Followers

Search Here...

Showing posts with label ஆன்மீக பூமி. Show all posts
Showing posts with label ஆன்மீக பூமி. Show all posts

Saturday 12 December 2020

கோவிலை சீர்திருத்தம் செய்து, இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்ற வழி.. தமிழ்நாட்டை ஆன்மீக பூமியாக ஆக்க வழி.. டாஸ்மாக் வருமானம் தேவையே இல்லை

இன்றைய கோவில்கள் நிலை:

* கோவில் நிர்வாகம், கோவில் நிலம், சொத்து, வருமானம், உத்சவங்கள், திருப்பணிகள் அரசு கவனிக்கிறது.
* 13000 கோவில்கள் (அதற்கு மேலும் இருக்கலாம்) தமிழ்நாட்டில் இருந்தாலும் (அதில் 108 திவ்ய தேசங்களில் 80க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தாலும், நாயன்மார்கள் பாடிய சிவ ஸ்தலங்கள் ஆயிரம் இருந்தாலும்) இந்த 13000க்கும் மேற்பட்ட கோவில்களில் அதிகபட்சம் இவர்களுக்கு மீனாட்சி கோவில், திருவரங்கம், பழனி என்று 10 கோவில்கள் மட்டுமே பெரும் வருமானம் கொடுக்கிறது.
* 10 கோவில்களில் வரும் வருமானத்தை, அரசு பகிர்ந்து 13000 கோவில்களில் விளக்கு ஏற்றும் அளவுக்காவது உதவி செய்கிறது. 
அது போக, இந்த 10 கோவில்களின் வருமானத்தில் வரும் மீதி பணத்தை கோவிலில் வேலை பார்க்கும் அதிகாரிகள் முதல் மூஞ்சூர் வரை சம்பளமாக பெறுகின்றனர்.. 

காலை 4மணிக்கு குளித்து பூஜை ஆரம்பித்து இரவு வரை பூஜை செய்து, கேலி செய்யும் மக்களை, பொறாமை படும் மக்களிடம் கோபப்படாமல் விபூதி, அர்ச்சனை செய்யும்  அர்ச்சகனுக்கு 5000 ரூபாய் சம்பளம்
"தட்டில் கிடைக்கும் காசை வாங்கி கொள்" என்று கிண்டல்.. 
12 வருடம் வேதம் படித்து, "கோவிலே கதி" என்று இருக்கும் அர்ச்சகருக்கு மதிப்பு இல்லை. 

கோவிலை எப்போது மூட வேண்டும்? 
யார் வந்தால் தனியாக மீண்டும் தீபாதாரனை காட்ட வேண்டும்? 
என்று அரசு அலுவல் அதிகாரி தான் சொல்வார். அதை அர்ச்சகர் கேட்க வேண்டும். 
அதிகாரிகளுக்கு உள்ளே இருக்கும் மூலவர் கற்சிலை.. தெய்வமில்லை.




* இது தவிர, 10 கோவிலில் வரும் மீதி வருமானம் அரசாங்கமும் பொது செலவுக்கு எடுத்து கொள்ளும்.

இன்றைய நிலை:
* வேதம் படித்து அர்ச்சர் ஆகி 5000 ரூபாய் சம்பளம் வாங்கி வாழ முடியாததால், இவர்கள் சந்ததி குறைந்து விட்டனர். ப்ராம்மணர்களை விரட்ட, அவர்கள் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
வேலை வாய்ப்பு போட்டிகள், பிராம்மண வெறுப்பு உண்டாகி விட்டது.

* 10 கோவிலால் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே கவனிக்கும் அரசு, மிச்சம் இருக்கும் 13000 கோவிலை குப்பை மேடாக ஆக்கி விட்டது...
காஞ்சியில் மட்டும் 18 திவ்ய தேசங்கள் உண்டு. 
ஆனால் இவர்கள் கண்களுக்கு காஞ்சி வரதர் கோவில் மட்டும் தான் வருமானம் தரும் என்று ஆக்கி விட்டனர். 
மற்ற கோவில்களை சென்று பார்த்தால், கோபுரத்தை கட்டிய அரசனுக்கு பிறகு இன்று வரை யாரும் அதை சரி செய்ய முயன்றதாக தெரியவில்லை.

இது போன்ற பல கோவில்களை காப்பது ஒரு கிழ அர்ச்சகர். 
அவர் பிள்ளையும் அர்ச்சகர் ஆக வேண்டாம் என்று படித்து அமெரிக்காவில் செட்டில்.
கோவிலை அழிக்க அருமையாக காய் நகர்த்தி, 13000 வருமானம் தராத கோவில்களில், வேதம் அறிந்த சந்ததிகள் இல்லாமல் செய்து விட்டனர்...
மறு பக்கம், 
ப்ராம்மணனும் வேலைக்கு வருகிறான் என்று பொறாமை வேறு...

* அரசாங்க அதிகாரிகள் கோவிலில் பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் தினமும் பட்சணம், காபி சாப்பிட்டு வாழ்கிறார்கள். நிம்மதியான வாழ்க்கை...

* தேவைப்பட்டால், 13000 கோவில்களில் ஒரு கோவிலை இடித்து வேறு ஏதாவது அரசாங்க கட்டிடம் கட்டவும் இவர்களுக்கு வழி உண்டு, காரணமும் உருவாக்குவார்கள்..

* நிர்வாகம் தான் முக்கியம் என்பதால், கோவிலை நிர்வகிக்க கமலஹாசன் போன்ற குணம் கொண்ட இந்துவாக உள்ள நாதீகனும் பதவிக்கு வரலாம், கிறிஸ்தவனும் பதவிக்கு வரலாம்.
இவர்கள் என்ன நாசமும் செய்யலாம்.. இல்லை ஒன்றுமே செய்யாமல் கோவிலை தானாக அழியவும் செய்யலாம்...

கோவிலையே வியாபார ஸ்தலமாக்கி, கோயிலிலேயே கடைகள் அமைக்க இடம் கொடுத்து, 
கோவிலில் நாயன்மார் பாடிய பதிகங்கள் பாடிய ஓதுவார்களை அழித்து விட்டனர்.. 
அவர்கள் சந்ததியும் இன்று வேலைக்கு சென்று விட்டனர்.. 
திருவாசகம் என்ற தமிழை வளர்க்க ஆள் இல்லை. இந்த தமிழை புரிந்து கொள்ளாத தமிழர்கள் ஆக்கி விட்டனர்.
எப்படி பார்த்தாலும், கோவிலில் வருமானம் பார்க்கலாம் என்று தான் பார்க்கிறார்கள்..


மாற்றம் என்ன?

'சிலர் அரசு கோவில் நிர்வாகத்தை விட்டு செல்ல வேண்டும்' என்று கோரிக்கை வைக்கிறார்கள்..

இது சரி போல இருந்தாலும், பிரச்சனை உருவாக்கவும் இது செய்யும்..

ஆதீனங்கள், தீட்சிதர்கள் கட்டுக்குள் இருக்கும் சில கோவில்களை பார்த்தால், கோவிலுக்கு வரும் உண்மையான பக்தனுக்கு வருத்தம் தான் வரும்..

அத்தனை பெருமை வாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில் எப்படி உள்ளது?
உள்ளே இருக்கும் சிவபெருமான், அம்பாள் தவிர, பார்க்கும் இடமெல்லாம் எண்ணெய் படிந்த அழுக்கு, கும்பாபிஷேகம் செய்ய சோம்பேறித்தனம்..  கோவில் கோபுரங்களில் செடிகள்...

அது போல, சிதம்பரம் கோவிலுக்கு சென்றால், அர்ச்சனை செய்கிறோம் என்று பிடிவாதமாகவாவது கேட்டு காசு வாங்கி கொள்கிறார்கள் தீட்சிதர்கள்.. 
அவர்கள் இதை நம்பி தான் வாழ்க்கை என்பதாலோ என்னவோ, வரும் பக்தர்களில் காசு கொடுப்பவர்களுக்கு முதல் மரியாதை செய்கிறார்கள்..

இப்படி பார்க்கும் போது, ஒட்டு மொத்தமாக அரசு விலகுவது கூடவே கூடாது
ஒரு மேற்பார்வை அவசியம்..


இதோ என்னுடைய பிளான்:
1. கோவிலை விட, கோவிலில் எந்த தெய்வம்? என்பது மிக முக்கியம்... 

நிர்வாகம் செய்பவர் கமலஹாசன் போன்ற பல வித்தைகள் செய்ய தெரிந்தவர் என்றாலும், அந்த கோவில் தெய்வத்திடம் பக்தி உள்ளவனா? என்பது மிக மிக முக்கியம்..

ராமானுஜர் அடியார்கள் இருக்கிறார்கள். பக்தி உள்ளவர்கள் தான். 
திறன் அடிப்படையில் ஒரு நாமம் போட்டு கொள்ளும் விஷ்ணு பக்தனை, 'திருவண்ணாமலை கோவிலை நிர்வாகம் செய்' என்று செய்தால், அதை விட வேறு முட்டாள் தனம் இருக்கவே முடியாது...
ஆக, 
சில நடைமுறை சிக்கலை உணர்ந்து இப்படி செய்யலாம்..




* 13000 கோவில்கள் தமிழகத்தில் இருக்கிறது என்றால், மூலவராக இருக்கும் ஸ்வாமியை பொறுத்து காஞ்சி மடம், ஜீயர் மடம், ஆதீனம், என்று தெய்வமே கதி என்று இருக்கும் இவர்களிடம் நிர்வாக பொறுப்பை கொடுக்கலாம். 

முழுவதும் கொடுக்காமல், சுழற்சி முறையில், உடுப்பி கோவிலில் உள்ளது போல, 4 வருடத்திற்கு கோவில் பொறுப்புகளை மாற்ற வேண்டும்...

உதாரணத்திற்கு, காஞ்சியில் உள்ள 18 திவ்ய தேச கோவில்களை ஒரு ஜீயர் (வடகலை ஜீயரா? தென்கலை ஜீயரா? என்பது அந்த கோவில் அர்ச்சகரை கேட்டாலேயே தெரிந்து கொள்ளலாம்) மடம் நிர்வாகம் செய்ய வேண்டும். உதாரணமாக, வடகலை ஜீயர், தேசிகர் வழி வந்த ஜீயர் மடம் நிர்வகிக்க வேண்டும்.
அதுபோல,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 15 வடகலை சம்பிரதாய கோவிலை இன்னொரு வடகலை ஜீயர் நிர்வகிக்க வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுக்கு பிறகு, கோவில் நிர்வாகம் சுழற்சி செய்யப்பட்டு, ஒரு புத்துணர்ச்சி உண்டாக்க வேண்டும்..

இவர்கள் கோவில் நிர்வாகம், உத்ஸவம், வருமானம், பணி அமர்த்தல் பார்த்து கொள்ள வேண்டும்.

பாகுபாடு, பொறாமை காட்ட விடாமல் இருக்க, அரசு மேற்பார்வை வேண்டும்.

அதற்கு ஒரு சிலர் மேற்பார்வைக்கு அரசு பணி அமர்த்தலாம்..

இப்படி சிவன் கோவிலுக்கு சைவ மடங்கள் என்று கொடுத்தால், அவர்கள் நிர்வாகம் செய்வார்கள்..

வரதர் கோவிலுக்கு வரும் வருமானத்தை கொண்டு, தன்னிடம் இருக்கும் மற்ற 15 கோவில்களை பக்தி இருப்பதால், உண்மையாக செலவு செய்ய ஆரம்பிப்பார்கள்.
அனைத்து கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடக்க ஆரம்பிக்கும்.. 
கோவில் உத்சவங்கள் நடக்க ஆரம்பிக்கும்..

"கோவில் நடத்த அர்ச்சர் தேவை" என்ற நிலையில், 
"மற்றவர் வேலையை பிடுங்குகிறான் பிராம்மணன்" என்ற நிலை மாறி, பிராமணர்கள் வேதம் படித்து கோவில் அர்ச்சகன் ஆக முயல ஆரம்பிப்பார்கள்..

அரசுக்கு மற்ற ஜாதிகார்களுக்கு அதிகம் வேலை கொடுக்க முடியும்..
கோவில் உத்சவங்கள் நடக்க ஆரம்பிக்க, கோவிலை சுற்றி உள்ள தெருக்களில் உள்ள கடைகளுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும்..
சுய தொழில் பெருகும்..

10 கோவில் வருமானமே இவ்வளவு பேருக்கு சோறு போடும் நிலையில், இந்த மாற்றத்தால் 13000 கோவிலும் பழனி, திருப்பதி போல பிரகாசம் அடையும்..
13000 கோவில்களும் பெரும் வருவாய் தரும்.. 

காஞ்சியில் உள்ள பாண்டவ தூதன் பெருமாளுக்கு பெரிய ரதத்தில் தேர் விட்டு கொண்டாடினால், 
காஞ்சி மடம் காமாக்ஷி கோவிலில் அதை விட பெரிய தேர் அமைத்து சிவ பக்தர்களை மகிழ்விப்பார்கள்..

இது ஆரோக்கியமான போட்டியாகவும் இருக்கும். 

'பொறாமை ஏற்படாமல் பார்த்து கொள்வது' நிர்வாகத்தை மேற்பார்வை பார்க்கும் அரசு அதிகாரிகளின் பொறுப்பு.

இப்படி சரியாக கோவில் நிர்வாகத்தை கட்டு அமைக்கும் போது, 
பக்தி வளரும்.. 

சிவ பக்தன் லட்சம் லட்சமாக சிதிலமடைந்த தன் இஷ்டப்பட்ட கோவிலுக்கு கொடுக்க முன் வருவான்.. 
கோவில்கள் மீண்டும் பிரகாசிக்க, சுய தொழில் பெறுக ஆரம்பிக்கும்.

108 திவ்ய தேசத்தில் ஒரே ஒரு கோவில் திருப்பதி.. 
அந்த கோவில் இருப்பதோ மலை உச்சியில்..  
மலை உச்சுக்கு சென்று கோடி கோடியாக பணம் கொட்டுவதற்கு காரணம் கோவிலை பக்தர்கள் நிர்வாகம் செய்கிறார்கள்..
மேற்பார்வை அரசு செய்கிறது... 

அது போல நாமும் இந்த கட்டமைப்பை செய்து விட்டால், 

15 கோவிலை நிர்வாகம் செய்யும் ஒரு மடத்திடம், வருடா வருடம் 15%  வருமானத்தை அரசு தாராளமாக கேட்டு கொள்ளலாம்.

மீதி பணத்தை இவர்கள் எப்படி செலவு செய்கிறார்கள்? 
ன்ற மேற்பார்வை ஆலோசனை மட்டும் வழங்கலாம்.. 

85% வருமானத்தை கொண்டு இவர்கள் கையாள முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.. 
பணி அமர்த்துவது, மற்ற கோவிலுக்கு செலவு செய்வது, ஊதியம் அதிகமாக கொடுப்பது என்ற எதிலும் இவர்கள் தலையிட கூடாது..

இந்த மாற்றம், தமிழ்நாட்டை ஆன்மீக பூமியாக ஆக்கி விடும்.

ஒரு பக்கம் திருவாசகம் ஓதும் ஒலி கேட்கும்.
ஒரு பக்கம் பாசுரங்கள் ஓதும் ஒலி கேட்கும்.
கோவிலை சுற்றி சுய தொழில் பெருகும். 

இந்திய மக்கள், 
கோவில் தேசமான தமிழகத்தை பார்க்க 4 கோவிலை அல்ல, 13000 கோவிலையும் பார்க்க வருவார்கள்...

பெரும் வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும் போது, வேலை கொடுக்க வேண்டிய நிலை அரசுக்கு குறையும்..

அவரவர்கள் நிம்மதியாக வாழ ஆரம்பிப்பார்கள்..

இதை விட்டு விட்டு, "கோவில் நிர்வாகம் அரசு எடுக்கவே கூடாது." என்று சொன்னால் வைணவ கோவிலுக்கு மற்றவர்கள் நுழைய முடியாமல் கூட போகலாம்.
சைவ வைணவ சண்டை கூட வரலாம்.

மேற்பார்வை செய்ய அரசு நிர்வாகம் தேவை.

Election commission போல, அரசு அதிகாரியாக இருக்கும் சிலரை ஆண்டு வருமானம் என்ன? என்று கவனித்து, 
அதில் 15% வருமானத்தை அரசு கஜானாவில் போட தற்காலிக அமைப்பும் செய்யலாம்.. 
இதனால், நிரந்தர மேற்பார்வை கூட தேவை இல்லை அரசுக்கு..

இது நடைமுறைக்கு கொண்டு வந்தால், 
கோவில் நிறைந்த தமிழகம் பெரும் கோடிகளை தானே சம்பாதிக்கும்..

"டாஸ்மாக் வருமானம் தேவையே இல்லை" அரசுக்கு என்று தோன்றி விடும்.

பக்தி உள்ளவர்கள் கோவிலை பார்க்கும் போது, தானாக இடிந்து போன கோவில்கள் நிமிரும்.

சிவன் கோவில் இடிந்து கிடப்பதை பார்க்கும் மடாதிபதிகள், அதை சரி செய்ய சிவ பக்தர்களை கொண்டே திருப்பணி செய்து விடுவார்கள்..

பூஜைகள் நடக்க, திருவிழாக்களை நடக்க ஆரம்பிக்க, தொழில் பெருகி, வருமானம் கொட்ட ஆரம்பிக்கும்..

அரசுக்கு உட்கார்ந்தபடி கோடி கோடியாக வருமானம் கிடைக்கும்..
பக்தியும் வளரும்..

உங்கள் கருத்து என்ன?...

Wednesday 11 March 2020

ஆன்மீக பூமியாக நம் தேசத்தை மாற்றுவது எப்படி? பொருளாதார சுதந்திரம் கிடைக்குமா? ஒரு அலசல்...


இன்ரைய உலகில்,
120 கோடி இந்திய மக்களும், "பணம் அதிகம் தரும் ஒரே வேலையை நோக்கியே" போட்டி போட்டு ஓடுகிறோம்.
பல அற்புதமான வேலைகள்,
பல அற்புதமான ஆராய்ச்சிகள்,
பல அற்புதமான தொழில் சிந்தனைகள் இருந்தும்,
ஒரே வேலையை நோக்கி ஓடும் காரணத்தால், 120 மக்களின் மனதில் இருந்து இந்த சிந்தனைகள் அழிந்து விட்டது...




சுய தொழிலை விட்டதால், திறன் இல்லாத சமுதாயமாக, 
வேலை இல்லா திண்டாட்டம், பொருளாதார சரிவு, மக்கள் தொகை, 1000 வருட இந்திய சரித்திரத்தை மட்டுமே பார்த்து கொண்டு, ஹிந்துக்கள் இந்த காலங்களில் அந்நியர்களால் ஆக்ரமிப்பு பட்டு இருந்தார்கள் என்ற அறிவே இல்லாமல், ஹிந்துக்களையே அழிக்க நினைக்கும் மதவாத போக்கு, பொறாமை, அறியாமை, இவையெல்லாம் சேர்த்து கொண்டு, 
பெரும் அபாயத்தை நோக்கி 120 கோடி இந்திய மக்களும் சென்று கொண்டு இருக்கிறோம்.

"நிம்மதி" என்பது ஒருவர் நெஞ்சிலும் இல்லை.
நம் தெய்வங்கள் தான் ஆங்காங்கு நிம்மதியை தந்து கொண்டு இருக்கின்றனர்.

அரசாங்கம், இதை சரி செய்ய பெரும் முயற்சிகள் செய்கிறது.. 
ஆனால்!!
இவர்கள் எடுக்கும் எதுவும் இதை சரி செய்ய போவதில்லை.

அரசாங்கம், "நம் பாரத நாடே, உலகத்துக்கு கோபுரம் போல இருப்பதை" அறிய வேண்டும்.
ஒவ்வொரு தேசத்துக்கும் சில குணங்கள் உண்டு. 
உலகத்துக்கு நடு பகுதியில், 'உலகத்துக்கே கோவிலாக' இருக்கும் இந்த தேசத்தை, வணிக தேசமாக ஆக்கி முன்னேற்றுவது!! மஹா முட்டாளத்தனம்.

தேசத்துக்கு, வணிகம் தேவைதான்..  
ஆனால், நம்முடைய பொருளாதாரத்தை வலுப்படைய செய்யும் சக்தியாக, அந்நிய தேச வணிகமே இருக்கும் படி செய்து விட கூடாது.

அந்த வணிக பாதையை நோக்கியே, கடந்த 20 ஆண்டுகளாக நடை போட்ட நம் பாரத நாடு, 
இன்று "உலக பொருளாதாரம் வீழ்ந்தால், இந்திய பொருளாதாரமும் வீழும்"
என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

மற்ற நாடுகளில் "பொருளாதாரம் வீழும் போது",
மக்கள் தொகை அதிகம் இல்லாத அந்த நாட்டினர் பெரிதும் அச்சம் கொள்வதில்லை.
நம் பாரத நாட்டிலோ 120 கோடி மக்கள்!!
"அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் உணவு"
என்பது இது போன்ற உலக பொருளாதாரத்தை ஒட்டி அமைக்கப்படுவது பேராபத்து. 

மற்ற நாட்டில் உள்ளவனுக்கு, இந்தியன் வேலை செய்து, வேலை செய்து, பலரது தூக்கமும், சொந்தமும் பறிக்கப்பட்டு விட்டது.
இன்று,
ஒவ்வொரு இந்தியர்கள் நெஞ்சிலும் வேலை பதட்டமும், அச்சமும் கொன்று தின்கிறது.
இதை சரி செய்ய வழி உண்டா? கட்டாயம் உண்டு...

பாரத நாட்டை தேடிக்கொண்டு கொலம்பஸ் அலைந்தான். 
அவன் காணாத வெற்றியை,

வாஸ்கோடகாமா என்ற கிறிஸ்தவ வணிகன் பெற்றான் என்று ஐரோப்பா கண்டமே அவனை புகழ்ந்தது.

"ஒரு கொள்ளையன் அடுத்தவன் வீடு புகுந்ததை மற்ற கொள்ளையர்கள் கொண்டாடுவது போல", ஐரோப்பா கண்டமே அவனை புகழ்ந்தது.

இவனை தொடர்ந்து, பிரெஞ்சு, ட்ச், பிரிட்டிஷ் நாடுகளில் இருந்து ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் முழுவதுமாக 600 வருடங்கள் ஆக்ரமித்தனர் நம் பாரத நாட்டை.

"அறிவியல் கண்டுபிடுப்புகள் செய்தோம்!!" 
என்று இன்று மார்தட்டும் கிறிஸ்தவர்கள், 947ADக்கு முன்,
உலகத்திற்கு பயனாக என்ன அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்தார்கள்? ஒன்றுமே இல்லையே!!
இந்தியாவுக்கு நுழைவதற்கு முன், உலகத்திற்கு பயனாக ஒரு கண்டுபிடிப்பு கூட இவர்களிடம் காண முடியவில்லையே ஏன்?

947ADல் அமீர் சூரி (Amir Suri) என்ற புத்தனாக மாறி இருந்த ஹிந்து அரச குடும்பத்தை சேர்ந்தவன் (அசோக மன்னனின் பௌத்த மத பிரச்சாரத்தால் ஏற்பட்ட வினை),
பாரசீக (இன்று Iran) நாட்டை கைப்பற்றி இருந்த சபாரித்து இஸ்லாமிய அரசனிடம் (Saffarid dynasty) தோற்று இஸ்லாமிய மதத்தை ஏற்றான்.

அவன் சந்ததி, கோரி (Ghori) என்ற இஸ்லாமிய வம்சத்தை பாரத மண்ணில் கொண்டு வந்தது. 
பாரத நாடாக இருந்த ஆப்கான், சிந்து (பாகிஸ்தான்), வங்கம் (பங்களாதேஷ்) இன்று இஸ்லாமிய நாடாக கொடுக்கப்பட்டு விட்டது.
பாலைவனத்தையே பார்த்து இருந்த அந்நிய தேச இஸ்லாமியர்கள், பாரத நாட்டில் நுழைந்தனர்.  நம் பாரத நாட்டை முழுவதுமாக 1000 வருடங்கள் ஆக்ரமித்தனர்.




1498ADல் "ஆடும், தேனும், ரொட்டியுமே பார்த்த கிறிஸ்தவ ஐரோப்பியர்கள்" இந்தியாவில் காலடி வைத்தனர்.
தங்கத்தில் புரண்டுகொண்டிருந்த கோழிக்கோடு சமுத்திர கரையை ஆண்ட கேரள மன்னனிடம், "மஞ்சள், மிளகு" போன்ற தானியத்துக்கு பதிலாக "தொப்பி, ஆட்டின் தோலால் செய்யப்பட்ட துணியை" பண்டமாற்றம் செய்ய கேட்டான்,
வாஸ்கோடகாமா என்ற கொள்ளையன்.
தங்கத்துடன் பண்டை மாற்ற வியாபாரம் செய் என்று அரசன் சொல்ல, இந்த திருடன், ஐரோப்பா தேசம் சென்று படைகள் திரட்டி வரலாம் என்று திரும்பும் போது, அங்கு இருந்த நகரையே கொளுத்தி விட்டு ஓடினான்.


என்ன கண்டுபிடித்து இருந்தார்கள் கிறிஸ்தவர்கள், நம் நாட்டிற்கு வருவதற்கு முன்? 
ஒரு உலகத்துக்கு நன்மை தரும் கண்டுபிடுப்பும் ஒன்று கூட இவர்கள் செய்யவில்லையே!!
தையல் தெய்க்கும் ஊசி கூட, இந்தியாவுக்கு நுழைந்த பின்னர் தானே இவர்கள் மூளையில் உதித்தது?  
யோசித்து பார்க்க வேண்டாமா நாம்?

அந்நிய இஸ்லாமியர்கள் நுழைவுக்கு முன், 947ADக்கு முன், நம் பாரத நாட்டின் சரித்திரம் எப்படி இருந்தது? என்று கவனிக்கும் போது,
இந்திய பொருளாதாரம், இந்தியாவின் தனித்தன்மையை மீண்டும் பெற வழிகள் தெரிகிறது.
*** அரசாங்கம், கோவில்களை தன் கட்டுப்பாட்டில் இருந்து விட வேண்டும்.

**** தெய்வங்களை வைத்து நிர்வாகம் (கமிட்டி) அமைக்கப்பட வேண்டும். கோவிலை வைத்து நிர்வாகம் (கமிட்டி) அமைக்கப்பட கூடாது.

*** ஒவ்வொரு கோவிலையும் அந்த கோவிலின் பக்தர்கள் கவனித்து கொள்ளட்டும் என்று விட்டு விட கூடாது.
காரணம்,
சிதம்பரம் கோவிலை பார்த்து கொள்ளும் சிவ பக்தர்கள், வைத்தீஸ்வரன் கோவில் சிதிலமடைந்தால் கவனிக்க மாட்டார்கள்.

*** ஒரு மாநிலத்தில் இருக்கும் பெருமாள் கோவில் அனைத்துமே ஜீயர் போன்ற மடாதிபதிகள் தலைமையாக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
*** ஒரு மாநிலத்தில் இருக்கும் சிவபெருமான் கோவில் அனைத்துமே காஞ்சி, மற்றும் பிற சைவ மடங்கள் தலைமையாக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

*** எந்த தெய்வத்தின் மேல் பக்தி உண்டோ, அந்த பக்தர்களை கொண்டு கமிட்டி அமைத்து, மாநிலம் (ஸ்டேட்) அளவில் உள்ள அனைத்து கோவிலுக்கும் உரிய பொறுப்பை கொடுக்க வேண்டும் அமைக்க வேண்டும்.

இதற்கு மடாதிபதிகள், ஜீயர்கள், அடிகளார் ஏற்கனவே உள்ளனர்.
இதை ஒழுங்கு படுத்தி அரசாங்கம் இவர்களிடம் ஒப்படைத்தாலே போதுமானது.

*** அந்தந்த பக்தர்களை கொண்டு தமிழகம் முழுவதும் கமிட்டி அமைக்க வேண்டும்.

*** பெருமாள் கோவில்கள் அனைத்தும், பெருமாள் கோவிலுக்காக அமைத்த கமிட்டி நிர்வகிக்க வேண்டும்.
*** அது போலவே முருகனுக்கு, சிவனுக்கு, சக்திக்கு என்று அமைக்க பட வேண்டும்.

*** பெருமாள் பக்தனை, "சிவன் கோவிலையையும் பார்த்து கொள்!" என்று செய்ய கூடாது..   
பக்தி இல்லாத பூஜை நடக்கும் படியாக அமைந்து விட கூடாது.

*** எந்த தெய்வத்திடம் அதிக ஈடுபாடோ! அந்த கோவில் கமிட்டியில் மட்டுமே இருக்குமாறு செய்ய வேண்டும்.

இது 2 பெரிய லாபத்தை நமக்கு தரும்:
1.
வேதத்தை விட்டு, பிழைப்புக்கு ஓடிய பிராம்மணன், "தன் பிள்ளை பூஜை செய்வான்" என்று நம்புவான்.

"கோவிலில் பூஜை செய்வோம்" என்ற இந்த நம்பிக்கை தன் மகனை வேதம் படிக்க வைக்க செய்யும்.
பிராம்மணன் முதலில் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கு திரும்ப இது வழி செய்யும்.




2.
பிராம்மணன் உலக படிப்பை விட்டு விலகும் போது, வேலை வாய்ப்பு அடுத்த சமுதாய மக்களுக்கு அதிகரிக்கும்.
பிராம்மணன் உலக கல்வி கற்றாலும், "கோவில் பூஜை கட்டாயம் செய்ய வேண்டும்" என்ற நிலை வந்தால்,
தான் கற்ற கல்வியை இலவசமாக சொல்லி கொடுக்கவும் ஆரம்பிப்பான்.

இந்த 2 நன்மையை தவிர,
3.
சிவ பக்தர்களால் ஏற்பட்ட கமிட்டி, 
பெருமாள் பக்தர்கள் மூலம் பெருமாளுக்கு நடக்கும் உத்சவங்களை பார்த்து, 
தாங்களும் சிவன் கோவில் திருப்பணி, உற்சவம் என்று ஆரம்பிப்பார்கள்.. பக்தியில் போட்டி ஏற்படும்

4.
பெருமாள் பக்தன் பாசுரங்கள் வாசித்து கொண்டு போனால்,
நடராஜருக்கு முன்னால் பதிகங்கள் பாடி செல்வார்கள்.

பக்தியில் போட்டி ஏற்படும்.
கோவில் திருப்பணிகள் ஏற்படும்.
தமிழ் மொழி "பாசுரங்கள், பதிகங்கள், கந்த புராணம்" போன்றவைகளால் உயிர்த்து ஏழும்.

5.
கோவில் திருப்பணியான கோவில்களை காண, தெய்வங்களை தரிசிக்க, பக்தர்கள் வருவார்கள்.
பக்தர்கள் வருகையால், அந்த ஊரில் வியாபாரங்கள் செழிக்கும்.

நாடு எளிதாக சுய சார்புள்ள நாடாக ஆகும்.

"என் பெருமாளுக்கு பெரிய கோவில் அமைப்பேன்" என்று ஒரு கோடீஸ்வரன் நினைத்தால்,
மற்றொரு கோடீஸ்வரன்
"முருகனுக்கு அதை விட பெரிய கோவில் கட்டுவேன்" என்று ஆசைப்படுவான்.
கலைகள் தானாகே வளரும். 
வேலைகள் நம் ஊரிலேயே மீண்டும் உற்பத்தி ஆகும்.

"ஒரு திருப்பதி, ஒரு பழனி" - ஊர் மக்களுக்கே சோறு போடுகிறது என்பதை நாம் மறந்து விட கூடாது.

நம் தெருவில் உள்ள கோவில் தெய்வங்களுக்கு சரியான காலத்தில் பூஜைகளும், திருவிழாவும், தேரும் இழுத்தாலேயே, தானாக பணம் வந்து கொட்டும்.
தெய்வத்தை மதித்தால், நமக்கு சோறு போடும்.
அன்ன தானம் பிறருக்கு போட, தெய்வமே நமக்கு செய்ய சக்தியும்  அளிக்கும்.




தெய்வங்களை நாம் பார்த்துக்கொண்டால், தெய்வங்கள் ஊருக்கே சோறு போடும்.  கோவில்கள் எதற்கு?. தெரிந்து கொள்ள இங்கே படியுங்கள்.

பாரத நாட்டில், "தெருவுக்கு தெரு கோவிலை வைத்து கொண்டு, பிச்சை எடுப்பது" துரதிருஷ்டம் அல்லவா!!..

தெய்வங்களை அலட்சியம் செய்து, பூஜைகள், மாதா மாதம் உற்சவங்கள் செய்யாமல் விட்டதால், இன்று பிச்சை எடுக்கிறோம் வெளிநாட்டிடம்.

நம் கலாச்சாரத்தை வெளிநாட்டவன் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்க, சோற்றுக்காக, அவனுடைய  கீழ்த்தரமான கலாச்சாரத்தை நமக்கு சொல்லி தருகிறார்கள். 
வெட்கக்கேடு அல்லவா!

நம் நாடே சுற்றுலா நகரமாக ஆக்க முடியுமே?

சிறப்பாக நிர்வகிப்படும் கோவிலை பார்க்க வராத மக்கள் உண்டா? 

சரியாக தெய்வங்களை வைத்து கொண்டால், நம் தெய்வங்கள் எத்தனை பேருக்கு அன்னதானம் செய்யும் தெரியுமா? 
போய் பாருங்கள், திருப்பதியை.
போய் பாருங்கள் பழனி முருகனை .

தெய்வத்தை நாம் போற்றினால், தெய்வம் நம்மை நொடிப்பொழுதில் காத்து விடும்.
கோவிலை சுற்றியே வேலையும் கொடுப்பார். 

வேதத்தில் சொன்ன தெய்வங்கள் கற்பனை தெய்வங்கள் அல்ல. 
இதை புரிந்து கொள்ள வேண்டும் ஹிந்துக்கள்.

போற்றி பாருங்கள் நம் தெய்வங்களை. 
கூரையை பிய்த்து கொண்டு செல்வத்தை நமக்கு கொட்டி விடும்.

முருகன் பழனியில் மட்டும் தான் அருள் புரிகிறார் என்று நினைப்பா?
பெருமாள் திருப்பதியில் மட்டும் தான் அருள் புரிகிறார் என்று நினைப்பா?

உங்கள் தெருவில் உள்ள பெருமாள் கோவிலை அலங்கரியுங்கள்..  அதிசயம் நடக்கும்.  

உற்சவங்கள் மாதம் தோறும் செய்யுங்கள்... வியாபாரம் கிடைக்கும்.. 
ப்ராம்மணனை வேதம் படிக்க செய்யுங்கள்..
ப்ராம்மணனை பூஜை, கோவில் உத்சவங்கள் செய்ய சொல்லி,
உங்கள் வியாபாரத்தை, கோவிலை சுற்றி தொடங்குங்கள்..
பணமும் கொட்டும்... ப்ராம்மணான்னும் உங்கள் வேலையை தேட மாட்டான். 

947க்கு முன் இப்படி சுய சார்புள்ள இருந்த இந்தியாவை பார்த்து தானே, கிறிஸ்தவன் ஓடி வந்தான்? இஸ்லாமியன் ஓடி வந்தான்? 
யோசிப்போம் ஹிந்துக்களே ! யோசியுங்கள்..

சக்தியுள்ள "கந்தனை, பெருமாளை, சக்தியை, சிவபெருமானை, கணேசனை" மதிக்க தெரியாதாதால், நாம் பலரிடம் பிச்சை எடுக்கிறோம்.

மேல் மருவத்தூர் போய் பாருங்கள். 
ஒரே கோவில் தானே அங்கு உள்ளது.
ஆனால்,
அந்த ஆதிபராசக்தியை ஒரு உண்மையான பக்தன் பார்த்து கொள்ளும் போது, அந்த ஊரே பிரபலமாகி இருக்கிறது.

அந்த ஆதிபராசக்தி, எத்தனை பேருக்கு அன்னதானம் போடுகிறாள் பாருங்கள்.
அந்த ஆதிபராசக்தி, எத்தனை பேருக்கு அங்கேயே வியாபாரம் செய்ய தொழில் தருகிறாள் பாருங்கள்.




இந்த ரகசியம் எங்கெல்லாம் நடைமுறையில் உள்ளதோ, அங்கெல்லாம், மக்கள் நிம்மதியாக அங்கேயே தொழில் செய்து கொண்டு, நிம்மதியாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் இந்தியாவை கோவில் நகரமாக ஆக்கினால், கோடிக்கணக்கான மக்கள், அந்நிய தேசத்தில் இருந்து வருவார்கள். 

இவர்கள் வருகையை நமக்கு பல கோடி வர்த்தகத்தை தரும். 

"யோசிக்க்க வேண்டும்" நம் அரசாங்கம்.
நம் நாடு வணிக நாடல்ல. விவசாய நாடல்ல..
இது ஒரு ஆன்மீக பூமி.

ஆன்மீக ஈடுபாடு வளர வளர, தெய்வங்கள் நம்மை காக்கும்,

இன்று கோவிலுக்கு நடுவில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட அடிபோடும் மதம் மாறி போன ஹிந்து,
"பௌத்த மதத்தை தூக்கி எறிந்து விட்டு வந்தது போல" திரும்பி ஓடி வருவான்.

பெரும் புரட்சி நடக்கும் இந்த மாற்றத்தை,
அந்தந்த தெய்வத்தை விரும்பும் பக்தர்களை கொண்டு, அந்தந்த தெய்வத்தை நிர்வகிக்க செய்து விட்டால்,
பொருளாதாரம் உலகில் வீழ்ந்தாலும்,
சக்தி வாய்ந்த கோவில் தெய்வங்கள், தன்னை காக்கும் நம்மை, 'ரக்ஷிக்கும், சோறு போடும்'.

அரசாங்கம் கோவிலை விட்டால் மட்டும் இது சாத்தியமில்லை..
அந்தந்த தெய்வத்தை விரும்பும் பக்தர்களை கொண்டு, அந்தந்த தெய்வத்தை நிர்வகிக்க செய்ய கமிட்டி அமைக்க வேண்டும்.

இதை செய்து விட்டால், பெரும் மாற்றங்கள் 5 வருடங்களில் நடந்து விடும்.

"ஆன்மீக பூமி" தன்னை தானே சரி செய்து கொள்ளும்.