Followers

Search Here...

Tuesday 5 December 2017

மஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Bangladesh)

மஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Bangladesh)


அங்க தேசம், வங்க தேசம் ஆகிய தேசங்கள் இந்தியாவில் உள்ள "வங்காள தேசத்தில்" (West Bengal)உள்ளது.

பௌண்ட்ரக தேசம், சுஹ்மா தேசம் இன்றைய வங்காள நாடு (Bangladesh).

அங்க தேசம் என்ற தேசம், இன்றைய வங்காள தேசத்தின் (West Bengal) மேற்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

வங்க தேசம் என்ற தேசம், இன்றைய வங்காள தேசத்தின் (West Bengal) கிழக்கு பகுதியையும், வங்காளத்தின் (bangladesh) மேற்கு பகுதியையும் சேர்த்த பகுதி.

பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து கொலை செய்ய நினைத்த துரியோதனனிடம் இருந்து தப்பித்து, சில காலம் மறைந்து வாழ்ந்தனர்.

புலிந்த தேசம் சென்று, பின்பு அங்கிருந்து பல இடங்கள் சென்று, இறுதியாக வங்க தேசத்தில் உள்ள 'ஏகசக்ரம்' என்ற ஊரில், ஒரு பிராம்மண குடும்பத்தில் தங்கினர்.
இந்த வங்க தேசத்தில், பகாசுரன் என்ற அரக்கன் மனித மாமிசம் சாப்பிட்டு அங்கிருந்தவர்களை பயமுறித்திக்கொண்டிருந்தான்.
ஊர் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
பகாசுரனை பீமன் கொன்றான்.

இந்த அங்க தேசத்தில் ஒரு சமயம், மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான், தன் நெற்றி கண்ணால் காமதேவனை பொசுக்கிய பொழுது, அவன் அங்கம் சிதறிய இடம் என்பதால், அங்க தேசம் என்ற பெயர் பெற்றது.

இந்த அங்க தேசத்தை, பல சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர்.

பீஹார் என்று இன்று அழைக்கப்படும் தேசம், அன்று மகத தேசம் என்று அழைக்கப்பட்டது.
ஜராசந்தன் மகத தேச (பீஹார்) நாட்டு அரசன்.

ஜராசந்தன், அங்க தேசத்தின் பல பகுதியையும் கைப்பற்றி இருந்தான்.

ஜராசந்தன், துரியோதனன் இருவரும் நட்பு உள்ளவர்கள்.

துரியோதனனின் நட்புக்காக, ஜராசந்தன் "அங்க தேசத்தை" கர்ணனுக்கு கொடுத்து, அவனை சிற்றரசன் ஆக்கினான்.

அங்க தேச அரசர்கள் யாவரும்,
யுதிஷ்டிரர் நடத்திய ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

யாகத்திற்கு ஆகும் வரவு-செலவு, யாகத்திற்கு வந்த அனைவருக்கும் வசதி, உணவு ஆகும் வரவு-செலவு பார்க்க தன் கஜானாவின் சாவியை, யுதிஷ்டிரர், அங்க அரசன் கர்ணனிடம் கொடுத்தார்.

கர்ணன் துரியோதனின் பக்கம், மேலும் இவன் தானம் உலகம் அறிந்தது, என்று தெரிந்தும், தன் கஜானாவை காலி செய்தாலும் பரவாயில்லை, யாகமும், வந்த அனைவரும் குறை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில், கர்ணனை நியமித்தார் யுதிஷ்டிரர்.
கர்ணனை விட உதார குணம் உடையவர் "யுதிஷ்டிரர்" என்ற உண்மையை, இந்த நிகழ்ச்சியில் நாம் அறியலாம்.
பௌண்ட்ரக தேச அரசன், ஸ்ரீ கிருஷ்ணரின் புகழில் காழ்ப்புணர்ச்சி கொண்டவன்.
இதன் காரணமாக, ஸ்ரீ கிருஷ்ணன் போலவே உடை உடுத்தி, கிருஷ்ணனை போலவே தானும் பலசாலி, மாயம் தெரிந்தவன் என்று சொல்லி, தன் பெயரையும் "வாசுதேவ கிருஷ்ணன்" என்று வைத்துக் கொண்டான். பௌண்ட்ரக வாசுதேவன் என்றும் அழைத்தனர்.


பௌண்ட்ரக வாசுதேவன் வங்க தேசத்தின் கிழக்கு பகுதியை கைப்பற்றினான்.

அங்க தேச அரசன் 'கர்ணன்' வங்க தேசத்தின் மேற்கு பகுதியை கைப்பற்றினான்.

ப்ரகஜ்யோதிச (அசாம்) தேச அரசன் 'பகதத்தா' வங்க தேசத்தின் வடக்கு பகுதியை கைப்பற்றினான்.

பௌண்ட்ரக வாசுதேவன், மகத அரசன் (பீஹார்) ஜராசந்தனிடம் நட்பு கொண்டவன்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக திக்விஜயம் புறப்பட்ட பீமன், சுஹ்ம தேசம், மற்றும் பௌண்ட்ரக தேசத்து அரசர்களையும் தோற்கடித்தான்.

பௌண்ட்ரக வாசுதேவனை போரில் தோற்கடித்து அவன் வைத்து இருந்த பெரிய சங்கை பீமன் எடுத்துக்கொண்டு சென்றான்.

பௌண்ட்ரக வாசுதேவன் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டான்.

ஒரு சமயம், பௌண்ட்ரக வாசுதேவன் துவாரகைக்கு கடிதம் அனுப்பி, ஸ்ரீ கிருஷ்ணரை போருக்கு அழைத்தான்.
"நீ வாசுதேவனா? இல்லை நானா? என்று பார்த்துவிடலாம்" என்றான்.

சிரித்துக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணர், "அப்படி போர் புரிந்து இறக்க ஆசையிருந்தால், சரி" என்றார்.

பௌண்ட்ரக வாசுதேவனுக்கு துணையாக காசி ராஜனும் துணைக்கு வந்து போரிட்டான்.
போரில் பௌண்ட்ரக வாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணரை போன்று நீல நிறத்தில் இருப்பதற்காக, சாயம் பூசிக்கொண்டு வந்திருந்தான்.
இதை பார்த்த ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிரிப்பு தாளவில்லை.

"இப்படி ஒரு கணவனுடன், உன் மனைவி எப்படி குடும்பம் நடத்துகிறாள்?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
இதனை புரிந்து கொள்ளாமல் மேலும் சண்டைக்கு இழுத்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் தன் சுதர்சன சக்கரத்தின் மூலம் காசி ராஜன் தலையையும், பௌண்ட்ரக வாசுதேவன் தலையையும் கொய்து எறிந்தார்.

அங்க தேச, வங்க தேச, பௌண்ட்ரக தேச அரசர்கள் யாவரும் துரியோதனின் பக்கம் நின்று போர் புரிந்தனர்.
இந்த "பௌண்ட்ரம்" என்ற சங்கை, மஹா பாரத போரில், பீமன் விண்ணை பிளக்கும் வகையில் ஊதி, எதிரிகளை கலங்கடித்து, தான் போருக்கு தயார் என்று ஊர்ஜிதப்படுத்தினான்.

போரில் பௌண்ட்ரக வாசுதேவன் இல்லாது இருந்தாலும், அவன் படைகள் துரியோதனின் பக்கம் நின்று, அர்ஜுனனுக்கு எதிராக கடும் போர் புரிந்தனர்.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் கர்ணன் தலைமை ஏற்றான்.

கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - சல்லியன் (punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார்.
இது சல்லியனை அவமானம் படுத்துவதாக இருந்தது. இருந்தாலும் சம்மதித்தார்.


போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில், வேதம் கற்ற ப்ராம்மணர்கள், 'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறியதை நினைவு கூறி, 'நீ அந்த தேச அரசன் தானே?' என்றான்.

வேத மார்க்க வழியில் நடப்பவனை, 'நீ ஒரு வாலிகன்' என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.
சல்லியன் பெரும் அவமானம் கொண்டார்.
இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை விட்டு இறங்கி சென்று விட்டார். அங்க அரசன், கர்ணன் அர்ஜுனன் பொழிந்த அம்பு மழையில் மடிந்தான்.

போர் முடிந்த பின், அஸ்வமேத யாகத்திற்காக திக் விஜயம் செய்த அர்ஜுனன், பௌண்ட்ரக தேச நகரத்து சிற்றரசர்களையும் தோற்கடித்து, திரும்பினான்.

Sunday 3 December 2017

மஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan எப்படி இருந்தது?

மஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan

"நிஷாத தேசம்", "மத்ஸ்ய தேசம்", "சால்வ தேசம்", "மால்வ தேசம்" ஆகிய தேசங்கள், இன்று ராஜஸ்தானில் உள்ளது.


மஹா பாரத காலத்துக்கும் முன் வாழ்ந்த சத்யவான்-சாவித்ரி தம்பதிகள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்.
சத்யவான் "சால்வ தேச" அரசன்.
சாவித்ரி "மால்வ தேச" இளவரசி.
சத்யவான் உயிரை பறித்த யமனை காணும் சக்தி பெற்றவளாக இருந்தாள்.

யமனிடம் தர்க்கம் செய்து, போன உயிரை திரும்பப்பெற்றாள்.
எம தர்மராஜன், இன்னும் "நூறாண்டுகள் வாழ்க" என்று ஆசிர்வதித்து விட்டு சென்றான்.
இது ஹிந்துக்களான அனைவருக்கும் தெரிந்த சரித்திரம்.

மத்ஸ்ய தேசம் என்பது யமுனை நதி ஓரத்தில், மீன் பிடித்து வாழும் ஒரு சமூகம்.
குரு அரசன் (உத்திரபிரதேசம்) சந்தனு, இந்த தேசத்தின் மீன் பிடிக்கும் தலைவனின் மகள் "சத்யவதி"யை பார்த்து திருமணம் செய்ய நினைத்தார்.

பீஷ்மர் தன் தந்தைக்காக, சபதம் செய்து, சத்யவதியின் குழந்தைகளே சந்தனுவுக்கு அடுத்து அரசனாகட்டும் என்று சபதம் செய்து, சத்யவதிக்கும், சந்தனு மகாராஜாவுக்கும் மணம் செய்து கொண்டனர்.
இந்த தியாகத்தால், "விரும்பிய பொழுது மரணம்" என்ற வரத்தை பெற்றார் பீஷ்மர்.
இதே தேசத்தில் மகா பாரத காலத்தில் இருந்து, எழுதிய வியாச பகவானும் அவதரித்தார்.

சால்வ அரசன், காசி தேசத்து இளவரசி "அம்பா"வை விரும்பினான்.

காசி அரசன், தன் 3 மகள்களுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்து இருந்தார்.
சாலவ அரசனும் இந்த  சுயம்வரத்திற்காக வந்தான்.

காசி ராஜன், குரு அரசன் 'விசித்ரவீர்யனுக்கு' அழைப்பு விடவில்லை. இதனால், பீஷ்மர் கோபத்துடன், காசி தேசத்துக்கு படையெடுத்தார்.

அங்கிருந்த அனைத்து அரசர்களையும், சால்வ அரசன் உட்பட, தன் பராக்ரமத்தால் வென்று, 3 இளவரசிகளையும் குரு தேசத்திற்கு கொண்டு சென்றார்.
"அம்பா" சால்வ அரசனை மணக்க இருந்ததாக சொல்ல, அம்பாவை சால்வ அரசனிடம் விட்டு சென்றார்.

காசியில் அம்பாவை காப்பாற்ற முடியாமல், பீஷ்மரிடம் தோற்றதால் அவமானம் அடைந்த சால்வ அரசன், ஒரு க்ஷத்ரியனாக இருப்பதால், அம்பாவை மணக்க முடியாது என்று மறுத்து விட்டான்.



இதனால் வேதனையும், பீஷ்மரிடம் கோபமும் கொண்டாள் அம்பா.

வாழ வழி இல்லாததால், தீ மூட்டி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
பின்னர், சிகண்டியாக துரௌபதிக்கு சகோதரனாக பிறந்தாள்.

நிஷாத தேச அரசன் பெயர் "நலன்".

நிஷாத அரசனும், கோசல அரசனும் (உத்திரபிரதேசம்) நண்பர்கள்.

இந்த நிஷாத தேசம், காடுகளும், மலைகளும் நிரம்பி இருந்தன.

பாண்டவர்களும், கௌரவர்களும் துரோணரிடம் பாடம் கற்று கொண்டிருந்த சமயம் அது.
இந்த காட்டு பகுதியில் சில நாள் தங்கி போருக்கான சஸ்திர பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

ஏகலைவன் என்ற வேடுவன், துரோணரின் குருகுலத்தில் வில் வித்தை கற்று கொள்ள ஆசைப்பட்டான்.
துரோணர் க்ஷத்ரியனுக்கு மட்டுமே "இந்த சஸ்த்ர வித்தைகள் கற்று தர முடியும்" என்று மறுத்து விட்டார்.

ஏகலைவன், மறைந்து நின்று பல நாள் இவர்கள் செய்யும் பயிற்சியினை பார்த்தான்.
பின்னர், துரோணரின் பாத மண்ணை எடுத்துக்கொண்டு, அதை ஒரு இடத்தில் வைத்து அவரை போலவே ஒரு சிலை வடித்து, பல வருடங்கள் பார்த்த வில் வித்தையை பயிற்சி செய்ய ஆரம்பித்தான்.

அவன் கொண்ட குருவின் பக்தி, வில் வித்தையில் அர்ஜுனனுக்கு நிகராக நிற்கும் அளவிற்கு திறமை தந்துவிட்டது.

ஒரு நாள், துரோணர் பாண்டவர்களுடன் காட்டில் நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறைக்க முடியாத படி, அதன் வாயை சுற்றியும், அதனை சுற்றியும் அம்புகள் தெய்க்கப்பட்டு இருந்தன. ஆச்சர்யமாக, அந்த நாய் ஒரு காயமும் அடையாதவாறு அமைக்கப்பட்டு இருந்தது.

இதை கண்டு அர்ஜுனனே ஆச்சர்யப்பபட்டான்.
தேடிப்பார்த்த போது, ஏகலைவன் எதிர் வந்தான். தன் குரு தன் முன் இருப்பதை கண்டு ஆனந்தத்தில் மகிழ்ந்தான். அவரை வணங்கி "உங்கள் மூலமே இதனை கற்றேன்" என்றான்.

துரோணர் இது உடனே கண்டிக்கப் பட வேண்டியது என்று நினைத்து, இது பேராபத்து என்றும் உணர்ந்து, "எனக்கு குரு தக்ஷிணையாக உன் கட்டை விரலை கொடு" என்றார்.

ஏகலைவன் ஒரு வேடுவன்.
அம்பு விடுவதில் ஏற்கனவே வல்லவன்.
இவன் மறைமுகமாக கற்றுக் கொண்டது அஸ்திர, சஸ்திர ப்ரயோகம். அதாவது அணுகுண்டு போன்றவை உபயோகப்படுத்தும் முறை.
இவன் க்ஷத்ரியன் (army person) அல்ல. இவன் ஒரு சாதாரண பிரஜை (citizen). சாதாரண பிரஜை அணுகுண்டு தயாரிப்பது, உபயோகிப்பது ஆகியவை சட்ட விரோதமானது.


துரோணர் நினைத்தது போலவே, இவன் துரியோதனனின் பக்கம் போய், அதர்மத்தின் வழியில் சண்டை போட்டான்.

ஏகலைவன் தந்தை, மகத நாட்டின் (பீஹார்) அரசன் "ஜராசந்தனுக்கு" படை தளபதியாக இருந்தான்.
17 முறை ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் மதுராவை தாக்கினான்.
17 முறையும் தோற்றான். இதில் போரிட்ட ஏகலைவனின் தந்தை மாண்டு போனான்.

ஜாராசந்தனும் பீமனால் பின்னர் இரண்டாக கிழிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

ஏகலைவன், துரியோதனிடம் நட்பு கொண்டான்.
இதனால் சமயம் எதிர்ப்பார்த்து பகைமை கொண்ட ஏகலைவன், பாண்டவர்களின் தாய் குந்தியின் ஊரான "குந்தி போஜ" (மத்யபிரதேசம்) அரசன் குந்திபோஜன் மீதும், மதுராவின் ஸ்ரீ கிருஷ்ணர் மீதும் யாதவர்களுக்கு எதிராக போரிட தயாரானான்.

"யாதவர்கள் அனைவரும் அழிய வேண்டும்" என்ற எண்ணத்துடன் குந்திபோஜ தேசத்தை தாக்க வந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் இருந்து வந்து, யாதவர்களுக்காக போரிட்டார்.

துரியோதனின் யோசனை பேரில், ஸ்ரீ கிருஷ்ணரின் மகன் "சம்பா"வை போரில் கொலை செய்ய ஏகலைவன் முயற்சி செய்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் தக்க சமயத்தில் வந்து, யாதவர்களை கொல்லும் எண்ணம் கொண்ட  ஏகலைவன் தலையை அங்கிருந்த பாறையில் மோத, தலை பிளந்தது.

யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகத்திற்கு திக்விஜயமாக புறப்பட்ட நகுலன், மால்வ தேசத்து அரசர்களை தோற்கடித்தான்.
மால்வ அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

மஹாபாரத போர் நிச்சயம் என்ற நிலையில், கர்ணன் மால்வ தேசத்து அரசர்களிடம் போர் புரிந்து வெற்றி பெற்றான்.

மஹாபாரத போரில், சில மால்வ அரசர்கள் துரியோதனன் பக்கம் நின்று போரிட்டனர்.
சில மால்வ அரசர்கள் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

மகத அரசன் (பீகார்) ஜராசந்தனுக்கு பயந்து, சால்வ தேச (ராஜஸ்தான்) அரசர்கள் பல சமயம் குந்தி தேசத்திற்கு (மத்யபிரதேசம்) ஓடி விடுவர்.

இன்னும் சில சால்வ அரசர்கள் சிசுபாலன் இருக்கும் சேடி தேசம் (மத்யபிரதேசம்) வரை சென்று தஞ்சம் புகுவர்.

இன்னும் சில சால்வ அரசர்கள், ஜராசந்தனுக்கு பயந்து, ருக்மி இருக்கும் விதர்ப தேசம் (மஹாராஷ்டிரா) வரை சென்று தஞ்சம் புகுவர்.


மஹா பாரத போரில், ஒரு சில சால்வ அரசர்கள், துரியோதனன் பக்கம் நின்று போரிட்டனர்.
சில சால்வ அரசர்கள், பாண்டவர்கள்  பக்கம் நின்று போரிட்டனர்.

மஹாபாரத போரில், சில நிஷாத சிற்றரசர்கள், பாண்டவர்கள் பக்கம் போரிட்டனர்.
மற்றும் சிலர் துரியோதனன் பக்கம் போரிட்டனர்.
துரியோதனன் பக்கம் நின்ற நிஷாத அரசர்கள் அனைவரையும், பீமன் ஒருவனே கொன்றான்.

மஹா பாரத போரில், இந்த மத்ஸ்ய தேச படைகள், துரியோதனின் பக்கம் நின்று போரிட்டனர்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka