Followers

Search Here...

Saturday 29 August 2020

'ராவணன் பேசிய பச்சை பொய்' தெரிந்து கொள்ள வேண்டாமா .. சீதையின் புலம்பல்.. தமிழன் 'வால்மீகி' கொடுத்த ராமாயணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சீதா தேவியை மீட்க, வானர சேனையை திரட்டி கொண்டு, இலங்கையை நோக்கி வந்தார் ராமபிரான்

"சார்தூளா" என்ற ஒற்றன், ராவணனிடம் இதை தெரிவிக்க, "சுகா" என்ற ராக்ஷஸ ஒற்றனை மேலும் விவரம் அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் பிடித்து கட்டி வைத்தனர்.

ஐந்தே நாளில், கடலில் பாலம் அமைத்து, இலங்கையை வந்து அடைந்தார் ராமபிரான்.

பிறகு சுகாவை விடுவித்து அனுப்பினார். 




பிறகும், ராவணன், சுகனோடு 'சாரணன்' என்ற மற்றொரு ராக்ஷஸ ஒற்றனை அனுப்பி, வானர வீரர்களின் பலத்தை அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் போல உருவம் மாற்றி கொண்டு, இவர்கள் இருப்பதை கண்டு விபீஷணன் ராமபிரானிடம் தெரிவிக்க, இருவரையும் பிடித்து கட்டினர் வானரர்கள்.

ராமபிரான் இவர்களை விடுவித்து, விபீஷணனையே இவர்களுக்கு முழு படைபலத்தையும் காட்ட சொல்லி, திருப்பி அனுப்பினார்.


'சுக சாரணன்' இருவரும் வானரர்கள் படை பலத்தை ராவணனிடம் பிரமிப்புடன் சொல்ல, சார்தூளா கோபம் அடைகிறான்

எதிரியை போற்றும் படியாக ராவணனிடம் பேசுவதை கண்டித்தான். 

'சுக சாரணன்' இருவரும், அமைதியுடன், 'ராவணனுக்கு வெற்றி உண்டாகட்டும்' என்று சொல்லி விட்டு சபையை விட்டு கிளம்பினர்.

ராவணன், மகோதரன் என்ற ஒரு மந்திரியை பார்த்து, "சிறந்த ஒற்றர்களை" சபைக்கு அழைத்து வர சொன்னான்.

உடனே, தலை சிறந்த ராஜ ஒற்றர்களை, ராவணன் முன் அழைத்து வந்தான் மகோதரன்.

சார்தூலாவின் தலைமையில், அனைத்து ஒற்றர்களையும் ராமபிரானை பற்றி அறிந்து வர அனுப்பினான்.

"ராமனின் திறன் என்ன? ராமனுக்கு பிடித்தமானவர்கள் யார் யார்? 

யாரெல்லாம் ராமனுக்கு நட்பாக இருக்கிறார்கள்? 

ராமன் எப்பொழுது தூங்குவார்? எப்பொழுது விழிப்பார்? 

வேறு என்னவெல்லாம் காரியம் செய்கிறார்? 

என்னவெல்லாம் செய்ய நினைக்கிறார்? 

அனைத்தையும் தெரிந்து கொண்டு என்னிடம் வந்து சொல்ல வேண்டும்" 

என்று உத்தரவு செய்தான்.

மாயாவிகளான இவர்கள் வானர்ர்களோடு கலந்து கொண்டு சுவேல மலையில் இருக்க, கடல் போன்ற வானர சேனையை பார்த்து அச்சம் கொண்டனர்.

விபீஷணன் மீண்டும் இவர்களை கண்டுபிடித்து விட்டார். 

சார்தூளா வானரர்களிடம் மாட்டி கொண்டு விட, இவர்களை வானரர்கள் ரத்தம் வரும் வரை கைகளை மடக்கி குத்தி, முட்டியால் குத்தி, பற்களால் கடித்து உயிர் போகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சுவேல மலையில் இருந்த ராமபிரான், மீண்டும் வானரர்களை தடுத்து, அனைவரையும் விடுவித்தார்.

ராவணனிடம் திரும்பி வந்த சார்தூளவும் மற்ற ஒற்றர்களும், பெரும் மரண பீதியில் இருந்தனர்.


ராவணன் இவர்களின் வெளுத்து போன முகத்தை பார்த்து, மனஉளைச்சலுடன் "ஏன் இப்படி சோர்ந்து இருக்கிறீர்கள்? நீங்களும் எதிரிகளின் கட்டுப்பாட்டில் சிக்கினீர்களா?" 

என்று கேட்டான்.


நடந்த விஷயத்தை சொல்லி, குறிப்பாக 'ஒவ்வொரு வானரனும் எந்த தேவனின் அம்சமாக இருக்கிறார்கள்?' என்று சார்தூளா ராவணனிடம் சொல்கிறான்...

"அரசே! வானர அரசன் சுக்ரீவன், ருக்ஷராஜனின் மகன். 

ஜாம்பவான் கட்கதனின் இளைய மகன். தும்ரா கட்கதனின் மூத்த மகன். 

கேசரி ப்ருஹஸ்பதியின் மகன்.

இலங்கையில் புகுந்து ராக்ஷஸரகள் பலரை கொன்ற ஹனுமான் கேசரியின் மகன்.

சுசேனன் சாஷாத் தர்ம தேவதையின் மகன்.

ததிமுகன் சோம தேவதையின் அம்சமாக தோன்றியவன்.

சுமுகன் மரண தேவதையின் அம்சமாக தோன்றியவன்.

படைத்தளபதியான நீலன் அக்னி தேவனின் அம்சம்.

ஹனுமான் வாயு தேவனின் அம்சம்.

அங்கதன் இந்திரனின் பேரன்.

மைந்தனும் த்விவிதனும் அஸ்வினி குமாரர்களின் அம்சம்.

கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதன் அனைவரும் சூரிய தேவனின் பிள்ளைகள்.

10 கோடிக்கும் மேலான வானரர்கள் போர் செய்ய குவிந்து இருக்கிறார்கள்.




இளமையான வீரனாக இருக்கும் ராமன், தசரதனின் பிள்ளை.

அந்த ராமன் தான் கர, தூஷன, த்ரிசிரர்களை கொன்றார்.

யாருமே அந்த ராமனை எதிர்க்க முடியவில்லை.

விராதா மற்றும் கபந்தன் போன்ற ராக்ஷஸர்களையும் கொன்றவர் இந்த ஸ்ரீராமன்.

ஜனஸ்தானத்தில் இருந்த ஒட்டு மொத்த ராக்ஷஸர்களும் வேரோடு அழிந்து விட்டனர்.

கூடவே இருக்கும் லக்ஷ்மணன் விடும் பாணத்தை இந்திரன் கூட தடுக்க இயலாது."

இப்படி வானரர்கள் அனைவரையும் பற்றி சொல்ல, ராவணன் மனகுழப்பம் அடைந்தான்.

சிறிது நேரம் தன் மந்திரிகளிடம் ஆலோசனை செய்து விட்டு, தன் மாளிகைக்கு சென்றான்.


தனது மாளிகையில், "வித்யுஜிஹ்வா" என்ற மாயாவியை அழைத்து இவ்வாறு பேசினான்,

"சீதையை மாயத்தால் குழப்ப வேண்டும். நீ உடனேயே மாயையால் ராமனின் தலையையும், அவன் கையில் வைத்து இருக்கும் அம்பு, வில்லை கொண்டு வா" என்றான்.

(வித்யுஜிஹ்வம் ச மாயாக்யம் அப்ரவீத் ராக்ஷஸாதிப: ! மோஹயிஷ்யாவஹே சீதாம் மாயயா ஜனகாத்மஜாம் !! 

சிரோ மாயாமயம் க்ருஹ்ய ராகவஸ்ய நிஸாசர! த்வம் மாம் சமுபதிஸ்டஸ்வ மஹச்ச சசரம் தனு:!! - வால்மீகி ராமாயணம்)


வித்யுஜிஹ்வா உடனேயே மாயா ரூபமான ராமனின் தலையும், வில்லும் அம்பும் கொடுக்க, ராவணன் அந்த மாயாவிக்கு தான் அணிந்து இருந்த ஆபரணத்தை பரிசாக கொடுத்து அனுப்பினான்.


பிறகு, 

ராவணன் அசோக வனத்தில் இருக்கும் சீதையை பார்க்க ஆவலுடன் சென்றான்.


அபலையான சீதை தலை குனிந்து நிலத்தை பார்த்து கொண்டே, ராமபிரானின் நினைவிலேயே, பயமுறுத்தும் ராக்ஷஸிகள் சூழ அமர்ந்து இருந்தாள்.

மிகவும் உற்சாகமாக தன்னை பற்றி உயர்வாக சீதையை பார்த்து பேசலானான் ராவணன், 

"சீதா! நான் உன்னிடம் எத்தனை மதுரமாக பேசினாலும், அந்த ராமனை நம்பிக்கொண்டு ஏதோ உளருகிறாய். 

பரிதாபம்! கரண் போன்ற ராக்ஷஸரகளை கொன்ற உன் கணவன் இப்பொழுது போரில் கொல்லப்பட்டு விட்டான்.

உன் நம்பிக்கை அனைத்தும், என்னால் வேர் அறுக்கப்பட்டு சின்னாபின்னம் ஆக்கப்பட்டு விட்டது. 

(கர ஹந்தா ச தே பர்தா ராகவ சமரே ஹத:! சின்னம் தே சர்வதோ மூலே தர்பஸ்தே விஹிதோ மயா!  - வால்மீகி ராமாயணம்)

கலங்கி இருக்கும் சீதா, இனி நீ என்னுடைய மனைவியாக ஆக போகிறாய்.

(வ்யசனே ஆத்மன: சீதே மம பார்யா பவிஷ்யசி  - வால்மீகி ராமாயணம்)

சீதா! முட்டாள்த்தனமான நம்பிக்கையை விடு..  செத்துபோனவனை வைத்து என்ன செய்ய போகிறாய்?

(விஸ்ருஜே மாம் மதிம் மூடே கிம் ம்ருதேன கரிஷ்யசி  - வால்மீகி ராமாயணம்)

ஒழுக்கமானவளே! என் மனைவிகள் அனைவருக்கும் மேலே உன்னை ஆக்கி, பட்டத்து ராணியாக உன்னை ஆக்குகிறேன்.

(பவஸ்ய பத்ரே பார்யானாம் சர்வாசாம் ஈஸ்வரி மம  - வால்மீகி ராமாயணம்)

அல்ப புண்ணியங்கள் கொண்டவளே! மூடத்தனமாக நீ உன்னையே எல்லாம் தெரிந்தவள் என்று நினைத்து கொண்டு இருக்கிறாய்.

(அல்ப புண்யே நிவ்ருத்தார்த்தே மூடே பாண்டிதம் ஆனினி!  - வால்மீகி ராமாயணம்)

சொல்கிறேன் கேள்... உன் கணவன் ராமன் கொடூரமாக கொல்லப்பட்டு விட்டான்.

(ஸ்ருணு பர்த்ரு வதம் சீதே கோரம் வ்ருத்ர வதம் யதா!  - வால்மீகி ராமாயணம்)

இந்த ராமன் சுக்ரீவன் தலைமை ஏற்ற பெரும் படையை கூட்டிக்கொண்டு, என்னை கொல்வதற்கு கடற்கரை பக்கம் போர் புரிய வந்தான்.

(சமாயாத சமுத்ராந்தம் மாம் ஹந்தும் கில ராகவ:!  - வால்மீகி ராமாயணம்)

சூரியன் மறைந்த வேளையில், வடக்கு சமுத்திர கரையில் படைகளுடன் தங்கி இருந்தான்.

பயண களைப்பில் சோர்ந்து இருந்த இவர்கள் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தனர்.

என்னுடைய ஒற்றர் படை அங்கு சென்று இதை கவனித்தனர்.

ப்ரஹஸ்தன் தலைமையில் பெரும் ராக்ஷஸ படை அங்கு சென்றனர்.

(தத் ப்ரஹஸ்த ப்ரணீதேன பலேன மஹதா மம! - வால்மீகி ராமாயணம்)

ராமனின் மொத்த படைகளும் இரவோடு இரவாக அழிக்கப்பட்டது.

ராக்ஷஸர்கள் தங்களிடம் இருந்த பிராணிகளை பிடிக்கும் ஆயுதங்களை கொண்டும், கதையை கொண்டும், சக்கரத்தை கொண்டும், கம்புகளை கொண்டும், கத்தியை கொண்டும், அம்புகளை கொண்டும், கூர்மையான ஆணிகள் பதித்த கதையை கொண்டும், ஏவுகணை போன்ற ஆயுதங்களை கொண்டும் அடியோடு வானர கூட்டத்தை அழித்தனர்.

அந்த சமயத்தில், தூங்கி கொண்டிருந்த ராமனின் அருகில் சென்ற ப்ரஹஸ்தன் தன் கூரிய வாளால் ராமனின் தலையை சீவி விட்டான். அங்கு அவனை எதிர்ப்பதற்கு ஒரு ஆள் இல்லை.

(அத சுப்தஸ்ய ராமஸ்ய ப்ரஹஸ்தேன ப்ரமாதினா! அசக்தம் க்ருத ஹஸ்தேன சிரஸ் சின்னம் மஹாசினா! - வால்மீகி ராமாயணம்)


விபீஷணன் சிறைபிடிக்கப்பட்டான்.

லக்ஷ்மணன் எஞ்சி இருந்த வானர கூட்டத்துடன் விரட்டி அடிக்கப்பட்டான்.

சுக்ரீவன் கழுத்து நொறுக்கப்பட்டு கீழே வீழ்ந்தான்.

ஹனுமான் ராக்ஷஸர்களால் தாடை உடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.

ஜாம்பவான் மண்டி இட்டு காலில் விழுந்தான். அவனை ஈட்டியால் குத்தி மரத்தை சாய்ப்பது போல சாய்த்து விட்டனர்.

மைந்தன், த்விவிதன் இருவரும் வீழ்த்தப்பட்டனர். 

அனைவரும் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் அழுது விழுந்தனர்.

பனசன் பனச மரத்தை போல விழுந்தான்.

தரீமுகன் பலமுறை வெட்டப்பட்டு கீழே விழுந்தான்.

குமுதன் அம்புகளால் வீழ்த்தப்பட்டான். வலியால் கதற கூட முடியாமல் இறந்தான்.

அங்கதன் பல ஆயிரம் அம்புகளால் தாக்கப்பட்டு வீழ்ந்தான்.

வானர கூட்டம் யானைகளால் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

பலர் தேரிலும் குதிரைகளின் கால்களிலும் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

யானைகள் சிங்கத்தால் பின் பக்கத்தில் இருந்து தாக்கப்படுவது போல, ராக்ஷஸர்கள் வானரர்களை தாக்கினர். 

பலர் கடலில் விழுந்து உயிர் விட்டனர்.

பல வானரர்கள் கடற்கரையிலும், மலைகளிலும், மரங்களுக்கு இடையிலும் ராக்ஷஸர்களால் கொல்லப்பட்டனர்.

இப்படி என்னுடைய படைகள் உன் கணவனையும் அவன் படையையும் அழித்து விட்டனர்.

உனக்காக புழுதி படிந்த ரத்தம் ஒழுகும் ராமனின் தலையை கொண்டு வந்து இருக்கிறேன்."

இப்படி சொல்லிக்கொண்டே, அருகில் இருந்த ஒரு ராக்ஷஸியை பார்த்து, 

"வித்யுஜிஹ்வாவை போரிலிருந்து கொண்டு வந்த ராமனின் தலையோடு இங்கு வரச்சொல்" 

என்று கட்டளை இட்டான்.

வித்யுஜிஹ்வா மாயா ரூபமான ராமனின் தலையுடன், ராமபிரான் வைத்து இருக்கும் அம்பு வில்லை காண்பித்தான்.

ராவணன், வித்யுஜிஹ்வாவை பார்த்து, 

"அந்த ராமனின் தலையை சீதைக்கு முன் வை. கடைசி முறையாக அவள் கணவனை பார்த்து கொள்ளட்டும்." என்றான்

(அக்ரத குரு சீதாயா சீக்ரம் தாசரதே சிர:! அவஸ்தாம் பஸ்சிமாம் பர்த்ரு க்ருபனா சாது பஸ்யது!! - வால்மீகி ராமாயணம்)


உடனே வித்யுஜிஹ்வா சீதையின் முன் மாயா ரூபமான ராமபிரான் தலையை வைத்தான்.


ராவணன், மாயா ரூபமான ராமனின் வில்லை சீதையின் முன் வீசிவிட்டு, சீதையை பார்த்து,

"இதோ பார்.. ராமனின் நாண் ஏற்றப்பட்ட வில். இரவோடு இரவாக அந்த மனிதன் கொல்லப்பட்ட பின், ப்ரஹஸ்தன் இதை கொண்டு வந்தான்.

சீதா! நீ எனக்கு வசமாகி விடு."

என்று பேசினான்.

ராமபிரானின் தலையையும், தலை கேசத்தையும், அவர் அணிந்து இருந்த குண்டலம் போன்ற ஆபரணங்களையும், வில்லையும் பார்த்த சீதை, ராவணன் சொன்ன வார்த்தையை நம்பி விட்டாள்.

கதறி அழுத சீதை, நிலை தடுமாறி பேசலானாள். 

"கைகேயி! சந்தோஷமாக இருங்கள். இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய உத்தமர் கொலை செய்யப்பட்டு விட்டார்.

உங்களால் குலமே நாசமாகி விட்டது.

மற்றவர்கள் துயரத்தில் நீங்கள் ஆனந்தப்படுங்கள்.

எந்த விதத்தில் உங்களுக்கு ராமபிரான் துன்பம் செய்தார்?

எதற்காக அவருக்கு மரவுரி அணிந்து வனம் செல்ல செய்தீர்கள்?"

இப்படி சொல்லிக்கொண்டே வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரம் போல சீதை மயங்கி விழுந்தாள்.


சிறிது நேரத்தில் தன்னை சுதாரித்து கொண்டு, ராமபிரானின் தலையை முகர்ந்து கொண்டே, புலம்ப ஆரம்பித்தாள்...

"ஐயோ! நான் இறந்து விட்டேன். 

நீண்ட கைகள் உடைய என் நாதா! 

சத்தியத்தை கடைபிடிக்கும் நாயகா! நான் இறந்து விட்டேன்!

ஐயோ! நான் விதவை ஆனேனே! 


மனைவிக்கு முன்னால் கணவன் போவது நியாயமா?

ஒழுக்கத்தில் சிறந்தவரே! என்னை முந்தி கொண்டு நீங்கள் சென்று விட்டீர்களா?

என்னுடைய சோகத்திலிருந்து இனி என்னை மரணம் மட்டுமே மீட்க முடியும்..

ஐயோ! கன்றை இழந்த தாய் பசு போல, என் மாமியார் கௌசல்யா தவிப்பாளே!

உங்களுக்கு நீண்ட ஆயுசு என்று ஜாதகம் கணித்தார்களே!! 

அவர்கள் சொன்ன சொல் பொய் போனதே! இப்படி சிறுவயதோடு உங்கள் வாழ்வு முடிந்து விட்டதே!

எந்த நேரமும் சுதாரிப்புடன் இருக்கும் உங்களையும், காலம் விழுங்கி விட்டதா?

அரசாங்க அறிவு உள்ளவராயிற்றே நீங்கள்.. எப்படி நீங்கள் இப்படி உடலை விட்டு பிரிந்து இருக்க முடியும்?

பெரும் அபாயகரமான சூழ்நிலையிலும் தப்பித்து கொள்ளும் திறன் கொண்டவரல்லவா நீங்கள்?

உங்களை எப்படி இந்த இரவு கொள்ளை கொண்டது?

ஓ தாமரை கண்ணா! என்னை விட்டு பிரிந்து விட்டீர்களே!

எளிமையான என்னை விட்டு விட்டு, பூமியின் மேல் உள்ள ஆசையால் சென்று விட்டீர்களா?

இந்த அற்புதமான வில்லை நான் எத்தனை முறை மலர்களால் பூஜித்து இருப்பேன்.

குறை இல்லாதவரே! நீங்கள் உங்கள் மூதாதையர்களும், என் மாமனார் தசரதர் இருக்கும் லோகத்துக்கு சென்று விட்டீர்களா?

உங்களுடைய ஒழுக்கமான நடத்தையால் நீங்கள் நக்ஷத்திரமாக இருந்து கொண்டு இருக்கிறீர்களா?

ஏன் நீங்கள் என்னை பார்க்க வில்லை? 

என்னிடம் ஏன் பேசவில்லை?

இளமை காலத்தில் உங்களை மணந்த பின், உங்களை தானே நான் தொடர்கிறேன்.

மணமேடையில் என் கை பிடித்து, என்னை ஒருபோதும் விட மாட்டேன் என்று சொன்னீர்களே!

அதை ஞாபகபடுத்தி கொண்டு, உடனே என்னையும் அழைத்து கொள்ளுங்கள்.

(சம்ஸ்ருதம் க்ருஹ்னதா பாணிம் சரிஷ்யாமீதி யத் த்வயா! ஸ்மர தன் மம காகுத்ஸம் நய மாமபி துக்கிதாம்!! - வால்மீகி ராமாயணம்)

என்னை இந்த உலகத்தில் விட்டு விட்டு, வேறு உலகத்துக்கு ஏன் சென்றீர்கள்?

அடைக்கலம் தருபவரே! என்னால் அணைக்கப்பட்ட உங்கள் தேகத்தை, பிராணிகள் எப்படி இழுத்து செல்ல முடியும்?

வேத காரியங்கள் பல செய்தீர்களே. உங்களுக்கு வேத முறைப்படி இறுதி காரியங்கள் ஏன் கிடைக்கவில்லை?

நாம் மூன்று பேரும் வனவாசம் வந்தோம்.

இப்பொழுது லக்ஷ்மணன் மட்டுமே திரும்பி செல்கிறான்.

கௌசல்யா மாதா லக்ஷ்மணனை கேட்பாளே!! 

லக்ஷ்மணன் ராக்ஷஸர்களால் இரவில் நடந்த பேரழிவை சொல்லவேண்டி வருமே!

நான் இந்த ராக்ஷஸர்களிடம் சிக்கி இருப்பதையும், ராமபிரானை விண்ணுலகம் சென்றதையும் கேட்டால், கௌசல்யா மாதாவின் இதயம் சுக்கு நூறாகி விடுமே!!

இவர் எனக்காக கடல் கடந்து வந்தது பலன் அளிக்கவில்லையே!!

இந்த சிறிய சண்டையில் இவர் கொல்லப்பட்டு விட்டாரே!!

மனைவி என்ற பெயரில் நானே மரணமாக வந்து தொலைந்தேனே! 

இதை தெரிந்து கொள்ளாமல் ராகவன் என்னை மணந்து கொண்டு விட்டாரே!

நான் போன ஜென்மத்தில் ஏழைகளுக்கு தானம் செய்வதை நிறுத்தி இருக்கிறேன். அதனால் தான் யாருக்கும் அபயம் தரும் இவருக்கு மனைவியாக இருந்தும், இத்தனை துன்பத்தை அனுபவிக்கிறேன்.

ராவணா! என் உடலையும் ராமபிரானின் உடலோடு வைத்து விடு.

என் கணவனோடு என்னையும் எரித்து விடு. இந்த புண்ணிய காரியத்தையாவது செய்.

என் தலை ராமபிரான் தலையோடு சேரட்டும்.. என் தேகம் ராமபிரானின் தேகத்தோடு சேரட்டும். நான் அந்த உயர்ந்த ஆத்மாவான ராபிரானையே தொடர்கிறேன்!"

இவ்வாறு தன் கணவனின் தலையையும், வில்லையும் பார்த்து பார்த்து புலம்பினாள் சீதை.

இப்படி இவள் அழுது கொண்டு இருக்க, ராக்ஷஸ படையில் இருந்து சிலர் அங்கு வந்து கை குவித்து நின்றனர்.

பிறகு ராவணனை பார்த்து, 

"ப்ரஹஸ்தன் அனைத்து மந்திரிகளுடன் வந்து இருக்கிறார். உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறார். இது ஒரு அவசர செய்தி. தயவு செய்து உங்கள் அமைச்சர்களை பார்க்க அழைக்கிறோம்" என்றார்கள்.

இதை கேட்ட ராவணன் உடனே அசோக வனத்தை விட்டு, தன் சபையை நோக்கி சென்றான்.

ராவணன் நகர்ந்து போன உடனேயே, அங்கு இருந்த மாயா ரூபமான ராமபிரான் தலையும், வில்லும் மறைந்து போயின.

(அந்தர்தானம் து தச்சீர்ஷம் தச்ச கார் முகம் உத்தமம்! ஜகாம ராவணஸ்யைவ நிர்யான சமன் அந்தரம்!! - வால்மீகி ராமாயணம்)










Thursday 27 August 2020

கிருஷ்ணகிரி என்ற ஊர் எத்தனை பழமை வாய்ந்தது? வால்மீகி ராமாயணம் காட்டுகிறது.. மூன்று விதமான மனிதர்கள் இருந்தார்கள் என்றும் வால்மீகி ராமாயண சொல்கிறது. தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?..

ராமாயணம் நடந்த காலம் த்ரேதா யுகம்.. 
சுமார் 8 லட்சம் வருடம் முன்பு நடந்த அவதாரம்.
கலியுகம் ஆரம்பித்து (3102BCE) 5000 வருடங்கள் ஆகிறது.
கலியுகம் முன் துவாபர யுகம். இந்த யுகம் 8,64,000 வருடங்கள்.
துவாபர யுகத்திற்கு முன் த்ரேதா யுகம்.
ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்த சரித்திரம்.

அன்று த்ரேதா யுகத்தில், 'மூன்று விதமான மனிதர்கள்' இருந்ததாக சொல்கிறது - 'மனிதர்கள், வானரர்கள், ராக்ஷஸர்கள்'.

மனிதர்களை விட பலசாலிகளாகவும், மாயம் தெரிந்தவர்களாகவும், படித்தவர்களாகவும் இவர்கள் இருந்ததாக சொல்கிறது. 
ஆனால் குரங்கு போன்ற நிலையில்லா புத்தி 'வானரர்களுக்கும்', 
மனித மாமிசம் பச்சையாக உண்ணும் பழக்கம் 'ராக்ஷஸர்களுக்கும்' இருந்ததாக சொல்லப்படுகிறது.



ஹோமோசபியன் (home Sapien) என்ற நம்மை போன்ற உருவமைப்பு உள்ள மனிதர்களாக அகத்தியர், ராமபிரான், அயோத்தி மக்கள், மிதிலை மக்கள் என்று பலர் ராமாயணத்தில் காட்டப்படுகிறார்கள்.

இதை எழுதிய 'தமிழன் வால்மீகி' உட்பட மனித வர்க்கமாக காட்டப்படுகிறார்கள்.

ஹோமோ எரக்டஸ் (homo Erectus) என்ற மனித உருவம் கொண்டவர்கள் பல லட்சம் வருடம் முன்பு இருந்தார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது.
ஹோமோ எரக்டஸ் (homo Erectus) என்ற மனித உருவம் கொண்ட, தாவும் திறன் உள்ள ஹனுமான், சுக்ரீவன், அங்கதன் போன்ற வான்-நரர்கள் (வானரர்கள்) எப்படி இருந்தார்கள்? என்று ராமாயணம் காட்டுகிறது. 

ஹோமோ நைன்டெர்தல் (homo naenderthal) என்ற மனித உருவம் கொண்ட, பலசாலியான, மனித மாமிசம் உண்பவர்கள், பல லட்சம் வருடம் முன்பு இருந்தார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது.
ஹோமோ நைன்டெர்தல் (homo naenderthal) என்ற மனித உருவம் கொண்ட, மனித மாமிசம் உண்ணும் சூர்பனகா, கும்பகர்ணன், ராவணன், மாரீசன் போன்ற ராக்ஷஸர்கள் எப்படி இருந்தார்கள்? என்று ராமாயணம் காட்டுகிறது.

ராமாயணம் நடந்ததற்கு இலங்கை சாட்சி, ராம சேது (அணை) சாட்சி, கிருஷ்ணகிரி சாட்சி, அயோத்தி சாட்சி, மிதிலை சாட்சி..

இடம் மட்டுமல்ல, அறிவியல் காட்டும் 3 வகை மனிதர்களை பற்றி, அவர்கள் எப்படி இருந்தார்கள்? என்பதற்கும் ராமாயணம் சாட்சி.






அயோத்தி என்ற நகரம் மட்டும் பழமையானதல்ல, 'அயோத்தி' என்ற பெயர் கூட பழமையானது. 
இந்த நகரம்' ராமபிரான் காலத்துக்கும் முன்பேயே இருந்து இருக்கிறது.
குறைந்தபட்சம் 8 லக்ஷம் வருடம் ஆகியும், நகரத்தின் பெயர் நிலைத்து இருக்கிறது என்பதே 'அயோத்திக்கு' பெருமை.
இன்று வரை, அயோத்தி என்ற பெயரிலேயே இருக்கிறது.

அது போல 
'கிருஷ்ணகிரி' என்ற பெயரும் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் வருகிறது. 
8 லக்ஷம் வருடம் ஆகியும், நகரத்தின் பெயர் நிலைத்து இருக்கிறது. 

8 லட்ச வருடங்களுக்கும் மேல் இந்த பெயரை தனக்கே உரிமையாக கொண்டுள்ளது இந்த ஊர்.

வால்மீகி ராமாயணத்தில் 'யுத்த காண்டத்தில்' கிருஷ்ணகிரி என்ற இந்த ஊரின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது...

தாமரை போன்ற கண்களையுடைய ராமபிரான் மஹேந்திர மலையின் உச்சிக்கு சென்றார்.
அங்கிருந்து ஆமைகளும், மீன்களும் நிரம்பி இருக்கும் சமுத்திரத்தை கண்டார்.

பிறகு, வானர சேனையுடன், சஹ்ய மலை, மலய மலையை கடந்து, பிறகு வேலாவனம் என்ற காட்டை கடந்து கடற்கரையை அடைந்தார்கள். (இன்று ராமேஸ்வரம் என்று பெயர்)

(தே சஹ்யம் சமதிக்ரம்ய மலயஸ்ச மஹா கிரிம்! ஆசேதுரானுபூர்வ்யேன சமுத்ரம் பீமநிஸ்வனம்!
அவருஹ்ய ஜகாமாஸு வேலாவனம் அனுத்தமம் - வால்மீகி ராமாயணம்)

இதற்கு பிறகு விபீஷணன் ராமபிரானை சரண் அடைகிறார்.
சமுத்திர தேவன் ராமபிரான் முன் காட்சி கொடுத்து, 'நலன்' இந்த பாலத்தை கட்ட ஆரம்பிக்கட்டும், நான் அதை காக்கிறேன் என்று உறுதி அளித்தார்.

அப்பொழுது ராவணனின் ஒற்றன் 'சார்தூளா' என்பவன் ராமபிரான் கடற்கரை வரை வந்து விட்டதை தெரிவித்தான்.
ராவணன்  'சுகா' என்ற ராக்ஷஸ ஒற்றனை என்ன நடக்கிறது என்று பார்த்து வர உத்தரவு இட்டான். 

மாயாவியான இவன் பறவை ரூபம் எடுத்து பறந்து வர, அவனை வானரர்கள் பிடித்து இறக்கைகளை வெட்டி, சிறை பிடித்தனர்.

'தூதுவனை கொல்ல கூடாது' என்று இவன் கதற, ராமபிரான் அனைவரையும் தடுத்து விட்டார்.

'வெறும் 5 நாட்களில் பாலம் அமைத்து விட்டார்' நலன்
ராம சேது அமைக்கப்பட்டு, படைகளுடன் இலங்கையை வந்து அடைந்தார்.
இலங்கை வந்ததும் ராமபிரான் 'சுகா' என்ற ஒற்றனை விடுவிக்க சொல்லி விட்டார்.

'உயிர் போய் விடுமோ' என்ற பயந்து இருந்த சுகா, ராவணனிடம் ஓடி சென்று, 'ராமபிரான் படைகளோடு வந்து இலங்கைக்கே வந்து விட்டார்' என்று சொன்னான்.

அப்பொழுது ராவணன் சிரித்த கொண்டே,
"என்ன இது? ஏன் இப்படி இரண்டு கைகளும் ஒடிந்து இருக்கிறாய்? அந்த நிலையான புத்தி இல்லாத வானரர்களிடமா (homo erectus) மாட்டி கொண்டு விட்டாய்?" 
என்று சிரித்தான்.
(கச்சின்ன அநேக சித்தானாம் தேஷாம் த்வம் வசமாகத? - வால்மீகி ராமாயணம்)

"இலங்கைக்கே வந்து விட்டார்கள்" என்றதும், ராவணன், சுகா மற்றும் சாரண என்ற இருவரை அழைத்து மீண்டும் படைகளின் பலத்தை அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் போல உருவத்தை மாற்றி இவர்கள் வானர கூட்டத்தின் பலத்தை வேவு பார்க்க ஆரம்பித்தனர்.

விபீஷணன் இவர்களை கண்டுபிடித்து, ராமபிரானிடம் சொல்ல, இருவரையும் வானரர்கள் பிடித்து நிறுத்தினர்.




'ராவணன் தான் தங்களை அனுப்பினார்' என்று சொல்ல, ராமபிரான் சிரித்து கொண்டே, 
"உன் அரசன் சொன்ன வேலையை செய்து விட்டீர்களா? முழு படை பலத்தையும் பார்த்து விட்டீர்களா? இன்னும் பார்க்க வேண்டுமா? பார்த்து விட்டால் கிளம்புங்கள். 
இன்னும் பார்க்கவில்லை என்றால், விபீஷணனே உங்களுக்கு எங்கள் படைபலத்தை காட்டுவார்". 

இப்படி ராமபிரான் அனுமதியோடு அனைத்தும் விஷயங்களும் அறிந்து கொண்ட பின், ராவணன் இருக்குமிடம் சென்றனர்.

நடந்த விஷயங்களை கூறி, பல வானர வீரர்கள் பற்றியும், அவர்கள் எந்த தேசத்தில் இருந்து வந்துள்ளார்கள் என்றும் சொல்கின்றனர்.

சாரணன் ராவணனிடம், ஒரு வானரனை காண்பித்து சொல்கிறான், 

"இதோ, சிங்கம் போல பிடரி மயிருடன் இருக்கிறானே! 
மனதில் என்ன நினைக்கிறான் என்று முக பாவனை கொண்டு அறிய முடியாதபடி இருக்கிறானே! 
கொளுத்தும் நெருப்பை போல இலங்கையை பார்க்கிறானே! 
அந்த வானர வீரனின் பெயர் தான் 'ரம்போ'. 
இவன் விந்திய மலை, கிருஷ்ண கிரி, சஹ்ய மலை, சுதர்சன மலை பகுதிகளை ஆட்சி செய்கிறான்" 
என்று ராவணனிடம் சொன்னான்.

(விந்த்யம் க்ருஷ்ணகிரிம் சஹ்யம் பர்வதம் ச சுதர்சனம்! ராஜன் சததம் அத்யாஸ்தே ரம்போ நாமைஷ யூதப:!! - வால்மீகி ராமாயணம்)

'கிருஷ்ணகிரி' என்ற பெயர் 8 லட்சம் பழமை வாய்ந்தது என்று தெரிகிறது.

'அன்பில்' என்ற பிரதேசத்தில் அவதரித்த 'தமிழன் வால்மீகி' கொடுத்த ராமாயணத்தை, தமிழன் அனைவரும் படிக்க வேண்டும்.


Saturday 22 August 2020

சீதையை ராவணன் ஏன் நெருங்கவில்லை.. அத்தனை நல்லவனா ராவணன்? ராவணனே இதற்கு காரணம் சொல்கிறான்.. தெரிந்து கொள்வோமே....வால்மீகி ராமாயணம்

ராமர் இல்லாத சமயத்தில், சீதையை கடத்தி சென்றான் ராவணன்

தன்னை ஏற்பதற்காக, சீதைக்கு 1 வருடகால அவகாசம் கொடுத்தான்.

சீதையை ராவணன் ஏன் நெருங்கவில்லை.. அத்தனை நல்லவனா ராவணன்?

ராவணனே இதற்கு காரணம் சொல்கிறான்... தெரிந்து கொள்வோமே....

வால்மீகி ராமாயணம் - யுத்த காண்டம்:




ராமபிரான் வானர படைகளுடன், மகேந்திர மலை, சஹ்ய மலை, மலய மலையை தாண்டி, வேலாவனம் என்ற காட்டை தாண்டி, கடற்கரை அருகில் வந்து விட்டார் (இன்று ராமேஸ்வரம் என்று சொல்கிறோம்).


"கடலை கடந்து இலங்கை வந்து விட்டால் என்ன செய்வது? 

ஒரு வானரன் ஹனுமான் வந்தே இலங்கையை கலங்கடித்து விட்டான். கோடிக்கணக்கான வானரர்கள் உள்ளே நுழைந்தால்? இனி என்ன செய்ய வேண்டும்?"

என்று ராவணன் சபை கூட்டி, மந்திரிகளிடம் ஆலோசனை நடத்தினான்.


ராக்ஷஸர்கள் பலர், படைத்தளபதி ப்ரஹஸ்தா, வஜ்ரதம்ஸ்ட்ரா, நிகும்பன் (கும்பகர்ணன் பிள்ளை) ஆகியோர் ராவணனுக்கு ஆதரவாக பேசினார்கள். 

பிறகு விபீஷணன் பேசினார்.

விபீஷணன் மட்டும் "சீதையை தகுந்த மரியாதையுடன் திருப்பி அனுப்பி விடு" என்றார்.. 

உடனேயே சபையை கலைத்து விட்டு, வெளியே சென்று விட்டான் ராவணன்.


பிறகு ராவணன் அரண்மனைக்கு சென்று மீண்டும் விபீஷணன் சொல்லி பார்த்தார். 

"சீதையை அனுப்ப முடியாது" என்று மீண்டும் நகர்ந்தான்.


அடுத்த நாள், மீண்டும் சபை கூட்டினான் ராவணன்.


ஆறு மாத தூக்கத்துக்கு பின், சபைக்கு வந்து இருந்தான் கும்பகர்ணன்.

கும்பகர்ணன் ராவணன் செய்த இந்த பேடிதனமான காரியத்தை கடுமையாக கண்டித்தான்.. இருந்தாலும் 'ராமரை கொன்று யமலோகம் அனுப்புவேன். கவலைப்படாதே!' என்று சொல்லி அமர்ந்தான்.


ராவணன் ஆத்திரத்தில் இருந்தான்.

பிறகு மஹா பலசாலியான 'மஹாபார்ஷ்வன்' என்ற ஒருவன், ராவணனை பார்த்து கை குவித்து பேசினான்..

"ராமன் ஒரு சிறு பொடியன். அவனுக்கு மரத்தில் இருக்கும் தேன் கூட்டில் உள்ள தேனை கூட எடுக்க முடியாது.

நீங்கள் ஈஸ்வரன். 

ஈஸ்வரனுக்கே யார் ஈஸ்வரனாக முடியும்?

எதிரிகளை ஒடுக்க, சீதையை பலாத்காரம் செய்யுங்கள். 

அவளை அனுபவித்து விடுங்கள். பிறகு ஏற்படும் விளைவுகளை நாம் பார்த்து கொள்ளலாம்.

கும்பகர்ணன், உங்கள் மகன் இந்திரஜித் உங்களுடன் இருக்கும் போது, அந்த இந்திரன் தன் ஆயுதங்களை வீசினாலும் தடுத்து விடுவார்கள்.

சீதை திருப்பி கொடுப்பதோ (தானம்), சமாதானமோ, பேதமோ இங்கு தேவையே இல்லை. தேவைப்பட்டால் போர் செய்வோம்.

நம்மை எதிர்த்து எவன் வந்தாலும், அவன் மீது நம் ஆயுதங்கள் பாயும்"

என்று ராவணனுக்கு சாதகமாக பேசினான்.




மஹாபார்ஷ்வன் பேசிய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து, ராவணன் அவனுக்கு பதில் அளித்தான்.

"மஹாபார்ஷ்வா! நான் சொல்வதை கவனி. இது எனக்கு மட்டுமே இருந்த ரகசியம்.

மஹாபார்ஷ்வ நிபோதம் த்வம் 

ரஹஸ்யம் கிஞ்சித் ஆத்மன: 

- வால்மீகி ராமாயணம்

இது பல காலங்கள் முன் நடந்த ஒரு சம்பவம். நானே அதை உனக்கு சொல்கிறேன்.

சிர வ்ருத்தம் ததாக்யாஸ்தே 

யத் அவாப்தம் மயா புரா

புஞ்சிகஸ்தலா என்று ஒரு தேவ கன்னிகை, சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்ம தேவனை பார்க்க ஆகாய மார்க்கமாக அக்னியை போன்று சென்று கொண்டிருந்தாள்.

பிதாமஹஸ்ய பவனம் 

கச்சந்திம் புஞ்சிகஸ்தலாம் | 

சஞ்சூர்யமானாம் அத்ராக்ஷம் 

ஆகாசோ அக்னி சிகாமிவ ||

அவளை பலாத்காரம் செய்து அனுபவித்தேன்.

கலங்கிய குட்டை போல ஆன அவள், ப்ரம்ம தேவன் இருக்கும் சத்ய லோகத்துக்கு ஓடினாள்.

சா பிரசஹ்ய மயா புக்தோ

க்ருதா விவசனா தத: | 

ஸ்வயம்பு பவனம் ப்ராப்தா

லோலிதா நளினி யதா ||

மஹாத்மாவான ப்ரம்ம தேவன் நடந்ததை அறிந்து கொண்டார்.

என் மீது கோபப்பட்டு என்னை சபித்தார்.

தஸ்ய தச்ச ததா மன்யே

ஞாதம் ஆஸீன் மஹாத்மனா |

அத சங்குபிதோ தேவோ மாம்

இதம் வாக்யம் அப்ரவீத் ||

'இனி எந்த ஒரு பெண்ணையாவது பலாத்காரம் செய்து கெடுக்க நீ முயன்றால், உன் தலை சுக்கு நூறாகி போகட்டும்' என்று சொல்லி விட்டார்.

அத்ய ப்ரப்ருதி யாம் அந்யாம்

பலான் நாரீம் கமிஸ்யாமி |

ததா தே சதகா மூர்கா

பலிஸ்யதி ந சம்சய: ||

இந்த சாபத்தின் பயத்தால் தான், சீதையை பலாத்காரம் செய்யாமல் இன்று வரை இருக்கிறேன்."

இத்யஹம் தஸ்ய சாபஸ்ய

பீத: ப்ரசபம் ஏவ தாம் |

நாரோபயே பலாத் சீதாம்

வைதேகீம் சயனே சுபே ||

என்று பதில் சொன்னான்.


எப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன்!! என்று அறிந்து கொள்ளலாம்.

இப்படி, 

கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன், சாபத்துக்கு பயந்து, பிறர் மனைவியான சீதையை விடவும் மனம் இல்லாமல், 'ஒரு வருட காலம் தந்தாவது, சீதையின் மனதை மாற்றி விட வேண்டும்' என்று முயற்சி செய்து கொண்டிருந்தான்.




"பிறர் மனைவியை தொட நினைத்த ராவணனை ஆதரிப்பவன், எத்தனை கீழ்த்தரமானவனாக இருக்க வேண்டும்?" 

என்று நாம் தீர்மானிக்கலாம்.


தன் சொந்த சகோதரனனாலும், பலம் பொருந்தியவனனாலும், செல்வாக்கு மிகுந்தவனனாலும், அரசனே என்றாலும்

பிறர் மனைவியை அபகரித்து வைத்து இருந்த ராவணனை, மீண்டும் 3வது முறையாக சொல்லி பார்த்தார் விபீஷணன்


சபையில் அனைவருக்கு எதிராக எட்டி உதைத்து, 'நீ அந்த ராமனிடமே போ!' என்றான் ராவணன்.

'கீழ்தரமான இவனிடம் இனியும் இருக்க கூடாது' என்று 

விபீஷணன் ராமபிரானை சரண் அடைவோம் என்று முடிவு செய்து கிளம்பினார்.

சாபத்துக்கு பயந்த இந்த பேடி ராவணனை, உயர்த்தி புகழும் சிலரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

Wednesday 19 August 2020

How Krishna Idol Worship started? and Bhagavatham started? Hindus must know...about Grandson of Krishna and Grandson of Arjuna story.

That was the toughest time. Shri krishna had decided to depart to his abode.



Before his departure, Krishna spoke about his departure and spoke in length on various dharma, bhakti to Uddhava his best friend, his best devotee, his best relative, his best minister.  

On hearing the news of krishna departure, all the Pandavas, unable to bear the separation from Krishna, decided to leave this world. 

Before they left, Maharaj Yuddhisthir appointed Parikshit, son of Abhimanyu, as the emperor of the whole world, where there is no enemy.

Vajranabha, the great-grandson of Lord Krishna and jambavati, son of Sambha, was made the king of Mathura.

Then, pandava brothers along with draupati took vanaprastha and left the world one by one.

With sudden departure of Shri krishna and pandavas, the world become hopeless.
No one have inspiration to live. 
No one is excited about anything.

Even though the world is in peace with no war, everyone felt emptiness in their heart.

Parikshit, ruler of world with inconsolable loss, came to meet Vajranabha to console each other.
Both of them, greeted each other.. but no happiness.. no inspiration.



At this time, Shandilya rishi came to Mathura
Chandilya rishi asked about their welfare and happiness.

Vajranabha bow down at rishi feet and asked, 
"Will this world regain happiness again? 
After krishna's departure, whole world is mourning and striving to see the divine face of Krishna paramatma again.
After Krishna's departure, Uddhav also left his holy body. 
Pandavas also departed. 
We are at inconsolable distress. 
Will this world see happiness again?"

Chandilya Rishi replied, 
"Vajranabha.. Do not worry. 
World will regain happiness with Krishna presence who is paramatma and his divine appearance never cease. 
Uddhav who gave up his human body did not went to Vaikunda yet (Abode of Parabramma). He is still living in Vrindavan as Lotus stem in kusum sarovar, govardhan. Find him.
He will direct you the way.."



By hearing this, Vajranabha and Parikshit gathered hope

They went along with Chandilya Rishi to Kusum Sarovar where the lake was filled with Lotus.
They could not identify which lotus stem is Uddhava??.

Chandilya Rishi asked them to do bhajan on Radha Krishna which will show Uddhav presence. 

They began to sing kirtans and bhajans about Sri Radha Krishna. 

On hearing this, one specific lotus stem alone started to move
Chandilya Rishi noticed that Lotus stem which moved to the song of Krishna as Uddhav in disguise. 
They continued to sing on Radha Krishna. 
Pleased by their devotion, Sri Uddhava gave them his darshan. 

Looking at Vajranabha, Uddhava said, 
"Krishna is an avatar of Parabramma. 
He is omnipresent and his presence is everywhere. 
His appearance is divine and ever exist. 
His avatar itself is an appearance.
In his avatar himself, he showed that his appearance is divine and showed his presence in Hastinapur, sitting in Dwarka to save Draupati by showering colored sarees without a need of hands to give, ear to hear. 

Not just that, 
He became everything (living and non-living) when brahma deva took all his friends (vraja vasi childrens) and their cows including their clothes and pot. 

His appearance is always present. 
Those who wishes to see him with devotion, would definitely see him.

To see him again and experience krishna, i will tell you the 2 secret ways...  

Vajranabha, you install a Krishna Murthi similar to Sri Krishna. 

Those whoever Worship Krishna Murthi (Idol) with true devotion, 
Those whoever understand that Krishna himself became not just Cows and his Friend but even a non-living materials like pot in Brahma Mohana and 
Those who understand him as Parabramma and omni present, 
will surely going to experience Sri Krishna's presence in their life. 
The True devotees, will hear him speak, feel protected by evil."

Then Uddhava looked at Parikshit and said, 
"Parikshit! As of now, you continue to do your duty as a king of the world.  
An Auspicious day will come in your life. 
Eating a tasty fruit itself is delicious but it require little effort to bite and chew. 
But Drinking Tasty Fruit Juice is delicious and require no effort at all. 



Like Drinking a Tasty Fruit Juice and enjoying the sweetness, You will get the divine darshan of Suka Deva (Son of Vyasa) and he will shower you about krishna's supremacy and his supreme qualities and divinity like a fruit Juice to drink. 
That divine speech from Suka Deva himself is Sri Krishna.  
Just like i disguised in lotus stem to stay in Vrindavan, Krishna who is paramatma have disappeared and disguised into these divine words.  These divine words from Sri Suka is Srimad Bhagavatham. You are going to experience this great treasure.

Those who read and understand those words of Bhagavatham, will feel Krishna's presence at same moment."

Then Uddhava looking at both Vajranabha and Parikshit, said 
"Wherever the Idol of Krishna is worshiped and divine words delivered by Suka Deva is read, those places will become divine. 
Krishna presence will be felt in those places by everyone. 
People will regain their real happiness with Krishna presence." 

After consoling them, Uddhava disappeared. 
Vajranabha, created 3 images of Lord Krishna. 
He made the Image of Krishna as Govind Devji (now at Jaipur)
He made the image of Krishna as Bankey Bihari (now at vrindavan)
He made the image of krishna as Hari Dev (in Govardhan)

Those who worshiped Krishna Idol with true devotion, have got Darshan of Sri Krishna...  There are many great Saint, Sant and mahatmas have got Darshan of Krishna. 
12 Azhwars including Andal, Meera, Tulsi Das, Surdas, TukaRam, Ramakrishna, Jayadeva, Krishna Chaitanya and many.... 
Krishna Idol worship alone gives everyone the true happiness.  

Even if we don't have Devotion to the level of these Bhakt, even a pinch of Devotion is giving us a feel that we are protected and krishna guides us in right path.  

Many devotees feel that Krishna is protecting them.  
Many devotees still feel that Krishna guides them at every path. 

These divine experience can't be explained and expressed.  
Those who are worshiping Krishna Idol, even today feels the divinity and supreme guidance. 

For some years, Parikshit was ruling the entire world (Indus Valley Civilization starts as per History) with no enemy, no worries, huge wealth and beautiful wife, and beautiful son Janameyjaya.



When Parikshit roaming in forest hunt, he mistakenly dropped a dead snake on a rishi who was in meditation and returned back. 
Rishi's 7yr old son seeing a dead snake in his father shoulder, got angry and cursed the person who did this cheap behaviour to death in next 7 days by poisonous snake called "Dakshaka".

Parikshit being a grandson of Yudhistra who is known for his Dharma, felt ashamed of his irresponsible action made over a rishi. 
He didn't wanted to find alternate solution to save his life.

He decided to accept his fate and immediately asked their ministers to take over the ruling till his child "janamejaya" become adult

He left silently and sat near banks of Yamuna to face the death penalty due to curse

Looking at his Maturity, who was able to look at the human life as temporary and unpleasant reality, Suka Deva appeared in Front of him. 

On next 7 days, 
Suka Deva showered him about Krishna who is Parabramma Narayana who did many avatar of Kurma, Varaha, Narasimha, Vamana, Rama etc., 
He narrated the whole story of Krishna who is not just Parabramma but who himself is Grand Father to Parikshit.
This divine words of Suka Deva and Parikshit is "Srimad Bhagavatham".   
The places where Krishna Idol worship happens and where Srimad Bhagavatham is recited, krishna presence is evident.  

Those who read Bhagavatham will experience the divine of Krishna himself.
Those who worship Krishna Idol will experience his love and affection.

We all must remember Vajranabha, Grandson of Sri Krishna, when we look at any Krishna Idol. 
Any experience we gain from Krishna is because of grace of Vajranabha.  
 
We all must remember Parikshit, Grandson of Arjuna, when we read Srimad Bhagavtham.  
Any experience we gain from Krishna is because of grace of Parikshit. 

Hail Sri Krishna..  
Hail all the Krishna Devotees 
(Meera, Jayadeva, PurandharDas, Vallabha, Azhwar, Ramanuja, Adi Sankara, SurDas, Tulsi Das, Namdev, Tukka Ram, Krishna Chaitanya, Ramakrishna and so on.....)

Monday 17 August 2020

கிருஷ்ண பக்தியின் பெருமை. ப்ரம்ம தேவன் சொல்கிறார்.

 கிருஷ்ண பக்தியின் பெருமை:

'கிருஷ்ண லீலையில் தானும் பங்கு எடுத்து கொள்ள வேண்டும்' என்று ப்ரம்ம தேவன் ஆசைப்பட்டார். 


ஒரு சமயம், பிருந்தாவனத்தில் கண்ணனோடு மாடு மேய்த்து கொண்டிருந்த அனைத்து மாடு கன்றுக்குட்டிகள், சிறுவர்களையும், அவர்கள் கொண்டு வந்து கம்பு, துணிப்பை, பாத்திரம் அனைத்தையும் ப்ரம்ம லோகத்துக்கு மறைத்து கொண்டு போய் விட்டார்.

கண்ணனோ கவலையே இல்லாமல், தானே ஆயர் சிறுவர்களாக ஆகி, மாடுகளாகி, கன்றுகுட்டியாகி, கொண்டு வந்த பாத்திரம், துணிமணியாகவும் ஆகி விட்டார்.




ஒரு வருஷ காலம் ஆகி விட்டது.


உலகை படைத்த ப்ரம்ம தேவன், திரும்பி வந்து பார்த்த போது, 

"ப்ரம்ம லோகத்தில் வைத்து உள்ள சிறுவர்கள் உண்மையா? இங்குள்ள சிறுவர்கள் உண்மையா? எது என்னுடைய படைப்பு?"

என்று குழம்பினார். 


குட்டி கண்ணன், ப்ரம்ம தேவனுக்கு "உயிருள்ள பொருளாகவும், உயிரற்ற பொருளாகவும் பல ரூபத்தில் தானே இருக்கிறேன்" என்று, நாராயணனாக தரிசனம் கொடுத்தார்.


தன்னையும் படைத்த நாராயணன் தான் யாதவ கண்ணனாக இருக்கிறார் என்றதும், குழந்தை ரூபத்தில் இருந்தாலும்,  கண்ணனின் காலில் விழுந்து நமஸ்கரித்து, கண்ணீர் பெருக "நந்தகோபன் பிள்ளையே!! உமக்கு நமஸ்காரம்!" 

என்றார்.

"பரமாத்மா! பரவாசுதேவா! நாராயணா! உனக்கு நமஸ்காரம்! 

என்றே என் மதிப்பு தெரிந்து எப்பொழுதும் துதிக்கும் நீங்கள், 

இப்பொழுது, என்னை நந்தகோபன் பிள்ளையே!! உமக்கு நமஸ்காரம்!

என்று கூப்பிட்டு, எனக்கு நமஸ்காரம் செய்கிறீர்களே!! 

இப்பொழுது என் மதிப்பு என்ன?"

என்று 6 வயது யாதவ கிருஷ்ணன் சிரித்து கொண்டே ப்ரம்ம தேவனை கேட்டான்.


"நீங்கள் தான் பரவாசுதேவன் என்ற ஞானத்தோடு, 

பரவாசுதேவா! பரவாசுதேவா! 

என்று சொல்லும் போது ஈஸ்வர அனுபவம் ஏற்படுகிறதே தவிர, ஆனந்தம் ஏற்படவில்லை.


'நந்தகோபன் பிள்ளையே!' என்று சொல்லும் போது ஏற்படும் ஆனந்தம், பரமாத்மா! பரப்ரம்மா! என்று சொல்லும் போது ஏற்படுவதில்லை.


மேலும், 

உன் மதிப்பு தெரிந்தால், உன்னிடம் எளிதில் பழக முடியுமா?


பரமாத்மா என்று சொல்லும் போது, உன்னிடம் மதிப்பு ஏற்படுகிறது.

ஆனால், உன்னை 'கண்ணா' என்று அழைக்கும் போது, மதுரமான ஆனந்தமும் உண்டாகிறது.





ஒரு ஈ, சுவையான லட்டு இருப்பதை பார்த்து விட்டு, அதன் மதுரத்தை சுவைக்க ஆசைப்படுமா? அல்லது அதன் மதிப்பு என்ன, சாதாரண நான் இதை மொய்க்கலாமா?! என்று நினைத்து ஒதுங்குமா?


மதுரமான லட்டுவை பார்த்தவுடனேயே பல ஈக்கள் வந்து மொய்ப்பது போல, நாங்களும், நீ பரமாத்மாவாயிற்றே! நாராயணன் ஆயிற்றே! என்று உன் உயர்வை, உன் மதிப்பை கூட கவனிக்காமல், 

யாதவ சிறுவனாக லட்டு கிருஷ்ணனாக நீ இருக்கும் இந்த ரூபத்தை பார்த்தே சொக்கி போய் விடுகிறோம்.

உன்னையே மொய்த்து கொண்டு, ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்.

கண்ணனாக நீ காட்டும் இந்த ரூபம் தரும் ஆனந்தமே எனக்கும் பிரியமானது. 

இந்த பிருந்தாவனத்தில் எனக்கு ஒரு பிறவி கிடைக்க உன்னை பிரார்த்திக்கிறேன்"

என்றார்.


நாராயணனாகவே வழிபடும் ப்ரம்ம தேவனும், 'கிருஷ்ண பக்தியே பெரும் ஆனந்தத்தை தருகிறது' என்று நமக்கு காட்டுகிறார்.


அனைவரும் கிருஷ்ண பக்தியே செய்வோம்.

Sunday 16 August 2020

Who is the best employee to a business owner? Sri Rama says who is best, mediocre, worst employee. படியுங்கள்.

Who is the best employee to a business owner? 

Sri Rama says who is best, mediocre, worst employee.  படியுங்கள்.  

வால்மீகி ராமாயணா ஸ்லோகம்: (யுத்த காண்டம்)


ராமபிரானே பேசிய வாக்கு




இதை படித்தாலேயே நமக்கும் ராம பக்தி வந்து சேரும்.


யோ ஹி ப்ருத்யோ நியுக்தஸ்சன் பர்த்ரா கர்மனி துஷ்கரே !

குர்யாத் தத் அனுராகேன தமாஹு புருஷோத்தமம் !!

Able Servant who does even a difficult job with love and interest, instructed by his master is the best.


நியுக்தோ ய: பரம் கார்யம் ந குர்யான் ந்ருபதே ப்ரியம் !

ப்ருத்யோ யுக்த: சமர்தஸ்ச்ச தமாஹுர் மத்யமம் !!

Able Servant who does not do difficult jobs with love and interest, instructed by his master is the mediocre.


தன்னியோகே நியுக்தேன க்ருதம் க்ருத்யம் ஹனூமதா !

ந சாத்மா லகுதாம் நீத: சுக்ரீவஸ்சாபி தோஷித: !!

Able Servant who does not do any work instructed by his master, being indisciplined is the worst.

Saturday 15 August 2020

கோவிலை சுற்றி, பிறகு தன்னையே ஒரு சுற்றி கொள்வது ஏன்? தெரிந்து கொள்வோம்..

 கோவிலை சுற்றி, பிறகு தன்னையே ஒரு சுற்றி கொள்வது ஏன்? தெரிந்து கொள்வோம்..

பொதுவாக நதிகளை 'பெண்ணாகவும்', 

கடல், மலைகளை 'ஆணாகவும்', 

நம் வேத தர்மம் காட்டுகிறது.


நதிகளை "கங்கை, யமுனை, காவேரி, கோதாவரி, சரஸ்வதி,நர்மதா, சிந்து' என்று பெண்ணாகவே அழைக்கிறோம்.


ஒரு தாயை போல நமக்காக ஓடி வந்து, பயிர்களை வளர செய்து, நமக்கு அன்னமும், தாகத்துக்கு நீரும் தருகிறாள்.


'ஹிமாலய மலை, கோவர்த்தன மலை, திருமலை, அழகர் மலை' என்று மலைகள் அனைத்தையும் ஆணாக அழைக்கிறோம்.


மலைகளில் கோவர்த்தன மலையை "கிரி ராஜ்" என்றே இன்றும் அழைக்கிறார்கள்.


கடலை "சமுத்திர ராஜன்" என்று சொல்கிறோம்.





நதிகளுக்கு தகப்பனாக 'மலைகள்' சொல்லப்படுகிறது.


சமுத்திரம் நதிகளின் 'கணவன் என்று சொல்லப்படுகிறது.


மலைகளில் இருந்து ஓடி வரும் நதிகள், சமுத்திரனிடம் வந்து சேர்ந்து விடும்.


பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் செய்த பிறகு, 

கங்கை, காவிரி, கோதாவரி என்று அனைத்து நதிகளும் வருவதை விட, இன்று யமுனை மட்டும் சற்று மந்தமான வேகத்தில் வந்தாள்.


சமுத்திர ராஜனுக்கு 'இவள் மட்டும் ஏன் மந்தமாக தன்னை நோக்கி வருகிறாள்?' என்று தோன்றியது.


யமுனையிடம் "யமுனா! ஏன் இன்று மந்தமாக வருகிறாய்?" 

என்று கேட்டார்.


யமுனா தேவி, தன் கணவனிடம், "உங்களுக்கு தெரியாததா! பகவான் நாராயணன், கிருஷ்ண அவதாரம் செய்து இருகிறார். 

அவர் நான் ஓடும் வழியில் தானே, குழந்தையாக லீலை செய்கிறார்.


ஸ்ரீ பிருந்தாவனம் வழியாக நான் ஓடும் போது, அந்த நீலமேகம் போன்ற கண்ணன் கிளை தாழ்ந்து இருக்கும் மரத்தில் ஏறி, அமர்ந்து கொண்டு குழல் ஊதுகிறான்.


அப்பொழுது அந்த கண்ணனின் சங்கு சக்கரம் ரேகை பதிந்த பாதம், யமுனா நதியாக ஓடும் என் மீது படும் பாக்கியம் கிடைக்கிறது. 

இதை ரசித்து கொண்டே இருக்கும் என்னால், வேகமாக ஓட முடியாமல் மந்தமாகி விடுகிறேன்.


உங்களுக்கும் பரமாத்மாவின் பாத ஸ்பரிசம் கிடைக்க வேண்டும் என்கிற நினைவும் எனக்கு உண்டு.


பத்னியான நான், பரமாத்மாவை உங்களோடு சேர்ந்து அனுபவிக்க முடியாமல் போனாலும், உங்களுக்காக நான் இந்த பூக்களை பிரசாதமாக கொண்டு வந்து இருக்கிறேன்.





யமுனா நதியான என் மீது விழும் பல வித புஷ்பங்களை, தாமரை போன்ற மலர்களை, அந்த கண்ணனின் பாதம் படும்படியாக எடுத்து செல்வேன். 

அவர் பாத ஸ்பரிசம் இந்த மலருக்கு கிடைத்துள்ளது.


கிருஷ்ண பிரசாதம் கிடைத்த ஆனந்தத்தில் அந்த பரந்தாமனை ஒரு வலம் வந்து சுற்றி, பிறகு இந்த பாக்கியம் கிடைத்த என்னையும் தன்னைத்தானே சுற்றி கொண்டு உங்களிடம் வந்து சேர்ந்தேன்"

என்று சொல்லி தான் கொண்டு வந்த பூக்களை தன் பதியான சமுத்திர ராஜனிடம் சேர்த்தாள்.


கிருஷ்ண பிரசாதம் கிடைத்த ஆனந்தம் ஒரு புறம் இருந்தாலும்,

"யமுனாவுக்கு கிடைத்த பாக்கியம், தனக்கு இல்லாமல் உள்ளதே! 

கிருஷ்ண தரிசனமும், அவர் செய்யும் லீலைகளும் பார்க்க முடியாமல் போனதே" 

என்று வருத்தம் கொண்டாராம் சமுத்திர ராஜன். 


அனைவரது அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா, சமுத்திர ராஜனின் மனக்குறையை அறியாமல் இருப்பாரா?..


கம்சனை கொன்ற பிறகு, மதுராவுக்கு அதிபதியான ஸ்ரீ கிருஷ்ணர், சமுத்திர ராஜன் ஆசையை தீர்க்கும் விதமாக, கடலுக்கு நடுவே அதி ஆச்சர்யமாக துவாரகை என்ற நகரை உருவாக்கி, தன் அவதார காலம் முழுக்க, கிருஷ்ண தரிசனமும், கிருஷ்ண லீலையை பார்க்கும் ஆனந்தத்தையும், சமுத்திர ராஜனுக்கும் கொடுத்தார்.


கிருஷ்ண பக்தன் நினைப்பதெல்லாம் கிடைக்கும்.


யமுனா தேவி புஷ்பம் எடுத்து கொண்டு போய் கிருஷ்ண பாதத்தில் வைத்து, பிறகு கிருஷ்ண பிரசாதமாக எடுத்து கொண்டு, கோவிந்தனை வலம் வந்து, தன் பாக்கியத்தை நினைத்து தன்னையே ஒரு சுற்று சுற்றி பிறகு தன் வீட்டுக்கு செல்வது போல, 

நாமும் பெருமாளுக்கு நம் கையால் ஏதாவது கொடுத்து, பெருமாளிடம் பிரசாதமாக பெற்று கொண்டு, பெருமாளை வலம் வந்து, பிறகு தன் பாக்கியத்தை எண்ணி தன்னையே ஒரு சுற்றி கொண்டு, பிறகு நம் வீட்டுக்கு செல்லும் பழக்கம் ஏற்பட்டது.


பக்தியின் ஒரு வித வெளிப்பாடு இது. ஒரு அற்புதமான அனுபவம்.


எந்த செயலிலும் ஆழ்ந்த கருத்துக்கள் உடைய ஹிந்து தர்மத்தை மற்றவர் கேலி செய்ய மானமுள்ள ஹிந்து அனுமதிக்க கூடாது..