Followers

Search Here...

Showing posts with label பாரத மக்கள். Show all posts
Showing posts with label பாரத மக்கள். Show all posts

Tuesday 13 February 2018

பாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்? நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...

120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்?
இந்த கேள்வி இந்தியர்களை பார்த்து பொதுவாக வெளிநாட்டவர்களுக்கு ஏற்படுகிறது.


இந்தியாவில் 120 கோடிக்கு மேல் மக்கள் உள்ளனர்.
இதில் மூன்றில் ஒரு பங்கு ஜனங்களே உள்ள நாடு அமெரிக்கா.
இந்தியாவை போன்று ஜனத்தொகை உள்ள நாடு சீனா.
ஆனால், இந்தியாவை விட, நிலப்பரப்பு பல மடங்கு பெரியது.
நில பரப்பில் பாரத தேசத்தை விட பல மடங்கு பெரியது அமெரிக்கா.
கடுமையான சட்டங்கள் உள்ள நாடுகள் இவை எல்லாம்.
சாலை விதிகளை மீறினால் தண்டனை உண்டு இந்த நாடுகளில்.
இஸ்லாமிய நாடுகளில், வேறு மத சின்னங்கள் வைத்து கொண்டாலோ, கொண்டாடினாலோ கூட கடுமையான தண்டனை உண்டு. 
"திருட்டு" போன்ற செயல்களுக்கு தலை துண்டிக்கும் அளவுக்கு கடுமையான சட்டங்கள் பல தேசங்களில் இருக்கிறது.

சட்டம் ஒழுங்கு கடுமையாக இருக்கும் இந்த தேசங்களில், தனி மனிதர்கள் துப்பாக்கி வாங்கி, பாதுகாப்புக்கு வைத்து கொள்கின்றனர். என்ன விசித்திரம்?
தனி மனித பாதுகாப்புக்கு, அச்சம் பொதுவாக காணப்படுகிறது.

இந்த அச்சம், இவர்களிடம் ஒருவன் சிரித்தாலும் சந்தேகப்பட வைக்கிறது.

சிறு உதவி செய்தாலும், THANK YOU  சொல்லும் பழக்கமும்,
சிறிய தவறு செய்தாலும், SORRY சொல்லும் பழக்கமும் இவர்களுக்கு பாதுகாப்பு இன்மையால் வந்த பழக்கங்கள்.
தானாக வந்த நல்ல பழக்கங்கள் இல்லை.
கட்டாயத்தால் உயிர் பயத்தால் வந்தவைகள் இவை.

இந்தியாவை தவிர பொதுவாக மற்ற நாடுகள், கடுமையான சட்டத்தை கொண்டு தான் மக்களை வழி நடத்துகிறது.

நல்ல விஷயங்கள் யாவும் சட்டத்தாலும், பயத்தாலும் தான் இந்த நாடுகளில் நடக்கிறது.

இந்தியாவில் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் கடுமையான சட்டங்கள் இல்லை.
கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று சொல்பவர்கள் தான் இங்கு உண்டு. 
சட்டம் கொடுமையாக உள்ளது என்று புலம்புவோர் இங்கு இல்லை.
கடுமையான சில சட்டம் இருந்தாலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்தியாவில் தனி மனித ஒழுக்கம் மகான்களாலும், ரிஷிகளாலும், சாஸ்திரங்களாலும் புகட்டப்பட்டு, அது மக்கள் மனதில் ஆழ்ந்து ஊறி போய்  உள்ளது. 
பெரும்பாலும் ஹிந்துக்கள் சாத்வீக வாழ்க்கை வாழ்கின்றனர்.

சட்டங்கள் கடுமையாக இல்லாமல் போனாலும்,
அமெரிக்கா போன்ற பெரிய நிலப்பரப்பு இல்லாமல் இருந்தாலும்,
கொஞ்சம் நிலப்பரப்பில் 120 கோடி மக்களை தாங்கி கொண்டு,
120 கோடி மக்களும் கையில் துப்பாக்கி தூக்கி கொண்டு, உயிர் பயத்தால் அலையாமல், நிம்மதியாக வாழ்கின்றனர்.

இது எப்படி இந்தியாவில் சாத்தியமாகிறது? என்பதே நம் பாரத நாட்டிற்கு வரும் வெளி நாட்டவர்கள் கேள்வி.
நம்மிடம் உள்ள "நிம்மதியை" பார்த்து திகைக்கின்றனர்.


ஹிந்துவுக்கும், மற்ற தேசத்தில் உள்ள பிற மதத்தை சேர்ந்தவனுக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு சின்ன உதாரணம் :

ஒரு பள்ளியில், ஆசிரியனாக ஒருவன் வேலை பார்த்து வந்தான்.
அவன் ஹிந்து அல்லாத வெளிநாட்டவன்.
தன் வகுப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட சிறுவனை பார்த்தாலே என்ன காரணத்தாலோ அந்த ஆசிரியனுக்கு பிடிக்கவில்லை.
அந்த மாணவனை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியனுக்கு, ஒரு அடியாவது பலமாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

அறிவு இருப்பதால், ஆசிரியன் யோசித்தான்.
"நான் ஒரு வேளை இந்த பையனை ஓங்கி அடித்தால், இவன் திருப்பி அடிப்பானோ?
மிகவும் சிறியவன் இவன். திருப்பி அடிக்க வாய்ப்பே இல்லை.

தைரியமாக அடிக்கலாம் என்று நினைத்தால், இவன் தன் அப்பாவை கூட்டி கொண்டு வந்து விட்டால்?
இவனின் தந்தை என்னை வெளுத்து விடுவாரே !!

இவன் அப்பனை சமாளித்து விடலாம் என்று நினைத்தாலும், இவன் போலீசுக்கு சென்று விட்டால், போலீஸ் அடியும் விழும், ஜெயிலும் கிடைக்குமே??
ஐயோ வேண்டவே வேண்டாம்..  
சமயம் கிடைக்கும் வரை பொறுமையாக இருப்போம்"
என்று நினைத்து தன் கோபத்தை அடக்கி கொண்டான்.

இப்படி "சட்டத்திற்கு பயந்து, சமுதாயத்துக்கு பயப்படுகின்றனர்" வேறு மதத்தை சேர்ந்த வெளிநாட்டினர்.
பள்ளியில் ஒரு ஹிந்து ஆசிரியனாக வேலை பார்த்து வந்தான்.
அந்த ஆசிரியனுக்கும் தன் வகுப்பில் உள்ள ஒரு சிறுவனை பார்த்தாலே என்ன காரணத்தாலோ பிடிக்கவில்லை.

அந்த மாணவனை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியனுக்கு, ஒரு அடியாவது பலமாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

அறிவு இருப்பதால், ஹிந்து ஆசிரியன் யோசித்தான்.
"நான் ஒரு வேளை இந்த பையனை ஓங்கி அடித்தால், நான் செய்யும் பாவம் என்ற கர்மாவுக்கு, தண்டனை இந்த ஜென்மத்திலோ, அடுத்த ஜென்மத்திலோ அனுபவிக்க நேரிடுமே?

இவனுக்கு உள்ளே இருக்கும் பரமாத்மாவை அடித்த பாவம் சேருமே?

கடவுள் எங்கும் உள்ளார் என்று தெரியும் போது, இவனை காரணமே இல்லாமல் அடித்தால், நான் செய்யும் பாவத்துக்கு தண்டனை கிடைக்குமே?
அந்த பாவம் என்  பிள்ளைகளை பாதித்தால்?
அப்படியாவது இவனை அடித்து தான் நான் திருப்தி அடைய வேண்டுமா?
ஏன் நான் இரக்கப்பட கூடாது?

நான் ஏன் காரணமில்லாமல் ஜீவ ஹிம்சை செய்ய வேண்டும்?


என் மனதில் ஏற்படும் கோபத்திற்கு, நான் தானே காரணம். 
இவனை ஏன் பலிகடா ஆக்க வேண்டும்? இது என் குறை தானே?

நான் ஏன் ஒதுங்கி போக கூடாது?

ஏன் நான் முயற்சி செய்தாவது, அந்த சிறுவனிடத்தில் எங்காவது ஒட்டி இருக்கும் நல்ல விஷயத்தை பார்த்து, அவனை அடிப்பதற்கு பதில், அன்பு செய்ய முயற்சி செய்ய கூடாது?"
என்று பல கேள்விகள் மனதில் எழ, கோபத்தை விட்டு, "ஐயோ பாவம்" என்ற இரக்கம் வந்தது ஹிந்து ஆசிரியனுக்கு

இந்த சாத்வீக குணம் பொதுவாக அனைத்து பாரத மக்களிடமும் இருப்பதால் தான், பாரத மக்கள் இன்று வரை நிம்மதியாக வாழ்கின்றனர்.

ஹிந்துக்கள் சுய ஒழுக்கம், பாவ புண்ணிய ஞானத்தோடு இருப்பதால், குணத்திலேயே நல்லவர்களாக இருக்கின்றனர். 

வெளி மதத்தை சேர்ந்த வெளிநாட்டவர்கள், சட்டத்தால் மட்டுமே நல்லவர்களாக இருக்கின்றனர். தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள்.
பாதுகாப்பு இன்மை, உயிர்அச்சத்தால், வெளிநாட்டவர்கள் சொன்ன "THANK YOU", "SORRY" போன்ற வார்த்தைகள், ஹிந்துக்கள் கேட்கும் போது நல்ல பழக்கம் என்று தோன்றினாலும், அவர்களுக்கு இந்த பழக்கம் குணத்தால் வரவில்லை, பயத்தால் வந்த பழக்கமே.
மற்றவர்களை பார்த்து உயிர் பயமோ, பாதுகாப்பு இன்மையோ ஹிந்துக்களுக்கு இல்லாததால், மற்றவர்களுக்கு உள்ளும் பரமாத்மா இருக்கிறார் என்பதால், நமஸ்காரம், வணக்கம் சொல்லும் பழக்கம்  ஹிந்துக்களுக்கு இருந்ததே தவிர, "THANK YOU", "SORRY" சொல்லும் பழக்கம் நமக்கு இருந்ததே இல்லை.

120 கோடி மக்களுக்கு, சட்டம் கடுமையாக இல்லாத நிலையில், சில லட்ச போலீஸ் உண்மையில் போதுமா?
இயற்கையாகவே ஹிந்துக்களுக்கு இருக்கும் பாவ புண்ணிய அறிவாலும், ஜீவ காருண்யம் இயற்கையாக இருப்பதாலும், 120 கோடி ஹிந்துக்கள் இருந்தாலும், கடந்த 1200 வருடங்களில் புகுந்த பிற மதங்களால் மாற்றப்பட்ட ஹிந்துக்கள் உட்பட, அனைவரும் இந்த உயரிய குணத்தால் பிணைக்கப்பட்டு, தங்களை தாங்களே சட்ட ஒழுங்கு மீறாமல் பார்த்து கொள்கின்றனர்.
அவ்வப்போது ஏற்படும் மீறலுக்கு, இருக்கும் சில போலீஸ் உதவி செய்கின்றனர்.
இந்த சாத்வீக குணம் இந்த ஹிந்துக்களுக்கு எப்படி வந்தது? 
நம் பாட்டனார்களால் வந்தது.

நம் பாட்டனார்களுக்கு எப்படி வந்தது இந்த குணம்?
நம் பாரத புண்ணிய பூமியில் பிறந்த மகான்களும், ஞானிகளும், ரிஷிகளும் தந்தனர்.
இவர்களுக்கு இந்த குணம் எப்படி வந்தது?
ரிஷிகளுக்கு வேதத்தில் இருந்து வந்தது.


வேதம் எதிலிருந்து வந்தது?
வேதம் ப்ரம்மாவினால் வந்தது.
ப்ரம்மா எப்படி வந்தார்?
நாராயணனின் மூலம் வந்தார்.

நாராயணன் யார்?
நரன் (மனித) உடம்பில் புகுந்த அனைத்து ஜீவனுக்கும் அடைக்கலமாக, கதியாக இருப்பவரே நாராயணன்.
இவரே பரவாசுதேவன்.
இவரே கடவுள். இவரே பகவான்.
பாரத மக்களுக்கு இந்த குணங்கள் ஏற்பட்டதற்கு மூல காரணமாக ஸ்வயம் "நாராயணனே" இருக்கிறார்.

120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்?
பாரத மக்கள் பிடித்திருக்கும் சங்கிலியில் தலைவனாக இருக்கிறார் "பரமாத்மா".
இந்த நாராயணன், திருப்பதி, ஸ்ரீ ரங்கம் என்று ஆரம்பித்து பாரதம் முழுவதும் தன்னை வ்யாபித்துக் கொண்டு இருக்கிறார்.
ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனாகவும், பெருமாளாகவும், சிவனாகவும், முருகனாகவும், வேதத்தில் சொன்ன பல தேவதைகளின் ரூபத்திலும் பரவி, இந்த சாத்வீக குணம் நம்மை விட்டு போகாமல், இன்று வரை காத்து வருகிறார்.

இந்த கலாச்சாரத்தை அதிசயித்து காண வரும் கூட்டங்கள் அதிகம்.

அதே சமயம்,
"இந்த கலாச்சாரத்தை எப்படியாவது அழிக்க வேண்டும்" என்ற எண்ணத்துடன், போலி மதங்கள்,
போலி கொள்கைகள் கொண்டு, 
பணத்தை காட்டி ஏமாற்றி, 
மதம் மாற்ற, இந்த பாரத கலாச்சாரத்தை கலைக்க, போலி மத வியாபாரிகள் கொண்டு 2000 வருடங்களாக முயற்சிக்கின்றனர்.
இந்த போலிகளின் நோக்கம், இந்த ஆச்சர்யமான பாரத கலாச்சாரத்தை அழித்து, சுய நல மனிதர்களாக மாற்றி, மீண்டும் பிரித்து ஆளும் கொள்கை கொண்டு வந்து, இந்தியாவை பிடிப்பதே.


ஹிந்துக்கள் அனைவரும் "நாராயணனே கதி" என்று இருந்து, நம் கலாச்சாரத்தின் மகிமையை இந்த போலிகளுக்கும் சொல்லி,
போலிகளை ஹிந்துக்கள் ஆக்கி,
பாரதம் மட்டுமின்றி, உலகத்தையே பரஸ்பரம் வெறுப்பு காட்டாத சமுதாயம் ஆக்குவோம்.
ஹிந்து மதம் ஆரம்பம் இல்லாதது.
மனித சமுதாயத்தில், மனித படுகொலைகள் என்பது இந்த போலி மதங்கள் உருவான பின் தான் அதிக அளவில் நடந்தது.

இந்த போலி மதங்கள் உருவானதற்கு முன், அரசர்கள் போர் செய்தனர் என்று படித்து இருப்போம்.
ஆனால், இந்த போலி மதங்கள் உருவான பின்னர்,
உலக வரலாற்றை புரட்டினோம் என்றால், ஒரு நாட்டை கைப்பற்றி, அந்த நாட்டின் பொது மக்கள் வேரோடு அழிக்கப்பட்டனர் என்று பார்க்கிறோம்..
அமெரிக்கா போன்ற தேசங்கள் செவ்விந்தியர்கள் வேரோடு அழிக்கப்பட்டு பிற மதங்களால் உருவானது.
ரோமானிய கலாச்சாரம் பிற மதங்களால் அழிக்கப்பட்டது.
பௌத்த தேசங்கள் பிற மதங்களால் அழிக்கப்பட்டது.

இந்தியா, 1200 வருடங்கள், காரணமே இல்லாமல், இந்த போலி மதங்களால், கோடிக்கணக்கான ஹிந்துக்களை இழந்தது.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம்.
கஷ்டப்பட்டு படித்து டாக்டர் பட்டம் பெறும் தருவாயில், மீண்டும் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து ஒரு அறிவாளி படிப்பானா?
ஒரு அறிவாளி செய்யக்கூடிய காரியம் அல்ல.
ஹிந்துவாக பிறந்தும், போலி மதத்துக்கு மாறுபவன் இது போன்ற செயல் தான் செய்கிறான்.
பல ஜென்ம புண்ணியத்தால், உலகில் பல நாடுகளில் எங்கோ பிறக்காமல், பாரத குடும்பத்தில் ஹிந்துவாக பிறக்கிறோம்.
ஹிந்து குடும்பத்தில் பிறப்பதே எத்தனை அதிர்ஷ்டம் என்பதை உலகை  கவனித்தாலே புரியும்.
இந்தியாவை தவிர எந்த மூலையில் பிறந்து இருந்தாலும் ஹிந்துவின் மகிமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா என்ற வார்த்தை கூட கேட்காத வாழ்க்கை வாழும் கிடைத்து இருக்கும்.


அனைவரும் ஹிந்துக்கள் ஆகி, பரஸ்பரம் அன்பு கொண்டு, ஜீவ ஹிம்சை செய்வதை தவிர்ப்போம்.

மாமிசம் உண்டு, மது அருந்தி கீழ் தரமான செயல்கள் செய்யாமல், சாத்வீகனாக வாழ்வோம். 

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka