Followers

Search Here...

Showing posts with label அத்வைதம். Show all posts
Showing posts with label அத்வைதம். Show all posts

Wednesday 23 October 2019

தெய்வங்கள் ஹிந்து மதத்தை காக்கிறதா?.. எப்படி ஹிந்துக்கள் 1000 வருட அந்நிய படையெடுப்பையும் மீறி, ஹிந்துவாகவே இன்றும் பல கோடி மக்கள் இருக்கிறார்கள்..? அலசல்

"உலகம் (இயற்கை) ஒரு மாய திரை (ஜீவனை பொறுத்தவரை பொய், நிலையற்றது)..
உலகில் காணப்படும் ஜீவனாகிய நாம் அனைவரும் ஈஸ்வரனின் அம்சமே..
ஆதலால்,
பிறவி கடலை கடக்க, உலக பற்றை உதறி தள்ளி, ஈஸ்வரனிடம் பக்தி செய்து, மோக்ஷம் பெற வேண்டும்"
என்று சொல்கிறது 'அத்வைதம்'.



வேதத்தில், சில சூக்தங்கள் 'அத்வைதமாக இருக்கிறது'.

"ஜீவன் வேறு, பரமாத்மா வேறு.
ஜீவன் "பரமாத்மாவிற்கு அடி பணிந்தவன்".
பிறப்பு, இறப்பு, முதுமை, எதிர்காலம் எதுவும் இவன் இஷ்டத்தில் இல்லை.
முயற்சிக்கு பலன் கிடைப்பதே பரமாத்மாவின் அருளால் தான்.
முயற்சிக்காமல் சில சமயங்களில் பலன் கிடைப்பதும் பரமாத்மாவின் அருளால் தான்.

ஜீவன் செய்யும் முயற்சிக்கெல்லாம், அவன் இஷ்டத்தில் பலன் கிடைப்பது இல்லை. 
அவன் நினைப்பதெல்லாம் நடப்பதும் இல்லை.
முயற்சிக்கு பலன் கிடைப்பதே பரமாத்மாவின் அருளால் தான்.

ஆதலால்,
பிறவி கடலை கடக்க, ஈஸ்வரனிடம் பக்தி செய்து, மோக்ஷம் பெற வேண்டும்"
என்று சொல்கிறது 'த்வைதம்'.

வேதத்தில் "சில சூக்தங்கள் த்வைதமாகவும் இருக்கிறது".

ஜீவன் மற்றும் பரமாத்மா உறவை காட்டும் போது, இந்த இரு மார்க்கமும் மாறுபடுகிறது.
ஆனால்,
"அத்வைதம், த்வைதம்" இரண்டுமே, "ஈஸ்வர பக்தி செய்து தான், மோக்ஷம் அடைய வேண்டும்" என்று முடிவாக சொல்கிறது..

"இந்த இரண்டு விதமான பார்வையும், வேதத்தில் தான் உள்ளது" என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்..
ஆக, இரண்டு மார்க்கமுமே பொய் அல்ல..
புரிந்து கொள்ள, நமக்கு தான் பக்குவம் தேவைப்படுகிறது.

"உலகத்தையும் (ஸ்ரீவத்சம்/லட்சுமி), ஜீவனையும் (கௌஸ்துபம்) இரண்டையும் உடையவனாக ஈஸ்வரன் இருக்கிறார்"
என்று விசேஷித்து சொல்கிறது 'விசிஷ்ட அத்வைதம்'. (அத்வைதத்தில் த்வைதம்)


புரிந்து கொள்ள:

அஞானியாக ஜீவன் இருக்கும் வரை,
"தான் வேறு, உலகில் உள்ள மற்ற ஜீவன்கள் வேறு, பரமாத்மா வேறு'"
என்று ஜீவன் 'த்வைத'மாக தான் பார்க்கிறான்.
ஆதலால்,
வேதம், அஞானிக்கும் மோக்ஷ பாதையை வழிகாட்ட, 'த்வைத' தத்துவத்தை ஒரு இடத்தில் சொல்கிறது.

அதே சமயம்,
ஆதிசங்கரர், ஜடபரதர், ஸ்ரீசுகர் போன்ற ஞானியாக இருக்கும் ஜீவன்,
"தான் வேறல்ல, உலகில் உள்ள மற்ற ஜீவன்களும் வேறல்ல, இந்த ஜீவனை படைத்த பரமாத்மாவும் வேறல்ல"
என்று 'அத்வைத'மாக பார்க்கிறார்கள்.
ஆதலால்,
வேதம், ஞானிக்கு மோக்ஷ பாதையை வழிகாட்ட அத்வைத தத்துவத்தையும் மற்றொரு இடத்தில் சொல்கிறது.

ஞானிக்கு 'அத்வைதம்' காட்டி,
அஞானிக்கு 'த்வைதம்' காட்டி,
உலகில் மனிதனாய் பிறந்த அனைவருக்கும், பிறவி கடலை கடக்க வழி சொல்கிறது நம் வேதம் (சப்த பிரம்மம்)

"ஒரே வழி, ஒரே கட்டளை" என்று பிடிவாதம் செய்து, மனிதர்களால் உருவான பொய் மதம் இல்லையே!! நம் சனாதன ஹிந்து தர்மம்.

ஆதி சங்கரர் (சிவபெருமான்) அவதாரம் செய்த போது,
வேதம் கூறும் ஞான மார்க்கத்தை புரிந்து கொள்ளாமல், மோக்ஷ பாதையில் செல்லாமல்,
"இந்த யாகம் செய்தால் இந்த பலன் கிடைக்கும்,
அந்த மந்திரம் சொன்னால் சூன்யம் வைக்கலாம்,
அந்த மந்திரம் ஸித்தி ஆனால் வசியம் செய்யலாம்"
என்ற அளவுக்கு கர்ம மார்க்கத்தை மட்டுமே எடுத்து கொண்டு பாரத தேசம் முழுவதும், வறட்டு பிடிவாதம் செய்யும் கர்மடர்கள் அதிகமாகி இருந்தனர்.

இவர்கள் ஞான மார்க்கத்தை மறந்து,
"யாகம் செய்தால் இந்த பலன் கிடைக்கும், இந்த சுகம் கிடைக்கும்"
என்ற ரீதியில் போனதால், 70வதுக்கும் மேற்பட்ட பல பொய் மதங்கள் உருவாகின.. பௌத்த மதமும் இதில் ஒன்று.



"நரபலி காளிக்கு கொடுத்தால், காளி வரம் கொடுப்பாள்" என்ற அளவுக்கு பாரத தேசத்தில் அசாம் போன்ற இடங்களில், அஞானிகள் கையில், 'வேதம்' மாட்டிக்கொண்டு தவித்தது..
ஞானியான "ஆதி சங்கரர்", இவர்களை ஞான மார்க்கத்தில் திருப்ப,
வேதத்தில் சொல்லப்பட்ட "அத்வைத" மார்க்கத்தை அதிகம் ப்ரகாசப்படுத்தி,
70வதுக்கும் மேற்பட்ட பொய் மதங்களை, தர்க்க வாதத்தினால், தன் தரிசனத்தால் ஒடுக்கி,
பாரத மக்களை, மீண்டும் ஞான மார்க்கத்தில் ஆர்வத்தை கொடுத்து, வேதத்தை ஞான மார்க்க ரீதியில் பார்க்க செய்து, 
பெரும் உபகாரம் செய்தார்.

1017ADல் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர்வேதத்தின் முழு நோக்கமான,"விசிஷ்ட அத்வைத" மார்க்கத்தை வழி காட்டினார்.

அஞானியாக இருப்பவர்கள் "பக்தி செய்து, நாராயண நாமத்தை பெற்று ஜபித்து இருங்கள்" என்று வேதம் சொல்லும் த்வைத மார்க்கத்தை காட்டி வழி நடத்தி, அஞானியையும் ஞானியாக ஆக்கி, ஜீவன் வேறு பகவான் வேறல்ல என்ற அத்வைத மார்க்கத்தையும் காட்டி, பெரும் புரட்சி செய்தார்.

ஆதி சங்கரர் வந்தும் மாறாமல், "ஆடை இல்லாமல் திரிந்த சமணர்கள் அனைவரையும் வேத மார்க்கத்தில் மீண்டும் திருப்பி, நாராயணனே வேதம் இறுதியாக சொல்லும் பரதெய்வம்" என்று வேதத்தை கொண்டே (புருஷ சூக்தம்) நிரூபித்து, ஹிந்துக்களை ஹிந்து தர்மத்தில் இருந்து விலகி விடாமல் இருக்க தயார் செய்தார் ஸ்ரீ ராமானுஜர்.
ராமானுஜரின் காலத்துக்கு பின், தமிழ்நாட்டில் "சேங்கனூர்" என்ற கிராமத்தில், 4000 திவ்ய பிரபந்ததுக்கும் அதன் உண்மையான உள் அர்த்தத்தை உலகுக்கு அள்ளி கொடுத்த "பெரியவாச்சான் பிள்ளை" என்ற "கிருஷ்ண சூரி" அவதரித்தார்.

மற்ற மதங்களில் தவறான புரிதல், குழப்பங்கள் ஏற்படும் போது, மதங்கள் அழிகிறது. 
அதை சரி செய்ய மக்களே பாடுபடுகின்றனர். 
மதத்தை வளர்க்க 
"பணம் கொடுத்து, பொய் பிரச்சாரம் செய்து, மற்ற மதங்களை கீழ்த்தரமாக பேசி வெறுப்பை விதைத்து" 
தங்கள் மதத்தை வளர்க்க முயற்சிக்கின்றனர்.

ஆனால்,
நம் ஹிந்து தர்மத்தில் உள்ள நாம், "வழி தவறி ஹிந்து தர்மம் அழியும்" அபாயம் நேர்ந்தால்,
தெய்வங்களே தன்னை வெளிப்படுத்தி கொண்டு அவதாரங்கள் செய்து, ஹிந்து தர்மத்தை தெய்வங்களே முன் நின்று காக்கின்றனர்..



"மனிதர்களால்" மற்ற மதங்கள் காப்பாற்றப்படுகிறது..
"தெய்வங்களால்" நம் சனாதன ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது.

1000 வருடங்கள், வெளி மதங்களே ஆண்டு அட்டகாசம் செய்தும், இன்றும் ஹிந்து தர்மம் துளி கூட அழியவில்லை..
மாறாக, உலகம் முழுவதும் இன்று ஹிந்துக்கள் பரவி கிடக்கின்றனர்..

வெளி மதமான அரேபிய இஸ்லாமியர்கள் 800 வருடங்கள் "ஹிந்துக்கள் செல்வத்தை, நம்பிக்கையை, கோவிலை, பெண்களை, சுதந்திரத்தை சூறையாடி, அதிக வரி ஹிந்துக்களுக்கு, வரி இல்லாத வாழ்க்கை இஸ்லாமியனாக மாறுபவனுக்கு"
என்று விதித்து பெரும் சவாலை பாரத மக்களுக்கு தந்தனர்..

ஹிந்து அரசனும், ஹிந்து அரசனும் போருக்கு சென்றால், போர்க்களத்தில் சண்டை இட்டு கொள்வார்கள்..
பாண்டிய அரசன் சோழ அரசனிடம் தோற்றால், பாண்டிய தேசத்தையும் தன் சோழ ஆட்சிக்கு கொண்டு வந்து ஆட்சி செய்வார்கள் அரசர்கள்.
மகாபாரத போர் கூட, குருக்ஷேத்ரம் என்ற போர் காலத்தில் தானே நடந்தது.
ஸ்ரீ ராமர் ராவணனை எதிர்கொண்ட போது கூட, ஊருக்குள் புகுந்து பொது மக்களை கொல்லவில்லையே ! 




இஸ்லாமிய சுல்தான்கள், ஹிந்து அரசனிடம் போர் செய்யும் போது,
ஊரில் புகுந்து பொது மக்களை கொன்று, 
கோவிலை இடித்தும், அரசர்களை பணிய வைத்தார்கள்..
"அலாவுதீன் கில்ஜி" ஆட்சியின் போது,
அவன் அனுப்பிய "மாலிக் காபூர்",
ககாத்திய தேசத்தை (தெலுங்கானா) எதிர்த்த போது,
அங்கு இருந்த பொது மக்களை கொன்று, கோவில்களை இடித்து, செல்வங்களை கொள்ளை அடித்து, பெரும் நாசம் செய்தான்..

அப்பொழுது அங்கு இருந்த ஒரு காளி கோவிலில் இருந்த ஒரு வைர கல் தானே இன்று "கோஹினூர் வைரம்" என்று இங்கிலாந்து நாட்டில் வைத்துள்ளார்கள்...

ஒரு காளி கோவிலில் சர்வ சாதாரணமாக வைர மாலைகள் இருந்தது என்றால், நம் செழிப்பு எத்தகையானதாக இருந்து இருக்க வேண்டும்!!?
என்று எண்ணி பார்க்க வேண்டும்..
ஒரு கோவிலை இடித்தாலே மனம் பதறும் போது, இப்படி ஒரு பேடிகள் சூழ்ந்து, மக்களை, கோவிலை இடிக்கும் போது, அரசர்கள் வேறு வழி இல்லாமல், சரண் அடைந்தனர்..
சில அரசர்கள் தலை சீவப்பட்டனர்.. 
சில அரசர்கள் பெரும் செல்வத்தை தானமாக கொடுத்தனர்..

ககாத்திய தேசத்தை தொடர்ந்து, பாண்டிய தேசமான மதுரைக்கு நுழைந்து, அதே செயலை செய்து,
பொது மக்களை கொன்று, மீனாட்சி கோவிலை பிடித்தான்.. 
"மாற்றி வைக்கப்பட்ட போலி சிவலிங்கத்தை இடித்தே விட்டான்" மாலிக் காபூர்..
விளைவு:
பாண்டிய மன்னன் "கோவிலை இடித்து விடுவானே" என்று பாண்டிய தேசத்தின் கஜானாவை திறந்து விட்டார்..
இதை தொடர்ந்து,
மேலும் ஸ்ரீ ரங்கம் வரை சென்று, 13000 வைஷ்ணவர்களை கோவிலிலேயே கொன்று, ஸ்ரீரங்கத்தையே சூறையாடி, உற்சவராக இருக்கும் ஸ்ரீரங்கநாதரை (சிலை திருடன்) டில்லிக்கு தூக்கி சென்று விட்டான் என்று சரித்திரம் போகிறது...



கிடைத்த செல்வமே அளவிடமுடியாமல் இருக்க, சோழ நாட்டில் கால் பிறகு வைத்து கொள்ளலாம் என்று மாலிக் காபூர் டில்லி திரும்பி,

தன் சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு வெற்றி பரிசாக அனைத்தையும் கொடுத்தான் (கோஹினூர் வைரம் (Kohinoor Diamond) உட்பட)..
இது நடந்தது 1310AD சமயத்தில்..

இஸ்லாமியர்கள் பாரத தேசத்துக்குள் வந்து "300 ஆண்டுகளே" ஆன சமயம் அது..

அந்த காலத்தில் இருந்த ஹிந்துக்களின் நிலைமையே எப்படி இருந்து இருக்குமோ!! என்று நினைத்து பார்க்க முடியவில்லை..

1857AD வரை இஸ்லாமியர்களின் ஆட்சி பாரத மண்ணில் கொடி கட்டியது என்று பார்க்கும் போது தான், "எத்தனை நெஞ்சுரம் மிக்கவர்களாக நம் பாட்டனார்கள் இருந்து இருக்கிறார்கள்" என்று புரிந்து கொள்ள முடியும். "இவர்கள் ஏழை ஆனாலும் ஹிந்துவாகவே வாழ்வேன்"
என்று இருந்ததால் தானே, அவர்கள் பரம்பரையில் வந்த நாம் இன்றும் ஹிந்துவாக இருக்கிறோம்..
நினைத்து பார்க்க வேண்டும் ந்த காலங்களில் வாழ்ந்த நம் பாட்டனார்களை..

1238AD சமயத்தில் "மத்வாச்சாரியார்" என்று போற்றப்படும் "ஆனந்த தீர்த்தர்" என்ற மகான் கர்நாடக தேசத்தில் உதித்தார்.
ருக்மிணி தேவி துவாரகையில் தானே வழிபட்ட  பாலகிருஷ்ண விக்ரஹம் இவர் கையில் கிடைத்து, உடுப்பியில் இந்த கிருஷ்ணருக்கு கோவில் அமைத்தார்.
ஞானியான மத்வாச்சாரியார்,
இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் நசுக்கப்படும் ஹிந்துக்கள், "காலம் கனியாதோ!!" என்று பயந்து மதம் மாறி விடாமல், "பகவான் காப்பாற்றுவார்" என்ற நம்பிக்கையை வளர்க்க,
அஞானியாக உள்ள பொது மக்களுக்கு, மனோ தைரியமும், தெய்வ நம்பிக்கையும் ஏற்பட, "ஜீவனாகிய நாம் அனைவரும் பரமாத்மா ஸ்ரீ வாசுதேவனை வணங்குவோம்" என்று
வேதத்தில் சொல்லப்பட்ட "த்வைத" மார்க்கத்தை அதிகம் ப்ரகாசப்படுத்தி, பாரத மக்களின் மனதில் பக்தியின் மூலம் தெய்வ நம்பிக்கையை விதைத்தார்.

பாரத மக்களை பக்தி மார்க்கத்தில் ஆர்வத்தை கொடுத்து, வேதத்தில் சொல்லப்படும் த்வைத மார்க்கத்தை ப்ரகாசப்படுத்தினார்.

"பக்தி மார்க்கம்" பாரத பூமி எங்கும் சூழந்தது..
இஸ்லாமியர்கள் 800 வருடங்கள் கடும் முயற்சி செய்தும், இந்த கோட்டையை தகர்க்க முடியவில்லை..

இவரின் ஆரம்ப காலத்தில் தான் "ஜெயதேவர்" வாழ்ந்தார்.

பிறகு வந்த மகான்களை கொஞ்சம் நினைத்து பார்ப்போம்..

இஸ்லாமிய ஆக்கிரமிப்பை சமாளிக்க,
மனோ தைரியமும், மக்களிடையே பக்தியையும் பரப்ப,
மஹாராஷ்டிரா தேசத்தில் "நாமதேவர்", "தியானேஸ்வர்" என்ற மாவுலி அவதரித்தார்கள்..
உத்திர பிரதேசத்தில், "ராமானந்தர்" அவதரித்தார்.
அவரின் சிஷ்யராக "கபீர் தாசர்" அவதரித்தார்.
தமிழ்நாட்டில் "மணவாள மாமுனிகள்" அவதரித்தார்.

குஜராத்தில், "நரசிங்க மேதா" அவதரித்தார்.

உத்திர பிரதேசத்தில் "சூரதாஸ்" அவதரித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், "வல்லபாச்சாரியார்" அவதரித்தார்.

வங்காள தேசத்தில், உலகம் போற்றும் இஸ்கான் (Iskcon) சொல்லும் "ஹரே கிருஷ்ண ஹரே ராம" மந்திரத்தை கொடுத்த மஹாவிஷ்ணுவின் அவதாரமான "கிருஷ்ண சைதன்யர்" அவதரித்தார்.



அதை தொடர்ந்து
கர்நாடக தேசத்தில் "புரந்தர தாசர்", "கனக தாசர்" அவதரித்தார்கள்.

அதை தொடர்ந்து
உத்திர பிரதேசத்தில், ஹிந்தியில் ராமாயணம் கொடுத்த "துளசி தாசர்" அவதரித்தார்.

ராஜஸ்தானில் "பக்த மீரா" அவதரித்தாள்.

அதை தொடர்ந்து,
தமிழ்நாட்டில், பிரகலாதனின் அம்சமாக "ஸ்ரீ ராகவேந்திரர்" அவதரித்தார்.
அதை தொடர்ந்து,
மஹாராஷ்டிராவில் "துக்காராம்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
தெலுங்கு தேசத்தில், "கோபண்ணா" என்ற "பத்ராசல ராமதாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
மஹாராஷ்டிராவில் சாம்ராட் வீர சிவாஜிக்கு ஆத்ம குருவாக, "சமர்த்த ராம தாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
பஞ்சாப தேசத்தில் "குரு கோவிந்த் சிங்" அவதரித்தார்.

தமிழகத்தில், ராம நாமத்தின் பெருமையை காட்ட "போதேந்திரர்" அவதரித்தார்.
"ஸ்ரீதர் ஐயாவால்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
கர்நாடக தேசத்தில், "விஜய தாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
தமிழ் நாட்டில் கர்நாடக இசை சக்கரவர்த்தி, ஸ்ரீ ராமரை நேரில் கண்டு தரிசித்த மகான் "ஸ்ரீ தியாகராஜர்" திருவாரூரில் அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
வங்காள தேசத்தில் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமான "ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்" அவதரித்தார்.
அவரை தொடர்ந்து,
சிவபெருமான் அம்சமாக விவேகானந்தர் அவதரித்தார்.

பாரத பூமியை மகான்கள் சுற்றிக்கொண்டு, ஹிந்துக்களை ஹிந்து தர்மத்தை 800 வருட இஸ்லாமிய ஆட்சியில் காத்தனர்.

800 வருட இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது..  ஹிந்துக்களை அழிக்க முடியாமல் விழுந்தது...

தெய்வங்கள் மகான்களாக பாரத தேசம் முழுவதும் அவதரித்து,
ஹிந்து தர்மத்தை தெய்வங்களே முன் வந்து காத்தனர்.
"தெய்வங்களால்" நம் சனாதன ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது... 

எத்தனை பெருமை நமக்கு....
மனிதன் அழிக்க நினைத்தாலும், தெய்வங்கள் காக்கும் ஹிந்து தர்மத்தில் பிறந்ததற்கு...நாம் எத்தனை பெருமைப்பட வேண்டும்??!!

நாம் எத்தனை கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்..  
நம் பெருமை நமக்கே தெரியாமல் இருப்பது தான் விந்தை.


வாழ்க பாரதம்... வாழ்க ஹிந்துக்கள்.  



Thursday 13 September 2018

த்வைதம், அத்வைதம், விஷிஷ்டாத்வைதம் பற்றி ப்ருகு முனிவர் என்ன சொல்கிறார்? தெரிந்து கொள்வோமே...

இக்ஷ்வாகு என்ற சூரிய வம்சத்தில், "முசுகுந்தன்" என்ற சக்கரவர்த்தி ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
இவர் க்ருத யுகத்தில் இருந்தவர்.
"ஸ்ரீ ராமர்" அவதாரத்துக்கும் முன் இருந்தவர் முசுகுந்த சக்கரவர்த்தி.
3102 BCல் கலியுகம் ஆரம்பித்தது.
கலியுகத்துக்கு முன், துவாபர யுகம் 8,64,000 வருடங்கள்.
இதற்கும் முன் த்ரேதா யுகம். த்ரேதா யுகம் 12, 96,000 வருடங்கள்.
இதற்கும் முன் க்ருத யுகம் 17,28,000 வருடங்கள்.


ஆக குறைந்த பட்சம், 20 லட்ச வருடங்கள் முன் இருந்தவர் "முசுகுந்த சக்கரவர்த்தி" என்று நாம்  அனுமானிக்கலாம்.

ஸ்வபாவத்திலேயே இவர் தார்மீகர்.
இயற்கையாகவே அடக்கம் உள்ளவர்.
விஷ்ணு பக்தி உடையவர்.
தன் மக்களை சிறப்பாக தர்ம வழியில் பரிபாலித்து வந்தார்.
சத்யம் மீறாதவர்.
சூர்யவம்ச அரசர்கள் யாவரும் சத்தியத்துக்காக உயிரையும் தியாகம் செய்ய துணிந்தவர்களாக இருந்தனர்.
மகா வீரர்.
இதனால் தான் பிற்காலத்தில், இந்த பரம்பரையில் ஸ்ரீ ராமராக அவதரிக்க திருவுள்ளம் கொண்டார் பரவாசுதேவன்.

ஒரு சமயம், அயோத்யாவில் இருந்து, தீர்த்த யாத்திரையாக தன் பரிவாரங்களுடன், ஒவ்வொரு க்ஷேத்ரமாக சென்று சேவிக்கலாம் என்று புறப்பட்டார்.

அயோத்தியில் இருந்து, மதுரா, மாயா, கயா, வாரணாசி போன்ற க்ஷேத்ரங்கள் தரிசித்து, தென் பாரதம் முழுக்க ஒவ்வொரு க்ஷேத்ரமாக தரிசித்து, ஒரு சமயம், நம் தமிழகத்துக்கு வந்தார். 
காஞ்சிபுரத்திற்கு வந்து தங்கினார்.

காஞ்சியில், "ஹேம சரஸ்" என்ற பொற்றாமரை குளம் இருந்தது.
அங்கேயே தங்கி இருந்தார்.
அந்த சமயம், ரிஷியான "ப்ருகு" முனிவரை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றார்.

(தமிழ் நாட்டில் நடந்த சரித்திரம் என்று கவனிக்கும் போது, நம் பெருமை நமக்கு புரியும்)

பொதுவாக, நாம் ஒவ்வொருவருக்கும் மனதில், சில விடை தெரியாத கேள்விகள் எழுவது உண்டு.

'விடை தெரியாத கேள்விகளுக்கு, பதிலை அறிய, நாம் சரியான பதில் தெரிந்தவர்களிடம் சென்று, கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்' என்று சாஸ்திரம் சொல்கிறது.

ப்ருகு ரிஷியை பார்த்த முசுகுந்த சக்கரவர்த்தி, நமஸ்கரித்து, ஆர்வத்தோடும், அடக்கத்தோடும், ஸ்ரத்தையோடும் தன் மனதில் இருந்த நெடுநாள் சந்தேகத்தை கேட்டார்,

"உங்களை தரிசித்த பாக்கியம் பெற்றேன்.
வேதம், பொதுவாக பல தெய்வங்களை பற்றி பாடுகிறது.
வேதத்தில் ப்ரம்ம ஸூக்தம் இருக்கிறது.
ருத்ர ஸூக்தம் இருக்கிறது.
இது போன்று
இந்திரன், வருணன், அஸ்வினி குமாரர்கள், அக்னி, சூரியன், 
யமன், சோமன், வாயு, ப்ரம்மனஸ்பதி, விஸ்வேதேவர்கள், 
மருத்து, ரிபுக்கள், ஸாத்யர்கள், பித்ருக்கள்,  விஷ்ணு 
என்று எல்லா தெய்வங்களுக்கும் வேத மந்திரங்கள் உள்ளது.

வேத வாக்கும் சத்தியம். இவர்கள் கற்பனையான தெய்வங்களும் இல்லை.
இவர்கள் அனைவரும் நிஜமாகவே இருக்கிறார்கள் என்றும் வேதம் சொல்கிறது.




இவ்வளவு தெய்வங்களுக்குள்ளே, யார் உயர்ந்தவர்? ச்ரேஷ்டமானவர்?

யாரை ஆராதித்தால், கோரமான ஸம்ஸாரத்தில் இருந்து கரையேற முடியும்?

'மோக்ஷம்' என்ற ஐஸ்வர்யம் யாரை ஆராதித்தால் கிடைக்கும்?

தெய்வங்களுக்குள்ளே பேதம் (வேற்றுமை) உண்டா? அபேதமா?

இதில் உமக்கு எது சம்மதம்?

சிலர் 'தெய்வங்களுக்குள்ளே பேதம் உண்டு' என்று சொல்கிறார்கள்.
சிலர் 'தெய்வங்களுக்குள்ளே பேதம் இல்லை' என்று சொல்கிறார்கள்.

எனக்கு உள்ள இந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டும்.

நீங்கள் சர்வஞர், அனைத்தையும் உண்மையாக அறிந்தவர்.

தெய்வங்களுக்குள்ளே பேதம் இருக்கிறதோ, இல்லையோ, எப்படி இருந்தாலும், நான் ஆராதனை செய்ய வேண்டிய தெய்வம் எது?

நீங்கள், இதை நிர்ணயம் செய்து எனக்கு சொல்ல வேண்டும்.
எனக்கு எது பாதை? என்று சொல்ல வேண்டும்."
என்று கேட்டார் முசுகுந்த சக்கரவர்த்தி.

ப்ருகு பேசலானார்,
"முசுகுந்த சக்கரவர்த்தி! தெய்வங்களை, மனிதர்களை பார்ப்பது போன்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அனுமானம் செய்ய கூடாது.

மனிதர்கள் பஞ்ச பூதங்களில் "நிலத்தில்" இருந்து உருவானவர்கள். கண்ணால் பார்க்கும் படியாக, உருவம் தரித்தவர்கள்.

வேதத்தில் உள்ள தெய்வங்கள் மனிதர்களின் கண்களுக்கு  அரூபமானவர்கள்.

மனிதன் ஒரு விஷயத்தை நம்புவதற்கு, கண், காது, நாக்கு, மூக்கு, ஸ்பரிசம் போன்ற உறுப்புகளே ஆதாரமாக உள்ளது.

மனிதன் பார்க்க முடியாத விஷயங்களும் உலகில் இருக்கிறது.
அதை உணருவதற்கும், நம்புவதற்கும், இந்த உறுப்புகள் மட்டும் போதாது.

கண்ணுக்கு தெரிந்த விஷயங்களுக்கு சாஸ்திரத்தின் தேவை இருக்காது. நாமே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு யானையை சாஸ்திரம் கொண்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கண் இருந்தாலே போதுமானது.

உலகத்தில் கண்ணுக்கு தெரியாத விஷயத்தை ஒருவன் எப்படி தான் தெரிந்து கொள்ள முடியும்?
வேத சாஸ்திரமே கதி"
என்றார் ப்ருகு முனிவர்.

இதையே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  துவாபர யுகத்தில் அவதாரம் செய்த போது,
"தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே"
என்று
"சாஸ்திரத்தை கொண்டு தான் நாம் செய்யும் செயல், தர்மமா? அதர்மமா?"
என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

ப்ருகு மேலும் பேசலானார்,
"பரமாத்மா யார்? அவர் எப்படி இருப்பார்? என்ற நமக்கு அப்பாற்பட்ட கேள்விக்கு, பதிலை சாஸ்திரத்தின் துணை கொண்டே பெற முடியும். சாஸ்திரமே கதி.


நாமாக பரமாத்மா இப்படி தான் இருப்பார் என்று உருவாக்கி, ஏமாற்ற கூடாது.

வான்வெளியில் என்ன நடக்கிறது?
நம் உடம்புக்குள்ளே என்ன நடக்கிறது?
வெளிநாடுகள் எப்படி இருக்கிறது?
என்ற பல கேள்விகளுக்கு, அதனை பற்றி ஆராய்ச்சி செய்த ஞானிகள், விஞ்ஞானிகள், சொல்லும் வார்த்தைகளும், அவர்கள் அனுபவத்தில் எழுதி வைத்த புத்தகங்களுமே (சாஸ்திரமே) நமக்கு ப்ரமாணம் ஆகிறது அல்லவா?

அந்த புத்தகங்கள் (சாஸ்திரம்) என்ன சொல்கிறதோ அதன் படி நடந்து, நாமும் சென்றால், நாமும் வெளிநாடு இருப்பதை காண முடிகிறது.

நம்மாலும், உடலுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று கணிக்க முடிகிறது.

விண் வெளியில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆக, ஐந்து புலன்களால், நாம்  அறிய முடியாத விஷயங்களும் உண்டு என்பதை மனிதன் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐந்து புலன்களால், அறிய முடியாத விஷயங்களையும் நாம் உணர்ந்து கொள்ள, அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஞானிகள், வழியில் சென்று பார்த்தால், நமக்கும், புரியாத பல விஷயங்கள் புரியும்.

மனிதர்கள், கண்ணால் காண முடியாத விஷயங்களும், இருப்பதை உணர்வதற்கு தேவையான அடிப்படையான தகுதிகள் :
1. அந்த விஷயங்களை ஆராய்ச்சி செய்த ஞானிகள், விஞ்ஞானிகள் மேல் நம்பிக்கை.
2. அவர்கள் எழுதிய புத்தகத்தின் (சாஸ்திரம்) படி முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்.

எப்படி உலகத்தில், காண முடியாத விஷயங்களை, உணர்வதற்கே, நாம் ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சியை, அவன் எழுதிய புத்தகத்தை (சாஸ்திரத்தை) நம்புகிறோமோ,
அதுபோல,
உலகத்திற்கும் மேல், கண்ணால் காண முடியாத தேவர்களை உணர, தேவர்களை நேரில் பார்த்த ரிஷிகளையும், அவர்கள் கொடுத்த வேத சாஸ்திரத்தையும்  நம்ப வேண்டாமா?

தேவர்களை பொறுத்தவரை, மனிதன் மிகவும் 'அற்ப பிறவி'.
மனிதன் பூமியில் நிரந்தரமாக, வாழ முடியாதவன். 
மரணம் நிச்சயம் உடையவன்.
மோக்ஷம் அடையும் வரை,  மீண்டும் பிறந்து, இறந்து பூமியில் சுழன்று கொண்டே இருப்பவன்.
தேவர்களை பொறுத்தவரை, மனிதன் அற்பமானவன் என்று சொல்வதற்கு காரணம் உண்டு.

தன் வீட்டின் சுவற்றிக்கு பின்னால் என்ன நடக்கிறது? என்று தானே அறிய முடியாதவன்.
நாளை என்ன நடக்க போகிறது?  என்றும் தெரியாதவன்.
5 வயதில் என்னென்ன செய்தோம்? என்பதை மறந்தவன்.
படித்த பல விஷயங்கள் மறந்து போய், சில விஷயங்கள் மட்டும் தான் ஞாபகத்தில் வைத்து உள்ளவன்.
எத்தனையோ பேரை வாழ்நாள் முழுதும் பார்த்தும், சிலர் மட்டும் தான் ஞாபகத்தில் வைத்து உள்ளவன்.
எப்பொழுது தனக்கு மரணம்? என்றும் அறியாதவன்.

நம் புத்தி அற்பமானது என்று நமக்கே புரிகிறதே !!
இந்த அற்ப புத்தியை கொண்டு, 'தேவர்களை பற்றி எப்படி நம் புத்தியை கொண்டு  அனுமானிக்கலாம்?'

நம் புத்தியை கொண்டு தெய்வம் 'இப்படி தான் இருக்கும்' என்றால், 
யார் வேண்டுமானாலும் கற்பனையாக தெய்வங்களை உருவாக்கி விடலாமே?

இப்படி பொய் மதங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுமே? அது எப்படி உண்மையாகும்?
அது எப்படி தெய்வமாகும்?


இப்படி மனித புத்தி கொண்டு உருவாக்கப்படும் எந்த தெய்வமும் தெய்வமில்லை, எந்த சாஸ்திரமும் சாஸ்திரமில்லை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.
சிலர் சங்கிலியை கட்டி, இதோ தெய்வம் என்பர்.

மனிதனால் புதிதாக பெயர் கொடுத்து உருவாக்கப்பட்ட தெய்வங்கள் 'உண்மையான தெய்வங்கள் இல்லை'.
அங்கு ஏற்படும் அலைகள் யாவும் மன வியாதியே.
பலர் சேர்ந்து "இது தெய்வம், இது தெய்வம்" என்று சொல்லி, ஒரு மன வியாதியை உருவாக்கிவிடலாம்.

கண்ணால் காண முடியாத தெய்வங்களை, ரிஷிகள் பார்த்து, நமக்கு வேத சூக்தங்களாகவும், புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் அருளினர்.

வேத சாஸ்திரங்கள் சொல்லும் வழியில் நாமும் சென்று, அதன்படி செய்யும் போதுதான், தெய்வங்களை நாமும் உணர முடியும்.




தெய்வங்களை நேரில் பார்த்த ரிஷிகள் கொடுத்த வேதத்தை கொண்டே தெய்வத்தை கண்டு பிடிக்க வேண்டும்.

ரிஷிகளின் வாக்கில் வந்த வேதத்தில் 'இந்திரன், வருணன், ருத்ரன், விஷ்ணு, யமன்' என்று பல தேவதைகளின் பெயர் சொல்லப்படுகிறது.

இந்த தேவதைகள் அனைவரும் "உண்மை" என்பதை நீ வேதத்தின் வாக்கினாலும், ரிஷிகளின் சுய அனுபவத்தாலும் நம்பலாம்.

வேத சாஸ்திர படி, வருண ஜெபம் செய்தால், மழை பெய்யும். 
இதை நீயும் அனுபவத்தால் உணரலாம். 
வருண தேவன் உண்மையில் தேவனே என்று உணர்வாய்.

வேதத்தில் சொல்லாத, மனிதன் கற்பித்த தெய்வங்களை, தெய்வங்கள் என்று நம்பி விடாதே.

மெய் ஞானிகளான (உண்மையை அறிந்த) ரிஷிகள் அளித்த வேதத்தில் என்ன சொல்லி உள்ளதோ அதுவே ப்ரமாணம் என்று உணர்வாயாக. 
அதில் உள்ள தேவதைகளே உண்மையான தெய்வங்கள்.

தனக்கு தோன்றிய தேவதைகளை மனிதர்கள் உருவாக்கி கஷ்டப்படுகிறார்கள். தன்னையே ஏமாற்றி கொள்கிறார்கள்.

தெய்வங்களுக்குள்ளே பேதம் (உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு) உண்டா? என்ற உன்னுடைய கேள்விக்கு, 
"பேதம் இல்லை" என்பதாக சில இடங்களில் வேத வாக்கியம் இருக்கிறது.

ச ப்ரம்மா சசிவஸ்தேதிஹ்ய
வேத ஸ்ருதி வாக்ய:
என்று வேதம் சொல்லும் போது, 
'அவனே ப்ரம்மா, அவனே சிவன், அவனே விஷ்ணு 
அவனே எல்லாமுமாக இருக்கிறார்'
என்று அபேதமாக சொல்கிறது.

அபேதம் தெரிவதால், 'அத்வைத' சித்தாந்தமும் வேதத்தில் சொல்லப்படுகிறது."
என்றார் ப்ருகு.

முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து, மேலும் ப்ருகு சொன்னார்,
"தெய்வங்களுக்குள்ளே பேதம் (உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு) உண்டா? என்ற உன்னுடைய கேள்விக்கு, 'பேதம் உண்டு' என்பதாகவும் சில இடங்களில் வேத வாக்கியம் இருக்கிறது.
'இந்திரன், விஷ்ணு, ருத்ரன் போன்ற தெய்வங்கள் இருக்கிறார்கள்' என்று வேதமே பிரித்து காட்டுகிறது.


இப்படி பிரித்து சொல்வதாலேயே, தெய்வங்களுக்குள்ளே  'பேதம்' இருப்பது தெரிகிறது.

யார் ச்ரேஷ்டமான தெய்வம்?
யாரை வணங்கினால் எனக்கு மோக்ஷம் கிடைக்கும்?
சம்சார சாகரத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்? என்று கேட்டாய்.

அக்னிர் தேவானாம் அவம:
விஷ்ணு பரம:
என்று வேத வாக்கியம் இருக்கிறது.

'விஷ்ணு' முதல் தெய்வமாகவும், 
'அக்னி' கடைசி தெய்வமாகவும் இருக்க, 
வேதத்தில் சொன்ன அனைத்து 'பிற தேவதைகளும்' இவர்களுக்கு அந்தர்கதமாக இவர்களுக்கு 'இடையில் இருக்கின்றனர்' 
என்கிறது வேதம்.
இதன் காரணமாக தான், ப்ரம்மத்தை உபாஸிக்கும் ப்ராம்மணர்கள், அக்னி வளர்த்து, விஷ்ணுவை ஆராதனை செய்கிறார்கள்.

'அக்னியையும், விஷ்ணுவையும் பூஜித்தால், இவர்களுக்கு இடையில் இருக்கும் அனைத்து தேவர்களையும் பூஜித்ததாகும்' 
என்று வேதமே அங்கீகரிக்கிறது.
விஷ்ணு: பரம:
என்று வேத ஸ்ருதி சொல்கிறது.
'விஷ்ணுவே பரப்ரம்மம்'
என்று சொல்லும் வேதம், மற்ற தெய்வங்களுக்குள்ளே, அனைத்திலும் அந்தர்யாமியாக விஷ்ணுவே இருக்கிறார் என்று சொல்கிறது.

இப்படி, அக்னி, விஷ்ணு, இந்திரன் என்று வேதமே பிரித்து காட்டுவதால், 'பேதம்' தெளிவாக தெரிகிறது.
பேதம் தெரிவதால், 'த்வைத' சித்தாந்தமும் வேதத்தில் சொல்லப்படுகிறது.

மேலும், 
'தெய்வங்களில் ச்ரேஷ்டமான தெய்வம் யார்?' 
என்று நீ கேட்ட கேள்விக்கு, வேதமே பதில் சொல்கிறது.
நம் புத்தியால் சொல்லக்கூடாது.

வேதமே, விஷ்ணுவாகிய "நாராயணனே" முதல் தெய்வம் என்று சொல்கிறது.
'நீ அவரை உபாசித்தால், உனக்கு மோக்ஷம் கிடைக்கும்' என்பதில் சந்தேகமில்லை"
என்றார் ப்ருகு ரிஷி.

முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து, மேலும் ப்ருகு சொன்னார்,
"தெய்வங்களுக்கு உள்ளே பேதம் உண்டா, இல்லையா? என்று நீ கேட்ட கேள்விக்கு, வேதம் இரண்டுமே உண்மை தான் என்று சொல்கிறது.


சில வேத வாக்கியங்கள்,
'தெய்வங்களுக்கு உள்ளே பேதம் உண்டு' என்று, த்வைதமாக சொல்கிறது.
சில வேத வாக்கியங்கள்,
'தெய்வங்களுக்கு உள்ளே பேதம் இல்லை' என்று, அத்வைதமாகவும் சொல்கிறது.

வேதமே பேதத்தையும் (த்வைதம்), அபேதத்தையும் (அத்வைதம்) சொல்லுவதால், இரண்டுமே உண்மை தான்.
வேதம் பொய் பேசுவதில்லை.

'தெய்வங்கள் வெவ்வேறு' என்று பேதத்தை சொல்லும் வேத ஸ்ருதியை மட்டும் எடுத்துக்கொண்டு முடிவு எடுக்க கூடாது.
அதேபோல,
அனைத்தும் 'ஒருவனே' என்ற அபேதத்தை சொல்லும் வேத ஸ்ருதியை மட்டும் எடுத்துக்கொண்டும் முடிவு எடுக்க கூடாது.

வேதத்தின் உட்பொருளை உணரும் போது, வேதத்தின் உண்மையான அபிப்ராயம் என்ன? என்று புரிந்து விடும்.

தெய்வங்களுக்குள்ளே பேதமா, அபேதமா? அதில் உமக்கு எதில் சம்மதம்? என்று கேட்டாய்.
வேதத்திற்கு எது சம்மதமோ, அதுவே என் சம்மதம்.

'வேதம் ஒரு இடத்தில் அபேதமாக இருக்கிறார் என்றும், மற்றொரு இடத்தில் பேதமாக இருக்கிறார் என்று சொல்வதே' எனக்கும் சம்மதம்.
'அத்வைதமும் உண்மை, த்வைதமும் உண்மை' என்பதால், இரண்டையும் சேர்த்து ஏற்று கொள்ளும் விஷிஷ்ட அத்வைதமே வேதத்தின் உண்மையான அபிப்ராயமாக உள்ளது.

இதுவே என் அபிப்ராயமும் கூட.

(947 AD முதல் 1947 AD வரை, பாரத தேசத்தில், ஹிந்துக்களுக்கு வர இருக்கும் பெரும் ஆபத்தில் இருந்து சமாளிக்கும் தெம்பு கொடுக்க, த்வைதம், அத்வைதம், விஷிஷ்ட அத்வைதம் போன்ற சித்தாந்தத்தை பாரதத்தில் நிலை நிறுத்த “ஆதிசங்கரர்”, “ஸ்ரீ ராமானுஜர்”, “மத்வ ஆச்சாரியார்” அவதாரம் செய்து, ஹிந்துக்களின் மனதில் ஹிந்து தர்மத்தின் மேன்மையை விளக்கி, பொய் மதங்களில் வீழ்ந்து விடாமல் தடுத்தனர் . Further read - http://www.proudhindudharma.com/2018/05/947-1947.html )

வேதம் அபேதமாக பேசும் போது, பரப்ரம்மமாக இருக்கும் அந்த லட்சுமி பதியான விஷ்ணுவே, மற்ற அனைத்து ஜீவனிடத்திலும், அனைத்து உலகத்திலும் பரவி இருக்கிறார் என்கிறது.
அவரே பரப்ரம்மம்.
அவர் ஒருவரே பரமாத்மா. 
அவர் ஒருவரே என்றும் இருப்பவர். 
அவரே அனைத்துமாக இருக்கிறார் என்று சொல்கிறது.
இதுவே உண்மை.
வேதம் 'பேதமாக' பேசும் போது, 
சிவன், யமன், இந்திரன், என்று பல தெய்வங்களை பெயர் குறிப்பிட்டு சொல்கிறது.

நாராயணனே பரவாசுதேவன் என்று சொல்லும் வேதம், அக்னி தேவனை உயர்த்தியும்  ஸ்தோத்திரம் செய்கிறது.


வேதம் 'அபேதமாக' சொல்லும் போது, வேதம் அந்த நாராயணனின் விராட் ஸ்வரூபத்தை பார்த்து துதிக்கிறது.
விஷ்ணுவாக அனைத்தும் நானே என்று இருக்கும் பரப்ரம்மத்தை பார்த்து, அவன் கண்களே அக்னி தேவனாக இருப்பதை கண்டு, அவன் கண்களுக்கு ஜெய கோஷம் போடுகிறது வேதம்.

வெளியோட்டமாக பார்க்கும் போது, அக்னி தேவனை வேதம் துதிப்பதாக தோன்றும்.

வெளியோட்டமாக பார்க்கும் போது, தெய்வங்களுக்குள்ளே பேதம் இருப்பது போல தோன்றும்.

ஞானிகளுக்கு, வேதத்தில் அக்னியை குறித்து வரும் வேத மந்திரங்களை கேட்கும் போது, அந்த நாராயணனின் அங்கமாக இருக்கும் அவன் கண்களுக்கு பூஜை செய்யும் உண்மை புலப்படும்.

இப்படி இந்திரனை குறித்து வரும் வேத மந்திரங்கள் விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனின் புஜங்களை குறித்து பாடுகிறது என்று புரியும்.

இப்படி பேதமாக வரும் அனைத்து வேத மந்திரங்களும், அந்த விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனுக்கு செய்யும் அங்க பூஜை என்று ஞானிகள் உணர்கின்றனர்.

நாராயணனின் அங்கங்களில் தேவதைகள் அடக்கம்.
அக்னி தேவன் அவர் கண் ஒளியாக இருக்கிறார்.
அல்ப ஆசைகளை நாடுபவன், அக்னியை குறிக்கும் வேத மந்திரங்களை சொல்லும் போது, அக்னி தேவனை மட்டுமே தியானிக்கிறான்.
அக்னி தேவன் கண் பார்வை தருகிறார். ஆரோக்கியம் தருகிறார்.

மோக்ஷத்தை விரும்புபவன், அக்னியை குறிக்கும் வேத மந்திரங்களை சொல்லும் போது, அக்னி தேவனை நினைக்காமல், நாராயணனின் கண்களாக  தியானிக்கிறான்.
அக்னி தேவன் கண் பார்வை தருகிறார். ஆரோக்கியம் தருகிறார்.
மேலும், 
நாராயணன் மகிழ்ச்சி அடைந்து, தன்னையே தருகிறார். பக்தி தருகிறார். பிறவி கடலில் இருந்து மீட்டு, மோக்ஷமும் தந்து விடுகிறார்.

ஒரே வேத மந்திரம் தான். 
அல்ப ஆசை உள்ளவன் அல்ப பலன்களை பெறுகிறான்.

அதே வேத மந்திரத்தை சொல்லி, ஒரு ஞானி அல்ப பலன்களையும் பெறுகிறார், மோக்ஷத்தையும் பெறுகிறார்.

இப்படி அபேதமாக வரும் அனைத்து வேத மந்திரங்களும், அந்த விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனையே பூஜை செய்கிறது என்றும் ஞானிகள் உணர்கின்றனர்.

இப்படி வேத மந்திரங்கள் எதையும் விலக்காமல், அதன் உண்மையான நோக்கத்தையும், அர்த்தத்தையும் உணர்ந்து, இரண்டு சித்தாந்தமும்  ஒவ்வொரு விதமாக அந்த நாராயணனை தான், பூஜை செய்கிறது என்பதால், இந்த விஷிஷ்ட அத்வைதமே எனக்கும் சம்மதம்"
என்றார் ப்ருகு முனிவர்.

சந்தேகம் தீர்ந்த, முசுகுந்த சக்கரவர்த்தி மேலும் கேட்டார்,
"நாராயணனே பரப்ரம்மம். அவரே அனைத்துமாக இருக்கிறார். அபேதமாக இருக்கிறார் என்ற உண்மை புரிந்து கொண்டேன்.

'தான் ஒருவனே தெய்வம்' என்று இருக்காமல், தன் அங்கங்களாக இருக்கும் பல தெய்வங்களை நியமித்து, பேதமாக காட்டி கொள்வது ஏன்?"
என்று கேட்டார்.


ப்ருகு சொன்னார்,
"ஜனங்களுக்கு பல வித பலன்களில் ஆர்வம் இருப்பதால், நாராயணன் தன்னை பேதமாக காட்டிக்கொள்கிறார்.
மகா கருணை உடையவர் நாராயணன்.

'தன்னை நேரிடையாக வணங்கினால் தான்' அல்ப பலன்களாக இருந்தாலும் கொடுப்பேன் என்று பிடிவாதம் செய்வதில்லை.

எப்படி ஒரு மருத்துவன் (டாக்டர்) வரும் நோயாளிக்கு 'ஒரே மருந்து' என்று கொடுக்காமல், 
அந்தந்த வியாதிக்கு அதற்கு தகுந்த மருந்து அளிப்பானோ,
அது போல, சர்வேஸ்வரனான நாராயணன், 
அக்னி தேவனை வழிபட்டால் இந்த பலன், 
ருத்ரனை வழிபட்டால் இந்த பலன், 
பிரம்மாவை வழிபட்டால் இந்த பலன்,
சாக்ஷாத் பரவாசுதேவனான தன்னையே வழிபட்டால் 'மோக்ஷம்' என்று, பிரித்து, 
அததற்கு ஆசைப்படும் ஜனங்களுக்கு அந்தந்த தெய்வங்களிடம் பிரியம் வளர செய்கிறான்.

நாராயணனுக்கு, பல வித ஆசைகள் கொண்ட ஜனங்களுக்காக பல வித தெய்வங்களை நியமித்தார்.
'படைத்தல், காத்தல், அழித்தல்' என்ற மூன்று காரியங்களுக்கு, நாராயணன்,
ப்ரம்மாவை 'படைக்கும்' தொழிலை செய்யுமாறு படைத்தார்.
சிவபெருமானை பிரளய காலத்தில் 'சம்ஹாரம்' என்ற அழிக்கும் பொறுப்பை செய்யுமாறு படைத்தார். 
இவர்களுக்குள்ளே அந்தர்யாமியாக தானே இருக்கிறார். பார்க்க பேதமாக தெரிகிறார்.
தானே 'காக்கும்' தொழிலை ஏற்று, விஷ்ணுவாக வ்யூக அவதாரம் செய்கிறார்.

'தான் படைத்த எந்த பிறப்பும் கீழானது இல்லை' என்று காட்ட, மகா கருணை கொண்டு, தானும் கூடவே அவதாரம் செய்கிறார்.

முப்பத்து முக்கோடி தேவர்களை நியமித்து, தானும் ஒரு தேவன் என்று அவதாரம் செய்து கொள்கிறார்.
இந்திரனின் தம்பி 'உபேந்திரன்' என்று அவதாரம் செய்கிறார்.

மற்ற தேவர்களுக்கு, 'இவரும் ஒரு தேவன் தானே' என்று நினைக்கும் அளவுக்கு தன்னை சுலபமாக்கி கொண்டு தேவர்களுடன் பழகுகிறார்.

தேவர்களிடம் மட்டுமா!!, திடீரென்று, 'மீனாகவும், பன்றியாகவும்' தன்னை அவதாரம் செய்து கொண்டு விடுகிறார்.

ரிஷிகளுக்கு நடுவே ஒரு 'ரிஷி'யாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.

மனிதர்களுக்கு நடுவே தானும் ஒரு 'மனிதனாகவும்' அவதாரம் செய்து விடுகிறார்.

'தான் ஒருவனே தேவன்' என்ற கர்வமே இல்லாமல், மகா கருணை கொண்டு அவதாரம் செய்து விடுகிறார்.

'உபேந்திரனும்' தன்னை போன்ற ஒரு தேவன் தான் என்று தேவர்கள் நினைப்பது போல,
வராக அவதாரம் செய்த போது, பன்றிகளாக உள்ள ஜீவன்கள் இவரும் தன் ஜாதி தான் என்று நினைத்தனவாம்.

மனிதனாக அவதாரம் செய்தாலும், மனிதர்கள், இவரும் மனிதன் தானே என்று பேசுவர்.

இவர் பரவாசுதேவன் என்ற உண்மையை, இவரின் குணத்தாலும், சரித்திரத்தாலும் மட்டுமே கண்டு கொள்ள இயலும்.

ப்ரம்மா, சிவனுக்கு நடுவில், தானும் ஒரு தொழிலை செய்யும் தெய்வம் என்று சொல்லிக்கொண்டு 'விஷ்ணுவாக' வ்யூஹ அவதாரம் செய்து கொண்டார்.


மஹாவிஷ்ணு சாஷாத் அந்த பரம்பொருளே என்று பிரம்மாவும், சிவனும் உணர்ந்து இருந்தனர்.

ஒரு முறை நாரதர், தன் பிதா ப்ரம்மாவிடம்,
'வேதமே உங்களால் தான் கொடுக்கப்பட்டது என்ற பொழுது, தாங்களே பரப்ரம்மம் என்று சொல்லி கொள்ளலாமே?' என்று கேட்டார்.

அதற்கு ப்ரம்மா, 'யார் வேண்டுமானாலும் தன்னை பரம்பொருள் என்று சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால், வேதத்தின் அபிப்ராயம் அப்படி இல்லையே.

வேத வாக்கியம், நாராயணன் மட்டுமே பரப்ரம்மம் என்று சொல்கிறதே. அப்படி இருக்க, நான் பரப்ரம்மம் என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்'
என்று பதில் சொன்னார்.

(புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?
யார் ஒருவரே புருஷன்? Click Here to Read )

இப்படி பல தெய்வங்களை படைத்து, அனைவருக்கும் தானே அந்தர்யாமியாகவும் இருந்து, அவர்களுக்குள்ளே தானும் அவதாரம் செய்து பழகி, அனைவரையும் தன் மீது பக்தி செய்ய செய்து மோக்ஷம் கொடுக்கும் வரை கூடவே இருக்கிறார் நாராயணன்.

பிரகலாதன் இந்த ஞானத்துடன் இருந்ததால் தான், நாராயணனே எங்கும் வியாபித்து உள்ளார் என்று பார்த்தான்.
தன்னை சூலத்தால் குத்த வரும் அசுரர்களை பார்த்து, பிரகலாதன் சொல்கிறான்,
'என்னை குத்த வரும் உங்களிடத்திலும் நாராயணனே இருக்கிறார். என்னிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.
நீங்கள் குத்த வைத்திருக்கும் சூலத்திலும் நாராயணனே இருக்கிறார். உங்களை இங்கு அனுப்பிய என் தந்தையிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.' என்றான்.

பேதமாக உலகம் தெரிந்தாலும், ஞானிக்கு அபேதமாகவே உலகம் தெரிகிறது.
அனைத்தும் நாராயண ஸ்வரூபமாகவே தெரிகிறது. 
அஞானியாக இருந்தால் உலகம் பேதமாக தெரிகிறது. 
இரண்டும் உண்மையாக பக்குவத்தை பொறுத்து தெரிகிறது.
இதுவே விஷிஷ்ட அத்வைதம்.

இந்த ஞான நிலையில் பிரகலாதன் நாராயணனை பக்தி செய்தான்.
நாராயணனின் கருணைக்கு பாத்திரமானான்.
நரசிம்மமாக தரிசனம் பெற்றான். மோக்ஷத்திற்கு தகுதி பெற்றான்.

மோக்ஷத்திற்கு என்ன வழி என்று நீ கேட்டாயே? எனக்கு எது பாதை என்று கேட்டாயே?
நாராயண பக்தி செய்வதே, மோக்ஷத்திற்கு வழி.

நீயும் அந்த நாராயணனிடம் பிரகலாதனை போன்று திடமான பக்தியை செய். 
உனக்கும் தரிசனம் கிட்டும். 
மோக்ஷத்திற்கும் வழி கிடைக்கும்"
என்று ப்ருகு முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து அணுகிரஹம் செய்து, ஆசிர்வாதம் செய்தார்.



சந்தேகம் தெளிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, காஞ்சியில் உள்ள அந்த “ஹேம சரஸ்” என்ற அந்த பொற்றாமரை குளக்கரையிலேயே நரசிம்மமாக வந்த நாராயணனை தரிசனம் செய்ய, பக்தி யோகமாக, தவம் செய்தார்.

ப்ருகு முனிவரின் ஆசி பெற்ற, குரு கடாக்ஷம் பெற்ற முசுகுந்த சக்கரவர்த்திக்கு, காஞ்சியில் வரதராஜனாக இருக்கும் நாராயணன், இவருக்கு "யோக நரசிம்மமாக" (அழகிய சிங்க பெருமாள்) காட்சி கொடுத்தார்.



Friday 11 May 2018

அத்வைதம், விஷிஷ்ட அத்வைதம், த்வைதம் - 947ல் சிக்கி, 1947ல் விடுதலை ஆன பாரத பூமியில் மக்களை ஹிந்துக்களாகவே இருக்க வைத்தது

த்ருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் முடிந்து, 3102BCல் கலி யுகம் ஆரம்பித்தது.

சுமார் 563BCல் க்ஷத்ரியனான சித்தார்தன் என்ற புத்தரால், உலகம் சூன்யம் என்ற பௌத்த மதம் உருவாகி, பாரத பூமியை ஆக்கிரமித்தது.





அசோக சக்கரவர்த்தியின் மத மாற்றத்தால், பாரத பூமி பௌத்த நாடாக போனது. 

நாட்டை காக்க வேண்டிய அரசன் க்ஷத்ரியனாக இருக்க வேண்டும் என்று சொல்லும் வேத தர்மத்தை (ஹிந்து) விட்டு விட்டு, சந்யாசிகளுக்கு போதிக்கும் பௌத்த தர்மத்தை தனக்கு எடுத்துக்கொண்டான்.

பாரத தேசத்தை ஆண்டு கொண்டிருந்த பேரரசன், அனைத்து அரசர்களையும் போர் செய்யாமல், ஒரு சந்யாசி போல, சாதுவாக அரசாட்சி நடத்த சொன்னான். 

பாரத தேசத்தில் இருந்த ஆப்கான், ஈரான் போன்ற எல்லை ராஜ்யங்கள் பௌத்த ராஜ்யம் ஆகி, அரசர்கள் போர் பயிற்சி இல்லாமல், பலவீனமாகி கொண்டிருந்தார்கள். 

போர் வீரர்கள், போர் பயிற்சி இல்லாமல், பௌத்த ஆலயங்கள் கட்டி கொண்டிருந்தனர்.
சுமார் 30ADல் ஏசு என்ற யூதர் ரோமானியர்களால் இஸ்ரேலில் உள்ள ஜெருசலம் என்ற ஊரில் கொல்லப்பட்டார்.

ஏசுவின் ஆதரவாளர்கள் யூத மதத்தில் இனி இருந்தால், ரோமானியர்களால் கொல்லப்படுவோம், அழிவு நிச்சயம் என்று உணர்ந்தனர்.

ஏசுவின் பெயரால், ஏழைகள், பாதிக்கப்பட்டவர்கள் என்று அனைவருக்கும் ஆதரவாக பேசியும், ஏசு உங்களுக்காக தான் உயிர் நீத்தார் எனவும், ஏசு திரும்ப வருவார், எனவும், ஏசு கொல்லப்பட்டாலும், மீண்டும் வருவார் என்றும் சோகத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் செய்தனர்.

இந்த ஆறுதல் பிரச்சாரம், காலப்போக்கில் வாழ்க்கையில் ஆறுதல் எதிர்பார்க்கும் ஏழைகள், இரக்க குணம் உள்ளவர்களை ஈர்த்தது.  

பெரும் கூட்டம் இவர்களுக்கு சேர சேர, ஒரு சமயம் ரோமானிய பேரரசனும் இவர்கள் வலையில் வீழ்ந்தான். 

ரோமானிய மன்னன் புதிய மதத்துக்கு ஆதரவை காட்டியவுடன், மக்களும் புதிய மதத்துக்கு இழுக்கப்பட்டனர்.






விளைவு: ரோமானிய பேரரசும், அதன் கலாச்சாரம் அழிந்து, அதே ரோமானியாவில் ஏசுவின் பெயரால் சர்ச் உருவாக்கினர். பின் ஊரையே மதம் மாற்றினர். 

ஏசு கடவுள் இல்லை என்று, ரோமானிய கிறிஸ்தவர்களை (Roman catholic) எதிர்த்து, ப்ராடெஸ்டெண்ட் (Protestant Christians) என்ற பிரிவு உருவானது.

வேத சம்பந்தமான தெய்வங்களை வணங்காமல், ஆகஸ்ட், ஜுபிடர் என்று வணங்கி கொண்டிருந்த ரோமானியர்களை மதம் மாற்றுவது எளிதாக முடிந்தது.

இப்படி மேற்கு நாடுகள் கிறிஸ்துவத்துக்கு மாற்றப்பட்டு கொண்டிருக்க,

சுமார் 570ADல் அரேபியாவில் இஸ்லாம் (சரணாகதி - surrender to god) என்ற புது மதம், யூத மதத்தில் இருந்து பிரிந்து முகமது நபி என்பவரால் எழுதப்பட்டு, உருவானது.

முகமது நபி இறந்த பிறகு, அவரின் மருமகன் உருவான "அலி இபின் அபிதலிப்" என்பவரை அடுத்த தலைமையாக ஏற்றனர். 
முகமது நபி தனக்கு பிறகு இவர் வர வேண்டும் என்று யாரையும் நியமிக்கவில்லை என்று, பலர் எதிர்க்க, உட்பூசல், சண்டை, கலவரம் ஏற்பட்டு, மருமகன் தலைமையை ஏற்ற இஸ்லாமியர்கள் தங்களை "ஷியா" (Shia) முஸ்லீம் என்று அடையாள படுத்திக்கொண்டனர்.

ஏற்காதவர்கள், தாங்கள் மட்டுமே உண்மையான இஸ்லாமியர்கள் என்று தங்களை "சன்னி" (sunni) முஸ்லீம் என்று அடையாள படுத்திக்கொண்டனர்.

அன்று ஆரம்பித்த பகை, இன்று வரை தொடர்கிறது.

தங்களுக்குள் அடித்துக்கொண்டாலும், பிற மதங்களை எதிர்ப்பது இவர்கள் கொள்கையாகவே இருந்தது. 

இஸ்லாமியனாக மாற விரும்பாமால், கிறிஸ்தவனாகவும் மாற விரும்பாமல், யூதர்களாகவே வாழ விரும்பியவர்கள் வாழ்க்கை சூன்யமானது. பரதேசிகள் ஆகினர்.

பல தெய்வ கொள்கை உடையவர்களை எதிர்த்தது இஸ்லாம் என்ற இந்த புதிய மதம். 

இஸ்லாமியனாக இல்லாத வேறு தெய்வங்களை வணங்கும் அனைவரும் காபிர்கள் என்று கொள்கை கொண்டிருந்தனர். 

இதனால் பிற மதங்களை சேர்ந்தவர்களை கடுமையாக தாக்கினர்.

இதனால் கிரேக்க, ரோமானிய கலாச்சாரம் இஸ்லாமியர்களுடன் கடும் போராலும், கிறிஸ்தவர்களின் மத மாற்றத்தாலும், அவர்களின் தெய்வ வழிபாடு மூட நம்பிக்கையாகவும் இருந்ததால், வேகமாக வேரோடு அழிந்தது.







இதே சமயத்தில், பாரத தேசத்தில், வேதத்தை உபாஸிக்கும் ப்ராம்மணர்களும், வேதத்தில் உள்ள ஞான மார்க்கத்தை புறக்கணித்து, கர்ம மார்க்கமே சிறந்தது என்று யாகம் போன்ற கர்ம காரியங்களில் மட்டும் நாட்டம் கொண்டிருந்தனர். 

ஞானத்தை போதிக்கும் ப்ராம்மணர்கள், கர்ம மார்க்கத்தை மட்டுமே நாட, பாரத மக்களுக்கு ஞானத்தை உபதேசிக்க ஆளில்லாமல் போனது.
ப்ராம்மணர்களால் ஞான மார்க்கம் புறக்கணிக்கப்பட, க்ஷத்ரிய அரசன், வைஸ்யன் (business), சூத்திரன் (employee) என்று அனைத்து ஹிந்துக்களும்  ஞான மார்க்கத்தை போதிக்கும் புத்தரின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டனர். 
பௌத்த மதம் தீ போல பாரதம் முழுவதும் பரவி இருந்தது.

எங்கு பார்த்தாலும் மொட்டை தலைகள்.

எங்கு பார்த்தாலும், "புத்தம் சரணம் கச்சாமி" என்ற ஒலிகள் ஒலித்தது.

பொய் மதங்களை கண்டிக்க, "அனைத்தும் ப்ரம்மமே" என்ற அபேதத்தை காட்டும், ஞானத்தை போதிக்கும், வேத ஸ்ருதிகளை மட்டும் எடுத்து, "அத்வைதம்" என்ற ஞான  சித்தாந்தத்தை நிலை நிறுத்தினால் தான் ஹிந்துக்கள் வாழ வழி செய்ய முடியும் என்ற நிலை உருவானது.

ரோமானிய, கிரேக்க கலாச்சாரங்கள், இல்லாத தெய்வங்களை வழிபட்டதால், இன்னொரு பொய் மதம் புகுந்தவுடன் தன் கலாச்சாரத்தையும், தெய்வத்தையும் இழந்தது. 

கிரேக்க வீரர்கள், ரோமானிய வீரர்கள் கிறிஸ்துவதுக்கு மதம் மாறினர். தன் கலாச்சாரத்தை தானே அழித்துக்கொண்டனர்.

ஹிந்துக்களின் வேதமோ, சத்தியமானது. இங்கு சொல்லப்படும் யமன், இந்திரன் என்று அனைத்து தெய்வங்களும் சத்தியமாக இருப்பவர்கள்.

பாரத தேசம் பொய் மதங்களால், பொய் தெய்வங்களால் சூழ்ந்து, ஹிந்து மக்கள் அழிவதை தெய்வங்கள் அனுமதிப்பதில்லை.
பொய் மதங்களை, பொய் தெய்வங்களை, மனிதர்கள் தங்கள் முயற்சியால், பொய் பிரச்சாரத்தாலும், பேச்சாலும் வளர்க்கின்றனர்.

ஹிந்து தர்மத்தை, தெய்வங்களே முன் நின்று காப்பாற்றுகின்றனர்.
சிவபெருமானே, இந்த சமயத்தில்,  கேரளாவில் காலடி என்னும் ஊரில், 788ADல் அவதரித்தார். ஆதி சங்கரர் என்று ஜகத்குருவாக அவதாரம் செய்தார்.



காலத்தை அனுசரித்து, வேதத்தில் உள்ள அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டினார்.

வேதத்தில் சொன்ன தெய்வங்களில் பேதம் இல்லை. உலகில் காணும் அனைத்துமே அந்த பரப்ரம்மம் தான். அவரே எல்லாமுமாக உள்ளார் என்று அபேதத்தை நிலை நிறுத்தும் அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார்.

அத்வைத சித்தாந்தமும் வேத சம்மதமே என்பதால், மடங்களை பாரத தேசம் முழுவதும் நிறுவி, ஹிந்துக்களின் மனதில் ஹிந்து தர்மத்தின் மேன்மையை விளக்கி, பொய் மதங்களில் வீழ்ந்து விடாமல் தடுத்தார்.

அத்வைத சித்தாந்தத்தால், பௌத்தர்களின் சூன்ய வாதம் "பொய்" என்று நிரூபிக்கப்பட்டது.

பௌத்த மதம் போல, 70க்கும் மேற்பட்ட பொய் மதங்கள் உருவாகி இருந்த காலம் அது. 
அனைத்தையும் பொய் என்று வாதிட்டு, பொய் மதங்களில் ஹிந்துக்கள் வீழாமல் இருக்க செய்தார்.

பாரத மக்கள், மீண்டும் வேத மார்க்கத்தின் பக்கம் திரும்பினர்.
புத்தர் சொன்ன ஞான மார்க்கத்தை விட, வேதத்தில் சொல்லியுள்ள ஞான மார்க்கமான, அத்வைத சித்தாந்தமே உண்மையானது என்று ஹிந்துக்கள் திரும்பினர்.

தெய்வங்களுக்குள் பேதம் இல்லை என்று சொல்லும் வேத மந்திரங்களை கொண்டு, “அத்வைத” சித்தாந்தம் ஆதி சங்கரரால் ப்ரகாசப்படுத்தப்பட்டது. 

இஸ்லாமியர்கள், தங்கள் மதத்தை பரப்பும் நோக்கில், இவர்கள் பார்வை பாரத தேசத்தை நோக்கி 947ADல் திரும்பியது.

947ADல் இஸ்லாமியர்களின் படையெடுப்பு “ஈரான், ஆப்கான்” போன்ற பாரத தேச பக்கம் திரும்ப தொடங்கியது.

அசோக சக்கரவர்த்தியினால் மாற்றப்பட்டு இருந்த பௌத்த தேசங்களான ஈரான், ஆப்கான் போன்ற நாடுகள், அரேபியர்களின் படையெடுப்பில் வீழ்ந்தது.
இரு நாடுகளும் இஸ்லாமிய நாடாக மாறியது.
ஆப்கான் நாட்டை ஆண்டு கொண்டிருந்த “அமீர் சூரி” என்ற பௌத்த அரசன், இவர்களிடம் எதிர்க்க முடியாமல் தோற்றான்.

பௌத்த மதம் அரசர்களை கோழைகள் ஆக்கி, சோம்பேறிகள் ஆக்கி இருந்தது.

இஸ்லாமிய மதத்தின் எதிர்க்கும் குணம், பொதுவான இறை கொள்கைகள் இவனுக்கு பிடித்து போக, தன் மகன்களை பௌத்தனாக வளர்க்காமல் இஸ்லாமியனாக வளர்த்தான்.

அமீர் சூரி என்ற பௌத்த அரசன் மதம் மாறியதால், அவன் சந்ததியின் காரணமாக, இந்தியாவில் பல கோவில்கள் இடிய காரணம் ஆனது. 
விளைவு: இவனுக்கு பிறகு, ஈரான், ஆப்கான் தேசங்கள் இவன் பிள்ளைகளால், பின் வந்த பேரன்களால், இஸ்லாமிய நாடாகி போனது.  

“முகம்மது கோரி” போன்றவர்கள் இவன் குடும்பத்தில் வந்தவர்களே.  கோரி அரசாட்சி (Ghurid Dynasty) உருவாக அமீர் சூரி வித்திட்டான். 
அங்கு இருந்த ஹிந்து கோவில்கள், பௌத்த ஆலயங்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன.

ஹிந்து தேச மக்கள், ஒரு சமயம் பௌத்தனாகி, பின் இஸ்லாமியனாக ஆகி, நாட்டையே இஸ்லாமிய நாடாக ஆக்கினர். 
இன்று வரை ஆப்கான், ஈரான் போன்ற பாரத தேசங்கள் இஸ்லாமிய நாடாக தான் உள்ளது.

மதம் மாறிய இந்த கூட்டமே, பின் இந்தியாவுக்கு பெரும் சவாலை தர ஆரம்பித்தது. 

ஸ்ரீ ராமரின் தம்பி "பரதன்" அமைத்த காந்தாரம் (gandahar) இன்று இஸ்லாம் நாடாகி விட்டது. 

ஸ்ரீ ராமரின் தம்பி "பரதன்" அமைத்த "தக்ஷஷீலா" (Taxila), புருஷபுரா (peshavar) இன்று பாகிஸ்தான் என்று பிரித்து கொடுத்ததால், இன்று இஸ்லாம் நாடாகி விட்டது.

ஸ்ரீ ராமரின் மகன் லவன்  அமைத்த "லவ புரா" (Lahore) பிரித்து கொடுத்ததால், பாகிஸ்தானில் இன்று இஸ்லாம் நாடாகி விட்டது.

மதம் மாறுபவர்களால் அந்த சமயத்தில், பெரும் ஆபத்து ஏற்படாவிட்டாலும், அவர்களுக்கு பின் வரும் சந்ததியினர் செய்யும் அட்டகாசங்கள் ஹிந்துக்களை பாதிக்கிறது. 

ஹிந்துக்கள் பயத்தில் மதம் மாறுவதற்கும், வேதம் தெய்வத்தை பற்றி என்ன சொல்கிறது என்பதை சொல்வதற்கும் அவதார புருஷர்கள் தேவைப்பட்டனர். 

சரித்திரத்தை பார்க்கும் போது, மதம் மாறும் ஹிந்துக்களின் சந்ததியினர் செய்த அட்டகாசங்கள் மிக அதிகம். 





தன் முந்திய தலைமுறை ஹிந்துக்கள் என்று தெரிந்தும், இவர்கள் இடித்த கோவில்கள் அதிகம். இவர்களால் கொல்லப்பட்ட ஹிந்துக்கள் அதிகம். கொள்ளை அதிகம்.

ஈரான், மற்றும் ஆப்கான் என்ற இரு தேசங்களை இழந்ததால், பெரும் ஆபத்தை இந்திய பூமி சந்திக்க வித்திட்டது.

அடுத்த 1000 வருடங்கள்,
இந்தியர்கள் கோடிக்கணக்கில் மடிவதற்கும்,
வட இந்தியா முழுவதும் தென் இந்தியாவில் உள்ள கோவிலை போன்று இருந்த லக்ஷக்கணக்கான கோவில்கள் தரைமட்டம் ஆனதற்கும்,
தங்கத்தில் புரண்டு கொண்டிருந்த பாரத மக்கள் ஏழை ஆவதற்கும்,
கலாச்சாரம் அழியாமல் அவரவர் தொழிலை மற்றவர் பிடுங்காமல், அனைவருக்கும் ஒரு சுயதொழில், சுய வருமானம், சுய கௌரவம் என்று வாழ வைத்துக்கொண்டிருந்த க்ஷத்ரிய அரசகுலம் அழிவதற்கும் வித்திட்டது. 

இதற்கு மூல காரணமாக இருந்தவர் "சாம்ராட் அசோகர்". க்ஷத்ரிய அரசர்களை பௌத்தனாக்கி, கோழைகள் ஆக்க மூல காரணமானார்.

இப்படி இஸ்லாமும், பௌத்தமும் பாரத தேசத்தை உலுக்கி கொண்டிருக்க,
"ஒரே தெய்வம்" என்ற கொள்கை பாரத மக்களிடம் ஸ்தாபிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ஒரே தெய்வம் வேதத்தில் சொல்லவில்லை என்ற பிரமையை இஸ்லாமும், பௌத்தமும் பாரத மக்களிடம் விதைக்க பார்த்தது.
வேதத்தின் உண்மையை விளக்க, ஒரு அவதார புருஷர் மீண்டும் தேவைப்பட்டார்.
விஷிஷ்ட அத்வைத சித்தாந்தத்தை பிரகாசபடுத்த ஒரு அவதார புருஷர் தேவைப்பட்டார்.

பாரதத்தில் இன்னும் கொஞ்சம் ஓடிக்கொண்டிருந்த பௌத்த பிடிப்பையும், ஒரே கடவுள் என்ற கொள்கை கொண்ட இஸ்லாம் என்ற மதத்தின் நுழைவையும் கட்டுப்படுத்த, ஹிந்துக்களுக்கு வர இருக்கும் பெரும் ஆபத்தில் இருந்து சமாளிக்கும் தெம்பு கொடுக்க, ஹிந்துக்களாகவே வாழ நெஞ்சுறுதி கொடுக்க, இம்முறை பரவாசுதேவனின் படுக்கையாக இருக்கும் ஆதி சேஷனை அவதாரம் செய்யுமாறு  நியமித்தார் பெருமாள். 
1017ADல் ஆதி சேஷனே தமிழகத்தில், சென்னையின் அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் மனித அவதாரம் செய்தார்.

"ஸ்ரீ ராமானுஜர்" என்றும் எதிராஜர் என்றும், போற்றப்படும் மகான் அவதாரம் செய்தார். இது தமிழனுக்கு பெருமை.

அனைவரும் ஹரிஜனங்களே (ஹரியின் குழந்தைகளே) என்றும், 
அனைவருக்கும் மோக்ஷம் உண்டு என்றும், 
அனைவரும் நாராயண பக்தி செய்யலாம் என்றும் சமூக புரட்சியும் செய்து, 
அடுத்த 1000 வருடங்கள் இஸ்லாமிய ஆட்சி நடந்தும், கிறிஸ்துவர்கள் 200 வருடங்கள் ஆட்சி செய்தும், ஹிந்துக்கள் அழியாமல் இருக்க வழி செய்தார். 

காலத்தால் அழியாமல் இருக்கும் ஆதி சங்கரரும், ஸ்ரீ ராமானுஜரும் வேதத்தில் சொன்ன சிவனும், ஆதி சேஷனான தெய்வங்கள் என்று ஞாபகத்தில் கொள்ள வேண்டும். 

மற்ற மதத்தை காக்கும் பொறுப்பு, அந்த மதத்தை பின் பற்றுபவர்கள் கையில் உள்ளது. அவர்கள் பிரச்சாரத்தை நம்பித்தான், அவர்கள் மதம் வாழப்போகிறது. 
ஹிந்து மதத்தை காக்கும் பொறுப்பை தெய்வங்களே ஏற்று கொண்டு உள்ளனர் என்பதே நம் ஹிந்து மதத்தின் பெருமை.

காலத்தை அனுசரித்து, பேதம், அபேதம் இரண்டையும் காட்டும் வேத ஸ்ருதிகளை எடுத்து, "விஷிஷ்ட அத்வைதம்" என்ற சித்தாந்தத்தை பாரதத்தில் நிலை நிறுத்தினார், ஸ்ரீ ராமானுஜர்.

நாம் அனைவரும் ஜீவாத்மா, 'விஷ்ணு' ஒருவரே பரமாத்மா என்று வேத வாக்கியத்தால் நிர்ணயம் (முடிவு) செய்தார்.

ஸ்ரீ ராமானுஜர் அவதரித்து இருக்காவிட்டால், ஹிந்துக்களை மிரட்டி, குழப்பி, 1000ADயிலேயே மத மாற்றம் செய்து இருப்பார்கள்  இஸ்லாமியர்களும், பௌத்தர்களும்.
ஒரே கடவுளை தான் வேதம் சொல்கிறது என்று விஷிஷ்ட அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார்.

ஏற்கனவே அத்வைத சித்தாந்தத்தால் நிலை குலைந்து இருந்த பௌத்த மதம், ராமானுஜரின் விஷிஷ்ட அத்வைத சித்தாந்தத்தால் பாரத மக்களால் நிராகரிக்கப்பட்டது.



அனைவரும் வேத மார்க்கத்தை ஏற்றனர். பௌத்த மதம் பாரதத்தை விட்டு போனது.
அனைவரும் அந்த விஷ்ணுவின் அடியார்களே. அனைவரும் வைஷ்ணவர்களே. நமக்கு ஒரே தெய்வம் "நாராயணனே" என்று வேத வாக்கியத்தால் நிரூபித்தார். பாரத மக்கள், மீண்டும் வேத மார்க்கத்தின் பக்கம் திரும்பினர்.

இந்த தெளிவு கிடைத்த பின்னர், ஹிந்துக்கள், அத்வைத சித்ததாந்தத்தையும், விஷிஷ்ட அத்வைத சித்ததாந்தத்தையும், தலையில் வைத்து பூஜித்தனர்.

1200 வருடங்கள் அந்நிய மதங்கள் கோடிக்கணக்கான ஹிந்துக்களை கொன்றாலும்,
லக்ஷகணக்கான கோவிலை இடித்து அதில் மேல் மசூதி, மஹால் என்று கட்டினாலும்,
அனைத்து செல்வங்களையும் கொள்ளை அடித்தாலும்,
ஹிந்துக்களை பிச்சைக்காரகள் போன்ற நிலைக்கு ஆக்கினாலும், பொய் மதம் போவதில்லை என்று மானத்தை இழக்காமல், கஷ்டங்களை சமாளித்தனர் ஹிந்துக்கள்.

947ல் சிக்கி, 1947ல் விடுதலை ஆன பாரத பூமியில் 90% மக்கள் ஹிந்துக்களாகவே இருந்தனர்.
ரோமானியர்களை போல, கிரேக்கர்களை போல, அழிந்து விடவில்லை, மதம் மாறி விடவில்லை.

கஞ்சிக்கு அலையும் நிலையில் பெரும்பாலான ஹிந்துக்கள் தள்ளப்பட்டு இருந்தனர். இருந்த போதும், ஹிந்துக்களாகவே இருந்தனர்.

பொய் மதங்களை பொய் தெய்வங்களை மறுத்தனர்.

இந்த நெஞ்சுரத்துக்கு விதை போட்டவர்கள், வேதத்தில் சொன்ன சிவபெருமானும், ஆதி சேஷனுமே. 
ஆதி சங்கரரையும், ஸ்ரீ ராமானுஜரையும் அறியாத ஹிந்துக்கள் நன்றி கெட்டவர்கள்.

நாம் இன்று ஹிந்து என்றும், ஹிந்துக்களின் பெயர் வைத்து கொண்டும் இருப்பதற்கு இவர்களே காரணம்.

அவர்கள் சரித்திரத்தை ஒவ்வொரு ஹிந்துவும் படிக்க வேண்டும்.

நாத்தீகன் கூட ஸ்ரீ ராமானுஜர் கதையை நாடகம் அமைத்து விட்டான் இந்த காலத்தில்.

இவர்கள் இருவரை பற்றி இன்று வரை தெரியாமல் இருந்தால் கூட, இனியாவது தெரிந்து கொள்ள பல புத்தகங்கள், ஒளிப்பதிவுகள் கண்டு தெரிந்து கொள்ள வேண்டும். 

நாம் இன்று ஹிந்துவாக இருக்க வேண்டும் என்று, தெய்வங்கள் ஆசைப்பட்டு உள்ளன என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

சிவனும், ஆதி சேஷனும் அவதாரம் செய்த சரித்திரத்தை தெரிந்து கொள்ளாமல், ஒரு ஹிந்து இருக்கலாமா?

தெய்வங்களுக்குள் பேதம் இருப்பதாக சொல்லும் வேத மந்திரங்களை கொண்டு,  1238ADல் கர்நாடகாவில் அவதரித்த ஆனந்த தீர்த்தர் என்ற மத்வ ஆச்சாரியார், “த்வைத” சித்தாந்தத்தை மீண்டும் ப்ரகாசப்படுத்தினார். 

பகவான் நாராயணன் மட்டுமே பரமாத்மா, 
நாம் அனைவரும் ஜீவாத்மா என்ற பேதத்தை காட்டி, நாம் அனைவரும் அவரிடம் பக்தி செய்ய வேண்டும் என்று த்வைத சித்தாந்தத்தை ப்ரகாசப்படுத்தினார். கர்நாடகாவில் பக்தி வளர்ந்தது.