இது விராட தேசத்துக்கு, விதேஹ தேசத்துக்கு நடுவே இருந்தது.

பாண்டவர்கள் 13 வருட வனவாசத்தில், கடைசி 1 வருடம் அஃயாத வாசம் விராட தேசத்தில் இருந்தனர்.



"யுதிஷ்டிரர்" விராட ராஜாவுக்கு உதவியாளனாக, 
"பீமன்" சமையல்காரனாக, 
"அர்ஜுனன்" நர்த்தனம் சொல்லிக்கொடுக்கும் பேடியாக, 
"திரௌபதி" விராட ராணிக்கு 'மாலினி' என்ற பெயரில் வேலைக்காரியாகவும், 
"நகுலன் மற்றும் சகாதேவன்" குதிரை லாயத்தை பார்க்கும் பணியிலும் 
மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.


விராட அரசனின் தளபதி "கீசகன்", திரௌபதியிடம் தவறாக நெருங்க எண்ணினான். 
இதனை திரௌபதி பீமனிடம் சொல்ல,
கீசகன் தலையை ஓங்கி அடித்து, அவன் தலையை வயிற்றுக்குள் தள்ளி, 
ஒரு பந்து போல ஆக்கி கொன்று விட்டான்.

விராட தேச படை தலைவன் கீசகன், த்ரிகர்த தேச (பஞ்சாப்) அரசன் "சுசர்மனை" பலமுறை தோற்கடித்து இருக்கிறான்.

கீசகன் கொடூரமாக இறந்ததை கேள்விப்பட்டு, சந்தேகம் கொண்டான் த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்".

இப்படி ஒரு பலம், பீமன் போன்றவர்களுக்கு தான் உண்டு, என்று உணர்ந்த சுசர்மன், துரியோதனனை உடனே விராட தேசத்தை நோக்கி படை எடுக்குமாறு கூறினான்.




குரு தேச "இளவரசன் துரியோதனன்", "கர்ணன்", த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்" அனைவரும் விராட தேசத்தை முற்றுகை இட்டனர்.

விராட அரசன், தன் மகன் "உத்தர" குமாரனை தலைமை ஏற்று, துரியோதனின் படையை எதிர்க்க சொன்னார். 

பயந்து போன உத்தர குமாரன், செய்வதறியாது திகைத்தான். 
'அர்ஜுனன்' சமாதானம் செய்து, தான் துணை வருவதாக தைரியம் சொல்லி, போருக்கு தயாரானான்.
விராட தேச படையுடன், அர்ஜுனன் ஒருவனாக சென்று அனைவரையும் தோற்கடித்தான்.

ஒரு வருடம் தங்கி இருந்தது பாண்டவர்கள் என்று அறிந்து பயந்தான் விராட அரசன்.
தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.
யுதிஷ்டிரர் நட்பு கரம் நீட்டினார். 
விராட அரசன் தன் மகள் 'உத்தரா'வை அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு மணம் செய்து வைத்தார்.

விராட தேச (Nepal) படைகள், பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

மஹா பாரத போரில், முதல் நாள் போரில், 
விராட அரசன் புதல்வன் "உத்தர" குமாரன் வீரமாக போரிட்டான்.
மாத்ர தேச (Pakistan) அரசர் "சல்யனால்" அதே நாளில் கொல்லப்பட்டான்.



உயிரை பற்றி கவலைப்படாமல் "உத்தர" குமாரன் வீரமாக போரிட்ட வீரத்திற்கு தலை வணங்கினார்சல்லியன்.

உத்தர குமாரன் இறந்ததை கண்டு ஆத்திரத்துடன் சல்லியனை நோக்கி பாய்ந்தான், அவன் சகோதரன் "ஸ்வேத" குமாரன். 
இதனை கண்ட பீஷ்மர், "ஸ்வேத" குமாரனை போருக்கு அழைத்தார். பீஷ்மருடன் போர் செய்து வீர மரணம் எய்தான்..

முதல் நாள் போரிலேயே இத்தனை உயிர் இழப்பு, யுதிஷ்டிரரை கலங்க செய்தது.
"வெற்றி துரியோதனன் பக்கம் நிச்சயம்" என்று சொல்ல ஆரம்பித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணர் தைரியம் ஊட்டி, மனம் தளரவிடாமல் தைரியம் சொன்னார்.

விராட அரசனை, 15ஆம் நாள் போரில் "துரோணர்" கொன்றார்.

பாண்டவர்கள் பக்கம் நின்று போர் செய்த அரசர்கள், பாண்டவர்கள் வெற்றிக்கு துணை நினறனர்.  பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். தர்மத்தை நிலை நிறுத்தினர்.

உலக க்ஷத்ரியர்கள் அனைவரும் பாண்டவர் பக்கமும், துரியோதனன் பக்கமும் நின்று போரிட்டு உயிரை விட்டனர்.


யுதிஷ்டிரர் உலகத்துக்கே சக்ரவர்த்தியானார்.


மஹாபாரத போர் முடிந்து, 
3000 வருடங்களுக்கு பிறகு "சித்தார்த்தன்" என்ற பெயரில் நேபாள தேசத்தின் இளவரசனாக"கௌதம புத்தர்", லும்பினி (Lumbini) என்ற நகரில் நேபாள தேசத்தில் பிறந்தார்.
மகத தேசத்தில் (பீஹார் (bihar)) உள்ள "போத் கயா" என்ற ஊரில், புத்தர் ஞானம் அடைந்தார் என்று அவரின் சரித்திரம் சொல்கிறது.