Followers

Search Here...

Showing posts with label சந்தியா. Show all posts
Showing posts with label சந்தியா. Show all posts

Tuesday 29 October 2019

சந்தியா வந்தனம் செய்தால், நவ கிரகங்களும், பரமாத்மாவும் அருள் செய்வார்களே!!... "காணாமல் கோணாமல் கண்டு கொடு" என்பதற்கு அர்த்தம் என்ன? தெரிந்து கொள்வோமே...

"காணாமல் கோணாமல் கண்டு கொடு" என்ற சொல்லுக்கு
பொதுவான அர்த்தம் என்ன?
தெரிந்து கொள்ள வேண்டாமா?



அன்னதானம் செய்யும் போது, இதன் பொதுவான அர்த்தம் :
  • பசி என்று வருபவனின் தகுதி என்ன? என்று 'காணாமல்',
  • அன்னதானம் செய்யும் போது, மனம் 'கோணாமல்',
  • அன்னதானம் செய்ய தன்னை தகுதியாக்கிய தெய்வத்துக்கு ஆராதனையாக, தானம் வாங்குபவர்களிடமும் தெய்வத்தை "கண்டு" அன்னதானம் செய் 
என்பது பொதுவான அர்த்தம்.

சந்தியா வந்தனத்தில் "அர்க்யம்" மிக முக்கியமானது..
"மறக்காமல் அர்க்யம் கொடு" என்று
ப்ரம்மணர்களுக்கு  நினைவுபடுத்தவும் இது சொல்லப்படுகிறது...



அதன் அர்த்தம் :
  • சூரியன் உதயமாகும் (சூரியனை காண்பதற்கு) முன் (4-6AM), 
  • சூரியன் உச்சத்தில் (கோணாமல், சூரியன் தலைக்கு மேல்) இருக்கும் போது (12noon),
  • சூரியன் மறையும் முன் (5-6PM), சூரியனை கண்டு கொண்டேதர்ப்பணம் கொடு
என்று நினைவூட்டுகிறது.




நவ க்ரஹங்களுக்கும் (தோஷங்கள் நீங்க),
ஒரு துளி ஜலமாவது உன் கையால் அர்க்யம் செய்து தர்ப்பணம் (திருப்தி) செய்.
பல விபூதி அவதாரங்களாக இருக்கும் பரப்ரம்மத்துக்கு,
ஒரு துளி ஜலமாவது உன் கையால் அர்க்யம் செய்து நன்றியை காட்டி, தெய்வங்களின் அணுகிரஹம் பெற தர்ப்பணம் (திருப்தி) செய்.
மனிதனாக பிறக்க வைத்த அந்த பரப்ரம்மத்துக்கு உன் நன்றியை காட்ட, தேவ தர்ப்பணம் செய் என்கிறது இந்த வாக்கியம்.

சந்தியா வந்தனத்தில் சொல்லப்படும், மிக மிக முக்கியமான தேவ தர்ப்பணம் இதோ:
  1. ஆதித்யம் தர்ப்பயாமி !
    (சூரிய தேவனை திருப்தி  செய்கிறேன்)
  2. ஸோமம்  தர்ப்பயாமி !
    (சந்திர தேவனை திருப்தி செய்கிறேன்)
  3. அங்காரகம்  தர்ப்பயாமி !
    (செவ்வாய் தேவனை திருப்தி செய்கிறேன்)
  4. புதம்  தர்ப்பயாமி !
    (புதன் தேவனை திருப்தி செய்கிறேன்)
  5. ப்ருஹஸ்பதிம்  தர்ப்பயாமி !
    (குரு தேவனை திருப்தி செய்கிறேன்)
  6. சுக்ரம்  தர்ப்பயாமி !
    (சுக்கிர தேவனை திருப்தி செய்கிறேன்)
  7. சனைச்சரம்  தர்ப்பயாமி !
    (சனி தேவனை திருப்தி செய்கிறேன்)
  8. ராஹூம்  தர்ப்பயாமி !
    (ராகு தேவனை திருப்தி செய்கிறேன்)
  9. கேதும்  தர்ப்பயாமி !
    (கேது தேவனை திருப்தி செய்கிறேன்)



  1. கேசவம்  தர்ப்பயாமி !
    (க: - பிரம்மா, ஈச: - ருத்ரன் ஆகிய இரு வடிவங்களாகவும் பேதமாக தன்னை காட்டிக்கொண்டு, மூலப்பொருளான அ: - விஷ்ணுவாகிய பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  2. நாராயணம்  தர்ப்பயாமி !
    (நரர்களுக்கு (மனிதர்களுக்கு) அடைக்கலமாக (அயணமாக) இருக்கும் பரம்பொருளை பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  3. மாதவம்  தர்ப்பயாமி !
    ('மா' - மௌனம், 'த' - தியானம், 'வ' - யோகம் இவை மூன்றாலும் அறியத்தக்க பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.
    'மா' என்றால் அலைமகளான லட்சுமி. அவளுடைய 'தவ:', அதாவது, லட்சுமியின் கணவனான பரம்பொருளை (மாதவனை) திருப்தி செய்கிறேன்.)
  4. கோவிந்தம்  தர்ப்பயாமி !
    (கோ என்றால் பசு. பசுக்களுக்குத் தலைவனாக இருக்கும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  5. விஷ்ணும்  தர்ப்பயாமி !
    (எங்கும் இருக்கும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.)
  6. மதுஸூதனம்  தர்ப்பயாமி !
    (மது என்ற அசுரனை வென்று, வேதத்தை காத்த பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.)
  7. த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி !
    (மூன்று உலகங்களையும் இருக்கும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.)
  8. வாமனம்  தர்ப்பயாமி !
    (அளவில்லாத உலகங்களை, ஒரு சிறுவன் (வாமனன்) போல வந்தாலும் அளக்கும் சக்தி பெற்ற பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.)
  9. ஸ்ரீதரம்   தர்ப்பயாமி !
    (ஸ்ரீ என்ற லட்சுமியை உடைய பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  10. ஹ்ருஷீகேஷம்  தர்ப்பயாமி !
    (இந்திரயங்களின் அதிபதியாக இருக்கும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  11. பத்மநாபம்  தர்ப்பயாமி !
    (பத்மம் என்றால் தாமரை...நாபி என்றால் தொப்புள். தாமரையின் உட்புறம்போல் சிவந்ததும் ஆழ்ந்ததும் வட்டவடிவிலிருப்பதுமான தொப்புளையுடைய பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  12. தாமோதரம்  தர்ப்பயாமி !
    (யாருக்கும் கட்டுப்படாத பரப்ரம்மம், அன்பே உருவான யசோதை தாய், தன் வயிற்றில் (உதர) ஒரு சிறு கயிரால் (தாம) கட்ட நினைக்க, தன்னை கட்டி விட செய்து கொண்டதால், தாமோதரன். அன்பிற்கு கட்டுப்படும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)

5 நிமிடம், சந்தியா வந்தனம் செய்ய கசக்குமா?..
சந்தியா வந்தனம் செய்தால் ராகு, கேது, சனி பகவானிடம் பயம் வருமா?.
பரப்ரம்மத்தை மூன்று வேளையும் ஆராதிக்கும் ஒருவனை, தெய்வம் துணை நிற்காமல் போகுமா?



அன்னதானம் செய்வோம்...
மூன்று வேளையும் தேவ தர்ப்பணம் செய்து தெய்வ அணுகிரஹத்தை பெற்று, குறையில்லாமல் வாழ்வோம்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.



Monday 7 October 2019

"பிராணன் போய் விட்டது" என்று சொல்வதற்கு காரணம் என்ன? நம் உடம்பில் உள்ள 5 வாயுவின் பெயர் என்ன?

பிராணன்
பரப்பிரம்மமாகிய வாசுதேவன்,
"ராவணனை அழித்து, மனிதர்களுக்கு தர்மத்தை வழிகாட்ட, தானே மனித அவதாரம் செய்வேன்" என்று ப்ரம்மதேவனிடம் சொன்னதும், முப்பத்து முக்கோடி தேவர்களும், வாசுதேவன் அவதரிப்பதற்கு முன், அவருக்கு தொண்டு செய்ய பூலோகத்தில் அவதாரங்கள் செய்தனர்.



இந்திரனே வாலியாக அவதரித்தார்.
சூரிய தேவனே சுக்ரீவனாக அவதரித்தார்.
வாயு தேவனின் அம்சமாக ஹனுமான் அவதரித்தார் என்று பார்க்கிறோம்.

உலகத்தில் ஏற்படும் அனைத்து அசைவுக்கும், வாயுவே காரணம்.
"வாயு தேவன்" காற்றுக்கு அதிபதி.
இந்த காற்று(வாயு) வெளியில் மட்டும் இருக்கிறது என்று நாம் நினைத்து விட கூடாது. 
இந்த காற்று(வாயு) 5 விதமான காரியங்கள் செய்ய, நம் ஒவ்வொருவரின் உடலிலும் இருக்க செய்து, நம் உடலை இயங்க செய்கிறார் வாயு தேவன்..
இந்த 5 வித காற்றுக்கும் நம் வேத சாஸ்திரம் (ஹிந்து தர்மம்) பெயர் கொடுத்து இருக்கிறது..

1. பிராணன்
2. அபானன்
3. வியானன்
4. உதானன்
5. சமானன்
என்று இந்த 5 வித காற்றுக்கும் நம் வேத சாஸ்திரம் (ஹிந்து தர்மம்) பெயர் கொடுத்து இருக்கிறது.



நம் உடம்பில் இருக்கும் 5 விதமான வாயுவில் (காற்றில்), மிகவும் முக்கியமான இடமான இதயத்தில் இருக்கும் காற்றுக்கு தான் "பிராணன்" என்று பெயர்.

இந்த "பிராணன்" என்ற வாயுவின் அசைவினால் தான், இதயத்தில் ரத்த நாளங்கள் ஒரே இடைவெளியில் ஆயுசு முழுக்க அசைந்து அசைந்து வேலை செய்து கொண்டே இருக்கிறது..
நமக்கு மிகவும் முக்கியமான இடம் இதயம்.
இதயம் நின்றுவிட்டால் ஜீவன் பிரிந்து விடும்.

பிராணன் என்ற இந்த வாயு தடைபடும் போது, இதய கோளாறு ஏற்படுகிறது.
பொதுவாக, ஜீவன் பிரிந்து விட்டால், கூடவே இந்த ஐந்து வாயுவும் உடலை விட்டு கிளம்பி விடும்.

"பிராணன் போய் விட்டது" என்று சொல்வதற்கு காரணம் இது தான்.

ஜீவாத்மா (நாம்) இந்த 5 வாயுவிலும் பயணித்து கொண்டே இருக்கும் வரை, உடலில் ஜீவன் இருக்கிறது என்று வேதம் சொல்கிறது.




வாயுவை வாகனமாக கொண்டு ஜீவனாகிய நாம் சஞ்சரிக்கிறோம் என்று வேதம் சொல்கிறது.
ஆத்மா 'வாயுவை வாகனமாக கொண்டு சஞ்சரிப்பதால், ஆத்மா (உயிர்) பிரிந்து விட்டால், ப்ராண வாயுவும் கூடவே வெளியே சென்று விடுகிறது என்று புரிகிறது.

இதனால் தான், "உயிர் போய் விட்டது" என்று சொல்வதை சில சமயம் "பிராணன் போய் விட்டது" என்றும் சொல்கிறோம்.

ஜீவனோடு எப்பொழுதும் பரமாத்மாவும் அந்தர்யாமியாக பல அவதாரங்கள் எடுத்து கொண்டு ஒவ்வொரு ஜீவனோடும் கூடவே பயணிக்கிறார்.
ஜீவன் அழிவற்றவன்.
ஜீவன் பரமாத்மாவின் அம்சமே என்றாலும், ஜீவன் பரமாத்மாவுக்கு பணிந்தவன்..
அந்த பரமாத்மாவை சேர நினைக்காதவரை உலகில் மனித, மிருக, பறவை உடல்களில் புகுந்து பிறந்து, இறந்து கொண்டே இருக்கிறான்.



உடலில் உள்ளிருக்கும் கெட்ட காற்றை, உள்ளிருக்கும் மலம், மூத்திரம் போன்ற கெட்டதை வெளியே உந்தி தள்ள வைப்பது, ஒரு அளவுக்கு சேரும்வரை வெளியே விட்டு விடாமல் தடுப்பது "அபானன்" என்ற வாயு.
இந்த அபானன் வேலை செய்யாது போனால், மலம் மூத்திரம் உடலிலேயே தங்கி விடும்..அல்லது தானாக வெளியேறி கொண்டே இருக்கும்.

உடலில் தொப்புள் வழியாக வயிற்றில் உள்ள உறுப்புகள் சரியான அசைவுகளுடன் வேலை செய்ய உதவும் காற்றுக்கு "சமானன்" என்று பெயர்.
உடலில் தொண்டை பகுதியில் மிகவும் முக்கியமான காற்று உள்ளது.. இதற்கு "உதானன்" என்று பெயர்.
நாம் சாப்பிடும் எந்த உணவையும், நீரையும் வயிற்றுக்குள் உள்ளே தள்ள வைப்பது இந்த "உதானன்" என்று காற்று தான்.

மூக்கின் வழியாக நாம் இழுக்கும் வெளி காற்றில் பல அசுத்தங்கள் இருந்தாலும், இந்த கழுத்தில் உள்ள உதானன் என்ற வாயு அசுத்தங்களை சளியாக தள்ளி, சுத்தமான காற்றை நுரைஈரலுக்கு  தள்ளுகிறது..

இந்த உதானன் என்ற வாயு தான், மரண சமயத்தில் உள்ளே வெளி காற்றையும் அனுப்பாமல், வாய் வழியாக உள்ளே தள்ளும் ஜலம், உணவு எதையும் உள்ளே போக விடாமல் தடுத்து விடும்.

இந்த உடலில் வசிக்கும் காலம் முடிந்தவுடன், ஜீவனோடு பயணிக்கும் பரமாத்மா (நாராயணன்) வெளியே கிளம்ப தீர்மானிக்க, ஜீவனும் கிளம்புகிறான்.

உடலில் உள்ள வாயுவில் சஞ்சரிக்கும் பரமாத்மா, ஜீவனோடு கிளம்ப தயார் ஆனதும், உதானன் என்ற வாயு இவர்கள் வெளியே கிளம்ப இடம் கொடுக்க, தன் வேலையை நிறுத்துகிறது..

மரண நிலையில் இருக்கும் ஒருவருக்கு, பால், கங்கை ஜலத்தை வாயில் விட்டு பார்ப்பார்கள்..
கழுத்தை தாண்டி உள்ளே போகாமல் இருந்தால், ஜீவன் பிரியபோகிறான் என்று வேதம் மரண அவஸ்த்தையை காட்டுகிறது.



ஜீவன் உடலை விட்டு கிளம்ப தயார் ஆனதும்,
சமானன் என்ற வாயுவும் தன் வேலையை நிறுத்தி விடும்.
வயிறு உப்பி, வயிற்றில் உள்ள உறுப்புகள் வேலை செய்ய முடியாமல் ஸ்தம்பித்து விடும்.
அபானன் என்ற வாயுவும் தன் வேலையை நிறுத்த மலம் மூத்திரம் தானாக வெளியேறி விடும்.

மற்ற உறுப்புகளில் அனைத்திலும் வியாபித்து இருக்கும் வாயுவுக்கு வியானன் என்று பெயர்.

இப்படி ஐந்து வாயுக்கள் நம் உடலில் இருந்து, மண்ணால் ஆன இந்த சரீரத்தை இயக்குகிறது..

இந்த வாயுவில் சஞ்சரிக்கும் ஜீவாத்மா, கூடவே இருக்கும் பரமாத்மாவுக்கும் ஆராதனை செய்து விட்டு தான் சாப்பிட்டார்கள் நம் முன்னோர்கள்.

வெளியில் நாம் விக்ரஹ ரூபமாக வழிபடும் பரவாசுதேவனே, நம் ஒவ்வொரு உடலிலும் கூடவே இருக்கிறார்.

வெளியில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு நாம் நெய்வேத்யம் செய்யும் போது,
நம் கைகளை கொண்டு பூஜிக்கிறோம்.
மனதால் நன்றி சொல்கிறோம்.
கண்ணால் காண்கிறோம்.
காலால் கோவிலுக்கு நடந்து செல்கிறோம்.
தான் சமைத்ததை அவருக்கு காட்டி நன்றி காட்டுகிறோம்.

உணவு சாப்பிடும் போதும், உள்ளிருக்கும் வாயு பகவானுக்கும், இந்த சரீரத்தில் ஜீவனோடு கூடவே இருக்கும் பரமாத்மாவுக்கும் நெய்வேத்தியம் செய்து விட்டு சாப்பிடுகிறோம். சாப்பிட வேண்டும்.

இந்த வாயுக்கள் (காற்றுகள்) அசைவற்று போனால், உடல் கட்டை போல கிடைக்க வேண்டியதுதான். அதற்கு காரணமான வாயு தேவனுக்கும், பரமாத்மாவாவுக்கும் செய்யும் நெய்வேத்தியமே "பரிசேஷணம்"

  1. ப்ராணாய ஸ்வாஹா (உயிரை தரிக்கும் காற்று)
  2. அபானாய ஸ்வாஹா (மலத்தை வெளியேற்றும் காற்று)
  3. வ்யானாய ஸ்வாஹா (உறுப்புக்கள் அதனதன் தொழிலை செய்ய வைக்கும் காற்று)
  4. உதானாய ஸ்வாஹா (சுத்திகரிப்பு செய்யும் ஒலிக் காற்று)
  5. சமானாய ஸ்வாஹா (நிரவுக் காற்று)
  6. ப்ரம்மனே ஸ்வாஹா (ஜீவனோடு கூடவே இருக்கும் பரமாத்மா)

என்று சொல்லிக்கொண்டே, 6 முறை ஒவ்வொரு பருக்கையாக சாதத்தை பல்லில் படாமல், வாயில் போட்டு கொண்டு விழுங்கும் போது, ஜீவனாகிய நாம், இந்த 5 வாயுவில் ஜீவனோடு கூடவே சஞ்சரிக்கும் அந்தர்யாமியாக உள்ள பரப்ரம்மத்துக்கு முதலில் நெய்வேத்யம் செய்து விட்டு சாப்பிடுகிறோம்.
மற்ற போலி மதங்களில், தனக்கு கிடைத்த உணவுக்கு நன்றியை சொல்கிறார்கள். 
ஹிந்துக்களோ, வெறும் நன்றியை மட்டும் காட்டுவதில்லை.. கொடுத்த உணவும் அவருடையது தான் என்று அவருக்கு காட்டி நன்றியை சொல்லி, கிடைத்த சாதத்தை கூட பிரசாதமாக சாப்பிடுகிறோம்.



இப்படி, உள்ளும் புறமும் தெய்வ சிந்தனையுடன் வாழ்ந்த ஹிந்துக்கள் அல்லவா நாம்... 
நம்மை கண்டு நாம் பெருமை கொள்ள வேண்டாமா!!

உலகில் உள்ள விலங்குகள், பறவைகள் எல்லாம் நாம் சாப்பிட தான் என்று பேசும் போலி மதங்கள் உண்டு..
உள்ளும் புறமும் தெய்வம் எங்கும் இருப்பதை உணரும் ஹிந்துக்கள் எத்தனை அற்புதமானவர்கள்...

ஹிந்துவாக வாழ்வதே புண்ணியம் அல்லவா..

சாப்பிடும் முன், அனைவரும் நம் உடம்பில் உள்ள 5 வாயுவில் சஞ்சரிக்கும் ப்ரம்மத்துக்கு நெய்வேத்யம் செய்து விட்டு, பிறகு சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிப்போம்..

வெறும் சாதமாக உண்ணாமல், இறைவனுக்கு படைத்த பிரசாதமாக மாற்றி கொண்டு உண்போம். நோய்நொடி இல்லாமல் வாழ்வோம்.

தெய்வ சிந்தனையுடன் வாழ்வோம்.




சாப்பிடும் போது, சொல்ல வேண்டிய,
பரிஷேஷன மந்திரம்...
Morning


Evening



Monday 26 August 2019

யாருக்கு தெய்வம் தரிசனம் கொடுக்கிறார்? ரிதகும் சத்யம்... என்ற பிரார்த்தனை இதற்கு பதில் சொல்கிறது. உள்அர்த்தம் தெரிந்து கொள்வோமே...

யாருக்கு தெய்வம் தரிசனம் கொடுக்கிறது?

'சத்தியம்' என்றால் "உண்மை" என்று பொருள்.

"சத்தியம்" ஒரு இடத்தில் மட்டும் இருந்தால் போதாது. இரண்டு இடத்தில் இருக்க வேண்டும். 
1. சத்தியம் உள்ளுக்குள்ளும் இருக்க வேண்டும். (அதாவது மனத்திலும் இருக்க வேண்டும்).
2. சத்தியம் வெளியிலும் இருக்க வேண்டும். (அதாவது பேச்சிலும் இருக்க வேண்டும்.)

பகவான் "சத்தியத்துக்கு மட்டும் தான்" கட்டுப்படுகிறார். 

* யாரிடம் உள்ளும் புறமும் சத்தியம் இருக்கிறதோ! அவருக்கு மட்டுமே, தெய்வம் கட்டுப்படுகிறார்.
* யாரிடம் உள்ளும் புறமும் சத்தியம் இருக்கிறதோ! அவருக்கு மட்டுமே, தெய்வம் இருப்பது புரிகிறது. 
* யாரிடம் உள்ளும் புறமும் சத்தியம் இருக்கிறதோ! அவருக்கு மட்டுமே, தெய்வ தரிசனம் கிடைக்கிறது.

உள்ளுக்குள் என்ன நினைக்கிறாமோ, அதையே பேச வேண்டும்.




நாம் "சத்தியத்தில்" இருக்க வேண்டும். இதுவே, தெய்வத்தை பார்க்க முதல் தகுதி

உள்ளும் புறமும் சத்யம் இருந்தால், அதற்கு பெயர் "ஆர்ஜவம்" என்று சமஸ்க்ரிதத்தில் சொல்கிறோம்.

உள்ளுக்குள் "தெய்வநம்பிக்கையுடன்" இருந்து கொண்டு,
வெளி உலகில் "நாத்தீகன் போல பேசுபவனுக்கு"
தெய்வ தரிசனம் கிடைக்கவே கிடைக்காது.

அதேபோல,
உள்ளுக்குள் "நம்பிக்கை இல்லாமல்",
வெளியில் நம்பிக்கை உள்ளவனை போல நடிப்பவனுக்கும்,
தெய்வ தரிசனம் கிடைக்கவே கிடைக்காது.

மனிதன் மனிதனை ஏமாற்றி விடலாம். தெய்வத்தை ஏமாற்ற முடியுமா?

நம் உள்ளுக்குள் இருக்கும் சத்தியத்தை தான், சமஸ்க்ரிதத்தில், "ரிதகும்" என்று சொல்கிறோம்.

இந்த சத்தியம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதால் "கிருஷ்ண" என்று சொல்கிறோம்.

நாம் வெளிப்படையாக பேசும் சத்தியத்தை தான், சமஸ்க்ரிதத்தில், "சத்யம்" என்று சொல்கிறோம்.

இந்த சத்தியம் பேசும் போது மற்றவர்களுக்கு தெரிவதால், "பிங்களம்" என்று சொல்கிறோம்.

"உள்ளும் புறமும் நாராயணனே இருக்கிறார்" என்று பார்த்த பிரகலாதனை, ஹிரண்யகசிபு மிரட்டினான்.
வெளியில் இருக்கும் தூணை காட்டி "இதில் நாராயணன் இருக்கிறானா?" என்று கேட்க, 

"என் உள்ளில் இருக்கும் நாராயணன் வெளியிலும் இருக்கிறார்" என்று தன் பிஞ்சு விரலை காட்டி சொல்ல, யாரிடம் சத்தியம் உள்ளும் வெளியும் இருக்கிறதோ, அவனுக்கு கட்டுப்படும் பகவான், பிரகலாதன் காட்டிய தூணிலிருந்து வெளிப்பட்டு விட்டார்.

இதையே இந்த மந்திரம் நமக்கு சொல்கிறது. 
"நீயும் சத்தியமாக இரு. உள்ளும் புறமும் சத்யமாகவே இரு. அப்படி இருந்தால், உனக்கும் தெய்வ அனுக்கிரஹம், தரிசனம் கிடைக்கும்" 
என்று சொல்கிறது இந்த அருமையான மந்திரம்...




சந்தியா வந்தனத்தில் உள்ள அற்புதமான பிரார்த்தனை இதோ:



Rithagum sathyam
para brahma purusham
Krishna pingalam,
Oordhwareytham
viroopaksham
Viswa roopaaya vai nama

பரப்ரம்மத்தையே 
மனதில் நினைத்து (ரிதகும்) கொண்டு,   
வாக்கினாலும் அவரை பற்றியே பேசி (சத்யம்) கொண்டு  நீ வாழ ஆரம்பித்தால்,
தன்னை மறைத்து (கிருஷ்ண) கொண்டு இருக்கும் பரப்ரம்மம், தன்னை வெளிக்காட்டி (பிங்களம்) தரிசனம் தந்து விடுகிறார்.
உள்ளும் புறமும் உண்மையுடன் பரப்ரம்மத்தையே தியானிக்கும் அப்படிப்பட்ட யோகிகள், உலகையே தாங்கும் (விரூபாக்ஷ) பரவாசுதேவனை,
தங்கள் யோக பலத்தால், நெற்றியில் (ஊர்த்வரேதம்) தரிசித்து நமஸ்கரிக்கிறார்கள்.
இங்கு புருஷம் என்ற சொல்லை கொண்டு பரப்ரம்மத்தை குறிக்கும் போது, யார் அந்த புருஷன்? என்ற கேள்விக்கு வேதமே பதில் சொல்கிறது..
தெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்.

"ரிதகும் சத்யம் பரப்ரம்ம புருஷம்..." என்ற பிரார்த்தனையை நாம் தினமும் செய்யும் போது,
"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல், எண்ணமும், பேச்சும் ஒன்றாக, சத்யத்தில் இருந்தால், நமக்கும் தெய்வம் தரிசனம் தருவார்"
என்று ஞாபகப்படுத்தும் பிரார்த்தனை இது.

பகவான் அனைவருக்கும் தன் தரிசனத்தை காட்டி கொள்ள பிரியப்படுவதில்லை.


நாராயணன் மட்டுமல்ல, பொதுவாக தேவர்கள் கூட, மனிதர்கள் கண்களுக்கு தெரியாமல், மறைந்து இருப்பதில் தான் பிரியப்படுகின்றனர்.

சில மதங்களில் "இறைவன் அரூபமாகவே இருக்கிறார். ஒரு பொழுதும் உருவம் ஏற்க மாட்டார்" என்று இறைவனை பற்றி நினைக்கிறார்கள்.

"எல்லாம் வல்ல இறைவனுக்கு, உருவம் ஏற்க முடியாது" என்று தெய்வத்தின் பெருமையை குறைத்து சொல்வதை ஹிந்து தர்மம் ஏற்பதில்லை.
"எல்லாம் வல்லவனுக்கு, ஏதுவும் முடியும்" என்று சொல்வதே ஹிந்து தர்மம்.

உலகில் உள்ள 'நம்மை போன்றவர்களுக்கு மட்டும் தான் பெருமாளின் தரிசனம் எளிதில் கிடைப்பதில்லை' என்று நாம் நினைத்து விட கூடாது...

மேல் லோகமான சொர்க்கத்தில் உள்ள தேவர்களுக்கு கூட அவ்வளவு எளிதில் பகவான் தரிசனம் தருவதில்லை.

"ஹிரண்யாகஷன், ராவணன், கம்சன்" போன்ற அசுரர்கள், ராக்ஷசர்கள் தேவர்களை துன்புறுத்திய போது,
பாற்கடல் சென்று பார்த்தும், மஹா விஷ்ணு தேவர்களுக்கு தரிசனம் தரவில்லை.
ப்ரம்ம தேவனிடம் சென்று தன் கஷ்டங்களை சொல்ல,
பிரம்மாவிடம் மட்டும்,
'தான் அவதாரம் செய்து தேவர்களுக்கு அபயம் தருவேன்'
என்று சொல்லி விட்டார் பரவாசுதேவன் நாராயணன்.
'நாம் செய்யும் அனைத்து  பிரார்த்தனைகளுக்கும் கட்டாயம் பலன் தந்து விடுவார்' நாராயணன்.


புத்ர பாக்கியம் வேண்டும்,
எதிரி அழிய வேண்டும், 
கல்யாணம் நடக்க வேண்டும்,
வேலை கிடைக்க வேண்டும்,
என்று நாம் செய்யும் எந்த  பிரார்த்தனைக்கும்
மறைந்து (கிருஷ்ணனாக) இருந்தே பலன் கொடுத்து விடுகிறார் நாராயணன்.

அர்ச்சா அவதாரத்தில் தரிசனம் தரும் பகவான், நேரிடையாக தன்  வ்யூஹ தரிசனம் தருவதில்லை.
வ்யூஹ "தரிசனம்" மட்டும் அத்தனை எளிதில் தருவதில்லை.
தன் தரிசனத்தை 'வெளிப்படையாக' (பிங்களம்) காட்டுவதற்கு, 
பகவான் நம்மிடம் முக்கியமான ஒன்றை எதிர்பார்க்கிறார்.

"நம் எண்ணமும் (ரிதகும்), செயலும் (சத்யம்) 
ஒன்றாக இருக்கிறதா? என்னை பார்க்க வேண்டும் என்று உண்மையில் நினைக்கிறானா? விரோதமாக இருக்கிறதா?"
என்று பார்க்கிறார் பகவான்.
"சார், உங்களை தான் நம்பி இருக்கேன்" என்று பெரிய வேலையில் இருக்கும் மனிதனை பார்த்து ஒருவன் சொல்கிறான்.

"இவன் உண்மையிலேயே மனதில் இப்படி தான் நினைக்கிறானா?" என்று அறிந்து கொள்ள முடியாத அவர், அவன் தேன் ஒழுக பேசும் பேச்சை நம்பி விடுகிறார்.

உலகில் பெரும்பாலான மக்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக தான் உள்ளனர்.


"உண்மையில் மனதுக்குள் என்ன நினைக்கிறான்?" என்று கண்டுபிடிக்க முடியாததால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அழகான பேச்சினால் ஏமாற்றி விடுகிறான்.
ஆனால்,
இதயத்தின் எண்ணங்களையும் கவனிக்கும், பரமாத்மாவை ஏமாற்ற முடியுமா?

"நாராயணனே கதி",
"நமோ நாராயணா" என்று சொன்னாலும்,
"எனக்கு கடவுளை காட்டு" என்று பிடிவாதம் செய்தாலும்,
பகவான் கேட்பவனின் வாக்கை (சத்யம்) மட்டும் கவனிப்பதில்லை, அவன் நெஞ்சில் உள்ள எண்ணத்தையும் (ரிதகும்) கவனிக்கிறார்.

திருப்பதி ஏழுமலையானை பார்த்து "நாராயணா... என்னை காப்பாற்று" என்று சொல்லி விட்டு,
இன்னொரு கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் தெய்வத்தையும் பார்த்து "நீயே கதி... என்னை காப்பாற்று" என்று சொல்லும்,
திட விசுவாசம் இல்லாதவர்கள் தான்உலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

"ஒரே தெய்வம்", அவரிடம் மட்டுமே "சரணாகதி" என்று செய்பவனே உண்மையான பக்தன்.
ஹனுமான் "ஸ்ரீ ராமரே கதி" என்று இருந்தார், இருக்கிறார்..
அவருக்கு சிவபெருமான், இந்திரன் போன்றவர்கள் மீது வெறுப்பு கிடையாது.. அவர்களுக்கான மரியாதை செய்வார்...
ஆனால்,
"சரணாகதி" என்று வரும் போது,
"என் தெய்வம்" என்று வரும் போது,
ஸ்ரீ ராமரை தவிர, வேறு யாருக்கும் அவர் மனதில் இடம் கிடையாது..


சிவபெருமானுக்கு மரியாதை தருவார், ஆனால் மனதில் இடம் கிடையாது என்பதில் ஆச்சரியமில்லை...
நாராயணனே ஸ்ரீ ராமராக வந்தார். 
நாராயணனே பிறகு ஸ்ரீ கிருஷ்ணராகவும் வந்தார்.
கிருஷ்ணருக்கும் பெருமாள் என்ற மரியாதை உண்டே தவிர, அவரிடம் கூட சரணாகதி செய்ய மாட்டேன் என்று இருந்தார் ஹனுமான்.
அத்தகைய சரணாகதியே உண்மையானது, சுத்தமானது...

"உள்ளும் (ரிதகும்), புறமும் (சத்யம்), ராமரே கதி" என்று இருக்கும் ஹனுமான் போன்ற பக்தர்களுக்கு, ஸ்ரீ ராமர் ப்ரத்யக்ஷம் ஆகி காட்சி தருகிறார்.
  • விதண்டாவாதிக்கும்,
  • 'இந்த தெய்வத்தையும் கும்பிடுவோம்' எதற்கும் 'அந்த தெய்வத்தையும் கும்பிடுவோம்' என்று அலைபவர்களுக்கும்,
  • வேறு பலன்களுக்கு ஆசைப்பட்டு பிரார்த்திப்பவனுக்கும்,

     பலன்களை தரும் பகவான், தன் தரிசனத்தை தருவதில்லை.
எந்த மகாத்மாவுக்கு, எண்ணத்திலும், வாக்கிலும் நாராயணனே நிரம்பி உள்ளாரோ, அத்தகைய மகாத்மாவுக்கு மறைந்து (கிருஷ்ண) இருக்கும் பரமாத்மா, தன் தரிசனத்தை வெளிக்காட்டுகிறார் (பிங்களம்).

நாராயணனிடம் பக்தி இல்லாமல் போனாலும், நாம் செய்யும் செயல்கள் உள்ளும் புறமும் ஒன்றாக இருந்தால், நம்மை கண்டு பரமாத்மா நாராயணன் சந்தோஷப்பட்டு, தன் மீது பக்தி ஏற்பட செய்து, தன் தரிசனத்தையும் கொடுத்து விடுவார்.

"சத்யமே" வடிவான பெருமாள், நம்மிடம் எதிர்பார்ப்பதும் "சத்யமே"..

உள்ளும் புறமும் சத்யமாக இருப்பவர்கள், இறை தரிசனம் பெறுகிறார்கள்.

"தசரதர்" அத்தகைய ஒரு மகாத்மா என்று பார்க்கிறோம்.
எந்த நிலையிலும், சத்தியம் மீறாதவர் தசரதர்.
தேவர்களுக்கு சார்பாக போர் செய்த போது, தசரதரின் தேரோட்டி அடிபட்டு விட, தக்க சமயத்தில் கைகேயி தேர் ஒட்டி உதவினாள்.
இவளுக்கு 2 வரங்களை கொடுப்போம் என்று எண்ணினார்.
"என்ன கேட்டாலும் தருகிறேன்" என்று சத்தியம் செய்தும் கொடுத்து விட்டார்.

எண்ணமும், செயலும் மாறுபடாத தசரதரிடம், மகன் ராமனை 14 வருடம் காட்டுக்கு செல்லுமாறு வரமாக கேட்டு விட்டாள் கைகேயி..
"ராமரை விட்டு பிரிந்தால், உயிரே பிரிந்து விடும்" என்று தெரிந்தாலும், உள்ளும் (ரிதகும்), புறமும் (சத்யம்) சத்தியத்துக்காக வாழும் தசரதர், கைகேயி கேட்ட வரத்தை கொடுத்தார்.
சத்தியத்துக்காக உயிரையே கொடுத்தார் தசரதர்.

தாய் தந்தை அற்ற பரமாத்மா, தனக்கு ஒரு தந்தை வேண்டுமே!! என்று தேடி கண்டுபிடித்த உத்தமர் அல்லவா தசரதர்.

எண்ணத்திலும், செயலிலும் சத்தியத்துக்காக வாழும் தசரதரை தன் தந்தையாக ஏற்றார் பரமாத்மா.
தசரதர் பெருமை மகத்தானது!!


அதே போல, மற்றொரு உத்தமர் "வசுதேவர்".
தன் தங்கை தேவகியின் 8வது குழந்தை, தன் மரணத்துக்கு காரணம் ஆகும் என்ற அசரீரி கேட்டதும்,
வெளியில் தன் தங்கைக்காக தானே ரதம் ஓட்டி வருவது போல நடித்த கம்சன், தன் உயிருக்கு இவள் மூலம் ஆபத்து என்று தெரிந்தவுடன் வாளை தூக்கி வெட்ட வந்தான்.
அன்று தான் தாலி கட்டி மனைவியாக ஏற்று கொண்டிருந்தார் வசுதேவர்.
தன் மனைவி என்ற உறவு இருப்பதால், கம்சன் காலில் விழுந்து, மன்றாடினார்.

"அசரீரி சொன்னது நடக்குமோ, நடக்காதோ என்று கூட தெரியாத பட்சத்தில் தங்கையை வெட்ட வேண்டாம்" என்று கெஞ்சினார்.

"தன் சுகமே முக்கியம்" என்ற அசுர குணம் கொண்ட கம்சனுக்கு, வசுதேவர் சொன்ன எதுவும் காதில் விழவில்லை.

தேவகியை எப்படியாவது அந்த சமயத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த வசுதேவர், தனக்கு பிறக்கும் குழந்தைகளை கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல, சமாதானம் அடைந்தான் கம்சன்.

இருந்தாலும் நம்பிக்கை இல்லாததால், கல்யாணம் ஆன அன்றே இருவரையும் ஜெயிலில் தள்ளி சிறைப்படுத்தி விட்டான்.
"பிறக்கும் குழந்தைகளை கொடுத்து விடுகிறேன்" என்று எண்ணத்தில் தோன்றி, வாக்கு கொடுத்து விட்ட வசுதேவர், தனக்கு பிறந்த முதல் குழந்தையை நேராக கம்சனிடம் கொடுக்க,
சிறிதும் யோசிக்காமல், தன் மருமகன் என்ற பாசம் கூட இல்லாமல், அங்கு இருந்த கருங்கல்லில் குழந்தையை அடித்து கொன்று விட்டான்.


இது போன்று 6 குழந்தைகள் தேவகி பெற, கம்சன் கொன்று விடுவான் என்று தெரிந்தும், வசுதேவர் தன் குழந்தைகளை சத்தியத்துக்காக கம்சனிடம் கொடுத்தார்.
மனதால் கொடுத்த வாக்குக்காக, தன் குழந்தையை தியாகம் செய்ய துணிந்த வசுதேவருக்கு, மகனாக பரமாத்மா வர ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லையே...

எண்ணமும், வாக்கும் ஒன்றாக இருக்கும் போது, பரமாத்மாவின் தரிசனம் நிச்சயமாகிறது.

தெய்வ தரிசனம் பெற்ற மகான்கள் இன்றும் இந்த பாரத நாட்டில் உள்ளனர்.
கோடியில் ஒருவர் மட்டுமே, மனதில் நினைப்பதையே செயலிலும் காட்டுகின்றனர்.
அத்தகைய மகான்களுக்கு தெய்வ தரிசனம் கிட்டுகிறது.

வாழ்க ஹிந்துக்கள்.

ஹிந்து தர்மத்தில் இல்லாத விஷயங்கள் பிற போலி மதங்களில் இல்லை.

பிற மதங்களை "மனிதர்கள்" முயற்சி செய்து காக்கின்றனர்.
1000 வருடங்கள் வெளி மதங்கள் உள்ளே புகுந்து ஆள நினைத்தாலும், ஹிந்து தர்மத்தை "தெய்வங்களே அவதாரம்" செய்து காக்கின்றனர்.

ஹிந்துவாக வாழ்வதே நமக்கு பெருமை.




Afternoon Sandhya Vandanam: 

Morning Sandhya Vandanam: 



Evening Sandhya Vandanam




Thursday 15 August 2019

சந்தியா வந்தனத்தை, மகான்கள் எப்படி பார்க்கிறார்கள்? நாம் தெரிந்து கொள்வோமே...

சந்தியா வந்தன மந்திரங்களை,
சந்தியா வந்தனம் அமைக்கப்பட்ட க்ரமத்தை (வரிசையை),
நாம் நன்றாக கவனித்தோமானால்,
அதில் அதி அற்புதமான "ஆனந்தம்" என்ற பொக்கிஷம் உள்ளது என்று புரிந்து விடும்.


மேலும் நாம் நன்றாக கவனித்தோமானால்,
ஒரு சாதாரண மனிதன், பகவானை எந்த வழியில் அடைய முயற்சிக்க வேண்டும்? என்ற ரகசியமும் வெளிப்படையாக காட்டுகிறது என்பதும் புரிந்து விடும்.   .

ஒரு சின்ன 5 நிமிட பிரார்த்தனையில் "வேதத்தின் சாரத்தை, பேரானந்தத்தை தரக்கூடிய பொக்கிஷத்தை அடக்கி கொண்டு உள்ளது, சந்தியா வந்தனம்" என்று புரிந்து விடும்.

இந்த ஆனந்தத்தை மகாத்மாக்கள் புரிந்து இருப்பதால், சந்தியா வந்தனம் செய்வதை மிகவும் விரும்பி செய்கிறார்கள்.

சந்தியா வந்தனம் செய்யும் போது மகாத்மாக்கள் அனுபவிக்கும் அந்த ஆனந்தம் என்ன? என்று நாமும் புரிந்து கொள்வோமே!!
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சந்தியா வந்தனம் எப்படி உள்ளது? என்று நன்றாக கவனித்து பாருங்கள்..

"அச்சுதாய நம:, அனந்தாய நம:, கோவிந்தாய நம:" என்று சொல்லும் போது,
இது "பகவானின் பெயர்கள், வேத மந்திரங்கள்" என்று மட்டும் நாம் நினைத்தால், மகாத்மாக்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது, நாம் அனுபவிக்கவும் முடியாது.
மகாத்மாக்கள் "அச்சுதா அனந்தா, கோவிந்தா" என்று பரமாத்மாவின் பல பெயர்களை சொல்ல சொல்ல,
பகவானின் பெயரை தன் வாயார சொல்லி அழைக்க, ஆனந்தமாக அனுபவிக்க கிடைத்த வாய்ப்பாக பார்க்கிறார்கள்.

ஒவ்வொரு பெயரையும் சொல்லும் போதே, பஜனை செய்த ஆனந்தத்தை மகாத்மாக்கள் அனுபவிக்கிறார்கள்.
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, த்ரிவிக்ரமா, என்று சொல்ல சொல்ல பஜனை செய்த ஆனந்தத்தில் மகாத்மாக்கள்  திளைக்கிறார்கள்.

இதனால் மகாத்மாக்கள், சந்தியா வந்தனத்தை ஆசை ஆசையாக செய்கிறார்கள்.

தனியாக பஜனை செய்ய கூட தேவை இல்லாமல், சந்தியா வந்தனமே பரமாத்மாவை பல பெயர்கள் கொண்டு பஜிக்கும் அழகை மகாத்மாக்கள் ரசிக்கிறார்கள்.
"மமோபாத்த சமஸ்த.." என்று சொல்லி, "பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்" என்று முடிக்கும் போது,
"பரமேஸ்வரன் நான் செய்யும் சந்தியா வந்தனத்தை கண்டு ஆனந்தம் அடைகிறார். என்னை கண்டு பிரியம் கொள்கிறார்" என்று சொல்லும் போதே தான் செய்யும் சந்தியா வந்தனத்தில் பரமேஸ்வரன் ப்ரீத்தி அடைகிறாரே !! என்று மகாத்மாக்கள் மேலும் உற்சாகம் அடைகின்றனர்.


"தான் மட்டும் ஆனந்தத்தை அனுபவிக்கவில்லை. 
சந்தியா வந்தனம் செய்யும் என்னை பார்த்து பரமேஸ்வரனும் பிரியம் கொள்கிறார்" என்ற உண்மையை உணர்ந்து, மேலும் உற்சாகமாக அடைகிறார்கள்.

சந்தியா வந்தனமே, ஆரம்பம் முதல் கடைசி வரை பகவானின் பெயரை சொல்லி சொல்லி ஆனந்தத்தில் நம்மை ஆழ்த்தும், நமக்கு செய்ய கிடைத்த வாய்ப்பு என்று புரியும். 

சந்தியா வந்தனமே மகாத்மாக்களுக்கு பஜனையாக தெரிகிறது. பகவானை பஜிக்க கசக்குமா?

ஆரம்பமே பரமாத்மாவை எப்படி பஜிக்கிறது பாருங்கள்.

அச்சுதா நம (நிலையான பரமாத்மாவே, உமக்கு நமஸ்காரம்)
அனந்தாய நம (எல்லையற்று இருக்கும் பரமாத்மாவே, உமக்கு நமஸ்காரம்)

அச்சுதா, ஆனந்தா என்று சொல்லி, பரமாத்மாவை பஜிக்க கசக்குமா?
மகாத்மாக்கள் இந்த ஆனந்தத்தை அனுபவிப்பதாலேயே சந்தியா வந்தனம் செய்ய மிகவும் பிரியப்படுகிறார்கள்.

இது மட்டுமா?...
சந்தியா வந்தனம் அமைக்கப்பட்ட க்ரமத்தை (வரிசையை) நன்றாக கவனியுங்கள்.

பொதுவாக, மனிதன் தன் பக்தியை உயர்த்தி கொள்ள முயற்சி செய்கிறான்.

தான் செய்யும் தினசரி காரியங்களையே (கர்மா) 'தெய்வம் நாம் செய்யும் செயலை பார்த்து ப்ரீத்தி (சந்தோஷம்) கொள்ளட்டும். தெய்வத்துக்காக செய்கிறேன்' என்று செய்ய ஆரம்பிக்கிறான்.
அப்போது, கர்மாவையே (செயல்கள்) யோக முறையில் செய்ய ஆரம்பிக்கிறான்.
"கர்ம யோகி" ஆகிறான்.
மனிதன் தன் பக்தியை உயர்த்தி கொள்கிறான்.

கர்ம யோகத்தின் பலனாக தெய்வ சிந்தனையுடனேயே இருந்ததால், மெதுவாக தெய்வத்துக்கு என்று நேரம் ஒதுக்கி, அவரை பற்றி நினைக்கிறான்.
தெய்வத்தை பற்றிய அறிவை (ஞானத்தை) வளர்த்து கொள்ள ஆரம்பிக்கிறான்.
அப்போது, தெய்வத்தை பற்றிய அறிவு (ஞானம்) பெற, ஞான யோக முறையில் முயற்சி செய்ய ஆரம்பிக்கிறான்.
"ஞான யோகி" ஆகிறான்
மனிதன் தன் பக்தியை, மேலும் உயர்த்தி கொள்கிறான்.
தெய்வத்தை பற்றிய அறிவு (ஞானம்) பெற்றபின், "அவரை அடைந்தே தீர வேண்டுமென்றும், அவரை பார்க்க வேண்டும்" என்ற ஆர்வத்தை பெறுகிறான்.
ஆழ்வார்களை போன்றும், நாயன்மார்களை போன்றும், ஆனந்தமாக பஜிக்க ஆரம்பிக்கிறான். பகவானிடத்தில் ப்ரேம பக்தி செய்கிறான்.
"பக்தி யோகி" ஆகிறான்
மனிதன் தன் பக்தியை, மென்மேலும் உயர்த்தி கொள்கிறான்.



எல்லா திசைகளிலும், அனைத்து தேவதைகளிலும், "பரமாத்மா வாசுதேவன்" இருப்பதை பார்க்கிறான்.
யாரை பார்த்தாலும், பரமாத்மா வாசுதேவன்" இருப்பதை பார்க்கிறான்.

"அனந்தாய நம" என்ற சொற்களின் அர்த்தத்தை, அனுபவத்தை பெறுகிறான்.

இறுதியில் தெய்வ தரிசனம் பெற்ற பின்,
இனி சம்சார சூழலில் சிக்கி மீண்டும் பிறக்க ஆசைப்படாமல் இருக்க, "தான் செய்த பாவ, புண்ணியங்கள் அனைத்தையும் நாராயணின் திருவடிகளில் சமர்ப்பித்து விட", பரமாத்மா வாசுதேவன் அந்த ஜீவனுக்கு தன் இருப்பிடமான அழியாத வைகுண்டத்தில் நித்ய வாசம் செய்ய அனுக்கிரஹம் செய்து,
தன்னை எப்பொழுதும் தரிசித்து கொண்டே இருக்க அனுக்கிரஹம் செய்து, சம்சார சூழலில் இருந்து காப்பாற்றி விடுகிறார்.             

இதையே பகவத் கீதையில்,
"கர்ம மார்க்கம்" என்றால் என்ன? கர்ம மார்க்கத்தில் உள்ள  "கர்ம யோகி" எப்படி இருப்பார்?
"ஞான மார்க்கம்" என்றால் என்ன? ஞான மார்க்கத்தில் உள்ள "ஞானி" எப்படி இருப்பார்?
"பக்தி மார்க்கம்" என்றால் என்ன? பக்தி மார்க்கத்தில் உள்ள "பக்தன்" எப்படி இருப்பார்?
என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கி சொல்கிறார்.
கடைசியில், 
இந்த மார்க்கங்களை கடந்து, "மோக்ஷத்தை அடைய, அனைத்து பாவ புண்ணியங்களையும் தன் திருவடிகளில் சமர்ப்பித்து, தன் ஒருவனையே சரணடைந்து விடு" 
என்று சரணாகதி மார்க்கத்தை கடைசியில் காட்டி, மோக்ஷத்திற்கான வழியையும் காட்டுகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

பகவானை அடைய 
"கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம்" போன்ற வழிகளில் சென்று, கடைசியில் பெருமாளே கதி என்று, "உன் பாவ புண்ணியங்கள் அனைத்தையும் பெருமாளிடம் சரண் செய்து விடு" என்று சொல்லப்படும் மோக்ஷத்திற்கான வழியை
5 நிமிட சந்தியா வந்தனத்தில் அடங்கி உள்ளதை, மகாத்மாக்கள் பார்க்கின்றனர்.

சந்தியா வந்தனம் செய்யும் முறையை நன்றாக கவனித்தால்,
நாம் செய்யும் இந்த பிரார்த்தனையில் முதல் பகுதி "கர்ம யோகமாகவே" செய்வது நமக்கு புரியும்.
பகவானின் நாமத்தை சொல்லி சொல்லி,
தீர்த்தத்தை எடுத்துக்கொண்டும்,
நம் மீது புரோக்ஷித்துக்கொண்டும்,
நவ கிரஹங்களுக்கு தீர்த்தம் கொடுத்து திருப்தி (தர்ப்பணம்) செய்தும்,
வ்யூஹ அவதாரமாக உள்ள பரவாசுதேவனுக்கும் தீர்த்தம் கொடுத்து திருப்தி (தர்ப்பணம்) செய்வதையும் பார்க்க, முழுக்க முழுக்க  ஒரு கர்மாவை (செயல்) போல இருந்தாலும்,
பகவானின் பெயரை சொல்லிக்கொண்டே செய்வதால், "கர்ம யோகமாக" நாம் செய்வது புலப்படும்.


"கர்ம யோகம்" முடிந்து, "ஞான யோகம்" செல்லும் போது, நாம் செய்யும் சந்தியா வந்தனத்தை பாருங்கள்..
பகவானை மனதால் தியானித்து, ஞான அனுபவத்தை பெற,
பிரணவ ஜபம், காயத்ரி ஜபம் செய்வதை கவனித்தால்,
"ஞான மார்கத்தை" சந்தியா வந்தனம் நமக்கு காட்டுவது புரியும்.

பகவானை பற்றி ஜபத்தாலும், தியானத்தாலும், அறிவு (ஞானம்) பெற்ற பின், 
சந்தியா வந்தனம் நமக்கு, பக்தி மார்க்கத்தை காட்டுவதை கவனியுங்கள்.
"பகவானை காண வேண்டும்" என்ற ஆர்வம் ஏற்பட்டு, சூரியனை பார்த்து, சூரியனுக்கும் சூரிய நாராயணனாக, பரமாத்மா வாசுதேவன் இருக்கிறார் என்று சூரியனை கை கூப்பி வணங்குவதும்,
எல்லா திசைகளுக்கும், யமனுக்கு, அனைத்து தேவதைகளுக்கும், கடைசியில் நாராயணனுக்கும் வணங்குவதை பார்த்தால்,
பக்தி மார்க்கத்தில் ஆனந்த கூத்தாடும் பக்தனை போல நாம் இருப்பது புரியும்.
கடைசியில் சூரிய நாராயணனையே சரணம் அடைந்து,
தான் செய்த அனைத்து பாவ புண்ணியங்களை "நாராயணாயேதி சமர்பயாமி" என்று நாம் சொல்லி முடிப்பதை பார்த்தால், மோக்ஷ மார்க்கத்தை நமக்கு சந்தியா வந்தனம் காட்டுவது புரியும். 
இந்த அனுபவத்தில் சந்தியா வந்தன மந்திரங்களை சொல்லும் போது, 
"பஜனை செய்யும் ஆனந்தத்தையும்",
சந்தியா வந்தன க்ரமத்தை (வரிசையை) பார்க்கும் போது,
அதில் "ஜீவன் மோக்ஷம் வரை செல்லும் பாதை காட்டப்படுவதை" மகாத்மாக்கள் கவனிக்கின்றனர்.

சந்தியா வந்தனத்தை விரும்பி விரும்பி செய்கிறார்கள் மகாத்மாக்கள்.

மகாத்மாக்களின் இந்த அனுபவத்தை, நாம் உணரும் போது, 
நமக்கு சந்தியா வந்தனம் செய்ய ஆசை வந்தே தீரும்.




அர்த்தங்களுடன் சந்தியா வந்தனம் தெரிந்து கொள்வோமே...
அர்த்தங்கள் தெரிந்து கொள்வதின் மூலம் தான், ஸ்ரத்தை (ஈடுபாடு) நமக்கு வரும்.
நமக்கு சந்தியா வந்தனத்தில் ஈடுபாடு வர, அர்த்தங்களை புரிந்து கொள்வதும் அவசியம்.

இதோ...


Sandhya Vandanam -  Morning (With Meaning)

Sandhya Vandanam - Afternoon (With Meaning)

Sandhya Vandanam - Evening (With meaning)





Tuesday 13 August 2019

ஆவணி அவிட்டம் என்ற உபாகர்மா மூலம் என்ன செய்கிறோம்?...காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"ஆவணி அவிட்டம்" என்று, சொல்லப்படும் நாளில் பிராம்மணர்கள் கூடி பூணல் அணிந்து கொள்கிறார்கள். "ஸ்ராவணம்" என்றும், "உபாகர்மா" என்றும் கூட சொல்கிறார்கள்.



சிலர் ஆணி அவிட்டம், ஆடி அவிட்டம் போன்ற நாட்களிலும் செய்து கொள்கிறார்கள்.

"ஆவணி அவிட்டம்" என்றதும்
"ஒரு வருடமாக போட்டு கொண்டிருக்கும் அழுக்கு பூணலை கழட்டி, புது பூநூல் போட்டு கொள்ளும் நாள்"
என்று லௌகீக பிராமணர்கள் நினைக்கலாம்.

இப்படி நினைப்பதாலோ என்னவோ!!
சில லௌகீக ப்ராம்மணர்கள், வேறு ஒரு புது நூலை தாங்களே வாங்கி மாட்டிக்கொண்டு விடுகின்றனர்.

நம்முடைய ஹிந்து தர்மத்தில், நாம் செய்யும் எந்த செயலிலும் ஒரு அர்த்தம் உண்டு. காரணமும் உண்டு.

இன்று நமக்கு, 'அர்த்தம் தெரியாமல் போனாலும், காரணம் புரியாமல் போனாலும்',
ஹிந்து தர்மம் சொல்லும் எந்த செயலிலும், காரணம் இருக்கும் என்ற அளவிலாவது நமக்கு 'நம்பிக்கை' வேண்டும்.

இன்றைய நவீன காலத்தில், உலக விஷயங்கள் நம் கையில் கிடைக்கும் நிலையில், காரணங்கள், அர்த்தங்கள் புரிந்து கொள்வது எளிது.

இன்று புரியாமல் போனாலும்,  ஹிந்து தர்மம் சொல்லும் காரியங்களை நம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும்.
விட்டு விட கூடாது.
அலட்சியம் செய்ய கூடாது.
செய்பவர்களை கேலி செய்ய கூடாது.

"சந்தியா வந்தனம்" என்பது ப்ராம்மணன்" கட்டாயம் செய்ய வேண்டிய கடமை என்று விதிக்கப்பட்டு உள்ளது.
எப்பொழுது 'விதிக்கப்பட்டதோ', அதை ப்ராம்மணன் மீறுவது சரியாக இருக்க முடியாது...

இன்று நமக்கு, சந்தியா வந்தனத்திற்கு அர்த்தம் புரியாமல் போனாலும், காரணம் புரியாமல் போனாலும்,
"காரணம் இல்லாமல், அர்த்தம் இல்லாமல் 'வேத வியாசர்' நமக்கு சொல்லி இருக்க மாட்டார்"
என்ற அளவிலாவது நமக்கு 'நம்பிக்கை, நம் ஹிந்து தர்மத்தில்' இருக்க வேண்டும்.

எந்த காரியத்தை செய்தாலும், அதில் உள்ள காரணம், அர்த்தங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

"சந்தியா வந்தனம் ஏன் செய்ய வேண்டும்? அதன் அர்த்தங்கள் என்ன?"
என்று வேத ப்ராம்மணர்கள், உண்மையான மகான்கள் மூலம் தெரிந்து கொள்ளும் போது,
சந்தியா வந்தனம் செய்வதில் உண்மையான 'ஸ்ரத்தை' (ஈடுபாடு) நமக்கு தானாக ஏற்படும்.

தவறான அர்த்தங்களும் பிறரால் சொல்லப்படலாம்.
அதனால் பல வேத ப்ராம்மணர்கள், மகான்களை அணுகி, சந்தேகம் தீரும் வரை விசாரங்கள் செய்து, அர்த்தங்களை, காரணங்களை தெரிந்து கொள்ள ஆர்வத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.

பொதுவாகவே, நாம் ஒன்றை தெளிவாக மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, "ஹிந்து தர்மத்தில் அர்த்தமில்லாத காரியங்கள் எதுவுமே கிடையாது. காரணம் இல்லாமல் எந்த செயலும் நமக்கு சொல்லப்படுவதில்லை"
என்று புரிந்து கொள்ள வேண்டும்.


குறைந்தபட்சம் இந்த அளவிலாவது நம் நம்பிக்கையை ஹிந்து தர்மத்தில் வைத்து இருக்க வேண்டும்.

'தெரிந்து கொள்ள வேண்டும்' என்கிற ஆர்வம் மட்டும் நமக்கு எப்பொழுதும் இருந்தால்,
தகுந்த நேரம் நமக்கு வரும்போது, பெரியோர்கள், மகான்கள் அதன் அர்த்தங்கள், காரணங்களை நமக்கு விளக்குவதை நம் வாழ்க்கையில் அனுபவிக்கலாம்.

வேதத்தை மனப்பாடம் செய்வதற்கே 12 வருடங்கள் ஆகிறது என்கிறார்கள்.

"வேதத்தின் அர்த்தம் முழுமையாக புரிந்தால் தான் வேதத்தை மனப்பாடம் செய்வேன்" என்று ஒருவன் சொன்னால், அவன் ஆயுள் முழுக்க செலவு செய்தாலும் வேதத்தை முழுக்க புரிந்து கொள்ள முடியாது.

ஹிந்து தர்மத்தில் சொல்லப்படும் 'எந்த காரியமும் அர்த்தம் உடையது தான் ' என்ற நம்பிக்கை இருப்பதால் தானே,
உலக ஆசைகளை விட்டு,
"12 வருடங்கள் கடுமையாக வேதத்தை மனப்பாடம் செய்கின்றனர்" வேதம் படிக்கும் பிராம்மண சிறுவர்கள்.
வேதம் உறுதியாக அவர்கள் மனதில் பதிந்த பின்,
வாழ்நாள் முழுவதும் அதன் அர்த்தங்களை, காரணங்களை அறிந்து, மேலும் மேலும் ஸ்ரத்தையை வளர்த்து வேதத்திற்காகவே வாழ்கின்றனர் 'வேதியர்கள்' என்று பார்க்கிறோம்.

புரிந்து கொண்டு சந்தியா வந்தனம் செய்தால், ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படுகிறது.
'கேசவ, நாராயண, மாதவா' என்று சொல்லும் போதே பஜனை செய்யும் ஆனந்தம் மகான்களுக்கு ஏற்படுகிறது.

அதே போல,
"ஆவணி அவிட்டம்" என்ற இந்த நாளில் என்ன செய்கிறோம்? என்று தெரிந்து கொள்வதால், ஆவணி அவிட்டத்தில் செய்யும் காரியங்களிலும் நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.

ஹிந்து தர்மத்தில் நமக்கு விதிக்கப்பட்ட எந்த கடமையையும், புரியாமல் போனாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.
காலம் கனியும் போது, அர்த்தங்கள் புரியும் போது நமக்கு மேலும் ஸ்ரத்தை (ஈடுபாடு) கூடலாம்.
காய்ச்சல் வந்தவனுக்கு, டாக்டர் ஒரு மாத்திரை தருகிறார்.

'அது என்ன மாத்திரை?
உடம்பு முழுக்க சூடாக கொதிக்கிறது. இந்த சின்ன மாத்திரை வாயில் போட்டால், உடல் முழுவதும் செல்லுமா?
இந்த மாத்திரை எப்படி உருவானது?
அது எப்படி என் காய்ச்சலை குணம்படுத்தும்?
என்று கேள்வி கேட்டு கொண்டே இருக்கலாம்.


டாக்டர் பதில் சொல்லி,
அந்த மருந்தை தயாரித்தவன் வந்து விளக்கி சொல்லி,
நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் கூட, உயிரோடு இருந்தால், அந்த மருந்தை எடுத்து கொள்ளலாம்.

மாறாக,
டாக்டர் மீது நம்பிக்கை கொண்டு,
அவர் கொடுக்கும் இந்த "மாத்திரைக்கு காய்ச்சலை சரி செய்யும் திறன் இருக்கும்" என்று நம்பிக்கையிலும் எடுத்து கொள்ளலாம்.
மருந்தை பற்றிய அறிவு 'நமக்கு இல்லாது' போனாலும்,
டாக்டர் மீது இருந்த நம்பிக்கையினால், அதை நாம் வாயில் போட்டு கொள்கிறோம்.

மருந்தின் மீது நம்பிக்கை நமக்கு இல்லாமல் போனாலும், மருந்து நம்மை காப்பாற்றி விடுகிறது.

"மாத்திரை" போன்றது "வேத மந்திரங்கள்".

இங்கு நமக்கு இருக்கும் டாக்டரோ "வேத வியாசர்".

4 வேதங்கள், சந்தியா வந்தனம் போன்ற மாத்திரைகளை,
வேத வியாசர் என்ற மருத்துவர், நமக்கு தந்து விட்டார்.

மாத்திரைகளின் (வேத மந்திரங்கள்) அர்த்தங்களையோ, காரணங்களையோ புரிந்து கொள்ள முடியாமல் போனாலும்,
வேத வ்யாஸரை என்ற மருத்துவரை நம்பி,
மாத்திரைகளை நாம் விழுங்கினாலேயே, அது அதன் பெருமைகளை காட்டும் என்கிறார்கள் மகான்கள்.

வயிறு குளிர்ந்து, வேதம் கற்ற ப்ராம்மணன் ஆசிர்வாதம் செய்தால், இன்று கூட பலிக்கும்.

வயிறு எரிந்து, வேதம் கற்ற ப்ராம்மணன் சபித்தால், இன்று கூட பலிக்கும்.
(வேதம் கற்ற பிராம்மணர்கள் என்று சொல்லும் போது, வேதம் கற்காத லௌகீக பிராம்மணன் என்று எடுத்துக்கொள்ள கூடாது.)
ஜூன் மாதம் வரை, தாங்க முடியாத வெயிலில் தவித்தது தமிழகம்.
ஆதி வரதர் ஜூலை மாதம் 2019ல் வெளி வர, வருண ஜபங்கள் வேத ப்ராம்மணர்கள் ஜபிக்க, வானம் மழை மேகத்துடன் திரண்டது..

வருண ஜபம் செய்து மழையா? என்று கேலி செய்தவர்கள் தலை குனிய, ஜூலை மாதத்தில் மழை கொட்டியதே..

ஜூன் மாதம் வரை தாங்க முடியாத வெயில், ஜூலை மாதத்தில் மழை. சென்னை மாகாணம் இது போன்ற மழையை கண்டதுண்டா?






வருண ஜபம் செய்தால் மழை பெய்யும் என்று ஹிந்து தர்மம் சொல்கிறது.
உண்மையான வேதம் கற்ற ப்ராம்மணர்கள் சொன்னால், மழை வருகிறதே.. 
ப்ராம்மணர்கள் பிராம்மண குலத்தில் பிறந்ததால் மதிக்கப்படுவதில்லை.
ப்ராம்மணர்கள் வேதத்தை கற்றால், மதிக்கப்படுகிறார்கள்.

வேத மந்திரங்கள் மருந்து போன்றது.

அறிவியலால் இன்று வரை கொண்டு வர முடியாத மழையை, வருண ஜபம் செய்து வரவழைக்கும் வேதியர்களை நாம் மதிக்க வேண்டும்.

ஹிந்து தர்மத்தில் நமக்கு சொல்லப்பட்ட எந்த விஷயமும், கடுமையான ஆராய்ச்சி செய்து "ரிஷிகள் என்ற அந்தஸ்தை" பெற்ற மகான்கள் சொன்னது என்பதை நாம் மறக்க கூடாது..
"ரிஷி" என்ற பெயரை பெறுவதற்கு, விஸ்வாமித்திரர் எத்தனை பாடுபட்டார், எத்தனை வருடங்கள் தியானம் செய்தார் என்று பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும்.

ஹிந்து தர்மத்தில் சொன்ன விஷயங்களை, மகத்தான பெருமைகள் கொண்ட ரிஷிகள் நமக்கு சொன்னார்கள்.

நமக்கு கிடைத்த அற்புதமான டாக்டர்கள் ரிஷிகள், என்பது ஒரு புறம் இருந்தாலும்,
இன்றைய காலத்தில், போலி மதங்கள் நுழைந்து விட்டதால்,
"போலி டாக்டர்களும் உண்டு" என்பதை மறந்து விட கூடாது.

போலி மதங்களில் உள்ள இவர்கள் கொடுக்கும் எந்த உபதேசமும், நமக்கு நன்மை தராது. மோக்ஷமும் கிடைக்க செய்யாது.
நாம் போலி டாக்டரிடம் சிக்கி விட கூடாது. 

உண்மையான அர்த்தம் தெரிந்தவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை தேடி சென்று, தெரிந்து கொள்ள ஆர்வம் நமக்கு வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில், அர்த்தம் தெரிந்தவர்கள் எதேச்சையாக நமக்கு சொல்லும் வரை காத்து இருக்க வேண்டும்.

இன்றைய தேதியில் புரியாத காரணத்தால், எக்காரணம் கொண்டும், ஹிந்து தர்மங்களை நாம் விட்டு விட கூடாது..
கேலி செய்ய கூடாது.
"சந்தியா வந்தனம் செய்வது" ப்ராம்மணனுக்கு உள்ள கடமை.
எந்த காரியத்தை செய்தாலும், நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) இருக்க வேண்டும்.

ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும் போது தான், நாம் செய்யும் செயலை ஆர்வத்தோடு செய்ய முடியும்.


சந்தியா வந்தன அர்த்தமும், காரணமும் புரிந்து கொள்ளும் போது,
சந்தியா வந்தனம் செய்வதில் கூட நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.
ஸ்ரத்தை (ஈடுபாடு) ஆர்வத்தை தூண்டும்.

நாம் செய்யும் காரியத்தில் உள்ள காரணமும் அதன் விளக்கமும் புரிந்து கொண்டாலேயே, நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்பட்டு விடும்.

ஆவணி அவிட்டம் ஏன்?
என்ன காரணத்துக்காக செய்கிறோம்? என்று தெரிந்து கொள்ளும் போது, நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.
"ஆவணி அவிட்டம்" என்ற இந்த நாளில்,
பூணல் மாற்றி கொள்ளும் பழக்கம் அந்த காலங்களில் பொற்கொல்லனுக்கும் (goldsmith), சிற்பங்கள் செய்யும் ஸ்தபதிக்கும்(engineer) கூட இருந்தது.
இன்று கூட இவர்களில் பலர் பூணல் அணிந்து கொள்கின்றனர்.

"பிராமணன் மட்டும் பூணல் அணிகிறான்" என்று நினைக்க கூடாது.

பூணலை அறுத்தால், "ஹிந்துக்களின் தர்மத்தை ஒட்டு மொத்தமாக தாக்குகிறார்கள்" என்று தான் அர்த்தம்.

சுயமாக தொழில் செய்யும் அனைவரும் (வைசியன் business),
நாட்டை காக்கும் அனைவரும் (க்ஷத்ரிய)
பூணல் அணிந்து இருந்தனர்.
க்ஷத்ரியனாக அவதரித்த ராமர், கிருஷ்ணர் கூட பூணல் அணிந்து இருந்தார்.

பூணூல் என்றால் என்ன? மூன்று நூல்கள், ப்ரம்ம முடிச்சு எதற்கு? தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.

பிராம்மண ஜாதியை தவிர பிறர் ஜாதியில் பெரும்பாலானவர்கள் பூணல் அணிவதை இன்று விட்டு விட்டதால், 
ஆவணி அவிட்டம் என்றாலே "பழைய பூணலை கழட்டி, புது பூணல் அணிவது" என்று பிராம்மணர்களே நினைக்கும் அளவிற்கு ஆகி விட்டது.

இன்று கூட,
ஆவணி அவிட்டத்தில், ஸ்தபதி, பொற்கொல்லர் போன்ற ஒரு சிலர் புது பூணல் அணிந்து கொள்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்டனர்.
தங்கள் பழக்கத்தை விட்டு விட்டனர்.

வேத மந்திரங்கள் இல்லாமல் இருந்தாலும், பூணல் அணிந்து இருந்த இவர்கள், இன்று அணிவதில்லை.

இதனால், "பிராம்மணன் மட்டும் தான் பூணல் அணிகிறான்" என்று நினைப்பு பரவி விட்டது.

வேத மந்திரங்கள் இல்லாவிட்டாலும், ஆவணி அவிட்டம் நாளில், பொதுவாக இவர்கள் அனைவரும் புது பூணலை வேதம் அறிந்த ப்ராம்மணர்களிடம் வாங்கி கொண்டு மாற்றி கொள்வார்கள்.
இது ஒரு வழக்கமாக இருந்தது.

அன்றைய காலத்தில் "குரு  சிஷ்யன்" என்று சொல்லும் வழக்கம் இருந்தது..
குருவிலும் "போலி குரு" ஏற்பட்டதால், இன்று நல்ல குரு என்று பிரித்து காட்ட "ஸத் குரு" என்று சொல்லி உத்தம குருவை அடையாளம் காட்ட வேண்டி இருக்கிறது..

போலி மதங்களில் "மைக் எடுத்தவன் எல்லாம் ஸாது" என்று "போலி சாதுக்கள்" அதிகம் உருவான காரணத்தால்,
ஹிந்து மதத்தில் மெய் (உண்மையான) ஞானத்தை உபதேசிக்கும் குருவை "ஸத் குரு" என்று அடையாளப்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.

அதே போல,
அன்றைய காலங்களில், ப்ரம்மத்தை (பரமாத்மா வாசுதேவன்) வேதங்களால் உபாசனை செய்பவர்களை "ப்ராம்மணர்கள்" என்று மட்டும் தான் அறியப்பட்டார்கள்.

இன்று பல ப்ராம்மணர்கள் வேதத்தை கொண்டு பிரம்மத்தை உபாசிப்பதை விட்டு விட்டனர்.

இன்று, பல ப்ராம்மணரகள்

  • சூத்திர தொழில் செய்வதால் (employee),
  • ராணுவம், அரசியல், காவல் துறையிலும் வேலை செய்வதால்,
  • சுய தொழில், மருத்துவம் செய்வதால்,

அன்றைய காலத்தில் பயன்படுத்திய ப்ராம்மணன் என்ற சொல்லுக்கு மரியாதை தேய்கிறது.
இதை சமாளிக்க,
வேதத்தை விட்ட இவர்களை "லௌகீக ப்ராம்மணன்" என்றும்,
வேதத்தை இன்றும் உபாசிக்கும் ப்ராம்மணர்களை "வேத பிராமணன்" என்றும் அடையாள படுத்த வேண்டி இருக்கிறது.
வேத ப்ராம்மணர்கள் இன்று வரை மடிசார் (பெண்கள்), பஞ்சகஜம், குடுமி (ஆண்கள்) என்று வெளி வேஷத்தில் ஆரம்பித்து, தான் செய்யும் தொழிலும் வேதம் சம்பந்தப்பட்டதாகவே அமைத்து கொண்டு, அரசாங்க உதவிகள் இல்லாத நிலையிலும், வேதம் ஓதுவதால் கிடைக்கும் பணத்தை கொண்டு தங்கள் குடும்பத்தை முடிந்தவரை தர்மத்தில் வைத்து கொண்டு இன்று வரை வாழ்கின்றனர்.

வேதத்தை விட்டு விட்டு வைசியன், சூத்திரன், க்ஷத்ரியன் என்று ஆன லௌகீக ப்ராம்மணர்கள் வேதத்தை விட்டாலும், சந்தியா வந்தனம் செய்ய உரிமை உள்ளவர்கள். கடமையும் கூட.

அன்றைய காலத்தில் வைசியன், க்ஷத்ரியர்கள் கூட சந்தியா வந்தனம் (prayer) என்ற கடமையை செய்தனர்.

சந்தியா வந்தனத்திலும் வேத மந்திரங்கள் உண்டு.

"உபாகர்மா" என்று அழைக்கப்படும் இந்த ஆவணி அவிட்ட நாளில்,
வேத ப்ராம்மணர்கள், "தாங்கள் ஒரு வருடங்களாக தினமும் ஓதி வந்த வேத மந்திரத்துக்கு மீண்டும் ஒரு சக்தியை ஊட்டுகிறார்கள்".

வேத ப்ராம்மணர்கள், மற்ற ஜாதியினருக்கும், லௌகீக ப்ராம்மணர்களுக்கும் தங்கள் கையால் பூணல் கொடுத்து ஆசிர்வதிக்கின்றனர்.
இதனால், நாம் செய்யும் சந்தியா வந்தனம் போன்ற கடமைகளில் உள்ள மந்திரங்கள் மீண்டும் சக்தி பெற்று விடுகிறது"

"உப" என்றால் அருகில், கூடுதலாக என்ற அர்த்தம் கொள்ளலாம்.
"கர்மா" என்றால் செயல்.

ஒரு வருட காலத்தில் மந்திரங்கள் அதன் சக்தியை இழந்து இருப்பதால், அந்த மந்திரங்களின் வீரியத்தை மீண்டும் தூண்டி விட, இந்த "உபாகர்மா" மூலம் மீண்டும் மந்திரங்கள் பிரகாசம் அடைகின்றன என்று சொல்லப்படுகிறது.

வேத மந்திரங்கள் உண்மையில் சக்தியை இழப்பதில்லை.
வேத மந்திரங்கள் சுயமே ப்ரகாசமானது. சக்தி கொண்டது.
அந்த மந்திரங்களை வேத ப்ராம்மணனும் உச்சரிக்கிறான்.
அந்த வேத மந்திரங்களை லௌகீக ப்ராம்மணனும், சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாவை செய்வதன் மூலம் உச்சரிக்கிறான்.

சுயம் பிரகாசமான வேத மந்திரங்கள், தெய்வங்களை ஆகர்ஷிக்கும் வேத மந்திரங்களை, நம் 'எச்சில் வாயால்' சொல்ல வேண்டி இருப்பதால்,
அந்த அசுத்தத்தை நீக்கி மீண்டும் வேத மந்திரத்தின் வீரியம் நமக்கு ஏற்படுவதற்காக செய்யப்படுவதே "உபாகர்மா".
வீட்டுக்கு நல்ல பெயிண்ட் அடித்தும், ஒரு வருடம் ஆனதால், தூசி படிந்து விட்டது.
அந்த தூசியை தட்டி கொஞ்சம், அலங்காரம் செய்து விட்டால், மீண்டும் ப்ளீச் என்று ஆகி விடுவது போல, இந்த "உபாகர்மாவை" ப்ராம்மணர்கள் வேதத்துக்கு ஒரு அலங்காரமாக செய்து கொள்கிறோம்.
"ஆவணி அவிட்டம்" அன்று வேத ப்ராம்மணர்கள் கையால் பூணல் வாங்கி கொண்டு, சங்கல்பம் செய்து கொண்டு,
வேத மந்திரத்துடன் பழைய பூணலை கழட்டி, புது பூணலை மாட்டி கொண்டு, வேத ஆரம்ப மந்திரங்களை சொல்லி உபாகர்மாவை செய்கிறோம்.
அடுத்த நாள் ஏனோதானோவென்று, விளையாட்டாக சந்தியா வந்தனம் செய்தாலும் மந்திரங்கள் உடனே அதன் பலன்களை தரும்.

புதிதாக பூணல் போட்டு கொண்டு வேதங்கள் கற்க ஆரம்பிக்கும் நாளாகவும் ஆவணி அவிட்டம் உள்ளது.

வெயிலில் காய வைத்த தீப்பெட்டியை, 'லேசாக' உரசினால் கூட தீ பற்றி கொள்ளும்.
உபாகர்மா வருடா வருடம் செய்து கொள்வதால், மந்திரங்கள் அதன் சக்தியை பிரகாசமாக காட்டுகின்றன.
சந்தியா வந்தனத்தில் உள்ள ஒவ்வொரு மந்திரமும் பொலிவை பெறுவதால், அரைகுறையாக சொன்னாலும், அதன் பலன்களை காட்டும்.


உபாகர்மா செய்யாமல், தானாக நூல் தானே என்று மாட்டி கொண்டால், மழையில் நனைந்த தீப்பெட்டியை, எத்தனை முறை உரசினாலும் ப்ரயோஜனப்படாதது போல, நாம் ஜபிக்கும் மந்திரங்கள் சக்தி அற்று நிற்கும்.
"ஓம் நமோ நாராயணா", "ஓம் நம சிவாய" போன்ற மந்திரங்கள் யாவருக்கும் பொதுவானது. மகா சக்தி வாய்ந்தது.

நம் எச்சில் வாயால் இறைவன் திருநாமங்களை நாம் உச்சரிக்கிறோம்.
அனைவருக்கும் 'மந்திரங்கள் தீப்பொறி போல பலன் கொடுக்கும்' என்பதாலேயே, ஹிந்துக்கள் அனைவரும் பூணல் அணியும் பழக்கம் கொண்டிருந்தனர். ஆவணி அவிட்டம் அன்று அவர்களும் பூணல் மாற்றிக்கொண்டனர்.

தெய்வங்களை மறந்தோம்.
நம் பழக்கங்களை விட்டோம்.
நம சிவாய என்று மந்திரங்கள் சொல்வதை விட்டோம்.
மந்திரங்கள் வீரியம் நம் எச்சில் வாயால் மந்தமாக கூடாதே என்று வேத ப்ராம்மணர்கள் கையால் ஒரு சிறு பூணல் வாங்கி போட்டு கொள்ள மறந்தோம்.
இன்று வேத ப்ராம்மணர்களை மதிக்க மறந்து, தெய்வங்கள் நாம் கூப்பிட்டால் உதவி செய்ய காத்து இருந்தும், அனாதைகளாக திரிகிறோம்.

மீண்டும் மந்திரங்கள் சக்தி பெற, நாம் சொன்னாலும் பலிக்க, ஆவணி அவிட்டம் என்ற நாளில் உபாகர்மாவை செய்து, புது பூணல் அணிந்து கொள்வோம்.

ஹிந்துக்கள் அனைவரும் பூணல் ஏன் அணிந்து இருந்தார்கள்? என்ற ரகசியத்தை உணர்ந்து, வேத மந்திரங்கள் மூலம் அற்புதங்கள் நிகழ்வதை நம்வாழ்வில் காண்போம்.

"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரம் அனைவரும் ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று சொல்லலாம்.
இதன் அற்புத விளக்கம் இதோ...

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க் நம் குரு.
வாழ்க நம் ரிஷிகள்.
வாழ்க வேதியர்கள்.
வாழ்க ஹிந்து தர்மம்.