Followers

Search Here...

Showing posts with label கலியுகத்தில். Show all posts
Showing posts with label கலியுகத்தில். Show all posts

Wednesday 1 March 2017

ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் நாம் கடைபிடிக்க சொன்ன வழி என்ன?

ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் நாம் கடைபிடிக்க சொன்ன வழி என்ன?
தேவையான காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் வழியை கடைபிடிக்காமல் நாம் இருந்ததால், இந்தியா முழுவதும் எந்த நிலைக்கு ஆனது?


இனியும் ஸ்ரீ கிருஷ்ணரின் வழியில் செல்லாமல் இருந்தால் என்ன ஆகும் ?

நம் வரலாற்றை நோக்கி ஒரு அலசல் :

பொதுவாக, நம் ஹிந்து தேசத்தில், அனைவரும் தர்மம் தெரிந்தவர்கள். மிகமிக நல்லவர்கள்.

இவர்களிடம் உள்ள பெரிய தவறு என்னவென்றால்,
ஒரு "அதர்மம் செய்பவனை நேரில் கண்டாலும் அவனை எதிர்க்காமல், பதில் அடி கொடுக்காமல், அதர்மம் செய்பவர்களை தர்ம வழியிலேயே திருத்த முயற்சி செய்தனர் அல்லது அமைதி காத்தனர்".

"ஒரு கன்னத்தை காட்டினால் மறு கன்னத்தையும் காட்டு"
என்பது இது போன்ற செயல் தான்.
இது நம் ஹிந்து மதத்தில் உள்ள சந்யாசிகளுக்கும், ப்ராம்மணர்களுக்கும் சொல்லப் பட்டு இருக்கிறது.
ஏகநாதர் என்பவர் ஓரு ப்ராம்மணர். இவர் பண்டரிநாதனின் பக்தர்.
இவர் காலத்தில் அக்பரின் இஸ்லாமிய சாம்ராஜ்யம் இந்தியா முழுவதும் பரவி இருந்தது.
ஹிந்து அரசர்கள் பலர் கப்பம் கட்டியும், சில வீர அரசர்கள் பாரதத்தை இவர்களிடம் காக்கவும் சண்டை இட்டனர்.

இப்படிப்பட்ட காலத்தில், இவர் ஒரு நாள், பாண்டுரங்கனின் திருநாமத்தை சொல்லியபடியே கோதாவரி நதியில் நீராடிவிட்டு, திரும்பி வந்து, ஜெபம் செய்யத் தொடங்கினார்.

இதை பார்த்த ஒரு மிலேச்சன் (ஹிந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாதவன்) பாண்டுரங்கனை தியானித்து ஜெபம் செய்து கொண்டிருந்த ஏகநாதரின் மேல், தாம்பூலம் கலந்த எச்சிலை அவன் வாயிலிருந்து முகத்தில் காரி உமிழ்ந்தான். ஹிந்துக்கள் தன்  நாட்டில் வாழ முடியாத நிலை.
ஆனால், ஏகநாதர் அவனை கோபிக்கவில்லை.

பாண்டுரங்கனின் திருநாமத்தை சொல்லியபடியே மீண்டும் கோதாவரி நதியில் நீராடிவிட்டு, திரும்பி வந்து ஜெபம் செய்யத் தொடங்கினார்.
மீண்டும் துப்பினான்.

இது போல 108 தடவைகள் முகத்தில் துப்பி கொண்டே இருந்தான் அந்த மிலேச்சன் .
கடைசியில் அந்த முரடன் ஓய்ந்து போய் , இவரின் பொறுமை என்ற தர்மத்தை பார்த்து, ஏகநாதரின் காலில் விழுந்து,
"சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள்" என்றான்.

ஏகநாதரோ,
"உன்னால் எனக்கு இன்று பாண்டு ரங்கனின் பெயரை 108 தடவை குளித்து விட்டு சொல்லும் பாக்கியம் ஏற்பட்டது" என்றார்.
இது பிராம்மண லட்சணம். ஸாது லட்சணம்.

இது கோவிலில் தொண்டு செய்யும் ஒரு ப்ராம்மணனுக்கு என்று உள்ள தர்மம்.

ஆனால் இதை ஒரு அரசனோ, நாட்டை காக்கும் வீரர்களோ எடுத்து கொண்டால் அந்த தேசம் அழிய வேண்டியது தான்.

இந்த காரணத்திற்காகவே ஸ்ரீ கிருஷ்ணர்
"அதர்மத்தை அதர்மத்தாலேயே வெற்றி கொள்" என்கிறார்.
பாரத போரில் அதை நமக்கு காட்டினார்.

1025AD, முகம்மது கஜினி 17 முறை குஜராத் வழியாக இந்தியாவில் நுழைய பார்த்தான். 17 முறையும் தோற்றான்.
17 முறையும் தோற்று, 18வது முறை ஹிந்து அரசனை வென்று, நாட்டை சூறையாடி,  சோம்நாத்தில் உள்ள சிவ ஆலயத்தை இடித்து, பல கோடி மதிப்புள்ள செல்வங்களை கொள்ளை அடித்து சென்றான்.
இப்படி நம் வீட்டில் கொள்ளை அடுத்தவனை புகழ்ந்து,
"17 தடவை தோற்றாலும் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்" என்று குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் புகுத்தி, ஒரு திருடனை புகழும் அவலம், இந்தியாவில் மட்டும் தான். கொள்ளை அடித்த தங்க வைடூரிய குவியலை எதுத்துக்கொண்டு தன்  நாட்டில் குவித்தான்.
17 முறையும், முகம்மது கஜினியை தோற்கடித்த ஹிந்து அரசனை பற்றி பாட புத்தகத்தில் இல்லை. 
17 முறை வெற்றி கொண்ட ஹிந்து அரசன் வீரனா? ஓடியவன் வீரனா?


17 முறையும் அட்டகாசம் செய்த ஒரு திருடனை, ஒவ்வொரு தடவையும் மன்னித்து அனுப்பிய ஹிந்து அரசன், ஏகநாதர் செய்த செயலுக்கு ஒப்பானது.

ஏகநாதர் ப்ராம்மணர். பரவாயில்லை.
அரசனாய் இருந்து தண்டிக்காமல்,  ஒரு முறை, இரு முறை அல்ல, 17 முறை மன்னித்தார்.

ஒரு விதத்தில் இந்த ஹிந்து அரசனின் நல்ல குணம் தெரிந்தாலும், நாட்டை இப்படி சாதுவாக இருந்து காக்க முடியாது என்பதே நாம் வரலாற்றை படிக்கும் போது கற்க வேண்டிய பாடம்.

ஒருமுறை, இந்த ஹிந்து அரசன் கிருஷ்ணரின் வழியை பின் பற்றி இருந்திருந்தால் !! முதல் படையெடுப்பிலேயே இந்த திருடன் கொல்லப்பட்டு இருப்பான்.
பாம்பு "விஷம் கக்கும்" என்று தெரிந்தும், மன்னித்து விட்டதன் விளைவே, 1947ல் இந்தியர்கள்  பிச்சைகாரர்களாக விடப்பட்டு, இன்று இந்தியா வளரும் நாடாக ஆனதற்கு காரணம்.
இப்பொழுது இருக்கும் பல கிழக்கு நாடுகள் இந்தியாவின் செல்வத்தை கொண்டே அவர்கள் நாட்டை வளர்த்துள்ளது, கோஹினூர் வைரம் வரை.

இப்படி நம் வரலாறு படித்து தெரிந்து கொள்வதால், நமக்கு என்ன பயன்?
நாம்
"இன்று செய்யும் சில தவறுகள்" 
"நம்மால் முடிந்தும், செய்யாமல் அமைதியாக விட்ட நல்ல காரியங்கள்", 
அடுத்த பல தலைமுறைகளை, நம் செயலால் கஷ்டப்பட வைத்து விடும்.

ஒரு வேளை, இந்த ஹிந்து அரசன் கிருஷ்ணரின் வழியில் சென்றிருந்தால், 1025 ADயில் ஆரம்பித்த கொள்ளை, 1947 AD வரை தொடர்ந்து இருக்காது. இதுவே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

  • தீயவனுக்கு மன்னிப்பு கூடாது.
  • நல்லவர்களை பலர் சேர்ந்து காக்க வேண்டும். நல்லவர்களை இனம் கண்டு நட்பு கொள்ள வேண்டும்.
  • தீயவனை தீயவனாகவே எதிர்க்க வேண்டும்.
  • அதர்மம் செய்பவர்கள் எப்பொழுதும் அதர்மமே பேசுவார்கள்.
  • அதர்மம் செய்பவர்கள் தர்ம வழியில் இருப்பவர்களை கிண்டல் செய்வார்கள்.

அதர்மம் செய்பவர்களையும் தர்மம் பேச வைக்கலாம்.எப்படி?
அதர்மம் செய்பவர்களும் ஒரு சமயம் தர்மம் பேசுவார்கள். எப்போது ?

தனக்கு ஒரு அதர்மம் நடக்கும் போது, அதர்மம் செய்பவர்களும் தர்மம் பேசுவார்கள்.
இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணர்
"அதர்மத்தை அதர்மம் கொண்டு பதில் கொடு.
அப்பொழுது தான் அதர்மம் செய்பவனும் 'தர்மம் பேசுவான்'" என்கிறார்..
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வது "தரம் சூக்ஷ்மம்"


ஒரு திருடன் "ஏன் திருடுகிறாய்?" என்று கேட்டால், தான் செய்யும் அதர்மத்துக்கு பல வித நியாயம் கற்பிப்பான்.
தான் செய்தது அதர்மம் என்று ஒப்புக்கொள்ளவே மாட்டான்.

அதே திருடன் வீட்டில் 10 பவுன் நகை திருடு போனால்,
"ஐயோ ! இது நியாயமா? தர்மமா?"
என்று தர்மம் பேசுவான்.

இந்த சம்பவம் ராமாயணத்திலும், பாரத போரிலும் காண்கிறோம்.

ஹனுமான் கடலை தாண்டி இலங்கையில் இறங்கிய போது, ஒரு பெண் ராக்ஷஷி (லங்கினி) எல்லையை காவல் (lady defence force in srilanka 😊) காத்துக் கொண்டிருந்தாள்.
பெண்ணாக இருக்கிறாளே ! என்று, இவளை அடிக்க வேண்டாம், மெதுவாக உள்ளே சென்று விடுவோம் என்று ஹனுமான் தீர்மானித்து உள்ளே நடக்கலானார்.
இதை பார்த்த இவள், "என்னை மீறி உள்ளே செல்ல முடியாது, முடிந்தால் என்னிடம் போர் செய்" என்றாள்.

அடிக்க மனம் வராமல், லேசாக தன் இடது கையால் ஒரு தட்டு தட்டினார். அதுவே பெரிய அடியாக அவளுக்கு தெரிந்தது. தலை சுற்றியது.

அது வரை "என்னிடம் சண்டைக்கு வா" என்று அழைத்த லங்கினி திடீரென்று தர்மம் பேசலானாள்..
"இப்படி ஒரு பெண்ணை அடிக்கலாமா ? இது நியாயமா?" 
என்று புலம்பி, "உள்ளே தாராளமாக செல்லுங்கள்" என்று வழி விட்டாள்.

இதே போல வாலியும் தன் சொந்த தம்பி உயிருடன் இருக்கும் போது, தம்பியின் மனைவியை தன் மாளிகையில் வைத்துக்கொண்டு அட்டகாசம் செய்தான்.
பார்க்கும் இடமெல்லாம் துரத்தி துரத்தி தன்  தம்பி சுக்ரீவனை அடிப்பான். நாடு துரத்தினான்.


ராமர் மறைந்து நின்று அம்பு விட்டு கொல்ல, சாகும் தருவாயில் தர்மம் பேசலானான்.
"மறைந்து நின்று கொல்லலாமா? நியாயமா? தர்மமா ?" என்று புலம்பினான்.

பாரத போரில், ஒரு சமயம் அர்ஜுனனின் தேர் சக்கரம் குழியில் மாட்டிக் கொள்ள, ஸ்ரீ கிருஷ்ணரே தோள் கொடுத்து சக்கரத்தை தூக்க, இந்த சமயத்தில் கர்ணன் சர மாறியாக அம்புகளை ஸ்ரீ கிருஷ்ணர் மீது செலுத்தினான்.
ஸ்ரீ கிருஷ்ணர், கர்ணனின் செயலை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார்.
அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் தேர் உடைந்த போது, தேர்  சக்கரத்தை சரி செய்ய கீழே இறங்கும் அபிமன்யுவை, கர்ணன் அம்பு விட்டு பலருடன் சேர்ந்து கொன்றான்.

இன்னொரு சமயம், கர்ணன் தேர் மாட்டிக்கொள்ள, கர்ணனே சக்கரத்தை தூக்க வேண்டிய நிலை வந்த போது, அர்ஜுனன் தர்மப்படி சண்டை இடக்கூடாது என்று காத்து இருக்க, ஸ்ரீ கிருஷ்ணர், கர்ணனின் அதர்மத்தை காட்டி,
"அவனை அவன் வழியிலேயே அடித்து வீழ்த்து" என்றார்.
அடிபட்டு விழுந்த கர்ணன், சாகும் தருவாயில் கண்ணனை பார்த்து
"இப்படி தர்மம் மீறி செய்யலாமா ?" என்று கர்ணனின் வாயிலும் தர்மம் வந்தது.
கண்ணன் கர்ணனை பார்த்து
"உனக்கும் தர்மம் என்றால் என்ன என்று கடைசியாக ஞாபகம் வந்ததே!" என்றார்.


  • தர்ம வழியை பின்பற்றுபவனிடம், நீயும் தர்ம வழியை காட்டு.
  • அதர்ம வழியில் இருப்பவனை, அவன் செய்த அதர்ம வழியிலேயே சென்று ஒரு பாடம் புகட்டு.



"ஒரு கன்னத்தை காட்டு அடிக்கிறேன்", என்பவனுக்கு "மறு கண்ணத்தையும் காட்டு" என்பது சந்யாசிகளுக்கு அழகாக இருக்கலாம்.

நாட்டை காக்க, தன் கலாச்சாரத்தை காக்க, தன் வீட்டை காக்க இது ஒருபோதும் பயன்படாது என்பதே நம் வரலாறு காட்டுகிறது.

"ஒரு கன்னத்தை காட்டு" என்று கேட்பவனை, அவன் அடிப்பதற்கு முன்னரே, அவன் இரு கன்னத்திலும் சேர்த்து அறைந்து விடு.
இப்படி செய்வதாலேயே, இது போன்று அதர்மமாய் கேட்பவர்கள் உடனே தர்ம வழிக்கு வருவர்.

மேலும் தர்ம வழியில் நடப்பவர்கள் (ஏகநாதர் போன்றோர்) இது போன்ற தீயவர்களிடம் தப்புவார்கள்.

இதுவே ஸ்ரீ கிருஷ்ணர் காட்டும் வழி - "தர்ம சூக்ஷ்மம்".
இந்தியாவிற்கு இப்போது மிக தேவையான தர்மம் இது.

கலியுகம் பிறக்க போகிறது என்பதை அறிந்த பகவான் "நாராயணன்" ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்து, நமக்கு சொன்ன முக்கிய பாடம் இதுவே.

கலியில்,

  • அதர்மம் பேசுபவர்கள், 
  • நம் கலாச்சாரத்தை கேலி செய்பவர்கள், 
  • தெய்வ நிந்தை செய்பவர்கள், 
  • தர்ம வழியில் இருக்கும் சாதுக்களை கிண்டல் செய்பவர்கள் 

அதிகம் இந்தியாவில் படை எடுப்பார்கள்.

  • இந்தியாவில் உள்ள மக்களை பணம், பயம் கொண்டு மாற்றுவார்கள் 

என்பதை குறிப்பாக உணர்த்தி, தர்மம் மட்டும் தெரிந்த இந்த ஹிந்துக்களுக்கு "தர்ம சூக்ஷ்மம்" என்ற ஒரு விஷயத்தை அருளினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

கஜினி காலத்தில் ஏதோ காரணத்திற்காக, தர்ம சூக்ஷ்மம் சமயத்தில் பயன் படுத்தபடவில்லை.
வரலாற்றில் எங்கும் காண முடியாதபடி 17 முறையும் ஒரு திருடனை மன்னித்தனர்.

இனி இந்த தவறை ஹிந்துக்கள் செய்தால்,
மிலேச்ச மதத்தில் சேர்ந்தோ, அல்லது
யூதர்கள் போல சிதறி நாடோடிகள் போல வாழ வேண்டியது தான்.

ஹிந்துக்கள் ஒன்று படுவோம்.
நம் தர்மத்தை எதிர்க்கும் அதர்மவாதிகளை அவர்கள் வழியில் சென்று அடக்கி, தர்மம் பேச வைப்போம்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka