Followers

Search Here...

Showing posts with label மண்ணில். Show all posts
Showing posts with label மண்ணில். Show all posts

Thursday 13 April 2017

தெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது ? காரணம் என்ன? தெரிந்து கொள்வோமே

ஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள்?



ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது ?
உலகையே படைத்த தெய்வம் ஸ்ரீமந் நாராயணன், பூமியில் அவதாரங்கள் செய்தார்.
சிவன், அவதாரம் என்று செய்யாவிட்டாலும், திருவிளையாடல் என்று அவ்வப்போது பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
ஸ்ரீமந் நாராயணன், தன் ராம அவதாரத்தை போல ஒரு அவதாரம் ரஷ்யாவிலோ, ஜப்பானிலோ செய்து இருக்கலாமே ?

அப்படி என்ன இந்த உலகை படைத்த தெய்வத்துக்கு, இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை பிரியம்?

இவருக்கு மட்டுமில்லை, இவரால் படைக்கப்பட்ட தேவர்களுக்கு கூட மனிதனாக பிறக்கும் படி சாபமோ, அல்லது தனக்கே ஆசை வந்தால் கூட இந்த பாரத மண்ணில் மட்டும் பிறக்க ஆசை ஆசைப்படுகின்றனர். ஏன்?
இந்திரனின் அம்சமான "அர்ஜுனன்",
சூரியனின் அம்சமான "கர்ணன்",
8 வசுக்களில் ஒருவர் அம்சமான "பீஷ்மர்",
எம தர்மன் அம்சமான "விதுரர்",
தர்ம தேவன் அம்சமான "யுதிஷ்டிரர்",
கலி புருஷன் அம்சமான "துரியோதனன்".
இப்படி அனைவரும் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே கால் பதிக்க விரும்புகின்றனர்?

ஒரு அவதாரம் அமெரிக்காவில் செய்தால் தான் என்ன ?


மனிதனுக்கு எந்த இடம் குளிர்ச்சியாக இருக்குமோ, செல்வம் அதிகமாக இருக்குமோ? அங்கு சென்று வாழ ஆசை வரும்.

மனிதர்களுக்கு மேல், சொர்க்க லோகத்தில் இருப்பவர்கள் - தேவர்கள்.
தேவர்களுக்கு மேல் ஜன மற்றும் தப லோகத்தில் இருப்பவர்கள் - ரிஷிகள்.
ரிஷிகளுக்கு மேல் சத்ய லோகத்தில் இருப்பவர் - ப்ரம்மா.

அனைவரையும் படைத்து உலகை தன் ஆளுமையில் நடத்துபவர் ஸ்ரீமந் நாராயணன். இவர் இருப்பதோ வைகுண்டம் என்ற பரமபதம்.

மனிதர்களுக்கு சில இடங்கள் ஒரு சில காரணங்களால் பிடிப்பது போல, நம்மை விட உயர்ந்த இவர்களுக்கு, சில காரணங்களினால் "பாரத மண்ணில்" மட்டுமே விருப்பம் உள்ளது.

பல காரணங்கள், அதில் ஒரு சில :
1. பதிவ்ரதைகள் (கற்புக்கு மதிப்பு கொடுக்கும் பெண்கள், கற்புள்ள பெண்கள்) இந்த பாரத மண்ணில் தான் பிறக்கின்றனர்.
இங்கு பிறக்கும் பெண்களுக்கே இந்த உணர்வு அதிகம் உள்ளது.
பாரத நாட்டில் பிறந்த ஒரு குடும்பம் பிற நாட்டில் குடி பெயர்ந்தால், ஒரு சில தலைமுறையில் அங்கு பிறப்பதாலேயே இந்த உணர்வை இழந்து காணப்படுகின்றனர்.



2. இறை நம்பிக்கையோடு தான் இந்த பாரத மண்ணில் அனைவரும் பிறக்கிறார்கள்.
நாத்தீகனுக்கும் இந்த இறை உணர்வு அதிகம் இருப்பதாலேயே எங்கே கடவுள்? காட்டு என்று புலம்புகிறான்.
இறைவன் உண்டு, ஆனால் உணர முடியவில்லையே என்று புலம்புபவனே "நாத்தீகன்".
இந்த கடவுள் இல்லை என்கிற வெறுப்பு உள்ள நாத்தீகன் கூட மற்ற நாட்டில் இல்லை.
கடவுள் உண்டா? என்று கேள்வி கேட்பவனே நாத்தீகன்.
அந்த உணர்வு கூட இல்லாதவர்களே மற்ற நாட்டில் பிறக்கின்றனர்.

நாத்தீகன் என்ன தான் குட்டிகரணம் அடித்து "கடவுள் இல்லை" என்று முயற்சி செய்தாலும், இந்த பாரத மண்ணில் பிறப்பவர்களின் இறை உணர்வை அழிக்க முடியவில்லை.
போதாக்குறைக்கு, நாதீகனுக்கு பிறக்கும் குழந்தையே இறை நம்பிக்கையோடு பிறந்து இவன் நாத்தீகத்திற்கு வெடி வைக்கிறது.

3. "கோவிலுக்கு வழிபாடு செய்ய வா", "புனித நூல் என்று நாங்கள் சொல்லும் இந்த புத்தகத்தை படி", "கேள்வி கேட்காதே" என்று அடிக்காத குறையாக வற்புறுத்துகிறது உருவாக்கப்பட்ட பொய் மதங்கள்.

இந்த மதங்கள் உருவான நாட்டில், யாருக்கும் இறை சிந்தனை இயற்கையாக இல்லை.
"இறைவன் இருக்கிறான்" என்று புலம்பாத குறையாக சொல்லி சொல்லி நம்ப வைக்க வேண்டி இருக்கிறது.

ஆனால், இந்த பாரத மண்ணில் பிறந்த ஒரு ஹிந்து, தவறி போய், கர்ம வினையால் இந்த பொய் மதத்தில் போய் சேர்ந்தால் கூட, இவன் அந்த தெய்வத்துக்கு செய்யும் வழிபாடு, நம்பிக்கை, ஈடுபாட்டை பார்த்தால், இந்த பொய் மதங்கள் உருவான இடத்தில் இருப்பவர்களையே ஆச்சர்யப்படுத்துகிறது.

"நம்மிடம் கூட இந்த ஈடுபாடு இல்லை, இவன் செய்யும் வழிபாடு நம்மையே விழுங்கி விடும் போல இருக்கிறதே" என்று வியக்கின்றனர்.
இதற்கு காரணம் அந்த பொய் மதங்கள் அல்ல.
இந்த பாரத மண்ணில் பிறந்தவன் என்பதாலேயே, அவன் உள்ளே இருக்கும் இறை உணர்வு, அது பொய் மதமாக இருந்தாலும் மிளிர்வது போல காட்டுகிறது.

பாரத மண்ணில் பிறந்த காரணத்திற்காகவே, இந்த இறை நம்பிக்கை இவனை தொத்திக்கொண்டு இருக்கிறது.


4. இறை உணர்வுடனேயே இங்கு பிறப்பவர்கள் அனைவரும் இருப்பதால், ஏழை முதல் பணக்காரன் வரை, கோவிலுக்கு செல்லாமலேயே, பகவத் கீதையோ, திருவாசகமோ படிக்காமல் இருந்தாலும்,
  • ஒழுக்கம் மீறி நடந்தால் தவறு, 
  • பொய் பேச கூடாது, 
  • மற்றவர் பொருள் மீது ஆசை கூடாது, 

என்று யாரும் சொல்லாமலேயே பொறாமை படாமல், அமைதியாக, இருப்பதை கொண்டு வாழ்கின்றனர்.

மற்ற நாட்டிலோ, ஏழையாக இருப்பவன், பணக்காரனை சமயம் கிடைத்தால் சுட்டு கொன்று விட கூட தயங்குவதில்லை.
இந்த பாரத மண்ணில் பிறந்த ஏழை, பணக்காரன் பக்கத்து நிலத்தில் பங்களா கட்டி இருந்தாலும், பொறாமை படுவதில்லை. 
மாறாக, "இவன் புண்ணியம் செய்து இருப்பான் போன ஜென்மத்தில்" என்று மற்றவர்க்கு சமாதானம் செய்வான்.
பாவம் செய்து பணம் சேர்த்தால் குடும்பத்தில் என்ன ஆபத்து வருமோ, அதனால் பாவ பணத்தை விட, ஏழையாக இருப்பதே மேல் என்று கூட சொல்லுவான் இந்த பாரத மண்ணில் பிறந்தவன்.

5. மற்ற நாட்டில் பிறந்தவன், எதை கண்டாலும் அதில் இறைவன் இருப்பதை உணர்வதில்லை.
இந்த பாரத மண்ணில் பிறந்தவன், உப்பு தண்ணீர், ஆற்று தண்ணீர் என்று சொல்லாமல், இதற்கு ஆதாரமான தேவதைகளை மனதில் நிறுத்தி, கங்கை, யமுனை, காவேரி என்று இந்த நீர் நமக்கு கிடைக்க காரணமான தேவதைகளுக்கு மரியாதை செய்கிறான்.
இயற்கையை தெய்வ படைப்பாக பார்த்த இவன், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தான்.

6. மற்ற நாடுகளில் தேடி பார்த்தால் மட்டுமே ஒரு மகான் கிடைப்பார். அதுவும் சந்தேகமே !.
இங்கோ,
காந்தி பிறந்தார். இவர் மட்டும் தானா? என்றால் ஊருக்கு ஒரு மகான். நன்றாக கவனித்தால் நம் தாத்தா, பாட்டி, மூதாதையர்கள் கூட மகான்களாக இறை உணர்வுடன் வாழ்ந்தனர் என்று தெரிய வரும்.
இந்த பாரத மண்ணின் விஷேஷமே இதற்கு காரணம்.

7. இந்த பாரத மண்ணில் பிறந்தவனுக்கு, எதை கற்றுக்கொண்டாலும், அதன் மூலமாக இறைவனுக்கு தொண்டு செய்ய முடியுமா? என்று தோன்றும்.

சிற்பத்தில் திறன் உள்ளவன்,
கட்டிடங்கள் கட்டும் திறன் உள்ளவன்,
அரசன் உள்பட அனைவரும் இதே உணர்வுடன் தான் இருந்தனர்.
அரசர்கள் கட்டியுள்ள கோவில்களும், அதன் கட்டிட அமைப்பும், அதில் உள்ள சிற்பங்களும் போதுமான சான்று.
இந்த பாரத மண்ணில் பிறந்தவனுக்கு இறை உணர்வுடன் தான் எந்த வேலையும் நடக்கும்.

8. இந்த பாரத தேசம் மற்ற சில நாட்டை விட பரப்பளவில் சிறியது.
ஆனாலும், இங்கு பிறந்த காரணத்தினாலேயே இவர்கள் அறிவாளிகளாக பிறக்கின்றனர். 

அத்தனை பெரிய பெரிய நாடுகளில், பேசும் மொழியோ "ஒன்று" அல்லது "இரண்டு". இவர்கள் அறிவு இவ்வளவு தான்.



ஆனால் இந்த பாரத மண்ணிலோ,
நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள். 
பல வித நாகரீக உடைகள். 
மொழிகள் என்றால் வெறும் காட்டுமிராண்டி பாஷை இல்லை. இலக்கணம் பொருந்திய மொழிகள்.
இலக்கணத்தோடு மொழியை ஒரு மடையன் உருவாக்க முடியுமா?

இதை விட ஆச்சர்யம்,
பூமியில் வாழும் நாம், பூமிக்கும் மேல் உள்ள புவர் என்ற நக்ஷத்திர லோகம் தாண்டி, சொர்க்க லோகம், ஜன, தப, சத்ய லோகத்தில் பேசப்படும் சமஸ்க்ருதத்தை கண்டுபிடித்து அதன் பொருளையும் அறிந்து, அதன் மூலமாக
  • ப்ரம்மா யார்? 
  • முழு முதற் கடவுளான அந்த ஸ்ரீமந் நாராயணன் யார்? 
  • தேவர்கள் யார்? 
  • நாம் யார்? 
  • ஏன் பிறந்தோம்? 
  • நம் கடமை என்ன? 

என்று பல கேள்விகளுக்கு விடையை கண்டுபிடித்து, அதை அந்த அந்த ஊரில் பிறந்த மகான்கள், தமிழில், கன்னடத்தில், ஹிந்தியில், தெலுங்கில் காவியங்கள் போன்றும், கீர்த்தனைகள் போன்றும் தந்தனர் என்று பார்க்கிறோம்.

இந்த எந்த வித ஆச்சர்யங்களும் இல்லாது, தன் வயிற்றை நிறைக்கும் வழி என்ன? என்று மட்டுமே பார்க்கும் மனிதர்களே பொதுவாக பிற நாட்டில் பிறக்கின்றனர்.

இப்படி பல காரணங்களினால், தேவர்கள், பாரத மண்ணையே விரும்புகின்றனர்.
நாராயணன் தன் அம்சமாக இந்த உலகத்தில் அவதாரம் செய்ய நினைத்தால் கூட, இந்த பாரத மண்ணில் பிறக்கவே ஆசைப்படுகிறார்.

இறை உணர்வு அதிகம் உள்ளவர்கள் பிறப்பதாலேயே, தேவர்கள் முதல் நாராயணன் வரை இவர்கள் அவதாரம் இந்த பாரத மண்ணிலேயே நடக்கிறது.

மற்ற நாடுகளில், மூலைக்கு மூலை இறை உணர்வு இல்லாது, உலகத்தில் உள்ள அனைத்தும் தான் அனுபவிக்கவே என்ற சுயநல உணர்வுடன் பிறக்கின்றனர்.

இந்த பாரத மண்ணில் மட்டும் தான், மூலைக்கு மூலை மகான்கள் பிறக்கின்றனர்.
கடல் போன்ற மகான்கள் கூட்டத்தில், ஒரு சில துளி மகான்கள் பெயர்கள் இப்போது நம் நினைவில் செலுத்தலாம்.
  • காஞ்சி மகா பெரியவர், 
  • காந்தி, 
  • பாரதியார், 
  • விவேகானந்தர், 
  • ராமகிருஷ்ணர், 
  • தியாகராஜர், 
  • விஜய தாசர், 
  • பத்ராச்சல ராமதாசர், 
  • ஸ்ரீ ராகவேந்திரர், 
  • துக்காராம், 
  • ஸமர்த்த ராமதாசர், 
  • துளசி தாசர், 
  • கனக தாசர், 
  • புரந்தர தாசர், 
  • சுரதாசர், 
  • கபீர் தாசர், 
  • ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், 
  • வல்லபாச்சாரியார், 
  • மணவாள மாமுனிகள், 
  • நரசிம்ஹ மேதா, 
  • நாம தேவர், 
  • மத்வாச்சாரியார், 
  • ஜயதேவர், 
  • ஸ்ரீ ராமானுஜர், 
  • நாதமுனி, 
  • ஆதி சங்கரர்,
  • நாயன்மார்கள், 
  • ஆழ்வார்கள்..... 
  • வள்ளுவர்
  • வள்ளலார்
  • திருமூலர்
  • சித்தர்கள்




இன்னும் கோடி மகான்கள் இந்த பாரத மண்ணில் உதித்தவர்கள்.

இந்த மண்ணில் பிறக்க தேவர்களும் ஆசைபடும் காரணம் புரிந்தால், இந்த மண்ணில் நாம் புழுவாகவோ, நரியாகவோ, பிறக்காமல், குருடனாகவோ, நொண்டியாகவோ பிறந்து விடாமல்,
அதற்கும் மேல், பாரத மண்ணில் பொய் மத குடும்பத்தில் பிறக்காமல், ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, பிறந்த இடமோ, வாழும் ஊரோ திவ்ய க்ஷேத்திரமாகவும் இருந்து இருந்தால், நாம் செய்த புண்ணியம் தானாகவே நமக்கே புரியும்.

ஹிந்துவாய் பிறப்பதே புண்ணியம்.
பாரத மண்ணில் ஹிந்துவாய் பிறப்பது தேவர்களே பொறாமைப்பட வைக்கும் மகா புண்ணியம்.



Sandhyavandanam Afternoon tamil - Hear and understand meaning of each sloka

Sandhyavandanam Evening tamil - Hear and understand meaning of each sloka



Sandhyavandanam Morning tamil - Hear and understand meaning of each sloka