Followers

Search Here...

Showing posts with label தெய்வத்திடம். Show all posts
Showing posts with label தெய்வத்திடம். Show all posts

Wednesday 24 July 2019

பரிகாரம் செய்தும், துன்பங்கள் வருவது ஏன்?

டாக்டரை பார்க்க சென்றான் ஒரு நோயாளி .

டாக்டரை பார்த்து
"நீங்கள் சௌக்கியமா? எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டான்.
தான் நலம் விசாரிக்க வேண்டி இருக்க, இவன் தன்னை நலம் விசாரிப்பதை பார்த்து, டாக்டருக்கே சிரிப்பு வந்து விட்டது.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் டாக்டரும் சங்கடப்பட்டார்.





யாரிடம் நலம் விஜாரிக்கிறோம் என்று கூட அறியாமல் கேட்கிறானே, 'பாவம்' என்று நினைத்தார் டாக்டர்.
உண்மையில்,
நாம் டாக்டரை பார்க்கும் போது, "டாக்டர், நான் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டால்,
அந்த டாக்டரும், "சரி" என்று சுதந்திரமாக சிகிச்சையோ, சரியான ஆலோசனையோ சொல்வார்.

அதே போல,
நாம் தெய்வத்தையோ, மகானையோ, ஒரு ஞானியையோ பார்க்கும் போது,
"நீங்கள் சௌக்கியமா? எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டால், மகான்களும், தெய்வமும் அஞானத்தால் கேட்பவனை கண்டு மந்தஹாசம் செய்வார்கள்.
அஞானியாக இருக்கும் நாம், "நான் ஆரோக்கியமாக, நன்றாக இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டால், சுதந்திரமாக, நமக்கு உதவி செய்ய முன் வருவார்.

ஒருவன் டாக்டரிடம் சென்று தனக்கு உள்ள நோயை குணப்படுத்த கேட்டான்.

பரிசோதித்த டாக்டர்,
"ஒரு  ஆப்பரேஷன் செய்ய வேண்டும். ஆப்பரேஷன் நல்ல படியாக முடிந்தால் உயிர் பிழைக்கும், 
ஒருவேளை தவறானால், உயிர் போகவும் வாய்ப்பு உள்ளது. 
ஆப்பரேஷன் முடிந்து 3 மாதங்கள் படுத்த படுக்கையாக தான் இருக்க வேண்டி இருக்கும். அதற்கு பின் உடல் சரியாகி விடும்" என்று சொல்லி,
"சரி என்றால் கையெழுத்து போடு" என்று கேட்டார்.
அவனும், 'டாக்டர், நீங்கள் என் உடம்பை கிழித்து ஆப்பரேஷன் செய்யுங்கள். 
இதனால் ஏற்படும் வலியை பல மாதங்கள் ஆனாலும் நான் பொறுத்துக்கொள்கிறேன். 
நீங்கள் என் உடலை கிழித்து ஆப்பரேஷன் செய்வதற்கு, உங்களுக்கு பணமும் தருகிறேன். மேலும், 
ஆப்பரேஷன் fail ஆனால் கூட, நீங்கள் காரணமில்லை என்று  கையெழுத்து கூட போடுகிறேன். காரணம், 
உங்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை" என்றான்.


அதே போல,
நாமும் தெய்வத்திடம் அந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டு, கையெழுத்து போட்டு தன்னை ஒப்படைத்து விட வேண்டும்.
டாக்டர் செய்த ஆப்பரேஷன் கூட fail ஆகலாம் என்று சொல்ல வாய்ப்பு உண்டு.
ஆனால், பெருமாளிடம் தன்னை  ஒப்படைத்தவன் தோற்றதே கிடையாது.

ஆப்பரேஷன் செய்து நோய் குணமாகும் வரை, நமக்கு ஏற்படும் தற்காலிக சங்கடங்கள் போல,  
பெருமாளிடம் தன்னை  ஒப்படைத்த பின், நம் நன்மைக்காக அவர் செய்யும் ஆப்பரேஷனால் ஏற்படும் துன்பம் கூட, ஒரு காரணத்துக்காகவே, தற்காலிக துன்பமே என்று நாம் உணர வேண்டும். அவ்வப்போது வரும் கஷ்டங்கள் தானாகவே பனி போல விலகி விடும்.

மகான்களும் தங்கள் வாழ்வில் ஏற்படும் துன்ப காலத்தை இந்த ஞானத்தினால் உணர்ந்து, துன்ப காலத்தை தைரியம் இழக்காமல் கழிக்கின்றனர்.

"இன்பமும், துன்பமும் தெய்வ இஷ்டம்" என்று இருந்தால், ஸ்ரீக்ருஷ்ணரே நம் குடும்ப பொறுப்பை சேர்த்து நிர்வாகிப்பார்.

சம்சார சூழலில் சிக்கி நோய்வாய்ப்பட்டு இருக்கும் நாம், நாராயணன் (தன்வந்திரி) என்ற வைத்தியரிடம் தன்னை ஒப்படைத்து விட்டால், அந்த வைத்தியரே சரியான சிகிச்சை செய்து, மோக்ஷம் என்ற ஆனந்தம் வரை கிடைக்க செய்திடுவார்..


வாழ்க ஹிந்துக்கள்.. வாழ்க ஹிந்து தர்மம்..

குருவே துணை.  



Monday 2 October 2017

தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? மனித முயற்சியால் பெற முடியாத 5 விஷயங்களை தெய்வத்திடம் கேள் என்று சொல்லி தருகிறார் ஆதி சங்கரர்... தெரிந்து கொள்வோமே...

"தெய்வத்திடம் நாம் 
என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? 
எதை கேட்க வேண்டும்?"
ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார்.


பொதுவாக, நாம் "பக்தியோடு" எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார்.

கேட்பதில் உயர்ந்த விஷயங்கள் உண்டு,
கேட்பதில் மிகவும் சாதாரண விஷயங்கள் உண்டு.

வரம் கொடுப்பவர், எதையும் கொடுக்க முடிந்தவர் என்று தெரிந்தும், அல்ப விஷயங்களை கேட்பவன், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.

பிரார்த்தனை செய்தேன், நோய் சரியாகி விட்டது, 
பிரார்த்தனை செய்தேன், செல்வம் கிடைத்து விட்டது,
பிரார்த்தனை செய்தேன், வேலை கிடைத்து விட்டது, 
என்று சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.
அல்ப தெய்வங்கள் இதை மட்டுமே கொடுக்கும்.

"பரவாசுதேவன்" எதையும் தரவல்லவர்.

உன்னதமான சனாதன தர்மத்தை புரிந்து கொள்ளாமல், பொய் மதமான பௌத்த மதம் போன ஒரு சில க்ஷத்ரிய அரசர்களால்,
நம் பாரத நாடு 1000 வருடங்கள் இஸ்லாமியருக்கும், 200 வருடங்கள் கிறிஸ்தவருக்கும் அடிமைப்பட்டு,
க்ஷத்ரிய அரசர்களையும் இழந்து, 
செல்வங்களும் கொள்ளை அடிக்கப்பட்டன.

"வளர்ந்த நாடாக" இருந்த நம் தேசம், விடுதலையின் போது ஏழை நாடாக ஆனது. 1947ADல் ஏழைகளாக விடப்பட்டனர் நம் முன்னோர்கள். 

ஏழை நாடாக விடப்பட்ட பாரத நாடு, பெருமுயற்சி செய்து "வளரும் நாடாக" இன்று உள்ளது.

ஆதி சங்கரர் இதற்கு முன்னரே அவதரித்து, நம் பாரத மக்களுக்கு,
நம் கலாச்சாரத்தின் பெருமையை,
நம் தர்மத்தின் பெருமையை,
நம் வேதத்தின் உண்மையான மகிமையை,
நம் சனாதன தர்மத்தின் பெருமையை போதனை செய்து,
மக்களை தர்ம வழியில் உறுதியாக நிறுத்தி விட்டார்.

இந்த பலமே, க்ஷத்ரிய அரசர்களை நாம் இழந்தும், இன்று வரை நம்மை ஹிந்துவாக வைத்துள்ளது.

ஆதி சங்கரர் மக்கள் தர்மங்களை புரிந்து கொள்ள, வேதத்தை பாஷ்யம் செய்து கொடுத்தார்.


"பாஷ்யமும் அனைவருக்கும் புரிவதற்கும், படிப்பதற்கும் கடினமே" என்று உணர்ந்து, யாவரும் சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் கொடுத்தார்.
"ஸ்லோகங்கள்" மூலம் தர்மங்களை விளக்கினார்.
எளிதாக பாடக்கூடியதான "பஜ கோவிந்தம்" கொடுத்தார்.

முக்கியமாக, "நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?" என்று வேதம் சொல்கிறது என்று எளிதான ஸ்லோகங்கள் மூலம் நமக்கு தர்மத்தை புரியவைத்தார்.

தெய்வத்திடம் அநேகமானவர்கள் பொதுவாக கேட்பது,
"எனக்கு வேலை கிடைக்க வேண்டும்,
எனக்கு குழந்தைகள் இல்லை குழந்தை வேண்டும்,
ப்ரோமோஷன் வேண்டும்,
நோய் தீரனும்,
என் பையனுக்கு, பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்"
என்று கேட்டு கொண்டிருப்பார்கள்.
ஆதி சங்கரர் 'இதையெல்லாம் போய் பகவானிடம் கேட்காதே' என்று சொல்லி, "நீ கேட்க வேண்டியது என்று சில உள்ளது, உன் முயற்சியால் கூட அடைய முடியாததை பகவானிடம் கேள்" என்று சொல்லி கொடுக்கிறார்.


இனி ஹிந்துவாக இருப்பவர்கள், ஆதி சங்கரர் சொன்ன வழியில் பிரார்த்தனை செய்யலாம்.

நம் புராதன வேதம், நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்? என்று சொல்லி இருக்கிறது என்ற ஆதி சங்கரர் விளக்குகிறார்.

1. கர்வம்
தெய்வத்திடம் நாம் முதலில் கேட்க  வேண்டியது,
"பகவானே !! முதலில் 'நான் செய்கிறேன்' என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என்னிடம் இருந்து விலக்கி விடுங்கள்"
என்று கேட்கவேண்டும்.

நமக்கு முக்கியமாக தேவையானது - விநயம் (அடக்கம்).

இந்த விநயம் (அடக்கம்) நமக்கு வராமல் இருப்பதற்கு காரணம், நம்மிடம் "நான் செய்கிறேன்" என்று இருக்கும் கர்வமே காரணம்.

அனைத்தையும் படைத்த பகவானிடம், நாம் போய் "என் கஷ்டம், என் துக்கம், என் வேலை" என்று நான், என்னுடைய என்று சொல்வதே 'நம் கர்வத்தை' காட்டுவதாகும்.

நிறைய படிப்பதனால், உயர்ந்த பதவி கிடைப்பதால், உடனே கர்வம் நமக்கு வந்து விடும்.
"எத்தனை விஷயங்கள் நமக்கு தெரிந்தாலும், அது சமுத்திரத்தில் நாம் எடுத்த ஒரு துளி தான்" 
என்ற மனப்பக்குவம் எப்பொழுதும் நமக்கு இருக்க வேண்டும்.
இந்த மனப்பக்குவம், நமக்கு விநயத்தை தரும்.

மேலும் "எல்லாம் தெரிந்து கொண்டு விட்டோம்" என்ற கர்வத்தை உண்டாக்காமல், "மேலும் தெரிந்து கொள்ளலாம்" என்று நம்மை உணர வைக்கும்.

சாஸ்திரம் நம்மை பார்த்து "எல்லோரும் எல்லாமும் தெரிந்தவர்கள் அல்ல" என்று சொல்லி,
"உனக்கு சில விஷயங்கள் தெரியலாம், 
அடுத்தவருக்கு உனக்கு தெரியாத சில விஷயங்கள் தெரியலாம். 
கற்றுக்கொள்ள வேண்டியது உலக அளவு இருக்க, எப்படி உனக்கு கர்வம் வரும்?" என்று கேட்கிறது.

அனைத்து விஷயங்களிலும் "விநயமாக (அடக்கமாக) இரு"
என்று சொல்கிறது நமது சாஸ்திரம்.

"எல்லாம் தெரியும்" என்ற நம் கர்வம், தெய்வத்திடம் போய் கூட கர்வத்துடன் பேச வைக்கிறது.

"எல்லாம் தெரிந்தவர் அந்த பரவாசுதேவனே" என்று தெரிந்தும்,
நான், என் என்று அவரிடம் பேசுவது தகாது. 

"எல்லாம் தெரிந்தவருக்கு உன் துக்கம், நோய் தெரியாதா? சொல்லித்தான் அவருக்கு தெரியுமா?

அதனால்,
"நம் விநயத்துக்கு எதிரியாக இருக்கும், நம்மால் அழிக்க முடியாத கர்வத்தை நீக்கு"
என்று முதலில் ப்ரார்த்திக்க வேண்டும் என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.


கர்வம் இல்லாதவனிடம் விநயம் (அடக்கம்) தானே வரும். 

விநயம் நம்மில் வளர வளர, "இன்னும் தெரிந்து கொள்வோம்" என்ற ஆசை உண்டாகும்.

விநயம் உள்ளவனுக்கே, கேட்கும் புத்தி வளரும்.

பல விஷயங்கள் கேட்க ஆசை உள்ளவனுக்கு, "உலக அறிவும், ஆன்மீக அறிவும் எளிதில் ப்ரகாசமடையும்".

பர்த்ரு ஹரி ஒரு ஸ்லோகத்தில்,
"ஒரு சமயத்தில் எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து இருந்தேன். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பெரியோர்கள், மகான்கள் சொல்வதை கேட்க கேட்க, எனக்குள் பல விஷயங்கள் மனதில் பதிய பதிய, இப்பொழுது எனக்கு எதுவுமே தெரியாது என்ற புரிந்து, அடக்க நிலைக்கு வந்து விட்டேன். கர்வம் அழிந்து, இன்னும் தெரிந்து கொள்ள ஆசை கொண்டேன்" 
என்கிறார்.

ஆக,
"ஒருவன் எத்தனை படித்து இருந்தாலும், நமக்கு தெரியாத விஷயங்களும் சிலருக்கு தெரியும்" என்று அடக்கமாக இருக்க வேண்டும்.

"ஒருவன் எத்தனை செல்வந்தனாக இருந்தாலும், நம்மை விட செல்வந்தன் உண்டு" என்று அடக்கமாக இருக்க வேண்டும்.

எந்த காலத்திலும், "நான் உயர்ந்தவன் இல்லை", 
எந்த காலத்திலும் "அந்த பரமேஸ்வரன் ஒருவர் தான் உயர்ந்தவர்" 
என்ற ஞானம் (அறிவு) நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

கொஞ்சம் படித்தாலும்,
கொஞ்சம் பணம் சேர்ந்தாலும்,
கொஞ்சம் பேசினாலும்,
நம்மையும் மீறி, நமக்குள் இந்த கர்வம் வந்து விடும்.

இந்த "நான், எனது" என்கிற கர்வத்தை, "நம் முயற்சியால்" போக்கிக்கொள்ளவே முடியாது. 

தெய்வத்திடம் சொல்லி, தெய்வ அணுகிரஹத்தால் மட்டுமே, நம்மில் இருக்கும் இந்த கர்வத்தை அழிக்க கொள்ள முடியும்.

ஆதி சங்கரர், அதனால் தான், பகவானிடம் நீ முதலில் கேட்க வேண்டியது 'பகவானே, முதலில் என் மனசில் இருக்கும் கர்வத்தை நீக்கி விடு'
என்று பிரார்த்திப்பது தான் என்கிறார்.

2. ஆசை
இரண்டாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய இரண்டாவது பிரார்த்தனை,
'பகவானே! என்னுடைய மனதில் இன்றுவரை நிறைய ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த ஆசைகளை வராமல் செய்து விடு" 
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நமக்கு மனதில் எத்தனைக்கு எத்தனை ஆசைகள் உருவாகி கொண்டே இருக்கிறதோ, அந்த ஆசையினால் துக்கங்கள் உண்டாகிறது. 

ஒரு ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, இன்னொரு ஆசை மனதில் உண்டாகிறது.

அந்த ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, மற்றொரு ஆசை மனதில் உண்டாகிறது.



முடிவே இல்லாத ஆசைகள், திருப்தி இல்லாதவனுக்கு வந்து கொண்டே இருக்கும்.
திருப்தி இல்லாததால் துக்கம் உண்டாகும்.

கர்வத்தை நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் வந்து கொண்டே இருக்கும் இந்த ஆசையையும் நம் திறமையால் அழிக்கவே முடியாது.

அதனால்தான், ஆதி சங்கரர் இரண்டாவதாக,
"என் மனதில் ஆசையே இனி வரக்கூடாது" என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுகிரஹத்தால் மட்டுமே,
நம்மால் அழிக்க முடியாத கர்வத்தையும், நம்மிடம் உருவாகும் ஆசையையும் அழிக்க முடியும்.

3. திருப்தி:
மூன்றாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய மூன்றாவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு"
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.
பகவத் கீதையில், இந்த திருப்தியை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர்
"யதுர்சா லாப சன்துஷ்ட: த்வந் த்வா தீதோ விமத் சர: !
சம: சித்தாவ சித்தௌ ச க்ருத் வா பி ந நிபத் யதே !!'"
(4 chapter, 22 sloka)
என்று சொல்லும் போது,
"நானாக போய் யாரிடமும் கை எந்த மாட்டேன். எனக்கு என்று எது கிடைக்கிறதோ அதை கொண்டு நான் சந்தோஷப்படுவேன் என்கிற திருப்தியில் எவன் இருக்கிறானோ!! அவனை சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி என்ற எந்த அனுபவமும் மனதளவில் பாதிக்காது" என்கிறார்.

"திருப்தியாக உள்ளவனின் நிலையை" இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.

'மனதில்' த்ருப்தி இல்லாத மனிதனுக்கு'மனதில்' சுகம் கிடைக்காது.

கர்வத்தையும், ஆசையையும் நம்மால் அழிக்க முடியாதது போல, 
"கிடைத்தது போதும்" என்கிற த்ருப்தியும், நம் முயற்சியால் வரவே வராது.

தெய்வ அனுக்கிரகத்தால் மட்டுமே, மனதில் த்ருப்தி ஏற்படும்.

அதனால்தான், ஆதி சங்கரர் மூன்றாவதாக,
"பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு" 
என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

4. இரக்கம்:
நான்காவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.


நாம் செய்யவேண்டிய நான்காவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு யாரை பார்த்தாலும் மனதில்
இரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள்" 
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நம்மால் கொண்டு வர முடியாத குணம் "இரக்கம்".
இரக்க குணம் உள்ளவனுக்கு, 
மற்றவர்கள் செய்யும் தவறுகள் தெரிந்தாலும், "அவன் தெரியாமல் செய்கிறான்" என்று அவன் மீதும் இரக்கம் வரும்.

இரக்க குணம் உள்ளவனுக்கு, 
"உயிரை கொன்று, மாமிசம் சாப்பிட கூடாது" என்ற எண்ணம் தோன்றும். 

"இரக்க குணம் உள்ளவனுக்கு", எதை பார்த்தாலும், யாரிடத்திலும் 'கோபமே' வராது.

'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல, 
மனதில் 'த்ருப்தி' கொண்டு வரவே முடியாதது போல, 
எதனிடத்திலும் 'இரக்கம்' காட்டும் குணம், நம் முயற்சியால் வரவே வராது.

தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, இந்த இரக்க குணம் மனதில் ஏற்படும்.

அதனால்தான், ஆதி சங்கரர் நான்காவதாக,
"பகவானே! எனக்கு யாரிடத்திலும் இரக்கம் வருமாறு உள்ள குணத்தை கொடு" 
என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, 
நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி', 'இரக்கம்' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

5. மோக்ஷம்
கடைசியாக ஐந்தாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய ஐந்தாவது பிரார்த்தனை,
'பகவானே! பல யுகங்களாக நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன். 
எவ்வளவு தடவை இப்படியே இருந்து கொண்டிருப்பது? 
என்னை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து தாண்ட வைத்து விடு. மோக்ஷத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

இங்கு ஸம்ஸார ஸாகரம் என்று சொல்வது, ஜனனம்-மரணம் என்ற சுழற்சியை.

இந்த சுழற்சியையே, ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் பாடும் போது "புனரபி ஜனனம், புனரபி மரணம்,
புனரபி ஜனனீ ஜடரே சயனம் I
இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே !!"
என்று பாடுகிறார்.
இதற்கு அர்த்தம்,
"பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உண்டாகி கொண்டே இருக்கிறது. இந்த பிறப்பிலும் மீண்டும் தாயின் கருவறையில் பிறந்தாயிற்று. 
கடக்க முடியாத இந்த சக்கரத்தில் இருந்து, விடுவித்து, அக்கரை காண கடாக்ஷித்து அருளமாட்டாயா கோவிந்தா?" என்கிறார்.
நாம் பிறந்தாச்சு. கொஞ்சம் வருஷம் வாழ்ந்து தான் ஆக வேண்டும். பின்பு இறந்து தான் ஆக வேண்டும்.
செய்த பாவ, புண்ணிய பலன் படி, திரும்ப ஏதாவது ஒரு தாயார் வயிற்றில் பிறக்க தான் வேண்டும். 
ஆனால் இப்படியே எவ்வளவு நாள் ஸம்ஸார சாகரத்தில் சூழல்வது?

'கர்வத்தை'யும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் 'த்ருப்தி'யும், 'இரக்கத்தை'யும் நம்மால் கொண்டு வரவே முடியாதது போல,
ஸம்ஸார சக்கரத்தில் இருந்து, நம் முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது.
தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, மோக்ஷம் நமக்கு ஏற்படும்.

"உன் முயற்சியால், பெற முடியாத இந்த 5 விஷயங்களையும், 
பகவானிடம் கேள்" 
என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லிதருகிறார்.

"யாராலும் தர முடியாத, பகவான் மட்டுமே தரக்கூடிய, இந்த 5 விஷயங்களை உனக்கு கேட்டுக்கொள்ளாமல், 
அற்பமான பணத்தையும், 
உனக்கு வந்த நோயை பற்றியும் கேட்டு வீண் செய்யாதே" 
என்று சொல்லி தருகிறார்.
நீ இந்த 5 விஷயங்களையும் பகவானிடம் தினமும் பிரார்த்தித்து கொண்டே இரு. 

பகவான் நம்மிடம் கருணை கொண்டு, அணுகிரஹித்து விட்டால், இதை விட லாபம் ஒரு மனிதனுக்கு ஒன்று உண்டா?
இதை விட்டு, 
மிகவும் அற்பமான எதை எதையோ கேட்டு!! உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே !

இப்படி, "தெய்வத்திடம் எதை கேட்க வேண்டும்?" 
என்று எளிதாக நமக்கு காரணத்தோடு விளக்கி சொல்லித்தந்த ஆதி சங்கரர், இது போன்று பல தர்ம தத்துவங்களை பல ஸ்லோகங்களில் நமக்காக சொல்லி இருக்கிறார்.
ஹிந்துவாக உள்ள நீங்கள், 
ஆதி சங்கரரின் ஸ்லோகங்களை, தினமும் ஒவ்வொன்றாக படித்து, 'அர்த்தங்களை புரிந்து கொள்ள' முயற்சி செய்யுங்கள். 

அடிக்கடி அர்த்ததோடு ஸ்லோகங்களை மனதில் கொண்டு வந்தாலேயே, நமக்கு எப்படி அழகாக நிம்மதியாக வாழ்க்கையை நடத்த வேண்டும்? என்று புரிந்து விடும்.

"பிரச்சனைகள் பதட்டம், பயம்" உள்ள நம் வாழ்க்கையில், உள்ள தவறுகளையும் திருத்தி கொள்ள முடியும்.

"நாம் ஹிந்துவாக இன்றும் வாழ காரணமாயிருந்த"  ஆதி சங்கருக்கு நாம் செய்யும் நன்றி, நம் தவறுகளை திருத்தி கொண்டு, ஆதி சங்கரரின் பாடல்களை அர்த்தத்துடன் மனதில் அனுபவத்து கொண்டு இருப்பதே

"ஹர ஹர சங்கரா, ஜெய ஜெய சங்கரா"

சிருங்கேரி சங்கராச்சாரியார் அருளுரை