Followers

Search Here...

Showing posts with label ஆத்மா. Show all posts
Showing posts with label ஆத்மா. Show all posts

Tuesday 15 December 2020

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது? மனிதனின் நோக்கம் என்ன? ஆபஸ்த்மப ரிஷி சொல்கிறார்.. தெரிந்து கொள்வோமே..

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது? மனிதனின் நோக்கம் என்ன? ஆபஸ்த்மப ரிஷி சொல்கிறார்.. தெரிந்து கொள்வோமே..

பானி சம்க்சுப்தேன உதகேன ஏக பானி ஆவர்ஜிதேன ச ந ஆசாமேத் |

ஆபஸ்தம்ப சூத்திரம் 

கலக்கப்பட்ட வெறும் தண்ணீரை குடிக்க கூடாது. இரு கைகளால் எடுத்து தராமல், ஒரு கையால் தரும் தண்ணீரை குடிக்க கூடாது.


ந அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் | 

யதி  அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் | 

த்விசந்தம் ப்ராத்ரவ்யம் ஜனயேத் |

- ஆபஸ்தம்ப சூத்திரம்

யாரை பார்த்தும் "இவன் என் எதிரி" என்று சொல்ல கூடாது. அப்படி சொல்ல ஆரம்பிக்கும் போது, அவனே உண்மையாகவே எதிரி ஆகி விடுவான்.




திஸ்டான் ஆசாமேத் ப்ரஹவோ வா |

ஆஸீனஸ் த்ரிர் ஆசாமேத் ஹ்ருதய அங்கம அபிர் அத்பி: |   

ஆபஸ்தம்ப சூத்திரம் 

நின்று கொண்டோ அல்லது முன்னோக்கி வளைந்து கொண்டோ, தண்ணீர் குடிக்க கூடாது. 

அமர்ந்து குடிக்க வேண்டும், மூன்று முறை தண்ணீர் நெஞ்சில் செல்லுமாறு தலைதூக்கி குடிக்க வேண்டும்.


குரு-தல்பகாமி ச வ்ருசனம் சிஷ்னம் பரிவாஸ்ய அஞ்சலாவ் ஆதாய தக்ஷிணம் திசம் அநாவ்ருத்திம் வ்ரஜேத் |

ஜ்வாலிதாம் வா சூர்மிம் பரிஸ்வஜ்ய சமாப்னுயாத் |

சுரா ஆபோ அக்னி ஸ்பர்ச சுராம் பிபேத் |

- ஆபஸ்தம்ப சூத்திரம் 

யார் ஒருவன் தன் குருவின் மனைவியிடம் தகாது உறவு கொள்கிறானோ, அவன் செய்த பாவத்துக்கு, தன்னுடைய ஆண் உறுப்பை தானே முழுவதுமாக வெட்டி இரு கையில் எடுத்துக்கொண்டு, தெற்கு திசை நோக்கி, மரணம் வரும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும்..

அல்லது, பெண் உருவத்தை வடித்த இரும்பு சிலையை பழுக்க காய்ச்சி அதை கட்டி பிடித்து கொண்டே உயிர் விட வேண்டும்.

அல்லது, மயக்கம் தரும் மதுவை சுட சுட காய்ச்சி, அளவுக்கு மீறி கொதிக்க கொதிக்க வாயில் விட்டு குடித்து, உயிர் விட வேண்டும்.


புருஷன் ச உபயோர் தேவதானாம் ராஜனஸ் ச |

- ஆபஸ்தம்ப சூத்திரம் 

தெய்வத்தையோ, அரசனையோ கீழ்த்தரமாக பேச கூடாது.


அனஸூயுர் துஷ்ப்ரளம்ப ஸ்யாத் குஹக சத நாஸ்திக பாலவாதேசு |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

நயவஞ்சகர்கள், முரட்டுத்தனமானவர்கள், நாத்தீகர்கள் மற்றும் முட்டாள்களின் பேச்சுக்களால் ஒருவர் எரிச்சல் அடைய கூடாது. ஏமாறவும் கூடாது..




சர்வஜனபதேஸ்வ் ஏகாந்த சமாஹிதம் ஆர்யானாம் வ்ருத்தானாம் சம்யக் விநீதானாம் வ்ருத்தானாம் ஆத்மாவதாம் அலொலுபானாம் அதாம்பிகாணாம் வ்ருத்த ஸாத்ருஷ்யம் பாஜேத |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

நம்முடைய செயல்களை, நம் நடத்தையின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

பண்பு உள்ளவர்கள் நன்னடத்தை கொண்டவர்கள். 

அவர்களை பார்த்து, நம்முடைய செயல்களை கட்டுப்படுத்தி, நடத்தையை சரி செய்து கொள்ள வேண்டும்.

யார் பண்பு உள்ளவன் (ஆரியன்)?

நன்கு படித்த, முதிர்ச்சி உடைய, சுய கட்டுப்பாடு கொண்ட, பேராசையிலிருந்து விடுபட்ட, மற்றவர்களுக்காக பாசாங்கு செய்யாதவர்களே 'ஆரியன்' என்று அழைக்கப்படுகிறார்கள்.

அத்யாத்மிகான் யோகான் அனுதிஷ்தேன் ந்யாய சம்ஹிதான் அனைஸ்சாரிகான் |

ஆத்ம லாபான் ந பரம் வித்யதே |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

ஒவ்வொரு மனிதனின் நோக்கமும் 'ஆத்மா'வை (தன்னை) அறிந்து கொள்வதே.

ஆத்மாவை (உன்னை), நீ அறிந்து கொள்வதை விட பெரிய கல்வி கிடையாது.

அத பூத தாஹீயான் தோஷான் உதாஹரிஸ்யாம: |

க்ரோதோ ஹர்ஷோ ரோஷா லோபோ மோஹோ தம்போ த்ரோஹோ ம்ருசோத்யம் அத்யாசா, பரீவாத அவசூயா காம மன்யு அநாத்ம்யம் அயோகஸ் தேஷாம் யோக மூலோ நிர்காத: |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது?

கோபம், மகிழ்ச்சி, ரோஷம், பேராசை, ஒட்டுதல், தற்பெருமை, துரோகம், பாசாங்கு, பொய், பெருந்தீனி, பொறாமை, சுயநல ஆசை, ரகசியமான வெறுப்பு, புலன்களை அடக்கி வைப்பதில் அலட்சியம், மனதை அடக்குவதில் அலட்சியம் ஆகியவை, ஆத்மாவை (தன்னையே) அறியவிடாமல் தடுக்கிறது. 

இந்த ஆத்மா ஆனந்த ஸ்வரூபமானது. 

தான் ஆனந்தமயமானவன் என்பதை உணர விடாமல் இவை தடுக்கிறது.

இந்த தடையை போக்க வழி சொல்வதே 'யோகம்'.

Wednesday 29 August 2018

காலம் கடந்து அனாதி காலமாக இருக்கும் நான்கு விஷயங்கள் என்ன?

நான்கு விஷயங்கள் கால அளவுக்கு உட்படாமல், காலத்தால் கணிக்க முடியாமல், அனாதியாக முடிவே இல்லாமல் இருந்து கொண்டே இருக்கிறது.
அது என்ன?



1. 'உலகம் என்ற ப்ரக்ருதி' அனாதி காலமாக இருக்கிறது.
2. 'ஆத்மா' (நம் உயிர்) அனாதி காலமாக இருக்கிறது.
3. 'பெருமாள்' அனாதி காலமாக இருக்கிறார்.
4. 'வேதம்' அனாதி காலமாக இருக்கிறது.
அனாதி காலமாக இருக்கும் இந்த நான்குக்கும், பிறப்பும் தெரியவில்லை, இறப்பும்/அழிவும் தெரியவில்லை.
ஆனால் இந்த நான்குக்கும் ஆவிற்பாவம் உண்டு.

ஆவிற்பாவம் என்றால், தோற்றம் என்று அர்த்தம் கொள்ளலாம்.

பிறப்பும், தோற்றமும் ஒரே அர்த்தம் இல்லை.
அதே போல,
இறப்பும், மறைவும் ஒரே சொல் அல்ல.

பிறப்புக்கு முன் இறப்பு வராது.
இறப்புக்கு பின், பிறப்பு வராது.

ஆனால்,
தோற்றத்துக்கு முன், மறைவு இருக்க முடியும்.
மறைவுக்கு பின், தோற்றம் இருக்க முடியும்.

பிறப்புக்கும், இறப்புக்கும் உள்ள பொருள்:
ஒரு லைட் பல்ப் உருவாக்கும் (பிறப்பு) முன், லைட் பல்ப் இருந்து இருக்க வாய்ப்பில்லை.
அது போல,
ஒரு லைட் பல்ப் உடைந்த பின் (இறப்பு), அதே லைட் பல்ப் மீண்டும் உருவாக வாய்ப்பில்லை.
நம் உடல், இந்த லைட் பல்ப் போன்றது.
உடலுக்கு பிறப்பு உண்டு. இறப்பு உண்டு. இறந்த பின், மீண்டும் அதே உடல் பிறக்காது.






தோற்றத்துக்கும், மறைவுக்கும் உள்ள பொருள்:
ஒரு லைட் பல்பில் உருவாகும் வெளிச்சத்துக்கு(தோற்றம்) முன், வெளிச்சம் இல்லாமல் அணைந்து (மறைவு) இருக்க முடியும்.
அது போல,
ஒரு லைட் பல்ப் அணைந்து இருந்த (மறைவு) சமயத்துக்கு முன், வெளிச்சமும் கொடுத்து இருக்க முடியும்.
நம் உயிர் என்ற ஆத்மா, இந்த வெளிச்சம் போன்றது.
இது உடலில் புகுந்து இருக்கும் போது தோற்றம் அளிக்கிறது. உடலை விட்டு வெளியே செல்லும் போது, இல்லாதது போல மறைந்து விடுகிறது. ஆனால் மீண்டும் வேறொரு உடலில் புகுந்து தன்னை வெளிப்படுத்துகிறது.

ஆத்மாவை புரிந்து கொள்ளாதவர்கள், "உடலே நான்" என்று சொல்லிக்கொள்ளும் மடையர்கள், ஒருவனுடைய ஆத்மா உடலை விட்டு வெளியேறிய பின், அவனே 'இறந்து விட்டான்/மரித்து விட்டான்' என்று சொல்லிக்கொள்வர்.

'ஆத்மா ஒன்று உள்ளே இருப்பதால் தான் இந்த உடம்பு இதுநாள் வரை வேலை செய்தது' என்று உணர்ந்திருந்த ஹிந்துக்கள், பொதுவாகவே, உடலை விட்டு பிரிந்த ஆத்மாவை, "இறந்து விட்டார், மரித்து விட்டார்" என்று மடத்தனமாக சொல்லாமல், 'ஆத்மா மறைந்து விட்டது, இறைவனடி சேர்ந்தார். ஆத்மா வைகுண்டம் அடைந்தது, சிவபதம் அடைந்தது' என்று உண்மை அறிந்து சொல்லும் பழக்கம் கொண்டிருந்தனர். உண்மை அறிவு கொண்டிருக்கும் நம் ஹிந்துக்கள்.

1. அனாதி காலமாக உள்ள உலகம், மறைக்கப்பட்டு, மீண்டும் ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "ஸ்ருஷ்டி" என்று பெயர்.

2. அனாதி காலமாக உள்ள நாம் (ஜீவ ஆத்மா / உயிர்), ஒரு உடலுக்குள் புகுந்து, ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "ஜன்மம்" என்று பெயர்.

3.  அனாதி காலமாக உள்ள பெருமாள் (பரம் ஆத்மா), ஒரு உடலுக்குள் புகுந்து, ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "அவதாரம்" என்று பெயர்.

4. அனாதி காலமாக உள்ள வேதம் (பரமாத்மாவின் அறிவு), ஒரு ரிஷியின் காதில் புகுந்து, ஆவிர்பவிக்கும் (கேட்கப்படும்) போது, அதற்கு "ஸ்ருதி" என்று பெயர்.
காதில் கேட்ட வேதத்தை, வாயால் ஆவிர்பவிக்கும் (சொல்லாக வெளிப்படும்) போது, அதற்கு "ஆம்நாயம்" என்று பெயர்.
வாயால் சொன்னதை, காலப்போக்கில் கேட்டது ஒன்று, சொல்வது ஒன்று என்று ஆகி விடாமல், கேட்ட அதே வேத சொற்களை ஒரு காவல்காரனை போல காத்து, பரம்பரை பரம்பரையாக வேத சொற்கள் மாறிவிடாமல், விட்டுப்போகாமல் எடுத்து செல்வதற்கு, "சந்தஸ்" என்று பெயர்.

ஹிந்துக்கள் கொண்டிருந்த இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத பிற பொய் மதங்களில், நம்பிக்கைகளில், ஹிந்துக்கள் வீழ்வதே அவமானம்.
ஹிந்துவாக பிறந்து, பின் மதம் மாறுபவர்கள் அவமானப்படவேண்டும்.

ஆராய்ச்சியின்றி, காரணமின்றி எதுவும் செய்யாத ஹிந்துக்களின் பழக்கம், பேச்சு எல்லாம் உயர்ந்தவை.

ஹிந்துக்களாக பிறந்ததே புண்ணியம்.
வேற்று மதங்கள் கூட, மத மாற்றம் என்ற போர்வையில்,
*ஹிந்துக்களின் காவி உடை அணிந்து பாத யாத்திரை செல்கின்றனர்.
*வெள்ளை உடை அணிந்து தான் தன் கோவிலில் ஆராதனை செய்கின்றனர்.
*சமஸ்கரித மொழியை வெட்கமே இல்லாமல் பயன்படுத்துகின்றனர்.
*தமிழை கொலை செய்கின்றனர்.
*ஹிந்துக்களின் தெய்வீக கர்நாடக இசையை திருட முயற்சிக்கின்றனர்.
*வெட்கமே இல்லாமல் கொலு வைக்கின்றனர்.
*தேர் இழுக்கின்றனர்.
*கோவில் ஸ்தூபம் இருப்பதை பார்த்து, மானம் இல்லாமல் தாங்களும் ஸ்தூபம் வைக்கின்றனர்.
*சுய சிந்தனை இல்லாமல், நம்மிடம் காபி அடித்து, வெட்கமில்லாமல், ஹிந்துக்களை மதம் மாற்றுகின்றனர்.
*மனு என்ற அரசன் முதல் மனிதன் என்று சொன்னதையும் காப்பி அடித்து "Man" என்றனர்.
*நவ க்ரஹங்கள் என்று சொன்ன என்றோ சொல்லி வைத்ததை வைத்து "9 planets" உண்டு என்கின்றனர்.
*செவ்வாய் கிரஹம் சிவப்பு என்று அறிந்து, நவ க்ரஹத்தில் செவ்வாய் தேவதைக்கு இடுப்பில் சிவப்பு துணி கட்டுவதை அடிப்படையாக கொண்டு, "Mars is Red planet" என்றனர்.



*பஜனை செய்வதை பார்த்து, காப்பி அடிக்கிறோம் பேர்வழி என்று பைத்தியம் வராத குறையாக ஆடுகின்றனர்.
*நான்கு மறை வேதம் என்ற சப்த ப்ரம்மத்தின் பெயரை ஒரே ஒரு புத்தகம் எழுதி அதை வெட்கமே இல்லாமல் இதுவும் "வேதம்" என்று ஹிந்துக்களின் வேதம் என்ற பெயரை திருடுகின்றனர்.
*திருட்டு செயலே பழக்கம் ஆகி போனதால், திருட்டு புத்தியுடன், திருட்டு தனமாக, புரியாத ஹிந்துக்களை மதம் மாற்றுக்கின்றனர்.
*இஸ்லாமியன் திருடனை உதைப்பான் என்று இன்று வரை நெருங்க பயப்படுகின்றனர்.
ஹிந்துக்கள் திருடனை அடிக்க வேண்டாம், நம் வீட்டில் உள்ள பொருளை திருடி, நமக்கே காட்டும் திருடன் இவன் என்று தெரிந்து கொண்டாலே போதும்.
*கிருஷ்ணன் மாடு மேய்த்தான், என்றால், பெயரையும் ஏறத்தாழ அதையும் காப்பி செய்து, மாட்டுக்கு பதில் ஆடு மேய்த்தான் என்றனர்.
*உலகம் உருண்டை என்று வராஹ அவதாரத்திலேயே சொன்னதை மறுக்க நினைத்து, கடைசியில் உலகம் உருண்டை தான் என்று அறிவியல் சொல்ல, தன்னுடைய ஒரே கொள்கையில் மரண அடி வாங்கினர்.

இப்படி ஹிந்துக்களை, ஹிந்துக்களின் சின்னங்களை, ஹிந்துக்களின் தத்துவங்களை திருடி பிழைப்பு நடத்தும் பொய் மதத்தில், ஹிந்துவாக பிறந்தவன், இருப்பவன் மாறுவதே அவமானம். மாறியவன் ஹிந்துவாக மாறுவதே புத்திசாலித்தனம்.

இப்படி தறிகெட்டு காசுக்காகவோ, நம் krishணனை கிறிஸ்ஆக பெயர் மாற்றி இந்திய மண்ணிலேயே, ஹிந்துக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் திருடர்களிடம் இருந்து, சுய புத்தியுடன் ஹிந்துக்களாக மீண்டும் திரும்புவதே சிறந்தது.



காப்பி அடித்து பாஸாக துடிக்கும் பொய் மதங்களில் ஹிந்துக்கள் வீழாமல் இருக்க வேண்டும்.
இதற்கு ஒரே வழி.. ஹிந்துக்கள் தன் மதத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஹிந்துக்களுக்கு பகிர வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள். வாழ்க நாம்.

 நன்றி: எந்தரோ மஹாநுபாபு(...லு) அந்தரிகி வந்தநமு (Salutations to all those great men in this world)