Followers

Search Here...

Showing posts with label தமிழன். Show all posts
Showing posts with label தமிழன். Show all posts

Sunday 4 June 2023

யார் த்விஜன்? சூத்திரனுக்கும், பெண்களுக்கும் பெரிய கட்டுப்பாடு விதிக்காத சட்ட நூல். பிராம்மணனுக்கு மட்டும் த்விஜன் என்ற பெயரா?. யார் த்விஜன் (இரு பிறப்பாளர்கள்)? இவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்ன? அறிந்து கொள்வோம் மனு ஸ்மிருதி.

யார் த்விஜன் (இரு பிறப்பாளர்கள்)?

வைசிய தொழிலோ, க்ஷத்ரிய தொழிலோ, பிராம்மண தொழிலோ செய்வதற்கு முன் - பூணூல் அணிந்து, காயத்ரீ உபதேசம் பெற்று, வேதம் கற்பவனே (த்விஜன்) என்று அழைக்கப்படுகிறார்கள்.


த்விஜர்களுக்காக சொல்லப்பட்ட தர்ம சாஸ்திரம் (நீதி நூல்) தெரிந்து கொள்வோம்..


பிறப்பால் அனைவரும் சூத்திரனே (Employee/கொடுத்த வேலை செய்வதற்காக பிறந்தோம்).


शूद्रेण हि समस्तावद् यावद् वेदे न जायते ॥

- மனு ஸ்மிருதி

உபநயனமாகி (பூணூல்) வேதம் கற்றுக்கொள்ளாத வரை, அனைவரும் சூத்திரனே (employee)


வைஸ்ய தொழில் செய்யவோ

வேதம் ஓதி, யாகங்கள் செய்து, வேத தர்மமாக ப்ரம்ம விசாரம் செய்யவோ, 

நாட்டை காக்கவோ செல்பவர்கள் அனைவரும, பூணூல் அணிந்த கொண்டார்கள். 

கட்டுப்பாடுகள் அதிகம் இல்லாத சூத்திர வர்ணத்தை விட்டு, வேறு வர்ணம் செல்வதால், இவர்கள் இரு பிறப்பாளர்கள் என்றும் த்விஜர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.


Employee (சூத்திரன்) தன் நேரத்தை முதலாளிக்கு (employer) கொடுத்து சம்பளம் பெறுகிறான்.

வேலை கொடுப்பவன் (employer) கையில் சூத்திரனின் நேரம் கட்டுப்பட்டு இருப்பதால், சூத்திரனுக்கு, மனு எந்த ஒரு கடினமான சட்டத்தையும் விதிக்கவே இல்லை. 

மிகுந்த சுதந்திரம் பெண்களுக்கும், சூத்திரனுக்கும் கொடுக்கிறார்


கடுமையான வாழ்க்கை முறையை,/சட்டத்தை இராணுவ, காவல்துறை, வியாபார, வைதீக, அரசியல், நீதி துறையில் உள்ளவர்களுக்கே  விதிக்கிறார்.


பிராம்மண வர்ணத்தில் இன்று MP&MLAs, judge போன்றவர்கள் க்ஷத்ரிய, வைசிய, சூத்திரர்களுக்கு சட்டம் இயற்றுகின்றனர்.


க்ஷத்ரிய வர்ணத்தில் இன்று போலீஸ், ராணுவம் போன்றவர்கள் இருக்கின்றனர்.


வைஸ்ய வர்ணத்தில் இன்றும் சிறு/பெரு/சுய தொழில் நடத்துபவர்கள் பலர் உள்ளனர்.


இவர்களுக்கு விதிக்கப்பட்ட கடினமான சட்டங்களை இனி பார்ப்போம்.


இந்த 'கடுமையான சட்டங்கள் எதுவும் சூத்திரனுக்கும் இல்லை. பெண்களுக்கும் இல்லை' என்ற கவனத்தோடு படிக்கும் பொழுதே, "சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் ஹிந்து மதத்தில் (சனாதன தர்மத்தி்ல்) கொடுக்கப்பட்ட சுதந்திரம் என்ன?" என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும்

பாகம் 2

यो अवमन्येत ते मूले हेतु शास्त्र आश्रयाद् द्विजः ।

स साधुभि: बहिष्कार्यो नास्तिको वेद-निन्दकः ॥

- மனு ஸ்ம்ருதி 

மனிதனுக்கு தர்மம் (நல்லது) எது? என்று நமக்கு எடுத்து சொல்லும் ஸ்ருதிகளையும் (வேதம்), ஸ்ம்ருதிகளையும் (தர்ம சாஸ்திரம்) எந்த இரு பிறப்பாளன் என்ற த்விஜன் அவமானப்படுத்தி பேசுகிறானோ, அப்படிப்பட்டவனை நாத்தீகனை போல கருதி, சாதுக்களாகிய மற்றவர்கள் அருகில் சேர்த்து கொள்ள கூடாது.


एतान् द्विजातयो देशान् संश्रयेरन् प्रयत्नतः ।

शूद्रस्तु यस्मिन् कस्मिन् वा निवसेद् वृत्ति कर्शितः ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், முயற்சி செய்து யாகம் செய்வதற்கு ஏற்ற மான்கள் சஞ்சரிக்கும் பிரதேசங்களில் வாழ வேண்டும். சூத்திர வர்ணத்தில் இருப்பவர்கள் (In Today's world, Employees are in Sudra Varna) வேலையில் இருப்பதால், தொழில் நிமித்தமாக எந்த தேசத்திலும் வசிக்கலாம். கட்டுப்பாடு இல்லை 


वैदिकैः कर्मभिः पुण्यैर्निषेकादिर्द्विजन्मनाम् ।

कार्यः शरीरसंस्कारः पावनः प्रेत्य चैह च ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதிலிருந்தே வேத முறைப்படி (பும்ஸவனம் முதல்...) வைதீக காரியங்களை செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதால், மனத்தூய்மை அவர்களுக்கு இருக்கும். பரலோக வாழ்வுக்கு தேவையான புண்ணியத்தையும் அடைவார்கள்.

गार्भै: होमै: जातकर्म चौड मौञ्जी निबन्धनैः ।

बैजिकं गार्भिकं चैनं द्विजानामपमृज्यते ॥

- மனு ஸ்ம்ருதி

கர்ப்பத்தில் இருக்கும் போதே செய்ய வேண்டிய வேத ஹோமங்கள் (பும்ஸவனம்), பிறகு ஜாதகர்மா, சவுலம், மௌஞ்ஜீ-பந்தனம், உபநயனம் (பூணூல்) போன்ற சடங்குகள் செய்து கொள்ள வேண்டும். பெற்றோரால் ஏற்பட்ட பீஜ-தோஷம், கர்ப்பவாஸ தோஷம் போன்றவைகள், இதன் மூலம்  இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்களுக்கு நீங்கி விடும்,


चूडाकर्म द्विजातीनां सर्वेषाम् एव धर्मतः ।

प्रथमे अब्दे तृतीये वा कर्तव्यं श्रुति चोदनात् ॥

- மனு ஸ்ம்ருதி

"சூடா-கர்மா" என்ற குடுமி வைக்கும் சடங்கை இரு பிறப்பாளர்களார்கள் என்ற த்விஜர்கள் முதல் ஆண்டோ, அல்லது 3ஆம் ஆண்டிலோ செய்ய வேண்டும் அல்லது அவரவர் வழக்கப்படி செய்து கொள்ள வேண்டும்.


गर्भा अष्टमे अब्दे कुर्वीत

ब्राह्मणस्य उपनायनम् ।

गर्भादे् एकादशे राज्ञो 

गर्भात् तु द्वादशे विशः ॥

- மனு ஸ்ம்ருதி

பிராம்மண வர்ணத்தில் (MLA/MP) த்விஜர்களுக்கு 8வது வயதிலும், க்ஷத்ரிய வர்ணத்தில் (defence) த்விஜர்களுக்கு 11வது வயதிலும், வைஸ்ய வர்ணத்தில் (businessman) த்விஜர்களுக்கு 12வது வயதிலும், உபநயனம் /பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்.


भवत्पूर्वं चरेद् भैक्षम् उपनीतो द्विजोत्तमः ।

भवन्मध्यं तु राजन्यो वैश्यस्तु भवद् उत्तरम् ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள்,

பிரம்மச்சாரியாக பிராம்மண வர்ணத்தில் இருந்தால், "பவதி பிக்ஷாம் தேஹி" என்றும்,

பிரம்மச்சாரியாக க்ஷத்ரிய வர்ணத்தில் இருந்தால், "பிக்ஷாம் பவதி தேஹி" என்றும்,

பிரம்மச்சாரியாக வைஸ்ய வர்ணத்தில் இருந்தால், "பிக்ஷாம் தேஹி பவதி" என்று கூறி பிக்ஷை எடுத்து சாப்பிட வேண்டும்.


उपस्पृश्य द्विजो नित्यम् अन्नमद्यात् समाहितः ।

भुक्त्वा च: उपस्पृशेत् सम्यगद्भिः खानि च संस्पृशेत् ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், 3 முறை ஜலம் கையில் எடுத்து ஆசமனம் செய்த (அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று சொல்லி குடித்த) பிறகே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு, கை கால்களை அலம்பி, வாய் கொப்பளிக்க வேண்டும். முறைப்படி ஆசமனம் செய்து, ஜலத்தால் இந்திரியங்களை துடைத்து கொள்ள வேண்டும்.

उद्धृते दक्षिणे पाणाव् उपवीती उच्यते द्विजः ।

सव्ये प्राचीनावीती निवीती कण्ठसज्जने ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள் பூணூலை வலது தோள் வழியாக அணிந்து இருக்கும் போது "உபவீதம்" என்று பெயர். இடது தோள் வழியாக அணிந்து இருக்கும் போது "ப்ராசீனாவீதீ" என்று பெயர். கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டால், "நிவீதி" என்று பெயர்.


सहस्र कृत्वस्त्वभ्यस्य 

बहि: एतत् त्रिकं द्विजः ।

महतो अपि एनसो मासात् 

त्वचैवाहि: विमुच्यते ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், சந்தியா காலத்திலும், மற்ற சமயங்களிலும் கிராமத்துக்கு வெளியே தனிமையில் இருந்து, ஓம் என்ற ஓங்காரமும், அதனோடு வ்யாஹ்ருதியும் (பூ புவ ஸுவ), அதனோடு காயத்ரீ மந்திரத்தையும் சேர்த்து, ஒரு மாத காலம் தினமும் 1000 முறை சொல்லி வந்தால், பாம்பு தன் சட்டையை கழட்டி போடுவது போல, மஹா பாபங்களிலிருந்து விடுபடலாம்.


न तिष्ठति तु यः पूर्वां नौपास्ते यश्च पश्चिमाम् ।

स शूद्रवद् बहिष्कार्यः सर्वस्माद् द्विजकर्मणः ॥ 

- மனு ஸ்ம்ருதி

த்விஜர்கள் என்ற இரட்டை பிறப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட  இந்த கட்டுப்பாடுகள் எதுவும் சூத்திரனுக்கு (employee)  கிடையாது. காலையில் சந்தியாவந்தனம், மாலையில் சந்தியாவந்தனம் செய்யாத த்விஜர்கள் என்ற இரட்டை பிறப்பாளர்களை, சூத்திரன் என்று கருதி, த்விஜர்களுக்கு விதிக்கப்பட்ட  காரியங்களிலிருந்து விலக்க வேண்டும்.


अग्नीन्धनं भैक्षचर्यामधःशय्यां गुरोर्हितम् ।

आ समावर्तनात् कुर्यात् कृतोपनयनो द्विजः ॥

- மனு ஸ்ம்ருதி

இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், கல்யாணம் ஆகி ஸமாவர்த்தன ஸ்நானம் செய்து கொள்ளும் வரை, அக்னி ஹோத்திரம் செய்து கொண்டு, பிக்ஷை வாங்கி சாப்பிட்டு, உயரமான படுக்கையில் படுக்காமல், குருவுக்கு நன்மை தரும் செயல்களே செய்து கொண்டு இருக்க வேண்டும் 


(குருகுலத்தில் பாடம் படித்து விட்டு, அவருக்கு தக்ஷிணை கொடுத்து விட்டு, திரும்பி வந்து, விவாகம் செய்து கொள்ளும் போது, முதல் நாளோ, விவாக நாளன்றோ ஸமாவர்த்தனம் என்ற வேதோக்தமான ஸ்நான காரியங்கள் செய்ய வேண்டும்.  இப்படி சமாவர்த்தனம்  ஆன பிறகு, அன்றிலிருந்து பஞ்சகஜம் கட்டி கொண்டு, இரண்டு பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். ஸமாவர்த்தனம் என்பது ஒரு "ஸ்நான கிரியை". கல்யாணம் ஆகி, ஸமாவர்த்தனம் ஆன பிறகு, இரு பிறப்பாளன் என்ற த்விஜன் "ஸ்நாதகன்" என்று பெயர் பெறுகிறான்)

उपनीय तु यः शिष्यं वेदम् अध्यापयेद् द्विजः ।

सकल्पं सरहस्यं च तमाचार्यं प्रचक्षते ॥

- மனு ஸ்ம்ருதி

த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளனுக்கு, உபநயனம் செய்து வைத்து, வேதங்களை அத்யயனம் செய்து வைத்து, ஒழுக்கத்தை போதித்து, தானும் ஒழுக்கத்தில் வாழ்பவர் "ஆசார்யன்" என்ற அழைக்கப்படுகிறார்.


नारुन्तुदः स्यादार्तोऽपि 

न परद्रोहकर्मधीः ।

ययाऽस्योद्विजते वाचा 

नालोक्यां तामुदीरयेत् ॥ 

- மனு ஸ்ம்ருதி

த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன், தான் கஷ்டத்தில் இருந்தாலும், பிறர் மனம் நோக பேச கூடாது. பிறருக்கு துரோகம் விளைவிக்க கூடிய காரியத்தை நினைக்க கூட கூடாது. எந்த வார்த்தை பேசினால் அது மற்றவருக்கு பயத்தை தருமோ, அதை பேச கூடாது.


अनेन क्रमयोगेन संस्कृत आत्मा द्विजः शनैः ।

गुरौ वसन् सञ्चिनुयाद् ब्रह्माधिगमिकं तपः ॥

- மனு ஸ்மிருதி

இதுவரை சொல்லப்பட்ட பல விஷயங்களை, ஒரு கர்ம யோகி போல த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) தன் குருவிடம் வசிக்கும் போது கடைபிடித்து கொண்டு இருக்க  வேண்டும்.


तपोविशेषै: विविधै: वृत्तैश्च विधिचोदितैः ।

वेदः कृत्स्नो अधिगन्तव्यः सरहस्यो द्विजन्मना ॥

- மனு ஸ்மிருதி

பிரம்மச்சாரியாக இருக்கும் த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) இங்கு சொல்லப்பட்ட நியமங்களோடு (தபம்), விரதங்களை எல்லாம் கடைபிடித்துக்கொண்டு, வேதங்களை, உபநிஷத்துக்களை கற்க வேண்டும்.


वेदम् एव सदा अभ्यस्येत् तपस्तप्यन् द्विजोत्तमः ।

वेद अभ्यासो हि विप्रस्य तपः परम् इह उच्यते ॥

- மனு ஸ்மிருதி

த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) எப்போதும் வேதத்தை அத்யயனம் செய்ய வேண்டும். தபஸ்வியாக இருக்க வேண்டும். த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளனில் பிரம்மச்சாரியாக இருக்கும் விப்ரனுக்கு (வேத பிராம்மணன்) வேதம் ஓதுதலே கடமை. அதாவது அவனுக்கு வியாபாரம், அஸ்திரம் போன்றவை கற்றாலும் அதில் ஈடுபட அனுமதி இல்லை.


आ हैव स नखाग्रेभ्यः परमं तप्यते तपः ।

यः स्रग्व्यपि द्विजो अधीते स्वाध्यायं शक्तितो अन्वहम् ॥

- மனு ஸ்மிருதி

த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன், தனது பிரம்மச்சர்ய வ்ரதம் முடிந்த பிறகும், தொடர்ந்து வேதத்தை தினமும் ஓதிகொண்டு இருந்தால், தலை முதல் கால் வரை தவம் செய்தவனாகிறான்.


यो अनधीत्य द्विजो वेदमन्यत्र कुरुते श्रमम् ।

स जीवन् एव शूद्रत्वम् आशु गच्छति सान्वयः ॥

- மனு ஸ்மிருதி

வேதம் ஓதாமல், மற்ற சாஸ்திரங்களை படிக்கும் த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) சூத்திரனாகிறான் (employee). மேலும் அவன் வம்சத்தில் உள்ளவர்களையும் சூத்திரனாக்குகிறான்.


मातु: अग्रे अधिजननं द्वितीयं मौञ्जि-बन्धने ।

तृतीयं यज्ञ-दीक्षायां द्विजस्य श्रुतिचोदनात् ॥

- மனு ஸ்மிருதி

த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளனுக்கு (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) 3 பிறப்புகள் ஏற்படுகிறது. தாயிடமிருந்து பிறந்த போது ஒரு பிறப்பு. உபநயனம் ஆன பிறகு, 2வது பிறப்பு. யக்ஞம் செய்யும் போது 3வது பிறப்பு ஏற்படுகிறது.

स्वप्ने सिक्त्वा ब्रह्मचारी द्विजः शुक्रम् आकामतः ।

स्नात्वा अर्कम: च इत्वा त्रिः पुनर्मामित्यृचं जपेत् ॥

- மனு ஸ்மிருதி


காம எண்ணம் இல்லாமல், கனவில் எதேச்சையாக ரேதஸ் வெளிப்பட்டு விட்டால், மறுநாள் பிரம்மச்சாரியாக இருக்கும் த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன்  காலையில் நீராடி, சூரிய பகவானை பூஜித்து, "புனர்மா" என்ற ரிக்கை (வேத மந்திரம்) 3 முறை ஜபிக்க வேண்டும்.


பாகம் 12

यथोक्तानि अपि कर्माणि परिहाय द्विजोत्तमः ।

आत्मज्ञाने शमे च स्याद् वेदाभ्यासे च यत्नवान् ॥

- மனு ஸ்மிருதி

இரட்டை பிறப்பாளன் என்ற த்விஜோத்தமர்கள் (பிராம்மண, வைசிய, க்ஷத்ரிய) தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை விட்டாவது, ஆத்ம ஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டும். வேதத்தை ஓதுவதாலேயே ஆத்ம ஞானம் ஏற்படும்.


एतद् हि जन्म साफल्यं ब्राह्मणस्य विशेषतः ।

प्राप्यैतत् कृतकृत्यो हि द्विजो भवति नान्यथा ॥

- மனு ஸ்மிருதி

ப்ராம்மண வர்ணத்தில் இருப்பவன், பிறவி எடுத்த பலனை அடைய வேதம் ஓதுவதே வழியாகும். இதுவே மற்ற இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்களான க்ஷத்ரியர்களுக்கும், வைஸ்யர்களுக்கும் வழி.


एको अपि वेदविद् धर्मं यं व्यवस्येद् द्विजोत्तमः ।

स विज्ञेयः परो धर्मो न अज्ञानाम् उदितो अयुतैः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தை நன்கு அறிந்தவன் ஒருவன் மட்டுமே இருந்தாலும், அந்த இரு பிறப்பாளன் என்ற த்விஜனிடமே தர்மம் எது? என்று கேட்டு சந்தேகத்தை தீர்த்து கொள்ள வேண்டும். வேதமோ, சாஸ்திரமோ அறியாத பல பேர் சேர்ந்து கொண்டு "இது தான் தர்மம்" என்று சொன்னாலும் ஏற்கக்கூடாது.

Saturday 25 March 2023

தமிழர்களுக்கும் மகாபாரதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? மலயத்வஜ பாண்டிய வம்சம் எப்படி அர்ஜுனனோடு உறவு கொண்டது? அறிவோம் மகாபாரதம்

What is the connection between tamil people (Pandiya and chola) in mahabharat?

In 3 chapter, we see  this connection.
Also we see that, from 3102BCE Mahabharata period, pandya kings are Arjuna lineage.

1st when Arjuna goes for theertha yatra,
2nd sahadeva when he goes for rajasuya yagya,
3rd Arjuna goes again for aswamedha yaga where he gets killed by his son babruvahana and gets life back from Udupi another wife.

பாண்டிய அரசன் அர்ஜுனனின் மகன் என்றும்,
தமிழர்கள் "தமிழ் மொழி பேசினார்கள்" என்றும் மகாபாரதத்தில் காண்கிறோம்.

நம் பாண்டிய அரச வம்சமே, அர்ஜுனன் வம்சம் என்று தெரிகிறது.

மஹாபாரத ஸ்லோகத்துடன், அர்த்தம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது

1.
அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தில் (old Delhi) இருந்து தீர்த்த யாத்திரையாக 12+1 மாதங்கள் செல்கிறான்.

அப்பொழுது, பாண்டிய தேசத்தில், மணலூர் வருகிறான். அப்பொழுது சித்ரவாகனன் என்ற பாண்டிய அரசன், தன் பெண்ணை (சித்ராங்கதை) நிபந்தனை பேரில் திருமணம் அர்ஜுனனுக்கு செய்து முடிக்கிறான்.
ஆதி பர்வம், 61, 235 அத்தியாயம்
https://www.proudhindudharma.com/2022/10/Pandya-king-dynasty-arjuna.html?m=1

2.
யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்ய முடிவு செய்த போது, சகாதேவன் தமிழகம் வருகிறார்.
இங்கு, சோழர்களை முதலில் பார்க்கிறான். பிறகு பாண்டிய தேசம் செல்கிறான். இவர்கள் தமிழர்கள், தமிழ் மொழி பேசினார்கள் என்று வியாசர் சொல்கிறார். தன் சகோதரனின் மனைவியும், அவன் பிள்ளை பப்ருவாகனனும் இருப்பதால், மலயத்வஜ அரசன் பரம்பரையில் வந்த சித்ரவாகனன் அரண்மனைக்கு வந்து பார்க்கிறான். அர்ஜுனன் பிள்ளைக்கு பொன்னும் மணியும் தருகிறான். யாகத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறான்.
சபா பர்வம், அத்தியாயம் 33
https://www.proudhindudharma.com/2022/08/Sahadeva-visit-tamilnadu-and-chitrangada.html?m=1

3.
போர் முடிந்த பிறகு, அஸ்வமேத யாகம் செய்ய யுதிஷ்டிரர் முடிவு செய்கிறார்.
அப்போது, அர்ஜுனன் பாண்டிய தேசம் வருகிறான்.
பாண்டிய மன்னனான தன் மகனையும், தமிழ் பெண்ணான சித்ராங்கதையையும் பார்கிறான்.
அஸ்வமேத பர்வம், அத்தியாயம் 79
https://www.proudhindudharma.com/2023/01/arjuna-killed-by-pandiya-king.html?m=1

Monday 13 March 2023

ஆதி தமிழன் யார்? யார் ஆதிகுடி தமிழன்? தமிழன் வேத வழிபாடு செய்தானா? தெரிந்து கொள்வோம்.. பரிபாடல், திருமுருகாற்றுப்படை, புறநானூறு, மதுரை காஞ்சி, பதிற்றுபத்து, பெரும்பாணாற்றுப்படை என்ன சொல்கிறது?

தமிழன் வேத வழிபாடு செய்தானா? ஆதி தமிழன் யார்? யார் ஆதிகுடி தமிழன்?

சங்கத்தமிழும், வேதமும்.

"பரிபாடல்திருமுருகாற்றுப்படை, புறநானூறு, மதுரை காஞ்சி, பதிற்றுபத்து, பெரும்பாணாற்றுப்படை" போன்ற 6 தமிழ் இலக்கியங்களில் இதற்கான பதில் நமக்கு கிடைக்கிறது.

வேதத்தில் 'இடைச்சொறுகுகள் இருக்ககூடாது' என்பதாலும், 'உச்சரிப்பு ஸ்வரம் மாற கூடாது' என்பதாலும், குரு தன் வாயால் சொல்ல, அதை கேட்டு, சிஷ்யர்கள் திரும்ப திரும்ப சொல்லி மனப்பாடம் செய்தனர்.

'வாய்மொழி'யாகவே வேதம் ஓதப்பட்டது.

அந்த வேதத்தையே, "மாயா வாய்மொழி" என்று தமிழில் 'பரிபாடல்' சொல்கிறது.

திருமாலிடமிருந்து தோன்றிப் பரந்த பொருள்கள்

மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து:

'வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ' என மொழியுமால், அந்தணர் அரு மறை

- பரிபாடல்

சங்க தமிழான பரிபாடல் சொல்லும் அர்த்தம் இதோ:
"வாய்மொழி (4 வேதம்) நூல் தந்தவன்.
வாய்மொழி என்னும் ஓடையில் மலர்ந்தது தாமரை.
தாமரையில் பிறந்தவன் பிரம்ம தேவன்.
பிரம்மனின் தந்தை நீ என்று அந்தணர் வேதம் சொல்கிறது
" என்று பரிபாடல் வேதத்தை பற்றியும், பிரம்ம தேவன் தாமரையில் உண்டானதை பற்றியும் சொல்கிறது.

வேதம் - எழுத்து வடிவில் இல்லாமல், குரு சொல்ல, அதை  சிஷ்யர்கள் கவனத்துடன் காதால் கேட்டே மனப்பாடம் செய்ததால், "கேள்வி" என்றும் வேதத்தை பரிபாடல் தமிழில் சொல்கிறது.


வேதத்தை, "கேள்வி"க்கு ஈடாக "ஸ்ருதி" என்று சமஸ்கிருதமும், சொல்கிறது.

தோஷமற்ற நூல் வேதம் ("கெடு இல் கேள்வி") என்று வேதத்துக்கு மேலும் சான்றிதழ் கொடுக்கிறது பரிபாடல்.

ரிக் வேதம், "நித்யா வாக்" (இறப்பற்ற வேதம்) என்றும் வேதத்தை சொல்கிறது.

"அழியாத வேதம், வெளியோட்டமாக கர்மாவை செய்ய சொல்வது போல தோன்றினாலும், பரமாத்மாவையே துதிக்கிறது" என்று அறிகிறோம்.

எப்படி மரியாதை தெரிந்த பெண், அன்புள்ள தன் கணவன் பெயரையோ, அவரை பற்றியோ தயங்கி தயங்கி பேசுவாளோ, அப்படியே நேரடியாக பரமாத்மாவை பற்றி பேச தயங்கும் வேதம், பரமாத்மாவை மறைத்து மறைத்து பேசுவதால், வேதத்தை "மறை" என்றும் சொல்கிறது தமிழ் மொழி.

தத்துவங்களை மறைத்து பேசுவதால், வேதத்தை "மறை" என்று அழகாக அழைக்கிறது தமிழ் மொழி.

பரிபாடல், வேதம் என்ற சொல்லுக்கு ஈடான "மறை" என்ற சொல்லையும் பயன்படுத்துகிறது.

"வேதத்தில் வேள்விகள் சொல்லப்பட்டு இருக்கிறது" என்று புறநானூறு சொல்கிறது.

வேத வேள்வி

தொழில் முடித்ததுவும்

புறநானூறு

"வேதத்தில் சொல்லப்பட்ட விதிப்படி வேள்வியை செய்ய வேண்டும்என்று 'புறநானூறு' சொல்கிறது

அதேபோல, "வேதத்தை அந்தணர்கள் எப்படி ஓதுவார்கள்?" என்று 'மதுரைகாஞ்சி' சொல்கிறது.

தாதுண் தும்பி போது
முரன்றாங்கு ஒதல் 
அந்தணர் வேதம் பாட 
மதுரைகாஞ்சி

 "வண்டு ரீங்காரம் செய்வது போல (in resonance), அந்தணர்கள் வேதம் ஓதுகிறார்கள்" என்று சொல்கிறது மதுரை காஞ்சி

சங்க இலக்கியமான மதுரை காஞ்சி சொல்வதை போல தான், "பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியும், இன்றும் தமிழ் அந்தணர்கள் வேதத்தை ஓதுகிறார்கள்" என்று பார்க்கிறோம். 

இன்று இருக்கும் வைதீக அந்தணர்கள், சங்க இலக்கியத்தில் சொல்வது போலவே இன்றுவரை உள்ளனர் என்று பார்க்கிறோம்..

வாழ்க தமிழ் பழங்குடி அந்தணர்கள்.

"உலக வாழ்க்கை, சம்பாத்தியம் போன்றவற்றில் ஈடுபடாமல், வேதத்தை ஓதும் பெரும் பொறுப்பை அந்தண சமூகம் ஏற்று இருந்தது" என்ற தொடர்பை சங்க இலக்கியங்கள் 'அந்தணர் அருமறை', 'அந்தணர் வேதம்' போன்ற வாக்குகள் மூலம், நமக்கு  சொல்கிறது.

அந்தணர்கள் யார்?
அந்தணர்கள் பண்பாடு எப்படி இருந்தது?

என்று சங்க இலக்கியமே சொல்கிறது.


இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது 

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி

அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு

ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்

புலராக் காழகம் புலர் உடீஇ

உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து

ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி

நாஇயல் மருங்கில் நவிலப் பாடி

விரைஉறு நறுமலர் ஏந்தி பெரிது உவந்து

ஏரகத்து உறைதலும் உரியன், அதான்று

திருமுருகாற்றுப்படை

சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையில் இதற்கான பதில் வருகிறது…

இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது…

- திருமுருகாற்றுப்படை
என்று தொடங்கும் பாடலில், 'அந்தணர்களுக்கு 6 கடமைகள் உண்டு' என்று சொல்கிறது.

வேதத்தில் உள்ள தர்ம சாஸ்திரம் அந்தணர்களுக்கு (ப்ராம்மணர்களுக்கு) சொல்லும் அதே 6 கடமைகளை, சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையும் சொல்கிறது.

ந்தணர்களின் 6 கடமைகள் என்ன?:

  • ஓதல் (அத்யயனம் - வேதத்தை கற்பது),
  • ஓதுவித்தல் (அத்யாபனம் - வேதத்தை கற்று வைத்தல்) , 
  • வேட்டல் (யஜனம் - வேள்வியை நடத்துதல்) ,
  • வேட்பித்தல் (யாஜனம் -வேள்வியை மற்றவருக்கு நடப்பித்தல்),
  • ஏற்றல் (ப்ரதிகிரஹம் - தானத்தை ஏற்றுக்கொள்ளுதல்),
  • ஈதல் (தானம் - தானம் கொடுத்தல்),
ஆகிய "6ம்  அந்தணர்கள் விடக்கூடாத கடமைகள்" என்று சங்க இலக்கியம், தர்ம சாஸ்திரம் சொன்னபடியே சொல்கிறது.

சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையில்
'6 கடமைகள் என்று தானே சொல்லி உள்ளது.  அது தர்ம சாஸ்திரம் சொன்ன இந்த 6 கடமையை தான் சொல்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?'
என்ற கேள்விக்கு பதிலை, மற்றொரு சங்க இலக்கியமான, பதிற்றுபத்து சொல்கிறது.

ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், எற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர்
பதிற்றுபத்து

இதில் தெளிவாக அந்தணர்களின் 6 கடமைகள் என்னென்ன? என்று பதில் சொல்கிறது.

மேலும்,
"இருவர் சுட்டிய" என்ற பதம் மூலம், 'இந்த அந்தணனை, பெற்ற தாய்-தந்தையர்கள் தூய்மையான நடத்தை உடையவர்களாக இருந்தார்கள்' என்று கொண்டாடுகிறது 
திருமுருகாற்றுப்படை

பழங்குடியினருக்கு பல சலுகைகளை இன்று அரசாங்கம் கொடுக்கிறது.

ஆனால், உண்மையான தமிழ் பழங்குடியான பிராம்மணர்களுக்கு பழங்குடியினருக்கான சலுகைகள் இன்றைய அரசாங்கம் கொடுக்கவில்லை. 

சங்க இலக்கியங்களை இவர்கள் படித்ததாக தெரியவில்லை.

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை, "அந்தணர்களே தமிழகத்தில் இருந்த பழங்குடியினர் (தொல்குடி)" என்று தெளிவாக சொல்கிறது. 

அதிலும்,
இந்த அந்தணர்கள் பல ரகங்களில் இருக்கிறார்கள். (ஸாம வேதம் அறிந்தவர், ரிக் வேதம் அறிந்தவர், யஜுர் வேதம் அறிந்தவர், அதர்வண வேதம் அறிந்தவர், இரண்டு வேதங்கள் (த்விவேதி) அறிந்தவர், மூன்று வேதங்கள் ஒரு சேர அறிந்தவர் (த்ரிவேதி), நான்கு வேதமும் அறிந்தவர் (சதுர்வேதி)) என்று சொல்கிறது.

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை,  “பலவேறு தொல்குடி அந்தணர்கள் இருந்தார்கள்” என்று தெளிவாக சொல்கிறது.

இருமூன்று எய்திய இயல்பினில் வழாஅது

இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி

- திருமுருகாற்றுப்படை

இந்த பாடலில்,
"அந்தணர்களுக்கு 6 கடமைகள் உண்டு.
அவர்கள் பெற்றோர்கள் உயர்ந்த பண்புகள் கொண்டு இருந்தார்கள்.
இந்த அந்தணர்கள் ஆதியில் இருந்தே இந்த தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தொல்குடியினர்"
என்று சான்றிதழ் கொடுக்கிறது.

வாழ்க திருமுருகாற்றுப்படை..


இதிலிருந்தே ஆதி தமிழன் யார்? யார் ஆதிகுடி? என்று கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடுகிறது.

மேலும், "முத்தீ" என்று சொல்லுமிடத்தில், இந்த அந்தணர்கள், 'மூன்று அக்னிகுண்டத்தில் வேள்வி தீயை வளர்ப்பவர்கள்' என்றும் திருமுருகாற்றுப்படை சொல்கிறது.

யாகம் செய்ய நாற்சதுரம், முக்கோணம், வில் வடிவம் என்ற அமைப்பில் அக்னிகுண்டங்கள் அமைத்து, கார்ஹ-பத்தியம், ஆகவனீயம், தக்ஷிணாக்னியம் என்ற மூன்று வேள்வி தீ, அக்னிஹோத்ரியான  பிராம்மணர்கள் வீட்டில் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். இதையே 'முத்தீ' என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுகிறது.

இதே சொல்லை, "மூத்தீ மறையாவான்" என்று இரண்டாம் திருவந்தாதியில், பூதத்தாழ்வார் பயன்படுத்துகிறார் என்று பார்க்கலாம்.


மேலும், சங்க இலக்கியமான "திருமுருகாற்றுப்படை", "இருபிறப்பாளர்" என்று சொல்லுமிடத்தில், 'அந்தணர்கள், இரு முறை பிறக்கிறார்கள்' என்றும் சொல்கிறது.

பிராம்மண குழந்தைகள், "காயத்ரி மந்த்ர" உபதேசம் பெறும் போது, "இரண்டாவது பிறவி கொள்கிறார்கள்" என்று சொல்வதுண்டு.
இதையே சங்க இலக்கியமும் நமக்கு ஊர்ஜித படுத்துகிறது.

இது மட்டுமல்ல,
சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை, "மூன்று புரி நுண்ஞாண்" என்று சொல்லும் போது, "இந்த அந்தணர்கள், மூன்று நூல்கள் சேர்ந்த பூணூலை அணிந்து உள்ளார்கள்" என்று அந்தணர்களின் அடையாளத்தை காட்டுகிறது.

மேலும், சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை, "உச்சிக்கூப்பிய கையினர்" என்று சொல்லுமிடத்தில், "இந்த அந்தணர்கள், சுவாமிமலையில் (ஏரகத்து) வீற்று இருக்கும் முருகப்பெருமான் சந்நிதியில் கையை தலைக்கு மேல் உயர்த்தி நமஸ்கரித்து நிற்கின்றனர்" என்று அவர்களின் முருக பக்தியை காட்டுகிறது.

அந்தணர்கள் கையை தலைக்கு மேலே உயர்த்தி, முருகப்பெருமானை நமஸ்கரித்து கொண்டு மேலும்,

வேத மந்திரங்களை (அருமறைக் கேள்வி) மிகவும் சத்தமாக சொல்லாமல் நாக்கும் வாயும் அசைய, ஜபம் செய்வது போல அழகாக முருகப்பெருமானை நோக்கி பாடினார்கள், என்று "அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி" என்று திருமுருகாற்றுப்படை பாடுகிறது.

மேலும்,

  • அந்தணர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?
  • அவர்கள் வீடு எப்படி  இருந்தது?
என்று மற்றொரு சங்க இலக்கியமான "பெரும்பாணாற்றுப்படை" நமக்கு சொல்கிறது.

செழுங் கன்று யாத்த சிறுதாட் பந்தர்

என்று சொல்லும் போது, "இந்த அந்தணர்கள் வீட்டில் புஷ்டியான கன்றுகள் வீட்டின் வாசலில் சிறு பந்தல் போட்டு நின்று கொண்டிருக்கிறது" என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,
பைஞ்சேறு மெழுகிய 

என்று சொல்லும் போது, "அந்தணர்கள் வீடே, பசுஞ்சாணியால் மெழுகப்பட்டு இருக்கிறது" என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,
படிவ நல்நகர்

என்று சொல்லும் போது, "தெய்வத்துக்கு பூஜைகள் செய்ய ஒரு அறை வைத்து இருக்கிறார்கள்என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,

மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது

என்று சொல்லும் போது, "அந்தணர்கள், கோழி, நாய் வளர்க்க மாட்டார்கள்" என்றும்,

மேலும்
வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும்

என்று சொல்லும் போது,, "அந்த வீட்டில் உள்ள அந்தணர்கள் வேதம் சொல்லி சொல்லி, அந்த வீட்டில் உள்ள கிளிகள் கூட திரும்ப சொல்கிறது" என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,
மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின்

என்று சொல்லும் போது, "வேதத்தை காப்பாற்றி வரும் இந்த அந்தணர்களின் வீட்டுக்கு சென்று பார்த்தால்...."

பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்
வளைக்கை மகடூஉ வயின்அறிந்து அட்ட
சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்

என்று சொல்லும் போது, "மிக பெரிய வானத்தில் ஜொலிக்கும் அருந்ததி நக்ஷத்திரம் போன்ற கற்புக்கரசியான அந்தண பெண், கைகளில் வலைகள் குலுங்க, ராஜ ஹம்சம் என்ற அன்னபறவை பெயர் கொண்ட ராசான்னம் என்ற ஆஹுதிக்கு ஏற்றதான அரிசியை மட்டுமே, பதம் அறிந்து சோறு சமைத்து வைத்து இருக்கிறாள்" என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து
கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர்

என்று சொல்லும் போது, "கருவேப்பிலை, மிளகு கலந்து சமைக்கப்பட்ட காய்கறியோடு, மாவடு ஊறுகாய் தொட்டு கொண்டு, மாதுளம் பழம் சேர்த்த மோர் சாதத்தை அந்தணர்கள் சாப்பிடுகிறார்கள்என்று பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது..

இவ்வாறு, அந்தணர் வீடு எப்படி இருந்தது? அந்தணர் உணவு முறையும் எப்படி இருந்தது? என்ற வர்ணனையை சங்க இலக்கியமான "பெரும்பாணாற்றுப்படை" நமக்கு தெளிவாக  காட்டுகிறது. 

இன்றுவரை பிராம்மணர்களை  "தயிர் சாதம்" என்று கிண்டலாக பேசுகிறார்கள்.
சங்க காலத்தில் ஆரம்பித்து, இன்று வரை இந்த பழக்கத்தை கொண்ட பிராம்மண சமுதாயமே "ஆதிகுடி (பழங்குடி)" என்ற தெரிகிறது.

தமிழ்நாட்டின் "ஆதி குடிமகன் யார்?" என்ற கேள்விக்கு "பிராம்மணனே ஆதிகுடி" என்று சான்று கொடுக்கிறது சங்க இலக்கியங்கள்.

இதை பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய..  pls Listen to Speech of Sri Ranganji -  வேதம் நிறைந்த தமிழ்நாடு....

மேலும்,

"காலையில் கோவிலுக்கு சென்று, எப்படி பக்தியோடு மக்கள் இருந்தார்கள்?" என்று மாணிக்கவாசகர் சொல்கிறார்.

பாடல்:

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் 

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

- திருவெம்பாவை (மாணிக்கவாசக பெருமான்)

அர்த்தம்:

"ஒரு பக்கம் பக்தர்கள், வீணை கொண்டும், யாழ் கொண்டும் இனிய இசை இசைகிறார்கள்

ஒரு பக்கம் பக்தர்கள், ருக் வேத மந்திரங்களை ஓதிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் பக்தர்கள், நிறைய மலர்களை பறித்து, மாலை தொடுத்து கொண்டு காத்து கொண்டு இருக்கிறார்கள்

ஒரு பக்கம் பக்தர்கள், நமஸ்காரம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.  மேலும் சிலர் அன்பின் மிகுதியால் உங்களை தரிசிக்க போகும் ஆனந்தத்தில் கண்ணீர் வடிக்கிறார்கள்.

ஒரு பக்கம் பக்தர்கள், தலை மேல் கை கூப்பி நமஸ்கரித்து கொண்டே காத்து இருக்கிறார்கள்.

திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே ! 

(இவர்களோடு) ஒன்றுமே செய்யாது இருக்கும்,  மாணிக்கவாசகனான  என்னையும் சேர்த்து (ஆண்டு) கொண்டு, இனிய அருள் செய்கின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்வாய்  !"

என்று பக்தி சொட்ட பாடுகிறார், மாணிக்கவாசகர்.

இதன் அர்த்தத்தையும், மேலும் ராமாயணம் பற்றி கேட்கவும், pls Listen to - the explanation:  


Saturday 18 February 2023

குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்? பெயர் அழகாக இருக்கிறது, என்று பெயர் வைக்கலாமா?

குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்?

ஹிந்துக்கள் பெயர் கவர்ச்சியாக இருக்கிறது, என்ற காரணத்தால் மட்டும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில்லை.

எந்த காரியத்தையும் ஆன்மீகத்தோடு இணைத்து செய்யும் ஹிந்துக்கள், குழந்தைகளுக்கு பெயர் வைப்பதையும் காரணத்தோடு தான் செய்கின்றனர்.  

"5 விதமான கடனோடு தான் ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்" என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனும், தேவதைகளுக்கு, பெற்றோருக்கு, ரிஷிகளுக்கு, பரமாத்மாவுக்கு, அனைத்து உயிர்களுக்கும் (ஜீவாத்மா) கடன் படுகிறான்.

இந்த 5 கடனையும்,

  1. தேவ யக்ஞம், 
  2. பித்ரு  யக்ஞம், 
  3. ப்ரம்ம யக்ஞம், 
  4. மனுஷ்ய யக்ஞம், 
  5. பூத யக்ஞம் 

என்ற 5 விதமான யாகங்கள் மூலம் அடைக்க வேண்டும்.


இந்த 5 கடனையும் எந்த மனிதன் அடைக்கிறானோ, அவனே மோக்ஷத்திற்கு தகுதி பெறுகிறான்.

இந்த 5 கடனில் ரிஷி கடனை அடைப்பது எப்படி?

ரிஷிகளுக்கு நாம் எப்படி கடன் பட்டோம்?

  • நாம் எப்படி மனிதனாக வாழ வேண்டும்? 
  • உலகத்தில் எப்படி வாழ்ந்தால் நமக்கு நன்மை? 
  • கிடைத்த பிறவியில் என்ன செய்தால் பரலோகத்துக்கு அடைய முடியும்? 
  • மோக்ஷம் அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? 
  • எது தர்மம் (righteaous)? 
  • எது அதர்மம்? 

என்று நமக்கு தேவையான அனைத்து சாஸ்த்திரத்தையும் ரிஷிகள் நமக்காக எழுதி ஒரு பெரிய அறிவு களஞ்சியத்தை நமக்கு கொடுத்து விட்டார்கள்.


அப்படி ஒரு வழி காட்டுதலை நமக்கு ரிஷிகள் கொடுக்காது போய் இருந்தால், நாம் மிருகம் போல தானே வாழ்ந்து கொண்டு இருப்போம்.

  • இவள் என் மனைவி, 
  • இவர்கள் என் பிள்ளைகள், 
  • இவள் சகோதரி 

என்ற கட்டுப்பாடு இந்த ரிஷிகளின் வழிகாட்டுதலில் தானே நம் வரை வந்து இருக்கிறது. 

  • நாம் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
  • பெற்றோர் தன் மக்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
  • கணவன் எப்படி மனைவியிடம் நடந்து கொள்ள வேண்டும்? 
  • மனைவி கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
  • அரசன் எப்படி மக்களை காப்பாற்ற வேண்டும்? 
  • மக்கள் எப்படி அரசனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 

என்று பல தர்மங்களையும் பல நூல்களாக ரிஷிகள் நமக்கு அள்ளி கொடுத்து விட்டனர்.

  • தர்மம், அதர்மம் இரண்டுக்கும் அப்பாற்பட்ட மோக்ஷத்தையும் எப்படி அடைய வேண்டும்? என்ற பாதையையும், 
  • நமக்கு பக்தியையும், ஞானத்தையும் தரக்கூடிய ப்ரம்ம வித்யை, பகவத் வித்யையும் 

நமக்கு கொடுத்தவர்கள் ரிஷிகள்.


இப்படி எப்படி வாழ வேண்டும்? என்று நமக்கு வழி காட்டிய ரிஷிகளுக்கு நாம் நன்றி செய்ய வேண்டாமா?

மனு, வால்மீகி, வியாசர், ஆழ்வார்கள் அனைவருமே 'ரிஷிகள்' தான்.

4000 பாசுரங்களை கொடுத்த ஆழ்வார்களுக்கு, நாம் என்ன பதில் செய்து விட முடியும்?

அப்படி ஒரு ராம குணத்தை நமக்கு "ராமாயண காவியமாக" நமக்கு கொடுத்த தமிழரான வால்மீகிக்கு (அவதாரம் இடம் : அன்பில்) நாம் என்ன செய்ய முடியும்?


ஆளவந்தார், "பராசர பகவான் இப்படி ஒரு அற்புதமான 'ஸ்ரீ விஷ்ணு புராணம்' கொடுத்தாரே, அவருக்கு நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்?" என்று நினைத்தார். பராசர ரிஷிக்கு நன்றி செய்ய ஆசைப்பட்டார்.

ராமானுஜர் வந்த பொழுது, ஆளவந்தார் பரமபதம் சேர்ந்து விட்டார். 

அப்பொழுது அவரது திருமேனியில் மூன்று விரல்கள் மட்டும் மடிந்து இருந்ததை கண்டு, "ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு பாஷ்யம் செய்வேன்" என்றதும், ஆளவந்தார் திருமேனியில் மடிந்து இருந்த ஒரு விரல் திறந்தது. ஒரு பிள்ளைக்கு பராசரர் என்று பெயர் வைப்பேன் என்றதும் மற்றொரு விரலும் நேரானது.  


இப்படி ஆளவந்தார், பராசரருக்கு கைமாறு செய்ய ஆசைப்பட, ராமானுஜர் அதை நிறைவேற்றி கொடுத்தார். கூரத்தாழ்வார் பிள்ளைக்கு 'பராசரர்' என்று பெயர் வைத்தார்.


அது போல, பாகவதத்தை நமக்கு தந்த சுக ப்ரம்மத்துக்கு நாம் என்ன கைமாறு செய்து விட முடியும்? 

சுக ப்ரம்ம ரிஷி இல்லையென்றால், நமக்கு கிருஷ்ண அவதாரம் என்ன என்றே தெரிந்து இருக்காதே! கிருஷ்ண பக்தியே நமக்கு தெரியாமல் போய் இருக்குமே!


ஆழ்வார்கள் இல்லையென்றால், நமக்கு 108 திவ்ய தேசத்தின் மகிமையும் தெரிந்து இருக்காதே!


இப்படி அள்ளி அள்ளி நமக்கு கொடுத்த ரிஷிகளுக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும்?


நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்? என்று ரிஷிகள் எதிர்பார்க்கவில்லை என்றாலும், நமக்கு ஒரு நன்றி உணர்வு வேண்டாமா?

அந்த நன்றியை காட்டுவதற்காக, தானே ராமானுஜர், 'பராசரர் என்று பெயர் வைத்து காட்டினார்.


ரிஷிகள் நமக்கு கொடுத்த நிதிக்கு, பதில் செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் பெயரையாவது வைக்கலாமே!


அதனால் தானே, நம் குழந்தைகளுக்கு "ராமானுஜன்" என்று பெயர் வைக்கிறோம். "சடகோபன்" என்று பெயர் வைக்கிறோம்.


இந்த பெயரெல்லாம் ஏன் வைக்கிறோம்?

நமக்கு வழிகாட்டியாக இருக்கும் இந்த ரிஷிகளுக்கு, நன்றியை காட்ட தானே நம் குழந்தைகளுக்கு அவர்கள் பெயரை வைக்கிறோம்.

இதன் மூலம் ரிஷி கடனை நாம் அடைக்க முடியும்.


ரிஷிகள் கொடுத்த சாஸ்திரங்களை தினமும் படிப்பதாலும் நாம் அவர்களுக்கு நன்றி செய்து ரிஷி கடனை அடைகிறோம்.


அதே நன்றி உணர்ச்சியால் தான், 

நம் பிள்ளைகளுக்கு தெய்வங்களின் பெயரையும் வைக்கிறோம். இதன் மூலமும் தெய்வ கடனை அடைக்கிறோம்.


அதே நன்றி உணர்ச்சியால் தான், 

நம் பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டியின் பெயரையும் வைக்கிறோம். அவர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு சேவை செய்து கொண்டு, போன பிறகும் திவசம் தர்ப்பணம் போன்ற காரியங்கள் செய்து நன்றியை காட்டி பித்ரு கடனை அடைக்கிறோம்.


இந்த 5 கடனையும் எந்த மனிதன் அடைக்கிறானோ, அவனே மோக்ஷத்திற்கு தகுதி பெறுகிறான்.

Wednesday 11 January 2023

கீழடி ரகசியம்: பாண்டிய மன்னனால் கொல்லப்பட்ட அர்ஜுனன். 5000 வருடம் முன் அன்ன கொடி கொண்டிருந்த பாண்டிய தேசத்துக்கும், அர்ஜுனனுக்கும் உள்ள உறவை அறிவோம்... மஹாபாரதம் அறிவோம்.

பாரத போர் முடிந்தது. யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அஸ்வமேத பர்வம், அத்தியாயம் 79

அர்ஜுனன், அஸ்வமேத யாக குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ, அதை பின் தொடர்ந்து ஒவ்வொரு தேசத்து அரசர்களிடமும் சம்மதத்தை பெற்று பட்டாபிஷேகத்துக்கு அழைத்தார்.


புருஷ ஸ்ரேஷ்டரே, ஜனமேஜயா ! அஸ்வமேத குதிரை தன் இஷ்டத்துக்கு அங்குமிங்கும் சஞ்சரித்து, பாண்டவனான அர்ஜுனன் பின் தொடர, மணலூருக்கு (மேலும் படிக்க -> பாண்டியதேசம்) வந்து சேர்ந்தது.

क्रमेण स हयस्त्वेवं विचरन् पुरुषर्षभ।

मणलूरपते: देशम् उपायात्सह पाण्डवः।।

- மஹாபாரதம் (வியாசர்)

மணலூர் - இன்றைய மதுரைக்கு அருகில் 13கிமி தொலைவில் தான் உள்ளது. அருகில் கீழடி உள்ளது.

5000 வருடம் முன்பு, (மேலும் படிக்க ->) பாண்டிய தேசத்துக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவை நாம் காண்கிறோம். பாண்டிய தேசத்தை 'அர்ஜுனன் மகன் ஆண்டான்' என்பதையும் அறிகிறோம்.

பாண்டிய தேச அரசனான பப்ருவாகனன் தன்னுடைய தந்தை தன் தேசத்து பக்கம் வந்திருப்பதை கேள்விப்பட்டு, பெரியோர்களை, பிராம்மணர்களை  முன்னிட்டு கொண்டு, தன் நகரத்திலிருந்து கை கூப்பி கொண்டு வெளியில் வந்தான்.

श्रुत्वा तु नृपतिः प्राप्तं पितरं बभ्रु-वाहनः।

निर्ययौ विनयेनाथ ब्राह्मणार्यपुरःसरः।।

- மஹாபாரதம் (வியாசர்)


மணலூர் அரசனான பப்ருவாகனன் க்ஷத்ரியனாக இருந்து கொண்டு, இப்படி தன்னை வரவேற்றதை அர்ஜுனன் (தனஞ்செயன்) வெறுத்தார்.

मणलूरेश्वरं त्वेवमुपयातं धनंजयः।

नाभ्य नन्दत्स मेधावी क्षत्र धर्म म् अनुस्मरन्।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே அர்ஜுனன் அவனை பார்த்து, "நீ செய்வது உனக்கு தகுதியா? க்ஷத்ரிய தர்மத்தை விட்டு நிற்கிறாயே!!.   மகனே ! யுதிஷ்டிரருடைய யாக குதிரையை நான் காத்து கொண்டு வந்து இருக்கிறேன். உன்னுடைய தேசத்தின் எல்லையில் வந்திருக்கும் என்னிடம் ஏன் நீ போர் செய்யவில்லை?

க்ஷத்ரிய தர்மத்தை அறிந்தும், இப்படி புத்தி கெட்டு போனாயே! இதற்காக உன்னை நிந்திக்கிறேன்.

யுத்தத்திற்கு வந்திருக்கும் என்னிடம் நல்ல வார்த்தை சொல்லி வரவேற்க வந்துள்ளாயே? இப்படியும் நீ வாழ வேண்டுமா? இதனால் உனக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது?

தீயகுணம் உள்ளவனே ! நான் ஒருவேளை ஆயுதம் இல்லாமல் வந்திருந்தால் நீ செய்த காரியத்தை ஏற்று இருக்கலாம்."என்று கடிந்து கொண்டார் அர்ஜுனன்.

यद् अहं न्यस्त शस्त्र: त्वां आगच्छेयं सुदुर्मते।

प्रक्रियेयं भवेद् युक्ता तावतव नराधम।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போதே! அர்ஜுனன் பேச்சை பொறுக்க முடியாமல், நாக கன்னிகையான உலூபி பூமியை பிளந்து கொண்டு வந்தாள்.

तमेवम् उक्तं भर्त्रा तु विदित्वा पन्नग आत्मजा।

अमृष्यमाणा भित्त्वोर्वीम् उलूपी समुपागमत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

யுத்தத்தை விரும்பும் தகப்பன் ஒருபுறம் நிற்க, மறுபுறம் தலை குனிந்து செய்வதறியாது யோசித்து கொண்டிருக்கும் பிள்ளையை கண்டாள்.

அந்த உலூபி, புத்ரனை நோக்கி, "க்ஷத்ரிய தர்மத்தை அறிந்தவனே! நீ என்னையும் உன் தாய் என்றும், பன்னகனின் மகளுமான உலூபி என்று தெரிந்து கொள்.

மகனே! நான் சொல்வதை கேள். உனக்கு மேலான தர்மத்தை சொல்கிறேன்.

उलूपीं मां निबोध त्वं मातरं पन्नग आत्मजाम्।

कुरुष्व वचनं पुत्र धर्मस्ते भविता परः।।

- மஹாபாரதம் (வியாசர்)

நீ கௌரவ ஸ்ரேஷ்டரும் பகைவரை அடக்குபவரான தனஞ்ஜெயரிடம் போர் செய்.

நீ போர் செய்வதையே அவர் பெரிதும் விரும்புவார். உன்னிடம் பிரியம் காட்டுவார். சந்தேகப்படாதே!என்றாள்.

युध्यस्वैनं कुरुश्रेष्ठं धनंजयम् अरिन्दमम्।।

एवम् एष हि ते प्रीतो भविष्यति न संशयः।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி சொன்னதும், பப்ருவாகனன் யுத்தம் செய்ய மனம் கொண்டான்.

உடனே தங்க மயமான கவசம், தலை கவசம் அணிந்து கொண்டு, பற்பல பாணங்களுடன் தங்க மயமான அன்ன கொடி பறக்கும் தேரில் ஏறினான்.

परम अर्चितमु उच्छ्रित्य ध्वजं हंसं हिरण्मयम्।

प्रययौ पार्थम् उद्दिश्य स राजा बभ्रुवाहनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

உடனேயே, தேர்ச்சி உள்ள தன் சேவகர்களை கொண்டு, யாக குதிரையை அடக்கி பிடித்து விட்டான்.

அஸ்வமேத யாக குதிரையை பிடித்து, கம்பீரமாக தேரில் நிற்கும் தன் மகனை கண்டு, அர்ஜுனன் மனம் மகிழ்ந்தார்.

உடனே தரையில் நின்று கொண்டு போரிடும் அர்ஜுனன், பாம்பின் விஷத்தை போன்று கக்கும் பாணங்களை தொடுத்தார்.

தகப்பனும், மைந்தனும் போர் செய்வது, தேவர்களும் அசுரர்களும் போர் செய்வது போல இருந்தது.

பப்ருவாகனன் சிரித்து கொண்டே, கூர்மையான பானங்களை கொண்டு, அர்ஜுனன் தோளில் அடித்தான்.

அந்த பாணம் எப்படி பாம்பு புற்றுக்குள் நுழையுமோ அது போல அர்ஜுனன் தோளை கிழித்து கொண்டு, பூமிக்கும் நுழைந்தது.


இதனால் நிலை குலைந்த அர்ஜுனன் ஒரு சில நிமிடம் தன் வில்லை பிடித்து கொண்டே மயங்கினார். உடனே தன்னை சுதாரித்து கொண்டு எழுந்து, பப்ருவாகனனை பார்த்து,

"சிறந்த கைகள் உடையவனே! குழந்தாய் ! சித்ராங்கதையின் மகனே!   அருமை. அருமை. மகனே! நீ உன் தர்மத்தில் இருப்பதை கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்தேன். மகனே ! நான் இப்பொழுது உன் மீது பாணங்களை பிரயோகிக்க போகிறேன். யுத்தத்தில் கலங்காமல் போர் செய்" என்றார்.

साधुसाधु महाबाहो वत्स चित्राङ्गदात्मज।

सदृशं कर्म ते दृष्ट्वा प्रीतिमानस्मि पुत्रक।

विमुञ्चाम्येष ते बाणान्पुत्र युद्धे स्थिरो भव।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே, அர்ஜுனன் வஜ்ராயுதத்துக்கும் ஈடாக, பெரும் இடி போன்ற பாணங்களை வர்ஷித்தார். அது அனைத்தையும் பப்ருவாகனன் தன் பாணங்களால் அடித்து இரண்டு மூன்று துண்டாக உடைத்து எறிந்தான்.

உடனே, அர்ஜுனன் தன் பாணங்களால் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு பனை மரம் போன்று உயர்ந்து இருந்த பப்ருவாகனன் தேர் கொடியை அறுத்து சாய்த்தார்.

तस्य पार्थः शरै: दिव्यै र्ध्वजं हेम परिष्कृतम्।

सुवर्णताल प्रतिमं क्षुरेणापाहरद्रथात्।।

- மஹாபாரதம் (வியாசர்)

மேலும், சிரித்து கொண்டே, மிகவும் வேகமுள்ளதும், பெரிய உடல் கொண்ட தேர் குதிரைகளை உயிரற்றதாக ஆக்கினார்.

हयां च अस्य महाकायान् महावेगान् अरिंदम।

चकार राजन् निर्जावान् प्रहसन्निव पाण्डवः।।

- மஹாபாரதம் (வியாசர்)

இதனால் பெரும் கோபம் கொண்ட அரசன் (பப்ருவாகனன்) தேரிலிருந்து கீழ் இறங்கி கடுமையான போர் புரிய தொடங்கினான்.

தன் மகனுடைய வீரத்தை கண்டு ஆனந்தம் அடைந்த இந்திர குமாரனும், பாண்டவனுமான  அர்ஜுனன் தன் மகனை கடுமையாக  தாக்காமல் போர் செய்தார்.

தன் மீது அர்ஜுனன் போடும் பாணங்களால் பெரும் கோபத்துடன் சர்ப்பம் போல பாயும் பானங்களை அர்ஜுனன் மேல் தொடுத்தான்.

இப்படி போர் செய்து கொண்டிருக்கும் போதே, சிறுபிள்ளைத்தனமாக மிகவும் கூர்மையான பாணத்தால் பிதாவான அர்ஜுனனின் மார்பில் பலமாக பப்ருவாகனன் அடித்து விட்டான்.

ततः स बाल्यात् पितरं विव्याध हृदि पत्रिणा।

निशेतेन सुपुङ्खेन बलवद् बभ्रुवाहनः।।

- மஹாபாரதம் (வியாசர்)


மார்பில் பட்ட பாணத்தால், அர்ஜுனன் உயிர் பிரிந்து, பூமியில் விழுந்தார்.

स तेनातिभृशं विद्धः पुत्रेण कुरुनन्दनः।

महीं जगाम मोहार्त: ततो राजन् धनंजयः।।

- மஹாபாரதம் (வியாசர்)

கௌரவர்களில் சிறந்தவனான அந்த வீரன் விழுந்ததை பார்த்த சித்ராங்கதையின் மகனான பப்ருவாகனனும் மயங்கி விழுந்து விட்டான்.

तस्मिन् निपतिते वीरे कौरवाणां धुरंधरे।

सोपि मोहं जगामाथ तत: चित्राङ्गद: सुतः।।

- மஹாபாரதம் (வியாசர்)

சித்ராங்கதை தன்  கணவர் கொல்லப்பட்டும், தன் மகன் விழுந்து கிடப்பதையும் கேள்விப்பட்டு, பெரும் நடுக்கத்துடன் போர்க்களம் ஓடி வந்தாள்

भर्तारं निहतं दृष्ट्वा पुत्रं च पतितं भुवि।

चित्राङ्गदा परित्रस्ता प्रविवेश रणाजिरे।।

- மஹாபாரதம் (வியாசர்)

சோகத்தால் மூழ்கி இருந்த மணலூர் அரசனின் தாயானவள், கொல்லப்பட்டு இருக்கும் தன் கணவனை கண்டாள்

शोक संतप्त हृदया रुदती वेपती भृशम्।

मणलूरपते: माता ददर्श निहतं पतिम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

தாமரை போன்ற கண்களுடைய சித்ராங்கதை பயத்துடனும், அதிகமாக புலம்பி அழுது மூர்ச்சை அடைந்து மயங்கி விழுந்தாள்.

சிறிது நேரம் கழித்து, எழுந்த சித்ராங்கதை, திவ்யமான தேகம் கொண்ட நாககன்னிகையான உலூபியை பார்த்து பேசலானாள்.

प्रतिलभ्य च सा संज्ञां देवी दिव्य वपुर्धरा।

उलूपीं पन्नग-सुतां दृष्ट्वेदं वाक्यमब्रवीत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

"உலூபி, உன்னால் ஏவப்பட்ட என் பிள்ளையால், யுத்தத்தில் பாணங்களால் அடிபட்டு கிடக்கும் கணவனை பார்.

उलूपि पश्य भर्तारं शयानं नितं रणे।

त्वत्कृते मम पुत्रेण बाणेन समितिंजयम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

நீ தர்மம் அறிந்தவள் தானே! பதிவ்ரதை தானே! உன்னால் உன்னுடைய கணவன் இப்படி போரில் கொல்லப்பட்டு விழுந்து கிடக்கிறாரே !

ननु त्वम् आर्य धर्मज्ञा ननु चासि पतिव्रता।

यत्त्वत्कृतेऽयं पतितः पतिस्ते निहतो रणे।।

- மஹாபாரதம் (வியாசர்)

அறிவு கெட்டவளே! அர்ஜுனர் உனக்கு என்ன தீங்கு செய்தார்? ஒருவேளை தீங்கு செய்து இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன். அவருடைய உயிரை பெற்று கொடு.

किंनु मन्दे अपकराद्धोऽयं यदि तेऽद्य धनंजयः।

क्षमस्व याच्यमाना वै जीवयस्व धनंजयम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

உன்னை பூஜிக்கிறேன்! தர்மம் அறிந்தவளே! நீ மூவுலங்களிலும் ப்ரஸித்தமானவளாயிற்றே! நல்லவளே! பிள்ளையால் கணவனை கொன்று விட்டு, கவலைப்படாமல் இருக்கிறாயே!

ननु त्वम् आर्ये धर्मज्ञे त्रैलोक्य विदिता शुभे।

यद्धातयित्वा पुत्रेण भर्तारं नानु शोचसि।।

- மஹாபாரதம் (வியாசர்)

பன்னகனின் மகளே! என் மகன் இப்படி கிடப்பதை பார்த்து கூட நான் கவலையடவில்லை. ஆனால், அதிதியாக திடீரென்று வந்த கணவருக்கு இப்படி அதிதி பூஜை செய்யப்பட்டு விட்டதே என்று துக்கப்படுகிறேன்." என்று அழுதாள்.

இப்படி உலூபியிடம் புலம்பி அழுது விட்டு, கீழே விழுந்து கிடக்கும் தன் கணவனான அர்ஜுனன் அருகில் வந்து புலம்பினாள்.

"யுதிஷ்டிரருக்கு மிக்க ப்ரியமானவரே! எனக்கு ப்ரியமானவரே! எழுந்திருங்கள். நீண்ட கைகள் உடையவரே! உந்த குதிரையை நான் உமக்காக விட்டு விட்டேன்.

उत्तिष्ठ कुरु-मुख्यस्य प्रियमुख्य मम प्रिय।

अयम् अश्वो महाबाहो मयो ते परिमोक्षितः।।

- மஹாபாரதம் (வியாசர்)

பிரபுவே! நீங்கள் தர்மராஜருடைய யாக குதிரை பின்னால் செல்ல வேண்டாமா? ஏன் பூமியில் படுத்து இருக்கிறீர்கள்?

குரு நந்தனா! என்னுடைய உயிரும், கௌரவர்கள் உயிரும் உங்களை நம்பி அல்லவா இருக்கிறது! மற்றவர்களுக்கு உயிரை கொடுப்பவரான நீங்கள் எந்த காரணத்தினால் உயிரை விட்டீர்கள்?

உலூபி ! பூமியில் கிடக்கும் கணவரையும், இந்த புத்திரனையும் பார்! இவர்களை கொன்று விட்டு, கொல்ல காரணமாகி விட்டு, நீ துயரம் அடையாமல் இருக்கிறாயே!

उलूपि साधु पश्येमं पतिं निपतितं भुवि।

पुत्रं चेमं समुत्साद्य घातयित्वा न शोचसि।।

- மஹாபாரதம் (வியாசர்)

என் குழந்தை மரணத்தின் பிடியில் அகப்பட்டு பூமியில் கிடக்கட்டும். சிவந்த கண்களும் குடாகேசனுமான விஜயர் வாழ வேண்டும்.

कामं स्वपितु बालोऽयं भूमौ मृत्युवशं गतः।

लोहिताक्षो गुडाकेशो विजयः साधु जीवतु।।

- மஹாபாரதம் (வியாசர்)

பாக்கியவதியே!  ஆண்களுக்கு பல பத்னிகள் இருந்தால் தோஷமில்லை. உனக்கு இதனால் ஏற்பட்ட புத்தி மாற்றம் குற்றமாகும்.

न अपराध अस्ति सुभगे नराणां बहु-भार्यता।

प्रमदानां भवत्येष मा ते भूद्बुद्धि: ईदृशी।।

- மஹாபாரதம் (வியாசர்)

ப்ரம்மாவின் படைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அழிவற்ற ஸ்நேகம் படைக்கப்பட்டது.

இந்த ஸ்நேகத்தை நீ புரிந்து கொள். உன்னுடைய ஸ்நேகம் உண்மையாக இருக்க வேண்டாமா?

सख्यं चैतत्कृतं धात्रा शश्वदव्ययमेव तु।

सख्यं समभिजानीहि सत्यं सङ्गतमस्तु ते।।

- மஹாபாரதம் (வியாசர்)

நீ புத்திரனால் கொல்லப்பட்ட இவரை பிழைக்க செய்து எனக்கு காட்டாமல் இருந்தால், நான் இப்பொழுதே உயிரை விடுவேன்.

पुत्रेम घातयित्वैनं पतिं यदि न मेऽद्य वै।

जीवन्तं दर्शयस्यद्य परित्यक्ष्यामि जीवितम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

தேவீ! கணவனையும், பிள்ளையையும் இழந்த சோகத்தில் இருக்கும் நான், நீ பார்க்கும் பொழுதே இங்கேயே உயிரை விட போகிறேன்" என்று அழுதாள்.

साऽहं दुःखान्विता देवि पतिपुत्रविनाकृता।

इहैव प्रायमाशिष्ये प्रेक्षन्त्यास्ते न संशयः।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி புலம்பி கொண்டு, தன் கணவருடைய கால்களை பிடித்து கொண்டு, புத்திரனை பார்த்து பெருமூச்சு விட்டு கொண்டும் செய்வதறியாது உட்கார்ந்து இருந்தாள்.

इत्युक्त्वा पन्नग-सुतां सपत्नी चैत्रवाहनी।

ततः प्रायम् उपासीना तूष्णीमासीज्जनाधिप।।

ततो विलप्य विरता भर्तुः पादौ प्रगृह्य सा।

उपविष्टा भवद्दीना सोच्छ्वासं पुत्रम् ईक्षती।।

- மஹாபாரதம் (வியாசர்)

சிறிது நேரத்தில், பப்ருவாகனன் நினைவு வந்து எழுந்தான். அப்போது தன் தாய் வந்திருப்பதை பார்த்து, "சுகமாகவே வளர்ந்தவளான என் தாயார், பூமியில் உயிரற்று கிடக்கும் தன் கணவன் அருகில் படுத்து இருக்கிறாளே! இதை விட பெரிய துக்கம் எனக்கு ஏது?

इतो दुःखतरं किंनु यन्मे माता सुखैधिता।

भूमौ निपतितं वीरमनुशेते मृतं पतिम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஆ! சஸ்திரங்களில் சிறந்தவரான, பகைவரை ஒழிப்பவரான, யாராலும் கொல்லப்படாதவரான  இவர் என்னால் கொல்லப்பட்டு அதை என் தாய் பார்க்கும் படியாக ஆகி விட்டதே!

निहन्तारं रणेऽरीणां सर्वशस्त्रभृतां वरम्।

मया विनिहतं सङ्ख्ये प्रेक्षते दुर्मरं बत।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஐயோ! பரந்த மார்பும், நீண்ட கைகளும் உடைய தன் பர்த்தா பூமியில் கிடப்பதை பார்த்தும் என் தாயார் நெஞ்சம் உடையாமல் உறுதியாக இருக்கிறாளே! 

अहोऽस्या हृदयं देव्या दृढं यन्न विदीर्यते।

व्यूढोरस्कं महाबाहुं प्रेक्षन्त्या निहतं पतिम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

மரண காலம் வராமல் யாருக்கும் மரணம் ஏற்படாது என்று உணர்கிறேன்.

எங்களுக்கு அந்த காலம் வராததால் தானே, நானும் என் தாயும் இதை கண்டும் உயிரோடு இருக்கிறோம் !

दुर्मरं पुरुषेणेह मन्ये काले ह्यनागते।

यत्र नाहं न मे माता न वियुक्तौ स्वजीवितात्।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஆ! ஆ! என்னை நான் வெறுக்கிறேன்! பெற்ற பிள்ளையால் கொல்லப்பட்டு கிடக்கும் அர்ஜுனருடைய கிரீடமானது மண்ணில் கிடக்கிறதே!

हाहा धिक्-कुरुवीरस्य किरीटं काञ्चनं भुवि।

अपविद्धं हतस्येह मया पुत्रेम पश्यत।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஓ! ஓ! ப்ராம்மணர்களே! பெற்ற பிள்ளையால் கொல்லப்பட்டு கிடக்கும் அர்ஜுனருடைய கிரீடமானது மண்ணில் கிடப்பதை பாருங்கள்.

भोभो पश्यत मे वीरं पितरं ब्राह्मणा भुवि।

शयानं वीरशयने मया पुत्रेण पातितम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

யுதிஷ்டிரரால் அனுப்பப்பட்ட யாக குதிரையுடன் கூடவே வந்த ப்ரம்மம்மணர்கள் என்ன சாந்தியை சொல்வீர்கள்? கொடியவனும், பாபியும், போர்க்களத்தில் பெற்ற தகப்பனை கொன்ற எனக்கு பிராமணர்களே எனக்கு என்ன பிராயச்சித்தம் சொல்வீர்கள்?

பெற்ற தந்தையை கொன்ற எனக்கு, இவருடைய தோலையே ஆடையாக, இவரது கபாலத்தை கொண்டே பிச்சை எடுத்து போஜனம் செய்து கொண்டு, 12 வருட காலம் கடுமையாக அலைந்து கொண்டிருப்பதே எனக்கு பிராயச்சித்தமாக படுகிறது.

दुश्चरा द्वादश समा हत्वा पितरमद्य वै।

ममेह सुनृशंसस्य संवीतस्यास्य चर्मणा।।

शिरःकपाले चास्यैव भुञ्जतः पितुरद्य मे।

प्रायश्चित्तं हि नास्त्यन्यद्धत्वाऽद्य पितरं मम।।

- மஹாபாரதம் (வியாசர்)

நாகராஜனின் பெண்ணே! என்னால் கொல்லப்பட்ட உன் கணவரை பார்.

நான் உன் சொல்படி என் தகப்பனோடு போர் செய்து அர்ஜுனரை கொன்று, உனக்கு ப்ரீதி செய்தேன்!

மங்களமானவளே ! நானும் என் தந்தை இருக்கும் இடத்திற்கு செல்ல போகிறேன்.

இனி என்னால் தைரியமாக வாழ முடியாது. உயிரை தரிக்க முடியாது.

सोऽहम् अद्य गमिष्यामि गतिं पितृ निषेविताम्।

न शक्नोम्य आत्मना आत्मानम् अहं दारयितुं शुभे।।

- மஹாபாரதம் (வியாசர்)

தாயே! தேவீ! உன் மீது ஆணை. நானும் காண்டீவம் தரித்த அர்ஜுனரும் மரணித்த பின், சந்தோஷமாக இருஎன்று கதறினான்.

सा त्वं मयि मृते मातस्तथा गाण्डीव धन्वनि।

भव प्रीतिमती देवि सत्येन आत्मानमालभे।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி துக்கத்தால் பேசி, ஆசமனம் செய்து பிறகு மீண்டும் உலூபியை பார்த்து,

"நாக கன்னிகையே! நன்றாக கேளுங்கள். என்னுடைய தந்தை இந்த போர் களத்தில் இருந்து எழுந்திருக்காத வரை, இந்த இடத்திலேயே கிடந்து என் உடலை வருத்தி கொள்வேன்.

शृण्वन्तु सर्व भूतानि स्थावराणि चराणि च।

त्वं च मातर्यथा सत्यं ब्रवीमि भुजगोत्तमे।।

यदि न: उत्तिष्ठति जयः पिता मे नर-सत्तमः।

अस्मिन् एव रणो-द्देशे शोषयिष्ये कलेवरम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

தந்தையை கொன்ற எனக்கு வேறு பிராயச்சித்தம் தெரியவில்லை. நான் நரகத்தை அடைய போகிறேன்.

नहि मे पितरं हत्वा निष्कृतिर्विद्यते क्वचित्।

नरकं प्रतिपत्स्यामि ध्रुवं गुरु वधार्दितः।।

- மஹாபாரதம் (வியாசர்)

வீரனான க்ஷத்திரியனை ஒருவன் கொன்றால், 100 பசு தானம் செய்து பாபத்தை கழித்து கொள்ளலாம்.

ஆனால், பிதாவாகவும் உள்ள இவரை கொன்றதால், எனக்கு ப்ராயச்சித்தமே கிடையாது.

वीरं हि क्षत्रियं हत्वा गोशतेन प्रमुच्यते।

पितरं तु निहत्यैवं दुर्लभा निष्कृतिर्मम।।

- மஹாபாரதம் (வியாசர்)

யாருக்கும் நிகரில்லாதவர் ஆயிற்றே இவர்! சிறந்த பொலிவு உடையவராயிற்றே இவர்! என்னுடைய பிதாவாயிற்றே! தர்ம சிந்தனை உடையவராயிற்றே! இவரை கொன்ற எனக்கு ஏது பிராயச்சித்தம்?என்று கதறி அழுதான்.

இவ்வாறு மணலூர் அரசன் (மதுரை மஹாபாரத காலத்தில் மணிபூரம் என்றும் அழைக்கப்பட்டு இருக்கிறது. பிற்காலத்தில் பெரியாழ்வார் இங்கு வந்து வசித்த போது, கள்ளழகர் இருக்கும் இடத்தை பார்த்தால் கோகுலம் போலவும், அங்குள்ள மலையை பார்த்தால் பிருந்தாவனம் போலவும், இந்த தலைநகரை பார்த்தால் மதுரை போலவும் தெரிய, அங்கேயே வசித்தார். மணிபூரம் மதுரை போல இருக்க, பல இடங்களில் உத்திர பிரதேசத்தில் இருக்கும் நிஜமான மதுராவை வடமதுரை என்று குறிப்பிட்டு பாடுகிறார்) பித்ரு சோகத்தால் அகப்பட்டு, தாயுடன் சேர்ந்து உயிரை போர்க்களத்திலேயே விட்டு விட அமர்ந்து இருக்க, உலூபியானவள், "சஞ்ஜீவனம்" என்ற மணியை நினைத்தாள்.

प्रायोपविष्टे नृपतौ मणिपूर ईश्वरे तदा।

पितृ-शोक समाविष्टे सह मात्रा परंतप।।

उलूपी चिन्तयामास तदा संजीवनं मणिम्।

स चोपातिष्ठत तदा पन्नगानां परायणम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

பன்னகர்களிடமே இருக்கும் அந்த திவ்யமான மணியானது, தோன்றியது.

கௌரவரே! ஜனமேஜயா! நாகராஜ பெண்ணான உலூபி அதை எடுத்து கொண்டு, மனம் மகிழும்படியான வார்த்தையை சொன்னாள்.

"மகனே! எழுந்திரு! துக்கப்படாதே! அர்ஜுனர் உன்னால் கொல்லப்படவில்லை. அர்ஜுனர் மனிதர்களாலும், தேவர்களாலும் ஜெயிக்க முடியாதவர்.

उत्तिष्ठ मा शुचः पुत्र नैव जिष्णुस्त्वया हतः।

अजेयः पुरुषै: एष तथा देवैः सवासवैः।।

- மஹாபாரதம் (வியாசர்)

புகழ் பெற்ற புருஷரான உன் பிதாவுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு மாயை செய்தேன்.

मया तु मोहनी नाम मायैषा सम्प्रदर्शिता।

प्रियार्थं पुरुषेन्द्रस्य पितुस्तेऽद्य यशस्विनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

கௌரவா! அரசே! எதிரிகளை கொல்பவரான இவர், போரில் உன்னுடைய பலத்தை பார்க்க விரும்பினார்.

புத்ரா! அதனால் தான் உன்னை யுத்தம் செய்ய தூண்டினேன்.

जिज्ञासुर्ह्येष पुत्रस्य बलस्य तव कौरव।

सङ्ग्रामे युद्ध्यतो राजन् आगतः परवीरहा।।

- மஹாபாரதம் (வியாசர்)


புத்ரா! ராஜன்! உன் மீது சிறிது கூட பாபம் உண்டானதாக எண்ணாதே! உனது தந்தை, மஹாத்மா, புராணமானவர், சாஸ்வதமானவர், அழிவற்றவர், ரிஷி போன்றவர்.

மகனே! இவரை இந்திரனே வந்தாலும் போரில் ஜெயிக்க முடியாது.

ऋषिरेष महानात्मा पुराणः शाश्वतोऽक्षरः।

नैनं शक्तो हि सङ्ग्रामे जेतुं शक्रोऽपि पुत्रक।।

- மஹாபாரதம் (வியாசர்)

வேந்தே! நான் திவ்யமான ஒரு மணியை வரவழைத்து இருக்கிறேன்.

இது பன்னகர்களாகிய எங்களை மரித்தாலும் மீண்டும் மீண்டும் பிழைக்க செய்யும்.

अयं तु मे मणिर्दिव्यः समानीतो विशांपते।

मृतान्मृतान् पन्नगेन्द्रान्यो जीवयति नित्यदा।।

- மஹாபாரதம் (வியாசர்)

ப்ரபுவே! நீ இந்த மணியை உன் தந்தையின் மார்பில் வை. அப்பொழுதே, நீ குந்தி புத்திரரான பாண்டவரை உயிரோடு பார்ப்பாய்என்றாள்.

एनमस्योरसि त्वं च स्थापयस्व पितुः प्रभो।

संजीवितं तदा पार्थं स त्वं द्रष्टासि पाण्डवम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

இவ்விதம் கேட்டதும், பராக்ரமமும், பாவமற்றவனுமான பப்ருவாகனன், அந்த மணியை எடுத்து அர்ஜுனன் மார்பில் வைத்தான்.

इत्युक्तः स्थापयामास तस्योरसि मणिं तदा।

पार्थस्यामिततेजाः स पितुः स्नेहादपापकृत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

அந்த மணியை வைத்த உடனேயே, வீரனான அர்ஜுனன் உயிர் பெற்று, நீண்ட நேரம் தூங்கி எழுந்தவனை  போல, தன் சிவந்த கண்களை துடைத்து கொண்டு எழுந்தார்.

तस्मिन्न्यस्ते मणौ वीरो जिष्णु: उज्जीवितः प्रभुः।

चिरसुप्त हवोत्तस्थौ मृष्ट लोहित-लोचनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

சுயநினைவு பெற்று எழுந்திருந்த அர்ஜுனனை கண்ட பப்ருவாகனன் நமஸ்காரம் செய்தான்.

तमुत्थितं महात्मानं लब्धसंज्ञं मनस्विनम्।

समीक्ष्य पितरं स्वस्थं ववन्दे बभ्रुवाहनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

ப்ரபுவே! ஜனமேஜயா! இப்படி அர்ஜுனன் எழுந்ததும், இந்திரன் தேவலோக புஷ்பங்களை பொழிந்தான்துந்துபிகள் அடிக்கப்படாமலேயே, மேகங்கள் மோதி சப்தம் கொடுத்தது. ஆகாயத்தில், "நல்லது.. நல்லது" என்று மிகப்பெரிய ஒலி கேட்டது.

உறுதியான கைகளை உடைய அர்ஜுனன் எழுந்திருந்து களைப்பாறி, தன் பிள்ளையான பப்ருவாகனனை உச்சி முகர்ந்து கொஞ்சினார்.

उत्थाय च महाबाहुः पर्याश्वस्तो धनंजयः।।

बभ्रुवाहनम् आलिङ्ग्य समाजिघ्रत मूर्धनि।।

- மஹாபாரதம் (வியாசர்)

பிறகு, தனஞ்சயன் சோகத்தால் இளைத்த உலூபியுடன் தூரத்தில் நிற்கும் சித்ராங்கதையை பார்த்தார்.

ददर्श च अपि दूर अस्य मातरं शोक-कर्शिताम्।

उलूप्या सह तिष्ठन्तीं ततोऽपृच्छद् धनंजयः।।

- மஹாபாரதம் (வியாசர்)


அப்பொழுது தன் மகனை நோக்கி, "போர்க்களம் முழுவதும் சோகமும், ஆச்சர்யமும், சந்தோஷமும் கலந்து காணப்படுகிறதே! இது என்ன? உனக்கு தெரியுமானால் எனக்கு சொல்.

உன்னுடைய தாயான சித்ராங்கதை இந்த போர்க்களத்துக்கு ஏன் வந்தாள்? நாகராஜனின் புத்ரியான உலூபியும் ஏன் இங்கு வந்தாள்? என்னுடைய உத்தரவால் நீ என்னிடம் போர் செய்தாய் என்பது எனக்கு தெரியும்.

ஆனால் இந்த பெண்கள் போர்க்களத்துக்கு வந்ததற்கான காரணம் என்ன? என்று அறிய விரும்புகிறேன்!என்று கேட்டான்.

இதை கேட்ட மணலூர் அரசன், தலை வணங்கி நமஸ்கரித்து விட்டு, "உலூபியை கேளுங்கள்" என்றான்.

तम् उवाच तथा पृष्टो मणिपूरपति: तदा।

प्रसाद्य शिरसा विद्वान् उलूपी पृच्छ्यताम् इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அர்ஜுனன் உலூபியை பார்த்து, "கௌரவ குலத்தை ஆனந்தப்படுத்துபவளே!  நீயும் மணலூர் அரசனுடைய தாயும் இந்த போர் களத்திற்கு வந்த காரணம் என்ன? 

किमागमनकृत्यं ते कौरव्य-कुलनन्दिनि।

मणलूरपते: मातुस्तथैव च रणाजिरे।।

- மஹாபாரதம் (வியாசர்)

நாக பெண்ணே! இந்த அரசனுடைய க்ஷேமத்துக்காக இங்கு வந்தாயா? மான் போன்ற விழி கொண்டவளே! அல்லது நீ என்னுடைய க்ஷேமத்திற்காக வந்தாயா?

அழகிய இடை கொண்டவளே! மங்களமாக இருப்பவளே! நானோ, பப்ருவாகனனோ அறியாமல் உனக்கு ஏதாவது அபசாரம் ஏதாவது செய்து விட்டோமா?

कच्चित्ते पृथुलश्रोणि नाप्रियं प्रियदर्शने।

अकार्षमहमज्ञानादयं वा बभ्रुवाहनः।।     

- மஹாபாரதம் (வியாசர்)

ராஜகுமாரியும், சித்ரவாகனனுடைய மகளும், உத்தமியுமான, உன்னுடைய ஸபத்னியுமான சித்ராங்கதை ஏதாவது தீங்கு செய்து விட்டாளா?" என்று வினவினான்.

कच्चिन्नु राजपूत्री ते सपत्नी चैत्रवाहनी।

चित्राङ्गदा वरारोहा नापराध्यति किञ्चन।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி கேட்டதும், சிரித்து கொண்டே, உரகராஜனின் பெண்ணான உலூபி, "நீங்கள் எனக்கு எந்த தீங்கும் செய்யவில்லை. பப்ருவாகனனும் தீங்கு செய்யவில்லை. நான் கேட்கும் உதவிகளை கேட்டு செய்யும் சித்ராங்கதையும் எனக்கு எந்த தீமையும் செய்யவில்லை.

तमुवाचोरगपतेर्दुहिता प्रहसन्त्यथ।

न मे त्वमपराद्धोसि न हि मे बभ्रुवाहनः।

न जनित्री तथाऽस्येयं मम यो प्रेष्य वत्थिता।।

- மஹாபாரதம் (வியாசர்)

நான் செய்ததை உள்ளபடி உங்களுக்கு சொல்கிறேன். கேளுங்கள்.

நீங்கள் என்னை கோபித்து கொள்ள கூடாது. இதற்காக உங்களை தலைவணங்கி பிரார்த்திக்கிறேன்.

श्रूयतां यद्यथा चेदं मया सर्वं विचेष्टितम्।

न मे कोपस्त्वया कार्यः शिरसा त्वां प्रसादये।।

- மஹாபாரதம் (வியாசர்)

பிரபுவே! தனஞ்சயரே! உங்களுடைய ப்ரியத்துக்காகவே இதனை நான் செய்தேன்!  முழுமையாக கேளுங்கள்.

பார்த்தரே ! நீங்கள் மஹாபாரத யுத்தத்தில் சந்தனுவின் பிள்ளையான பீஷ்மரை அதர்மமாக கொன்றீர்கள். அதற்கு பிராயச்சித்தமாக இந்த காரியத்தை நான் செய்தேன்.

महाभारत-युद्धे यत्त्वया शान्तनवो नृपः।

अधर्मेण हतः पार्थ तस्यैषा निष्कृतिः कृता।।

- மஹாபாரதம் (வியாசர்)

வீரரே! யுத்தத்தில் பீஷ்மர் யுத்தம் செய்த போது, நீங்கள் அவரை கொல்லவில்லை.

நீங்கள் சிகண்டியுடன் சேர்ந்து, அவனை முன்னிட்டு, பீஷ்மரை கொன்றீர்கள். 

न हि भीष्मस्त्वया वीर युद्ध्यमानो हि पातितः।

शिखण्डिना तु संयुक्तस्तमाश्रित्य हतस्त्वया।।

- மஹாபாரதம் (வியாசர்)

இந்த காரியத்துக்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளாமல் உயிரை விட்டால், நிச்சயமாக நரகத்தில் விழுவீர்கள். நீங்கள் உங்கள் புத்ரனிடம் தோல்வி அடைவது ப்ராயச்சித்தமாக ஏற்படுத்தப்பட்டது.

तस्य शान्तिमकृत्वा त्वं त्यजेथा यदि जीवितम्।

कर्मणा तेन पापेन पतेथा निरये ध्रुवम्।

एषा तु विहिता शान्तिः पुत्राद्यां प्राप्तवानसि।।

- மஹாபாரதம் (வியாசர்)

உலகை காப்பவரே ! சிறந்த புத்திமானே !

நான் வஸுக்களையும் கங்கையையும் சந்தித்த போது, உங்களை பற்றி வஸுக்கள் பேசிக்கொண்டதை சொல்கிறேன், கேளுங்கள்.

वसुभि: वसुधापाल गङ्गया च महामते।

पुरा हि श्रुतमेतत्ते वसुभिः कथितं मया।।

- மஹாபாரதம் (வியாசர்)

அரசரே! பீஷமர் கொல்லப்பட்ட போது, வஸுக்கள் என்ற தேவர்கள்,  ஒன்று சேர்ந்து, கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு, கங்கா தேவியிடம் கடுமையான வார்த்தைகளை கூறினர்.

गङ्गाया: तीरम् आश्रित्य हते शान्तनवे नृप।

आप्लुत्य देवा वसवः समेत्य च महानदीम्।

इदमूचुर्वचो घोरं भागीरथ्या मते तदा।।

- மஹாபாரதம் (வியாசர்)

அவர்கள் கங்கையிடம், "அம்மா! அர்ஜுனன் சந்தனு மஹாராஜனின் மகனான பீஷ்மரிடம் நேருக்கு நேர் யுத்தம் செய்யாமல், வேறொருவருடன் யுத்தம் செய்யும் போது கொன்றான். ஆகையால், நாங்கள் அர்ஜுனனை சபிக்க நினைக்கிறோம்" என்றனர். அந்த கங்கையும், "அப்படியே செய்யுங்கள்" என்று சம்மதித்து விட்டாள்.

एष शान्तनवो भीष्मो निहतः सव्यसाचिना।

अयुद्ध्यमानः सङ्ग्रामे संसक्त: अन्येन भामिनि।।

तदनेनानुषङ्गेण वयमद्य धनञ्जयम्।

शापेन योजयामेति तथाऽस्त्विति च सा अब्रवीत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட நான், பெரிதும் துக்கப்பட்டு, என் தகப்பனாரிடம் சென்று தெரிவித்தேன். இதை கேட்டு அவரும் பெரிதும் துக்கப்பட்டார்.

என் தகப்பனார் இதற்காக பல முறை அந்த வஸுக்களிடம் சென்று, அருள் புரியும் படி பிரார்த்தித்தார்.

पिता तु मे वसून्गत्वा त्वदर्थे समयाचत।

पुनः पुनः प्रसाद्यैतांस्त एनमिदमब्रुवन्।।

- மஹாபாரதம் (வியாசர்)

கடைசியாக, அவர்கள், "பாக்கியவானே! அர்ஜுனனுக்கு மணலூர்புரத்தில் வாலிபனான ஒரு பிள்ளை இருக்கிறான்.

पुत्रस्तस्य महाभाग मणलूर् ईश्वरो युवा।

स एनं रणमध्यस्थः शरैः पातयिता भुवि।।

- மஹாபாரதம் (வியாசர்)

அவன், அர்ஜுனனை போர்க்களத்தில் நின்று தன் பாணங்களால் அடித்து பூமியில் தள்ளுவான்இப்படி நடக்கும் போது, அர்ஜுனனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கும். நீ கிளம்பலாம்" என்றனர்.

एवं कृते स नागेन्द्र मुक्तशापो भविष्यति।

गच्छेति वसुभिश्चोक्तो मम चेदं शशंस सः।।

- மஹாபாரதம் (வியாசர்)

வஸுக்கள் சொன்னதை, என் தந்தை எனக்கும் சொன்னார்.

அதை கேட்ட நான், உங்களை இந்த சாபத்தில் இருந்து விடுவித்தேன். உங்களை தேவர்களே நினைத்தாலும் தோற்கடிக்க முடியாது.

तच्छ्रुत्वा त्वं मया तस्माच्छापादसि विमोक्षितः।

न हि त्वां देवराजोऽपि समरेषु पराजयेत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

சாஸ்திரம் "புத்திரனும் நீயே" என்று சொல்கிறது. அப்படி  இருப்பதால், நீங்கள் உங்கள் புத்திரனால் வெற்றி கொள்ளப்பட்டதால் உங்களுக்கு எந்த தோஷமும் ஏற்படாது. பிரபுவே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?என்று கேட்டாள்.

आत्मा पुत्रः स्मृतस्तस्मात्तेनेहासि पराजितः।

न हि दोषो मम मतः कथं वा मन्यसे विभो।।

- மஹாபாரதம் (வியாசர்)

நடந்த விஷயங்களை தெளிவாக அறிந்து கொண்ட அர்ஜுனன், "தேவீ! நீ செய்த காரியங்கள் அனைத்தும் என் ப்ரியத்துக்காகவே செய்யப்பட்டது" என்றான்.

इत्येवमुक्तो विजयः प्रसन्नात्माऽब्रवीदिदम्।

सर्वं मे सुप्रियं देवि यदेतत्कृतवत्यसि।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி  சொல்லி கொண்டே, தன் மகனான மணலூர் அரசனை பார்த்து, "அரசனே! வரும் சித்ராபூர்ணிமாவில் யுதிஷ்டிரருக்கு அஸ்வமேதம் நடக்க போகிறது. அதற்கு நீ, உன் மந்திரிகளோடும், இரண்டு தாயாருடனும் வர வேண்டும்" என்றார்.

इत्युक्त्वा सोऽब्रवीत्पुत्रं मणलूरपतिं जयः।

चित्राङ्गदायाः शृण्वन्त्याः कौरव्यदुहितुस्तदा।।

युधिष्ठिरस्य अश्वमेधः परिचैत्रीं भविष्यति।

तत्रागच्छेः सहामात्यो मातृभ्यां सहितो नृप।।

- மஹாபாரதம் (வியாசர்)

பார்த்தன் இப்படி சொன்னதும், கண்களில் கண்ணீருடன், தன் தகப்பனாரை பார்த்து,

"தர்மம் அறிந்தவரே! உம்முடைய உத்தரவை ஏற்று வருகிறேன். அஸ்வமேதம் என்னும் மஹாயாகத்தில், இரட்டை பிறப்பாளர்களுக்கு பரிமாறும் சேவையை நானே செய்கிறேன்.

उपयास्यामि धर्मज्ञ भवतः सासनादहम्।

अश्वमेधे महायज्ञे द्विजाति परिवेषकः।।

- மஹாபாரதம் (வியாசர்)

தர்மம் அறிந்தவரே! நீங்கள் உங்கள் இரண்டு மனைவியோடு சேர்ந்து உங்களுடையதான இந்த நகருக்குள் வர வேண்டும். நீங்கள் இதில் ஆலோசிக்க அவசியமே இல்லை.

मम त्वनुग्रहार्थाय प्रविशस्व पुरं स्वकम्।

भार्याभ्यां सह धर्मज्ञ माभूत्तेऽत्र विचारणा।।

- மஹாபாரதம் (வியாசர்)

பிரபுவே! இங்கு ஒரு இரவு உங்கள் மாளிகையில் சுகமாக வஸிக்க வேண்டும். பிறகு மீண்டும் யாக குதிரையை பின் தொடர்ந்து செல்லுங்கள்என்று பிரார்த்தித்தான்.

उषित्वेह निशामेकां सुखं स्वभवने प्रभो।

पुनरश्वानुगमनं कर्तासि जयतांवर।।

- மஹாபாரதம் (வியாசர்)

வானர கொடி உடைய அர்ஜுனன் தன் பிள்ளையை பார்த்து சிரித்து கொண்டே, "உறுதியான புஜங்களை உடையவனே! நான் அஸ்வமேத யாகத்தில்  தீக்ஷை பெற்று வந்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியும்.

इत्युक्ताः स तु प्रत्रेण तदा वानर केतनः।

स्मयन्प्रोवाच कौन्तेयस्तदा चित्राङ्गदा-सुतम्।।

विदितं ते महाबाहो यथा दीक्षां चराम्यहम्।

न स तावत् प्रवेक्ष्यामि पुरं ते पृथुलोचन।।

- மஹாபாரதம் (வியாசர்)

தாமரை போன்ற கண்கள் உடையவனே! இப்போது உன்னுடைய நகரத்துக்குள் நான் வர கூடாது.

இந்த யாக குதிரை தன் இஷ்டத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும். நான் செல்கிறேன். நான் இப்பொழுதே போக வேண்டும்" என்றார்

यथाकामं व्रजत्येष यज्ञिय अश्वो नरर्षभ।

स्वस्ति तेऽस्तु गमिष्यामि न स्थानं विद्यते मम।।

- மஹாபாரதம் (வியாசர்)

அப்பொழுது அர்ஜுனன் பப்ருவாகனனாலும், அவனது இரண்டு மனைவிகளாலும் விதிப்படி பூஜிக்கப்பட்டு, அவர்கள் அனுமதியோடு மேலும் தன் பயணத்தை பின் தொடர்ந்தார்

स तत्र विधिवत्तेन पूजितः पाकशासनिः।

भार्याभ्यामभ्यनुज्ञातः प्रायाद्भरतसत्तमः।।

- மஹாபாரதம் (வியாசர்)